Message For The Day….Ensure You Do All Actions As Per Your Consceince…

For a person living in the materialistic world, the sensual pleasures are a source of extreme delight. However, the senses themselves are temporary, and hence grant only transitory joy. To a person suffering from jaundice, everything looks yellow and tastes bitter. So too senses fraught with illness cannot give true happiness. As there is no person without desire, and it is difficult to live without desire in this world, Lord Krishna came out with an excellent solution. He said, “Perform all actions for the pleasure of the Lord without an eye on the fruits of the action.” Pay your respect to duty and dedicate all actions to the Divine. Ensure you do all actions to the satisfaction of your conscience and then your heart is free from all blemishes. Such an action qualifies to become an act of Anapeksha, not tainted by desire….

 

Sathya Sai Baba

மாற்றத்தின் வித்தகர் …. பத்மா கோபாலன் !!!

சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சிப் பள்ளி. நம்ப முடியாத ரம்மியத்தோடு காட்சியளிக்கிறது அதன் மழலையர் பிரிவு வளாகம். வெளியே வரிசையாகப் போடப்பட்டிருக்கும் செருப்புகள், சாப்பாட்டு டப்பாக்கள், தண்ணீர் போத்தல்கள் ஒவ்வொன்றிலும் நேர்த்தி. வகுப்பில் வரிசையாகப் பாய்த் தடுக்கில் அமர்ந்திருக்கிறார்கள் குழந்தைகள். அவர்கள் முன் மரத்திலான உருளைகள், கட்டுமான படிகங்கள், காய்கறிகள்… ஒவ்வொரு குழந்தையும் அவற்றை வைத்து தன் மனதுக்கேற்ற கட்டுமானங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது; காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருக்கிறது; கோதுமை மாவில் பல்வேறு வடிவங்களைச் செய்துகொண்டிருக்கிறது. ஆசிரியை இங்கு அதிகாரி கிடையாது; அவர் சக தோழர். குழந்தைகளோடு குழந்தைகளாக அமர்ந்து சொல்லிக்கொடுக்கிறார்கள். பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். குழந்தைகள் தமிழ் – ஆங்கிலம் இரண்டையுமே அற்புதமாகப் படிக்கிறார்கள். சகலமும் நேர்த்தி. வித்தியாசம் சீக்கிரமே புலப்படுகிறது. இவர்கள் படிப்பது மாண்டிசோரி கல்வி முறையில். உலகெங்கும் மிகச் சிறந்த முறை – அதேசமயம் பணக்காரக் குழந்தைகள் மட்டுமே படிக்கக் கூடிய முறை – என்று சொல்லப்படும் கல்விமுறை. சென்னை மாநகராட்சியின் 40+ பள்ளிக்கூடங்களில் உள்ள 3000+ ஏழைக் குழந்தைகளும் இப்போது இந்தக் கல்விமுறையில்தான் படிக்கிறார்கள். சர்வதேச அளவில் மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னோடி நடவடிக்கை இது.

அற்புதமான இந்த மாற்றத்தின் முன்னோடி… பத்மா கோபாலன். வயது எத்தனை தெரியுமா? 82.

கதர் உடை, பொட்டு நகை கிடையாது… கம்பீரத்தை அணிகலனாக்கிக்கொண்டிருக்கிறார் பத்மினி. பத்து ஆண்டுகளுக்கு முன் மயிலாப்பூரில் ஒரு மாநகராட்சிப் பள்ளியைத் தத்தெடுத்த பத்மினி தன் சொந்த செலவில், அங்கு ரூ. 1 லட்சம் கல்வி உபகரணங்களை வாங்கிக்கொடுத்து, அந்தப் பள்ளிக்கான ஆசிரியை – ஆயாக்களுக்கும் சம்பளம் கொடுத்து மாண்டிசோரி மழலையர் பிரிவைத் தொடங்கிவைத்தது மாற்றத்தின் முதல் விதை. அடுத்தடுத்த ஆண்டுகளில் அவருடைய ‘ராம்சரண் அறக்கட்டளை’ மாநகராட்சியின் எட்டுப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்றது. இப்போது ஏனைய பள்ளிகளில் மாநகராட்சி நிர்வாகமே இந்தக் கல்விமுறையைக் கையில் எடுத்திருக்கிறது. ஒபாமா இந்தக் கல்விமுறையைத்தான் கொண்டுவர விரும்பினார். அமெரிக்காவில் அவரால் கொண்டுவர முடியவில்லை. அங்கு முடியாதது இங்கு சாத்தியமாகி இருக்கிறது.

“என் தலைமுறையைச் சேர்ந்த இந்தியப் பெண்களோட கதை என்னவா இருக்குமோ, அதே கதைதான் என்னோடதும். ஒரு பெரிய குடும்பத்துல பிறந்தேன். நல்லா படிச்சேன். பி.ஏ. முடிச்சேன். கல்யாணம் ஆனதும் குடும்ப வேலைகளோட ஒதுங்கிட்டேன். ரெண்டு குழந்தைங்க. பொண்ணு டாக்டரா இருக்கா. பையன் ஆடிட்டரா இருக்கான். குடும்பத்துக்காகத்தான் எல்லாருமே உழைக்கிறோம்னாலும் அது மட்டும்தான் கடமையாங்கிற கேள்வி சின்ன வயசுலேர்ந்தே ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு காலம் வரைக்கும் என் வீட்டுலேயே சாயுங்கால நேரங்கள்ல ஏழைக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்புறம் உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு என்னால உதவிகளைச் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.

வாழ்க்கை முழுக்க ஒரு விஷயத்தை என்னால கவனிக்க முடிஞ்சுச்சு. பணம்னு உதவி கேட்டு வர்ற பெண்கள்ல பலர் கல்வி சம்பந்தமான தேவைக்காகத்தான் கேட்டு வந்தாங்க. ஏன் அந்த உதவியை நேரடியாச் செய்யக் கூடாதுன்னு யோசிச்சப்ப, ரெண்டு வழிகள் இருந்துச்சு. ஒண்ணு பள்ளிக்கூடம் தொடங்குறது; இன்னொண்ணு பள்ளிக்கூடங்களை நோக்கிப் போறது. முதல் வழி உதவி தேவைப்படுறவங்களை நம்மளை நோக்கி வரவழைக்கிறது; ரெண்டாவது வழி நாமளே அவங்களை நோக்கிப் போறது. நான் ரெண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

மாநகராட்சிப் பள்ளிக்கூடங்கள்ல நுழையறது அவ்வளவு சுலபமா இல்லை. ஏகப்பட்ட கேள்விகள், தடைகள் எல்லாத்தையும் கடந்துதான் உள்ளே நுழைஞ்சோம். அப்படி நுழைஞ்சப்போ, இந்தக் குழந்தைகளுக்கு உலகத்திலேயே சிறந்த கல்விமுறையில சொல்லிக்கொடுக்கணும்னு முடிவு பண்ணினோம். அப்போ அறிமுகமானதுதான் மாண்டிசோரி முறை. காந்தி சிறந்த கல்விமுறைனு சொன்ன முறை இது. ஆனா, தொடக்கத்துல இந்த முறையைப் பத்தி விசாரிச்சப்ப யாரும் எனக்கு ஊக்கம் கொடுக்கலை. எல்லாருமே இந்த முறை ரொம்ப ஒசத்தின்னு சொன்னாங்க. ஆனா ‘அது ரொம்ப செலவாகும். ரொம்ப சுதந்திரமான முறை. சேரி குழந்தைகளுக்குச் சரிப்படாது’ன்னாங்க.

எனக்கு ரொம்ப கோவத்தையும் வைராக்கியத்தையும் கொண்டுவந்ததே இந்த வார்த்தைகள்தான். குழந்தைங்களோட குணத்துல சேரிக் குழந்தைங்க; அடுக்குமாடி குழந்தைங்கன்னு பாகுபாடு இருக்குதா என்ன? நான் இல்லேன்னு நெனைச்சேன். இன்னைக்கு என்னோட குழந்தைங்க அது நிரூபிச்சு இருக்காங்க. டெல்லிலேர்ந்து மனித வளத் துறையிலேர்ந்து வந்தாங்க. பிரமிச்சுப்போய்ட்டாங்க.

இந்தக் கல்விமுறையைப் பத்தி எவ்வளவோ சிறப்புகளைச் சொல்வாங்க. என்னைப் பொறுத்த அளவில நான் முக்கியமா நெனைக்குறது இந்தக் கல்விமுறை கொடுக்குற சுயமரியாதை. இங்கே சொல்லிக்கொடுக்குற முதல் விஷயமே எல்லோரும் சமம்கிறதுதான். ஒரு உதாரணம் சொல்றேன். ஆரம்ப காலத்துல ஒரு அதிகாரி இங்கே வந்தார். வழக்கமா இப்படி அதிகாரிங்க பள்ளிக்கூடத்துல போனா குழந்தைங்கள் எழுந்திருச்சு நிற்பாங்க இல்லையா? இவங்க எழுந்திருக்கலை. அவங்க பாட்டுக்குப் படிச்சுக்கிட்டு இருக்காங்க. இவருக்குக் கோபம். ஒரு குழந்தையைக் கூப்பிட்டு, ‘ஏன் எழுந்திருக்கலை’னு கேட்டார். அந்தக் குழந்தை பதிலுக்கு, ’ஏன் எழுந்திருக்கணும்’னு கேட்க, உறைஞ்சுட்டார் அந்த அதிகாரி. இதுதான் நான் முக்கியம்னு நெனைக்கிறேன்.

ஒரு குழந்தையும் சக மனுஷன்தான். அதுக்குனு சுயமரியாதை உண்டு. நாம மரியாதைங்கிறபேருல ஆரம்பத்துலேயே அதை அடக்கி ஒடுக்க ஆரம்பிக்கிறோம்.

நம்ம சமூகம் ஏன் இப்படி இருக்குனு யோசிச்சுப் பாருங்க. அடுக்குகள் தெரியும். ஒருத்தருக்கு மேல் ஒருத்தர்; அவருக்கு மேல் இன்னொருத்தர்னு அடுக்கப்பட்டு இருக்கிறது புரியும். தனக்குக் கீழ் இருக்குறவன் தனக்குப் பணியணும். இந்தப் பணிவை நாம மரியாதைனு சொல்றோம்; நான் பயம்னு சொல்ல விரும்புறேன். இந்தப் பயத்தை உடைச்சுட்டா போதும்; சுயமரியாதை வந்துடும்; எல்லாம் மாறிடும். அதை மாண்டிசோரி கல்விமுறை தருது. என்ன கொடுமைன்னா, ஏழைகளுக்கு அவசியமான இப்படிப்பட்ட கல்விமுறைகூட பணக்காரங்களோடதா இந்தச் சமுதாயம் மாத்திட்டது. அதை மாத்தினோம்னு நாங்க நெனைக்கிறோம்.

எவ்வளவோ பேரோட பங்களிப்பும் ஒத்தாசையும் இதுல இருக்கு. முதல்முதல்ல எங்களுக்கு அனுமதி கொடுத்த கமிஷனர் விஜயகுமார்ல தொடங்கி இன்னைக்கு மேயரா இருக்குற துரைசாமி வரைக்குமான அதிகாரிகள், சம்பளத்தை ஒரு பொருட்டா நெனைக்காம, தங்களோட குழந்தைங்களா நெனைச்சு அவங்களோட மல ஜலம் வரைக்கும் அள்ளுற எங்களோட ஆசிரியைகள், இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டுட்டு தானா முன்வந்து உதவுற நல்ல உள்ளங்கள்… இதுல நான் ஒரு பொருட்டே இல்லை” என்கிற பத்மினிக்கு வழிகாட்டி காந்தி.

“காந்தி சொல்வார்… ‘எந்த விசேஷ குணமும் இல்லாதவன். சாமானியர்களிலும் சாமானியன். என்னாலேயே இதைச் செய்ய முடியும் என்றால், உங்களால் இன்னும் முடியும்’னு. என்னைப் பத்தி யாராவது பெருமையா பேசுனா, நானும் அதையே சொல்வேன். என்னோட 72 வயசுல இந்தக் காரியத்தை நான் ஆரம்பிச்சேன். நிச்சயமா என்னைவிட எல்லோராலும் அதிகமாவே செய்ய முடியும்!”

 source:::::The Hindu …Tamil
 natarajan

A Thought Provoking Painting ” Beijing 2008″…!!!

 

Amazing thought-provoking painting “Beijing 2008” by Chinese-Canadian artist Liu Yi.

The woman with the tattoos on her back is China. On the left, focused intensely on the game, is Japan. The one with the shirt and head cocked to the side is America. Lying provocatively on the floor is Russia. And the little girl standing to the side is Taiwan.

This painting, named “Beijing 2008”, has been the subject of much discussion in the west as well as on the internet. What’s interesting is that this painting is called “Beijing 2008”, yet it depicts four women playing mahjong, and conceals a wealth of meaning within…

China’s visible set of tiles “East Wind” has a dual meaning. First, it signifies China’s revival as a world power. Second, it signifies the military might and weaponry that China possesses has already been placed on the table. On one hand, China appears to be in a good position, but we cannot see the rest of her hand. Additionally, she is also handling some hidden tiles below the table.

America looks confident, but is glancing at Taiwan, trying to read something off of Taiwan’s expression, and at the same time seems to be hinting something at Taiwan.

Russia appears to be disinterested in the game, but this is far from the truth. One foot hooks coyly at America, while her hand passes a hidden tile to China, both countries can be said to be exchanging benefits in secret. Japan is all seriousness while staring at her own set of tiles, and is oblivious to the actions of the others in her self-focused state.

Taiwan wears a traditional red slip, symbolizing that she is the true heir of Chinese culture and civilization. In one hand she has a bowl of fruit, and in the other, a paring knife. Her expression as she stares at China is full of anger, sadness, and hatred, but to no avail; unless she enters the game, no matter who ends up as the victor, she is doomed to a fate of serving fruit.

Outside the riverbank is darkened by storm clouds, suggesting the high tension between the two nations is dangerously explosive. The painting hanging on the wall is also very meaningful; Mao’s face, but with Chiang Kai Shek’s bald head, and Sun Yat-Sen’s mustache.

The four women’s state of UnCloth represent the situation in each country. China is Unclad on top, clothed with a skirt and underwear on the bottom. America wears a bra and a light jacket, but is Unclad on the bottom. Russia has only her underwear left. Japan has nothing left.

At first glance, America appears to be most composed and seems to be the best position, as all the others are in various states of unclothedness. However, while America may look radiant, her vulnerability has already been exposed. China and Russia may look Unclad, yet their key private parts remain hidden.

If the stakes of this game is that the loser strips off a piece of clothing, then if China loses, she will be in the same state as Russia (similar to when the USSR dissolved). If America loses, she also ends up in the same state as Russia. If Russia loses, she loses all. Japan has already lost everything.

Russia seems to be a mere “filler” player, but in fact is exchanging tiles with China. The real “filler” player is Japan, for Japan has nothing more to lose, and if she loses just once more she is immediately out of the game.

America may look like she is in the best position, but in fact is in a lot of danger, if she loses this round, she will give up her position as a world power. Russia is the most sinister, playing along with both sides, much like when China was de-occupied, she leaned towards the USSR and then towards America; as she did not have the ability to survive on her own, she had to weave between both sides in order to survive and develop.

There are too many of China’s tiles that we cannot see. Perhaps suggesting that China has several hidden aces? Additionally China is also exchanging tiles with Russia, while America can only guess from Taiwan’s expression of what actions have transpired between Russia and China. Japan on the other hand is completely oblivious, still focused solely on her own set of tiles.

Taiwan stares coldly at the game from aside. She sees everything that the players at the table are doing, she understands everything that is going on. But she doesn’t have the means or permission to join the game, she isn’t even given the right to speak. Even if she has a dearth of complaints, she cannot voice it to anyone, all she can do is to be a good page girl, and bring fresh fruit to the victor.

The final victor lies between China and America, this much is apparent. But look closely; while America is capable, they are playing Chinese Mahjong, not Western Poker. Playing by the rules of China, how much chance at victory does America really have?

 

source::::nairaland forum site

natarajan

Message For The Day….True Message From Navarathri Festival… One”s Mother is the Embodiment of All Divine Forces …

The supreme Shakti manifests Herself in the form of Durga, Lakshmi and Saraswathi. Durga grants us energy – physical, mental and spiritual. Lakshmi bestows on us wealth – not just money but intellectual wealth, the wealth of character, goodness and health. Health is also wealth! Saraswati bestows on us intelligence, the capacity for intellectual enquiry and the power of discrimination. Hence, Navaratri (nine-nights) festival is celebrated in order to proclaim to the world the power of the Divine Mother. One’s own mother is the combination of all these Divine beings. She provides you with energy, wealth and intelligence. She constantly desires your advancement in life and hence represents all the three Goddesses. Recognising one’s mother as the very embodiment of all divine forces, one must show reverence to her and treat her with love. This is the true message that the Navaratri festival gives us.

 

Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது …நிலவில் கால் வைத்த முதல் மனிதர் யார் !!!

இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும்
உடனே பதில் சொல்லிவிடுவீர்க
ள்.நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்
முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர்
யார் தெரியுமா? பல
பேருக்கு தெரியாது அவர் எட்வின்
சி ஆல்ட்ரின்.
அவர்தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்
அதாவது விமானி. ஆல்ட்ரின்
அமெரிக்காவின் விமானப் படையில்
பணிபுரிந்தவர். மேலும் விண்
நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர்
விமானியாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல்
படையில் வேலை பார்த்தவர். மிகுந்த
தைரியசாலி என்பதால்தான் இந்த
பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம்
நிலவை அடைந்ததும்
நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட்
என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன
தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?
வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல.
‘நிலவில் முதன் முதலில் கால்
எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில்
இருக்கிறோம்.
கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும்
என்று தெரியாது. புதை மணலாக
இருந்து உள்ளே இழுத்துவிட்டால்
எரி மணலாக
இருந்து காலை சுட்டுவிட்டால்
தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்.
அதற்குள் நாசாவில்
இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்க
டது. கோ பைலட் நெக்ஸ்ட்.
நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த
நொடி காலடி எடுத்து வைத்தார்.
உலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில்
மாற்றி எழுதப்பட்டது. திறமையும்
தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும்
தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம்
நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல, தயக்கம், பயம்
இவை எந்த அளவுக்கு நம்
வெற்றியை பாதிக்கும்
என்பதற்கு இதுவே உதாரணம்.
இனி நிலவை பார்க்கும் போதெல்லாம்
இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப்
பெரிய வெற்றிகளைத்
தடுத்து விடுகிறது. நாம்
எல்லோருமே மிகப்பெரும்
சாதனைகளை படைக்கிற
வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய
தயக்கம். பயம், கூச்சம் இவைதான் நம் முதல்
எதிரி.
source::::: input from face book
natarajan

படிக்க ….சிந்திக்க ……”நான் விற்பனைக்கு இல்லை ” !!!

 

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை

டிராக்டரின் இரும்புக் கலப்பைகள் என் நிலத்தாயை ஆழ உழுதபோது எனக்கு ஏற்பட்ட வலி, இதுவரை நான் உணராத வலி.  அப்படி வலித்தது.  இரும்புக் கலப்பைகளுக்குள் தக்காளிப் பழங்களோடு தக்காளிச் செடிகளும் குற்றுயிரும் குலை உயிருமாக மண்ணுக்குள் புதைகின்றபோதே மனசும் புதைந்து கொண்டிருந்தது.

மண்டையைப் பிளக்கும் வெயில் உடம்பைப் பிழிந்து வியர்வையை அருவியாக்கிக் கொட்டிக் கொண்டிருந்தது.  அந்தப் புழுக்கம் என் உடம்புக்கு பழகிப் போன ஒன்றாக இருந்தது.  ஆனால் திரண்டு நிற்கும் கண்ணீருக்குள் கண்கள் மூழ்கி அந்தக் காட்சியை என்னைக் காணவிடாமல் கலங்கடித்துக் கொண்டிருந்தன.

என்ன செய்ய…. உழுதவன் பார்த்த கணக்கு உருப்படியாகவில்லை.  மூன்று மாதங்கள் உழைப்பு கருகி விட்டது. ஆயிரம் அடிக்கு கீழே உள்ள நிலத்தடி நீரை இரண்டு நீர் மூழ்கி மோட்டார் வைத்து நிலத்திற்கு மேலே ஒரு மோட்டார் வைத்து எடுத்து செய்கிற விவசாயம் என்னுடையது.  கடவுள் புண்ணியத்தில் கரண்ட் மட்டும் அரசின் தயவால் இலவசம்.  அதற்கும் பணம் கொடுக்க வேணடிய நிலை இருந்தால், அய்யோ… என்று தலையில் கையை வைத்துக் கொண்டு போய் விடலாம்.

இரண்டு ஏக்கர் நிலம். இரண்டு தடவை உழவேண்டும்.  அதற்கு டிராக்டர் கூலி நான்கு மணி நேரத்திற்கு மூவாயிரம்… தொழு உரம் எட்டு டன்.  அதற்கு பத்தாயிரம்… அப்புறம் பாத்தி பிடிக்க இரண்டாயிரம்…. விதை இருநூறு கிராம்.  வீரிய ஒட்டு ரகம் ஐயாயிரம்… அந்த விதையை பாவி நாற்றங்காலாக உருவெடுக்க இருபத்தைந்து நாள்… அப்புறம், அதை நடவு செய்ய கூலி இரண்டாயிரம்… களை எடுக்க, மருந்தடிக்க, இப்படி தொட்டதுக்கெல்லாம் செலவு செஞ்சாத்தான் இரண்டு மாதம் கழித்து தக்காளி விளைச்சல் பார்க்க முடியும்… விதை பாவியதிலிருந்து விளைச்சல் பார்க்கிற வரைக்கும் ஒவ்வொன்றும் விவசாயிக்கு, பிரசவம் தான்.

இரண்டு மாதங்கள் பதினைந்து நாளைக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் தக்காளி பறிக்கலாம்.  அதற்கும் கூலி ஆள் விட வேண்டும்.  ஏக்கருக்கு மூன்று பேர் வேண்டும்.  எல்லாம் முடிஞ்சு இரண்டாயிரம் கிலோ முதல் விளைச்சலாக வந்து காரைக்குடி சந்தைக்குக் கொண்டு போனேன். கிலோ அஞ்சு ரூபாய்க்கு மேலே போகலை…. முதல் வருமானம் பத்தாயிரம் ரூபாயோடு வந்தேன்.  அப்புறம் நூறு கிலோ, இருநூறு கிலோன்னு பறிக்க முடிஞ்சது…. நேற்று வரைக்கும் அஞ்சு ரூபாய்க்கு போன தக்காளி இன்று கிலோ இரண்டு ரூபாய்க்கு எடுக்கிறேன்னு சொன்னான்.  பறிக்கிற ஆள் கூலிக்குக் கூட தக்காளி விலை போகலை… அதனால் தான் அப்படியே டிராக்டரை விட்டு உழுது போடுவோம்… கோடை மழை பெய்தால் அடுத்த உழவுக்கு சரியாக இருக்குமேன்னு நினைத்து உழச் சொன்னேன்.

நூறுநாள் வேலைத் திட்டம் வந்தாலும் வந்துச்சு…. ஆரம்பத்தில் இருநூறு ரூபாய் வாங்கினவங்க இப்போது இருநூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தாத்தான் தக்காளி பறிக்க வர்றேன்னு சொல்றாங்க… இருநூறு கிலோ தக்காளி பறிக்க கூலி எழுநூற்று ஐம்பது ரூபாய்….  அந்த தக்காளிக்கு மார்க்கெட்டுல விலை நானூறு ரூபாய்தான். கமிஷன் ஏஜெண்ட் கிட்டக் கேட்டால்….. “”தக்காளி விளைச்சல் அதிகம்…. மார்க்கெட்டுக்கு அதிகமாக வர்றதாலே விலை போகலை”ன்னு சொல்றான்….

எப்படியிருக்கு… நினைச்சுப் பாருங்க… இப்படி விவசாயம் பண்ற நான் கேனப்பயலாத் தானே உங்க பார்வைக்குத் தெரிவேன்… உங்களுக்கு மட்டுமா… என் மகனுக்கும்தான்….

“”நிலப் பத்திரத்தையும், வீட்டுப் பத்திரத்தையும் எடுத்து வையுங்க… சனி, ஞாயிறு நான் மட்டும் ஊருக்கு வர்றேன்… நான் திரும்பும் போது என்னோடு நீங்களும், அம்மாவும் வீட்டைப் பூட்டிட்டு சென்னைக்கு வர்றீங்க… அவ்வளவுதான்…” போனை பேசிவிட்டு வைத்து விட்டான்..  “நான் என்ன நினைக்கிறேன்… என்ன விரும்புறேன்…’ என்று பதில் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை.

விவசாயத்திற்கு இயந்திரங்கள் வந்தவுடன் மனிதர்கள் இயந்திரங்களாக மாறிப் போனார்கள்.  அறுபது வருடங்களுக்கு முன்னால் திரும்பிப் பார்க்கிறேன்.  அப்போது எனக்கு பத்து, பன்னிரெண்டு வயது இருக்கும்.  அப்பவே காலை ஆறு மணிக்கே தோட்ட வேலைக்கு அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு போய் விடுவார்.  இரண்டு ஏக்கர் நிலத்தை உழவு செய்ய மூணு ஏர்கள் விடுவார்கள்.  எப்போதும் அப்பாதான் முதல் ஏராக உழுவார்.  அதற்குப் பின்னால்தான் கூலிக்காக வெளியிலிருந்து வந்த இரண்டு ஏர்களும் செல்வார்கள்.  நான் போகும் அன்று அப்பா கடைசி ஏராகவும், கூலி ஆட்கள் அடுத்து நானும், எனக்குப் பின்னால் அப்பாவுமாக நான்கு ஏர்கள் உழுவோம். எனக்கு கற்றுக் கொடுக்கத்தான் இந்த ஏற்பாடு.

விதை பாவுவது, பாத்தி கட்டுவது, நாற்று நடுவது, களை எடுப்பது எல்லா வேலையும் எனக்குத் தெரியும்.  இருபத்தைந்து வயதில் நான் முழு விவசாயி ஆகிப் போனேனே தவிர, நான் படித்தது அந்தக் காலத்து பத்தாம் கிளாஸ் அவ்வளவுதான்.  அதனால் தான் என் மகனை விவசாயத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்க விடாமல் பட்டணத்திலேயே பணம் கட்டி படிக்க வைத்து முன்னேற்றி விட்டேன்.  நான் எந்தப் பட்டணத்தைப் பார்த்திருக்கிறேன்?  எல்லாமே அவனுடைய தன் முயற்சி.  செலவுக்குப் பணம் கேட்டு வருவான்.  கொடுப்பதோடு சரி.  புத்தியுள்ள பிள்ளை.  நல்லா வந்துட்டான்.  இப்போது அவன் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கிறான்.  அவன் மனைவியும் அதே வேலைதான்.

அவனாக லீவு நேரத்தில் குடும்பத்தோடு வந்து நான்கைந்து நாட்கள் இந்த கிராமத்தில் தங்கி விட்டுப் போவான்.  அதற்கே என்னுடைய பேரப் பிள்ளைகள் இரண்டும் வசதியில்லாத கிராமத்தைக் கண்டு நெளிவாங்க…

“”அப்பா… எப்பப்பா ஊருக்கு…?” என்று நச்சரித்து விடுவார்கள்.  ஆனால் அந்தப் பிள்ளைகளுக்கு ஒரே மகிழ்ச்சி…. தக்காளி எப்படி செடியில் விளையுது… கரும்புத் தோட்டம்…. புடலை பந்தல்… இப்படி பார்க்கும் போது, “”ஐ…” என்ற சத்தத்தோடு தொட்டு மகிழ்வார்கள்.  எனக்கு அது மகிழ்ச்சியாகத் தெரியும்.  பேரப் பிள்ளைகள் வந்தால் வீட்டில் தங்க மாட்டார்கள்… தோட்டத்தில்தான் பொழுதைக் கழிக்க நினைப்பார்கள்.

வயலில் நடுகிற நாற்றுக்கு காட்டுகிற அக்கறையை எந்த விவசாயியும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு காட்டமாட்டான்.  ஆனால் நான் அக்கறை காட்டினேன்.  அதுதான் இந்த வயசான காலத்திலே விழுதுகள் வேரைத் தாங்க நினைக்குது…

சரி… இந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை பட்டணம்… அதுவும் எப்படி இருக்குதுன்னுதான் பார்ப்போமோ….

கோடை காலமாக வேற இருக்கு…. இந்த வருஷம் மழை வேற பெய்யலை… நிலத்தடி நீர் மட்டம் குறைஞ்சு மோட்டார் இழுவை பத்தலை… ஒரு மாதம் கழிச்சு விவசாயத்தை ஆரம்பிக்கலாம்னு அதுவரை போறேன்…

“நிலமழகிய மங்கலம்’ – பெயருக்கு ஏற்றாற்போல் அழகான சோலையுள்ள இந்தக் கிராமத்தை விட்டு முதன் முறையாக வெளியேறப் போகிறேன்.  இன்று வெள்ளிக் கிழமை.  நாளை காலை வெங்கடேசன்  வந்து விடுவான்.  சென்னை சென்று விட்டு வரும் போது இந்த நிலம், இந்த வீடு எனக்குச் சொந்தமாக இருக்குமா? என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.  அழுகை எனக்கு முட்டிக் கொண்டு நின்றது.

பச்சை பசேலென இருந்த தோட்டத்தை சமப்படுத்தி கட்டாந்தரையாக்கி விட்டு பணம் கேட்டு என் எதிரே வந்து நின்றான் டிராக்டர் டிரைவர்.  பதினைந்து நூறு ரூபாய் தாள்களை எண்ணிக் கொடுத்தேன்.  தோளில் கிடந்த துண்டை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அப்படியே நிலத்தில் குத்துக் காலிட்டு உட்கார்ந்தேன்.  உலர்ந்து கிடந்த செம்மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளினேன்.  கைவிரல்களின் இடுக்குகள் வழியே மெதுவாகச் சிதற விட்டேன்.

“உனக்கும் எனக்குமான சொந்தம் இன்னும் எத்தனை நாளைக்கு… ஒரு மாசமோ… இரண்டு மாதமோ தான்… உன்னை இழந்து விலகப் போகிறேன்… எனக்குப் பின்னால் நீ நித்தம் நித்தம் செத்து பிழைக்கும் விவசாயமா… இல்லை நிரந்தரமாக செத்துப் போகும் பிளாட்டாகவா…  கட்டிடமாகவா.. எனக்குத் தெரியாது… உனக்குச் சொந்தமில்லாத வியர்வையை உன்மீது தெளித்து வாழ்ந்திருக்கிறேன்… இப்போதும் உனக்குச் சொந்தமில்லாத உன்மீது ஒருமுறை கூட தெரித்து விழாத என் கண்ணீரை தெளித்து விடை பெறப் போகிறேன்… மன்னித்து விடு…’ விம்மிக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்ட போது வாய் மட்டும் விரிந்து எச்சிலை வெளிக்காட்டியது…  கண்ணீர் நிலத்தில் விழுந்து காய்ந்தது.

மடியிலிருந்த துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன்..  மதியம் சாப்பிட முடியவில்லை… வீட்டுத் திண்ணையில் படுத்த போது உறக்கம் வராத தவிப்பு..  பீரோவில் எப்போதோ வைத்த பத்திரங்களை சாயங்காலம் தேடி எடுத்து அரை மனதோடு பத்திரப்படுத்தி வைத்தேன்.  விடியும் பொழுது நல்ல பொழுதாக வெங்கடேசனின் மனமாற்றச் செய்தியோடு விடிய வேண்டும் என்ற நம்பிக்கையோடு அன்று இரவு படுக்கைக்குப் போனேன்.

வயல்காட்டிற்கு போய் விட்டு வந்து படுக்கும் ஒவ்வொரு நாளும் அடித்துப் போட்டதைப் போல் அசத்தும் உறக்கம் அன்று புரண்டு புரண்டு படுத்தாலும் வரவில்லை.

விடியற்காலையில் வீடு வந்து சேர்ந்த வெங்கடேசனின் பிடிவாதம் நிலப் பத்திரப் பையோடு என்னைச் சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்து, இரண்டு நாட்களை வழியனுப்பி வைத்திருந்தது.

அடுக்குமாடி வீடு… குளு குளு அறை, எதற்கும் வீட்டை விட்டு வெளியே வராத அளவிற்கு வசதிகளோடு உள்பக்கமாக வீட்டை பூட்டிக் கொண்ட வாழ்க்கை… மகனும் மருமகளும் வேலைக்குப் போன பின்பு பேரப்பிள்ளைகளும், டி.வி.யும்தான் உலகமாக இருந்தது. இரண்டு நாட்கள் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  மூன்றாவது நாள் என்னால் இருக்க முடியவில்லை.

“”வெங்கி…”

“”என்னப்பா…?”

“”வய வரப்புன்னு சுத்திகிட்டே இருந்த உடம்பு… வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க முடியலை… அது என்னப்பா… வெளிக்காற்றே வராமல் குளுகுளுன்னு அது நமக்கு சரியா வரலை… எங்கேயாவது காலாற நடந்துட்டு வர்றேன்”

நான் புறப்படத் தயாரானேன்.

“”அப்ப ஒண்ணு செய்யுங்க அப்பா…”

“”நீங்க…. தனியா போக வேண்டாம்… உங்க பேரன் முகிலனை கூட்டிட்டு போங்க..

கடைக்கு சாமான்கள் வாங்க போறான்.  அவனோட நீங்களும் போயிட்டு வாங்க.. அதற்குள் நிலம் சம்பந்தமாக ஆள் வந்திருவாங்க.. நம்ம ஊருக்கு பக்கத்து ஊர்காரங்கதான்… வெள்ளையபுரம்… சீக்கிரம் வந்து விடுங்க…”

பெரிய கடை வீதி… நடந்து போகும் போதே ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டு போனான் பத்தாம் வகுப்பு படிக்கும் பேரன் முகிலன்.

தெருவோரத்தில் சோபாக்களும், சேர்களும், அலங்கார பொம்மைகளுமாக இருந்தன.

நான்கைந்து நைந்து போன வடமாநில மனிதர்கள் அதை விற்கும் வியாபாரிகளாகத் தெரிந்தனர்.

“”முகிலா….” என்று தான் சொன்னேன்.

“”இதெல்லாம் பணக்கார வீடுகளில் வைக்கிற அலங்கார பொருட்கள் தாத்தா…”

அதை சிறிது நேரம் நின்று பார்த்தேன்.  அழகழகாக இருந்தன.

ஒரு இடத்தில் சாலையின் இரண்டு புறங்களிலும் தள்ளுவண்டிகளில் காய்கறி கடைகள், அடர்த்தியான மரங்களோ, விவசாய நிலங்களோ இல்லாத அந்த நகரத்தில் பச்சை பசேலென காய்கறிகள் அடுக்கி வைத்திருந்தார்கள் வியாபாரிகள்.

முகிலன் ஒரு தள்ளுவண்டி அருகில் போனான்.

தக்காளிகளைப் பொறுக்கி எடுத்து இரண்டு கிலோ போடச் சொன்னான்.  அந்தக் கடைக்காரன் என் மகன் குடும்பத்திற்குப் பழக்கப்பட்டவன் போலத் தெரிந்தது.

“”எப்பவும் அப்பா வருவாரு… இன்னைக்கு நீங்களா….?” என்று கேட்டான்.

தக்காளிகளை வாங்கிக் கொண்டு, “”எவ்வளவு?” என்று கேட்டான்.

“”கிலோ நாற்பது… எண்பது ரூபாய் கொடுங்க..”

“”கிலோ நாற்பதா…” எனக்கு நெஞ்சடைத்தது.

“”என்னப்பா… நாற்பது சொல்றே…?” நான் கேட்டேன்.

“”என்ன செய்யுறது… மழை இல்லை… விவசாயம் இல்லை… தக்காளி விளைச்சல் குறைஞ்சு போச்சு…  வரத்து குறைவு…”

கடைக்காரன் எனக்கு விவசாயம் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.

நான் பேசாமல் நகர்ந்தேன்.

“”ஏம்பா… பத்து ரூபாய் குறைச்சு வாங்கலாமில்லே…?”

“”தாத்தா… இது கிராமமில்லே… டவுன்… அவன் சொல்றது தான் விலை.  விலை குறைச்சுக் கேட்டா நம்மை ஏற இறங்கப் பார்ப்பான்”

அடுத்தது ஒரு உயரமான கட்டிடத்திற்கு அழைத்துப் போனான்.

“”தாத்தா… இது ஷாப்பிங் மால்…”

“”அப்படின்னா?”

“”இங்கே சினிமா தியேட்டர், ஹோட்டல், மளிகை கடை, காய்கறி கடை எல்லாமே இருக்கு…”

உள்ளே நுழைந்தபோது, குளு குளு காற்று வரவேற்றது. எதிரே இருந்த கடைக்குள் போனோம்.

ஒரு பெரியகடை முழுவதும் எல்லாவிதமான பழங்களும், காய்கறிகளும் அழகாக அடுக்கி வைத்திருந்தனர்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  தோட்டத்தில் பறிக்கிறபோது கூட இவ்வளவு அழகாக இருந்ததில்லை காய்கள்… அவ்வளவு அழகாக இருந்தன.

தள்ளுவண்டியை எடுத்துக் கொண்டு முகிலன் செல்ல பின்னால் சென்றேன்.

நான்கைந்து மாம்பழங்களும், ஆப்பிள்களும் வண்டியில் எடுத்துப் போட்டான்.  ஓரிடத்தில் எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கிக்  கொண்டு வெளியில் வந்தோம்.

“”என்ன தாத்தா…. ஆச்சரியமாக இருக்கா?”

“”ஆமாம்… பணக்காரங்க வீட்டிலே இருக்க வேண்டிய பொருட்களை வீதியிலே விற்கிறாங்க… சாதாரண ஏழை மக்களும் வாங்குற சாப்பிடும் பொருட்களை குளு குளு அறையில் வைச்சிருக்காங்க… ஆச்சரியம் தானே?”

இரண்டு மணி நேரம் சுற்றி விட்டு வீடு வந்தபோது வீட்டிற்குள் இரண்டு பேர் உட்கார்ந்து என் மகனுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான்.

“”அப்பா பேர்ல தான் இருக்கு…” அவர்களிடம் என் மகன் சொன்ன போது எனக்குப் புரிந்தது.  நான் எதுவும் பேசவில்லை.

“”ஒரு நல்ல நாளாகப் பார்ப்போம்.. போயிட்டு பேசுகிறேன்”

அவர்கள் விடை பெற்றார்கள்.

“”வீடு மட்டும் இருக்கட்டும்… தோட்டத்தை பத்து லட்சத்துக்குப் பேசியிருக்கிறேன்.  நீங்க சரின்னு சொன்னா… விற்று விடுவோம்.  எனக்குச் சரி…” என்றான் வெங்கடேசன்.

“”நான் உயிரோடு இருக்கும்வரை தோட்டத்தை விற்க வேண்டாம்பா…”

“”என்னப்பா… சொல்றீங்க…?”

“”இன்னும் பத்து  இன்னும் பத்து வருஷம் கழித்து

 

உங்க எல்லோருடைய கைகளிலும், நீங்க மடியிலும், கைகளிலும் வைச்சு படம் காட்டுறீங்களே… அதுதான்.. அதுக்குப் பேரென்ன…?” பெயர் தெரியாமல் நான் இழுத்தேன்.

“”கம்ப்யூட்டரா…” மகன் கேட்டான்.

“”ஆமா… அது தான்..   அதுவும் உங்க கைநிறைய பணமும் இருக்கும்… ஆனால் கத்திரிக்காயும், தக்காளியும் இருக்காது… அது என்னை மாதிரி ஆட்களால் தான் தர முடியும்.. உங்களால் முடியாது… என் வழியிலேயே நான் போறேன்.. என்னை விட்டு விடு… என்னை விற்று விடாதே….”

நிலப் பத்திரத்தை வாங்கிக் கொண்டேன்.  அன்று இரவே கிராமத்திற்கு திரும்ப பஸ்ஸில் ஏற்றி விடச் சொன்னேன் நான்.

 

source ::::குன்றக்குடி கி.சிங்காரவடிவேல்  in   Dinamani….Tamil Daily

natarajan

Message For The Day….Call of Divine Echoes in Every Heart …

The ascend to a human form has been made possible for you all; but you will truly be deserving of this high status among the animals, only by finally merging in the Divine. That is the goal which the pilgrimage of evolution has in view since life began on earth as the amoeba on the waters. Faith in that goal and steady march towards it, are the signs of one being aware of the responsibility of being a human. The Call of the Divine echoes in every heart; it provokes the reaction of awe, reverence, affection, love and sacrifice – all ingredients of devotion (bhakthi). It translates itself into acts of worship, of praise, of adoration and of rituals. The mind through these means gets saturated with divine thoughts and is recast in the divine mould, until the flow of bliss (Aananda) is unabated.

 

Sathya Sai Baba

Message For The Day…. See Yourself as your Self Unrelated to Others …

Arjuna entered the battlefield, fully equipped and fanatically determined to destroy his enemies. But, when he stood on the battlefield in the chariot driven by Lord Krishna, he saw ‘my teachers’, ‘my grandfather’, ‘my kinsmen’ and ‘my cousins’. He was moved so much by this sense of ‘I’ and ‘mine’ that he discarded the bow and desired to return, poor and beaten. The ‘I’ has really nothing to do with earthly possessions, but being deluded he identified himself with earthly relationships. This is the moha (delusion) from which he was saved, through the Bhagavad Gita. Be unmoved by duality; that is the lesson. Let not defeat or success affect your inner calm. See yourself as your Self, unrelated to others or to the objective world. When you know your true Self, you are liberated: that is Moksha.

 

Sathya Sai Baba