Message For the Day…” Education Must be for Life , Not Merely For Living …”

A young woman today aspires to be a good wife but not an exemplary mother. A student today does not aspire to be an exemplary father, but an attractive husband. Adding to this woe, parents today encourage such education which promotes these aspirations. Youngsters also forget their responsibilities to be discharged as exemplary parents. A typical father in today’s society does not want his son, above all, to be a man of virtue. He wants him to be a man of great education. Those parents alone, who aspire for transforming their children to be men and women of virtue, are worthy. Worldly education alone should not be the goal of life. Virtues are the true backbone of life. Education must be for life, not merely for a living. To accomplish this, spiritual thoughts and spiritual path is highly essential.

 

Sathya Sai Baba

Message For the Day… ” Health is Wealth ”

 

 

The way you live your life is your gift to those who come after.
Make it a fantastic one.

 

“It is health that is real wealth

And not pieces of gold or silver.”

~Author, Unknown

 

source:::: open my eyes Lord.net website

natarajan

 

 

 

 

 

Message For the Day…” What is Preyas and Sheryas…? “

All of you have two desires – Shreyas and Preyas. People are attracted by all kinds of objects in the world. People seek only those that will please the senses. Deriving pleasure from time to time through sense organs is described as Preyas. Preyas is not enduring, it is like a mirage. Sensuous pleasures are momentary and leave a trail of pain behind. However, from the learned to the illiterate, most people seek only such fleeting and unreal pleasures. Indulgence in sensual pleasures lead to bad practices and wrong conduct. You must graduate from Preyas to Shreyas. Shreyas means overcoming the demands of the senses and achieving spiritual bliss. All actions connected to the soul are related to Shreyas, while Preyas is related to the body.

Sathya Sai Baba

Message For the Day…” Reflections May be many But The Reality is One…”

When you offer salutations to someone, understand that you are saluting your own self. That ‘someone’ is none other than your own reflection. See others just as you see your own reflection in the mirror. When you are surrounded by many mirrors, you see a number of reflections. Reflections are many but the person is one. Reactions, reflections, and resounds are many but the reality is one. Names and forms may be different, but all beings are part and parcel of the same Divine Principle. Divinity is the underlying principle in the apparent multiplicity of this world. When I am speaking here, My voice is heard through each and every loudspeaker in this hall. In the same manner there exists the principle of unity in our hearts which we have to recognise.

 

Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது …” உனக்கு என்ன படிக்க ஆசை … ” ?

பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு,

வணக்கம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.

என் பிள்ளைக்கு இந்த கோர்ஸ் செட் ஆகுமா?, எதுக்கு வேலைவாய்ப்பு அதிகம்?, கேம்பஸ் இன்டர்வியூக்கள் எந்தக் கல்லூரியில் அதிகம் நடக்கிறது?, இந்த கோர்ஸுக்கு எந்தக் கல்லூரியில் படிப்பது நல்லது? இப்படி பல கேள்விகள் பெற்றோரின் மன ஓட்டத்தில் பாய்ந்துகொண்டே இருக்கின்றன.

மேலே கூறிய எல்லா கேள்விகளும் கேட்கப்பட வேண்டியவையே, ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி ஒன்று நம் நாட்டில் பல பெற்றோர்களால் பிள்ளைகளிடம் கேட்கப்படுவதே இல்லை.

“உனக்கு என்ன படிக்கணும்னு ஆசை?” – வாழ்வை அமைக்கும் கேள்வி அது.

உடை பிடிக்கிறதா, உணவு பிடிக்கிறதா என்ற கேள்விகளை தன் பிள்ளைகளிடம் கேட்கின்ற பெற்றோர்கள் ஏன் ‘நீ என்னவாக விரும்புற, உன் ஆசை என்ன?’ என்று கேட்பதில்லை.

பிள்ளைகளின் ஆசை என்னவென்றே அறியாமல் முடிவெடுப்பது ஒரு பிழை என்றால், ‘தம் பிள்ளைக்கு இது படிக்கத் தான் ஆசை, தம் பிள்ளைக்கு இப்பிரிவில் நிறைய திறமைகள் இருக்கிறது, இவனுக்கு இதை படிக்க வேண்டும் என்று விருப்பம்’ இப்படி பிள்ளைகளின் கனவை உணர்ந்தும் பெற்றோர் முரண்பட்ட முடிவை எடுப்பதினை பேதமை என்றே உரைக்கலாம்.

பிடிக்காத ஒரு படிப்பினை நாம் படிக்கும்போது மனதினில் வெறுப்பு தான் ஆட்கொள்கிறது. அப்போது கல்வியும் வெறும் மதிப்பெண்ணை பெற்று வேலையைப் பெறுவதற்கான ஒரு மாற்றுப் பண்டமாகவே பார்க்கப்படுகிறது. அப்படி பிடிக்காத படிப்பினை எடுத்து அப்பிரிவிலே வேலைப் பார்க்கப் போகும்பொழுது பார்க்கின்ற வேலையில் பற்றற்று போகின்றது. கடைசி வரை பல பேரின் வாழ்க்கை ‘அட்ஜஸ்ட்மென்ட்’ என்ற முறையினாலேயே நகர்த்தப்படுகிறது.

யோசித்துப் பார்த்தால் இப்படி வாழ்க்கையை புளிக்கச் செய்யும் பல நிகழ்வுகள் நடப்பதற்கு காரணமாக இருப்பது பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு நாம் எடுத்த அந்த ஒரு முடிவு தான்.

குழந்தை எடுத்து வைக்கின்ற முதல் அடி போல் ஒரு கல்லூரி, மற்றும் எடுக்கப்படுகின்ற பிரிவு ஆகியவை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஒரு மீனவனின் மகன் எரோனாடிகல் படிக்க வேண்டுமா? அப்படிப் படித்தால் என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது? அதற்கு மாறாக கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்திருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாமே என்று எண்ணினால் நமக்கு அப்துல் கலாம் எப்படிக் கிடைத்திருப்பார்?

கல்வியின் அடிப்படைத் தேவையை பொருளாதாரத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது பிதற்றலானது. இன்று நாம் அனைவரும் வாழக் காரணமாக இருப்பது விவசாயம். ஆனால் விவசாயத்தை பற்றி படிப்பதாக ஒரு மாணவன் கூறினால் சிரிக்கிறார்கள். நம் தேசத்தின் அடையாளமே விவசாயம்தான் என்பதை அறியாதவரின் அறியாமைச் சிரிப்பு இது.

ஒரு பெண் மெக்கானிக்கல், சிவில் படிக்க ஆசைப்படுகிறேன் என்றால் ஏளனமாக சிரிக்கின்றார்கள். கல்பனா சாவ்லாக்களை அறியாதவர்களின் அறியாமைச் சிரிப்பு அது.

மேலும், மீடியா தொடர்பாகப் படிக்கப் போகிறேன், கலைப் பிரிவில் படிக்கவிருக்கிறேன், நர்சிங் படிக்க விழைகிறேன், தமிழ் படிக்க விரும்புகிறேன் என ஒரு மாணவர் கூறினால் அவர் மனக்கோட்டையை சிதைப்பதில் இச்சமுதாயத்திற்கு பெறும் பங்கு இருக்கிறது.

‘என் மகன் இந்த காலேஜ்’ல இந்த கோர்ஸ் படிச்சு இப்ப சந்தோஷமாக இருக்கிறான் சின்ன பசங்களுக்கு என்ன தெரியும்? உங்க மகனையும் அதுவே எடுத்து படிக்கச் சொல்லுங்க’ இப்படி எதாவது கூறி பெற்றோரின் மனக் குட்டையில் கல்லை எறியும் கூட்டத்தின் தவறான அறிவுரையால் இன்று பல பிள்ளைகளின் வாழ்வியல் பாதிப்படைகிறது, இன்னும் அடைந்து கொண்டே இருக்கிறது.

கல்வியின் அவசியத்தை பாராமல் ஆதாயத்தை மட்டும் பார்க்கும் இதைப் போன்ற கமர்ஷியல் கணவான்களின் பேச்சை காதில் போட்டுக் கொள்ள கூடாது.

உண்மையில் எனக்கு என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு வருங்காலத்தை பற்றிய தெளிவான எண்ண ஓட்டம் இல்லை என்று கூறுபவர்கள் கண்டிப்பாக பெற்றோர்களின் அறிவுரையை எடுத்துக் கொள்ளலாம், தவறே இல்லை. அப்படி எடுத்துக் கொண்ட பாதையில் தன் திறமையை உணர்ந்து சாதித்தவர்கள் பலர்.

எனக்கு இது தான் ஆசை, இது தான் விருப்பம், இதில் நான் கண்டிப்பாக சாதிப்பேன் என்ற மன உறுதி கொண்டவர்கள் கண்டிப்பாக தன் வேட்கையை பெற்றோர்களிடம் உரைத்து அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். உங்களின் நிலைப்பாட்டை உங்கள் பெற்றோர்களிடம் உங்களால் விளக்க முடியவில்லை என்றால் எப்படி வெளியுலகிற்கு புரியவைப்பீர்கள்?

விருப்பமில்லாத படிப்பை படித்து நீங்கள் உங்கள் வாழ்வை மட்டும் சிதைத்துக் கொள்ளவில்லை, அப்படிப்பு படிக்க தீவிரமாக முயற்சித்த மற்றொரு மாணவனின் கனவையும் சேர்த்து சிதைக்கின்றீர்கள். நான் இது தான் படிக்கப் போகிறேன் என் ஆசை இது என்பதை கேட்பவர்களிடம் ஆணித்தரமாக சொல்லுங்கள் அப்படிச் சொல்கையில் உங்களுள்ளே தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட பாதையில் வெற்றி பெறுவதற்கான வேட்கை கூடும்.

நான்கு வருடம் முடித்துவிட்டு நான் இன்ஜினியரிங் படித்திருக்கக் கூடாது என்றுணரும் பொறியியலாளர்களும், ஆறரை வருடம் கழித்து மருத்துவம் படித்திருக்கக் கூடாது என்றுணரும் மருத்தவர்களும் நம் ஊரில் ஏராளம். படிக்கையில் இனிமேல் எனக்கு இது ஒத்துவராது என்று பாதி வழியிலே விலகிக் கொண்டவர்களும் ஏராளம்.

தன் காதலை இழந்துவிட்டோம் என்று மேசையில் தலை சாய்த்து அழுபவர்கள், பேருந்தில் ஜன்னலிலே சாய்ந்து கொண்டு விழி நீர் இறைப்பவர், மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு தன் கையாலாகத் தனத்தை உணர்ந்து தனிமையில் அழுபவர்கள் நம் நாட்டில் பலர் உள்ளனர்.

தன் பிள்ளை விழுந்துவிடக் கூடாது என்ற பாதுகாப்பு உணர்ச்சி அனைத்து பெற்றோர்களிடமும் இருக்கிறது. ஆனால் இவ்வுணர்ச்சியே அவர் பிள்ளைகளின் வாழ்விற்கு முட்டுக்கட்டையாக மாறிவிடக் கூடாது. யாரோ மூன்றாவது நபர் கூறும் பேச்சிற்கு மதிப்பளிக்கும் நீங்கள், உங்கள் பிள்ளைகளின் ஆசைக்கும் கொஞ்சம் மதிப்பளியுங்கள். அப்படியே அவர்கள் எடுத்துக் கொண்ட பாதையில் விழுந்தால் கூட வீழமாட்டார்கள் எழுந்து கொள்வர் ஏனென்றால் இது அவர்கள் எடுத்த முடிவு என்ற அச்சமும், கடமையும் அவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

பசி இழந்து, உறக்கம் இழந்து, சுகவாசத்தை இழந்து, பொழுது போக்கினை இழந்து நாளும் பிள்ளைக்காகவே வாழ்ந்து தேயும் பெற்றோர்களே… உங்களின் ஆசை எல்லாம் உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தானே! அப்படி இருக்கையில் ஒரு முறை உங்கள் பிள்ளைகளின் ஆசையை கேளுங்கள். கண்டிப்பாக எந்த பிரிவு எடுத்தாலும் அதில் காதல் இருந்தால் சாதிக்கலாம்; சாதித்தவர்களும் பலர். உங்கள் பிள்ளைகள் படிக்க விரும்பும் பிரிவில் சாதித்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எல்லா படிப்பிற்கும் அவசியம் உண்டு, எல்லோர் வாழவும் வழியுண்டு. என்ன, கொஞ்சம் தேட வேண்டும் அவ்வளவே.

ஆயிரத்து நூற்றிக்கு மேல் மதிப்பெண் எடுத்தால் ஆர்ட்ஸ் படிக்கக் கூடாதா என்ன? ஆயிரத்து நூறு மதிப்பெண் மேல் எடுத்து பிடிக்காத பிரிவில் படித்து சரிந்தவர்களும் இருக்கின்றனர், அறுநூறு மதிப்பெண் எடுத்து வாழ்வில் சாதித்தவர்களும் பலர் உள்ளனர். பெயர் பெற்ற கல்லூரியில் பிடிக்காத பிரிவை எடுத்துப் படிப்பதை விட சுமாரான கல்லூரியில் பிடித்த படிப்பை படிப்பதே மேலானது.

ஒரு சிறிய விண்ணப்பம்.. மதிப்பெண் வெளிவந்துவிட்ட நிலையில், “அய்யய்யோ.. இயற்பியல்ல பத்து மார்க் குறைஞ்சிடுச்சி, வேதியல்ல இரண்டு மார்க் போச்சு…”

இந்தக் கவலையை எல்லாம் விடுங்கள். உங்கள் பிள்ளை என்ன மதிப்பெண் எடுத்திருந்தாலும், அது அவரின் உழைப்பு. அந்த உழைப்பிற்கு மதிப்பளித்து தேர்வு முடிவு வரும் வரை காத்திருங்கள். நன்கொடை கொடுத்து படிக்கப்படும் படிப்பு அறிவை வளர்ப்பதை விட அச்சத்தைத்தான் வளர்க்கும்.

பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்ற உங்கள் அன்பு புரிகிறது. அப்படியே உங்கள் பிள்ளைகளின் மனதையும் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு, அவர்களின் எதிர்காலத்திற்கு ‘முடிவாக’ இல்லாமல் நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.

இந்தப் புலம்பல்கள், பெற்றோர்கள் பலருக்கும் ‘மொக்கை’ கடிதமாகத் தெரியலாம். ஆனால், சில பல ஆண்டுகளுக்கு முன்பு கிரியேட்டிவ் ஃபீல்டில் நுழைவதற்காக ஒரு குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்த ஒரு பிளஸ் 2 மாணவன், நிர்பந்தத்தின் காரணமாக வேறு படிப்பு படித்து, இப்போது ஓர் ஐ.டி. நிறுவனத்தில் போதுமான ஊதியத்துடன் வெறுமையான வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கிறான். வெளியுலகுக்கு பந்தாவானவனாகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் நொந்தவனாகவும் இருக்கும் இந்த நிலை உங்கள் செல்லக் குழந்தைகளுக்கும் வேண்டுமா?

ஹரி – தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com ….. in The Hindu … Tamil

natarajan

Keywords: பிளஸ் 2 தேர்வுகள், எதிர்கால கனவுகள், மேற்படிப்புகள், பிளஸ் 2-விற்கு பிறகு, உயர்கல்வி
Topics: உயர் கல்வி| வழிகாட்டுதல்| கல்வி| உயர் கல்வி|

Message For the Day…” Why Ego in The Mind …?”

In the Solar System the Earth is a miniscule entity. Asia is small in comparison to the Earth. Within Asia, India is just one country and within India, the district of Anantapur is still smaller; and Prasanthi Nilayam within Anantapur is tinier in comparison. Within Prasanthi Nilayam, you perhaps stay in one room. Then, why should you have an ego that is bigger than the Universe in its totality? This is totally an act of delusion, arising from ignorance. In fact, a great scholar, devotee and role model on the path of spirituality from ancient yore, Bhartruhari stated, “Out of ignorance I behaved like an elephant in rut thinking that there is no one superior to me. Because of the Divine Vision of sages and their teachings, I learnt the truth. Just as a disease can be cured by taking appropriate medicine, the fickle mind can be subdued by the Darshan and the teachings of sages and scholars.”

 

Sathya Sai Baba

முருகன் ஆலயங்களில் புனித மரங்கள்….

 

 வள்ளி தெய்வானை சமேத முருகன்

“Facets of Murukan” by Prof. Dr. Mrs. V. Balambal

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

இந்துக்கள் இயற்கையை வழிபட்டவர்கள். அவர்கள் மும்மூர்த்திகளை வணங்கினாலும் இயற்கை வழிபாடுகளை கைவிடவில்லை. மனித குல மேம்பாட்டிற்கு அத்யாவசயம் என்பதினால் காற்று, நீர், நிலம், நெருப்பு மற்றும் வாயு போன்ற ஐந்தையும் புனிதமாகப் போற்றி வணங்கி வந்தார்கள்.

அது போலவே மரங்களும் மனித வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சில மரங்களை ஸ்தல விருட்ஷங்கள், அதாவது ஆலயத்து புனித மரங்கள் என அவற்றை மக்கள் தற்போது வணங்கி வந்தாலும், பண்டையகால மனிதர்களும் மரங்களை இயற்கை வழிபாடு என்ற பெயரில் வணங்கி வந்துள்ளார்கள்.

பிறந்தது முதலே முருகனும் மரங்கள் மற்றும் செடி கொடிகளுடன் சம்பந்தப்பட்டு உள்ளார். சிவனுடைய மூன்றாம் கண்ணில் இருந்து நெருப்புப் பொறியாக வெளி வந்தவரை வாயுவே (வாயு பகவான்) எடுத்துச் சென்று சரவணப் பொய்கை எனும் நதியில் இருந்த ஆறு தாமரை மலர்கள் மீது ஆறுமுகமாக வைத்தார்.

முருகப் பெருமான் தன்னுடைய பிறப்பில் இருந்தே இயற்கையின் ஐந்து புலன்களுடன் சம்மந்தப்பட்டு இருந்துள்ளார். சங்க இலக்கியங்களில் அவரை செடி கொடிகளும் மரங்களும் அடர்ந்த குறிஞ்சி மலையின் அதிபதி என்று கூறி உள்ளார்கள்.

பண்டையக் காலம் முதல் எங்கெல்லாம் மலைகள் இருந்தனவோ அங்கெல்லாம் ஆலயங்களை எழுப்புவதை தமிழர்கள் வழக்கமாகக் கொண்டு உள்ளார்கள். தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மனைக் கொல்லச் சென்ற போது அவன் ஒரு மாம்பழ மரமாக தன்னை உருமாற்றிக் கொண்டு நின்று கொள்ள, அதை கண்ட முருகனும் ஒரு அம்பை எய்து அந்த மரத்தை இரண்டாகப் பிளந்து விட ஒன்று அவருடைய மயில் வாகனமாகவும், இரண்டாவது அவருடைய சேவல் கொடியாகவும் மாறியது.

ஆகவே சூரசம்ஹார நிகழ்ச்சிகள் ஆலயங்களில் நடைபெறும்போது இந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தும் விதமாக அங்கு மாம்பழ மரத்தைப் போல ஒன்றை வைப்பது வழக்கம்.

காலம் செல்லச் செல்ல பக்தர்கள் முருகனுக்கு ஆலயங்களை அமைக்கத் துவங்கினார்கள். முருகன் ஆலயங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் இருந்த ஸ்தல விருட்ஷங்களையும் வணங்கத் துவங்கினார்கள். முருகன் ஆலயங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட ஒரே மரம் தல விருட்ஷமாக இருக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

உள்ளூர் நிலைக்கேற்ப முருகன் ஆலயங்களில் இருந்த தல விருட்ஷங்கள் வெவ்வேறாக இருந்தன. இந்த கட்டுரையின் நோக்கமே தமிழ் நாட்டில் உள்ள ஆலயங்களில் உள்ள மரங்களின் வரலாற்று மகத்துவத்தையும், மருத்துவ குணங்களை ஆராய்வதுமே ஆகும்.

அவற்றைக் குறித்த புராணக் கதைகளையும் ஆராய்ந்தேன். இதில் ஸ்தல புராணங்கள், படித்தப் புத்தகங்களின் சாரம், மற்றும் அந்தந்த ஆலயங்களுக்கு விஜயம் செய்த போது அங்கு கேட்டறிந்த செய்திகள் போன்ற அனைத்தையும் கொடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டில் முருகனுடைய ஆலயம் பல இடங்களிலும் இருந்தாலும், வெவ்வேறு தல விருட்ஷங்களைக் அடங்கிய ஆலயங்களையே ஆராய்ந்தேன்.

தாமரை மலர்கள் மற்றும் மாம்பழ மரங்களைத் தவிர இந்தக் கட்டுரையில் காணப்படும் மரங்கள் வருமாறு: ராணி மலர் அல்லது மருதம் (Terminalia Arjuna), பன்னீர் அல்லது இந்திய கற்பூரவல்லி (Guettarda speciosa), புன்னை (Calophyllum inophyllum ), நெல்லி (Emblica officinalis), மகிழம் (Mimusops elengi), பலா (Artocarpus integrifolia), குரா (Webra corymbosa), பத்ரி ( Stereospermum suaveolens), வன்னி (Prosopis spicigera) மற்றும் கல் அதி (Ficus retusa auct) போன்றவை அவை.

தமிழ்நாட்டின் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை தண்டாயுதபாணி ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷம் ‘மருதமரம்’. அதை சமஸ்கிருதத்தில் ‘அர்ஜுனா’ என்கிறார்கள். இந்த ஆலயத்தை சுற்றி உள்ள மலைப் பகுதிகளில் மருத மரங்கள் அதிகமாக உள்ளதினால் அந்த ஆலயத்தின் பெயரும் அதனால் வந்திருக்கலாம். இந்த மரத்தில் சிறிய சிறிய பூக்களே பூக்கின்றன.

இந்த ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷத்தை பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். இந்த மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள பட்டைகளை உபயோகித்து ஆயுர்வேத மருத்துவத்தில் இருதய நோய்க்கு மருந்தை தயாரிக்கின்றார்கள்.

‘வாகதத்தா’ மற்றும் ‘சக்ரதத்தா’ போன்ற பெரும் மருத்துவ நிபுணர்கள் இருதய சிகிச்சைக்கான வேறு பல மருந்துகளுடன் இந்த மரத்தில் இருந்து செய்த மருந்தையும் கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள்.

இதில் செய்யப்படும் மருந்துகள் ஆஸ்துமா நோய்க்கு நல்ல மருந்தாகும். இதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் உடைந்து போன எலும்புகள் இணையும்போது அவை வலுப்படும். வயிற்று நோயான பேதியை நிறுத்த மருதப் பொடியை உண்ணலாம்.

இளம் பெண்களின் முகங்களில் தோன்றும் சிறு பருக்களுக்கு இந்த மரப்பட்டையின் பசையைத் தடவலாம். தேள் கடிக்கு இந்த மரத்தின் பட்டையை எரித்து அதன் சாம்பலை தடவினால் உடனே குணமாகும். இயற்கையில் நுண்ணுயிரிகளால் விளைவும் தீமைகளை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக்கும் சக்தி கொண்டது இந்த மரம்.

திருச்செந்தூரில் உள்ள முருகனின் ஆலயத்தில் பூஜை செய்த வீபுதியை பன்னீர் இலை மீது வைத்தே பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதற்குக் காரணம் பன்னீர் மரம் அங்கு முருகப் பெருமானுக்கு உகந்த மரம் ஆகும். இந்த மரத்தின் வெள்ளை நிறப் பூக்கள் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்டவை. சில ஆலயங்களில் பன்னீர் புஷ்பம் சிவன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு உகந்த மலராக கருதப்படுகிறது.

இரவில் பூத்துக் குலுக்கும் இந்தப் பூவின் வாசனை நல்ல நறுமணத்தைக் கொண்டு உள்ளது. இந்த மரத்தின் பூக்களை அர்ச்சனை செய்யவும், மாலையாகக் கோர்த்து தெய்வங்களுக்கு அணிவிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்தின் பட்டைகள் மருத்துவக் குணங்களைக் கொண்டு உள்ளது. இந்த மரப்பட்டையை வயிற்று நோயான பேதியை நிறுத்தும் மருந்துகள் செய்யவும், வீடுகளில் மேஜை நாற்காலிகளை செய்யவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் உடலில் தோல் பகுதிகளில் உப்பிக் கொள்ளும் இடங்களில் இந்த மரத்தின் இலைகளை வைத்துக் கட்ட உப்புசம் குறையுமாம்.

புன்னை மலர்கள் சாதாரணமாக சிவபெருமானின் காலை வேளை பூஜையில் போடப்படும் மலராகும். புன்னை மரம் கடலூரில் மைலம் எனும் இடத்தில் உள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தின் ஸ்தல விருஷம் ஆகும். இது வாழ்கையில் வளர்ச்சியைக் குறிக்கும் மரமாம்.

புராணங்களில் ‘புன்னக வனம்’ என்று கூறி இந்த மரங்கள் அடர்ந்த வனப் பிரதேசத்தைப் பற்றிய குறிப்புக்கள் நிறையவே உள்ளன. பண்டைய காலத்தில் கிராமங்களில் ஒரு பழக்கம் இருந்ததாம். பூக்க வேண்டிய காலத்தில் இந்த மரத்தில் பூக்கள் தோன்றவில்லை என்றால் ஊர் பெண்கள் அந்த மரத்தை சுற்றி நின்றவாறு நடனம் ஆடிக்கொண்டே அதை எட்டி எட்டி உதைப்பார்களாம்.

அப்படி செய்வதின் மூலம் பூக்காத மரங்களும் பூக்கத் துவங்கும் என்பது ஆச்சர்யமான உண்மையாக இருந்துள்ளது (Agrawala, Ancient Indian Folk Cults, 1970, Varanasi). புன்னை மலரின் சாற்றைப் பூசுவத்தின் மூலம் மேக நோயும் (venerial disease), உடலில் தோன்றும் கொப்புளங்களும் குணமாகுமாம்.

புன்னை மர இலைகளை பொடி செய்து உபயோகித்தால் தலை சுற்றலும், தலை வலியும் குணமாகும். நரம்பு தளர்ச்சி போன்ற வியாதியும் (நடுக்கம்) இதன் மூலம் குணமாகிறது. இந்த மரத்தின் அடிமரப் பட்டையின் சாற்றை உட்கொண்டால் உடலுக்குள் மற்றும் வெளியில் வெளியேறும் ரத்தம் கெட்டிப்பட்டு நின்று விடும்.

இந்த மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணையை ஊசி மூலம் தசையில் செலுத்திக் கொண்டால் தொழு நோயினால் ஏற்படும் வலியை குறைக்க முடியும் என்பது ஆச்சர்யமான செய்தியாக உள்ளது (Dustur, J. F., Medicinal Plants of India and Pakistan, 1962, Bombay).

இந்த மரத்தின் விதையில் இருந்து பெறப்படும் பச்சை வண்ண எண்ணை நாற்றம் அடித்தாலும், தசை வலி, மூட்டு வலி, தோல் வியாதி மற்றும் சீழ்ப்புண் (அல்சர்) போன்ற நோய்களையும் குணப்படுத்துகின்றது. (Cowen, D. V., Flowering Trees and Shrubs in India, 1984, Bombay). இதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் கட்டி அதாவது சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். (Krishnamurthy, T, Minor Forest Products of India, 1993, Delhi). புன்னை பழங்களில் இருந்து பசை கிடைக்கின்றது.

மகிழ மரம் சிவன், விஷ்ணு மற்றும் முருகனுக்கு உகந்த மலர்கள் என்பதினால் வைஷ்ணவர்களும், சைவர்களும் அதை பயன்படுத்துகிறார்கள். அவர்களைத் தவிர ஜைன மற்றும் புத்த மதத்தினரும் அதை பயன்படுத்துகிறார்கள். மகிழ மரங்கள் அமராவதி மற்றும் சாஞ்சி ஸ்தூபிகளுக்கு அருகிலும் உள்ளன.

‘நெமினத’ எனும் ஜெயின் தீர்த்தங்கரர் இந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு மோட்ஷம் அடைந்தாராம். காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்போரூரில் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம், மதுரை மாவட்டத்தில் பூம்பாறையில் உள்ள குழந்தைவேல் ஆலயம் போன்றவற்றில் இந்த மரம் ஆலய ஸ்தல விருட்ஷமாகும். இந்த மரத்தின் மலர்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்ட பூக்கள் ஆகும். அவை வாடினாலும் மணக்கும்.

இந்த மரத்தைக் குறித்த புராணக் கதைகள் நிறையவே உள்ளன. இந்த மரத்தின் அடியில் இளம் பெண்கள் அமர்ந்து கொண்டு உணவு அருந்தனாலும், அதன் மீது எச்சில் துப்பினாலும் அந்த மரம் அதிக பூக்களை பூக்குமாம் (M. Amirthalingam,Sacred Trees of Tamil Nadu, Chennai, 1998, p 167). இந்தியப் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தை பெறுவது வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது. அப்படி ஆண் குழந்தைகள் இல்லாதவர்கள், ஆலயங்களில் உள்ள இந்த மரத்தை பிரதர்ஷணம் செய்தப் பின் அதன் மீது ஒரு தொட்டிலைக் கட்டி விட்டால் ஆண் குழந்தைப் பிறக்குமாம்.

அது போல தமது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டு இந்த மரத்தை பிரதர்ஷணம் செய்தப் பின் அதன் மீது ஒரு கயிற்றைக் கட்டுவார்களாம். கோரிக்கை நிறைவேறியதும் ஆலயத்துக்குச் சென்று அங்கு கட்டி இருந்தக் கயிற்றை அவிழ்த்து விடுவார்களாம். முருகனை சியோன் என கருதுவதினால் (son of Korravai & Siva) குழந்தை வரம் கேட்டு அவரை வணங்குவார்களாம்.

குரா எனப்படும் சுரைக்காய் போன்ற மரம் தந்தைக்கும் மகனுக்கும் உகந்த மரமாம் (Siva and Murugan). நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள திருவிடைக்காய் எனும் இடத்தில் உள்ள குமாரசிவம் ஆலயத்தின் ஸ்தல விருட்ஷமாம் இந்த மரம்.

இந்த மரத்தை ஜைனர்களும் புனித மரமாக கருதுகிறார்கள். காஞ்சீபுரத்தில் ஜைன காசி என அழைக்கப்படும் திருப்பருத்திக்குன்றம் எனும் இடத்தில் உள்ள வர்த்தமானீஸ்வரர் ஆலயத்திலும் இதுவே ஸ்தல விருட்ஷம் ஆகும். இந்த ஆலயத்தின் ஒரு கல்வெட்டு செய்தியின்படி ‘ தர்மத்தைக் குறிக்கும் என்றும் அழிவில்லாத திரிலோக்யனாதாவின் வாசஸ்தலத்தின் வாயிலில் நிற்கும் இந்த மரம் பெரியதாக வளர்வதும் இல்லை, சிறியதாவதும் இல்லை. அது மன்னனின் செங்கோலைக் காத்து நிற்கின்றது’ (South Indian Inscriptions Vol. VII, No. 399).

ஸ்தல புராணத்தின்படி நல்ல மணம் கொண்ட இந்த மரத்தின் பூக்களை முருகன் பெரிதும் விரும்புகிறார். இந்த மரத்தில் ஒரு தொட்டிலைக் கட்டிவிட்டு, ஆண் குழந்தை வேண்டும் என வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமாம்.

இந்த மரம் திருவிடைக்காளி ஆலயத்தில் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த மரத்தின் பொந்தில் உள்ள உள்ள நாகத்தை அங்குள்ள பண்டிதர் தினமும் பூஜித்து வருகிறார் . இந்த ஆலயத்தை சுற்றி உள்ளப் பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் யாருமே இதுவரை பாம்புக் கடிபட்டு இறந்தது இல்லையாம்.

கல் அதி அல்லது குறுகலான இலைகளைக் கொண்ட நாவல் மரமும் திருப்பரம்குன்றத்து சுப்பிரமணியர் ஆலயத்தில் உள்ள முருகனுக்கு உகந்தப் புனிதமான மரமாம். திருப்பரம்குன்றம் ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். சிறு மலைக் குன்றின் மீது உள்ள இங்குதான் சூரபத்மனைக் கொன்றப் பின் முருகப் பெருமான் வந்து தேவசேனாவை மணந்து கொண்டார்.

சங்க காலத்தை சேர்ந்த சிறப்பான பத்து காப்பியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் நக்கீரனார் இயற்கையாகவே அழகாக அமைந்து உள்ள இந்த இடத்தின் பெருமையை விவரித்து உள்ளார். இந்த மரப்பட்டையின் சாறு வயிற்றுப் புண் மற்றும் கல்லீரல் கோளாறுகளை குணப்படுத்துமாம்.

பலா, வாழைப்பழம் மற்றும் மாம்பழம் போன்ற மூன்றுப் பழங்களிலும் பலா முக்கியப் பங்கை வகிக்கின்றது. சேலம் மாவட்டத்தின் கொல்லிமலை ஆறுமுகப் பெருமான் ஆலயத்தின் ஸ்தல விருட்ஷம் பலா மரமாகும்.

பலா மரத்தின் இலைகள் வாழை இலையைப் போன்ற புனிதமான இலை என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீடுகளில் கலசம் வைக்கும் பெண்கள் வாழை இலைகளை வைப்பது போல பலா இலைகளைக் கூட உபயோகின்றார்கள். பண்டைக் காலத்தை சேர்ந்த சில புத்த மத சிலைகளில் கூட பலா மர சிற்பங்கள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

இந்த மரத்தின் அடியில் கடவுட்கள், அகமாக்கள், வேதங்கள் மற்றும் சாஸ்திரங்கள் அமர்ந்து இருந்ததான செய்தியைக் குறிப்பிட்டு அதன் புனிதத் தன்மையை எடுத்துக் காட்டி உள்ளார்கள் (M. Amirthalingam). இந்த மரத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் ஊற்றினாலும் அது தெய்வங்கள் அனைவருக்கும் அபிஷேகம் செய்த பலனைத் தருமாம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வல்லகோட்டை முருகன் ஆலயத்தில் உள்ள முத்துக் குமரன் ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷம் பத்ரி மரமாகும். இதன் பூக்கள் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்டவை. இந்த மரத்தின் பூக்கள் சிவன், விஷ்ணு மற்றும் முருகனுக்கு உகந்தவை.

அது மட்டும் அல்ல இந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டுதான் பதினோராவது தீர்தங்கரான வசுபூஜ்யா என்பவர் ஞானம் அடைந்தாராம். அவர்களைத் தவிர ஒரு யக்ஷாவும் இந்த மரத்துடன் சம்மந்தப்பட்டு உள்ளது (Bhattacharya, Jaina Iconography, Delhi, 1974). திருப்பாதிரிபுலியூரில் உள்ள பாடலீஸ்வரர் ஆலயத்திலும் இந்த மரமே ஸ்தல விருட்ஷமாகும்.

இத மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் இருந்துதான் பார்வதி தேவி தனது பாபங்களை விலக்கிக் கொண்டாராம். (Sthala Purana of Padaleeswarar temple). பண்டைய இந்திய மருத்துவ மேதைகளான ‘சரகா’, ‘சுஸ்ருதா’ மற்றும் ‘வராஹமித்ரா’ என்பவர்கள் இந்த மரத்தில் பல்வேறு பகுதிகளை பல தரப்பட்ட வியாதிகளை குணப்படுத்த பயன்படுத்தி உள்ளார்கள்.

இந்த மரத்தின் பட்டைகள் இருமல், வயிற்று வலி மற்றும் ரத்தசோகை போன்ற வியாதிகளை குணப்படுத்துமாம். இதன் பூக்கள் வயிற்றுப் போக்கு மற்றும் ரத்த வெளியேற்றத்தைத் தடுக்கும். இந்த மரத்தின் வேர் வயிற்று வலியை குணப்படுத்தும்.

தமிழ்நாட்டு சிவன் ஆலயங்கள் பலவற்றில் வன்னி மரமே ஸ்தல விருட்ஷமாக உள்ளது. அதே வன்னி மரம் திருச்சி மாவட்டத்தின் குமாரவயலூர் ஆலயத்தில் ஸ்தல விருட்ஷமாக உள்ளது. இந்த மரத்தின் புனிதத்தைப் பற்றி ரிக் வேதம், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் செய்திகள் உள்ளன.

அக்னி பகவான் இந்த மரத்தில் வாசம் செய்ததான கதை உள்ளது. ஆகவே யாகங்களில் எழுப்பப்படும் ஹோமங்களில் இது விசேஷமானதாக கருதப்படுகிறது. தீ மூட்டி வளர்க்கப்படும் ஹோமங்களில் வன்னிமரப் பட்டை, ஆல மர மற்றும் அரச மரக் குச்சிகளை பண்டிதர்கள் பயன்படுத்துகிறார்கள் (Macdonell & Keith, Vedic Index, Delhi, 1982). வன்னி மரம் சனி பகவானுக்கும் புனிதமானது என்று செய்தி ஆச்சர்யமாக இருக்கும். இந்த மரத்தைக் குறித்த புராணக் கதைகள் பலவும் உண்டு. வன்னி மரப் பட்டைகள், இலைகள், பழம் மற்றும் அதன் மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இந்த மர இலைகளின் சாற்றை அருந்தினால் மூட்டு வலி, தசை வலி மற்றும் பித்த வியாதிகள் குணமாகும். கர்பிணிகள் இந்த மரத்தின் மலர்களை சக்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படாது. இந்த மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலையின் சாறுகளை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் பாம்புக் கடி விஷம் முறியும் (Shanmugam N. K. Mooligai Kalai Kalanjiyam, Madras, 1989).

மிகவும் வலிமையான இந்த மரத்தின் கட்டைகளைக் கொண்டு விவசாய நிலங்களில் உழுவதற்கு பயன்படுத்தப்படும் மரத்திலான கருவிகளை செய்யலாம். தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களுக்கு வன்னிமரம் குலதெய்வத்தைப் போன்ற பாதுகாப்பைத் தரும் மரம். ஆகவே வன்னியர்கள் மரணம் அடைந்தால் அவர்களது இறுதிக் காரியங்களில்-தகனத்திற்கு- வன்னி மரக் கட்டைகளையே பயன்படுத்துவார்கள்.

தஞ்சாவூரில் உள்ள சுவாமிமலை ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். இங்குதான் அவர் பிரணவ மந்திரத்தை சிவனுக்கு போதித்தாராம். ஆகவே அந்த ஆலயத்தில் உள்ள ஸ்வாமிநாத ஸ்வாமியை தகப்பன் ஸ்வாமி என்றே அழைக்கின்றார்கள். சிவனை மாணவராகவும், முருகனை குருவாகவும் சித்தரித்து உள்ளார்கள்.

சிவனுக்கும், விஷ்ணு ஆலயங்களிலும் புனிதமாக கருதப்படும் நெல்லி மரமே ஸ்வாமி மலையிலும் ஸ்தல விருட்ஷமாக உள்ளது. இந்த மரத்தின் பழத்தில் லஷ்மி தேவி குடி இருப்பதாகக் கருதப்படுவதினால் அது வளமான வாழ்வையும், செல்வத்தையும் கொடுக்கும் மரம் என்கிறார்கள். கனகதாரா ஸ்தோத்திரத்தை தோத்திரம் செய்து தனக்கு நெல்லிக் கனியைத் தந்த ஏழைப் பெண்ணை ஆதி சங்கரர் பெரும் செல்வந்தர் ஆக்கினார் என்பது கதை.

நெல்லிக்காயை அமலாக்கி பழம் என்று குறிப்பிட்டு அதைப் பற்றிய செய்திகள் ஜைமீனிய உபநிஷத், சந்தோக்ய உபநிஷத், குமார புராணா மற்றும் சங்கரத புராணா போன்ற பல மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சாஞ்சியில் உள்ள ஸ்தூபாவிலும் நெல்லி மரத்தின் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. அதிக சத்து உள்ள பழம் மட்டும் அல்ல, நெல்லி உயிர் அணுக்களை அதிகரிக்கும் குணம் கொண்டது.

ஆண் குழந்தைகள் வேண்டும் என வேண்டிக் கொண்டு பெண்கள் இந்த ஆலய மரத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கயிற்றைக் கட்டுவார்கள். கோரிக்கை நிறைவேறியதும் அதை கயற்றி விடுவார்கள். இந்த மரத்துக்கு சந்தனம் மற்றும் மஞ்சள் பசைகளை தடவி, குங்குமம் இட்டு , மாலைகளைக் கட்டி கற்பூரம் காட்டி வழிபடுகிறார்கள்.

இந்த ஆலயத்தின் ஸ்தல புராணத்தின்படி இந்த மரம் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் நடப்பட வேண்டும். புராணக் கதை ஒன்றில் இந்த பிரபஞ்சமே பிரளயத்தில் முழுகியபோது அதைக் கண்டு பிரும்மா பயந்து போய் வாயை பிளந்து கொண்டு நின்றபோது அவர் வாயில் இருந்து கீழே சிந்திய உமிழ் நீரே நெல்லி மரமாக மாறியதாக (Padma Purana, Uttarakanda, 47. 7-11) கூறப்பட்டு உள்ளது. ஸ்கந்த புராணமோ பிரும்மா செய்த ஒரு தவத்தின் முடிவில் அவர் சிந்திய ஆனந்தக் கண்ணீரில் இருந்து இந்த மரம் வந்தது என்று கூறி உள்ளது (II, 4. 12. 13).

இந்த புராணக் கதைகளைத் தாண்டி இந்த மரம் மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது உண்மை. இதன் இலைகள், கனி, பூக்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவை சில மருந்துகளை தயாரிக்க உதவுகின்றன. ஒரு நெல்லிக் கனியின் சத்து மூன்று ஆப்பிள் பழங்களின் சத்துக்களுக்கு இணையானது.

இதில் வைட்டமின் C அதிகம். இந்தக் கனியை தேனுடன் கலந்து சாப்பிட்ட ஆஸ்துமா, TB எனும் நுரையீரல் நோய் , மார்புச் சளி, கல்லீரல் கோளாறு, சக்கரை வியாதி போன்றவை குணமாகும். பல் ஈறுகளில் இருந்து வெளியேறும் ரத்தம் நிற்கும். இந்த மரக் கனியை உண்டால் களைப்பு ஏற்படாது, மன அழுத்தம் குறையும். கண் பார்வைகளுக்கு நல்லது.

ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்த கனியின் பதப்பட்ட சாறு ஜீரணக் கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவற்றை குணப்படுத்தி மூக்கு அடைப்பையும் விலக்கும் என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்து உள்ளார்கள். இந்த மரத்தின் பல பாகங்களை பயன்படுத்தி பல்வலி, நரம்பு தளர்ச்சி எனப்படும் நடுக்கம், தொண்டை புண், போன்றவற்றை குணப்படுத்த மருந்துகளை தயாரிக்கின்றார்கள்.

கருப்பையை பலப்படுத்தும் மருந்தையும் இந்த மரத்தின் சில கலவைகளில் செய்கிறார்கள். தேள்கடியை குணமாக்க நெல்லி மரப்பட்டை மற்றும் வெங்காய சாறு இரண்டும் கலந்த கலவையை பயன்படுத்துகிறார்கள்.

முடிவுரை

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பல இடங்களிலும் முருகனின் ஆலயங்கள் உள்ளன. அங்கெல்லாம் பக்தர்கள் சென்று அந்தந்த ஆலயங்களில் உள்ள ஸ்தல விருட்ஷங்களை வணங்குகிறார்கள். அங்குள்ள மரத்தை புனிதமாகக் கருதுகிறார்கள். அந்த ஆலயங்களில் உள்ள ஸ்தல மரங்களும் அங்குள்ள தெய்வங்களுக்கு இணையானதே என்று நினைக்கின்றார்கள்.

அந்த மரங்களை வழிபடுவதின் மூலம் தமது வேண்டுகோட்கள் நிறைவேறும் என்று நம்புவதினால் அவர்கள் அந்த ஆலயங்களில் உள்ள தெய்வங்களை வழிபடுவது போலவே அங்குள்ள ஸ்தல விருட்ஷங்களுக்கும் மாலைகள் போட்டு, பூஜைகள் செய்து அவற்றையும் வழிபடுகிறார்கள். ஆலயங்களில் உள்ள கருவறைக்கு சென்று தெய்வத்தின் பக்கத்தில் பக்தர்கள் நிற்க முடியாது. ஆனால் அவர்களால் ஆலயங்களில் உள்ள ஸ்தல விருட்ஷங்களின் அருகில் அவர்களால் செல்ல முடியும்.

ஆகவே அவர்களது ஸ்தல விருட்ஷங்களின் மீதான நம்பிக்கை அபாரமானது. அந்த ஸ்தல விருட்ஷங்கள் மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த மரங்களில் இருந்து செய்யப்படும் மருந்துகள் எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை. புராணங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் மருத்துவ குணம் போன்றவற்றைத் தவிர இயற்கை சூழ்நிலையை பாதுகாக்கவும் மரங்கள் இன்றி அமையாதவை.

ஆகவே சுற்றுப்புற சூழ்நிலையை நன்கு பராமரித்து, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதின் மூலமே ஒரு தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும். அதற்கு உதவியாக இருப்பது மக்களின் கடமை. ஸ்தல விருட்ஷங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக உள்ளன. ஸ்தல விருட்ஷங்கள் எனப்படும் அந்த மரங்களைப் பற்றிய உண்மைகளை அனைவரும் அறிந்து கொண்டு, அவற்றை புனிதமாக போற்றி வணங்குவது மட்டும் அல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாப்பதையும் தமது கடமையாக நினைக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை அவரவர்களின் சார்ந்துள்ள மதங்கள் அனுமதிக்கும் எதையுமே மக்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகின்றது . ஸ்தல விருட்ஷங்கள் அதற்கு ஒரு உதாரணம். முருக வழிபாடும் ஒரு விதத்தில் இதற்கு உதவுகின்றது.

“Facets of Murukan” by Prof. Dr. Mrs. V. Balambal

Message For the Day…” Do Not Find Fault with Others…”

Buddha taught that we should not have anger, not find others’ faults, and also not harm others, because all are the embodiments of the pure and eternal principle of the Atma. Have compassion towards the poor and help them to the extent possible. You think those who do not have food to eat are poor people. You cannot call someone poor just because they do not have money or food to eat. Truly speaking, nobody is poor. All are rich, not poor. Those whom you consider as poor may not have money, but all are endowed with the wealth of a loving heart (hridaya). Understand and respect this underlying principle of unity and Divinity in all, and experience bliss. Do not have narrow considerations like ‘these are my friends, they are my enemies, those are my relations’ and so on. All are one, be alike to everyone. This is the most important teachi ng of Buddha.

 

Sathya Sai Baba

Message For the Day…” Man Should Use his ‘Buddhi’ to Understand the Priniciple of Unity … “

Buddha experienced the unity of all creation. There was total transformation in Him once He attained the vision of ekatma (oneness of the atma). He realised that all worldly relations were false. He transcended body consciousness. That is why he earned the appellation Buddha (the enlightened one). Man should use his buddhi (intellect) to understand this principle of unity. Buddhi is of two types: the buddhi that sees diversity in unity is worldly intelligence. You should develop adhyatmic buddhi (spiritual intelligence) in order to realise the underlying unity of all creation. It gives you the experience of the atmic principle which is the same in the entire creation. Buddha attained the vision of the atma. Truly speaking, Buddha is not just one individual. All of you are Buddhas. You will see unity everywhere once you understand this truth.

 

Sathya Sai Baba

This World is Not a Bad Place ….Part One !!!

 

 WORLD IS REALLY GOOD …. PART ONE …

 SOURCE:::: viral nova .com

 natarajan

The world isn’t always fair. In fact, there are many, many times when it’s unfair and it feels like other people are out to get you. That’s why it’s important to remember the positive parts of life when you can. Take, for example, these random acts of kindness.

Complete strangers helped each other out for no reason other than to be good people. This is the sort of kindness that really renews your faith in the world and other people. As you scroll through these, it’ll become very clear that the world isn’t the bad place some people try to make it out to be…