Message For the Day…” Do Not Get Confused That You are Unique…”

There are four goals (Purusharthas) in the world that people aspire for. They are Righteousness (Dharma), Wealth (Artha), Desire (Kama) and Liberation (Moksha). Realising God is the worthiest and highest goal in life. When such God is seen, realised and a close relationship is established with Him, the happiness one enjoys then, that state of liberation, that principle of love has been called as devotion of the highest order (Parabhakthi). This devotion is liberation itself; it is attaining oneness with God. Liberation is the ability to look for unity in diversity, rather than calling out the obvious differences. Attaining Parabhakthi is not easy. It is definitely possible for those who yearn and work towards it. Do not get confused that you are unique and others are different. You will be in doubt if you miss the principle of unity in your daily lives. So long as there is doubt, you cannot realize the eternal truth.

Sathya Sai Baba

” இயற்கையை பேணி காக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இன்று…”

1

தூக்கம் களைந்து, திடுக்கிட்டு எழுந்தேன். மணி அதிகாலை 4:30. என்னடா இப்படி ஒரு கனவு? 2042 ஆம் ஆண்டில் இப்படியா இருக்கும்? காற்றை விலைக் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையா? நினைத்து பார்க்கவே பயமாக உள்ளதே.. புரண்டு புரண்டு படுத்து பார்த்தேன், தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் கொஞ்சம் நேரம் உலாவி விட்டு வரலாம் என்று தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் எடுத்து கொண்டு மாடிக்கு சென்றேன்.

தண்ணீரை சிறிது பருகிவிட்டு, தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலை பார்த்தேன். கனவில் வந்தது சரிதான், 10-20 வருடங்களுக்கு முன், சுழற்சி முறையில் (REVERSE OSMOSIS) சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையோ, பிளாஸ்டிக் பாட்டிலையோ பயண்படுத்தியது கிடையாது. ஆனாலும் இப்போது நோய்க்கிருமிகளும், வைரஸ்களும் அதிகமாகி கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. வாயில் நுழையாத பல நோய்களின் பேரையும் மாத்திரைகளையும் திணித்து கொண்டே இருக்கிறது மருத்துவ உலகம். எங்கும் இரசாயன மயம்.

வீடு அமைந்திருந்த தெருவில் வெட்டபடாமல் எஞ்சி இருந்த மரங்கள் வழக்கம் போல், மனிதர்களுக்கு சேவை செய்துக்கொண்டிருந்தன. மனிதன்  விழிக்கும்முன் எழுந்து விடும் உயிரினங்கள், தங்களுக்குள் மனம் விட்டு பேசிக்கொண்டு, சிறகடித்துக்கு கொண்டிருந்தன. அவைகளை கூர்ந்து கவனித்தேன். கனவின் பாதிப்பு சற்றும் குறையாது இருக்கவே, மீண்டும் சில சிந்தனை ஓட்டங்கள்..

சில வருடங்களில் பெரும்பாலான பறவை இனங்கள் அழிந்து போய்விடுமோ? கைப்பேசிகள் கிராமத்தில் கூட நம்மை கூவி எழுப்பும் நிரந்தர சேவல்கள் ஆகிவிடுமோ? விளை நிலங்கள் எல்லாம், விலைக்கு விற்கப்படும் நிலங்களாக மாறி வருகிறது. சைவர்களும், அசைவர்களும் ஓரிரு  தலைமுறைகளுக்கு பின் ஒன்றாகி விடுவார்களோ? வருங்காலத்தில் அனைவருக்கும் உணவு, மாத்திரையாக தான் இருக்கக்கூடுமோ? அறுசுவை விருந்து என்பது மறைந்து, அறுசுவை மருந்து என்று ஆகக் கூடிய சூழ்நிலை வருமோ? உணவே மருந்து என்ற நேற்றைய கூற்று பொய்யாகி, மருந்தே உணவு என்று நாளைய கூற்று ஆகிவிடுமோ?

2

 

சிறுவயதில் நாம் அனுபவித்த பல நல்ல விஷயங்களையும், கள  விளையாட்டுகளையும், ஆத்மார்த்தமான உணர்வுகளையும், உறவுகளையும் இந்த தலைமுறையினர் நம் கண்ணெதிரே இழந்து வருகின்றனர். எலேக்ட்ரானிக் உலகம், இந்த தலைமுறையினரை கபளீகரம் செய்து கொண்டிருக்கையில், அடுத்த தலைமுறைகள் மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு உறக்கம் போன்றவற்றைக் கூட இழந்து விடுவார்களோ?

அடுக்கடுக்காய் பல கேள்விகள். என்ன தான் பூவுலகில் நடக்கிறது? ஒரு சிறிய உதாரணம். இப்போது கூட நாம் வசிக்கும் நகரத்தை விட்டு, ஒரு மணி நேரம்  நகரத்திற்கு வெளியில் உள்ள இடங்களுக்கு சென்று பார்த்து வந்தால் அப்படி ஒரு புத்துணர்ச்சி, மனநிம்மதி!! இதற்கு முக்கிய காரணங்கள் பெருகி வரும் வாகனங்களும், அவை கக்கும் கார்பன்-மோனாக்ஸைடும், போக்குவரத்து நெரிசலும் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று பெருநகரங்களில் வசிக்கும் பலருக்கு ஆஸ்த்மா, தோல் ஒவ்வாமை (அலர்ஜி), நுரையீரல் நோய், கண்கள் பாதிப்பு என்று அடுக்கி கொண்டே போகுமளவிற்கு நோய்கள். அத்தனை உடல் ரீதியான கோலாருகளுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த கார்பன்-மோனாக்ஸைடு திகழ்கின்றது.

“சொந்த கிராமத்தில் போய் இரண்டு நாள் தங்கி வந்தேன், உடலும் மனமும் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தது தெரியுமா?” என்று நம்மிடம் நிறைய நண்பர்கள் கூற கேள்வி பட்டிருப்போம், நாமும் அதை உணர்ந்திருப்போம். ஆனாலும் என்ன செய்வது? பிழைப்பிற்காக பெருநகரங்களை தேடி ஓடி வந்து விட்டோம், நமது  அடுத்த தலைமுறைகளுக்கு தேவைப்படும் என்று நகரங்களில் வீட்டை கடனில் (LOAN) வாங்கி, ஆயுள் முழுதும் வேலைப்பார்த்து வீட்டுக்கடன் (EMI) கட்டி கொண்டு இருக்கிறோம்.

முக்கியமான தகவல். யேல் நிறுவனம், கொலம்பியா பல்கலைக்கழகத்தில்  ஒவ்வொரு வருடமும், பல நாடுகளில், சுற்றுச்சூழல் செயல்திறன் (ENVIRONMENTAL PERFORMANCE INDEX)  எவ்வாறு உள்ளது என்று பட்டியலிட்டு வெளியிடுகிறது. மொத்தம் 178 நாடுகளில் கணக்கெடுத்ததில், நமது நாட்டிற்கு 155ஆவது இடமே கிடைத்துள்ளது வேதனையான உண்மை.

3

 

சற்று ஆழமாக யோசித்து பார்த்தால், ஒரு விஷயம் நன்றாகப் புலப்படும். அடுத்த தலைமுறைக்கு உண்மையான சொத்து எனும் ஒன்றை நாம் விட்டு செல்வதென்றால், கண்டிப்பாக அவை ஆரோக்கியமும், மனநிறைவும், சந்தோஷம் தரக்கூடிய சுற்றுப்புற சூழலும், நல் வாழ்க்கை முறையும் தான். சிலர் இருக்கும் வாழ்கையை தொலைத்து, அடுத்த தலைமுறைகளுக்கு என்று சொத்துகளை வாங்கி குவிப்பர், ஆனால், சில வருடங்கள் கழித்து, அந்த நகரங்களில் வாழக் கூடிய சூழ்நிலையே கிடையாது எனும் நிலை வரும்போது, அந்த சொத்துக்களுக்கு  எல்லாம் என்ன மதிப்பு இருக்கும்?

4

 

சரி என்னதான் செய்யலாம், காற்று மாசுப்படிருந்தாலோ, வசிப்பிடத்தைச் சுற்றி  குப்பையாக இருந்தாலோ, சாதாரன மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அதெல்லாம் அரசாங்கம் தானே பார்க்கவேண்டும் என நினைத்தால், நாம் பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக நாம் சில அடிப்படை விஷயங்களை கடைப்பிடித்து, குழந்தைகளுக்கும் கற்றுத் தர ஆரம்பிக்கவேண்டும். சிறு துளி தான் பெரும் வெள்ளம், சின்னஞ்சிறு நல்ல சேமிப்புகள் தான், நாளைய பேராபத்தை தவிர்க்கும் கேடயங்கள். அதை உணர்ந்து, நாம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய, தினமும் கடைபிடிக்க வேண்டிய, நம்மளால் செய்ய இயன்ற செயல்கள்..

1. ஒவ்வொருவரும் தான் வாழ்ந்து முடிக்கும் முன், 10 மரங்களாவது   பின்வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்லலாம்.

2. புகை பிடிப்பவர்கள், புகை பிடிப்பதை விட்டுவிடலாம் அல்லது முடிந்தளவு குறைத்துவிடலாம்.

3. மாடியிலும் வீட்டுத்தோட்டங்களிலும், சின்னஞ்சிறு செடிதொட்டிகளும், பூத்தொட்டிகளும் வளர்க்கலாம். உதாரணத்திற்கு, சோற்றுக்கற்றாழை (ALOE VERA).. இதனை கண்டிப்பாக வீட்டில் வளர்க்கலாம். காற்றிலிருந்து பல மாசுகளை குறைக்கும் வல்லமைகொண்ட கற்றாழையில் மருத்துவ குணங்களும் ஏராளம் உள்ளது. நம் நாட்டிலிருந்து பல கற்றாழைகள், அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

4. சிலந்தி ஆளை (SPIDER PLANT), பாக்கு பனை, ஸ்நேக் பிளாண்ட் (SNAKE PLANT), மணிப் பிளாண்ட் (MONEY PLANT), மார்கினாட்டா போன்ற பல செடிகள் காற்றில் உள்ள நச்சித்தன்மையும், விஷத்தன்மையும் அகற்றுகின்றன. வீட்டில் அவைகளை வைத்தும் அழகுப் பார்க்கலாம்.

5. வீட்டிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் எங்காவது போக வேண்டுமென்றால், வாகனங்களை தவிர்த்து, நடந்தே செல்லலாம்.

6. ரயில், பஸ் போன்ற போக்குவரத்துகளை, அதிக அளவில் உபயோக படுத்த ஆரம்பிக்கலாம். அதுவும் தனியாக போகும் போது கண்டிப்பாக பொது போக்குவரத்துகளை பயன்படுத்தலாம்.

7. வாகனங்களில் தனியாக செல்வதை விட்டுவிட்டு, நண்பர்களுடனோ, அலுவலகம் செல்லும் போது கூட வேலை செய்பவர்களோடும் (CAR POOLING) செல்லலாம்.

8. பிரிட்ஜ் (FRIDGE) தண்ணீரை பயன் படுத்துவதற்கு பதில், பழையமுறையான, பானை தண்ணீரை பருகுவதும், உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்று.

9. தேவை இல்லாதபோது, வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருள்களை அணைத்து வைத்துவிட வேண்டும். ஏஸியை (AC) முடிந்த அளவு குறைப்பது  உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்று.

10. காகிதங்கள உபயோகத்தை முடிந்த வரை குறைத்து கொள்ளலாம்.

11. குழைந்தகளுக்கு குப்பையை குப்பைத்தொட்டியில் போட சொல்லியும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும் கற்றுத் தர வேண்டும். மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தனியாக பிரித்து அதை சுழற்சி முறையில் பயன்படுத்துவோரிடம் தந்து பயன்பெறலாம்.

12. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகளை பயன்படுத்த தொடங்கலாம். தண்ணீர் மற்றும் பல இயற்கை வளங்களை விரயமாக்காமல் பாதுகாக்கவேண்டும்.

நண்பர்களே, இது தவிர வேறு ஏதேனும் கருத்துக்கள் காற்று மாசுப்படுதலை தவிர்க்க உங்கள் மனதில் தோன்றினாலும், எங்களுடனும், உங்கள் நட்பு வட்டாரங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்த தலைமுறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால், சுற்றுப்புரத்தை சுத்தமாக வைத்துகொள்வோம். நம்மால் இயன்ற அளவு மேலே சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிப்போம்.

இயற்கையை பேணிக் காப்போம், இயன்ற வரை சுற்று சூழலை மாசுபடுதலில்  இருந்து காப்போம். பசுமையான ஒரு சமுதாயத்தையும், ஆரோக்கியமான வாழ்வையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team.  in  BEPOSITIVETAMIL.COM

Natarajan

Image of the Day… Double Moon on 27 Aug 2014 ? …. A Hoax mail Under Circulation !!!

I thought we were going to make it through August 2014 without the double moon on August 27 hoax being revived. I was wrong. Google searches have made this post the most popular on our site for two days running. Yes … it’s happening again. An email must be circulating – somewhere, social media must be buzzing – with the suggestion that – on August 27, 2014 – Mars will appear as large as a full moon in Earth’s sky. Here’s a sample of what it typically says:

SEE MARS AS LARGE AS THE FULL MOON ON 27TH AUGUST 2014. Should be spectacular! Truly a once in a lifetime experience!

Hoax image via social media.

Will Mars and the moon will appear the same size on August 27, 2014? Nope.

 

I saw a version of this a few years back that included a powerpoint presentation, suggesting that Mars and Earth’s moon will appear as a “double moon” in late August. I’ve also seen the photo below, circulating on Facebook.

This image is circulating on Facebook, with the claim that Mars will appear as big and bright as a full moon on August 27, 2014.  It's a hoax.  Don't believe it.  Mars never appears as large as a full moon in Earth's sky.

It sounds amazing! Can it possibly be true?

No. It can’t. The email and photo are perpetuating a hoax that rears its crazy head every summer. The hoax has circulated every summer since 2003. Eleven years running! That’s a long time for a hoax to run, in our world of information.

Mars can never appear as large as a full moon as seen from Earth. The moon will not be full on August 27, 2014 (you might spot it briefly as a thin crescent in the west after sunset, though). And Mars will not be at its brightest or closest in August of 2014, or at any time in 2014. In 2014, Mars is closest to Earth on April 8, but it won’t be as close this year as in some years.

Want to see planets, meteor showers, eclipses? Visit our night sky page – updated daily!

As seen from Earth, in months when Mars does appear side by side with a full moon (and, again, that’s not happening in August of 2014), Mars’ diameter is about 1/140th the diameter of the full moon.

You would have had to line up 140 planet Mars – side by side – to equal the moon’s diameter.

Ah, Mars. World of dreams and visions. Mars is the world orbiting one step outward from Earth’s orbit. This world is slightly smaller than Earth – but slightly larger than Earth’s moon. Mars is also much much farther away than Earth’s moon. It’s hard to comprehend what little specks the planets and moons are in contrast to the vastness of space, but let me put it this way. Earth’s moon is about a light-second away. Traveling at 186,000 miles per second, light bouncing from the moon’s surface takes about a second to reach us here on Earth. Meanwhile, light from Mars takes much much longer to reach Earth – from several minutes to about 20 minutes – with the difference being the result of Earth’s and Mars’ motions around the sun. In other words, when Mars is on the same side of the sun as Earth, its distance from us is less than when it’s on the far side of the sun from us.

The moon is much closer than Mars, and that’s why we see the moon as a bright disk in our sky. Meanwhile – to the eye – Mars never appears as anything but a starlike point.

So how did this rumor of Mars-as-big-and-bright-as-the-moon get started? It started with an actual (though much more subtle) event in 2003. On August 27 of that year, Earth and Mars came very slightly closer than they’d been in nearly 60,000 years. Our two worlds, center-to-center, were less than 35 million miles apart – just over three light-minutes apart. The last people to come so close to Mars were Neanderthals. Astronomy writers like me had a field day that year, talking about Mars at its closest. Was it a spectacular sight? Yes! It looked like a dot of flame in the night sky.

Was Mars as big and bright as the moon, even at its closest in 2003? Never.

But the legend continues …

Bottom line: Mars will not appear as large as the full moon on August 27, 2014. Mars will notever appear as large as a full moon in Earth’s sky. The email – or social media – claims to the contrary are a hoax.

Source:::: Earth sky news

Natarajan

” வீட்டுக்குளேயே ஒரு சுகாதார குறைபாடு … என்ன அது ? …”

மக்கள் முன்னெப்போதையும் விடச்சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்ற காலம் இது.

 

கை கழுவ, பல் துலக்க, வாய் கொப்பளிக்க, அலுப்புப் போகக் குளிக்க, அழுக்குப் போகத் துணி துவைக்க என்று விதவிதமான வாசனை திரவங்களையும், வண்ண வண்ணமான குழம்பு(லோஷன்)களையும் வாங்குவதற்கென்று ஒவ்வொரு குடும்பமும் ஆயிரக்கணக்கில் செலவழிப்பதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

சோப்பு, பற்பசை, பினாயில், டெட்டால் இவற்றை மட்டுமே மக்கள் பயன்படுத்திய காலம் போய், நூற்றுக்கணக்கான அழுக்குப் போக்கிகளும், கிருமிநாசினிகளும் நமது கடைத்தெரு அங்காடிகளை ஆக்கிரமித்துப் பிறகு நமது வீடுகளின் எல்லா அறைகளையிலும் குடிபுகுந்துவிடுகின்றன. இவற்றைப் பயன்படுத்தாத அல்லது பயன்படுத்தத் தெரியாத முந்திய தலைமுறையினரை, ‘நாட்டுப்புறம்’ என்று இன்றைய தலைமுறையினர் கேலி செய்வதையும் பார்க்கிறோம்.

ஆனால் வாழ்வின் ஒவ்வொரு துணுக்கையும் சுத்தம் என்ற பூதக் கண்ணாடியையும், சுகாதாரம் என்ற நுண்ணோக்கியையும் வைத்து நோக்குகின்ற இன்றைய தலைமுறையினர், தாங்கள் தத்தமது வீட்டுக்குள்ளேயே இடமளித்துக் காப்பாற்றி வருகின்ற ஒரு சுகாதாரக் குறைப்பாட்டைப் பற்றிக் கொஞ்சமேனும் விழிப்புணர்வு பெற்றுள்ளதாகத் தெரியவில்லை. என்ன அது என்கிறீர்களா?

அதுதான், ‘டாய்லெட்’ எனப்படுகின்ற குளியலறையுடன் கூடிய ‘நவீன’ கழிப்பறை அல்லது கழிப்பறையுடன் கூடிய ‘சுகாதாரமான’ குளியலறை.

அதாவது, வீட்டுக்குள்ளேயே அமைக்கப்படுகின்ற குளியலறையுடன் கூடிய கழிவறை.

தனித்தனி வீடுகளின் அளவு குறையத் தொடங்கியதாலும், அடுக்குமாடி வீடுகள் (ஃபிளாட்டுகள்) பெருகியதாலும், இடவசதி கருதி கழிவறைகளைக் குடியிருப்புக்குள்ளேயே கட்டிக் கொள்வது வழக்கமாகிப் போனது. இப்படி இருந்த போதிலும், நமக்குத் தெரிந்து 1980-களின் தொடக்கம் வரை, வீட்டிற்குள்ளேயேகூட குளியலறையும், கழிவறையும் தனித்தனியாகத்தான் அமைக்கப்பட்டன.

அதன் பின்புதான் குளியலறை கழிவறை இரண்டினையும் இணைத்து, ஒரே அறையாக வடிவமைக்கும் போக்கு மெதுவாக வளரத் தொடங்கியது. தமது கடைசிக் காலத்தில், பிள்ளையின் சொந்த வீட்டில் நகர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு வந்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்த தாய் தந்தையர்கள் பலர், இந்த அதிசய ‘டாய்லெட்டு’களைக் கண்டு அதிர்ந்து, தங்களது பழைய வீடுகளுக்கே சென்றுவிட்டதும் நடந்தது. ஆதரிக்க வேறு யாரும் இல்லாத பெரியவர்கள் சிலர் இந்தப் புதிய அலர்ஜி கலாசாரத்தைச் சகித்துக்கொள்ளப் பழகிக்கொண்டதும் நடந்தது.

‘மனிதன், பழக்கத்தின் அடிமை’ என்பதை நிரூபிப்பது போன்று, இப்போது ஜீவித்திருக்கும் பழைய தலைமுறையினரும் இதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.

என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டில், இத்தகைய நவீன ‘டாய்லெட்டில்’ அமைந்துள்ள ‘மேற்கத்திய கழிவறைப் பீங்கானை’ மூடிவிட்டுக் குளிக்கின்ற வழக்கமிருக்கிறது. ஆனாலும், அந்த மூடி மேலேயே குளியல் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை வைத்து, அவற்றைப் பயன்படுத்திக் குளிக்கின்றனர்.

கேட்டால் இட வசதிக் குறைவு என்று பதில் வந்தது. நண்பர் ஒருவர் வீட்டில் டிபன் சாப்பிட்டுவிட்டு, அவர்கள் வீட்டின் ‘டாய்லெட்டில்’ உள்ள வாஷ் பேஸினில் கைகழுவச் சென்றபோது நான் கண்டது இதைவிடக் கொடுமை. கழுவுவதற்கான சமையல் பாத்திரங்கள், அங்குள்ள ‘மேற்கத்திய பாணிக் கழிவறைப் பீங்கானின்’ பக்கத்தில் குவிக்கப் பட்டிருந்தன.

விசாரித்ததில், அவர்கள் வீட்டின் சிறிய சமையலறையில் பாத்திரங்களைக் கழுவப் போதிய இடமில்லை என்று பதில் வந்தது.

புனிதம், சுகாதாரம் என்ற புளித்துப் போன வாதங்களைக்கூட விட்டுத் தள்ளுங்கள். இது அவசர யுகம். அதுவும் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகம், கோயில் அல்லது கடைத்தெரு என்று செல்வதற்கு ஒரு வீட்டில் உள்ள எல்லோருமே பரபரக்கின்ற காலை நேரத்தில், இப்படிக் குளியல் அறையும், கழிவறையும் ஒரே கதவுக்குப் பின் இல்லாமல், தனித்தனி அறைகளாக இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?

புதிதாகக் கட்டப்படும் ஃபிளாட்டுகள் மற்றும் தனி வீடுகளில், அனேகமாக இருபத்தைந்து அல்லது முப்பது சதுர அடிகளை இத்தகைய ‘டாய்லெட்டு’களுக்கு ஒதுக்குவார்கள். அதையே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, இருபது-இருபது சதுர அடிகளில் தனித்தனியாகக் குளியலறை மற்றும் கழிவறையைக் கட்டித்தான் பார்ப்போமே! அவசரத்திற்குக் கைகொடுக்கும்; டென்ஷனையும் குறைக்கும்; சுத்தத்துக்குச் சுத்தம்; பெரிசுகளுக்கும் மனத்திருப்தி.

யோசித்துப் பார்த்தால் இளைய தலைமுறைக்கும்கூட இந்த ஏற்பாட்டில் முழுத் திருப்தி கிடைக்கும். என்ன, கட்டிட வரைபடம் தயாரிப்பவருக்குத்தான் கொஞ்சம் வேலை அதிகம். அதனாலென்ன முயன்றுதான் பார்ப்போமே!

– எஸ். ஸ்ரீதுரை, வேலூர்.

தொடர்புக்கு: sriduraiwriter@gmail.com

Keywords: வீடுகள், டாய்லெட், ரெஸ்ட் ரூம், சுகாதாரம், வீடு கட்டுமானம்
Topics: சமூகம்| பொது|

Source:::: The Hindu…. Tamil

Natarajan

Message For the Day…” Dont Ever Argue ‘this is mine…that is yours’…”

All five elements are present in the human form. From the Element of Space, emotions, prejudices, apprehensions, shyness and the like are born. The Element of Air within the body causes the reflexes and movements like walking, respiration, etc. Hunger, thirst, sleep and fear are aspects of Fire. Blood, mucus and saliva emanates from the Element of Water. Finally skin, muscles, veins, bones and nails are the aspects representing the Earth Element. When you internalise this truth, who can argue, “This is mine, that is yours”, “I am greater, you are inferior” and so on. Anyone who speaks thus is dull-headed, unable to appreciate and see the reality. If only they have a deeper understanding, they can comprehend the truth in creation. Never be bogged down by the prevailing times or circumstances. That will amount to leading a narrow life. Develop an expansive way of life and carefully tread the path, that is ever new, holy and eternal.

Sathya Sai Baba

Message For the Day…” Seek the Divine Soul Within You …”

A scabbard is a sheath for the sword. Rice is sheathed in a husk. A tamarind seed is sheathed by tamarind pulp, which in turn is sheathed by the outer shell. Thus when one thing hides another thing and its identity, it is called as a Sheath. Every human body is made up of five sheaths – The Annamaya (food) Kosha sheath covers the Pranamaya (life) Kosha. Pranamaya sheath covers Manomaya (mind) Kosha, which in turn covers Vijnanamaya (intellect) Kosha. The Anandamaya (bliss) Kosha is the kernel hidden in Vijnanamaya Kosha, wherein the soul resides. Thus the Divine Soul is safely secured within each being without exception. Hence, everyone has the equal right and opportunity to seek the soul within them. But then one has to feel an urge to attain it and direct their activities towards it. By birth, the urge to attain and experience the Atmic status has been gifted to everyone, automatically

Sathya Sai Baba

 

Message For the Day…” Who is a True Devotee … ” ?

A devotee without the faculty of observation and discrimination fails to ascertain what is real and unreal. They cause pain to others, though they have no intention of troubling others, as they lack the capability of understanding. Such people and many others preach about devotion beyond attributes. Anyone who does not have the quality of being helpful to others, and is devoid of compassion and pity is said to be possessing demonic devotion. Some other people lose the relationships with people who are near to them, thinking that the object that is dear to them is far away. Such devotees can be called as practicing devotion with hatred. Stay away from all of these practices. The true aspirant is the one, who has love, compassion and concern for all, including those who are less privileged than themselves. They work with them and help them in a way in accordance to the status. Love is primordial in devotion.

Sathya Sai Baba

“பசுமையின் மறு பெயர் சென்னை …” !!!

  • திருவல்லிக்கேணிக்கு பெயர் தந்த அல்லி மலர்
    திருவல்லிக்கேணிக்கு பெயர் தந்த அல்லி மலர்
  • புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம்
    புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம்
  • புளியந்தோப்பு
    புளியந்தோப்பு

இன்றைக்குச் சென்னையில் கால் பதிப்பவர்கள், வெப்பத்தால் புழுங்கிப் போவார்கள். ஆனால், நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் தோப்புகள், தோட்டங்கள், காடுகளால் சென்னை செழிப்பாக இருந்திருக்கிறது. அதற்கான அத்தாட்சி, சென்னையின் பல பகுதிகளுக்கு இன்றைக்கும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர்கள். ஒரு பகுதியில் செழித்திருந்த தாவரங்களின் பெயர்களே, அப்பகுதிக்குப் பெயராக வைக்கப்பட்டுள்ளன.

நிலத்தை ஐந்திணையாகப் பிரித்து, அந்த நிலப் பகுதிகளில் செழித்திருந்த மலர்களால் அப்பகுதிக்கே பெயரிட்ட மரபு நம்முடையது. அதன் தொடர்ச்சி என்று இதைச் சொல்லலாம்.

வரலாறு, பண்பாடு

“தொன்மையான, வளமான பண்பாட்டின் வழி வந்ததாலேயே இயற்கை சார்ந்த பெயர்களைத் தமிழகத்தில் அதிகம் பெற்றிருக்கிறோம். ஒரு பகுதியின் இயற்கை பண்பு – புவியியல் பண்பின் அடிப்படையில் பெயர் வைப்பது தமிழ் மரபு.

ஒவ்வொரு பெயரும் ஒரு கதை சொல்லும். ஒரு பெயரின் மூலமே அப்பகுதியின் தொன்மையையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு பெயரிலும் நிச்சயம் ஒரு வரலாறு அடங்கியிருக்கிறது. ஒரு பகுதியின் பழைய பெயரை மாற்றுவது, அப்பகுதியின் வரலாற்றையும் பண்பாட்டையும் அழிப்பதற்குச் சமம்” என்கிறார் பிரபலச் சுற்றுச்சூழல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன்.

காரணப் பெயர்கள்

அல்லிக் கொடி நிறைந்த பகுதி திருவல்லிக்கேணி, தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தேனாம்பேட்டை, வேப்ப மரங்கள் நிறைந்த பகுதி வேப்பேரி, புளியமரங்கள் நிறைந்த பகுதி புளியந்தோப்பு, மல்லிகை அதிகம் மலர்ந்த பகுதி பூவிருந்தவல்லி… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் (பார்க்க: பெட்டிச் செய்தி).

ஓரிடத்தில் எந்தத் தாவரம் பெருகி இருந்ததோ, அதன் பெயரால் அந்தப் பகுதி அழைக்கப்பட ஆரம்பித்திருக்கிறது. சூழலுக்கு இணக்கமாகவும் நெருக்கமாகவும் வாழ்ந்த நமது முன்னோர், நாடு விடுதலை பெறுவதற்கு முன்புவரை இயற்கை வளத்தைத் தங்களுடைய முக்கிய அடையாளமாகவும் கருதிவந்ததை இந்தப் பெயர்களில் இருந்து உணர முடிகிறது.

செழிப்பின் அடையாளம்

“ஒரு நிலப்பரப்பின் தன்மையைச் சொல்லவும், ஓரிடத்தின் சூழலியல் வரலாற்றின் அடையாளமாகவும் இந்தப் பெயர்கள் இருக்கின்றன. பனைமரங்கள் பெருகிய பனையூர் என்ற பகுதி மணற்பாங்கான கடற்கரைப் பகுதியாகவோ, ஏரிக்கரைப் பகுதியாகவோ இருந்திருக்க வேண்டும். மூங்கில் பிரம்புகள் செழித்திருந்த பெரம்பூர் நீர் நிரம்பிய ஏரிக்கரையாகவோ அல்லது ஈரம் மிகுந்த பகுதியாகவோ இருந்திருக்கலாம் ” என்கிறார் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை துணைப் பேராசிரியர் டி. நரசிம்மன்.

இவற்றுடன் அடையாறு, கூவம், கொசஸ்தலை போன்ற ஆறுகள் ஓடிப் பாசனம் பெற்றதால் சென்னையின் பல பகுதிகளில் தோப்புகளும் தோட்டங்களும் அந்தக் காலத்தில் செழித்து இருந்திருக்கின்றன. இந்தத் தோப்புகளில் வளர்ந்தவை எல்லாமே நம் மண்ணில் இயல்பாக வளரக்கூடிய உள்நாட்டு இயல் தாவரங்கள். வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இந்தத் தாவரங்கள், மக்களுக்குப் பல வகைகளில் பயன்தரக் கூடியவையாகவும் இருந்திருக்கின்றன.

இன்றைய நிலை

“சென்னைக்குப் பெயர் தந்த பல தாவரங்கள் பண்பாட்டு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல்லாவரம் பகுதியில் இலுப்பைத்தோப்பு என்றொரு பகுதி இருக்கிறது. இந்தத் தோப்புகளில் இருந்த இலுப்பைக் காய்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, கோயில்களில் விளக்கு எரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஆர். பாலின் டெபோரா.

ஒரு காலத்தில் ஓரிடத்துக்கே அடையாளமாகத் திகழ்ந்த இந்தத் தாவரங்கள், இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில வீடுகளில் பிழைத்திருக்கின்றன. புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம், கங்காதீஸ்வரர் கோயிலில் தலவிருட்சமாக ஒன்றே ஒன்று நிற்கிறது.

இப்படியாகச் சென்னையைச் செழிப்பாக வைத்திருந்த அந்தத் தோப்புகள், தோட்டங்கள், காடுகள் எதுவும் இன்றைக்கு மிச்சம் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், பெயர்கள் மட்டும் அப்படியே பசுமையாகத் தங்கிவிட்டன.

பெயர்

காரணம்

திருவல்லிக்கேணி

திரு+அல்லி+கேணி ( அல்லிக் குளம்)

தேனாம்பேட்டை

தென்னை மரங்கள் நிறைந்த பேட்டை

புரசைவாக்கம்

புரச மரங்கள் நிறைந்த பகுதி

வேப்பேரி

வேப்ப மரங்கள் நிறைந்த ஏரி

புளியந்தோப்பு

புளிய மரங்கள் நிறைந்த தோப்பு

பனையூர்

பனை மரங்கள் நிறைந்த ஊர்

அத்திப்பேட்டை

அத்தி மரங்கள் நிறைந்த பேட்டை

பூந்தமல்லி

பூ+விருந்த+மல்லி (அ) மல்லிகை

பெரம்பூர்

மூங்கில் பெரம்புகள் இருந்த ஊர்

ஆலந்தூர்

ஆலமரங்கள் கொண்ட ஊர்

திருவாலங்காடு

திரு+ஆலம்+காடு

இரும்புலியூர்

இரும்புலி மரங்களால் நிறைந்த ஊர் ( வண்டலூர் அருகே)

திருவேற்காடு

வேல மரங்களால் நிறைந்த காடு

மாங்காடு

மாமரங்களால் நிறைந்த காடு

திருமுல்லைவாயல்

முல்லை தாவரங்களால் வரவேற்கும் பகுதி

‘Chennai green names’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன

Message For the day…” Satvic Devotion to God Pleases God …”

The easiest means to achieve love for God is to worship God as having a form. Worship of God is of three important types: Satvic, Rajasic and Tamasic. In the Tamasic form of worship, the individual prays to God but continues violence, anger and pomp, causing pain. Any worship that is done for the sake of name, fame, with pomp and ego is called the Tamasic worship. Rajasic worship is done for the sake for fulfilling selfish interests and to attain great heights in one’s life. Devotion with the feeling that one alone should be safe, happy and should be blessed involves utter selfishness. Such a devotee does not even aspire or think about the well-being of the family or the society. A Satvic devotee performs all daily tasks to please God, with total surrender and offers all tasks performed during the day as loving service to God.

Sathya Sai Baba

An Intriguing Connection ….

A painting in the manner of Indian calendar art on the wall of a Yazidi temple in Lalesh, Northern Iraq. The Yazidis, facing attacks by IS militants, are a Kurdish-speaking minority in Iraq. Their religion is said to have similarities with Hinduism. They worship Melek Tawwus, or the Peacock Angel. Photo: Eric Lafforgue

A painting in the manner of Indian calendar art on the wall of a Yazidi temple in Lalesh, Northern Iraq. The Yazidis, facing attacks by IS militants, are a Kurdish-speaking minority in Iraq. Their religion is said to have similarities with Hinduism. They worship Melek Tawwus, or the Peacock Angel. Photo: Eric Lafforgue

Source::::The Hindu

Natarajan