Message For The Day….Develop Divine Love and Truth ….

You are all the indestructible Divine Self, Believe Me! Nothing need discourage you. In dreams you suffer so much – loss of money, fire, food, insult, etc., but you are not affected at all. When these things happen during the waking stage, you feel afflicted. It is not the real you that suffers all that. Give up the delusion that you are this physical entity and you become really free. Develop Truth and Love. Everything will be added to you, unasked. Man and God (Nara and Narayana) are the two wires – the positive and the negative, that combine to bring electricity through. Man (Nara) will become the instrument of God (Narayana), if you have acquired the two qualities, Divine Love and Truth.
– Divine Discourse, July 25, 1958

 

Sathya Sai Baba

“ஞான சூர்யனக்கு முன் சந்தேகப் பனி நிற்க முடியுமா ” !!!

எனக்கு விபரம் தெரிந்த நாள்களிலிருந்து ஒரு சந்தேகம் இருந்து வந்தது. வாழ்க்கையில் நாம் எத்தனையோ பாவ-புண்ணியச் செயல்களைச் செய்கிறோம். உடலை உகுத்தபின் மேலுலகம் சென்று பாவ-புண்ணியத்துக்கேற்ப சொர்க்கம் – நரகம் முதலியவற்றில் இன்ப-துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். பிறகு, (வீடு பேறு அடையாத வரையில்) அடுத்த பிறவியில், முன் பிறவிகளில் செய்த பாவ – புண்ணிய மூட்டைகளுடன் பிறக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.அப்படிப் பார்த்தால், ஒரே காரியத்துக்காக இரண்டு தடவை தண்டனை அல்லது பரிசு பெறுகிறோம் என்றாகிறது.

இப்போது நடைமுறையிலிருக்கும் நமது சட்டங்களிலேயே கூட, ‘ஒருவன், ஒரு குற்றத்துக்காக இரண்டு தடவை தண்டனை அனுபவிக்கக்கூடாது’ என்ற நியாயமான விதி இருக்கும்போது, நம்முடைய முன்னோர்கள், இப்படி (மேலே நரகவாசம், கீழே இழிபிறப்பு என்று) இரண்டு தடவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று எழுதி வைத்திருப்பார்களா? (புண்ணிய பலனும் இரண்டு தடவைதான் – மேலே சொர்க்கம்; கீழே மறுபிறவியில் செழுமையான பரம்பரையில் பிறப்பு.) இது பொருத்தமாக இல்லை என்று எனக்குச் சந்தேகம்.

பல பண்டிதர்களைக் கேட்டேன். ஏதோ சமாதானம் சொன்னார்கள். என் மனம் ஏற்கவில்லை.

ஒருநாள், பெரியவாள் அருளுரையின் போது கூறினார்கள் :

“தண்ணீரின் தன்மை நமக்கெல்லாம் தெரியும். அதை அடுப்பில் வைத்து சூடு படுத்தினால் வெந்நீர் ஆகிறது. ஆனால், அதன் திரவத்தன்மை மறைந்து விடுவதில்லை. அதேபோல், ரெப்ரிஜரேட்டரில் கொஞ்ச நேரம் வைத்தால், ஜில்லென்று ஆகிறது. அப்படியும் அதன் திரவத்தன்மை போவதில்லை.
ஆனால், வெப்பம் அதிகமாக அதிகமாக, நீர், ஆவியாகப் போய்விடுகிறது, குளிர்ச்சி, ஓர் அளவுக்கு மேல் சென்றதும், தண்ணீர் ஐஸ்கட்டியாகிவிடுகிறது.

அதுபோல்தான் நாம் செய்யும் பாவமும் புண்ணியமும்! இவை இரண்டும், கட்டுப் பாடான ஓர் அளவில் இருக்கும்போது, நம்முடைய அடுத்த பிறவிக்கு வந்து சேர்கின்றன. அதை நாம் அனுபவிக்கிறோம்.. சுக-துக்கம் என்பதாக.ஆனால் அவை இரண்டும் – உஷ்ணமும் குளிர்ச்சியும் – ஓர் அளவைத் தாண்டியதும், அதிகமாக இருக்கும் பகுதியை, மேலே சொர்க்கம் – நரகம் என்று அனுபவித்துவிட்டு, மீதி மூட்டையுடன் பூமிக்கு வந்து அனுபவிக்கிறோம்.

மோட்சத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிற்கும், சொர்க்கவாசம், நரகவாசம் – கால எல்லை உண்டு. ‘க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி.’ செய்த புண்ணியத்தை மேல் உலகங்களில் சௌக்கியமாக அனுபவித்துத் தீர்த்துவிட்டால், மறுபடியும் இங்கே வரவேண்டியதுதான். நரகவாசமும் அப்படித்தான். பாவச்சுமை குறைந்துவிட்டால், அங்கிருந்து வெளியே வரலாம். இங்கே வந்து, ஓர் அளவுக்குள் இருக்கும் மீதிப்பாவத்தை, எவ்வெப்படியோ பிறந்து, கஷ்டஜீவனம் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால்தான், தர்ம கார்யங்களையே செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேணும் என்று சாஸ்திரக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள்…”

ஞான சூரியனுக்கு முன், சந்தேகப் பனி எப்படி நிற்க முடியும்?

பெரியவாளுடைய இந்தச் சொற்பொழிவை நான் தற்செயலாகத்தான் கேட்க நேரிட்டது! அது யார் செய்த புண்ணியமோ!!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ்.சீதாராமன், சென்னை – 28.

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4453/doubt-clarified-maha-periyavaas-lecture/#ixzz2V9Z0kJS0

 

“எங்கேயும் போகலே பாட்டி …இங்கேதான் இருக்கேன் “

இடம்: ரிஷிவந்தியம் என்ற பெயரில் தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் தஞ்சை மாவட்ட ரிஷிவந்தியம். அக்கிராம எல்லையில் தனித்து உள்ள ஒரு பழைய வீடு.
காலம்:1930-களீல் ஒரு வைகறை வேளைக்குச் சிறிது முன்னர்.

“எங்கே அவன்? எங்கே அவன்?” என்று வாய் விட்டுக் கோபமாகச் சொல்லிக்கொண்டு ஓர் அந்தண விதவையம்மாள் தனக்கு இடது பக்கம் கண் தெரிந்த வரையில் பார்வையைச் செலுத்துகிறாள்.{வலப் பக்கத்தில் கிராமம் முடிந்து விடுகிறது).

உள்ளே சென்றவள் மறுபடி வெளியே வந்து சாணி தெளிக்கிறாள். கோமய ஜலம் நிலத்தில் தொப்புத் தொப்பு என்று விழும் ஓசையையும் மீறிக்கொண்டு, பாட்டியம்மை தனக்குத் தானே பொரிந்து தள்ளீக் கொள்ளும் கோபச் சொற்கள் தொப்புத் தொப்பென்று விழுகின்றன.

“கட்டேல போறவன்! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்? கெழவி, வாசக்கதவைத் தெறந்து வச்சவ, ஏதோ சித்த்க் கண்ணசந்துட்டேன்னா, நாலு தரம் கையைத் தட்டிக் கூப்பிட்டு எழுப்ப மாட்டான்? என்ன திமிரு? அவனே சர்வ சுதந்திரமா ஆத்துக்குள்ள வந்து அடுக்களை வாசப்படி கிட்ட பாத்திரத்துல பாலை விட்டுட்டுப் போயிருக்கானே! கட்டேல போக! எங்கோயோ போய்ட்டானே அதுக்குள்ளே!”

“எங்கேயும் போகலே பாட்டி! இங்கேதான் இருக்கான்” என்று சொல்லிக் கொண்டே அப்போது பாட்டியம்மாளின் முன் போய் நின்றது——ஸாக்ஷாத் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்!

பாட்டியம்மை ஆடிப் போய்விட்டாள் ஆடி! அவளுக்குக் கையும் வரவில்லை, காலும் வரவில்லை, வாயும் வரவில்லை. வாயடைத்து நின்றாள். “ பெரியவாளா? நிஜமாகவே பெரியவாள்தானா? விடிய விடியத் தன் பொத்தல் குடிசை வாசலிலா? அதோடு என்ன விபரீதம்?’ க’—போனவனாகத் தம்மையே சொல்லிக்கொள்கிறார்! மூளை கெட்ட பாவி, மஹா அபசாரமா ஏதோ பண்ணீப்பிட்டேனா என்ன?”
பதைபதைத்தப் பாட்டிக்கு அபயம் தரும்போதே ஸ்ரீசரணரின் திவ்ய நேத்ரங்களில் ஒரு குறும்புக் குறுகுறுப்பு! ஹிதமாகச் சொல்வார்,: “ பயப்படாதே பாட்டீ ! பால்காரன் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தான் பார்த்தான்! நீ நன்னாத் தூங்கிப்பிட்டே! எழுந்தே வரல்லை ஒனக்காக ஒன் மாதிரி வேஷம் போட்டுக்கிண்டு நான்தான் பாலை வாங்கி உள்ளே வெச்சேன்! அவன் ஒண்ணும் தப்புப் பண்ணல்லை. நான்தான் திருட்டுத்தனம் பண்ணீயிருக்கேன்!”

நடந்தது இதுதான். கிராமம் கிராமமாக ஸ்ஞ்சரித்து வந்த பெரியவாள் முதல் நாள் இரவில் மேனாவில் ரிஷிவந்தியம் பக்கம் வந்திருக்கிறார். பல்லக்குத் தூக்கும் போயிக்கள் நெடுநேரம் சுமந்து வந்து விட்டதால், இரவு இரண்டாம் ஜாமமாயிருக்கலாம். அப்போது அவர்களைக் கிராம வெளீ எல்லையிலேயே ஓரமாக ஒரு மரத்தடியில் ‘ஸவாரி” கட்டச் சொல்லி விட்டு (அதாவது மேனாவை இறக்கி வைக்கச் சொல்லிவிட்டு) உறங்கப்போகுமாறு ஸ்ரீசரணர் பணித்தார். தாமும் வழக்கம் போலவே மேனாவுக்குள் முடங்கிக் கொண்டார். பாட்டியம்மாளின் வீட்டுக்கு வலப் புறத்தில் அம் மரத்தடி இருந்தது.

விடிவதற்கு முஹூர்த்த காலம் முன்பு பாட்டியம்மை வாசற்கதவின் பழைய தாழ்ப்பாளைத் திறக்கும் சப்தம் “கிறீச், கிறீச்” கேட்டது. இரவு மூன்று—முன்றரைக்கே துயிலெழுந்து விடும் பெரியவாள்தான் அதை மேனாவிலிருந்தே கேட்டுக்கொண்டது. அம்மையார் வாசலில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் பால்காரன் வராததால், தனக்குத் தானே பேசிக்கொள்ளூம் சுபாவப்படி அவனுக்கு அஷ்டோத்தர சத அர்ச்சனை பாடி விட்டு உள்ளே போனாள். அடுத்து வாசற்கதவின் ‘கிரீச்’ எழாததை, அதாவது, பாட்டியம்மை கதவைச் சாத்தவில்லை என்பதைக் கவனம் கொண்டார், எந்தச் சிறிய விஷயத்தையும் கவனிக்கத் தவறாத மேனா மேலவர். வீட்டின் பின்புறத்திலிருந்து, நிலத்தோடு பதிந்து விட்ட உளுத்த கதவைத் திறப்பதன் ‘ மதுர ஸ்வர’ங்களை அடுத்தாற்போல் ஸுப்ரபாத கீதமாக அம் மேலவர் கேட்டுக் கொண்டார். பாட்டியம்மை கொல்லைப்புறம் செல்வதைப் புரிந்து கொண்டார். சில நிமிஷங்கள் ஆகியும் ஸுப்ரபாதம் ‘ரிபீட்’ ஆகாததால் அந்தக் கதவையும் சத்தாமலே பாட்டியம்மாள் வீட்டுக்குள் திரும்பியிருக்கிறாள் என்பதையும் கவனம் கொண்டார்.

பின்னரே பால்காரர் வந்தார், பன்முறை குரல் கொடுத்துப் பார்த்தார்.

‘ பாவம், பாட்டி தூங்கிப் போய் விட்டாள்’ என்று ஸ்ரீசரணர் புரிந்து கொண்டார்.நெஞ்சில் அருள் அரும்பியது. அதில் குறும்பும் கலந்து குதூஹலிக்க எண்ணீனார். அவருடைய சூழ்ச்சித் திட்டத்திற்கு வசதியாக மேனா மூலையில் வெள்ளைச் சால்வை ஒன்றிருந்தது. அதை எடுத்துத் தலையோடு கால் நன்றாக முக்காடிட்டுப் போர்த்திக்கொண்டு மேனாவிலிருந்து வெளீ வந்தார். சற்றுத் தொலைவில் போயிக்கள் நித்ரா தேவியின் அணைப்பிலிருந்து வெளீவராது கிடந்ததும் அவருக்கு வசதியாயிற்று. இருள் மூட்டம் விலகாத அவ் வேளையில் அடி மேல் அடி வைத்துப் பாட்டியம்மை வீட்டுப் புறக்கடை வந்து, குட்டிச் சுவர் ஏறிக் குதித்து—ஆம், திருட்டு ஸம்ஸ்காரத்தில் மிச்சம் மீதி வைக்காமல்தான்—உள்ளே தோட்டப்புறத்தில் இறங்கி, திறந்தே இருந்த சுப்ரபாதக் கதவைத் தாண்டி வீட்டினுள்ளேயே பாதம் பதித்தார்.பின்புற ரேழி வழியாக முற்றத்தண்டை வந்தார். பக்கத்தில் அடுக்களை வாசலில் காலிப் பால் பாத்திரமிருந்தது. அதை எடுத்துக்கொண்டு, கூடத்து மூலையில் இரண்டாம் தூக்கம் போட்டுக் கொண்டிருந்த பாட்டியம்மாளை ‘கப்சிப்’ என்று கடந்து, வஸ்திரத்தை மீண்டும் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு வெளி வாசலுக்கு வந்தார். பால் பாத்திரத்தைத் திண்ணையில் வைத்தார்.

பாட்டாளிப் பால்காரருக்கு பால் வாங்குபவரை ஏறிட்டுப் பார்க்க எங்கே நேரமிருந்தது? அந்த இருள் மூட்டத்தில் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஒரு ஏழைப் பாட்டியம்மையாக வேஷமிடுவார் என்று அவர் சொப்பனத்திலேனும் எண்ணீயிருப்பாரா என்ன? கொண்டு வந்திருந்த கைப் பாலைப் பாத்திரத்தில் ஒரே கவிழாக கவிழ்த்து விட்டு நடையைக் கட்டினார்.

போலிப் பாட்டியம்மை அடுக்களை வாசலில் பாலை வைத்து விட்டு மீண்டும் மேனாவுக்கு ஏகி, தமது நகைச்சுவை நாடகத்திற்குப் பாட்டியம்மாள் எப்படி அடுத்த காட்சி அமைக்கப்போகிறாள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். அக்காட்சிதான் பார்த்து விட்டோமே!

கண்ணன் பாலைத் திருடி விட்டுத் திட்டு வாங்கினான். இவரோ, திருட்டுத்தனமாகப் பாலை வாங்கி வைத்துப் பாட்டியம்மைக்குச் சேவை செய்து விட்டு, அந்தக் கண்ணன் கூட வாங்காத ‘க—போகிற’ திட்டை வாங்கிக் கட்டிக் கொண்டு தானே திட்டுக்கு உரிமையாளன் என்று திட்டியவளிடமும் தெரிவித்துக் கொள்கிறார்!

விஷயமறிந்த பாட்டியம்மை விலவிலத்து விட்டாள். எப்பேற்பட்ட ராஜோபசார தேவோபசாரத்துடன் வரவேற்கப்பட வேண்டியவர், எளியவராகத் தன் வீடு முழுவதும் பாதம் பதித்து ,ஐயோ இந்த அவலப் பிண்டத்திற்காக பால் வாங்கி வைத்துப் போயிருக்கிறார்? அந்த தெய்வத்தை என்ன வார்த்தை சொல்லிவிட்டோம்?

மன்னிப்புக் கேட்கக்கூட வராமல் உளறிக் கொட்டி, கண்ணீரைக் கொட்டிக்கொண்டு நிற்கும் பாட்டியிடம் ப்ர்ஸன்ன முகராக ஸ்ரீசரணர்,” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப்பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக் கட்டையிலே தானே போகிறேன்?” என்றார். அவளுடைய வசவுக்கும் மெய்ம்மை கூட்டி, பாஷ்யம் செய்தார், வைதாரையும் வாழவைக்கும் வள்ளற்பிரான்.

source:::periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4476/#ixzz2V9VE9zyd

Just For Laugh !!!!…” I Told You Ealier ” !!!!

John and Jessica were on their way home from the bar one night and John got pulled over by the police. The officer told John that he was stopped because his tail light was burned out.

John said, “I’m very sorry officer, I didn’t realize it was out, I’ll get it fixed right away.”

Just then Jessica said, “I knew this would happen when I told you two days ago to get that light fixed.”

So the officer asked for John’s license and after looking at it said, “Sir your license has expired.”

And again John apologized and mentioned that he didn’t realize that it had expired and would take care of it first thing in the morning.

Jessica said, “I told you a week ago that the state sent you a letter telling you that your license had expired.”

Well by this time, John is a bit upset with his wife contradicting him in front of the officer, and he said in a rather loud voice, “Jessica, shut your mouth!!”

The officer then leaned over toward Jessica and asked. “Does your husband always talk to you like that?”

“Not always,” answers Jessica, “only when he’s drunk.”

 

source::::babamailnet

Natarajan

Ground Realities of Today !!!!

Big House ………………………………..Small Family!!!

More Degrees……………………………….Less common sense!!!

Advanced Medicine…………………………..Poor Health!!!

Landed in Moon & Mars………………………. Neighbors unknown!!!

High Income………………………………..Less Or No peace of mind!!!

High IQ……………………………………Less Emotions!!!

Good Knowledge …………………………….Less wisdom!!!

Lot Of friends in Facebook…………………..Not a single close friend !!!

More Alchohol&Bottled drinks …………………No Water!!!

More Population……………………………..No Humanity !!!

Costly Watches……………………………..No Time!!!

Lots of Apps. on Smartphone………………… No application of mind!!!

More AND More Gadgets For Communication……….Lot of communication gap in Family!!!

Natarajan

Message For The Day….An Example of Devotion ….

While in the forest, Rama was once reclining with His head on the lap of Sugriva and the monkey leaders were around Him. The moon was shining overhead in full glory, but there was the tell-tale spot which marred the fullness of the effulgence. Rama asked each one of them what the spot indicated. Each one gave a different explanation. The reflection of the sea, one said, a deep pit, said another; a mountain range said a third. It was Hanuman’s turn – He said, “It is Your reflection I see on the moon, Your colour, nothing else!” That was a simple example of his devotion. Everywhere, every time, in every person, he only saw Lord Rama. One must dedicate all tasks as offerings to the Lord. Never deviate from that attitude. Hanuman was such a devotee; Rama was the very life-breath for him.

 Sathya Sai Baba

Incredible Color Footage of New York city in 1939!!!!

 

t’s hard to picture New York City in the 1930s: Nearly all of the images we’ve seen from that era are in black and white.

But amateur footage shot by a tourist visiting New York in 1939 recently emerged and is making the rounds on the web.

Shot by French visitor Jean Vivier in the summer of that year, the footage shows neighborhoods from Harlem to Chinatown.

Enjoy!

source::::business insider.com

Natarajan

Read more: http://www.businessinsider.com/color-footage-of-new-york-city-in-1939-2013-5#ixzz2V3noiwMN

Breathtaking Cockpit Photo Of A Marine’s F-18 Firing A Live Missile!!!!!

missile

 

The  above image is going viral on social networks.

The reason is obvious: is an absolutely stunning photograph, just released by the U.S. Marine Corps, showing Capt. Christopher Prout with Marine Fighter Attack Squadron (VMFA) 232, Marine Aircraft Group 11, 3rd Marine Aircraft Wing as he shoots an AIM-7 Sparrow missile from an F/A-18C Hornet near Tyndall Air Force Base, Florida, on May 16, 2013.

VMFA-232 moved to Tyndall for a deployment for training (DFT) used to prepare the squadron for future combat and contingency operations.

source:::::businessinsider.com

Natarajan

Read more: http://www.businessinsider.com/breathtaking-cockpit-photo-taken-as-marines-f-18-fires-a-live-missile-2013-6#ixzz2V3j1yfPC