படித்ததில் பிடித்தது … கடவுளைக் காண தேவைப்படும் கண்ணாடி !!!

ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்” என்றான்.

“தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.”

“ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?”

“தம்பீ, காண முயலுகின்றேன்.”

“கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?”

“இல்லை.”

“கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?”

“இல்லை.”

“ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?”

“அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?”

“தேன் பாட்டில்.”

“தேன் இனிக்குமா, கசக்குமா?’

“என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.”

“தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.”

மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

“ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.”

பெரியவர் புன்முறுவல் பூத்தார். “அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!”

என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. “பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.”

“தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?” “இல்லை.”

“என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.”

மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.

“என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?”

“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”

“என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” “தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?”

“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”

“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”

“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”

“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”

“ஆம்! தெரிகின்றன.”

“முழுவதும் தெரிகின்றதா?”

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும் தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?”

மாணவன் விழித்தான்.

“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”

“என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?” “முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”

“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”

“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.”

“தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.”

“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.”

“தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.

தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம் தெரியவில்லை!” என்றான்.

“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”

“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.”

“தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”

“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?”

“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

“தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.”

source:::: Dinamani  Tamil Daily…. Extract  from  Discourse of Thirumuruga Kripananda variar

natarajan

நமது அருமை கோயில்களின் சில அரிய புகைப்படங்கள் …சில நூறு ஆண்டு முன்பு!!!

200 வருடங்களுக்கு முன்னாள் திருவண்ணாமலை கோவிலின் அமைப்பு 

 

Sri Padmanabhaswamy temple..Thiruvanandapuram

 

Rameswaram Ramanathaswamy Temple

1000 Pillar Mandapam…Rameswaram Temple

 

Chidambaram Nataraja Temple

 

Srirangam Temple

 

Srirangam Temple

 

Mamallapuram Shore Temple

 

source:::::Rudran in blog

natarajan

 

 

 

திருப்பதி கோயில் அர்த்த மண்டபம் …மஹா பெரியவர் ….ஒரு Flashback !!!!!

திருப்பதி க்ஷேத்ரம் யுகயுகமாக பற்பல கோடி ஜீவன்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட பகவான்! எண்ணற்ற மஹான்கள் ஊனும், உயிரும் உருக பாடி, பக்தி பண்ணி ரசித்த பெருமாள்! அந்த திருப்பதி க்ஷேத்ரத்தையே காப்பாற்றியவர் நம்ம பெரியவா! கலியுகம் இல்லையா? க்ஷேத்ரத்துக்கே ஹானி வந்துவிடுமோ என்ற சூழ்நிலை!

சுமார் 50 வர்ஷங்களுக்கு முன் திருப்பதி அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எப்போதும் கோவிலில் ஏதாவது புதுசு புதுசாக மாற்றங்கள் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும். காரணம்? லக்ஷக்கணக்கான பக்தர்கள் தினமும் வரும் க்ஷேத்ரம். அவர்களுக்கு சௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற நல்லெண்ணமே!

நாஸ்திக வாதம் அங்கங்கே ஒப்புக்கு முழக்கம் செய்தாலும், “இதோ பார்த்தாயா! என்னைத் தேடி வரும் என் குழந்தைகளை?” என்று பகவான் கோடிக் கணக்கில் காட்டும் பல க்ஷேத்ரங்களில், திருப்பதியும் ஒன்று. ஒருமுறை அங்கிருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளும், அறநிலையத் துறை மந்திரியும் சேர்ந்து ஒரு முக்கியமான முடிவை செயலாக்கத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அது என்னவென்றால்.. பக்தர்கள் உள்ளே மூலஸ்தானத்துக்கு வந்து, பிறகு அதே வழியாகத்தான் திரும்பிப் போகிறார்கள். அப்போது அங்கே ஒரே நெருக்கடியாகி விடுகிறது. எனவே மூலஸ்தானத்தை அடுத்த அர்த்த மண்டபத்தின் இருபுறமும் இருக்கும் சுவற்றை இடித்து வழி பண்ணிவிட்டால், மக்கள் வலது, இடது பக்கம் போகலாம், வரலாம். நெருக்கடி, ஸ்ரமம் இல்லை; இன்னும் நிறைய கூட்டம் வந்தாலும் சமாளிக்கலாம். கீழ்மட்டத்தில் அதிகாரிகள் இதை விவரமாகப் பேசி, சுவரை கச்சிதமாக உடைக்க அமெரிக்காவில் இருந்து 40 லக்ஷத்துக்கு ஒரு cutting machine வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவைக் கேட்டுக் கொண்டு, நிம்மதி இழந்தவராக அமர்ந்திருந்தவர், கணபதி ஸ்தபதி.

“என்ன ஸ்தபதி ! நீங்க என்ன சொல்லறீங்க? இதுல உங்களுக்கு சம்மதந்தானே?..” அமைச்சர் கேட்டார். “என்னோட மனசுக்குப் பட்டதை நான் இங்க சொல்லலாமா?..” ஸ்தபதி கேட்டார்.

“தாராளமா…..””எத்தனையோ ஆயிரம் வர்ஷங்களுக்கு முன்னால, ஆகம சாஸ்த்ரங்களை கரைச்சு குடிச்ச வல்லுனர்கள்தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கா….மூலஸ்தானத்துக்கு அடுத்தபடியா இருக்கற அர்த்த மண்டபம் ரொம்ப பவித்ரமானது. அதோட ரெண்டுபக்க சுவரையும் இடிச்சு வழி பண்ணறது நல்லதில்லை. அப்பிடி ஏதாவது பண்ணினா, மூலவரோட சக்தியும், sanctity யும் போய்டும்… அதுனால இதையெல்லாம் மனசுல வெச்சுண்டு தயவு செய்து இந்த
இடிக்கற வேலையை நிறுத்திடுங்கோ!…”

எந்த ஒரு குழுவிலும், ஒரு முடிவு எடுக்கும்போது, உண்மையில் எது நல்லது என்பதை உளமார உணர்ந்து செய்பவர்கள் குறைவாகத்தானே இருப்பார்கள்? அதேபோல், ஸ்தபதியின் சொல் அங்கே எடுபடவில்லை. இடித்தே தீருவது! என்று தீர்மானம் பண்ணி, ஸ்தபதியிடமும் கட்டாயமாக கையெழுத்து வாங்கப் பட்டது. எப்போது கையெழுத்துப் போட்டாரோ, அந்தக்ஷணத்திலிருந்து அவருடைய நிம்மதி போய்விட்டது. தன் கண் முன்னால், கோவிலின் அர்த்த மண்டபம் இடிக்கப்படுவதை எப்படி சஹிக்க முடியும்? இந்த அசம்பாவிதம் நடக்காமல் இருக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. பயங்கரமாக குழம்பித் தவித்த அவர் உள்ளம் அப்போது ஒன்றே ஒன்றை பற்றிக் கொண்டது ! ஆம். பெரியவாளின் சரணத்தை!

அப்போது பெரியவா ஆந்த்ராவில்தான் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். பெரியவாளை எங்கிருந்தாலும் பார்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கால் போன போக்கில் ஸ்தபதி கிளம்பிவிட்டார். அன்ன ஆகாரமில்லை; மனஸ் முழுக்க பாரம்; விடியற்காலை பெரியவா தங்கியிருந்த கார்வேட் நகருக்கு வந்து, பெரியவா முன் நின்றார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!

பெரியவா அவரைப் பார்த்ததும், நெற்றியில் நாமம் போட்டுக் காட்டி, “அங்கேர்ந்து வரயா?” என்றார். “ஆமா….பெரியவாகிட்ட முக்யமான விஷயம்…..” அவர் பேச ஆரம்பிக்கும்முன் அவரை கையமர்த்தி,

“இப்போ நீ ஒண்ணும் சொல்ல வேணாம்…மொதல்ல போய் வயத்துக்கு ஏதாவது சாப்ட்டுட்டு வா! …” ரெண்டு நாளாக எதுவும் சாப்பிடாமல் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கும் தன் குழந்தைக்கு முதலில் வயிற்றை நிரப்ப எண்ணினாள் அந்த மஹா மாதா! பாரிஷதரிடம், “இவரை எந்த ஹோட்டல் தொறந்திருந்தாலும் அழைச்சிண்டு போய், வயறு நெறைய ஆஹாரம் குடுக்கச் சொல்லு! பணத்தை நான் தரேன்…ன்னு சொல்லு..”

அன்னபூரணி சொன்னால் அப்பீல் உண்டா…ஒரு ஹோட்டல் திறந்திருந்தது.பெரியவாளுடைய உத்தரவைக் கேட்டதும் அந்த முதலாளி, “பெரியவா அனுப்பினவாகிட்ட நான் எப்பிடி பணம் கேப்பேன்? நன்னா வயிறார சாப்பிடட்டும்…என்னோட பாக்யம் ” என்று சொல்லி, சுடச்சுட தயாராக இருந்த உணவைப் பரிமாறினார். இப்போது மறுபடியும் பெரியவா முன்னால் வந்து நின்றார் ஸ்தபதி.

“இப்போ சொல்லு….” எல்லாவற்றையும் சொன்னார். பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.”அப்பிடி அர்த்த மண்டபத்தை ஒடைச்சா, என்ன ஆகும்?..” தெரியாதவர் மாதிரி கேட்டார்

“அர்த்த மண்டபத்ல கைவெச்சா…பெருமாளோட சக்தி பூரா போய்டும்.. .பெரியவா!.. திருப்பதில எந்த மாறுதல் பண்ணணும்…ன்னாலும் பெரியவாகிட்ட கேட்டுண்டுதான் பண்ணுவா…ஆனா, இந்த விஷயத்தை உங்ககிட்ட கேக்காம, வெறும் தகவல் மட்டுந்தான் சொல்லுவா… அதுனால பெரியவா அனுக்ரஹம் பண்ணி, இதை நிறுத்த ஏதாவது வழி சொல்லணும்..”
பெரியவாளின் திருவாக்கிலிருந்து மணிமணியாக அபயச்சொற்கள் வந்தன!

“ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!..” ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார். வீட்டுக்கு வந்து அசந்து படுத்த ஸ்தபதி நன்றாகத் தூங்கினார்! நிம்மதியாக! ஆனால், பின்னிரவு ரெண்டு மணிக்கு திடீரென்று யாரோ எழுப்பிவிட்ட மாதிரி, படக்கென்று எழுந்தார். மனஸில் ஏதோ தோன்ற, விடுவிடுவென்று முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டியின் வீட்டை நோக்கி நடந்தார்! அப்போது சரியாக மணி மூன்று! வாசலில் இருந்த செக்யுரிட்டி ஆபீசர் இவரை அடையாளம் கண்டுகொண்டு, “என்ன ஸ்தபதி ஐயா !…இவ்வளவு அதிகாலை முதலமைச்சரைப் பாக்க வந்திருக்கீங்க!..” என்றார். “ரொம்ப அவசரம்…நான் அவரைப் பாக்கணும்…”

“appointment இருக்கா?””இல்லையே..” “அப்போ அவரைப் பாக்க முடியாதே ஐயா!..”ரொம்ப அவசரம்…நான் பாத்தே ஆகணுமே!..”

ஆபீசர் யோசித்தார்..ஸ்தபதி ரொம்ப மரியாதைக்குரியவர். நிச்சயம் ஏதோ அவசரமான காரியமாகத்தான் இருக்கும்… “ஐயா…ஒண்ணு செய்யலாம்…சரியா 4.30 மணிக்கு முதலமைச்சர் காபி சாப்பிட மாடியிலேர்ந்து இறங்கி வருவார். அப்டி வந்து உள்ள நுழையும் போது ஒங்களைப் பாத்துட்டார்ன்னா, ப்ரச்சினை தீர்ந்தது! இல்லாட்டா…..காலேலதான்!..”

ஸ்தபதி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். சரியாக 4.30 மணிக்கு ரெட்டிகாரு மாடியிலிருந்து இறங்கியவர், வாசலில் நிற்கும் ஸ்தபதியைப் பார்த்துவிட்டார்! முகமெல்லாம் வியப்பாக…..”என்ன கணபதி? இத்தனை காலைல?” “உங்ககிட்ட முக்யமான விஷயம் பேசணும்….” “என்னது? வாங்க…” என்று வாசலுக்கு வந்து, அவர் தோள் மேல் கையைப் போட்டு அணைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றார் முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டி!

“திருப்பதி கோவிலுக்கு ஆபத்து!” என்று எடுத்த எடுப்பில் “கண்டேன் சீதையை!” மாதிரி போட்டு உடைத்தார். “என்ன உளறறீங்க? திருப்பதிக்கு என்ன ஆபத்து! எப்படி வரும்?…” அதிர்ச்சியோடு கேட்டார் ரெட்டிகாரு. எல்லா விஷயத்தையும் சொல்லி, ” பெருமாளோட சக்தி பூரா போய்டும்” என்று நிறுத்தினார்.

முதலமைச்சர் முகத்தில் கோபம் கொப்பளித்தது! கார்யஸ்தரை கூப்பிட்டு “ஒடனே அறநிலையத்துறை அமைச்சரை போனில் கூப்பிடு!..” அதிரடி உத்தரவு பறந்தது. அறநிலையம் லைனில் வந்தார்…… “முந்தாநேத்திக்கு திருப்பதில என்ன நடந்தது?…”

“அந்த விஷயமா பேசத்தான் file லோட உங்களைப் பாக்க இன்னிக்கி பொறப்பட்டு வந்திட்டு இருக்கேன்…” இழுத்தார். “திருப்பதியில் என்ன நடந்தது…ன்னுதான் கேட்டேன்!..” கத்தினார் முதமைச்சர்.

அறநிலையம் தாங்கள் எடுத்த முடிவை விவரித்தார். “மொதல்ல நான் சொல்றதை கேளுங்க! வெங்கண்ணா ஜோலிக்கு போகாண்டி!” என்று ஒரே போடாகப் போட்டார்!

“திருப்பதி வெங்கடாசலபதி விஷயத்தில் தலையிட வேண்டாம்…இது என் உத்தரவு!..” பட்டென்று போனை வைத்தார். “கணபதி! திருப்பதில எதுவும் நடக்காது! நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க..” வழியனுப்பி வைத்தார் முதலமைச்சர்.

வெளியே வந்தபின்தான், எந்த சக்தியால் தான் உந்தப்பட்டு இன்று இவ்வளவு அதிகாலையில் முதலமைச்சரைக் கண்டு விஷயத்தை சொல்ல முடிந்தது ! என்று ஸ்தபதி வியந்தபோது, உள்ளிருந்து பெரியவாளுடைய தெய்வீகமான வார்த்தைகள் ஒலித்தன….. “ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!”…..

பெருமாள் கோவிலின் அர்த்த மண்டபம் இடிபடாமல் காப்பாற்றியது யாரால்? ஸாக்ஷாத் ப்ரஹ்ம ஸ்வரூபமான பெரியவாளால்தான் ! திருப்பதி மட்டுமில்லை இன்னும் இந்தியாவில் உள்ள எண்ணற்ற கோவில்களை பழுது பார்த்து, ஒரு தீபத்துக்கூட வழியில்லாமல் இருந்த கோவில்களுக்கு தன்னுடைய ப்ரபாவத்தால் பூஜைகள் நடப்பது பெரியவா என்ற நடமாடும் தெய்வத்தால்தான் !

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்…..

source:::::input from a friend of mine

natarajan

படித்ததில் பிடித்தது !!! மகாபெரியவர் பாதுகை தரும் திருப்பங்கள் !!!

அது 1988ஆம் வருடம். தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கியில் இருந்து கடன் கேட்டிருந்தோம். கொஞ்சம் உதாசீனமாகப் பதில் கிடைத்தது. இதை தந்தையிடம் சொல்லவேயில்லை.

திடீரென்று அப்பா, அம்மா இருவரும் காஞ்சிபுரம் போகலாம் என்று அழைத்த உடன் கிளம்பினேன். பெரியவாளைத் தரிசனம் செய்ய, 300க்கும் அதிகமானோர் நின்றிருக்க, நாங்கள் கடைசியில் நின்றிருந்தோம்.
திடீரெனப் பெரியவா வழிவிடச் சொல்லி கூட்டத்தை சைகை செய்தார். வழி கிடைத்தவுடன் கடைசியில் நின்றிருந்த எங்களை அருகில் வரும்படி அழைத்தார். மெய் பதற அவர் முன் சென்று நின்றோம்.
“என்ன வேண்டும்?” என்று இரண்டு முறை கேட்டார்.
நாங்கள், “எதுவும் வேண்டாம்” என்று, பவ்யமாகத் தலை அசைத்தோம்.
மூன்றாவது முறை கோபமாகக் கேட்டார்.
உடனே “பிரசாதம் வேண்டும்” எனக் கூறினோம்.
உடனே, தனது திருவடிகளில் அணிந்திருந்த பாதுகைகளை எடுத்து, தாமரை மலரை அதன் மேல் வைத்து எங்களிடம் கொடுத்தார்.
பரதாழ்வார், ஸ்ரீராமரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றார். அது மகா புண்ணியம். கேட்காமலேயே – மகா பெரியவாளின் பாதுகை கிடைத்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.
அந்த நொடியில் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது. பரவசமான நேரம்!உயிர் உள்ளவரை இறைவனது எல்லையில்லாக் கருணை என்னை ஆள வேண்டும் என்ற இறைஞ்சுதலுடன், அந்தப் பாதுகைகளைச் சுமந்து வந்தேன்.
தேரில் தெய்வம் உலா வந்து கொண்டிருக்கும்போது, தெருவில் இறங்கி, நாம் அந்தத் தெய்வத்தை தரிசனம் செய்யப் போகும் சமயத்தில், அந்தத் தெய்வம் தேரிலிருந்து இறங்கி வந்து நம் கைகளைப் பிடித்துக்கொண்டு கருணை செய்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு புளகாங்கிதம் அது.
காஞ்சியில் இருந்து திரும்பி வந்த உடன், வங்கியில் இருந்து அழைப்பு வந்தது. ‘ஏதோ ஒரு டென்ஷனில் சொல்லிவிட்டோம். எத்தனை லட்சம் வேண்டுமானாலும் கடன் தருகிறோம். வேண்டுமானால், செக்கை அனுப்பி வைக்கிறோம்’ என்றனர்.
இப்படி ஒன்றிரண்டு அல்ல; 20 வருடங்களுக்கும் அதிகமாக வாடாமல் அதே மலர்களுடன், சந்தனப் பேழையில் இருந்துகொண்டு, நிறையத் திருப்பங்களை, நானே எதிர்பார்க்காத அளவுக்கு நடத்தி வருகின்றன, அந்தப் பாதுகைகள்.”
சொல்லும்போதே அவர் குரலில் பரவசம் தெறிக்கிறது. அந்தப் பரவசம் நமக்குள்ளும் ததும்பத்தான் செய்கிறது.
~ கோவை கிருஷ்ணா ஸ்வீட் அதிபர் கிருஷ்ணன்.
நன்றி: “தீபம்“ (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

 

நாற்பது வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிபுரத்தில் ஒரு அக்ரஹாரத்தின் வழியாய் காமாட்சியம்மன் கோயிலுக்குப் போய்க்கிட்டிருந்தேன். திடீரென பெரியவர் வர்றார்ன்னு குரல் கேட்டது. பரபரப்பாய் மக்கள் இங்கேயும், அங்கேயும் போய்க்கிட்டிருந்தாங்க. நானும் ஏதோ வயசான பெரியவர் வர்றார்ன்னு திரும்பிப் பார்த்தா, மஹா பெரியவா.

நான் சடார்ன்னு அந்த ஞானியின் காலைப் பிடிச்சிட்டேன். அப்புறம் அவர் அந்த இடத்தை விட்டுப் போயிட்டார். நான் ஒரு மணி நேரம் அந்த இடத்திலேயே நின்னேன். அக்ரஹாரத்து அய்யர்களெல்லாம், ‘நாங்க கூட-இவரைத் தொட்டது கிடையாது. நீ காலையே பிடிச்சுட்டியே’ன்னாங்க. நான் ரொம்பப் பயந்து போயி, கோயிலுக்குள் நுழைந்தேன்.
கோயிலுக்குள் மஹா பெரியவர் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் பண்ணிக்கிட்டிருந்தார். தூரத்தில் நின்ன என்னை ‘வா’ன்னு சைகையால கூப்பிட்டார்.
‘சாமி தெரியாமல் காலைப் பிடிச்சுட்டேன்’னேன்.
அதற்குப் பெரியவர் ‘ஏதோ பூர்வஜென்ம வாசம், என் காலைப் பிடிச்சுட்ட. பரவாயில்லை, என்ன பண்றே’ன்னு கேட்டார்.
‘சினிமாவுல இருக்கேன்’ என்றேன்.
‘அதனால என்ன? எங்க இருந்தாலும் ஒழுக்கமாக இரு’ என்று சொல்லி தமது கைகளை எனது கைகள் மீது வைத்து ஆசீர்வாதம் பண்ணினார்.
அன்றிலிருந்து இன்று வரை காமாட்சின்னு சொல்லும்போது, அந்த மஹா பெரியவர் என்னை ஆசீர்வதிக்கிறதா உணர்றேன்.“
~ குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி
நன்றி: “கல்கி”

 

” You Don”t Know my Wife ” !!!!

I was taught in my early life that whatever happens, there is no use being bitter. Never be sour, whatever happens. On the other hand, even non-events upset my wife. If there is cobweb or gossamer hanging from the roof, or, if the roof leaks during rain, she start complaining and even gets into a rage. She raises her voice as if I had climbed up and put cobwebs on the roof or made holes therein.

My house, perhaps, is one of the oldest in Ernakulam. Most houses, almost as old as ours, were either pulled down to build commercial complexes or sold to apartment builders. The result: the area is replete with tall buildings and my house and the next one look like a couple of ducklings among a group of stately Chinese ganders. Thomas, my neighbour, would always joke: “Our two houses will definitely find a place in Ripley’s Book of Records.”

The front yard is full of trees — mango, jack fruit, tamarind, wood apple — and my house sits under their shadow. We spend most of our time in the open verandah that faces the road.

My wife would look at the flats in the high-rise buildings and murmur: “Lucky people! Not much to clean and no guests to feed.”

My wife’s complaint is that there are 13 rooms in our house but none is habitable. “Have you heard of a bedroom having windows on all sides? Why? Is some kind of exhibition going on in the room? If I want to change my dress, I have to close all six windows and three doors. It is high time that we moved into a flat,” she grumbled.

Very soon, we had to attend the funeral of her distant uncle. After retirement, he and his wife were living in a flat. Those years, flats were not popular. When we reached there, all rooms were crowded with people — they were occupying even the kitchen and bathrooms; and a heated discussion was going on on how to take the body down from the 10th floor. The seven-foot coffin could not be carried in the lift, which was only five feet in length. Carrying the body down the staircase was also not feasible as it was too narrow and winding.

Somebody suggested that the body, secured inside the coffin, be dropped spreading rubber beds on the ground floor to soften the impact. Another genius suggested airlifting the coffin from the rooftop which was only a floor away. Finally, my wife came to their rescue.

She ordered them to put the body in the coffin and close the lid. She ordered that both ends of the coffin be tightly secured with strong plastic ropes. She recruited three strong persons and asked them to enter the lift with the coffin held in a vertical position. In five seconds it reached the ground floor. People began asking one another: “Who is that girl?” Someone asked me too without knowing who I was. I said: “I don’t know; but I know her phone number.”

Thereafter, her refrain changed to: “It is enough if we move to a small house”.

You don’t know my wife!

(The writer is an advocate. Email: joserosamma@hotmail.com)

source ::::: Jose Manavalan in “The Hindu”

natarajan

வைகை பெருகட்டும் …அந்த நன்னாள் வரட்டும் விரைவில் !!!!

பரிபாடல் போன்ற சங்க கால நூல்களில், வைகை நதி பெருக்கெடுத்து ஓடியது பற்றி, சொல்லப்பட்டுள்ளது. அதைப் படிக்கும் போது, தற்போதைய நிலை கண்டு மனம் வேதனைப் படுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் காலத்தில் கூட, சொட்டுத் தண்ணீர் இல்லாமல், லாரி தண்ணீரை ஒரு குட்டையில் நிரப்பி, விழா கொண்டாட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது என்றால், இது யார் செய்த தவறு?
நம் வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கிறதென்றால், நாலு பேருக்கு தானதர்மம் செய்வது வழக்கம். மதுரையில் மீனாட்சியை மணமுடிக்க, சிவன் சுந்தரேஸ்வரராக வந்த போது, ஊருக்கே நன்மை செய்தார். குண்டோதரனின் தாகம் தீர்க்க உருவாக்கப்பட்டது தான் வைகை ஆறு. ஒரு ஊரில் ஆறு இருந்தால் மட்டும் போதுமா… அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்தவே, ஆவணி பூராடம் நட்சத்திரத்தன்று, சிவன், ஒரு கூலி ஆளாக, வைகை கரையை அடைக்க வந்தார்.
மதுரையில், அரிமர்த்தன பாண்டியன் ஆண்டபோது, மாணிக்கவாசகர் அவனது அமைச்சராக இருந்தார். நாட்டின் படை பலத்தைப் பெருக்க, குதிரைகள் வாங்கி வரும்படி பணம் கொடுத்து அனுப்பினான் மன்னன். சென்றவர் வழியில், திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே, ஒரு குருந்த மரத்தடியில், சிவன் குருவாக தியானத்தில் அமர்ந்திருந்து, மாணிக்கவாசகருக்கு திருவடி தீட்சை அளித்தார். அதன்பின், சிவனடிமையாகி விட்ட மாணிக்கவாசகர், குதிரை வாங்க கொடுத்திருந்த பணத்தை, கோவில் திருப்பணிக்கு செலவு செய்தார்.
விஷயம் மன்னனுக்கு தெரிந்து, மாணிக்க வாசகர் அழைத்து வரப்பட்டு, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். சிவன், வைகையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்து தன் திருவிளையாடலை நிகழ்த்தினார். மன்னனுக்கு ஆச்சரியம், திடீரென இந்த வெள்ளம் எப்படி வந்தது என்று! இருப்பினும், ஊரைப் பாதுகாக்க கரைகளை உயர்த்த ஆணையிட்டு, “வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வர வேண்டும்…’ என, உத்தரவிட்டான்.
வந்தி என்ற முதிய சிவபக்தையின் வீட்டில் யாருமில்லை. அவள் புட்டு விற்று பிழைப்பவள். அவள் வீட்டுக்கு, கூலிக்காரன் வடிவில் வந்தார் சிவன். அவள் சார்பில் கரையை அடைக்க, புட்டை கூலியாகப் பெற்றுக் கொள்வதாகக் கூறினார்; அவளும் சம்மதித்தாள்.
வேலைக்குப் போன இடத்தில், வேலை செய்யாமல் படுத்து விட்டார். சோதனைக்கு வந்த மன்னன், வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, பிரம்பால் முதுகில் ஒரு அடி அடித்தான். அந்த அடியின் வலி, மன்னன் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. மன்னன் பயந்து விட்டான். உண்மை வெளிப்பட்டதும், மாணிக்கவாசகருக்கு மரியாதை செய்தான் மன்னன். வைகையில் வெள்ளம் கட்டுப்பட்டது.
இத்திருவிளையாடலின் மூலம் சிவன், ஆறுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை, வலியுறுத்தி, அதற்காக, அடியும் வாங்கியிருக்கிறார். ஆனால், நாமோ… ஊரில் இருக்கும் குப்பையை எல்லாம் வைகையில் கொட்டி, ஆற்றை அசுத்தப் படுத்துகிறோம்.
ஆவணி பூராடம் நட்சத்திரத்தன்று, மதுரையில் புட்டுத்திருவிழா நடத்தப்படுகிறது. வெறும் திருவிழாக்களை நடத்துவதால், எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
“சிவனே… அன்றொரு நாள் நீ, சுந்தரேஸ்வரனாக வந்து, வைகையை உற்பத்தி செய்தாய்; கூலியாளாக வந்து வைகையைப் பாதுகாத்தாய். நாங்கள் இடையில் செய்த பெறும் தவறால், வைகைத்தாய் பெருக மறுக்கிறாள். இனி, இவ்வாறு செய்ய மாட்டோம். உன் அருளை வாரி வழங்கி, வைகையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓட அருள் செய்…’ என்று, மனமுருகி கெஞ்சிக் கேட்க வேண்டும். நமது கூட்டுப்பிரார்த்தனைக்கு சுந்தரேஸ்வரரும், அன்னை மீனாட்சியும் நிச்சயம் செவி சாய்ப்பர்.
வைகை பெருகி, நிரந்தரமாக ஓடும் அந்த நன்னாளுக்காக காத்திருப்போம்.

source :::::dinamalar …weekly supplement

natarajan

படித்ததில் பிடித்தது !!!….” No Cheque , only Cash !!!”

சினிமா தயாரிப்பாளர், காலம் சென்ற சாண்டோ சின்னப்ப தேவர், 40 ஆண்டுகளுக்கு முன், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார்:
நான், சொந்தப்படம் தயாரிக்க சினிமாக் கம்பெனி துவங்கினேன். நடிகர், நடிகைகளுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் சம்பளம் கொடுக்க, “காசோலை’ தர வேண்டும். அதுநாள் வரை, எனக்கு வங்கியில் அக்கவுன்ட் கிடையாது. அதனால், புதிதாக, என் பெயரில் ஒரு கணக்கு ஆரம்பித்து, கணிசமான ஒரு தொகையையும் போட்டு வைத்தேன். காசோலை புத்தகம் கொடுத்தனர்; வாங்கி வந்தேன்.
ஒரு வாரம் கழித்து, எனக்கு பணம் தேவைப்பட்டது. என் பெயருக்கு, காசோலையில் எழுதி கொண்டு வங்கிக்கு சென்றேன். ஆனால், என் கையெழுத்து சரியாக இல்லை. நான் பள்ளிக்கூடம் போய் படிக்காதவன். என் பெயரை எப்படி எழுதுவது என்று, மற்றவர்கள் சொல்லிக் கொடுத்து தான் கையெழுத்து போட்டு வந்தேன். என் கையெழுத்தையும், என் உருவத்தையும் பார்த்து சந்தேகித்த அவர்கள், என்னை ஒரு ஓரமாக உட்கார சொல்லி, போலீசுக்கு போன் செய்து விட்டனர்.
போலீஸ் வந்து என்னை விசாரித்தது…
“நான் தான் சின்னப்பா. சினிமாவில் நடித்திருக்கிறேன்…’ என்று சொல்லியும், அவர்கள் நம்பாமல் மிரட்டினர். பின், எனக்கு தெரிந்தவர் களின் நம்பருக்கு போன் செய்து, அவர்கள் என்னைப் பற்றி சொன்ன பின் தான் விட்டனர். நம் பணத்தையும் போட்டு விட்டு, இந்த அவமரியாதையா… என்று, கோபம் வந்துவிட்டது. கணக்கை முடித்து, முழுப் பணத்தையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.
இதுவரை, எத்தனையோ படங்கள் தயாரித்து விட்டேன். இந்திப் படங்களும் தயாரிக் கிறேன். ஆனால், யாருக்கும், காசோலை கொடுப்பதில்லை. நேரடி சம்பளம் தான். எனக்கு, வங்கியில் அக்கவுன்ட் இன்று வரை கிடையாது… என்று, கூறியுள்ளார் சின்னப்ப தேவர்.

source :::::Dinamalar ….Sunday Supplement

natarajan

 

படித்ததில் பிடித்தது !!!…மனைவி அமைவதெல்லாம் !!!

மனைவி அமைவதெல்லாம்..! முழுவதும் படிக்கவும்!

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும், பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும், கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நிறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால்..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன். இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன். எஸ்.ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன். கேரம், செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள். ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.

புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?

இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!

எந்த புக்கும் படிச்சது இல்லையா ?

ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!

இந்த குமுதம், ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?

நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடைசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல…!

எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன்..!

எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள்…? ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது..!

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம்.

ஆனால்..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது, வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன்..!

இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா..?

எதுக்கு வாங்குனீங்க..?

இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா..? கிரிக்கெட் பார்ப்பியா..?

எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது..!

(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும்)

யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!

இந்த பாடகர் – பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?

ம்ம்… இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!

உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!

அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?

சரி எஸ்.ஜானகி புடிக்குமா ?

யாரு கிழவி போல இருக்குமே அதுவா ?

எஸ்.ஜானகியை கிழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம்…! எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி…!

என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம்…! துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .

ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்

இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .

கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சதை சமைச்சு போடணும் – இது என் அம்மா

நானும் அவளிடம் கேட்கிறேன்

உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு

அதெல்லாம் ஒன்னும் வேணாம்

இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்

பிடிக்குமென சிலதை சொல்ல

முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல..?

ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.

அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை சுக பிரசவம் தான் .

நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.

இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம், ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .

தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .

வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!

சில வருடங்கள் போக…! இப்போது இரண்டாவது குழந்தை…! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல், மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று..!

சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று..! அப்படி அல்ல…! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான்.

இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி , இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ”நான்” கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன், கிரிக்கேட், எஸ்.ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல..!

ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்

ஆனால்…! இப்போது எங்களுக்குள்…!

தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..

source:::::unknown   ….input from a friend of mine…

natarajan

Mahatma Gandhiji”s Meeting with Mahaperiavar ….Way Back in 1927 !!!!

Mahathma Gandhi was touring the South India in the latter half of 1927. He had heard about the Sage of Kamakotipeetam and wished very much to meet him. The sage was camping at palghat [Pallakad] at the time in the course of his vijaya-yatra. The Mahatma Gandhi went there on the 15th October, 1927. The meeting took at place on that day at Nellisseri village, palghat, Kerala.

His, Holiness received the Mahatma in the cattle-shed situated in the backyard of the camp. It was a unique experience for the Mahatma. Here was an authentic successor of Sankara, dressed in a piece of’ ochre cloth made of khadi, and seated on the floor. The Acharya too appreciated the occasion provided for getting to know, at first hand, the leader of the nation who had adopted voluntarily the mode of a simple peasant’s life. At the very first sight, the Mahatma was drawn to the Perfection Incarnate that was seated before him. The atmosphere was surcharged with spiritual silence. After a few moments the Acharya spoke in Samskrit and invited the Mahatma to take his seat. Gandhiji offered his obeisance and sat near the Acharya. He said that, as he was not used to speaking in Samskrit, he would use Hindi if that was permitted, and that he could understand what is spoken in Samskrit. So, the conversation took place without the need for an interpreter-the Acharya spoke in Samskrit, and Gandhiji in Hindi.

This was purely a private interview; there were no reporters; and except for one or two attendants of the math, no one was present. The conversation, which took place in a most cordial atmosphere, lasted for over an hour.

On taking leave of the Acharya, the Mahatma gave expression to the immense benefit he had derived from this unique meeting. How profoundly he was drawn to the Acharya will be evident from an incident that occurred during the interview. It was 5.30 in the evening. Sri C. Rajagopalachari who had accompanied the Mahatma had been waiting outside, went inside the cattle-shed and reminded the Mahatma about his evening meal; for the Mahatma would not take any food after 6 P.M. The Mahatma made this significant observation to Sri. C. Rajagopalachari: “The conversation I am having now with the Acharya is itsclf my evening meal for to day” As the Mahatma was leaving ,after a very fruitful interview, the Acharya gave him a pomelo fruit with his blessings. The Mahatma received it with great reverence, remarking that pomelo is a fruit which he liked best

Later in the evening, Gandhiji addressed a public meeting in Coimbatore. Some people in the audience were eager to know about the interview Gandhiji had had earlier with His holiness. Gandhiji replied saying that they discussed points of mutual interest, that the interview was a private one, that because of this, news paper reporters were not present there and that there was no point in his disclosing the details of the interview. Nothing more was known about this historic meeting.

A request was made to His Holiness in November 1968 for a message of the Seminar on The relevance of Mahatma Gandhi to the world of thought held at the University of Madras. Out of his abundant grace, Jagadguru, the preceptor of the World, sent a message in which he recalled the meeting in 1927 with Gandhiji the Father of the Nation and paid the following tribute:

“We wish to place before this Seminar one of the’ many things which Gandhi and I we discussed when we met at Palghat, Kerala in the last Prashava year. Before Gandhiji arrived at Palghat there came the news of the assassination of Sraddhananda of the Arya Samaj. Referring to this incident Gandhiji remarked as follows:

“I have an apprehension in my mind that assassination of this kind would occur more often than now [in the coming years] Let not there arise in me hatred even in a small measure against the present assassin. There arises a desire in me that I should able to embrace with love even so cruel a man who commits a heinous crime, as this one, an atatayin. But it is extremely difficult to cultivate such heartfelt affection. Yet I shall make an honest attempt in this direction.”

All that we wish to point out is that, in this world it is very rare even to hear about such a feeling expressed”.


[Courtesy Bhavans Journal]

The conversation that took place is now for you to read. 
Excerpts from “A Succinct Biography” 

The details of the conversation between the great men remained a complete secret, since no one else was allowed inside. Even till long after Gandhiji’s demise, the Acharya did not reveal anything about the conversation, in spite of the repeated requests of ardent, interested devotees. But later some details came out. About a year after the return of His Holiness to Kanchi, after the prolonged tour on foot, for six years, a letter was published in the name of a Professor Swaminathan, in an issue of Statesman (Calcutta). The professor was then editing the works of Mahatma Gandhi. The letter contained some details about the conversation between the Acharya and Gandhiji. The letter was perused by His Holiness. Sri Neelam Raju Venkateseshayya, (then editor of Andhra Prabha) had often entreated the Acharya to narrate details of the conversation between the Acharya and Gandhiji in 1927. But the Acharya Swami, once (years ago) told Sri Seshayya, “You have been always asking me about my talk with Gandhiji. None except the two of us knows anything about our talk. Now Gandhiji is no more. Suppose,I reveal the details of our conversation, will it not give rise to a doubt about its truth in the minds of Gandhiji’s followers?”. Sri Seshayya felt that a great secret of dharma had been revealed by the Acharya. In the letter published in the Stateman giving some details regarding the conversation between the two great men , it was stated that Gandhiji had informed SriKishore Lal Masurvala, a resident of Gandhiji’s ashrama and Srimati Ganga Ben Vaidya, about some of the details of his talk with the Kanchi Acharya. In the middle of June1985, Sri Venkataseshayya was summoned to Kanchi. When he reached Kanchi, His Holiness asked him to read the letter published in the Statesman and then said to him, “Now that some parts of the talk that transpired between Gandhiji and me have been published, I shall comply with your repeated requests concerning the same”. (The conversation between His Holiness and Sri Seshayya was in Telugu language and it has been translated into English)


A=Acharya, G=Gandhi

A : “I appreciate your pointing out about a good thing to mankind. Energy isessential for leading a righteous life. Danger only will result by leading a life based onphysical entities bereft of religion.”

G : “Yes, I do understand”.

A : “Our Bharat is one of the very ancient countries of the world. Our country isendowed with old, excellent learning and with an ancient culture. In the past, peoplefollowed the social dictum of Varnashrama Dharma, they were engaged in the activitiesassigned to them, and thereby protected their dharma and enjoyed happiness in the worldand in the next”.

G : “Modern society is different from the society of the past. Will it be possible togo along with the ancient ideals of social life?”
A : “ The quality of cold water is different from the quality of hot water. If both get mixed they will loose their natural characteristics and become useless. Society of course will not be uniform. For instance take a mango tree. It has several branches. In these branches flowers blossom and mangoes emerge at different times. But the tree is only one. Society is, like the tree, only one. Even as the different branches and the trunk combine into tree, all castes together form society. Nowadays, politicians enter the fields of religion and society and try to make in roads into them and to change them. And this had weakened our religion, and altogether changed the smooth running of the world”.

G : “I concur with the opinion of your Holiness”.

A : “What is the necessity for the removal of untouchability?”

G : “Among the people of Bharatadesa, besides Hindus, there are Muslims, Christians, and also some other religionists. Hence it seems to me that untouchability needs to be removed, what does your Holiness think about entry of the untouchables in totemples”?

A : “Temples are sacred places. They are intended for those who believe that God is enshrined in the Sanctum sanctorum of the temple. The Agamas extol the sacred nature of the temples. Those who do not have faith in the Agama Shastras and those who do not accept the principles enunciated by the Agamas in connection with the purity and sanctity of the temple are decidedly unfit for entering our temples”.(Later after a talk between the two for more than twenty minutes over other problems, almost towards the end, the conversation turned on to the murder of Swami Sraddhananda).

A : ‘I suppose, you know about how Swami Sradddhananda has been killed by a Muslim recently”.

G : “Yes. In the present condition of our land how can we attain unity amidst Hindus and Muslims”.

A : “In case a Hindu kills you or me in the future, can we hate the entire Hindu community on that count?”(In the letter of Sri Swaminathan published in the Statesman(1985), he has hinted that Rajaji expressed to his friends, the prophetic remark of His Holiness immediately after the assassination of the Mahatma).


source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/876/periava-mahatma-gandhi?ixzz2c2p6wowR=undefined#ixzz2c3A8dwrk

“குழந்தை…. கரும்பை யானைக்கு கொடுக்கலாமா ?!!!”

தஞ்சைக் கிராமமொன்றில் ஸ்ரீசரணர்கள் தங்கியிருந்த போது கரும்பு அறுவடையாகி, நிறையக் கட்டுக்கள் ஸ்ரீமடத்திற்கு ஸமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

கரும்புக் கட்டைப் பார்த்த ஒரு குழந்தை தனக்கு வேண்டுமென்று அழ ஆரம்பித்தது. குழந்தையின் பெற்றோர் ஸ்ரீசரணாளிடம் அதற்குக் கணை, குலைக்கட்டி முதலியன இருந்ததால் கரும்பு தருவதற்கில்லை என்றனர்.

ஸ்ரீசரணர் அவர்களைக் கையமர்த்தினார். குழந்தையிடம் ஒரு கரும்பு கொடுக்கப் பணித்தார்.

“நம்ம மடத்து ஆனை நீ பாத்திருக்கியோ? ஒனக்கு அது ரொம்ப இஷ்டந்தானே?” என்று குழந்தையைக் கேட்டார்.

“பாத்திருக்கேனே! எனக்கு ஆனை-ன்னா ரொம்ப இஷ்டமாச்சே!”

“பூஜைக்கு அது வரும். அப்போ கரும்பை அதுக்குக் குடுத்துடறயா? அது மளுக்கு மளுக்குனு முறிச்சுத் தின்னுமே? பாத்தா ரொம்ப வேடிக்கையாயிருக்குமே!”

“அது என்னெ ஒண்ணும் பண்ணாதா?”

“பண்ணாது, பண்ணாது. நான் ஒன் பக்கத்துலயே இருந்துண்டு பாத்துக்கறேன்.”

“ஆனா ஸரி.”

அப்படியே ஆனை வர, ஸ்ரீசரணர் அருகிருந்த தைரியத்தில் குழந்தை ஆசை ஆசையாக அதற்குக் கரும்பைத் தூக்க முடியாமல் தூக்கி – அல்லது இழுத்து வந்து கொடுக்க; அது ‘ஆவ்ரி, ஆவ்ரி’ என்று ஆனந்தமாக முறித்து விழுங்க, அதைவிட ஆனந்தமாகக் குழந்தை முழுக் கரும்பும் தன்னாலேயே தனக்கு நஷ்டமானதைக் கருதாது ஆனந்திக்க – கொடுத்த – கொடை பெற்ற அவ்விரு ஜீவன்களின் ஆனந்தமும் சேர்ந்து கரும்பிதயரின் முகத்தில் பிரகாசித்தது.

தானே அநுபவித்து நுகராமல் பிறருக்கு ஈந்து அதனாலேயே நுகருமாறு ஈசாவாஸ்ய மறைமுடி கூறும் அந்தத் தியாக நுகர்ச்சியின்பத்தை ஒரு சிறு குழந்தை பெறச் செய்து விட்டார், பெருமனத்தர்!

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!!

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4834/maha-periyavaa-children-3/#ixzz2bTNMwuHM