பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள் !!!

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவைகளில் சில………

* திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

* எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

* ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

* ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக இருக்கின்றன.

2* திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

* ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

* ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

* ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

* பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

* ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

* அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

* ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

* மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ணதேவராயர், அச்சதராயர் போன்றோர். ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்5கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

* ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

* திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

* வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

* சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

* ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

* எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

* ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

* 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்.1

* திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

* திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

* ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

* ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

* கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

4* வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் ” வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

* திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

* திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

source:::: in ஆன்மீக அர்த்தங்கள்கட்டுரைகள்  & Dinamani Jothidam

natarajan

 

“ஆண்டாளை அலங்கரிக்கும் கிளி ” …

வழிபாடு எத்தனை உன்னதமானதோ, அதைச் சென்றடைகிற வழியில் நேரும் நிகழ்வுகளும் அத்தனை உன்னதமானவையே. அந்த நிகழ்வுகள்தான் வழிபாட்டையும் வாழ்க்கையையும் அழகானதாக்கிவிடுகின்றன.

இறைவனின் தோள்களையும் திருவடிகளையும் அலங்கரிக்கிற மலர்களைச் சேகரிப்பதில் கிடைக்கிற மகிழ்வும் நிறைவும் வேறெதிலும் கிடைக்காதவை. செவ்வரளி, சம்பங்கி, மல்லிகை, முல்லை, ரோஜா, துளசி, வில்வம் ஆகியவற்றைத் தொடுக்கும்போதே, ‘நான் இறைவனுக்குச் சொந்தம்’ என்ற பெருமிதத்தை மலர்களின் முகத்தில் காணலாம். தொடுத்த சரங்களை இறைவனுக்குச் சூடிப்பார்க்கிறபோது ஏற்படும் ஆனந்தம் அலாதியானது.

இறைவன் உறைந்திருக்கும் இடத்தை, பசுஞ்சாணத்தாலோ, தெளிந்த நீராலோ மெழுகி, மாக்கோலமிடுவதிலும் ஒரு நிறைவு இருக்கத்தான் செய்கிறது. பெரியவர்கள் கோலமிடுவது, வீட்டுக் குழந்தைகளுக்கெல்லாம் வேடிக்கை நிறைந்த வாடிக்கை. கோலத்தில் நிறைந்திருக்கும் அரிசியை எடுக்க வரிசையாக வரும் எறும்புகள், இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள்போலவே தோன்றும்.

இறை வடிவங்களுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இடும்போதே, நம்மையறியாமலேயே பக்தியின் பாதையில் மனம் சென்றுவிடும்.

இறைவனுக்கான நிவேதனங்களைத் தயாரிப்பதிலும் வழிபாட்டின் பரவசத்தை உணரமுடியும். பொங்கலோ, அக்காரவடிசலோ எதுவாக இருந்தாலும் இறைவனுக்கு என்று செய்யப்படும்போது அவை சுவைமிகுந்ததாகவே தயாராகிவிடும்.

விளக்கேற்றும் தருணம், வாழ்வின் கவலைகளை எல்லாம் மறக்கடித்துவிடும். ஆடாமல், அசையாமல் நின்று நிதானித்து எரியும் விளக்கின் முன்னால் அமைதியுடன் உட்கார்ந்திருப்பதைவிட வேறெந்த தவத்தைச் செய்துவிட முடியும்? அந்தப் பேரமைதியும், மனதுள் வியாபித்து நிற்கும் இறைவனின் பேருருவமும் வழிபாட்டை நிறைவுபெறச் செய்துவிடும்.

ஒவ்வொரு இறை வடிவத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தையோ, அணிகலனையோ, ஆயுதத்தையோ பொருத்திப் பார்க்கும் மரபு, வழிபாடு துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. இந்த மார்கழி மாதத்தில் ஆண்டாள் அருளிச்சென்ற திருப்பாவையைப் பெண்கள் அனைவரும் பாடி மகிழ்வர். பனி விலகாத, அதிகாலையில் நீராடி, பூச்சூடி பெண்கள் பாவை பாடுவதைக் கேட்பதே ஒரு வழிபாடுதான்.

திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் மட்டுமல்ல ஆண்டாளின் சிறப்பு. சாய்ந்த கொண்டையும், அவரது தோளில் வீற்றிருக்கும் கிளியும் ஆண்டாளின் அடையாளங்களே. வில்லிப்புத்தூரில் குடிகொண்டிருக்கும் ஆண்டாளுக்குத் தினம் தினம் ஒரு கிளி செய்யப்படுகிறது. நாகமல்லிகை, நந்தியாவட்டை, ஏழிலைக்கிழங்கு, வெள்ளரளி, செவ்வரளி ஆகியவற்றின் இலைகளைச் சேர்ந்து கிளி பின்னப்படுகிறது. ஆண்டாளின் தோளை அலங்கரிக்கும் இந்தக் கிளியைப் பெறுவதற்கு பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

முதல்நாள் வரை ஒரு செடியில் இலையாக இருந்தது, இன்று ஆண்டாள் தோளில் கிளியாக இருக்கிறது. இதுவும் வழிபாட்டின் மகிமையே.

source::::Brindha Srinivasan in The Hindu …Tamil
natarajan

“நாம் சரியாகத்தான் பேசுகிறோமா?”…..!!!

 

ஆம் ஆத்மி கட்சியில் துவங்கி, அம்மியில் சட்னி அரைப்பது வரை அனைத்துக்கும் கருத்துச் சொல்லும் திறமை பலருக்கு இருக்கிறது. நமது பரந்துபட்ட அனுபவங்களுடன் நம் கற்பனைத் திறனும் கை கோக்கும்போது உருவாகிற பேச்சாற்றலுக்கு எல்லையே இல்லை. இடம், பொருள், ஏவல் எல்லாம் பலரது பேச்சுக்கு அப்பாற்பட்டவையாகவே இருந்து வந்திருக்கின்றன. ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ என்று சொல்லிச் சென்ற பாரதிக்கு மரியாதை செய்யும் நிமித்த மாவது “பயனில சொல்” பலவற்றைப் பேசிக்கொண்டே இருக்க வேண்டாமா?

சரி, அந்தப் பேச்சுத்திறமையின் வீச்சைக் கொஞ்சம் பார்க்கலாமா? தன் கணவரின் அலுவலகத் தோழி குறித்து இயல்பாகச் சொல்லியிருப்பாள் ஒரு தோழி. அதை கேட்டுக்கொண்டு மட்டும் இருந்தால் என்னாவது? நாலைந்து முத்துக்களை உதிர்க்க வேண்டுமே. உடனே, ‘இப்படித்தான் நம்ம தேவியும் வெகுளியா சொன்னா. கடைசியில பார்த்தா அவ வீட்டுக்காரருக்கும் அந்தப் பொண்ணுக்கும் கல்யாணமே ஆகிடுச்சாம். ரெண்டு புள்ளைகளோட இப்ப நிராதரவா இருக்கா’ என்று பொக்ரான் அணுகுண்டை போகிற போக்கில் சிலர் வீசுவார்கள். என்னது… தோழியின் நிம்மதியா? அதைப் பற்றி நமக்கென்ன கவலை?

வினையாகும் விசாரிப்பு

நண்பர் ஒருவர் சர்க்கரையாலோ வேறு சில உடல் சிக்கல்களாலோ மெலிந்திருக்கலாம். வழியில் பார்ப்பவரை வம்படியாக நிறுத்திவைத்து, ‘என்னப்பா இப்படி துரும்பா இளைச்சுட்டே. நல்ல டாக்டரா பாருப்பா. பெரிய வியாதியெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கும்’ என்று சொல்லி அடுத்த நாளே அவருக்கு மருத்துவமனையில் அனுமதி வாங்கிக்கொடுத்து விடுகிறவர்களும் உண்டு. அவருக்கு ஏற்படும் மன உளைச்சல், பேச்சுடன் தரப்படும் இலவச இணைப்பு.

ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்த பிறகுகூட, அவரை அப்படியே விட்டுவிடலாமா? கையில் நாலு சாத்துக்குடியுடன் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு, ‘என்னதான் ஆபரேஷன் பண்ணாலும் ஆறு மாசம்தான் தாங்குமாம். எனக்குத் தெரிஞ்ச டாக்டர் சொன்னார்’ என்று அவருக்குத் தேதி குறித்துவிட்டு வருவதில்தான் சிலருக்கு என்னவொரு பேரானந்தம்.

அவதிப்படுத்தும் அனுபவப்பாடம்

கல்லூரிக்குச் செல்லும் மகளை வழியனுப்பிவிட்டு அப்போதுதான் உட்கார்ந்திருப்பார் அந்த அம்மா. அவரை சும்மா இருக்கவிடலாமா? உடனே பிரம்மாஸ்திரத்தை எய்துவிடுவோம். ‘இந்தக் காலத்துல ஆம்பளைப் பசங்களைக்கூட நம்பிடலாம். இந்தப் பொண்ணுங்களைதான் நம்ப முடியறது இல்லை. என் நாத்தனார் பொண்ணும் இப்படித்தான் ஊமைக் கத்தாழை மாதிரி இருப்பா. திடீர்னு போன வாரம் நான் ஒருத்தனைக் காதலிக்கறேன்னு வந்து நிக்கறா. என்ன பண்றது, நீங்களே சொல்லுங்க?’என்று திரியைக் கிள்ளி வைப்போம். மகள் வீட்டுக்கு வந்ததும் அது டைம்பாமாக வெடிக்கலாம்.

திருவாய் மலரும் தருணம்

சாதாரண நாட்களில்தான் என்றில்லை. குடும்பமே கூடியிருக்கும் மகிழ்ச்சியான தருணங்களிலும் பலரும் திருவாய் மலரத் தயங்குவதே இல்லை. குழந்தையைத் தொட்டிலில் போடுகிற நேரமாகப் பார்த்து, ‘ரெண்டாவதும் பொண்ணா போயிடுச்சே. பரவாயில்லை விடுங்க. கடைசி காலத்துல பொண்ணுங்கதான் நம்மளைக் காப்பாத்துவாங்க’ என்று வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவார்கள். குழந்தையின் தாய் முகத்தில் தோன்றும் வருத்தமும் வேதனையும் அவர்களை ஏன் பாதிக்கப் போகிறது?

உறவினர் வீட்டுத் திருமண விழாவில் முதல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு, ‘இன்னும் கொஞ்சம் தேடியிருந்தா நல்ல நிறமாவே பொண்ணு கிடைச்சிருக்கும். என்ன பண்றது? எல்லாம் காசு செய்யுற வேலை’என்று தங்கள் வயிற்றெரிச்சலுக்கு வடிகால் தேடிவிட்டு, பந்திக்கு முந்துவார்கள்.

இனிப்பும் கசப்பும்

வேலை கிடைத்த மகிழ்ச்சியைப் பகிர இனிப்புடன் வந்திருப்பான் ஒருவன். நம் அனுபவத்தை எல்லாம் அவன் தலையில் கொட்டுவதுதானே சிலரது சிறப்பியல்பு. ‘வெளுத்தது எல்லாம் பால்னு நினைச்சுடாதப்பா. அந்த சூப்பர்வைசர் ஒரு முசுடு. அந்த சிடுமூஞ்சி மேனேஜர்கிட்டே வேலை பார்க்கறதுக்கு நாலு கழுதையை வாங்கி மேய்க்கலாம். உன் பக்கத்து சீட் ஆள்கிட்டே ரொம்ப கவனமா இருக்கணும்’ என்று அலுவலகத்தில் அவன் யாருடனும் பேசாத அளவுக்குச் செய்துவிடுவதில்தான் எத்தனை மனநிறைவு.

இதோடு முடிந்ததா என்றால் இல்லை. உலகையே ஆளத் துடித்த அலெக்ஸாண்டர் மாதிரி சிலரது பேச்சுத் திறமையும் பரந்துபட்டது. தெரிந்தவர் புதிதாக எதையாவது வாங்கிவிட்டால் போதும். உடனே சிலர் ஸ்க்ரூ டிரைவரும் வாயுமாகக் கிளம்பிவிடுவார்கள். ‘இந்த மாடல் ரொம்பப் பழசாச்சே. திரும்பக் குடுத்தா காயலான் கடைக்காரன்கூட வாங்க மாட்டான். போனவாரம்தான் குறைஞ்ச விலைக்கு புது மாடல், என் மச்சானுக்கு வாங்கிக் கொடுத்தேன். உங்களை நல்லா ஏமாத்திட்டான் சார்’ என்று சொல்லிவிட்டால் போதும். அந்தப் பொருள் பழுதடைந்து, முடங்கும் வரை அவரை நிம்மதியில்லாமல் அலையவிடலாம்.

கருத்து சொல்லும் கலை

இவை மட்டும் இல்லை குழந்தைப் பிறப்பில் தொடங்கி, எரிமேடை வரை எதைப் பற்றியாவது கருத்து சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறோம். ஆனால் அவை நேர்மறையானவைதானா? நம் மனதின் ஏமாற்றங்களுக்கு மருந்து போடுவதாக நினைத்துக்கொண்டு அடுத்தவரை காயப்படுத்துகிறோம். அதை நாம் ஒருபோதும் யோசிப்பதே இல்லை. கருத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் இருக்கிறோம். காரணம் யோசிக்கவும் நேரமின்றி கருத்துச் சொல்லிக் களைத்துப் போகிறோம். அப்படிச் செய்வதன் மூலம் அடுத்தவரையும் கருத்துப் போராளியாக மாற்றி விடுகிறோம். நமக்குத் தெரிந்ததை அடுத்தவருக்குச் சொல்வதில் தவறேதும் இல்லை. ஆனால் எதை, எப்படி, யாரிடம் சொல்கிறோம் என்பதில்தான் நம் பேச்சின் பொருளே அடங்கியிருக்கிறது.

உற்சாகப்படுத்துவது நல்லது

இப்படி எல்லா இடங்களிலும் அடுத்தவரின் கவனத்தைக் கவரவோ, சிதைக்கவோ கருத்துச் சொல்கிற முனைப்பு ஏன் ஏற்படுகிறது? “அடுத்தவர் மத்தியில் தன்னை முன்னிறுத்திக் காட்டத் துடிக்கும் தன்முனைப்புதான் இதற்குக் காரணம்” என்கிறார் மனநல நிபுணர் அசோகன்.

“இப்படி மாற்றுக் கருத்துச் சொல்கிறவர்களில் இரண்டு வகை உண்டு. எதையுமே எதிர்மறையாகப் பார்க்கும் குணம் சிலருக்கு இயல்பிலேயே இருக்கலாம். மற்றொரு வகையினர் தங்கள் வாழ்வின் தோல்விகளின் வெளிப்பாடாக இப்படிப் பேசலாம். தங்களுக்குக் கிடைக்காத கல்வி, படிப்பு, வேலை, வெற்றி இவற்றை எல்லாம் அடுத்தவர் அடையும்போது, அதைப் பார்க்கச் சகிக்காமல் இப்படிப் பேசலாம். தான் மட்டும் தோற்கும்போது, இவர்கள் எப்படி வெற்றி பெறலாம், இவர்களும் தோற்கட்டுமே என்ற நினைப்பு அவர்களை அப்படிப் பேசத் தூண்டும். தோற்றுப்போன மனதின் வெளிப்பாடு என்று சொல்வதைவிட, வாழ்க்கையில் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.

இவர்கள், அடுத்தவரின் உரையாடலைத் தள்ளி நின்று கேட்டாலே, இதுபோல கருத்துக்கள் சொல்வதில் இருந்து விடுபடலாம். தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைச் சொல்வதன் மூலம் அடுத்தவர் பாதிக்கப்படுவார் என்று தெரிந்தால் அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஒரு எதிர்மறை வார்த்தைக்குப் பதிலாக ஆயிரம் நல்ல வார்த்தைகள் சொல்லி, அடுத்தவருக்கு உற்சாகமூட்டலாம். உறவுநிலைகளிலும், தொடர்புநிலைகளிலும் இணக்கத்துடன் இருந்தாலே போதும். கருத்துச் சொல்லும் மனநிலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்” என்று இந்த குணத்தைக் கையாளும் வழிமுறைகளைச் சொல்கிறார் அசோகன்.

எதைச் சொல்வதாக இருந்தாலும், கேட்பவர் இடத்தில் நம்மை ஒருமுறை நினைத்துப் பார்த்துவிட்டுத் தொடங்குவது உத்தமம். இடம், பொருள், ஏவல் என்னும் மந்திரத்தை மறந்துவிடக் கூடாது. அப்படியும் உணர்ச்சி வேகத்தில் பேசத் தொடங்கிவிட்டாலும் எதிர்மறைக் கருத்துக்களையாவது தவிர்க்கலாமே. நாலு பேருக்குக் கருத்து சொல்வது மட்டுமல்ல, சொல்லாமல் இருப்பதும் சிலசமயம் நல்லதுதான்.

தஞ்சை பெரிய கோயில் மணல் மீது கட்டப்பட்டதா ???!!!

 

உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.

மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கீழே இரு மடங்கு சுமை

பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.

அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

தலையாட்டி பொம்மை போல..

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.

இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் கூறினார்.

சிலை, நாணயங்கள் இருக்கலாம்

ஒடிசா மாநிலத்தில் வரலாற்றுக் கோட்டைகளை ஆய்வு செய்தவரான ஒரிசா பாலு கூறும்போது, நம் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது காட்சிக்காகவும் பக்திக்காகவும் மட்டும் அல்ல. அன்னியர்களால் நமது வரலாறு அழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தான் பிரமாண்டமான கோயில்களைக் கட்டியுள்ளனர். அப்படி பிரமாண்டமாக அமைத்தால்தான் அதன் அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்து பொருட்களைப் பாதுகாக்க முடியும்.

எனவே, பெரிய கோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக் கட்டுமானக் கலையின் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம். கோயிலில் அகழ்வாராய்ச்சி நடத்தித்தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Ground penetrating radar தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள் ஊடுருவி படங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்” என்றார்.

Topics:

சமூகம்|கலாச்சாரம்|பண்பாடு|பதிவுகள்| source:::::டி.எல்.சஞ்சீவிகுமார் in   The Hindu…Tamil

natarajan

Some Riddles to Get Rid off Your Stress !!!

1. Who won the Ramon Magsaysay award for Eminent Leadership in 2006?

2. Which cricketer’s nickname is “Hash”?

3. Name the new retail trade platform developed by Infosys in association with Proctor & Gamble.

4. Which popular tourist island would you be visiting if you land at the capital town of Denpasar, bargain for paintings at Ubud, play at the Kuta beach and while away the evening watching a Legong dance performance?

5. When Potti Sriramulu undertook a fast-unto-death for the creation of a separate Andhra state, which city did he demand be made the capital of the Andhra state?

6. In the 1920s, new airplanes allowed people to fly higher and farther. Many US Army Air Service pilots reported that the glare from the sun was causing headaches and altitude sickness. In 1929, a US Army Air Corps, Lieutenant General John MacCready, asked New York-based medical equipment manufacturer Bausch & Lomb to find a solution. What was it?

7. There have been only three recipients, all artistes, honoured with all the four civilian awards of India —Bharat Ratna, Padma Bhushan, Padma Vibhushan and Padma Shri. Two of them are Bismillah Khan and Bhimsen Joshi who was the third?

8. Which opening in chess is named after a 16th Century Spanish Monk who also wrote one of the first definitive books on modern chess?

Answers:

1. Arvind Kejriwal

2. Hashim Amla (full name: Memon Hashim Mohammad Amla)

3. TradeEdge

4. Bali

5. Madras

6. The Ray Ban Aviator sun-glasses

7. Satyajit Ray

8. Ruy Lopez Opening, named after Ruy Lopez De Segura

 

Tailpiece !!!!

Do you know how the company we know as Mahindra and Mahindra got its name?” Of course, I do not. The answer is: The company was originally Mahindra and Muhammed. But with Partition, Malik Ghulam Muhammed moved to Pakistan where he became its first finance minister. Back home Mahindra was left with heaps of stationery with M&M on it. Rather than throwing it all away, they decided to call themselves Mahindra and Mahindra!

source::::  Pankaja Srinivasan… in The Hindu…  on Quiz Enthusiast couple from Coimbatore

Keywords: Priya BhansaliSheilendra Bhansaliquiz enthusiastsQuiz FoundationCoimbatore Quiz circlequiz constests

natarajan

In Homage to Uthradom Thirunal Marthanda Varma …

 

Uthradom Tirunal Marthanda Varma

Uthradom Tirunal Marthanda Varma

Kerala lost one of the last links with its royal past with the passing away of Uthradom Tirunal Marthanda Varma, head of the royal family of erstwhile Travancore, in the early hours of Monday.  16 Dec.2013.  . Mr. Varma, a witness to the transformation from imperial rule to a democratic polity, was a common presence in the social and cultural scene of the city.

He had stood guard over the age-old traditions, rites and rituals of Sree Padmanabhaswamy Temple ever since 1991, when he was anointed the trustee and “dasa” of the temple following the death of his elder brother and last sovereign of Travancore, Sree Chithira Tirunal Balarama Varma. Mr. Varma, born as the younger son of Maharani Sethuparvathi Bayi and Ravi Varma Koyi Thampuran on March 22, 1922, was educated in the Kowdiar Palace by a group of 14 tutors in various subjects. He later graduated from the then Travancore University with Economics, Politics and History as specialisations in 1943. He was the recipient of the Moncombu Aandi Iyer Gold Medal for the best student in Sanskrit.

 

 

source :::::Mahesh Krishnamurthy  in Sage of Kanchi Blog and Youtube and The Hindu

natarajan

” மார்கழி என்றால் …..”

 

“வைகறையின் செம்மை இனிது.

மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க.

உஷையை நாங்கள் தொழுகின்றோம்.

அவள் திரு.

அவள் விழிப்பு தருகின்றாள்.

தெளிவு தருகின்றாள்.

உயிர் தருகின்றாள்.

ஊக்கந் தருகின்றாள்.

அழகு தருகின்றாள்.

கவிதை தருகின்றாள்.”

– வைகறைப் பொழுதை வாழ்த்தும் பாரதியின் வார்த்தைகள் இவை.

வைகறை எப்போதும் அழகு; மார்கழியிலோ கூடுதல் அழகு; தமிழர் வாழ்வியலில் இன்னும் அழகு. முன்பனி, பின்பனி, நான்கு திசைகளில் வரும் வாடை, தென்றல், குடக்கு, குணக்கு என எல்லாவற்றையும் போற்றிய எம் மக்கள் பனிப் படலத்தைத் தன்மீது போர்த்திக்கொள்ளும் மார்கழியைக் கொண்டாடுவதுதான் எத்தனை அழகு?

மார்கழி என்றால், ‘முன்பே வந்து என்னை எழுப்புவேன் என்று சொன்னாயே, இன்னும் உறங்குகின்றாயோ, நாங்கள் முன்வந்து உன்னை எழுப்ப வேண்டியதாகியுள்ளதே, என்ன வினோதம் இது. பெருமாளை அத்தன் என்று அழைத்தாய் நீ, ஆனந்தன் என்று அழைத்தாய், அமுதன் என்று அழைத்தாய் நீ. இதெல்லாம் வெறும் வாய்ஜாலமோ. நீ இனி தூங்கிக்கொண்டே இருந்தால், உன் இரு கண்களும் மிக நீண்டு வளர்ந்துவிடும் எனும் அபாயத்தை மறந்துவிடாதே, விரைவில் நீராடிவிட்டு இறைவனை வழிபட வா’ என்று துயில் எழுப்பும் திருப்பாவை, திருவெம்பாவைக் கவிதைகள்.

மார்கழி என்றால், திருப்பாவை, திருவெம்பாவைக் கவிதைகளை அடாணா, பிலஹரி, வராளி, குந்தளவராளி, சங்கராபரணம், சிந்துபைரவி, தேஷ், பெஹாக் ராகங்களில் பாடிய எம்.எல்.வசந்தகுமாரியின் மறக்க முடியாத குரல். மார்கழி என்றால், கவிதையை ஆண்ட ஆண்டாள் பாசுரங்கள்.

மார்கழி என்றால், பாவை நோன்பு. மார்கழி என்றால், வீதிகள்தோறும் வெள்ளிக் கம்பளம் விரித்தது போன்று அரிசி மாவில் ஐந்து புள்ளி ஐந்து வரிசை, ஏழு புள்ளி ஏழு வரிசை, ஒன்பது புள்ளி ஒன்பது வரிசை என வளைந்து நெளியும் விதவிதமான கோலங்கள்.

மார்கழி என்றால், சூரிய விடியலுக்குக் காத்திராமல் அதற்கு முன்பே நீராடி விடியற்காலம் நான்கு மணிக்கே தொடங்கும் உஷ கால பூஜை. உஷ கால பூஜையில் வாசிக்கப்படும் பௌளி, பூபாளம்; காலை காலசந்தி பூஜையின்போது வாசிக்கப்படும் மலைய மாருதம், பிலஹரி, சாவேரி; சூரியன் உச்சியை அடையும் மத்திம காலத்தில் வாசிக்கப்படும் மத்தியமாவதி, சுருட்டி; உச்சிப் பொழுதிலிருந்து சூரியன் சாயுங்காலமான சாயரட்சை காலத்தில் வாசிக்கப்படும் கல்யாணி, பூர்விகல்யாணி; இரண்டாம் காலம், சுவாமி படுக்கைக்குச் செல்லும் முன் அர்த்தஜாம பூஜையில் வாசிக்கப்படும் நீதேனுகாலாம்பரி ராகங்கள்.

மார்கழி என்றால், முன்புறம் சுருட்டி, வாசமாலை, முகபடாம் போர்த்திய யானையின் அலங்காரம், எக்காளம், திருச்சீர்னம், டவுண்டி, நகரா என இசைக் கருவிகளின் இசையின் நடுவே மிதந்து வரும் சுவாமியின் வீதியுலா.

மார்கழி என்றால், இசை விழா.

மார்கழி என்றால், எதையும் கொண்டாடிப் பார்க்கும் எம் மக்களின் பண்பாட்டுச் சான்று.

மார்கழி என்றால், ஞாபகங்கள்.

மார்கழி போற்றுதும், மார்கழி போற்றுதும்!

source::::: தேனுகா  in The Hindu ….Tamil

natarajan

தேனுகா, கலை விமர்சகர், தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com

” பாரதியின் பாப்பா பாட்டு ” ….

ஓடி விளையாடு பாப்பா என்பது பாரதியார் எழுதிய பரந்து அறிமுகமான ஒரு குழந்தைகள் பாட்டு. இப் பாடலின் பல பகுதிகள் இலங்கை, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன.

bharathiyar

இந்தப் பாடல் பெண் குழந்தைகளை சிறப்பாக ஊக்கப்படுத்தி பாடப்பட்டிருக்கும் … இதோ  அந்த  கவிதை !!!…நீங்கள்  உங்கள் குழந்தைகளுக்கு  சொல்லிக்  கொடுக்க !!!

ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
வாழும் முறைமையடி பாப்பா.

source::::Dinamani  Tamil Daily…Blogsite

natarajan

இதுவும் ஒரு மேலாண்மைப் பாடமே!!!

தும்பா  ராக்கெட் ஏவுதளத்தில் விஞ்ஞானிகள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை ஓயாது உழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தத் திட்டத்தில் சுமார் 70 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.

kalam-friends-black

தங்கள் வேலைப்பளுவின் காரணத்தாலும், பாஸின் (திட்டத் தலைவரின்) நெருக்குதலாலும் கிட்டத்தட்ட எல்லா விஞ்ஞானிகளுமே மனத்தளவில் வெறுத்துப் போயிருந் தார்கள்.  ஆனாலும் “பாஸின்’ மீது கொண்டிருந்த விசுவாசம் நம்பிக்கையால் யாரும் வேலையை விட்டு வெளியே செல்லவில்லை.

ஒருநாள் காலை ஒரு விஞ்ஞானி, பாஸிடம் வந்து, “”சார்! நம் டவுனில் நடக்கும் கண்காட்சிக்கு மாலை 6 மணிக்கு என் குழந்தைகளை அழைத்துப் போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதனால் இன்று 5.30 க்கு நான் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவும்” என்றார்.
அவரும் “”சரி! நீங்கள் சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம்” என்று கூறிவிட்டார்.

அந்த விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட்டார். ஒரு சிறிய இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணியில் மூழ்கினார். தன்னை மறந்து வேலையில் இருந்து, தனது அன்றைய பணி நிறைவடையும் சூழ்நிலையில், கடிகாரத்தைப் பார்த்தால்  மணி 8.30. திடீரென, குழந்தைகளுக்கு அவர் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது. தனது பாஸைப் பார்க்கப் போனால், அவர் இல்லை!

பாஸிடம் அனுமதி வாங்கியிருந்தும் இப்படியாகிவிட்டதே என்று வருத்தம் கொண்டு, குழந்தைகளையும் இப்படி ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியோடு வீட்டினுள் நுழைந்தார்.  அவர் மனைவி மட்டும் ஒரு பத்திரிகையைப் படித்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தார். நிசப்தமான அந்த வேளையில் இவர் வாயைத் திறந்து எதுகேட்டாலும் அது பூமராங்காக திருப்பித் தாக்குவது போல் இவருக்குத் தோன்றியது.

இவரைப் பார்த்துவிட்ட மனைவி கேட்டாள்… “”என்ன காப்பி போடட்டுமா? அல்லது இரவு உணவே சாப்பிட்டு விடுகிறீர்களா? பசி எப்படியிருக்கிறது?”

இவர் சொன்னார்… “”காபி போட்டாயானால் எனக்குக் காப்பி கொடு. சரி; குழந்தைகள் எங்கே?”

“”உங்களுக்குத் தெரியாதா?” ஆச்சரியமாகக் கேட்டார் அவர் மனைவி. “”உங்கள் மேலாளர் 5.15 க்கு வீட்டுக்கு வந்தார். கண்காட்சிக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றாரே!” என்று வியப்புடன் பதிலளித்தார்.

அப்போதுதான் இவர் தன் பாஸிடம் கேட்டது நினைவுக்கு வந்தது. இவர் பாஸின் மனதை அறிந்தவராதலால் நடந்ததை ஒருவாறு யூகித்துக் கொண்டார்.

5 மணி வரை இவர் தன் வேலையில் மிக உன்னிப்பாக இருப்பதைக் கண்ட பாஸ், “இவர் இப்போதைக்கு சீட்டை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை’ என்று முடிவு செய்து, இவர் வேலையையும் தொந்தரவு செய்யாமல், அதே நேரம் இவர் apj_kalamகுழந்தைகளுக்குக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றி குழ்தைகளும் ஏமாற்றமடையாமல் இருக்க, தானே குழந்தைகளைக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அவர் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்ததில்லை! ஆனால் ஒரேயொரு முறை இப்படிச் செய்ததால், தன்னுடைய அன்பையும் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தினார்.

எனவேதான் தும்பாவில் உள்ள அந்த விஞ்ஞானிகள்  பல்வேறு மன உளைச்சல்களுக்கும் இடையில் அந்த பாஸின் தலைமையில் தொடர்ந்து வேலை செய்தனர்.

அந்த “பாஸ்’  நமது முன்னாள் ஜனாதிபதி அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்!

source:::::Dinamalar …Tamil Daily

natarajan

மகாகவி பாரதியாரின் சகோதரருடன் ஒரு சந்திப்பு !!!

1984ம் ஆண்டு.
“பாரதியார் பிறந்தநாள் வரப் போவுதே.. என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டார்கள் திருநெல்வேலி வானொலி நிலைய நண்பர்கள்.
நான் யோசித்தேன்.
“இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்யலாமே…’ என்று யோசனை கூறினார் ஒரு நண்பர்.
“வித்தியாசமா…ன்னா…?’
“பாரதியாரை நேரில் பார்த்தவர்கள், அவரோடு பழகியவர்கள், இப்படிப் பட்டவர்களை நேரிலே சந்தித்துப் பேசி… அதையெல்லாம் தொகுத்துக் கொடுக்கலாமே…!’
“நல்ல யோசனைதான். இருந்தாலும் பாரதியாரோடு பழகியவர்கள் இந்தக் காலத்திலே இன்னும் யார் இருக்கப் போகிறார்கள்?’
“என்ன சார் அப்படிச் சொல்லிபுட்டீங்க.. பாரதியாரின் தம்பி இருக்காரே… அவரைப் போய்ப் பார்க்கலாமே…!’ என்றார் டி.கே.ஆர். (நண்பர் தெ.கு.இராமச்சந்திரன் அப்போது எங்களோடு வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொணிடருந்தார். அவரை எல்லோரும் செல்லமாக டி.கே.ஆர். என்றுதான் அழைப்பது வழக்கம்)
“பாரதியாரின் தம்பியா?’ என்றேன் ஆச்சரியத்தோடு.
“ஆமாம். சி. விஸ்வநாத ஐயர்!’ என்றார் டிகேஆர்.
“எங்கே இருக்கார்?’
“மானாமதுரையிலே இருக்கார். அந்த ஊர் பள்ளிக் கூடத்துலே தலைமை ஆசிரியரா ரொம்ப காலம் இருந்தார். இப்ப ரிட்டையர் ஆகி அந்த ஊரிலேயே தான் இருக்கார்.’
“இப்ப அவருக்கு வயது என்ன இருக்கும்?’
“அது… வந்து 88 க்கும் மேலே இருக்கும் இருந்தாலும் இந்த வயசுலேயும் நல்லா சுறுசுறுப்பாக இருக்கார்.’
இவ்வளவு விவரங்களும் தெரிந்து கொண்ட பிறகு சும்மா இருக்க முடியுமா?
அலுவலகத்தில் முறையான சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு ஒலிப்பதிவுக் கருவிகளோடு நானும் நண்பர்களும் புறப்பட்டோம்.
மானாமதுரையில் எதிரே வந்த ஒருவரை நிறுத்தி வழிகேட்டோம்.
“அதோ.. அந்தப் பாலத்தை தாண்டி அடுத்த பக்கம் போங்க… வாசலிலே கம்பி போட்டிருக்கும். அந்த வீடுதான்.’
வீட்டுக்கு முன்னால் எங்கள் கார் போய் நின்றது.
வாசல்புறம் நின்றிருந்த ஒருவரிடம் நாங்க வந்திருக்கின்ற விவரத்தைச் சொன்னோம்.
உடனே அவர் எங்களை அழைத்துக் கொண்டு மரப்படிகளின் வழியாக மாடிக்குச் சென்றார்.
அங்கே அந்தப் பெரியவரை – மகாகவி பாரதியின் சகோதரரைச் சந்தித்தோம்.
அன்போடு எங்களை வரவேற்று அமரச் செய்தார். உபசரித்தார். உயரே சுவரில் பழங்காலத்துப் படங்கள் நிறைய மாட்டப்பட்டிருந்தன. அந்தக் காலத்துப் பாரதியின் படங்களை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.
கொஞ்ச நேரத்தில் பேட்டி தொடங்கியது.
வெளியுலகத்துக்குத் தெரியாத நிறைய விவரங்களை அவர் சொன்னார்.
“எங்க அப்பா சின்னசாமி ஐயர்… அவருக்கு இரண்டு மனைவிகள்…’
முதல் மனைவி லட்சுமி அம்மா… அந்த லட்சுமி அம்மாளின் மகன்தான் பாரதி.
பாரதிக்கும் அஞ்சு வயசு ஆவதற்குள்ளே தாயார் இறந்துவிட்டார்.
அதுக்கப்புறம் இரண்டரை வருஷம் கழிச்சி சின்னசாமி ஐயர் வள்ளியம்மாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். வள்ளியம்மாளின் பிள்ளை தான் நான். அதாவது எனக்கும் பாரதிக்கும் அப்பா ஒருவர் தான் அம்மாதான் வேறு.
“உங்களுக்கு வேறு சகோதரர்கள் சகோதரிகள்…’
“எனக்கு மூத்த சகோதரி ஒருத்தர் உண்டு. லட்சுமின்னு பேரு.. எட்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க இறந்து போயிட்டாங்க’
“பாரதி கூட நீங்க இருந்த நாள்கள்… இப்ப உங்களாலே ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?’
“பாரதி சென்னையிலே இருந்தார் இல்லையா…?’
“திருவல்லிக்கேணியிலே தானே…’
“அதுக்கும் முன்னாடி மயிலாப்பூரிலே இருந்தார். சித்திரைக்குளம் கீழவீதியும் தெற்குவீதியும் சேர்ற இடம். அங்கே இருந்து தெற்கே போற ஒரு சின்ன தெரு. அங்கே ஒரு பெரிய வீட்டுலே நாங்க குடியிருந்தோம்.
அப்ப நான் மயிலாப்பூர் பி.எஸ்.ஹைஸ்கூல்லே இரண்டாவது பாரம் (ஏழாம் வகுப்பு) படிச்சிக்கிட்டிருந்தேன். அதுக்குப்புறம்தான் திருவல்லிக்கேணியில் பெரிய தெருவுக்குப் போனோம். (வீரராகவ முதலி தெரு)
அதுக்கப்புறம் நல்லதம்பி முதலி தெருவிலேயும் இருந்தோம். அந்தச் சமயம் நான் திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூல்லே படிச்சேன்.
1918க்கு அப்புறம் அவர் கடையத்துலேயும் எட்டயபுரத்திலேயும் மாறி மாறி இருந்தார். அப்பல்லாம் நானும் அவர் கூடவே இருந்தேன்.’
“பாரதியார் உங்களைப் பத்தி பேசினது எழுதினது ஏதாவது ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?’
சிறு பிள்ளைகளைப் போல ஆர்வத்தோடு அவரை விசாரித்தோம்.
“ஞானரதம்-ங்கற நூல்லே மண்ணுலகம்-ன்னு ஒரு பகுதி. அதுல எழுதியிருக்கிறதெல்லாம். நாங்க நல்லதம்பி முதலி தெரு வீட்டுலே தங்கியருந்தப்போ கிடைச்ச அனுபவங்கள். அதிலே அவர் என்னைப் பத்தி எழுதியிருக்கிறதைப் பாருங்க!’ என்று சொல்லி ஒரு வாரப் பத்திரிகையை எடுத்து எங்களிடம் கொடுத்தார். அதில் அந்தப் பகுதியை எடுத்துப் போட்டிருந்தார்கள். அதில் பாரதியார் எழுதியிருக்கிற வாசகங்கள் இவை:
“22ம் தேதி தம்பிக்குப் பாடசாலைச் சம்பளம் கொடுக்க வேண்டிய நாள். நான் காரியாலயத்திலிருந்து பணம் கொண்டு வந்து வைக்க மறந்து விட்டேன். நான் சுதேசிய விஷயத்தில் பாடுபடுவதில் பொருட்டாக என்னை எப்பொழுதும் கவனித்து வரும்படியாக ராஜாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் என் தம்பியிடம் செய்த சம்பாஷணையில் “உம்முடைய அண்ணனது சிநேகிதரான இன்னவரை ராஜாங்கத்தார் பிடிக்கப் போகிறார்கள்’ என்ற மங்கள சமாசாரம் சொல்லிவிட்டுப் போனதாகத் தம்பி சொன்னார்.’
“பாரதியார் பாடல்கள் இயற்றுவது மட்டுமல்லாமல் அவற்றைப் பாடவும் செய்வாராமே?’
“1920ல் நாங்க திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் இருந்தப்ப வ.வே.சு. ஐயர் ஒரு நாள் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் பாரதி “அண்ணா, இன்று ஒரு பாட்டு இயற்றியிருக்கிறேன் கேட்கிறீர்களா?”ன்னார்.
“ம்… சொல்லுங்க!’ன்னார் வ.வே.சு. ஐயர்.
உடனே பாரதி பாட ஆரம்பித்தார்.
காயிலே புளிப்பதென்ன?
கண்ணபெருமானே – நீ
கனியிலே இனிப்பதென்ன
கண்ணபெருமானே
அந்தச் சமயம் அவர் அதைக் கம்பீரமா பாடறப்போ நானும்கூட இருந்துகேட்டேன். மறக்க முடியாத அனுபவம்
“பாரதி நூற்றாண்டு விழா ரஷ்யாவுலே கொண்டாடப் போறாங்களாமே கேள்விப்பட்டீங்களா?’
“ஆமாம்… அதுலே வந்து கலந்துக்கணும்னு அந்த அரசாங்கமே என்னை அழைச்சிருக்கு.’
“போக போறீங்களா?’
“மனசுல ஆசை இருக்கு.. உடம்புல பலம் இல்லை’ என்று சொல்லி லேசாக சிரிக்கிறார்.
“அப்படின்னா…?’
“நான் வர்றதுக்கு என் உடம்பு இடம் கொடுக்காதுன்னு அவங்ககிட்டே சொல்லிட்டேன்’
நீண்ட நேரம் நிறைய விஷயங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட்டோம். தள்ளாத வயதிலும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
அதற்கு அடுத்த வருடமே நான் சென்னை வானொலி நிலையத்துக்கு மாற்றலாகி வந்துவிட்டேன்.
இங்கு வந்த பிறகு ஒருநாள் நண்பர் ஒருவரிடம் நான் பாரதியின் தம்பியை பேட்டி கண்ட விஷயத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தேன்.
“சந்தர்ப்பம் கிடைச்சா, இன்னொரு முறை மானாமதுரைக்கு போய் அந்தப் பெரியவரைப் பார்த்துட்டு வரலாம்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்!’ என்றேன்.
அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “உனக்கு விஷயம் தெரியாதா?’ என்றார்.
“என்ன?’ என்றேன்.
“அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் காலமாகி விட்டதாக உறவினர்கள் சிலர் மூலமாகக் கேள்விப்பட்டேன்’
நான் ஒரு நிமிடம் மௌனமாகி… பிறகு யோசித்தேன்.
“எத்தனை பெரியவர்கள் இந்த உலகத்தில் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் வாழ்ந்துவிட்டுப் போய் விடுகிறார்கள்.’

– தென்கச்சி கோ. சுவாமிநாதன்  in “KALAIMAGAL ”  TAMIL MONTHLY 

Natarajan