Message For the Day…” Key to Inner Peace is Within You and Not Elsewhere…”

The Gopikas did not concern themselves with the question whether the Divine was attributeless or full of attributes. They preferred to worship the Divine in the form of Krishna and they wanted their forms to merge in the Divine. “Thereby we shall be formless,” they declared. It is when we forget our form that we can merge in the Formless. The Divine cannot be experienced through Dhyana (meditation) or Japa(recitation); this is a delusion. These practices may give momentary peace of mind. To experience permanent joy, develop your Divine nature. For this, your environment must be congenial and have pure and Divine vibrations. It is not necessary to go to a forest to concentrate on the Divine Atma dwelling within your heart. The key to inner peace is within you and not outside. In the atmosphere of a sacred divine presence, you can promote your quest for peace more effectively.

Sathya Sai Baba

Message For the Day….” Do you Remember all the kith and kin from Your Previous Lives …” ?

Your love for God should be firm and unchanging, unaffected by trials and tribulations and the vicissitudes of life. Pandavas are supreme examples of unwavering love for Krishna. When Draupadi was being humiliated in Duryodhana’s assembly hall, when Abhimanyu was attacked and slain by the Kauravas, when Aswathama massacred the Upa-pandavas (Pandavas’ children), or when they performed the glorious Rajasuya sacrifice at the height of their power, or when they were in exile in the forest, without succumbing to the difficulties and troubles they were subjected to, they adhered firmly to the name of Krishna, with unwavering faith in Him. They relied only on Krishna’s love. Difficulties and troubles are passing clouds which come and go. Do you remember all the kith and kin from your previous lives? The only relationship that remains unchanged is the one with God. Attach yourself to Him. 

Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது …” நல்லதே செய் …அதுவும் இன்றே செய் …” !!!

‘நல்லதை இன்றே, இப்போதே செய்ய வேண்டும்; கெட்டதை தள்ளிப் போட வேண்டும்’ என்று பல்வேறு கதைகளின் மூலம் வலியுறுத்தியுள்ளனர் நம் முன்னோர். இதற்கு உதாரணமாக, பழந்தமிழ் நுாலில் உள்ள கதை இது:
ஒரு நாள், கர்ணன் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்காக, தங்க கிண்ணத்தில் இருந்த எண்ணெயை இடது கையால், வலக்கையில் ஊற்றி, உடம்பெங்கும் தேய்த்தபடி இருந்தான்.
அச்சமயத்தில், அந்தணர் ஒருவர், கர்ணனிடம் தானம் வாங்க வந்தார். அவர் யாசகம் கேட்ட மறுவினாடியே, இடது கையில் இருந்த தங்க கிண்ணத்தை, அப்படியே இடது கையாலேயே அந்தணருக்கு கொடுத்தான் கர்ணன்.
அதை வாங்கிய அந்தணர், ‘கர்ணா… இடக் கையால் தானம் அளிக்கக் கூடாது என்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், ஏன் இடது கையால் கொடுத்தாய்…’ எனக் கேட்டார்.
அதற்கு கர்ணன், ‘ஐயா… இடக் கையில் இருக்கும் கிண்ணத்தை, வலது கைக்கு மாற்றுவதற்குள், என் மனசு மாறி விட்டால் என்ன செய்வது? அது மட்டுல்ல, அந்த சிறிதளவு நேரம் கூட நீங்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகவே, அப்படிச் செய்தேன்.
‘மானிட வாழ்வு நிலையில்லாதது; நீர்க்குமிழி போல நொடியில் போய்விடும். இடக்கையில் இருந்து, வலக்கைக்கு மாற்றுவதற்குள், என் உயிர் போய் விட்டால், உங்களுக்கு கொடுக்காத பாவம் என்னை வந்து சேருமல்லவா… அதனால் தான் இடது கையாலேயே கொடுத்தேன்…’ என்றான் கர்ணன்.
ஏழை மறையோர்க்கு இடக் கையாலே எண்ணெய்க் கிண்ணம் ஈந்தான் அன்றோ என, இத்தகவலைச் சொல்லும், ‘ஜெயங்கொண்டார் வழக்கம்’ எனும் பழங்கால நூல், நாளை என்பார் கொடை தனக்குசடுதியிலே இல்லை என்றால் நலமதாமே என்றும் கூறுகிறது.
அதாவது, உதவி கேட்டு வருபவர்களை, ‘நாளை வா…’ என்று சொல்லி இழுத்தடிப்பதை விட, இன்றே இல்லை என்று சொல்லிவிடுவது நல்லது என்றும் கூறுகிறது.
ஆகையால், நல்லதைச் செய்வதும், அதை உடனடியாக செய்வதும் நன்மை தரும்.

பி.என்.பரசுராமன்  in http://www.dinamalar.com 

Natarajan

Message For the Day…” God Maintains balance in dealing with His Devotees…”

In dealing with devotees, the Lord has to maintain a balance. Here is an example from the life of Ramakrishna Paramahamsa. In olden times or the present, there are always some people who indulge in calumny against good men. Once, two of his disciples experienced some villagers abusing the noble sage in two different incidents. In response, Brahmananda, a young gentle devotee, shed tears. Vivekananda retorted and threatened the villagers. Sage Ramakrishna disagreed with both their actions! Explaining, he taught, “There are four tyres for a car. The pressure in the front tyre and rear tyres must be as prescribed. If there is excessive pressure in some tyres, it should be reduced. If some tyres have low pressure, they have to be inflated. Only then the car will run smoothly. Vivekananda suffers from excessive pressure; he requires to be deflated. Brahmananda is too weak, so he has to be inflated.”

Sathya Sai Baba

” ஆணவமும் பொறாமையும் அறிவுக்கு சத்துரு …”

பொறாமை! அது, மனிதர்கள் அனைவரையுமே ஆட்டிப் படைக்க கூடியது. அதற்கு, படித்தவர் – படிக்காதவர் என்ற பேதமில்லை; பொறாமை, உத்தமமான பக்தர்களைக் கூட ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதற்கு, இக்கதையே உதாரணம்.


கிஞ்சன்வாடி என்ற கிராமத்தில், கணேச பட்டர் எனும் விநாயக பக்தர் வாழ்ந்து வந்தார். விநாயகர் மீது அவர் வைத்திருந்த துாய பக்தியின் காரணமாக, அவர் அளிக்கும் விபூதி பிரசாதத்தால், நோய் மற்றும் பிரச்னைகள் தீரும்; வறுமை நீங்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பினர். அதன் காரணமாக, அனைவரும் கணேச பட்டரைப் போற்றினர்.
அதே காலகட்டத்தில், துகாராம் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர், ஞான திருஷ்டி படைத்தவர்; அத்துடன், அவர், பண்டரிநாதனுக்கு படைக்கும் உணவை இறைவன் உண்டு செல்வார் என்றெல்லாம் அவரின் புகழ் பரவியிருந்தது.
இவ்விஷயத்தை கேள்விப்பட்ட கணேச பட்டருக்கு, ஒரு குடம் பாலில், துளி விஷம் கலந்தாற் போல, மனதில் பொறாமை தீ வளர்ந்தது.
‘நாளை துகாராமிடம் போய், என் கண்முன் பண்டரிநாதனை
வரவழையுங்கள் பாக்கலாம் என கேட்கப் போறேன். அப்போது, அவரோட பொய் வெளிப்பட்டு விடும். அத்துடன், நான் விநாயகரை வரவழைத்து, துகாராமை விட நான் தான் பெரிய பக்தன் என, அனைவர் முன்பும் நிரூபிப்பேன்…’ என, சபதமிட்டார் கணேச பட்டர்.
மறுநாள், நீராடி, துாய ஆடைகள் அணிந்து, ஆசார அனுஷ்டானங்களை முடித்து, கோவிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார் பட்டர். அப்போது, ‘ஸ்வாமி… உள்ளே வரலாமா?’ எனக் குரல் கேட்டது. வெளியே வந்து பார்த்தார். அங்கே, துகாராம் நின்று கொண்டிருந்தார். ‘ஸ்வாமி… நீங்க என்னைப் பாக்க விரும்புவதாகவும், அவருக்கு சிரமம் கொடுக்காமல், நீயே அவரைப் போய் பார்ன்னு பண்டரிநாதர் எனக்கு கட்டளையிட்டார். அதன்படி உங்களப் பாக்குறதுக்காக வந்துருக்கேன்…’ என்றார் துகாராம்.
அதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் வந்து, ‘பொய் சொல்லாதீர்; இன்று நான் உங்கள சோதனை செய்ய வரப் போறத
எப்படியோ தெரிஞ்சு, பண்டரிநாதன் சொன்னதாக பொய் சொல்கிறீர். ஒரு சாதாரண வணிக குலத்தில் பிறந்த நீர், உயர் குலத்தில் பிறந்த என்னிடம் பொய் சொல்லாதீர்…’ என்றார்.
துகாராம் எவ்வளவோ சொல்லியும், அதை ஏற்கவில்லை பட்டர். இதனால், ‘சரி… இதோ நான் பண்டரிநாதரை அழைக்கிறேன், என் பக்திக்கு இரங்கி அவர் வருவார். நீங்க உங்க விநாயகரை அழையுங்க, நானும் அவரை தரிசிக்கிறேன்…’ என்றார்.
இதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் அதிகமாகி, ‘அப்படியா… இதோ விநாயகரை அழைக்கிறேன்; அவர் கண்டிப்பாக வருவார்…’ என்றார்.
தகவல் அறிந்து ஊரே கூடி விட்டது. கணபதி பட்டர் கைகளைக் கூப்பி, மந்திரங்களைச் சொல்லத் துவங்கினார். ஊஹூம்… என்னென்னவோ செய்தும், விநாயகர் வரவில்லை.
அப்போது துகாராம், ‘ஸ்வாமி… விநாயகரின் பக்தர் ஒருவர், குளிப்பதற்காக குளத்திற்குச் சென்றிருந்தவர் படிக்கட்டில் வழுக்கி, குளத்தில் விழுந்து விட்டார். ‘கணேசா காப்பாற்று…’ என்று கதறிய அப்பக்தரை விநாயகர் காப்பாற்றி கரை சேர்த்து, அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதனால் தான் உங்க குரலுக்கு வரவில்லை…’ என்று கண்களை மூடியபடியே சொன்னார்.
ஆனால், அதை நம்பவில்லை பட்டர்.
‘நான் சொல்வதில் நம்பிக்கை இல்லன்னா நீங்க பூஜை செய்யும் விநாயகர் கோவில்ல போய் பாருங்க உண்மை தெரியும்…’ என்றார். அதன்படி, பட்டரும், மற்றவர்களும் கோவிலுக்கு சென்று பார்த்த போது, அங்கே ஈரக் காலடிச் சுவடுகள் இருந்தன. விநாயகரின் திருமேனி முழுவதும் நனைந்திருந்தது. விநாயகர் அணிந்திருந்த ஆடைகளில் இருந்து, தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
அனைவரும் வியக்க, உண்மையை உணர்ந்த கணேச பட்டர் தலை குனிந்தார். அவர் மனதில் இருந்த பொறாமையும் அகன்றது.
ஆணவமும், பொறாமையும் அறிவுக்கு சத்ரு; அதுவும், ஆன்மிகத்தில், பொறாமை அறவே கூடாது.
பி.என்.பரசுராமன் in Dinamalar.com

திருமந்திரம்!
என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனை செய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறை ஓங்கும்
நண்பால் ஒருவனை நாடுகின்றேனே!
கருத்து:
எலும்புகளால் பின்னி, நரம்புகளால் இழுத்துக் கட்டி, ரத்தம், சதையால் அமைக்கப்பட்ட, உடம்பு எனும் வீட்டில், உயிர் என்பது இன்பமாக நிலை பெற்று இருக்கிறது. அவ்வாறு உடம்பையும், உயிரையும் சேர்த்துத் திருவருள் புரிந்த இறைவனை, துாய்மையான அன்பினால் நான் நாடுகிறேன்.

Source……….www.dinamalar.com

Natarajan

” The Best Management Lesson I Have Learned….” See What Dr. Kalam Says …

l2007012512178

IndiaKnowledge@ Wharton : Could you give an example, from your own experience, of how leaders should manage failure?

Kalam: Let me tell you about my experience. In 1973 I became the project director of India’s satellite launch vehicle program, commonly called the SLV-3. Our goal was to put India’s “Rohini” satellite into orbit by 1980. I was given funds and human resources — but was told clearly that by 1980 we had to launch the satellite into space. Thousands of people worked together in scientific and technical teams towards that goal.

By 1979 — I think the month was August — we thought we were ready. As the project director, I went to the control center for the launch. At four minutes before the satellite launch, the computer began to go through the checklist of items that needed to be checked. One minute later, the computer program put the launch on hold; the display showed that some control components were not in order. My experts — I had four or five of them with me — told me not to worry; they had done their calculations and there was enough reserve fuel. So I bypassed the computer, switched to manual mode, and launched the rocket. In the first stage, everything worked fine. In the second stage, a problem developed. Instead of the satellite going into orbit, the whole rocket system plunged into the Bay of Bengal. It was a big failure.

That day, the chairman of the Indian Space Research Organization, Prof. Satish Dhawan, had called a press conference. The launch was at 7:00 am, and the press conference — where journalists from around the world were present — was at 7:45 am at ISRO’s satellite launch range in Sriharikota [in Andhra Pradesh in southern India]. Prof. Dhawan, the leader of the organization, conducted the press conference himself. He took responsibility for the failure — he said that the team had worked very hard, but that it needed more technological support. He assured the media that in another year, the team would definitely succeed. Now, I was the project director, and it was my failure, but instead, he took responsibility for the failure as chairman of the organization.

The next year, in July 1980, we tried again to launch the satellite — and this time we succeeded. The whole nation was jubilant. Again, there was a press conference. Prof. Dhawan called me aside and told me, “You conduct the press conference today.”

I learned a very important lesson that day. When failure occurred, the leader of the organization owned that failure. When success came, he gave it to his team. The best management lesson I have learned did not come to me from reading a book; it came from that experience.

What a wonderful leader!

Source::::::: http://www.mastegg.com

Natarajan

“பகவானுக்குத் தெரியாமல் நாம் எதுவும் செய்ய முடியாது …”

குரு சிஷ்ய பாவம்கறது பாரம்பரியமா இந்து மதத்துக்கே உள்ள தனிப் பெருமை. மாதா, பிதாவுக்கு அப்புறம், தெய்வத்தைவிடவும் முன்னதா குருவைத்தான் சொல்லி இருக்கு.
அந்தக் காலத்துல எல்லாம் குருவாக இருக்கறவர் ஒரு ஆக்ஞை இட்டுட்டான்னா அது எவ்வளவு சிரமமானதா இருந்தாலும் செய்யறச்சே கஷ்டங்கள் பலதும் வந்தாலும், கொஞ்சமும் சலிச்சுக்காமலும் தவிர்க்காமலும் சீடர்கள் செய்து முடிச்சுடுவா.
அதேசமயம் அவஸ்யம் இல்லாத எந்தக் காரியத்தையும் அவாளைச் செய்யச் சொல்லமாட்டார் குருநாதர். அப்படிப்பட்ட காலகட்டத்துல நடந்த குருகுல அனுபவம் ஒண்ணை முதல்ல சொல்றேன். அதுக்கும் மகாபெரியவாளுக்கும் என்ன சம்பந்தம்கறதை அடுத்ததா சொல்றேன்.
மூணு இளைஞர்கள் ஒரு குரு குலத்துக்கு வந்தாங்க. குருதேவரை தரிசனம் பண்ணி, தாங்கள் அவர்கிட்டே சீடர்களா சேர்றதுக்காக வந்திருக்கறதா சொன்னாங்க.
இந்தக் காலத்துல பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கறதுக்கு முன்னால, நேர்முகத் தேர்வு, என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதவைக்கிறது இப்படியெல்லாம் தகுதித்தேர்வு நடத்தறாங்க இல்லையா? அத அந்தக் கால குருகுல முறையில இருந்துதான் வந்தது.
சின்னவயசுலயே குருகுலத்துல சேர்த்து படிப்படியா கத்துக் குடுத்தது ஒருவகை. இன்னொரு வகை நடுத்தர வயசுல குருகுலத்துல சேர்ந்து படிக்கறது. இதுல இரண்டாவது முறையில சீடர்களை சேர்த்துக்கறச்சே அவாளுக்கு என்ன தகுதி இருக்குன்னு தெரிஞ்சுண்டுதான் சேர்த்துக்குவாங்க.
அந்த வழக்கப்படி, தன்கிட்டே பாடம் கத்துக்க வந்த மூணு இளைஞர்களுக்கும் ஒரு தேர்வு வைச்சார், குருநாதர்.
மூணுபேர்கிட்டேயும் ஆளுக்கு ஒரு பறவையைத் தந்தார். “இதை யாரும் பார்க்காத இடத்துல வைச்சு கொன்னுட்டு வந்துடுங்கோ!’ அப்படின்னார்.
இளைஞர்கள் பறவையை எடுத்துண்டு போனாங்க. ரெண்டுபேர் கொஞ்ச நேரத்துலயே வெறும் கையோட திரும்பி வந்துட்டாங்க. மூணாவது இளைஞர் ரொம்பநேரம் கழிச்சு வந்தான். அவன் கொண்டுபோன பறவை அவன் கையிலயே இருந்துது.
குருநாதர் அவங்ககிட்டே நடந்ததை சொல்லச் சொன்னார்.
முதல் இளைஞன் சொன்னான் “நீங்க சொன்னபடியே பண்ணிட்டேன். என் இருப்பிடத்துல ஓர் அறைக்குள்ள போய், கதவை இறுக்க மூடிட்டேன். ஒருத்தரும்… ஏன் சூரிய வெளிச்சம் கூட உள்ளே வரமுடியாதபடி இருண்டுடுத்து. உடனே அங்கேயே வச்சு, அதைக் கொன்னுட்டேன்’.
ரெண்டாவது இளைஞன் அதைக்கேட்டு சிரிச்சான். “நீ குருநாதர் சொன்னதை சரியா புரிஞ்சுக்கலை. யாருமே பார்க்காதபடி பறவையைக் கொல்லச் சொன்னார். ஆனா, நீ அதைக் கொன்ன சமயத்தல அந்தப் பறவை உன்னைப் பார்த்திருக்கும் இல்லையா? அதனால நீ தோத்துட்டே நானும் உன்னை மாதிரிதான் இருட்டு றைக்கு அதை எடுத்துண்டு போனேன். ஆனா அங்கே வைச்சு அதோட கண்ணை ஒரு துணியால கட்டிட்டு வதைச்சுட்டேன். குருநாதர் சொன்னதோட அர்த்தம் புரிஞ்சு செயல்பட்ட என்னைத்தான் அவர் சீடனா ஏத்துப்பர். ஏன்னா, டுத்தவன் அவர் சொன்னதையே கேட்காம பறவையை உயிரோட திருப்பி எடுத்துண்டு வந்திருக்கான். அதனால தகுதித் தேர்வுல ஜெயிச்சது நான்தான்!’
அமைதியாக நின்றிருந்த மூன்றாவது இளைஞனைப் பார்த்தார் குருநாதர், “நீ என்னப்பா சொல்லப்போறே?’ அப்படின்னு கேட்காமலே கேட்ட அவரோட பார்வைக்கு அர்த்தம் புரிஞ்சுண்டு பேச ஆரம்பிச்சான் அவன்.
“சுவாமி, நீங்க சொன்னமாதிரியே பறவையை எடுத்துண்டு போனேன். ஆனா, எங்கே போய் நின்னாலும் கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார்னே, தோணித்து. யாருக்கும் தெரியாம பண்ணணும்னா, அது பகவானுக்கும் தெரியக்கூடாதே? எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருக்கற, எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கற அவருக்குத் தெரியாம எந்த ஒரு காரியத்தையும் பண்றது சாதித்தியமில்லைன்னு தோணித்து. அதோட, உயிர்வதை செய்யறதுல உங்களுக்கு எந்த விருப்பமும் இருக்காது. அதனால் அதை திரும்ப எடுத்துண்டு வரணும்கற அர்த்தத்துலதான் நீங்க அப்படி சொல்லியிருக்கணும்கறதும் புரிஞ்சுது. அதான் பறவையைக் கொண்டு வந்துட்டேன்’
சொல்லி முடிச்ச அவனை, சந்தோஷமா சீடனா ஏத்துண்டு ஆசிர்வதிச்சார் குருநாதர். இந்தக் கதையை எதுக்கு சொன்னேன் தெரியுமா? உலகத்துல நாம எங்க இருந்தாலும் சரி, பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை விளக்கத்தான்.
சுவாமிக்கு சமமா போற்றப்படற ஆசார்யாளும் இப்படி எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருந்து நடக்கற எல்லா விஷயத்தையும் பார்த்துண்டு இருந்தார்ங்கறதை நிரூபிக்கறவிதமா நடந்த சம்பவம் ஒண்ணைதான் நான் இப்போ சொல்லப்போறேன்.
ஒரு சமயம் காஞ்சி மடத்துல பெரியவா, பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார். எத்தனை எத்தனையோபேர் எங்கெங்கே இருந்தெல்லாமோ வந்திருந்தா. வரிசை ரொம்ப பெரிசா இருந்தது.
வந்திருந்தவாள்ல அடிக்கடி வர்றவா, எப்போதாவது வர்றவா, புதுசா வர்றவான்னு எல்லா தரப்பும் இருந்தா. அந்தக் கூட்டத்துல சுமார் அறுபது வயசு உள்ள ஒரு பாட்டியும் இருந்தா. நெத்தி நிறைய குங்குமமும் சந்தனமும் இட்டுண்டு , தழையத் தழைய பட்டுக் கட்டிண்டு இருந்தா அந்தப் பாட்டி, பத்தாக்குறைக்க கழுத்துல ருத்ராட்சம், ஸ்படிக மாலைகளையும் போட்டுண்டு இருந்தா.
பார்க்கறவா எல்லாருக்கும் கொஞ்சம் கூடுதலாவே மதிக்கத்தோணும். அப்படி ஒரு தோற்றம் அந்தப் பாட்டிக்கு ரொம்ப பக்தி நிறைஞ்சவா, அவாகூட நாமளும் வர்றதே பாக்யம்னு நினைச்சு சந்தோஷமா வரிசைல வந்தா எல்லாரும்.
ஆச்சு, ஒருவழியா பாட்டியோட முறை வந்துது, மகாபெரியவாளை ரெண்டு கையையும் கூப்பி நமஸ்காரம் பண்ணினா அந்த மூதாட்டி.
ஆசார்யா, ஆசிர்வாதம் செய்யப்போறார்னு நினைச்சதுக்கு மாறா, பக்கத்துல இருந்த சீடனை கூப்பிட்டார் பரமாசார்யா.
“மடத்து உக்ராண அறையில் இருந்து (சமையல்கட்டு) நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வா!’ உத்தரவிட்டார்.
அவசர அவசரமாக ஓடினார் அந்தச் சீடர். பாட்டிக்கு ஒண்ணும் புரியலை. சுத்தி இருந்தவாளுக்கோ ஆச்சரியம். “பெரியவா ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்தாலே அது மகாபிரசாதம். நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வரச் சொல்லியிருக்கார்னா, இந்தப் பெரியம்மா ஏதோ பாக்யம் பண்ணி இருக்கணும்னு!’ ஆளாளுக்கு பேசிக்க ஆரம்பிச்சா.
ஒரு கூடையில நூறு எலுமிச்சம் பழத்தை எடுத்துண்டு வேகவேகமா ஓடி வந்தார் சீடர். கூடையை அந்த மூதாட்டி பக்கத்துல வைக்கச் சொன்னார் ஆசார்யா.
“இந்தா இதெல்லாம் உனக்குதான். எடுத்துண்டு போ. நீ செய்யற காரியத்துக்கு உபயோகமா இருக்கும்’
பெரியவா சொல்ல, திருதிருன்னு முழிச்சா அந்த வயதான பெண்மணி. ரொம்ப தயங்கி, “பெரியவா, என்ன சொல்றேள்னு புரியலை. எனக்கு எதுக்கு இத்தனை எலுமிச்சம்பழம்’ கேட்டா.
“அதான் காசுவாங்கிண்டு, குடும்பத்தைக் கெடுக்கறது, உறவை அழிக்கறது, ஏவல் வைக்கறதுன்னெல்லாம் எலுமிச்சம்பழத்துல மாந்திரீக வேலைகளைப் பண்ணிண்டு இருக்கியே… அதுக்கு இது உபயோகப்படும்னுதான் குடுக்கச் சொன்னேன்!’
மகாபெரியவா கொஞ்சம் கோபமான குரல்லயே சொன்னதும்தான் எல்லாருக்கும் அந்த மூதாட்டியோட மறுமுகம் என்னன்னு தெரிஞ்சுது. துஷ்டனை கண்டமாதிரி எல்லாரும் விலகி நின்னா.
சட்டுன்னு பெரியவா கால்ல விழுந்த அந்தப் பாட்டி, “என்னை மன்னிச்சுடுங்கோ… காசுக்க ஆசைப்பட்டு, யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு தைரியமா அத்தனை காரியத்தையும் செஞ்சுட்டேன். கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்தமாதிரி நீங்க சொன்னது பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை எனக்கு உணர்த்திடுத்து. இனிமே எந்தக் கெட்ட காரியமும் கனவுலயும் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ’ன்னு கதறினா. அவ கண்ணுல இருந்து வழிஞ்ச நீரே அவ பாவத்தைக் கழுவிடும்படிக்கு அழுதா.
கொஞ்ச நேரம் கழிச்சு, “உனக்கு தெரிஞ்ச அபிசார மந்திரத்தை எல்லாம் ஏதாவது ஒரு பசுமாட்டோட காதுல சொல்லிட்டு அதோட தலை முழிகிடு. அதெல்லாம் உனக்கு முழுசா மறந்துடும். போயிட்டு வா. இனிமேலாவது நல்லகாரியம் பண்ணு!’ன்னு சொல்லி அந்தப் பாட்டியை அனுப்பி வைச்சார், பரமாச்சார்யார்.
இப்போ, சொல்லங்கோ மகாபெரியவாளை நடமாடும் தெய்வம்னு எல்லாரும் சொல்றது சத்தியமான வார்த்தைகள்தானே!

– பி. ராமகிருஷ்ணன் in http://www.dinamalar.com….kumudam bhakthi

Natarajan

 

HolikaDahan and The Stories Related to the Festival….” Victory of Good Over Evil “

The festival of Holi is associated with different mythological and spiritual stories. Out of the many tales, the most prominent is that of a devotee – Prahlad, his father Hiranyakashyap and Hiranyakashyap’s sister Holika. This story behind holika dahan is a testament to the power of bhakti (devotion).

King Hiranyakashyap worshiped Lord Brahma for years and, with penance he was able to impress him. Lord Brahma granted wishes of the king which were:

– King Hiranyakashyap cannot be killed by human being or an animal

– He will not die either in his home or outside the home

– He will not die in the day or at night

– He will not die either by astra or shastra (weapons)

– King Hiranyakashyap will not die either on land or in the sea or in the air

With such blessings the king had become invincible and wanted people in his kingdom to preach him as God. Everyone did except King Hiranyakashyap’s son Prahlad who preached Lord Vishnu. Offended by his son’s disobedience, King Hiranyakashyap decided to kill Prahlad and made several attempts too. All his attempts went in vain as Prahlad was saved by Lord Vishnu each time. King Hiranyakashyap then asked Holika, his sister, to kill Prahlad. Holika had a gift – she could not be harmed or burned by fire. Holika’s blessing was in the form of a shawl, which would protect her. As asked by her brother, Holika get herself seated in the flames with Prahlad on her lap to kill him. All the while Prahlad kept chanting Lord Vishnu’s name. As soon as the fire soared, the blessed shawl of Holika fluttered away to cover Prahlad. In this way, Prahlad lived and Holika burnt and died. This is how Holi gets its name from Holika and is celebrated as a festival that marks the victory and power of bhakti (devotion).

In some parts of the country, story of Pootana or Putana is also prevalent as the reason to celebrate Holi. The demon king Kansa (uncle of Krishna) feared getting killed one day by Lord Krishna. Kansa sent Putana to kill Krishna through her poisonous breast milk. She came to baby Krishna and started feeding of her poisonous milk. Lord Krishna, knowing her demonic intentions, sucked out Putana’s life-force while she fed him her milk and she turned into her original giant and scary form. Lord Krishna sucked all her blood until Putana was killed. It is said that it was the night of Holi when Putana was killed and Lord Krishna proved his greatness. Some who view the origin of festivals from seasonal cycles believe that Putana represents winter and her death the cessation and end of winter.

We can follow whichever story behind celebrating Holi but all the stories have the same crux – Victory of good over evil. In 2015, Holika Dahan is being celebrated on 5th March.

HOLI  GREETINGS TO ALL

source::::www.in.lifestyle.yahoo.com

Natarajan

 

 

Message For the Day…” Everything Changes with Time…”

Even Rama, who had established Rama Rajya (the ideal kingdom) on one historic occasion, had to leave this world and pass away. Everything has to pass away some day. Nothing is going to remain permanently in this world. Even the Rama Rajya had to disappear and change. Everything changes with time and nothing remains unchanged. Many people have ruled over this land, but could any one of them take away even a small portion of the land? The only thing which you can carry and which you should take is the permanent grace of the Lord. A good name is all that you should aspire for during your life. We should do good and earn a good name, and thus lead a good life by doing good to others. This is the ideal which we have to hand over to the rest of the world.

Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது … ” கண்ணாடி சொல்லும் பாடம் …” !!!!

அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி.
அடிக்கடி அதைப் பார்ப்பார்.
பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது?
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில்
இருப்பது கண்ணாடிதானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ
பார்த்தால் உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் சாதாரணக்
கண்ணாடிதானே அது?”
“ஆமாம்!”
“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
பெரியவர் புன்னகைத்தார்.
“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!”
பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்? அப்படிக் கேள்.
“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”
எத்துணை ஆழமான உவமை இது!”
“இந்த உவமையில் என்ன இருக்கிறது?
எனக்கு ஒன்றும் புரியவில்லை!
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்
என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது.
“எப்படி?”
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும்
இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
“ஆமாம்”
“அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்! அடுத்து…?”
“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்.
இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
“கிரேட்! அப்புறம்?”
“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”
“இல்லையே…! மாறாக அந்தக்கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம்  உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ,
எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.
இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!”
“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”
“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்.
பெரியவர் இளைஞனின் முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுத்தார்.
நாமும் அவ்வாறே நடக்கலாமே!
SOURCE:::: input from a friend of mine
Natarajan