” மார்கழி என்றால் …..”

 

“வைகறையின் செம்மை இனிது.

மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க.

உஷையை நாங்கள் தொழுகின்றோம்.

அவள் திரு.

அவள் விழிப்பு தருகின்றாள்.

தெளிவு தருகின்றாள்.

உயிர் தருகின்றாள்.

ஊக்கந் தருகின்றாள்.

அழகு தருகின்றாள்.

கவிதை தருகின்றாள்.”

– வைகறைப் பொழுதை வாழ்த்தும் பாரதியின் வார்த்தைகள் இவை.

வைகறை எப்போதும் அழகு; மார்கழியிலோ கூடுதல் அழகு; தமிழர் வாழ்வியலில் இன்னும் அழகு. முன்பனி, பின்பனி, நான்கு திசைகளில் வரும் வாடை, தென்றல், குடக்கு, குணக்கு என எல்லாவற்றையும் போற்றிய எம் மக்கள் பனிப் படலத்தைத் தன்மீது போர்த்திக்கொள்ளும் மார்கழியைக் கொண்டாடுவதுதான் எத்தனை அழகு?

மார்கழி என்றால், ‘முன்பே வந்து என்னை எழுப்புவேன் என்று சொன்னாயே, இன்னும் உறங்குகின்றாயோ, நாங்கள் முன்வந்து உன்னை எழுப்ப வேண்டியதாகியுள்ளதே, என்ன வினோதம் இது. பெருமாளை அத்தன் என்று அழைத்தாய் நீ, ஆனந்தன் என்று அழைத்தாய், அமுதன் என்று அழைத்தாய் நீ. இதெல்லாம் வெறும் வாய்ஜாலமோ. நீ இனி தூங்கிக்கொண்டே இருந்தால், உன் இரு கண்களும் மிக நீண்டு வளர்ந்துவிடும் எனும் அபாயத்தை மறந்துவிடாதே, விரைவில் நீராடிவிட்டு இறைவனை வழிபட வா’ என்று துயில் எழுப்பும் திருப்பாவை, திருவெம்பாவைக் கவிதைகள்.

மார்கழி என்றால், திருப்பாவை, திருவெம்பாவைக் கவிதைகளை அடாணா, பிலஹரி, வராளி, குந்தளவராளி, சங்கராபரணம், சிந்துபைரவி, தேஷ், பெஹாக் ராகங்களில் பாடிய எம்.எல்.வசந்தகுமாரியின் மறக்க முடியாத குரல். மார்கழி என்றால், கவிதையை ஆண்ட ஆண்டாள் பாசுரங்கள்.

மார்கழி என்றால், பாவை நோன்பு. மார்கழி என்றால், வீதிகள்தோறும் வெள்ளிக் கம்பளம் விரித்தது போன்று அரிசி மாவில் ஐந்து புள்ளி ஐந்து வரிசை, ஏழு புள்ளி ஏழு வரிசை, ஒன்பது புள்ளி ஒன்பது வரிசை என வளைந்து நெளியும் விதவிதமான கோலங்கள்.

மார்கழி என்றால், சூரிய விடியலுக்குக் காத்திராமல் அதற்கு முன்பே நீராடி விடியற்காலம் நான்கு மணிக்கே தொடங்கும் உஷ கால பூஜை. உஷ கால பூஜையில் வாசிக்கப்படும் பௌளி, பூபாளம்; காலை காலசந்தி பூஜையின்போது வாசிக்கப்படும் மலைய மாருதம், பிலஹரி, சாவேரி; சூரியன் உச்சியை அடையும் மத்திம காலத்தில் வாசிக்கப்படும் மத்தியமாவதி, சுருட்டி; உச்சிப் பொழுதிலிருந்து சூரியன் சாயுங்காலமான சாயரட்சை காலத்தில் வாசிக்கப்படும் கல்யாணி, பூர்விகல்யாணி; இரண்டாம் காலம், சுவாமி படுக்கைக்குச் செல்லும் முன் அர்த்தஜாம பூஜையில் வாசிக்கப்படும் நீதேனுகாலாம்பரி ராகங்கள்.

மார்கழி என்றால், முன்புறம் சுருட்டி, வாசமாலை, முகபடாம் போர்த்திய யானையின் அலங்காரம், எக்காளம், திருச்சீர்னம், டவுண்டி, நகரா என இசைக் கருவிகளின் இசையின் நடுவே மிதந்து வரும் சுவாமியின் வீதியுலா.

மார்கழி என்றால், இசை விழா.

மார்கழி என்றால், எதையும் கொண்டாடிப் பார்க்கும் எம் மக்களின் பண்பாட்டுச் சான்று.

மார்கழி என்றால், ஞாபகங்கள்.

மார்கழி போற்றுதும், மார்கழி போற்றுதும்!

source::::: தேனுகா  in The Hindu ….Tamil

natarajan

தேனுகா, கலை விமர்சகர், தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் “….மகாகவியின் கவிநயம் !!!

earth

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே   தமிழ்மொழி  போல்
இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப்  பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்திடுதல்  நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை  செய்தல் வேண்டும்

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போ
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போ
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒரு சொற் கேளிர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்

source::::blog.dinamani.com

natarajan

 

” பாரதியின் பாப்பா பாட்டு ” ….

ஓடி விளையாடு பாப்பா என்பது பாரதியார் எழுதிய பரந்து அறிமுகமான ஒரு குழந்தைகள் பாட்டு. இப் பாடலின் பல பகுதிகள் இலங்கை, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன.

bharathiyar

இந்தப் பாடல் பெண் குழந்தைகளை சிறப்பாக ஊக்கப்படுத்தி பாடப்பட்டிருக்கும் … இதோ  அந்த  கவிதை !!!…நீங்கள்  உங்கள் குழந்தைகளுக்கு  சொல்லிக்  கொடுக்க !!!

ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
வாழும் முறைமையடி பாப்பா.

source::::Dinamani  Tamil Daily…Blogsite

natarajan

“படிக்க …சிரிக்க …படிக்க ….சிரிக்க…” !!!

 

ஆசிரியர்: உன்னுடைய வயதில் ஜனாதிபதிகள் அனைவரின் பேரையும் வரிசை கிரமமாகச் சொல்வேன்.

மாணவன்: உங்கள் வயதில் அப்போது மூன்று நான்கு ஜனாதிபதிகள்தான் இருந்திருப்பார்கள் டீச்சர்!

******************************

தாமதமாக வந்த மாணவனைப் பார்த்து ஆசிரியர் கேட்டார்: “”ஏன் லேட்?”

மாணவன்: வழியில் ஒரு தகவல் பலகை இருந்தது டீச்சர். அதில்…

இடையே குறுக்கிட்ட ஆசிரியர்: நீ லேட்டாக வர்ற அளவுக்கு அந்த பலகையில் என்ன எழுதியிருந்தது.

மாணவன்: பள்ளிக்கூடம் வருகிறது. மெதுவாகச் செல்!

******************************

புதிதாக சேர்ந்த வேலைக்கார பெண்ணிடம் வீட்டுக்காரி கேட்டாள்: “”மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு இன்று புதிதாக தண்ணீர் மாற்றினாயா?”

வேலைக்காரப் பெண்: “”இல்லையம்மா! நேற்று ஊற்றிய தண்ணீரையே அவை இன்னும் குடித்து முடிக்கவில்லையே!”

******************************

டிராபிக் போலிஸ்: மேடம்! நீங்கள் மணிக்கு 70 மைல் வேகத்தில் காரை ஓட்டி வந்திருக்கிறீர்கள்

பெண்: வாவ்! இது மிகவும் ஆச்சரியமில்லையா? நான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டதே நேற்றிலிருந்துதான்!

******************************

வீட்டுப் பெண்மணி: எப்போதும் எங்கள் வீட்டிற்கே வந்து பிச்சை எடுக்கிறாயே ஏன்?

பிச்சைக்காரன்: டாக்டர்தான் சொன்னார்

வீட்டுப் பெண்மணி: டாக்டர் என்ன சொன்னார்?

பிச்சைக்காரன்: உன்னுடைய உடல் நலனுக்கு எந்த உணவு ஒத்துக்கொள்கிறதோ அதையே தொடர்ந்து சாப்பிடு என்றார்.

******************************

டாக்டர்: உங்கள் மனைவிக்கு “லோக்கல்’ அனஸ்தீஷியா கொடுக்கலாமா?

கணவன்: நோ. நோ. என்னிடம் ஏராளமான பணமிருக்கிறது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவே கொடுங்கள்.

******************************

டாக்டர்: என்னிடம் வருவதற்கு முன் நீங்கள் வேறு டாக்டர் யாரிடமாவது சென்றீர்களா?

நோயாளி: இல்லை டாக்டர். இந்தத் தெருவில் உள்ள மருந்து கடைக்காரரிடம்தான் சென்றேன்.

டாக்டர்: அந்த மடையன் என்ன சொன்னான்?

நோயாளி: அவர்தான் உங்களிடம் போகச் சொன்னார்!

 

source::::Dinamani …TamilDaily  Blogsite

natarajan

கவிதைத் துளிகள் ….

துளி …1

சிறகடிக்கும் பறவைக்கு  வேண்டாமே   பாஸ்போர்ட் …
 உறவு  தேடி பறக்கும் மனிதனுக்குதான்  தேவை பாஸ்போர்ட்டும்
நுழைவு  சீட்டும் !!!   .
 துளி…2
வலையின்  அலையால்  சுருங்கியது உலகம்  இது உண்மை !!!
சுருங்கியது உலகம் மட்டுமா ?  இல்லை
இறுக்கமான  உறவுகளுமா !!!
 துளி …3
ஒரு  போஸ்ட் கார்டு  அன்று  உறவை வளர்த்தது …. இன்று
 ஒரு நூறு கார்டு நம் சட்டை பையில் !!!….ரேஷன் கார்டு  முதல்
ஆதார் கார்டு  வரை…..நம்  உறவுகள் யார் யார் என்று சொல்ல !!!
 துளி …4
 நம் உறவுடன்  உரையாட , உறவாட தேவை
 ஒரு பாஸ் வோர்ட் !!!…..  வலையின்  வலிமை  அது !!!
நமக்கு  நாமே பின்னிக்கொண்ட  வலையும் அதுதான் !!!
 துளி …5
  நம்மை உலகுக்கு அடையாளம் காட்டிய நம்
  அம்மா  அப்பாவுக்கு மட்டும்   தேவை இல்லை  நம்
  அடையாள  அட்டை !
 நடராஜன்
 14 .12.2013

மகாகவி பாரதியாரின் சகோதரருடன் ஒரு சந்திப்பு !!!

1984ம் ஆண்டு.
“பாரதியார் பிறந்தநாள் வரப் போவுதே.. என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டார்கள் திருநெல்வேலி வானொலி நிலைய நண்பர்கள்.
நான் யோசித்தேன்.
“இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்யலாமே…’ என்று யோசனை கூறினார் ஒரு நண்பர்.
“வித்தியாசமா…ன்னா…?’
“பாரதியாரை நேரில் பார்த்தவர்கள், அவரோடு பழகியவர்கள், இப்படிப் பட்டவர்களை நேரிலே சந்தித்துப் பேசி… அதையெல்லாம் தொகுத்துக் கொடுக்கலாமே…!’
“நல்ல யோசனைதான். இருந்தாலும் பாரதியாரோடு பழகியவர்கள் இந்தக் காலத்திலே இன்னும் யார் இருக்கப் போகிறார்கள்?’
“என்ன சார் அப்படிச் சொல்லிபுட்டீங்க.. பாரதியாரின் தம்பி இருக்காரே… அவரைப் போய்ப் பார்க்கலாமே…!’ என்றார் டி.கே.ஆர். (நண்பர் தெ.கு.இராமச்சந்திரன் அப்போது எங்களோடு வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொணிடருந்தார். அவரை எல்லோரும் செல்லமாக டி.கே.ஆர். என்றுதான் அழைப்பது வழக்கம்)
“பாரதியாரின் தம்பியா?’ என்றேன் ஆச்சரியத்தோடு.
“ஆமாம். சி. விஸ்வநாத ஐயர்!’ என்றார் டிகேஆர்.
“எங்கே இருக்கார்?’
“மானாமதுரையிலே இருக்கார். அந்த ஊர் பள்ளிக் கூடத்துலே தலைமை ஆசிரியரா ரொம்ப காலம் இருந்தார். இப்ப ரிட்டையர் ஆகி அந்த ஊரிலேயே தான் இருக்கார்.’
“இப்ப அவருக்கு வயது என்ன இருக்கும்?’
“அது… வந்து 88 க்கும் மேலே இருக்கும் இருந்தாலும் இந்த வயசுலேயும் நல்லா சுறுசுறுப்பாக இருக்கார்.’
இவ்வளவு விவரங்களும் தெரிந்து கொண்ட பிறகு சும்மா இருக்க முடியுமா?
அலுவலகத்தில் முறையான சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு ஒலிப்பதிவுக் கருவிகளோடு நானும் நண்பர்களும் புறப்பட்டோம்.
மானாமதுரையில் எதிரே வந்த ஒருவரை நிறுத்தி வழிகேட்டோம்.
“அதோ.. அந்தப் பாலத்தை தாண்டி அடுத்த பக்கம் போங்க… வாசலிலே கம்பி போட்டிருக்கும். அந்த வீடுதான்.’
வீட்டுக்கு முன்னால் எங்கள் கார் போய் நின்றது.
வாசல்புறம் நின்றிருந்த ஒருவரிடம் நாங்க வந்திருக்கின்ற விவரத்தைச் சொன்னோம்.
உடனே அவர் எங்களை அழைத்துக் கொண்டு மரப்படிகளின் வழியாக மாடிக்குச் சென்றார்.
அங்கே அந்தப் பெரியவரை – மகாகவி பாரதியின் சகோதரரைச் சந்தித்தோம்.
அன்போடு எங்களை வரவேற்று அமரச் செய்தார். உபசரித்தார். உயரே சுவரில் பழங்காலத்துப் படங்கள் நிறைய மாட்டப்பட்டிருந்தன. அந்தக் காலத்துப் பாரதியின் படங்களை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.
கொஞ்ச நேரத்தில் பேட்டி தொடங்கியது.
வெளியுலகத்துக்குத் தெரியாத நிறைய விவரங்களை அவர் சொன்னார்.
“எங்க அப்பா சின்னசாமி ஐயர்… அவருக்கு இரண்டு மனைவிகள்…’
முதல் மனைவி லட்சுமி அம்மா… அந்த லட்சுமி அம்மாளின் மகன்தான் பாரதி.
பாரதிக்கும் அஞ்சு வயசு ஆவதற்குள்ளே தாயார் இறந்துவிட்டார்.
அதுக்கப்புறம் இரண்டரை வருஷம் கழிச்சி சின்னசாமி ஐயர் வள்ளியம்மாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். வள்ளியம்மாளின் பிள்ளை தான் நான். அதாவது எனக்கும் பாரதிக்கும் அப்பா ஒருவர் தான் அம்மாதான் வேறு.
“உங்களுக்கு வேறு சகோதரர்கள் சகோதரிகள்…’
“எனக்கு மூத்த சகோதரி ஒருத்தர் உண்டு. லட்சுமின்னு பேரு.. எட்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க இறந்து போயிட்டாங்க’
“பாரதி கூட நீங்க இருந்த நாள்கள்… இப்ப உங்களாலே ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?’
“பாரதி சென்னையிலே இருந்தார் இல்லையா…?’
“திருவல்லிக்கேணியிலே தானே…’
“அதுக்கும் முன்னாடி மயிலாப்பூரிலே இருந்தார். சித்திரைக்குளம் கீழவீதியும் தெற்குவீதியும் சேர்ற இடம். அங்கே இருந்து தெற்கே போற ஒரு சின்ன தெரு. அங்கே ஒரு பெரிய வீட்டுலே நாங்க குடியிருந்தோம்.
அப்ப நான் மயிலாப்பூர் பி.எஸ்.ஹைஸ்கூல்லே இரண்டாவது பாரம் (ஏழாம் வகுப்பு) படிச்சிக்கிட்டிருந்தேன். அதுக்குப்புறம்தான் திருவல்லிக்கேணியில் பெரிய தெருவுக்குப் போனோம். (வீரராகவ முதலி தெரு)
அதுக்கப்புறம் நல்லதம்பி முதலி தெருவிலேயும் இருந்தோம். அந்தச் சமயம் நான் திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூல்லே படிச்சேன்.
1918க்கு அப்புறம் அவர் கடையத்துலேயும் எட்டயபுரத்திலேயும் மாறி மாறி இருந்தார். அப்பல்லாம் நானும் அவர் கூடவே இருந்தேன்.’
“பாரதியார் உங்களைப் பத்தி பேசினது எழுதினது ஏதாவது ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?’
சிறு பிள்ளைகளைப் போல ஆர்வத்தோடு அவரை விசாரித்தோம்.
“ஞானரதம்-ங்கற நூல்லே மண்ணுலகம்-ன்னு ஒரு பகுதி. அதுல எழுதியிருக்கிறதெல்லாம். நாங்க நல்லதம்பி முதலி தெரு வீட்டுலே தங்கியருந்தப்போ கிடைச்ச அனுபவங்கள். அதிலே அவர் என்னைப் பத்தி எழுதியிருக்கிறதைப் பாருங்க!’ என்று சொல்லி ஒரு வாரப் பத்திரிகையை எடுத்து எங்களிடம் கொடுத்தார். அதில் அந்தப் பகுதியை எடுத்துப் போட்டிருந்தார்கள். அதில் பாரதியார் எழுதியிருக்கிற வாசகங்கள் இவை:
“22ம் தேதி தம்பிக்குப் பாடசாலைச் சம்பளம் கொடுக்க வேண்டிய நாள். நான் காரியாலயத்திலிருந்து பணம் கொண்டு வந்து வைக்க மறந்து விட்டேன். நான் சுதேசிய விஷயத்தில் பாடுபடுவதில் பொருட்டாக என்னை எப்பொழுதும் கவனித்து வரும்படியாக ராஜாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் என் தம்பியிடம் செய்த சம்பாஷணையில் “உம்முடைய அண்ணனது சிநேகிதரான இன்னவரை ராஜாங்கத்தார் பிடிக்கப் போகிறார்கள்’ என்ற மங்கள சமாசாரம் சொல்லிவிட்டுப் போனதாகத் தம்பி சொன்னார்.’
“பாரதியார் பாடல்கள் இயற்றுவது மட்டுமல்லாமல் அவற்றைப் பாடவும் செய்வாராமே?’
“1920ல் நாங்க திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் இருந்தப்ப வ.வே.சு. ஐயர் ஒரு நாள் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் பாரதி “அண்ணா, இன்று ஒரு பாட்டு இயற்றியிருக்கிறேன் கேட்கிறீர்களா?”ன்னார்.
“ம்… சொல்லுங்க!’ன்னார் வ.வே.சு. ஐயர்.
உடனே பாரதி பாட ஆரம்பித்தார்.
காயிலே புளிப்பதென்ன?
கண்ணபெருமானே – நீ
கனியிலே இனிப்பதென்ன
கண்ணபெருமானே
அந்தச் சமயம் அவர் அதைக் கம்பீரமா பாடறப்போ நானும்கூட இருந்துகேட்டேன். மறக்க முடியாத அனுபவம்
“பாரதி நூற்றாண்டு விழா ரஷ்யாவுலே கொண்டாடப் போறாங்களாமே கேள்விப்பட்டீங்களா?’
“ஆமாம்… அதுலே வந்து கலந்துக்கணும்னு அந்த அரசாங்கமே என்னை அழைச்சிருக்கு.’
“போக போறீங்களா?’
“மனசுல ஆசை இருக்கு.. உடம்புல பலம் இல்லை’ என்று சொல்லி லேசாக சிரிக்கிறார்.
“அப்படின்னா…?’
“நான் வர்றதுக்கு என் உடம்பு இடம் கொடுக்காதுன்னு அவங்ககிட்டே சொல்லிட்டேன்’
நீண்ட நேரம் நிறைய விஷயங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட்டோம். தள்ளாத வயதிலும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
அதற்கு அடுத்த வருடமே நான் சென்னை வானொலி நிலையத்துக்கு மாற்றலாகி வந்துவிட்டேன்.
இங்கு வந்த பிறகு ஒருநாள் நண்பர் ஒருவரிடம் நான் பாரதியின் தம்பியை பேட்டி கண்ட விஷயத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தேன்.
“சந்தர்ப்பம் கிடைச்சா, இன்னொரு முறை மானாமதுரைக்கு போய் அந்தப் பெரியவரைப் பார்த்துட்டு வரலாம்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்!’ என்றேன்.
அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “உனக்கு விஷயம் தெரியாதா?’ என்றார்.
“என்ன?’ என்றேன்.
“அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் காலமாகி விட்டதாக உறவினர்கள் சிலர் மூலமாகக் கேள்விப்பட்டேன்’
நான் ஒரு நிமிடம் மௌனமாகி… பிறகு யோசித்தேன்.
“எத்தனை பெரியவர்கள் இந்த உலகத்தில் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் வாழ்ந்துவிட்டுப் போய் விடுகிறார்கள்.’

– தென்கச்சி கோ. சுவாமிநாதன்  in “KALAIMAGAL ”  TAMIL MONTHLY 

Natarajan

பாரதி: வெடித்து அணைந்த விண்மீன்…

சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம். தனது குறுகிய வாழ்நாளுக்குள் எவ்வளவு செய்திருக்கிறார் பாரதி. கவிதைகள் மட்டும்தான் அவரது சாதனை என்று இன்றைய தலைமுறையினர் பலர் நினைக்கக்கூடும். கிட்டத்தட்ட, கவிதைகளுக்கு நிகரான சாதனையை பாரதி உரைநடையிலும் செய்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், அவருடைய இதழியல் பணி மகத்தான வீச்சுடையதாகவும் இருந்திருக்கிறது. சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா போன்றவை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பாரதி பணியாற்றியிருக்கிறார். வேறு சில பத்திரிகைகளில் பங்களிப்பும் செய்திருக்கிறார். தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘இந்தியா’ இதழில், தென்னிந்தியப் பத்திரிகைகளிலேயே முதன்முறையாகக் கருத்துச்சித்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிக்கு உண்டு. சமூகத்துடன் ஊடாடுவதற்கு இதழியலையும் பாரதி மிகவும் திறமையாகக் கையாண்டார். அரசாங்கத்தின் தடை, பொருளாதாரக் காரணங்கள் போன்றவற்றால் ஒவ்வொரு பத்திரிகையும் முடக்கப்பட்டாலும் உடனடியாக வேறொரு பத்திரிகையில் எப்படியும் கால்பதித்து விடுவார். அந்த அளவுக்கு அவரது இதழியல் தாகம் தணியாததாக இருந்திருக்கிறது. அதனால்தான், பத்திரிகை தொடங்குவது குறித்துத் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘சொத்தை விற்றேனும்’ பணம் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்.

கவிதைகள், உரைநடை, இதழியல் எழுத்துக்கள் என்று பாரதியை எழுத்து சார்ந்த மனிதராக மட்டுமே பார்த்துவிட முடியாது. தான் வாழ்ந்த காலத்தில் மகத்தான புரட்சியாளராக பாரதி இருந்திருக்கிறார். இந்து மதத்தில் ஈடுபாடுடையவராக இருந்தாலும், சாதிப் பிரிவினைகளையும் தீண்டாமைக் கொடுமையையும் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புணர்வைத் தனது வாழ்க்கை முறையிலும் செயல்படுத்திக் காட்டினார். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பாகுபாடு பார்க்காமல் பழகுதல், அவர்கள் வீட்டில் உணவருந்துதல் போன்ற பழக்கங்களைத் தான் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், பிறரையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். இந்தச் செய்கைகளெல்லாம் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதேபோல், மத வேற்றுமையும் பாராதவர் பாரதி. அவருக்கு இஸ்லாமிய, கிறித்தவ நண்பர்கள் உண்டு. 1920-ல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று பொட்டல் புதூரில் அங்குள்ள இஸ்லாமிய மக்களிடையே இஸ்லாம் மார்க்கத்தின் பெருமையைப் பற்றி பாரதி பேசியதோடல்லாமல், தான் எழுதிய ‘அல்லா… அல்லா… அல்லா!’ என்ற பாடலையும் பாடிக்காட்டியிருக்கிறார்.

எப்பாடுபட்டாவது இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்று தவிப்புடன் போராடியவர்களில் பாரதிக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. இந்தத் தவிப்பின் பிரதிபலிப்புதான் மிதவாதம், தீவிரப்போக்கு ஆகிய இரு வழிகளில் தீவிரப்போக்கை பாரதி தேர்ந்தெடுத்தது. விடுதலைபெற்ற இந்தியாவை, தீண்டாமை போன்ற பிரச்சினைகள் ஒழிந்த இந்தியாவை வாழ்த்திப் பாடும் முதல் பாடகனாக, தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய பெருங்கனவு. நாடு விடுதலை பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டாலும்கூட, ஏதோ ஒரு முன்னெச்சரிக்கை உணர்வால் மேற்குறிப்பிட்ட லட்சிய பாரதத்தை வரவேற்று முன்கூட்டியே பாடல்களைப் பாடிவிட்டுப் போயிருக்கிறார்.

பாரதியை நம் நாடு உரிய வகையில் கெளரவித்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் உண்மை. தேசப்பற்றையும் சுதேசி உணர்வையும் வடிவமைத்ததில் தேசத்தின் எந்தத் தலைவருக்கும் நிகராகப் பங்குவகித்த பாரதி, இறுதியில் தமிழகத்துக்கு மட்டுமே உரியவராகப் பார்க்கப்பட்டவரானார். தமிழகத்தால் மட்டுமே தற்போது கொண்டாடப்படுகிறார். தாகூரின் புகழை இந்திய அளவில் பரப்பவும் நிலைநாட்டவும் இந்திய அரசும் மேற்கு வங்க அரசும் எவ்வளவோ திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. இதற்கெல்லாம் தாகூர் தகுதி வாய்ந்தவர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், தாகூருக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய பாரதி போன்றவர்களும் கெளரவப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

சமீபத்தில் பாரதியின் படம் பொறித்த நாணயம் வெளியிடப்பட வேண்டும் என்று எழுந்த சிறிய கோரிக்கையை, ‘பொருத்தமான காலம் இதுவல்ல’ என்று கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஒரு நாணயத்துக்கே பாரதிக்கு இந்தப் பாடு! இந்தப் போக்கு இந்திய அரசுக்கு அழகல்ல. தேசத் தலைவர்கள், தேச உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமைகள் போன்றோர் விஷயங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து கவனம் கொடுக்கப்பட்டு மற்றவர்கள் நிராகரிக்கப்படுவது முறையல்ல.

‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்றார் பாரதி. அப்படி உயிர்த்துடிப்பு கொண்ட ஒரு சொல்லாகத் தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவர். அந்தச் சொல்லின் பெயர் ‘உத்வேகம்’, 100 ஆண்டுகள் கடந்தும் ஒளிவீசிக்கொண்டிருக்கும் உத்வேகம் அது.

source::::The Hindu…Tamil… Editorial Tribute to  Subramania Bharathi  on his Birthday today…11 dec.

 

Meet Sengai Podhuvan…”78 year old Poster Boy of Tamil Wikipedia ” !!!

As he lifts his left hand to type in front of his home PC, his fingers don’t keep pace with his mind.

Sengai Podhuvan, one of the oldest contributors of Tamil Wikipedia, has authored over 2,600 articles. His wife Sengai Selvi helps him with his work. Photo: Karthik Subramanian

Sengai Podhuvan, one of the oldest contributors of Tamil Wikipedia, has authored over 2,600 articles. His wife Sengai Selvi helps him with his work. Photo: Karthik Subramanian

 

“Look at that. The finger is trembling and refusing to listen to me,” Sengai Podhuvan, dressed in a blue T-shirt that sports logos of Tamil Wikipedia and a saffron dhoti, says. “Now I just have to wait for my hand to stabilise and type one letter at a time. It takes a while but I am used to it.”

The 78-year-old is an unlikely poster boy of the Tamil computing fraternity. Having authored over 2,600 articles in Tamil Wikipedia, Mr. Podhuvan is well known within the closed group of Tamil Wikipedia editors as the man who translated ‘Tolkappiyam,’ one of the oldest surviving Tamil works, into English for WikiSource.

He has also developed a new standard for transliteration of Tamil to English, using just the Roman alphabets available on regular keyboards. “I have avoided the use of diacritical marks and capitalisation. Instead, I have constructed the sounds of Tamil on a new standard that will allow any user to grasp the nuances of Tamil pronunciation,” he says.

Mr. Podhuvan, who types for five hours every day, has achieved all of these things despite having a degenerative neurological disorder. “It is most probably Parkinson’s and it is genetic. My mother had it and her mother before her,” he says.

He has refused medication because he feels that ultimately, it won’t matter, much to the chagrin of his wife, 71-year-old Sengai Selvi, his five children and his family doctor. Selvi supports Mr. Podhuvan through all of his chores at their home in Nanganallur, where the elderly couple live by themselves. Their four daughters are all married and live in different parts, while their son is in Canada.

Early affinity

Sengai Podhuvan’s love for Tamil started early. “I had studied only up to class VIII, but became a teacher when I learnt the government allowed those with at least three years of teaching experience to appear for SSLC exams,” he says, recalling the events of the early 1960s when he was in his 20s.

He continued in the teaching profession, earning subsequent degrees leading up to a PhD from Tiruchi Bharathidasan University, which he received just after retiring in 1994. His big break into the world of Tamil literature, however, started in 1971, when veteran Tamil scholar Dr. Mu. Va (Mu. Varadarajan) offered him a job as the editor of scholarly works for a project to record the ‘Authentic History of Tamilnadu’.

Mr. Podhuvan has also been the editor of sports journal ‘Tamizhar Vilayatu Madal’ brought out by the directorate of sports development during the Chief Ministership of M.G. Ramachandran.

His tryst with computers began in 2005, when he acquired his first PC and trained himself to be able to publish his own books. He has already published six books. “My ambition is to translate Sangam literature works — ‘Pathu Paatu’ and ‘Ettu Thogai’ — for Tamil Wikipedia,” he says.

Keywords: Sengai PodhuvanTamil computingTamil WikipediaTamil to English transliteration

source:::: Karthik Subramanian in The Hindu..

natarajan

” படிக்க படிக்க சிரிப்பு வரும் ” !!!

laughவாழ்க்கையில் எதற்கெல்லாமோ சிரிக்கிறோம்.. ஒரு நகைச்சுவைக்காக சிரிக்க மாட்டோமா.. நிச்சயமா சிரிப்பீங்க.. நாங்க நம்புறோம்…

செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.

***

கோபு : நேத்து ஹோட்டல் வைத்திருப்பவர் வீட்டில் பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?
பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.

***

ஒரு பொண்ணு போன எடுத்து எடுத்துப் பார்த்தா என்ன அர்த்தம்?
புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம்
போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?
காதலன புடிக்கலன்னு அர்த்தம்
பொண்ணு தலை குனிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்?
போன்ல மெசேஜ் ப்ரீன்னு அர்த்தம்.

***

பொண்ணுங்க போன பத்தி என்னடா நினைக்கிற…
ரூ.20 ஆயிரத்துக்கே போன வாங்கினாலும், அதுல மிஸ்டுகால் மட்டும்தான் கொடுப்பாங்கடா..

***

கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு…
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.

***

என் பொண்டாட்டின்னா எனக்கு ரொம்ப பயம்.. நீங்க எப்படி?

அட போங்க நான் அவ்ளோ மட்டமில்லை. உங்க பொண்டாட்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.

source::::vanisri sivakumar in Dinamani…Tamil Daily

natarajan