OCT. 2 … Perfect Day to Start ” Clean India ” Mission…A Fitting Tribute To Mahatma

Mahatma Gandhi, the father of the nation, was not an outspoken leader in his school days. In his The Story of My Experiments with Truth, Gandhi says that he would often run home from school as he could not “bear to talk to anybody.”

 

Gandhi’s marathon walk from his ashram to the sea at Dandi (241 miles) at the age of 60 during the Salt march in 1930 is well documented. It is believed that he enjoyed long walks in high school. In London, Gandhi as a law student used to walk as many as eight to ten miles a day, which saved him ample money.

 

During a radio broadcast for the United States from England, Gandhi’s first words heard were, “Do I have to speak into this thing?”

 

Gandhi was named as the Man of the Year in 1930 by Time Magazine

 

. Gandhi used to regularly correspond with Russian novelist Leo Tolstoy, whose ideals of nonviolent resistance had a profound impact on the Indian leader.

 

It is believed that Gandhi’s income as a lawyer in South Africa touched fifteen thousand dollars a year.

 

In his experiment to live modestly, Gandhi used to experiment on his diets. He started to live on fruits and goat’s milk.

 

Despite his dislike for photographs, Gandhi was the hugely photographed in those days.

 

The United Nations announced October 2 as the day of international day of ‘Ahimsa’

 

Despite studying law in England, Gandhi found it difficult to get a job in India which propelled him to travel to South Africa, where an Indian firm gave him a year-long contract to do legal work

 

Generations to come, it may well be, will scarce believe that such a man as this

one ever in flesh and blood walked upon this Earth – Albert Einstein

SOURCE:::: Yahooindia.com

Natarajan

” அன்று வெள்ளை மாளிகை வாசலில் ….இன்று வெள்ளை மாளிகை விருந்தினர்” …!!!

வெள்ளை மாளிகை வாசலில் படம் எடுக்க நின்ற மோடிக்கு 20

ஆண்டுகளுக்குப் பிறகு சிவப்பு கம்பள வரவேற்பு !!!

கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளைமாளிகை முன்பு (இடமிருந்து) தற்போதைய பாஜக தெலங்கானா மாநில தலைவர் ஜி.கிஷண் ரெட்டி, நரேந்திர மோடி, தற்போதைய தமிழக காங். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன். படம்: பிடிஐ

கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளைமாளிகை முன்பு (இடமிருந்து) தற்போதைய பாஜக தெலங்கானா மாநில தலைவர் ஜி.கிஷண் ரெட்டி, நரேந்திர மோடி, தற்போதைய தமிழக காங். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன். படம்: பிடிஐ

சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் மாளிகை யின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட நரேந்திர மோடி, இப்போது சிவப்பு கம்பள வரவேற்புடன் வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

அமெரிக்க அரசு சார்பில் ‘அமெரிக்கன் கவுன்சில் பார் யூத் பொலிடிக்கல் லீடர்ஸ் (ஏ.சி.ஒய்.பி.எல்)’ எனும் பெயரில் ஓர் அமைப்பு நடத்தப்படுகிறது. இதன் சார்பில் அமெரிக்காவை புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் முக்கிய அரசியல் கட்சிகளை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்துக்கு இந்தியாவில் இருந்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. இதை ஏற்று இரு கட்சிகளும் மாநில கட்சித் தலைவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

கடந்த 1994-ல் நடந்த கூட்டத்துக்கு பாஜக சார்பில் குஜராத் மாநில பாஜக அமைப்புச் செயலாளராக இருந்த மோடி, ஆந்திர மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்த ஜி.கிஷண் ரெட்டி, கர்நாடகா மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்த அனந்தகுமார் ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றனர்.

அந்த சமயத்தில் மூவரும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வாசல் முன்பு நின்று எடுத்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தி இந்துவிடம் மோடியுடன் படத்தில் இருக்கும் ஜி.கிஷண் ரெட்டி கூறியதாவது:

‘அந்தப் படம் எடுக்கும்போது எங்களுடன் இருந்த மோடி நம் நாட்டின் பிரதமராவார் எனவும் அதே மாளிகையின் சிறப்பு விருந்தினராக செல்வார் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை. எனினும் அப்போதே அந்த நாட்டை நம் நாட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பதில் மோடி அதிக ஆர்வம் காட்டினார். அங்கிருந்த லிபர்டி சிலை உட்பட பல விஷயங்களை பார்த்து அது நம் நாட்டில் செய்யப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க அதிகாரிகளிடம் அந்நாட்டு அரசின் நிர்வாகங்கள் பற்றி பல்வேறு கேள்விகளை மோடி எழுப்பினார்.

அரசு கூட்டங்களைவிட அங்கிருந்த குஜராத் மக்கள் நடத்திய கூட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வேண்டி இருந்தது. எங்களையும் அழைத்து சென்று அந்த கூட்டங்களில் மோடி பேசியதை நினைத்தால் இப்போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

தற்போது தெலங்கானா மாநில பாஜகவின் தலைவராக இருக்கும் கிஷண் ரெட்டி, அந்த மாநில அம்பர்பேட் தொகுதி சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார்.

சிறியவகை பழைய கேமராவில் எடுத்த இருபது படங்கள் அவரிடம் இருந்துள்ளன. இப்போது மோடி அமெரிக்காவுக்கு செல்வதை ஒட்டி அதை எடுத்து பார்த்தபோது படங்கள் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதில் இரண்டை மட்டும் பத்திரமாக எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார் ரெட்டி.

” Travel Back in Time …” !!!…Incredible use of Technology …

http://interactive.guim.co.uk/embed/2014/apr/image-opacity-slider-master/index.html?ww2-dday

PL CLICK THE ABOVE LINK …KINDLY FOLLOW THE STEPS GIVEN BELOW….

Now this is an incredible use of technology—like traveling back in time!

Left click and hold on each photo, and then drag your mouse gently from

left to right on the original photograph and will be become a photo of the
exact same location and view today – drag it back to the left and you are back in 1944!
Scroll down for more of the same.  Just fascinating!   
Source::::  Input from a friend of mine
Natarajan

India Makes History…”MANGALYAAN” enters Mars Orbit !!!

India makes history, Mars orbiter enters red planet’s orbit

 

India has triumphed in its first interplanetary attempt by successfully putting a satellite into orbit around Mars.

India’s ambitious Mars Orbiter Mission (MOM) entered a crucial phase Wednesday with the country’s space scientists steering the spacecraft to the red planet’s orbit.

After rotating the Orbiter towards Mars, the main engine was fired 24 minutes from Mars to enter the Martian orbit, which will be about 500 km from its surface and 215 million km away from the Earth in radio distance.

The spacecraft will consume about 250 kg of liquid fuel with oxidiser.

India has triumphed in its first interplanetary attempt by successfully putting a satellite into orbit around Mars.

Scientists broke into wild cheers Wednesday morning as the orbiter’s engines completed 24 minutes of burn time and maneuvered into its designated place around the red planet.

The success of India’s Mars Orbiter Mission, affectionately nicknamed MOM, brings India into an elite club of Martian explorers that includes United States, the European Space Agency and the former Soviet Union.

The Indian Space and Research Organisation described the mission as flawless.

SOURCE:::::YAHOO India.com

Natarajan

ஆட்சியாளர்கள் …. காமராஜர் மட்டும் ஒரு விதிவிலக்கு …

ஆட்சியாளர்கள் எப்போதுமே அப்படித்தான்!

அ.கா. பெருமாள்  in The Hindu …Tamil

காமராஜர் போன்ற வெகு சில ஆட்சியாளர்களை மட்டுமே மக்கள் எளிதில் சந்திக்க முடிந்தது.

தெக்கன் திருவிதாங்கூர் என்னும் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த புதிது. காமராஜர்தான் அப்போது தமிழக முதலமைச்சர். புதிய மாவட்டத்தின் மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகள் கேட்டார். காமராஜரை யார் வேண்டுமானாலும் நேரடியாகச் சந்திக்கலாம் என்ற செய்திகூட நாளிதழில் வந்தது. திருவிதாங்கூர் அரசருக்குக் கீழே பணியாற்றிய அதிகாரிகளுக்கு இது புதிய அனுபவம்.

காமராஜர் கரடுமுரடான சாலைகளில் செல்லத் தோதான வருவாய்த் துறை ஜீப்பில் வந்தார். முக்கிய சாலையில் ஜீப்பை நிறுத்திவிட்டு நடந்துவந்த சமயம்தான் எங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடத்தைப் பார்த்தார். 19-ம் நூற்றாண்டுக் கட்டிடம். ஆசிரியர்கள் முன்னே நிற்க, மாணவர்கள் கூடி நின்றோம். திட்டமிடப்படாத வரவேற்பு. யாரும் தடுக்கவில்லை. போலீஸ் கெடுபிடி இல்லை.

எங்களைப் பார்த்ததும் முதலமைச்சர் நின்றார். அவருடன் மிகக் குறைவான போலீஸார்; இரண்டோ மூன்றோ அதிகாரிகள்; அமைச்சர் கக்கனும் மாவட்ட ஆட்சியர் அம்பா சங்கரும் இருந்தனர். யாரும் யாரையும் விலக்கவில்லை. போலீஸ் அதிகாரிகூட அவருக்குப் பாதுகாப்பாக முன்னே வரவில்லை. மூத்த ஆசிரியர் கதர் நூல் மாலையைக் காமராஜர் கழுத்தில் போட்டார். அவர் அதற்கு வாகாகத் தலையைத் தாழ்த்திக்கொடுத்தார். ஆஜானு பாகுவான உருவம்; முழங்கால் வரை எட்டும் தொளதொள சட்டை; சாதாரண செருப்பு; பாதங்கள் தெரியும்படி கட்டப்பட்ட வேட்டி.

நல்லாப் படிக்கணும்

காமராஜர் எங்கள் அருகில் வந்தார். சுற்றிலும் பார்த்தார். நாங்கள் இரண்டு கைகளைக் கூப்பியபடி நின்றோம். கூட்டத்தில் கிழிந்த சட்டையுடன் கூடிய மாணவர்கள் நாலைந்து பேர் இருந்தனர். காமராஜர் ஒருவன் தலையைத் தடவிவிட்டார். “என்ன படிக்கிறே” என்றார். அவன் “மூணாப்பு” என்றான்.

எங்களைப் பார்த்துப் பொதுவாகச் சொன்னார்: “நல்லாப் படிக்கணும்; அப்பா, அம்மா சொன்னா கேக்கணும்; நல்ல பேரு வாங்கணும்; உழைச்சு முன்னுக்கு வரணும்.” ஒரு ஆசிரியர், காமராஜர் முன்னே தயங்கித் தயங்கி வந்து நின்றார். “என்ன விஷயம்?” என்று காமராஜர் கேட்டார். “இப்போ 30 குழந்தைகளுக்கு உச்ச நேரம் (நண்பகல்) கஞ்சி ஊத்துறோம். அது பத்தல்ல. 50 பேருக்குக் கஞ்சி ஊத்த திருமனசு தயவு பண்ணணும்” என்றார். பழக்கதோஷம்; ஆசிரியர் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியிலும் இருந்தவர்; திவான் பேஷ்காரிடம் விண்ணப்பம் செய்யும் பாணியில் பேசினார். காம ராஜருக்கு அவரது பேச்சு முழுவதும் புரியவில்லை. என்றாலும் ஆசிரியருடன் பேசினார்; பக்கத்தில் நின்ற அதிகாரிகளுடன் பேசினார்.

இந்த நிகழ்ச்சி நடந்து 30 ஆண்டுகள் கழிந்து வகுப்பில் என் மாணவர்களிடம் அதைப் பற்றிச் சொன்னேன். மாணவர்கள் நம்பவில்லை; மாணவிகள் நமட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள். ஒரு மாணவி “கேட்க நல்லா இருக்கு சார். உண்மையா நடந்ததா?” என்று கேட்டாள். இதுபோன்ற செய்திகள் இன்றைய தலைமுறையினருக்குக் கற்பனைதான்!

ராமாயண காலம்

எல்லாக் காலத்திலும் ஆட்சியாளர்கள் எப்படி இருந்தார்கள். குடிமக்கள் நெருங்கும்படியான சூழ்நிலையில் இருந்தார்களா? இதற்கெல்லாம் சரியான பதிவுகள் இல்லை. ராமாயண ராமனைக் குடிமக்கள் காண அதிகாரிகள் தடையாய் இருந் தார்கள் என்று ஒரு நாட்டார் கதை உண்டு. இந்தக் கதை, பார்வதிக்குப் பரமசிவன் சொல்வது மாதிரி அமைந்தது.

பரமசிவன் சொன்ன கதை

“ராமன், ராவணாதிகளை ஒழித்துவிட்டான்; பட்டாபிஷேகம் நடந்துவிட்டது. இப்போது எப்படி இருக்கிறான்?” என்று பரமசிவனிடம் கேட்டார் பார்வதி. பரமசிவன் கண்களை மூடிக்கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துப் பேசினார். “ராமன் ராமனாக இருக்கிறான். அதிகாரிகள்தான் அவனிடம் குடிமக்களை நெருங்கவிடாமல் தடுக்கிறார்கள். லட்சுமணன் இதைக் கண்டும் காணாமல் இருக்கிறான்” என்று சொல்லிவிட்டு, அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியையும் கூறினார்.

அவரைப் போய்ப் பாரு!

ஒரு சம்சாரி தனது விளைச்சல் நிலத்தில் மேய்ந்த மாட்டை விரட்டினார். அது அந்த வழியாக வந்த வயதான பெண்ணின் மேல் போய் மோத, அவளுக்குக் காயம் ஏற்பட்டது. இதற்காக அரசனிடம் முறையிடப் போனாள். “ராமனை நேரில் சந்திக்க முடியாது, லட்சுமணனிடம் சொல்லு” என்றான் ஒரு காவலன். அவள் லட்சுமணனைக் கண்டு நியாயம் கேட்டாள். லட்சுமணன் “பரந்த சாம்ராஜ்யத்தை ஆட்சிசெய்பவன் இதைக் கவனிக்க முடியுமா? உன் ஊர்த் தலைவனிடம் போய்ச் சொல்” என்றான்.

வசிட்டர் சொன்ன கதை

இந்த நிகழ்ச்சியை வசிட்டர் அறிந்தார். லட்சுமணனை அழைத்தார். அவனது மூதாதையரான ரூபகன் என்ற அரசனின் கதையைச் சொன்னார். ரூபகன் நீதி தவறாமல் ஆட்சி செய்தான். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது: நண்பர்கள் புடைசூழ எப்போதும் சூது விளையாடுவான். அதனால், குடிமக்களைச் சந்திப்பதைத் தவிர்த்தான். ஒருமுறை ரூபகன் தன் தந்தையின் திதியை நடத்தினான். அன்று அரண்மனைத் தொழுவத்திலிருந்து நல்ல கொழுத்த பசு ஒன்றைப் பிராமணர் ஒருவருக்குத் தானம் செய்தான்.

அந்தப் பசு அரசரின் தொழுவத்தில் பிறந்து வளர்ந்தது. அதற்கு வேறு இடம் பிடிக்கவில்லை. பிராமணர் வீட்டில் கயிற்றை அறுத்துக்கொண்டு அரண்மனைத் தொழுவத்துக்குச் வந்துவிட்டது. இதை அறியாத வேலைக்காரர்களும் பசுவைத் தொழுவத்தில் கட்டி வைத்தார்கள். யாரோ தன் பசுவைத் திருடிவிட்டார்கள் என்று நினைத்து, பிராமணர் அரசனிடம் முறையிடப் போனார்; முடிய வில்லை. அரசனின் தம்பியைச் சந்தித்துத் தன் பசு திருடுபோனதைச் சொன்னார். அவன், காவலரை அனுப்பிப் பசுவைத் தேடச் சொல்கிறேன் என்றான்.

சில நாட்கள் கழித்து ரூபகனின் அம்மாவின் திதி. ஏற்கெனவே தானம் கொடுக்கப்பட்டுத் திரும்பி வந்த பசு என்று தெரியாமல், அரண்மனைப் பசுவை அரசன் இன்னொரு பிராமணருக்குத் தானம் கொடுத்தான். பிராமணர் அதை வீட்டுக்குக் கொண்டுசெல்லும்போது ஏற்கெனவே பசுவை இழந்த பிராமணர் தற்செயலாக அங்கே வந்தார். பசு தன்னுடையது என்று கண்டுகொண்டார். புதிய பிராமணரைப் பிடித்து, “திருடனே! வா அரசனிடம்” என்றார். அவரோ “அரசனின் அம்மாவின் திதியில் இந்தப் பசு எனக்குத் தானமாகக் கிடைத்தது. என்னையா திருடன் எனப் பழித்தாய்! உன்னைச் சும்மா விட மாட்டேன்” என்றார்.

காத்திருந்து காத்திருந்து…

சண்டை பெரிதான பிறகு, அரசனை நாடிச் சென்றனர். அரசனைச் சந்திக்க வேண்டும் என்று காவலனிடம் சொன்னார்கள். காவலன் அவர்களைக் காத்திருக்கச் சொன்னான். அவர்கள் காத்திருந்தனர். வேறு சிலரும் அரசனைச் சந்திக்கக் காத்திருந்தனர். அரசன் வரவில்லை. அடுத்த நாளும் சென்றார்கள்; காத்திருந்தனர். இப்படியே பல நாட்கள். பிராமணர்கள் இருவரும் அலுத்துப்போனார்கள். அவர்கள் தங்களுக்குள் சமாதானம் ஆனார்கள். இரண்டாவதாக தானம் பெற்ற பிராமணரே பசுவை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தனர்.

பிராமணர்களின் கோபம் அரசன் பக்கம் திரும்பியது. அரண்மனையைப் பார்த்துப் பிராமணர் இருவரும் “ரூபகனே – குடிமக்களை அலைக்கழிக்கும் நீ அரசனே அல்ல; நீ ஓணானாகச் சிம்மாசனத்தில் அமர்வாய். இது எங்கள் சாபம்” என்றனர். அரசன் உடனே ஓணானாகிவிட்டான். இதை அறியாத காவலர்கள் சிம்மாசனத்திலிருந்து ஓணானை விரட்டிவிட்டார்கள்.

இப்படியாகக் கதைக்குள் கதை என்று சொல்லப்பட்ட இந்தக் கதைகள் சொல்லும் உண்மை இதுதான்: ஆட்சியாளர்கள் எப்போதும் ஒரே மாதிரிதான். இதில், காமராஜர் போன்றவர்கள் அரிதான விதிவிலக்கே!

– அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்,  


‘சடங்கில் கரைந்த கலைகள்’, ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

மகாத்மாவும் மதுரையும்! … செப்., 22- அரைமுடி ஆடைக்கு மகாத்மா மாறிய நாள்…

தமிழகத்தின் கலாசார தலைநகர் மதுரை என்றால் மிகையாகாது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரங்கள் இன்று அழிந்து விட்டாலும், அழியாத புகழ் கொண்டதாக மதுரை விளங்குகிறது. கீழ்திசை நாடுகளின் ‘ஏதென்ஸ் நகரம்’ என மதுரைக்கு பெயர் உண்டு.

இந்திய விடுதலை போராட்ட வரலாற்றுடனும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கையுடனும் பிரிக்க முடியாத தொடர்பை மதுரை கொண்டுள்ளது. 1915 ஜன., 9ல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது முதல் 1948 ஜன., 30 கோட்சேயால் சுடப்பட்டு, ரத்தம் சிந்தி இறந்தது வரை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக காந்திஜி பல முறை பயணித்திருக்கிறார். குஜராத்திற்கும், வங்காளத்திற்கும் கன்னியாகுமரிக்கும் ஏன் காஷ்மீரையும் தாண்டி ஆப்கன் எல்லையிலுள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களுக்கும் பல முறை அவர் பயணித்தது உண்டு. ஆனால் அவர் விரும்பி வந்து தங்கி வரலாறு படைத்து சென்ற நகரங்களுக்குள் மதுரை முக்கியமானது. முப்பது ஆண்டுகளில் ஐந்து முறை காந்திஜி மதுரை மண்ணில் காலடி வைத்துள்ளார்.


ஐம்பதாவது வயதில் முதல் முறையாக 1919ல் காந்திஜி மதுரைக்கு வந்தார். மார்ச் 26, 27, 28 தேதிகளில் வைகை வடகரையில் ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் அவர் தங்கினார். இக்கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது வேறு வடிவில் உள்ளது. ரவுலட் அடக்குமுறையை சட்டத்தை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி சத்தியாகிரகம் நடத்த முனைந்தார். ஜார்ஜ்ஜோசப் தலைமையில் தியாகி சங்கிலியாபிள்ளை உட்பட ஐந்து பேர் சத்தியாகிரகத்தில் இணைந்து போராடினர்.மகாத்மாவாக உயர்த்திய மண்1921 செப்., 20, 21, 22 தேதிகளில் காந்திஜி 2வது முறையாக வந்தது மதுரையை உலக வரைபடத்தில் சுட்டிக் காட்ட வைத்தது. மூன்று நாட்கள், மதுரை மேலமாசிவீதியில் ‘251 ஆ’ என்ற ராம்ஜி கல்யாண்ஜி இல்லத்தில் தங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தின் உச்சமாக கதர் மற்றும் சுதேசி இயக்கத்தை வலுப்படுத்திட, அன்னிய துணிகளை துாக்கி எறிந்து அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். ஏழைகளுடன் தம்மை முழுமையாக ஐக்கியப்படுத்தி கொள்ளும் வகையில் செப்., 22ல் மேலமாசி வீதியில் தன் குஜராத்தி ஆடைகளை களைந்து, அரைமுழ ஆடையினை உடுத்த துவங்கி ‘மகாத்மா’வாக மதுரை மண்ணில் உயர்ந்தார். குண்டடிபட்டு இறக்கும் வரை அவர் மேலாடை அணியவில்லை. இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்ற போதும், ஆறாம் ஜார்ஜ் மன்னரை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்த போதும், சர்வாதிகாரி முசோலினியை ரோம் நகர அரண்மனையில் சந்தித்த போதும் கூட காந்திஜி அரைமுழ ஆடையுடன் தான் சென்றார்.

 

சுதேசி இயக்கம், தீவிர கதர்துணி பிரசாரத்திற்காக 1927 செப்.,28, 29, 30ல் மதுரை வந்தார் காந்திஜி. இம்முறை அவர் சென்ற இடமெல்லாம் லட்சக்கணக்கில் மக்கள் கூடினர்.நான்காவது முறையாக 1934 ஜன., 25 முதல் 27 வரை மதுரை வந்த காந்திஜி என்.எம்.ஆர்.சுப்புராமன் இல்லத்தில் தங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாததை கண்டித்து ‘ஆலய பிரவேச இயக்கத்தை’ துவக்கி வைத்தார். வைத்தியநாதய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன் போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து, 1939 ஆக., 8ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் அனைத்து ஜாதியினருக்காக கோயில் திறந்து விடப்பட்டது. அதற்கு வித்திடுவதாக காந்திஜியின் 4வது வருகை அமைந்தது

ஐந்தாவது முறையாக காந்திஜி 1946 பிப்., 2, 3ல் மதுரை வந்து சிவகங்கை ராஜா அரண்மனையில் (தற்போது மீனாட்சி அரசு கல்லுாரி வரலாற்று துறை கட்டடம்) தங்கினார். தாழ்த்தப்பட்டோருக்காக திறந்து விடப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலை தரிசிப்பது அவரது பிரதான நோக்கமாக அமைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை வந்தது அவரது கடைசி பயணம்.மதுரைக்கு காந்திஜியின் ஒவ்வொரு வருகையும் முத்திரை பதிப்பதாக அமைந்தது என்னவோ உண்மை. அத்தனை முறையும் ரயிலில் தான் வந்தார். ஏதோ வந்தேன், சென்றேன் என்றில்லாமல், மக்களை ஆர்த்தெழச் செய்வதாக அவரது வருகை இருந்தது.

SOURCE::::Dinamalar.com

Natarajan

” ஆண்டவன் நாமம் எது ? “….

1956-ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் ஸ்ரீதராக கார்ட்டூன்களிலும் மெரினா’ வாக நாடங்களில் பரிமளித்தவர் என்றாலும் பரணீதரனாக அவர் ஆற்றிய ஆன்மிகத் தொண்டுகள் அநேகம். தன் உருக்கமான எழுத்தால் பல உள்ளங்களைக் கவர்ந்தவர்.
பரணீதரன் கூறுகிறார்……
1965-ம் ஆண்டு. ஸ்ரீ மயிலை கற்பகாம்பாள் கல்யாண மண்டபம்.   விடியற்காலை நாலரை மணி.   பெரியவா வெளியே புறப்படுகிறார்.  இரவு மண்டபத்திலேயே தங்கிவிட்டிருந்த நான்,  ரெடி பண்ணிக் கொண்டு கூடவே நடக்கிறேன்.   திரும்பிப் பார்க்கிறார்.   அருகில் செல்கிறேன்.  நடந்துகொண்டே பேசுகிறார் பெரியவா.
https://i0.wp.com/www.vaisnava.cz/fotky/tirupati/Tirupati10-v.jpg

‘நீ திருப்பதியைப் பத்தி எழுதறயா ?’

‘பெரியவா சொல்றபடி செய்யறேன்.’

‘திருப்பதி  இருக்கு பார்….  இது உலகத்திலேயே மகாசக்தி வாய்ந்த,  மிக உயர்ந்த க்ஷேத்திரம்.  மகேஸ்வரன்,  விஷ்ணு,  பிரும்மா,  வராஹர்,  குமரன் இவாளோட சக்திகளும்,  சப்த மாதாக்களின் சக்திகளும் ஒண்ணா ஒரே இடத்திலே சேர்ந்திருக்கிற இடம் அது.   மலை மேல் இருக்கிற பெருமாள் ரொம்ப ரொம்ப சக்தி உள்ளவர்.  நான் முன்னே காசி யாத்திரை பண்ணினப்ப ஸ்ரீ வேங்கடாசலபதியைத் தரிசனம் பண்ணினேன்.  கர்ப்பக்கிரஹத்துக்கு உள்ளே போய் பார்க்க அனுமதிச்சா.  சுவாமி விக்ரஹத்துக்குப் பின்னாலே போய்க்கூட நன்னா பார்த்தேன்…..’  என்று பெரியவா பழைய நிகழ்ச்சியைக் கூறிக் கொண்டிருந்தபோது தீவிர பக்தர் ஒருவர் வீதியிலேயே நமஸ்காரம் செய்து,   தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளும்படிப் பிரார்த்தித்துக் கொண்டார்.   கவனம் திசை திரும்பியது.   திருப்பதியைப் பற்றி ஓர் அரிய பொக்கிஷம் கிடைக்கப் போகிறது என்ற எனது பேராசை நிராசையாயிற்று.

Thirupathi

அதன்பின்னர் இரண்டு மூன்று முறை பெரியவாளிடமிருந்து திருப்பதியைப் பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள முயன்றேன். இயலவில்லை. இருமுறை பெரியவாளுடன் திருமலைக்கு நடந்து செல்லும் நல்வாய்ப்பும்  நற்பேறும் எனக்குக் கிட்டியது.   முதன்முறை சென்ற போது,  திருப்பதி ‘டாபிக்’கைத் தொடங்கினேன்.   எப்பொழுது எழுதத் தொடங்கலாம் என்று அறிய விரும்பினேன்.   நேரடியான பதில் கிடைக்கவில்லை.

https://i0.wp.com/www.saharaglobal.in/Domestic-tour/images/Tirupati.jpg

‘நான் முதன் முதல்லே மலைக்குப் போனப்ப,  சுவாமி விமான கோபுரத்திலே,  மார்க்கண்டேயர் சிவலிங்கதைக் கட்டிண்டிருக்கிற மாதிரியும்,  சிவபெருமான் எமனை விரட்டற மாதிரியும் ஒரு சிற்பத்தைப் பார்த்த ஞாபகம் இருக்கு.   ஆனா,  அதுக்கப்புறம் விமானத்துக்குப் போட்டிருக்கிற தங்கத் தகட்டுல அந்தச் சிற்பத்தைக் காணோம்.  நீ ஒண்ணு பண்றயா…   வி. எஸ். தியாகராஜ முதலியார் தலைமையிலேதான் அப்ப ஒரு கமிட்டி திருப்பணி பண்ணி விமானத்துக்குத் தங்கத் தகடு போட்டா…  திருப்பணி ஆரம்பிக்கறதுக்கு முன்னால விமானத்தை ஒரு போட்டோ எடுத்திருப்பா.   அது அவர் கிட்ட இருக்கும்.    அவர் கிட்ட போய் அந்த போட்டோவைப் பார்த்து,  அதுல நான் சொனன சிற்பம் இருக்கான்னு எங்கிட்ட வந்து சொல்லு’   என்று உத்தரவாயிற்று.

திருமலையிலிருந்து திரும்பியதும்,  வி. எஸ். தியாகராஜ முதலியாரைப் போய்ப் பார்த்து,  பெரியவா கூறிய விவரங்களைச் சொன்னேன்.   அந்த போட்டோ தம்மிடம் இல்லை என்றும்  அப்போது ஜி. கே. வேல்தான் புகைப்படங்கள் எடுத்ததாகவும் வி.எஸ்.டி. கூறினார்.   ஜி.கே. வேல் அவர்களிடம் சென்று வினவினேன்.   தேடிப் பார்த்துவிட்டு,  ‘அந்த நெகடிவ்‘   கிடைக்கவில்லை என்று அவர் கூறி விட்டார்.   ஏமாற்றத்துடன் திரும்பிய நான்,  பின்னர் பெரியவாளிடம் அந்த விவரங்களைத் தெரிவித்தேன்.

1969 -ம் ஆண்டில்  பெரியவாளுடன் இரண்டாம் முறையாக மலை ஏறிச் சென்றேன்.   இம்முறை ஓரிரு வார்த்தைகள் பேசியதைத் தவிர,  பெரியவா மவுனமாகவே நடந்து வந்ததால்,  நான் திருப்பதி விஷயத்தைப் பற்றி விண்ணப்பித்துக் கொள்ள முடியவில்லை.

மறுநாள் கோயிலுக்குச் சென்று,  தரிசனம் முடித்துத் திரும்பும் போது பெரியவா மீண்டும் ‘விமான மார்க்கண்டேயர்‘  சிற்பத்தைப் பற்றி நினைவு கூர்ந்து,  ‘இங்கேயே இருக்கற வயசான பட்டாசாரியார்களைக் கேட்டுப்பாரு.  அவாளுக்குத் தெரிந்திருக்கும்’  என்று கூறவே,   நான் பல வீடுகளில் ஏறி இறங்கி பலரிடம் விசாரித்துப் பார்த்தேன்.   ஓரிருவர்  ‘அப்படியில்லையே‘  என்று மறுத்தனர்.   சிலர் ‘பார்த்ததில்லை‘  என்றார்கள்.   சிலரோ ‘ஞாபகமில்லை‘  என்று கூறி விட்டார்கள்.  நான் சேகரித்த விவரங்களை பெரியவாளிடம் கூறினேன்.   அதன் பிறகு திருப்பதி பற்றிபெரியவா என்னிடம் எதும் பேசவில்லை.   நானும் அதைப் பற்றி எதும் கேட்காமலே இருந்துவிட்டேன்.

ஆனால்,  இரண்டாம் முறை திருப்பதி சென்ற போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள்  நாள்கள் ஆக ஆக…  மாதங்கள் செல்ல செல்ல,  வருஷங்கள் உருள உருள  என்னைப் பெருந் தாக்கத்துக்கு உள்ளாக்கி,  என் சொந்த வாழ்விலும்,  குடும்ப சூழ்நிலையிலும் ஏற்பட்ட மாறுதல்களை மனத் திண்மையோடு எதிர் கொள்ளவும்,  பின்னர் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அரிய விளக்கங்கள் பெறுவதற்கும் துணை நின்றன.    இன்றும் கூட  அவை எனக்கு ஞான தீபமாக ஒளி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

ஆண்டவன் நாமம் எது என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஏன் என்றால்இஷ்டதெய்வம் என்று ஒன்று, குலதெய்வம் என்று ஒன்று, இதுபோக ஒவ்வொருவரும் ‘ரொம்ப சக்தி வாய்ந்த சுவாமி’ என்று அவரவர் உணர்வு நிலைக்கேற்ப சுட்டிக் காட்டும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் நம்மிடையே இருக்கிறதே! இதில் எதை தியானிப்பது என்று கேட்கலாம். இம்மட்டில் அவரவர் மனமும் எந்த தெய்வத்திடம் போய் நிற்கிறதோ அதுதான் அவர்கள் தியானிக்க ஏற்ற நாமமாகும். ஆனாலும், அனைவருக்கும் ஏற்ற ஒரு நாமமும் உள்ளது.

கோவிந்த நாமம்தான் அது! ‘கோவிந்தா… கோவிந்தா… கோவிந்தா…

 

Message For the Day…” Lesson to Learn from Ramayana…”

Ravana was a great scholar. He mastered 64 distinct fields of knowledge, including the language of animals, birds and insects. He possessed all knowledge, wealth and prosperity that equaled heaven. He used his penance as a means to acquire mastery over the physical world, reposing his faith on the phenomenal world and not on the Creator. He chose not to enquire about the Creator of the phenomenal world. The Universe is the Creator’s property. Rama was the Creator Himself and Sita was Rama’s Power (Shakti). Ravana, giving in to lust, desire and greed, developed hatred and enmity towards Rama and abducted Mother Sita. What was the result? Not only he, but his entire kingdom was destroyed. Despite such high knowledge and prowess, he failed to recognize the Divine within and ruined himself due to a moral lapse. Thus Ramayana clearly teaches the lesson that spiritual wisdom alone saves, and is essential.

Sathya Sai Baba

 

One of the Overlooked World Treasures… Hampi in India…

Hampi, India is spectacular. Picture: Hajo Schatz

Hampi, India is spectacular. Picture: Hajo Schatz Source: Flickr

WHAT a veteran traveller you are.

You’ve already hiked up to Machu Picchu and climbed up and down the thousands of stairs of the Great Wall of China. We bet you’ve also stood awestruck before the Hagia Sofia and the Taj Majal.

You’re a regular Tony Wheeler, who co-founded the Lonely Planet travel company more than 40 years ago. Like you, he’s visited most of the world’s major wonders of the world and almost everything else worth seeing.

Wheeler and fellow world explorer Vince Michael, head of the Global Heritage FUND, are always looking for hidden places to discover. By all means, they say, visit Angkor Wat and the Hagia Sophia. Go there and check them off your bucket list.

We all know about the Angkor Wat. There must be something else.

We all know about the Angkor Wat. There must be something else. Source: ThinkStock

But don’t you want to explore places everyone hasn’t already seen? That’s why CNNasked Michael and Wheeler, a Global Heritage FUND board member, to pick some hidden gems to explore. These are spots where we hope you won’t always share your trip with thousands of other travellers.

“Who hasn’t seen pictures and read about Angkor Wat in Cambodia?” Wheeler said. “But Banteay Chhmar? It’s an unknown, and discovering an unknown is always a delight.

“Ditto for the Taj Mahal in India. Nobody’s disappointed when they see the Taj for the first time, but they’ve seen pictures of it. It’s popped up in TV programs and movies so often, that actually seeing it is no surprise. Hampi, however, is going to be totally unexpected.”

Let the crowds swarm the world’s best-known marvels. The lesser-known Global Heritage FUND sites below can be found in the same countries — without the crowds. And two spots are still on Wheeler’s bucket list.

That’s right. Even the co-founder of Lonely Planet hasn’t yet been to these picks in India and Peru. Maybe you can beat him there.

Some of the more undiscovered spots require long and bumpy bus rides through the mountains, while others are located near LUXURY HOTELS. No matter which you choose, they will knock your (hiking) boots off.

Hampi, India. Picture: Adam Jones

Hampi, India. Picture: Adam Jones Source: Flickr

Hampi, India

One of the most well-known and admired structures and examples of Indo-Islamic architecture in the world, the Taj Mahal is a marble mausoleum built in the 17th century by the Mughal emperor in memory of a beloved wife.

A site of equal interest lies in the south of India at Hampi, the last capital of the last Hindu Kingdom of Vijayanagar. A six-hour drive from Goa or Bangalore, Hampi was conquered by the Deccan Muslim confederacy in 1565 and plundered before it was abandoned.

Old temple between stones in Hampi.

Old temple between stones in Hampi. Source: ThinkStock

Still standing are several temples, including the Krishna temple complex, the Chandramauleshwar Temple and the temples of Ramachandra and Hazara Rama. There are also hundreds of other remains on the site, including stables, water structures, shrines and royal complexes.

“Hampi is a stunning complex of magnificent temples and other structures set along a dramatic riverine site,” says Michael, calling it “a dramatic testament to one of the earth’s oldest civilisations.”

Five overlooked world treasures

Virupaksha temple in Hampi. Source: ThinkStock    

Source::: news.com.au

Natarajan

” குன்றென நிமிர்ந்து நில்! “….இன்று பாரதியார் நினைவு நாள்…

‘சிதையா நெஞ்சு கொள்’ எனும் சூத்திரமே பாரதியின் வாழ்க்கை நமக்கு வழங்கும் பாடம். வறுமையும் வெறுமையும் விடாது துரத்திய போதும் அஞ்சாமல் அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்த மாகவிஞர் மகாகவி பாரதியார்.

பதினாறு வயதிற்குள் பாரதியைப் போல் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டவர் யாரும் இருக்க முடியாது. வறுமை எனும் உளியால் செதுக்கப் பட்ட கலைச் சிற்பம் பாரதியார். நெருப்பாற்றில் நீந்திக்கொண்டும் அவரால் அழகியல் கவிதைகளைத் தரமுடிந்தது.

“நல்லதோர் வீணைசெய்தே- அதைநலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ?சொல்லடி சிவசக்தி- எனைச்சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்வல்லமை தாராயோ -இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி சிவசக்தி-நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

பாரதியின் வாழ்நாட்கள் வறுமையில் கழிந்தன. ஆனாலும் பாரதியிடம் என்றும் எனக்கலக்கமில்லை. தன்னலம் பாராமல், மாநிலம் பயனுற மாகாளியிடம் வல்லமை கேட்கிறான் பாரதி.

தாயின் இறப்பு : பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887ல் பாரதியின் தாய் லட்சுமி அம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.

“என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்ஏங்கவிட்டு விண் எய்திய தாய்” பாட்டி பாகீரதி, தாய்வழிப்பாட்டனார் ராமசாமி ஐயரின் அன்பு பாரதியைச் செழுமைப்படுத்தின. பாரதிக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஆசை இருந்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி வளர்த்ததைப் வருத்ததோடு பதிவு செய்துள்ளார். ஓடிவிளையாடு பாப்பா என்று குழந்தைகளுக்கு அறிவுரை சொன்ன பாரதி, ஓடியாடவில்லை.

இயற்கை விரும்பியாகிக் கவிதைகள் படைக்கும் பாரதியால் பள்ளிப்படிப்பை மனமொன்றிக் கற்கமுடியவில்லை. மூன்றுகாதல் என்ற தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் எழுதிய கவிதையின் தொடக்கத்தில் பள்ளிப்படிப்பு நாட்டமில்லாமல் போனதாக பாரதி குறிக்கிறார். ”பள்ளிப் படிப்பினிலே- மதிபற்றிட வில்லை” என்ற வரி கவனத்திற்குரியது.

தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராப்பற்று கொண்ட பாரதியால் ஆங்கிலக் கல்வியை ஏற்க முடியவில்லை. எட்டயபுரத்தில் இருந்து கல்வி பயில நெல்லை வந்ததால் செலவு அதிகம் ஆனது. தந்தையின் வறுமை அவரை அரித்தது. மனம் நிம்மதி இழந்து தவித்தது.பொருளில்லாக் கல்வியாய் பாரதிக்கு அக்கல்வி தெரிந்தது.

”செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;

தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;

நலம்ஓர் எள்துணையும் கண்டிலேன் அதை

நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!”

உதவி கேட்டு எழுதிய சீட்டுக்கவி

‘பெரிதினும் பெரிது கேள்’ என்று புதிய ஆத்திச்சூடி படைத்த பாரதி பள்ளிப்படிப்பிற்கு உதவிகேட்டு மன்னருக்குக் கடிதம் எழுதிய நிலையைக் காலம் ஏற்படுத்தியது.

தந்தையாரால் பள்ளிப்படிப்புக்குப் பணம் அனுப்ப முடியா நிலையில் பதினைந்து வயதேயான பள்ளிச் சிறுவன் பாரதி எட்டயபுர மன்னர் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக அனுப்பி வைத்தான். திருநெல்வேலியில் பாரதியார் பள்ளிப்படிப்பை மேற்கொண்டபோது ஆசிரியர்களிடம் தமிழிலக்கியங்கள் குறித்த விவாதங்களை மேற்கொண்டார். புதுமையான சிந்தனைகளை முன்வைத்தார்.தோல்வியின் தோளில் ஏறி நின்றுகொண்டு வெற்றியின் வரலாற்றினை எழுதியவர். என்ன நடந்தாலும் பாரதியார் திருநெல்வேலி மண்ணில் தன் கல்வியை நிறுத்தவில்லை. காசி எனும் வேறுபகுதிக்குச் சென்றபோதும் வாய்ப்புகளைத் தனதாக்கிக் கொண்டார். அதனால் தான் திருநெல்வேலி ம.தி.தா., பள்ளியில் பாரதி பயின்ற வகுப்பறையில் வரலாறு இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறது.

தந்தையின் மரணம் : 1898 ஜூலை 20 ல் பாரதியின் வாழ்வில் புயல்அடித்த நாள். தந்தை மரணமடைகிறார். பள்ளிப்படிப்புத் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பாட்டி பாகீரதி குடும்பச் சொத்தாக இருந்த எட்டயபுரம் வீட்டை இருநூறு ரூபாய்க்கு அடமானம் வைத்தார். படிப்பிற்காக வயதான காலத்திலும் வீட்டை அடமானம் வைத்து போராடிய பாரதியின் பாட்டியின் மனஉறுதியை என்ன சொல்வது? திருநெல்வேலி இந்துக் கலாசாலையில் பள்ளிப்படிப்பு முடித்ததைப்போல் காசியிலும் மத்திய இந்துக்கல்லூரியில் பாரதி முதல்வகுப்பில் தேறினார்.

தோல்வியிற் கலங்கேல் : பாரதி சிறுவயதில் நிறைய சவால்களை எதிர்கொண்டவர். பள்ளிப்படிப்பு நடக்கும்போதே ஏழு வயது செல்லம்மாவை மணம் செய்ய வைத்த குடும்பச்சூழலையும் திருநெல்வேலியில் இருந்தபோது தான் எதிர்கொண்டான். ஆனாலும் அவன் மனம் தளரா மாமனிதனாய் திகழ்ந்தான். ”நொந்தது சாகும்” என்று உணர்ந்த உத்தமன் பாரதி.

‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற வரிகள் பாரதி பட்ட அடிகளில் இருந்து பிறந்தது. ரசிக்கும் மனம் இருந்ததால் துன்பத்திலும் பாரதியால் உருக்குலையாமல் இருக்க முடிந்தது. பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார். அவர் தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில்:

”தந்தைபோயினன் பாழ்மிடி சூழ்ந்தது;

தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்;

சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில்

திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால்

எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?

ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?”

இப்படி வருந்தினாலும் மனஉறுதியை கைவிடவில்லை பாரதி.

“தேடிச் சோறு நிதந் தின்று பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்

வாடித் துன்பமிக உழன்று பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல

வேடிக்கை மனிதரைப் போலே நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?”

என்றும் பாடினார்.

சிறு துன்பங்களுக்கும் விதியை

நொந்துகொள்கிற நமக்கு மகா கவி பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் ‘குன்றென நிமிர்ந்து நில்’ என்பதுதான்.

 

முனைவர் சவுந்தர மகாதேவன்  in dinamalar.com

தமிழ்த்துறை தலைவர்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி

திருநெல்வேலி

mahabarathi1974@gmail.com

 

Natarajan