Northern Origins of a Southern Temple…

The Kamakala Kameswarar Temple in Triplicane.

The Kamakala Kameswarar Temple in Triplicane.

What is startling is that a family belonging to the Kayasth community,

which had its origins in present day Uttar Pradesh, built it.

Have you heard of Raja Hanumantha Lala Lane in Triplicane? If not, you would not have heard of the Kamakala Kameswarar Temple either. Historically, it is relatively recent, dating perhaps to the 1850s. What is startling is that a family belonging to the Kayasth community, which had its origins in present day Uttar Pradesh, built it.

The Nizams of Hyderabad had a tradition of employing Hindu Kayasths in the administration. The Nawabs of Arcot followed the same practice. Among the confidential munshis or secretaries of Nawab Mohammad Ali Wallajah (1749-1795) was Makhan Lal Khirat. When the ruler built the Big Mosque in Triplicane, it was this trusted aide who composed the chronogram for it, which is enshrined above the mihrab — the niche that indicates the direction of the Holy Kaaba. It is perhaps the only instance in the world, of a Hindu’s work adorning a mosque — a true illustration of the city’s secular character.

Makhan Lal was given the honorific of Rai Raja by the Nawab. A branch of the family, titled the Junior Line, was stationed in Hyderabad, where it managed the properties of the Arcot family in that city. The Senior Line, which remained in Madras, was headed after Makhan Lal by his son Rai Raja Tekam Chand Bahadur. The Junior Line was contrary to its name; it was the more powerful one, given its proximity to the Nizams of Hyderabad. By the 1850s, the branches were headed by cousins — both having the same name of Ishwar Das. The Madras one, Tekam Chand’s son, was born on 13 June, 1826. He was given the titles of Rai Raja and Dayavant Bahadur, while his cousin in Hyderabad was styled Rajwant Bahadur.

Both sides of the family came to grief in 1855, when the British terminated the rule of the Nawabs. The Hyderabad cousin fared better for he was taken into the service of the Nizam, styling himself thereafter as Ishwar Das Walajahi. The Madras Ishwar Das did not fare badly either. That he was clearly not wanting in wealth is evident from the British Government thanking him in 1890 for his public services and recognising the titles conferred on him by the Nawabs.

Rai Raja Ishwar Das Lala Dayavant Bahadur as he liked to be referred to lived off Pycrofts Road (now Bharati Salai) where a street is named after him. A parallel street is Raja Hanumantha Lala Lane, taking its name from a kinsman. It was in this street that Ishwar Das built a temple for Kamakala Kameswarar, installing a white Shiva Linga in it. Following his death in the late 1890s, his son Lakshmi Chand took over the management.

In 1924, Lakshmi Chand filed for insolvency and the temple’s administration came under the control of the Hindu Religious and Charitable Endowments Board of the Government in 1926.

With that its ‘localisation’ began, including the legend that it is ‘at least 800 years old’! It bears no trace of its Kayasth origins.

Keywords: Kamakala Kameswarar TempleTriplicaneChennaiRaja HanumanthaLala LaneNawabs of Arcot

Source:::::  SriRam .V in The Hindu.com

Natarajan

101 வயது பொம்மை ஆஸ்பத்திரி !!!…@ Sydney , Australia…

பெரும்பாலான கடைக்காரர்கள் வாடிக்கையாளர் கண்ணீர் விடுவதை விரும்பமாட்டார்கள். ஆனால் சிட்னியைச் சேர்ந்த பொம்மைகள் மருத்துவமனை ஊழியர்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் கண்ணீர்தான் அவர்களது பணிக்கான நற்சான்றிதழ்.

நாள்தோறும் லட்சக்கணக்கில் பொம்மைகள் உற்பத்தி செய்யப்படும் இந்நாட்களில் பொம்மைகளைப் பழுதுபார்க்கும் இடங்கள் குறைந்துவிட்டன.

“பொம்மைகளைப் பொறுத்தவரை நாங்கள் எல்லா ரிப்பேர்களையும் சரிசெய்கிறோம்” என்கிறார் 67 வயது ஜியாஃப் சாப்மன். இவருடைய தந்தை தொடங்கிய டால் ஹாஸ்பிடலில் இவர்தான் தற்போது சீப் சர்ஜன் இன்சார்ஜ்.

கரடி பொம்மைகள், ஆடும் குதிரைகள், கார் பொம்மைகள் என இதுவரை இந்த மருத்துவமனையில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் உயிர்பெற்றுள்ளன. இந்த மருத்துவமனைக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து குழந்தைகள்தான் வாடிக்கையாளர்கள்.

“ஒரு வளர்ந்த மனிதனின் அளவிலேயே தத்ரூபமாக இருக்கும் பொம்மையை நாங்கள் சரிசெய்துள்ளோம். 12 அடி நீள முதலையும் எங்களிடம் வந்துள்ளது. அதுவும் பொம்மைதான்” என்கிறார் சாப்மன். இவர்களிடம் சிகிச்சைக்கு வரும் பொம்மைகளின் முடி மற்றும் கண்களில்தான் அதிகப் பழுது ஏற்படுவதாகக் கூறுகிறார் சாப்மன்.

சரிசெய்த பொம்மைகளை பொக்கிஷங்களைப் போலக் கருதிப் பிரியத்துடன் பெற்றுச் செல்லும் வாடிக்கையாளர்களின் மனநிறைவில்தான் இந்தப் பொம்மை மருத்துவமனை ஊழியர்களின் மகிழ்ச்சியே அடங்கியிருக்கிறது. சில வாடிக்கையாளர்கள் நெகிழ்ந்து அழுதேவிடுவார்களாம்.

“ஆண்கள், பெண்கள் ரெண்டு பேருமே பொம்மைகளைக் கொண்டுவருவார்கள். டெடி கரடிகளுடன் வரும் ஆண்களும் இருக்கிறார்கள்” என்கிறார் சாப்மேன்.

தெற்கு சிட்னியின் பரபரப்பான புறநகர் தெருவில் உள்ள இந்த பொம்மைக் கடையில் பணியாளர்கள் பொம்மைகளின் உடைந்த விரல்கள், தலைகள், கண் சாக்கெட்டுகள் சரிபார்க்கப்படுகின்றன. குழந்தைகளின் சேட்டை, நாய் தாக்குதல், சகோதர யுத்தங்களால் பாதிக்கப்பட்ட பொம்மைகள் அவை.

சாப்மேனின் தந்தை

முதலில் ஜெனரல் ஸ்டோர் ஒன்றைத்தான் நிர்வகித்து வந்தார். அக்காலத்தில் ஜப்பானிலிருந்து மொத்தமாக வந்த செல்லுலாய்ட் பொம்மைகள் முழுவதும் பழுதுபட்டு இறக்குமதியானதால், அவற்றைப் பழுதுபார்க்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அவர் உருவாக்கியதுதான் டால் ஹாஸ்பிட்டல்.

இந்த மருத்துவமனையின் சேவைகளுக்கு இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரிய மவுசு ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் பொம்மைகள் இறக்குமதிக்குப் பெரும் தடை இருந்ததால் பழைய பொம்மைகளைச் சரிசெய்து விளையாடுவது தான் குழந்தைகளுக்கான ஒரே வழி.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் எழுபது பணியாளர்கள் ஆறு அறைகளில் பணிபுரிந்ததாக நினைவுகூர்கிறார் சாப்மேன்.

தற்போதைய டால் மருத்துவமனையில் 12 பேர் ஊழியர்களாக உள்ளனர். ஒரு மாதத்திற்கு 200 பொம்மைகள் பழுதுபார்ப்பதற்காக வருகின்றன.

சமீபகாலமாக இந்த மருத்துவமனைக்கு விஜயம் செய்பவர்கள் குழந்தைகளாக முன்பு இருந்த பெரியவர்கள்தான் என்கிறார் சாப்மேன். நடுத்தர வயது மற்றும் முதியவர்கள் தங்கள் குழந்தைப் பருவ நினைவுகளை மீட்பதற்காக பழைய பொம்மைகளைப் பழுதுபார்க்க வருகிறார்கள்.

“அவர்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் அவர்களுக்கு விளையாடுவதற்கு ஒரே ஒரு பொம்மைதான் கிடைத்திருக்கும். ஒவ்வொரு முறை கடைக்குப் போகும்போதும் புதிதுபுதிதாக வாங்கும் வாய்ப்பு இன்றைய குழந்தைகளைப் போல அவர்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை” என்கிறார் சாப்மேன்.

அதனாலேயே பழைய பொம்மைகளைச் சரிசெய்வது இவர்களுக்கு உணர்வுபூர்வமான அனுபவமாக இருக்கிறது.

Source:::Shankar in The Hindu…Tamil
Natarajan

An Interesting Personality of Coimbatore !!!

A stickler for keeping accounts, Govindarajulu was also one of the earliest bikers in Coimbatore. Photo: Special Arrangement
A stickler for keeping accounts, Govindarajulu was also one of the earliest bikers in Coimbatore. Photo: Special Arrangement

Govindarajulu kept track and account of every rupee, anna and paisa along

with accompanying invoices or vouchers.

The boy who hated maths while pursuing his education at the ancient Veeraswamy School ended up as a meticulous chronicler of FINANCIAL transactions! And this made M.A.Govindarajulu (1917 – 2009) an important part of the iconic Asoka Betelnut Company for over seven decades. Born to M.K.Ananthapadmanabhan and Rajalakshmi during the end of the Great War, Govindarajulu lost his parents as a toddler. He was brought up by his grand aunt Seethalakshmi Ammal, who brought up a number of her near and dear with enormous love. Even today, the Seethalakshmi Maternity home on Krishnaswamy Road administered by the Coimbatore Corporation continues to serve society.

Coimbatore was one of cities to take advantage of the fall out of the great depression of 1929 and a number of entrepreneurs such as Asoka M.K.Krishna Chetty came up at a meteoric pace. Govindarajulu joined his uncle Krishna Chetty as his Man Friday for accounts and cash management at his betelnut company and performed his job with aplomb for nearly 74 years. He was a workaholic and began work by 6 a.m. Thereafter he would go home for a quick breakfast at 8 a.m. only to return to the office by 8.30 a.m. Except for a brief lunch break for an hour, Govindarajulu worked until 8 p.m. He did not travel much and was wedded to his job.

Those days, Asoka Betelnut Company had nearly 100 sales depots and Govindarajulu would prepare and present a perfect statement of accounts of each one of them by 8.30 a.m. every day to his uncle.

Govindarajulu kept track and account of every rupee, anna and paisa along with accompanying invoices or VOUCHERS. And this was not just at work. He was like this even at home and his wife Saraswathi whom he married in 1937, got used to this.

He maintained separate day books and ledgers for home expenses and INVESTMENTS. He preserved each one of the books until he passed away in 2009.

It is astonishing and inspiring to notice his last journal entry on the 5th of December 2009, barely three days before his demise. Even in the last month of his life, Govindarajulu filed the sales tax returns by the first week itself.

Govindarajulu also maintained the bank pass books and day books of son M.G.Ramkumar, daughter-in-law Jayamma, grand son Gopalakrishna, grand daughter-in-law Vidya and of his great grand children Adarsh and Smriti.

His book entries tell an interesting story of the evolving times. Plus, they have some interesting entries. Such as the one that records the expenses incurred while hosting Kalki Sadasivam and Bharat Ratna M.S.Subbulakshmi; or the one about an expenditure of Rs. 18 towards purchase of grocery for his own wedding! As the rupee, anna and paisa evolve into rupees and paisa in his books, one notices the slow and sure advent of inflation.

Govindarajulu also preserved coins, stamps, letters, invitations and news paper cuttings. He would surprise people by giving them old invitations of weddings of their family members. When the famous hardware store M.S.Manickam and Company, as part of its jubilee celebrations, announced a REWARD to the customers who produced their old sales invoices, Govindarajulu participated in the same and won gold coins for all the first three prizes. Later he gave the coins away to the church patronised by the family of M.S.Manickam and Company.

Incidentally, Govindarajulu was also one of the earliest bikers in Coimbatore.

Keywords: M.A.GovindarajuluCoimbatorefirstbiker

Source::::Rajesh Govindarajulu in The Hindu.com

Natarajan

நகைச்சுவையும், பக்தி சுவையும் வாரி வாரி தந்த வாரியார் !!!

நகைச்சுவையையும், உருக்கும் பக்திச் சுவையையும் தமிழ் உலகிற்கு வாரி வாரித் தந்தவர் வாரியார்.

இன்று வாரியார் பிறந்த நாள்….25 August….

“அன்பாய் அரும்பி, தமிழாய் மலர்ந்து, இசையாய் மணம் வீசி, அறமாய்க் காய்த்து, அருளாய்க் கனிந்தவர் – பாமரன் உள்ளத்தில் பரமனைப் பதித்தவர்
ஆன்மிகப் பெருவீட்டின் பூட்டைத் தமிழ்ச் சாவியால் எளியவர்களுக்கும் திறந்து காட்டியவர்; – பக்திச் சுவை ஊட்டியவர் -நகைச்சுவையால் உள்ளத்தைத் தொட்டவர். – அதில் உயர்கருத்தை நட்டவர். -தமிழே முருகன், முருகனே தமிழ் என்று கேட்பவரை உருக வைத்தவர் -திருமுருக கிருபானந்த வாரியார்” என்பது குமரி அனந்தன், வாரியார் சுவாமிகளைக் குறித்துக் தீட்டியிருக்கும் அழகிய சொல்லோவியம்.காங்கேயநல்லூரில் 1906 ஆகஸ்ட் 25- ல் பிறந்தவர் வாரியார். அவர்

‘சம்பந்தரைப் போல் தவழ்ந்தபடி, சுந்தரரைப் போல் நின்றபடி, மணிவாசகரைப் போல் இருந்தபடி, அப்பரைப் போல் தள்ளாடியபடி எண்பத்தேழரை ஆண்டுகள் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டியவர்; நாட்டு மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியவர். அவரது பேச்சு, எழுத்து, வாழ்வு என்னும் மூன்றையும் இறுதி மூச்சு வரை ஆட்கொண்டிருந்த சுவைகள் இரண்டு. ஒன்று, பக்திச் சுவை; மற்றொன்று, நகைச்சுவை.என்ன வரும்; வராது ஒருமுறை மைசூர் மகாராஜா, “நீங்கள் முருகனுக்கு அதாரிடி என்று கேள்விப்-பட்டேன். முருகனை வணங்கினால் என்ன வரும்?” என்று வாரியாரிடம் கேட்டார். வாரியார், “என்ன வரும் என்பதைப் பிறகு சொல்வேன். என்ன என்ன வராது என்பதை முதலில் சொல்வேன்” என்றார். இப்படிச் சொன்ன உடன், மகாராஜா சிரித்துவிட்டாராம். “முருகனை வணங்கினால் வறுமை வராது, கால பாசம் வராது. இந்த இரண்டிற்குப் பதிலாகச் செல்வம் வரும், ஞானம் வரும். நோயும் துன்பமும் முருகனடியாரை நெருங்க மாட்டா” என்று வாரியார் கூறினார்.

மணிவிழா :

1966-ல் வாரியாருக்கு பெரிய அளவில் மணிவிழா நடத்த வேண்டும் என்று அவரது அன்பர்கள் திட்டமிட்டனர். ஆனால் அவர் விரும்பவில்லை. தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் சொன்ன காரணம்: “சிலர் மணிவிழா என்று ‘மணி’ திரட்டும் விழாவாகச் செய்து கொள்வார்கள். நான் அதை எள்ளளவும் விரும்ப-வில்லை.”சிலர் சிரிக்கவே மாட்டார்கள். சிரித்தால் தம்முடைய பெருமை குறைந்துவிடும் என்று எண்ணி வாழைப் பூவைப் போல் ‘உம்’ என்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டு பரிதாபப்பட வேண்டும் என்பது வாரியார் கருத்து.குடவாசல் சிவாலயத்தில் குடமுழுக்கு நடந்தது. அவ்விழாவில் வாரியார் கலந்து கொண்டு ‘மீனாட்சியம்மை திருமணம்’ என்னும் தலைப்பில் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.இடையிடையே சில நகைச்சுவை இடம்பெற்ற பொழுது பலரும் விழுந்து விழுந்து சிரித்தனர். ஒருவர் மட்டும் சிரிக்கவில்லை. இடையில் வாரியார் சுவாமிகளின் உரையில் ஓர் ஆச்சரியமான நகைச்சுவை வந்தது. எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். இடையில் சிரிக்காமல் இருந்த அந்த அன்பர் சிரிப்பை அடக்க முடியாமல் குபீரென்று சிரித்து விட்டார். வந்தது ஆபத்து. என்ன ஆபத்து என்று கேட்கின்றீர்களா? அவர் வாயில் புகையிலையை மென்று எச்சிலை அடக்கிக் கொண்டிருந்தார். அந்தப் தாம்பூல எச்சில் அருகில் இருந்தவரின் வெள்ளைச் சட்டை, சிவப்புக் கலர் தோய்த்தது போன்ற ஒரு காட்சியை உண்டாக்கியது. சிரிக்காதவர் சிரித்ததனால் இந்தத் தீமை ஏற்பட்டது என இந்நிகழ்வையும் தமது பேச்சுத் திறத்தால் சிரிப்புக்கு உள்ளாக்கினார் வாரியார். ‘சிரிப்பால் விளைந்த தீமை’ என அவர் இதைச் சுவையாகக் குறிப்பிட்டார்.

புத்திசாலி கணவன் :

புத்திசாலிக் கணவனுக்கும் முட்டாள் கணவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? இதோ, வாரியார் கூறுகிறார், ‘வாயை மூடு!’ என்று முட்டாள், தன் மனைவியைத் திட்டுகிறான். ‘நீ அமைதியாக இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?’ என்கிறான் புத்திசாலி. அறிவார்ந்த நகைச்சுவை என்பது இதுதான்!வாரியார் சுவாமிகளைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக ஒரே வரியில் மதிப்பிட வேண்டும் என்றால், இப்படிச் சொல்லலாம்: அவர் சொல்லின் செல்வர், சமயோசிதப் பேச்சில் வல்லவர். ஒருமுறை அவருடைய சொற்பொழிவு நடந்த பொழுது சில பேர் இடையில் எழுந்து வெளியே சென்றனர். அப்பொழுது வாரியார் , ‘சொல்லின் செல்வன்’ என்று அனுமனைக் குறிப்பிடுகிறார்கள். இங்கேயும் சில ‘சொல்லின் செல்வர்கள்’ இருக்கிறார்கள். நான் நல்ல விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்வதைத் தான் சொல்கிறேன்” என்று பேச்சின் இடையே அவர்களை மென்மையாக அங்கதச் சுவையுடன் சாடினார். அதற்குப் பிறகு யாரும் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.

வள்ளி வந்தது எப்படி :

முருகப் பெருமானின் துணைவி வள்ளி நாயகிக்கு அந்தப் பெயர் வந்ததற்கு வாரியார் புதுமையான ஒரு விளக்கத்தினைத் தருவார்:
“முருகப் பெருமானின் மனைவியை ‘வள்ளி’ என்று ஏன் அழைக்கிறோம்? முருகன் நாம் கேட்டதை எல்லாம் தரும் ‘வள்ளல்’. வள்ளல் என்பது ஆண்பால், அதன் பெண்பால் வள்ளி. ஆக, வள்ளலின் மனைவி ‘வள்ளி’ ஆனார்!வாரியார் நகைச்சுவைத் திறனைப் பறைசாற்றும் ஓர் எடுத்துக்காட்டு“கள்ளைக் குடித்தால் தான் போதை தரும் என்பது இல்லை. ‘கள்’ என்று சொன்னாலே போதும். பலர் மயங்கி விடுகிறார்கள். ஒருவரை ‘நீ’ என்று சொல்லுவதற்குப் பதில் ‘நீங்கள்’ என்று சொல்லிப் பாருங்கள். அவர் எளிதில் மயங்கி விடுவார். எல்லாம் அந்தக் ‘கள்’ செய்யும் வேலைதான்.”இதே போல், ‘இல்லாள்’ என்ற சொல்லுக்கு வாரியார் தரும் விளக்கமும் சுவையானது. ‘இல்லாள்’ இல்லத்தை ஆள்பவள். பெண்பாலாகத் தான் குறிப்பிடுகின்றோம். அதையே ஆண்பாலாகச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் ‘இல்லான்’ – ‘பாப்பர்’ என்று ஆகிவிடும். ஆகவே தான் பிச்சைக்காரன்கூட ‘அய்யா, பிச்சை’ என்று சொல்ல மாட்டான்; ‘அம்மா, பிச்சை’ என்று தான் சொல்லுவான். அந்தப் பிச்சைக்காரனுக்குக் கூடத் தெரியும், அய்யா பேரில் வீட்டு மனை இருக்காது என்று! எல்லாமே அம்மா பேரில் தான் இருக்கும். ஆகவே இல்லாள் உயர்ந்தவள் ஆகிறாள்!”

கரூருக்கு வருவாரா?

கரூரில் வாரியார் ஆற்றிய தொடர் சொற்பொழிவு முடிவடையும் நாள். பாராட்டிப் பேசியவர் ஒருவர், ‘மீண்டும் வாரியார் பேச்சை எப்பொழுது கேட்போமோ…?’ என்ற ஏக்கத்தோடு, ‘மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள் சுவாமி?’ என்று ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு வாரியார், “கரூருக்கா? கரூருக்கு (கருவூருக்கு) மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத் தானே இத்தனை ஆண்டுகள் இறைவனை வேண்டிப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை மீண்டும் கரூருக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களே…?” என்றாரே பார்க்கலாம். அரங்கம் கர ஒலியால் அதிர்ந்தது!வாரியார் மனைவி அமிர்தலட்சுமி காலமானார். மற்றவர்கள் கலங்கினர். அவர் இயல்பாக இருந்தார். “அவளுக்கு உரிய ஸ்டேஷன் வந்தது. இறங்கி விட்டாள். அடுத்த ஸ்டேஷனில் இறங்க நாமும் ஆயத்தமாக இருப்போம்” என்றார். யாரால் இப்படிக் கூற முடியும்? வாழ்வில் இடுக்கண் வந்து தாக்கும் வேளையிலும் எவரால் இவ்வாறு நகைச்சுவை உணர்வுடன் பேச முடியும்?
-முனைவர் இரா.மோகன், in Dinamalar.com

Natarajan

மனதில் நிறைந்திருக்கும் மதறாஸ் !!!

நினைவில் உறைந்திருக்கும் சென்னையின் தோற்றம் மாறினாலும் அதன் மனசு மாறிவிடவில்லை.

எனக்கும் சென்னைக்குமான (என்னுடைய மனதில் என்றும் மதறாஸ்தான்) உறவு மிக நெருக்கமானது; உணர்வுரீதியாக மட்டுமல்ல; புவியியல்ரீதியாகவும். ஏனெனில், நான் இருந்த செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் 60 கிலோ மீட்டர்தான். என்றாலும், நான் சென்னைக்கு வந்தது எனது 13-வது வயதில்தான்.

ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று, “நாளைக்கு என்னுடன் மெட்றாஸ்க்கு வர்றியாடா?” என்று கேட்டார். அப்போதெல்லாம் சென்னைக்குப் போவது என்பது கிட்டத்தட்ட வெளிநாடு போவதுபோலத்தான். உடனே, சந்தோஷமாகத் தலையாட்டினேன். மறுநாள், சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அப்பா மடியில் உட்கார்ந்ததும், காற்று தாலாட்ட நன்றாகத் தூங்கிவிட்டேன். “மெட்றாஸ் வந்துடிச்சி” என்று அப்பா உலுக்கியவுடன், விழித்த என் கண்கள் முன் பரந்து விரிந்து கிடந்தது சென்னை. பாரி முனையில் இறங்கினோம். ஒரே ஜன நெரிசல், பரபரப்பு. பேருந்து நிலையம் எதிரில் அப்பா பதநீர் வாங்கிக் கொடுத்தார். பழக்கடை தாண்டி கந்தகோட்டம் என்று ஓர் இடத்தில்தான் அப்பா, தன் கில்ட் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்குவார். இந்த முறை, என்னையும் சென்னைக்கு அழைத்துவந்திருந்தார்.

நினைவின் சொர்க்கம்

பின்னர், தேவி பாரடைஸ் திரையரங்கம் வளாகத்துக்குள் நுழைந்தோம். அங்கு படம் பார்க்கவில்லை. வெறுமனே திரையரங்கைச் சுற்றிக் காண்பித்தார் அப்பா. அங்கே வட்டமான, சரிவுப் பாதை ஒன்று இருக்கும். படிக்கட்டு இல்லாமல் சுற்றிச் சுற்றி மேலும் கீழும் போகக்கூடிய பாதை. அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த வட்டப் பாதைக்கு நடுவில் சுமார் மூன்று அல்லது நான்கு அடி பருமனும், அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவுக்கு உயரமும் கொண்ட செவ்விந்தியர் ஒருவரின் சிலை ஒன்றிருக்கும். அதன் மேல் தண்ணீர் பீறிட்டு அடிக்கும்படி செயற்கை நீரூற்று ஒன்றை அமைத்திருந்தார்கள். மறக்க முடியாத நினைவு அது. சென்னைக்கு வந்த முதல் நாளில் அணிந்திருந்த உடைகூட நினைவிருக்கிறது.

அதன் பின்னர், சென்னை என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமானது. கிறிஸ்தவக் கல்லூரியில் பி.யு.சி. படித்தேன். அவ்வப்போது ரயிலில் ஏறி தாம்பரத்திலிருந்து பாரி முனைக்குப் போய்வருவேன். எப்போதாவது கோடம்பாக்கம் லிபர்ட்டி, குரோம்பேட்டை வெற்றி போன்ற திரையரங்குகளில் படம் பார்ப்போம். நான் நடிகனாக வேண்டும் என்று விரும்பிய என் அப்பா, சென்னை திரைப்படக் கல்லூரியில் என்னைச் சேர்த்துவிட்டார்.

அப்போதெல்லாம் செங்கல்பட்டிலிருந்து ரயிலில் வந்து மாம்பலத்தில் இறங்குவேன். பனகல் பூங்கா ஓரமாக நடந்து, ஜி.என். செட்டி சாலை வழியாக வேர்க் கடலையைக் கொறித்துக்கொண்டே நடந்து போனால், ஜெமினி சர்க்கிள் வரும். அதைத் தாண்டிய வுடன் திரைப்படக் கல்லூரி. ஜி.என். செட்டி சாலையில் கடலையை மென்றுகொண்டே நடந்துபோவது ஒரு சுகமான அனுபவம். அவ்வளவாக ஆள் நடமாட்டமே இருக்காது. பெரிய பெரிய மரங்கள் இருந்தன. அந்தச் சாலை எனக்கு ஒரு நண்பன்போல. அதில் உட்கார்ந்து அழுதிருக்கிறேன். அங்கிருந்த ஒரு பூங்காவில் தூங்கியிருக்கிறேன்.

70-களில் சென்னையில் தனி வீடுகள்தான் நிறைந் திருந்தன. வழக்கமாக நான் போகும் ஜி.என்.செட்டி சாலையில் ஒரு வீட்டுக்கு வெளியே ‘நச்சினார்க்கினிய சிவன், வண்டார் பூங்குழலி’ என்று பெயர்ப் பலகை இருக்கும். அந்தப் பெயர்களைப் பார்த்துவிட்டுத்தான் கடந்து போவேன். திரைப்படக் கல்லூரியிலிருந்து சபையர், அங்கிருந்து பிரிட்டிஷ் கவுன்சில், கொஞ்சம் தள்ளி ஸ்பென்சர்ஸ், பிறகு தேவி பாரடைஸ், சாந்தி, ஜங்ஷனைக் கடந்தால் ராஜாஜி ஹால் ஊடே நுழைந்து வலது பக்கம் திரும்பினால் டி.வி. ஸ்டேஷன், அதையும் கடந்தால் மெரினா பீச்; இவ்வளவுதான் அப்போதைய சென்னை. நடந்தே கடந்து சென்றுவிடக்கூடிய நகரமாகத் தான் சென்னை அப்போது எனக்குத் தோன்றியது.

தாஜ் கோரமண்டலில் வேலை செய்தபோது, நுங்கம்பாக்கம் பகுதிகளிலெல்லாம் சைக்கிளில் சுற்றுவேன். ஷிஃப்ட் முறையில் வேலை செய்ய வேண்டி யிருந்தது. செங்கல்பட்டிலிருந்து வரவும் முடியாது. இங்கே அறை எடுத்துக்கொண்டு தங்கவும் வசதியில்லை. எனவே, நானும் என் நண்பர்களும் இப்போது உள்ள அண்ணா மேம்பாலம் சர்க்கிளில் தூங்குவோம். எங்களைப் போலப் பலரும் அங்கு தூங்குவார்கள். விடியும் வரை நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அதன் பிறகு தூங்கி எழுந்து தாஜ் கோரமண்டல் பணியாளர் களுக்கான ஓய்வறையில் தயாராகி, வேலைக்குச் சென்றுவிடுவோம். அதன் பின் வாழ்க்கையில் பல மாற்றங்கள். அனைத்திலும், சென்னை எனக்கு ஆறுதலாக, கூடவே பயணித்தது.

மாறிப்போன முகம்

இப்போதைய சென்னையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னவோ மனதுக்கு உவப்பானதாக இல்லை. அன்று நடந்ததுபோல இன்று ஜி.என். செட்டி சாலையில் நடக்க முடியாது. நடைபாதைகளும் இல்லை, மரங்களும் இல்லை. நச்சினார்க்கினிய சிவனும் வண்டார் குழலியும் எங்கு போனார்களோ தெரியவில்லை. அந்த இடத்தில் பளபளப்பான வணிகக் கட்டிடங்கள் நின்றுகொண்டிருக்கின்றன.

இப்போது இருப்பதை வளர்ச்சி என்று கூறுவது விசித்திரமாக இருக்கிறது. நாம் நாமாகவே இருக்க வேண்டும் என்றால், அதற்கு இப்போதைய சென்னையில் இடமே இல்லை. அப்போது மூர் மார்க்கெட் இருந்தது. விரக்தியான மனநிலையில் அங்கே நுழைபவர்களை உற்சாகமாக மாற்றிவிடும் அதிசயப் பிரதேசம் அது. பழைய கடிகாரங்கள், வித்தியாசமான பொருட்கள், புத்தகங்கள், மீன்கள், பறவைகள் என்று பல விஷயங்களும் அங்கு இருக்கும். அதேபோல், பழைய ஸ்பென்சரும் வசீகரமான இடம்தான். ஆனால், அது மேல்தட்டு மக்களுக்கானது.

இன்றைய சென்னைக்கென்று தனிப்பட்ட எந்த அடையாளமும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள பல இடங்கள் பிடிக்காதபோதும், கதீட்ரல் சாலையில் இருக்கும் தாவரவியல் பூங்கா எனக்குப் பிடிக்கும். அதேபோல், எழும்பூர் அருங்காட்சியகமும், அதன் பின்னால் அடைந்திருக்கும் காடும் மிகவும் பிடித்தமானவை. கலைஞர்கள், இலக்கியவாதிகள் கூடும் இடமாக இருந்த டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் இடிக்கப்பட்டது பெரும் வலியைத் தந்தது. குப்பைகளும் அழகுணர்ச்சியின்மையும் சென்னையின் அழகைக் குறைக்கின்றன என்பது உண்மைதான். ‘நான் வாழும் நகரம் இது’ என்ற பொறுப்பு வந்தாலே எல்லாம் மாறிவிடும்.

மாறாத மனசு!

பொதுவாக, சென்னைவாசிகள் நடந்துகொள்ளும் முறை, பழகும் முறை, விருந்தினர்களைக் கவனிப்பது ஆகியவற்றைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் உண்டு. என்னைப் பொறுத்தவரை தன்னை நாடி வருபவர்களுக்கு நம்பிக்கை தரும் நகரம் இது. காசில்லாமல்கூட எப்படியாவது இங்கே வந்துவிட்டுப் போகலாம். இன்னும் கையேந்தி பவன்கள் உள்ளன. ஒன்றுமில்லாதவருக்குக்கூட ஏதாவது ஒன்று இங்கே கிடைத்துவிடும். இன்னொரு நல்ல விஷயம். சென்னைவாசிகளிடம் நாம் ஏதாவது கேட்டால், நின்று, பொறுமையாகச் சொல்லிவிட்டுத்தான் போவார்கள். என்னைப் பொறுத்தவரை என்றுமே ஒரு நட்புணர்வுள்ள நகரமாகத்தான் இன்றும் இருக்கிறது, என் ‘மதறாஸ்’.

– நாசர், நடிகர், இயக்குநர், தொடர்புக்கு: kameelanasser@gmail.com

Source::::The Hindu….Tamil
Natarajan

மதறாஸப்பட்டணத்துக்குப் பெருமை சேர்த்த முதல் விமானம் !!!

ஆசியாவின் முதல் விமானம் எங்கே பறந்தது தெரியுமா? நாட்டின் பல முதன்மைகளைப் பெற்ற நமது பழைய மெட்ராஸில்தான். உலகின் முதல் வெற்றிகரமான விமானத்தை ரைட் சகோதரர்கள் செலுத்தி, அடுத்த 7 ஆண்டுகளில் இந்த விமானம் சென்னையில் றெக்கை கட்டிப் பறந்திருக்கிறது.

 

தின்பண்டத் தயாரிப்புத் தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தவர் இத்தாலியிலுள்ள மெசினா பகுதியைச் சேர்ந்த ஜாகோமோ டி ஏஞ்சலிஸ் (Giacomo D’Angelis). வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் 1880-ல் இந்தியாவுக்கு வந்து மேசன் ஃபிரான்சேஸ் நிறுவனத்தை அன்றைய மெட்ராஸ் மவுண்ட் ரோடில் (இன்றைய அண்ணா சிலை சந்திப்பு அருகே) தொடங்கினார். இந்தியாவில் உணவு விநியோகிக்கும் சேவை யைத் தொடங்கிய முதல் நிறுவனம் அதுதான். ஆம்ப்டில் பிரபு காலத் தில் மெட்ராஸ் ஆளுநரின் அதிகாரப்பூர்வ உணவு விநியோகஸ்தராக ஏஞ்சலிஸின் நிறுவனம் இருந்திருக்கிறது. இதில் நல்ல அனுபவம் பெற்ற டி ஏஞ்சலிஸ், 1906-ல் ஓட்டல் டி ஏஞ்சலிஸ் என தன் பெயரிலேயே ஒரு உணவகத்தைத் தொடங்கினார். இந்த ஓட்டல் இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாகக் கருதப்படுகிறது.

சென்னையிலேயே முதன்முறையாக இந்த ஓட்டலில்தான் மின் தூக்கி, மின்விசிறிகள், ஐஸ் தயாரிப்பு அமைப்பு, குளிர்பதனக் கிடங்கு, வெந்நீர்க் குழாய்கள் போன்றவை இருந்திருக்கின்றன.

டி ஏஞ்சலிஸ் நடத்திய அந்த ஓட்டல் இருந்த இடம் எதுவென்றால், இன்றைய சென்னை அண்ணா சாலை கெயிட்டி திரையரங்கம் அருகே உள்ள பாட்டா ஷோரூம் இருந்த இடம்தான்.

ஜாகோமோவுக்குப் பின்னால் சுவாரசியமான மற்றொரு கதை இருக்கிறது. ஓட்டல் ஆரம்பித்து கொஞ்ச காலத்திலேயே பிரான்சைச் சேர்ந்த பிலாரியோ, விமானம் மூலமாகவே ஆங்கிலேயக் கால்வாயைக் கடந்து ஆச்சரிய சாகசம் நிகழ்த்திய செய்தி ஜாகோமோவின் கண்களில் பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பம் மீது தீவிர ஆசை கொண்டிருந்த ஜாகோமோவுக்கு, தானும் பறக்க வேண்டும் என்று ஆசை றெக்கை வெளியே எட்டிப் பார்த்தது. தானே ஒரு விமானத்தை வடிவமைத்தார். அது ஒரு பைபிளேன். ரைட் சகோதரர்கள் ஓட்டியது போன்று, மேலும் கீழும் இரண்டு றெக்கைகள் பொருத்தப்பட்டதே பைபிளேன்.

பிறகு மெட்ராஸ் சிம்சன் நிறுவனத்தில், அதை உருவாக்கித் தர அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில் இருந்த அன்றைய பிரபல பொறியாளர் ஜான் கிரீன் அதை வடிவமைத்திருக்கலாம். ஏனென்றால், விமானத்தை உருவாக்கியது சிம்சன் நிறுவனம் என்று பாரதியாரின் ‘இந்தியா’ இதழ் குறிப்பிடுகிறது. ‘‘இவ்விமானம் சென்னையில் டாஞ்சலிஸ் ஓட்டலின் பிரெஞ்சு முதலாளி டாஞ்சலிஸின் திட்டப்படி சிம்சன் கம்பெனி பட்டறையில் ‘தமிழ் வேலைக்காரர்களால்’ கட்டப்பெற்றது’’ என்று பாரதியார் எழுதியிருக்கிறார்.

சிறிய இன்ஜின் கொண்ட அந்த விமானத்தை பல்லாவரம் மலைப் பகுதியில் ஓட்டி முதலில் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார் டி ஏஞ்சலிஸ். அதில் நம்பிக்கை கிடைக்கவே, தீவுத் திடலில் பொது மக்களிடம் கட்டணம் வசூலித்து பறந்து காட்டியிருக்கிறார். அது நடந்த நாள் 10 மார்ச் 1910. இந்த விமானத்தில் ஒரே நாளில் பல முறை அவர் பறந்து காட்டியிருக்கிறார். அவருடைய அழைப்புக்கு ஏற்ப கூட்டத்தில் இருந்த ஒருவரும், விமானத்தில் உடன் பறந்துள்ளார்.

ஆசியாவிலேயே ஓடிய முதல் எரிசக்தி விமானம் அதுதான். இதன் மூலம் ஆசியாவிலும் இந்தியாவிலும் முதல் விமானத்தை ஓட்டியவர் என்ற பெருமையை டி ஏஞ்சலிஸ் பெறுகிறார். இந்தச் செய்தி ராயல் ஏரோ கிளப் இதழான ‘ஃபிளைட்’டில் உடனடியாக, அதாவது 1910 மார்ச் 26-ம் தேதியே பதிவாகியுள்ளது. லெவிட்டஸ் நிறுவனமே இந்தத் தகவலை வெளியிட்டது. இந்திய விமான வரலாற்றிலோ அலகாபாதில்தான் முதல் விமானம் பறந்ததாக பதிவாகியுள்ளது. ஆனால், அதற்கு 9 மாதங்களுக்கு முன்னதாகவே டி ஏஞ்சலிஸ் இந்த விமானத்தை ஓட்டியிருக்கிறார்.

‘‘இந்தியாவில் மட்டுமல்ல; ஆசியாவில் பறந்த முதல் விமானமும் ஏஞ்சலிஸ் ஓட்டிய விமானம்தான்’’ என்று விமான வரலாற்று ஆராய்ச்சியாளரும் ஓய்வுபெற்ற கேப்டனுமான கபில் பார்கவா குறிப்பிட்டிருக்கிறார். 1910 டிசம்பர் 10-ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் பறந்ததாகவும், அதே ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது விமானம் பறந்ததாகவும் பதிவுகள் உள்ளன. வழக்கம்போல இதிலும் முந்திக்கொண்டு உயரப் பறந்து, வானை அளந்து, சாதனை படைத்துவிட்டது நமது மெட்ராஸ்.

இந்தச் சாதனையில் இன்றைய அண்ணா சாலையும் ஒரு தனிப் பெருமையைப் பெறுகிறது. டி ஏஞ்சலிஸின் ஓட்டல் இருந்த இடம், சிம்சன் நிறுவனம், தீவுத்திடல் ஆகிய மூன்றும் அமைந்திருக்கும் இடம் மெட்ராஸின் அன்றைய மவுன்ட் ரோடு, சென்னையின் இன்றைய அண்ணா சாலை!

– ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

Keywords: சென்னை, சென்னை 375, சென்னை விமான நிலையம், மதறாஸப்பட்டணம், மதறாஸ்

Source::::The Hindu…Tamil

Natarajan

“பசுமையின் மறு பெயர் சென்னை …” !!!

  • திருவல்லிக்கேணிக்கு பெயர் தந்த அல்லி மலர்
    திருவல்லிக்கேணிக்கு பெயர் தந்த அல்லி மலர்
  • புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம்
    புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம்
  • புளியந்தோப்பு
    புளியந்தோப்பு

இன்றைக்குச் சென்னையில் கால் பதிப்பவர்கள், வெப்பத்தால் புழுங்கிப் போவார்கள். ஆனால், நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் தோப்புகள், தோட்டங்கள், காடுகளால் சென்னை செழிப்பாக இருந்திருக்கிறது. அதற்கான அத்தாட்சி, சென்னையின் பல பகுதிகளுக்கு இன்றைக்கும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர்கள். ஒரு பகுதியில் செழித்திருந்த தாவரங்களின் பெயர்களே, அப்பகுதிக்குப் பெயராக வைக்கப்பட்டுள்ளன.

நிலத்தை ஐந்திணையாகப் பிரித்து, அந்த நிலப் பகுதிகளில் செழித்திருந்த மலர்களால் அப்பகுதிக்கே பெயரிட்ட மரபு நம்முடையது. அதன் தொடர்ச்சி என்று இதைச் சொல்லலாம்.

வரலாறு, பண்பாடு

“தொன்மையான, வளமான பண்பாட்டின் வழி வந்ததாலேயே இயற்கை சார்ந்த பெயர்களைத் தமிழகத்தில் அதிகம் பெற்றிருக்கிறோம். ஒரு பகுதியின் இயற்கை பண்பு – புவியியல் பண்பின் அடிப்படையில் பெயர் வைப்பது தமிழ் மரபு.

ஒவ்வொரு பெயரும் ஒரு கதை சொல்லும். ஒரு பெயரின் மூலமே அப்பகுதியின் தொன்மையையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு பெயரிலும் நிச்சயம் ஒரு வரலாறு அடங்கியிருக்கிறது. ஒரு பகுதியின் பழைய பெயரை மாற்றுவது, அப்பகுதியின் வரலாற்றையும் பண்பாட்டையும் அழிப்பதற்குச் சமம்” என்கிறார் பிரபலச் சுற்றுச்சூழல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன்.

காரணப் பெயர்கள்

அல்லிக் கொடி நிறைந்த பகுதி திருவல்லிக்கேணி, தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தேனாம்பேட்டை, வேப்ப மரங்கள் நிறைந்த பகுதி வேப்பேரி, புளியமரங்கள் நிறைந்த பகுதி புளியந்தோப்பு, மல்லிகை அதிகம் மலர்ந்த பகுதி பூவிருந்தவல்லி… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் (பார்க்க: பெட்டிச் செய்தி).

ஓரிடத்தில் எந்தத் தாவரம் பெருகி இருந்ததோ, அதன் பெயரால் அந்தப் பகுதி அழைக்கப்பட ஆரம்பித்திருக்கிறது. சூழலுக்கு இணக்கமாகவும் நெருக்கமாகவும் வாழ்ந்த நமது முன்னோர், நாடு விடுதலை பெறுவதற்கு முன்புவரை இயற்கை வளத்தைத் தங்களுடைய முக்கிய அடையாளமாகவும் கருதிவந்ததை இந்தப் பெயர்களில் இருந்து உணர முடிகிறது.

செழிப்பின் அடையாளம்

“ஒரு நிலப்பரப்பின் தன்மையைச் சொல்லவும், ஓரிடத்தின் சூழலியல் வரலாற்றின் அடையாளமாகவும் இந்தப் பெயர்கள் இருக்கின்றன. பனைமரங்கள் பெருகிய பனையூர் என்ற பகுதி மணற்பாங்கான கடற்கரைப் பகுதியாகவோ, ஏரிக்கரைப் பகுதியாகவோ இருந்திருக்க வேண்டும். மூங்கில் பிரம்புகள் செழித்திருந்த பெரம்பூர் நீர் நிரம்பிய ஏரிக்கரையாகவோ அல்லது ஈரம் மிகுந்த பகுதியாகவோ இருந்திருக்கலாம் ” என்கிறார் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை துணைப் பேராசிரியர் டி. நரசிம்மன்.

இவற்றுடன் அடையாறு, கூவம், கொசஸ்தலை போன்ற ஆறுகள் ஓடிப் பாசனம் பெற்றதால் சென்னையின் பல பகுதிகளில் தோப்புகளும் தோட்டங்களும் அந்தக் காலத்தில் செழித்து இருந்திருக்கின்றன. இந்தத் தோப்புகளில் வளர்ந்தவை எல்லாமே நம் மண்ணில் இயல்பாக வளரக்கூடிய உள்நாட்டு இயல் தாவரங்கள். வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இந்தத் தாவரங்கள், மக்களுக்குப் பல வகைகளில் பயன்தரக் கூடியவையாகவும் இருந்திருக்கின்றன.

இன்றைய நிலை

“சென்னைக்குப் பெயர் தந்த பல தாவரங்கள் பண்பாட்டு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல்லாவரம் பகுதியில் இலுப்பைத்தோப்பு என்றொரு பகுதி இருக்கிறது. இந்தத் தோப்புகளில் இருந்த இலுப்பைக் காய்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, கோயில்களில் விளக்கு எரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஆர். பாலின் டெபோரா.

ஒரு காலத்தில் ஓரிடத்துக்கே அடையாளமாகத் திகழ்ந்த இந்தத் தாவரங்கள், இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில வீடுகளில் பிழைத்திருக்கின்றன. புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம், கங்காதீஸ்வரர் கோயிலில் தலவிருட்சமாக ஒன்றே ஒன்று நிற்கிறது.

இப்படியாகச் சென்னையைச் செழிப்பாக வைத்திருந்த அந்தத் தோப்புகள், தோட்டங்கள், காடுகள் எதுவும் இன்றைக்கு மிச்சம் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், பெயர்கள் மட்டும் அப்படியே பசுமையாகத் தங்கிவிட்டன.

பெயர்

காரணம்

திருவல்லிக்கேணி

திரு+அல்லி+கேணி ( அல்லிக் குளம்)

தேனாம்பேட்டை

தென்னை மரங்கள் நிறைந்த பேட்டை

புரசைவாக்கம்

புரச மரங்கள் நிறைந்த பகுதி

வேப்பேரி

வேப்ப மரங்கள் நிறைந்த ஏரி

புளியந்தோப்பு

புளிய மரங்கள் நிறைந்த தோப்பு

பனையூர்

பனை மரங்கள் நிறைந்த ஊர்

அத்திப்பேட்டை

அத்தி மரங்கள் நிறைந்த பேட்டை

பூந்தமல்லி

பூ+விருந்த+மல்லி (அ) மல்லிகை

பெரம்பூர்

மூங்கில் பெரம்புகள் இருந்த ஊர்

ஆலந்தூர்

ஆலமரங்கள் கொண்ட ஊர்

திருவாலங்காடு

திரு+ஆலம்+காடு

இரும்புலியூர்

இரும்புலி மரங்களால் நிறைந்த ஊர் ( வண்டலூர் அருகே)

திருவேற்காடு

வேல மரங்களால் நிறைந்த காடு

மாங்காடு

மாமரங்களால் நிறைந்த காடு

திருமுல்லைவாயல்

முல்லை தாவரங்களால் வரவேற்கும் பகுதி

‘Chennai green names’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன

Madras to Me ….

Can you truly know a city? Possibly — if your job entails a lot of travel or if your home is in the southern part and your school somewhere up north, and you have friends in the east and family in the west. But this is rare, and to most of us, celebrating a city really comes down to cherishing the parts of the city we know. But of this, there can be no question. If you’ve spent your growing-up years in a city, even if only in these parts, then that city is your home — all of it. And Madras Day is as good a time as any to think about what Madras means to us — well, at least to me.

Madras, to me, is the beaches of my childhood, the mornings filled with huffing walkers and the distant tang of fish being hauled in and, above it all, a sun that rises as it does nowhere else, over water that mirrors its every mood — a sight that quite adequately compensates for the desecration of the nearby sands by the clutch of ugly, deserted stalls that, in the evenings, will tempt visitors with roasted corn and balloons waiting to be shot.

Madras is the stainless steel davara-tumbler of freshly decocted coffee, the ritual of pouring the frothing liquid from one container to another as imperative as the taste.

Madras is the irritation when any visitor to the city thinks only of filter coffee when asked what they like most about Madras, along with jasmine flowers and Kanjivaram saris and idlis, which are almost always described as humble, as if anyone ever ran into a vainglorious idli.

Madras is the suppressed snicker from watching non-Tamils come here to cover the Music Season and struggle to say ‘Margazhi’, as if gargling through a mouthful of marbles.

Madras is the sight of Kalakshetra dancers cycling to class or back home in hoicked-up cotton saris worn over salwars. It is also the sight of a Carnatic musician singing his heart out to 12 people in the audience, at least two of whom have buried their noses in The Hindu crossword.

Madras is The Hindu crossword.

Madras is the twinge whenever you come down Gemini Flyover and glance to the left and see the rubble that was once Safire Theatre, with that proudly cursive ‘S’ on the outside, and, inside, the names of every single film that played in these premises, beginning with Cleopatra.

Madras is the look of horror whenever you have to meet a friend or keep an appointment in T. Nagar, especially when it’s around the stretch that sells clothes and jewels, and more clothes and more jewels, and you finally know what it’s like to be a lone fish in a shoal that’s being swept along in a surging current.

Madras is the tennis ball that lands at your feet when you are walking past a playground where boys are playing cricket. Madras is the cry, “Uncle… ball!”

Madras is the realisation that to this city whose streets you scoured as a footloose kid you are now an “uncle”.

Madras is the Tamil that only people from Madras can tolerate, even love, even they’ve only heard this Tamil in Kamal Haasan’s comedies.

Madras is the eternal question: “Are you a Rajini fan or a Kamal fan?”

Madras is the guilt at having gotten used to calling it ‘Chennai’.

Madras is the anger that, somehow, the rapes and robberies that happen here are less visible to the national media than the ones that happen in Delhi and Mumbai. It is the sad awareness that the spectacular heart-run that saved one life, minutes after another one left this world, a logistical marvel that involved everyone from traffic cops to ambulance drivers to alert medical professionals, would have been 24×7 headline news had it happened elsewhere.

Madras is the mild impatience whenever an elder in the family goes into raptures about the Peach Melba at Jaffar’s Ice Cream Parlour, at New Elphinstone theatre, which now exists only in those memories.

Madras is the annoyance whenever someone from Delhi or Bangalore or Mumbai comes down and sighs that there are no good bars or hangout joints. Madras is the belief that one has to earn the right to mock a city by living in it, not just by dropping in for a weekend.

Madras is the radio station that wakes up with ‘Gaana’ Bala and goes to sleep with Ilayaraja. It is the TV set with a hundred Tamil channels and not a single movie worth watching on the rare afternoon you’re at home. It is the feeling when you return after a trip abroad and walk into a small restaurant, one of those nondescript ‘Bhavans’, and tuck into a nei roast, listening to the people around you chattering in Tamil, smiling softly at the occasional English, and keeping an eye on the clock because you have an auto waiting, along with a driver who’s sure to complain about how long you took, and expect an extra Rs.10 or 20.

Keywords: Madras Week celebrationsMadras DayMadras historyMadras 375

Source::::The Hindu

Natarajan