“நீங்கள் ஆணையிட்டால் ….” ” நடக்கட்டும் …நடக்கட்டும் …” !!!

 

1956 – ஜனவரி

இரண்டு இளைஞர்கள் – ஆங்கிலக் கல்வியுடன் நாட்டியக் கலையையும், கர்நாடக இசையையும் கசடறக் கற்றவர்கள். ஒருவர் பரத நாட்டியத்திலும், மற்றவர் கர்நாடக இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். பல்கலைக்கழக மேற்படிப்பு படித்து முடித்ததும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை, சென்னையிலிருக்கும் தங்கள் நாட்டியக் கலா நிலையத்தில் தங்கி இருந்தனர். அங்கு பாடங்கள் நடத்துவதில் உதவியாக இருந்துகொண்டு, எதிர்காலத்தைக் குறித்த கவலையுடன், நாட்களை நடனமும் கர்நாடக இசையும் பயில்வதிலும், கற்றுக் கொடுப்பதிலும் கழித்துக் கொண்டிருந்தனர்.

இவ்விருவரில் ஒரு இளைஞர் வேதவித்தகரின் மகன். சிறுவயதிலிருந்தே மஹாபெரியவர் மீது மரியாதையும் பக்தியும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஒரு நாள் காலை, “புறப்படு; நாம் இருவரும் காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவரைத் தரிசித்து வருவோம். அவருக்குப் பாடலில் உள்ள அளவுக்கு ஆடலில் அவ்வளவு விருப்பம் உண்டா என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும், நீ நடனமாடுவதற்கேற்ற வேஷ்டியும் மேலாடையும் எடுத்து வா…. அவர் அருளிருந்தால், அவர் முன் நீ ஆடும் பாக்யம் உனக்குக் கிடைக்கும். நீ ஆடுவதற்கு நான் பாடும் பாக்யமும் எனக்குக் கிடைக்கும்” என்றார்.

இருவரும் பேருந்தில் காஞ்சியை அடைந்தனர். மஹாபெரியவர் அப்போது ஓரிக்கையில் இருப்பதாகத் தெரிந்து, ஓரிக்கை அடைந்தனர். அங்கு மஹாபெரியவர் ஒரு சிறு சிவன் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தார். அந்தச் சிறிய இடத்தில் அவரைக் காண, அருள் பெற பக்தர்கள் கூடியிருந்தனர்.

நம் இளைஞர்கள் இருவரும் மஹாபெரியவரை நெருங்கி, வணங்கி எழுந்தனர். மஹாபெரியவர் அன்று மெளனம் கடைப்பிடிக்கிறார் என்று அறிந்தனர். வெகு சில சைகைகள் மூலமாக மிக முக்யமானவைகளை மட்டும் மற்றவருக்குத் தெரிவிக்கும் விதமான மெளனத்தில் இருந்தார்.

கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்ற நம் இளைஞர், மஹா பெரியவரிடம் நெருங்கி, “என் நண்பன் பரதநாட்டியம் கற்றிருக்கிறார். தங்கள் முன்னிலையில் ஆட வேண்டுமென்று விருப்பம்… நீங்கள் ஆணையிட்டால்….” என்று சொல்லி முடிக்கு முன்னாக, பெரியவர், “நடக்கட்டும்” என்பதற்கான சைகையைச் செய்ய, நம் இளைஞருக்கு ஒரே மகிழ்ச்சி. தன் நண்பனிடம் வந்து, “சீக்கிரம் நடனமாடுவதற்கேற்ப உடைமாற்றி வா… பெரியவர் ஆக்ஞை தந்துள்ளார்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற இரண்டாவது இளைஞர், அப்பொழுது தயாராகவே இருந்தார்.

ஒருவர் பாட, மற்றவர், “நடனம் ஆடினார்” என்ற பாடலுக்கு ஆடத் தொடங்கினார்.

அந்தச் சிறிய இடத்தில், பெரியவர் உட்கார்ந்திருந்த இடம் போக, மற்ற பக்தர்கள் அமர்ந்திருந்த இடமும் போக, மீதமுள்ள மிகச் சிறிய இடத்தில், நடராஜரின் மேல் அமைந்திருந்த அந்தப் பாடலுக்கு, “குதித்த மெட்டு” என்றழைக்கப்படும் ஜதியுடன் ஆடல் ஆரம்பித்தது. இந்த ஜதியுடன் காலைத் தூக்கி நடராஜர் அபிநயம் பிடிக்கவும், அவரது, கால்விரல்கள் மஹாபெரியவருக்கு மிக அருகில் வரவேண்டியதாயிற்று.

அருகிலிருந்த மற்ற பக்தர்கள், “நிறுத்து, நிறுத்து, அபசாரம், அபசாரம்” என்று கூவ, மஹா பெரியவரோ, தன் திருக்கைகளில் ஒன்றால், மற்ற பக்தர்களை நோக்கி “நிறுத்துங்கள்” என்பதாகவும், நம் இளைஞரைப் பார்த்து, “ஆடுவதைத் தொடரலாம்” என்பதாகவும் ஒரே நேரத்தில் அபிநயம் செய்தார்.

இளைஞர் ஆட, மற்றவர் பாட, அற்புதமான நடனம் பெரியவர் முன் அரங்கேறியது.

இருவரும் மஹாபெரியவரிடம் ஆசிபெற்று சென்னை வந்து சேர்ந்தனர்.

நடனமாடிய இளைஞர், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் மற்றும் பரோடா எம்.எஸ்.பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்து, 1992 ஆம் வருடம் பணி நிறைவு Head of the Faculty of Performing Arts of M.S. University, Baroda பெற்றார்.

அவருக்கு 1993 வருடம் சங்கீத நாடக அகாடமி விருதும், 2008 ஆம் வருடம் காளிதாஸ் ஸம்மான் எனப்படும் விருதும், 2011 ஆம் வருடம் பத்ம பூஷன் விருதும் கிடைத்தன..

கடந்த 60 ஆண்டுகளாகப் பல உலக மேடைகளிலும் தான் ஆடியதும், விருதுகள் பெற்றதும், தனது 80ஆவது வயதிலும், பரதநாட்யம் ஆடுவதும், அந்த ஒரு மதியம் மஹாபெரியவர் “தொடர்ந்து ஆடு” என்று உத்தரவு அளித்ததின் விளைவே என்று மிக அடக்கத்துடன் கூறும் அந்த இளைஞர் பத்மபூஷன் ஸி.வி.சந்த்ரசேகர் அவர்களே.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/

Natarajan

” மாட்டு வண்டி போகாத ஊருக்கும் உன் பாட்டு வண்டி போகுமே அய்யா … “

ஜூன்  24   இன்று  கவியரசு கண்ணதாசன்  பிறந்த நாள் …  அவரைப்  பற்றிய  நினைவலைகள்  சில ….இன்றைய “தினமலர்”  நாள் இதழில்

படித்தேன் … அது  உங்கள் பார்வைக்கும்  இப்பொழுது …

 நடராஜன்

‘நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை…
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை…’
தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத ‘கிளாசிக்’ பாடல்களின் ‘கிங் மேக்கர்’.

‘கவியரசர்’ என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனுக்கு இறைவன் அளித்த வாழ்நாள் 54 ஆண்டுகள் மட்டுமே.’மாட்டு வண்டி போகாத ஊரிலும் உன் பாட்டு வண்டி போகுதடா…’ என பாராட்டும் அளவிற்கு சினிமா பாடல்களை தன் எழுத்து ஏணியில் ஏற்றி ஊர் முழுதும் உலா வந்த அந்த காவிய
புத்தகம் பிறந்த தினம் இன்று. வருடங்கள் கடந்தாலும் நினைவிலும், செவியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசரின் நினைவுகளை அவருடன் நெருக்கமானவர்கள் இதோ பகிர்ந்து கொள்கிறார்கள்….

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

விசாலாட்சி, கண்ணதாசன் மகள் : அப்பாவிற்கு தெய்வ பக்தி அதிகம். அவர் சந்தித்த அனுபவங்களை தான் பாடலாய் தந்தார். பிசியான பாடலாசியராக இருந்தாலும் குடும்பத்தார் மீது அலாதி பிரியம் கொண்டவர். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை வைத்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். என் அம்மாவுக்காக ‘தாைழயாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா…’ போன்ற பாடல்களை எழுதினார். ‘பூ முடிப்பாள் இந்த பூங்குழலி… புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி…’ பாடலை என் அக்காக்கள் திருமணத்திலும், என் திருமணத்திலும் பாடச் சொல்லி அருகில் நின்று அவரும் பாடுவார்.பாசமலர் பாடலில் வரும் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம்தென்றலே..’ என்ற வரிகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். மறைந்தாலும் கண்ணதாசனின் மகள் என்ற பெருமையை என் தந்தை அளித்திருக்கிறார். பொன்னம்மாள் கண்ணதாசன் அறக்கட்டளை மூலம் அவர் நினைவாக உதவிகள் செய்து வருகிறோம்.

இரண்டு மனம் வேண்டும்

சொ.சொ.மீ.சுந்தரம், கண்ணதாசனின் கவியரங்க நண்பர்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். 1976ல் மதுரையில் நடந்த கவியரங்கத்தில் என் பேச்சை கேட்டு பாராட்டிய கண்ணதாசன், சொ.சொ.மீ., சுந்தரம் என்பது ‘சொல்லுக்கு சொல் மீறும் சுந்தரம்’ என பாராட்டினார். கவியரங்கங்களில் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்தார். கண்ணன் மீது அவருக்கு கொள்ளை பிரியம். எங்கு வந்தாலும் நன்கு உறங்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். புதுச்சேரி கம்பன் கழகம் நடத்திய கவியரங்கத்திற்கு சென்ற போது 9.30க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு 9.15 வரை அவர் வரவில்லை. அதன் செயலாளர் அருணகிரி, தமிழாசிரியர் ஒருவரை அழைத்து கண்ணதாசனை அழைத்து வரும் வரை இறைவணக்கம் பாடுமாறு கூறிச் சென்றார். ஒரு விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனை கண்டுபிடித்து எழுப்பிய போது ‘துாங்கிவிட்டேன் அருணகிரி… வாருங்கள் செல்லலாம்’ என முகத்தை துடைத்துவிட்டு ஒரு ‘கப்’ காபியோடு மேடையேறியவர் தன் பேச்சில் அத்தனை பேரையும் கட்டிப்போட்டார். அந்த கூட்டத்தில் தனக்கு பிடித்த இரு பாடல்களை அவர் பாடினார். ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்… நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று…’ என்று பாடி முடிக்க அங்குள்ள அனைவர் கண்ணிலும் கண்ணீர்.’பார்த்தேன் நினைத்தேன் பக்கம் வர துடித்தேன்… உனைத் தேன் என நான் நினைத்தேன்…’ என தொடங்கி ‘முடித்தேன் ஒரு துளி விடாமல் குடித்தேன்…’ என மற்றொரு பாடலை பாடி அவர்களின் சோகத்தை போக்கினார். மது அருந்தும் போது தான் கண்ணதாசன் பாடல் எழுதுவார் என பலரும் நினைக்கின்றனர். அது தவறு. மது இருக்கும் போது அவரிடம் பாடல் வராது, பாடல் வரும் போது அவரிடம் மது இருக்காது. ‘மருதமலை மாமணியே முருகைய்யா… தேவரின் குலம் காக்கும் வேலய்யா…’ என்ற பாடலை எழுதியதற்காக சின்னப்பதேவர் ‘பிளாங் செக்’ ஒன்றை கண்ணதாசனுக்கு வழங்கினார். வறுமையில் இருந்தாலும் தன் உதவியாளர் கண்ணப்பனை அழைத்த கண்ணதாசன், ‘இந்த காசோலையை கண்ணாடி போட்டு மாட்டு; இது தான் என் பெருமைக்கு எடுத்துக்காட்டு’ என்று கூறினார்.’நான் இந்திய ஜனாதிபதி போல் சம்பாதிக்கிறேன்… அதே நேரத்தில் இந்தியா போல் கடன் வாங்குகிறேன்…’ எனக்கூறுவார்.திரைப்பட பாடல்களை மட்டும் வைத்து கண்ணதாசனை மதிப்பிடக்கூடாது. அவை அல்லாது கவியரங்கம், இசை, பேச்சு என கண்ணதாசனின் திறமைகளை அருகில் இருந்த பார்த்தவர்களின் நானும் ஒருவன்.

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்


கவிஞர் முத்துலிங்கம்:
 மதுரை மாணிக்கத் தமிழை, கோடம்பாக்கத்திற்கு கூட்டி வந்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. இலக்கியப் புலவர்கள் இலக்கியத்தில் இயம்பாமல் விட்ட நுணுக்கமான கருத்துக்களை, சினிமாவில் தீட்டியவர். இலக்கிய சாற்றை பிழிந்து, திரைப்பாடலில் தந்தவர்.பாவமன்னிப்பில், ‘சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்…,’ துவங்கும் பாடலில், ‘காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்,’ என்ற சரணம், எனது நம்பிக்கையை உயர்த்திய வரிகள்.’மயக்கமா, தயக்கமா? மனதிலே குழப்பமா?…, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு,’- கண்ணதாசனின் பாடல் வரிகள் கவிஞர் வாலிக்கு நம்பிக்கையூட்டி, திரைப்பாடல்கள் எழுதவைத்தவை.கண்ணதாசன் கவிதை மட்டுமின்றி, உரைநடையில் புதிய நடையாக சிறு வாக்கியங்களாக சீர்திருத்தி எழுதியது அகவற்பா போல் இருக்கும். ‘வனவாசம்’ சிறந்த முன்னுதாரணம். அதற்கு ஈடான உரைநடை இலக்கியம், இலக்கிய உலகில் இல்லை.எம்.ஜி.ஆருக்கு ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘தங்கத்தில் முகமெடுத்து…,’பாடல் எழுதினேன். ‘நன்றாக இருந்தது’ என கண்ணதாசன் பாராட்டினார்.முதன்முதலாக நான், கண்ணதாசன், கங்கை அமரன் இணைந்து ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திற்கு பாடல் எழுதினோம். ‘மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ…,’ பாடலை நானும், ‘கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ…,’ பாடலை கண்ணதாசன், ‘பூவரசம் பூ பூத்தாச்சு…’பாடலை கங்கை அமரனும் எழுதினோம்.கண்ணதாசனிடம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் அதிபர் டி.ஆர்.ராமண்ணா, ‘நீங்கள்
இயற்றிய மாஞ்சோலை கிளிதானோ’ பாடல் நன்றாக உள்ளது. இதுபோல், எனது படத்திற்கு ஒரு பாடல் எழுத வேண்டும்,’ என்றாராம். கண்ணதாசன்,’அதை நான் இயற்றவில்லை. முத்துலிங்கம் எழுதியது. அவருக்கு, சந்த நடையில் நன்றாக எழுதவரும். அவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்,’ என்றாராம். எத்தனை கவிஞர்களுக்கு இப்படி பெருந்தன்மை இருக்கும்.அனைத்திலும் கண்ணதாசன் வெற்றி பெற்றாலும், அவர் தோற்ற இடம் அரசியல். நெப்போலியனுக்கு ‘வாட்டர்லுா’ போல, கண்ணதாசனுக்கு அரசியல்தான் ‘வாட்டர்லுா’. ஒரு கவிஞன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் கண்ணதாசன். ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம். இருந்தாலும், ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை,’ என்ற அவரது பாடல் வரிகள் அவருக்குப் பொருந்தும்.

Source::::Dinamalar… Tamil Daily  June 24

Natarajan

 

” கப்பி காரில் சவாரி …” மலரும் நினைவுகள் !!!

 

ஓவியம்: முத்து

ஓவியம்: முத்து

நண்பர் ஒருவர் சொன்னார்: ‘‘இப்போ இருக்கிற குழந்தைகள்லாம் அதிசயமா எதையுமே பார்க்க மாட்டேங்குறாங்க, கேட்க மாட்டேங்குறாங்க” என்று. அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. எல்லாமே கணினியில், தொலைக்காட்சியில் இன்றைய குழந்தைகளின் விழிகளின் முன் விரிந்துவிடுகின்றன. ஆனால், இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பு அண்ணாந்து பார்த்து ரசித்த பொருட்களில் பலவற்றைக் காலம் தன் சுருக்குப் பையில் போட்டு எங்கோ தூர வீசியெறிந்துவிட்டது.

தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற சிற்றூர் அது. ஒரு காலைவேளை. நாங்கள் பள்ளியில் இருந்தோம். நாங்கள் என்பது – அப்பாகுண்டு, மணிவண்ணன், நட்டு, என்னையும் சேர்த்த நால்வர் அணி. ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக்கொண்டு ரயில் வண்டியாய் காலம் எங்களை நகர்த்திய நாட்கள் அவை.

உடைந்த பாதி பிளேடை வாயில் வைத்து மோர்சிங் வாசித்துக்கொண்டிருந்த நட்டுவின் காதில் அப்பாகுண்டு ஏதோ கிசுகிசுக்க, அது மெல்ல நகர்ந்து எங்கள் காதுக்கு வந்தபோது எங்களால் வகுப்பில் உட்காரவே முடியவில்லை.

‘‘டேய்! நம்ம ரோட்டுக்கு கப்பி கார் வந்திருக் காம்…” என்பதுதான் அந்த ரகசிய சேதி.

சரியாக ஒரு மணிக்கு பள்ளியில் ஒரு மூலையில் தொங்கும் தண்டவாளத் துண்டில் மணியடிக்கப்பட, நாங்கள் மு.ரா.சன்ஸ் மஞ்சப் பையை (அதுதான் அப்போது எங்களின் ‘ஸ்கூல் பேக்’) தோளில் சாய்த்துக்கொண்டு சாலையை நோக்கி ஓடினோம். அய்யனார் சிலை உயரத்துக்குச் சாலையை அடைத்துக்கொண்டு கப்பி கார் நின்றது.

முன்னும் பின்னும் ராட்சஸ இரும்பு ரோலர்களைக் கால்களாகக் கொண்டு பிரம் மாண்டமாக அது நின்றது. அதன் மேலே ஓர் ஆள் உட்கார்ந்திருந்தார். அவர்தான் கப்பி காரின் பாகன். ஊரே அதை அதிசயமாகப் பார்த்தது. நாங்கள் அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தோம். யானையைத் தொட்ட சந்தோஷம்.

ரோடு ரோலரை எங்கள் ஊர்க்காரர்கள் கப்பி கார் என்றார்கள். ரோடு முழுக்க நிரவப்படும் கருங்கல் ஜல்லிகளுக்குக் கப்பிக் கல் என்று பெயர். கப்பிக் கல்லைத் தன் இரும்புப் பாதங்களால் நசுக்கி நகரும் ரோடு ரோலருக்கு கப்பி கார் என்கிற பெயர் எவ்வளவு பொருத்தம்!

கப்பி கார் வந்த நாளில் ஊருக்கே ஒரு திருவிழா முகம் வந்துவிட்டது. ஊரே சாலையில் திரண்டது. நாங்கள் பள்ளிக்கூடத்தை மறந்தோம்.

‘‘டேய்! இது பத்து நாளைக்கு முன்னால திருவாரூர்ல கிளம்புச்சாம். இன்னிக்குத்தான் நம்மூருக்கு வந்திருக்கு” என்று கப்பி காரின் இயந்திரவியலைப் புட்டுப்புட்டு வைத்தான் மணிவண்ணன்.

“அப்படின்னா, இது டெல்லிக்குப் போக எத்தனை மாசம் ஆகும்” என்று நான் விரல் விடாமல் எண்ணிப் பார்த்தேன்.

‘‘எனக்கு கப்பி கார் ஓட்டுற வேலை கெடச்சா போக மாட்டேம்பா. எல்லா காரும் இத முந்திக்கிட்டுப் போயிடும். இது டொடக்கு டொடக்குனு நவுரும்” என்றான் அப்பாகுண்டு.

எங்கள் ரோட்டில் கப்பிக் கல்லை நிரப்பி தார் போட்டு முடிக்கப் பத்து நாட்கள் ஆயின. அங்குலம்அங்குலமாக நகர்ந்து சாலையைச் சமன்படுத்திக் கம்பீரமாக நின்றது கப்பி கார். ஊர்க்காரர்களின் பொழுதுபோக்கே அதை வேடிக்கை பார்ப்பதுதான். அது நின்ற இடத்தில் தற்காலிகமாகப் பட்சணக் கடையும், கடலைக் கடையும் முளைத்திருந்தன. யானையின் முதுகில் சுண்டெலிகள் துள்ளிக் குதிப்பதைப் போல மாலைவேளைகளில் அமைதியாக நிற்கும் கப்பி காரின் மேலே ஏறி நாங்கள் விளையாடுவோம்.

‘‘கப்பி காருக்கு நான்தான் டைவர்” என்றான் நட்டு.

‘‘நான்தான் கண்டக்டரு” என்றேன் நான்.

நாங்கள் கப்பி காருக்கு பக்கத்தில் நிற் பதையே பெருமையாக நினைத்து நின்று கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கூடத்தில் மூணு வருஷமா எட்டாங்கிளாஸிலேயே இருக்கும் சுப்பிரமணி அங்கு வந்தான். மேலும் கீழும் அதைப் பார்த்தவன், அதன் பின்னால் சென்று தம்கட்டித் தள்ளினான். அதுவா நகரும்? என்ன நினைத்தானோ, கப்பி காரின் ரோதையை ஓங்கி உதைத்துவிட்டு, ‘‘இதுக்குத் திருட்டுப் பயலே வர மாட்டான்டா…” என்று சொல்லிவிட்டுப் போனான்.

தூரத்தில் கப்பி காரின் ஓட்டுநர் வருவதைப் பார்த்து நாங்கள் மிரண்டுபோனோம். அருகில் வந்த அவர், ‘‘பயல்களா… வர்றீங்களாடா… ஒரு ட்ரிப் அடிக்கலாம்” என்று அழைத்தார். அவருடன் தொற்றிக்கொண்டோம். எங்களைச் சுமந்தபடி மெல்ல நகர்ந்தது அந்தப் பேரதிசயம். சில நூறு சென்டிமீட்டர் தூரம் போன பிறகு எங்களைக் கப்பி காரிலிருந்து இறக்கிவிட்டார் பாகன்.

அதன் பிறகான காலங்களில் நான் பல நூறு மைல் தூரங்களைக் கடந்துவிட்டேன். என் நினைவின் சாலையில் அந்தக் கப்பி கார் இப்போதும் எங்கள் ஊரைவிட்டுத் தாண்டவே இல்லை!

– மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

Strange But True !!!…” Miss Unsinkable ” !!!

 

The Woman Who Survived All Three Disasters Aboard the Sister

Ships: the Titanic, Britannic, and Olympic

violet-jessopToday I found out about Violet Jessop, “Miss Unsinkable,” the woman who survived the sinking of the sister ships the Titanic and the Britannic, and was also aboard the third of the trio of Olympic class vessels, the Olympic, when it had a major accident. 

Violet Jessop enjoyed incredible “luck” from a young age. Born in 1887 in Argentina to Irish immigrants, she contracted tuberculosis as a young child and was given just a few months to live. Somehow, she managed to fight the disease and went on to live a long, healthy life.

When her father passed away, her mother moved the family to Britain, where she took a job as a stewardess on a ship. While her mother was working, Violet attended a convent school. Unfortunately, her mother became ill, and to provide for her siblings Violet decided to follow in her mother’s footsteps and become a ship stewardess herself.

The first in a long line of struggles for Violet was finding a ship that would take her. She was just 21 years old at the time and most women working as stewardesses in the early 1900s were middle-aged. Employers believed that her youth and good looks would be a disadvantage to her, “causing problems” with the crew and passengers. (Over the course of her career, she did get at least three marriage proposals while working on various ships, one from an incredibly wealthy first-class passenger.)

Eventually, Violet solved the problem by making herself look frumpy with old clothes and no make-up, and experienced more successful interviews after this. After a brief stint aboard the Orinoco, a Royal Mail Line steamer, in 1908, she was hired by the White Star Line.

Violet started out on the line’s Magestic, switching to the Olympic in 1910. Despite the long hours and minimal pay (£2.10 every month or about £200 today), she enjoyed working aboard the massive ship. She had initially had some concerns about the rough weather conditions while traveling across the Atlantic, but she reportedly liked that the Americans treated her more like a person while she served them.

Olympic_collisionIt was just one year later when the trouble started. In 1911, the Olympic collided with theHMS Hawke (a ship designed to sink ships by ramming them). Both ships sustained considerable damage, including the Olympic having its hull breached below the water line, but miraculously didn’t sink. They were able to make it back to port, and Violet disembarked without being harmed.

A couple of years later, the White Star Line was looking for crew to cater to the VIPs aboard the unsinkable ship, the Titanic. It took a while for her friends and family to convince her that it would be a wonderful experience, but Violet eventually decided to take a job on board the ship. As you already know, the Titanic struck an iceberg and sunk, killing more than 1500 people.

Violet was able to escape the disaster on lifeboat 16. In her memoir, she recalls,

I was ordered up on deck. Calmly, passengers strolled about. I stood at the bulkhead with the other stewardesses, watching the women cling to their husbands before being put into the boats with their children. Sometime after, a ship’s officer ordered us into the boat first to show some women it was safe.

As she was jumping into the lifeboat, she was handed a baby to care for. When they were rescued by theCarpathia, the baby’s mother (or at least Jessop thought it must be) found her and whisked the baby away (literally grabbing the baby out of Jessop’s arms and running off).

Once again, Violet lived to sail another day.  Although, she did later state the first thing she missed after the Titanic sank was her toothbrush that she’d left on board.

You’d think she’d stop getting on ships at this point, or at least ships of the Olympic class, but not Violet. In the lead-up to World War I, she decided to serve as a nurse on board the Titanic’s other sister ship,Britannic, which was operating in the Aegean Sea. Given her track record, you can probably guess what happened next. The Britannic ran into a mine that had been planted by a German U-boat. The ship sustained substantial damage and quickly started sinking.

This time, Violet wasn’t lucky enough to jump into a lifeboat as the ship was sinking too fast. Instead, she jumped overboard. In her own words,

I leapt into the water but was sucked under the ship’s keel which struck my head. I escaped, but years later when I went to my doctor because of a lot of headaches, he discovered I had once sustained a fracture of the skull!

She joked that she only survived because of her thick hair, which cushioned the blow.  She also stated this time she remembered to grab her toothbrush before evacuating, unlike with the Titanic.

Even this latest disaster was not enough to deter Violet. After the war, ships were becoming a more and more popular form of transport. Even cruise ships were starting to emerge. Violet left the White Star Line for the Red Star Line and worked on a ship doing world cruises for several years.

Luckily for Violet and everyone traveling on the ships she was aboard later, no such vessel she worked on ever sustained significant damage again. She did take a clerical job for a while after World War II, but went back to working on Royal Mail ships for a few years before she retired at the age of 61. The rest of her life was spent gardening and raising chickens. She died in 1971 of congestive heart failure at the ripe old age of 84.

Source:::  Today i foundout .com

Natarajan

 

” The Little Known Man Who Saved the World … “

The Man Who Saved the World
In 1962, the U.S. and the Soviet Union were on the brink of possible mutual destruction- the world as a whole was facing a possible nuclear winter and all the devastation that would come with it. The Cold War had been escalated to “tepid” and was close to becoming hot with the failure of the Bay of Pigs in 1961 and the ensuing Cuban Missile Crisis.

In May 1962, Soviet President Nikita Khrushchev and Cuban President Fidel Castro reached a “secret” agreement that allowed the Soviets to start building missile sites in Cuba, including stocking them with nuclear missiles- 42 of them.

It should be noted here that the U.S. at this time had nuclear missiles in Turkey and Italy that could hit Moscow within 16 minutes of being launched. On the flip-side, the Soviets had plenty of nukes pointed at and perfectly capable of destroying the U.S.’ allies throughout Europe. However, the Soviets did not have nearly the capability to destroy targets in the U.S. itself. Certainly they had enough nukes and intercontinental ballistic missiles to destroy all the major cities in the U.S. and more, but their missiles at this point weren’t extremely accurate at those distances, so weren’t as good as a “mutual destruction” deterrent. Indeed, there were some among the U.S. brass that felt the loss of allies throughout Europe and the lesser direct causalities from long range nukes that managed hit their targets in the U.S. were acceptable losses given the payoff would be the annihilation of the Soviet Union and the end of that threat to the United States. So if the Soviet Union had nukes in Cuba, that tipped the balance in the Cold War back to near even, rather than in the U.S.’s favor as before.

In the fall of 1962, the United States sent a US U-2 aircraft to fly over Cuba to attempt to confirm the rumors that they had heard about the Soviet missile sites in Cuba. On October 14th, 1962, the U-2 arrived back with pictures of these missiles sites. A day later, the pictures were presented to President Kennedy. Tensions rose and alarms were sounded. And, thus, on October 15th, 1962 the 13-day ordeal that became known as the Cuban Missile Crisis began.

Vasili Arkhipov was born on January 30th, 1926 to a poor, peasant family near Moscow in the town of Staraya Kupavna. At the age of 16, he began his education at the Pacific Higher Naval School. Vasili saw his first military action as a minesweeper in the Pacific Theater at the tail end of World War II. In 1947, he graduated from the Caspian Higher Naval School and served on submarines in the Soviet Black Sea, Northern, and Baltic fleets. In 1961, Vasili got his first taste of crisis management in an incident that, while extremely momentous, wasn’t even close to what he’d help with later.

This first incident happened when Vasili was appointed deputy commander of the new K-19 sub (known today as “the Widowmaker”), one of the first Soviet nuclear subs, which was also equipped with a nuclear ballistic missile. On July 4th, 1961, as the sub was conducting exercises near Greenland, a major leak was discovered in the radiant cooling system. Since no backup cooling system was installed pre-sail, the reactor on the sub was in real danger of a nuclear meltdown. In order to prevent a nuclear accident unlike any the world had ever seen before, the captain of the sub sent workers into high-radiation areas to build a cooling system on the spot. Every member of the sub did what they could to prevent disaster. Vasili, lending his engineering expertise, helped contain the overheating reactor. The crew succeeded, but not before these workers and many on the crew developed radiation sickness. Every worker that was sent as first responders into the high-radiation areas died within days. Due to this, a mutiny nearly erupted on board the K-19 sub. Vasili backed his captain in continuing the work and was, eventually, awarded a medal for his bravery in a time of crisis and loyalty to the Soviet Union. All of this, though, was a precursor to the day Vasili Arkhipov saved the world.

After his time on the K-19 sub, Vasili was made second in command on the B-59, one of four attack submarines that was ordered to travel to Cuba on October 1st, 1962. The sub contained 22 torpedoes, one of which was nuclear, holding the same strength as the bomb that was dropped on Hiroshima. The captains of each of the four subs were given permission to fire their nuclear torpedoes at their own discretion, so long as they had the backing of the political officer on board. Unknown to the crew of the B-59, the United States began their naval blockade of Cuba on October 24th and informed the Soviets that they would be dropping practice depth charges (think warning shots) to force subs to surface and be identified.

Moscow could not communicate this information to the B-59 due to it being too deep underwater to receive radio transmissions. On October 27th, 1962, US destroyers and the aircraft carrier USS Randolph located the sub, trapped it, and began dropping depth charges to force it to surface. The sub’s crew, which had been traveling for nearly 4 weeks with very little communication with Moscow, was very tired and not aware of circumstances. The sub’s captain, Valentin Savitsky, believed that nuclear war had already broken out between the Soviet Union and the US and wanted to fire the nuclear torpedo.

Fortunately, particularly given the heightened tensions at the time, in this case, one other person had veto power over firing besides the captain and the political officer, the second in command Vasili Arkhipov. Vasili, despite being second in command on the B-59, was the leader of the fleet of the four Soviet subs sent. Had Vasili not been present, nuclear war would have likely happened as both the captain and the political officer wanted to launch the nuclear torpedo. Vasili vehemently disagreed, arguing that since no orders had come from Moscow in a long time, such a drastic action was ill-advised and the sub should surface to contact Moscow. A heated argument broke out- legend, probably false- says punches were thrown. Eventually, though, Vasili won the day (his reputation as a hero in the K-19 mutiny reportedly helped in the debate) and the sub surfaced. Upon meeting their American enemies, they were instructed to head back to Russia. They obliged, (additionally, they began to have mechanical issues on board the sub) and headed east. Nuclear war was averted. Vasili Arkhipov was a hero… again.

When the sub arrived back in Russia, the crew of the B-59 were met with trepidation. After all, they had pretty much surrendered to the Americans. Said one Russian admiral to the submariners, “‘It would have been better if you’d gone down with your ship.”

Despite the not-so-hero’s welcome he originally received from the Soviets upon his return, to his wife, Olga, Vasili was always the man who saved the world,
“The man who prevented a nuclear war was a Russian submariner. His name was Vasili Arkhipov. I was proud and I am proud of my husband, always.”

 

Source:::: Today i foundout.com

Natarajan

விற்பனைக்கு வந்த தாத்தாவின் பொக்கிஷம் …

கட்டங்களுக்குள் அடைபட்ட சித்திரங்களாக நகரும் காமிக்ஸ் கதைகள் நம் மனதில் மாறாமல் தங்கியிருப்பவை. பலரின் பால்ய நினைவிலிருந்து பிரித்தெடுக்க முடியாதவை. வெளிநாட்டு காமிக்ஸ் புத்தகங்களின் தாக்கத்தில் தமிழிலேயே நேரடியாக உருவாக்கப்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் நம் பார்வையில் அதிகம் படாதவை. தமிழில் காமிக்ஸ் தயாரிப்பில் முழுமூச்சுடன் இயங்கியவர்களில் முக்கியமானவர் முல்லை தங்கராசன்.

லாரி ஓட்டுநராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய முல்லை தங்கராசன், ‘டிரைவர்’ என்ற மாத இதழை நடத்தினார். நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கான குறிப்புகள், சாலை விதிகள் உள்ளிட்ட விஷயங்களைத் தாங்கிவந்த இதழ் அது. 1969-ம் ஆண்டு ஒரு சித்திரக் கதையில் சினிமாவைப் புகுத்தினார்.

எம்.ஜி.ஆர். போலவே தோற்றம் கொண்ட ஒருவர்தான் அந்த சித்திரக்கதையின் நாயகன். எம்.ஜி.ஆர். மற்றும் அறிஞர் அண்ணாவிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுத்து வாழ்த்து பெற்றார் தங்கராசன்.

மாயாஜால, மந்திரக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்றவராக விளங்கியவர் இவர். பின்னர், முத்து காமிக்ஸ் நிறுவனத்தில் பதிப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். அந்நிறுவனத்திலிருந்து வெளியே வந்த பின்னர் மாயாவி என்ற பெயரில் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டார். சிறுவர்களுக்கான கதைப் படங்கள் கற்பனையைத் தூண்டும் விதத்தில் அமைய வேண்டும் என்ற கொள்கை கொண்ட இவர், முழு வண்ணத்திலான காமிக்ஸ் புத்தகங்களையே உருவாக்கினார்.

தமிழ் காமிக்ஸ் உலகில் குறிப்பிடத் தக்க சாதனையைச் செய்த இவர், காமிக்ஸ் ரசிகர்களின் உலகுக்கு வெளியே அறிமுகமே ஆகாதவர். இவரைப் பற்றியும் இவரது காமிக்ஸ் புத்தகம்பற்றியும் சமீபத்தில் தெரியவரக் காரணம், அமெரிக்காவில் வசிக்கும் இவரது பேரன் மதன்ராஜ் மெய்ஞானம்தான்.

இவர் பணிநிமித்தமாக கலிபோர்னியாவில் சில ஆண்டுகளாக வசித்துவருகிறார். திரைப்படத் துறையில் ஆர்வமுள்ள இவர், குறும்படங்களில் உதவி இயக்குநராகவும் பணிபுரிகிறார். ஒரு விடுமுறை நாளில் இவர் ‘டோர்சே புக்ஸ்’ என்ற அமேசான் இணையதள விற்பனை அங்காடியில் இருக்கும் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு புத்தகம் இவரது பார்வையில் பட்டது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க, அந்தப் புத்தகத்தை உடனடியாக வாங்கிவிட்டார் மதன்ராஜ்.

‘ஸ்ரீ வெங்கடேசுவரர் புராணச் சித்திரங்கள்’ என்ற பெயர் கொண்ட அந்தப் புத்தகம், தமிழில் அதிக முறை பதிப்பிக்கப்பட்ட காமிக்ஸ் புத்தகம், அதிகம் விற்பனையான காமிக்ஸ் புத்தகம், அதிக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழ் காமிக்ஸ் புத்தகம் என்று பல்வேறு சிறப்புகளைப் பெற்றது.

எஸ். கணேசன் என்ற ஓவியர் வரைந்த வண்ண ஓவியங்களுடன் 1971-ல் இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட அந்தப் புத்தகத்தை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மதன்ராஜ் வாங்கியபோது அதன் விலை பல ஆயிரம் ரூபாய். காமிக்ஸ் புத்தகங்களின் பொக்கிஷ மதிப்பு எத்தகையது என்பதை அறிய இந்த ஒரு தகவல் போதும்!

கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர்,
தொடர்புக்கு: prince.viswa@gmail.com

Keywords: காமிக்ஸ் கதைகள், புத்தகங்கள், காமிக்ஸ், சித்திரக் கதை
Topics: சமூகம்| பதிவுகள்| பொது|

Source:::: கிங் விஸ்வா  in THE HINDY…TAMIL

Natarajan

“அய்யர் பொட்டலக் கடை…”

 

உத்திரமேரூரில் அய்யர் பொட்டலக் கடை என்ற பெயரில் இனிப்பு, கார பட்சணங்கள் விற்பனை செய்யும் சின்னஞ்சிறு கடைக்கு, கடல் கடந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

காலத்தின் புழுதி படிந்து காட்சியளிக்கிறது கடை.

கடையில் காலையிலேயே கூட்டம் களைகட்டி விடுகிறது. காலை 11 மணிக்குள் மிக்சர், பூண்டு சேவு முதலிய அயிட்டங்கள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. மாலை 4.30 மணிக்குள் மொத்த சரக்கும் காலியாகி கடை பூட்டப்பட்டுவிடுகிறது.

“இன்னிக்கு இவ்வளவுதான்னு பகவான் படியளந்திருக்கான். இது போதும் எனக்கு” என்று கூறும் கடை உரிமையாளர் தன் பெயரைச் சொல்ல மறுக்கிறார்.

“என் பேரு எதுக்கு? பெயரில்லை ஸ்வாமி எனக்கு. பொட்டலக் கடை அய்யர்தான் என் பேரு, இந்த வட்டாரத்துல யாரக் கேட்டாலும் சொல்லுவாங்களே. என் அப்பா பேரும் இதுதான், தாத்தா பேரும் இதுதான். 60 வருஷமா அய்யர் பொட்டலக் கடை என்கிற பேர்ல கடை நடத்திக்கிட்டுவர்றோம்.”

சுவையும் தரமும் தனித்தன்மையும் மிகுந்த இவர் கடையின் இனிப்பு, கார வகைகளுக்கு கலெக்டர், நீதிபதிகள், டாக்டர்கள், தொழிலதிபர்கள், பெரிய பெரிய சங்கீத வித்வான்கள், கலைஞர்கள் எல்லாம் வாடிக்கையாளராக இருப்பது இது வெறும் கடை மட்டுமல்ல, கிராமியக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்பதையே உணர்த்துகிறது.

“எங்க கடையில பட்சணம் வாங்கிச் சாப்பிடுற குழந்தைக்கு எந்த விதமான வயிற்றுக் கோளாறும் வரக் கூடாது. கலப்படம் கிடையாது, தரம்தான் எங்க கடையின் ‘தாரக மந்திரம்’. ஆனாலும், அந்தக் காலத்து பட்சணத்தின் தினுசே வேற சார். இப்போ இருக்க விலைவாசியில தரத்தைக் காப்பாத்த படாதபாடு படவேண்டியிருக்கு” எனும் பொட்டலக் கடை அய்யருக்கு தற்போது 80 வயதாகிறது. தாடியும் மீசையுமாக ஒரு யோகிபோலக் காட்சிதருகிறார்.

“அந்தக் காலத்தில் பட்சணம் செஞ்சபோது ஒரு மூட்டை கடலைப் பருப்பு (அதாவது 64 படி) விலை ரூபாய் 56, ஒரு டின் கடலை எண்ணெய் (16 கிலோ) ரூபாய் 18, ஒரு வீசை பட்டாணி 13 அணா, ஒரு வீசை மந்தாரை இலை பத்தணா, ஒரு வீசை சக்கரை (1,400 கிராம்) 13 அணா” பழைய விலைவாசியை நினைவிலிருந்து சொல்லிக்கொண்டே போகிறார்.

பட்சணக் கடையின் உட்புறமுள்ள வீட்டுக்குள் அழைத்துக் காண்பித்தார். நீண்ட முற்றத்தின் ஒரு பகுதியைத் தடுத்து, அதிலே நட்டுவைத்திருக்கும் ருத்திராட்ச மரங்களைக் காண்பித்தார். 150 அடி வரை வளரக்கூடிய இம்மரங்களைத் தரிசிப்பது 100 கோயில்களை தரிசிப்பதற்கு இணையாகும் என்று சொல்லிப் பெருமைப்படுகிறார்.

வீடெங்கும் பட்சணத் தயாரிப்பின் நறுமணத்தோடு பக்தி மணமும் கமழ்கிறது. கூடம் ஏறக்குறைய ஒரு தியான மண்டபம்போல் இருக்கிறது. நூற்றுக் கணக்கான சாமி படங்கள், சிலைகள். எல்லாவற்றுக்கும் மாலைகள்.

பேச்சின் நடுவே டபரா டம்ளர்களில் காப்பி வந்தது. பிரமாதமான காப்பி. “எங்களுக்குப் பேராசை கிடையாது, ஸ்வாமி இவ்வளவு குடுத்திருக்கார் பேரப்பிள்ளைகளோடு சந்தோஷமாக, திருப்தியாக இருக்கோம், இது போதும்”

-தூணில் சாய்ந்துகொண்டு மூக்குத்தி மினுங்க மாமி சொன்னார்.

அந்தத் திருப்தியையும் சந்தோஷத்தையும்தான் அந்தத் தம்பதியர் தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பொட்டலமாகக் கட்டிக் கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

தஞ்சாவூர் கவிராயர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

படித்ததில் ரசித்தது …” சும்மா ..தமிழிலேயே பேசுங்க …”

விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த பேச்சாளர், ‘தமிழ்ப் பண்ணை’ என்ற பதிப்பக உரிமையாளர், காமராஜரின் அருந்தொண்டர், சிவாஜி கணேசன் ரசிகர்மன்ற மாநிலத் தலைவர் என்றெல்லாம் இருந்து, பிரபலம் பெற்றவர் மறைந்த சின்ன அண்ணாமலை. அவர் எழுதுகிறார்:
வங்காள கவர்னராக ராஜாஜி, 1947ல் பதவி ஏற்ற போது, நாங்கள் மே.வங்க தலைநகரான கல்கத்தாவுக்கு சென்றிருந்தோம். ராஜாஜியின் விருந்தினராகத் தங்கும் பாக்கியம் கிடைத்தது. சாந்திநிகேதனில் ராஜாஜிக்கு, ஒரு வரவேற்பு. வங்காளத்தின் பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் கூடியிருந்த அந்த சபையில், என்னைப் பேசும்படி தலைமை வகித்த பி.சி.கோஷ் (அப்போதைய வங்காள முதலமைச்சர்) அழைத்தார். நான் திடுக்கிட்டு,
ராஜாஜியை பரிதாபமாகப் பார்த் தேன்.
‘சும்மா தமிழிலேயே பேசுங்க; டி.கே.சி., ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார்…’ என்று, கூறினார் ராஜாஜி.
‘சரி’ என்று, மைக் அருகில் வந்தேன். திடீரென்று ராஜாஜியே எழுந்து, ஒரு மாலையை என் கழுத்தில் போட்டார். சபையோரின் பலத்த கரகோஷம்; நான் ராஜாஜியின் அன்பினால் திக்குமுக்காடி, பேச ஆரம்பித்தேன்…
‘ராமபிரானுடைய ஆண்மையும், கிருஷ்ணனுடைய ராஜதந்திரமும், புத்தருடைய தூய்மையும், சி.பி. சக்கரவர்த்தியின் தியாகமும், ராமானுஜரின் மத பக்தியும், வள்ளுவரின் வாய்மையும் சேர்ந்து, உருவெடுத்து வந்திருப்பவர் ராஜாஜி.
‘ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மூலம், இந்து மதத்திற்குப் புத்துயிர் உண்டாயிற்று. விபின் சந்திரபால் சென்னைக்கு வந்து, ஆறு சொற்பொழிவுகள் ஆற்றியதன் மூலம், தமிழகத்தில் தேசபக்தியை உண்டாக்கினார்; சித்தரஞ்சன் தாஸ் நாடு முழுவதும் விடுதலைக் கிளர்ச்சியை உண்டாக்கினார். ராஜாராம் மோகன்ராய், ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி முதலியவர் களால், தமிழகத்துக்கு எவ்வளவோ பயன் கிட்டியிருக்கிறது. இவர்கள் எல்லாம், வங்காளத்தில் பிறந்தவர்கள். அப்பேர் பட்ட வங்கத்திற்கு, நாம் என்ன கைம்மாறு செய்யலாம்; செய்ய முடியும் என்று, ஏங்கிக் கொண்டிருந்தோம்.
‘ஆனால், அதற்கெல்லாம் வட்டியும், முதலுமாக, எங்கள் ராஜாஜியை உங்களுக்கு கவர்னராக கொடுக்கிறோம். ராஜாஜியை கவர்னராக அடைய, இந்த வங்காளம், 100 ஆண்டு காலம் தவம் செய்திருக்க வேண்டும்…’ என்று நான் கூறிய போது, ‘ராஜாஜிக்கு ஜே!’ என்ற கோஷம், விண்ணை பிளந்தது.
நானும் மரியாதையாக, அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டேன்; விழா முடிந்தது. திரும்பும்போது, ராஜாஜியிடம், ‘என்னை எதற்காகப் பேசும்படி பணித்தீர்கள்.
டி.கே.சி., பேசினால் போதாதா?’ என்றேன். அதற்கு ராஜாஜி, ‘ரசிகமணி ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தது. எனவே, நம் தமிழ் மொழியை வங்காளிகள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதனால்தான், உங்களைப் பேசச் சொன்னது…’ என்று சொல்லி, சிறிது நேரம் மவுனமாக இருந்து பின், ‘நானே உங்களுக்கு மாலை போட்டது ஏன் தெரியுமா?’ என்ற கேள்வியையும் போட்டு, பதிலையும் சொன்னார்.
‘உங்களை இங்கு ஒருவருக்கும் தெரியாது. நீங்கள் பேசும்போது, யாரோ என்று வங்காளிகள் அசிரத்தையாக, இருந்துவிட்டால், உங்கள் தமிழை கவனித்துக் கேட்க முடியாது. நான் மதித்து மாலை போடக்கூடிய ஆள் என்று தெரிந்துவிட்டால், எல்லாரும் கவனமாகத் கேட்பர். அதற்காகத்தான்…’ என்று கூறினார். ராஜாஜியின் பெருந்தன்மையை நினைத்து உருகிப் போனேன்.

—’சொன்னால் நம்ப மாட்டீர்கள்…’ நூலிலிருந்து.

Source:::: DINAMALAR …Tamil Daily… In VAARA MALAR
Natarajan