கந்த சஷ்டி தோன்றிய கதை !!!

Temple images

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)

அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன்  சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில்  சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.  சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

source:::::dinamalar..tamil daily

natarajan

இது உங்களுக்கு தெரியுமா ?….பிரதோஷம் எத்தனை வகை !!!

மாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது சிவன் ஆலயங்களில். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள்.
நித்திய பிரதோஷம்.

 

 

தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்த்தமனத்திற்கு முந்தைய 90 நிமிடங்கள் நித்திய பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் தினம் தோறும் சிவனை வணங்குதல் நல்லது.
திவ்ய பிரதோஷம்.

 

 

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும்   சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும்.  அன்று மரகத லிங்கத்திற்கு அபிழேகம் செய்தால் முன்ஜென்ம கர்மம் விலகும்.
தீராத வியாதிகள் தீரும். வழக்கு தொல்லைகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பஞ்சலோகத்தால் ஆன சிவலிங்கத்திற்கு அபிழேகம் செய்தும் பூரண பலனை பெறலாம்.
தீப பிரதோஷம் ( மகா பிரதோஷம் )

 

 

சனிக்கிழமையும் திரயோதசி  திதியும் இணைந்து வருகிற தினம் மகா பிரதோஷம். அன்று முறையாக விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
உங்கள் வயது என்னவோ அதற்க்கு ஏற்றார் போல் அதே எண்ணிக்கையில்  விளக்கேற்றி வணங்கலாம்.
உதாரணமாக உங்களுக்கு வயது 25 என்றால் 25 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
சப்தரிஷி பிரதோஷம்.

 

 

 
பிரதோஷ காலத்தில் முறையாக பூஜைகளை முடித்த பின், வெட்ட வெளியில், வானம் முழுமையாக தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்தத ரிஷி மண்டலம் என்று சொல்லக்கூடிய நட்ச்சத்திர கூட்டம் தெரியும்.
அந்த ரிஷிகளை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். ஒரு வேலை வானம் தெளிவாக தெரியாவிட்டால் கிழக்கு முகம் நின்று சப்த ரிஷிகளை மனதில் தியானித்து வணங்கலாம்.
ஏகாட்ச்சர பிரதோஷம் 

 

 

வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷத்தை  ஏகாட்ச்சர பிரதோஷம் என்பார்கள். அன்றைய தினம் சிவாலயம் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கோடி தோஷம் விலகும்.
அர்த்தநாரி பிரதோஷம்.

 

 

வருடத்தில் இரண்டு முறை மட்டும் மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் சிவாலயம் சென்று வழிபட்டால் ஓன்று சேர்ந்து வாழலாம். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் எல்லா நம்மையும் பெறலாம். பிரித்தவர்கள் கூடுவார்கள்.
திரிகரண பிரதோஷம்.
 
 

வருடத்திற்கு மூன்று முறை பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள். இதை முறையாக கடைபிடித்தால் இல்லாமை என்ற சொல் இல்லாமல் போய்விடும்.  அஷ்ட லக்ஷ்மிகளின் அருளாசியும் கிட்டும்.

பிரம்ம பிரதோஷம் 
 
 

பிரம்மாவிற்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்க,ஒரு வருடத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளில் வந்த சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்த பிரதோஷத்தை கடிபிடித்தால் முன்னோர் சாபம், முன்வினை பாவம் எல்லாம் விலகிவிடும்.

 
ஆட்சரப பிரதோஷம் 
 
 
 
வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்க்கு இந்த பெயர். தாருகா வனத்து ரிஷிகள் தான் என்ற அகந்தை கொண்டு ஈசனை எதிர்த்தனர்.
பார்த்தார் ஈசன். பிட்சாடனார் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்கு பாடம் புகட்டினார்.  தங்கள் தவறை உணர்ந்த ரிஷிகள் இந்த பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து சாப விமோசம் பெற்றதால் இதற்கு இந்த பெயர் வந்தது.  தெரிந்தே தவறுகள்  செய்தவர்கள் இதை அனுஷ்டிக்கலாம்.
கந்த பிரதோஷம். 

 

 

 
சனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர்.  இது முருக பெருமான் சூர சம்ஹாரத்திற்கு முன் வழிபட்டதால் இந்த பெயர் வந்தது. முருகனருள் வேண்டுபவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
சட்ஜ பிரபா பிரதோஷம் 

 

 

 
தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறைபிடிக்க பட்டனர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை அவர்கள் அனுஷ்ட்டித்ததால் கிருஷ்ணன் பிறந்தான்.
வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைபிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.
அஷ்டதிக் பிரதோஷம்

 

 

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் முறையாக கடைபிடித்தால் அஷ்ட்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், கீர்த்தி, செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.
நவகிரக பிரதோஷம் 

 

 

 
வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷம். இப்படி ஒன்பது பிரதோஷம் வருவது மிக மிக அரிது.
அப்படி வந்தால், அதை நீங்கள் அனுஷ்ட்டித்தால் சகல கிரக  தோஷமும் விலகும்.  தடை பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை எல்லாம் கிட்டும்.
துத்த பிரதோஷம் 

 

 

 
இதற்கு வாய்ப்புகள் குறைவுதான். வருடத்தில் பத்து மகா பிரதோஷம் வந்து, அந்த பத்து பிரதோஷத்தையும் அனுஷ்ட்டித்தால் இந்த உலகமே கையில் கிடைத்த மாதிரி உச்சாணி கொம்புக்கு போவார்கள்.
source::::mahaperiavaa.wordpress.com
natarajan

ஒன்பது வரியில் ராமாயணம் !!!

 ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

‘ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்.

 source:::: input from a friend of mine
 natarajan

படித்ததில் பிடித்தது …”.உன் இரண்டு சொட்டு கண்ணீர் எனக்கு போதும்” !!!

ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண
பட்டதிரியை நாம் அறிவோம். நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய
உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது.
தம் முன் தோன்றிய ஸ்ரீகுருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம்
என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார்.
நெய்ப் பாயசம்” – இது குருவாயூரப்பன்.
ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது?”
‘‘அவலும் வெல்லமும் போதுமே!”
‘‘சரி பகவானே… அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால்?”
‘‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் – இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு. ஏற்றுக்
கொள்கிறேன்.”
‘‘மன்னிக்க வேண்டும் பகவானே… தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?”
‘‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்!”
‘‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்?” – பட்டதிரியின் குரல் தழைந்து போகிறது.
‘‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ
அழுவாய் அல்லவா… அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப்
போதும்” என்று பகவான் சொன்னதும், ‘ஓ’வென்று கதறி அழுதே விட்டார் பட்டதிரி.
தெய்வங்கள், தன் பக்தர்களிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை

source:::::input from a friend of mine …

natarajan

Introductory Prayers ….With Meaning ….

 
1.Shuklambaradaram Vishnum,
Sasi varnam chathur bujam,
Prasannavadanam dhyayeth,
Sarva Vigna upasanthaye.

Dressed in white you are,
Oh, all pervading one,
And glowing with the colour of moon.
With four arms, you are, the all knowing one
I meditate on your ever-smiling face,
And pray, Remove all obstacles on my way.

2.Sri Kantho mathulo yasya,
Janani sarva mangala,
Janaka sankaro deva,
Tham vande Kunjarananam.

I salute the elephant faced one,
Whose uncle is Lord Vishnu.
Mother is Goddess Parvathi,
And father is the God Shiva.

3.Yasya dwiratha vakthradhya,
Parishadhya para satham,
Vignam nignanthi sathatham,
Vishwaksenam thamasraye.

I surrender to the God Vishwaksena,
Whose face has two tusks,
Who has several hundreds of followers,
And who always removes obstacles.

4.Ramapathi padambhoja ,
Pari shuratha manasam,
Senapathim aham vande ,
Vishwaksenam nirantharam.

I salute always the Commander in chief,
Visvaksena whose mind is opened up,
By the lotus like feet of the consort of Lakshmi.

5.Bhagawan nama samrajya ,
Lakshmi sarvasva vigraham,
Srimath Bodhendra yogeendra ,
Desikendram upasmahe.

In the land of the names of God,
The one who pervades everywhere,
Is the king of Yogis, Bhodendra ,
Who is the king of teachers ,
And I bow to him.

6.Eese thasya cha naamaani pra vimalam jnanam dayor orjitham,
Prema prema cha thath pareshu virathischanyanthara sarvathra cha,
Eesekshaa karunaa cha yasya niyathaa, vruthi ssrithasyapi yam,
Tham vande nara roopa manthakaripum , Sri Venkatesam Gurum.

I salute the great teacher Venkatesa who has a human form and is the enemy of death,
By taking up whose name which is greatly holy we would be lead to wisdom and mercy,
And whose love for God would completely spread everywhere,
And by whose mercy from God and his routine the wealth will increase.

7.Bhagavan nama bodhendra ,
Sridaryathma vigraham,
Srimath Venkataramakhya ,
Desikendramupasmahe

I salute the king of teachers ,
Who is the king for teaching the names of Gods,
Who has the perfect form of Sridhara,
And that of Sri Venkatrama.

8.Nama samrajya roopaanaam,
Bodhendra Sridharathmanaam,
Pranaamam ye prakurvanthi,
Thesham aapi namo nama.

My salutations and salutations to him,
Who is the form of the names of God
Which is taught as right by the,
Souls of Bodhendra and Sridhara.

9.Prahladha , Narada , Parasara , Pundareeka,
Vyasa, Ambareesha , Sukha, Sounaka, Bheeshma, Dhalbyaan,
Rukmangadha ,Arjuna, Vasishta, Vibheeshanaadheen,
Punyanimaan Parama Bhagwathan smarami.

I meditate on the greatly holy ones who have done auspicious acts,
Like Prahladha, Narada, Parasara, Pundareeka,
Vyasa, Ambareesha , Sukha , Sounaka, Dhalabhya,
Rukmangadha , Arjuna , Vasishta and Vibheeshana.

10.Yethan nirvidhyamanam,
Icha thama kuthobhayam,
Yoginaam nrupa nirneetham,
Harer namanu keerthanam.

Even for those who are not educated,
He gives protection to those who desire,
And is considered as the king among Yogis,
Because of singing the names of Hari.

11.Harer namaiva, namaiva ,
Namaiva mama jeevanam,
Kalou nasthyeva nasthyeva ,
Nasthyeva gather anyadha,

My life is the names, names ,
And names of Hari only,
In the Kali age there is no,
There is no other support to us.

12.Visrujya lajjam yo adheethe,
Mannaa maani nirantharam,
Kula koti samayuktho,
Labathe mamakam patham.

He who leaves out his shyness studies
With eagerness always accepts me ,
Would get my place along with,
Crores of his clan members.

13.Vishnor ganam cha Nrutham cha ,
Natanam cha viseshatha ,
Brahman Brahmana jatheenaam,
Karthavyam nithya karma vath.

The Brahmin who sings and acts about Vishnu,
Specially dances would be daily,
Doing the duty of a Brahmin properly.

14.Kalakshebho na karthavya ,
Ksheenam aayu kshane kshane ,
Yamasya karuna nasthi,
Karthvyam Hari Keerthanam.

Due to duties and routine acts ,
The span of life regularly goes down,
As Lord Yama does not show any mercy,
So make the singing of Hari as your duty.

15.Naaham vasami vaikunte ,
Na Yogi hrudaye ravou,
Mad bhaktha yathra gayanthi,
Thathra thishtami Narada.

Oh Narada , I do not live in Vaikunta,
Nor do I live in the heart of great yogis,
For I stay and live in the place ,
Where my devotees sing about me.

16.Kale dosha nidhe , rajan,
Asthi hyekho mahan guna,
Keerthanad yeva krishnayai,
Muktha bandha param vrajeth.

Those Kali age is treasure of the bad things,
It has a very great property,
By singing about Lord Krishna,
You can get rid of ties and attain salvation.

17.Kalou kalmasha chithaanaam,
Papa dravyopa jeevinaam,
Vidhi kriyaa viheenaanam,
Gathir Govinda keerthanam.

In the age of Kali for people with bad thoughts,
For people who eke their livelihood by sins,
And for those who do not follow recommended rituals,
The only way out is Singing about Govinda.

18.Dhyayan krutha yajna yagnai,
Threthayaam dwapare archayan,
Yadapnothi , thadapnothi,
Kalou samgeerthya kesavam.

The effect of meditating in Krutha age,
Doing fire sacrifices in Thretha age,
And doing worship in Dwapara age,
Can be easily attained by oneself,
By singing names of Kesava in Kali age.

19.Namno asthi yavathee Shakthi,
Papa nirharane Hare,
Thavath karthum na saknothi,
Pathakam pathaki jana.

There is no power like your name,
Oh Hari to remove the effect of sins,
For those who do it will not be able,
To do sinful deeds , in spite of being sinners.

20.Harir harathi paapani,
Dushta chithair api smrutha,
Anichayapi samsprushta,
Dhathyeva hi pavaka.

The Hari will destroy all sins,
Even though a bad one remembers him,
In spite of doing it without any will,
And he would make him pure.

21.Smruthe sakala kalyana,
Bajanam yathra jayathe,
Purushastha majam nithyam,
Vrujami saranam harim.

Just by remembering him ,
Would result in all that is good,
And those who remember him without fail ,
Hari would give him protection .

22.Aalodya sarva sasthrani,
Vicharya cha puna puna,
Itham yekam sunishpannam,
Dhyaye yo narayana ssada.

Even by studying all Sasthras deeply,
And again and again doing research in them,
You come to one good conclusion,
Always meditate on Narayana.

23.Namsthvanthaya sahasra moorthaye,
Sahasra padakshi siroru behave,
Sahasra namne purushaya saswathe,
Sahasra kodi yuga dharine nama.

Salutations to thee oh lord,
Who runs the immeasurable time,
Of thousand crore yugas,
Who has no end,
Who has thousand names,
Who has thousand forms,
Who has thousand feet,
Who has thousand eyes,
Who has thousand heads,
Who has thousand arms,
And Who is always there.

24.Prahlada bhaga dheyam ,
Nigama mahadror guhantharadheyam,
Narahari padabhidheyam,
Vibhudha vidheyam mamanu sandheyam.

He who is the fate of Prahlada,
Who is dealt inside the cave of the great Vedas
Who took the form of man lion,
Who is amenable to the wise,
Is the subject of my deep study.

25.Yo danda karanya nisacharendran ,
Kodanda leelaa vishayee chakara,
Vedanda sundayatha bahu danda,
Kodanda pani kuladaivatham na.

The deity of my clan is the one who holds the Kodanda,
Who playing with that bow Kodanda , killed ,
Several asuras who moved at night in Dandakaraya,
And with his hands as weapons killed,
The mighty elephant which had its trunk as weapon.

26.Krishna kartothu kalyanam,
Kamsa kunjara kesari,
Kalindhi jala kallola ,
Kolahala kuthoohali.

The Krishna who is the lion to the elephant called Kamsa,
Who made the hostile water of Kalindi ,
Into a joy filled loud noise and brought auspiciousness.

27.Sri sesha saila suniketana divyamoorthe ,
Narayanachyutha hare nalinayathaksha,
Leela kadaksha pari rakshitha sarva loka,
Sri Venkatesa mama dehi karavalambam.

Please give me the protection of your hands, Lord Venkatesa,
Whose divine form has its abode in the Sesha Mountain,
Who is Narayana, Achyutha and Hari and has lotus like eyes,
And who protects all the worlds with a playful sidelong glance.

28.SAma charana sarojam , sandhra neelambhudabham,
Jagana nihitha panim mandanam mandanaanaam,
Tharuna Thulasi malakandharam kanja nethram,
Sadhaya davala hasam vittalam chinthayami.

I meditate on that Vittala with a feet , similar to the lotus flower,
Who is of the colour of the dense blue cloud,
Who Keeps his arms on his hips and has very joyful decorative face,
Who is a lad wearing the garland of ocimum , with smoke coloured eyes,
And Who sports a merciful pure smile .

29.Krishna krishnethi bashantham,
Suswaram srumanoharam,
Yathi vesha daram soumyam,
Sri Chaithanyam namamyaham.

I salute the Sri Chaithanya ,
Who keeps on chanting Krishna, Krishna,
Who has a sweet bewitching voice ,
And who is likable and wears the dress of a saint.

30.Sarva kalyani dadadaaram,
Sarva aapad Ghana vaarakam,
Apara karuna moorthim,
Anjaneyam namamyaham.

I salute hanuman , the son of Anjaneya,
Who grants all types of auspiciousness,
Who saves us from all sort of dangers ,
And is the personification of great mercy.

31.Budhir balam yaso dairyam,
Nirbhsyathwam aroghadhaa,
Ajadyam vak paduthwam cha ,
Hanumath smaranath bhaveth.

By meditating o9n Lord Hanuman , you get,
Intelligence, strength , fame , bravery,
Fearlessness , freedom from disease,
Active nature and versatility in talk.

32.Dhoorikrutha seetharthi,
Pragadikrutha Rama vaibhava spoorthi,
Daritha dasamukha keerthi,
Puratho mama pathu hanumatho moorthi.

Let me protected in front by Lord Hanuman,
Who wants to drive away problems of Sita,
Who is interested in telling about greatness of Rama,
And who is interested in removing fame of Ravana.

Sri Sita Lakshmana, Bharatha , Shathrugna ,
Hanmath samedha Sri Ramachandraya parama guruve nama

Salutations to the great teacher Ramachandra surrounded by
Sita, Lakshmana, Bharatha, Shatrugna and Hanuman

Sri Radha Rukmani SAthyabhama Samedha
Sri Gopala Krishna Parabrahmane nama

Salutations to the divine God Gopalakrishna,
Surrounded by Radha, Rukhmani and Sathyabhama.

Swasthyasthu

Let there be peace

SAmastha mangalani santhu

Let all auspiciousness occur

Loka Samastha sukhino bhavanthu

Let all the people of this world have a pleasurable life.
(While reciting/singing the sequence may change)

 

source:::::ramajayamgomati.blogspot.com

natarajan

 

Devimahatmya Recitation During Navrathri and Durgapooja ….

The story associated with Goddess Durga and Mahishasura
The story associated with Navratri and Durga Puja is found in the Markandeya Purana. The chapters 81 to 93 in the Markandeya Purana talks about the slaying of demon Mahishasura or Mahisha by Durga and it is referred as Devimahatmya and is recited during the Navaratri and Durga Puja. It symbolized the victory of good over evil. The most famous episode is of Durga killing Mahishasura
Birth of Mahishasura
Legend has it that two sons of Danu called Rambha and Karambha performed penances to gain more powers. Rambha performed the austerities by standing amidst five ritual fires called Panchagni and Karambha by standing in neck-deep in water.
 Indra, the lord of the gods, felt threatened by such intense austerities and took the form of a crocodile and killed Karambha. Rambha, who came to know about his brother’s death, increased the intensity of his austerities and won several boons from gods like great brilliance, beauty, invincibility in war. Most importantly, the boon that he will not be killed by humans or Gods or Asuras (demons).
 After receiving the boon, he was roaming in the garden of Yaksha and there he fell in love with a female-buffalo. To express his love Rambha took the form of a male-buffalo and copulated with the she-buffalo. But soon a real male buffalo discovered Rambha in the garden and killed him.
Rambha’s inflated ego made him not to ask the boon of invincibility from animals. And an animal happened to be the reason for his death.
The female-buffalo, who was pregnant, decided to kill herself in the funeral pyre of Rambha. She jumped into the pyre and from the pyre sprang up a mighty asura (demon) with the head of a buffalo and human body. This was Mahishasura.
Mahishasura Defeats Gods
Mahishasura defeated the gods and the demons. He attacked the heaven and captured it and made ‘devas’ his slaves. He proclaimed that he is now Indra – the lord of the gods. The gods led by Brahma approached Vishnu and Shiva and appraised them of the situation.
Birth of Goddess Durga
The actions of Mahishasura caused intense anger in the Trimurtis. The anger emerging out of Brahma, Vishnu and Shiva combined to the take the shape of a terrible form and this was Durga.
It is said that the flames of fire that gushed out of the eyes of the Trimurtis – Brahma, Vishnu and Shiva – formed a mountain, brilliant like a million suns. Out of this mountain, Durga took shape as the goddess more powerful than all the gods. Samasta devanam tejo rasi samudbhavam’ Durga is the brilliance of all the gods.

Captivated by the awe-inspiring Durga, the gods bestowed on her their own characteristic weapons. Shiva – the trident, Vishnu – the discus, Varuna – the conch, Agni – the spear, Yama – the cudgel, Vayu – the bow, Surya – the arrows, Indra – the vajra, Kubera – the mace, Brahma – the water pot, Kala – the sword and Vishwakarma – the axe. Himavan gifted a mountain lion as her vehicle.

Goddess Durga kills Mahishasura
When the goddess was seen by Mahishasura, he fell in love with her and sought to marry her. The goddess promised to marry him, if he defeated her in the battle. A terrible combat ensued and continued for nine days. Finally, Durga assumed the terrifying form of Chandika and pinned Mahishasura down with her foot and pierced his neck with her spear and she cut his head off with her sword.
The legend about the killing of Mahisha is found in many Puranas and therefore there are slight variations in the story. The story is also found in Vamana Purana, Varaha Purana, Shiva Purana, Skanda Purana, Devi Bhagavatam and Kalika Purana.
 
Quote of BABA:

 Do not borrow money for celebrating a feast or festival, for a pilgrimage or other journey.

October 13 – Vijayadasami, Dasara
October 13 – Shirdi Saibaba Punyatithi
Wishing you and your loved ones a very Blessed Navratri !!   
source::::: H.Deepa in Srishirdi sai speaks
natarajan

தில்லி உத்தரசுவாமி மலை கோயில் உருவான பின்னணி …

தில்லி உத்தர சுவாமிமலை

இந்தியா சுதந்தரம் அடையும் தருணத்துக்கு முந்தைய டெல்லி. டெல்லியில் குடிபுகுந்திருந்த தமிழர்கள்,ரமணமகரிஷி அளித்திருந்த சுவாமிநாத சுவாமியின் ஒரு சிறு மரச்சிலையை வைத்து பூஜித்து வந்தார்கள்.1944-ஆம் ஆண்டு முதல் கந்த ஷஷ்டி விழாவைப் பெரிய அளவில் சிறப்பாகவும் நட்த்தினார்கள்.இருப்பினும் தென்னிந்தியக் கலையுடன் கூடிய முருகன் கோயில் ஒன்றில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவர்களுக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்தது.

எல்லாவற்றுக்கும் ஒரு தருணம் வரவேண்டும் அல்லவா! பிற்காலத்தில் ஒரு குட்டித்தமிழ் நாடாக விளங்கிய ராமகிருஷ்ணாபுரம் அச்சமயம் பெருங்காடாக விளங்கியது. அதன் நடுவே ஒரு சிறு குன்றும் காணப்பட்டது. குன்று தோறாடும் குமரனுக்கு இது ஏற்ற இடமாக இருக்குமே என்று பக்தர்கள் எண்ணினர்.

கனவில் வந்த கந்தன்
1961-ஆம் வருடம். டெல்லி சரோஜினி நகரிலிருந்த விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அந்த கும்பாபிஷேக தினத்தன்று பக்தர் ஒருவருக்குக் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர்,கனவு காணும் நபரின் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அவரின் இருப்பிடத்துக்குக் கொண்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறார். இவரும் அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் இதுதான் தன் இருப்பிடம் என்று சற்றுத் தொலைவில் தெரியும் குன்றைக் காட்டி நன்றி கூறிவிட்டு, விறுவிறுவென நடந்து மாயமாய் மறைந்து விடுகிறார். அந்த பக்தர் கனவில் கண்ட இடம்,பக்தர்கள் இங்கு குமரனுக்குக் கோயில் கட்டலாமே என்று தீர்மானித்த குன்று இருக்கும் இடம்!

இதன்பின் டெல்லியில் தனி முருகன் கோயில் கட்டுவதற்கான விண்ணப்பத்தை காஞ்சி மகா பெரியவர் முன் வைத்தனர். அவரும் தன் பரிபூரண ஆசிகளை அருளினார். அடுத்து, அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும். எனவே, அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர் பக்தர்கள்.இதற்கு முன் சூரஜ்மல் எனும் அரசன் இந்தக் குன்றின்மீது ஓய்வு விடுதி அமைக்க எண்ணியபோது அவன் தந்தையின் கனவில் முன்பொரு சமயம் அந்த இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகத் தெரிந்ததால், மகனை ஓய்வு விடுதி கட்டாமல் தடுத்து விட்டார் என்றொரு செய்திக் குறிப்பு அந்தக் குன்று இருக்கும் இடத்தைப் பற்றி இருந்தது. இதனால் அரசாங்கத்தின் ஒப்புதலை வாங்குவது எளிதாக இருந்தது. இந்நிகழ்வு பற்றி திருப்பனந்தாள் மடத்தலைவர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான், “ஆளுபவர்கள் யாராக இருந்தாலும்,தன்னுடைய இடத்தை மாற்ற முடியாதபடியாகவே முருகப்பெருமான் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான் என்றில்லாமல் வேறென்னவென்று குறிப்பிடமுடியும்?” என்று குறிப்பிட்டார்.

காஞ்சி மாமுனிவரின் அருளாசி
1961-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து கோயில் கட்டும் நிலத்தை அரசாங்க அனுமதியுடன் விலைக்கு வாங்கினார்கள். கோயில் கட்டுமானப் பணி தொடங்கியபோது, வாலாஜாபாத் அருகிலிருந்த பட்டுமலைக் குப்பத்திலிருந்து கல் எடுக்கப்பட்டு வந்து மகாபலிபுரத்தில் விக்கிரகங்கள் வடிக்கப்பட்டன. இச்சமயம் “உத்தர சுவாமிநாதனின் மூலவிக்கிரகத்துக்கான கல்லை, சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு செந்திலாண்டவன் சிலை வடிப்பதற்காக, தாமிரவருணி நதிப் படுகையிலிருந்து குறுக்குத்துறை எனுமிடத்தில் எடுக்கப்பட்ட கல்லின் எஞ்சிய பாகம் புதையுண்டு உள்ளது. அதனை எடுத்துப் பயன்படுத்துங்கள்.” என மகா பெரியவா ஆசியருளினார். அன்பர்களும் மகிழ்ச்சியுற்றார்கள்.

பெரியவா குறிப்பிட்ட அந்த குறுக்குத்துறை அகலத்திலும் நீளத்திலும் ஒரு மைலுக்கும் மேலாகப் பரந்து கிடந்தது. இந்த அறுபதாண்டு காலத்தில் அந்த இடத்தின் பல பகுதிகள் மணல்மேடுகளாக மாறியிருந்தன.அவ்வளவு பெரிய இடத்தையும் தோண்டிப் பார்த்து குறிப்பிட்ட கல்லைக் கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்லவே! நெல்லையப்பர் கோயில் சிவாச்சாரியார்,”ஒரு வேளை தெற்கு ரத வீதியிலிருக்கும் 85 வயது முதியவரான சுந்தர தீக்ஷிதர் இந்தக் காரியத்துக்கு உதவலாம். அவர், செந்திலாண்டவன் சிலைக்காகக் கல் எடுத்த காலத்தில், அத்தலத்தில் தொண்டு புரிந்தவர்” என்று வழி காட்டினார்.

சுந்தர தீக்ஷிதரைச் சந்தித்து விவரம் கூற, “பாதி வேலையை முடித்திருந்தேன். எஞ்சிய வேலையை முடிப்பதற்காகத்தானோ என்னவோ, என்னை இறைவன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறான்” என்று கூறி நெகிழ்ந்தவர், சரியான இடத்தையும் காட்டிக் கொடுத்தார். முப்பது தொழிலாளிகள் நாள் முழுதும் மணலைத் தோண்டியபின், 10 அடி ஆழத்தில் மகா பெரியவா குறிப்பிட்ட முக்கோண வடிவக் கல் கிடைத்தது. ஜூன் 2, 1965-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் நதிப்படுகையிலிருந்து கல் எடுத்து, மகாபலிபுரத்துக்கு அனுப்பினர். பரமாச்சார்யரின் உருவில் வந்து அனுக்கிரகித்த கந்தனின் கருணையே கருணை!

கல் கிடைத்து விட்டது. விக்கிரகம் தயாராகிவிட்டதா என்றால், அங்கும் உடனே தயாராகவில்லை.ஆண் விக்கிரகம் வடிப்பதற்கான சரியான ஒலி கல்லில் இருந்து கேட்காததால், பணியில் ஈடுபட்டிருந்த கணபதி ஸ்தபதி செய்வதறியாது திகைத்தார். எனவே மகா பெரியவாளைச் சந்திக்கச் சென்றார். பக்தர்கள் வரிசையில் மகா பெரியவாளைச் சந்திக்க நின்றபோது பெரியவரே அவரை அழைத்து, சிலையைச் செதுக்க ஆரம்பி! போகப் போகத் தானே சரியாகி விடும்’ என்றார். அவர் கூறியவாறே நடந்தது. மூலவர் சிலை உருவானதும், அச்சிலையை மகா பெரியவாளின் பார்வைக்கு அனுப்பினார்கள்.

இறைவனின் சோதனை
நொடியில் சிலையை ஆராய்ந்த பெரியவர், தக்ஷிண சுவாமிநாதனிடமிருந்து சற்று வேறுபடுத்திக் காட்டத்தானோ, இவரது கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் கல்லிலேயே செதுக்கிவிட்டாய்? என்று கேட்க, கணபதி ஸ்தபதி ஆச்சரியத்தில் பிரமித்து நின்றார்.தெற்கிலுள்ள சுவாமிநாதனுக்குத் தனியாக வெள்ளி மாலயில் கோர்த்த ருத்ராக்ஷத்தை அணிவிப்பதுதான் வழக்கம். இந்த நுணுக்கத்தை உன்னிப்பாகக் கவனித்துத் தான் பெரியவா அப்படிக் கேட்டார். பெரியவாளின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது. இதன் பின் விக்கிரகத்தை ஒரு இரவும் பகலும் தன் அருகிலேயே வைத்து, தடவிப் பார்த்து மகிழ்ந்தார். சிலைக்கு, தன் கையாலேயே விபூதி அபிஷேகமும் செய்து மகிழ்ந்தார்.கும்பாபிஷேகத்தின்போது கூடியிருந்த பக்தர்களிடம் கணபதி ஸ்தபதி மேற்படி விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மூல விக்கிரகம் தயாரானதோடு இறைவனின் சோதனை நின்று விடவில்லை கோயிலுக்கான மற்ற விக்கிரகங்களும் உருவாகிவிட்ட நிலையில், கோயில் கட்டும் அடிக்கல் நாட்டு விழாவை 8. 9. 1965 அன்று காலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் நல்ல நேரம் என்று குறித்திருந்தார் மஹா பெரியவா.நாள் குறிப்பிட்டாகிவிட்டது. ஆனால் அதற்கு முந்தைய இரவில் வந்த வானொலி அறிவிப்பு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.பாகிஸ்தான் விமானப்படை இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகியுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி. எனவே பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, விழாவில் பங்கேற்பதற்கில்லை என விடியற்காலை 3 மணிக்குத் தெரிவித்து விட்டார். ஆனால் காலை 4.30-க்கு தில்லியிலுள்ள ஷாதரா எனுமிடத்தில் தென்பட்ட பாகிஸ்தானிய விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக வீழ்த்திவிட்டது என்று வெளியான வானொலிச் செய்தியைத் தொடர்ந்து ஒலித்த சங்கு, அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக உறுதிப்படுத்தியது. எனவே ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த முகூர்த்த நேரத்துக்குள் தமிழக முதலமைச்சர் எம். பக்தவத்சலம், அருட்கவி சாதுராம் சுவாமிகள் இருவராலும் அடிக்கல் நாட்டுவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

சிவனும் அவனே, சிவகுமரனும் அவனே!
அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்குச் சில நிமிடங்கள் முன்பு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனுப்பியிருந்த செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம். ’ஸ்வாமிநாத தேவசேனாபதியான முருகப்பெருமான், முப்படைக்கும் தலைமை ஏற்று, பாகிஸ்தானுடனான போர் துவங்கியதுமே அதை முடித்து விட்டார் அடிக்கல் நாட்டு விழாவின் வெற்றிக்கான எனது ஆசிகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

கந்தனை வணங்கும் கதிரவன்
மூலவர் விக்கிரகம் வைக்கப்படும் பீடத்தினுள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பொருட்களுடன் யந்த்ரம் ஒன்றும் வைப்பது வழக்கம். ‘சுப்ரமண்ய சர்வ வசீகரண யந்த்ரம்’ உத்தர சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது. இந்த யந்த்ர விஷயத்திலும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு உண்டு. பரமாச்சார்யாளின் ஆக்ஞைப்படி தருமபுரம் ஆகம பாடசாலையின் தலைவரான சிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் வெள்ளித்தகட்டில் யந்த்ரத்தை அமைத்து வைத்திருந்தார். இதற்கு முன்பாக கணபதி ஸ்தபதியும் காகிதத்தில் யந்த்ரத்தின் அமைப்பை வரைந்து மகா பெரியவாளிடம் ஆசி வாங்கியிருந்தார். இரண்டில் எதை வைப்பது என்ற குழப்பம்! கூர்மையாக ஆராய்ந்து பார்த்தபோது –ஒன்று சிவத்தொடர்புடையதாகவும் மற்றொன்று கந்தப்பெருமானின் ஷண்முக யந்த்ரமாகவும் இருந்தது. பின்னர் இரவோடிரவாக வெள்ளித்தகட்டின் பின்புறம் இந்த ஷண்முக யந்திரத்தையும் பொறித்து இரண்டுமே பீடத்தினுள் வைக்கப்பட்டன. இவ்வாறாக சிவனும், சிவகுமாரனுமாக, ஒரு வடிவாகி சிவ்ஸ்கந்தமூர்த்தியாக டெல்லியில் அருள்பாலிக்கிறார்கள்.

இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு.வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் சூரியனின் கிரணங்கள் மூலவர்மீது விழும் வண்ணமாக ஆலய விமானத்தில் இடைவெளி விட்டுக் கட்டுவார்கள். அக்காலங்களில் சூரிய பூஜை நடத்துவார்கள். இதற்கென டெல்லி வானிலை ஆராய்ச்சி மையத்தை அணுகியபோது, இதற்கு ஒரு வருடம் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்குமே எனக் கூறிவிட்டனர். கும்பாபிஷேகத்துக்கான நாள் நெருங்கிவிட்டிருந்ததால், இடைவெளி வைக்காமலே விமானமும் கட்டி முடிக்கப்பட்டது. 7. 6. 1973 அன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது.

கும்பாபிஷேகத்தை அடுத்துவந்த மார்ச் மாதத்தில் ஒருநாள், வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்த குருக்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சூரியனின் காலை கிரணங்கள் முருகனின் இடப்பாகத்தில் பட்டு ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மேலும் சில நாட்கள் தொடர்ந்து கவனிக்க, மார்ச் 20 முதல் 24 வரை முருகனது திருவுருவத்தின் மீது முழுவதுமாகக் காலைக் கிரணங்கள் பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். அன்றுமுதல் வருடந்தோறும் இந்நாட்களில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடக்கிறது. இந்நிகழ்விலும் மகா பெரியவாளின் தீர்க்க தரிசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறியும்போது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

மூலவர் கிழக்குத் திசையை நோக்கி இருப்பதால், அத்திசையில் வைக்கப்படும் வாசல் கதவுகளை சிற்பிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து மேலும் சில அடிகள் தள்ளி வைக்குமாறு மகா பெரியவா கூறி இருக்கிறார்.அவ்வாறே அமைத்தார்கள்.பெரியவா குறிப்பிட்ட அதே வாசல் வழியாகத்தான் சூரியக்கிரணங்கள் குறிப்பிட்ட நாட்களில் முருகன் மீது படுகின்றன. தமிழகத்தில் காவிரிக்கருகில் குடிகொண்டிருக்கும் சுவாமிநாதன், தில்லியில் தன் மாமன் விளையாடிய யமுனை நதியை நோக்கியவண்ணம் குன்றின் மீது நின்று புரியும் அதிசயத்துக்கு அளவே இல்லை.

தொடர்ந்த வருடங்களில் மீனாக்ஷி, சுந்தரேசர், விநாயகர், நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைத்ததுடன், சிற்ப கலா மண்டபம், ஆதிசங்கரர் பிரார்த்தனைக் கூடம் போன்ற பலவும் அமைத்தார்கள் குன்றின் மேலுள்ள விஷ்ணு துர்கை சந்நிதியில் செவ்வாய்-வெள்ளி தினங்களில் நடக்கும் ராகு கால பூஜையில், வட இந்தியர்களும் திரளாக வந்து கலந்துகொள்கிறார்கள். அமிர்தசரஸ் போன்ற தொலைதூர நகரங்களிலிருந்து சீக்கியர்களும் வந்து வழிபாடு நடத்திப் பயன்பெறுகிறார்கள்.

2001-ஆம் ஆண்டு முதல், சிறப்பு தினங்களில் சுவாமியை மலை மேல் ஊர்வலமாகத் தூக்கிச் செல்வது முதல் பிரசாத விநியோகம் வரை எல்லாக் காரியங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் ஒரு சீக்கியர் என்று அறியும்போது வியப்பின் எல்லைக்கே செல்கிறோம்.

மூலவரைத் தரிசிக்க படியேறிச் செல்லும் வழியில் நாகர் சந்நிதி அமைந்துள்ளது.கோயில் கட்டுவதற்கு முன்பாக ஒரு நாள் குன்றின்மேல்தோன்றி பக்தர்கள் காண விளையாடிவிட்டு, குன்றினுள் சென்று மறைந்துவிட்ட நாகத்தின் நினைவாக இந்த நாகராஜா சந்நிதி அமைக்கப்பட்டதாம். குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சிறியதாக இருந்த அரசமரம், கிளைபரப்பி இன்றளவும் கம்பீரமாக நிற்பதை இடும்பன் சந்நிதிக்கருகில் காணலாம்.

மூலவரின் சாந்நித்யம் கோயிலில் நிறைந்துள்ளது என்பதற்குச் சான்றாக, கோயில் வளாகத்தில் இரு மயில்களும் ஒரு சேவலும் உல்லாசமாக உலவுவதைக் காணலாம். விநாயகர் சந்நிதிக்குப் பின்புறம் ஒன்பதரை அடி உயரத்தில் அமைந்துள்ள மீனாக்ஷி-சுந்தரேசர், வள்ளி-முருகன் ஆகியோரின் திருமணக் கோலங்கள் மிக அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டு பக்தர்களைக் கவர்கிறது.

உத்தர சுவாமிமலையில் நடக்கும் மிகப் பெரிய விழா – கந்த சஷ்டி விழாவாகும். தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தும் இப்பெரிய விழா தவிர தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக நடக்கின்றன.கார்த்திகை மாதத்தில் நுழைவாயிலில் இருந்து மலை உச்சிவரை ஏற்றப்படும் தீபங்களின் அழகைக் காணும்போது, ‘ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’ என்று நாமும் நிச்சயம் பாடுவோம். திருப்புகழ்ச் சக்கரவர்த்தி குருஜி ஏ.எஸ். ராகவன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட திருப்புகழ்த் திருப்படித் திருவிழாவும், அருணகிரிநாதர் நினைவு விழாவும் முறையே வருட முதல் ஞாயிறன்றும், அக்டோபர் இரண்டாம் தேதியும் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை உத்தர சுவாமிநாதனின் சேவையிலேயே காலம் கழித்து வரும் மிக மூத்த அன்பர் எஸ். பட்டாபிராமன் (தொண்ணூறை நெருங்கிவிட்டவர்) அவர்களுடன் பேசும்போது நாமும் அந்தக் காலத்துக்கே சென்றுவிடுகிறோம். கோயில் அமைப்பு, நிர்வாக விஷயங்களுக்காக காஞ்சி பரமாச்சார்யாருடன் பழகிய நாட்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். ‘பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட ஒருநேரத்தில் பெரியவாளைத் தஞ்சமடைந்தோம். பணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, ‘ஆறு வற்றிக் கிடக்கிறது.விரைவில் ஒரு பிரவாகம் வரப்போகிறது. அப்போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.’ என்று ஆசி அருளினார்.

‘மலாய் மந்திர்’
அவரின் அருள்வாக்கு அப்படியே பலித்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோயிலில் பணப் பற்றாக்குறை ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்று கூறி உணர்ச்சிவசப் படுகிறார்.
தில்லி தமிழர்கள் தமிழ்-இந்தி இரு மொழிகளையும் இணைத்து ‘மலை மந்திர்’ என்று கூறுவதைக் கேட்ட தமிழர் அல்லாதவர்கள் இதை ‘மலாய்-மந்திர்’ என்று உச்சரிக்க ஆரம்பித்து, அதுவே நிலைத்துவிட்டது பாலேடு என்பதன் இந்தி வார்த்தைதான் ‘மலாய்’..பாலேடு போன்ற சிறப்பும் சுவையும் மென்மையும் உடையவன்தானே நம் சுவாமிநாதன்! அந்தப் பெயர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே!

சித்ரா மூர்த்தி, சென்னை

திரிசக்தி பொங்கல் மலரில் திருமதி சித்ரா மூர்த்தி அவர்கள் எழுதிய ‘தில்லி உத்தர சுவாமிமலை’ என்ற அருமையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாலதி ஜெயராமன்.

இந்தக் கட்டுரையை எழுதிய திருமதி சித்ரா மூர்த்தி சிறந்த எழுத்தாளரோடு சிறந்த சொற்பொழிவாளருமாவார். அவர் பல பத்திரிகைகளில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

நன்றி: திரிசக்தி, பொங்கல் மலர்

source:::: muruganbhakthi.org

natarajan

Message For The Day….Purify Your Heart with Mantras to Get God Installed inside Your Heart …

Mantra means that which saves, when meditated upon. The Name of God, any one of His countless ones, can serve the purpose. The Name is like the goad that can tame the elephant in rut, make it bend its knees and lift the log on to its tusks. Liberation (Moksha) is not a five-star hotel, or a deluxe tourist home. It is just the awareness of your reality and the rejection of all contrary conceptions. You can recognise your Self quickly and clearly, if you purify your heart with a mantra or by the singing of the glory of God. Both will grant you that boon. Sing from the heart, conscious of the layers of meaning that each word has. These are the surest ways to have God firmly installed in the throne of your hearts and it will redeem your lives.

Sathya Sai Baba

“Navratri “….A Festival With Many Faces !!!

The dancer bommai is a prominent part of golu decorations in Southern India

Navratri is celebrated for nine nights and ten days during which the nine forms of Shakti or Devi are worshipped. The tenth day, which is considered the most auspicious, is celebrated as Vijayadasami or Dussehra.

From worshipping golu dolls and sharing Navratri goodies to feeding nine young girls and putting a smile on their faces, each of the nine days of the colourful festival has something new to offer. Find out how Navratri is celebrated in different parts of Southern India.

In the south, especially in Tamil Nadu, the Navratri Golu is an important part of the celebrations.

The pride and joy that is felt by displaying your colourful dolls, some of which have been in the family for generations, is simply incomparable.

“I have a beautiful 80-year-old Subramanya Swamy doll in my collection,” says a proud Revathi from Gandhi Nagar, Adayar, who is already in the midst of a very tight schedule.

During Kanya Pooja, nine young girls are served food and goodies

 

During Ayudha Pooja, automobiles are machines are worshipped

Throughout Southern India, the ninth day of the Navratri festival is celebrated as Saraswati puja or Ayudha (weapon/machine) puja.

On this day, all tools and machines, including vehicles and all implements that help us earn our livelihood are worshipped.

Rajpal, proprietor of a popular hardware shop in Perambur, who celebrates this festival every year says, “While most festivals are celebrated at home, Ayudha Puja is celebrated at the place of work. We dust, clean, wash, and sometimes even paint all the tools used in the shop, and apply sandalwood paste and vermilion on them. Even our delivery vans and lorries are washed and decorated, and poojas are performed for them. We then distribute sweets to all our workers to thank them for their service and sometimes also burst a few crackers.”

 

 

The ritual of ‘Vidyarambham’ or introducing the children to the world of knowledge is another common practice followed on Vijayadasami day.

A Anuradha of Velachery who is a trained Montessori teacher claims that most parents prefer to enroll their children in school during this occasion.

“We usually have a lot of registrations on this day. Children are mostly accompanied by their grandparents and are taught to write their first alphabet by holding their fingers and writing the letters in a plate filled with rice. It is believed that starting anything new, be it education or a business venture on Vijayadasami day ensures success and prosperity. At home, on Saraswathi Puja day, we keep the books, pens, pencils, etc in the prayer room and worship them.”

Parvathy Panicker from Shoranur, Kerala also identifies with this custom of Vidyarambham.

 

source:::::rediff.com

natarajan