படித்ததில் ரசித்தது …” ஒரு பிஸ்கட் நிஜாமுக்கு” !!!

திவான் ஜர்மன் தாஸ் என்பவர், இந்திய சமஸ்தான மன்னர்கள் பலருடன் நெருங்கிப் பழகியவர். தன் அனுபவங்களை, அவர், ‘மகாராஜா’ என்ற, ஆங்கில நுாலில் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ள சில சம்பவங்கள் :


ஐதராபாத் நிஜாமின், கருமித்தனம் மிகப் பிரசித்தம். அவர், யாரையாவது, தேனீருக்கு அழைத்தால், தேனீருடன், இரண்டு பிஸ்கட்டுகள் வரும். ஒரு பிஸ்கட் நிஜாமுக்கு; மற்றொன்று விருந்தாளிக்கு.
நிஜாமிடம், 282 காரட் வைரக்கல் ஒன்று இருந்தது. அதை, எப்போதும் மேஜை மீது, வைத்திருப்பார். அவரது உதவியாளராக இருந்த, சுல்தான் அகமது மீது, நிஜாமுக்கு ரொம்ப பிரியம். அவருக்கு ஏதேனும் வெகுமானம் செய்ய வேண்டுமென்று நினைத்தார். அதனால், அகமதை கூப்பிட்டு, கையை நீட்டச் சொல்லி, வைரக் கல்லை கொடுத்து, ‘சில நிமிடங்கள் வைத்துக் கொண்டிரு…’ என்று சொல்லி, பின், திரும்ப வாங்கிக் கொண்டார்.
தாட்டியா என்ற சமஸ்தானம், உயர்ரக வெண் ணெய்க்கு பெயர் பெற்றது. தமக்கு, வெண்ணெய் அனுப்பும்படி, அந்த சமஸ்தானாதிபதி யிடம் நிஜாம் கேட்கவே, அவரும், பன்னிரண்டு டின் வெண்ணெய் அனுப்பினார். ஸ்டோர் ரூமில் வைக்கும்படி கூறி, யாரும், அதை தொடக் கூடாது என்றும், கட்டளையிட்டார் நிஜாம்.
இரண்டு வருடம், அந்த டின்கள் அப்படியே கிடந்தன. வெண்ணெயிலிருந்து, சகிக்க முடியாத துர்நாற்றம் வீசவே, பயத்தோடு நிஜாமிடம் போய் கூறினர். ‘அப்படியானால், கடைத் தெருவுக்கு கொண்டு போய் விற்று விடுங்கள்…’ என்றார் நிஜாம்.
யாரும் வாங்கிக் கொள்ளவில்லை. ரெட்டி என்ற போலீஸ் அதிகாரியை கூப்பிட்டனுப்பிய நிஜாம், ‘இந்துக்களின் கோவில்களில், விளக்கேற்றுவதற்கு உபயோகப்படும். அவர்களிடம் விற்று விடு…’ என்றார்.
கோவில்களிலும் வாங்கவில்லை. அதை, நிஜாமிடம் சொல்ல அஞ்சி, வெண்ணெயை, சாக்கடையில் வீசி விட்டு, வெண்ணெய் விற்ற பணம் என்று, 201 ரூபாயை, நிஜாமிடம் தந்தார். மகா சந்தோஷத்துடன், பணத்தை பெற்றுக் கொண்டார் நிஜாம்.
திருமணத்துக்கு அழைப்பு வந்தால், தட்டாமல் செல்வார் நிஜாம். சீர் வரிசைகளில், விலை உயர்ந்ததாக என்ன இருக்கிறதோ, அதை, தனக்கென்று எடுத்துக் கொள்வார். நிஜாம், அந்த திருமணத்திற்கு வருகை தந்தது, அவர்களுக்கு, பெரிய கவுரவம் என்றும், அதற்கு கட்டணமாகத் தான் அந்தப் பொருள் என்றும் கூறுவார். இப்படி, ஏராளமான அணி வகைகள் சேர்ந்தன, நிஜாமின் கஜானாவில்!
– ‘சமஸ்தானத்து மன்னர்’ நூலிலிருந்து…  
தாமஸ் ஆல்வா எடிசனிடம், அவர் மனைவி, ‘நீங்கள் ஓய்வு இல்லாமல், வேலை பார்த்து விட்டீர்கள். எங்கேயாவது போய், கொஞ்ச நாள் களைப்பாற வேண்டும்…’ என்றாள்.
‘எங்கே போவது?’
‘எந்த இடத்திலிருந்தால், இந்த உலகத்தையே மறந்து விட முடியுமோ… அங்கே போகலாம்…’
‘சரி. நாளை போகலாம்…’ என்றார் எடிசன்.
மறுநாள் காலை, அவர் தன் ஆய்வுக் கூடத்திற்கே திரும்பி விட்டார்.

source::::  Dinamalar … Varamalar…

natarajan

Message for the Day…Whole World is a Mansion of God…

The body is said to be the tabernacle of God. In fact the world itself is the body of God. A pinprick on the toe is immediately recognised as an injury to the self, because the toe is part of the self-same body. So too, suffering in one corner of the world is as much the concern of the Lord, as suffering in any other. The whole world is a mansion of the Lord. All countries and states are mere rooms in His mansion. Never forget that the whole world is a temple of the Lord; it is His body and He resides in it!

 Sathya Sai Baba

” படிக்க படிக்க சிரிப்பு வரும் ” !!!

laughவாழ்க்கையில் எதற்கெல்லாமோ சிரிக்கிறோம்.. ஒரு நகைச்சுவைக்காக சிரிக்க மாட்டோமா.. நிச்சயமா சிரிப்பீங்க.. நாங்க நம்புறோம்…

செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.

***

கோபு : நேத்து ஹோட்டல் வைத்திருப்பவர் வீட்டில் பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?
பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.

***

ஒரு பொண்ணு போன எடுத்து எடுத்துப் பார்த்தா என்ன அர்த்தம்?
புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம்
போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?
காதலன புடிக்கலன்னு அர்த்தம்
பொண்ணு தலை குனிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்?
போன்ல மெசேஜ் ப்ரீன்னு அர்த்தம்.

***

பொண்ணுங்க போன பத்தி என்னடா நினைக்கிற…
ரூ.20 ஆயிரத்துக்கே போன வாங்கினாலும், அதுல மிஸ்டுகால் மட்டும்தான் கொடுப்பாங்கடா..

***

கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு…
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.

***

என் பொண்டாட்டின்னா எனக்கு ரொம்ப பயம்.. நீங்க எப்படி?

அட போங்க நான் அவ்ளோ மட்டமில்லை. உங்க பொண்டாட்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.

source::::vanisri sivakumar in Dinamani…Tamil Daily

natarajan

” தொலைந்தது கார் … வந்தது சிரிப்பு “….

” காரைத் தொலைத்த  மனைவியின்  கதை !!!

நான் எனது அலுவலக  மீட்டிங்கை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். வழக்கம் போல எனது பையில் கார் சாவியை தேடினேன். என்னால் ஆன மட்டும் பையின் அனைத்து மூலை முடுக்குகளையும் தேடிவிட்டேன்… இல்லைவே இல்லை என்று சொல்லிவிட்டன கை விரல்கள். அந்த விரல்களுக்கு கண்ணில்லை என்று நினைத்து பையை ஒரு முறை கண்களால் துளாவினேன். இல்லை கண்களும் அதே பதிலைத் தான் சொன்னது.

மூளையில் திடீரென ஒரு  பல்ப் எரிந்தது… ஒரு வேளை காரிலேயே சாவியை விட்டு விட்டு வந்திருப்பேனோ.. (அய்யோ எத்தனையோ முறை காரில் சாவியை வைத்து விட்டு வறாதே என்று கணவர் திரட்டியுள்ளார். காரிலேயே சாவி இருந்தால் சாவி தொலையாது என்பது எனது நினைப்பு. ஆனால் காரே தொலைந்துவிடும் என்பது அவரது தரப்பு).. சரி இறுதியாக ஓடிச் சென்று பார்க்கிங்கில் தேடினேன்.. அய்யோ எனது கணவர் தரப்பு தான் சரி.. காரை காணவில்லை.. ஒரு நிமிடம் மூளையில் எரிந்து கொண்டிருந்த பல்ப் பளிச்சென்று எரிந்து வெடித்தது.

என்ன செய்வது என்று தெரியாமல், காவல்துறைக்கு போன் செய்து, என் பெயர், விலாசம், கார் எண், காரை பார்க் செய்த இடம், காணாமல் போன நேரம் எல்லாவற்றையும் விரிவாகக் கூறினேன். காவலரும் உடனடியாக நான் இருக்கும் இடத்துக்கு வருவதாகக் கூறினார்.

சற்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு எனது கணவருக்கு போன் செய்ய முடிவு செய்தேன். போனை எடுத்து கணவருக்கு ரிங் செய்தேன். எடுத்த வேகத்தில், என்னங்க கார் சாவியை காரிலேயே வைத்து விட்டு சென்றுவிட்டேன். வந்து பார்த்தால் காரைக் காணவில்லை என்று கொட்டினேன்.

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு இடியட் என்று மட்டும் காட்டமாக பதில் வந்தது.

நானே ஆரம்பித்து… மன்னிச்சிடுங்க.. என்ன வந்து அலுவலகத்தில் இருந்து கூட்டின் போறீங்களா என்று கேட்டேன்.
அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் என்னை சுக்குநூறாக்கியது… “ஹேய்.. இன்று காலை நான் தான் உன்னை காரில் கொண்டு வந்து அலுவலகத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். இங்கு போலிஸ் காரர் உன் காரை திருடிவிட்டதாக என்னை பிடித்து வைத்துள்ளார்.. அவரிடம் உண்மையை விளக்கிவிட்டு உன் அலுவலகத்துக்கு வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்றாரே பார்க்கலாம்.

source:::::  Story by vanishri sivakumar in Dinamani ….Tamil Daily

natarajan

” What Happened in My Birth Year ” !!!

 
The screen is going to fade to black; if you wear glasses, have them on, then follow the instructions below. You’ll be pleasantly surprised with this one… It is interesting………

Type the year only!!

Then click the question (?) mark!

Sit back and enjoy!!

Click the below link :

 

source……..input from a friend of mine

natarajan

நூறு வயது ‘ தபால் தாத்தா ‘ …!!!

ஆர்.பாலசுப்பிரமணியம்

ஆர்.பாலசுப்பிரமணியம்

தனது 100-வது வயதிலும், பார்வைக் குறைபாடு இல்லாமல் நாளிதழை, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கோவையைச் சேர்ந்த தபால் தாத்தா. இந்த வயதிலும், அசாதாரண விஷயங்களையும் சாதாரணமாகச் செய்து வருகிறார்.

கோவை கவுண்டம்பாளையம் பேங்கோதெருவைச் சேர்ந்தவர் ஆர்.பாலசுப்ரமணியம். தபால் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதால், தபால் தாத்தா என்றுதான் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

துருதுரு பார்வை

கடந்த 1914-ஆம் ஆண்டு, நவம்பர் 29-ஆம் தேதி பிறந்த இவர் இன்று 100-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 100-வயது என்றால், படுத்தப் படுக்கை, வீட்டில் உள்ளவர்களை எடுத்ததெற்கெல்லாம் உதவிக்கு அழைத்து அன்பு தொல்லை கொடுப்பார் என நினைக்க வேண்டாம். வீட்டில் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாமல், உற்சாகத்தோடு இளைஞரைப் போல வீட்டில் வலம் வருகிறார்.

இந்து நாளிதழ் மோகம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையத்தில், தபால்காரராகச் சேர்ந்து கோவை ஆர்.எஸ்.புரம் தபால் நிலையத்தில் தபால் அலுவலராக, கடந்த 1973-ம் ஆண்டு 38 ஆண்டு தபால் பணி வாழ்க்கைக்கு விடைகொடுத்தவர். 10-ஆம் வயது முடிவதற்குள் கண்ணாடியுடன் வலம் வரும் சிறுவர்கள் மத்தியில், 100 வயதிலும் தபால் தாத்தா, கண்ணாடி அணியவில்லை. ஆனால், தினமும் வீட்டிற்கு வரும், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழை முதல் பக்கத்தில் இருந்து, கடைசி பக்கம் வரை உள்ள செய்திகளை முழுவதுமாகப் படிப்பதுதான் இவரது தினசரிப் பொழுதுபோக்கு..

கவலை இல்லாத மனிதர்

100 வயதில் இளமை ததும்பும் ரகசியத்தை, அவரது மூத்த மகன் ஜனார்த்தனனிடம் கேட்டபோது, ’’எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். சாப்பாட்டு விஷயத்தில் அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார். தற்போதுகூட, வாரம் இருமுறை சிக்கன் சாப்பிடுகிறார். முட்டை, இனிப்பு என்றால் இப்போது கூடக் கொள்ளை பிரியம். நேரத்துக்குச் சாப்பிட்டு, நேரத்துக்குத் தூங்குவார். பிரத்தியேகமாக உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. 85 வயது வரையிலும் எங்குச் சென்றாலும் சைக்கிளில்தான் செல்வார்’’ என்றார்.

தபால் தாத்தாவிற்கு 3 மகன்கள். கொள்ளுப் பேரன் பேத்தி என்று சுற்றிலும் பலர் இருந்தாலும் அவர் விரும்புவது தனிமையைத்தான். முதுமையின் நண்பன் தனிமை என்பதை உணர்த்தும் விதமாக, நாம் கிளம்புவதற்கு விடை கொடுத்துவிட்டு, எதையோ சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அவருக்கு நூறாவது பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டுப் புறப்பட்டோம்.

source:::::The Hindu…Tamil

natarajan

“இந்த எறும்புகளை ஒதறி விட்டா …அது நியாயமா?… சொல்லுங்கோ” !!!

பெரியவாளோட வலதுகாலில் எப்படியோ சின்னக் காயம் உண்டாகி லேசான ரத்தக் கசிவு இருந்தது. அதில் ஒரு சொட்டு ரத்தம் மாதுளைமுத்துப் போல் இருந்தது.

பெரியவாளோ அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், சுற்றி இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு எறும்பு வந்தது. அந்த காயத்தின் மேல் ஊர்ந்தது. உடனே சங்கேத பாஷை மூலம் செய்தி அனுப்பி, கொஞ்ச நேரத்தில் ஒரு படையே சொந்த பந்தங்களோடு பெரியவாளுடைய சரணத்தில் இருந்த ரத்தக் கசிவை சுவை பார்த்தன.

“எறும்புகளை தட்டி விடுங்கோ பெரியவா” என்று சொல்ல முடியுமா? சுற்றி இருந்த சிஷ்யர்களுக்கோ ஒரே அவஸ்தை!

அப்போது பெரியவாளிடம் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு பேசக் கூடிய ஒரு பக்தர் வந்தார். உடனே அவரிடம் ரகசியமாக எறும்பைக் காட்டினார்கள் சிஷ்யர்கள்.

“பெரியவா கால்ல எறும்பு மொய்க்கறதே?” என்று பணிவோடு கூறினார் பக்தர்.

ஒரு செகண்ட் அருள் நிறைந்த பார்வை பார்த்தார் பெரியவா. “விபீஷணன் ராமசந்த்ரமூர்த்தியை சரணாகதி பண்ணினான்ன்னு படிக்கறோம். வாயால “சரணாகதி” ன்னு சொன்னான். ஆனா, ராமனோட பாதங்களை இறுகக் கட்டிக்கலை. அப்பிடியிருந்தும் ராமன் ரொம்ப இறக்கப்பட்டு, விபீஷணனுக்கு அடைக்கலம் குடுத்தான்.”

“இப்போ இந்த ராமாயணம் எதுக்கு?” சிஷ்யர்களின் சந்தேகத்துக்கு விளக்கம் வந்தது.

“இந்த எறும்புகளோ, என் காலையே கெட்டியாப் பிடிச்சிண்டிருக்கு! அதுகள் என்ன சொல்லறதுன்னு கேக்காம, ஒதறி விட்டா, அது ஞாயமா? சொல்லுங்கோ” – ராமனை விட பலபடிகள் உயர்ந்து நின்றார் பெரியவா!

“உடல் வேறு ஆன்மா வேறு” என்பதை கண்கூடாக சிஷ்யர்களுக்கு நிரூபித்தார்.

ரத்த சுவைக்காக அவை அவருடைய பாதங்களில் ஊர்ந்ததையே ஒரு வ்யாஜமாகக் கொண்டு, “சரணாகதி” என்று ஏற்றுக் கொண்ட கருணை பெரியவாளைத் தவிர யாருக்கு வரும்?

நம் மேல் ஒரு எறும்பு ஊறினால் கூட, அடுத்த செகண்ட் அது உருத் தெரியாமல் நசுங்கி விடும்.

நமக்கும் நல்லறிவை தர பெரியவாளிடம் பிரார்த்தனை செய்வோம்.

source:::::www.periva.proboards.com

Read more: http://www.periva.proboards.com/thread/5819/#ixzz2m6AOmy1C

natarajan

Phone Calls That Made History !!!

Phone calls that made history: In pictures (© Reuters/AP)

Nixon calls Armstrong on the moon (July 20, 1969)

For the first time, human beings land on the moon. So, what’s the best way to follow up this achievement? Well, by congratulating them the same day. Who does it? US President Richard M Nixon, of course. Nixon called Neil Armstrong, the first man who landed on lunar surface, and congratulated him and his fellow astronauts Michael Collins and Edwin ‘Buzz’ Aldrin Jr.

 

The first call: Rings a Bell? (March 10, 1876)

“Watson, come here. I need you.” This is where it all began. Alexander Graham Bell made the first telephone call in his Boston laboratory, summoning his assistant, Thomas A. Watson, from the next room. While working on a device to send multiple telegraph signals over the same wire by using harmonics, he heard a twang. That led Bell to investigate whether his apparatus could be used to transmit the sound of a human voice. Bell’s journal contains the following entry: “I then shouted into M [the mouthpiece] the following sentence: ‘Mr Watson, come here — I want to see you’. To my delight he came and declared that he had heard and understood what I said.”

Phone calls that made history: In pictures (© Reuters/AP)

 

Call that prevented nuke war (Oct 26, 1972)

The closest the world came to a nuclear war was in 1962 when Soviet Union began placing missiles in Cuba to defend against a possible US invasion of the island nation.  There was no dialogue between the US and Soviet Union, but things started moving toward a peaceful resolution on October 26, 1962 after a telephone call between President Kennedy and his brother and attorney general, Robert F. Kennedy.  The President told Robert that the US would remove missiles from Turkey if Soviet Union got its missiles out of Cuba. Robert conveyed this information to Soviet Ambassador Anatoly Dobrynin, which put an end to the looming crisis.

Phone calls that made history: In pictures (© Reuters/AP)

 

Bush’s ‘wake-up’ call to Rice after WTC attack (Sept 11, 2001)

No one expects to wake up in the morning to watch footage of planes crashing into the World Trade Centre, New York City. It was Sept 11, 2001. Then American President George W Bush, who had been to a photo-op event in Florida, immediately called National Security Adviser Condoleeza Rice to find out what was going on. That telephone call ignited Bush administration’s response to terrorism.

Phone calls that made history: In pictures (© Reuters/AP)

 

Rakesh Sharma calling from space (April 1984)
Squadron Leader Rakesh Sharma was the first Indian in space, whose telephonic conversation with Indira Gandhi is still talked about. When the then Prime Minister asked Sharma how India looked from above, he replied: ‘Saare Jahan Se Achcha.’ Sharma’s maiden space flight was on April 3, 1984. He conducted experiments during his mission on Soviet Union’s Salyut 7 Space Station.

Phone calls that made history: In pictures (© Reuters/AP)

 

Obama’s call to Iran President (Sept 27, 2013)
After seeing off Indian Prime Minister Manmohan Singh after their summit meeting in September, President Barack Obama hurried back to his Oval office in the White House to make a historic phone call. Obama’s 15-minute call to Iranian President Hassan Rouhani at around 2:30 pm on Sept 27 – as the latter headed in a car to the airport after attending the UN session in New York – laid the foundation for the landmark nuclear deal between Iran and six world powers led by the US.

Phone calls that made history: In pictures (© Reuters/AP)

source::::  Manjunath R Setty, India Syndicate  in msn.com

natarajan