Every One Asks : Why Changi Is The World Best !!!

Singapore's Changi Airport: you could spend a few weeks here and not realise you missed your flight.

SINGAPORE’S CHANGI AIRPORT

Singapore’s Changi Airport: you could spend a few weeks here and not realise you missed your flight

The latest Skytrax poll, sourced from more than 12 million travellers, restores Changi to the number one position, a spot it last occupied in 2010. In 2012, for the 16th year, Changi won the Golden Pillow award for top airport from the Sleeping in Airports website.

No other airport has been named world’s best airport so consistently and by so many different sources, and it’s worth considering the reasons.

Changi handled more than 51 million air travellers in 2012 yet it feels spacious, unhurried and calm.

Its green spaces include an outside cactus garden with seating, a sunflower garden and an enclosed butterfly garden. All the terminals offer free wifi and computers with internet access. Charging stations, also free, allow you to lock up your phone while it charges.

 

There’s also a free movie theatre and a huge indoor slide where restless kids can burn some energy. Each of its three terminals has free rest areas, with leather chairs with head and leg rests that allow you to stretch out full length.

Each terminal also has its own transit hotel, with low-cost rooms available in six-hour blocks. Cleanliness is top notch. Travellers are asked to rank the toilets on an electronic scoreboard as they exit.

If a particular facility drops below par, a flying cleaner team is dispatched. Terminal 1 also has a rooftop pool with a Jacuzzi and bar. Although Changi is a big airport, the speedy Skytrain offers quick transfers.

The factors that put Changi on top stem from a recognition that passengers deserve to be treated like human beings, not an infernal nuisance to be fed and bled of cash as quickly as possible. When airport preference becomes a factor that influences passengers’ choice of airlines, the airlines as well as airports need to take notice.
source::: Sydney Morning Herald…

natarajan
Read more: http://www.smh.com.au/travel/everyone-asks-why-is-changi-the-worlds-best-20130918-2tz82.html#ixzz2ffx6jAf8

பேசும் { புகை } படங்கள் !!!

சத்சங்கி…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1944ம் ஆண்டில் பிறந்தவர், சிறுவயது முதலே புகைப்படத்தின் மீது ஆர்வம் கொண்டவர். 1961ம் ஆண்டு ஆக்பா அறிமுகம் செய்த பாக்ஸ் டைப் கேமிராவை பதினெட்டு ரூபாய் எழுபத்தைந்து பைசாவிற்கு வாங்கி தனது புகைப்பட வாழ்வைத்துவக்கியவர்.
என்ஜினியரிங் முடித்துவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு அதன் மூலம் பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து முடித்தவர், தற்போது சென்னையில் தன் மனைவியுடன் அழகான ஒரு பிளாட்டில் புகைப்படமே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டு இருப்பவர்.
கடந்த 89ம் ஆண்டில் இருந்து சீரியஸ் புகைப்படக் கலைஞரானவர். வைல்டு லைப், லேண்ட்ஸ்கேப், மைக்ரோ, போர்ட்ரெய்ட் என்று புகைப்பட பிரிவின் அனைத்து பிரிவிலும் தனது முத்திரையை பதித்தவர்,
படம் எடுப்பதற்காக ஹாங்காங், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, ஆஸ்திரேலியா, அலஸ்கா, தான்சானியா, கென்யா, ஜாம்பியா, ஜிம்பாப்வே மற்றும் போஸ்வானா ஆகிய நாடுகளுக்கு போய்வந்தவர்.
புகைப்படம் தொடர்பான சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்பவர், இவரது படங்கள் பல முறை சர்வதேச பரிசுகள் பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள போட்டோகிராபி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த புகைப்படக் கலைஞர்களின் படங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில் இவரது படமும் இடம் பெற்றுள்ளது என்பதே இவரது பெருமைக்கு சான்றாகும்.
நிக்கான் கேமிரா காதலரான இவர் ஒரே நேரத்தில் மூன்று கேமிராக்களையும், மூன்றுவித லென்சுகளையும் எடுத்துக்கொண்டு செல்வார்.
இவ்வளவு படங்கள் எடுத்தாலும் எந்த படங்களையும் காசாக்க நினைக்காதவர். தனது ஆத்ம திருப்திக்காக மட்டுமே எடுக்கக்கூடிய படங்களை பொதுமக்கள் பார்க்கவேண்டும், அவர்களும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக முன்வரவேண்டும் என்று நினைப்பவர்.

Some of his Pictures are here…..

 

 

 

 

 

 

 

 

 

 

 

இவருடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கான எண்: 9884039713
– எல்.முருகராஜ்   in Dinamalar Tamil Daily 

natarajan

” US Marine Assaults an African Immigrant and Steals His Lunch ” !!!

A Harley Biker is riding by the zoo in Washington , DC when he sees a little girl leaning into the lion’s cage. Suddenly, the lion grabs her by the collar of her jacket and tries to pull her inside to slaughter her, under the eyes of her screaming parents.

The biker jumps off his Harley, runs to the cage and hits the lion square on the nose with a powerful punch.

Whimpering from the pain the lion jumps back letting go of the girl, and the biker brings her to her terrified parents, who thank him endlessly. A reporter has watched the whole event.

The reporter addressing the Harley rider says, ‘Sir, this was the most gallant and brave thing I’ve seen a man do in my whole life.’

The Harley rider replies, ‘Why, it was nothing, really, the lion was behind bars. I just saw this little kid in danger and acted as I felt right.’

The reporter says, ‘Well, I’ll make sure this won’t go unnoticed. I’m a journalist, you know, and tomorrow’s paper will have this story on the front page… So, what do you do for a living and what political affiliation do you have?’

The biker replies, I’m a U.S. Marine and a Republican

The journalist leaves.

The following morning the biker buys the Washington Post to see if it indeed brings news of his actions, and reads, on the front page:

U.S. MARINE ASSAULTS AFRICAN IMMIGRANT AND STEALS HIS LUNCH

…and THAT pretty much sums up the media’s approach to the news these days…

 

source::::input from a friend of mine…

natarajan

” நம்மை கட்டிப் போடும் நாட்டியம் ” !!!

 


பரத நாட்டியம் என்பது பாரம்பரிய கலைகளுள் ஒன்று.
விபரிக்க வார்த்தையில்லை வீடியோ பாருங்க உங்களுக்கும் புரியும் பரதநாட்டிய அரங்கேற்றங்களை பார்த்திருப்பீர்கள் ஆனால் இப்படியொரு நடனத்தைநீங்கள் இதுவரை  பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.

ஒரு இளம் பெண்ணின் இந்த நடனத்தை விபரிக்க வார்த்தைகள் போதவில்லை. அப்படிச்சொல்வதென்றாலும்
அருமை, ஆச்சரியம், பிரமாதம், அசத்தல், சாதனை, வியப்பு, திறமை என்ற
வார்த்தைகளே மிகப்பொருத்தமாக இருக்கும்.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=G607ezQ_hxk

 

source:::: You tube…. input from a friend of mine

natarajan

முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர் !!!

புதுச்சேரி ரயில்வே நிலைய வாயில் அருகே உள்ள சாலைக்கு எதிரே கம்பீரமாக அமைந்துள்ளது கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில். அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில் வள்ளி, தெய்வானை மற்றும் உடனுறை கௌசிக பாலசுப்பிரமணியருக்கு சந்நதிகள் உள்ளன. இக்கோயிலில் அனைத்து மதத்தி னரும் வழிபடுகின்றனர்.

இக்கோயிலைக் கட்டியவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முகமது கௌஸ். அவரது தம்பி முகம்மது அலியும், மகன் முகம்மது காதரும் தற்போது கோயில் நிர்வாகிகளாக உள்ளனர்.

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட முகமது கௌஸ் குடும்பத்தினர், 1940-களில் புதுச்சேரியில் குடியேறினர். சிறுவயது முதல், முகமது கௌஸ் முருகனை வழிபட்டு வந்தார்.

1969-ல் துளசி முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை அவர் நடத்தினார்.

அன்றைய தினம் அவரது தந்தை மரணமடைந்தாலும், திட்டமிட்டபடி கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, தன் இறைப்பணியைத் தொடர்ந்தார்.

மாரியம்மன் கோயில் அருகிலேயே முருகன் கோயில் கட்ட விரும்பிய அவர், தனது சேமிப்பில் இருந்த ரூ.2 லட்சத்தை வைத்து கட்டுமான பணிகளை தொடங்கினார்.1970-ல் துணைநிலை ஆளுநராக இருந்த ஜாட்டி, மேயர் எதுவர் குபேர் ஆகியோர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினர்.

பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், 1977ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஒருமுறை இக்கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி சாமிகள், கௌசிக முருகன் கோயில் என்று இக்கோயிலுக்கு பெயரிட்டார். கடந்த 2003ல் முகமது கௌஸ் மறைந்த பின், அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் இக்கோயிலை நிர்வகிக்கின்றனர்.

அனைத்து பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன. மதத்தின் பெயரால் மனிதர்களுக்கு இடையே பிளவு ஏற்படுவதைத் தடுப்பதுடன், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் விதமாக இக்கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

source:::: The Hindu…Tamil
natarajan


Message For The Day….Give Up Ego and Develop Faith In God …

Repentance saves even sinners from perdition. No ceremony of expiation is as effective as sincere repentance. The shopkeeper may give short measure at times, but he will never accept less money; the bill always has to be settled in full. Pay it through repentance. You cannot deceive the Lord with insincerity. Unless you correct yourself through detachment and sacrifice, you cannot reach God. The Lord can be understood, only if you approach Him, develop attachment to Him, have unswerving loyalty to Him and have full faith in Him. You will easily understand Him when you feel that you are but the instrument and He wills every little movement, everywhere. Give up egoism in full, and develop faith. Then you can most certainly see Him.

Sathya Sai Baba

Message For The Day…. ” I am With You ” !!!


Do not walk in front of Me,

I may not follow you.
Do not walk behind Me,
I may not lead you.
Walk beside Me and be my friend.
If you attempt to walk
in front of Me,
you may be taking a wrong path.
If you walk behind Me,
you may possibly desert Me.
Walk abreast of Me.
Then there is no chance
of going astray or away from Me,
because I am with you.

 

இது சிரிக்கும் நேரம் !!!

• அவர்: பட்டப் பகல்ல அவர் ஏன் லைட் போட்டுக்கிட்டு மியூசிக் பிராக்டீஸ்
பண்ணுகிறார்?
இவர்: அவர் பிராக்டீஸ் பண்றது “லைட் மியூசிக்’!

• மகன்: இன்னிக்கு சாம்பார் செம டேஸ்டா இருக்கும்மா..!
அம்மா: உனக்கு அப்பாவைப் புகழலைன்னா தூக்கம் வராதே!

• டாக்டர்: எக்ஸ்ரே எடுக்க சீட்டு கொடுத்தேனே… எடுத்தாச்சா..?
நோயாளி: நீங்க கொடுத்த சீட்டை ஜெராக்ஸ்தான் எடுக்க முடியுமாம்… எக்ஸ்ரே எல்லாம் எடுக்க முடியாதாம்..!

• நண்பர்: உங்களுக்கு ஏதாவதுன்னா, தெருவில் உள்ள எல்லோரும் உதவிக்கு ஓடி வருவாங்களா..! பரவாயில்லையே…. இவ்வளவு பாசமா இருக்காங்களே..?
மற்றவர்: நீங்க வேற… எல்லோரும் எனக்கு கடன் கொடுத்திருக்காங்க…!

• ஒருவர்: எலிப் பொறிக்குள்ள என்ன சீட்டு?
மற்றவர்: ‘மசால் வடை டேஸ்ட்டா இருந்துச்சு, நன்றி’ன்னு எலி எழுதி வச்சிருக்குது..!

• டாக்டர்: பேஷண்ட் ஏன் பில்லை தூக்கிப் போட்டுட்டுப் போறாரு?
நர்ஸ்: மனதுக்கு அதிர்ச்சியைத் தரக்கூடிய எதுவாக இருந்தாலும் அதைத் தூக்கிப் போட்டுடனும்னு நீங்கதான் சொன்னீங்களாமே, டாக்டர்..?

source::::Dinamani Tamil Daily

natarajan

 

என்னமோ பறக்குது… மர்மமா இருக்குது…!!!

 

ஆகாயத்தில் அதிசயமாக நாம் பார்ப்பதில் முக்கிய இடம் பிடிப்பது விமானங்கள்தான். சில வேளைகளில் அழியாத நெடுங்கோடாகப் புகை விட்டுக்கொண்டு பறக்கும் ஜெட் விமானங்கள் என்றால் சில நேரங்களில் நமக்கு ஓசைகூட கேட்கும் அல்லது கேட்பது போன்ற பிரமை ஏற்படும். வலவன் ஏவா வானவூர்தி அல்ல என்றாலும் அதில் ஏறிப் பயணம் செய்யாதவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு முறையாவது ஏறிச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுவது இயற்கைதான். ஆனால், அதில் அடிக்கடி சென்று பயணப்பட்டவர்களுக்கோ சில – பல சந்தேகங்கள் தோன்றித் தோன்றி மறையும். ஆசையாகவும் மகிழ்ச்சியாகவும், சில வேளைகளில் அச்சத்துடனும் விமானங்களில் செல்வோரே அதிகம். அவர்களில் பலருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை தருகிறார் விமானி பேட்ரிக் ஸ்மித். ‘காக்பிட் கான்பிடன்ஷியல்’ என்ற பெயரில் அவர் எழுதியிருக்கும் தகவல்கள் அனைவருக்குமே பொதுவானவை. பயணிகளின் சந்தேகங்களுக்குக் கேள்வி-பதில் வடிவில் அவர் சில விளக்கங்களைத் தந்திருக்கிறார்.

விமானம் பறக்கும்போது திடீரென தூக்கித்தூக்கிப் போடுவதும் அப்படியும் இப்படியும் அலைக்கழிப்பதும் குலுங்குவதும் என்னைக் குலைநடுங்கச் செய்கிறது, செத்துவிடுவோமோ என்றுகூட அஞ்சுகிறேன், இந்த அச்சம் நியாயமானதுதானே?

இல்லை. விமானத்தை அப்படியே தலைகீழாகத் தூக்கிப் போடும்படியோ, விண்ணிலிருந்து வீசி எறியும் வகையிலோ எதுவும் நடந்துவிடாது.காற்றழுத்தம் குறைவான வான் பகுதியில் விமானம் செல்லும்போது குலுங்குவது இயல்பானது. அது உங்களுக்கு அச்சத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம், ஆனால் அதனால் விமானம் கீழே விழுந்துவிடாது.

ஜெட் விமானத்தின் எல்லா இன்ஜின்களும் செயலிழந்துவிட்டால் விமானத்தால் பத்திரமாகத் தரை இறங்க முடியுமா?

முடியும். மலையிலிருந்து கீழே இறங்கும்போது உங்களுடைய கார் இன்ஜினை அணைத்துவிட்டால் எத்தனை ஆபத்தோ அத்தனை ஆபத்து இதில் இருந்தாலும் விமானத்தைத் தொடர்ந்து இயக்கவும் தரையில் இறக்கவும் முடியும்.

விமானத்திலிருந்து எரிபொருளைக் கொட்டிவிட முடியும் என்று தெரிகிறது, விமானம் இறங்கும்போது எடை குறைய வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்களா?

ஆமாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்ல. விமானம் மேலே எழும்போது இருக்கும் எடையைவிட கீழே இறங்கும்போது இருக்கும் எடையானது அதற்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நெருக்கடியான நேரங்களில் அந்த நெருக்கடியைக் குறைக்க எரிபொருள் வெளியே கொட்டப்படுகிறது. இது அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரிய விமானங்களில்தான் சாத்தியம். சிறிய ரக விமானங்களில் கூடுதல் எரிபொருள் தீரும்வரை வானில் வட்டமடித்த பிறகே தரையில் இறக்குவார்கள்.

விமானம் பறந்துகொண்டிருக்கும்போது அதை மின்னல் தாக்கினால் என்ன ஆகும்?

ஒரு சேதமும் ஏற்படாது. விமானத்தின் அலுமினியத்தாலான உடல் அதைக் கடத்திவிடும்.

விமானம் பறக்கும்போது கழிப்பறையில் உள்ளவை கீழே கொட்டிவிடுமா?

இல்லை. விமானக் கழிப்பறையில் சேரும் கழிவுகள் விமானத்தின் கடைசிப் பகுதியில் உள்ள கழிவுத் தொட்டிக்கு அவ்வப்போது சென்றுவிடும். அது வெளியே சிந்தாது, சிதறாது.

விமானி அறையிலிருந்து வரும் மணியோசைக்கு என்ன அர்த்தம்?

இரு விதமான தேவைகளுக்காக மணியை ஒலிப்போம். முதல் வகை, இன்டர்காமில் பேசுங்கள் என்று விமானப் பணிக்குழுவினரை அழைப்பதற்காக. இரண்டாவது, விமானம் 10,000 அடி உயரத்தை எட்டிய பிறகு சீட் பெல்டைப் பயணிகள் தளர்த்தலாம் என்று அறிவிப்பதற்காக, மீண்டும் தரை இறங்குவதற்கு முன்னால் சீட் பெல்டைப் போடுங்கள் என்று கூறுவதற்காக. சில வேளைகளில் சீட் பெல்டை யாராவது போடவில்லை என்பதை எங்கள் முன்னால் உள்ள விளக்கு எரிந்து எச்சரித்தால் விமானப் பணிக்குழுவினருக்கு அதைத் தெரிவிப்பதற்காகவும்.

சில விமான நிலையங்களுக்கு 3 எழுத்தில் நீங்கள் வைத்திருக்கும் பெயர்கள் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றனவே?

சிலரை நினைவுகூர்வதற்காகவும் சில வேளைகளில் ஆபாசமான பொருள் தரும் வாசகங்களைத் தவிர்ப்பதற்காகவும் விமான நிலையங்களின் பெயர்களைச் சுருக்குகிறார்கள், அது விமானிகளுடைய பயன்பாட்டுக்கானது, பயணிகள் அதுகுறித்துக் கவலைப்பட ஏதும் இல்லை.

நவீன ரக விமானங்கள் அதுவாகவே பறந்துவிடுமாமே?

நிச்சயம் இல்லை. மருத்துவமனைகளில் கட்டப்படும் நவீன அறுவைக்கூடமே நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்துவிடுமா என்ன?

விமானம் பறக்கத் தொடங்கும்போதும் தரை இறங்கும்போதும் பயணிகள் தங்களுக்கு முன்னால் இருக்கும் சீட் டிரேக்களை மூடி வைக்க வேண்டும், விளக்குகளின் வெளிச்சத்தைக் குறைக்க வேண்டும், சீட் பெல்டுகளைப் போட வேண்டும். கண்ணாடிகளைத் திரைபோட்டு மூட வேண்டும் என்றெல்லாம் ஏன் கழுத்தறுக்கிறீர்கள்?

விமானம் திடீரென தன்னுடைய வேகத்தை இழந்தால் இருக்கையிலிருந்து நீங்கள் முன்னே வீசப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது நீங்கள் நிலைகுலையாமல் இருக்கவும் முன்புற சீட்டின் பின்னால் போய் முட்டிக்கொள்ளாமல் இருக்கவும் சீட் பெல்ட் போட்டு டிரேயை மூடி வைக்குமாறு கூறுகிறோம். விளக்கு வெளிச்சத்தைக் குறைப்பதும் கண்ணாடிகளின் திரையைப் போடுவதும் விமானத்துக்குள் ஏதாவது பறந்து விழுகிறதா, நெருப்புப் பிடித்து எரிகிறதா என்று விமானப் பணிப்பெண்கள் எளிதாகப் பார்ப்பதற்காகத்தான். இது பாதுகாப்பு நடவடிக்கை, பயணிகளின் நலனில் அக்கறை கொண்டே மேற்கொள்ளப்படுகிறது.

விமானம் பறக்கும்போது பயணிகள் நன்றாகத் தூங்க வேண்டும் என்பதற்காக விமானத்துக்குள் ஆக்சிஜன் அளவு குறைக்கப்படும் என்கிறார்களே?

சுத்த அபத்தம், அப்படி எங்கும் செய்வதில்லை.

விமானம் பறக்கும்போது பயணி யாராவது கிறுக்குப்பிடித்து கதவைத் திறந்துவிட வாய்ப்பு இருக்கிறதா?

விமானம் பறக்கும்போது கதவுகளையோ அவசர வழிகளையோ யாராலும் திறக்க முடியாது. விமானி அறையில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பு அதை அனுமதிக்கவே அனுமதிக்காது.

கைபேசிகளும் மடிக்கணினிகளும் ஆபத்தானவையா?

அது நேரத்தையும் சூழலையும் பொறுத்தது. கைபேசிகளைக் கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யலாம் என்பதும் ஒரு காரணம். பல வேளைகளில் சோம்பேறித்தனத்தாலோ, இறங்கி வீட்டுக்குப் போகும் அவசரத்திலோ சில பயணிகள் கைபேசிகளை மறந்து விமானத்திலேயே விட்டுச் செல்கின்றனர். இது தற்செயலா, திட்டமிட்டா என்று தெரியாதபோது பதற்றம் ஏற்படுகிறது. எனவேதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. விமானம் உயரக் கிளம்பும்போதோ தரை இறங்கும்போது அதில் ஏற்படும் வேக மாறுதல்களின்போது மடிக்கணினி கையிலிருந்து நழுவி வெகு வேகமாகப் பறக்கத் தொடங்கலாம். அப்போது அது யார் மீதாவது பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படலாம்.டேப்லட்டுகள், மின் புத்தகங்கள் போன்றவற்றை விமானிகளே இப்போது விமானத்துக்குள் பயன்படுத்துவதால் அவற்றின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாமா என்று விமானப் பயண நிர்வாகிகள் சிந்தித்துவருகின்றனர்.

-தி நியூ யார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

source:::::tamil.thehindu.com

natarajan