Message For the Day…” Mind is Like Water and it Needs to be Diverted Towards Higher Realms…”

Mind is present inside the body amidst the five sheaths (Pancha Koshas). The five sheaths are gross body sheath (Annamaya Kosha), Pranamaya Kosha (pertaining to the life force), Manomaya Kosha (mind sheath), Vijnanamaya Kosha (intellect sheath), and Anandamaya Kosha (Bliss sheath). Above the mind sheath is Prana (life force) and below it is discrimination power. Both of these are related to Fire. Mind is related to Water. The Moon is the presiding deity for the Mind. Hence coolness is its nature. Because of the presence of life force above and discrimination power below, the Mind melts and gets transformed into water. Water’s nature is to flow towards a lower level. It does not have the nature of flowing upwards. Hence the mind always wanders around the sensory and worldly pleasures. It cannot voyage towards the pure and higher stages. To divert the mind towards higher realms, spirituality is of utmost necessity.

Sathya Sai Baba

” காலத்தின் தூண்கள் கோவில் தேர்கள்…”

 

பொங்கியெழும் ஜனத்திரள் சமுத்திரத்தின் நடுவே, மனிதத் தலைகளைத் தாண்டி பிரம்மாண்டமான கலைப்பொருளாக அசைந்தாடி வரும் தேரைக் கண்டு ரசிக்கும் கண்கள் பாக்கியம் செய்தவை. கலாச்சாரம், பக்தி ஆகியவற்றுடன் பிரமிப்பூட்டும் கலைநுட்பங்களைக் கொண்டவை கோயில் தேர்கள்.

தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் ஆயிரக் கணக்கான தேர்கள் உள்ளன. மாசிமகம், ஆடிப்பூரம், பங்குனி மாதம், தைப் பூசம், சித்திரை மாதம், மார்கழி உற்சவம் போன்ற பல நிகழ்ச்சிகளில் நான்கு வீதிகளிலும் தேரோட்டங்கள் நடைபெறுவது பல ஊர்களில் இன்றும் வழக்கமாக உள்ளது. பிரம்மாண்டமான திருவாரூர் ஆழித்தேர், கும்பகோணம் சாரங்க பாணி கோயில் தேர், வில்லிபுத்தூர் பெருமாள் கோயில் தேர் போன்ற பல தேர்களை வடகயிற்றால் இழுத்துச் செல்பவர்களின் முகத்தில்தான் எத்தனைப் பிரகாசம்!

பெருமாள், சிவன் கோயிலுக்கு ஏற்ப பத்து தாளம் எனும் தசதாள அளவிலான தேர்கள், நவதாளம் எனப்படும் ஒன்பது தாளத்தில் செய்யப்பட்ட அம்மன் கோயில் தேர்கள், பஞ்ச தாளம் எனப்படும் ஐந்து தாளத்தில் குறுகிய வடிவில் செய்யப்படும் விநாயகர் கோயில் தேர்கள் என்று விதவிதமான தேர்களைப் பவனிவரச் செய்து இன்றும் அழகுபார்ப்பவர்கள் தமிழர்கள். கோயில் தேர்களுக்கென்றே படிகளுடன் கூடிய தேரேற்றுக் கூடங்களும் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

அலங்கரிக்கும் அதிசயங்கள்

தேரைச் சுற்றி நான்கு புறமும் ஆடும் அசைந்தாடிகள், நான்கு முகப்பிலும் வாச மாலைகள், சுவாமிக்கு மேல் விதான ஓவியங்கள், தேர்களின் எட்டுப் புறமும் பட்டங்கள், சிவ வைஷ்ணவக் கொடிகள், எல்லாவற்றுக்கும் மேலாகக் கூம்பிய வடிவில் கலசம் போன்ற துணிகளால் ஆன கலங்கரி ஓவியத் துணிகள், தேரை இழுத்துச் செல்வது போன்ற வடிவில் மூங்கிலால் உருவாக்கப்பட்ட குதிரைகள் என்று தேருக்குத் தெய்வீகக் களை சேர்க்கும் விஷயங்கள் பார்க்கத் திகட்டாதவை.

தேர்களின் நான்கு வெளிப்புறத்திலும் சித்திர வேலைப்பாடுகள் அழகு சேர்க்கும். வைணவத் தேராக இருந்தால் பெருமாளின் தசாவதாரங்களைக் காட்டும் மரச் சிற்பங்களும், சிவன் கோயில் தேர்களாக இருந்தால் சிவபுராணக் கதைகள், சிவத்தொண்டர்களான 63 நாயன்மார்களின் கதைகளைச் சித்தரிக்கும் அழகிய மரச் சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கும். அவற்றைக் காணும் வெளிநாட்டுப் பயணிகளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்ப்பதே தனி அழகு.

பிரான்ஸைப் பின்பற்றலாமே!

தேரோட்டம் முடிந்த பிறகு, தேரின் அத்தனை அலங்காரங்களையும் பிரித்து, இரும்புத் தகடுகளால் தேரை முழுவதுமாக மறைத்துப் பயணிகள் பார்க்க இயலாமல் கோயில் அதிகாரிகள் மூடிவிடுகின்றனர். இதனால் தோ்த் திருவிழா முடிந்த மற்ற நாட்களில், இதனைப் பார்க்க வரும் பயணிகளால் அவற்றின் கலை அழகைக் காண இயலாமல் போய்விடுகிறது.

100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கலைப் பொருட்கள், கட்டிடங்கள் போன்றவற்றை பிரான்ஸ் நாட்டினர் திறந்தவெளி அருங் காட்சியகம் எனும் முறையில் இன்றும் பாதுகாத்துவருகின்றனர்.

தமிழகத்திலோ 350 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த 100-க்கும் மேற்பட்ட தேர்கள் சிதிலம் அடைந்தும், கேட்பாரற்றுக் கிடப்பதும் வேதனை யளிக்கிறது. இவற்றைப் புத்தாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், அழகிய நிலையில் உள்ள தேர்களை, தேரோட்டத்துக்குப் பிறகு மக்கள் அவற்றின் கலை அழகைக் கண்டுகளிக்கும்படியாகத் திறந்தவெளி அருங்காட்சியமாக வைக்கலாம். ஏனெனில், தேர் ஓடினால் மட்டுமல்ல, நின்றாலும் அழகுதான்!

– தேனுகா, கலை விமர்சகர், தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com

” கப்பி காரில் சவாரி …” மலரும் நினைவுகள் !!!

 

ஓவியம்: முத்து

ஓவியம்: முத்து

நண்பர் ஒருவர் சொன்னார்: ‘‘இப்போ இருக்கிற குழந்தைகள்லாம் அதிசயமா எதையுமே பார்க்க மாட்டேங்குறாங்க, கேட்க மாட்டேங்குறாங்க” என்று. அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. எல்லாமே கணினியில், தொலைக்காட்சியில் இன்றைய குழந்தைகளின் விழிகளின் முன் விரிந்துவிடுகின்றன. ஆனால், இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பு அண்ணாந்து பார்த்து ரசித்த பொருட்களில் பலவற்றைக் காலம் தன் சுருக்குப் பையில் போட்டு எங்கோ தூர வீசியெறிந்துவிட்டது.

தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற சிற்றூர் அது. ஒரு காலைவேளை. நாங்கள் பள்ளியில் இருந்தோம். நாங்கள் என்பது – அப்பாகுண்டு, மணிவண்ணன், நட்டு, என்னையும் சேர்த்த நால்வர் அணி. ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக்கொண்டு ரயில் வண்டியாய் காலம் எங்களை நகர்த்திய நாட்கள் அவை.

உடைந்த பாதி பிளேடை வாயில் வைத்து மோர்சிங் வாசித்துக்கொண்டிருந்த நட்டுவின் காதில் அப்பாகுண்டு ஏதோ கிசுகிசுக்க, அது மெல்ல நகர்ந்து எங்கள் காதுக்கு வந்தபோது எங்களால் வகுப்பில் உட்காரவே முடியவில்லை.

‘‘டேய்! நம்ம ரோட்டுக்கு கப்பி கார் வந்திருக் காம்…” என்பதுதான் அந்த ரகசிய சேதி.

சரியாக ஒரு மணிக்கு பள்ளியில் ஒரு மூலையில் தொங்கும் தண்டவாளத் துண்டில் மணியடிக்கப்பட, நாங்கள் மு.ரா.சன்ஸ் மஞ்சப் பையை (அதுதான் அப்போது எங்களின் ‘ஸ்கூல் பேக்’) தோளில் சாய்த்துக்கொண்டு சாலையை நோக்கி ஓடினோம். அய்யனார் சிலை உயரத்துக்குச் சாலையை அடைத்துக்கொண்டு கப்பி கார் நின்றது.

முன்னும் பின்னும் ராட்சஸ இரும்பு ரோலர்களைக் கால்களாகக் கொண்டு பிரம் மாண்டமாக அது நின்றது. அதன் மேலே ஓர் ஆள் உட்கார்ந்திருந்தார். அவர்தான் கப்பி காரின் பாகன். ஊரே அதை அதிசயமாகப் பார்த்தது. நாங்கள் அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தோம். யானையைத் தொட்ட சந்தோஷம்.

ரோடு ரோலரை எங்கள் ஊர்க்காரர்கள் கப்பி கார் என்றார்கள். ரோடு முழுக்க நிரவப்படும் கருங்கல் ஜல்லிகளுக்குக் கப்பிக் கல் என்று பெயர். கப்பிக் கல்லைத் தன் இரும்புப் பாதங்களால் நசுக்கி நகரும் ரோடு ரோலருக்கு கப்பி கார் என்கிற பெயர் எவ்வளவு பொருத்தம்!

கப்பி கார் வந்த நாளில் ஊருக்கே ஒரு திருவிழா முகம் வந்துவிட்டது. ஊரே சாலையில் திரண்டது. நாங்கள் பள்ளிக்கூடத்தை மறந்தோம்.

‘‘டேய்! இது பத்து நாளைக்கு முன்னால திருவாரூர்ல கிளம்புச்சாம். இன்னிக்குத்தான் நம்மூருக்கு வந்திருக்கு” என்று கப்பி காரின் இயந்திரவியலைப் புட்டுப்புட்டு வைத்தான் மணிவண்ணன்.

“அப்படின்னா, இது டெல்லிக்குப் போக எத்தனை மாசம் ஆகும்” என்று நான் விரல் விடாமல் எண்ணிப் பார்த்தேன்.

‘‘எனக்கு கப்பி கார் ஓட்டுற வேலை கெடச்சா போக மாட்டேம்பா. எல்லா காரும் இத முந்திக்கிட்டுப் போயிடும். இது டொடக்கு டொடக்குனு நவுரும்” என்றான் அப்பாகுண்டு.

எங்கள் ரோட்டில் கப்பிக் கல்லை நிரப்பி தார் போட்டு முடிக்கப் பத்து நாட்கள் ஆயின. அங்குலம்அங்குலமாக நகர்ந்து சாலையைச் சமன்படுத்திக் கம்பீரமாக நின்றது கப்பி கார். ஊர்க்காரர்களின் பொழுதுபோக்கே அதை வேடிக்கை பார்ப்பதுதான். அது நின்ற இடத்தில் தற்காலிகமாகப் பட்சணக் கடையும், கடலைக் கடையும் முளைத்திருந்தன. யானையின் முதுகில் சுண்டெலிகள் துள்ளிக் குதிப்பதைப் போல மாலைவேளைகளில் அமைதியாக நிற்கும் கப்பி காரின் மேலே ஏறி நாங்கள் விளையாடுவோம்.

‘‘கப்பி காருக்கு நான்தான் டைவர்” என்றான் நட்டு.

‘‘நான்தான் கண்டக்டரு” என்றேன் நான்.

நாங்கள் கப்பி காருக்கு பக்கத்தில் நிற் பதையே பெருமையாக நினைத்து நின்று கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கூடத்தில் மூணு வருஷமா எட்டாங்கிளாஸிலேயே இருக்கும் சுப்பிரமணி அங்கு வந்தான். மேலும் கீழும் அதைப் பார்த்தவன், அதன் பின்னால் சென்று தம்கட்டித் தள்ளினான். அதுவா நகரும்? என்ன நினைத்தானோ, கப்பி காரின் ரோதையை ஓங்கி உதைத்துவிட்டு, ‘‘இதுக்குத் திருட்டுப் பயலே வர மாட்டான்டா…” என்று சொல்லிவிட்டுப் போனான்.

தூரத்தில் கப்பி காரின் ஓட்டுநர் வருவதைப் பார்த்து நாங்கள் மிரண்டுபோனோம். அருகில் வந்த அவர், ‘‘பயல்களா… வர்றீங்களாடா… ஒரு ட்ரிப் அடிக்கலாம்” என்று அழைத்தார். அவருடன் தொற்றிக்கொண்டோம். எங்களைச் சுமந்தபடி மெல்ல நகர்ந்தது அந்தப் பேரதிசயம். சில நூறு சென்டிமீட்டர் தூரம் போன பிறகு எங்களைக் கப்பி காரிலிருந்து இறக்கிவிட்டார் பாகன்.

அதன் பிறகான காலங்களில் நான் பல நூறு மைல் தூரங்களைக் கடந்துவிட்டேன். என் நினைவின் சாலையில் அந்தக் கப்பி கார் இப்போதும் எங்கள் ஊரைவிட்டுத் தாண்டவே இல்லை!

– மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

” Retirement is the Never Ending Coffee Beak …” !!!

The Retirement Q&A!

Retirement can be a wonderful thing. It sure is a huge change in one’s life, moving from office to home, from keeping hours to keeping yourself busy and having fun. Indeed, retirement has many secrets, which is why it was important for me to ask some ‘hard’ questions about this phase of life.

Question: How many days in a week?
Answer: 6 Saturdays, 1 Sunday

Question: When is a retiree’s bedtime?
Answer: Two hours after he falls asleep on the couch.

Question: How many retirees to change a light bulb?
Answer: Only one, but it might take all day.

Retirement is wonderful. It’s doing nothing
without worrying about getting caught at it
Gene Perret

Question: What’s the biggest gripe of retirees?
Answer: There is not enough time to get everything done.

Question: Why don’t retirees mind being called Seniors?
Answer: The term comes with a 10% discount.

Question: Among retirees, what is considered formal attire?
Answer: Tied shoes.

Question: Why do retirees count pennies?
Answer: They are the only ones who have the time.

‘There’s one thing I always wanted to do before I quit…retire!’
Groucho Marx

Question:
What is the common term for someone who enjoys work and refuses to retire?
Answer: Idiot

Question: Why are retirees so slow to clean out the basement, attic or garage?
Answer: They know that as soon as they do, one of their adult kids will want to store stuff there.

Question: What do retirees call a long lunch?
Answer: Lunch.

I have never liked working.
To me a job is an invasion of privacy
Danny McGorty

Question: What is the best way to describe retirement?
Answer: The never ending Coffee Break.

Question: What’s the biggest advantage of going back to school as a retiree?
Answer: If you cut classes, no one calls your parents.

Question: Why does a retiree often say he doesn’t miss work, but misses the people he used to work with?
Answer: He is too polite to tell the whole truth.

Question: What do you do all week?
Answer: Monday through Friday, nothing; Saturday & Sunday, I rest.

I enjoy waking up and not having to go to work.
So I do it three or four times a day.
Gene Perret

Source:::: ba-ba mail site

Natarajan

Joke of the Day…

His father sends a small boy to bed. Five

minutes later….

“Da-ad….”

“What?” “I’m thirsty. Can you bring drink of water?” “No. You had your

chance. Lights out.”

Five minutes later: “Da-aaaad…..”

“WHAT?”

“I’m THIRSTY. Can I have a drink of water??”

“I told you NO!” If you ask again, I’ll have to spank you!!”

Five minutes later……”Daaaa-aaaad…..”

“WHAT!”

“When you come in to spank me, can you bring a drink of water?”

Source:::: joke a day.com

Natarajan

” Can You Please Make Sure, My Daddy Gets one More Day Off…” ? A Little Girl”s Request to Google !!!

 

It isn’t even close to Christmas but Google just pulled a Santa. This interaction between a little girl requesting time off for daddy and Google will restore your faith in internet.

Little Katie wrote a letter to Google to get her father, who works as a designer at Google, an extra day off. Stating in her letter that he only gets a Saturday off every week Katie went on to  explain how it was her father’s birthday and also summer time.

google-letter-1-650.jpgHere’s what the letter says:

Dear Google Workers,
Can you please make sure when daddy gets to work, he gets one day off. Like he can get a day off on Wednesday. Because daddy ONLY gets a day off on Saturday.
From Katie.
PS. It is daddy’s BIRTHDAY!
PPS. It is summer, you know 

Isn’t this enough to just melt anyone’s heart? This is what happened next.

google-letter-2-650.jpgLike we said, faith in the internet, restored.

Source::::ndtv.com

Natarajan

படித்து ரசித்தது …” முதல் ட்விட்டெர் …ஆத்திசூடி …” !!!

முதல் பாஸ்வேர்டு – அண்டாக் காகசம்
முதல் ஐ டோனர் – கண்ணப்பர்

முதல் தந்தி மொழி – கண்டேன் சீதையை
முதல் நேரலை – குருக்ஷேத்ர போர்

முதல் டிவிட்டர் – ஆத்திச்சூடி
முதல் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டவர் – சூர்ப்பனகை

முதல் ஸ்டெம்செல் டோனர் – பள்ளி கொண்ட பெருமாள் (தொப்புள் கொடியில் பிரம்மா)
முதல் டிரான்ஸ்லேட்டர் – கம்பர்

முதல் ஸ்டெனோ – பிள்ளையார்
முதல் ஸ்போர்ட்ஸ்மென் – சிவன், கிருஷ்ணன்

முதல் தன்னம்பிக்கை தெரபி பெற்றவர்கள் – அபிமன்யூ, பிரகலாதன்.
முதல் டெஸ்ட் ட்யூப் பேபீஸ் – கௌரவர்கள்

முதல் ஷார்ட் டைம் மெமரிலூஸர் – துஷ்யந்தன்
முதல் ப்ளூ கிராஸ் மெம்பர்ஸ் – சிபிச் சக்கரவர்த்தி, மனுநீதிச்சோழன், பேகன்

முதல் ஃபால்லோயர் – லட்சுமணன்
முதல் சியர் கேர்ள்ஸ் – ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா

Source:::UMA MOHANDASS , Dindigal in MANGAIYAR MALAR…TAMIL MONTHLY

Natarajan

மனதை தொட்ட வரிகள் …” புதிர் கன்னி நான் … “

புதிர்கன்னி!

மீட்டப்படாத வீணையாக மீளாத்துயரில் நான்
விவாக வயலில் நடவு செய்யப்படாத பயிராக நான்
முற்றியும், அறுவடைக்கு ஆளில்லாமல் நான்
முழுமை பெறாத வாசல் கோலமாய் நான்
யாரும் கேட்காத இசைத்தட்டாய் நான்
கண்ணன் ராசி இல்லாத கன்னியாக நான்
பொருளாதார சுமையை சுமக்கும் கழுதையாக நான்
யாரும் வாசிக்காத கவிதையாக நான்
திருமணச் சந்தையிலே விலைபோகாமல் நான்
ஆம்… நான் முதிர்கன்னி… வாழ்க்கை பயணத்தில் புதிர்கன்னி!

— பி.ராஜ்குமார், நெய்வேலி. in DINA MALAR… SUNDAY VARAMALAR…

Natarajan