Tipu Sultan “s Golden Ring With Inscription ‘ RAMA’ in Devanagari Script …

It is through the private commerce of the auction house that many a precious relic of India’s history has come to light.

 

On May 22, a remarkable artifact that illuminates a watershed moment in India’s history will be auctioned by the leading London auction house Christie’s — and presumably thereafter vanish forever from the public eye.

A heavy gold ring worn by 18th century ruler Tipu Sultan during his last campaign against the British in 1799 will be sold as part of the ‘Raglan Collection: Wellington, Waterloo & The Crimea.’

Unusually, the 41.2 gm oval ring has the name of the Hindu God Rama in raised Devanagari inscribed on it.

It was taken off the finger of the dead ruler by the Duke of Wellington, Arthur Wellesley, as his personal spoil of war after the Battle of Seringapatam in 1799.

The ring then found its way into the hands of another military family, that of FitzRoy Somerset, the 1st Baron Raglan. A famous soldier of the early 19th century, he joined Duke Wellington’s service in 1808 and rose to become his right-hand man for the next 40 years. He fought in major campaigns under Duke Wellington, including Waterloo and in the Crimea.

FitzRoy Somerset married the Duke’s favourite niece Emily Wellesley-Pole who was in possession of the ring, a gift from her uncle.

The ring has been valued at £10,000 to £15,000 and is part of the private collection of Fitzroy John Somerset, the great great grandson of the 1st Baron Raglan. The collection contains items that have been the possession of the family from 1858, including historical medals, arms and armour, militaria, pictures, furniture, silver, books, Indian weapons and works of art, as well as a selection of art.

Though a small object of personal use, the ring with its inscription awakens the spirit of the unusual 18th ruler who was its owner.

The historical record shows Tipu as Catholic in his religious outlook and forward-looking in his world-view. He sought out what was modern and transformatory for the time, putting it to use in his paramount objective of defeating the British.

Keywords: Christie’s, Tipu Sultan

 

source::::: The Hindu. …. English Daily

natarajan

This Beautiful Film Of A Guy Surprising His Mother Will Warm Your Heart …

 

 

 

“The only love that I really believe in is a mother’s love for her children.” ~Karl Lagerfeld

This beautiful video of a man’s journey back home is shot entirely on Google Glass. The film is unique because it gives us a first person perspective of the whole journey, as if we are going home to our own mother.

The ending, where the son reveals the news of his wife’s pregnancy by showing the ultrasound, is so beautiful that it might just wet your eyes.

Thank you, Mom.  

source:::::You Tube and Story Pick

natarajan

 

” அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமையா கத்துண்டு இருக்கே …”

எத்தனை எத்தனையோ மகான்கள் இந்த பாரதத்துல பிறந்திருக்காங்க. அவங்களை தெய்வத்துக்கு சமமா வணக்கவும் செய்யறாங்க.
ஆனா, வாழும் காலத்துலயே நடமாடும் தெய்வம்னு சொல்லப்பட்ட, போற்றப்பட்ட, கடவுளுக்கு சமமாகவே கருதப்பட்டவர், மகா பெரியவாதான்.

 

அவர் சந்திரமௌலீஸ்வரருக்கும் காமாட்சிக்கும் பூஜை செய்யறது, தெய்வமே தெய்வத்துக்கு பூஜை செய்யற மாதிரி இருக்கும். பக்தி மணம் கமழ பரமாசார்யா செய்யற ஆராதனையைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விடாதவங்க இல்லைன்னே சொல்லிடலாம்.
அந்த மகான், தான் ஆராதனைகள் செய்யறப்ப மட்டுமல்லாமல், தெய்வத்துக்கு யாரெல்லாம் பூஜை, புனஸ்காரங்கள் செய்யறாங்களோ அவங்க எல்லாருமே சிரத்தையாகம், பழமையான வழிபாட்டு முறைகளை கொஞ்சமும் மாற்றாமலும் செய்யணும்கறதுல உறுதியா இருந்தார். அதுவும் புராணப் பெருமை உடைய புராதனக் கோயில்கள்ல உரிய ஆகம முறையில் கொஞ்சம்கூட மாற்றம் செய்யக்கூடாதுங்கறதுதான் மகா பெரியவாளோட கட்டளை!
காஞ்சி மடத்தோட ரொம்ப நெருக்கின தொடர்பு உடையவர் ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகள். அவர் மகன் ஸ்தானிகம் சுரேஷ் சாஸ்திரிகள் சொன்ன அற்புதமான சம்பவம் ஒண்ணு, பூஜையை எப்படிப் பண்ணணும்னு மகாபெரியவா சொல்லியிருக்காங்கறதை எல்லாரும் தெரிஞ்சுக்க உதவக் கூடியது.
ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகளோட அப்பா, ஸ்தானிகம் வெங்கடராம சாஸ்திரிகள். அவர் தன்னோட மகன், ஸ்ரீவித்யா ஆராதனையை முழுமையா கத்துக்கணும்னு ஆசைப்பட்டார். அதனால, நெடிமுடி சுப்ரமணிய சாஸ்திரிகள் கிட்டே சேர்ந்து கத்துக்கச் சொன்னார். குஹானந்த மண்டலியை ஸ்தாபிதம் செய்தவர் சுப்ரமணிய சாஸ்திரிகள். அவரை சுருக்கமா “சார்’னு தான் கூப்பிடுவாங்க. இன்றைக்கும் அவர் எழுதிய ஸ்ரீவித்யா பாஷ்யம்தான், ஸ்ரீவித்யா பூஜைக்கான முழுமையான வழிகாட்டி நூலாக இருக்கு.
காமகோடி சாஸ்திரிகள், தன்கிட்டே ஸ்ரீவித்யா பூஜை முறைகளை முழுமையா கத்துக் கொண்ட பிறகு சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஒரு கடிதம் எழுதிக்குடுத்து, இதை மகாபெரியவா கிட்டே காட்டுன்னு சொன்னார். அந்தக் கடிதத்தை எடுத்துக்கிட்டு, காமகோடி சாஸ்திரிகளை பரமாசார்யாள்கிட்டே கூட்டிக் கொண்டுபோனார் அவர் அப்பா.
அந்த சமயம், ராமநாதபுரத்துல இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார், மகா பெரியவா. கடிதத்தை படிச்சுட்டு காமகோடி சாஸ்திரிகளை ஒரு நிமிஷம் உற்றுப்பார்த்த பெரியவா, “ஒரு நல்ல நாள்ல காமாட்சி அம்மனுக்கு பூஜை பண்ண ஆரம்பிச்சுடு’ அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார்.
அப்படியே தொடங்கி, காமாட்சியம்மனுக்கு தினமும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சார், காமகோடி சாஸ்திரிகள். பெரியவா காஞ்சிபுரத்துல இருக்கற நாட்கள்ல அம்பாளோட பூஜை பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய் அவருக்குத் தருவாங்க.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்ல பௌர்ணமி தினங்கள்ல விசேஷ பூஜை நடக்கும் இரவு ஒன்பதரை மணிக்குத் தொடங்கப்படற அந்த பூஜை, நள்ளிரவு வரை நடக்கும். அதுல முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த ஆராதனையை யாரும் பார்க்க முடியாதுங்கறதுதான்.
சுமார் ஒன்பது மணி வாக்குல அந்த வழிபாட்டுல பங்கெடுத்துக்கற பக்தர்கள்கிட்ட சங்கல்பம் செய்துடுவாங்க. அதன்பிறகு கர்ப்பகிருஹத்தை சாத்திட்டு அர்ச்சகர்கள் மட்டும் உள்ளே இருந்து அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வாங்க.
காமகோடி சாஸ்திரிகள் அம்மனை ஆராதிக்க ஆரம்பிச்ச பிறகு ஒரு பௌர்ணமி பூஜைக்கு வந்தார், ஆசார்யார். பக்தர்கிட்டே சங்கல்பம் எல்லாம் முடிஞ்சதும், பூஜை பண்றதுக்காக கருவறையை சாத்தினாங்க. பரமாச்சார்யார், மூலஸ்தானத்துக்கு உள்ளேயே ஒரு மணையில அமர்ந்து எல்லா ஆராதனைகளையும் முழுமையா பார்த்தார். பூஜைகள் முடிஞ்சதும் பிரசாதம் வாங்கிக் கொண்டு புறப்பட்ட பெரியவா காமகோடி சாஸ்திரிகள்கிட்டே, “நாளைக்கு கொஞ்சம் மட்த்துக்கு வந்துட்டுப் போ’ன்னு சொல்லிட்டுபோனார்.
மறுநாள் மடத்துக்குப் போனார், சாஸ்திரி. அவர்கிட்டே பெரியவா “இந்த பௌர்ணமி பூஜையை ஏன் இப்படி நடுராத்திரியில யாரும் பார்க்காதபடி பண்ணணும்? பகல்லயே செய்யலாமே?’ அப்படின்னு கேட்டார்.
அதுக்கு காமகோடி சாஸ்திரிகள், “பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. வேத, புராண முறைப்படி நடக்கற நவாவரணபூஜை இது. காலம்காலமா காமாட்சியம்மன் கோயில்ல இந்த நேரத்துலதான் பூஜை நடத்தறது வழக்கமா இருக்கு. இதை மாத்தி பகல்ல பண்ணணும்னா, பெரியவா நீங்கதான் உத்தரவு போடணும்’னு சொன்னார்.
புன்னகை செஞ்ச பெரியவா, “அப்படியெல்லாம் செய்யக்கூடாது. பூஜை முறைகள்ல சாஸ்திர சம்பிரதாயத்தை எதுக்காகவும் மாத்தக்கூடாது’ன்னு சொல்லிட்டு, இன்னொரு கேள்வியைக் கேட்டார்.
“ராத்திரியில செய்ய வேண்டிய பூஜை இதுன்னு சொல்றியே, ஆனா இதையே வசந்த நவராத்ரி, சாரதா நவராத்ரி சமயங்கள்ல மட்டும் பகல்ல செய்யறது ஏன்?’
பரமா சார்யா இப்படிக் கேட்டதும் எல்லாருக்கும் ஆச்சர்யம். ஏன் இப்படிக் கேட்கறார்? அவருக்குத் தெரியாத என்ன விவரத்தை சாஸ்திரிகள் சொல்லப் போறார்?னு எல்லாரும் கவனமா பார்த்தாங்க.
சாஸ்திரி விளக்கங்களை ஸ்ரீவித்யா உபாசனைல உள்ள பூஜா விதிகளைச் சொன்ன சாஸ்திரிகள், அந்த முறைப்படிதான் நவாவரண பூஜை செய்யப்படுதுன்னு சொல்ல, சில ஸ்லோகங்களையும் அதுக்க விளக்கமா சொன்னார்.
எல்லாத்தையும் பொறுமையா கேட்ட ஆசார்யாள், “உன்னை நான் கேட்ட கேள்விகள் எல்லாம், ஸ்ரீ வித்யா உபாசனையை நீ பூரணமா தெரிஞ்சுண்டு இருக்கியா?ன்னு பரிசோதிக்கவும், பழமையான பூஜை முறைகளை யாரும் எதுக்காகவும் மாத்தக்கூடாதுங்கறதை மற்றவங்க தெரிஞ்சுக்கணும்கறதுக்காகவும்தான். அதோட நீ என்னைப் பார்க்க வந்தப்ப ஒரு கடிதம் எடுத்துண்டு வந்தியே, அதுல உனக்கு பரீட்சை வைச்சு பார்க்கும்படி எழுதியிருந்தார், உன் குருநாதர். அதுக்காகத்தான் இப்படிக் கேள்வி கேட்டேன். அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமை கத்துண்டு இருக்கே. உன் குருநாதர்கிட்டேயும் சொல்லிடு!’ன்னு சொல்லி காமகோடி சாஸ்திரிகளை ஆசிர்வதிச்சார்.
அதோட, “ஒரு விக்ரகம் பூஜா விக்ரகமா பிரதிஷ்டை செய்யப்பட்டபிறகு அதுக்கு பூஜை செய்யறவர் எந்தக் காரணத்தாலும் வழிபாட்டு முறைகளையோ, பூஜை நேரத்தையோ மாற்றவே கூடாது. மாற்றம் இல்லாம தொடர்ந்து செய்யறபோது, அந்த விக்ரகத்துல தெய்வ சான்னித்யம் நிறைஞ்சுடும். அதுக்கப்புறம் அந்த விக்ரகத்தை பூஜிக்கறவர், வணங்கற பக்தர்கள்னு எல்லாருக்குமே அந்த தெய்வீக சக்தி பலன்தர ஆரம்பிச்சுடும். அந்த விக்ரகம் இருக்கற தலம் சுபிட்சம் நிறைஞ்சதா மாறிடும்!’ அப்படிங்கற முக்கியமான விஷயத்தையும் எல்லாருக்கும் சொன்னார் ஆசார்யார்.

பி. ராமகிருஷ்ணன் in Kumudam Bakthi Tamil

natarajan

“கூடையிலே வேறு என்ன கொண்டு வந்திருக்கே …” !!!

எந்த பக்தராவது கொன்றைப்பூ கொண்டு வந்து கொடுத்தால், பெரியவாள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் காரணம்; பரமேசுவரன் மிகவும் உவந்து ஏற்றுக் கொள்ளும் பூ-கொன்றைப்பூ.

ஒரு பக்தர்,கூடை நிறைய கொன்றைப் பூ கொண்டு வந்து சமர்ப்பித்தார். பெரியவாள் கூடையையே ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள். “கூடையிலே வேறே என்ன கொண்டு வந்திருக்கே?” “கொன்றைப் பூ மட்டும்தான்” “இல்லே! பரமேசுவரனுக்கு உகந்த பூ மட்டும் கொண்டு வரலே. அவனுக்கு ஆபரணமும் கொண்டு வந்திருக்கே!”

யாருக்கும் விளங்கவில்லை. பூக்கூடையை சற்றுத் தள்ளி எடுத்துக் கொண்டு போய்,ஒரு மூங்கில் தட்டில் கவிழ்க்கச் சொன்னார்கள்.

தட்டில் கொட்டியவுடன், ஒரு சர்ப்பம் சர்ரென்று வெளிப்பட்டு நொடி நேரத்தில் ஓடி மறந்தே போயிற்று.

பரபரப்புடன் பெரியவாளிடம் வந்து சொன்னார்கள்.

பெரியவாள் புன்னகைக்கிற மாதிரி தரிசனம் கொடுத்துக் கொண்டு, அந்த பக்தரைப் பார்த்து,”இனிமேல் சந்திரமௌலீஸ்வரருக்கு பூ மட்டும் கொண்டு வா: ஆபரணம் எல்லாம் வேண்டாம்!” என்றார்கள்.

அலை அலையாய் சிரிப்பு…

source::::: www. periva.proboards.com
natarajan

Cassette Tapes are Back ?…. SONY Says “Yes” !!!

The cassette tape has long been irrelevant in the consumer market, with the technology hanging on only in a few isolated hipster music circles. In storage media industry, however, cassettes have never really gone out of style. Magnetic tape is still one of the most reliable ways to archive large amounts of data, and the technology is still improving.

Sony has announced that its new magnetic tape technology is designed to store more information on a single cassette than ever before. According to the company, the new technology has a “nano-grained magnetic layer with fine magnetic particles and uniform crystalline orientation.” What this means is a new cassette that can store more than 185TB of data on a single cartridge with a recording density of 148GB per square inch. This is, according to Sony, 74 times the amount of data that can be stored on the current highest-density magnetic tape storage cassettes.

Sony officially announced its new magnetic tape tech earlier this week at the INTERMAG conference in Dresden, Germany. The announcement was made in conjunction with IBM, which measured the recording density of the new media for Sony.

Sony is calling its new magnetic tape the “next generation” of tape storage media. The product was created by placing uniform layers of crystals on polymer film thinner than 5 micrometers. This was accomplished using a technique called “sputter deposition” and optimizing the technique to provide smooth layers of crystals that are uniform in size. The average thickness of each of these layers is 7.7 nanometers.

Sony is betting that its new storage technology will be sorely needed in the growing age of cloud computing. Though end users can interact with cloud data in the magical-sounding way the marketing hype suggests, the companies behind these cloud products actually have to store many terabytes of data. With data storage facilities quickly growing, any chance to save space through greater storage density is likely to be popular with large data storage businesses.

Image via Wikimedia Commons

source::::: Stumbleupon.com

natarajan

Cute Little Humming Bird …In a Safe and Kind Hand !!!

This little hummingbird got injured by an attack and was rescued by this young man, who also took care of her and nursed her back to health for months, even catching insects for it to eat every day.

He tells: “When she thought she was ready to leave (and she was) she flew off to her favorite patch of the back yard, and her instincts instantly kicked in, and now she’s just like all the other hummingbirds. for those that are concerned that she has imprinted on humans and wouldn’t survive in the wild, don’t worry, she is thriving. she has even successfully migrated and returned back to my yard.

We must applaud his patience and kindness, and get inspired ourselves, to save and help any creature we can.

 

 

source:::::: ba-ba mail site & You Tube

natarajan

 

 

“ஐஸ்க்ரீமுக்கும் இருக்குங்க ஹிஸ்டரி…” !!!

கத்தரி வெயிலில் “ஐஸ்க்ரீம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே உடலும் மனமும் சில்லிடும். வீட்டைச் சுற்றும் தள்ளுவண்டி ஐஸ் ஆகட்டும், இரவு நேர குல்ஃபி ஆகட்டும் அல்லது அடுக்குமாடி கட்டடங்களில் குளிர்சாதன அறையில் குளிரூட்டப்படும் ஐஸ்க்ரீம் ஆகட்டும் அத்தனைக்குமே மக்கள் மத்தியில் மவுசு அதிகம். அது சரி இந்த ஐஸ் க்ரீம் எப்படித் தோன்றியது?

ஐஸ்க்ரீமுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. “ஃப்ரோஸன் கஸ்டர்டு’, “ஃப்ரோஸன் யோகட்’, “சோர்பெட்’, “ஜெலடோ’ என்று பலப்பெயர்கள் இதற்கு உண்டு.

கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே ஐஸ்க்ரீம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கி.பி 37-68-ல் வாழ்ந்த ரோமப் பேரரசன் நீரோ மலைகளில் இருந்து ஐஸ்கட்டிகளை வெட்டிக் கொண்டு வரச்செய்து அதன் மேல்புறத்தில் பழத்தால் அலங்காரம் செய்து சாப்பிட்டுள்ளான். கி.பி.5-ம் நூற்றாண்டில் க்ரீஸ் நாட்டு மக்கள் வெண்பனியில் தேன், பழங்கள் சேர்த்து சாப்பிடுவார்களாம்.

கி.பி. 618-197-ல் வாழ்ந்த சீன அரசன் டேங் ஐஸ்கட்டிகளையும் பாலையும் சேர்த்து ஐஸ்க்ரீமை உருவாக்கும் முறையை பின்பற்றினான். சில நூற்றாண்டுகள் கழித்து 1295-ல் மார்கோ போலோ சீனாவுக்கு விஜயம் செய்தார். அப்போது அங்குள்ள ஐஸ்க்ரீம் தயாரிக்கும் முறையை இத்தாலிக்குக் கொண்டு சென்றார். இதனால் ஐரோப்பா கண்டம் முழுவதும் ஐஸ்க்ரீம் புகழ் பரவியது. அதற்கு முன்பு வரை ஐஸ்க்ரீமின் சிறப்பு விளம்பரப்படுத்தப்படவில்லை.

இந்த ஐஸ்க்ரீம் ஐரோப்பியாவுக்கும் இடம் பெயர்ந்தது. அதன் பின்பு படிப்படியாக ஐஸ்க்ரீம் ரெசிபிகள் உருவாக ஆரம்பித்தன.

பாரசீக சாம்ராஜியத்தில் பனியின் மீது திராட்சை ரசத்தை ஊற்றி விருந்துகளில் பறிமாறுவார்கள். அதுவும் கோடைக்காலத்தில்தான் இதனை விரும்பி உண்பார்கள். பாரசீகர்கள் பனியை சேமிக்க தரைக்கடியில் உள்ள பிரத்யேக அறைகளை உருவாக்கினர். அல்லது மலையின் உச்சியில் மீந்திருக்கும் பனியை சேகரித்து விருந்துகளில் பறிமாறுவார்கள்.

1533-ம் ஆண்டு இத்தாலிய சீமாட்டி ஒருத்தி பிரஞ்சு சீமான் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டாள். அப்போது சீரின் ஒரு பகுதியாக “ஜெலடியரி’ எனப்படும் ஐஸ்க்ரீம் தயாரிப்பவர்களை இத்தாலியிலிந்து பிரான்ஸூக்கு கொண்டு சென்றாள்.
100 ஆண்டுகளுக்குப் பின்பு நான்காம் ஹென்ரியின் மகள் இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்லûஸ மணந்து கொண்டபோது ஐஸ்க்ரீம், ஆங்கிலக் கால்வாயைக் கடந்தது. முதலாம் சார்லஸ் ஒரு ஐஸ்க்ரீம் கலைஞனின் ரெசிபியில் கவரப்பட்டு, அந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்று அந்தக் கலைஞனுக்கு ஆயுள் முழுவதுக்கும் பெருந்தொகையை ஊதியமாக வழங்கிக்கொண்டே இருந்தார். அப்போதுதான் அந்த ஐஸ்க்ரீமுக்கு தனித்துவமான புகழ் கிடைக்கும் என நினைத்தார்.

இந்தியாவில்…
இந்தியாவைப் பொருத்தவரை, 16-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர்கள் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானும் இடையில் 800 கி.மீ. நீளம் உள்ள ஹிந்து குஷ் என்ற மலைத்தொடரில் இருந்து குதிரை வீரர்கள் மூலமாக ஐஸ் கட்டிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளனர். பழச்சாறு மூலம் தயாரிக்கப்பட்ட ஓர் இனிப்பை ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து விருந்துகளில் பறிமாறுவார்கள்.

ஐஸ்க்ரீம் ரெசிபிகள்: ஐஸ்க்ரீமுக்கென்று தனியாக ரெசிபிக்கள் உருவாக ஆரம்பித்தது 18-ம் நூற்றாண்டில்தான். சமையல் முறைகள், குறிப்புகள் அடங்கிய ஆங்கிலத்தின் முதல் இதழான “மிசிஸ். மேரி ஏல்ஸ் ரெசிப்ட்ஸ்’-ல் 1718-ம் ஆண்டு முதல் ஐஸ்க்ரீம் ரெசிபி வெளியானது.

குளிர்சாதனப் பெட்டிக்கு முன்பு…
நவீன குளிரூட்டும் முறை கண்டுபிடிக்கும் முன்பு ஐஸ்க்ரீம் என்பது பெரும் செல்வந்தர்களுக்கே உரியதாக இருந்தது. பண்டிகைகளில், விருந்துகளில் மட்டுமே ஐஸ்க்ரீம் இடம்பிடிக்கும். அதனை உருவாக்குவதற்கும் கடினமாக உழைக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை உறைந்து போயிருக்கும் ஏரி, குளங்களிலிருந்து குளிர்காலத்தில் வெட்டி எடுத்து வருவார்கள். நிலத்தில் துளையிட்டு அதனை சேமித்து வைப்பார்கள். அதன் பின்பு நிலத்தில் மரத்தினாலான பெட்டிகளில் அல்லது செங்கலால் உருவாக்கப்பட்ட ஐஸ் வீடுகளில் வைக்கோல் பரப்பி அதன் மீது ஐஸ் கட்டிகளை வைப்பார்கள்.

மிகவும் புகழ் பெற்றத் தலைவர்கள், விவசாயிகள், தோட்ட முதலாளிகள், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்ஸன் உள்ளிட்டோர் குளிர்காலத்தில் ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வந்து சேமித்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ரெட்டிரிக் டியடோர் ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வந்து, அதனை ஒழுங்கான வடிவங்களாக செதுக்கி, உலகம் முழுவதற்கும் கப்பலில் ஏற்றுமதி செய்து பெரும்பணம் படைத்தான்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக்கப் ஃப்யூசெல் என்பவர்தான் முதன் முதலில் ஐஸ்க்ரீம் விற்பனையை பெரிய அளவில் செய்யத் தொடங்கினார்.

“பாட் ஃப்ரீஸர்’ முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் உப்பு மற்றும் ஐஸ்கட்டிகளைப் போட்டு அதனுள் ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதில் ஐஸ்க்ரீம் தயாரித்தனர். இதற்கு “பாட்-ஃப்ரீஸர்’ முறை என்று பெயர். இதில் பெரிய பாத்திரத்திற்குள் இருக்கும் உப்பும், ஐஸ்கட்டியும் சிறிய பாத்திரத்தினுள் வைத்துள்ள ஐஸ்க்ரீம் செய்யத் தேவையான பொருள்களின் வெப்பத்தை குறைத்து அதனை உறைய வைக்கும்.

சில காலத்திற்குப் பிறகு ஒரு பாத்திரத்தினுள் ஐஸ்கட்டிகள் மற்றும் உப்பைப் போட்டு, ஓர் உருளைக்குள் அடைக்கப்பட்ட ஐஸ்க்ரீம்களை அதனுள் வைப்பார்கள். அதில் ஓர் கைப்பிடியும் இருக்கும். கைப்பிடியைச் சுற்றச் சுற்றச் உருளைக்குள் உள்ள ஐஸ்க்ரீம் கெட்டியாகிவிடும். இந்த இயந்திரத்தை யார் உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 1843-ம் ஆண்டு நேன்சி ஜான்சன் என்பவர் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். “பாட் ஃப்ரீஸர்’ முறைக்குப் பின்பு இந்தப் புதிய முறை வழக்கில் இருந்தது. நேன்சி, ஐஸ்க்ரீம் இயந்திரத்திற்கு காப்புரிமை பெற்ற பிறகு பலர் அந்த இயந்திரத்தை மேம்படுத்தி காப்புரிமை பெற்றனர்.

 


ஐஸ்க்ரீம்களை தொழிற்சாலையில் பதப்படுத்தும் முறையை 1870-ம் ஆண்டு ஜெர்மனைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்தார். இயற்கையான ஐஸ் கட்டிகளை வெட்டியெடுத்து சேமிக்கும் முறை இதன் மூலம் கைவிடப்பட்டது. 1926-ம் ஆண்டு நவீன ஐஸ்க்ரீம்கள் தொழிற்சாலைகள் தோன்றி, செயற்கை ஐஸ்கட்டிகள் உருவாக்கப்பட்டன.

SOURCE:::   Vanishree Sivakumar in  Dinamani

natarajan

இமாசல பிரதேசத்தில் வாக்களித்தார் நாட்டின் முதல் வாக்காளர் நேகி !!!

 

மனைவி ஹிரா மணியுடன் வெற்றிச் சின்னத்தை காட்டும் சியாம் சரண் நேகி.
மனைவி ஹிரா மணியுடன் வெற்றிச் சின்னத்தை காட்டும் சியாம் சரண் நேகி.
இமாசலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தின் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை வாக்களித்தார் 97 வயது சியாம் சரண் நேகி. இந்தத் தேர்தலில் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியோ ராகுல் காந்தியோ அர்விந்த் கேஜ்ரிவாலோ கதாநாயகன் அல்ல. நேகிதான். காரணம் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தல் முதல் ஒன்றுவிடாமல் தவறாமல் வாக்களித்து வருகிறார் நேகி.

ஜனநாயகத்தின் உண்மை யான மன்னர்கள் மக்கள்தான் என்பதை நிரூபிக்கும் கோடானுகோடி இந்தியர்களில் நேகி முதன்மையானவர். தான் வசிக்கும் கல்பா என்ற இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு வந்தபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெண்ணிற முடியும் சுருக்கம் விழுந்த சருமங்களும் இந்திய வாக்காளர்களில் அவர்தான் பீஷ்ம பிதாமகர் என்பதைச் சொல்லாமல் சொல்லின. உடன் அவருடைய 87 வயது மனைவி ஹிரா மணியும் வந்தார்.

இமாசல மாநிலத்துக்கே உரிய பாரம்பரிய தொப்பி அணிந்திருந்த நேகி வாக்களித்துவிட்டு மை தோய்ந்த கையை தொலைக்காட்சி கேமராக்களுக்குக் காட்டினார்.

அதிகம் கேள்விப்பட்டிராத ஒரு கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியர் நேகி, நவ இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளில் ஒருவரானதுதான் சுதந்திர இந்தியாவின் வரலாறு.

1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடுமையான குளிரில் பாதையெல்லாம் பனிபெய்து மூடியிருக்க நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்களித்தவர்தான் சியாம் சரண் நேகி. அப்போது அவருக்கு வயது 34. 1952 பொதுத் தேர்தல் முதல் கட்டமாக 1951-லேயே இமாசலத்தில் தொடங்கியது. பிற மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது இமாசலத்தில் கடும் குளிர்காலமாக இருக்கும் என்பதாலும் அது வேட்பாளர் களுக்கும் வாக்குச்சாவடி அதிகாரி களுக்கும் பெரிய இடை யூறாக இருக்கும் என்பதாலும் தேர்தல் அங்கு முன்கூட்டியே நடந்தது.

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நாளை நேகி மறக்கவில்லை. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்கைப் பதிவுசெய்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியும் பெருமையும் கர்வமும் நேகிக்கு ஏற்பட்டது. அதை இப்போதும் அவருடைய முகத்தில் பார்க்க முடிகிறது.

ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கையுள்ள நேகி, ஒரு தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்ததில்லை. வயோதிகம் வளைத்துவிட்ட முதுகை, வாலிப உற்சாகத்தோடு நிமிர்த்தி, கையில் கோலுடன் நடந்து வருகிறார் நேகி. “மழையோ, பனியோ எது வந்தாலும் வாக்களிக்கத் தவறி யதே இல்லை” என்று கூறுகிறார்.

வாக்குச் சாவடிக்கு காலை யிலேயே வந்த வாக்காளர்களில் நேகியும் அவருடைய மனைவியும் ஒருவர். வாக்களித்த பிறகு நிருபர் களைச் சந்தித்த நேகி, “இந்த முறை யும் தவறாமல் என்னுடைய மதிப்பு மிக்க வாக்கைச் செலுத்தி விட்டேன்” என்று அறிவித்தார்.

 

Pl also see the following link …

https://natarajank.com/2014/04/23/an-inspiring-video-must-watch/

source:::: The Hindu…Tamil

natarajan

 

” ஆமா …உனக்கு அப்போ ஒன்பது வயசு … “

மிருதங்க வித்வான் ஒருவர் சிறு பையனாக இருந்தபோது பெரியவாளுடைய சந்நிதியில் நடந்த சங்கீத கச்சேரிக்கு தன் அப்பாவோடு போனார். அவருடைய அப்பாவும் மிருதங்க வித்வானானதால், அன்று மகனை மிருதங்கம் வாசிக்க
அமர்த்திவிட்டார். இரவு எல்லாருக்கும் ப்ரஸாதம் வழங்கினார்கள். அப்போது பெரியவா அந்தப் பையனை மட்டும் அழைத்து ஒரு சிவப்புப் பட்டு வழங்கி ஆசிர்வதித்தார்.

பல வர்ஷங்கள் கழித்து அந்தப் பையன் வானொலி நிலையத்தில் பணி புரிந்துவந்தார். அப்போது வானொலி நிலைய இயக்குனரோடு பெரியவாளை தர்சனம் பண்ணப் போனார். போகும்போது ஞாபகமாக அந்த சிவப்புப்பட்டையும்
எடுத்துக் கொண்டு போனார். பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு “இந்த பட்டு வஸ்த்ரம் பெரியவாதான் அனுக்ரகம் பண்ணிக் குடுத்தேள் …” என்றதும், “ஆமா….அப்போ ஒனக்கு ஒம்பது வயஸ்..” என்று சொன்னதும், ஆடிப்போய்
விட்டார்!

45 வர்ஷங்களுக்கு முந்தி நடந்ததை, ஏதோ நேற்று நடந்த மாதிரி பெரியவா சொன்னார். ஞானிகள் காலம், இடம் இரண்டையும் கடந்தவர்கள் இல்லையா?

அதே பக்தர் வீட்டில் பெரியவாளுடைய படங்கள் விதவிதமான போஸ்களில் மாட்டியிருந்தார். சொந்த ஊரை விட்டு தஞ்சாவூரில் சிலகாலம் வசிக்க வேண்டிய சூழ்நிலை! அந்த வீட்டில் பெரியவாளுடையது ஒரு படம் கூட இல்லை! மனசுக்குள் ஏதோ தவிப்பு! சஞ்சலம் ! அரிசி வாங்குவதற்காக கடைக்குப் போனார். புது ஊர்!

மாதிரிக்காக ஒரு கிலோ அரிசி வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். அவர் குடுத்த பேப்பர் பை ரெண்டு நாட்களாக வீட்டில் கிடந்தது. மூன்றாவது நாள் அதை குப்பையில் போடுவதற்காக எடுத்தால்……..அந்தப்பையின் மேல் பக்கத்தில் “இதோ! வந்துட்டேன் பாத்தியா!..” என்று அழகாக சிரித்துக்கொண்டு பெரியவா! பக்தருக்கு நன்றியில் அழுவதைத்தவிர என்ன பண்ண முடியும்?
————————————————————————————
உண்மையான குழந்தை உள்ளத்தோடு தேடினால், பெரியவா நிச்சயம் கிடைப்பா!
———————————————————————————–

source::::: http://www.periva.proboards.com

natarajan

” எனக்கு புடவை கொடு… புடவை கொடு …. “

ஒரு தடவை ஆந்திராவில் மகா பெரியவா முகாமிட்டு இருந்தபோது நடந்த சம்பவம் இது. வழக்கமான பூஜை நேரம். மகான் சிறிய காமாட்சி உருவசிலையை முன்னால் வைத்து பூஜையை ஆரம்பித்துவிட்டார.

அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருத்தி ஏகமாக சத்தமிட்டு கொண்டு ‘எனக்கு புடவை கொடு… புடவை கொடு!’ என்று கூவினாள், ரகளை செய்தாள்.

அவள் உடலில் பழைய புடவை ஒன்று கந்தல் கந்தலாக காட்சியளித்தது. அவளின் இடது முழங்காலுக்கு மேலே புடவை கொஞ்சம் பெரிதாகவே கிழிந்திருந்தது

‘பூஜை நேரத்தில் இப்படி ஒரு தொலையா?’ என்று பெரியவாளின் சிஷ்யர்கள் அவளை அங்கே இருந்து விரட்ட தொடங்கினார்கள்.

அமைதியாக அவளை பார்த்த மகான், அவர்களை பார்த்து கையமர்த்திவிட்டு, ஒரு புடவையை கொண்டு வர சொல்லி, அதை தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார். புடவையை எடுத்துக்கொண்ட அவள் அங்கிருந்து வேகமாக போய்விட்டாள்.

அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவருக்கு மனதில் ஏதோ சந்தேகம். அவள் பின்னாலேயே வேகமாக போனார். ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில அந்த சிஷ்யர் கடந்த போது, அவர் கன்னத்தில் யாரோ ‘பளீர்’ என்று அறைந்தது போலிருந்தது!

அங்கேயே மயங்கி விழுந்தவர் பெரியவா இருந்த இடத்துக்கு வர சற்று நேரமாயிற்று.

‘என்னடா… புடவை என்னாச்சுனு பார்க்க போனியோ? வந்தவ அம்பாள்டா மடையா’ என்று தன் முன்னே இருந்த விக்ரகத்தை சுட்டி காட்டினார் மகா பெரியவா. வந்தவளின் உடலில் புடவை எங்கு கிழிந்திருந்ததோ, அதே இடத்தில தான் தேவியின் சிலையில் உடுத்தப்பட்டிருந் சேலையும் கிழிந்திருந்தது!

தனக்கு என்ன தேவை என்று மகானிடம் நேரில் கேட்டு பெரும் வழக்கத்தை அந்த அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!

source:::: http://www.periva.proboards.com

natarajan