சுவை தேடி: கும்பகோணம் டிகிரி காபி !!!

 

 

குடகு மலையில் தோன்றித் தஞ்சைக்கு ஓடிவந்த காவிரி கூடவே காபி மீதான காதலையும் கொண்டுவந்து சேர்த்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. தஞ்சை நகரின் எந்தவொரு ஹோட்டலிலும் காபியின் சுவைக்குக் குறைந்தபட்ச உத்திரவாதம் உண்டு. வீட்டுக்கு வந்த விருந்தினரை வரவேற்று உபசரிக்கையில் காபியா, டீயா என்று கேட்பது வழக்கமில்லை. காபி ஸ்ட்ராங்கா வேணுமா லைட்டா வேணுமா என்பதுதான் பொதுவான கேள்வியாக இருக்கும். பால் இல்லாத வேளைகளில் வரக் காப்பியைத் (பால் கலக்காத காபி) துணையாகக் கொள்வதும் உண்டு.

காபி பொடியைப் பொறுத்தவரை கம்பெனி தயாரிப்புகளைவிடவும் தேவையான அளவுகளில் சிக்கரி கலந்து அரைத்துக்கொடுக்கும் உள்ளூர்க் கடைகளுக்கே முன்னுரிமை. சுருக்கமாகச் சொன்னால், தஞ்சைப் பகுதியே ஆனந்தக் கசப்புக்கு அடிமையான பிரதேசம். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும்கூட காபிக்கென்று புகழ்பெற்ற உணவகங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தஞ்சாவூருக்கும் காபிக்கும்தான் அதிக நெருக்கம். மாவட்டம் முழுவதற்குமான காபி பெருமையைத் தற்போது கும்பகோணமே தட்டிப் பறித்துக்கொண்டு போய்விட்டது. கோயில் நகரம், அங்கு கூடுகின்ற சுற்றுலாப் பயணிகள் என்ற காரணங்களையெல்லாம் தாண்டி கும்பகோணத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது பஞ்சாபிகேச அய்யர் நடத்திய லெட்சுமி விலாஸ் என்ற காபிக் கடையால்தான். காபிக்குத் தேவைப்படும் பாலுக்காக அவர் பதினைந்து பசு மாடுகளைப் பராமரித்து வந்தார். அதனால் அந்தக் கடைக்குப் பசும்பால் காபிக்கடை என்ற பெயரும்கூட உண்டு.

முதல் தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் என்பதால் காபி அருந்துவது தமிழகக் கலை இலக்கிய ரசனையின் ஒரு பகுதியாகவும் ஆகிவிட்டது. தி. ஜானகிராமன் தனது கதாபாத்திரங்களை நுரைத்து மணத்த “கும்மாணம்” காபியை உள்ளம் குளிரக் குடிக்க வைத்து மனநிறைவை அடைந்திருக்கிறார். தஞ்சை ப்ரகாஷ் தனது வடிகால் வாரியம் என்ற கதையில் காபி போடும் செய்முறையை வாசகர்களுக்கு விளக்கி உதவியிருக்கிறார். கறந்த பசும்பாலில் தண்ணீர் கலக்காமல் ஆடை படராமல் தயாரிக்கிற காபிக்குத்தான் டிகிரி காபி என்ற முதல் மரியாதை. பாலுக்கு இணையான முக்கியத்துவம் காபி டிக்காஷனைத் தயாரிப்பதற்கும் உண்டு.

நூறு கிராம் அளவுள்ள காபிக் கொட்டைகளைப் பதமான சூட்டில் வறுத்து அரைத்தெடுக்கையில் அது எண்பது கிராம் வர வேண்டும். அந்தக் காபிப்பொடியிலிருந்து டிக்காஷன் வடித்தெடுக்க இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். காபிப் பொடியிலிருந்து இரண்டாவது தடவை டிக்காஷன் வடிக்கக் கூடாது. டிக்காஷனைப் பாய்லரில் வைத்து சூடு காக்க வேண்டும். காபி கலக்கும்போது முதலில் சர்க்கரையை இட்டு அதன்மீது டிக்காஷனை ஊற்றி அதற்கும் மேலாகத் தேவையான அளவில் பாலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். எங்கேயும் எப்போதும் பாக்கெட் பால் என்றாகிவிட்ட பிறகு டிகிரி காபி என்று பெயர் சொல்வதில் இப்போது எந்தப் பொருத்தமும் இல்லை.

கடையில் பாய்லரும் பித்தளை டவராக்களும் இருந்தால் மட்டும் டிகிரி காபி ஆகிவிடாது. ஆனாலும் தேசிய நெடுஞ்சாலையின் வழியெல்லாம் கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயர்ப் பலகைகளைப் பார்க்காமல் பயணிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

source:::: The Hindu….Tamil

natarajan

 

 

How Krishnans Brought Wimbledon Home …!!!

 

 

Ramanathan Krishnan and Lalitha Krishnan at their natural grass court patterned on those at Wimbledon. Photo : R Ravindran.

 

 

The English championship is two months away and fans are making plans to be there. But the first family of Indian tennis has other ideas

No sprightly girls and boys to chase the yellow balls. No linesmen to yell out calls. No electronic board to flash the scores. But superlative matches are played every day at this grass court, where tall trees fill in for spectators.

These ‘matches’ defy the humdrum order of time, space and sequence. One moment, an iceberg-cool Borg and a fiery McEnroe are locked in a nail-biting tie-breaker. In the next, Ashe gets the better of Connors with a clever mix of slice and spin. Then come Nadal and Federer fighting a war of attrition, which is followed by an emotion-soaked final where a kind Duchess of Kent offers her shoulder to a teary-eyed Jana Novotna, disconsolate after her loss to Steffi Graf.

Welcome to the private grass court at Oliver Road in Mylapore, maintained by Indian tennis’ first family, the Krishnans, as a tribute to Wimbledon. For the Krishnans, this natural grass court, which borrows features from the hallowed courts of Wimbledon, serves as a mind screen to replay and relive the timeless matches from the prestigious English championship. (Also significant is that this court is one of the very few natural grass courts in the country.)

 “Wimbledon is dear to every member of our family. We have followed the championship closely for decades,” says Ramanathan Krishnan, 77 now.

 The Krishnans not only tracked Wimbledon, they also excelled in it — a fact that largely shaped their deep attachment to the championship and also the decision to design a natural grass court patterned on those at Wimbledon. Ramanathan Krishnan is a two-time semi-finalist (1960 and 1961) at Wimbledon and his son Ramesh Krishnan, the winner of the 1979 Wimbledon juniors title and a quarter-finalist in the men’s section in 1986.

 “It was our son Ramesh’s idea to design a Wimbledon-type grass court at our house on Oliver Road. Around four years ago, he came up with this plan and everyone was excited about it. Ramesh got all the necessary information from Wimbledon. My wife Lalitha assisted in executing the project. And when it was done, we knew we had brought Wimbledon home,” declares Ramanathan, who spends the evening hours with Lalitha at this private grass court, both of them merrily parked in broad, deliciously comfortable bamboo chairs.  “When Wimbledon is on, we bring out the television set and watch the matches sitting here,” says Lalitha, 70.

The Krishnans are going to a lot of trouble to make Wimbledon more immediate for themselves: they have put two men, A. Shanmugam and M. Manickam, on the job of maintaining the court. Natural grass court maintenance is costly and cumbersome, the reason we don’t have many of them around.

Notably, this grass court is not used regularly — for ‘real’ matches, that is. “Once in two months, Ramesh, who lives in R.A. Puram, brings some of his friends along for a game,” says Ramanathan.

Besides the love of Wimbledon, there are other sentiments that spur the desire to keep the court in shape and working order. Beneath the grass, lie clayey memories of long practice hours and family bonding. “This was a clay court for well over three decades, before it was turned into a grass court four years ago. We set up the clay court in 1975. It was a training ground for Ramesh,” says Ramanathan.

 “Father would train Ramesh from 10 a.m. to 5 p.m. at this court,” recalls Gowri Krishnan-Tirumurti, Ramanathan’s daughter, who also trained at the court and is the 1982 Indian national juniors champion.

In its clayey days, the court saw five south Indian champions play and practise the sport — T.K. Ramanathan, Ramanathan Krishnan, Ramesh Krishnan, Gowri Krishnan and Shankar Krishnan (a cousin of Ramesh and Gowri). “Just like my dad and brother, Shankar went on to play Davis Cup,” says Gowri.

This private tennis court may have created champions, but its charm lies in the sense of togetherness it has fostered among the Krishnans. “I remember when we would be practising, our mother would sit on the sidelines and peel oranges for us,” says Gowri.

The bonding has extended to the youngest generation. Ramanathan’s grandchildren — Gayathri, Nandita, Bhavani and Vishwajit — are in their twenties and studies have taken some of them away from home; yet, when they visit their grandparents, they love to sit around this clay-turned-grass court. Says Gowri, “Successive generations have learnt many things around this court. Discipline is one of them.”

 And, surely, also what it takes to be a winner.

Keywords: KrishnansWimbledon

 

source:::: The Hindu…

natarajan

 

” நாகேஷை நடிகராக்கிய நாடக நடிகர் ….” !!!

 

கிருஷ்ணா ராவ் – ருக்மணி அம்மாளின் ஒன்பது குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் நாகேஷ். அப்பாவின் சட்டைப் பையிலிருந்து பணம் திருடி, அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தார். ஆனால், சினிமா வில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் நடித்தபோதிலும் படிப்பில் முழுக் கவனம் செலுத்தி முதல் மாணவராக இருந்தார்.

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் படிக்கும்போது அம்மை நோய் தாக்கியதில் முகம் முழுக்கத் தழும்புகள் ஏற்பட்டதில் ரொம்பவே கலங்கிப்போய்விட்டார். உள்ளூரில் இருக்கப் பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறி ஐதராபாத்துக்குச் சென்று பல வித வேலைகளைச் செய்தார். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த அப்பாவின் ஆலோசனைப்படி ரயில்வே தேர்வு எழுதி சென்னை மண்டலத்தில் குமாஸ்தாவாகப் பணியில் சேர்ந்தார்.

மேற்கு மாம்பலத்தில் தங்கியிருந்த அவருக்குக் கவிஞர் வாலி (அப்போது வாலி அல்ல, ரங்கராஜன். சினிமாவுக்குப் பாட்டெழுதத் தீவிரமாக முயற்சி செய்துவந்தார்), ‘தங்கப் பதக்கம்’ ஸ்ரீகாந்த், பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான தாராபுரம் சுந்தர்ராஜன் ஆகியோர் நண்பர்களாக இருந்தார்கள். இவ்வளவு சினிமா வாசனை பக்கத்தில் அடித்துக்கொண்டிருந்தபோதும் நாகேஷின் மனம் சினிமாவை நாடவில்லை. அப்படி நாட வைத்தது ஒரு பிழை செய்த பேறு.

அவர் குடியிருந்த அறைக்குப் பக்கத்தில் இருந்த தேவி பாடசாலையில் நாடக கோஷ்டிகள் அடிக்கடி ஒத்திகை நடத்துவார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கு சென்று வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார் நாகேஷ். அப்படி ஒருநாள் போகும்போது ஒரு நடிகர் கம்ப ராமாயணத்தில் வரும் குகன் படலப் பாடலைத் தப்புத்தப்பாய்ப் பாடியிருக்கிறார். சின்ன வயது முதல் சிறு பிசகுமில்லாமல் மனப்பாடம் செய்துவைத்திருந்த கவிச்சக்ரவர்த்தி கம்பனின் பாடலை ஒரு நடிகன் கொடூரமாகக் கொலை செய்வதை அவரால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. திடகாத்திர மான அந்த நடிகரைத் திருத்த முயன்ற நாகேஷ், அவர் முன் போய் நின்றார்.

“சார்! தப்பா நெனைக்காதீங்க. இஷ்டப்பட்டு கம்பன் எழுதின பாட்டை நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு தப்புத்தப்பா பாடறீங்க. நான் வேணும்னா அந்த வரிகளை தெளிவா எழுதித் தரட்டுமா?’’ என்று நாகேஷ் கேட்டதும் ஆத்திரம் அடைந்துவிட்டார் அந்த நடிகர். “யாருய்யா கண்டவனை எல்லாம் உள்ளே விட்டது?’’ என்று கம்பெனி ஆட்களைப் பார்த்து சத்தம்போட்டுவிட்டு, நாகேஷை மிக நெருங்கி வந்து, “நடிப்புனா என்னன்னு தெரியுமா? ஒம்மூஞ்சிக்கெல்லாம் நடிப்பு வருமா? இப்போதைக்கு உன்னோட மொகத்துல மட்டும்தான் தழும்பு இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே இருந்தீன்னா ஒடம்பு முழுக்க தழும்பாயிடும்’’ என்று எச்சரித்ததைப் பார்த்து நாகேஷ் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தார் நாகேஷ். மறுநாள் அலுவலகத்தில், நாடகம் நடத்தும் மாராவிடம் வாய்ப்பு கேட்டார். முதலில் ஏளனமாகப் பார்த்து மறுத்தவர், நாகேஷின் தொடர் கெஞ்சலால் சம்மதித்தார். வயிற்று வலிக்காரன் வேடம்.

முதலில் மேடையில் தோன்றிய நாகேஷ், ‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தையை, வயிற்றைப் பிடித்தபடி பல மாடுலேஷன்களில் பேச, கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., வயிற்று வலிக்காரனாக நடித்தவரின் பெயரென்ன என்று கேட்டுத் தெரிந்துகொண்டு நாகேஷுக்குப் பரிசுக் கோப்பை வழங்கினார். பிறகு சினிமா அவரை அரவணைத்துக்கொண்டது. நகைச்சுவை வேடம், குணசித்திர வேடம் எனப் பல விதமான பாத்திரங்கள் ஏற்று நடித்த அவர், நாயகனாகவும் கலக்கினார். ‘அதிர்ஷ்டக்காரன்’ படத்தில் இளம் நாயகி படாபட் ஜெயலட்சுமிக்கும் முன்னணிக் கதாநாயகியாக இருந்த கே.ஆர். விஜயாவுக்கும் ஜோடியானார்.

எடுத்துக்கொண்ட வேடம் எதுவானாலும் அதில் பட்டையைக் கிளப்பிய அந்த மாபெரும் கலைஞன் திரையுலகில் நுழையக் காரணமாக அமைந்த அந்த நாடக நடிகருக்குத்தான் தமிழ் சினிமா நன்றி சொல்ல வேண்டும்.

source::::The Hindu….Tamil
natarajan

T.Nagar Chennai… India”s Biggest Shopping District !!!

  • This 6km  long  stretch has …..
Just like many of its shoppers,Theagaraya Nagar-reputed to be the biggest shopping district in India by revenue-could be heading for a much-needed makeover, giving national retailers a chance to set up shop alongside established regional players in this much sought-after area.

For long, this 6 km-long stretch has been the heart of shopping not only for Tamil Nadu, but also the whole of South India.

By some estimates, the shops in T Nagar-a majority of them selling textiles or gold jewelry-are together hitting revenues of nearly 20,000 crore every year. The official estimates put it much lower at over Rs 10,000 crore, but this is still double that of New Delhi’s Connaught Place, Linking Road in Mumbai and Bangalore’s Brigade Road which clock Rs 4,000-6,000 crore.

This has led to retailers flocking to this area, resulting in buildings with poor planning and facilities. The scene on the roads is worse; traffic jams are the norm and even on a lean day about 2 lakh pedestrians traverse the roads around Panagal Park, the central part of T Nagar.

“It’s the mecca of retail,” said India’s largest retailer Kishore Biyani of Future Group, which has over 17 million square feet of retail space in the country and more than two dozen brands. But it still hasn’t managed to open a single door at the main T Nagar junction. “We are working on a strategy for Chennai and you can’t ignore T Nagar. But getting space there has always been the only issue.”

It is to address such concerns that the city’s municipal corporation has tied up with real estate advisory firm Jones Lang LaSalle to work out a proposal to redevelop the area and make shopping there a more pleasant experience.

But at the same time they want to preserve what is good. “There are old shopping buildings that have become a heritage and we want to preserve that,” said A Shankar, local director of strategic consulting at Jones Lang LaSalle. Some of the suggestions to improve the area include creating a plaza for the hawkers and building skywalks connecting the nearest railway station and bus stand.

Other ideas are constructing multi-level parking lots and ‘pedestrianisation’ of the retail core area around Panagal Park, where about a million shoppers crowd during festivals and other busy periods.

It would be hard for a visitor today to T Nagar-named after one of the founders of the Justice Party, a precursor to other Dravidian parties-to believe that less than a hundred years ago it was all paddy fields. Nalli’s was the first showroom to appear in 1928 and soon other establishments followed.

“Nalli started as a baby here and now it has spread its roots to others parts of the country. This first store is what helped the firm grow to what it is today and venture into newer areas like jewellery,” Nalli Kuppuswamy Chetty said in a recent meeting with ET.

Though the five radial roads that lead to Panagal Park are wide, the pace of T Nagar’s growth took everyone, including the authorities, by surprise. Buildings mushroomed rapidly and the area soon became as popular for its congestion as for its wares.

source::::Economic Times

natarajan…Resident of T.NAGAR Chennai

“நாம் சரியாகத்தான் பேசுகிறோமா?”…..!!!

 

ஆம் ஆத்மி கட்சியில் துவங்கி, அம்மியில் சட்னி அரைப்பது வரை அனைத்துக்கும் கருத்துச் சொல்லும் திறமை பலருக்கு இருக்கிறது. நமது பரந்துபட்ட அனுபவங்களுடன் நம் கற்பனைத் திறனும் கை கோக்கும்போது உருவாகிற பேச்சாற்றலுக்கு எல்லையே இல்லை. இடம், பொருள், ஏவல் எல்லாம் பலரது பேச்சுக்கு அப்பாற்பட்டவையாகவே இருந்து வந்திருக்கின்றன. ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ என்று சொல்லிச் சென்ற பாரதிக்கு மரியாதை செய்யும் நிமித்த மாவது “பயனில சொல்” பலவற்றைப் பேசிக்கொண்டே இருக்க வேண்டாமா?

சரி, அந்தப் பேச்சுத்திறமையின் வீச்சைக் கொஞ்சம் பார்க்கலாமா? தன் கணவரின் அலுவலகத் தோழி குறித்து இயல்பாகச் சொல்லியிருப்பாள் ஒரு தோழி. அதை கேட்டுக்கொண்டு மட்டும் இருந்தால் என்னாவது? நாலைந்து முத்துக்களை உதிர்க்க வேண்டுமே. உடனே, ‘இப்படித்தான் நம்ம தேவியும் வெகுளியா சொன்னா. கடைசியில பார்த்தா அவ வீட்டுக்காரருக்கும் அந்தப் பொண்ணுக்கும் கல்யாணமே ஆகிடுச்சாம். ரெண்டு புள்ளைகளோட இப்ப நிராதரவா இருக்கா’ என்று பொக்ரான் அணுகுண்டை போகிற போக்கில் சிலர் வீசுவார்கள். என்னது… தோழியின் நிம்மதியா? அதைப் பற்றி நமக்கென்ன கவலை?

வினையாகும் விசாரிப்பு

நண்பர் ஒருவர் சர்க்கரையாலோ வேறு சில உடல் சிக்கல்களாலோ மெலிந்திருக்கலாம். வழியில் பார்ப்பவரை வம்படியாக நிறுத்திவைத்து, ‘என்னப்பா இப்படி துரும்பா இளைச்சுட்டே. நல்ல டாக்டரா பாருப்பா. பெரிய வியாதியெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கும்’ என்று சொல்லி அடுத்த நாளே அவருக்கு மருத்துவமனையில் அனுமதி வாங்கிக்கொடுத்து விடுகிறவர்களும் உண்டு. அவருக்கு ஏற்படும் மன உளைச்சல், பேச்சுடன் தரப்படும் இலவச இணைப்பு.

ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்த பிறகுகூட, அவரை அப்படியே விட்டுவிடலாமா? கையில் நாலு சாத்துக்குடியுடன் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு, ‘என்னதான் ஆபரேஷன் பண்ணாலும் ஆறு மாசம்தான் தாங்குமாம். எனக்குத் தெரிஞ்ச டாக்டர் சொன்னார்’ என்று அவருக்குத் தேதி குறித்துவிட்டு வருவதில்தான் சிலருக்கு என்னவொரு பேரானந்தம்.

அவதிப்படுத்தும் அனுபவப்பாடம்

கல்லூரிக்குச் செல்லும் மகளை வழியனுப்பிவிட்டு அப்போதுதான் உட்கார்ந்திருப்பார் அந்த அம்மா. அவரை சும்மா இருக்கவிடலாமா? உடனே பிரம்மாஸ்திரத்தை எய்துவிடுவோம். ‘இந்தக் காலத்துல ஆம்பளைப் பசங்களைக்கூட நம்பிடலாம். இந்தப் பொண்ணுங்களைதான் நம்ப முடியறது இல்லை. என் நாத்தனார் பொண்ணும் இப்படித்தான் ஊமைக் கத்தாழை மாதிரி இருப்பா. திடீர்னு போன வாரம் நான் ஒருத்தனைக் காதலிக்கறேன்னு வந்து நிக்கறா. என்ன பண்றது, நீங்களே சொல்லுங்க?’என்று திரியைக் கிள்ளி வைப்போம். மகள் வீட்டுக்கு வந்ததும் அது டைம்பாமாக வெடிக்கலாம்.

திருவாய் மலரும் தருணம்

சாதாரண நாட்களில்தான் என்றில்லை. குடும்பமே கூடியிருக்கும் மகிழ்ச்சியான தருணங்களிலும் பலரும் திருவாய் மலரத் தயங்குவதே இல்லை. குழந்தையைத் தொட்டிலில் போடுகிற நேரமாகப் பார்த்து, ‘ரெண்டாவதும் பொண்ணா போயிடுச்சே. பரவாயில்லை விடுங்க. கடைசி காலத்துல பொண்ணுங்கதான் நம்மளைக் காப்பாத்துவாங்க’ என்று வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவார்கள். குழந்தையின் தாய் முகத்தில் தோன்றும் வருத்தமும் வேதனையும் அவர்களை ஏன் பாதிக்கப் போகிறது?

உறவினர் வீட்டுத் திருமண விழாவில் முதல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு, ‘இன்னும் கொஞ்சம் தேடியிருந்தா நல்ல நிறமாவே பொண்ணு கிடைச்சிருக்கும். என்ன பண்றது? எல்லாம் காசு செய்யுற வேலை’என்று தங்கள் வயிற்றெரிச்சலுக்கு வடிகால் தேடிவிட்டு, பந்திக்கு முந்துவார்கள்.

இனிப்பும் கசப்பும்

வேலை கிடைத்த மகிழ்ச்சியைப் பகிர இனிப்புடன் வந்திருப்பான் ஒருவன். நம் அனுபவத்தை எல்லாம் அவன் தலையில் கொட்டுவதுதானே சிலரது சிறப்பியல்பு. ‘வெளுத்தது எல்லாம் பால்னு நினைச்சுடாதப்பா. அந்த சூப்பர்வைசர் ஒரு முசுடு. அந்த சிடுமூஞ்சி மேனேஜர்கிட்டே வேலை பார்க்கறதுக்கு நாலு கழுதையை வாங்கி மேய்க்கலாம். உன் பக்கத்து சீட் ஆள்கிட்டே ரொம்ப கவனமா இருக்கணும்’ என்று அலுவலகத்தில் அவன் யாருடனும் பேசாத அளவுக்குச் செய்துவிடுவதில்தான் எத்தனை மனநிறைவு.

இதோடு முடிந்ததா என்றால் இல்லை. உலகையே ஆளத் துடித்த அலெக்ஸாண்டர் மாதிரி சிலரது பேச்சுத் திறமையும் பரந்துபட்டது. தெரிந்தவர் புதிதாக எதையாவது வாங்கிவிட்டால் போதும். உடனே சிலர் ஸ்க்ரூ டிரைவரும் வாயுமாகக் கிளம்பிவிடுவார்கள். ‘இந்த மாடல் ரொம்பப் பழசாச்சே. திரும்பக் குடுத்தா காயலான் கடைக்காரன்கூட வாங்க மாட்டான். போனவாரம்தான் குறைஞ்ச விலைக்கு புது மாடல், என் மச்சானுக்கு வாங்கிக் கொடுத்தேன். உங்களை நல்லா ஏமாத்திட்டான் சார்’ என்று சொல்லிவிட்டால் போதும். அந்தப் பொருள் பழுதடைந்து, முடங்கும் வரை அவரை நிம்மதியில்லாமல் அலையவிடலாம்.

கருத்து சொல்லும் கலை

இவை மட்டும் இல்லை குழந்தைப் பிறப்பில் தொடங்கி, எரிமேடை வரை எதைப் பற்றியாவது கருத்து சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறோம். ஆனால் அவை நேர்மறையானவைதானா? நம் மனதின் ஏமாற்றங்களுக்கு மருந்து போடுவதாக நினைத்துக்கொண்டு அடுத்தவரை காயப்படுத்துகிறோம். அதை நாம் ஒருபோதும் யோசிப்பதே இல்லை. கருத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் இருக்கிறோம். காரணம் யோசிக்கவும் நேரமின்றி கருத்துச் சொல்லிக் களைத்துப் போகிறோம். அப்படிச் செய்வதன் மூலம் அடுத்தவரையும் கருத்துப் போராளியாக மாற்றி விடுகிறோம். நமக்குத் தெரிந்ததை அடுத்தவருக்குச் சொல்வதில் தவறேதும் இல்லை. ஆனால் எதை, எப்படி, யாரிடம் சொல்கிறோம் என்பதில்தான் நம் பேச்சின் பொருளே அடங்கியிருக்கிறது.

உற்சாகப்படுத்துவது நல்லது

இப்படி எல்லா இடங்களிலும் அடுத்தவரின் கவனத்தைக் கவரவோ, சிதைக்கவோ கருத்துச் சொல்கிற முனைப்பு ஏன் ஏற்படுகிறது? “அடுத்தவர் மத்தியில் தன்னை முன்னிறுத்திக் காட்டத் துடிக்கும் தன்முனைப்புதான் இதற்குக் காரணம்” என்கிறார் மனநல நிபுணர் அசோகன்.

“இப்படி மாற்றுக் கருத்துச் சொல்கிறவர்களில் இரண்டு வகை உண்டு. எதையுமே எதிர்மறையாகப் பார்க்கும் குணம் சிலருக்கு இயல்பிலேயே இருக்கலாம். மற்றொரு வகையினர் தங்கள் வாழ்வின் தோல்விகளின் வெளிப்பாடாக இப்படிப் பேசலாம். தங்களுக்குக் கிடைக்காத கல்வி, படிப்பு, வேலை, வெற்றி இவற்றை எல்லாம் அடுத்தவர் அடையும்போது, அதைப் பார்க்கச் சகிக்காமல் இப்படிப் பேசலாம். தான் மட்டும் தோற்கும்போது, இவர்கள் எப்படி வெற்றி பெறலாம், இவர்களும் தோற்கட்டுமே என்ற நினைப்பு அவர்களை அப்படிப் பேசத் தூண்டும். தோற்றுப்போன மனதின் வெளிப்பாடு என்று சொல்வதைவிட, வாழ்க்கையில் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.

இவர்கள், அடுத்தவரின் உரையாடலைத் தள்ளி நின்று கேட்டாலே, இதுபோல கருத்துக்கள் சொல்வதில் இருந்து விடுபடலாம். தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைச் சொல்வதன் மூலம் அடுத்தவர் பாதிக்கப்படுவார் என்று தெரிந்தால் அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஒரு எதிர்மறை வார்த்தைக்குப் பதிலாக ஆயிரம் நல்ல வார்த்தைகள் சொல்லி, அடுத்தவருக்கு உற்சாகமூட்டலாம். உறவுநிலைகளிலும், தொடர்புநிலைகளிலும் இணக்கத்துடன் இருந்தாலே போதும். கருத்துச் சொல்லும் மனநிலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்” என்று இந்த குணத்தைக் கையாளும் வழிமுறைகளைச் சொல்கிறார் அசோகன்.

எதைச் சொல்வதாக இருந்தாலும், கேட்பவர் இடத்தில் நம்மை ஒருமுறை நினைத்துப் பார்த்துவிட்டுத் தொடங்குவது உத்தமம். இடம், பொருள், ஏவல் என்னும் மந்திரத்தை மறந்துவிடக் கூடாது. அப்படியும் உணர்ச்சி வேகத்தில் பேசத் தொடங்கிவிட்டாலும் எதிர்மறைக் கருத்துக்களையாவது தவிர்க்கலாமே. நாலு பேருக்குக் கருத்து சொல்வது மட்டுமல்ல, சொல்லாமல் இருப்பதும் சிலசமயம் நல்லதுதான்.

Meet Sengai Podhuvan…”78 year old Poster Boy of Tamil Wikipedia ” !!!

As he lifts his left hand to type in front of his home PC, his fingers don’t keep pace with his mind.

Sengai Podhuvan, one of the oldest contributors of Tamil Wikipedia, has authored over 2,600 articles. His wife Sengai Selvi helps him with his work. Photo: Karthik Subramanian

Sengai Podhuvan, one of the oldest contributors of Tamil Wikipedia, has authored over 2,600 articles. His wife Sengai Selvi helps him with his work. Photo: Karthik Subramanian

 

“Look at that. The finger is trembling and refusing to listen to me,” Sengai Podhuvan, dressed in a blue T-shirt that sports logos of Tamil Wikipedia and a saffron dhoti, says. “Now I just have to wait for my hand to stabilise and type one letter at a time. It takes a while but I am used to it.”

The 78-year-old is an unlikely poster boy of the Tamil computing fraternity. Having authored over 2,600 articles in Tamil Wikipedia, Mr. Podhuvan is well known within the closed group of Tamil Wikipedia editors as the man who translated ‘Tolkappiyam,’ one of the oldest surviving Tamil works, into English for WikiSource.

He has also developed a new standard for transliteration of Tamil to English, using just the Roman alphabets available on regular keyboards. “I have avoided the use of diacritical marks and capitalisation. Instead, I have constructed the sounds of Tamil on a new standard that will allow any user to grasp the nuances of Tamil pronunciation,” he says.

Mr. Podhuvan, who types for five hours every day, has achieved all of these things despite having a degenerative neurological disorder. “It is most probably Parkinson’s and it is genetic. My mother had it and her mother before her,” he says.

He has refused medication because he feels that ultimately, it won’t matter, much to the chagrin of his wife, 71-year-old Sengai Selvi, his five children and his family doctor. Selvi supports Mr. Podhuvan through all of his chores at their home in Nanganallur, where the elderly couple live by themselves. Their four daughters are all married and live in different parts, while their son is in Canada.

Early affinity

Sengai Podhuvan’s love for Tamil started early. “I had studied only up to class VIII, but became a teacher when I learnt the government allowed those with at least three years of teaching experience to appear for SSLC exams,” he says, recalling the events of the early 1960s when he was in his 20s.

He continued in the teaching profession, earning subsequent degrees leading up to a PhD from Tiruchi Bharathidasan University, which he received just after retiring in 1994. His big break into the world of Tamil literature, however, started in 1971, when veteran Tamil scholar Dr. Mu. Va (Mu. Varadarajan) offered him a job as the editor of scholarly works for a project to record the ‘Authentic History of Tamilnadu’.

Mr. Podhuvan has also been the editor of sports journal ‘Tamizhar Vilayatu Madal’ brought out by the directorate of sports development during the Chief Ministership of M.G. Ramachandran.

His tryst with computers began in 2005, when he acquired his first PC and trained himself to be able to publish his own books. He has already published six books. “My ambition is to translate Sangam literature works — ‘Pathu Paatu’ and ‘Ettu Thogai’ — for Tamil Wikipedia,” he says.

Keywords: Sengai PodhuvanTamil computingTamil WikipediaTamil to English transliteration

source:::: Karthik Subramanian in The Hindu..

natarajan

” சக்கரையம்மா என்னும் பெண் சித்தர் ” …

நமது சுதந்திரப் போராட்ட காலத்தில், சக்கரையம்மா என்ற பெண்சித்தர், வானில் பறவைபோல பறப்பதைப் பலரும் பார்த்து வியந்திருக்கிறார்கள். தமிழறிஞரான திரு.வி.க. தாம் எழுதிய “உள்ளொளி’ என்ற புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
“சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை நான் வசித்த கல்லூரியின் (ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி விடுதி) மாடியில் அவர் பறந்துவந்து நின்றார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா?’
விண்ணில் பறக்கும் சக்தியுடன் திகழ்ந்தாரே, யார் இந்த சக்கரையம்மா…?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த தேவிகாபுரம் என்ற சிற்றூரில் 1854 இல் பிறந்தாள் ஆனந்தாம்பா என்ற தெய்வீக பெண்.
அந்த ஊரில் புகழ்பெற்ற பெரியநாயகி ஆலயம் உண்டு. அந்த ஆலயத்தின் மேற்கு மூலையில், தேவியின் மூல விக்கிரகத்தை தரிசித்தவாறு, மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருப்பாள் சிறுமி ஆனந்தாம்பா.
ஆனந்தாம்பாவாகப் பிறந்திருப்பது யார்? அவள் இந்த உலகத்தப் பெண்ணா, இல்லை வானுலகத்துக்கு உரிமையானவளா? தேவியின் வடிவம் தானா அவள்? அந்த மூல விக்கிரகத்தில் அவள் எதை பார்க்கிறாள்? தன்னைத்தானே தரிசித்துக் கொள்கிறாளா? யார் அறிவார்?
அவளது வீடே கோயிலின் அருகில் தான் இருந்தது! அவள் தந்தை சேஷ குருக்கள் கோயில் அர்ச்சகர்களில் ஒருவர். குருக்களின் புதல்வி என்பதால் ஆலயத்திற்கு அவளால் எப்போது வேண்டுமானாலும் போக முடிந்தது. தியானத்தில் மணிக்கணக்கில் தோய்ந்திருக்கவும் முடிந்தது.
அவள் வயதுடைய சிறுமிகள் பல்லாங்குழியிலும், பாண்டியிலும் பொழுது போக்கிய காலங்களில் அவள் மட்டும் தன் நேரம் முழுவதையும் தியானத்திற்கே அர்ப்பணித்தாள்.
அக்கால வழக்கப்படி, அவளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. கணவன் சாம்பசிவம் 24 வயதுப் பையன். சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் சட்டநாத மடம் என்றொரு மடம் இருந்தது. (கோமளீஸ்வரன் பேட்டை இப்போது புதுப்பேட்டை எனப்படுகிறது). சட்டநாத மடத்தின் உரிமையாளன் அவன்தான். ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்த அவனுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட்டாள் ஆனந்தாம்பா.
ஆனந்தாம்பாவை அவன் ஒரு வேலைக்காரிபோல் நடத்தினான்.
சட்டநாத மடத்தின் அருகில் கோமளீஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் இருந்தது. தற்போதும் கோயில் இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அங்கே போய் சிவன் சன்னதியில் அமர்ந்துகொள்வாள் ஆனந்தாம்பா. பிறந்த வீட்டில் அவளுக்கு அடைக்கலம் தந்தவள் தேவி கோயில் பராசக்தி என்றால் புகுந்த வீட்டில் அடைக்கலம் தந்தவர் சிவபெருமான்!
பெண்பித்துப் பிடித்து பல்வேறிடங்களில் அலைந்த சட்டநாதன் பெருவியாதி பிடிக்கப்பட்டு முப்பத்தைந்தே வயதில் காலமானான். ஆனந்தாம்பாவுக்கு அப்போது வயது இருபது.
அக்கால வழக்கப்படி, அவளுக்கு முடி மழித்து முக்காடு போட்டார்கள். அழகுக் கோலம் அலங்கோலமாக மாற்றப்பட்டதை ஆனந்தாம்பா பொருட்படுத்தவில்லை. அவளுக்கு தன் உடல்பற்றிய பிரக்ஞையே இருந்ததில்லை. கணவன் காலமானது அவளைப் பொறுத்தவரை அவளின் ஆன்மிக வாழ்வுக்கு ஒரு வாய்ப்பே ஆயிற்று.
தேவிகாபுரத்தில் சிறிதுகாலம் இருந்த அவள், அதன்பின் திருவண்ணாமலை அருகே போளூரில் அண்ணன் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். ஆனந்தாம்பா சக்கரையம்மாவாக மாறிய பரிணாம வளர்ச்சி நடந்தது அங்குதான். எண்ணற்ற ஆன்மிக அனுபவங்களை அவளுக்கு வாரி வழஙகியது அவ்வூர்.
அங்கே அருகிலிருந்த நட்சத்திரக் குன்றில் நட்சத்திர குணாம்பா என்ற உயர்நிலைத் துறவினி ஒருவர் வாழ்ந்து வந்தார். நட்சத்திர குணாம்பாவைச் சந்தித்தபின் ஆனந்தாம்பாவின் வாழ்க்கையே மாறிப் போயிற்று. அவளை சிஷ்யையாக ஏற்றார். இறைச்சக்தியைத் தேவி வடிவில் மந்திர ரூபமாக வழிபடும் ஸ்ரீ சக்ர உபாசனையைக் கற்றுத் தந்தார்.
அந்த உபாசனையை மேற்கொண்டதால் தான் பின்னால் ஆனந்தாம்பா ஸ்ரீ சக்ர அம்மா என அழைக்கப்பட்டார். அதுவே பொது மக்களின் வாய்மொழியில் மருவி சக்கரையம்மா ஆயிற்று.
“நான் மீண்டும் சென்னைக்கு, என் புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமே? என குருவான உங்களை இனி அடிக்கடிச் சந்திப்பது எவ்விதம்?’ என்று சக்கரையம்மா உருகிக் கரைந்தபோது குணாம்பா கனிவோடு அவரைப் பார்த்தார்.
“அதுபற்றிக் கவலைப்படாதே’ என்று லகிமா என்ற ஓர் ஆன்மிக ஸித்தி அவருக்கு ஏற்படுமாறு செய்தார். லகிமா என்பது உடலை மிக லேசாக மாற்றிக் கொள்வது. அந்த ஸித்தி அடைந்தவர்களால் விண்ணில் பறக்க முடியும். “இனி எப்போது வேண்டுமானாலும் நீ பறந்துவந்து என்னைப் பார்க்கலாம்’ என அருள்புரிந்தார் குணாம்பா.
மீண்டும் சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் இருந்த தன் புகுந்த வீட்டுக்கு வந்தாள் ஆனந்தாம்பா. மொட்டை மாடி திண்ணையும் அதன் அருகே இருந்த சிறிய அறையும் அவளின் வாசஸ்தங்களாயின.
ஒருநாள் ஸ்ரீசக்ர உபாசனையில் அவள் பேரொளியால் சூழப்பட்டாள். தானே பரம் பொருளாய் ஒளிவீசுவதுபோல் தோன்றியது அவளுக்கு. அளவற்ற ஆனந்தத்தில் கடகடவென்று சிரிக்கலானாள்.
அவளது ஆன்மிக வளர்ச்சியை அறியாத புகுந்த வீட்டார், கணவன் இறந்ததால் அவளுக்குப் பித்துப் பிடித்துவிட்டதென்று கருதினர்.
அக்காலத்தில் டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் என்ற புகழ்பெற்ற ஒரு மருத்துவர் இருந்தார். ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்தவர். உன்னதமான ஆன்மிகவாதி அவர்.
ஒரு சமயம் ஆனந்தாம்பாவின் சகோதரருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவம் பார்க்க டாக்டர் நஞ்சுண்டராவை அழைத்தார்கள்.
அவர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது மொட்டை மாடியிலிருந்து வித்தியாசமான அந்தச் சிரிப்பின் முழக்கம் கடகடவெனக் கேட்டது. ஆன்மிகவாதியான நஞ்சுண்டராவ் அந்தச் சிரிப்பால் கவரப்பட்டார்.
யார் உரத்துச் சிரிக்கிறார்கள் என்று விசாரித்தார். கணவனை இழந்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட ஆனந்தாம்பா என்ற பைத்தியத்தின் சிரிப்பு அது என்று அலட்சியமாகக் கூறினார்கள் உறவினர்கள்.
ஆனால், அந்த சிரிப்பு அவரை அழைத்ததுபோல் தோன்றியது. மாடியேறிச் சென்றார். முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்ட அமர்ந்திருந்த ஆனந்தாம்பா “மகனே வா!’ என அழைத்தாள்.
தூக்கிவாரிப்போட்டது நஞ்சுண்டராவுக்கு! மனிதர்களுக்கு முதுகில் கண் உண்டா என்ன! மேற்கொண்டு எதுவும் பேசாத ஆனந்தாம்பாளிடம், தானும் எதுவும் பேசாமல் விழுந்த வணங்கிவிட்டு வந்துவிட்டார்.
பின்னொருநாள் கோமளீஸ்வரன் கோயிலுக்குச் சென்றார். ஆலய வாயிலில் அமரந்து கடகடவென்று சிரித்துக் கொண்டிருந்த ஆனந்தாம்பாவை மறுபடி தரிசித்தார். ஒளிவீசும் கண்கள். ஆனந்தாம்பாவின் மேனியிலிருந்து ஓர் அமைதி கலந்த பிரகாசம் பொங்கி வழிவதுபோல் தோன்றியது. நிச்சயம் இவர் பித்துப் பிடித்த பெண்மணி அல்ல என்பதை அவரது அவரது மருத்துவ மனம் உணர்ந்தது.
“ஏன் சிரிக்கிறீர்கள் தாயே?’ என்று பக்தி கலந்த பணிவோடு விசாரித்தார். ஆனந்தாம்பா சிரிப்பை நிறுத்திவிட்டு நஞ்சுண்டராவைப் பார்த்தார்.
“மகனே மனித உடலின் உள்ளே உறைந்திருக்கும் ஆன்மா எப்போதும் ஆனந்தம் நிறைந்தது. இன்ப துன்பங்கள் உடலுக்குத் தானே அன்றி ஆன்மாவுக்கில்லை. நீ உடல் அல்ல. நீ உடலில் உள்ளாய். அவ்வளவுதான். உனது தற்காலிகக் கூடாரமான இந்த உடலைப் பாராமல், கூடாரத்தின் உள்ளே நிரந்தர வஸ்துவாய் வசிக்கும் உன் ஆன்மாவைப் பார்! அப்படிப் பார்க்கத் தொடங்கினால் நிலையான பேரின்பத்தை நீ அடைய முடியும்.’
இந்த வார்த்தைகள் நஞ்சுண்டராவின் உள்ளத்தில் மின்னல் போல் பாய்ந்தன. சொன்ன வார்த்தைகளில் உள்ள பேருண்மை, சொன்னவர் அந்த வார்த்தைகளின் கருத்தை வாழ்வில் அனுசரித்து வாழ்கிறார் என்பதால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்பட்டிருந்த மந்திர சக்தி.
தன் குரு அவரே என உணர்ந்து ஆனந்தாம்பா என்கிற சக்கரையம்மாவைப் பணிந்தார் நஞ்சுண்டராவ்.
பின்னர் சக்கரையம்மா பற்றி வெளியுலகம் அறிய நஞ்சுண்டராவே காரணமானார். அடிக்கடி சக்கரையம்மாவைச் சந்தித்து உரையாடிப் பயன்பெற்று அவர் சக்கரையம்மாவின் சீடராகவே ஆனார். தம் குருவைப் பல திருத்தலங்களுக்கு நஞ்சுண்ட ராவ் அழைத்துச் சென்றார். திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி பரப்பிரும்மத்தையும் ஸ்ரீரமணரையும் சக்கரையம்மா சந்தித்தார். தன்னை ஆசிர்வதிக்குமாறு சக்கரையம்மா ரமணரிடம் கேட்டபோது ரமணர் மலர்ச்சியோடு அவர் ஏற்கெனவே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார்.
1901இல் சக்கரையம்மா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல விரும்பினார். நஞ்சுண்டராவ் அழைத்துச் சென்றார். அப்போது நஞ்சுண்டராவைத் தவிர இன்னும் சிலரும் அவரது சிஷ்யர்களாகியிருந்தார்கள்.
திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னபோது வருத்தத்துடன் தலையாட்டினார் நஞ்சுண்டராவ். தம் குரு தம்மை விட்டு சென்றுவிடுவார் என்பதை அந்த சிஷ்யரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. “வருந்தாதே மகனே! நான் சமாதியில் என்றென்றும் இருந்து அனைவருக்கும் அரும்புரிந்து வருவேன். என் சமாதி இருக்குமிடம் அமைதியின் கோயிலாகத் திகழும்!’ என்று சொல்லிச் சீடரை ஆறுதல் படுத்தினார் குரு.
சொன்னபடியே 1901 பிப்ரவரி 28 ஆம் நாள் சக்கரையம்மா உடல் சட்டையை உதறினார். அவரது பொன்னுடல் அவர் குறிப்பிட்ட இடத்திலேயே சமாதி செய்விக்கப்பட்டது. நஞ்சுண்டராவ், சக்கரையம்மா முன்னர் சொன்ன போதே அந்த நிலத்தை வாங்கியிருந்தாரே?
இப்போதும் சென்னையில் திருவான்மியூரில் உறவுகளைத் துறந்து துறவியான பெண் சித்தர் சக்கரையம்மா, தன் சமாதியில் நிரந்தரமாய் வாழ்ந்துவருகிறார். இறந்தது அவர் குடியிருந்த உடல்தானே? அவர் ஆன்மா தன்னை நாடிவரும் அடியவர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கி வருகிறது.

– திருப்பூர் கிருஷ்ணன்  in Kumudam Bhakti  

Recently a friend of mine took me and my wife Bhavani to the  Samadhi  Mandir of Sakkarai Amma in Thiruvanmiyur. Such a wonderful Koil  with a serene environment that you will like to visit the place  again and again ….One has to see it to believe it ..

natarajan

 

” வாங்க …வாழ்த்துவோம் ஸ்வர்ண லக்ஷ்மியை ” !!!

அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா..

 

.ஐநாவும் என்னை அழைக்கும்..

சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.
சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.
சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்
பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.
இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை
இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.
குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.
இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.
ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.
அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.
இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.
இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.
இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.
ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. ‘எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.
இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்கும் சுவர்ணலட்சுமியை      வாழ்த்த  வார்த்தைகள் இல்லை !!!
– எல்.முருகராஜ்  in Dinamalar …Tamil daily

natarajan

“OM ” Is Not Just A Mantra…But Also A Medicine…

Aum is medicine, not just mantra.

AumPramila Krishnan | Deccan Chronicle | Chennai::  Abdul Khader chants ‘Aum’ 30 times during his walk at Gill Nagar park every morning and swears it has significantly helped in healing his acute arthritic pain.

“I used to pray seated in a chair because of acute knee pain from arthritis acquired from long hours of doing business standing. Thanks to the yoga asanas, breathing exercises and the chanting of ‘Aum’, I am now able to kneel on the mat for my namaz five times a day,” said the 50-year-old grocer of MMDA colony in the city, talking excitedly about the wholesome healing experienced at the government yoga and naturopathy college hospital near Anna arch.

“When the doctors explained that chanting ‘Aum’ is not religious but provides therapeutic gain, I readily agreed to follow that. I am happy I did it,” Khader told Deccan Chronicle.

Dr Kanimozhi, assistant professor of yoga, says she had prescribed ‘Aum’ chanting for even cancer patients, along with other naturopathy medicines. “The chant controls the secretion of stress hormones and acts as a pain reliever. It is scientific as the chant creates a neuro and psycholinguist effect while a positive aura forms around your body when you do it.”

There are several patients at the hospital — including Muslims and Christians — who have benefited from chanting ‘Aum’, prescribed along with yoga asanas and nature healers, and gained relief from ailments such as pain, insomnia, stress, stuttering and other speech difficulties.

The case of 55-year-old Edwin, a senior army officer tormented by ankylosing spondylitis for over a year, is another example. He has healed from chanting ‘Aum’ and practising asanas and breathing exercises.

“Edwin’s case sheet reveals that after two months of practice, he could flex his joints and his sleep cycle got normal,” said Dr P. Prabhu, expressing happiness that more and more patients are turning to ‘Aum’ and other natural healers.

Courtesy: DC.
 source:::::input from a friend of mine ….
natarajan

Posted in Hindu HeritageHindu Scriptures and Hindu ResearchHindu way of Life | Tagged:  |