” மாவீரன் அலெக்சாண்டரும் மாமுனிவர் அருணகிரிநாதரும் … ”

மாவீரன் அலெக்ஸாண்டரும்
மாமுனிவர் அருணகிரியாரும்
எழுதியவர் உமா பாலசுப்பிரமணியன்

கி.மு. 356 ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மாஸிடோனியாவில் மன்னர் பிலிப்ஸிற்கு மகனாகப் பிறந்த மாவீரன் அலெக்ஸாண்டரை – இரும்புப் பறவை – என்று சொல்வார்கள். அவன் பிறந்த போதே, அறிவுக் கூர்மையும் வீரமும் நிறைந்து இந்த உலகைக் கட்டியாள்வான் என்று சோதிட வல்லுனர்கள் யாவரும் உறுதி மொழி அளித்தனர். சிறுவயதிலேயே யாவருக்கும் அடிபணியாத ஃபுஸிபேலஸ் என்னும் குதிரையை, அது தன் நிழலை நினைத்து மருளுகிறது எனக் கண்டு பிடித்து, அதை அடக்கித் தன் புத்தி சாதுர்யத்தைத் தெரியப்படுத்தினான் மாவீரன். ஒட்டுமொத்த உலகையும் வெல்ல நினைத்துப் பல வெற்றிகளைக் குவித்து, அதோடு உயர் பண்புகளையும், நல்ல நெறிமுறைகளையும் கடைப்பிடித்து வந்த அவனுக்கு முப்பத்து மூன்றாம் (33) வயதிலேயே மரணம் தழுவியது.

அதே போன்று 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரும் தன் இளமை வயதில் தகாத செயலினால் சலனமடைந்தும், கொடியநோயினால் தளர்ந்தும் வாழ்க்கையை வெறுத்து, திருவண்ணாமலையிலுள்ள வல்லாளர் கோபுரத்தினின்றும் கீழேவீழ்ந்தார். அத்தருணம் சுரபாஸ்கரனான முருகன் அவரைத்தாங்கிப் பிடித்து, அவருக்கு உபதேசம் செய்து, ‘முத்தைத்தரு’ என்ற திருப்புகழ் பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்து, பின் பல பாடல்கள் நமக்குக் கிடைக்கப் பெரும் உதவி புரிந்தார். முருகன் இல்லையேல் அருணகிரி நாதரும் அலெக்ஸாண்டர் போல் சிறுவயதிலேயே உயிர் நீத்திருக்க வேண்டும். ஆனால் அடியார்கள் செய்த புண்ணியத்தினால், முருகன் அவ்வாறு அருள் செய்து, திருப்புகழை உலகுக்குக்கொண்டுவந்திருக்க வேண்டும். எது எப்படியோ அதனால் நாம் பயனுள்ளவர்களாகத் திகழ்கின்றோம்.

இப்பொழுது நம் மனதில் “அது சரி, மாவீரனான அலெக்ஸாண்டருக்கும், முருகன் அருள் பெற்ற அருணகிரிநாதருக்கும் என்ன சம்பந்தம்?” என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அந்தச் சந்தேகத்தைத் தீர்த்து விடை கிடைக்க இப்பொழுது விரிவாக ஆராய்ச்சி செய்வோம்.
“பக்தர்கணப்ரிய நிர்த்த நடித்திடு பக்ஷி நடத்திய குகா பூர்வ
பட்சிம தக்ஷிண உத்தர திக்குள பக்தர்கள் அற்புதம் என வோதும்
சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப்புகழைச் சிறிதடியேனும்
செப்பென வைத் துலகிற்பரவ தரிசித்த அனுக்ரகம் மறவேனே”
Arunagirinathar

(திருப்புகழ்) என்று கூறிய அருணகிரிநாதரின் தத்துவமும், மாவீரன் அலெக்ஸாண்டர் தன் இறுதி நாட்களில் கூறிய சொற்களும். வாழ்க்கைக்கு ஏற்ற முக்கியமான தத்துவமாக விளங்குவதைக் காணலாம்.

மாவீரன் அலெக்ஸாண்டர் எண்ணற்ற நாடுகளைக் கைப்பற்றி வெற்றி கொண்டு, பொன்னும் பொருளும் சேமித்து வைத்து, பெரும் அரசனாகத் திகழ்ந்தான். இருந்தாலும் அதை அநுபவிக்க முடியாதபடி இளமையிலேயே அவனுக்கு விதிப்படி மரணம் ஏற்பட்டது. உலகிலுள்ள பல சிறந்த மருத்துவர்கள் அவனுக்குச் சிகிச்சை அளித்தும் பலனில்லாது போயின. மரணப் படுக்கையில் இருந்த அலெக்ஸாண்டர் தன் தளபதியையும், மற்ற உயர் அதிகாரிகளையும் அழைத்து,

“உங்களிடம் நம்பிக்கை வைத்து நான் கடைசியாக மூன்று ஆணைகள் இடுகிறேன். அதை நீங்கள் யாவரும் முன்னின்று நிறைவேற்ற வேண்டும்,” என்றான்.
“முதலாவதாக நான் இறந்த பிறகு என் சடலம் இருக்கும் சவப்பெட்டியை, எனக்கு கடைசிவரை மருத்துவம் பார்த்த சிறந்த மருத்துவர்கள்தான் சுமந்து செல்ல வேண்டும்.”
“இரண்டாவதாக, நான் வெற்றி கண்டு சேமித்து வைத்த வைரம், பொன்மணிகள் போன்ற விலையுயர்ந்த. பொருட்களை, என்னைக் கொண்டு செல்லும் பாதையில் இரைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.”

“கடைசியாக, சவப்பெட்டியின் மேலே இரண்டு துளைகள் இட்டு, என் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி மேலே தூக்கியபடி பொருத்த வேண்டும்,” என்றான்.
மற்றவர்கள் இதன் பொருள் தெரியாது விழித்ததைக் கண்டு, தானே அதன் உட்பொருளை உணர்த்துவதாகக் கூறினான் மன்னன்.

“மனிதர்களாகிய நாம் எவ்வளவு சிறந்த வைத்தியர்களை அழைத்து வந்து வைத்தியம் பார்த்தாலும் அதையும் மீறி அவன் இறந்துபடுகிறான் என்பதை உணர்த்தவே நான் மருத்துவர்கள்தான் சவப்பெட்டியை சுமந்து வரவேண்டும் என்றேன்,” என்றான்.
இதையே “தலைமயிர் கொக்குக்கு” என்ற பழமுதிர் சோலை திருப்புகழில், அருணகிரிநாதரும்.”
கக்கல் பெருத்திட்டு
அசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் பலகாலும்
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி இட்டு
தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் டுயிர்போமுன்.
திருப்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
செனனம மருக்கைக் குப்பர முத்திக் கருள்தாராய்.
என்று கூறியிருக்கிறார்.

உண்ட உணவு உள்ளே போகாமல் கக்கலும் விக்கலும் மிகுத்து உடலின் சக்தி போய், சளியும், பித்தமும் முற்றி, உடம்பில் எரிச்சல் ஏற்பட்டு, அதைத் தீர்க்கத் தைலத்தை தேய்த்து விட்டுக்கொண்டும் அடங்காது, கடுக்காய், தான்றிக்காய், நல்லி வற்றல் (திரிபலை) இவைகள் மூன்றுடன், சுக்கும், திப்பிலியும் சேர்த்துக் கசாயம் இட்டு, அதைத் தெளியவைத்து,வடிகட்டி, பருகினாலும் உடல் மடிந்து உயிர்போய் விடுகிறது. அங்ஙனம் உயிர் போவதற்கு முன் திருப்புகழைக் கற்று,அதில் உள்ள சொற்களையெல்லாம் நன்றாகப் பயின்று, உன் திருவடியைப் பற்றிக் கொண்டு, உன் புகழை ஏத்தி, பிறவிநோய் அகற்றும் பரமுத்தியை அருள்வாய் “என்று முருகனை வேண்டுகிறார்.
அதே போன்று உரையும் சென்றது – என்று தொடங்கும் திருப்புகழிலும்

உரையும் சென்றது, நாவும் உலர்ந்தது,
விழியும் பஞ்சுபோல் ஆனது கண்டயல்
உழலும் சிந்துறு பால் கடை நின்றது கடைவாயால்
ஒழுகும் சஞ்சல மேனி குளிர்ந்தது
முறிமுன் கண்டு கைகால்கள் நிமிர்ந்தது
உடலும் தொந்தியும் ஓடி வடிந்தது பரிகாரி
வர ஒன்றும் பலியாதினி என்றன் பின்
உறவும் பெண்டிரும் மோதி விழுந்தழ
மறல் வந்து இங்கு எனதாவி கொளும்தினம்…

அதாவது பேச்சு நின்று, நாக்கு உலர்ந்து, விழியும் பஞ்சுபோல் ஆகி, கடைவாயில் பால் ஒழுகி நின்று, எப்பொழுதும் அலைந்துகொண்டிருக்கும் உடம்பு குளிர்ந்து, அவயவங்கள் எல்லாம் செயலிழந்து போகும் தருணத்தில், சிறந்த மருத்துவரைக் கூப்பிட்டு வைத்தியம் பார்த்தாலும். பலனளிக்காது, இனி பயன் இல்லை பிழைக்கமாட்டார் என்று மருத்துவர் கூறியவுடன், அருகிலுள்ள உறவினர்கள், பெண்கள் யாவரும் மோதிக்கொண்டு அழத் தொடங்கும் நேரத்தில், எல்லாவற்றையும் மீறிக் கொண்டு இயமன் வந்து என் உயிரை எடுப்பான் அந்தவேளையில் மயிலும், செங்கைகள் ஆறிரு திண்புயத்துடனும், வனமின் குஞ்சரிமாருடன் எந்தன் முன் காட்சி தரவேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார்.

எவ்வளவுதான் மருத்துவம் செய்திடினும் உடலினின்றும் உயிர் போகும் தருணத்தை யாராலும் மாற்றமுடியாது என்ற தத்துவத்தை அருணகிரிநாதரும், அலெக்ஸாண்டரும் அவரவர்கள் பாணியில் விளக்கியிருக்கிறார்கள்.

இரண்டாவதாக – தான் வெற்றிகண்டு சேமித்து வைத்த பொருட்களை வீதியில் இரைக்கவேண்டும் என்பதன் கருத்து என்னவென்றால் எவ்வளவுதான் செல்வங்களைச் சேமித்து வைத்தாலும் அது கடைசியில் நம்முடன் கூட வராது, இடுகாடுவரைதான் வரும். அவைகள் பூமியிலேயே தங்கிவிடும். அதனால் அதை இரைத்தால் மற்றவற்களுக்காகவாவது பயன்படும், என்பதாகப் புரியவைக்கிறான்.
இந்தக் கருத்தை கந்தர் அலங்காரப் பாடல்களில் அழகாக எடுத்துரைக்கின்றார் வாக்கிற்கு அருணகிரி.

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்குஎன்றும்
நொய்யில் பிளவள வேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்கண்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையில் பொருளும் உதவாது காணும் கடை வழிக்கே (கந்தர் அலங்காரம் – 18 )

ஒளி பொருந்திய வேலை ஏந்திய முருகனை வாழ்த்தி, ஏழை எளியோர்களுக்கு நொய்யில் சிறிது அளவேனும் பகிர்ந்து உண்ணுங்கள். இறந்து போனபின், நாம் செல்லும்கடைசி பிரயாணத்திற்குக் கூட, எப்படி நம் உடலின் நிழலே நமக்கு உதவாதோ, அப்படியே கையில் சேர்த்து வைத்திருக்கும் பொருளும் கடை வழிக்கு உதவாது. அதனால் நம் உடலில் உயிர் இருக்கும் பொழுதே நம் செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழப் பழக வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் அருணகிரிநாதர். இக் கருத்தையேதான் மாவீரனும் அமைதியாகக் கூறினான்.

அதே போன்று மற்றொரு அலங்காரத்தில்
கோழிக் கொடியன் அடி பணியாமல் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி உண்ண ஒட்டாது உங்கள் அத்தமெல்லாம்
ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் மடிப் பிறகே
(கந்தர் அலங்காரம் – 20)

கோழியைக் கொடியாகத் தாங்கிய முருகனின் பாதகமலங்களைத் தொழாது வாழுபவர்களே! உங்கள் தீவினை நோயாகிய விதி, நீங்கள் சேமித்தபொருளை அனுபவிக்க விடாது, அப்படிப்பட்ட உங்கள் பொருள் எல்லாவற்றையும் நிலத்தில் ஆழமாகப் புதைத்துவைத்தால் அவை நீங்கள் இறந்தபிறகு உங்களைப் பின்பற்றிவருமா?– வராது என்ற பொருளில் கூறுகிறார் அருணகிரிநாதர். (ஆழப் புதைத்து வைக்காமல் வேண்டியவர்களுக்குக் கொடுங்கள்)

மூன்றாவதும் கடைசியுமாகத் தன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கிப் பொருத்துமாறு கூறியதன் விளக்கம், தான் கடைசி பிரயாணம் செல்லும்போது எதுவும் கையில் எடுத்துச் செல்லவில்லை என்பதைக் குறிப்பதற்கேவாகும்.

இதையேதான் அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில்
மலையாறுகூறெழ வேல்வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான மாதவம் செய்குமினோ நும்மை நேடிவரும்
தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்
இலையாயினும் வெந்தது ஏதாகினும் பகிர்ந்து ஏற்றவர்க்கே.

கிரௌஞ்சமலை ஆறு துண்டுகளாகப் போவதற்காக, வேலை ஏவிய முருகனை வணங்கி, அன்புடன் இலைகளாகிய கீரையானாலும்,வெந்த உணவுப் பொருள் எதுவாக இருந்தாலும், இரந்தவர்களுக்கு இல்லை என்னாது உணவின் ஒரு பகுதியை அளித்துப் பெரிய தவத்தைச் செய்யுங்கள்! அங்ஙனம் செய்வதனால் உண்டாகும் புண்ணியம், உம்மைத் தேடிப் பின்னாலே வர இருக்கும் நீண்ட வழிக்குக் கட்டுச் சோறும், நெருங்கிய துணையுமாகும். இதை உணர்ந்து செயல்படுங்கள், என்கிறார் கந்தர் அநுபூதி பாடிய அருணகிரிநாதர்.
அதே போன்று
கூர் கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றங்கொண்டு ஆடுவீர்காள்
போர்கொண்ட காலன் உமைக்கொண்டு போம் அன்று பூண்பனவும்
தார் கொண்ட மாதரும் மாளிகை யும் பணச் சாளிகையும்
ஆர்கொண்டு போவர் ஐயோ கெடுவீர் நும் அறிவின்மையே
(கந்தர் அலங்காரம்—78)

கூர் வேலை ஆயுதமாகக் கொண்ட வேலாயுதனை வழிபடாது, நாம் ஏற்றமாக இருக்கிறோம் என்று தம்மைத்தாமே பாராட்டிக் கொண்டு திரியும் மக்களே! போர்க்கோலத்தைக் கொண்ட யமன் உம் உயிரை உடலினின்றும் பிரித்துக் கொண்டுபோகும் அந்நாளில்,நீங்கள் அணியும் ஆடை ஆபரணங்களையும், மாலை அணிந்த மனைவியரையும், மாளிகையையும்,சேர்த்து வைத்த பணப்பையையும், ஆர் கொண்டு போவார்கள்? (யாரோ கொண்டு போகப் போகிறார்கள் உங்களுடன் கூட வராது, விரித்த கையுடன் தான் செல்ல வேண்டும்) ஐயோ! கெட்டுப்போகின்றவர்களே! உம் அறிவின்மை இருந்தவாறு என்னே! என்று அருணகிரிநாதர் அங்கலாய்க்கிறார். (அதற்கு முன்னே அதைப் பகிர்ந்து கொடுங்கள் என்பது கருத்து.)

இதிலிருந்து நாம் யாவரும் ஒன்று நன்கு தெரிந்து கொள்ள வேண்டும், மா வீரன் அலெக்சாண்டராய் இருந்தால் என்ன? அல்லது அருளாளர் அருணகிரிநாதராய் இருந்தால்தான் என்ன? எம்மதமும் சம்மதம் என்ற மனத்தோடு அவர்கள் கூறிய வார்த்தைகளில் எவ்வளவு ஆழ்ந்த தத்துவங்கள் (உண்மைகள்) நிரம்பியிருக்கின்றன என்பதனை நாம் உணர்ந்துகொண்டு, காலம் தாழ்த்தாது அதன்படி செயல்படுவோமேயானால், நாம் உலகத்தில் வாழும் பொழுதே பக்குவப்பட்டு, கவலைகளும், துன்பங்களும் வந்தாலும் அதை எதிர்க்கும் சக்தி நிரம்பியவர்களாகத் திகழ்ந்து பரிமளிப்போம் என்பது திண்ணம்! அதற்கு இறைவன் அருள்பாலிக்கட்டும்! முருகன் நாமம் வாழ்க! அவனை இன்றே நன்கு ஏத்தத் துவங்குவோம்!

source:::: Uma Balasubramanian in Murugan Bhakthi Newsletter

natarajan

Message For the Day…” Never Be in Bad Company of Persons… “

 

You may go through sacred texts, offer all sorts of prayers to all Gods and perhaps be in a thick forest or in the safest place, but you cannot run away from your destiny. Just like you may immerse a container in a small lake or a large ocean, but you cannot collect more water than what the container can hold. Without the strength of righteousness, physical and intellectual strength are of no avail. Examine for yourself – what happened to the mighty Karna (in the epic Mahabharata)? Though he had the intellect and physical valour, he joined the bad company of Duryodhana, Dushasana and Shakuni, and therefore came to be known as the fourth wicked person. So never be in bad company who will lead you to entertain bad thoughts and indulge in inappropriate actions. To earn the special grace of God, you must be in good company and do good deeds. Then God will make your container bigger to harvest His Grace!

 

Sathya Sai Baba

Message For The Day…” Nothing Can be Achieved without Faith in Divinity …”

 

Due to the force of gravity objects fall. The gravitational force is invisible to our eyes. Similarly, there are innumerable divine forces operating in this Universe. You must not deny them just because you cannot see them. Only the power of the Divine enables you to speak, see, move and think. All the power of the sense organs are derived from the Divine. In conceit, you may imagine that you are the doer. This is the result of ignorance and folly. Ask the question, what is responsible for existence? The answer is Divinity. Without faith in the Divine, nothing can be achieved. There is no need to seek a reason for this faith – Faith has no season or reason, it is like the love of a child for the mother. The child loves its mother for the sole reason that she is its mother. Develop such confidence and firm faith, you can realize God.

 

Sathya Sai Baba

” ராமன் எத்தனை ராமனடி ” …!!!

 

ஆதிசங்கரர் முதல், அண்மைக் காலக் கண்ணதாசன் வரை அனை வராலும் பாடப் பெற்றவர் ஸ்ரீராமர்.

சித்த புருஷர்களிலேயே தலைசிறந்தவரான சிவவாக்கியர் ‘ஒளியதான காசி மீது’ என்ற பாடலில், ‘எளியதான ராம ராம ராம இந்த நாமமே’ என்று ராம நாமத்தின் மகிமையைப் பாடுகிறார்.

சென்னைக்கு அருகில் உள்ள மணலி என்ற ஊரில், ‘ராம நாடகக் கீர்த்தனை’ என்ற பெயரில் ராமாயணத்தைக் கீர்த்தனைகளாகவே எழுதிய அருணாசலக் கவிராயருக்கு, மணலி வள்ளல் கனகாபிஷேகம் செய்து வைத்த வரலாறும் உண்டு.

ஒரு சமயம், கவியரசர் கண்ணதாசன் கைகளில் ஒரு துண்டு பேப்பர் கிடைத்தது. அதில்…

பட்டாபிஷேகத்திற்குப் பின் நடந்த ஒரு நிகழ்ச்சி அச்சிடப்பட்டிருந்தது.

ராமர், லட்சுமணனை அழைத்து சீதையைக் கொண்டு போய், காட்டில் விட்டு விட்டு வரும்படி உத்தரவிட்டார். அப்படியே செய்துவிட்டு லட்சுமணன் திரும்பிய போது…

ராமர் அழுதுகொண்டிருந்தார். லட்சுமணன் திகைத்தான். “அண்ணா! நீங்கள் சொல்லித்தானே நான் தேவியைக் காட்டில் கொண்டு போய் விட்டேன். இப்போது ஏன் அழுகிறீர்கள்?” என்றான்.

அதற்கு ராமர், “லட்சுமணா! சீதையைக் கொண்டு போய்க் காட்டில் விடச் சொன்னது அரசன், ராஜாராமன். ஆனால், இப்போது அழுவது ராஜாராமனல்ல! சீதையின் துணைவன் – கணவன் – சீதாராமனாக அழுதுகொண்டிருக்கிறேன்” என்றார்.

அதைப் படித்ததும், ராஜாராமனுக்கும் சீதாராமனுக்கும் உள்ள வேற்றுமை கண்ணதாசன் உள்ளத்தில் பதிந்தது. அவ்வளவுதான்! ராமாயணத் தகவல்களை உள்ளடக்கி, பலவிதமான ‘ராம’ திருநாமங்களைச் சொல்லி, ஒரு பாடலை உருவாக்கிவிட்டார். அப்பாடல் இன்றும் நிலைத்திருக்கிறது. பாடல்…

ராமன் எத்தனை ராமனடி (லட்சுமி கல்யாணம் என்ற படத்தில்) என்ற அப்பாடல் ராமருடைய செயல்களைச் சொல்லி, அதன் காரணமாக ராமருக்கு உண்டான பெயர்களைச் சொல்லி…

ராமரை நம் உள்ளத்தில் கொலுவிருக்க வைக்கிறது.

இவ்வளவு பேர் ராமரைப் பாடியிருக்கும்போது, திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் மட்டும் விட்டு விடுவாரா என்ன?

முதல் பாடலான ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என்ற பாடலிலேயே, அதுவும் தொடக்கத்திலேயே ‘பத்துத் தலை தத்தக் கணைதொடு’ என்று ராமரைப் பாடித்தான் துவக்குகிறார்.

ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அருணகிரிநாதர் அனுபவிக்கும் அழகு, தனி அழகு.

தேவர்கள் வேண்டுகோளுக்காகப் பரம்பொருள் ராமராக வந்து அவதரித்ததைச் சொன்ன அருணகிரிநாதர்…

ராமரின் குழந்தைப் பருவத்தை வர்ணித்திருப்பதைப் பார்த்தால்…

ஆகா! நம்மைப் பரவசப் படுத்தும் அது!

வாருங்கள் பரவசப்படலாம்!

ஒருநாள்…

கோசலாதேவி தன் குழந்தை ராமரைப் பால் குடிக்க அழைக்கிறார். ராமரோ, இங்கும் அங்குமாக விளையாட்டுக் காட்டுகிறாரே தவிர, பால் குடிக்க வரவில்லை.

அப்போது கோசலாதேவி, ராமரைக் கொஞ்சி அழைக்கிறாள். அதை அப்படியே ஒரு நேர்முக வர்ணனையாகக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.

எந்தை வருக! ரகுநாயக வருக!

மைந்த வருக! மகனே இனி வருக!

என் கண் வருக! எனதாருயிர் வருக! – அபிராம!

இங்கு வருக! அரசே வருக!

முலை உண்க வருக! மலர் சூடிட வருக!

என்று பரிவினோடு கோசலை புகல வருமாயன்…

(தொந்திசரிய – திருப்புகழ்)

அபூர்வமான அமைப்பு கொண்ட பாடல் இது!

இதில் ‘வருக’ என்ற சொல் பத்து முறைகள் வந்திருக்கின்றது. அதாவது, “ராமா! என் குழந்தையாக வந்து, நீ ஓடி ஆடி விளையாடினாலும், தச அவதாரங்களில் ஒன்று நீ! அதை உணர்வேன் நான். அவதார புருஷா! அன்னையின் அருகில் வா!” என்று அழைக்கிறாள் கோசலை.

ஆனால், ராமர் வருவதாக இல்லை. “எங்க அப்பா! வாடா! வா!” என்று நாம் அழைப்போமே, அது போல ‘எந்தை வருக!’ என அழைக்கிறாள்.

“ரகுகுலதிலகா வா!” என அழைக்கிறாள்.

ஊஹூம்! அப்போதும் ராமர் வரவில்லை.

“மைந்தா! வா! மகனே! வா!” என அழைக்கிறாள்.

மைந்தன் வேறு, மகன் வேறா? – என்றால்… ஆம்!

தானும் வாழ்ந்து, தன் குடும்பத்தையும் வாழ வைப்பவன் மகன். தானும் வாழ்ந்து, பல குடும்பங்களையும் வாழ வைப்பவன் மைந்தன்.

ராமர், எல்லோருக்கும் வழிகாட்டி வாழ வைப்பவர். சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் அரச வாழ்வை அளித்த அவதார புருஷரல்லவா அவர்!

ராமரின் இந்த உயர்ந்த குண நலனைக் குறிப்பிட்டே, ‘மைந்த வருக!’ என்றாள் கோசலை.

ஆனால் ராமரோ, நகர்ந்து வருகிறாரே தவிர, அருகில் வரவில்லை. சற்று விலகியே நிற்கிறார்.

‘என் கண் வருக!’ – “என்னிடம் வா!” என்கிறார் கோசலை. “என் ஆருயிரே வா! இங்கு வா!” என அழைக்கிறாள்.

இவ்வளவு அழைப்பும் எதற்காகவாம்?

வேறு எதற்கும் இல்லை! பால் குடிப்பதற்காகத்தான் இந்தப் பாடு!

“ராமா! வா! பாலைக் குடி! மலர் சூடி அலங்காரம் செய்துகொள்ள வா!” என வேண்டுகிறாள் கோசலை.

இவ்வளவு அழைப்புகளையும் அவள் – ‘பரிவினோடு கோசலை புகல’ – பரிவோடு சொல்லி அழைக்கிறாள்.

மிகவும் பொருள் பொதிந்த, இக்காலத்திற்கு மிகவும் முக்கியமான தகவல் இது.

குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும். அவர்களிடம் பரிவோடு நடந்துகொள்ள வேண்டும். அதை விட்டு…

“வந்து தொலையேண்டா! இல்லாட்டி, பாலைக் கீழே வெச்சுட்டுப் போயிடுவேன்” என்று குழந்தைகளிடம், குரலை ஓங்கி முகத்தைக் காட்டக் கூடாது.

கோசலை இதைத்தான் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறாள்.

அவள், பரிவோடு அழைக்கிறாள் ராமரை. அதன்பின், ராமர் வராமல் இருப்பாரா? ஓடி வந்துவிட்டார். அவரை அள்ளி அரவணைத்துப் பாலூட்டி, அலங்காரம் செய்து மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறாள் கோசலை.

ராமாயணம் என்றால், இனிமையான வழி என்பது பொருள். அதை நடைமுறையிலேயே நடத்திக் காட்டிய பரப்பிரம்மத்தின் கதைதான் ராமாயணம்.

அனைவரிடமும் அன்போடு நடந்துகொண்டால், ராமர் நம்மிடமும் வருவார். அல்லல்களைத் தீர்த்து அருள் புரிவார்!

பி.என். பரசுராமன் ஆன்மிக நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: pnparasuraman@gmail.com

source:::: The Hindu…Tamil
natarajan

இணைய தாத்தா பீட்டர் ஆக்லே!!!…

 

பீட்டர் ஆக்லே

பீட்டர் ஆக்லே

நீங்கள் பீட்டர் ஆக்லேயின் இணைய பேரன்களில் ஒருவர் என்றால் இந்நேரம், அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பீர்கள். அவரது யூடியூப் சேனலில் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். ஆம், இணைய தாத்தா பீட்டர் ஆக்லே,86, இந்த உலகில் இருந்து விடைபெற்றிருக்கிறார். இணைய முன்னோடிகளில் ஒருவர் மறைந்துவிட்டார். யூடியூப் நட்சத்திரம் ஒன்று விடைபெற்று விட்டது.

உங்களில் சிலர் பீட்டர் ஆக்லேவை அறிந்திருக்கலாம். பலர், யார் இந்த இணைய தாத்தா என்று கேட்கலாம். இங்கிலாந்தின் ஓய்வு பெற்ற முதியவரான பீட்டர் ஆக்லே இளைஞர்களின் கூடாரம் என கருதப்படும் வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் நுழைந்து வீடியோ வழியே இக்காலத்து மொழியில் பேசி , யூடியூப்பாளர்களால் இணைய தாத்தா என கொண்டாடப்பட்டவர்.

புற்று நோயுடன் போராடி மறைவதற்கு முன்பாக ஆக்லே 400 க்கும் மேற்பட்ட யூடியூப் வீடியோக்களை பதிவேற்றியிருக்கிறார்.அவரது வீடியோக்கள் மொத்தமாக கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் யூடியூப்பில் அதிகம் பிரபலமானவராக (அதிக சந்தாதாரர்கள்) அவர் இருந்தார். இந்த உலகை விடைபெற்று செல்லும் போது கூட அவருக்கு யூடியூப்பில் 43,000 சந்ததாரர்கள் இருந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிறந்த ஆக்லே, வயோதிகத்தில் கடந்த கால அனுபவத்தை திரும்பி பார்த்து அவற்றை இக்கால தலைமுறையுடன் பகிர்ந்து கொண்டு, இணைய உலகில் தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

பெரியவர் பீட்டர் ஆக்லேவை இணையப்புகழ் பெற்றவர்களில் முக்கியமானவராக குறிப்பிட வேண்டும். இன்டெர்நெட் என்றாலே நமக்கானது இல்லை என்று ஒதுங்கி கொள்ளும் வயதானவர்கள் மத்தியில், ஆக்லே அதை ஆர்வத்தோடு அரவணைத்துக்கொண்டு வெற்றியும் பெற்றார். யூடியூப் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஆக்லே, வயோதிகமும் தனிமையும் வாட்டிய காலத்தில் தனக்கான இளம் ஆதரவாளர்களை தேடிக்கொண்டதோடு, இக்காலத்து தலைமுறையுடன் அவர்களுக்கு புரியும் மொழியில் உரையாடலில் ஈடுபட்டு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அவரது வீடியோக்கள் ஒரு வயதானவரின் அலுப்பூட்டம் அறிவுரையாகவோ, முதியவரின் புலம்பலாகவோ இல்லாமல் சுவாரஸ்யமும், புத்துணர்ச்சியும் தரக்கூடியதாக இருந்தது. அதுவே அவரை இணையம் கொண்டாடிய தாத்தாவாக உருவாக்கியது. இணையத்தில் பேச வேண்டிய மொழியை ஆக்லே தாத்தா நன்றாக அறிந்திருந்தார். அவரது யூடியூப் வீடியோக்கள் எதுவும் 2 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததில்லை. சராசரியாக 5 நிமிடத்திற்குள் அவர் வீடியோவில் தான் சொல்ல வந்ததை முடித்துக்கொண்டார்.

இந்த வீடியோ வழியே அவர் தனது இளமைக்கால அனுபவம் துவங்கி எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம், திருமண வாழ்க்கை, தனிப்பட்ட அனுபவம் ஆகியவற்றை வீடியோவில் பேசியவர், கல்வி, வயோதிகம் போன்ற பொதுவான விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். ஒவ்வொரு வீடியோவும் ஆயிரக்கணக்கானோரால் பார்த்து ரசித்து பாராட்டப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன், யூடியூப்பில் அவர் அடியெடுத்து வைத்த முதல் வீடியோவே ஹிட்களை அள்ளி அவரை நட்சத்திரமாக்கியது. 2006ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஆக்லே தனது முதல் வீடியோவை பதிவேற்றினார். இது கொஞ்சம் ஆச்சர்யமானது தான். ஏனெனில் யூடியூப்பே அப்போது தான் அறிமுகமாகியிருந்தது. இளைஞர்கள் மத்தியில் பிரபலமான அந்த தளத்தில் இளசுகள் உருவாக்கிய வீடியோக்கள் தான் குவிந்திருந்தன. அந்த காலகட்டத்தில் யூடியூப் என்றால் என்ன என்று இணையவாசிகள் பலருக்குமே கூட புரியாத நிலையில், ஆக்லே யூடியூப்பில் அடியெடுத்து வைத்தார். இங்கு ஆக்லேவின் வாழ்க்கை பற்றி சில குறிப்புகள்.

பீட்டர் ஆக்லே, இங்கிலாந்தின் நார்விச் நகரில் 1927 ஆக்ஸ்ட் மாதம் பிறந்தவர். 18 வயதில் அவர் கடற்படையில் ரேடார் டெக்னிஷியனாக சேர்ந்தார். பின்னர் அவர் பேட்ரிசியாவை திருமணம் செய்து கொண்டார். தன் வாழ்க்கையில் மனைவி மற்றும் பைக்குகளை தான் அவர் மிகவும் நேசித்திருக்கிறார். 1990களின் இறுதியில் மனைவி பேட்ரிசியா இறந்துவிடவே ஆக்லே அது வரை இல்லாத தனிமையை அனுபவிக்கத் துவங்கினார். இந்த தனிமைக்கு மருந்தாக தான் அவர் இணையத்தை நாடி வந்தார்.

2006, ஆகஸ்ட் 5ம் தேதி அவர், ‘முதல் முயற்சி’ (First Try) எனும் பெயரில் முதல் வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றினார். காமிராவைk கூட சரியாக பார்க்காமல் பேசியவர், “நான் யூடியூப்பிற்கு அடிமையாகி விட்டேன் என்று துவங்கி, இளைஞர்கள் உருவாக்கும் ஆயிரக்கணக்கான வீடியோக்களை பார்க்ககூடிய இந்த அற்புதமான இடத்தில் நானும் என் வீடியோவை இடம்பெற வைக்கலாம் என நினைக்கிறேன்” என கூறியிருந்தார். 2 நிமிடம் மட்டுமே ஓடும் அந்த வீடியோ யூடிப்பில் அபார வரவேற்பை பெற்றது. முப்பது லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டது. அது மட்டுமா, யூடியூப்பில் இளசுகள் அவரை உற்சாகமக வரவேற்று கருத்தும் தெரிவித்தனர். பத்தாயிரம் பின்னூட்டங்களுக்கு மேல் குவிந்தன.

இந்த வரவேற்பால் திக்குமுக்காடிய ஆக்லே தொடர்ந்து வீடீயோ மூலம் தனது அனுபவங்களை வெளியிட்டார்.

யூடியூப்பில் எப்படி அலுப்பூட்டாமல் பேச வேண்டும் என்பதை ஆக்லேவைப் பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். தனது வாழ்க்கை அனுபவங்களை நீட்டி முழக்காமல், சுருக்கமாக கூறியதோடு அதை சுவாரஸ்யமாக்கும் வகையில் ஒரு கதை அல்லது நிகழ்வுடன் இணைத்து சொல்லி வந்தார். ‘டெல்லிங் இட் ஆல்’ எனும் தலைப்பில் வெளியான இந்த வீடியோக்களை ஆயிரக்கணக்கானோர் விரும்பி பார்த்தனர்.

ஆக்லேவின் இணைய புகழ் அவரே எதிர்பாராதது. ஆரம்பத்தில் அதை எதிர்கொள்ள முடியாமல் அவர் தவிர்த்திருக்கிறார். அவர் ‘ஜெரியாட்ரிக் 1927’ எனும் பெயரிலேயே யூடியூப்பில் அறிமுகமானார். அதே பெயரிலேயே வீடியோவிலும் பேசினார். யூடியூப்பில் இளைஞர்களுக்கு போட்டியாக அவர் கலக்குவதை பார்த்ததும், மீடியா அவரைப் பேட்டி காண முற்றுகையிட்டது. துவக்கத்தில் இதற்கு ஆக்லே மறுத்து விட்டார். பின்னர் பல மாதங்கள் கழித்து பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

இணையப் புகழுடன் ஒதுங்கி விடாமல் தொடந்து சீராக அவர் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். மொத்தம் 435 வீடியோக்களை பதிவேற்றியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், பிப்ரவரி மாதம் கடைசி வீடியோவை பதிவேற்றினார். அநேகமாக இது தான் கடைசி வீடியோவாக இருக்கும் என்பது போல இறுதி குட்பையும் சொல்லியிருந்தார்.மார்ச் 23 ல் அவர் உயிர் பிரிந்தது.

யூடியூப் தளத்தில் அவரது சேனலுக்குள் எட்டிப்பார்த்தால் அவரைப்பற்றிய நெகிழ்ச்சியான நினைவுகளை அவரது இணைய பேரன்கள் பகிர்ந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.

யூடியூப் இந்த சமூகத்தை பிரதிபலிப்பதாக ஆக்லே நம்பினார். அதுவே அவரை உலகம் முழுவதும் உள்ளவர்களோடு நேரடியாகப் பேசி நெருக்கமான தொடர்பை வளர்த்துக்கொள்ள வைத்தது.

பீட்டர்ஆக்லேவின் யூடியூப் பக்கம்: http://www.youtube.com/user/geriatric1927]

பீட்டர் ஆக்லேவின் இணையதளம்: http://askgeriatric.com/

சைப்பர்சிம்மனின் வலைத்தளம் http://cybersimman.wordpress.com/

source:::::: Cyber Simmhan in The Hindu … Tamil
natarajan

Your ” Take off With Natarajan ” Has Crossed 2 Lac Hits … A Feedback and ” Thank You” note To Each one of YOU ….

 

  • Best ever

    971views  on ONE Single Day ….

  • All time

    200,656views     ….Since Feb 2012…

 

Top Views by Country for all days ending 2014-04-03 (Summarized)

Country Views
India FlagIndia 139,939
United States FlagUnited States 28,860
Australia FlagAustralia 7,211
United Kingdom FlagUnited Kingdom 5,012
Canada FlagCanada 1,964
Singapore FlagSingapore 1,894
United Arab Emirates FlagUnited Arab Emirates 1,339
New Zealand FlagNew Zealand 1,138
Sri Lanka FlagSri Lanka 851
Malaysia FlagMalaysia 794
France FlagFrance 679
Germany FlagGermany 627
Oman FlagOman 600
Saudi Arabia FlagSaudi Arabia 464
Indonesia FlagIndonesia 445
Philippines FlagPhilippines 374
Hong Kong FlagHong Kong 294
Qatar FlagQatar 291
Netherlands FlagNetherlands 287
Pakistan FlagPakistan 281
Brazil FlagBrazil 228
South Africa FlagSouth Africa 227
Finland FlagFinland 219
Sweden FlagSweden 210
Italy FlagItaly 193
Thailand FlagThailand 161
Kuwait FlagKuwait 143
Ireland FlagIreland 136
Japan FlagJapan 135
Korea, Republic of FlagRepublic of Korea 132
Spain FlagSpain 130
Belgium FlagBelgium 126
Switzerland FlagSwitzerland 122
Taiwan FlagTaiwan 119
Russian Federation FlagRussian Federation 116
Mexico FlagMexico 111
Denmark FlagDenmark 100
Turkey FlagTurkey 99
Norway FlagNorway 99
Poland FlagPoland 94
Romania FlagRomania 92
Bahrain FlagBahrain 88
Kenya FlagKenya 83
Israel FlagIsrael 76
Hungary FlagHungary 72
Mauritius FlagMauritius 70
Bulgaria FlagBulgaria 65
Viet Nam FlagViet Nam 63
Austria FlagAustria 62
Greece FlagGreece 61
Estonia FlagEstonia 59
Nigeria FlagNigeria 58
Bangladesh FlagBangladesh 56
Egypt FlagEgypt 52
Dominican Republic FlagDominican Republic 48
Ukraine FlagUkraine 44
Czech Republic FlagCzech Republic 42
Argentina FlagArgentina 40
Portugal FlagPortugal 40
Nepal FlagNepal 40
Lebanon FlagLebanon 39
Iraq FlagIraq 39
Angola FlagAngola 38
Serbia FlagSerbia 34
Trinidad and Tobago FlagTrinidad and Tobago 32
Colombia FlagColombia 32
Chile FlagChile 28
Lithuania FlagLithuania 25
Puerto Rico FlagPuerto Rico 25
Slovakia FlagSlovakia 24
Maldives FlagMaldives 22
Croatia FlagCroatia 21
Jamaica FlagJamaica 21
Morocco FlagMorocco 20
Uganda FlagUganda 19
Jordan FlagJordan 19
Zambia FlagZambia 18
Venezuela FlagVenezuela 18
Cambodia FlagCambodia 17
Slovenia FlagSlovenia 17
Georgia FlagGeorgia 16
Macedonia, the former Yugoslav Republic of FlagMacedonia, the Former Yugoslav Republic 16
Peru FlagPeru 15
Fiji FlagFiji 14
Albania FlagAlbania 13
Cyprus FlagCyprus 13
Djibouti FlagDjibouti 12
Luxembourg FlagLuxembourg 12
Namibia FlagNamibia 12
Algeria FlagAlgeria 12
Guatemala FlagGuatemala 12
Brunei Darussalam FlagBrunei Darussalam 11
Bosnia and Herzegovina FlagBosnia and Herzegovina 11
Malta FlagMalta 11
Honduras FlagHonduras 10
Ethiopia FlagEthiopia 10
Tanzania, United Republic of FlagUnited Republic of Tanzania 10
Virgin Islands, U.S. FlagVirgin Islands 9
Myanmar FlagMyanmar 9
Ghana FlagGhana 9
Kazakhstan FlagKazakhstan 9
Costa Rica FlagCosta Rica 9
Palestinian Territory, Occupied FlagPalestine, State of 8
Uruguay FlagUruguay 7
Timor-Leste FlagTimor-Leste 7
Mongolia FlagMongolia 7
Tunisia FlagTunisia 7
Cameroon FlagCameroon 6
Cayman Islands FlagCayman Islands 6
Barbados FlagBarbados 6
China FlagChina 6
Zimbabwe FlagZimbabwe 6
Yemen FlagYemen 6
Moldova, Republic of FlagMoldova 6
Côte d'Ivoire FlagCôte d’Ivoire 6
Papua New Guinea FlagPapua New Guinea 5
Lao People's Democratic Republic FlagLao People’s Democratic Republic 5
Sudan FlagSudan 5
Suriname FlagSuriname 5
Ecuador FlagEcuador 5
Guernsey FlagGuernsey 5
Botswana FlagBotswana 5
Macao FlagMacao 5
Senegal FlagSenegal 5
Bolivia FlagBolivia 4
Iceland FlagIceland 4
Rwanda FlagRwanda 4
Grenada FlagGrenada 4
Paraguay FlagParaguay 3
French Polynesia FlagFrench Polynesia 3
Lesotho FlagLesotho 3
Jersey FlagJersey 3
El Salvador FlagEl Salvador 3
Armenia FlagArmenia 3
Latvia FlagLatvia 3
Azerbaijan FlagAzerbaijan 3
Iran, Islamic Republic of FlagIran, Islamic Republic of 2
Isle of Man FlagIsle of Man 2
Guyana FlagGuyana 2
Vanuatu FlagVanuatu 2
Montenegro FlagMontenegro 2
Bahamas FlagBahamas 2
Afghanistan FlagAfghanistan 2
Malawi FlagMalawi 2
Panama FlagPanama 2
Belarus FlagBelarus 2
Bhutan FlagBhutan 2
Monaco FlagMonaco 2
Libya FlagLibya 1
Saint Pierre and Miquelon FlagSaint Pierre and Miquelon 1
Seychelles FlagSeychelles 1
Virgin Islands, British FlagBritish Virgin Islands 1
Turks and Caicos Islands FlagTurks and Caicos Islands 1
Benin FlagBenin 1
Liechtenstein FlagLiechtenstein 1
New Caledonia FlagNew Caledonia 1
Togo FlagTogo 1
Andorra FlagAndorra 1
Guadeloupe FlagGuadeloupe 1
Saint Kitts and Nevis FlagSaint Kitts and Nevis 1
Anguilla FlagAnguilla 1
Mozambique FlagMozambique 1
Saint Lucia FlagSaint Lucia 1
Nicaragua FlagNicaragua 1
Réunion FlagRéunion 1
Solomon Islands FlagSolomon Islands 1
Holy See (Vatican City State) FlagVatican City 1
Belize FlagBelize 1
 Dear Visitor, Follower and commentator,
 Thanks a lot for your support and encouragement to me in ” Taking Off ” My site almost Every Day … My site has crossed 200000 hits yesterday ..2 April 2014 …and contniues its journey further…
 When I look at the Summary above provided by my site Administrators WORDPRESS ,  on the data of visitors for my site in various Countries in this World ,  i am pleasantly surprised to note the interest and enthusiasm  of different countrymen   ….totally unknown to me….in visiting my site and offering their valuable feedback and comments from time to time.
This kind of  connectivity thro social network  proves once again our Tamil Maxim ”  யாதும்  ஊரே  யாவரும் கேளிர் ” !!!… meaning  ” ALL  PLACES IN THIS WORLD  ARE  OUR PLACES AND ALL COUNTRYMEN IN DIFFERENT COUNTRIES IN THIS WORLD ARE OUR FRIENDS AND BROTHERS ” ..
Thanks once again to each one of YOU for the support and feedback … Thanks to WORDPRESS  for the excellent administration of the site with various inputs on the site materias on daily basis…
I am sure now that i will Take Off with YOU with more and more confidence for touching new heights .
Thanks Once again…
Natarajan

Message For the Day…” One May Offer a Leaf, a Flower , Fruit or Even Just Water to God …”

 

When Krishna was placed in the weighing scale, Rukmini brought one Tulasi leaf and said, “One may offer a leaf, a flower, fruit, or even just water to God. I offer this Tulasi leaf to You. If it is true that you rescue the person devoted to You, I pray, let this leaf of Tulasibalance Your weight.” The sanctity of sacred thoughts and acts are not understood by many. Rukmini’s offering was filled with devout feeling, so it equaled the weight of Lord Krishna, who is the very Lord of the Universe. Rukmini accomplished this feat through her selfless devotion. What is the significance in the offering of a leaf? Body (deha) is a leaf (patram) with three attributes of SatvaRajas andTamas. Heart (Hrudaya) is a flower (pushpam). The flower of the heart is pure and sacred. From this flower comes the fruit, mind with its sweet juice. You must offer this to God.

 

Sathya Sai Baba

Message For the Day… ” What is the Real Education …”

 

After birth, as one grows, one develops association with relatives, friends, teachers and others. Through these numerous relationships, one’s human qualities develop and blossom. You must show your gratitude to all by striving for their well-being. Without these associations, the lone individual would remain at an animal level. If you confine your interests to a few subjects, it will result in narrow-mindedness. You must not be restrictive in acquiring skills that help you earn a livelihood. In fact, you must learn about life itself, how it should be lived and the basic goal of life. Learning how to earn an income is not a great thing; all the evils that we see in the world today stem from a perverted system of education. An educated person must control one’s senses. Education that helps one discover one’s spiritual essence is real education. Learn how to live as a worthy human being.   

Sathya Sai Baba