” மருத்துவருக்கே மருத்துவம் சொன்ன மஹா மருத்துவர் ….”

மஹாபெரியவா அவர் காலத்தில் ஒரு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார் என்பதை பல நிகழ்ச்சிகள் நமக்குச் சொல்கின்றன.

”வெள்ளைத் தாமரையில் கஷாயம் வைத்து சாப்பிடு” என்றும் ”வில்வ இலையைத் தினமும் காலையில் சாப்பிடு” என்றும் “துளசி தீர்த்தத்தை தொடர்ந்து சாப்பிடு” என்றும் பலருக்குச் சொல்லி அவர்களது தீராத நோய்களைத் தீர்க்க உதவியிருக்கிறார். ஏறக்குறைய இது வைத்தியர் வேலைதானே?

இவற்றிற்கு மேலாக அவர் தம்மிடம் நேரில் வரமுடியாத பக்தர்களுக்கு அவர்களது கனவில் தோன்றி ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.

அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று – வைத்தியர் ஒருவருக்கே ஏற்பட்டது.

பெங்களூர் நகரில் அவர் மிகவும் பிரபலமான டாக்டர். ‘கைராசி’யான டாக்டர் என்றும் அவர் புகழப்பட்டார். நோயாளிகளிடம் அதிகப் பணம் கேட்பது கிடையாது. வந்தவர்கள் எல்லாரும் நோய் குணமாகி திரும்பினார்கள் என்னும் சிறப்பு இருந்தும் அவருக்குத் தேர்வு வைத்ததைப் போல் அவரிடம் ஒரு நோயாளி தன் நோயைத் தீர்க்க அணுகினார்.

வயிற்றுவலிதானே என்று முறைப்படி டாக்டரும் அந்த நோயாளிக்கு மருந்து கொடுத்தார். ஓரிரு நாளில் குணமாகிவிடும் என்று டாக்டரும், இவரிடம் வந்தால் தனது உபாதை தீர்ந்துவிடும் என்று அந்த நோயாளியும் நினைத்தனர். இருவரது நம்பிக்கையையும் நோய் தகர்த்தெறிந்தது. வயிற்றுவலி குணமாகவே இல்லை. டாக்டர் தொடர்ச்சியாக தனக்குத் தெரிந்த எல்லா மருந்துகளையும் அவருக்குக் கொடுத்துப் பார்த்தார். நோயாளியும் பிடிவாதமாக இந்த டாக்டரைத் தவிர வேறு டாக்டரிடம் போகக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டது போல் இவரிடமே வந்தார். இவர் கொடுத்த மருந்தை மட்டும் விடாமல் சாப்பிட்டார். பலன் தான் இல்லை.

மனம் வெறுத்துப் போன டாக்டர், தமது தெய்வம் என்று உபாசித்த காஞ்சி மஹானை வேண்டினார். இந்த டாக்டர், மஹானின் நெருங்கிய பக்தர்களில் மிகவும் முக்கியமானவர். சமயம் கிடைக்கும் போதெல்லாம் டாக்டர் மஹானை நேரில் வந்து தரிசிக்கத் தவறுவதே இல்லை.

“சர்வேஸ்வரா என்ன சோதனை இது? என்னிடம் வந்தவர்களில் உங்கள் அருளால் குணமாகிப் போனவர்கள் தான் அதிகம். இந்த ஒரு நோயாளி மட்டும் என் வைத்தியத்திற்கே சோதனை வைத்துக்கொண்டு இருக்கிறாரே? இதிலிருந்து மீள்வதற்கு எனக்குத் தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்” என்று மனமுருகி மஹானை வேண்டினார். டாக்டரும் மஹானிடம் நேரில் வரவில்லை. அதனால் என்ன? தனது பக்தனுக்கு அருள் பாலிக்க அன்று இரவே மஹான் டாக்டரின் கனவில் வந்தார்.

“நீ அந்த நோயாளியின் சாப்பாட்டு நேரத்தைப் பற்றிக் கேள். பிறகு அதை மாற்றி அமைத்தால் எல்லாமே சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார். டாக்டர் தமக்கு மஹான் உத்தரவிட்ட விஷயமாக யோசித்தார். ‘சாப்பாட்டை மாற்றி அமை’ என்றால் எப்படி?

அந்தத் தொழிலாளி ஒரு மில்லில் வேலை செய்பவர். மறுநாள் அவர் வந்தபோது அவரிடம் சாப்பாட்டு நேரத்தைக் கேட்டார்.

“மில்லில் வேலை எல்லாம் முடிந்த பிறகு மாலை ஐந்து மணியிலிருந்து ஆறுமணிக்குள் எனது ஆகாரத்தை முடித்துக் கொள்வேன்” என்று தொழிலாளி சொன்னார். சரியான பிரதோஷ காலமல்லவா அது?

டாக்டர் அவரிடம் “நீ சாப்பிடும் நேரம் சரியாக இல்லை. காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை ஒழுங்காகச் சாப்பிட்ட பின் என்னிடம் வா” என்றார்.

“டாக்டர் சொல்லிவிட்டாரே” என்று தொழிலாளியும் தனது ஆகார நேரத்தை மாற்றி அமைத்தார். மஹானின் உத்தரவல்லவா அது?

தொடர்ந்து ஒரு வாரம் ஆகாரத்தைக் குறித்த நேரத்தில் சாப்பிட்ட தொழிலாளி டாக்டரிடம் வந்தார்.

“இப்போதெல்லாம் எனக்கு வயிற்றுவலி வருவதே இல்லை டாக்டர். நான் மருந்து கூட சாப்பிடுவதில்லை” என்றார். தெய்வ வைத்தியர் கொடுத்த யோசனை அல்லவா இது! டாக்டர், மஹானின் திக்கு நோக்கி வழிபட்டார்.

டாக்டருக்கு மேல் டாக்டராக விளங்கும் அந்த மஹானின் பாதார விந்தங்களை நாம் பற்றிக் கொண்டால் நமக்கு நோய் எங்கேயிருந்து வரும்? வைத்தியர் நேரில் சொன்ன அனுபவம் இது.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர

Read more: http://www.periva.proboards.com/thread/6536/doctors-advisor-mahaperiyavaa-venkatasaamys-book#ixzz2uJRgdWsH

natarajan

” இவர் சிவப் பழம் …இவருக்கு நெறைய பழம் கொடு …”

 

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற
மனமே பொன் செய்யும் மருந்து.

கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம்.
தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,
மாரியம்மன் கோயில்,சிவன் கோயில்
எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத்
திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட
அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.
அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை
கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம்
தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில்
நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர்
முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்)
மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில்
கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள்.

ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும்
தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.
கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!

தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப்
பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.

‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது.
அது சிவரகசியம்!

அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர்.
அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!

அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.

உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து
பையன்களை உடன் வைத்துக்கொண்டு
சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக
நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச்
செய்யவில்லை பெரியவாள்.

அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத்
தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு
கொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்த
ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில்
வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர்.பெரியவாள்,
அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச்
சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச்
சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய
பண்டிதரா? யாகம் செய்தவரா..?

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.

“இவரைப் பார்த்திருக்கிறாயோ?”

“இல்லை”

“இவர் அட்ரஸ் தெரியுமோ?”

“தெரியாது”

“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?”
(என்ன குறும்பு!)

“சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்!
இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்கு
வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!”

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.
ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப்
பார்த்ததில்லையே…

“இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய
பழங்கள் கொடு…”

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர்
என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.

அது எந்தவகை ஸித்தி?
ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு
தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

 

            
source::::input from a friend of mine
natarajanIvarukku

 

Message for the Day…” God is Giving us Everything with many Hands…”

There was once an old woman in Paris. It was winter and December was around the corner. Many poor people were sleeping on the streets and shivering with cold. She went around the streets and covered them with a blanket. She completed the job without any fuss or noise. Over time, the people in the town came to know about it. They wondered why this humble old woman who was herself struggling to make her ends meet setting out to help others! When children used to ask her, “Grandma, why are you walking with your head down? You are a great person!” she would respond humbly, “God is giving us everything with many hands, and I am giving with a single hand. Is that not a shame for me?” Many great people world over, have placed before us the high ideals of charity  

Sathya Sai Baba

Satya Nadella email to employees on first day as CEO …

From: Satya Nadella
To: All Employees
Date: Feb. 4, 2014
Subject: RE: Satya Nadella – Microsoft’s New CEO

Today is a very humbling day for me. It reminds me of my very first day at Microsoft, 22 years ago. Like you, I had a choice about where to come to work. I came here because I believed Microsoft was the best company in the world. I saw then how clearly we empower people to do magical things with our creations and ultimately make the world a better place. I knew there was no better company to join if I wanted to make a difference. This is the very same inspiration that continues to drive me today.

It is an incredible honor for me to lead and serve this great company of ours. Steve and Bill have taken it from an idea to one of the greatest and most universally admired companies in the world. I’ve been fortunate to work closely with both Bill and Steve in my different roles at Microsoft, and as I step in as CEO, I’ve asked Bill to devote additional time to the company, focused on technology and products. I’m also looking forward to working with John Thompson as our new Chairman of the Board.

While we have seen great success, we are hungry to do more. Our industry does not respect tradition — it only respects innovation. This is a critical time for the industry and for Microsoft. Make no mistake, we are headed for greater places — as technology evolves and we evolve with and ahead of it. Our job is to ensure that Microsoft thrives in a mobile and cloud-first world.

As we start a new phase of our journey together, I wanted to share some background on myself and what inspires and motivates me.

Who am I?

I am 46. I’ve been married for 22 years and we have 3 kids. And like anyone else, a lot of what I do and how I think has been shaped by my family and my overall life experiences. Many who know me say I am also defined by my curiosity and thirst for learning. I buy more books than I can finish. I sign up for more online courses than I can complete. I fundamentally believe that if you are not learning new things, you stop doing great and useful things. So family, curiosity and hunger for knowledge all define me.

Why am I here?

I am here for the same reason I think most people join Microsoft — to change the world through technology that empowers people to do amazing things. I know it can sound hyperbolic — and yet it’s true. We have done it, we’re doing it today, and we are the team that will do it again.

I believe over the next decade computing will become even more ubiquitous and intelligence will become ambient. The coevolution of software and new hardware form factors will intermediate and digitize — many of the things we do and experience in business, life and our world. This will be made possible by an ever-growing network of connected devices, incredible computing capacity from the cloud, insights from big data, and intelligence from machine learning.

This is a software-powered world.

It will better connect us to our friends and families and help us see, express, and share our world in ways never before possible. It will enable businesses to engage customers in more meaningful ways.

I am here because we have unparalleled capability to make an impact.

Why are we here?

In our early history, our mission was about the PC on every desk and home, a goal we have mostly achieved in the developed world. Today we’re focused on a broader range of devices. While the deal is not yet complete, we will welcome to our family Nokia devices and services and the new mobile capabilities they bring us.

As we look forward, we must zero in on what Microsoft can uniquely contribute to the world. The opportunity ahead will require us to reimagine a lot of what we have done in the past for a mobile and cloud-first world, and do new things.

We are the only ones who can harness the power of software and deliver it through devices and services that truly empower every individual and every organization. We are the only company with history and continued focus in building platforms and ecosystems that create broad opportunity.

Qi Lu captured it well in a recent meeting when he said that Microsoft uniquely empowers people to “do more.” This doesn’t mean that we need to do more things, but that the work we do empowers the world to do more of what they care about — get stuff done, have fun, communicate and accomplish great things. This is the core of who we are, and driving this core value in all that we do — be it the cloud or device experiences — is why we are here.

What do we do next?

To paraphrase a quote from Oscar Wilde — we need to believe in the impossible and remove the improbable.

This starts with clarity of purpose and sense of mission that will lead us to imagine the impossible and deliver it. We need to prioritize innovation that is centered on our core value of empowering users and organizations to “do more.” We have picked a set of high-value activities as part of our One Microsoft strategy. And with every service and device launch going forward we need to bring more innovation to bear around these scenarios.

Next, every one of us needs to do our best work, lead and help drive cultural change. We sometimes underestimate what we each can do to make things happen and overestimate what others need to do to move us forward. We must change this.

Finally, I truly believe that each of us must find meaning in our work. The best work happens when you know that it’s not just work, but something that will improve other people’s lives. This is the opportunity that drives each of us at this company.

Many companies aspire to change the world. But very few have all the elements required: talent, resources, and perseverance. Microsoft has proven that it has all three in abundance. And as the new CEO, I can’t ask for a better foundation.

Let’s build on this foundation together.

Satya

source::::Microsoft NesCenter….  http://www.microsoft.com/en-us/news/press/2014/feb14/02-04mail2.aspx

natarajan

“ஒங்களோட மேல் துண்டை கீழே போடுங்கோடா …”

கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம் பண்ணினார்கள். பெரியவா கரையில் அமர்ந்து ஜபம், அனுஷ்டானங்களை பண்ண தொடங்கினார்.

எல்லாம் முடிந்ததும் அருகில் இருந்த ரெண்டு சிஷ்யர்களை கூப்பிட்டு, ” ரெண்டு பேரும் ஒங்களோட மேல் துண்டை கீழ போடுங்கோடா !” என்றார். யாருக்கும் ஏன்? என்று புரியவில்லை. மிக மிக புதுமையான உத்தரவு! போட்டார்கள். பெரியவா சுற்றி அங்கே இங்கே பார்த்தார்……….மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரே ஒரு குட்டிப்பையன் நின்று கொண்டு பெரியவாளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்தாடா……….கொழந்தே! இங்க வா” சைகை பண்ணி அழைத்தார். வந்தான். நதி மேற்கிலிருந்து கிழக்காக இரு கரைகளையும் ஒட்டி அசாத்தியமாக சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியவா அந்த குட்டிப்பையனிடம் கன்னடத்தில் ” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே…….அந்த யங்குஸ்தர்கடே கொடப்பா! ” [இந்த ரெண்டு வஸ்த்ரங்களையும் அதோ ஆத்தோரம் தெரியற பொண்ணுகிட்ட குடு] என்று சொன்னார்.> > அந்த பையனும் எதிர் கரைக்கு நீந்தி போய், நீருக்குள் மூழ்கி, தலையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ரெண்டு வஸ்த்ரங்களையும் குடுத்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த பெண் அதே நிலையில் அமர்ந்திருந்திருக்கிறாள். பாவம்!

ஆற்றின் சுழிக்கும் வேகத்தில், அவளுடைய வஸ்த்ரங்கள் போயே போய்விட்டன ! எப்படி வெளியே வருவாள் ? வீட்டுக்கு எப்படிப் போவாள்? படிப்பறிவு சற்றும் இல்லையானாலும், பண்பாடு போகவில்லையே அந்த கிராமத்துப் பெண்களுக்கு!

“இந்த சனங்கல்லாம் எப்பத்தான் இந்த எடத்தை விட்டு எழுந்து போவாங்களோ!” என்று மடத்தினரைப் பார்த்து அவள் நொந்து போயிருக்கக்கூடும். யாத்ரையில் வந்தவர்கள் பார்வை நூறடிக்கப்பால் போகவில்லை. அவசியமும் ஏற்படவில்லை. அவளுடைய இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு தெரியாமல் யாருக்கு தெரியும்? அந்தர்யாமியில்லையா? த்ரௌபதி “கோவிந்தா” என்று அலறியதும், எங்கோ த்வாரகையில் இருந்தாலும், அவளுடைய அந்தர்யாமியாகவும் இருப்பவன் அவன்தானே! ஓடி வந்து அவள் மானத்தை காப்பாத்தவில்லையா? இந்த பெண் மனஸில் போட்ட ஓலம் கேட்டு, தானே முன்வந்து, அவள் மானத்தை காத்தார். அவள் மேல் துண்டுகளை சுற்றிக் கொண்டு, வெளிய வந்து அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீட்டை நோக்கி போனாள்.

source::::www.periva.proboards.com

natarajan

Message For the Day…”Keep Your Heart Sacred and Pure…”

Who is a bad person? Anyone who sees evil in good is bad; stay away from them. If you join bad company, knowingly or unknowingly, you will lose good qualities. Many have reaped poor fate due to bad company. Who is a good person? Anyone who sees good, even in a bad person, is good. You must develop friendship with the good. There may be some evil qualities in you; do not worry or become weak because of this. Develop good qualities increasingly. God will always be in you, with you, around you and will take care of you. Whatever task you undertake, discriminate carefully, follow the noble path and always do good acts. Keep your heart sacred and pure. Never fill it with bad thoughts and feelings. You must start early, drive slowly and reach safely. When you develop good qualities, your journey to the future will be smooth

 

Sathya Sai Baba

” சந்தர்ப்பங்களை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் …”

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒரு பிரபல வாரப்பத்திரிகை ஆசிரியர் மஹானிடம் தனிமையில் பேசி தமக்கு ஏற்பட்டுள்ள சில சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நினைத்தார், சந்தித்தார்.”நீ இப்போது என்னிடம் பேசலாம்” என்றார் மஹான் தமிழில்.

“சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவே நான் தங்களை சந்திக்க விரும்பினேன்” என்றார் ஆசிரியர் சுத்தமான தமிழில்.

“உன் தாய்மொழி என்ன?” முகத்தில் லேசாகப் புன்னகை தவழ மஹான் கேட்கிறார்; பின் அவரே தொடருகிறார். “உன் தாய் மொழி நிச்சயம் தமிழ்மொழியாக இருக்காது என்று எனக்குத் தெரியும்” என்கிறார். இதற்குக் காரணம் ஆசிரியர் சிரமப்பட்டுப் பேசிய தமிழ்தான்.

“தெலுங்கு” என்கிறார் ஆசிரியர்.

“நீ பிறந்த ஊர் எது?” என்று சுந்தரமான தெலுங்கில் கேட்டுவிட்டு, ஆசிரியரின் இளமைக்காலம், பெற்றோர், வாழ்க்கை, கல்வி, திருமணம், உத்தியோகம் – வேறு பல விஷயங்களில் இருந்த ஈடுபாடு போன்றவை பற்றி தெலுங்கிலேயே பேசி, ஆசிரியரையும் பேசவைத்தார்.

ஆசிரியர் இவற்றிற்கெல்லாம் பதில் சொன்னதால் அவர்களுக்கிடையே இருந்த இறுக்கம் சுத்தமாக மறைந்து போனது.

இந்த நேரத்தில் அங்கே வந்த ஒரு பக்தர் கன்னடத்தில் உரத்துப் பேசி ஆரம்பிக்கிறார். ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சுத்தமான கன்னடத்தில் பதில் சொல்கிறார்.

ஆசிரியருக்கு இதனால் ஏற்பட்ட வியப்பு மறைவதற்குள் இன்னொரு பக்தர் அங்கே வந்து மஹானை தனது தாய்மொழியான மலையாளத்தில் போற்றிப் புகழ்கிறார். இதனால் அவரது பேச்சுக்கு மஹான் ஒரு சிறு பிரசங்கமே செய்ய வேண்டியிருக்கிறது. அப்போது அவர் பேசிய மொழி மலையாளம்.

வருபவர்கள் எந்த மொழியில் பேசினாலும் அதே மொழியில் பதில் சொல்லும் மஹான் எந்தப் பள்ளியில் இந்த மொழிகளை படித்திருப்பார் என்று பத்திரிகை ஆசிரியர் வியந்து கொண்டிருக்கும்போதே, ஒரு பெரிய குழு அங்கே வருகிறது. அவர்கள் யாத்ரீகர்கள். அவர்களை அழைத்து வந்தவர் உள்ளூர் சம்ஸ்கிருத பண்டிதர். அவர் மஹானின் பேரில் சம்ஸ்கிருத பாஷையில் அழகான ஒரு கவிதையை வாசித்தார். மலையருவியின் நீர் வீழ்ச்சியைப் போன்ற சம்ஸ்கிருத பாஷையில் சொன்ன பாராட்டுரையைக் கேட்டு மகிழ்ந்த மஹானும், அவர்களுக்குப் பிடித்தமான சம்ஸ்கிருத பாஷையிலேயே பேசி அவர்களை ஆசீர்வதித்து பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

அடுத்ததாக, அரசாங்கத்தின் கடிதங்களுக்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி, எழுத வைத்து அதை சிப்பந்தியிடம் அப்போது அனுப்பி வைத்தார்.

ஆக, இந்தியாவின் புழக்கத்தில் உள்ள அவ்வளவு மொழிகளையும் மஹான் அறிந்து வைத்திருக்கிறார்.

ஆசிரியரும் இவரும் தொடர்ந்து பேச ஆரம்பிக்கும்போது இன்னொரு இடையூறு-வடநாட்டு யாத்ரீகர்கள் பலர், தங்களது உள்ளக்கிடக்கையை ஹிந்தியில் சொல்ல மஹான், அவர்களது சொந்த மொழியிலேயே ஹிந்தியிலேயே அவர்களுடன் பேசுகிறார். அவர்கள் போகும்போது அவர்கள் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சி ஆசிரியரைப் புல்லரிக்க வைக்கிறது.

அவர்கள் போனவுடன் மஹான் மெளனியாகிவிட்டார். பேச ஆரம்பிக்கலாம் என்று நினைத்த ஆசிரியருக்கோ இது அதிர்ச்சியைத் தந்தது. அப்போது திடீரென மஹான் சொல்கிறார்:

“இப்போது இந்துமத தர்மத்தில் பல குறைகள் இருக்கின்றன. அவைகளை அடுக்கிச் சொல்லிவிடலாம். ஆனால் அதன் நன்மைகளை ஆராய்ந்தால், வானத்து நட்சத்திரங்களைப் போல் அவை கணக்கிலடங்கா” என்றார்.

தொடர்ந்து மேலும் ஒரு இடையூறு –

ஆசிரியர் சொல்கிறார்:

“இன்று எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நினைக்கிறேன்”

மஹான் புன்னகை புரிந்தவாறு சொல்கிறார்:

“சந்தர்ப்பங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் நாளை மறுதினம் மதுரை செல்கிறோம். நீ அங்கே வரலாம். உனக்குத் தங்க வசதி செய்து கொடுக்கச் சொல்கிறேன்”.

“அவசியம் அங்கே வருகிறேன் ஸ்வாமிகளே” என்று ஆசிரியர் உத்தரவு பெற்றுக் கொள்கிறார். இந்த சம்பவத்தை சொல்வதற்குக் காரணம், ரட்சகரான மஹா பெரியவருக்கு எல்லா மொழிகளிலும் புலமையும் இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டத்தான். அந்த பத்திரிகை ஆசிரியரின் பெயர் ஏ.எஸ்.ராமன். அவர் அப்போது “இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இண்டியா” என்னும் பிரபல ஆங்கில வார இதழின் ஆசிரியர்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com
natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/6486/multilinguist-mahaperiyavaa-book-venkatasaam#ixzz2tAhXvmEu

” இட்லி என்று பெயர் எப்படி வந்தது … ?” !!!

வாழ்க்கைக்கும் சாப்பாட்டுக்கும் சம்பந்தம்

மஹான் சாப்பிடுவது என்னவோ அவல்பொரிதான். எப்போதாவது கீரையை தமது மதிய உணவில் சேர்த்துக் கொள்வார் என்று மடத்து ஊழியர்கள் சொன்னது உண்டு. இருந்தாலும் சமையல் பக்குவத்தைப் பற்றி அவர் சொல்வதைக் கேட்டு பிரபல சமையல்காரர்களே மூக்கில் விரல் வைத்திருக்கிறார்கள்.

அவ்வப்போது மடத்திற்கு அரிசி, பருப்பு, உளுந்து என்று பக்தர்கள் மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து கொடுப்பார்கள். ஒரு தடவை பக்தர் ஒருவர் தன் தோட்டத்தில் பயிரான கருணைக்கிழங்கை மூட்டையாகக் கொண்டு வந்து கொடுத்தார். மடத்தில் சிப்பந்திகள் மிகவும் திருப்தியாக அதை மசியல் செய்து எல்லோருக்கும் பரிமாறினார்கள். சாப்பிட்டவர்கள், முதலில் அதை எடுத்து வாயில் போட்ட பிறகு அதைத் தொடவே இல்லை. இலையில் மூலையில் அதை ஒதுக்கி வைத்து விட்டனர். ஏனெனில் கிழங்கு மசியல் நாக்கில் பட்டவுடன் அரிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால்தான் ஒதுக்கிவிட்டார்கள்.

இந்த ’மசியல் பகிஷ்காரம்’ மஹானின் காதுக்குப் போகாமல் இருக்குமா?

சமையல் செய்தவர்கள் மஹானின் முன்னால் கையைக் கட்டிக் கொண்டு விசாரணையை எதிர்பார்க்கும் குற்றவாளிகளைப் போல் நின்றுகொண்டு இருந்தார்கள்.

அவர்கள் எல்லோரும் பயந்தபடி ஏதும் நடக்கவில்லை. அமைதியான குரலில் மஹான் கேட்டார்:

“எப்படிச் சமையல் செய்தாய்?”

“கழுநீரில் நன்றாக அலசியபிறகு புளிவிட்டுக் கொதிக்க வைத்தேன்… இந்தக் கிழங்கு அதற்கெல்லாம் மசியவில்லை… அதனுடைய குணம் மாறவில்லை..” என்று பிரதம சமையல்காரர் குறைப்பட்டுக் கொண்டார்.

பெரியவா சிரித்தபடியே சொன்னார்:

“கருணைக்கிழங்கை வெந்நீரில் வேகவைக்கும்போது அதோடு வாழைத்தண்டை சிறிதாக நறுக்கிப் போட வேண்டும். இரண்டும் நன்றாக வேகும்போது, கருணையின் குணம் மாறிவிடும்” என்றார்.

மறுநாள் இந்த முறைப்படி சமைத்தபோது எல்லோரும் விரும்பி, கேட்டுச் சாப்பிட்டார்கள்.

சமையல் விஷயத்தில் மஹானின் இன்னொரு அனுபவம்.

பண்டிதர் ஒருவர் மஹானிடம் பேச வந்தார். அவரிடம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்து விட்டு, மஹான் ’‘இட்லி’ என்று ஏன் பெயர் வந்தது?’ என்று கேட்டார்.

ஏதோ புதிய விளக்கம் தருவதாக நினைத்த அந்தப் பண்டிதர் சொன்னார்:

“இலையில் இட்லியைப் போட்டவுடன் அது காலியாகி விடுகிறது. இட்டு+இல்லை=இட்டிலை-இட்லி” என்றார்.

மஹான் சிரித்துக்கொண்டே அவரிடம் கேட்டார்:

“இலையில் இட்லி விழுந்ததும் எல்லோரும் அதை இல்லையின்னு ஆக்கிடும் சாத்தியம் நம்பும்படியாக இல்லையே. என்னை மாதிரி எத்தனையோ பேர் அதை இலையிலேயே வச்சிண்டு உட்கார்ந்து இருக்காளே, அதனால் நீங்கள் சொல்ற விளக்கம் சரியில்லை.”

”பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்….”

“ஏதாவது நாம் சமைக்கிறோமுன்னா, அதுக்குக் கொஞ்சம் சிரமம் எடுத்துக்கணும் இல்லையா?”

“அடுப்புப் பக்கத்துலேயே நிக்கணும். கருகிப் போகாமப் பாத்துக்கணும். இல்லேன்னா பக்குவம் கெட்டுப் போகும் இல்லையா? இட்லியை எடுத்துக்கோங்கோ. அதை ஊத்தி வச்சுட்டு பத்து நிமிஷம் அதை மறந்து அந்தண்டை போய் வேறு வேலையைக் கவனிக்கலாம். தானாக வெந்து, பக்குவமாக இருக்கும். ஒன்றை வைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் வருவதை இடுதல் என்கிறார்கள். ‘இடுகாடு, இடுமருந்து’ என்பது போல் இட்லி என்று பெயர் வந்திருக்கலாம்” என்று முடித்தார் எல்லாம் தெரிந்த ஞானியான மஹான்.

மிகப்பெரிய விஷயங்கள் மட்டுமல்லாமல் சிறு சிறு விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் விளக்கங்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டன. சமையல் விஷயமாக அவர் சொன்ன கருத்துக்கள் காஞ்சிமடத்தில் இன்றும் உலா வருகின்றன.

ஒருநாள் மடத்து சமையல்காரர் ஒருவர், மடத்திற்கு சமையல் செய்ய பெருங்காயம் அதிகமாகத் தேவை என்று விண்ணப்பம் கொடுக்க, “சாம்பார், ரசம் வைக்கும்போது தனித்தனியாக பெருங்காயத்தை போடக்கூடாது. நீ பருப்பை சாம்பாருக்காக வேக வைக்கும்போது அதில் பெருங்காயத்தைப் போட்டுடு. அதே பருப்பு தானே சாம்பார், ரசம் வைக்க உதவுகிறது. அதில் பெருங்காய வாசனை இல்லாமலா போகும்? இப்படி செய்து பார். அதிகப் பெருங்காயம் தேவைப்படாது…” என்று மஹான் விளக்கமாகச் சொன்னார். இத்தனை நாள் சமையல் செய்யும் தனக்கு இந்த உத்தி தெரியவில்லையே என்று புலம்பினார் சமையல்காரர்.

இன்னொரு சம்பவம் – ‘ரசமான விவாதம்’ :

அதாவது குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்?

“இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”

அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.

மஹான் பெரிதாகச் சிரித்தார்.

“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.

இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.
அவர் சொன்னதன் கருத்து என்ன?

“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல்… ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா? இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது. இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது. அது தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை, ஆனந்தம் அவைதான் பாயசம் – மோர் – பட்சணம் – இதைப் போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.

மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது. பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.

அதனால் தான் பரமாத்மாவைக் கலந்தபின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டாமா?” என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து விட்டார் மஹான்.

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை, இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை. இவர் சகலமும் தெரிந்தவர் என்பதற்கு இதைப் போல் எவ்வளவோ எடுத்துக்காட்டுகள், தெய்வீகத்தைத் தவிர அவருக்கு வேறு ஏதும் தெரியாது என்று நினைப்பவர்கள், மஹானை சரிவர அறியாதவராகத்தான் இருப்பார்கள்.

source:::: http://www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6446/life-kanchi-swamis-lectures-venkatasaamy#ixzz2sWGfShHA

Albert Einstein…Few Lighter Moments in the Life of This Genius !!!

Great minds do not ponder over small things!

Albert Einstein’s wife often suggested that he dress more professionally, when he headed off to work.

“Why should I?” He would invariably argue.  Everyone knows me there.”

When the time came for Einstein to attend his first major conference, she begged him to dress up a bit.

“Why should I?” said Einstein.  “No one knows me there!

=======================================================

Albert Einstein was often asked to explain the general theory of relativity.

“Put your hand on a hot stove for a minute, and it seems like an hour,” he once declared.

“Sit with a pretty girl for an hour, and it seems like a minute.

That’s relativity!”

=======================================================

One day while working in Princeton University, Albert Einstein forgot his home address when he was going back home. The driver of the cab did not recognize him.

Einstein asked the driver if he knows Einstein’s home. The driver said “who does not know Einstein’s address?  Everyone in Princeton knows. Do you want to meet him?”

Einstein replied, “I am Einstein. I forgot my home address, can you take me there?

“The driver reached him to his home and did not even collect his fare from him.

=============================================

Einstein was once travelling from Princeton on a train when the conductor came down the aisle, punching the tickets of every passenger. When he came to Einstein, Einstein reached in his vest pocket. He couldn’t find his ticket, so he reached in his trouser pockets. It wasn’t there, so he looked in his briefcase but couldn’t find it. Then he looked in the seat beside him. He still couldn’t find it.

The conductor said, ‘Dr. Einstein, I know who you are. We all know who you are. I’m sure you bought a ticket. Don’t worry about it.’

Einstein nodded appreciatively.

The conductor continued down the aisle punching tickets. As he was ready to move to the next car, he turned around and saw the great physicist down on his hands and knees looking under his seat for his ticket. The conductor rushed back and said, ‘Dr. Einstein, Dr. Einstein, don’t worry, I know who you are. No problem. You don’t need a ticket. I’m sure you bought one.’

Einstein looked at him and said, ‘Young man, I too know who I am. What I don’t know is where I’m going. That’s why I am searching my ticket”

 =======================================================

At college Einstein fell madly in love with the only woman in his physics class, a dark and intense Serbian named Mileva Maric.

She served as a sounding board for his scientific ideas and helped to check the math in his papers, but eventually their relationship disintegrated.

Einstein offered her a deal.  He would win the Nobel Prize someday, he said; if she gave him a divorce, he would give her the prize money.

She thought for a week and accepted.

Because his theories were so radical, it was seventeen years after his miraculous outpouring from the Patent office before he was awarded the prize and she collected!

=======================================================

THE COSMIC TRUTH! LIFE IS LIKE RIDING A BICYCLE.  TO KEEP YOUR BALANCE YOU MUST KEEP MOVING! –Albert Einstein, in a letter to his son Eduard, February 5, 1930

source:::::::::::::: input from a friend of mine

natarajanFew