Message For the Day…” God is the Master who is Worshiped …”

A piece of mysorepaak (an Indian delicacy made of gram flour) has sweetness, weight, and shape; the three cannot be separated from the other. Each little part of it has all these three aspects. When it is placed on the tongue, taste is recognised, weight is lessened, and shape is modified – all at the same time. So too, the individual soul (jiva), the Atma, and the Supreme Lord (Parameswara) are not separate; they are one and the same. “I am the worshiper. The world is the offering. God is the Master who is worshiped.” Hold this vision high before the mind’s eye every day and lead your life accordingly. Then your life is one long unbroken service to the Lord. Over time, the feeling of I and You will soon disappear; all trace of self will be destroyed. Life then transmutes itself into a veritable devotion to the Lord (Hariparayana).   

Sathya Sai Baba

” இப்போ போட்டோ எடுத்துக்கோ…” !!!

புகைப்படம் எடுப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

பெரியவாள் முன்னிலையில், slide viewer –ல் ஸ்லைடுகளைப் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தேன். அது, ஸ்லைடில் உள்ள படங்களை நான்கு மடங்கு பெரிதாகக் காட்டும். படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவாள், “இதில் ஸ்லைடு வைக்குமிடத்தில் நெகடிவ் பிலிமைப் போட்டால், நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டார்.

(பெரியவாளுக்குப் புகைப்படக் கலையின் ஒவ்வொரு நுட்பமும் தெரியும். ஆனால், தனக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும்! ஆனால், என்னுடைய அக்ஞானம் என்னை விட்டுப் போய்விடுமா என்ன?)

”நெகடிவ் போட்டால், திரைப்படத்தில், கறுப்பு வெள்ளையாகவும், வெள்ளை கறுப்பாகவும் தெரியும்..”

பெரியவாள் உடனே, “அதுதான் எனக்கு வேணும்.. நரைத்துப் போன என் தலைமுடி, கறுப்பாகத் தெரியும்! நான் இன்னும் இளைமையாக இருப்பேனோல்லியோ…”

அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அட்டகாசமாகச் சிரித்து மகிழ்ந்தார்கள்.

பெரியவாளுடைய நகைச்சுவை உணர்வு, எவரெஸ்டுக்கு மேலே பத்து அங்குலம்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

***********

வானகரத்தில் ஒரு சவுக்குத் தோப்பில் உட்கார்ந்திருந்தார் பெரியவா. முன்னர் எடுத்திருந்த புகைப்பட ஆல்பத்தைக் கொடுத்தேன். அப்போது, பல்வேறு காரணங்களால் புகைப்படங்களில் குறைகள் ஏற்பட்டிருந்தன.

இந்தத் தோப்பில் எவ்விதக் குறைகளுமில்லாமல் புகைப்படம் எடுக்க முடியும் என்பது என்னுடைய துணிபு.

பெரியவா, ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டு, ஒரு தாழங்குடை கொண்டுவரச் சொல்லி, அதைத் தன் தலைக்கு மேல் பிடிக்கச் சொன்னார்.

“இப்போ போட்டோ எடுத்துக்கோ…”

அப்போது நான் எடுத்த புகைப்படம் மிக அருமையாக வந்திருந்தது. (பின்னால் கல்கி தீபாவளி மலர் ஒன்றில் ஸ்ரீருத்ர வாக்கியமான, ‘நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச’ என்ற விளக்கத்துடன் முகப்புப் படமாக வெளியாயிற்று).

பெரியவாள் தாழங்குடையைப் பிடிக்கச் சொன்னதற்கும் காரணம் இருந்தது. மரங்கள் வழியே வந்த ஒளி, அவர்கள் மேல் திட்டுத் திட்டாக விழுந்து கொண்டிருந்தது. அந்த நிலையில் படம் எடுத்தால் நன்றாக வராது என்பதால், அந்த ஷாட் நன்றாக அமைய வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்தார்கள்.

மெய்ப் படங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அவர்கள். நிழற் படங்களின் நுட்பங்களை எந்தக் குருகுலத்தில் கற்றுத் தெளிந்தார்கள்?
ஆயிரம் படம் படைத்த ஆதிசேஷ்னே அறிவார்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை – 28.
SOURCE:::: http://www.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4494/maha-periyavaa-photographer#ixzz3T79zOjwl

Message For the Day…” Self Satisfaction Results Out of Self Confidence…”

Today whatever good work we undertake in the world is being done in a casual manner without understanding its significance and imprinting its essence in our hearts. In the worldly aspect, we do several things either to attain a high position or reputation, or just for the sake of exhibition or in the hope of some material gain. Such types of effort are temporal and will yield only transitory benefits. Of the many things that we do daily, those intended to attain self-satisfaction are very few. Self-satisfaction will result only when we have confidence in our own Self. When there is Self-confidence and Self-satisfaction, you will be able to do Self-sacrifice, resulting in Self-realisation. Thus, immortality is the result of sacrifice (tyaga). It is for this reason that all the yajnas and other rituals in this country have been intended to symbolise sacrifice. They have a definite purpose of promoting divine strength.

Sathya Sai Baba

Message For the Day….” The Game Called Life is Played with….”

When rains come, earth and sky are one in the sheety downpour. It is indeed a beautiful and inspiring scene, an imagery by which creation itself is teaching you to become one with the Creator. Learn three lessons: the impermanence of created things, your role as a servant, and God as the Master. The game called life is played with these – the process of creation, the created, the Creator. Rejoice that the Lord continues to place in your hands newer ways to serve Him and exult in the chance you receive. This attitude will give you immeasurable joy; to lead a life suffused with this joy is indeed bliss. Whatever is done from sunrise to sunset must be consecrated, as if it is the worship of the Lord. Just as care is taken to pluck only fresh flowers and to keep them clean and unfaded, so too, continuous and persistent effort should be made to perform deeds that are pure and unsullied. 

Sathya Sai Baba

 

Message For the Day….” Position , Power , and Pride …all Vanish Before Death …”

People commit the great fault of identifying themselves with the body. They accumulate a variety of things for the upkeep and comfort of the body, even when the body becomes weak and decrepit with age! Can death be postponed? When Yama’s (God of death) warrant comes, all must depart. Position, pride, and power – all vanish before death. Knowing this, strive day and night, with purity of body, mind and spirit, to realise the Higher Self. The body must be preserved as a vehicle for this service. But remember, you are not this body; this body cannot be you! Until the realisation of the purpose for which the human body is given, it is your duty to watch over it vigilantly and protect it from injury and disablement. Just as woollen clothes help withstand the rigour of the cold gales during winter and are discarded in summer, the material body is no longer essential when the cold gales of material life don’t affect you.

Sathya Sai Baba

ஸ்ரீ முருகன் மாத வாரப் பதிகம்…..

ஸ்ரீ முருகன் மாத வாரப் பதிகம்
b113d-shankarimurugavan
ஒவ்வொரு கிழமையும் மட்டுமல்ல ஒவ்வொரு மாதம் முழுதும் முருகனைத் துதிக்கும் பதிகங்கள். அகஸ்த்திய கீதத்தில் இருந்து நொச்சூர் சுவாமிகள் சிவயோகி ஸ்ரீ சித்தானந்தா ஸ்வாமிஜி அவர்களால் பலருக்கும் உபதேசம் செய்யப்பட்ட “ஸ்ரீ  முருகன் மாத வாரப் பதிகம்”.காப்பு:

தணிகாசல மேவுந் தற்பரனை வேண்டித்
துணிவாயிரு பதிகஞ்சொல்ல – மணிசேர்
பணிதுலங்கு தோளான் பகர்ஆனை மாமுகன் தாள்
அணியாய் தலைக்கு அணிகுவாம்.

மாதப் பதிகம்

சித்திரை:

அத்திமுகத்தோன் அருந்துணைவா! இவ்வகிலம் எல்லாம்
சுத்தியொரு நொடிக்குள்ளே வலம் செய்த சூத்திரனே!
முத்தமிழ்க் கீரன் இடர் தீர்க்கத் தட்சண முயன்றதுபோல்
சித்திரை மாதம் வருவாய் தணிகையிற் சேவகனே.

வைகாசி:

கையாற  நின் கழல் போற்றி செய்தேன்; என்கனவில் எல்லாம்
மெய்யாக நீ வந்தது உண்மை என்றால் இந்த மேதினியில்
செய்யா வினையென்ன செய்திருந்தாலும், அச்சீற்றமற்று
வையாசி மாதம் வருவாய் தணிகையில் வாழ்பவனே.

ஆனி:

மானிலம் அளந்த மால்மருகா! இந்த மாநிலமும்
ஞானியு முனிவரும் நான்முகனும் தொழும் நாயகனே!
தேனில் விழுந்த ஈப்போல் திகைத்து உன்னைத் தேடுகிறேன்;
ஆனி மாதத்தில் வருவாய் தணிகையில் ஆண்டவனே.

ஆடி:

ஓடியுலாவும் பருவத்திலே இந்த ஊழ்வினைதான்
ஆடித் தொடர்ந்தது ஐயா! இதற்கென்ன நானறிவேன்;
பாடித் துதிக்கும் பதம் கொடுத்தாய்; அந்தப் பக்குவம் போல்
ஆடிமாதத்தில் வருவாய் தணிகையில் ஆண்டவனே.

ஆவணி:

சேவல் கொடியுடை சேவகனே! துதி செய்பவர்க்கும்,
காவடிக் கொண்டு வரும் அடியார்க்கும் கருணை வைத்து
மாவினை யாவையும் தீர்க்கவென்றே மலை மேவி நின்றாய்;
ஆவணி மாதம் வருவாய் தணிகையில் ஆனந்தனே.

புரட்டாசி:

இருட்டான மேனி அசுரரைச் சாய்த்துய்மை அவர்மேல்
அருட்பார்வை நோக்கிய ஆண்டவனே! அடியேனை வினை
வெருட்டாமல் காக்க வேண்டுகின்றேன் வெற்றி மாமயில்மேல்
புரட்டாசி மாதம் வருவாய் தணிகையிற் புண்ணியனே.

ஐப்பசி:

கப்பிய ஊழ்வினைத் தீர்ப்பை யென்றே நின் கமலமதில்
ஒப்புவித்தேன் மனத்துள்ள தெல்லாமிரு உத்தமனே!
தப்பிதம் எத்தனை செய்திருந்தாலும் நின் தஞ்சமென்றேன்;
ஐப்பசி மாதம் வருவாய் தணிகையில் அற்புதனே.

கார்த்திகை:

தீர்த்தம் அனேகங்கள் மூழ்கி வந்தேன் வினை தீர்ந்திலையால்
மூர்த்தி கண் மூவர் முதல்வனுக்கே மறை முடிவுரைத்து
கீர்த்தி வகித்த ஷண்முகனே! கதி வேறறியேன்;
கார்த்திகை மாதம் வருவாய் தணிகையிற் காவலனே.

மார்கழி:

சீர்மலிந்தோங்கும் உலகமெல்லாம் நின் சேவடிக்கே
கார்மலிந்தோங்கு வண்ணமன்றோ இன்பக் கட்டுரையால்
ஏர்மலிந்தோங்கு கவிவாணர் அன்பர் சொல் ஏற்றதுபோல்
மார்கழி மாதம் வருவாய் தணிகையில் மன்னவனே.

தை:

பொய்யான வாழ்க்கையை மெய்யாக நம்பி இப்பூதலத்தில்
மையாடு கன்னியர் மயலால் மெலிந்து மயங்குகின்றேன்
ஐயா! உனையன்றி திக்கறியேன் வினை யார் தவிர்ப்பார்?
தைமாதம் தன்னில் வருவாய் தணிகையிற் தயாபரனே.

மாசி:

பூசித்திறைஞ்சும் அடியார் இருதயம் பூரிக்க அன்பு
நேசித்து வந்து வினையும் கவலையும் நீக்குகின்ற
தேசிகனே! தெய்வ நாயகனே உனைத் தேடுகின்றேன்;
மாசி மாதத்தில் வருவாய் தணிகையில் மாமணியே.

பங்குனி:

எங்கெங்கும் ஓடியும் வினை அகலாம்; என் இருதயத்தை
பங்கிட்டு நின் மலர்ப்பதத்தில் வைத்தேன்; இது பத்தியமாம்
மங்கள வள்ளியும் தெய்வானையோடு மனமகிழ்ந்து
பங்குனி மாதம் வருவாய் தணிகையிற் பண்ணவனே.

வாரப் பதிகம்

ஆதி வாரம்:

நீதிக் கிசைந்த தெய்வம் என்றே இந்த நீள் நிலத்தோர்
ஓதித் துதிக்கும் உண்மையினால் எந்தன் ஊழ்வினையைச்
சோதித்து நீக்கிச் சுகத்தை கொடுக்கு நற் தோகையுடன்
ஆதித்த வாரம் வருவாய் தணிகையில் ஆண்டவனே.

ஸோம வாரம்:

பொங்குகடல் சூழுலகம் எல்லாம் உன்னை போற்றுதலால்
அங்கம் தளர்ந்து மிக மெலிந்து அடியேன் உன் அபயம் என்றேன்
எங்கும் திரிந்து உழலாமல் என் முறை ஏற்றருளித்
திங்கட் கிழமை வருவாய் தணிகையிற் தேசிகனே.

மங்கள வாரம்:

ஒவ்வாத ஆசைப் பெருவாரியில் நெஞ்சு ஊஞ்சலிட்டால்
இவ்வாறு நல்ல நிலையில் நிற்கேன் என்ன ஊழ்வினையோ?
இவ்வாறுயென்னை அயலாய் நினைக்கில் இங்காரு துணை?
செவ்வாய்க்கிழமை வருவாய் தணிகையிற் சேவகனே.

புத வாரம்:

இதமாக நெஞ்சுக்கு எத்தனைச் சொன்னாலும் இவ்வுலகை
சதமாகவே நம்பி வாதிக்குதே இந்த சஞ்சலத்தை
பதமாக நீக்கி நினையே தொழப் பச்சை மாமயில் மேல்
புதவாரம் வருவாய் தணிகையில் புண்ணியனே.

குருவாரம்:

ஒருவரும் துணையில்லை யென்றே உந்தன் உயர் பதத்தை
மருவிப் பிடித்து மன்றாடுவேன் மனம் ஏன் இரங்காய்?
அருமா மறைக்கு ஆதியனே! எனை ஆதரிக்க
குருவாரம் தன்னில் வருவாய் தணிகைக் கொற்றவனே.

சுக்கிர வாரம்:

கள்ள மனத்தின் கவலையும் தேகக் கடுவினையும்
எள்ளத்தனையும் இல்லாமல் காக்க இது  சமயம்;
வள்ளிப் புனத்தில் வெகு வித்தை செய்த வாலிபன் நீ!
வெள்ளிக்கிழமையில் வருவாய் தணிகையில் வேலவனே.

சனி வாரம்:

அனியாய நவக்கிரகச் சேட்டையினால் நொந்து அடுக்குலைந்தேன்
முனியாமல் என்முறை கேட்டருள்வாய் குருமூர்த்தியனே
இனியேது  எமக்குக் குறை என்ன என்று இருமாந்து  இருக்க
சனிவாரம் தன்னில் வருவாய் தணிகையில் ஷண்முகனே.

நூற்பயன்:

பன்னிரு மாதங்களும் வாரங்கள் ஏழும் பகலிரவும்
உன் இருதாள் தொழும் கடமையுள்ளேன் இது உண்மை கண்டாய்
என் இதயத்துக் கவலையும் ஊழும் எடுத்தெறிந்து
முன்னின்று காக்கும் கடன் எந்தக் காலமும் உன்னதுவே.


முருகா சரணம்…………….

SOURCE::::  Srinivasan in Murugan Bhakthi .org

Natarajan

“இடிக்கும் மேகமே இன்மழையும் பொழியும் ….”

1507603_10202994818654217_40352395530888678....jpg

“எங்கே, அந்த பெல்காம்….இருக்கானா?”

என்கிறது நெய்-மிளகாய்க் குரல்.

மிளகாயை விட்டு விட்டு!.

“இதோ இருக்கேன்” என்று தண்டம்

ஸமர்ப்பிக்கிறார் பெல்காம்…..

“நான் இந்த மஹாராஷ்ட்வாவிலே சுத்த

ஆரம்பிச்சதிலேருந்து நீ எத்தனை தடவை

என்னைப் பார்க்க ஓடி வந்திருப்பே?”

மிளகாயே அறியாத சுத்த நெய் தன் உள்ளே

வர்ஷிப்பதாக உணர்ந்த பெல்காம்….தான் அடிக்கடி

பெரியவாள் தர்ஸனத்துக்கு வந்திருப்பதை இன்று

அவரே எல்லோருக்கும் தெரியப்படுத்துவதில்

உற்ற பெருமிதம். அவர் ‘இத்தனாம் தடவை’ என்று

சொன்ன குரலிலே பிரதிபலிக்கிறது.

“ஆமாம், உன்னாலே எப்படி இத்தனை தடவை

வர முடியறது?”

“எனக்கு ரயில்வே உத்யோகமோல்லியோ?

‘பாஸ்’லே வரேன்.

“ஓஹோ! ஸரி! உன் பாஸை இங்கே வை”

என்று தமக்கு முன் தரையைத் தட்டிக்

காட்டுகிறார் ஸ்ரீ பெரியவர்.

பெரியவாள் பணித்த வண்ணமே அந்த பக்தர் செய்கிறார்.

இருள் பிரியாத அந்த இளம் பொழுதிலே பெரியவரின்

திருக்கர அழுத்தலில் பக்கத்தில் இருந்த டார்ச்

அந்த ரயில்வே பாஸ் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது.

பெரியவர் பாஸை உன்னிப்பாகக் கவனிக்கிறார். பேசத்

தொடங்குகிறார். நெய்யிலே மிளகாய் வறுபடுகிறது.

“பாஸ்லே எக்ஸாமினர் கையெழுத்தே ஆகல்லே.

எனக்குத் தெரியும், ரயில்வேக்காராளுக்குப் பாஸ்

இருந்தாலும் இத்தனை ட்ரிப்தான் போகலாம்னு கணக்கு

உண்டுன்னு. இதிலேயானா நீ இத்தனை தடவை வந்ததுக்குக்

கணக்கா ஒரு கையெழுத்துக்கூட காணும்! நீ என்ன

பண்ணணும் தெரியுமா? முதல் காரியமா இந்தப் பாஸைக்

கொண்டு போய் ‘ஸரன்டர்’ பண்ணணும். இனிமேல் உன்

கைக்காசைச் செலவழிச்சுண்டு வர முடியும்னாலே

என்னைப் பாக்க வரணும்.!”

ஹர ஹர சங்கரர் அறநெறிச் சங்கரராக ஜ்வாலை விட்டு

அனைவரையும் பிரமிக்கச் செய்கிறார்.

இந்த அயனான சந்தர்ப்பத்திலே சென்னையைச்

சேர்ந்த சிஷ்ய பிரமுகர் ஒருவர் ஆயிரம் ரூபாய்

காணிக்கை பெரியவாளுக்குச் செலுத்த முன் வருகிறார்.

இதற்குப் பதினோராண்டுகளுக்கு முன் முனிவர்

ஸ்ரீ மடத்தை விட்டு வெளிவந்த அன்றிலிருந்து

பணக்காணிக்கையைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை

என்று இவர் நன்கு அறிந்தவர்தான்.ஆயினும் பெரியவாளின்

திருவுளக்கருத்தின்படியே செலவழிக்கப்பட வேண்டுமென்று

அந்தரங்க பக்தியுடன் ஒதுக்கப்பட்ட தொகையாதலாலே

இந்த ஆயிரத்தைச் செலுத்துகிறார்.

பெரியவர் புரிந்து கொள்ளாமல் போவாரா?

“எங்கே பெல்காம்…….?” என்கிறார்.

திருணமாக வந்து நிற்கிறார் அந்த நபர்.

நெய்யிலே இப்பொழுது முந்திரியாக்கும் வறுபடுகிறது!

பெல்காமில்……நிறைவேற்றி வரும் ஆசாரிய ஸேவைத்

திட்டங்களைப் பற்றி ஏகமாக ச்லாகிக்கிறார் பெரியவர்.

இடித்த மேகமே இன்மழை கொட்டுகிறது.

அதில் ஒரு பணிக்கே இந்த ஆயிரம் ரூபாயைப்

பயன்படுத்துமாறு அருளாணை பிறக்கிறது.

“பணத்தை எப்படிக் கொண்டுபோவே?”

“பத்ரமா எடுத்துண்டு போறேன்” என்கிறார் பெல்காம்…

பொறுப்புணர்ச்சியின் நிறைவுடனும் அபார உலகியல்

அறிவுடனும் முனிவர் சொல்கிறார்;

“அதெல்லாம் ஸரியில்லை. தொலைஞ்சு போச்சுன்னா

நீயோ அவனோ (கொடுத்தவரோ) ஜவாப் இல்லை.

நான்தான் ஜவாப். (கொடுத்த பிரமுகரைப் பார்த்து)

நீ இந்தத் தொகைக்கு அவன் பேரிலே ‘டிராஃப்ட்’

வாங்கிக் குடுத்துடு.”

அறம் என்ன, அன்பு என்ன, பொறுப்பு என்ன,

ஸமயோசிதம் என்ன என்பதற்கெல்லாம் அன்றன்றும்

இப்படி அற்புத முன்னுதாரணம் தருவதே முனிவரின்

இயல்பாயிருக்கிறது.

SOURCE::::: http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8685/#ixzz3Sq964Nh5

Message For the Day….” Whether it is Punishment or Protection , it is all Out of Dharma…”

Following the true path of dharma, we will be in a position to receive much more benefit than what is anticipated. On the other hand, if we tread a path different from dharma, then we will find that if we have a thousand desires, not even one of those desires will be fulfilled. One who destroys dharma will in turn be destroyed by dharma, but one who protects dharma will in turn be protected by dharma. Whether it is punishment or protection it can arise only out of dharma. It is only by dharma that we can attain prosperity. We should try to follow the path followed by Dharmaraja (Yudhisthira) at least to a certain extent. Invest time to understand Indian culture, the scriptures(Ithihasas and Puranas) and Vedas and their sacred inner significance. There is no room for cruel and bad ideas, and it is possible for everyone to lead a good and happy life.

Sathya Sai Baba