அழகு தமிழ் ஆத்திச்சூடி , அருமையான ஆங்கிலத்தில் !!!

1. அறம் செய விரும்பு / …1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don’t forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don’t prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don’t betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don’t forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don’t despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don’t freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don’t shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don’t flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don’t forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don’t land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don’t play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don’t sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don’t forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don’t hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don’t swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don’t vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don’t hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don’t gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don’t show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don’t be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don’t sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don’t attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don’t defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don’t listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don’t forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don’t compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don’t depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don’t jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don’t over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don’t involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don’t dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don’t comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don’t encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don’t vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don’t accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don’t over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don’t be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don’t join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don’t agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don’t self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don’t gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don’t be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don’t premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

காலத்தால்  அழியாத ஆத்திச்சூடியின்  ஆங்கில  வடிவாக்கம்  மேலே !!!!…தமிழ்  தெரியாத அன்பர்களுக்கும் , தமிழ் புரியாத குழந்தைகளுக்கும்  இது  ஒரு நல்ல  வழிகாட்டி !!!!

படித்தும் , பகிர்ந்தும்  பயன்  பெற  வேண்டி  விழைகிறேன் …

நடராஜன்

 

Source…Input from a friend of mine.
natarajan

 

What One Man”s Dedication Brought in !!!

Sri Valli-Teyvanai Samedha MuruganMarch 20, 1968: It was a dark day indeed for the priest at the Ratnagiri Hill Temple, located between Vellore and Arcot about a hundred miles from Chennai. Three months had gone by since he was last paid, and his patience was running out. “How much longer must this go on?” he thought to himself. He was in a particularly sour mood this morning and decided to not perform his obligatory daily worship service in the main shrine of the temple.

Rathinagiri Bala Murugan Adimai:

What One Man’s Dedication Brought !!!

Pl read further ….

natarajan

Rathinagiri Tavatiru Balamurugan Adimai in 1968

 
About this time, Satchidanandam–a 27-year-old clerk–strolled into the temple for his usual morning worship. When he saw the condition of the main shrine, he was shocked. Not only were the lamps and incense not lit, but also fresh flowers and sacraments had not been gathered and prepared. Nor had the puja implements been cleaned and set out.

“Where is the priest?” he thought to himself. “Why is he not performing the morning puja?” Satchidanandam could not help feeling a special concern for the welfare of this particular temple. His father, Kandaswami Mudaliar, had initiated the construction of the 156 steps leading up to its entrance in 1936 and orchestrated its kumbhabhishekam (major consecration) in 1938.

Although young Satchidanandam was discouraged by what he saw, he still circumambulated the shrine and stood before the Deity to pray. As he began to commune with the shakti that he felt emerging from within the shrine, he fell into a swoon. The experience took him by surprise.

Nothing like this had ever happened to him before. As he leaned against a pillar for support, his body quivered with bliss as his head filled with a golden light. Just as he was about to merge into a sea of oneness, Lord Muruga appeared before him in His etherial body. Although the presence of this legendary God was powerful, He vanished almost as soon as he appeared–like a bolt of lightening.

Slowly, young Satchidanandam settled back into a calm and peaceful physical consciousness. He knew it would take some time to fully digest what had just happened. For now, however, he was aware only of a mighty determination to restore this neglected temple to the state of its original elegance and beauty. At that very moment, the transformed young man took a vow to never leave the Ratnagiri Hill Temple until it had been fully renovated.

Tavatiru Bala Murugan Adimai
Thus began the work that was to be his life’s mission. The residents of the nearby village of Kilminnal stopped calling the young man “Satchidanandam.” Instead, they referred to him as Balamurugan Adimai–or just “Swamiji ” for short.

In the 36 years that have passed since the clerk-turned-holy-man took his vow to do this work, he has not left the temple precincts even once, and his life has been one of exemplary simplicity and austerity. Aside from worshiping and meditating three times daily–at 4:30 in the morning, 12 noon and six in the evening–he remains fully available as a servant of the God that appeared before him during his one unforgettable life-changing experience. Most of his time is spent fully immersed in the supervision of temple construction and the hosting of guests. At 9:00 pm he retires to his room for meditation and sleep. His few personal needs are easily met.

Swamiji is an expert in working with people. He takes special care to become knowledgeable in every aspect of temple construction so that, whether he is talking with sthapatis about stone work or silversmiths about metal crafting, he can negotiate knowledgeably on even the smallest details of their work. He even becomes actively involved with the supervision of photographers and journalists who come regularly to publicize the progress of the on-going renovation.

The neglected Ratnagiri Hill Temple, for which songs were composed and sung by Saint Arunagirinathar in the 14th century, was originally only 200 square feet in size. Today, due to the inspiration and hard work of Balamurugan and the people who help him, it covers more than 30,000 square feet.

Over time Swamiji has also become a spiritual guide and social leader for the residents of Kilminnal. Besides catalyzing their mystical and religious inclinations, he also provides assistance of a more practical sort. So far, he has built a school, a hospital and a number of roads; and provided much-needed water to the area by digging wells and constructing massive tanks for water storage.

It’s no wonder the local people love him and gladly volunteer their time and energy to lift large, heavy granite stones to the hilltop for the temple construction. In 1987, Swamiji began building his school for the youth of the surrounding rural areas by first constructing the Ratnagiri Nursery, which

opened with two teachers and 18 students. Through the years that followed, he constructed additional buildings to provide classroom and library space for education in a variety of fields including math, science, language, literature and computer science.

Sample of Rathinagiri Tavatiru Bala Murugan Adimai’s handwriting .

Today, Swamiji’s school campus includes ample kitchen and bathroom facilities, a large conference hall, several libraries and 24 classrooms. It employs 43 teachers and 12 staff members and provides education for 900 students. The hospital, which Swamiji began constructing in 1988, now has 26 staff members and makes medicine available at subsidized rates to local residents. Monthly eye camps sponsored by the hospital provide poor villagers with cataract operations, free of charge. Medical specialists from Chennai visit every Sunday. The Accident Relief Center, aided by State Government and run by the hospital, provides a fully equipped mobile van–the first of its kind in the Vellore district–for emergency outcalls.
Rathinagiri Tavatiru Balamurugan Adimai today

Rathinagiri Tavatiru Balamurugan Adimai
The future of Kilminnal and the Ratnagiri Hill Temple look bright as long as 64-year-old Balamurugan Adimai is around. Although one might assume that the continued improvement, maintenance and management of the temple, school and hospital facilities that have already been created might constitute a full-time job, such might not be the case for the ever-vibrant Balamurugan.

If the past provides any indication of what the future might bring–which usually it does–there should be good reason to assume that more dynamic creativity can be expected from Balamur ugan Adimai.

1968: Satchidanandam enjoys a vision of Lord Muruga. Local villagers name him “Balamurugan.”
1970: Balamurugan begins his service. A well is dug for the temple and nearby village of Kilminnal. The main Ratnagiri mandapam (worship hall) and an entrance Ganesha shrine and mandapam at the base of Ratnagiri Hill are constructed.
1973: Two more temple mandapams and a large marriage hall are built. Six staff buildings and eight guest cottages are also constructed.
1974: An ornate temple entry arch is erected, and electricity is installed to provide night lighting for the temple.
1975: A five-story rajagopuram (main temple tower) is completed. Two 8,000-liter water tanks are installed for use by local residents. A large dining hall and kitchen are built.
1978: A post office and police station for Kilminnal are constructed. Ten staff buildings and four guest cottages are added to the temple.
1988: The long-term construction of a school for local youth begins. A 25-bed hospital is completed.
2003: A separate building for computer training is constructed for the school. Science and library annexes are also added.
Courtesy: Hinduism Today magazine July/August/September 2004  and murugan.org

natarajan

Visit http://www.Ratnagiri.org official website of Rathinagiri Bāla Murugan Tiru Kovil

” கணினி வலைத்தளம் யுகத்தில் இசைக்கு வானமே எல்லை ” !!!

“இளம்த்லைமுறையினரிடையே இசை வளமாக வளரும்!”” -கர்நாடக இசைக்கலைஞர் திரு நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

An interesting and thought provoking interview of Shri .Neiveli Santhanagopalan..  Eminent  Carnatic vocal music artist…

I have had few opportunities to interact with him .. More Than a musician . my  good friend Shri, Neiveli Santhanagopalan is a standing example of  a great PERSONALITY  following the footsteps of his GURU .. Let the present day younger generation learn from him and  follow his foot steps for a right and bright future .

Natarajan

‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பது நமது முன்னோர் வாக்கு! தாய், தந்தை, குரு இவர்களுக்குப் பின்னர்தான் தெய்வம் என்று இதற்கு ஒரு விளக்கம் உண்டு. ‘தாய், தந்தை, குரு இவர்களே நம் கண் முன்னால் நடமாடும் தெய்வங்கள்’ என்றும் ஒரு விளக்கம் வழக்கத்திலிருக்கிறது. இன்று பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த அத்தனை மனிதர்களுக்கும் வாழ்க்கையில் நல்ல ஆசான்கள் அமைந்து தன்னலம் கருதாது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு அதற்காகவே தனது வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்து அறிய முடிகிறது. அப்துல்கலாம், அம்பேத்கர் ஆகியோரது வாழ்க்கையில் ஆசிரியர்களின் பணி மகத்தானது. தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த அம்பேத்கரை அவரைச் சுற்றியிருந்த சமுதாயம் வெறுத்து ஒதுக்கியபோது ‘அம்பேத்கர்’ என்ற பிராமண குலத்தைச் சேர்ந்த அவரது ஆசிரியர் பீமாராவ் என்ற பெயர் கொண்ட அந்த சிறுவனின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு அரவணைத்து தனது இல்லத்திலேயே தங்கவைத்து உணவும் உடையும் அளித்து படிக்கவும் வைத்தார். தனக்கு ஆதரவு அளித்த ஆசிரியரின் பால் மரியாதை கொண்டு அவரது பெயரும், நினைவும் தனது மனதில் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்ற நந்றியுணர்வுடன் தனது பெயருடன் ஆசிரியரின் பெயரையும் இணைத்து ‘பீமாராவ் அம்பேத்கர்’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். ஆசிரியர்களின் பெருமையை உணர்த்த இதை விட சிறந்த உதாரணம் தேவையா?

இன்று நம்மிடையே இருக்கும் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த வித்தகர்களின் வாழ்வில் ஆசிரியர்களின் பங்கினை அவர்களிடமே நேர்காணல் மூலமாக அறியும் முயற்சியே இந்தத் தொடர்!

இலக்கியம், சங்கீதம், கலைகள், வியாபாரம் இப்படி அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் பெருமக்களிடமும் நமது நேர்காணல் தொடரும்.
முதலாவதாக கர்நாடக சங்கீத்தில் சாதனை படைத்து வரும் திரு நெய்வேலி சந்தான கோபாலன்! சங்கீதத்தில் பெரிய அளவு பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்து கர் நாடக சங்கீதத்தின்பால் இயல்பான ஆர்வம் கொண்டு அதைக் கற்பதற்காக தான் எடுத்த முயற்சிகளையும், தனக்கு அமைந்த ஆசிரியர் பெருமக்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்த நெய்வேலி சந்தான கோபாலன் தனது குருகுல வாசத்துக்கே சந்தோஷ மான தொரு ‘பிளாஷ்பேக்’ சென்றார்.

பள்ளிக்கால அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்?
முதலில் நாம் காஞ்சிப் பெரியவரின் திருவுருவை மனதில் தியானித்து அவரது பாத மலர்களைத் தொழுது நமது நேர்காணலை தொடங்குவோம்! அவர் எங்கள் குடும்ப சொத்து! எங்களுக்கெல்லாம் முதல் குரு அவர்தான்! (இவரது இல்லத்தின் பெயரே ‘பெரியவா பிச்சை!) அவர் ஜகத்குரு! நான் சிறியன்! ஆசிரியர்களின் ஆசிகளால் நான் இன்று ஓரளவுக்கு சங்கீதத்தில் வளர்ந்திருக்கிறேன் என்பதுதான் உண்மை! குரு இல்லாத வித்தை பாழ் என்று சொல்வார்கள். தான் தோன்றி பெருமான் என்று சிவனைச் சொல்வார்கள். சிவனுக்கு மட்டும்தான் அந்தப் பெருமை உண்டு. நம் எல்லோருக்கும் குரு தேவை! எழுத்தறிவித்தவன் இறைவனாவான்! ஆக குருமார்கள் நாம் தெய்வங்களாகக் கருதத்தக்கவர்கள்! நான் வாழ்ந்தது நெய்வேலியில்! தண்ணீருக்குப் பஞ்சமில்லை. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்! படித்தது நெய்வேலி லிக்னைட் கார்ப்பொரேஷன் பள்ளி! அருமையான பள்ளி. ஆசிரியப் பெருமக்கள் அனைவருமே நினைந்து போற்றத்தக்கவர்கள்! சங்கரன் என்று ஒரு ஆசிரியர். அவர் வந்து வகுப்பில் நின்றார் என்றால் சூரியன் வந்து நின்றது போல இருக்கும். அத்தனை தேஜஸ்! இவர் தவிர , சிங்காரம்பிள்ளை, ஆளவந்தார், சோழன் ஆகியோர் தமிழ் ஆசிரியர்கள். நடராஜன் என்ற தனது இயற்பெயரை தமிழின்பால் உள்ள காதலால் ‘சோழன்’ என்று மாற்றி வைத்துக்கொண்டார். இவர் பாடங்களையும், பாடல்களையும் சங்கீதமாகவே இசைப்பார். மோகன ராகம் அவருக்கு மிகவும் கைவந்த ராகம்! அவருக்கு ராக லட்சணங்கள் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் பாடினால் அது தேனாய் இனிக்கும். ஆசிரியப்பா, வெண்பாவில் புலி! அந்த காலத்தில் தலைமை ஆசிரியர்தவிர மற்ற அத்தனை பேர்களும் சைக்கிளில்தான் வருவார்கள். புலவர் சோழன் சைக்கிளில் வரும்போதும் இலக்கியம் சார்ந்த பாடல்களை சங்கீதமாய் பாடிக்கொண்டே வருவார். வயிற்றுப் பிழைப்புக்காக தமிழ் ஆசிரியராக இல்லாமல் தமிழுக்காகவே வாழ்ந்தவர். மறக்கமுடியாத மாமனிதர் அவர்! இனொரு ஆசிரியர் கொஞ்ச காலம் மட்டும் எங்கள் பள்ளியில் இருந்தார். அவர் எல்லாப் பாடல்களுக்கும் சோகமயமான ராகங்களையே இசைப்பார். இருந்தாலும் அந்த ராகம் அவரது குரலுக்கு அவ்வளவு இனிமையாக இருக்கும். நான் அதைத் திரும்பத்திரும்பப்பாடி ‘மாயாமாளவ கௌள’ ராகம் என கண்டுபிடித்தேன். பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி இப்படிப் பல நடக்கும். எனக்கு இயல்பாகவே தமிழில் ஆர்வம் இருந்தது. நான் எழுதிய கவிதை ஒன்றுக்குப் பரிசு கிடைத்தபோது புலவர் சோழன் அந்தக் கவிதையை அழகாகப் படித்து ரசித்து விளக்கம் சொல்லி மாணவர்களிடம் கைதட்டல் பெறவைத்து கோப்பையை எனக்களித்தார். நினைவில் நின்ற சம்பவம் இது! இன்னொரு ஆசிரியர் செந்தமிழில்தான் பேசுவார். நடன சபேசன் என்றொரு ஆசிரியர் தங்கபட்டனை சட்டையில் அணிந்திருப்பார். அதனால் அவரது பெயரே ‘தங்க பட்டன்’ என்றாகிவிட்டது. தானே துவைத்து வெள்ளை வெளேர் என்று தும்பைப் பூவாய் ஆடை அணிந்து வருவார். ஆளவந்தார் என்ற் ஆசிரியர் மாணவர்களையே படிக்கவைப்பார். தவறு செய்தால் சட்டென்று நிறுத்தி விளக்கம் கொடுப்பார். தமிழில் எனக்கேற்பட்ட ஆர்வத்துக்கு இந்த ஆசிரியப்பெருமக்களே காரணம்! மாவட்ட அளவில் நடக்கும் கவிதை மற்றும் இசைப்போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றிருக்கிறேன். ஒரே ஒரு முறை சென்னைக்கும் வந்திருக்கிறேன். பள்ளிக்காலத்தில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசாக அப்போதெல்லாம் சோவியத் நாட்டிலிருந்து வெளிவரும் வண்ண வண்ண சித்திரைக் கதைப் புத்தகங்களைப் பரிசாகத் தருவார்கள். அவற்றைப் பார்க்கும்போது ஒரு புதிய விந்தை உலகத்துக்குப் போய்விட்டார்ப்போலத் தோன்றும். அந்தப் புத்தகங்களின் வாசனை கூட நினைவிருக்கிறது. மு.மு.இஸ்மாயில் எழுதிய கம்பனைப் பற்றிய புத்தகங்கள், சித்பவானந்தர், சிவானந்தர் இவர்களின் நூல்கள் ஆன்மீக உலகின் கதவைத் திறந்து விட்டன. ப்ளஸ் டூ படிக்கும்போது எங்கள் ஊரில் நாற்சந்தியில் வாழைப்பழம் விற்கும் நண்பர்- அவரைப் புலவர் என்றழைப்போம். – பழைய ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற புத்தகங்களைப் பைண்ட் செய்து வைத்திருப்பார். அவர் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கத்தருவார். தினமும் அங்கு சென்று அவருடன் உரையாடி புத்தகங்கள் படிப்பேன். மகாகவி பாரதி, கி.வா.ஜ. ஆர்.சூடாமணி, ல.ச.ரா, கல்கி, சாண்டில்யன், சுஜாதா இவர்களைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதிலும் பாரதி பைத்தியமாகவே ஆகிவிட்டேன். சென்ற ஆண்டு ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் முழுவதையும் பாடல்களாக இயற்றி இசையமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவற்றை அனிதா குகாவின் குழுவினர் நாட்டிய நாடகமாக்கினார்கள். நல்ல வரவேற்பையும் பெற்றது. அரங்கில் என்னைப் பாராட்டியபோது என்னுடைய தமிழ் ஆசிரியர்களை மானசீகமாக நினைத்துக் கொண்டேன். இந்த ஆண்டு மகாபாரதத்தில் வனபவர்வத்தை பாடல்களாக இயற்றிக்கொண்டிருக்கிறேன். அமெரிக்காவில் க்ளீவ்லேண்டில் அரங்கேறப்போகிறது.

இசையின்பால் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
பள்ளிக்காலத்தில் ஒரு பட்டி மன்றம் தொடங்குவதற்கு முன்னால் ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’ என்ற பாரதியின் பாட்டைப் பாடினேன். அதுவே எனது ஆரம்பம்! புலவர் சோழன் என்னைப் பாராட்டிப் பேச அனைத்து பேச்சாளர்களும் என்னைப் பாராட்டியபிறகுதான் தங்களது உரையைத் தொடங்கினார்கள். எனக்கு இசையின்பால் ஆர்வம் ஏற்படுத்தி தன்னம்பிக்கையை ஏற்படுத்திய ஒரு நிகழ்ச்சி அது! ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கைக்குச் சென்றிருந்தபோது கம்ப வாரிதி ஜெயராஜ் அவர்களின் நட்பு கிடைத்தது. எனது சங்கீதத்தை அவர் சிலாகித்துப் பேசியபோது இத்துறையின் நான் மேலும்பொறுப்போடு செயல்படவேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதெல்லாம் வானொலியில் இசை கற்றுத்தருவார்கள். அப்படித்தான் எனது தாயார் இசை கற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழின் மீது ஆர்வம் அதிகம். எனது நண்பர்களின் நாடகங்களுக்கு அவர்தான் இசையமைத்துக் கொடுப்பார். முறையான இசைப்பயிற்சி என்றால் செம்பை வைத்ய நாத பாகவதரின் மருமகன் அனந்தமணி நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் பணியாற்ற வந்தார். அவரே எனக்கு முதல் குருவாகவும் அமைந்தார். முதல் நாள் அவர் வருவதற்குத் தாமதமாகவே நான் தூங்கி விட்டேன். என்னை எழுப்பி பாடவைத்தார். என் அம்மா சொல்லிக்கொடுத்த தியாகாராஜ கிருதி ஒன்றைப் பாடினேன். அடுத்த நாள் காலையிலேயே ஐந்து மணிக்குப் பாட்டு சொல்லித்தர வந்துவிட்டார். தொடர்ந்து சாதகம். நட்புடன் பழகினார். ஒரு கட்டத்தில் ‘எனக்கு இவ்வளவுதான் தெரியும். இதற்கு மேல் சொல்லித்தர வேறொரு ஆசிரியரை நானே ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். இப்படி வெளிப்படையாக சொன்ன அவரது பாங்கு வியப்பாக இருந்தது. நான் முதலில் கச்சேரி செய்த தருணத்தில் எனது குரு அனந்த மணி அவர்களே எனக்குத் தம்புரா போட்டார். ரசிப்பின் உச்சத்தில் அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழியும். அத்தனை ரசிகர் அவர்! அடுத்து ஸ்ரீரங்கம் ரங்கநாதன் என்ற் ஆசிரியர் பாண்டிச்சேரியிலிருந்து வாராவாரம் வந்து சொல்லித்தந்தார். இவர் ஆயிரம் கீர்த்தனைகள் தெரிந்த அபூர்வ ஆசிரியர்! இருந்தாலும் ஒருதடவை வந்தால் கால் கீர்த்தனைதான் கற்றுத்தருவார். பின்னால்தான் காரணம் புரிந்தது. அந்தக் கால் கீர்த்தனையை நான் பாடிப்பாடி சாதகம் செய்து எனது கற்பனையை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று அவர் எண்ணியிருக்கிறார். ஒரு கலையைக் கற்றுத்தரும்முறைகளில்தான் எத்தனை விதங்கள்! தவிர ஒவ்வொரு தடவையும் இசைப் பயிற்சி முடிந்தவுடன் அவர் எங்கோ செல்வார். ஒரு நாள் அவர் பின்னாலேயே சென்றபோது வேறொரு வித்வான் வீட்டுக்குச் செல்வதைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவர் பெயர் வெங்கட சுப்ரமணியம்! அபாரமான திறமை படைத்தவர். வயலின் வித்வான். நானும் அங்கு சென்று அவர்கள் பேசும் பேச்சுக்களையும், இருவரும் சேர்ந்து பாடும் பாடல்களையும் மெய்மறந்து கேட்பேன். ஒரு தடவை விடிய விடிய பாடினார்கள். இசைக்கடலில் ஆனந்தமாக மிதந்தேன். தேடித்தேடி ஒரு கலையைத் தேடும்போது அதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது. எங்கள் ஊர் சபாவுக்கு வராத வித்வான்களே கிடையாது. அங்கு பாடும் பாடல்களை டேப்களில் பதிவு செய்வோம். சென்னையிலிருந்து டேப்புகள் வரவேண்டும். நான் கஷ்டப்பட்டு ஒரு யுக்தி செய்து ஒரே டேப்பில் இரண்டு மடங்கு பாடல்களைப பதிவு செய்யும் முறையைக் கண்டுபிடித்தேன். இதெல்லாம் பெரிய சுவாரஸ்யம். பெரிய வித்வான் களெல்லாம் எங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டுப் போவார்கள். அது எங்களது பாக்கியம்.

உங்களது இசைப் பயிற்சிக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது எப்போது?
சேஷ கோபாலன் சார் எங்கள் ஊருக்கு வந்தபோது அவரது இசையால் வசீகரிக்கப்பட்டு மயங்கி அவருடனேயே அவர் செல்லும் இடமெல்லாம் செல்வது என்று தீர்மானித்து விட்டேன். ஆனால் அவ்ர் ப்ளஸ்டூ முடித்து விட்டு வரச் சொன்னார். அதன்படியே படிப்பு முடிந்தவுடன் மதுரைக்குச் சென்று அவரது இல்லத்திலேயே தங்கி குருகுலவாசமாக இசை பயின்றேன். அவரது ரசிகனாகத்தான் நான் சென்றேன். அவரது இசை எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர் எனக்கு குரு நாதராக அமைந்தது என் பாக்கியம். தினமும் எனது குருமார்கள் அனைவரையும் நினைத்துக் கொள்வேன். தொடர்ந்து இசைப்பயிற்சி, கற்பனை வளம் எல்லாவற்றுடனும் கூட குரு பக்தி மிகவும் அவசியம். இதை இன்றைய தலைமுறையினரும் உணரவேண்டும்.

தாங்கள் இன்று கர்நாடக இசையுலகில் அனைவராலும் விரும்பி ரசிக்கப்படும் ஒரு இசைக்கலைஞராக இருக்கும் அதே சமயம் பல மாணவர்களுக்கும் இசைப் பயிற்சியளிக்கவும் செய்கிறீர்கள். அதைப் பற்றி?
இப்போது இந்த கணினி யுகத்தில் உலகத்தின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் பாட்டு கற்றுக்கொள்ளலாம். என்னிடம் அமெரிக்காவில் இருக்கும் மாணவர்கள் பலபேர்களும் ‘ஸ்கைப்’ என்ற மென்பொருள் வழியாக இசை பயில்கிறார்கள். அங்கு செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு நேரிலும் பயிற்சியைத் தொடர்கிறேன். ஆக முன்பெல்லாம் ‘sky is the limit’ என்பார்கள் இப்போது ‘Skype is the limit’ என்று சொல்லலாம். தவிர முன்பெல்லாம் அசரீரி என்று வானில் இருந்து வரும் ஒலியைச் சொல்வார்கள். இப்போது electronic வழியாக எல்லாம் நடப்பதனால் கணினி வரும் ஒலியையும், காட்சிகளையும் ‘ஈ-சரீரி’ என்றும் கூடச் சொல்ல்லாம். எனது மனைவி மீரா நன்றாகப் பாடுவார். எனது மகள் ஸ்ரீ ரஞ்சனி மேடைக்கச்சேரிகள் செய்து வருகிறார். மகன் சங்கரப் பிரசாத் மிருதங்கம் பயில்கிறான். இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் அவர்களது வேலைகளைச் செய்ய பறக்கவேண்டியதாக இருக்கிறது. அதற்கிடையிலும் ஆர்வத்துடன் இசை பயில்கிறார்கள். அதற்கு கணினியும். வலைத்தளமும் பயன்படுகிறது. எதிர்காலத்தில் கர்நாடக இசை மேலும் அமோகமாக வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமேயில்லை.

நேர்காணல்:  ‘க்ளிக்’ ரவி
‘KLIK’ RAVI
BLOCK: E2, FLAT: 203,
PARAMESWARAN VIHAR
(NEAR BARANI STUDIOS)
ARCOT ROAD,
SALIGRAMAM.  CHENNAI- 600 092
PHONE:  98411 55500,  044-23652705

klikravi13@gmail.com

source:::::

வானமே எல்லை ஆசிரியர்:  ncs_sridharan @yahoo.com

அமுதசுரபி  ஆசிரியர்:  திருப்பூர் கிருஷ்னன்   thiruppurkrishnan@hotmail.com

natarajan

” இன்று குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டாம் ” !!! ஏன் ?

ஸந்நிதிக்கு வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழமோ கற்கண்டோ ஸ்ரீபெரியவாள் தவறாமல் வழங்குவார். தாமே நேராகக் கொடுப்பதுண்டு; அணுக்கத் தொண்டர்களைக் கொண்டு கொடுப்பதுமுண்டு.

விடுமுறை நாள்களில் பள்ளி ஆசிரியர்கள் பஸ் அமர்த்திக்கொண்டு பசங்களுடன் வருவது வழக்கம். அதனால் அந்நாள்களில் பணியாளர்கள் முன்னதாகவே வாழைப்பழமும் கற்கண்டும் நிறைய எடுத்து வைத்து விடுவார்கள்.

ஒரு விடுமுறை தினத்தன்று பெரியவாள் “இன்னிக்குக் கொழந்தைகளுக்கு வாழைப்பழம், கல்கண்டு குடுக்க வேண்டாம்” என்றார். ஏன் அப்படிச் சொன்னாரென்று புரியவில்லை.

தப தப என்று ஒரு பஸ்-லோட் பள்ளிச் சிறுவர்கள் ஆசிரியர்களுடன் வந்து விட்டனர். தம்மைக் காண வந்த சிட்டுக்களுக்கு ஒன்றும் தராமலா இந்த மா மதுர மஹா தாத்தா திருப்பி அனுப்பி வைப்பார் என்று பணியாளர் எண்ணினார்.

சரியாக அதே சமயம் திருமாளம் பஞ்சாபகேச ஐயர் என்ற பக்தர் ஒரு மூட்டை ஸஹிதம் வந்தார். மூட்டையைப் பெரியவாளுக்கு ஸமர்ப்பித்து, “பெரிவா ப்ரயோஜனப் படுத்திக்கணும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

மூட்டையிலிருந்து குண்டு மல்லிகைகள் போன்ற நெற்பொரி. பெரியவாள் திருவமுது செய்து வந்தது அதைத்தான். இதை நினைத்தே அவர் ‘ப்ரயோஜனப் படுத்தி’க் கொள்ளச் சொன்னது. ஆனால் பெரியவாளோ தம்முடைய பிக்ஷைக் காலம் வரை தள்ளிப்போடாமல் அப்போதே அதைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டு விட்டார்.

பணியாளரைப் பார்த்து, “தேவாளுக்குப் பொரி ரொம்ப இஷ்டம். தெரியுமோ? கல்யாணத்துலகூட லாஜ ஹோமம்னு பொரி ஹோமம் பண்றாளோன்னோ? இந்தக் கொழந்தைகள்ளாம் தேவாள்தான். இவாளுக்கு வெல்லச் சக்கரையும் கொஞ்சம் சேர்த்து பொரி நெறய்ய விநியோகம் பண்ணுங்கோ. ஒடம்புக்கும் ஹிதம். மனஸுக்கும் ஸத்வம். பொரி சாப்பிட்டா பாபம் போறதுன்னு சாஸ்த்ரம்” என்றார்.

அவ்வாறே சிறாருக்கு வெல்லச் சர்க்கரை சேர்த்த பொரி வழங்கப்பட்டது. ஆவலாக வாங்கிக் கொண்டனர்.

தலைமையாசிரியர் வியப்பில் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் சொன்னார் : “பசங்களில் பல பேருக்கு மஞ்சட்காமாலையும், வயிற்றுப்போக்கும். வாழைப்பழம் கூடாதென்று டாக்டர் சொல்லியிருக்கிறார். ‘பெரியவர்களோ வாழைப்பழம் கொடுப்பதுதானே வழக்கம்? அப்படிக் கொடுத்தால் பிரஸாதத்தை என்ன செய்வது?’ என்று கவலைப்பட்டுக் கொண்டேதான் வந்தேன். பெரியவர்களுக்குத் தெரியாததா? அதுதான் நெற்பொரி கொடுத்து அநுக்கிரஹித்திருக்கிறார்”.

அந்த தீர்க்க திருஷ்டி இருக்கட்டும். அது எல்லா மஹான்களுக்குமே உண்டுதான். ஆனால் அந்தப் பள்ளிப் பாலர்களை தேவர்கள் என்றாரே! அந்த எளிமை அவரொருவருக்கே உரித்தானதல்லவா?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4830/mahaperiyavaa-children-raa-ganapathy-anna/#ixzz2amL4u8MM

” பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் ” !!!

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..!

 

இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்…? …

உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது . தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது. உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.

மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.

வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.

நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது.

வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.

உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோயும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது.

உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.

நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது… புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..

ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.

முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.. ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது. உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது. அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.   

 

source:::::input from a friend of mine 

natarajan

“மணலில் போட்ட அட்சதை ….அதன் தாத்பர்யம் என்ன !!! “

வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா மணலில் போட்ட அட்சதையை, அவரது ஆணைப்படி சேலம் வக்கீல் ராமசாமி ஐயரும்,அவரது மனைவியும் கண்களில் ஒற்றிக் கொண்டு தங்களது மேல்வேஷ்டி மற்றும் புடவைத் தலைப்பில் சர்வ ஜாக்கிரதையாக முடிந்து வைத்துக் கொண்டனர்.

எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ,புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மகா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?

சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மகா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு,வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார்.சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது. ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது.

காரணம் – வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர். வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்… அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார். உள்ளே – ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர்,பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார்.

பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு – உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’

ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம்.இருக்காதா பின்னே!எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து – அதுவும் நல்ல நன்செய் நிலம் – தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும். மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா,அட்சதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர். ஆனால், அப்படி அட்சதை போட்டு ஆசி புரிந்த மகா பெரியவா இதை மறப்பாரா?

நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர்.ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது. தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து,அரிசி அரைத்துக் கொண்டு,அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.

அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார். “வாப்பா ராமசாமி… சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” – மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை.

மகா பெரியவாளே தொடர்ந்தார்:“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே?” மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர்.

சட்டென்று நிதானத்துக்கு வந்து,“ஆமா பெரியவா.வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைங்களையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.”

“எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி… இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது.

மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை.

மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார்.

“ஆமா பெரியவா… அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.

இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

source::::www.periva.proboards.com
natarajan
Read more: http://periva.proboards.com/thread/4708/#ixzz2aCygEvnK

” இது தேவராஜ ரகசியம் ” !!!

பெரியவா தேனம்பாக்கத்தில் தங்கியிருந்த சமயம். ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் சீமா பட்டாசாரியாரை அழைத்து வரும்படி சொன்னார். அவரும் வந்து வந்தனம் செய்தார்.

“இன்னிக்கு என்ன திதி?”

பட்டர் மெதுவாக “ஏகாதசி” என்றார்.

“உபவாசம் நமக்கு மட்டும் தானா? இல்லே, வரதனுக்கும் தானா?”

பட்டர் திகைத்துப் போய் நின்றார்.

“பெருமாளுக்கு இன்னிக்கு நைவ்வேத்யம் ஏன் செய்யல்லே?”

அதிர்ச்சியடைந்த பட்டர் நாக்குழற “தெரியல்லே.. விசாரிச்சிண்டு வரேன்” என்று கலவரத்துடன் கோயிலுக்குச் சென்றார்.

விசாரணையில் உள்கட்டில் ஏதோ தவறு நடந்துள்ளது என்ற உண்மை தெரிய வந்தது. அதை சரி செய்து, தக்க பிராயச்சித்தம் செய்து, பெருமாளுக்கு திருவமுது படைத்து, பிராசதத்தை பெரியவாளுக்கு திருவமுது படைத்து, ப்ரஸாதத்தை கொண்டுவந்து சமர்ப்பித்தார் பட்டர்.

வரதராஜ பெருமாளுக்கு நைவ்வேத்தியம் நடக்கவில்லை என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? தெரிந்திருந்தாலும், அதைப்பற்றி அவர்கள் கவலைப் படுவானேன்?

தேவரகசியம் என்கிறார்களே? அது இதுதானோ? இல்லை, இது தேவராஜ ரகசியம்..! (வரதராஜருக்கு, தேவராஜன் என்ற திருநாமம் உண்டு.)

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4736/#ixzz2a7FxzaDh

“மகாபெரியவரும் அவர் குரு ஸ்ரீ ஆத்ம போதேந்திராளும் “…..

M SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
MECHARI BRAHMASRI PATTU SASTRIGAL NARRATES….

We read so many articles about Mahaperiyava….It gets even more interesting if the concerned person from that incident narrates this to you after you read it. Kanjira Shri Ganesh Kumar narrated this incident to me after I read this first article few years back…..

”மகா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை, வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது.

ஒரு மாலை நேரம்… அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார். ‘என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மகாபெரியவாளோட பாதுகை யையும் திருவுருவப் படத்தையும் வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்கிரகம் பண்ணி, அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு, ஜயந்தி விழாவை நடத்தலாமே?’ன்னு என்னைக் கேட்டார்.

அதோட நிக்காம, ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ‘மகாபெரியவாளின் பஞ்சலோக விக்கிரகம் செய்யறதுக்கு முயற்சி பண்ணுங்க. நிச்சயம் அது கைகூடும். மாம்பலத்துலயே அவர் கோயில்ல குடியிருந்தபடி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார், பாருங்க’ என்று சொல்லி, ஒரு ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.

பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், பஞ்சலோகத் திருமேனி பண்றதுக்கு, எல்லாரும் ரொம்ப ஆர்வத்தோட உதவி பண்ணாங்க.

அப்புறம்… மகாபெரியவாளோட திருவுருவத்தை பஞ்சலோக விக்கிரகமா வடிக்க, சுவாமிமலைக்குப் போனோம். அங்கே… கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற தேவ சேனாபதி ஸ்தபதியைப் பாத்தோம். மகாபெரியவாள்மேல ரொம்ப பக்தி கொண்டவர் அவர். வயசானவர். ‘இத்தனை வயசுக்குப் பிறகும், மகாபெரியவாளோட பஞ்சலோக விக்கிரகம் பண்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே’ன்னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார். ஒரு நல்ல நாள் பார்த்து, விக்கிரகம் பண்ற வேலையை ஆரம்பிச்சு, பிரமாதமா தயாரிச்சு முடிச்சார் (பெரியவாள் விக்கிரகம்தான், அவர் பண்ணின கடைசி விக்கிரகம்).

இந்த நேரத்துல, கையில பணம் குறைச்சலா இருந்துது. விக்கிரகத்தை வாங்கிண்டு வரணும்னா, சுமார் 5,000 ரூபா வரைக்கும் தேவையா இருந்துது. ‘எல்லாம் பெரியவா பார்த்துப்பா’னு தைரியமா இருந்தேன். திடீர்னு ஒருநாள், கடம் விநாயக்ராமோட தம்பி சுபாஷ் சந்திரனோட வீட்டுக்கு, அவரோட மாப்பிள்ளை கஞ்சிரா வித்வான் கணேஷ்குமார் அமெரிக்காலேருந்து போன் பண்ணியிருக்கார்.

‘மாம்பலத்துல மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்னு ஒருத்தர், காஞ்சி மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத்தைச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்காராம். ‘அவருக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணு’ன்னு அதிகாலைல, மகா பெரியவா என் சொப்பனத்துல வந்து சொன்னார்’னு கணேஷ்குமார் சொல்லிருக்கார். சுபாஷ் சந்திரனோட மனைவி கீதா நேர்ல வந்து, ‘இந்த 6,000 ரூபாயை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்’னு முழு விவரமும் சொல் லிக் கொடுத்தப்ப, ஆச்சரியத்துல அசந்து போயிட்டோம் நாங்க!

பணத்துக்கு என்ன பண்றதுன்னு தவிச்ச கொஞ்ச நேரத்துலயே, 6,000 ரூபாய் கைக்கு வந்தா எப்படி இருக்கும் எனக்கு? அப்படியே உருகிப் போயிட்டேன். இத்தனைக்கும் எனக்குப் பணம் தேவைப்படறதுன்னு யார்கிட்டயும் நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லலை. ஆனா, எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து, மகாபெரியவாளே சொல்லிருக்கார்னா, பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது! ஆறு வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது!

பணம் கைக்கு வந்ததும், வைகாசி அனுஷ ஜயந்தி நடத்தறதுக்கு முன்னேயே, ஜூன் மாசம் 3-ம் தேதி ராத்திரி, சுவாமிமலையில ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியை கண் குளிரத் தரிசனம் பண்ணிண்டு, வடவாம்பலம் வழியா வந்து, அங்கே ஸ்ரீஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத் திருமேனியை ஒரு வாகனத்துல வெச்சு, தீபாராதனை காட்டினோம்.

பூஜையெல்லாம் முடிச்சுட்டு, வண்டியைக் கிளப்பினா… ம்ஹூம்.. வண்டி ஒரு அடிகூட நகரலை. அங்கேயே நின்னுடுத்து. டிராக்டரைக் கொண்டு வந்து இழுத்துப் பார்த்தோம்; லாரியைக் கொண்டு வந்து கட்டி இழுத்தோம்; ம்ஹூம்… வண்டி அசைவேனாங்கறது! கிட்டத்தட்ட விடியற்காலை நேரமும் வந்தாச்சு. அந்த நேரத்துல, விவசாயி ஒருத்தர் ரெண்டு சிநேகிதர்களோடு அங்கே வந்தார். அவர் தினமும் ஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல பிரார்த் தனை செஞ்சுட்டுதான் கூலி வேலைக்குப் போவாராம்.

எங்ககிட்ட வந்த அந்தக் குடியானவர், ‘என்ன நடந்துது?’ன்னு கேட்டார். ‘ஏனோ தெரியலை; வாகனம் நகரவே இல்லை’ன்னு சொன்னோம். அப்ப, அவர் சொன்ன வார்த்தைகள், எங்களை மெய்சிலிர்க்க வெச்சுடுச்சு!

‘மகா பெரியவாளும் அவரோட குருவும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல, நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல, பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப… அவங்க சம்பாஷணையை நிறுத்திட்டாங்க. இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க, நல்லாவே நகரும்’னார். அதோட நிக்காம, எங்களோட அவரும் சேர்ந்து, ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர‘ன்னு சொல்லிண்டே வாகனத்தை நகர்த்தறதுக்கு உதவி பண்ணினார். வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாம நகர்ந்தது. வழியிலயும் எந்தவித அசௌகரியமும் இல்லாம, விக்கிரகத்தை நல்லபடியா சென்னைக்குக் கொண்டு வந்தோம்.

மகா பெரியவா, சாதாரணமானவரா என்ன? அவர், மகான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்கிரகத் திருவுருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார். இப்ப… பாதுகையோடு பஞ்சலோக விக்கிரகமும் தரிசனத்துக்கு இருக்கு. அடுத்து, பெரியவாளுக்குக் கோயில் கட்டுற வேலைதான் பாக்கி. மகா பெரியவாளுக்கு கோயில்ங்கறது, பக்தர்களோட கோரிக்கைதான். இதையும் அவரே நடத்திக் கொடுத்துடுவார், பாருங்கோ!

ஒண்ணு மட்டும் சத்தியம்! ‘இன்னது நடக்கணும்’னு நாம சங்கல்பம் பண்ணிண்டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார். அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மகா பெரியவா, கருணாமூர்த்தியாச்சே!” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி, பஞ்சலோக விக்கிரகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மகானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள், அப்படியே வணங்கித் தொழுதார்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

source:::: http://www.periva.proboards.com
natarajan
Read more: http://periva.proboards.com/thread/4721/mechari-brahmasri-pattu-sastrigal-narrates/#ixzz2Zn9MY1bb

“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ” சொன்னபடி வாழ்ந்த வாலி இன்று இல்லை…

வாலி கடந்து வந்த பாதை…(1931-2013)   கவிஞர் வாலி காலமானார்...! திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

கவிஞர் வாலி, 1931 அக்., 29ல் திருச்சிக்கு அருகே உள்ள திருப்பராய்த்துறையில் பிறந்தார். இவரது பெற்றோர் ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாள். பின் ஸ்ரீரங்கத்துக்கு குடி பெயர்ந்தார் வாலி. இளம் வயதில் நண்பர்களின் உதவியுடன் நேதாஜி எனும் கையெழுத்து பத்திரிகையை துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. இதில் பங்கேற்ற பல இளைஞர்களில் ஒருவர் தான், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா. துவக்க விழாவுக்கு திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததாலும், வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக்கொடுக்கும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. இதன் மூலம் வாலியின் கவிதை திறன் வெளிப்பட்டது.

வாலியானது எப்படி…?

தமிழ் மேல் பற்று கொண்டிருந்த இளம் வயதில் வாலி ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவராக இருந்தார். பள்ளிப் பருவத்தில், பிரபல ஓவியர் மாலி மீது கொண்ட பற்றினால், தானும் ஒரு சிறந்த ஓவியராக வரவேண்டும் என விரும்பினார். இதையடுத்து நீயும் அவரைப் போல வரவேண்டும் என இவரது பள்ளி நண்பர் பாபு, இவருக்கு வாலி எனப் பெயர் வைத்தார்.

வாலிப கவிஞர்…!

எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சிக்குப் பின், சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பை முடித்தார். இவரை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.சவுந்தர்ராஜன். 1958ம் ஆண்டு பாடலாசிரியராக சினிமாவில் கால்பதித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் முதல் இன்றைய தனுஷ், சிம்பு வரை சுமார் மூன்று தலைமுறை சினிமாவிற்கு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆரின் சூப்பர்-டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பெருமைக்குரியவர் வாலி என்று சொல்லலாம். இவரது பாடல்வரிகளில் விஷேசம் என்னவென்றால் தூய தமிழ் வார்த்தைகள் மட்டுமல்லாது போஃக், ஹிப்-ஹாப் போன்ற பாடல்களையும் கலந்து கட்டி தனது பாடல் வரிகளில் கொடுக்கும் வல்லமை படைத்தவர். இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாரும் பாடல்களை கொடுத்தவர்.

இதுக்கு மேல என்னால் முடியாது

அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பாடல் வரிகள் எழுதும்போது கமல், காதல் தோல்வியை மையப்படுத்தி ஒரு பாட்டு எழுதுங்கள் என்று வாலியிடம் சொல்லியிருக்கிறார். அவரும் சுமார் 5 பாடல்களை கமலுக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால் கமல் திருப்திபடவில்லை. பின்னர் இறுதியாக 6வதாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் கொடுத்து, இதுக்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என்று சொல்லியுள்ளார். அந்தப்பாடல் தான் உன்ன நெச்சேன் பாட்டு படிச்சேன் என்ற பாடல்… அந்தப்பாடல் தான் தேசிய விருது பெற்றது.

பன்முக வாலி

பாடலாசிரியராக மட்டுமல்லாமல், அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், வாலிப வாலி… உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் 17 திரைப்படங்களுக்கு, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். வடை மாலை எனும் திரைப்படத்தை, மாருதிராவுடன் சேர்ந்து இயக்கியுள்ளார்.

பிடித்தது

* வெற்றிலை பாக்கு பிரியரான இவர், 15 வயதிலிருந்து தொடர்ந்த இப்பழக்கத்தை, 76 வயது வரை தொடர்ந்தார். பின் நிறுத்திவிட்டார். கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட, 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.

* வெள்ளை மற்றும் சந்தன நிற ஆடையை விரும்பும் இவர், இதுவரை, வெளிநாடு எங்கும் சென்றதில்லை. இவருக்கு இஷ்ட தெய்வம், முருகன்; பிடித்த விளையாட்டு, கிரிக்கெட்.

மனம் மாறி வாலி

கவிதையின் இமயமாக கருதப்படும் வாலி இளமைக்காலத்தில் வறுமையின் காரணமாக தனது வாழ்க்கையில் ஒருமுறை தற்கொலை முடிவை எடுத்தார். அப்போது கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்துக்காக எழுதிய’  ‘மயக்கமா  கலக்கமா வாழ்க்கையில் வருத்தமா “என்ற பாடலில் ” உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி தேடு ” என்ற பாடல் வரியைக் கேட்டு வாலி மனம் மாறி, தற்கொலை முடிவை கைவிட்டார். இதன் பின் தன்னம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையை தொடங்கினார்.

விருதுகள்…

வாலியின் கலைச்சேவையை பாராட்டி 2007ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதுதவிர தமிழக அரசு மாநில விருதுகளை ஐந்து முறை (எங்கள் தங்கம் -1970, இவர்கள் வித்தியாசமானவர்கள் – 1979, வருஷம் பதினாறு, அபூர்வ ராகங்கள் – 1989, கேளடி கண்மணி – 1990, தசாவதாரம் – 2008) பெற்றுள்ளார்.

கடைசி பாடல்…

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் காவியத்தலைவன் படத்திற்காக எழுதப்பட்டுள்ள கோடாளி மூடிச்சு போட்டு… என்று தொடங்கும் பாடல் தான் வாலி எழுதியிருக்கும் கடைசி பட பாடல். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வாலியின் பிரபலமான பாடல் வரிகள்….

புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாக ஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.

வாலி அவர்கள் இன்று மண்ணுலகை விட்டு சென்றாலும் அவர் தந்த காலத்தால் அழியாத பாடல்கள் பல என்றும் இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும் என்பது திண்ணம்…!!

source:::: Dinamalar …Tamil Daily &Yahoo India

natarajan

In India …Outside India …Perceptions Vary !!!

Relatives- and their perceptions

Relation

In India

Outside India

Mother-in-law

A woman capable of making your life miserable.

A woman you never fight with, because where else you will find such a dedicated baby sitter for free ?

Husband

A boring human species, who listens more to his mother than you, and orders you around to serve him, his parents and siblings.

Still boring, but now a useful human species that comes in handy when the house needs to be vacuumed.

Friend

A person whose house you can drop into any time of the day or night and you’ll always be welcome.

A person whom you have to call first to check and make sure he is not busy.

Wife

A woman who gives you your underwear and towel when you go to take a shower.

A woman who yells at you not to leave tub dirty when you go to take bath.

Son

A teenager, who without asking will carry your grocery bags from the market.

A teenager, who suddenly remembers he has lot of homework when you start mowing the lawn.

Daughter

A lovely doll, who brings tears to your eyes during her marriage.

A lovely doll, who brings you to tears long before her marriage.

Father

A person you are afraid of, and who is never to be disobeyed .

A person to whom you pretend to obey, after all he is the one paying your college tuition.

Indian Engineer

A person with a respectable job and earning lots.

A person without a secure job, who always dreams one day he will be rich.

Doctor

A respectable person with OK income.

A money making machine, who has a money spending machine at home called ‘doctor’s wife’.

Bhangra

A vigorous Punjabi festival dance.

A dance you do, when you don’t know how to dance.

Software Engineer

A high-tech guy, always speaks in American accent, always anxious to queue in the consulate visa line.

The same hi-tech guy, who does Ganapati Puja everyday, and says ‘This is my last year in the US (or whenever)’every year.

A Green Card holder bachelor

the guy can’t speak Hindi, parents of good looking girls are dying to hook him, wears jacket in summer, says he has a BMW back there.

the guy can’t speak proper English, wears jacket all the time, works in a Candy store at Manhattan, dreams of owning a BMW

 

source:::::unknown….input from a friend of mine

natarajan