Message For the Day….” Life is like a Balance Sheet…”

A merchant calculates the debit and credit at the end of a week or month or year, and draws up the balance sheet to arrive at one figure — their earnings. So too, in the business of life, the end may result in some earnings, after the receipts and disbursements are tallied. At the point of death, if one yearns to cater to the tongue, it is proof that throughout their life, the tongue has been the master. Thus, of the inborn desires(samskaras) in life, some are stronger than the rest and stand out to the last. Life is like that; this lesson must be learnt and digested well. The net result of all this living and toiling is whatever comes to memory at the last moment of life. Therefore, direct the current of life towards the acquisition of the mental tendency (samskara) that you want to have during the last moment. Fix your attention upon it, day and night.  

Sathya Sai Baba

A merchant calculates the debit and credit at the end of a week or month or year, and draws up the balance sheet to arrive at one figure — their earnings. So too, in the business of life, the end may result in some earnings, after the receipts and disbursements are tallied. At the point of death, if one yearns to cater to the tongue, it is proof that throughout their life, the tongue has been the master. Thus, of the inborn desires(samskaras) in life, some are stronger than the rest and stand out to the last. Life is like that; this lesson must be learnt and digested well. The net result of all this living and toiling is whatever comes to memory at the last moment of life. Therefore, direct the current of life towards the acquisition of the mental tendency (samskara) that you want to have during the last moment. Fix your attention upon it, day and night.

” அஸ்வமேத யாகத்துக்கு நிகர் என்ன தெரியுமா …” ?

இறந்தவரை அடக்கம் செய்ய உதவுவது அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமம்)

ஏப்ரல் 21,2015,-தினமலர்.

18698_10153209347029244_3030028360467212073_n.jpg
அட்சய திரிதியை நாளில் செய்யும் தானம் பன்மடங்கு புண்ணியம் தரும். இந்த நன்னாளில், காஞ்சிப் பெரியவரின் பக்தர் வாழ்வில் நடந்ததைக் கேளுங்கள்.

தினமும் பிடி அரிசி தானமளித்தல், முடிந்த சேவையைச் செய்தல், அனாதையாக இறந்தவரை அடக்கம் செய்வதற்கு உதவுதல் ஆகியவற்றைக் காஞ்சிப் பெரியவர் வலியுறுத்தி வந்தார். இறந்தவரை அடக்கம் செய்ய உதவுவது அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமம் என்பார் அவர். பெரியவரின் இந்தக் கொள்கைகளை டில்லியில் வசித்த பெரியவர் பக்தர் ஒருவர் கடைபிடித்து வந்தார்.

ஒருநாள், கரோல் பாக் பகுதிக்குச் சென்றார். நடைபாதையில் வசித்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி இறந்ததை அறிந்தார். உடலை அடக்கம் செய்ய பணமின்றி, அவரது மனைவி, குழந்தைகள் செய்வதறியாமல் நின்றனர். அந்த பக்தர் அவர்களுக்கு உதவியதோடு, அவர்களுக்கு தேவையான கோதுமை மாவை தினமும் வழங்க ஏற்பாடு செய்தார். வீட்டு வேலை செய்து சம்பாதிக்கவும் வழிகாட்டினார். பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி விட்டனர்.

ஒருநாள் தொழிலாளியின் மனைவி பக்தரைச் சந்தித்து, “”ஐயா! இவ்வளவு காலம் உதவி செய்தீர்கள். இப்போது நல்ல நிலைமைக்கு வந்து விட்டோம். ஆதரவின்றி வாடும் ஏழைகளுக்கு நானும் உதவ விரும்புகிறேன்,” என்றார்.

பக்தரும், “”காஞ்சிப்பெரியவர் அருளால் உங்கள் தர்மச்செயல்கள் நல்லபடியாக அமையட்டும்,” என்று வாழ்த்தி அனுப்பினார். அந்த அம்மையாரும் தன்னால் முடிந்த உதவிகளை வாழ்நாள் முழுக்க செய்தார்.

பக்தர் வாழ்வில் நடந்த இன்னொரு சம்பவமும் உண்டு.

ஒருநாள் காலை 3 மணிக்கு யாரோ ஒருவர் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தார்.

வந்தவர், தன் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும், அவர் உடலை சென்னைக்கு அனுப்ப உதவுமாறும் வேண்டினார். பக்தரும் உடலை விமானம் மூலமாக அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.

இதைக் கவனித்த டாக்சி டிரைவர் ஒருவர் வலிய உதவி செய்ய வந்தார். சவப்பெட்டி ஒன்றைத் தன் செலவில் தயார் செய்து, அதை விமானத்தில் ஏற்றும் வரை பக்தருக்கு உதவியாக உடனிருந்தார். டிரைவருக்கு பணம் கொடுக்க முன் வந்தார் பக்தர். அவர் மறுத்ததோடு, “”ஐயா! உங்களை எனக்குத் தெரியும். சாலை விபத்தில் சிக்கிய நான் மருத்துவமனையில் இருந்த போது, நீங்கள் நோயாளிகளுக்கு காஞ்சிப் பெரியவரின் பிரசாதம் அளித்ததோடு, விரைவில் உடல்நலம் பெறவும் பிரார்த்திக் கொண்டீர்கள். வாழ்நாளில் ஒருமுறையாவது தங்களைச் சந்திக்க எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் இன்று நிறைவேறியது,” என்று சொல்லி கண் கலங்கினார்.

“பெரியவர் திருவருளால் நன்மை உண்டாகும்’ என்று பக்தர் அவருக்கு நன்றி கூறினார்.

அட்சய திரிதியை என்றாலே தானத்திருநாள் தான். அவரவர் சக்திக்கேற்ப ஆதரவற்றோருக்கு உதவி செய்ய இந்நாளில் உறுதியெடுப்போம்.

காஞ்சிப்பெரியவரின் நல்லருள் பெறுவோம்

Read more: http://periva.proboards.com/thread/9118/#ixzz3YoIWdaLj

source…..www.dinamalar.com  and http://www.periva.proboards.com

natarajan

” என்ன லட்டு செய்ய முடுஞ்சுதா …” ?

அறுசுவை அரசு நடராஜன் கூறுகிறார்…..

ஒவ்வொரு வருடமும் மே மாதம் நெருங்க நெருங்க எனக்குள் ஒரு விதமான பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்வது வழக்கம். எனக்கு மட்டுமல்ல… என் குடும்பத்தார் அத்தனை பேருக்கும்!

காஞ்சி முனிவர் மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் ‘ஜெயந்தி’ (பிறந்த தினம்) வருவது அந்த மாதத்தில்தான். அந்த நாளின் போது, நான், என் மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் முழுவதுமாக காஞ்சிபுரத்துக்குச் சென்று, ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து, லட்டுகள் செய்து, கூடையில் சுமந்து கொண்டுபோய் மடத்தில் ஒப்படைப்போம். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சி.

இந்த சாதாரண சமையல்காரன், ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீதே நம்பிக்கை இழந்து ‘இதோடு எல்லாம் போதும்’ என்று விபரீதமான முடிவு எடுக்க இருந்த சமயத்தில், நம்பிக்கை கொடுத்து, “நீ நன்றாகத்தான் இருப்பாய்’ என்று அபயக்கரம் நீட்டிய அந்த மாமுனிவருக்கு நான் செலுத்தி வரும் காணிக்கை இது.கொஞ்சம் முழுசாகச் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.

எனக்கு ஏழு வயதாயிருக்கும்போது சங்கர மடம் கும்பகோணத்தில் இயங்கி வந்தது. மஹா பெரியவாள் அங்குதான் இருந்தார். தினந்தோறும் மதியம் பன்னிரண்டு மணி தொடங்கி நாலுமணிவரையில் அன்னதானம் ஜேஜேவென்று அங்கே நடக்கும். இதற்காக மூட்டை மூட்டையாக அரிசி வந்து குவியும். மடத்தில் அப்போது பெரிய சமையல்காரர் — கபிஸ்தலம் வெங்கட்ராமய்யர். அவருக்கு உதவியாக என் அப்பா (விக்கிரபாண்டியம் நாராயணசாமி அய்யர்) உட்பட நாலைந்து பேர் இருந்தனர். என்னைப் போல் சின்னப் பையன்கள் நிறையப் பேர் எடுபிடிகளாக இருந்தோம்.

ஒவ்வொரு பந்திக்கும் சாப்பாடு முடிந்ததும் அந்த இலைகளை அள்ளி எடுத்து மூங்கில் கூடைகளில் நிரப்பி எடுபிடி பையன்களில் தோளில் வைப்பார்கள். படுவெயிட்டாக இருக்கும். இரண்டு கைகளால் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஓடும்போது, கூடைக்குள்ளிருந்து மிச்சம் மீதி சாம்பார், ரசம், பாயசமெல்லாம் காதோரமாகக் கொட்டி தோளெல்லாம் வழியும். அதைத் துடைப்பதற்கு முடியாமல் அப்படியே தலையை ஒடித்துக் கன்னத்தால் தேய்த்து விட்டுக் கொள்கிறபோது அது வாயில்பட்டு நாக்கில் ருசிக்கும். ‘எச்சில்’ என்று தோன்றாது. பெரியவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி, இறைவனால் கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மீதியாகத் தான் அது தோன்றும் என்பதால் துளிகூட அருவருப்பு இருக்காது எங்களுக்கு!

இப்படி இலைக்கூடையைக் கொண்டுபோய் கொட்டிய கையோடு, காவிரியில் குளித்துவிட்டு தயாராக வந்து நிற்க வேண்டும், அடுத்த பந்தியின் இலையை எடுப்பதற்கு!

சங்கர மடத்துக்கு இணையாக விசேஷ நாட்களில் தெய்வப்பெருமாள் நல்லூர் அன்னதான சிவன் என்பவரும் தனியாக அன்னதானம் செய்வார். இத்தனைக்கும் சாதாரண சமையல்காரர்தான். அதென்னவோ அவருக்குள் ஒரு வெறி. தானே கடை கடையாக ஏறி இறங்கி, வியாபாரிகளிடம் மன்றாடி அரிசி, பருப்பு என்று தானம் வாங்கி வந்து ஏழைகளுக்கு அன்னதானம் நடத்துவார்.

‘மடத்துக்குப் போட்டியாக அவர் அப்படிச் செய்கிறார்’ என்று ஒரு தரப்பினர் பேசிக்கொண்டாலும், மஹா பெரியவருக்கு இதில் சந்தோஷம்தான். தன்னை தரிசிப்பதற்கு அன்னதான சிவன் வரும்போது, சிரித்துக் கொண்டே, ‘என்ன சிவன், இன்னிக்கு எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டாய் ?’ என்று பெரியவர் கேட்பார்.

‘இன்னிக்கும் நிறையப் பேருக்குப் போட்டேன்!’ என்று சிவனும் பெருமையாகவும் மகிழ்ச்சியுடனும் சொல்வார். (இந்த அன்னதான சிவன் பேரிலேயே பெரிய கமிட்டி போட்டு, பல பெரிய மனிதர்கள் சேர்ந்து ‘டிரஸ்ட்’ டாகத் தொடர்ந்து அன்னதானப் பணியைச் செய்துகொண்டு இருந்தார்கள். அந்த ‘டிரஸ்ட்’ இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை).

இந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது. திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று. ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை. வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.

‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது. வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்!’ என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.

இடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய், மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம். இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.

காஞ்சிக்குப் போனேன். பெரியவரை தரிசனம் செய்தேன். என் மனசு கலக்கத்தைப் பட்டும்படாமல் அவரிடம் சொன்னேன்.

எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘சரி! இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம். இங்கேயே தூங்குங்கள். நாளை போய்க் கொள்ளலாம்!’ என்று என்னிடம் காஞ்சிப் பெரியவர் சொல்ல…. கட்டிக்கொள்ள மாற்றுத்துணிக்கூட எங்களிடம் இல்லையே என்ற வேதனைக் குமுறலுடன் அன்று காஞ்சி மடத்திலேயே தூங்கினோம். பகவான் பாதத்தில் படுத்திருக்கிறபோது மனம் துக்கங்களை மறந்திருப்பதால், தூக்கம் நன்றாக வந்தது.

காலையில் எழுந்து குளித்துப் பெரியவரைத் தரிசனம் செய்யப் போய் நின்றோம். புது வேட்டியும், புதுப் புடவையும் எடுத்து வரச் சொல்லி, அதை எங்களிடம் கொடுத்து உடுத்திக்கொண்டு வரச் சொன்னார்.

உடுத்திக்கொண்டு போய் நமஸ்கரித்ததும், எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார். ‘போ! எல்லாம் சரியாயிடும்! ‘ என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார். என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது. ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம். தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது. வெற்றி நிச்சயம் கிடைக்கும்’ என்ற உறுதி பிறந்தது.

அன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது. கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு, மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர். அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது.

அதன் பின் மாதா மாதம் முதல் தேதியன்று மடத்துக்குப் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன். ஒரு முதல் தேதியன்று அப்படிப்போய் நமஸ்கரித்தபோது, ‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’ என்றார் பெரியவர்.

வீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து பார்த்தும் சல்லிக்காசு இல்லை. என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன். காதில் தோடு தெரிந்தது. அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது) கொண்டு போனேன். பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……

‘என்ன…. லட்டு செய்ய முடிஞ்சுதா? ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே!’ என்றார் மெலிதான புன்னகையுடன்.

என்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே…. அதுவே போதும்’ என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்) அன்று லட்டு செய்து கொண்டு போவதை நானே வழக்கமாக்கிக் கொண்டேன். லட்டுகள் நூறு ஐந்நூறு ஆனது….ஐந்நூறு ஆயிரம் ஆனது… இன்று எங்கள் குடும்பம் முழுவதும் மே மாதத்தில் பெரியவர் ஜெயந்தி வந்தால், அந்தப் புனிதமான நாளில் லட்டு செய்ய காஞ்சிபுரம் கிளம்பிவிடும்.

Jaya Jaya Shankara, Hara Hara Shanka

Read more: http://periva.proboards.com/thread/3826/laddus-on-perivas-jayanthi#ixzz3YiqFECSan

Source………..www.periva.proboards.com

natarajan

Message For the Day…” When you Develop Faith in Divinity, You will ensure Unity…”

Chant the name of God day in and day out. That alone will protect you at all times. Just as air is all pervasive, God is present in you, with you, around you, below you, above you. Hence, be in constant communion with Divinity. When you develop faith in Divinity, you will naturally have unity. Consequently, there will be no scope for enmity. You need not perform any rituals in order to win the grace of God. It is enough if you donamasmarana (chant the Divine Name) from the depth of your heart.Hari Bhajana bina sukha shanti nahi… (You cannot attain peace and happiness without singing the glory of God). If you incessantly chant the divine name ‘Rama’, no harm can ever befall you. Do not fritter away this opportunity but put it to the best use. Remember that God is always with you wherever you are.

Sathya Sai Baba

Incredible Images of Macro Photography ….

A Tiny Wonderland in the Backyard

While studying for a degree in neuroscience, Nadav Bagim (A.K.A. Aimishboy) went through a period of introspection. He wasn’t sure whether he wanted to continue with his studies, leaving him in somewhat of an existential impasse. When his father gave him an SLR-like camera, Nadav’s life went in an entirely different direction.

Nadav taught himself how to use the camera and became fascinated with macro photography. He says that he only uses Photoshop to perform minor tweaks in his images and that his tiny models do the real work.

The Celestial Conductor 

Tiny Photoshoot

Moon River

Tiny Photoshoot

The Offering

Tiny Photoshoot

Life Inside a Snowglobe

Tiny Photoshoot

Swirling

Tiny Photoshoot

Winged Shadows

temp

Piggy-Back Ride

temp

Tickle Me

Tiny Photoshoot

Hey There!

Tiny Photoshoot

Waiting for the Princess

temp

Sunrise Friends

Tiny Photoshoot

Make Slime, Not War

Tiny Photoshoot

Source….www.ba-bamail.com

Natarajan

Message For the Day…” Sufferings and Travails of this world are Illusory and Transitory…”

If the world is real, it must be cognized even during the stage of dreamless deep sleep, but we are not conscious of the world during sleep. Hence, the visible world is as unreal as the dream world. The Universe is a reflection of the Divine (Brahman). The sky might be reflected in a pot of toddy but that does not defile it. Similarly, in this vehicle called body, the Atma dwells pure and undefiled. The fruits of action, good or bad, adhere to the vehicle and not to the indweller. When such wisdom dawns, the dark shadows of the three types of Karma flee before it (The three being Sanchita – the entire accumulated Karma; Prarabdha – the Karma whose effects we undergo in the present andAagami – the Karma we perform now whose results will be felt in the future). The suffering and travails of this world are illusory and transitory. Fix your mind firmly on this great fact and set out bravely on the path of spiritual practice, the practice of devotion.

Sathya Sai Baba

Message For the Day….” Is there a Way to Escape from ‘karma’…” ?

Scholars say, it is impossible to escape karma. What they say is true to a certain extent. Now, you may wonder if there is a way to escape from the consequences of karma. Yes, it is possible for everyone, if they ‘earn’ the grace of God. Once you deserve and receive God’s grace, you will not be affected by karmaphala (consequences ofKarma). Hence, strive to earn divine grace. When you earn Divine grace, even if you have to experience the consequences of karma,you will not feel the pain. Consider the example of a bottle with medicine. The medicine will have an expiry date. After the expiry date, the medicine will lose its potency. Likewise, God’s grace will make the karmaphala ‘expire’, and nullify the effects of karma. The most important aspect here is to ‘deserve’ His Grace. You must cultivate necessary strength and willpower to deserve divine grace, and be free from the shackles of karma.   

Sathya Sai Baba

படித்து வியந்தது ….”தெய்வத்தின் நிழல் ரா.கணபதி”….

1935 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் பிறந்து 2012ஆம் வருடம் பிப்ரவரியில் சிவராத்திரியன்று மஹா பெரியவருடன் சங்கமமான ரா.கணபதியைப் பார்த்தால் 35 புத்தகங்கள்

எழுதியவர் போல் தெரியாது. எலும்பும் தோலுமாய் இருப்பார். சிறு வயதில் பிடித்த காச நோயின் வடு இறுதிவரை இருந்தது. பேசிக்கொண்டே இருப்பார். திடீரென்று மெளனத்திற்குப் போய் விடுவார். அப்படி இருந்ததால் தான் அவர் எழுத்தும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். ஆரியாம்பாள் இறப்பின் போது சங்கரர் பட்ட துயரத்தை இவர் வர்ணித்ததை அறிஞர் அண்ணா ரொம்பப் பாராட்டினாராம். அவர் தாயாரும் அந்தச் சமயத்தில் மறைந்ததால் அவர் மன நிலையும் அப்படி இருந்ததாகச் சொன்னாராம்.

இடை இடையே கர்நாடக கீர்த்தனைகளையும் பஜனைப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

பெரியவர் கட்டளைப் படிதான் ஆதி சங்கரர் வரலாற்றையும் கணபதி எழுதினார். இவருடைய “ஜய ஜய சங்கர’ தொடர் கல்கியில் 1962ஆம் ஆண்டு வெளிவந்தது. 10 ஆண்டுகள் கல்கியில் பணிபுரிந்தார். mail நாளேட்டில் கொஞ்சம் காலம். 25 ஆண்டுகள் எந்தப் பத்திரிகையையும் சாராமல் எழுதினார். புட்டபர்த்தியில் தங்கலாம் என்று சென்ற போது ஸ்ரீ சாய் பாபா “”உன் வேலை இங்கே இல்லை. தெய்வத்தின் குரல் எழுது. அதுவே உன் பிறவிப் பணி” என்றாராம்.

பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், சத்ய சாய்பாபா பற்றி, ஸ்ரீ ராம கிருஷ்ணர் – ஸ்வாமி விவேகானந்தர், ஸ்ரீ சாரதா தேவி பற்றி, மீரா பாய், பகவான் ரமணர் பற்றி என்று பல மஹான்களைப் பற்றி அவர் எழுதியிருந்தாலும் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர் உபன்யாசங்களையும், சம்பாஷணைகளையும் தொகுத்து அவர் ஏழு புத்தகங்களாக வானதி பதிப்பகம் மூலம் கொண்டு வந்த “தெய்வத்தின் குரல்’ தான் அவர் எழுத்துக்களுக்கு மகுடம் போல் திகழ்கிறது. “தெய்வத்தின் குரல்’தொகுப்பிற்காக ரா.க. ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. காரணம் பெரியவர் ஒரு விஷயத்தை ஓர் இடத்தில் ஆரம்பிப்பார். வேறு இடத்தில் முடிப்பார். ஒவ்வொரு விஷயத்தையும் அலசும்போது முன்னர் விட்டுப் போன விளக்கங்களை வேறு இடத்தில் சொல்வார். கணபதி அனைத்தையும் செவிமடுத்துக் கேட்டு சந்தேகம் இருந்தால் வேறு புத்தகங்களையோ நபர்களையோ பார்த்துத் தெரிந்து கொண்டு அப்படியும் குழப்பம் இருந்தால் பெரியவரிடமே கேட்டு குறிப்பு எடுத்துக் கொள்வார். அதுவும் பெரியவரின் சம்பாஷணைப் பாணியிலேயே இவரும் குறிப்பு எடுத்து எழுதினார். அந்த நூல் “ஸ்ர்ண்ஸ்ரீங் ர்ச் ஞ்ர்க்’ என்று ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் (ஹிந்தியில் மூன்று தொகுப்புகள் வந்துள்ளன) மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் போன்றவர்கள் அந்த நூலை “ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி உபநிடதம்’ என்று புகழ்ந்திருக்கிறார்கள்.

மஹா பெரியவர் மிகச் சில சமயங்களில் ஆன்மீகம் தவிர இதர விஷயங்களைப் பேசியதும் உண்டு. அந்த நேரங்களில் ஹாஸ்ய நொடிகளும் உண்டு. அதிலும் பலப் பல விஷயங்கள் வெளி வரும் என்பார் கணபதி. அவரே பெரியவரை சமயம் வாய்த்தபோது ஒருமுறை “”ஏன் உங்களை பெரியவான்னு கூப்பிடறா” என்று கேட்டாராம். அவர் நமுட்டுச் சிரிப்புடன் “”பெரிய வாய். ஓயாம பேசறேன் இல்லயா, அதனாலோ என்னவோ” என்றாராம். “”இல்லை. மஹா வாக்கியங்களை உபதேசம் பண்ற வாய்”என்றார் இவர்.

“”சரி அப்ப ஏன் பெரியவாள்னு சொல்றா” என்று பீடாதிபதி கேட்டதற்கு “”எங்க காம க்ரோதத்தை நீங்க வாளால் அறுத்து எரியறதாலே” என்று சட்டென்று கணபதி சொன்னாராம். தான் சார்ந்துள்ள “காமகோடி’ என்கிற பீடத்திற்கான பெயர்ப் பொருத்தத்தைப் பெரியவர் ஒருமுறை சொன்னாராம். “”காமகோடின்னா தர்மார்த்த காமகோடின்னுஅர்த்தம். காமத்தின் கோடியிலே என்ன இருக்கும்? மோஷம்”என்றாராம்.

ரா.கணபதியின் “மைத்ரீம் பஜத’ புத்தகத்திலிருந்து மஹா பெரியவர் சம்பந்தமான ஒரு சம்பவம்: சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் ஸ்ரீ மஹா பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். ஒரு சின்ன பெண் ஸ்ரீ ராம ஜயம் எழுதிய நோட்டு கொடுத்து வெள்ளிக் காசு பெரியவரிடம் கேட்டது. அப்போது ஒரு லட்சம் நாமம் எழுதினால் தங்கக் காசும் 12,500 எழுதினால் வெள்ளிக் காசும் பெரியவர் தந்த சமயம். வெள்ளிக் காசு கேட்டவுடன் மலர்ந்த முகத்துடன் நோட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுத்து அனுப்பினார். சற்று நேரத்திலேயே கண்ணைக் கசக்கிக் கொண்டு அவள் திரும்ப இவரிடம் வந்து நின்றாள். “”காசு எங்கேயோ தொலைந்து போய்விட்டது” என்று அழுதாள்.

“”நீ எவ்வளவு எழுதினாய்” என்று பெரியவர் கேட்டார்.

“”8,500 நாமம் எழுதினேன்”.

“”பின்னே ஏன் 12,500 எழுதினது போல் வெள்ளிக் காசு கேட்டாய்?”

“”பொய் சொன்னேன்”.

“”அது தப்பு இல்லயா, அப்படிச் செய்யலாமா?”

என்று அவளைக் கேட்டவர் அங்கிருந்த பக்தர்களைக் கேட்டார்.

“”இந்தச் சிறுமி பாவம் அறியாமல் 12,500 ராம நாமாக்களுக்குப் பதில் 8,500 நாமா எழுதியுள்ளது.  இன்னொரு 4,000 நாமா குறைகிறது. நீங்க எழுதி சரி செய்ய முடியுமா”?

அங்கேயே கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் தாளும் எழுது கோலும் வழங்கப்பட்டன. 4000 பூர்த்தியானதும் அந்தச் சிறுமியிடம் அவர் சொன்னார்:

“”நீ 8500 தான் எழுதினதா நிஜத்தைச் சொன்னதால இவங்களை வெச்சு மீதியை எழுதிட்டேன். கணக்கு சரியாப் போயிடுத்து. வெள்ளிக் காசு தரலாம்னாலும் நீ உண்மையைச் சொன்னதுக்கு உனக்கு தங்கக் காசே தரேன்” என்று தங்கம் எடுத்துக் கொடுத்தார்.

என்ன அற்புதமான பேரம் பாருங்கள். சிறுமி செய்த தவறுக்குப் பரிகாரமாக 4000 நாமம் எழுதும் புண்ணியம் பக்தர்களுக்கு. தவறை ஒப்புக் கொண்டதால் சிறுமிக்கு வெள்ளிக்குப் பதில் தங்கக் காசு கருணா சாகரம் என்று இதனால் தான் அவருக்குப் பெயரோ?

“கருணைக் கடலில் சில அலைகள்’ என்ற அவர் புத்தகத்திலிருந்து இன்னொரு சம்பவம்: ஓர் இளைஞன் “”தான் படித்து இரண்டரை வருஷம் ஆகியும் வேலை கிடைக்கலை,

ஏழ்மையான குடும்பம், சகோதரி வேறு கல்யாணத்திற்கு நிற்கிறாள், எல்லோரும் அவனை  “தண்டச் சோறு’ என்று திட்டுகிறார்கள்” என்று சொல்லி அவரிடம் அழுதான்.

அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு தன் முக்கிய பணிகளை அவர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளராக இருந்த ஓர் அதிகாரி தரிசனத்திற்கு வந்தார். அவரிடம்

மஹா பெரியவர் தன் துறவுக் கோலைச்சுட்டிக் காட்டி “”இந்த தண்டத்துக்கு ஒரு வேலை போட்டுத் தருவீங்களா” என்று கேட்க அவர் அதிர்கிறார். “”ரெண்டரை வருஷம் ஆச்சாம். வேலை கிடைக்கலையாம். படிச்ச பையன். ஏழ்மையான குடும்பம். ஒரு வேலை கிடைக்குமா? எல்லாரும் அவனை தண்டம்னு திட்டறாங்களாம்”.

“”உத்தரவு பெரியவா”.

அந்த இளைஞனைக் கூப்பிட்டு அந்த சந்தோஷ செய்தியைச் சொல்லியபடி தன் துறவுக் கோலை சுவரில் சார்த்துகிறார். “”உம். ஒரு தண்டத்துக்கு வேலை கிடைச்சாச்சு.

இன்னொரு தண்டம் பார்த்துக் கொடுத்திருக்கு. தண்டம் தான் எங்களுக்கு ரக்ûக்ஷ. ப்ரஹ்மசாரிகளுக்கும் தண்டம் ரக்ûக்ஷ. ராஜ தண்டத்துக்கு அடங்கித் தான் நீதி, நியாயம்.

இந்த லோகத்திலே எதுவும் தண்டமில்லை” என்று திருவாய் மலர்ந்தருளினார் பெரியவர்.

ரா.கணபதியின் ஏழாவது “தெய்வத்தின் குரல்’ தொகுப்பை மஹா பெரியவர் பார்க்கவில்லை. அது வெளி வந்த ஆண்டு 2000. அதற்குப் பிறகு இரண்டு தொகுப்புகளுக்கு கணபதியிடம் விஷயம் இருந்ததாம். “ஆனால் என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. என்னாலே இனி எழுத முடியாது” என்று நிறுத்திக் கொண்டுவிட்டார். “”அது என்னவோ வந்து ஆட்டம் காட்டிட்டுப் போயிட்டா பெரியவா” என்று மஹாசுவாமிகளின் வாழ்க்கையைப் பற்றி முத்தாய்ப்பாய் சொல்கிறார் ரா.க.

ஆட்டம் போட்டது பெரியவர் மட்டுமா? ரா.கணபதியும் தான்.

source…..ஸ்ரீதர் சாமா in http://www.dinamani.com

Natarajan

Message for the Day…” Scripture [ shastra] is like a Mother; She does not Giveup…”

People yield to delusion and become one with the darkness caused by false values and attachment to the unreal, the ‘me’ and ‘mine’. But the scripture (Shastra) is like a mother; she does not give up. She persists and pursues; she reminds you of your goal so that you will be saved. The scriptures are to be considered as the cause of the awareness of the incomprehensible, immeasurable and inexpressible Brahman. The scriptures are numberless, and a lifetime is too short. Aspirants are plenty; doubts and hesitations are numerous; steadfastness is meager. As a result, no one can claim full mastery. But you need not drink the entire ocean to know its taste; one drop is enough. Similarly, it is impossible to understand all the contents of the scriptures. But it is enough to grasp the important lesson that it teaches and put it into practice. The lesson is: constant remembrance of the Divine.

Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது …”ஒன்றை இழக்காமல் மற்றொன்றை அடைய முடியாது …”!!!

ஒன்றை இழக்காமல், மற்றொன்றை அடைய முடியாது என்பர். இது தெரிந்திருந்தும், கையில் உள்ளதை இழக்க விரும்பாமலும், அதேசமயம் எதிர்பார்ப்பை விட முடியாமலும், மனித மனம் அல்லாடுகிறது. ஆனால், யாருக்கு எதை, எப்போது தர வேண்டும் என்பது கடவுளுக்கு தெரியும்.


வயது முதிர்ந்த ஒருவர், வாத நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அது, குணமாவதற்காக குருவாயூர் சென்று, 48 நாட்கள் விரதமிருப்பதாக வேண்டி, பக்தியோடு குருவாயூரப்பனை வழிபட்டு வந்தார்.
தினமும் மூன்று வேளை குளத்தில் குளிப்பதும், குருவாயூரப்பனைத் தரிசனம் செய்வதுமாக இருந்தார். அவ்வாறு அவர் குளத்தில் குளிக்கும்போது, தன் சேமிப்பு பணமான, 2,000 ரூபாயை ஒரு துணியில் மூட்டையாக கட்டி, கரையில் வைத்து விட்டுக் குளிப்பார்.
அவர், எட்டு வயது சிறுவனை தன் உதவிக்காக வைத்திருந்தார். அவன், இப்பெரியவரை அழைத்துச் சென்று குளிக்க வைத்து, சாமி தரிசனமும் செய்ய வைப்பான். அதற்காக, அவனுக்குச் சம்பளமும் உண்டு. அப்பையனும், தன் கடமைகளை ஒழுங்காக செய்து வந்தான்.
கடைசி நாளான, 48வது நாள், தன் பண மூட்டையைக் கரையில் வைத்து, சிறுவனைக் காவலுக்கு இருக்கச் செய்து, குளத்தில் மூழ்கினார் பெரியவர். அவர் மனதில் ஏமாற்ற உணர்ச்சி ஏற்பட்டு, ‘என்ன குருவாயூர் இது… ஒரு மண்டலமாக விரதம் இருந்து வழிபாடு செய்றேன்; துளிக்கூட முன்னேற்றம் இல்ல. சரியாக நடக்க கூட முடியலயே…’ என்று வெறுப்போடு மூழ்கி எழுந்தார்.
அதே நேரம், கரையில் பண மூட்டைக்குக் காவலாக இருந்த பையன், பண மூட்டையை தூக்கியபடி ஓடத் துவங்கினான்.

டேய்… திருடன் திருடன்…’ என்று கத்தியவாறு, அவனைத் துரத்தினார் முதியவர்.
பையன் ஓட, பின்னாலேயே முதியவர் ஓட, இருவருமாக மூன்று முறை கோவிலை வலம் வந்தனர். அதன்பின், கோவிலுக்குள் நுழைந்து, கொடிமரத்தைக் கடந்து, கருவறைக்குள் மறைந்த சிறுவன், குருவாயூரப்பனாக தரிசனம் தந்தார்.
திகைத்துப் போன முதியவர், ‘குருவாயூரப்பா… என்ன நியாயம் இது… என் வாத நோயையும் குணமாக்கல; பணத்தையும் கொள்ளையடிச் சுட்டீங்களே..’ என்று கண்ணீர் விட்டார்.
உடனே, குருவாயூரப்பன், ‘பக்தா… உன் நோயை தீர்க்கவில்லை என்றால், நீ, எப்படி இவ்வளவு தூரம் என்னைத் துரத்தி ஓடி வந்திருக்க முடியும்…’ என்றார்.
முதியவருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. தன் வாதநோய் குணமாகி, கால்கள் நன்றாக இருப்பதை உணர்ந்தார். ஆனாலும், தன் பண மூட்டை போனது வருத்தத்தை கொடுத்ததால், ‘பகவானே… என் கால்கள் குணமாகி விட்டது; ஆனால், என் பணம் போய் விட்டதே…’ என்றார்.
‘நீ ரோகம் போய், ஆரோக்கியம் வேண்டுமென்று கேட்டாய்; ஆரோக்கியம் கொடுத்தேன். உன்னைப் போலவே, ஓர் ஏழை, தன் மகள் திருமணத்திற்குப் பணம் வேண்டுமென்று, என்னை வேண்டிக் காத்திருந்தான். உன் பணத்தை, அவனிடம் கொடுத்தேன்…’ என்றார் பகவான். உண்மையை உணர்ந்தார் முதியவர்.
இறைவனுக்குத் தெரியும். யாருக்கு, எப்போது, எதைக் கொடுக்க வேண்டுமோ, அப்போது அதைக் கொடுப்பார். அதனால், இறைவனை நினைப்போம்; இன்னல்கள் விலகி, சுகமாக இருப்போம்!
திருமந்திரம்!
சன் மார்க்கச் சற்குரு சந்நிதி பொய்வரின்
நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது
தொன் மார்க்கம் மாய துறையும் மறந்திட்டுப்
பன் மார்க்கமும் கெட்டுப் பஞ்சமும் ஆமே
கருத்து: ஞானத்தைப் போதிக்கும் சத்குருவின் முன் பொய் சொல்லக் கூடாது. சொன்னால், அதுவரை, குருநாதர் காட்டிய நல்வழியெல்லாம் குன்றி, ஞானமும் தங்காது. குருவை அடைவதற்கு முன், ஏதேனும் நல்வழியை அறிந்திருந்தாலும், அதுவும் மறைந்து விடும். வழி தெரியாமல், பல திசைகளிலும் திகைப்பே மிஞ்சும். வறுமை, தானே வந்து சேரும்.

Source…..பி.என்.பரசுராமன்  in http://www.dinamalar.com

Natarajan