Interesting read
படித்ததில் பிடித்தது !!!…. ” கொளுத்திப் போடு ” !!!….
டார்கெட்….அரைப் பக்க கதை !!!
அந்த பிரமாண்ட மண்டபத்தில் ஜாதி மத பேதமில்லாமல் அனைத்து மதத்தினரும் கூடியிருந்தனர். அங்கு நடக்க விருப்பது அனைத்து மதத்தினர் பங்கு பெறும் மழை வேண்டி பிரார்த்தனை. வெவ்வேறு மதத்தினருக்கு வெவ்வேறு இடம் ஒதுக்கப்பட்டடிருந்தது. அங்கு அவரவர் முறைப்படி பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அந்த விசேஷ ஏற்பாட்டின் ஐடியாவுக்கு சொந்தக்காரர் தொழிலதிபர் ஜே.கே.விற்கு பாராட்டு மழை.
பிரமாதம் சார், வித்தியாசமான யோசனை. எல்லா மதத்தினரையும் ஒன்று சேர்த்து புரட்சி பண்ணிட்டீங்க. மத நல்லிணக்கத்திற்கு வித்திட்டிருக்கீங்க. எல்லாவற்றிற்கும் சிரித்து மழுப்பி நகர்ந்த ஜே.கே. ஒரு பிரபல தொழில் வித்தகர். அவர் புதிதாய் துவங்கி இருக்கும் குடை, ரெயின்கோர்ட், ஜெர்கின் போன்றவற்றை தயாரித்து தமிழ்நாட்டில் மார்கெட்டிங் செய்யும் தொழில் இலக்கை எட்ட முடியாமல் தத்தளிப்பதால் தான் இந்த ஏற்பாடு. அந்த விஷயம் பாவம் அவரை விழுந்து விழுந்து பாராட்டும் நபர்களுக்கு தெரியாதே.
-அரியாஸ்.
source::::Kumudam Tamil Weekly
கொளுத்திப் போடு !!!….ஒரு பக்க கதை !!!!
சுஷ்மா, ஜீன்ஸ் – உடல் ஒட்டின பனியனுடன், உலர்த்த நேரமில்லாத ஈர முடியுமாய் கிளம்ப, “சுஷ்! ஒரு வாய் சாப்பிட்டு போடி…!’
“நேரமாச்சும்மா வரேன்!’ என்ற செருப்பில் நுழைந்தாள். அதற்குள் அம்மா பின்னாடியே ஓடிவந்து லாப்டாப் பையில் டிபன் பாக்ஸை செருகி, “போன உடனே மறக்காம சாப்பிட்டிரு’
“சரிம்மா, பை!’ என்று ஓடி தனக்காக காத்திருந்த டி.வி. சேனல் வண்டியில ஏறி…. செல் ஒலிக்க “இதோ கிளம்பிட்டேன் சார்!’
“அக்கா.. போலாமா?’ என்று டிரைவர் பின்னால் திரும்பிப் பார்த்த பகுதி அவளுக்கு கூசிற்று. என்ன செய்ய முடியும்!
அழகில்லை – நிறமில்லை – களையில்லை – முடியில்லை – வேண்டிய ளவுக்கு வேண்டியது வேண்டியபடி இல்லை என்று வருத்தப்படுபவர்கள் இருக்கிறார்கள் எல்லாம் இருந்தாலோ – இப்படி!
விஷûவல் கம்யூனிகேஷன் முடிந்து உடனே இந்த பிரபல சேனலில் சேர்ந்து சுஷ்மா எதிர்பாராமல் திடீர் பிரபலம்! பிரபலத்திற்கேற்ப கவர்ச்சியாக வேண்டிய கட்டாயம்!
அரசியல் – சினிமா – மீடியா – தொழிலதிபர்கள் என பெரும்புள்ளியுடன் பழகும் வாய்ப்பு. கை நிறைய சம்பளம்!
புதுப்புது யோசனைகள், யுக்திகள்! சேனலின் ரேட்டிங்கை கூட்ட வேண்டிய எப்போதும் ஓட்டம்! ஓய்விற்கும், தூங்கவும் பசி போக்கவும் நேரமில்லை. வசதியில்லாதவர்கள் காசில்லாமல் பட்டினி. காசிருப்பவர்களுக்கு சாப்பிட நேரமில்லை அல்லது டயட்!
இவர்கள் பம்பரமாய் சுழன்றால்தான் ஜனங்களுக்கு பரபரப்பு தர முடியும். இருப்பதை மறக்கணும். இல்லாததை பெரிசு பண்ணணும். போட்டி சேனல்களுக்கு முன்பு – முந்தணும்! அவன் ஏதாவது செய்து நல்ல பெயர் வாங்கினால் உல்டா பண்ணி காலி பண்ணணும்!
சுஷ்மா உள்ளே நுழைந்தபோது, ரிசப்ஷனிஸ்ட் “டைரக்டர் விக்னேஷ் பார்க்கச் சொன்னார்!’ என்று அன்பாய் விரட்டினாள்.
விக்னேஷ், “யெஸ், சார். நோ சார்! இந்த வாரம் செஞ்சிரலாம் சார்!’ என்று செல்லில் அடிபணிந்தபடி அவளை அமரச் சொன்னான். பாவம், இளம் வயதிலேயே வழுக்கை! அவளும் கேட்கட்டும் என்று ஸ்பீக்கரை அமர்த்தி அமர்ந்தான்.
எதிர்முனையில் சேர்மன். சேனலின் ஓனர். அப்போது எந்த நாட்டிலிருந்து என்று தெரியவில்லை எங்கிருந்தாலும் விரட்டி கழுத்தைப் பிடிப்பார்.
அள்ளி அள்ளி சம்பளத்தைக் கொடுத்துவிட்டு அனுபவிக்க நேரம் தராத குரூரம்; சேனலில் ஆரம்பித்த அவரது வாழ்வு இன்று உலகம் முழுக்க பல்தொழில்களில் பறக்கிறது! சிறக்கிறது. ஆக்கவும் அதைவிட அதிகமாய் அழிக்கவும் அவர் தெம்பு பெற்றவர்! குடும்பம் அமெரிக்க கிரீன் கார்டில்!
“விக்னேஷ்! நேத்து ஆரம்பிச்ச சேனல்காரன் புகுந்துவிளையாடறான். நீங்கள்லாம் என்ன பண்றீங்க? உலகத் தமிழர்களை உசுப்பற மாதிரி ஏதாவது…’
“யோசிக்கணும் சார்..’
“செய்றீங்க – அதுவும் அதிரடியாய் – நிலநடுக்கமாய்.. இன்னும் ரெண்டு நாளில்! அவனவன் தீபாவளி பட்டாசு வெடிப்பான். நாம அதுக்கு நாலு நாள் முன்னாடியே வெச்சிரணும்! அது சரவெடியா இருக்கணும்!’
“டன் சார்!’
“என்ன செய்யப்போறீங்கன்னு இன்னும் நாலு மணி நேரத்துல எனக்கு தெரிஞ்சாகணும்! கீப் கான்ஃபிடன்ஸியல்!’
“ஓகே சார்.’
“நம்மாளுங்களுக்கு முடிலேன்னா – சொல்லு! ஏஜென்ஸிகாரனை அனுப்பறேன் – காதும் காதும் – கண்ணும் கண்ணும் வச்சமாதிரி அவன் செய்வான்! சுஷ்மா எதிரேதானே இருக்கா… சுஷ்..’
அவள் வியர்த்து “ஹாய் சார்!’ என்று படபடக்க, “உன் பனியன் சூப்பர்! அதை வேலையிலும் காட்டு. பை!’
விக்னேஷ் குறுந்தாடியை வருடி; தலையை சிலிர்த்து, “சுஷ்… என் பண்ணலாம் சொல்லு! ஏதாச்சும் யோசிச்சியா…?’
“இல்லே சார்… பசிக்குது. அம்மா டிபன் கொடுத்தாங்க. ஷேர் பண்ணுங்க முதல்ல!’
இரண்டு இட்லி உள்ளே போய் மெஷினில் காபி பிடித்து ரூசித்ததும் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.
“சார்… ஏதாவது சாமியாரை களவாடுவோமா…?’
“யார் இருக்கா. பாக்கி…?’
“இல்லாட்டி என்ன போலி சாமியாரை உருவாக்குவோம். பொண்ணுங்களை அனுப்பி படம் பிடிச்சு.. அவங்களுக்கு பணம் கொடுத்து இலவச பப்ளிசிட்டி!’
“அதெல்லாம் தான் ஜனங்களுக்கு பழகிப்போச்சே! இதிலே பரபரப்புக்கு என்ன இருக்கு? புதுசா யோசி…!’
“பேசாம சினிமா – ஹீரோ – ஹீரோயினிடம் விலை பேசி… செட் அப் படம் எடுத்து… ரெண்டு நாளைக்கு மாத்தி மாத்தி அவங்களைப் பத்தி காரசார அறிக்கை விட வச்சா ஜனங்க ரசிப்பாங்க. பேசுவாங்க. அப்புறம் வேறு நியூஸ் வந்ததும் இதை மறந்துடப் போறாங்க!’
விக்னேஷ் பொறுமையிழந்து சேனங்களை இங்குமங்கும் திருப்பிக் கொண்டிருந்தான். திருவிழா! பஜாரில் வெடிகுண்டு! கப்பல் எரிந்து நாசம்! விமானம் கடத்தல்..! சிரியாவில் ஆயிரம் பேர் சுட்டுக்கொலை! எகிப்தில் போராட்டக்காரர்கள் மேல் திராவக வீச்சு! ஈராக்கில் கார் வெடி குண்டு! ஜப்பானில் நிலநடுக்கம்! அமெரிக்க எரிமலை! வெற்றிகரமாய் ராக்கெட் ஏவப்பட்டது!
உள்ளூர் சேனலை திருப்பினால் ரஜினி! விஜய்! அஜித்! அமீர்கான்! ஏழுலட்சம் கோடி ஊழல்! எங்களுக்கும் தனி மாநிலம் வேணும்! அஸ்ஸாமில் வெள்ளம்! தீபாவளி ரிலீஸ் படங்கள்!
காலை ஆறு முதல் மறுநாள் காலை ஆறுரை தீபாவளியை முன்னிட்டு சினிமா…! சினிமா நிகழ்ச்சிகளை வழங்குவோம்! ஒவ்வொரு சேனலிலும் ஆஸ்தான பட்டிமன்றங்கள்! சினிமா நட்சத்திரங்களின் அலப்பரைகள்!
என்ன செய்யலாம்?
ஃபோன் வந்தது.
எதிர்பார்த்தது போலவே சேர்மன்! பயபக்தியோடும் நடுக்கத்தோடும் எடுக்க, “விக்னேஷ்! இடைத்தரகன் ஒருத்தன் மாட்டினான். இன்னும் ஒரு மணி நேரத்துல உன்னை வந்து பார்ப்பான். அவன் கேட்கிற பணத்தை செட்டில் பண்ணி.. நாளை மாலையிலிருந்தே ஃப்ளாஷ் நியூஸ் ஓட விட்டிரு!’
“என்னன்னு சார்..?’
“அதான்ப்பா.. நம்மகிட்டே வாலாட்டினானே… மானநஷ்டவழக்குப் போட்டு ஜெயிச்சானே அந்த மந்திரியோட மகனாம் – வெளிநாட்டுல கொட்டமாம்! அவன் கையில ஆதாரம் இருக்காம். நாளை மாலை காசட் வரும். அது உண்மையான்னு மட்டும் செக் பண்ணிகிட்டு செட்டில் பண்ணிரு!’
“ஓகே சார், எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.’
அந்த வெளிநாட்டுக்காரனுடன் மீட்டிங்! கேசட் பரிமாற்றம்! கேசட்டை பரிசோதிக்க அனுப்பி – அது ஒரிஜினல் என உறுதியானதும் –
“அமர்க்களம்! ஒரு பிரபலத்தின் வாரிசு வெளிநாட்டில் அட்டகாசம்! உல்லாசம்… இன்று இரவு பத்து மணிக்கு…’ என பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அவர்களது அனைத்த சேனல்களிலும் ரசிகர்களை உசுப்பேற்றி.. ஒளிபரப்பாயிற்று..
– பரபரப்புக்காக, பணத்திற்காக பேராசைக்காக, பழிவாங்குவதற்காக, பாடம் புகட்டுவதற்காக, பேரத்திற்காக, பிளாக்மெயிலுக்காக, ஓட்டுக்காக, ஓட்டுவதற்காக, வெட்டுவதற்காக, மிரட்டி -உருட்டி பொய்யை மெய்யாகக் காட்டி காட்டி சம்பந்தப்பட்டவர்களை காலி பண்ணி – சின்னச் சின்ன சாதி மத சண்டைகளை கலவரமாக உருவாக்கி, பிசினஸ், அரசியல் சாம்ராஜ்யங்களைத் தகர்த்து, பலரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டிருந்த அந்த சேனலில் –
அப்போது மிக பிரம்மாண்டமாக வெளியான அந்த உல்லாசக் காட்சியில் குறிப்பிட்ட மந்திரியின் மகனுடன் சேர்ந்து கொட்டமடித்திருந்தது – வெளிநாட்டில் படித்துவந்த அந்த சேனல் சேர்மனின் மகள் என்பது படம் பிடித்தவர்களுக்கோ ஒளிபரப்பினவர்களுக்கோ அப்போது தெரியாது!
– என்.சி. மோகன்தாஸ்
source:::::Kumudam Tamil Weekly
நடராஜன்
கந்த சஷ்டி தோன்றிய கதை !!!

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)
அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.
காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.
அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.
தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.
முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.
கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.
source:::::dinamalar..tamil daily
natarajan
Moon and Venus in the Sky on Nov 6….
Some wonderful images of last night’s moon and Venus, as seen from around the world.

Early in the day of November 6, 2013, Jv Noriega in Manila captured this beautiful image of Venus and the moon. Note the moon’s location below Venus. As the day passes, the moon will move up past Venus. Why? Because the moon is moving in orbit around Earth.

Moon and Venus on November 6, 2013 as captured by Kat Baker in northern Italy.

Interesting view of last night’s moon and Venus – November 6, 2013 – over the Ligurian Sea, Sestri Levante, in Genoa, Italy. Photo by Maranatha.

Another cool photo from Italy of the moon and Venus on November 6 next to the Tower of Pisa. Photo by Giuseppe M.R. Petricca.

Moon and Venus on November 6 as captured in Silverthorne, Colorado by Daniel McVey.

By the time we posted the November 6 photos, it was already the evening of November 7 in Asia. As you can see, the moon is now moving higher in the sky, away from Venus. Photo from Guwan Elder Panbil at Villa Batam in Batam, Indonesia.
source::::Deborah Bird in earthskynews site
natarajan
Cartoon of the Day !!!

source::::glasbergen.com
natarajan





