Source: World’s Highest Tennis Court at Burj Al Arab
natarajan
நம் முந்தைய தலைமுறை வரை, மரச்செக்கில் அரைத்து எடுத்த எண்ணெயால் சமைத்த உணவுகளை உண்டு, ஆரோக்கியமாக இருந்தனர். ஆனால், இன்றோ, எண்ணெய் என்று எழுதியதை படித்தாலே, ஏகப்பட்ட நோய்க்கு ஆளாகி விடுகிறோம்.
‘சுத்திகரிக்கப்பட்டது’ என்ற பெயருடன் வரும் எண்ணைகள் எல்லாம், உண்மையில், மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே!
இதனாலேயே, ‘செக்கு எண்ணெய் உபயோகியுங்கள்…’ என்று பொத்தாம் பொதுவாக சொல்லி வருகின்றனர். செக்கு எண்ணெய்க்கும், மரச்செக்கு எண்ணெய்க்கும் பெரிய வித்தியாசம் உண்டு.
இரும்புச்செக்கில், 350 டிகிரி வெப்பத்தில் அரைத்து, தானியத்திலுள்ள உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலை செய்து, ஒரு மோசமான திரவமாக பிழிந்து எடுப்பதை தான், செக்கு எண்ணெய் என்று கூறி, விற்கின்றனர், பலர். இது, நம் உடல் நலத்திற்கு உதவாது.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும் போது, அதிகபட்சம், 35 டிகிரி வெப்பம் மட்டுமே இருக்கும். இதில், உயிர்ச்சத்துக்கள் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும், உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.
மரத்தாலான செக்கை பயன்படுத்தி, பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து, விற்பனை செய்கின்றனர், திருச்சியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர்.
திருச்சி, தாராநல்லூர், எஸ்.வி.ஆர்., கார்டன் பகுதியில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட சிறிய கட்டடத்தில், மரத்தினாலான செக்கு வைத்துள்ளனர், எஸ்.அகஸ்டின் ராஜா மற்றும் எஸ்.ஜான்பால் ராஜிவ்.
பட்டதாரிகளான இவர்கள், சமையல் எண்ணெய் கலப்படம் தொடர்பான செய்திகளை படித்து, ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காத சமையல் எண்ணெயை நாமே உற்பத்தி செய்வோம் என, முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து, சிறிய கட்டடத்தில் மரச்செக்கு அமைத்து, எள், தேங்காய் மற்றும் கடலையை செக்கில் தனித் தனியே ஆட்டிப் பிழிந்து, எண்ணெய் எடுத்து, வியாபாரம் செய்து வருகின்றனர்.
சந்தையில் விற்பனையாகும், பிற சமையல் எண்ணெய்களின் விலையை விட, இதன் விலை கூடுதலாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து அகஸ்டின் ராஜா கூறுகையில், ‘நம் முன்னோர் செக்கில் பிழிந்தெடுக்கும் எண்ணெயை, அப்படியே பயன்படுத்தினர். உடற்பயிற்சி முடிந்ததும், ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் கடைப்பிடித்தனர். உணவுக்கு மட்டுமின்றி, குளியலுக்கும், மசாஜ் செய்யவும் நல்லெண்ணெய் பயன்படுத்தியதால், மூட்டுவலி பிரச்னையின்றி வாழ்ந்தனர். அதனாலேயே, எள் எண்ணெய் என்பதற்கு பதிலாக, நல்ல எண்ணெய் என்று குறிப்பிட்டனர்.
‘அதனால் தான், நாங்களும் பாரம்பரியத்தை காக்கும் வகையில், மரத்தாலான செக்கு அமைக்க முடிவு செய்தோம். வேம்பு மரத்தில் உலக்கையும், வாகை மரத்தில் உரலும் கொண்ட செக்கு அமைத்து, மின்மோட்டார் உதவியுடன், செக்கை இயக்குகிறோம்.
‘முதலீட்டுக்கு ஏற்ப, சொற்ப லாபத்தில், விற்பனை செய்கிறோம். இயந்திரத்தில் எண்ணெய் பிழியும் போது, அது மூலப்பொருளை நன்றாகப் பிழிந்து விடுவதால், அதில் கிடைக்கும் புண்ணாக்கில், உயிர்ச் சத்துகள் மிஞ்சாது. ஆனால், மரச்செக்கில், மெதுவாக எண்ணெய் பிழிவதால், 80 சதவீதம் மட்டுமே எண்ணெய் கிடைக்கிறது. இதனால், பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். மேலும், அதில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் அதிகமிருக்கும். இதில் கிடைக்கும் புண்ணாக்கிலும், உயிர்ச்சத்துகள் எஞ்சியுள்ளதால், அதை உண்ணும் கால்நடைகளுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
‘மரத்தாலான செக்கை பயன்படுத்தி, எண்ணெய் ஆட்டும் முறை குறித்து, இலவசமாக கற்றுத் தருகிறோம்…’ என்றார்.
சகோதரர்கள் இருவரின் உடலிருந்தும் வழிவது வியர்வையா, எண்ணெயா என்று தெரியாத அளவிற்கு, கடுமையாக உழைக்கும் இவர்களது உழைப்பிற்கு பின் இருக்கும் லட்சியமும், சமூக அக்கறையும், இவர்களை நிச்சயம் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்!
இவர்களை வாழ்த்த நினைத்தால், தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 96777 90080.
Source….
எல்.முருகராஜ் in http://www.dinamalar.com
natarajan
Elephants are known to wrap their trunks around each other, much as humans shake hands or give a hug. They rub their bodies against each other to show affection.
Source: The kiss
natarajan
Once a stranded Tiger entered the washroom of a Corporate Office and hid in a dark corner. Since there were people outside the washroom throughout the day, the Tiger was afraid to come out.
Many people frequented the washroom, but the frightened Tiger didn’t touch anyone. However, after four days it couldn’t bear hunger anymore, so it caught a man who had come in, and ate him.
This man happened to be an Assistant General Manager in the organization, but nobody noticed his disappearance.
Since nothing untoward happened, the Tiger became bolder and after two days caught another man and ate him.
This man was the General Manager of the organization.
Still, nobody was worried over his disappearance (Some people were even happy that he was not seen in the office).
Next day, the Tiger caught the Vice President who was a terror in the organization. Again nothing happened.
The Tiger was very happy and thought that this was the perfect place for him to live.
The very next day the happy Tiger tried to catch a man who had entered the washroom while balancing a tray of teacups in one hand.
The frightened man fell unconscious. Within fifteen minutes a huge hue and cry ensued, and everyone in the office started looking for the man. The search team reached the washroom, flushed out the Tiger and saved the unconscious man. He was the tea boy in the office.
*Moral of the Story*
It is not the position, but our usefulness to others that makes us lovable and respectable. If your subordinates are happy in your absence that means you are not a perfect leader.
அனுதினம் பாரதத்தை தனது சுப்ரபாதத்தால் துயிலெழுப்பும் இசைக் குயில் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் நூறாவது பிறந்த நாள் இன்று.
தமிழிசை, பட்டிமன்றம், சொற்பொழிவு, ஆன்மிக இலக்கியம் என்று பல்துறையில் முத்திரை பதித்திருக்கும் முனைவர் பேராசிரியை சரஸ்வதி ராமநாதன், “அம்மா’ என்று அவர் அழைக்கும் இசை அரசி எம்.எஸ் முன்னிலையில் தமிழிசைப் பாடல்கள் பாடி எம்.எஸ் அம்மாவின் பாராட்டுப் பெற்றவர். செட்டிநாட்டு வட்டாரங்களில் கச்சேரி செய்ய எம்.எஸ் வரும் போதெல்லாம் முன் வரிசையில் இடம் பிடித்து, எம். எஸ். அவர்கள் பாடி, கேட்டு, அவரையே படித்து வளர்ந்தவர். சென்னை கம்பன் கழகத்தின் “கம்பன் அடிப்பொடி’ விருதினை சரஸ்வதி ராமநாதனுக்கு வழங்க பரிந்துரைத்ததே எம்.எஸ். அம்மாதான் என்கிறார் முனைவர் சரஸ்வதி ராமநாதன்.
எம். எஸ் அம்மா குறித்த தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து;
“மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி தான் எம். எஸ். சுப்புலட்சுமி என்றாகியது. அவரது அம்மா சண்முகவடிவு நன்றாக வீணை வாசிப்பார். ஒரு முறை மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணை கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சண்முகவடிவு என்ன நினைத்தாரோ வீணை வாசிப்பதை நிறுத்திவிட்டு, “அம்மா குஞ்சம்மா இங்கே வா…” என்று மகள் சுப்புலட்சுமியை அழைத்தார். வெளியே சுப்புலட்சுமி என்றாலும், வீட்டில் குஞ்சம்மாள் என்றுதான் அவரை அழைப்பார்கள். பத்து வயது சிறுமியான குஞ்சம்மாள் அம்மா மேடைக்கு அழைத்ததும் “குடு குடு’ என்று மேடை ஏறி நிற்க.. “சபைக்கு நமஸ்காரம் செய்திட்டுப் பாடு” என்று சண்முகவடிவு சொல்ல… மேடைப் பயம், சபைக் கூச்சம் ஏதும் இன்றி இந்துஸ்தானி ராகத்தில் “ஆனந்த ஜா…’ என்ற மராட்டியப் பாடலை அருமையாகப் பாட…. கச்சேரிக்கு வந்திருந்த அனைவரும் கை தட்டி ரசித்தார்கள். இதுதான் எம்.எஸ் அம்மாவின் முதல் மேடை அனுபவம்.
இன்னொரு தருணத்தில், சண்முகவடிவு மகள் எம்.எஸ்ஸுடன் சென்னை சென்றிருந்தார். சண்முகவடிவு வீணை மீட்ட அதைப் பதிவு செய்து இசைத்தட்டாக வெளியிட, ’டுவின்’ இசை நிறுவனம் சென்னைக்கு அழைத்திருந்தது. அங்கேயும் அம்மா கேட்டுக் கொண்டதன் பேரில் எம். எஸ். பாட… இசை நிறுவனத்தார் இப்படி ஓர் இனிமையான குரலா.. என்று ஸ்தம்பித்து நின்றனர். இசைப் பொக்கிஷத்தை அடையாளம் கண்டு கொண்டு அதை அங்கீகரிக்கும் விதமாக, உடனே, “மரகதவடிவும் செங்கதிர்வேலும், விதிபோலும் இந்த…’ என்னும் இரண்டு பாடல்களை எம். எஸ்ஸை பாடச் சொல்லி இசைத்தட்டாக வெளியிட்ட பின்னர்தான் வேறு வேலை பார்த்தனர். இசைத்தட்டு ஸ்டிக்கரில், பாடியிருப்பது “மிஸ். சுப்புலட்சுமி, வயது பத்து’ என்று அச்சிட்டிருந்தனர்.
எம்.எஸ் அம்மாவின் அதிகாரப்பூர்வ மேடைக் கச்சேரி 1935 -ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது அவருக்கு வயது பத்தொன்பது. மிருதங்க ஜாம்பவான் புதுக்கோட்டை தட்க்ஷிணாமூர்த்தி பிள்ளையின் மணிவிழாவின் போது அம்மாவின் சங்கீதக் கச்சேரி அற்புதமாக அரங்கேறியது. அன்றைய மைசூர் சமஸ்தானத்தின் அரச சபையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கம் வாசிக்க எம்.எஸ். பாட… தென்னகம் முழுவதையும் அவரின் குயில் குரல் இனிமை, தென்றலாகத் தழுவி சிலிர்க்க வைத்தது.
தெய்வீக அழகும், சுருண்ட முடியும், பாடும் போது பாவங்களை முகத்தில் நர்த்தனம் ஆடவிடும் திறமையை அம்மாவிடம் கண்ட திரைப்பட இயக்குநர் கே. சுப்ரமணியம் அம்மாவை தனது சொந்தப் படமான “சேவாசதனம்’ படத்தில் கதாநாயகியாக்கினார். 1936-இல் அம்மாவின் திரையுலகப் பிரவேசம் நடந்தது. அப்போது பாடல்கள் சிறப்பாக அமைந்தால் படம் வெற்றி பெறும் என்ற நிலைமை. “சேவாசதனம்’ பாடல்கள் பிரமாதமாக அமைந்திருந்ததால் படம்அமோக வெற்றி பெற்றது. “சேவாசதனம்’ படத்தில் எம்.எஸ். பாடிய “மா ரமணன், உமா ரமணன்’, “சியாம சுந்தர கமலவதன’, “ஆதரவற்றவர்க்கெல்லாம்’ போன்ற பாடல்களைப் பாடாத, முணுமுணுக்காத ஆண் பெண் அன்று தமிழகத்தில் இல்லை. அந்த அளவுக்கு அந்தப் பாடல்கள் ஹிட்டாகியிருந்தன. இந்தப் படம் மூலமாக அறிமுகமான தேச விடுதலை தியாகி டி.சதாசிவம் அவர்களை எம். எஸ். அம்மா 1940 -இல் திருமணம் செய்து கொண்டார்.
“சகுந்தலை’ படத்தைத் தயாரித்த ராயல் டாக்கீஸ் நிறுவனத்தினர் எம்.எஸ்ஸை தங்களது புதிய தயாரிப்பான “சாவித்திரி’ பட நாயகியாக நடிக்க வைக்க விரும்பினர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று எம். எஸ் வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். சில நாட்கள் கழித்து, கல்கி இதழைத் தொடங்குவதற்கு முதலீடு தேவைப்பட்டதால், “சாவித்திரி’ படத்தில் நடிக்கிறேன் என்று தகவல் அனுப்பினார்.
“நீங்கள் நாயகியாக நடிக்க சம்மதிக்காததால் மராத்தி நடிகை சாந்தா ஆப்தேயை நாயகியாக போட்டுவிட்டோம். நாரதர் வேடத்திற்கு யாரையும் தேர்வு செய்யவில்லை. படத்தில் நாரதருக்குத்தான் அதிக பாடல் காட்சிகள். நீங்கள்தான் நாரதராக நடிக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டார். கணவர் சதாசிவம் “ம்ம்.. தாராளமாக நடி” என்று உற்சாகப்படுத்தினார். எம். எஸ்ஸும் உடனே சம்மதித்தார். இந்த செய்தி வெளியே தெரிந்ததும், பட வெளியீட்டாளர்கள் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற தயாரிப்பாளரை மொய்த்து விட்டார்கள். பட உரிமையும் நல்ல விலைக்கு விற்பனையானது.
எம்.எஸ்ஸுக்கு சம்பளமாக கிடைத்த நாற்பதாயிரத்தை அப்படியே கல்கி இதழ் தொடங்க தந்துவிட்டார்.
1946-ஆம் ஆண்டு எம். எஸ் நடித்து வெளியான “மீரா’ திரைப்படம் தமிழகத்தைக் கொள்ளைக் கொண்டது. கல்கி எழுதிய “காற்றினிலே வரும் கீதம்’, “கிரிதர கோபாலா’ போன்ற பாடல்கள் தமிழக மக்களின் செவிகளில் தேனைச் சொரிந்தன. அந்த கானங்களின் இனிமையில் தமிழகம் மயங்கிப் போனது. தமிழில் வெற்றி கண்ட “மீரா’ ஹிந்தியிலும் “மீரா’வாகவே தயாராகி அகில இந்திய சாதனைப் படமானது. பிரதமர் ஜவஹர்லால் நேரு, எம். எஸ். அவர்களை ’இசை அரசி’ என்று அழைக்க வைத்தது மட்டுமல்லாமல், இந்த இசை அரசிக்கு முன் நான் வெறும் பிரதமர் மட்டுமே.. என்று நெகிழ்ந்து பாராட்டி, எம். எஸ். அவர்களின் குடும்ப நண்பர் ஆனார் நேரு.
சபர்மதி ஆசிரமத்தில் அண்ணலின் முன்னிலையில் அம்மா பல முறை பாடியுள்ளார். நாடு விடுதலையான 1947- ஆம் ஆண்டு வந்த காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 -இல் எம். எஸ். பாட வேண்டும் என்று காந்தி விரும்ப.. தான் பாடிய பாடலை ஒலி நாடாவில் பதிவு செய்து அம்மா அனுப்பி வைத்தார். பிரபல காந்தி அஞ்சலி பாடல்களான எம். எஸ். பாடிய “வைஷ்ணவ ஜனதோ’, “ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல்கள் அண்ணல் காந்தியை வென்ற பாடல்கள். காந்தியின் மறைவிற்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் பாடல்களாகிவிட்டன.
Source…By – பிஸ்மி பரிணாமன் in http://www.dinamani.com
Natarajan
Iodine in a gaseous state. The fact that it is purple in this state is how it got its name, from the Greek for violet (iodes)
Today I found out why iodine is added to salt.
Iodine first began being added to salt commercially in the United States in 1924 by the Morton Salt Company at the request of the government. This was done as a response to the fact that there were certain regions in the U.S., such as around the Great Lakes and in the Pacific Northwest, where people weren’t getting enough iodine in their diets due to it not being prevalent in the soil in those regions. Among other problems, this caused many people to develop goiters (swelling of the thyroid gland, also sometimes spelled “goitre”).
About 90% of people who develop a goiter do so because of a lack of iodine in their diets, so the simple solution was to add iodine to something pretty much everyone consumes fairly regularly, namely salt. This practiced was not thought up by the U.S., but was copied from the Swiss who were adding iodine to salt at this time for the same reason. This resulted in researchers at the University of Michigan testing this practice out with good results and subsequently Morton Salt Company adopting the practice on a national level.
This ultimately didn’t cost Morton and the other salt companies that followed suit much money, only a few cents per person per year in iodine, but drastically cut the number of people who developed goiters in the United States and beyond as the practice gradually became adopted throughout much of the developed world.
Today because most food in developed countries like the United States often isn’t grown locally, coming from all over the country and world, depending on the food item, continuing to add iodine to salt isn’t strictly necessary. People in regions where the soil is lacking in iodine will likely consume plenty of food from regions where it is not, thus getting the iodine their bodies need, particularly because our thyroids don’t need much to function properly.
For reference, the U.S. Food and Drug Administration recommends that you consume about 150 micrograms of iodine per day and, on average, men in the United States gets about double that amount per day and women each consume about 210 micrograms of iodine per day. Your thyroid itself only needs about 70 micrograms per day to function properly.
Even though most people get plenty of Iodine in their diets, because Iodine is so critical to our bodies functioning properly and the Tolerable Upper Intake Level is so high (about 1100 micrograms per day, and you won’t take a fatal dose unless you ingest about 2 million micrograms, or 2 grams), adding it to salt is still recommended by many government health agencies the world over to stave off certain health problems.
Specifically, Iodine is a critical element used by your thyroid in being able to synthesize certain gland secretions which, among other things, influences your heart, metabolism, nerve responses, etc. Further, a lack of iodine during pregnancy and in the baby’s diet after being born can cause a myriad of significant health and developmental problems. Iodine deficiency has also been linked to increased difficulty with information processing, diminished fine motor skills, extreme fatigue, depression, weight gain, and low basal body temperatures, among other things.
Bonus Facts:
Source….www.today i foundout.com
Natarajan