தைப்பூசமும் வேல் வழிபாடும் …

தைப்பூசம்-ன்னா என்ன?
* பழனிப் பாதயாத்திரை
* மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு!
* வடலூரிலே வள்ளலார் சோதி தரிசனம்,
* திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாம் தைத்திருநாள்!!
…இப்படி பல விழாக்கள்!

என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

இப்படி…
அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!

இந்த வேல் வாங்கிய நாளிலே, “வேல்” என்றால் என்ன?-ன்னு கொஞ்சம் பார்ப்போமா?
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!!

வேல், சங்கத் தமிழில் எப்படியெல்லாம் வலம் வருகிறது….



1. வேல் – பெயர்க்காரணம்:

வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
வெல் = வேல்!
’வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ’வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
ஆகவே, வேல் = வெற்றி!

2. வேல் – தமிழ்த் தொன்மம்:

ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்!
ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் “வேல்” போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!
வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது! பின்னாளில் தான் உருவமும், ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்!
ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது!
வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:(

பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
* பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
* ஈழத்தில் செல்வர் சந்நிதி,
* மலேசியாவில் பத்துமலை,
* பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்!

 

சிக்கல் சிங்காரவேலன் வேல் வாங்கும் காட்சி:

முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!
அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்!

முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்! எந்தத் திருமுழுக்கும் (அபிஷேகம்) இல்லாமலேயே, ஒத்தி எடுக்கும் துணிகள், ஈரமாய் நனைவதைக் காணலாம் என்று கூறுவர்!

முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

வேலுக்கு = உடம்பிடித் தெய்வம்-ன்னே பேரு!
= உடன் பிடித் தெய்வம்!
முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு!பார்த்து இருக்கீங்களா?

இன்னிக்கு பார்த்தீங்கன்னா….பல படைவீடுகளிலும் முருகன், தன் கையில் வேல் ஏந்தியே இருக்க மாட்டான்!
அவன் தோளிலே தனியாக, சார்த்தியே வைத்திருப்பார்கள்!

ஏனோ, அதைப் பார்க்கும் போதெல்லாம்….நானே அவன் தோளில் சாய்ந்து கொள்வது போல ஒரு உணர்வு எனக்கு!

வேல் வேறு, முருகன் வேறல்ல!
வேலே = முருகன்! முருகனே = வேல்!
முந்து முந்து…..முருகவேள் என்னுள் முருகவேலாய் முந்து!!

வெஞ்சமரில் அஞ்சேல் என “வேல்” தோன்றும்…முருகா என்று ஓதுவார் முன்!

source::::http://madhavipanthal.blogspot.com.au/

natarajan

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள் !!!

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவைகளில் சில………

* திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

* எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

* ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

* ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக இருக்கின்றன.

2* திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

* ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

* ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

* ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

* பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

* ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

* அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

* ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

* மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ணதேவராயர், அச்சதராயர் போன்றோர். ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்5கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

* ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

* திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

* வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

* சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

* ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

* எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

* ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

* 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்.1

* திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

* திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

* ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

* ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

* கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

4* வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் ” வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

* திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

* திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

source:::: in ஆன்மீக அர்த்தங்கள்கட்டுரைகள்  & Dinamani Jothidam

natarajan

 

Why Does the New Year Begin on Jan 1 ? !!!

The date of New Year’s Day seems so fundamental that it’s almost as though nature ordained it. But New Year’s Day is a civil event. Its date isn’t precisely fixed by any natural seasonal marker.

      Image Credit: Aldaron

New Year’s Day is a civil event. Its date isn’t precisely fixed by any natural seasonal marker.

Our modern celebration of New Year’s Day stems from an ancient Roman custom, the feast of the Roman god Janus – god of doorways and beginnings. The name for the month of January also comes from Janus, who was depicted as having two faces. One face of Janus looked back into the past, and the other peered forward to the future.

For us in the Northern Hemisphere, early January is a logical time for new beginnings. At the December solstice in the Northern Hemisphere, we had the shortest day of the year. By early January, our days are obviously lengthening again. This return of longer hours of daylight had a profound effect on cultures that were tied to agricultural cycles. It has an emotional effect on people even in cities today.

The early calendar-makers didn’t know it, but today we know there is another bit of astronomical logic behind beginning the year on January 1. Earth is always closest to the sun in its yearly orbit around this time. This event is called Earth’s perihelion.

People didn’t always celebrate the new year on January 1. The earliest recording of a new year celebration is believed to have been in Mesopotamia, circa 2000 B.C. That celebration – and many other ancient celebrations of the new year following it – were celebrated around the time of the vernal equinox, around March 20. Meanwhile, the ancient Egyptians, Phoenicians, and Persians began their new year with the autumnal equinox around September 20. And the ancient Greeks celebrated on the winter solstice, around December 20.

By the Middle Ages, though, in many places the new year began in March. Around the 16th century, a movement developed to restore January 1 as New Year’s Day. In the New Style or Gregorian calendar, the New Year begins on the first of January.

Bottom line: There’s no astronomical reason to celebrate New Year’s Day on January 1. Instead, our modern New Year’s celebration stems from the ancient, two-faced, Roman god Janus – for whom the month of January is also named. One face of Janus looked back into the past, and the other peered forward to the future.

source::::earth sky news site

natarajan

” சர்க்கரை பாலில் கரைவது போல ….” !!!

 

மாமன்னன் போஜராஜனின் அரசவையில் ஒருசமயம் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அவை நிரம்பி வழிந்தது. அப்படி ஒரு கூட்டம். அங்கு கற்றறிந்த பண்டிதர் ஒருவர் அரசவைக்குள் வர எண்ணினார். ஆனால், காலதாமதமாக வந்தார். வாயிற்காவலர் உள்ளே இடமில்லை என்று அவரைத் தடுத்தனர். “”நீ போய் அரசரிடம் அவரைக் கண்டு முக்கியமாக ஒன்றைப் பேச நான் வந்திருப்பதாய்ச் சொல்!” என்று கண்டிப்பாய்ச் சொல்கிறார் அவர். அவரின் எடுப்பான, களையான தோற்றத்தைக் கண்டு வாயிற்காவலன் அரசரிடம் சென்று “”நாங்கள் என்ன தடுத்தும் உங்களுடன் பேச வேண்டும் என்று பிடிவாதமாக ஒரு பண்டிதர் வெளியில் நிற்கிறார்” என்றான். அரசன் அந்த வாயிற்காவலனுடன் எதுவும் பேசவில்லை. ஒரு சேவகனை அழைத்து “”ஒரு கோப்பை நிறைய பாலை எடுத்துக்கொண்டு போய் அந்தப் பண்டிதரிடம் கொடு!” என்றான். அந்த சேவகனும் அவ்வாறே சென்று அந்தப் பண்டிதரிடம் பால் நிரம்பிய கோப்பையைக் கொடுத்தான்.

பால் கோப்பையைப் பார்த்த பண்டிதர் உடனே தன் தோளில் மாட்டியிருந்த ஜோல்னாப் பையைத் திறந்து அதனுள் இருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்து அதிலிருந்த சர்க்கரையைப் பாலில் இட்டு அந்தக் கோப்பையை மீண்டும் மன்னரிடமே எடுத்துச் செல்லப் பணித்தார்.

பால் கோப்பை திரும்பி வந்ததைப் பார்த்த போஜராஜன் என்ன ஆயிற்று என்று வினவினான். “”அரசே.. அந்தப் பண்டிதர் எதுவும் பேசவில்லை. நீவிர் அனுப்பிய பால் கோப்பையைப் பார்த்ததும் தன் பையிலிருந்த ஒரு பொட்டலத்திலிருந்து சர்க்கரையை எடுத்து ஜாக்கிரதையாய்ப் பாலில் கலந்துவிட்டு உங்களிடம் கோப்பையைத் தரச் சொன்னார்!” என்றான் காவலாளி.

உடனே போஜராஜன் “”ஆஹா… என்னுடைய சபையில் இப்படிப்பட்டவர்தான் இருக்க வேண்டும். உடனே அவரை உள்ளே அழைத்து வாருங்கள்!”

என்று கட்டளையிட்டான்! அவையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அரசன் பால் கோப்பையை வெளியே அனுப்ப அவர் சர்க்கரையைப் போட்டுத் திரும்ப உள்ளே அனுப்ப அரசர் அவரை உள்ளே அழைத்து வரச் சொன்னதைக் கேட்ட அவர்கள் அதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள விரும்பி துணிந்து அரசனிடமே கேட்டனர். அதற்கு போஜராஜன், “”அவையில் கூட்டம் முழுமையாக இருக்கிறது. உள்ளே இடமில்லை என்பதைத் தெரிவிக்கக் கோப்பை நிறையப் பாலை நிரப்பி அனுப்பினேன். ஆனால், அவரோ எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சர்க்கரை பாலில் கரைவதுபோல கூட்டத்தில் என்னைக் கரைத்துக் கொள்வேன். சர்க்கரையைப்போல என் தனித்துவத்தை எடுத்துவிட்டுச் சுற்றுப்புறத்தை இனிமையாக்குவேன். எந்த விஷயத்திலும் உட்புக மாட்டேன். பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட மாட்டேன். அப்படி நான் கரைந்து அந்தச் சூழலை  இனிமையாக்கும்போது நான் உள்ளே தாராளமாகச் செல்லலாமே என்று தெரிவித்தார் அந்தப் பண்டிதர்” என்று விளக்கினான்! (போஜராஜன் அவையில் அப்படிப்பட்ட பண்டிதருக்கு இடமில்லை என்று சொல்லலாமா?!)

“அமைதியை நோக்கி’ என்ற நூலில் இருந்து.

ஆங்கில மூலம்:  ஸ்வாமி முருகானந்த ஸரஸ்வதி

தமிழாக்கம்: காந்தலக்ஷ்மி சந்திரமவுலி.

source:::::dinamani tamil daily…Kadir

natarajan

 

An Ancient Underwater Forest in the Gulf of Mexico …

 

Scientists are exploring a submerged forest of bald cypress trees off the coast of Alabama in the Gulf of Mexico. Hurricane Katrina is thought to have uncovered it. Earlier in 2013, they announced that the forest is much older than originally thought. An early speculation was that the submerged trees were between 8,000 and 12,000 years old. The newer estimate dates the submerged trees from about 50,000 to 80,000 years ago. The submerged forest provides evidence that coastal Alabama has risen between 60 and 120 feet (18 to 36 meters) in the last 50,000 years. Scientists are now hoping to sample the ancient forest to understand what climate conditions were like along the Gulf coast during that time in Earth’s history.

A local fisherman first noticed the unusual spot in the Gulf of Mexico a few years ago. He saw that fish were abundant in the area and speculated that some sort of structure must exist on the sea floor. Fish and other marine life tend to congregate around hard structures beneath the sea, such as coral reefs and sunken ships.

Image via Ben Raines/AL.com

There are large stumps, roots and logs from an ancient bald cypress forest about 60 feet (18 meters) below the surface of the water, near coastal Alabama. Image via Ben Raines/AL.com

Image via Ben Raines/AL.com

Some of logs measure 8 feet (2.4 meters) in diameter. The forest was apparently buried under thick seafloor sediments for thousands of years. It’s thought that Hurricane Katrina’s giant waves uncovered it. Image via Ben Raines/AL.com

Image via Ben Raines/AL.com

Anemones and crabs cover the ancient trees, and fish swim nearby. Image via Ben Raines/AL.com

Ben Raines, executive director of the Weeks Bay Foundation in Alabama, was one of the first scuba divers to explore the site. He discovered several large stumps and logs from an ancient bald cypress forest about 60 feet (18 meters) below the surface of the water. Some of logs measured 8 feet (2.4 meers) in diameter. He told EarthSky:

As soon as I hit the bottom, I saw the first stump. It had the trademark, irregularly shaped trunk of a cypress tree, with knees spread around it in a circle. Then I saw another, and another and knew instantly I was swimming over the remains of an ancient forest. It’s an enchanting place. You feel like you are in some sort of fairy world, with these huge stumps covered in anemones and crabs, and swarms of fish swimming all around you.

Raines recognized the importance of the find and contacted scientists to help get an estimate of the forest’s age. Preliminary evidence, derived in part from radiocarbon dating, suggests that the submerged forest may be anywhere from 50,000 to 80,000 years old.

bald-cypress-swamp-usfw-380

Here’s a bald cypress swamp today. The submerged forest must have looked like this at one time. Image Credit: Ted Trovillion, US Fish and Wildlife Service.

Image via Ben Raines/AL.com

Image via Ben Raines/AL.com

North America had a very different climate 50,000 to 80,000 years ago. During that time, a large portion of North America was covered in glaciers and sea levels were much lower than they are today. Hence, the land off the coast of Alabama was not submerged underwater.

A team of scientists from the Gulf of Mexico region are hoping to study the site to understand what past climate conditions were like along the Gulf coast. Grant Harley, an assistant professor in geography at the University of Southern Mississippi, commented on their plans in a press release. He said:

What we’ll do is compare these samples with other paleoclimate records to give us an idea about climate conditions on the Gulf Coast 50-80,000 years ago, which we can tell by looking at tree growth rings. It would give us an annual record of climate during a time period in the Earth’s history when climate change was happening rapidly. If it was cold or dry, that would result in tiny, narrow growth rings, but warm or wet conditions would result in wider growth rings. To have a record of that would be unique and rare.

underwater-cypress-forest-ben-raines-580

Scientists are hoping to study the site to understand what past climate conditions were like along the Gulf coast. Image via Ben Raines/AL.com.

Kristine DeLong, an assistant professor in the Department of Geography and Anthropology at Louisiana State University, also commented on the upcoming research to Weather Underground. She said:

If we get core samples, we can look at the tree rings and see what was happening with precipitation. We don’t know what was happening with precipitation on the Gulf Coast during the ice ages. We know that the area around the Great Salt Lake, and in Arizona and New Mexico, was very wet. That it rained a lot. And that [it] is desert now. But we don’t know what was happening on the Gulf Coast.

The scientists are hoping to begin the research quickly before the underwater forest decays any further. The forest, which was previously preserved underneath seafloor sediments for thousands of years, was likely uncovered recently by strong winds and waves such as those from Hurricane Katrina. The Weeks Bay Foundation is currently working to secure protections for the site that will allow for fishing, diving, and scientific research, but will prevent salvaging of the ancient wood.

Bottom line: The remains of an ancient bald cypress forest were discovered off the coast of Alabama in the Gulf of Mexico. Scientists estimate that the trees are 50,000 to 80,000 years old. They are hoping to sample the underwater forest to understand what climate conditions were like along the Gulf coast during that time in Earth’s history.

source::::  in
 | EARTH ……Earth Sky News site

natarajan

படித்ததில் பிடித்தது !!!…வித்தியாசமான தீர்ப்பு !!!

பல காலங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் பிரபலமான நீதிபதியாகப் பணியாற்றிய ஃபியாரெல்லா லா கார்டியா என்பவர் வித்தியாசமான தீர்ப்புகள் வழங்கி மக்களைக் கவர்ந்தவர். அவரை எல்லோரும் “லிட்டில் ஃபிளவர்’ என்று பிரியமாக அழைப்பார்கள்.

ஒருநாள் இவர் முன்னே ஓர் ஏழைக் கிழவனைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். ஒரு கடையில் ரொட்டித் துண்டு திருடியதாகப் போலீஸ் அவரைப் பிடித்து வந்திருந்தது.

“”ஐயா, எனக்குப் பசி தாங்கவில்லை. அதனால்தான் ரொட்டி திருடினேன்…” என்றார் அந்தக் கிழவர்.

“”நீங்கள் எதற்காகத் திருடினாலும் குற்றம் குற்றம்தான். மன்னிப்பு கிடையாது. உங்களுக்குப் பத்து டாலர் அபராதம்…” என்று தீர்ப்பளித்த நீதிபதி, “”உங்களிடம் காசு இல்லை என்பது தெரியும். ஆகவே நானே அதைக் கட்டுகிறேன்..” என்று சொல்லி தன் கோட்டுப் பையிலிருந்து பத்து டாலர் எடுத்துக் கோர்ட்டு குமாஸ்தாவிடம் கொடுத்தார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை. “”பசிக் கொடுமை தாங்காமல் ஒருவர் ரொட்டி திருடினார் என்றால் இந்த ஊருக்கு அவமானம். ஆகவே இங்கே நீதிமன்றத்தில் கூடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் அரை டாலர் அபராதம் விதிக்கிறேன்…” என்றார்.

அந்தத் தீர்ப்பின்படி கோர்ட் குமாஸ்தா தன் தொப்பியை எல்லாரிடமும் நீட்ட ஒவ்வொருவரும் அரை டாலர் போட்டார்கள். சேர்ந்த பணத்தை “”இந்தாருங்கள்…” என்று அந்தக் கிழவரிடம் கொடுத்தார் நீதிபதி லிட்டில் ஃபிளவர்!

தண்டனையை எதிர்பார்த்துவந்த கிழவர் நாற்பத்தேழு டாலருடன் குஷியாக வெளியேறினார்.

– “நாலு மூலை’ என்ற நூலில் ராகி.ரங்கராஜன்

source::::Dinamani …Tamil Daily.  blogspot page

natarajan

” குலதெய்வம் பூஜை சரியா செய்கிறாயா ? “….

பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது.

இருந்தும் அந்த விவசாயி,சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.

சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”

ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”

அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”

ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”

காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

– பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

– பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது.

இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.

ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.

எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?
ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.

Article by ….Indira SoundraRajan
(நன்றி : தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5975/kula-deivam-maha-perivas-explanation#ixzz2oYvdGOVk

போரைத் தடுத்த கவிதை !!!

அதிவீரராம பாண்டியன், நிடத நாட்டு மன்னன் நளனுடைய வரலாற்றை “நைடதம்’ என்ற பெயரில் விருத்தப் பாக்களில் அதைப்படிக்க, அவைப் புலவர்கள், “”நைடதம் புலவர்க்கு ஒüடதம்” என்று பாராட்டினர். கரிவலம்வந்த நல்லூரில் ஆட்சி செய்துவரும் தன் அண்ணனும் சிறந்த தமிழறிஞனும் கவிஞனுமான வரகுணராம பாண்டியனிடம் நைடதத்தைக் கொடுத்தனுப்பி, அக்காவியத்தைப் பற்றி அவன் கருத்தைக்கேட்டு வருமாறு அனுப்பினான்.

வரகுண பாண்டியனின் மனைவியும் சிறந்த தமிழறிவுள்ளவள். அவளிடம் தம்பியின் நூலைக்காட்டி, அவள் கருத்தைக் கேட்டான். அவள் அந்நூலைப் படித்துப் பார்த்து, “”உங்கள் தம்பி எழுதியுள்ள நைடதம், நளன் சுயம்வரத்தில் தமயந்தியை மணந்தது, தங்கள் நாடு சென்று இல்லற வாழ்வில் இன்பம் அடைந்தது வரை கவிஞர்கள் பாராட்டும் அளவிற்குப் பாடியுள்ளார். ஆனால், கலி தொடர்ந்த பின் கலிநீங்கும் வரை நளனும் தமயந்தியும் துயரமடைந்த அவலச் சுவையை, கவிதைகள் நன்றாக விளக்கவில்லை” என்று கூறினாள்.

வரகுணராம பாண்டியன், தன் மனைவியிடம், “”என் தம்பி அழகும் அறிவும் உள்ள பெண்ணை மணந்து இல்லற வாழ்வில் இன்பத்தின் எல்லை கண்ட காலத்தில் நளன் -தமயந்தியின் இல்லற வாழ்வைப் பற்றிப் பாடும்போது இன்பச் சுவையை அழகாகப் பாடியுள்ளான். இளைஞனான அவன், கலியினால் அவர்கள் துன்பம் அடைந்ததைப் பாடும்போது அவலச்சுவை குறைந்திருப்பது இயல்பே. நீயே உன் கருத்தை எழுதியனுப்பு” என்று கூறினான்.

“”நைடதத்தில் உள்ள கவிதைகளில் அழகும் சுவையும் முதற்பகுதியில் இருந்ததுபோல் இல்லாமல் போகப் போகக் குறைந்துகொண்டே போயுள்ளது. ஆதலால், வேட்டை நாய் முதலில் வேகமாக ஓடி, போகப்போக இளைத்தது போன்றும்; கரும்பை வேரிலிருந்து தின்னும்போது முதலில் சுவையாகவும் போகப்போகச் சுவை குறைந்துகொண்டே உள்ளது போன்றும் நைடதத்தின் கவிதைகள் உள்ளன” என்று அவள் எழுதி அனுப்பினாள்.

இந்த ஓலையைக் கண்ட அதிவீரராம பாண்டியன், “”அண்ணா, வரகுணராம பாண்டியா, நீ என்னைப் பழித்தால் நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால், நீ என் கவிதைகளை – என் தமிழைப் பழித்தாய்! ஆதலால் உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் போருக்கு வரவேண்டும்” என்று ஓலை எழுதி அனுப்பினான்.

தம்பியின் ஓலையைக் கண்ட வரகுணராம பாண்டியன், தம்பியிடம் மன்னிப்புக் கேட்டாலும் போர் தொடுத்தாலும் பழி உண்டாகும். இதற்கு என்ன பதில் எழுதுவது என்று யோசித்தான். அதைக்கண்ட அவன் மனைவி, “”ஒரு கவிதையினால் உங்கள் தம்பியின் கோபத்தைத் தணிக்கிறேன்” என்று கூறினாள்.

“”இராமாயணத்தில் சூரியன் மகனாகிய சுக்ரீவன். ராமனிடம் தன் அண்ணனான வாலியின் குற்றங்களைக்கூறி அண்ணனைக் கொல்லச் செய்தான்.

தென்னிலங்கை வேந்தனாகிய விபீஷணன் தன் அண்ணனான இராவணன் மார்பில் அம்பெய்தால்தான் அவன் உயிர் போகும் என்ற உண்மையை ராமனிடம் கூறி அவனைக் கொல்லச் செய்தான். மகாபாரதத்தில் அருச்சுனன் தன் அண்ணனாகிய கர்ணனைக் கொன்றான்.

அண்ணன்-தம்பிகளின் பாசத்திற்கு இந்த மூன்று தம்பிகளையும் பாராதே. அண்ணனின் பாதுகைகளை அரியணையில் ஏற்றி, “அண்ணன் ராமர் வரும் வரையிலும் அயோத்திக்குள் நுழையமாட்டேன்’ என்ற விரதத்துடன் தவக்கோலம் பூண்டு, நாட்டை ஆண்ட தம்பி பரதனையும் ராமனையும் பார்” என்ற பொருளில்,

“”செஞ்சுடரோன்  மைந்தனையும்  தென்னிலங்கை

வேந்தனையும்

பஞ்சவரில்  பார்த்தனையும்  பாராதே – மிஞ்சு

விரதமே பூண்டு மேதினி யாண்ட

பரதனையும் இராமனையும் பார்”

என்ற கவிதையை எழுதி அனுப்பினாள். ஓலையில் உள்ளதைப் படித்த அதிவீரராம பாண்டியன் தன் தவறை உணர்ந்து அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டான்.

அண்ணன்-தம்பிகளுக்குள் நடக்க இருந்த போரை ஒரு தமிழ்க் கவிதை தடுத்து நிறுத்திவிட்டது என்ற வரலாறு இக் கவிதையின் பெருமையை உணர்த்துகிறது.

 

source:::::Dinamani  …Tamil daily

natarajan

Message For the Day…”To Love God is to be His Messenger “….

Today we celebrate the birthday of Jesus Christ. Jesus taught that you should seek the Kingdom of Heaven and to enter that Kingdom, you must cultivate loving hearts. Then your hearts would become the Kingdom of Heaven. When Jesus was born in the manger, three kings were led by a star to His place of birth. One of them, seeing the infant Jesus observed: “This Child will be a lover of God.” The second said: “No, God will love Him.” The third one said: “Verily He is God Himself.” The significance of these three statements is – “To love God is to be His Messenger.” To be loved by God is to be a son of God and finally, as Jesus Himself said: “I and My Father are one.” Be aware that all of you are messengers of God. All of you are Children of God. So be free from selfishness and manifest the qualities of the Divine Father from today. 

 Divine Discourse, Dec 25, 1994.   of Swami 

Sathya Sai Baba

– Divine Discourse, Dec 25, 1994.

The “X” in “Xmas” Doesn’t Take the “Christ” Out of “Christmas” !!!

Myth: “Xmas” is a non-religious name / spelling for “Christmas”.

 

It turns out, “Xmas” is not a non-religious version of “Christmas”. The “X” is actually indicating the Greek letter “Chi”, which is short for the Greek, meaning “Christ”. So “Xmas” and “Christmas” are equivalent in every way except their lettering.

In fact, although writing guides such as those issued by the New York Times; the BBC; The Christian Writer’s Manual of Style; and Oxford Press discourage the use of Xmas in formal writing, at one time, it was a very popular practice, particularly with religious scribes, who are thought to have started the whole “Xmas” thing in the first place. Indeed, the practice of using the symbol “X” in place of Christ’s name has been going on amongst religious scholars for at least 1000 years.

Eventually, this shorthand trick spread to non-religious writings where nearly everywhere “Christ” appeared in a word, the Greek Chi would replace that part of the word. For example, in the 17th and 18th centuries, there are numerous non-religious documents containing instances of “Xine”, which was a common spelling for someone whose name was Christine.

Bonus Facts:

  • The “-mas” part on the end of Christmas and Xmas comes from the Old English word for “mass”.
  • Other classic common abbreviations for “Christ” were: “Xp” and “Xt”, again both an abbreviated form of the Greek for Christ.
  • The Greek letters “X” (Chi) and “p” (Rho) superimposed together was once a very common symbol signifying Christ and was called, somewhat unimaginatively, the Chi-Rho.
  • The Chi-Rho was also used by scribes in a non-religious sense to mark some passage that was particularly good, with it literally implying “good”.
  • In 1977, the Governor of New Hampshire issued a press release stating that journalists should cease taking the “Christ” out of “Christmas” as “Xmas” was a pagan spelling of Christmas. Perhaps he should have run that press release by a religious scholar before issuing it. :-)
  • Although, even those well versed and respected in Christianity often make the same mistake, such as Franklin Graham in an interview on CNN: “For us as Christians, this is one of the most holy of the holidays, the birth of our savior Jesus Christ. And for people to take Christ out of Christmas. They’re happy to say merry Xmas. Let’s just take Jesus out. And really, I think, a war against the name of Jesus Christ.”

source:::::today i found out .com

natarajan