Joke For The Day…One More!!!

The National Game warden put out a warning to all hikers in his area. Warning that they should wear small bells on their boots so not to startle the bears. To distinguish the grizzly bear the notice read– small bears droppings are small with nut and berries in it. Grizzly bear droppings are much larger with nuts and berries and little tiny bells in it.

Source:::: joke a day.com

Natarajan

” வில்லேந்திய வேலன் …” !!!

வில்லேந்தியவன் வேலன்…

Muruga with Bow

Murugn with Bow Villudayanpatti

 

ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயத்தில் மே மாதம் (வைகாசி விசாகம் முருகன் சிறப்பிதழ்) வெளி வந்த ‘வில்லேந்தியவன் வேலனா? இராமனா? என்ற மிகச் சுவையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாலதி ஜெயராமன்.

வில்லேந்தியவன் வேலனா? இராமனா?
(திருமதி உமா பாலசுப்பிரமணியன்)

“சூலம், வாள், தண்டாயுதம், செவ்விய வேல், கோதண்டம் (வில்) இவைகளை அணிந்துள்ள தோள்களையும் அகன்ற அழகிய திருமார்பையும், தூய்மையுள்ள தாளில் அமைந்துள்ள தண்டையையும் நான் காணும்படி, அன்பு கொண்டுள்ள மயிலின் மீது ஏறி என் முன்னே வந்து திருவருள் புரிய வேண்டும்” என்று திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரிநாதர் வேண்டுகிறார்.இப்பாடலிலிருந்து முருகன் கையில் கோதண்டம் இருக்கிறது என்று தெரிகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் மூத்த புலவராக இருந்த நக்கீரரும், திருமுருகாற்றுப் படையில் “வானோர் வணங்கும் வில் தானைத் தலைவா” எனப்
பாடியிருக்கிறார்.

இராமன் என்றாலே வில்லுடன் கூடிய கோதண்ட ராமன்தான் எல்லோர் நினைவுக்கும் வரும்.ஆனால் மேற்கண்ட பாடல்களிலிருந்து முருகனும் வில்லைப் பிடித்தவனாக வில்லேந்திய வேலவனாக விளங்குகிறானே! என்று வியக்கத் தோன்றுகிறது.

வேலவன் வில் ஏந்தியது ஏன்?

முருகன் எப்பொழுது வில்லை ஏந்தினான்? இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மனதில் எழுகின்றன. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் “சுப்பிரமண்ய பராக்ரமம்” என்ற பழம் தமிழ் நூலில், முருகன் வில்லேந்திய காரணம் சுவையாகக் கூறப்பட்டிருக்கிறது.

கங்கையாற்றின் கரையில் ‘சிருங்கிபேரி புரம்’ என்ற ஒரு ஊர். அங்கு வசித்து வந்த வேடர்களின் தலைவன் குகன் ஆவான்.

உருவிலும் உடையிலும், தொழிலிலும், உணவிலும் மென்மை என்பதே அறியாத குகன், அயோத்தியிலிருந்தே சக்ரவர்த்தித் திருமகனான மென்மையான இராமனிடம், அளவு கடந்த அன்பு கொண்டிருந்தான்.

தந்தைக்கு மரியாதை அளித்து, தாய் சொல்லைத் தட்டாது, வனவாசம் செல்லக் காடுகளைக் கடந்து, கங்கையைக் கடக்கும் தருவாயில், இராமனும் வேட்டுவத்தலைவன் குகனும் சந்திக்க நேர்ந்தது.

மறு நாள் கங்கையைக் கடக்க நாவாய் எடுத்து வரச் சொன்னபோது வருத்தமுற்று, இராமனிடம் தான் வைத்திருந்த அன்பினை அழகாக வெளிப்படுத்தினான்.

குகன் சொல்கிறான், “காளத்தி அப்பனது இன்னல் கண்டு, தன் கண்களையே எடுத்து அப்பினான் என் தொல்குல முன்னொருவன். யான் அவ்வாறு செய்ய முடியாத கள்வனாக இருக்கிறேன். ஆதலால் என்னை மிக வெறுத்து நீ அகற்றுகின்றனை போலும்? ஐயனே! இவ்வாறு செய்யலாகாது. கண்ணிடத்து அப்பவல்லன் அல்லேன் ஆயினும், என்னாலான அடிமையைச் செய்யப் பணிந்தருள். நானும் உன்னோடே வருகிறேன்” என்று சொல்ல இராமபிரானும் தன் அருகிலிருந்த சீதைக்கும் தன் தம்பிக்கும் தன் பால் குகன் வைத்திருந்த தீராக் காதலை எடுத்துரைத்தான்.

பின், “என் உயிர் போன்றவன் நீ. என் தம்பி, உனக்குத் தம்பி. இந்தச் சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழ்ந்த இடமெல்லாம் உன்னுடையது. நான் உனக்குத் தொழில் செய்யும் உரிமையுடையேன். இனி, நாம் ஐவரானோம்” என்று சமாதானம் கூறி கங்கையைக் கடந்து சென்றான்.

இதற்குப் பிறகு ஆண்டுகள் பல சென்றன. வேடர் தலைவனுக்கோ இராமனைப் பற்றிய தகவல் ஒன்றும் தெரியவில்லை தெற்கே சென்றவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், என்றெல்லாம் தெரிந்து கொள்ள வழியும் இல்லை. குறித்த காலம் வந்துவிட்டதா? இல்லையா எனக் கூடத் தெரியாத நிலை.இதே நினைவாக, இதனையே சிந்தனை செய்து அன்ன ஆகாரம் இன்றி உடல் மெலிந்து உள்ளம் நைந்து உருகி நின்றான் குகன்.

குகனின் துயர் தீர்த்த குமரன்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குகன் படும் துயர் தீர்க்க அவன் வழிபட்டு வந்த கடவுளாகிய முருகப் பெருமான், ஒரு திட்டம் தீட்டினான். தன் மனைவியரான வள்ளியை சீதையாக மாற்றி, தெய்வயானையை லட்சுமணனாக ஆக்கி, வேல் ஏந்திய கையில் வில்லை ஏந்தி, தாமே இராமன் உரு ஏற்று, குகன் கனவில் தோன்றி, “தம்பி, கவலைப்படாதே.
எங்களுக்குக் குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் இருக்கிறது. விரைவில் திரும்பி விடுவோம். கவலையை விடு” எனச் சொல்லி மறைந்து விடுகிறான். குகனும் அன்று முதல் தேறி வந்து இராமன் வருகைக்காகக் காத்திருந்தான்.

ஆனந்தத்தை அருளிய அந்த குகன், அன்று முதல் குகஸ்வாமி மூர்த்தி என்றும், ஆனந்த நாயக மூர்த்தி என்றும் பெயர் பெறுகின்றான். இந்த வரலாற்றைத் திருச்செந்தூர் புராணமும் கூறுகிறது.

சுந்தரச் சிலை யிராமன் தோற்றமும் காட்டி ஞான
முந்திய பிரம்மானந்த சித்தியும் கொடுத்து வேத
மந்திரக் குகஸ்வாமி என்னவும் வாய்ந்தது பேர்
ஆனந்த நாயகன் என்று ஓது நாமமும் குமரன் பெற்றான்.

வில்லேந்திய வேலனை இங்கும் காணலாம்

வில்லேந்திய வேலனை, திருவையாற்றில், ஐயாரப்பன் சன்னதியில் மூல ஸ்தானத்திலேயே தரிசிக்கலாம். வில்லுடையான் பட்டியில் வில்லேந்திய வேலனின் விசேஷ சன்னதி உள்ளது. திருவெண்காட்டை அடுத்த சாய்காட்டில் நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் (வில்லுடன்) வில்லேந்திய வேலன் செப்பு உருவில் திகழ்கிறான். இந்த வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும் பின்னர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளி வந்தான் என்றும் கூறப்படுகிறது.

போர்க்காலத்தில் வில்லேந்தி ஒய்யாரமாக நிற்கும் முருகனை திருப்போரூருக்குச் சென்றால் காணலாம். பிரகாரத்தின் ஒரு கோடியில் மிக கம்பீரமான அழகிய செப்பு வடிவம், ஒரு காலைத் தரையிலும் ஒரு காலை மயிலின் முதுகிலும் ஊன்றி உடல் வளைத்து நிற்பதில் சேனாபதியின் மிடுக்கு தெரிகிறது.

வீரவேல் முருகனுக்கும் வெற்றி வில் இராமனுக்கும் உரியவைகளாயின.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

இக்கட்டுரையை எழுதிய திருமதி உமா பாலசுப்பிரமணியன் அவர்கள் தன் தந்தையார் வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ அவர்களைப் போலவே இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் மிக்கவர். இவர் சென்னையில் பல இடங்களில் திருப்புகழ் பயிற்றுவிக்கிறார். திருப்புகழ் இசைப் பேருரைகள் நிகழ்த்துகிறார். இவர் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகள் பல தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. சிறந்த சமூக ஆர்வலர்.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

நன்றி: ஞான ஆலயம்  …. Thro Murugan Bhakti SITE

Natarajan

Has God Used a Magic Brush to Paint these Birds and Creatures !!!

 

Wow, these animals are a testament to the beauty nature creates, with their many beautiful colors that somehow always go together, these are just stunning creatures. God must have used his best paint brush for these, to make them come out so darn beautiful.
1. Indian Peacock
colorful animals
Where you can find them: Eastern Pakistan through India, south from the Himalayas to Sri Lanka.
 

2. Gouldian Finch

colorful animals
Where you can find them: Northern Australia
 

3. Painted Bunting

colorful animals
Where you can find them: Southern U.S., Central America
 

4. The Chameleon

colorful animals
Where you can find them: Continental Africa, Madagascar, southern Europe, south Asia. They have also been introduced to Hawaii, California, and Florida.
 

5. Southern Red Bishop

colorful animals
Where you can find them: Southern Africa
 

6. Southern Crowned Pigeon

colorful animals
Where you can find them: Southern New Guinea

7. Red and Yellow Barbet
colorful animals
Where you can find them: Eastern Africa

8. Grey Crowned Crane 
colorful animals
Where you can find them: Sub-Saharan Africa
 

9. Common Kingfisher

colorful animals
Where you can find them: Europe, Asia, North Africa
 

10. Mandarin Dragonet

colorful animals
Where you can find them: Pacific Ocean, from the Ryukyu Islands south to Australia.
 

11. Poison Dart Frogs

colorful animals     frog
Where you can find them: Central and South America
 

12. Sunset Moth

colorful animals
Where you can find them: Madagascar
 

13. Rainbow Lorikeet

colorful animals
Where you can find them: Australia, eastern Indonesia, Papua New Guinea, New Caledonia, New Zealand, Hong Kong
 

14. Golden Pheasant

colorful animals
Where you can find them: Western China, United Kingdom
 

15. Keel-Billed Toucan

colorful animals
Where you can find them: Southern Mexico to Venezuela and Colombia
 

16. Mandrill

colorful animals
Where you can find them: Southern Cameroon, Gabon, Equatorial Guinea, Congo
 

17. Nicobar Pigeon

colorful animals
Where you can find them: Nicobar Islands, Malay Archipelago, Solomon Islands, Palau
 

18. California Red-Sided Garter Snake

colorful animals
Where you can find them: California (above pattern found in Marin County)
 

19. Lilac-Breasted Roller

colorful animals
Where you can find them: Sub-Saharan Africa, southern Arabian peninsula
 

20. Leafy Seadragon

colorful animals
Where you can find them: Along the southern and western coasts of Australia

21. Velvet-Purple Coronet 
colorful animals
Where you can find them: West Andean slope in western Colombia and north-western Ecuador

22. Mandarin Duck
colorful animals
Where you can find them: Eastern Asia, Great Britain, Berlin, isolated areas of the U.S. (North Carolina and California)

Source: Claudia. G in ba-ba mail site

Natarajan

Joke of the Day …

A drunk phoned the police to report that thieves had broken in to his car.
“They’ve stolen the dashboard, steering wheel, break pedal, even the accelerator,” he cried out.

However, before the police investigation could get under way the phone rang a second time, with the same voice came over the line. “Never mind,” said

the drunk with a hiccup, “I got in the backseat by mistake.”

 

source::::ba-ba mail site

Natarajan

Stunning Art Pieces out of Wooden Logs !!!

 

These Wooden Logs Got New Life As Stunning Art.

I absolutely love wood carving. It is one of the most ancient art forms and it’s always beautiful to my eyes. The organic nature of the material seems to ebb into the flow of statues, creating beings that seem like they are just about to move. These gorgeous works of art are a true testament to the skill and patience of these amateur yet talented artists.
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art
wood art

Source: Lara R.  in ba-ba mail site

Natarajan

2014 FIFA World Cup… Impact on the Event at Host Country …

 

The Fifa World Cup is under way and so far the games have been unpredictable and exciting. But what does it take for a country to host this world class tournament, how big of an event is it anyway? Well, these numbers will give you a clue as to how huge an event the Fifa World Cup really is…
world cup 2014 infographic

Source: Frederick T.  in ba-ba mail site

Natarajan

படித்ததில் பிடித்தது …” மறக்க முடியாத வாரியார் வாக்கு …”

விபுதி மணம்

வாரியாரின் நகைச்சுவை பொதிந்த சொற்ப்பொழிவுகள், கருத்துக்கள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பவை.அப்படிப்பட்ட வாரியாரின் கருத்துக்கள் கொஞ்சம் இங்கே உங்கள் பார்வைக்கு.

‘கம்’ முனு இரு: “கம்முனு சும்மா ஒரு. எல்லாம் தானே நடக்கும்” என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. உண்மையில் “கம்” எனபது

விநாயகரின் பீஜ மந்திரம். “ஓம் கம் கணேசாய நம” எனபதாகும். ‘கம்’ என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்ப்தே இதன் பொருள்.

உலாவ இடமா இல்லை : “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” என்று பாடினார் பாரதியார். அங்கு ஏன் உலாவ வேண்டும்? உலாவ பீச்,பார்க் என்று எத்தனையோ இடம் இருக்கிறதே? அங்கெல்லாம் உலாவுவோம் என்று ஏன் எழுதவில்லை. காரணம், பாரத தேசத்தின் அந்தப்புற எல்லையாக இருக்கிறது பனிமலை. அங்கே இருப்பவர்கள், நாட்டை காக்கும் இராணுவ வீரர்கள். அவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால், பகைவர்கள் நுழைந்து விடுவார்களே.அதனால்தான் வெள்ளிப் பனி மலையில் உலாவிக் கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் பாரதி இப்படி பாடினான்.

வேறுபாடு இல்லா பெண் உலகம் : எல்லா வேறுபாடுகளும் ஆண் உலகிலேயே காணப்படுகின்றன. பெண் உலகுக்கு இந்த வேறுபாடுகள் கிடையாது. ஐயர்,செட்டியார்,நாயுடு, முதலியார் முதலிய ஜாதிப் பெயர்கள் எல்லாம் ஆணின் பெயரை ஒட்டியே வருகின்றன. பெண் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மீனாட்சி அம்மாள், காமாட்சி அம்மாள் என்றுதானே வழங்குகின்றன.

அதிகம் எது? : பாண்டவர்கள் ஐந்து பேர். கவுரவர்கள் நூறு பேர். அந்த காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேரும், கெட்டவர்கள் நூறு பேரும் ஆக இருந்தார்கள். இப்போது கேட்கவா வேண்டும்?

கள் தேவை : கள்ளை குடித்தால்தான் போதை எனபது இல்லை. ‘கள்’ என்று சொன்னாலே பலர் மயங்கி விடுகிறார்கள். “நீ” என்பதற்க்கு பதில் நீங்’கள்’ என்று சொல்லிப்பாருங்கள். எல்லாம் அந்த ‘கள்’ செய்யும் வேலைதான்.

சினிமா: இப்போதைய சினிமாக்களை (கவனியுங்க!) பணம் பண்ணும் சாதனமாக ஆக்கிவிட்டார்கள். சினிமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை இந்த சினிமாக்காரர்கள் சொல்லாமே? ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? நான் ஆயிரம் சொற்பொழிவு நடத்துவதும் சரி, ஒரு நல்ல சினிமா வருவதும் சரி. பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் சமுதாயத்தையும் உருப்படவிடுங்கள்.

பதவி அலைச்சல்: ராமபிரான், ஆட்சியே வேண்டாம் என்று, பெரிய பதவியை துறந்து தந்தை சொல்லைக் கேட்டு காட்டுக்கு போனார். ஆனால், இப்போது சிலர் பிள்ளையார் கோவில் அறங்காவலர் பதவிக்கே அலையாய் அலைகிறார்கள்.

சாமியார் பட்டம்: கலெக்டரிடம் சினேகம் பண்ணுபவனுக்கு மக்கள் மதிப்பு கொடுக்கிறார்கள் அதுபோல, கடவுளிடம் பழகுபவனுக்கும் மக்கள் மதிப்பு கொடுக்கிறார்கள்.ஆனால், தினமும் விபுதி கொடுப்பவனையே சாமியார் ஆக்கி விடுகிறார்களே!.

நாத்திகவாதிகள் வாழ்க: இறைவனை எதிர்த்து பேசி வருவதால், இறைவனின் புகழ் மேலும் வளரும். ஆதலால், இறைவனை எதிர்ப்பவரும் இறைத்தொண்டுதான் செய்கின்றனர். குடையை விரித்து யாரும் சூரியனை மறைத்து விட முடியாது.

கோவில் எதற்கு? : இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், கோவிலில் உள்ள திரு உருவத்தில் விளங்கித் தோன்றுகின்றான். பசுவின் உடம்பில் பாலைப் பெற முயற்சி செய்கின்ற ஒருவன், பசுவின் கொம்பையோ, காதுகளையோ,வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பசுவின் பால் பெற விரும்புவோன், பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப் பெற விரும்புவோன், கோவில் சென்று இறைவன் திருமுன் நின்று வழிப்பட்டு திருவருளைப் பெறுதல் வேண்டும்.

வாரியாரின் அர்த்தமிக்க, அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய வார்த்தை விளையாட்டுகள்தான் மக்களிடம் ஆன்மிகம் எளிதாக சென்றடைய காரணம் என்பது உங்களுக்கு விளங்குகிறது அல்லவா?

தன் குரலை வைத்து ‘மிமிக்ரி” செய்பவர்களை (செய்துவருபவர்களை) பற்றி வாரியார் பின்வருமாறு கூறி இருக்கிறார்.

“என் குரலை நிறைய பேர் “மிமிக்ரி” கிண்டல் பண்ணுகிறார்களே. அதை நான் கிண்டல் என்று சொல்லமாட்டேன். கஷ்டப்பட்டு பயிற்சி செய்து என்னைப் போலவே பேசுகின்றார்களே. அதை எண்ணி ஆச்சரியப்படுவேன். பேசினால் பேசட்டுமே. “முருகா,முருகா” என்று அவர்கள் சொல்லித்தானே ஆக வேண்டும். அது அவர்களுக்குப் புண்ணியம் அல்லவா?

– See more at: http://educationalservice.net/

Source::::Input from a friend of mine

Natarajan

 

படித்ததில் பிடித்தது ….” நமக்கு நாமே ” !!!

நமக்கு நாமே…..

ஒரு தவளைக் கூட்டத்திடையே ஒரு போட்டி ஏற்பாடாகியிருந்தது. அந்த ஊர்க் கோயில் கோபுரத்தின் உச்சியில் யார் முதலில் ஏறுகிறார்களோ அவர் தான் வெற்றி பெற்றவர். “நான்”, “நீ” என்று நூற்றுக்கணக்கான தவளைகள் “சோடா பாட்டில்” உற்சாகத்துடன் கலந்து கொள்ள வந்தன. சிறிது தூரத்திலேயே உற்சாகம் `புஸ்ஸென`ப் போய் பெரும்பான்மைத் தவளைகள் போட்டியிலிருந்து பின் வாங்கின. “இந்தக் கோபுரத்திலா? அதன் உச்சியிலா?” சலித்துக் கொண்டே விலகி விட்டன.

“எனக்கு அப்பவே தெரியும் ஒன்னால முடியாதுன்னு. என்ன மாதிரிப் பேசாம இருக்க வேண்டியது தானே? பெரிய வீறாப்பு எதுக்கு? வந்தோமா பேசாமப் போட்டிய பாத்தோமான்னு இருக்கறத விட்டுட்டு” விலகி வந்தவைகளைப் பார்வையாளர்கள் கிண்டல் செய்தன.

கோபுர அடி வாரம் வரை வந்தது நான்கைந்து தவளைகளே. அதிலும் முன்னேறி ஒன்றே ஒன்று மட்டும் கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல ஆரம்பித்தது.

“ஏய் பாத்து, பாத்து…. போட்டியில் ஜெயிக்காட்டிக் கூட பரவாயில்லை கீழே விழுந்தே அவ்வளவு தான், உயிரே போயிடும். இது தேவையான்னு யோசித்து அப்புறமா மேல ஏறு” அந்தத் தவளையையும் மற்ற பல தவளைகள் முயற்சியைக் கைவிடச் செய்யப் பார்த்தன.

அந்த `தனித்தவளை` எதையும் லட்சியம் செய்யாது தனது லட்சியத்தில் உறுதியாக நின்று விடா முயற்சியுடன் கோபுர உச்சிக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டி விட்டு வந்து விட்டது.

“எப்படி உன்னால் முடிந்தது?”

“எனக்கு அப்பவே தெரியும். நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய் என்று” பழித்த தவளைகள் வெற்றிக்குப் பின் அதைச் சுற்றி இப்போது நெருக்கம் கொண்டாடின.

“உன்னால் எப்படி முடிந்தது என்பதை எல்லோருக்கும் சொன்னாயானால் உனது வெற்றியின் ரகசியம் எது என்பதை விளக்கினால் எதிர்காலத்தில் அது எங்களைப் போன்ற முன்னேறத் துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்” உண்மையாகவே அக்கறை கொண்ட தவளைகள் அதனிடம் வந்தன.

“வேறு ஒரு ரகசியம் இல்லை. எனது காதுகளைப் பொத்திக் கொண்டேன். செவிடாகி விட்டேன்.” வெற்றித் தவளை சொன்னது.

“அப்படீன்னா”

“செவிடாக நடித்தேன். நீங்கள் சொல்வது எதுவும் காதில் விழாத மாதிரி எனது கொள்கையிலேயே உறுதியாக உச்சி வரை சென்றேன்.” காரணம் விளங்கியது.

ஒரு சிறிய தவளை வாழ்க்கையின் பல பரிமாணங்களை எடுத்துரைக்கிறது. குறிக்கோளை அடைய இடையூறுகள் பல வரலாம். இடையூறுகள் சூழ்நிலை, உற்றார் உறவினர்கள் என்று பல ரூபங்களிலிருந்தும் வரலாம். மற்றவர்கள் ஏளனம் செய்யலாம். அடைய முடியாது என்று குறிக்கோளிலிருந்து தடுக்கலாம். ஆனால் குறிக்கோளிலேயே குறியாக இருக்கும் ஒருவனுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டேயல்ல. இந்த ஏளனம், தடை இவையெல்லாம் `செவிடன் காதில் ஊதிய சங்கு’ போல் அவர்களை ஒன்றும் செய்யாது போய் விடும். வெற்றி பெறுவதில் உள்ள குறிக்கோள் அது மட்டுமே அவர்கள் எண்ணத்தில் நிற்கும்.

துரோணாச்சாரியார் எல்லோருக்கும் வைத்த அந்தப் போட்டியில் – மாமரத்தில் உள்ள கிளியின் கண்ணைக் குறி வைத்த அந்தப் போட்டியில் அர்ஜுனனிடம் மட்டும் இருந்த அந்த இலக்கு, அந்த ஒரு தெளிவு அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும். இதற்கு எதிரிடையாக இருந்தவர்கள் பின்பு வெற்றிக் கனியைப் பறித்தவுடன் சொந்தம் கொண்டாடி வருவதும் கண்கூடு. அவர்கள் நாக்கு தடம் புரண்டு போவதும் யதார்த்தம்.

இராமாயணத்தில் அனுமனது திறமையை அவ்வப்போது நினைவூட்டி ஊக்குவிக்க ஒரு ஜாம்பவான் இருந்தான். இக்கலியுகத்தில் அத்தகைய ஜாம்பவான்கள் கிடைப்பது மிக மிக அரிது. நமக்கு நாமே ஜாம்பவான்களாக இருப்பதே புத்திசாலித்தனம்.

– See more at: http://educationalservice.net/2014/June/

Source:::: Input from a friend of mine

Natarajan