வாரம் ஒரு கவிதை ….” சித்திரம் பேசுதடி …”

சித்திரம் பேசுதடி …
+++++++++++++++++++
 நீல வண்ண சித்திரம் என்னை
விண்ணிலிருந்து  பார்த்து ரசிக்கும்
மனிதா நீ மண்ணில் என்னை சிதைப்பது
என்ன நியாயம் ?
உன் பூமித்தாய் கேட்கிறேன் உன்னை
உரிமையுடன் ! நீ இருக்கும் சோலைவனம்
விட்டு வேற்று கிரகத்துக்கு செல்கிறேன்
என்கிறாயே ! உன் விண்வெளி போட்டியிலும்
பூமி நான் சரித்திரம் படைப்பேன்  மனிதா !
ஏன் தெரியுமா …சித்திரம் நான் உனக்கு
மட்டும் சொந்தம் இல்லை … உன் பிள்ளைகளுக்கும்
நான் சொந்தம் ! புரிந்து நடந்து கொள் மனிதா !
நடராஜன்.K
in  http://www.dinamani.com  dated 06/062019
06/06/2019

Morning Breakfast for my Winged Guests at my Terrace …..

Every Day a  Group of pigeons wait for me to serve Food to them on their Table and Floor . of my Terrace.

On one such day i videographed their presence thro my mobile camera .

May like to see and Share

K.Natarajan

03/06/2019

 

 

 

வாரம் ஒரு கவிதை ….” கண்டெடுப்பின் காலக் குறிப்புகள் “

கண்டெடுப்பின் காலக்  குறிப்புகள்
=================================
கடலில் மட்டும் முத்துக்கள் இல்லை
இந்த மண்ணின் அடியிலும் புதைந்து
கிடக்குது நம் முன்னோர் வடிவமைத்த
நகரமும் கோயிலும் அழகு சிற்பங்களுடன்
காலத்தால் அழியாத அடையாள சின்னமாய் !
எந்த தொழில் நுட்பம்   இருந்தது நம் முன்னோருக்கு
அன்று ? ஆண்டுகள் பல கடந்தும் அவர் பேர்
சொல்லுதே இன்னும் !
கணிணி யுகத்தில் வாழும் நாம்  முறையாக
பதிவு செய்ய வேண்டும் நம் நாட்டின்
அருமை பெருமையை ஒரு பொக்கிஷமாக !
விட்டு செல்ல வேண்டும் நம் பெயர் சொல்லும்
பாத சுவடுகளை இனி வரும் தலை முறை
பின் தொடர்ந்து நடக்க !
இனம் மதம் மொழி தாண்டி நாம் இன்று
பதிக்கும் பாத சுவடு கல்லில் வடித்த சிற்பமாய்
அடையாளம் காட்டும் நம் புனித மண்ணை
ஒரு புதிய பூமியாக என்றென்றும் !
K.Natarajan   in http://www.dinamani.com dated  01/06/2019
01/06/2019

மா வாழை… ஒரு அரிய காட்சி !!!

வாழை மர நட்புக் கரங்களில்  மாங்கனிக்   கொத்து  தன்  இலைகளுடன் …. மாவாழை … ஒரு பசுமையான காட்சி …. உடனே  “கிளிக் ” செய்தேன் என்

அலைபேசி  கேமரா மூலம் …என் வீட்டு  மாடியிலிருந்து !

நடராஜன் K

31/05/2019

 

 

 

 

வாரம் ஒரு கவிதை ….” கண் திறப்பாரா கடவுள் ” ?

கண் திறப்பாரா கடவுள் ?
++++++++++++++++++++++++++
வேண்டாத கடவுள் இல்லை ..செய்யாத பிரார்த்தனை
இல்லை ! கண் திறந்து பார்ப்பாரா கடவுள் ?
பூஜை அறையில் வேண்டி நின்றேன் கடவுளிடம்
இன்று காலை !
இதோ தந்து விட்டார் வரம் என் கடவுள் !
வாட்டர் டேங்கர் என் வீட்டு வாசலில் கொடுக்கிறது
ஒரு குரல் … குழல் இனிதல்ல , யாழ் இனிதல்ல
வாட்டர் டேங்கர் ஒலிப்பானே என் செவிக்கு
தேவ கானம் இன்று !
நாட் கணக்கில் மாதக்கணக்கில் காத்திருந்தேன்
கண் திறந்து விட்டார் கடவுள் இன்று !
நிறைந்தது என் வீட்டு வாட்டர் டேங்க்
மட்டும் அல்ல இன்று!  என் மனதும் தான் !!!
K .நடராஜன்
29/05/2019