” மறைந்து போன வயிற்று வலி…”

போன இடம் தெரியாத வயிற்று வலி…..

காட்டுப்பள்ளி எஸ்டேட் உரிமையாளர் சண்முகசுந்தர முதலியார். அவரது மேனேஜர் கிருஷ்ணானந்தம். இருவரும் மஹாபெரியவாளின் பக்தர்கள்.

1965-ஆம் வருடம் மஹான் தண்டையார்பேட்டையில் முகாமிட்டிருந்தபோது, தாம் காட்டுபள்ளிக்கு விஜயம் செய்வதாக முதலியாரிடம் சொன்னார். முதலியாருக்கு அளவற்ற மகிழ்ச்சி.

கிருஷ்ணானந்தத்தின் மனைவிக்குத் தொடர்ச்சியாக வயிற்று வலி. மஹாபெரியவாளிடம் முறையிட்டுப் பிரசாதம் வாங்கிக் கொடுத்தார். இதற்கிடையில் ஒரு நாள் மஹான் எப்போதோ கிருஷ்ணானந்தம் சொன்னதை நினைவில் கொண்டு,
”உன் மனிவிக்கு சிகிச்சை அளிக்க வேலூர் போவதாகச் சொன்னாயே நாளையே அழைத்துப் போ” என்று புன்சிரிப்போடு, அவரைச் சோதிப்பது போலக் கூறினார்கள்.

அதன்படியே இவரும் தயாராகி, மனைவியை மைலாப்பூரில் ஒரு உறவினர் வீட்டில் தங்க வைத்து அடுத்த நாள் வேலூர் போகத் திட்டமிட்டார்.

ஆனால் நடந்ததோ வேறு. முதலாளியிடமிருந்து மஹாபெரியவா அதே நாளில் காட்டுப் பள்ளிக்கு விஜயம் செய்வதாகத் தகவல் வர, கிருஷ்ணானந்தம் எல்லாம் தெய்வச் செயல் என்று மனைவியுடன் ஊருக்கே திரும்பிவிட்டார். வேலூர் பயணம் தவிர்க்கப்பட்டது. மேலும் எதிர்பாராத விதமாக காட்டுப் பள்ளியிலேயே மஹாபெரியவா சாதுர்மாஸ்ய வியாச பூஜையை செய்யத் திட்டமிட்டார்.

போக்குவரத்து வசதியில்லாமல் படகில் வந்து போகும் கிராமத்திற்கு இப்படி ஒரு வாய்ப்பு கிட்டியதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

மஹான் அங்கேயே நாலரை மாதங்கள் தங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.

முதலியாரின் மேனேஜர் தன் மனைவி படும்பாட்டை மஹானின் முன் முறையிட்டார். மஹான் கிருஷ்ணானந்தத்தின் மனைவியை அங்கே அழைத்து வந்து ஒரு வாரம் தங்கும்படி சொல்ல, மேனேஜரும் அவ்வாறே செய்தார். அவரது மனவி தினமும் குளித்துவிட்டு, பூஜைக்கு சென்றார். வயிற்றுவலி தாங்காமல் அந்தப் பெண்மணியும் கண்களில் நீர் தளும்ப அமர்ந்திருப்பார். கருணாமூர்த்திக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

முதலியாரின் மைத்துனரை அழைத்து குளத்தங்கரைக்குப் பக்கத்தில் குளியலறை போன்று தற்காலிக ஏற்பாடாக தென்னக்கீற்றினால் அமைக்கப்பட்டது.

மறுநாள் அந்த அம்மாள் ஸ்நானம் செய்தபின், சுவாசினிகள் பூஜைக்கு அமர்ந்தபோது,

“இந்த அம்மாவை குளியலறைக்கு அழைத்துப் போய் இரு ஸ்டூல்களைப் போட்டு ஒன்றில் உட்காரவைத்து, அபிஷேகத் தீர்த்தத்தை பாதத்தில் படாமல் எல்லா ஜலத்தையும் சிரசில் விடுங்கள் என்றார்” மஹான்.

அபிஷேக தீர்த்தம் உதவியாள் மூலமாக அனுப்பப்பட்டது. சிரசில் நீர் கொட்டும்போது மேனேஜர் மனைவி மெய்மறந்த நிலையில் இருந்தாராம். ஸ்நானம் முடிந்தவுடன் புத்துணர்ச்சி பெற்று வயிற்றுவலி போன இடம் தெரியாமல் வலி நீங்கப் பெற்றவராக வந்தாராம். அதற்குப் பிறகு வயிற்றுவலி அந்த அம்மையாருக்கு வரவே இல்லை.

இப்படிப்பட்ட அதிசயமான அனுபவம் வேறு யாருக்கும் கிட்டியிருக்காது என்று கிருஷ்ணானந்தம் நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.

மஹாபெரியவாளெனும் மாபெரும் தெய்வம் தன்னை அண்டியவர்களுக்கெல்லாம் அற்புதமான அனுபவங்களை அருளிக் காத்து நிற்கிறார்.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::: http://www.periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/7364/abhisheka-theertham-book-venkatasaamy#ixzz37nO9aX95

” எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ …. ”

சாதாரணமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். வயது பன்னிரண்டு அல்லது பதிமூன்று இருக்கலாம். ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கலாம்.

மாநிறம். எண்ணெய் அதிகம் கண்டிராத தலை. தடிமனான அரை டிராயர்; கசங்கிப் போன மேல்சட்டை… அரை டிராயரும் மேல்சட்டையும் என்ன நிறம் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் எவரும் சொல்லி விடமுடியாது. அழுக்கேறிப் போயிருந்தாலும் அந்த ஆடைகள் அவ்வப்போது துவைத்துத் தான் அணியப் படுகின்றன என்பதை அதைப் பார்க்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். நெற்றியில் ஒரு வளைந்த கீற்றாக – முறையே இல்லாமல் ஏனோ தானோ என்று விபூதி பூசப்பட்டிருந்தது. ஒருவேளை இங்கு கிளம்பி வருகிற அவசரத்தில் அவனது அம்மா இட்டு விட்டிருக்கலாம்.

தேர்வு காலங்களில் கிராமத்தில் இருப்பவர்கள் தெருமுனையில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய், ஒரு சின்ன கற்பூரத்தை ஏற்றி வைத்து, பேனாவை பிள்ளையார் பாதத்தில் வைத்து வழிபட்டு விட்டுப் பரிட்சை எழுதப் போவார்கள். இது ஒரு விதமான நம்பிக்கை. அதாவது இறைவன் அருளோடு தேர்வு எழுதப் போகிறோம் என்கிற ஒரு தைரியம் மாணவர்களுக்கு வரும்.

அது போல் இந்த சிறுவன் காஞ்சிபுரத்தில் வசிப்பவன் என்பதாலும், மஹா பெரியவாளின் சாந்நித்யம் பற்றி யாரோ சொல்ல – அவன் தகுதிக்கு ஏதோ கேள்விப்பட்டிருந்தாலும் இன்று தேர்வு எழுதப் போகும் முன் ஸ்ரீமடத்துக்கே வந்து விட்டான் போலிருக்கிறது.

விடிகாலை நேரத்தில் விஸ்வரூபதரிசனம் காண வந்திருந்த பக்தர்கள் பலரும் இன்னமும் நகராமல் அங்கேயே நின்றிருந்தபடி பெரியவா தரிசனத்தில் திளைத்திருந்தார்கள். இதைத் தவிர, காலை வேளையில் ஏராளமான பக்தர்கள் வேறு ஸ்ரீமடத்தில் குவிந்து விட்டிருந்தார்கள். நாம பஜனைகளும் சங்கர கோஷமுமாக ஸ்ரீமடமே பக்தி மணம் கமழ… அருள் நிரம்பிக் காணப்பட்டது.

இவ்வளவு கூட்டம் பெரியவா தரிசனத்திற்காகக் காத்து நின்றாலும், சிறுவனாகப் பட்டவன் வரிசையில் நின்று கொண்டிருக்கும் எந்த ஒரு பக்தரைப் பற்றியும் கவலைப் படாமல், ராஜபாட்டை போல் விறுவிறுவென்று நடந்து மஹா பெரியவாளின் சந்நிதியை நெருங்கினான்.

முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க, பெரியவாளைப் பார்த்தபடியே நின்றான். அவனை எவரும் தடுக்கவில்லை. ஏதும் கேள்வி கேட்கவில்லை. காரணம் – அந்தச் சிறுவனின் ஆர்வத்தையும் பரபரப்பையும் பார்த்த பின் இயல்பான அந்த பக்திக்குத் தடை போட எவருக்கும் விருப்பமில்லை.

“மடத்துக்குப் போய் சாமியைக் கும்பிடணும்னா, அவருக்குத் தோதா ஏதாவது எடுத்துட்டுப் போகணும்” என்று அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ…. தெரியவில்லை. தன் கையில் தொடுத்த ஒரு மாலையை வைத்திருந்தான். அந்த மாலையைப் பார்த்த பல பக்தர்களும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளைத் தங்களுக்குள் வெளிப்படுத்திக்கொண்டு விமர்சித்துப் பேசினார்கள்.

சிலர் வியந்தார்கள்; சிலர் வெளியே ஏதும் பேச முடியாமல் தங்களுக்குள் கேலியாகச் சிரித்துக் கொண்டார்கள்.

பலரது விமரிசனத்துக்கும் கேலிச் சிரிப்புக்கும் உள்ளான அந்த மாலையில் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?

அது – துளசி மாலை!

அதுவும் துளசியை அடர்த்தியாக – கொத்துக் கொத்தாக வைத்துக் கட்டப்பட்ட மாலை இல்லை. தனித் தனி துளசி இலைகளைக் கோணாமாணா என்று – ஒரு முறை இல்லாமல் கோர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த மாலை.

ஒருவேளை அடுத்தடுத்து துளசி இலைகளை நெருக்கமாக வைத்துத் தொடுத்திருந்தால் அதில் இடைவெளி என்பதே தெரியாமல் போயிருக்கும். ஆனால் இந்தச் சிறுவன் தொடுத்துக் கொண்டு வந்திருந்த துளசி மாலையில் இடைவெளி அதிகம் தெரிந்தது. அதனால் பார்த்தவுடன் ’மாலை’ என்று சொல்வதற்கு எவருக்கும் வாய் வராது.

இதில் இன்னொரு அலங்கோலமும் வெளிப்பட்டது. அதாவது இறைவழிபாட்டிற்குக் கொண்டு செல்கிற துளசியைப் பெரும்பாலும் வாழைநாரில்தான் கட்டுவார்கள். ஆனால் இந்தச் சிறுவன் ஒரு சணலில் இந்த ’மாலை’யைக் கட்டி எடுத்து வந்திருந்தான். (வீட்டில் ஏதாவது பொருளைக் கட்டி வைத்திருந்த மூட்டையில் இருந்த சணலை மட்டும் பிரித்து எடுத்திருப்பான் போலிருக்கிறது). இது போன்ற காரணங்களால் சிறுவன் எடுத்து வந்திருந்த துளசி மாலையைப் பார்த்து சிலர் சிரித்தார்கள்.
ஆனால் பக்குவப்பட்ட சிலர், ”இந்த வயதில் இந்த அளவுக்கு பெரியவாளிடம் ஒரு பக்தி இருக்கிறதே… வெறுங்கையோடு வரக்கூடாது என்கிற நாசூக்கு தெரிந்திருக்கிறதே” என்று நெகிழ்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் பெரியவாளின் திருப்பார்வை அவன் மேல் விழுந்தது. ஒரு புன்னகையை உதட்டோரம் தவழ விட்டு, ”அருகில் வா” என்பது போல் அவனுக்கு ஜாடை காட்டினார்.
விறுவிறுவென்று நடந்து முன்னுக்கு வந்தான்.

”என்ன?” என்பது போல் ஆச்சரியமான முகத்துடன் தலையை மேலும் கீழும் அசைத்து ரசனையாகக் கேட்டது அந்தப் பரப்ரம்மம்.

சிறுவன் சந்தோஷமானான். தனக்கு உரிய அங்கீகாரம் இந்த சந்நிதானத்தில் கிடைத்துவிட்டது என்பதாக மகிழ்ந்தான். கையில் துளசி மாலையோடு பெரியவாளை இன்னும் நெருங்கி, அவரின் திருவடி அருகே இதை சமர்ப்பித்தான். பெரியவாளின் கைங்கர்யப் பணிக்காக அங்கே இருந்த சீடர் ஒருவர் அந்த துளசி மாலையை அங்கிருந்து எடுத்து வேறு இடத்தில் சேர்ப்பிப்பதற்காகக் குனிந்தார்.

சற்றே நிமிர்ந்து அந்த சீடரைப் பார்த்த பெரியவா, ’வேண்டாம்’ என்பது போல் வலது ஆட்காட்டி விரலை இடப்புறமும் வலப்புறமும் அசைத்து சமிக்ஞை செய்தார். சீடரையும் தள்ளி நிற்கச் சொன்னார். அந்த மாலையைத் தான் அகற்றுவதைப் பெரியவா விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சீடன், நின்ற வாக்கிலேயே அப்படியே ரிவர்ஸில் நகர்ந்து கொண்டான்.

”எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ?” – சிறுவனைப் பார்த்துப் பெரியவா கேட்டார்.

இவ்வளவு பேர் கூடி இருக்கும் இடத்தில் தன்னைப் பார்த்துப் பெரியவா ஒரு கேள்வி கேட்கிறார் என்பது அந்தச் சிறுவனின் முகத்தில் ஏராளமான சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது. தவிர, தனக்குத் தேர்வு இருப்பதைப் பெரியவா எப்படிக் கண்டு பிடித்தார் என்கிற ஆச்சரியமும் அவன் முகத்தில். பிரகாசமானவன், “ஆமா சாமி, இன்னைக்கு சயின்ஸ்” என்று கூடுதல் தகவலையும் சொன்னான்.

”தொளசி மாலையை எனக்காகக் கொண்டு வந்தியோ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டு, அந்த மாலையைக் கையில் எடுத்தார்.

இப்படியும் அப்படியும் அதை ஆராய்ந்தார். தான் காணிக்கையாக எடுத்து வந்திருந்த மாலையைப் பெரியவா தன் கையால் எடுத்து விட்டார் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அச்சிறுவனுக்குப் பெருமை பிடிபடவில்லை…”எங்க வீட்டுலேயே துளசிச் செடி இருக்கு… அதுலேர்ந்து நானே பறிச்சுக் கட்டினேன்.”
அந்தப் பரப்ரம்மம் அவனைப் பார்த்துச் சிரித்தது. கூடி இருந்த திரளான பக்தர்களும் அடுத்துப் பெரியவா என்ன செய்யப் போகிறார் என்பதைக் கவனிப்பதில் ஆர்வமானார்கள். ஒரு க்ஷண நேரத்தில் இந்தச் சிறுவன் பெரியவரின் கவனத்தை இப்படிக் கவர்ந்து விடுவான் என்று அங்கிருந்த எவரும் எதிர் பார்க்கவில்லை. சிறுவன் மேல் பெரியவா செலுத்தும் கரிசனத்தைக் கண்டு, சீடர்களும் மடத்துச் சிப்பந்திகளும் கூட அதிசயப் பட்டுப் போனார்கள்.

அந்தத் துளசி மாலையை தன் கையில் எடுத்துக் கொண்டார். வலக் கரத்தால் அந்த மாலையை எடுத்துத் தன் தலைக்கு மேல் வைத்தார். என்ன புண்ணியம் செய்ததோ அந்தத் துளசி மாலை! பெரியவாளின் தலையில் அமர்ந்து கொண்டது. துளசி மாலை பெரியவா சிரசில் அப்படியே நின்றது. சுற்றிலும் நின்றிருந்த தன் பக்தர்களை இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தார் பெரியவர். எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்க்கிற வேளையில் அவர் முகத்தில் ஒரு புன்னகை ததும்பியது. ”இந்தக் கோலத்தில் நான் எப்படி இருக்கேன்? இந்த மாலை நன்னா இருக்கா?” என்று பெரியவா கேட்பதாக எல்லோருக்கும் பட்டது.

பெரியவாளுக்கு சமர்ப்பிக்க வேண்டி பக்தர்கள் வாங்கி வந்திருந்த எத்தனையோ மலர் மாலைகள் அவருக்கு முன்னால் – சற்றும் மணம் குறையாமல் – மலை போல் குவிந்திருந்தன. ரோஜா, மல்லிகை, சம்பங்கி என விதம் விதமான மலர்களைக் கொண்டு மிகவும் நேர்த்தியாகத் தொடுக்கப்பட்டிருந்த மாலைகள் அவை. ஆனால், அனைத்தையும் விட்டு விட்டு, ஒரு ஒழுங்குமுறையே இல்லாத, ஒரு மாலைக்கு உரிய எந்த விதமான இலக்கணத்திலும் சேராத, சாதாரண சிறுவன் கொண்டு வந்த துளசி மாலை ஏனோ பெரியவாளுக்குப் பிடித்து விட்டது. தானே அதை ஸ்வீகரித்துக் கொண்டார்.

’இதுதான் பக்தி’ என்பதை அங்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் உணர்த்தும் விதத்தில், ‘இந்த மாலையை அணிந்திருக்கிற நான் எப்படி இருக்கேன்?’ என்பதாக அனைவரையும் பார்த்தாரோ? எத்தனையோ மலர் மாலைகள் இருந்தும் அன்பின் மிகுதியால் – ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தொடுத்துக் கொண்டு வரப்பட்ட இந்தத் துளசி மாலை என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது என்பதைப் பகட்டான பக்தர்களுக்கு உணர்த்துகிறாரோ?

பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பெரிதும் படிக்காத, கேட்காத இந்தச் சிறுவன் தன் செய்கையால் அங்கிருந்த அனைவருக்கும் பெரியவரின் அருட்செயலின் மூலம் உணரச் செய்து விட்டான். செல்வச் செழிப்பில் திளைக்கும் எத்தனையோ பக்தர்கள் குவிந்திருக்கும் இந்த சந்நிதானத்தில் தான் அன்புடன் எடுத்து வந்திருக்கும் ஒரு துளசி மாலைக்கு இவ்வளவு மரியாதையா என்று சிறுவன் திகைத்துப் போனான்.

அவன் விழிகளில் லேசாக ஈரம் ததும்பியது. சரேலென்று தரையில் விழுந்து பெரியவாளை நமஸ்கரித்தான். எழுந்து நின்றான். சுமார் பத்து நிமிடங்கள் கழித்துத் தான் அந்தத் துளசி மாலையைத் தன் தலையிலிருந்து எடுத்துக் கீழே வைத்தார் பெரியவா. புன்னகை அரும்ப அந்த சிறுவனை ஆசீர்வதித்தார். கல்கண்டும் குங்குமமும் கொடுத்தார்.

தன் தலையில் வைத்திருந்த மாலையை அருட் பிரசாதமாக அவனிடமே கொடுத்தார். அதன் அருமை தெரிந்தோ தெரியாமலோ பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். எந்த ஒரு மாலையைப் பார்த்துப் பரிகசித்துத் தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டார்களோ, அந்த பக்தர்கள் இப்போது நெகிழ்ந்து போனார்கள். அவர்களின் பரிகசிப்புக்கு உள்ளான மாலை இப்போது புனிதம் பெற்று விட்டது.

மாலையைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் அந்தச் சிறுவனிடம் இருந்து, “குழந்தே, அதில் இருந்து ரெண்டு துளசி தளங்களைப் பிய்ச்சு எங்ககிட்ட தாயேன். அது பெரியவா பிரசாதம்” என்று கெஞ்சும் குரலில் கேட்டனர்.

அப்படிக் கேட்டவர்களுக்கெல்லாம் துளசி இலைகளைப் பிய்த்துக் கொடுத்துவிட்டு, “எக்ஸாமுக்கு டயமாச்சு. ஸ்கூல்ல பெல் அடிச்சுடுவாங்க..” என்று சொல்லி விட்டான் ஒரே ஓட்டம்! இன்று சயின்ஸ் தேர்வாயிற்றே!

Read more: http://periva.proboards.com/

Natarajan

” உன் அடுத்த ப்ரோக்ராம் என்ன … ? ” ….

தேடி வந்தருள் தந்த தெய்வம்….

ரத யாத்திரையில் எளிய பக்தர் கூறிய சம்பவம், ஆட்கொண்டருளும் மஹா பெரியவா கருணையை எடுத்து இயம்புகிறது.

அந்த ஏழைக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு. அவர் பட்ட கஷ்டங்களைச் சொல்ல இயலாது. 1984-ஆம் ஆண்டு மஹாபெரியவா திருமங்கலம் கிராமத்திற்கு விஜயம் செய்தபோது, அங்கே முகாமிட்டிருந்த தெய்வத்தை தரிசிக்க இந்த ஏழை பக்தர் போவதுண்டு.

இந்தப் பாமரனுக்கு மஹாபெரியவா இன்னார் என்பதோ, அவர் தம் மேன்மையை அறிந்து அவர் மீது பக்தி கொள்ளும் மனோ நிலையோ இல்லை. ஆனால் தினமும் வீட்டில் சாப்பாட்டிற்கே வழி இல்லாததால் மஹான் இருக்கும் முகாமில் அன்னதானம் நடைபெறுவதால் அந்த இடத்திற்குச் சென்று வயிறு நிறைய உணவருந்தினார். வறுமை மட்டும் அப்படியே இருந்தது.

மஹானின் முகாம் கிராமத்தை விட்டுச் சென்ற பிறகு அந்த மதிய வேளை உணவுக்கும் திண்டாட்டம். நான்கைந்து பேர் அடங்கிய குடும்பத்தை அவரால் காப்பாற்ற முடியாமல் பணச்சிக்கல், கடன் என்று பிரச்னைகள் எழ, தன் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி அவருக்குப் புலப்படவில்லை.

இப்படி முடிவெடுத்த அவர், எல்லோரும் சிறப்பாக போற்றிக் கொண்டாடும் காஞ்சி மஹானைத் தரிசித்த பின் தன் உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்ற முடிவோடு காஞ்சிக்கு வந்தார்.

மஹானின் எதிரே ஒன்றும் சொல்லாமல் மெளனமாக நின்றார்.

மஹான் கருணையோடு இவரைப் பார்த்தார். நடந்தது, நடப்பது, நடக்கப்போவது என்று எல்லாவற்றையும் தெரிந்தவராயிற்றே அவர்.

“உன் அடுத்த புரோகிராம் என்ன?” என்று ஒரு கேள்வியைத் தன் முன்னே நிற்பவரிடம் கேட்டார்.

வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் அந்த எளியவர் என்ன பதில் சொல்வார்? தனது தற்கொலை திட்டத்தையா மஹானிடம் தெரிவிப்பார்?

“என்ன செய்றதுன்னே தெரியல்லே சாமி, எங்க ஊருக்குத்தான் போகணும்” என்றார்.

சொன்னதில் தனக்கு ஆறுதல் கிட்டாதா என்கிற ஏக்கம் தொனித்தது.

“நான் உனக்கு பஸ் சார்ஜ் தர்றேன்…. இப்படியே உன் ஊருக்குப் போகாதே…… நேரே இங்கிருந்து மெட்ராஸ் போய் பாரிஸ் கார்னர்லே இறங்கி, அங்கிருந்து மறுபடியும் பஸ் பிடிச்சு உன் ஊருக்குப் போ” அந்த நபர் புரிந்து கொள்ள முடியாத கட்டளையாகச் சொல்லி அனுப்பினார்.

மடத்திலிருந்து அவரது பஸ்சார்ஜுக்குப் பணம் கொடுக்கப் பட்டது.

‘காஞ்சியிலிருந்து வேலூர் பக்கம் உள்ள தன் கிராமத்திற்கு நேரடியாகப் போகச் சொல்லாமல், சென்னைக்குப் போய் தன் ஊருக்கு ஏன் இந்த சாமியார் போகச் சொல்கிறார்?” என்று புரியாதவராய் மஹானின் கட்டளைப்படியே கிளம்பினார்.

சென்னை பாரிஸில் இறங்கி தன் ஊருக்குப் போக பஸ் நின்று கொண்டிருந்த இடத்திற்குப் போக, அங்கே தெய்வம் அனுப்பிய தூதராக ஒருவர் வந்தார். இவரது பால்ய நண்பர். வெகு தினங்களுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு. நண்பர் அவரை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று வயிறு நிறைய டிபன் வாங்கிக் கொடுத்தார். மஹானின் கருணையை எண்ணியபடி, நண்பர் தன் குடும்பத்தைப் பற்றிக் கேட்டபோது தான் பட்ட அவலத்தை அழுதபடியே கொட்டித் தீர்த்தார்.

பரமேஸ்வரரே, தன் காருண்யத்தினால் அனுப்பிய நண்பரல்லவா?

இவருக்கு ஆறுதல் சொல்லி எல்லா கடன்களையும் அடைத்து, குடும்பத்தை தற்காலிகமாக கவனித்துக் கொள்ளவும் பணம் தருவதாகச் சொல்லி, அப்படியே செய்து இவரைக் காப்பாற்றினார்.

அவல நிலையில் இருந்து விடுபட்டவர் வேலையும் கிடைக்கப் பெற்று, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பெண்ணின் கல்யாணத்தையும் விமரிசையாகச் செய்து, மஹாபெரியவா ரதயாத்திரையாக சிலை ரூபத்தில் தரிசனம் தர வந்தபோது தனது நன்றியைக் கண்ணீராகக் கொட்டித் தீர்த்தார்.

இப்படித்தான் அந்தத் தெய்வம் தனது கருணையால் வலியச் சென்று தன்னை நம்பியவர்களைத் தடுத்தாட்கொள்கிறது.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

Source:::: http://www.periva.proboards.com
Natarajan

Things That May Become “Things of Past “….!!!

 

Ten Things That Will Disappear In Our Lifetime!!!

 

1. The Post Office
Get ready to imagine a world without the post office. They are so deeply in financial trouble that there is probably no way to sustain it long term. Email, Fed Ex, and UPS have just about wiped out the minimum revenue needed to keep the post office alive. Most of your mail every day is junk mail and bills.

2. The Cheque
Britain is already laying the groundwork to do away with cheque by 2018. It costs the financial system billions of dollars a year to process cheques. Plastic cards and online transactions will lead to the eventual demise of the cheque. This plays right into the death of the post office. If you never paid your bills by mail and never received them by mail, the post office would absolutely go out of business.

3. The Newspaper
The younger generation simply doesn’t read the newspaper. They certainly don’t subscribe to a daily delivered print edition. That may go the way of the milkman and the laundry man. As for reading the paper online, get ready to pay for it. The rise in mobile Internet devices and e-readers has caused all the newspaper and magazine publishers to form an alliance. They have met with Apple, Amazon, and the major cell phone companies to develop a model for paid subscription services.

4. The Book
You say you will never give up the physical book that you hold in your hand and turn the literal pages. I said the same thing about downloading music from iTunes. I wanted my hard copy CD. But I quickly changed my mind when I discovered that I could get albums for half the price without ever leaving home to get the latest music. The same thing will happen with books. You can browse a bookstore online and even read a preview chapter before you buy. And the price is less than half that of a real book. And think of the convenience!
Once you start flicking your fingers on the screen instead of the book, you find that you are lost in the story, can’t wait to see what happens next, and you forget that you’re holding a gadget instead of a book.

5. The Land Line Telephone
Unless you have a large family and make a lot of local calls, you don’t need it anymore. Most people keep it simply because they’ve always had it. But you are paying double charges for that extra service. All the cell phone companies will let you call customers using the same cell provider for no charge against your minutes

6. Music
This is one of the saddest parts of the change story. The music industry is dying a slow death. Not just because of illegal downloading. It’s the lack of innovative new music being given a chance to get to the people who would like to hear it. Greed and corruption is the problem. The record labels and the radio conglomerates are simply self-destructing. Over 40% of the music purchased today is “catalogue items,” meaning traditional music that the public is familiar with. Older established artists. This is also true on the live concert circuit.
To explore this fascinating and disturbing topic further, check out the book, “Appetite for Self-Destruction” by Steve Knopper, and the video documentary, “Before the Music Dies.”

7. Television
Revenues to the networks are down dramatically. Not just because of the economy. People are watching TV and movies streamed from their computers. And they’re playing games and doing lots of other things that take up the time that used to be spent watching TV. Prime time shows have degenerated down to lower than the lowest common denominator. Cable rates are skyrocketing and commercials run about every 4 minutes and 30 seconds. I say good riddance to most of it. It’s time for the cable companies to be put out of our misery.
Let the people choose what they want to watch online and through Netflix.

8. The “Things” That You Own
Many of the very possessions that we used to own are still in our lives, but we may not actually own them in the future. They may simply reside in “the cloud.” Today your computer has a hard drive and you store your pictures, music, movies, and documents. Your software is on a CD or DVD, and you can always re-install it if need be. But all of that is changing. Apple, Microsoft, and Google are all finishing up
their latest “cloud services.” That means that when you turn on a computer, the Internet will be built into the operating system. So, Windows, Google, and the Mac OS will be tied straight into the Internet.
If you click an icon, it will open something in the Internet cloud. If you save something, it will be saved to the cloud. And you may pay a monthly subscription fee to the cloud provider. In this virtual world, you can access your music or your books, or your whatever from any laptop or handheld device. That’s the good news. But, will you actually own any of this “stuff” or will it all be able to disappear at any moment in a big “Poof?”
Will most of the things in our lives be disposable and whimsical? It makes you want to run to the closet and pull out that photo album, grab a book from the shelf, or open up a CD case and pull out the insert.

9. Joined Handwriting
Already gone in some schools who no longer teach “joined handwriting” because nearly everything is done now on computers or keyboards of some type (pun not intended)

10. Privacy
If there ever was a concept that we can look back on nostalgically, it would be privacy. That’s gone. It’s been gone for a long time anyway.. There are cameras on the street, in most of the buildings, and even built into your computer and cell phone. But you can be sure that 24/7, “They” know who you are and where you are, right down to the GPS coordinates, and the Google Street View. If you buy something, your habit is put into a zillion profiles, and your ads will change to reflect those habits.. “They” will try to get you to buy something else. Again and again.

All we will have left that can’t be changed are “Memories.”

Source:::: Input from a friend of mine

Natarajan

” உன் ரெண்டாவது மகன் தில்லியிலா வேலை பாக்கறான் …? “

ஆகாயத்தில் ஆரத்தி காட்டி……

அஞ்சலை துப்புறவு தொழில் செய்பவள். அவளை வறுமை கடுமையாக வாட்டியது. அவளுக்கு இரண்டு செல்வங்கள். 1984ம் வருடம், நடமாடும் தெய்வமாம் காஞ்சி மஹான் பாரதமெங்கும் தமது புனித யாத்திரையை மேற்கொண்ட போது இந்தப் பெண் வசிக்கும் கிராமத்திற்கும் விஜயம் செய்தருளினார்.

மஹானைப் பற்றி தெரிந்து கொள்ளும் சூழ்நிலையில் அவள் இருக்கவில்லை. ”நம்ம ஊருக்கு ஒரு சாமியார் வந்து தங்கி இருக்காரே, அவரைப் பார்த்துவிட்டு வரலாம்” என்று நடமாடும் தெய்வம் முகாமிட்டு இருந்த இடத்திற்கு வந்தாள்.

தன்னுடன், தன் இரு பாலகர்களையும் அழைத்துச் சென்றிருந்தாள்.

பக்தை என்று குறிப்பட முடியாத அந்த நிலையில் ஏதோ பார்வையாளராய் வந்தவள், மஹானைப் பார்த்து வணங்கிவிட்டு தன் பிள்ளைகளோடு நகர எத்தனித்தாள். “பேர் என்ன கேளு” மஹான் உத்தரவு. “அஞ்சலைங்க” என்று சொன்ன அவள், தான் செய்யும் தொழிலையும் சொல்லி, தனக்கு இரு பிள்ளைகள் என்று ஒப்புவித்து விட்டு நகரும் நிலையில்தான் அப்போதும் அவள் மனநிலை இருந்தது.

“அவளைக் கூப்பிடு” சென்றவளை தெய்வம் அழைத்தது. அவள் வந்தாள் – பயம் ஒரு பக்கம்.

“உன் பேரு அஞ்சலைன்னு சொன்னியே……. நீ எதுக்கும் பயப்படமாட்டாயோ?” என்று அன்பும் குறும்பும் கலந்து காருண்ய மூர்த்தியின் வினா எழுந்தது.

அஞ்சலை மஹானின் தீட்சண்ய பார்வையால் ஆட் கொள்ளப்பட்டு அப்போது பரம பக்தையின் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

விளையாட்டாக மஹான் இன்னொரு கேள்வியைக் கேட்க பக்தைக்கு வறுமையின் வேதனையிலும் சிரிப்புதான் வந்தது.

அந்தக் கேள்வி..

“உன் இரண்டாவது மகன் டில்லியிலா வேலை பார்க்கறதா சொன்னே?”

அந்த இரண்டாவது பையன், அஞ்சலையின் பக்கத்தில் புடைவைத் தலைப்பை விடாமல் பிடித்தபடி கிழிந்த நிக்கரும், அழுக்கான சட்டையும் மூக்கில் ஒழுகலுமாக பாலகனாகக் காட்சி தந்து கொண்டிருந்தான்.

இந்தக் கேள்வியைக் கேட்டு அஞ்சலை பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

மஹான் அவளுக்குப் பூரண அனுக்கிரகம் பொழிந்து அனுப்பினார்.

அப்போதே மஹானை மனதில் இருத்திக் கொண்ட அந்த பக்தை, தன் இரண்டாவது பிள்ளையைப் பற்றிக் கேட்பதன் உட்பொருள் என்னவாக இருக்கும் என்கிற சிந்தனை துளியும் இல்லாமல் ‘மஹா பெரியவா பக்தி’ என்னும் அருள் மட்டுமே அவளுக்குப் பெரிதாகத் தெரிந்தது.

தினமும் குளித்து முடித்துவிட்டு கற்பூரத்தை வெளியே சூரியனுக்குக் காட்டுவாள். மனம் நிறைய மஹான் இடம் பெற்றிருந்தார். அவர் படம் கூட அவள் வீட்டில் இல்லை. தனக்கு அந்த அருகதை இல்லை என்று தன்னை சமாதானம் செய்து கொண்ட அவள், எந்த பக்தருக்கும் தோன்றாத எண்ணமாய் எங்கும் வியாபித்திருக்கும் மஹானை, ஆகாயத்தில் ஆரத்தி காட்டி ஆராதிக்கும் மனப் பக்குவத்தில் இருந்தாள்.

வாழ்க்கையில் படிப்படியாக வந்த சிரமங்களை பயமில்லாமல் எதிர்கொண்ட அஞ்சலை, சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு 2008-ஆம் ஆண்டு திரும்பவும் அந்த ஊருக்கு ரதயாத்திரையாக மஹானின் உற்சவ மூர்த்தி வந்தடைந்தபோது பேரானந்தம் அடைந்தாள்.

“பெரியவர் நம்மை விட்டுப் போகவே இல்லை; அப்படி நினைக்கிறவங்க அந்த தெய்வத்தைப் புரியாதவங்க. இந்த ரதத்திலே மெய்யாலுமே அவரு வந்திருக்காருன்னு நான் நிச்சயமா சொல்வேன்” என்று ரதயாத்திரையோடு சென்றவர்களிடம் தனது பக்தியை அஞ்சலை சொன்னாள்.

அவளுக்குப் பக்கத்தில் இருபத்தியேழு வயது நிரம்பிய அவளது இளைய மகன் – கிராமத்திற்கு வந்திருக்கிறான் – மஹான் ஆசி வழங்கிய பாலகன் இவன் தான். மஹான் சொன்னபடி அவன் தலைநகர் தில்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக இருக்கிறான். இப்போது அவனது மகனுக்கு முடி இறக்க கிராமத்திற்கு வந்திருக்கிறான். இதை அவள் விபரமாகச் சொன்னபோது அன்றே அவன் டெல்லியில் வேலை பார்ப்பதாகச் சொன்ன மஹானின் அருளாசியை நினைத்து ஊர்வலத்தில் சென்ற பக்தர்கள் பரவசமடைந்தனர்.

மஹானே நேரில் வந்துவிட்டார் என்று ரதத்தை நோக்கிக் கை கூப்பிய அஞ்சலையைக் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தார்கள். இன்று இந்த அஞ்சலையைப் போன்ற பக்தர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள் என்பதை நம்மால் மறுக்க முடியாது.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

sOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/7573/sarvajna-sarva-vyapi-mahaperiyavaa-venkatasaamy#ixzz37UAL20Hi

Zohra Sehgal… The Grand Old Lady of Indian Cinema … End of an Era …

Older than Indian cinema, Zohra Sehgal had a glorious performing career that inspired

generations.

 

  • Zohra Sehgal, a quintessential Bollywood diva who essayed character roles with aplomb in a career spanning over seven decades in both theatre and cinema, died in New Delhi on Thursday at the age of 102. Photo: S. Subramanium
    Zohra Sehgal, a quintessential Bollywood diva who essayed character roles with aplomb in a career spanning over seven decades in both theatre and cinema, died in New Delhi on Thursday at the age of 102. Photo: S. Subramanium  The Hindu

 

Often called the grand old lady of Bollywood, she last appeared in Sanjay Leela Bhansali’s Saawariya(with Ranbir Kapoor and Sonam Kapoor) in 2007. She acted in hits like Cheeni Kum (with Amitabh Bachchan), Dil Se (with Shah Rukh Khan and Manisha Koirala), Veer Zaara (Shah Rukh and Preity Zinta), Hum Dil De Chuke Sanam (Salman Khan and Aishwarya Rai) and Bend It Like Beckham.

Born on April 27, 1912 in Saharanpur in Uttar Pradesh in a traditional Muslim family, Sehgal, third of her seven siblings, grew up in Chakrata near Dehradun and was sent to Lahore to pursue her higher education.

As a dancer, she performed across Japan, Egypt, Europe and the U.S.. She married scientist, painter and dancer Kameshwar Sehgal in August 1942. The couple had two children, Kiran and Pavan. Kameshwar died in 1952 and Zohra raised the children all by herself.

On her return from foreign trips, Sehgal had to don the burqa while studying in Lahore’s prestigious Queen Mary College, meant for daughters of aristocratic families, an institution where strict purdah was observed and males invited to speak there were put behind a screen.

Considered the doyenne of Indian theatre, Ms. Sehgal acted with Indian People’s Theatre Association (IPTA) and Prithviraj Kapoor’s Prithvi Theatre for 14 years. In 1946, she debuted in IPTA’s first film production Dharti Ke Lal, which dealt with the Bengal famine. She also acted in another IPTA film — Chetan Anand’s Neecha Nagar.

She choreographed for a few Hindi films as well, including classics like Guru Dutt’s Baazi (1951) and the dream sequence song in Raj Kapoor’s film Awaara.

Sehgal moved to London on a drama scholarship in 1962, where she appeared in many TV productions including The Jewel in the CrownTandoori NightsMy Beautiful Laundrette and The Raj Quartet.

Born Sahibzadi Zohra Begum Mumtaz-Ullah Khan on April 27, 1912 in Saharanpur, Uttar Pradesh, Zohra Sehgal began her career as a dancer with Uday Shankar in 1935 and performed across Japan, Egypt, Europe and the U.S. In this April 2012 photo, Zohra Sehgal reacts while cutting a cake on her 100th birthday in New Delhi. Photo: PTI

 

Zohra Sehgal was awarded the Padma Shri in 1998 and the Kalidas Samman in 2001. The Sangeet Natak Akademi presented her with its highest award, the Sangeet Natak Akademi Fellowship in 2004. She received the Padma Vibhushan, India’s second-highest civilian honour in 2010. In this April 2010 photo, then President Pratibha Patil presents the Padma Vibhushan to Zohra Segal. Photo: PTI
A rare photo of Zohra Sehgal with Uday Shankar’s wife Amala Shankar at Uday Shankar’s dance centre in Almora. Photo: The Hindu Archives
Zohra Sehgal with her sister from Pakistan Uzra Butt in New Delhi in 2003. “All my life I have been active in my profession since October 8, 1935. Even when my children were born, or my husband committed suicide, I managed to carry on. After the 75th year of my career, I decided to stop,” Zohra Sehgal had said in April 2012 when she turned 100. And when asked whether she had any wishes left, she memorably had said, “I want long blonde hair, an hourglass figure and 5 foot 6 inches height.” Photo: The Hindu
Considered the doyenne of Indian theatre, Zohra Sehgal was associated with the Indian People’s Theatre Association (IPTA) and Prithviraj Kapoor’s Prithvi Theatre for 14 years. She choreographed for a few Hindi films as well, including classics like Guru Dutt’s “Baazi” (1951) and the dream sequence song in Raj Kapoor’s film “Awaara”. In this June 13, 2009 photo, Zohra Sehgal gets emotional during a meeting in the memory of eminent theatre personality and another IPTA veteran Habib Tanvir at Abhimanch Theatre, NSD, in New Delhi. Photo: The Hindu
Source::::: The Hindu…  July 11 2014
Natarajan

 

நேற்று தொழிலாளி; இன்று தொழிலாளர் ஆணையர்…

 

மெஸ்ஸில் அம்மாவுக்கு உதவியாக தொழிலாளி போல் இருந்த ஒருவர், மத்திய அரசின் தொழிலாளர் உதவி ஆணையராக இன்tறைக்கு உயர்ந்திருப்பது வழக்கமான ஒரு வெற்றிக் கதையல்ல.

மணிகண்டனின் (32) ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு. அவரது தாய் ஓட்டல் சரஸ்வதி மெஸ் என்ற பெயரில் சிறிய உணவகத்தை நடத்தி வந்தார். தாய் நடத்திய ஓட்டலில் அவருக்கு ஒத்தாசையாக இருந்துவந்தார். மளிகைப் பொருட்களையும் காய் கறிகளையும் வாங்கி வருவது, ஓட்டலில் சப்ளை செய்வது எனப் பம்பரமாகச் சுழன்ற அவர் ஒரு தொழிலாளியாகவே தனது நாள்களை நகர்த்தினார். கணவனால் கைவிடப்பட்ட தாய்க்கு உதவிவந்த அவருக்கு ஒருநாள் தான் தொழிலாளர் கமிஷனர் ஆவோம் என்பது அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், காலச் சக்கரத்தின் சுழற்சியில் அவர் மேலே வந்தார். அவரை உயர்த்தியது அவரது கல்வியும் தளராத முயற்சியும்.

மணிகண்டன், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வில் வெற்றிபெற்று மத்திய தொழிலாளர் உதவி கமிஷனர் பணிக்கு நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பணிக்கு இந்திய அளவில் மொத்தம் 57 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஐந்து பேரில் மணிகண்டன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மணிகண்டன் செய்யாறு ஆர்.சி.எம். பள்ளியிலும், அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல். முடித்தார். சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தபோதே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாரானார். குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்றார்; பணி கிடைத்தது. ஆனால் அப்பணியில் சேர அவர் விரும்பவில்லை, அதைவிடப் பெரிய பணி அவரது கனவாக இருந்தது.

கடந்த 2013-ல் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தொழிலாளர் அதிகாரி தேர்வில் அவர் நூலிழையில் வெற்றிவாய்ப்பை இழந்தார். டி.என்.பி.எஸ்.சி. கைநழுவிய வேளையில் மத்திய உதவி தொழிலாளர் கமிஷனர் காலிப் பணியிடத்தை நிரப்ப யூ.பி.எஸ்.சி. தேர்வு அறிவித்ததை அறிந்து விண்ணப்பித்தார்.

காலை முதல் மாலைவரை கன்னிமாரா நூலகமே கதி எனக் கிடந்தார். அயராத உழைப்பு அவரை அகில இந்திய அளவில் 10-ம் இடம் பிடிக்கச் செய்தது.

வெற்றிபெற்ற மணிகண்டனிடம் பேசியபோது, பள்ளியில் படிக்கும் பருவத்தில் தாய்க்கு உதவியாக இருந்ததை நினைவுகூர்ந்தார். சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை ஆர்வத்துடன் படித்துள்ளார் மணிகண்டன்.

“சிறு வயதில் இருந்தே தினமும் காலையில் தியானம், யோகா, பிராணாயாமம் செய்து வருகிறேன், எனது வெற்றியில் இவற்றுக்கும் பெரும்பங்கு உண்டு” என்று சொல்லும் மணிகண்டன், படிப்பிற்கு உறுதுணையாக இருந்த தன் அண்ணன் செந்தில்குமாரை வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்கிறார் நன்றிப் பெருக்குடன்.

நேரடியாக மத்திய உதவி தொழிலாளர் கமிஷனர் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ள மணிகண்டன், மண்டல தொழிலாளர் கமிஷனர், துணை தொழிலாளர் கமிஷனர் என அடுத்தடுத்து உயர் பதவிக்குச் செல்ல முடியும். பொதுத்துறை நிறுவனங்களில் தொழிலாளர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, ஊதிய உயர்வு, போனஸ் பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளை மத்திய தொழிலாளர் அதிகாரிகள் கவனிக்கிறார்கள்.

“திட்டமிட்ட கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தேடித்தரும்” என்று சொல்லும் மணிகண்டன், “எந்தப் போட்டித் தேர்வு என்றாலும், படிக்க வேண்டிய பாடங்களைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் காலஅட்டவணை போட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம்” என்று அடித்துக் கூறுகிறார். “நேர்முகத்தேர்வில் நமது ஆளுமைத் திறனைப் பார்க்கிறார்களே தவிர நமது தோற்றத்தையோ கேள்விகளுக்குச் சரியாகப் பதில் சொல்கிறோமா என்பதையோ அல்ல” என்று சொல்லும் மணிகண்டன் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்.

” You Might Be President of PepsiCo…” Who Said It ? …

Q. You come home one day as president of the company, just appointed, and your mom is not that impressed. Would you tell that story?
This is about 14 years ago. I was working in the office. I work very late, and we were in the middle of the Quaker Oats acquisition. And I got a call about 9:30 in the night from the existing chairman and CEO at that time. He said, Indra, we’re going to announce you as president and put you on the board of directors … I was overwhelmed, because look at my background and where I came from — to be president of an iconic American company and to be on the board of directors, I thought something special had happened to me.

So rather than stay and work until midnight which I normally would’ve done because I had so much work to do, I decided to go home and share the good news with my family. I got home about 10, got into the garage, and my mother was waiting at the top of the stairs. And I said, “Mom, I’ve got great news for you.” She said, “let the news wait. Can you go out and get some milk?”

I looked in the garage and it looked like my husband was home. I said, “what time did he get home?” She said “8 o’clock.” I said, “Why didn’t you ask him to buy the milk?” “He’s tired.” Okay. We have a couple of help at home, “why didn’t you ask them to get the milk?” She said, “I forgot.” She said just get the milk. We need it for the morning. So like a dutiful daughter, I went out and got the milk and came back.

I banged it on the counter and I said, “I had great news for you. I’ve just been told that I’m going to be president on the Board of Directors. And all that you want me to do is go out and get the milk, what kind of a mom are you?”

And she said to me, “let me explain something to you. You might be president of PepsiCo. You might be on the board of directors. But when you enter this house, you’re the wife, you’re the daughter, you’re the daughter-in-law, you’re the mother. You’re all of that. Nobody else can take that place. So leave that damned crown in the garage. And don’t bring it into the house. You know I’ve never seen that crown.”

Source:::: David Bradley, Atlantic  …Excerpts of Interview with  Indra K. Nooyi, the CEO of PepsiCo,  ….as appeared in Business Insider AU

Read more: http://www.theatlantic.com/business/archive/2014/07/why-pepsico-ceo-indra-k-nooyi-cant-have-it-all/373750/#ixzz36G3cdOWL

Natarajan

” பழமொழி …அர்த்தமுள்ள பொன் மொழிகள் !!!

c1446-corridorof1000pillarsinramanathaswamytempleinrameswaram-tamilnadu1928

பழமொழிகளில் நாட்டுப்புற மருத்துவம்

மக்களால் பயன்படுத்தப்படும் பழமொழிகளால் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும், மற்றும் மருந்துப் பொருட்களும் கூறப்படுவதுடன், ஆதனால் தீரும் நோய் பற்றியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

“இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு”

எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள் ஆகும். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும், அதிகமான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.

“ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்”

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய 4448 நோய்களுக்கும் அடிப்படை வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். இந்நீர் மூலிகைகளின் மீது பட்டு வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும், பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் சோற்று நீரை அருந்துகின்றனர்.

“வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்”

வேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை, வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை, ஆகியன விலகும் என்கிறது பழமொழி.

“மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்”

மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

“ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் ரோகி”

ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியிலிருந்து அமிர்தம் என்று சித்தர்களால் கூறப்படும் முறையும், மேலும் நரை திரை நோய்கள் அணுகாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாகும்.

அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்

சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது. என்பதனை இப்பழமொழி குறிக்கிறது. கழுதைப்பால், செவ்வாப்பு நோயைக் குணப்படுத்த வல்லது, கழுதைப்பாலில் இருந்து தோற்றம் பெற்றது இப்பழமொழி.

ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

இதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே இதன் பொருளாகும். நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் தான் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

“அரசனை நம்பிப் புருஷனை கைவிட்டாளம்”

அரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று யாரோ, கூறக்கேட்ட ஒருத்தி கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தாளாம். அரசமரம், வேம்பும் இணைந்த மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப் பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

ஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம் என்பது கருவேல மரத்தின் குச்சிகளையும், நால் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும். ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின் மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க, பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.

“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”

மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கு மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.

“ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ”

ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து எடுத்து இடித்து வைத்துக் கொண்டு தேனீர், டீப்பொடி இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, உடல் நாற்றம், சர்க்கரை நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்த பழமொழியாகும்.

Source:::: Input from a Friend of mine

Natarajan