“இனிமையான ‘ழ ‘ இருக்கும் இடம் ‘தமிழ் ‘ “…!!!

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் [பெரியவா] அறிவு
முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது.
ஒரு முறை கி.வா.ஜ விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று
கேட்டார். மேலும்”சம்ஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட
மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்
வந்தது சொல்லுங்கள்!” என்கிறார். கி.வா.ஜ. அடக்கமாக,
“பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்.

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது.
இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதாகவே இருக்கும்.

மழலை,குழல்,அழகு,குழந்தை, சுழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’
வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான
“ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்'[தமி+ழ்] என்று
சொல்லலாமா?” என்கிறார். உடனே கி.வா.ஜ., “இதைவிடப்
பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா
மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!” என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
“யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும்
கடினம்.அவற்றுள் இன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்
கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்து மிக எளிமைப்படுத்திப்
பொருள் சொன்னார்.பெரிய வித்வான்களே பிரமித்துப் போனார்கள்.

“அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடிய பாடல்களில் ஒன்று,
முக்கால்,அரை,கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை என்று
குறந்துகொண்டே வர்ம். அளவுகளை வைத்து எழுதுகிறார்
தெரியுமா?” என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்

அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்

விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்

கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது…..

என்ற பாட்டைபெரியவா எடுத்துக் காட்டுகிறார். அதன் பொருளையும்
தனக்கே உரிய முறையில்,

“முக்கால்-னா மூன்று கால்கள். வயதான பின் இரண்டு காலில்
நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றவது காலாகப்
பயன்படுத்துகிறோமே..அந்த நிலை வருவதற்குள்,
‘முன்னரையில் வீழாமுன்’..நரை வருவதற்கு முன்னாலே,
‘விக்கலும் இருமலும்’ வருவதற்கு முன்..யமனுடைய
காலடி நம்மை அணுகவதற்கு முன்…ஊருக்கு வெளியிலுள்ள
‘மாகாணி’ என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்..காஞ்சியில்
ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை
இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும்,
“என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற
எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு
அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச்
சொல்லி மகிழ்ந்தார்.எதையுமே இப்படி விளக்கமாகப்
பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.

source:::: periva.proboards.com

natarajan
Read more: http://www.periva.proboards.com/thread/389/periyavas-expertise-tamil-literature#ixzz2ljOGNEwU

” Why Turkeys are Called Turkeys ” !!!

why turkeys are called turkeys.

 

In the sixteenth century, when North American turkeys were first introduced en masse to Europe, there was another bird that was popularly imported throughout Europe and, most relevant to this article, England, called a guinea fowl.  This guinea fowl was imported from Madagascar via the Ottoman Empire.

The merchants who imported the guinea fowl were thus known as “turkey merchants.”  The guinea fowl eventually were popularly referred to as “turkey fowl,” similar to how other product imported through the Ottoman Empire acquired their names, such as “turkey corn,” “turkey wheat,” etc.

The North American turkey was first introduced to Spain in the very early sixteenth century and popularly introduced to all of Europe shortly thereafter.  The animal was thought by many to be a species of the type of guinea fowl that was imported via the Ottoman Empire and thus, began also being called a “turkey fowl” in English, with this eventually being shortened to just “turkey.”

  • One generally considered fictitious origin for naming a turkey such, comes from the Hebrew “tuki” (Hebrew for peacock).  If no one knew anything about the history of the turkey being introduced to the English speaking world, this might seem very plausible.  However, the historical evidence does not back up this “tuki” origin.

 

source:::::today i foundout .com

natarajan

படித்ததில் பிடித்தது …”நான் சும்மா பேசி விட்டு போகிறேன் ” !!!

இலக்கிய கூட்டமொன்றிற்கு தலைமை தாங்கும்படி, கி.வா.ஜ.,வை அழைத்தார், ஒரு அன்பர்.
‘நான் சும்மா வந்து பேசிவிட்டுப் போகிறேன்…’
‘ஏன் அப்படி சொல்கிறீர்கள்?’
‘தலைமை தாங்குவதும், கேட் கீப்பர் வேலையும் ஒன்று தான்…’
‘என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்!’
‘வாயிற்காவலன் எல்லாருக்கும் முன் வந்து, வாயிலை திறந்து, உட்கார்ந்து கொள்ள வேண்டும். எல்லாரும் வந்து, செய்ய வேண்டியதை யெல்லாம் செய்யும் வரையில், பொறுமையாக காத்துக் கொண்டிருக்க வேண்டும். அனைவரும் புறப்பட்டு போன பின், வாயிலை மூட வேண்டும். தலைவன் வேலையும் இது தான். எல்லாருக்கும் முன்பாக, முதன் முதலில் வாயைத் திறந்து பேச வேண்டும். பேசுகிறவர்கள் ஒவ்வொருவராக வருவர்; பேசுவர். எல்லாவற்றையும், பொறுமையாக கேட்க வேண்டும். எல்லோரும் பேசிய பின், சபையினரும் எழுந்து விடுவர். அப்போது கடைசியாக வாய் திறந்து, பின்னுரை பேச வேண்டும்…’ என்றார்.

 

அண்ணாதுரை பார்லிமென்டின் மேல்சபை உறுப்பினராக இருந்தபோது, தமிழகத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து நடந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி, கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அண்ணாதுரை கைதான வழக்கு, நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. வழக்கில், அண்ணாதுரை, தன் சார்பாக, தானே வாதாடினார். அண்ணாதுரையின் வாதத்தைக் கேட்க, நீதிமன்ற வளாகத்தில், ஆயிரக்கணக்கானோர் கூடி விட்டனர். நீதிபதியிடம் பல மேற்கோள்களையும், இதுபோன்ற முந்தைய போராட்டங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளையும், சுட்டிக் காட்டினார்.
‘அண்ணாதுரை மேற்கோள் காட்டிய வழக்குகள் பற்றிய தீர்ப்புகள் அடங்கிய நூல் வேண்டும்…’ என்று, நீதிபதியே கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஆனாலும், அண்ணாதுரை விடுதலை செய்யப்படவில்லை. அவருக்கு, பத்து வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


ஒரு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, கே.பி.சுந்தராம்பாளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையை சுற்றியிருந்தவர்கள், பூம்புகார் படப் பாடல்களை பாட வேண்டும் என்று, கூக்குரலிட்ட வண்ணமும், எழுதிக் கொடுத்த வண்ணமும் இருந்தனர்.
உடனே, கே.பி.எஸ்., ‘நீங்கள் பூம்புகார் கதையை அறிந்திருப்பீர்கள். கோவலனுடைய முடிவும் உங்களுக்கு தெரியும். ஆதலால், இக்குழந்தைகளை (மணமக்களை) ஆசிர்வதிக்கிற இந்நேரத்தில், அம்மாதிரியான பாடல்களை பாடக் கூடாது என்பது, என் எண்ணம். இவர்கள், நிறையக் குழந்தை குட்டிகளை பெற்று, சுகமாக வாழ வேண்டும் என்று, முருகனை வேண்டிக் கொள்கிறேன். ஆகவே, இன்று மட்டும் என்னை விட்டு விடுங்கள்…’ என்று சொல்லி, ‘பழம் நீயப்பா…’ என்று, முருகனின் பாடல்களை பாட ஆரம்பித்தார். சபையில் ஏற்பட்ட கரவொலி ஆரவாரம் அடங்க வெகு நேரமாகியது.

 

தபால் ஆபீசுக்கு ஒரு கடிதம்… ‘கடவுள், சொர்க்கம்’ என்று, விலாசமிட்டு வந்திருந்தது. அனுப்பியவரின் முகவரி இல்லை. கடவுளுக்கு எப்படிக் கொண்டு போய் சேர்ப்பது… அனுப்பியவருக்கே எப்படி திருப்பி அனுப்புவது… கடிதத்தின் உள்ளே, அனுப்பியவரின் முகவரி இருக்கிறதா என்று பார்க்க. கடிதத்தை உடைத்தனர் தபால் அலுவலக ஊழியர்கள். உள்ளே முகவரியும் இருந்தது. அதை எழுதியவர், தன் கஷ்டத்தை எல்லாம் எழுதி, தனக்கு, 75 ரூபாய் பணம் அனுப்பும்படி, கடவுளிடம், உதவி கேட்டிருந்தார். படித்த, தபால் ஊழியர்கள் மனம் நெகிழ்ந்து, ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு, அவருக்கு, 60 ரூபாய் பணம் அனுப்பினர். இரண்டு நாளில், அவரிடமிருந்து மற்றொரு கடிதம். கடவுளுக்கு நன்றி தெரிவித்து எழுதப்பட்டிருந்தது. அதில், ‘கடவுளே…தாங்கள் அனுப்பிய பணத்தில், 15 ரூபாயை, தபால் ஊழியர்கள் திருடிக் கொண்டனர்…’ என்று குறிப்பிட்டிருந்தார்.

source::::Dinamalar …Varamalar

natarajan

படித்து ரசித்தது …வத்த குழம்பும் , கீரை மசியலும் !!!

 ஸாதம் – வத்தல் குழம்பும்கீரை மசியலும்!

​ நம்ம உடம்புல பஞ்ச கோசங்கள்ள “அன்னமய கோசம்”ன்னு ஒண்ணு இருக்கு. என்ன கவனிக்கணும்ன்னா,நம்ம பெரியவாள்ளாம் அன்னமய கோசம்ன்னுதான் சொல்லியிருக்காளே  தவிர, கோதுமைமய கோசம்,ராகிமய கோசம்ன்னு சொல்லலை. ஏன்னா…அன்னம்தான்

 ஜீவாதாரம். மஹாகவி காளிதாஸ் கதைல கூட, ப்ரக்ஞை இல்லாம விழுந்து கெடக்கறவாளுக்கு இந்தக் காலத்ல ட்ரிப்ஸ் ஏத்தற மாதிரி, அப்போ ஸாதத்ல கொஞ்சம்  ஜலத்தை விட்டு அதை அப்பிடியே அவா வயத்துல தடவினா, கொஞ்சம் சக்தி வரும்ன்னு படிச்ச ஞாபகம்.  “ராத்ரிக்கு சாதத்தை யார் சாப்பிடுவா?ரொம்ப ஹெவியா போய்டும்.
இப்போல்லாம் ராத்ரி லைட்டா ரெண்டே ரெண்டு சப்பாத்திதான் சாப்பிடறோம். ஒரு தால் பண்ணினா ஆச்சு! இல்லாட்ட வேகவெச்ச காய்கறி ஒரு கப், கொஞ்சம் sprouts ” ன்னு அலட்டறது ரொம்ப ஜாஸ்தியா போய்டுத்து. வெள்ளைக்காரன், வடக்கத்திக்காரன் இவாளைப் பாத்து ஈயடிச்சான் காப்பி அடிக்கறதில் நமக்குத்தான் gold medal கெடைக்கும்.அதுலயும் நம்ம பக்கத்து சாப்பாட்டை ஏதோ “வேஸ்ட்” மாதிரியும், “மட்டமான சாப்பாடு” மாதிரியும் போஸ் பண்ணிண்டு திரியறவாளும் உண்டு.

ராத்ரி ரொம்ப சிம்பிளா ரெண்டு உருண்டை [சாப்பிட ஆரம்பிச்சதும் இருவது உருண்டையாவும் ஆகும்] தயிர் or மோர் சாதம். தொட்டுக்க கார்த்தால மிச்சம் இருக்கற ஸாம்பார், ரசத்து வண்டல்,வத்தல் குழம்பு. அதுவும் யாராவது பிசைஞ்சு கையில் போடப் போட, நடுவுல குழிச்சிண்டு குழம்பை ஊத்திண்டு சாப்பிடறஅம்ருதத்துக்கு நிகரா, சப்பாத்தி,குப்பாத்தியெல்லாம் துண்டைக் காணோம்,துணியைக்
காணோம்ன்னு ஓடிப்போயிடும். ஸாதம் சீக்கிரமா ஜீரணம் ஆகும்.சப்பாத்தி ஜீரணம் ஆகறதுக்கு லேட் ஆகும். northல கூட, வெயில் காலத்ல ராத்ரிக்கு ஸாதம் சாப்பிடுவா. காரணம்? ஈஸியா digest ஆகும்.

வத்தல் குழம்புன்னு படிச்சதும், அழகா அம்சமா ஒரு கச்சட்டில தாமரை இலைத் தண்ணி மாதிரி நல்லெண்ணெய் அங்கங்க ஓவல் ஷேப்புல மொதக்கும் . ஒண்ணு ரெண்டு கறிவேப்பிலை,மிளகா வத்தல்,மணத்தக்காளி வத்தல்,கடுகு அதோட குழம்புப் பொடியோட
ஒரு ரெட் கலர்தான் எல்லாருக்கும் மனசுல காக்ஷி குடுக்கும். குடுக்கறதா?
கசப்புச் சுண்டைக்கான்னு ஒண்ணு இருக்கு. அதை வாங்கி அலம்பி, கொதிக்கவெச்சு ஆறின ஜலத்துல கல்லுப்பு போட்டு ஒரு ஜாடியில ஊறப் போடுவா. இந்த வத்தகுழம்புக்கு இந்த ஊறவெச்ச சுண்டக்காயை தாளிச்சுக் கொட்டினா,அந்த flavourரே தனி!
[காதுக்கும்,கடவாய்க்கும் நடுவுல சின்னதா ஒரு வலி இருக்கா? அப்போ சரிதான். உங்க taste buds நன்னா வேலை  செய்யறது; நீங்க ஹெல்தியா இருக்கேள்; நல்ல பசி
இருக்குன்னு அர்த்தம். Good. Keep it up!]

கொஞ்சம் வென்னீரைக் கொதிக்க வெச்சு அதுல ஒரு உருண்டை புளியைத் தூக்கிப் போட்டு “ஒரு பக்கமா அக்கடான்னு இரு”ன்னுட்டு வெக்கணும். ஆறினதும் கரைச்சுக்கணும்.
நன்னாப் பழகின கச்சட்டியா இருந்தாலும் அதுலேயே எண்ணை விட்டு தாளிக்கற ரிஸ்க் வேணாம். இலுப்பச்சட்டின்னா அதுல நன்னா மனஸார நல்லெண்ணெய் விட்டு [ஒரு மாசத்துக்கு நம்ம உடம்புக்குத் தேவையான மொத்த எண்ணையையும் ஒரு வத்தக் குழம்புலேயே விட்டு சாப்பிட்டா என்ன ஆறது?..]இப்பிடி யாராவது கேட்டால், அவாளை அலக்ஷியமாப் பாக்கக் கத்துக்கணும். மிளகா  வத்தல், கடுகு,வெந்தயம் or வெந்தயப்பொடி, மணத்தக்காளி வத்தல்/சுண்டக்கா வத்தல் ஏதாவது ஒரு வத்தல், கட்டிப் பெருங்காயம் [இதை மட்டும் கண்ணைத் திறந்து பாக்காம போடணும்.வத்தக்குழம்புக்கு பெருங்காயம் மாமா முறை!] கறிவேப்பிலை, கடைசியா வத்தக்குழம்புப் பொடி[உரைப்பு ஆகாதுன்னு சிலபேர், பேருக்கு குழம்புப் பொடி போடுவா..அது பச்சை துரோகம்] எதையெதை எப்பிடிப் பண்ணிச் சாப்பிடணுமோ,அதையதை
அப்பிடிப் பண்ணிச் சாப்பிடணும். இப்போ அதுல கரைச்சு வெச்சிருக்கற புளிஜலத்தை விட்டு விளாவி, கல் உப்பை அப்டி கையால எடுத்துப் போடணும். அவ்வளவுதான்.கடைசில கொஞ்சம் கெட்டியா ஆகணும்ன்னா,இருக்கவே இருக்கு அரிசி மாவு!

குழம்புக்கு சரியான combination கீரை மசியல், சுட்ட அப்பளாம், மாவடு, டாங்கர் பச்சடி. கீரையைப் பண்ணும்போது ரொம்ப ரொம்ப முக்கியம்…அதோட பச்சைக் கலர் மாறாம பண்ணணும். சில வீடுகள்ள அது கீரை மசியல்ன்னு சத்தியம் பண்ணினாக் கூட நம்ப முடியாது. காய்ஞ்சு போன மருதாணி கலர்ல இருக்கும்.
முளைக்கீரை,அரைக்கீரை,டெல்லி பாலக் [பசலைக்கீரையை பாலக்..ன்னு சொல்லித் தலைலகட்டுவான்]சிறுகீரை இதெல்லாம் மசியலுக்கு ரொம்ப நன்னா இருக்கும். கீரையை நன்னா
மண்ணு போக நெறைய வாட்டி அலம்பிட்டு, பொடியா நறுக்கி, மண் சட்டில போட்டு, நெறைய ஜீரகம்,பச்சை மிளகா, பெருங்காயம் போட்டு,கொஞ்சமா ஜலத்தை விட்டு, மூடாம அப்பப்போ கிளறி, தண்டை நசுக்கி வெந்துடுத்தான்னு பாத்துட்டு, கல் உப்பைப் போட்டு, மத்தால மசிக்கலாம் இல்லாட்டா, மிக்ஸில ஒரு திருப்பு திருப்பினா, அப்டி
டார்க் பச்சைக் கலர்ல மசியல் ரெடி. தேங்காய் எண்ணையில கடுகு, உளுந்து,மிளகா வத்தல் தாளிச்சு இந்த பச்சைமலை மேல “சர்”..ன்னு கொட்டணும். இன்னும் கொஞ்சம் நகாசு வேலை பண்ணனும்ன்னா,[இது அவாவா வீட்டுல, சமைக்கறவா மூடை யாரும் கெடுக்காம
பாத்துண்டா..நகாசு வேலை பண்ணலாம்]  தாளிச்சதும், இன்னும் கொஞ்சம் தேங்கா எண்ணெய் விட்டு,இந்த “கருவடாம் கருவடாம்”ன்னு ஒரு “antique” வஸ்து இருக்கு. அதை அப்டியே ரெண்டு மூணு கைப்பிடி அள்ளிப் போட்டு [வறுத்ததை வெறுமனே தின்னது
போக கீரைக்குப் போடறதுக்கு கொஞ்சம் இருக்கணும் இல்லியா?] exact ஆ golden brown
கலர்ல வறுத்து கீரை மேல கூரை மாதிரிப் போடணும். உடனேயே சாப்பிடறதா இல்லைன்னா, தனியா வெச்சுண்டு, சாப்பிடறச்சே மிக்ஸ் பண்ணிக்கலாம். அப்போதான் மசியலோட “கறுக்முறுக்”ன்னு கருவடாமும்,”கடுக்கடுக்”ன்னு வறுபட்ட உளுந்தும் வாய்ல ஆனந்த
நர்த்தனமே ஆடும்.ஆஹாஹா!

“டாங்கர்”பச்சடிங்கறது இப்போல்லாம் நெறையப் பேருக்குத் தெரியுமான்னே சந்தேஹம்!
ரொம்ப சிம்பிள்! உளுந்தை லேஸா எண்ணை இல்லாம வெறுமன வறுத்து, மிக்ஸில பொடிச்சுவெச்சுக்கணும். அந்தப் பொடிலேர்ந்து ரெண்டு,மூணு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ப்ளர் கெட்டியாக் கடைஞ்ச தயிர்ல நன்னா மிக்ஸ் பண்ணி, உப்பு,பச்சை மிளகா,
பெருங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லி போட்டு, கடுகு மட்டும் தாளிக்கணும். வறுக்காத உளுத்தமாவுன்னா,ஜீரகம் பச்சையா சேத்துக்கோங்கோ.[முறுக்குமாவை சாப்பிடற மாதிரி இருக்கும்].

இப்போ பாதியா கட் பண்ணின வாழை இலைல, ஒரு மூலைல டாங்கர் பச்சடி. லைட்டா மங்கினவெள்ளைக் கலர் தயிர்ல,பச்சை,ப்ரௌன்,பிளாக் கலர்கள் ஒரு கலக்கலா இருக்கும்.
கொஞ்சம் தள்ளி டார்க் க்ரீன் கலர் கீரை மசியல், அப்புறம் இந்த ஓரமா மொத்தையா வீங்கின மண்டை மாதிரி இல்லாம, 112 வயசு சைனாக்கார பாட்டியோட முகத்துல எத்தனை கோடுகள் இருக்குமோ,[now you can visualise] அது  மாதிரி கன்னப்பின்னான்னு
கோடுகளாப் போட்ட மாதிரி நன்னா சுருங்கின நம்ம பக்கம் போடற மாவடு, ஒரேயடியாக் கருகாம அம்சமாச் சுட்ட, அப்பளாம்! இதோ….கொதிக்கக்கொதிக்க ஸாதம் இலைல போட்டாச்சு! வத்தக்குழம்புக்கு நல்லெண்ணெய்தான்! ரெண்டு ஸ்பூன் எதேஷ்டம்!
இப்போ சாதத்தை நன்னா மசியப் பிசைஞ்சுண்டு, கொஞ்சங்கொஞ்சமா குழம்பை விட்டுப் பிசையணும். ஏன்னா…..வத்தக்குழம்பு ஸாதம், ஸாம்பார்,ரஸம் மாதிரி ரொம்ப தளர இருக்கக்கூடாது. சிலபேர் ரஸம் சாதத்தையே கெட்டியா, கொஞ்சூண்டு ரசத்தை  விட்டுண்டு, ஏதோ மாரடைச்சான் உருண்டையாட்டம் சாப்பிடுவா.

இப்போ turn போட்டுண்டு பச்சடி,கீரை,அப்பளாம்,மாவடு எல்லாத்தையும் தொட்டுண்டு  மணக்க மணக்க வத்தக்குழம்புஞ்சாதத்தை ஒரு வெட்டு வெட்டுங்கோ!! வத்தக்குழம்பு சாதத்தோட ஒரு special advantageஎன்னன்னா….சில சமயம் லீவு நாள்ள, காலைல குளிக்க முடியாம ஏதோ ஒழிச்சல் வேலை,சோம்பேறித்தனம்ன்னு இருந்தா, முந்தினநாள்
பண்ணின வத்தக்குழம்பு இருந்தா [ரொம்ப நன்னா இருக்கும்] ஒரு பாத்திரத்ல சாதத்தைப் போட்டு, அது தலைல நல்லெண்ணெய் விட்டு,பழேத்துக் குழம்பை விட்டு மொத்தமா உருட்டிப் பிசைஞ்சு, நம்ம உள்ளங்கை ஸைசுக்கு ஒரு உருண்டையா [திருப்பதி
லட்டு சைஸ்] உருட்டி எடுத்துண்டுபோய், பின்னால தோய்க்கறகல் மேலேயோ[இப்போ washing machine],தோட்டத்துலேயோ, பால்கனிலேயோ உக்காந்து சாப்பிட்டா….புல்லரிக்கும்!! அனுபவியுங்கோ!

source::::input from a friend of mine….

natarajan

“சாஞ்சாடம்மா சாஞ்சாடு …சாயக் கிளியே சாஞ்சாடு “!!!

 

தற்பொழுது பிறக்கும் முன்பே, பிறந்த உடனேயே போதிக்கும் வகுப்புகள் வந்துவிட்டன. உங்கள் குழந்தை மேதை ஆக வேண்டுமா? என்ற விளம்பரங்கள் எங்கும் காணப்படுகின்றன. அதிலும் விளம்பரங்களில் பிக்காசா, ஐன்ஸ்டீன், சாக்ரடீஸ் போன்ற வெளிநாட்டு அறிவாளிகளை காட்டுவார்கள். ராமானுஜம், சி.வி.ராமன், ஆர்யபட்டர் போல என்று காட்டுவதே இல்லை. நம் பெற்றோர் நம் குழந்தைகள் இந்தியர் ஆயிற்றே… எப்படி அவர்களை போல ஆக முடியும் என்று யோசிப்பது இல்லை.

பழங்காலத்தில் சிறு குழந்தைகளுக்கும் விளையாட்டு வைத்து இருந்தனர். தற்பொழுது போல கெடுதலான பிளாஸ்டிக் பொம்மைகள் இல்லையே தவிர, மரத்தாலான பொம்மைகள் உண்டு. ஆனால் அப்பொழுது கூட்டு குடும்பம் என்பதால் நாள் முழுவதும் குழந்தைகளுக்கு விளையாட ஆள் இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கு பொழுது போகவில்லை என்பதை விட அவர்களுக்கு பொழுது போதவில்லை என்பதே சரியாக இருக்கும்.

சின்ன குழந்தை கொஞ்சம் உட்கார ஆரம்பித்தவுடன் ‘சாஞ்சாடம்மா சாஞ்சாடு..’ ஆரம்பித்து விடுவோம். அடுத்து ‘கை வீசு..’ அதற்கான பாடல்கள் ஆரம்பிக்கும். உட்காரும் வயதுக்கே பாட்டு பாடி விளையாடுவது நம் பாரம்பரியம். நிறைய குழந்தைப் பாடல்கள் உள்ளன.

குழந்தையை மடியில் உட்கார வைத்து, முன்னும் பின்னும் ஆட்டி…

“சாஞ்சாடம்மா சாஞ்சாடு

சாயக்கிளியே சாஞ்சாடு

குத்து விளக்கே சாஞ்சாடு

கோயில் புறாவே சாஞ்சாடு

மானே மயிலே சாஞ்சாடு

மரகதக் கிளியே சாஞ்சாடு

கண்ணே மணியே சாஞ்சாடு

கட்டிக் கரும்பே சாஞ்சாடு

மயிலே குயிலே சாஞ்சாடு

மடியில் வந்து சாஞ்சாடு”

இது அவரவர் இடத்துக்கு தகுந்தவாறு மாறுபடும். அதைத் தவிர, நிறைய குழந்தைப் பாடல்களும் உள்ளன. அடுத்து கைவீசம்மா கை வீசு, சோறூட்ட நிலா, நிலா ஓடிவா போன்றவை தமில் ரைம்ஸ் போட்டு விற்க ஆரம்பித்து உள்ளனர். நல்லது. அப்பா அல்லது அண்ணன், அம்மா மேலே உக்கார வைத்து யானை விளையாட்டு பாடி கொண்டே தாழ்வாரம் முழுக்க தவழ்ந்து யானை போல சுத்தி வருவர். பத்துக்கு பத்தில் எங்கு சுத்தி வருவது என்று கேட்டால் பதில்.. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

“யானை யான அழகர் யானை

அழகரும் சொர்க்கரும் ஏறும் ஆனை

குட்டி ஆனைக்குக் கொம்பு மொளச்சுதாம்

பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்”

அடுத்து பருப்பு கடைதல். குழந்தையை வைத்து சோறுட்டி சாப்பாட்டின் மேல் ஆர்வத்தைத் தூண்டும் விளையாட்டு. குழந்தையின் கையை எடுத்து வைத்து கொண்டு அதன் மேல் முட்டி கை வைத்து பருப்பு கடைய வேண்டும் அப்புறம் ஊட்டுவது போல செய்து காட்டவேண்டும். தொட்டுக்க வேணுமா என்று கேட்டு விரல்களை வைத்து இது சாம்பார், பொரியல் என்று விளையாட்டை நீட்டி கொண்டு போகலாம். கீரை பற்றியும் சொல்லலாம்.

“பருப்பு கடைஞ்சு,

நெய் ஊத்தி,

நல்லா பிசைஞ்சு

அப்பாவுக்குக் கொஞ்சம்

அம்மாவுக்குக் கொஞ்சம்

பாட்டிக்குக் கொஞ்சம்

தாத்தாவுக்குக் கொஞ்சம்

பாப்பாவுக்குக் கொஞ்சம்

கொடுத்திட்டு அடுப்பு கழுவி (அந்த காலத்தில் விறகடுப்பை கழுவி கோலம் போடும் வழக்கம் உண்டு)

சிலர் வெறும் கிச்சு, கிச்சு மூட்டுவர். சிலர் நண்டு ஊறுது நரி ஊறுது என்று சொல்லி கொண்டு கையை பிடித்து விரல்களால் ஊர்ந்து கைக்கு அடியில் கிச்சு, கிச்சு மூட்டுவர். குழந்தைகள் மிக விரும்பும் விளையாட்டு.

அடுத்து இரண்டு வயதுக்கு மேல் குழந்தைகளை கையை குழித்து வைத்து கொள்ள சொல்லி நாம் முஷ்டியை மடக்கி குத்த வேண்டும்.

அம்மா குத்து,

அப்பா குத்து,

பாட்டி குத்து,

பேரன் குத்து

பிள்ளையார் குத்து,

பிடிசிக்கோ குத்து.

இந்த பிடிச்சிக்கோ குத்து சொல்லும்பொழுது குழந்தை கையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மாற்றி, மாற்றி விளையாடலாம். பிடிக்காமல்விட்டால் அவரின் முறை மாறும். சிறுவர், சிறுமிகளும் விளையாடும் பொழுதுபோக்கு விளையாட்டு.

இந்த விளையாட்டு முறைகள், பாடல்கள் வீட்டு வீடு, இடத்துக்கு இடம் கொஞ்சம் வேறுபடலாம். ஆனால் தலைமுறை தலைமுறையாக விளையாடி வந்த விளையாட்டுகளை நம் தலைமுறையோடு முடித்தால் அத்தனையும் மறந்தும், அழிந்தும் விடும். இது போன்ற விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமையாகும்.

கிருத்திகா தரண் – தொடர்புக்கு kirthikatharan@gmail.com

source:::::The Hindu..Tamil

natarajan

“நீ தினமும் நாராயநீயத்திலே ஒரு தசாகம் படி ”

பரிபூர்ண யோகநிலையிலும், பரிசுத்த தவமேன்மையிலும் பிரம்மரிஷி சுகமுனிவரின் உயர்வோடு சாக்க்ஷாத் பரமேஸ்வரரே திருஅவதாரம் கொண்டு நம்மிடையே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளாய் மிக எளிமையோடு நம்மை ஆட்கொண்டு அனுக்ரஹிப்பதை நம் பூர்வஜன்ம பலனாக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

திரு.சுந்தர்ராஜன் எனும் ஸ்ரீபெரியவா பக்தர் 1968-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது மனதில் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க வேண்டுமென்று மனத் தவிப்பில் இருந்தார். 1969 ஜனவரி 24-ல் தினமும் இரவில் தாங்க முடியாத தலைவலி இவரை வாட்டியது. சுமார் 10 மணி முதல் 11 மணி வரை தினமும் இரவில் இப்படி வலி வந்து சுந்தர்ராஜன் தவிப்பது வழக்கமாகி விட்டது. ஒரு வேளை மூளையில் புற்றுநோய் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் இந்த தலைவலியின் வேகம் இருந்தது. ஒரு மாத காலம் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு இவர் டில்லியிலிருந்து ஐதராபாத்துக்கு பிப்ரவரி 15-ஆம் நாள் வந்து சேர்ந்தார்.

விஜயவாடாவிலிருந்து இருபது கி.மீ.தூரத்தில் இருந்த தெலாபொரலு என்ற கிராமத்தில் ஸ்ரீபெரியவாளை தரிசித்தார். மாலை சுமார் நாலு மணிக்கு ஸ்ரீபெரியவா விஸ்ராந்தியாக படுத்துக் கொண்டிருந்தபோது இவர் ஸ்ரீபெரியவா முன்பாக நின்றார்.

‘உனக்கு பிரஹசரணம்னா தெரியுமா?’ என்று ஸ்ரீபெரியவா கேட்டார். சம்பந்தமில்லாத கேள்வியாக இது இவருக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இவர் வடமாள் பிரிவைச் சார்ந்தவராயிருந்தாலும் இவரது மனைவி பிரஹசரணம் பிரிவைச் சார்ந்தவள். அதை சுட்டுக்காட்டவே ஸ்ரீபெரியவா இப்படிக் கேட்பதாக இவருக்குப் புரிந்தது.
ஸ்ரீபெரியவாளிடம் தான் இப்படி மணந்து கொண்டதாகத் தெரிவித்தார்.

பின் இவர் தன்னுடைய தலைவலி உபாதை பற்றிக் கூறி அதற்காகவே பிரத்யேகமாக ஆபீஸில் விடுப்பு எடுத்து ஸ்ரீபெரியவாளிடம் வந்திருப்பதாகவும் அதற்காக பிரபு தயவு செய்து உபாயம் கூறவேண்டுமென்றும் வேண்டி வணங்கினார்.

‘உனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியுமோ?’ என்று ஸ்ரீபெரியவா கேட்க இவர் வெட்கத்துடன் ஸம்ஸ்க்ருதம் படிக்காததைக் கூறினார்.

‘நீ தினமும் நாராயணீயத்திலே ஒரு தசாகம் படிச்சுண்டு வா’ என்று அனுக்ரஹித்து அனுப்பினார்.

இவர் உத்தரவு வாங்கிக் கொண்டு தன் காரில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு பெண்மணி ஓடிவந்தாள்.

‘பெரியவா என்னை உங்க காரிலே விஜயவாடா வரை போகச் சொன்னார்’ என்று சொல்ல இவரும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.

விஜயவாடா வந்ததும் அந்தப் பெண்மணி தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து இரவு உணவு உட்கொண்டுதான் போக வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஆனால் இவருக்கோ ஒரே பயம். அங்கிருந்து ஐதராபாத்துக்கு விரைவாகச் சென்றாலும் இரவு பத்து மணியாகிவிடும் – இரவு பத்து மணிக்கு தினமும் வரும் தலைவலி வந்துவிடுமே என்பதுதான் அந்தப் பயம்.

‘ரொம்ப நேரமாகாது. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்று அந்த மாது அக்ரஹாரத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு பலகாரமாக வாங்கிவந்து சுவையாகப் பரிமாறினாள்.

பதினைந்து நிமிடத்தில் சாப்பிட்டு இவர் புறப்பட்டு ஐதராபாத்துக்கு இரவு 10 மணிக்கு பயத்துடன் போய் சேர்ந்து தலைவலியை எதிர்பார்த்தார்.

ஆனால் தலைவலி எங்கு போனதோ? வருமோ வருமோ என்று பயந்து சென்ற மாதங்களில் தவித்த அந்தத் தலைவலி அன்று வரவேயில்லை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் வைதீஸ்வரரிடம் முறையிட்டதற்கே இப்படி ஒரு பலனா என்று சுந்தரராஜனுக்கு ஒரே வியப்பு.

சரி ஏதோ இன்று மட்டும் வராமல் விட்டு விட்டு நாளை வரலாமென்ற பயமும் சந்தேகமும் இல்லாமலில்லை. ஆனால் அன்றென்ன என்றென்றும் அதன்பின் தினமும் இரவு 10 முதல் ஒரு மணி நேரம் வரை உயிரை எடுத்த தலைவலி எப்படி மாயமானதோ அது மருந்தீஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு மட்டுமே தெரிந்த மகிமை.

ஸ்ரீபெரியவாளின் திருவாக்கின்படி இவர் அவ்வருடம் மார்ச் மாதம் 7ஆம் தேதி ஸ்ரீகுருவாயூரப்பன் சன்னதியில் நாராயணியம் பாராயணத்தை ஆரம்பித்தார். நூறு நாட்கள் பாராயணம் செய்வதற்குள் இவரால் நாலு திருமணங்கள் மங்களகரமாக நிச்சயித்து நடக்கப்பட்டதென்றும் இவர்கள் யாவரும் சஷ்டி அப்தபூர்த்தி செய்து வாழ்வது ஸ்ரீபெரியவாளின் அருளால்தான் என்கிறார் இந்த பக்தர்.

எமர்ஜென்ஸி காலத்தில் இவர் பார்லிமெண்டில் ஒரு கேள்விக்கான பதிலை இவரைச் சார்ந்த அரசாங்கத் துறைக்காக எழுத வேண்டியிருந்தது. அந்த பதிலை எழுதி நிதி அமைச்சக செயலாளரிடம் இவர் சமர்ப்பிக்க, அந்த செகரட்ரி அறையில் அதைப் பற்றி விவாதிக்க இவரை அழைத்தார்.

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான செக்ரட்ரி அந்த பதிலில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டுமென வலியுறுத்தினார். கீழ் அதிகாரியான இவரோ அந்த மாற்றங்களில் தனக்கு ஒப்புதல் இல்லை என்றும், அதை மாற்றக்கூடாதென்றும் தன் கருத்தைக் கூறினார்.

‘மன்னிக்க வேண்டும், அப்படி பதிலை மாற்றி அமைப்பது சரியான உண்மையை மறைப்பதாக ஆகும். அப்படியே மாற்றினால் அதற்கு முழுப் பொறுப்பையும் நீங்கள்தான் ஏற்க வேண்டும்’ என்று மிக அழுத்தமாக இவர் கூறியபோது, தன் கீழ் வேலை செய்யும் ஒருவர் தன் கட்டளையை கீழ்ப்படியாததில் அதிகாரிக்குக் கோபம்.
மிகவும் பதட்டமடைந்த அதிகாரி உடனே போன் செய்து ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னரை டில்லிக்கு விமானத்தில் அடுத்தநாளே வந்தாக வேண்டுமென்று இவர் முன்னாலேயே உத்தரவிட்டார். சூழ்நிலை மிகவும் பாதகமாக இருந்தது.

‘சரி… நீங்க போகலாம்… ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னர் நாளைக்கு இது சம்பந்தமான ரெகார்டுகளுடன் வரச் சொல்லியிருக்கேன். நீங்க எழுதி வெச்சுருக்கிற இந்த பதிலுக்கும் அவர் கொண்டு வரப்போற விபரங்களுக்கும் தாருமாறா ஏதாவது இருந்தால் உங்க மீது உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்’.
இப்படி மிரட்டலும், பயமுறுத்தலுமாக அதிகாரி இவரை அறையிலிருந்து போகச் சொன்ன போது இவருக்குப் பயத்தில் வியர்த்துக் கொட்டியது. தன்மேல் எப்படியாவது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்து விட்டதால் தான் செகரட்ரி கோபமாக இத்தனை தடாலடி விவகாரம் செய்கிறார் என்பது சுந்தர்ராஜனுக்குப் புரிந்தது.

தான் எழுதி வைத்த பதில் நேர்மையாகவும், சத்தியமாகவும் இருந்தாலும் அதிகாரி தன் கோபத்தைக் காட்ட எந்த வகையிலும் முயற்சிக்கலாமென்பதும் இவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

அன்று இரவு அடுத்த நாள் தன் நிலைமை என்னவாகுமோ என்ற நடுக்கமும் கவலையுமாக தூக்கம்வராமல், ஸ்ரீபெரியவாளையே நினைத்து வேண்டிக் கொண்டிருந்தார்.

அதிகாலையில் ஓர் அதிசயம்.

இர்வின் ரோடில் ‘கணேஷ் மந்திர்’ என்ற கோயிலின் அர்ச்சகர் இவர் வீட்டுக் கதவைத் தட்ட இவர் திறந்தார். அந்த அர்ச்சகர் கையில் பிரசாதத்துடன் நின்றார்.
‘ஸ்ரீபெரியவாளை நேத்து தரிசனம் செய்யப் போனேன். அவா இந்தப் பிரசாதத்தை உங்க கிட்டே இன்னிக்கு விடியற்கலையிலேயே கட்டாயம் சேர்த்துடனும்னு கொடுத்து அனுப்பினா’ என்றார்!

இவருக்கு இன்ப அதிர்ச்சி. இங்கே ஒரு பக்தன் இரவு முழுவதும் வேதனைப்பட்டு வேண்டிக் கொண்டதை எங்கிருந்தோ எப்படியோ தெரிந்து அனுக்ரஹிக்கும் ஸ்ரீபெரியவா கருணையை எண்ணியபடி கண்ணீர் மல்க பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

இனி எது வந்தாலும் கவலை இல்லை என்ற தெம்பு வந்துவிட்டது. அன்று மதியம் பதினொரு மணியளவில் நிலைமை தலைகீழானது. அப்போது நடந்த அதிகாரிகளின் கூட்டத்தில், அந்த ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னர் சுந்தர்ராஜன் எழுதியிருந்த பதில் முற்றிலும் பொருத்தமானதென்றும் அவை யாவும் சரியான தகவலை உடையதென்றும் அதில் சிறிதும் மாற்றம் செய்யக் கூடாதென்றும் கூற, மீட்டிங்கில் கூடியிருந்த மற்ற மூத்த அதிகாரிகளும் இதையே வழி மொழிந்தனர்.

செக்ரட்ரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தர்மசங்கடமான நிலையில் சுந்தர்ராஜனிடம் நேற்று கடுமையாக தான் நடந்து கொண்டதற்கு வருந்துவதாகவும், அதற்கு பிராயச்சித்தமாக தன் அறையிலேயே இவரையும் மதிய உணவு அருந்துமாறு கேட்டுக் கொண்டு அழைத்தார்.

ஒரு அரசாங்கத் துறையில் இப்படி ஒரு கீழ் அதிகாரியை மேல் அதிகாரி உபசரித்து கூப்பிடுவது எப்போதும் நடப்பதல்ல. ஆனால் உலகாளும் மேலதிகாரியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹத்திற்கு முன் இவையெல்லாம் எம்மாத்திரம் என்று சுந்தரராஜனுக்கு அப்போது தோன்றியிருக்கலாம்.

ஐ.நா. சபையின் ஒரு முக்கிய பதவிக்கான தேர்வு நடந்தபோது இவர் தன்னுடைய விவரங்கள் அடங்கிய மெடிகல் ரிபோர்டை தேர்வுக்காக டெல்லியில் கொடுக்கச் சென்றார். 1976-ஆம் வருடம் பிப்ரவரி 4ஆம் தேதியன்று இவர் அப்படி ஐநா சபையின் டில்லி அலுவலகத்தில் கொடுத்தபோது ஸ்ரீபெரியவாளின் திருக்கரங்கள் அனுக்ரஹிப்பதாகக் காட்சி தெரிந்தது. ஸ்ரீபெரியவாளின் மேல் கொண்டிருந்த மிகுந்த நம்பிக்கையோடு தான் நிச்சயம் தேர்வாகிவிடுவோம் என்று உறுதியாக நினைத்து அப்படி அயல்நாடு போவதற்கு முன் தன் பத்து வயது மகனுக்குத் திருப்பதியில் உபநயனம் செய்து வைக்க ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டார்.

ஸ்ரீபெரியவாளிடம் மஹாசிவராத்திரி அன்று தரிசித்துத் தான் அயல்நாடு செல்ல நேர்ந்ததால், வயதான பெற்றோர்களை விட்டுவிட்டு செல்லும் நிலைமை ஏற்படுமென்றும், அதனால் ஸ்ரீ பெரியவாளே எது சரியானதோ அதை அனுக்ரஹிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.

அடுத்த நாள் டெல்லியில் அலுவலகத்தில் விடுப்பு முடிந்து சேர்ந்தபோது ஐநா சபையிலிருந்து இவரைத் தேர்வு செய்து தந்தி மூலம் உத்தரவு வந்தது. பின் ஜூன் மாதம் இவர் ஸ்பெயினில் ஐநா சபையில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றபின் இவர் தேர்வான விபரங்கள் அடங்கிய கோப்பு இவரிடம் கொடுக்கப்பட்டது.

அந்தக் கோப்பில் ஒரு அதிசயம் காத்திருந்தது.

அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்த ஏழு நாடுகளின் நபர்களில் அந்த நாட்டின் ஃபைனான்ஸ் செகரட்ரி பிளாக்கிலிருந்து ஒரு நபரைத் தேர்வு செய்து அதை பிரதமமந்திரிக்கு அனுப்பியிருந்தது தெரியவந்தது. ஆனால் டிரினிடாட் டுபாகோவின் பிரதமமந்திரியான டாக்டர் எரிக் வில்லியம்ஸ் அதை ஏற்காமல் அந்த ஏழு பெயரில் இவர் பெயரைத் தேர்வு செய்து உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார்.

இதில் அதிசயம் என்ன? அந்த அயல்நாட்டு பிரதமமந்திரி கையெழுத்திட்ட அந்த அயல்நாட்டு நேரம் சரியாக இந்திய நேரத்தின் மஹாசிவராத்திரியன்று சுந்தர்ராஜன் உலகெலாம் உரைந்து ஓதற்கரியும் ஸ்ரீஸ்ரீஸ்ரீபரமேஸ்வரரான பெரியவாளைத் தரிசித்து இதற்கான அனுக்ரஹம் வேண்டிய அதே நேரம்.
பக்தருக்கு மெய் சிலிர்த்தது.

1987-ஆம் வருஷம் நவம்பர் மாதம் சுந்தர்ராஜனுக்கு ஒரு கடுமையான சவாலான பணி கொடுக்கப்பட்டது. யுகோஸ்லாவியாவில் ஒரு அகிலநாடுகளின் வர்த்தக சபையின் பிரதிநிதிக்கான தேர்தலில் நம் நாட்டின் உறுப்பினருக்கு பிரசாரம் செய்ய இவரை இந்திய அரசாங்கம் நியமித்தது.

அப்போது இந்திய நாட்டில் வறட்சி காரணமாக இதற்கான செலவுகளை தாராளமாகச் செய்ய முடியாத நிலையில் இவருக்குப் பக்கபலமாக ஆட்களையோ, தேர்தல் பிரசாரத்தில் செலவழிக்க பணமோ கிடைக்கவில்லை.

ஆனால் இந்திய உறுப்பினரும், பாகிஸ்தான் உறுப்பினரும் நேருக்கு நேர் போட்டியிடும் நிலைமை வந்தது. மற்ற 27 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் வேட்பாளருக்கு தக்க பலமாக ஆறு உயர் அதிகாரிகளுடன் மற்ற நாடுகளின் அங்கத்தினரை மகிழ்விக்க கேளிக்கைகளுக்காக நிறையப் பணமும் அந்த நாடு கொடுத்திருந்தது.

பெல்கிரேட் சென்று நம் நாட்டு தூதரை சுந்தர்ராஜன் சந்தித்தபோது அவர், “நீங்க எப்படி பிரசாரம் செஞ்சாலும், பாகிஸ்தான்காரன் மத்தவங்களுக்கு பணத்தைக் கொட்டி சந்தோஷப்படுத்தி நம்மை தோக்க வைக்கத்தான் போறான்” என்பதாக நம்பிக்கையில்லாமல் கூறினார். சுந்தர்ராஜனுக்கும் அதுதான் யதார்த்தமான உண்மை என்று தோன்றியது.

இருந்தாலும் நாடு தனக்கு இட்டிருந்த பணியை இந்த இக்கட்டில் எப்படி நிறைவேற்றுவதென்று மன உளைச்சலோடு தூக்கம் வராமல் இரவு சென்றது.

அதிகாலை ஒரு அதிசயக் கனவு.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இவர் முன் தோன்றுகிறார். தன் இருகரங்களை விரித்து அபயகரமாக காட்டுகிறார். நடுநாயகமாக நடராஜ மூர்த்தியான ஸ்ரீபெரியவா தரிசனம் நல்க வலது திருக்கரத்தில் வெங்கடாசலபதியும் இடது திருக்கரத்தில் பத்மாவதித் தாயாரும் தோன்ற அருள்கின்றனர்.

இந்த சொப்பனம் கண்டவுடன் மெய்சிலிர்க்க இவர் உடனே எழுந்து, அப்போது எத்தனை மணி என்றும் பார்க்காமல் நம் நாட்டுத் தூதரை போன் மூலம் தொடர்பு கொண்டு தான் கண்ட கனவைக் கூறினார். ஸ்ரீபெரியவாளைக் கனவில் காண்பது அத்தனை சுலபமல்ல அப்படிக் கனவில் மஹான் வந்து ஆசீர்வதித்தால் எப்படியும் நம்நாடுதான் ஜெயிக்கப் போகிறதென்று இவர் உணர்ச்சி பொங்கப் பேசினார். அந்த அகாலத்தினும் இவர் சொல்வதை அவமதிக்காமல் கேட்டுக் கொண்டார்.

அடுத்த நாளில் 27 நாடுகளின் வாக்காளர்களிடம் சுந்தர்ராஜன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். ஸ்ரீபெரியவாளின் மாபெரும் கருணையினால் அந்த 27 நாடுகளிலிருந்து 20 நாடுகளின் வோட்டு இந்தியாவிற்கும் மற்ற 7 வோட்டு பாகிஸ்தானுக்கும் கிடைக்க இந்தியப் பிரதிநிதி அமோக வெற்றியடைந்தார்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹ மேன்மை இப்படியெல்லாம் அதிசயங்கள் காட்டக் காத்திருக்க, அந்த மஹானைச் சரணமடைந்து வாழ்வில் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டு, ஆரோக்யமாக ஆனந்தமான சர்வமங்களத்துடன் சௌபாக்யத்துடன் நாம் வாழ்வோமாக!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/5754/sundarrajans-experience-pradosham-mamaas-publication#ixzz2l5bFlGAf

படித்ததில் பிடித்தது …” உன் தலை விதியை நீ நிர்ணயிக்க முடியாது “!!!

எம்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் படித்து, விமான பொறியியல் பட்டதாரி ஆனார், அப்துல் கலாம். அவருக்கு, இரண்டு வேலை வாய்ப்புகள் வந்தன. ஒன்று – விமானப் படையில், மற்றொன்று; பாதுகாப்பு அமைச்சக, விமான உற்பத்தி இயக்குநரகத்தில். விமானியாக ஆசைப்பட்ட கலாம், முதலில், விமானப்படை தேர்வு ஆணையத்திற்கு, நேர்முகத் தேர்வுக்குப் போனார். 1958ல், ஆணையம், டேராடூன் (உ.பி.,) நகரில் இருந்தது. இன்டர்வியூவில் வெற்றி பெற்றால், அதன் பின், அவரும் ஒரு பைலட்!
இந்தியாவின், தென் கோடியிலிருந்த தமிழகத்திலிருந்து, ஒரு சின்னஞ்சிறு உருவத்தினராகச் சென்ற கலாம், அங்கு, வாட்ட சாட்டமான தோற்றத்துடன் வந்திருந்த, வட மாநில மாணவர்களைக் கண்டு, திகைத்து போனார். அவர் சொல்கிறார்:
நேர்முகத் தேர்வில், இருபத்தைந்து பேர், போட்டி போட்டோம். எட்டு விமானப் படை அதிகாரிகளை, தேர்ந் தெடுக்க, நடத்தப்பட்ட தேர்வு அது. என்னால் முடிந்த மட்டும் நன்றாகவே செய்தேன். எனக்கு ஒன்பதாவது இடம் தான் கிடைத்தது. இந்தத் தேர்வில், மூளை பலத்தை விட, உடல் பலம், பருமன், உயரம் முதலியவைதான், முக்கிய இடம் பிடித்தன. இறுதியில் தான், இந்த உண்மை எனக்குத் தெரிய வந்தது என்று கூறும் கலாம், ஏமாற்றம், வேதனை ஆகியவற்றை, நெஞ்சில் சுமந்தபடி, தேர்வு வாரியத்தை விட்டு வெளியே வந்தார். வாழ்க்கையே முடிந்து விட்டது போலவும், எதிர்காலம், நம்பிக்கை அற்றதாகவும், அவருக்குத் தோன்றியது.
பல ஆண்டுகளாக, அவர், தன் மனதில் வளர்த்து வந்த, சுகமான கனவு, இப்போது, சுமையாக மாறிப்போனதை எண்ணி, வருந்தியபடியே, நேராக, இமய மலையில் உள்ள ரிஷிகேசத்திற்கு சென்றார். கங்கையில் நீராடினார்; மலை யடிவாரத்தில் நடந்தார். தூரத்தில், சிவானந்தா ஆசிரமம் தெரிந்தது. சிவானந்தர் பெரிய சன்னியாசி; தமிழ்நாட்டுக்காரர். திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையைச் சேர்ந்தவர். எம்.பி.பி.எஸ்., படித்து, டாக்டர் தொழில் புரிந்தவர். அனைத்தையும் விட்டுவிட்டு, ரிஷிகேசம் சென்று, ஆசிரமம் நடத்தி, ஏழைகளுக்குத் தொண்டு செய்து வந்தார்.
அப்துல் கலாம், சிவானந்தா ஆசிரமத்தை நோக்கி நடந்தார். தன் ஊர், பெயர் விவரங்களைத் தெரிவித்து, சிவனாந்தரை சந்திக்க விரும்புவதாகக் கூறினார். உடனே, சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. வெள்ளை நிற ஆடை, நெற்றியில் திருநீறு, கால்களில் மரச்செருப்புடன் புன்னகை தவழும் முகம், அருள் வீசும் கனிந்த பார்வையுடன், சிவானந்தர் அமர்ந்திருந்தார்.
‘உன் முகம் வாடியிருக்கிறது. மனம் சோர்ந்து இருக்கிறது. என்ன கவலை; என்னிடம் சொல்…’ என்றார் சிவானந்தர்.
‘சுவாமி…’ என்று, துவங்கிய கலாம், அதற்கு மேல் பேச்சு வராமல், மனம் உடைந்து அழுதார். சிவானந்தர் ஏதும் பேசவில்லை. கலாம், ஒரு நிதானத்திற்கு வந்து, பேசத் துவங்கட்டும் என்றிருந்தார்.
ஆசுவாசப்படுத்திக் கொண்ட கலாம், ‘சுவாமி… என் வாழ்நாள் கனவு, முடிந்து விட்டது. நான் விமானியாக நினைத்தேன். விமானப்படையில் சேர, நேர்முகத் தேர்வுக்கு வந்தேன். தேர்வு ஆகவில்லை. என் கனவுக் கோட்டை சரிந்து விட்டது…’ என்றார்.
‘குழந்தாய்… உன் தலை விதியை, நீ நிர்ணயிக்க முடியாது. ஏற்கனவே, உன் வாழ்க்கை வரைபடத்தை, கடவுள் வரைந்து வைத் திருக்கிறார். அந்த வழியில், அவரே உன்னை அழைத்துச் செல்வார். நீ ஏன் அஞ்சுகிறாய்… உன் வாழ்க்கைப் பொறுப்பை, கடவுள் ஏற்றிருக்கும் போது, அதை விடப் பெரிய பாதுகாப்பு, உனக்கு வேறென்ன வேண்டும்?’
சிவானந்தரின் அருள் மொழிகள், கலாமிற்கு, புதிய தெம்பைக் கொடுத்தன. நம்பிக்கையுடன் எழுந்தார்; சாதனைகளைப் படைத்தார்.
– அருணா பப்ளிகேஷன்ஸ், ‘அப்துல் கலாம்’ நூலிலிருந்து…   

source:::::Dinamalar …Varamalar.

nartarajan

” My Girl ”

'My Girl'

Photo and caption by Adelina Iliev

It would have been my parents 50th wedding anniversary but my dad didn’t make it by two months only. I was spending some precious time with the two of them last summer when my dad, now bed-bound, got hold of my mum’s hand and with great affection said: ‘my girl’. I promptly got my camera to capture this bitter-sweet moment. It was to be the last time I ever took photos of dad. He was, amongst many things, a keen photographer. I think I got the bug from him.

Location: Burgas, Bulgaria, Europe

source::::National Geographic.com

natarajan

“One Small Step For Man or One Small Step For A man “…What did Neil Armstrong really say? …

 

moonprintWhen Neil Armstrong set his left boot on the surface of the moon on July 21, 1969, becoming the first person to ever walk on the moon. He then spoke some of the most famous words in the history of mankind, ”That’s one small step for man, one giant leap for mankind.”

So true, so brilliant, so inspirational yet…so contradicting? The word “man” and “mankind” are used synonymously, meaning that the oh-so-famous quote quite simply put was, “That’s one small step for man, one giant leap for man.” Huh?

A one-lettered indefinite article is all it would take to turn this quote into the inspirational words our brains all process when we hear them. That article is “a”- “One small step for “a” man, one giant leap for mankind.” That is how most people interpret his words and, according to Neil Armstrong, those are the words he intended to speak.

NASA’s official transcript of the quote still shows the “a” in parentheses, “That’s one small step for [a] man, one giant leap for mankind.” This is because the “a” is not audible in the broadcast. For years, both NASA and Armstrong insisted that static had obscured the “a”. Armstrong himself stated that he would never make such a mistake (omitting such an important part) but after listening to recordings of his quote, finally conceded that it’s possible that he may not have said the “a”. When he admitted this, he stated, “I would hope that history would grant me leeway for dropping the syllable and understand that it was certainly intended, even if it was not said—although it might actually have been”.

An Australia-based computer programmer named Pater Shann Ford conducted a digital audio analysis to support Armstrong’s claim that he did say “a” and concluded that he did, in fact, say “a man”, but the “a” was inaudible due to technological limitations of the time. However, linguists David Beaver and Mark Liberman wrote their own digital audio analysis of the infamous quote on Language Log blog and concluded that, “The acoustic evidence seems to be against Ford’s theory.”

But that’s not the end of the story. Support for Armstrong  has been found in a team of researchers from Michigan State University and Ohio State University who have concluded that Armstrong did indeed speak the words he claims to have spoken but static or technological limitations are not to blame for its apparent omission.  According to them, Armstrong’s Ohion accent is to blame y’all.

According to a Michigan State University specialist in communicative sciences, assistant professor Laura Diller, because of the dialect of his hometown, if Neil Armstrong did voice the word “a”, it was short and fully acoustically blended with the preceding word “for”.

 

The Acoustical Society of America’s article on this topic states that,

Dilley and her colleagues, who include MSU linguist Melissa Baese-Berk and OSU psychologist Mark Pitt, thought they might be able to figure out what Armstrong said with a statistical analysis of the duration of the ‘r’ sound as spoken by native central Ohioans saying ‘for’ and ‘for a’ in natural conversation. They used a collection of recordings of conversational speech from 40 people raised in Columbus, Ohio, near Armstrong’s native town of Wapakoneta. Within this body of recordings, they found 191 cases of ‘for a’. They matched each of these to an instance of ‘for’ as said by the same speaker and compared the relative duration. They also examined the duration of Armstrong’s ‘for (a’) from the lunar transmission.

The researchers found a large overlap between the relative duration of the ‘r’ sound in ‘for’ and ‘for a’ using the Ohio speech data. The duration of the ‘frrr(uh)’ in Armstrong’s recording was 0.127 seconds, which falls into the middle of this overlap, though it is a slightly better match for an ‘a’-less ‘for’. In other words, the researchers conclude, the lunar landing quote is highly compatible with either possible interpretation, though it is probably slightly more likely to be perceived as ‘for’ regardless of what Armstrong actually said. Dilley says there may have been a ‘perfect storm of conditions’ for the word ‘a’ to have been spoken but not heard.

source:::::today i foundout.com

natarajan

Laughter The Best Medicine !!!…” Most Dangerous Food ” !!!

A doctor was addressing a large audience in Oxford on the subject of modern nutrition:
“The rubbish we put into our stomachs should have killed most of us sitting here, years ago.
Red meat is full of steroids and dye. Soft drinks corrode your stomach lining. Chinese food is loaded with MSG. High transfat diets can be disastrous, and none of us realizes the long-term harm caused by the germs in our drinking water.
But, there is one thing that is the most dangerous of all and most of us have, or will eat it.  Can anyone here tell me what food it is that causes the most grief and suffering for years after eating it?”
After several seconds of quiet,
a 70-year-old man in the front row raised his hand, and softly said,
Wedding Cake?