அன்பாசிரியர் – சித்ரா: அஞ்சல் அட்டை முதல் யூடியூப் வரை அசத்தும் ஆசிரியை!

உற்சாக மாணவர்களுடன் ஆசிரியை சித்ரா.

உற்சாக மாணவர்களுடன் ஆசிரியை சித்ரா.

| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல்லடையாள அணிவகுப்புத் தொடர் இது. |

“பெரிய அளவில் பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாக, பெரிய மாற்றத்தை விதைக்க ஆசைப்பட்டேன். அதனாலேயே ஆசிரியர் ஆனேன்!”- தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது, அப்துல் கலாமின் பாராட்டு, மைக்ரோசாப்ட்டின் உலகளாவிய மன்ற, தேசத்தின் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள் பெற்ற சித்ரா என்னும் அரசுப் பள்ளி ஆசிரியரின் வார்த்தைகள் இவை.

இனி சித்ராவின் பயணம், அவரின் வார்த்தைகளிலேயே…

“1996-ம் ஆண்டு விக்கிரவாண்டி ஊராட்சியின் வாக்கூர்பகண்டை என்னும் ஊரின் தொடக்கப் பள்ளியில், என் ஆசிரிய வாழ்க்கை தொடங்கியது. அப்போது நான் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை. வழக்கமான அ, ஆ தானே என்றிருந்த எனக்கு, மாணவர்களே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள், அவர்கள் எழுதிய ‘அ’வையும், ‘ஆ’வையும், படிக்க கூடுதல் முயற்சி தேவைப்பட்டது.

அப்போது பேருந்தில் பள்ளிக்கு வந்து சேர ஒன்றரை மணி நேரம் ஆகும். அந்த சமயத்தில் குஜராத்திய எழுத்தாளர் ஒருவர் எழுதிய ‘கனவு ஆசிரியர்’ என்ற புத்தகம் கிடைத்தது. அதில் கூறப்பட்டிருந்த வழிமுறைகளையும், அறிவுரைகளையும் எனக்கு ஏற்றாற்போல மாற்றிக் கொண்டேன். மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க, அரசு நடத்திய பயிற்சி முகாம் அதிக உதவியாக இருந்தது. ‘விளையாட்டு வழி’ கல்வி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.

மாணவியிடம் கற்ற பாடம்

குச்சி, புளியங்கொட்டைகளை வைத்து கணக்கு சொல்லிக் கொடுத்தேன். மாணவர்களை அருகில் இருந்த வயல்களுக்கு அழைத்துக் கொண்டு போய் அறிவியல் சொல்லிக் கொடுப்பதும், வகுப்பறையிலேயே விதைகள் இட்டு செடிகள் வளர்ப்பதும் வழக்கமாய் இருந்தது. மாலை நேரங்களில் பாட்டு மூலம் பாடம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன்.

ஒரு முறை ஆர்வமிகுதியில் மூன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கு மினி கிரைண்டர் மாதிரி செய்து எடுத்துக் கொண்டு போனேன். “இது எதுக்கு டீச்சர்? இதுதான் எங்க வீட்டுலயே இருக்கே!” என்றாள் ஒரு மாணவி. அப்போதுதான் சிரமப்பட்டு கடினமான எதையும் செய்து காட்டுவது தேவையற்றது என்பதை உணர்ந்தேன்.

மனம் நெகிழ்ந்த தருணம்

மெல்ல மெல்ல கற்றலின்பால் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விழாக்களில் ஆவலுடன் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். சுதந்திர தினம், குடியரசு தினம் என அரசு விழாக் கொண்டாட்டங்களிலும் திருக்குறள் ஒப்பித்தல், பாட்டுப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும், பங்குபெற்றனர். குக்கிராமத்தில் இருந்து வெளியே கூட சென்றிருக்காத அக்குழந்தைகள், முதன்முதலாக ஆட்சியர் அலுவலகம் போய் பரிசுகளுடன் திரும்பி வந்தனர்.

பரிசுகளை வென்றதாகக் கேட்ட தருணத்தில் எங்கள் கால்கள் தரையிலேயே படவில்லை. ஒவ்வொரு விழாவிலும் போட்டிகளில் கலந்து கொள்வது வழக்கமானது. நீர்ப்பிரச்சினைகள், உடல்நலப் பிரச்சினைகள், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறித்த கார்ட்டூன் கதைகளை ஒவ்வொரு வாரமும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். பாண்டிச்சேரி வானொலி நிலையத்திலும் எங்கள் மாணவர்கள் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

எனக்காக போராடிய கிராமத்தினர்

‘பள்ளிக்கு யார் வந்தாலும் பயப்படக்கூடாது. இயல்பாக அவர்களை வரவேற்று, பள்ளியைச் சுற்றிக் காண்பிக்க வேண்டும்’ என்று சொல்லியிருந்தேன். ஒரு முறை மாவட்ட ஆட்சியர் எங்கள் பள்ளிக்கு திடீர் வருகை தந்தார். மாணவர்களே அவரை வரவேற்ற விதத்தைப் பார்த்து அசந்து போனவர், அடுத்த நாளே எங்களுக்கு விருதளித்துச் சிறப்பித்தார்.

ஒரு முறை நான், விடுமுறை காரணமாக வெளியூருக்குப் போய்விட்டு, திங்கட்கிழமை காலையில் பள்ளிக்குத் திரும்பினேன். சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து கிராம மக்கள் புன்முறுவல் பூத்தனர். எனக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர் தான் அந்தச் சிரிப்பின் பின்னால் இருக்கும் அன்பும், நம்பிக்கையும் புரிந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னால், நான் மாற்றலாகி வேறு ஊருக்குச் செல்ல உத்தரவு வந்திருக்கிறது. ஆனால் கிராம மக்கள், என்னை அனுப்பக்கூடாது என்று தொடர்போராட்டம் நடத்தி, உத்தரவைத் திரும்பப் பெற வைத்திருக்கின்றனர். நான் வாங்கிய எல்லா விருதுகளின் ஆனந்தத் தருணத்தை விட, இந்தத் தருணமே என்னை அதிகம் சந்தோஷப்படுத்தியது” என்கிறார்.

கற்பித்தலில் எளிமைகளும் புதுமைகளும்

கற்றலிலும் கற்பித்தலிலும் எளிமையையும், புதுமையையும் விரும்பினார் ஆசிரியை சித்ரா. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் எழுதிப் பழக வேண்டுமென்பதற்காக, தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை அச்சிட்டு, முத்திரையாக்கினார். அதை ஒவ்வொரு குழந்தையின் நோட்டுப்புத்தகத்தில் அச்சு வைத்து எழுதக்கற்றுக் கொடுத்தலில் புதுமை படைத்தார். வகுப்பில் கல்வியைத் தாண்டி நல்ல பழக்கங்களையும் கற்றுக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர், கழிவறைகள் தேவையைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக, மத்திய அரசின் சுகாதாரத்துறை விருதையும் பெற்றிருக்கிறார்.

கலாம் தந்த வியப்பு

பள்ளியில் ‘கடிதம் எழுதுதல்’ பகுதியை நோட்டிலே எழுதித்தான் பழக்கப்பட்டிருப்போம். ஆனால் ஆசிரியை சித்ரா, அருகில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து அஞ்சல் அட்டைகளை வாங்கி கடிதம் எழுதக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதன் நீட்சியாக, மாணவர்கள் சிலர், குடியரசு தின மற்றும் பொங்கல் வாழ்த்துக் கூறி, டெல்லி ஜனாதிபதி மாளிகைக்குக் கடிதம் எழுதி அனுப்பியிருக்கின்றனர். சற்றும் எதிர்பார்க்காத ஆச்சரியமாய் டெல்லியில் இருந்து பதில் கடிதம் வந்தது. அதில் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமின் கையொப்பம் இடப்பட்டு தமிழில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.

கணினி… சாதனையின் தொடக்கப்புள்ளி!

பள்ளி மெல்ல மெல்ல வளர்ச்சி அடையத் தொடங்கிய நிலையில், ஆசிரியை சித்ராவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் வந்தது. 2008-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் ஆரம்பப்பள்ளிக்கு வந்து சேர்ந்தார். கணிப்பொறியின் ஆக்கிரமிப்பு தொடங்கியிருந்த காலம் அது. ஆர்வமாய்க் கணினி கற்கத் தொடங்கினார் சித்ரா.

நினைத்த வேலைகளைக் குறுகிய நேரத்தில் செய்துவிட முடிகிற உலகத்தினுள் நுழைந்ததாய் உணர்ந்தார். தான் கற்றதை மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆசைப்பட்டார். ஆனால் அது மிகப்பெரிய சாதனையின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

பள்ளியில், மதிய உணவு இடைவேளைகளில் விருப்பமுள்ள மாணவர்கள் கணினி கற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார். கணிப்பொறியை எப்படித் திறப்பது, இயக்குவது, மேலும் அடிப்படையான எம்.எஸ்.ஆபிஸ் குறித்தும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

தனது பயணம் குறித்து மேலும் பேசுகிறார் சித்ரா.

“2010-ல் இணையத்தில் உலவிக் கொண்டிருந்த போது, சோலார் குக்கரின் செயல்முறையைப் பார்த்தேன். விளையாட்டாய் மாணவர்களிடம் காண்பித்து, அதை முயற்சித்துப் பார்க்கச் சொன்னேன். அவர்களும் சில முறைகள் முயன்றனர், ஆனால் அரிசி வேகாமல் அப்படியே இருந்தது. அடுத்தடுத்த நாட்களில் திரும்பத் திரும்ப அவர்கள் முயற்சிக்க, சோலார் குக்கர் வெற்றிகரமாக இயங்கியது.

சமூக சேவகி கிரண் பிர் சேத்தியின் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு சிறந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்குகிறது. அதன் சிறந்த 20 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக எங்களின் கண்டுபிடிப்பும் தேர்வாகியது. அச்சம்பவம், அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல், மாணவர்கள், புதிது புதிதாய்க் கண்டுபிடிப்புகள் நிகழ்த்த ஏதுவாக அமைந்தது.

பல ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தை, பைபிளாகத்தான் பார்க்கின்றனர். அதைத் தாண்டி வேறு எதையுமே மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

தொழில்நுட்பம் அதன் போக்கில் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் நன்மைகளை உணர்ந்து பயன்படுத்துவது எப்படி என்பதை மாணவர்களே எங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றனர்” என்கிறார்.

ஆசிரியப்பணி தவிர, பள்ளிக் கல்வித்துறையின் சமூக அறிவியல் பாடத் திட்ட உறுப்பினராகவும் இருக்கிறார் சித்ரா. பாடத்திட்டங்களை உருவாக்கும் சமயத்தில் இரவு பகலாக உழைத்து, புத்தகத்தை வடிவமைத்ததில் இவரின் பங்கும் தவிர்க்க முடியாததாய் இருந்திருக்கிறது. மாணவர்களைத் தன் இரு கண்களாய் பாவித்த கலாம் மாணவர்களுக்குப் பதிலளித்த சம்பவம், தற்போது மூன்றாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பணி

சத்தமின்றி இன்னொரு முக்கியப் பணியையும் இவர் செய்து வருகிறார். தனக்கு ஏதோ ஒரு வகையில் தெரிந்த, அறிந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களில் எவரேனும் கற்பித்தலில் புதுமைகளைக் கையாண்டு வந்தால், அவரை அடையாளம் கண்டு பள்ளிக் கல்வித் துறையின் பாடத் திட்டக் குழுவில் இணைக்கும் வேலைதான் அது.

தனது கற்பித்தல் முறையையும், தன்னுடைய மாணவர்களின் திறமைகளையும் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களுக்கும் தனது உத்திகள் சென்றடைய யூடியூபை நாடியிருக்கிறார் ஆசிரியை சித்ரா. அவ்வப்போது அதில் வீடியோ பதிவுகளை அப்டேட் செய்து வருகிறார். அரசுப் பள்ளி மாணவர்களின் ஆக்கங்களைப் படம்பிடிக்கும் சித்ராவின் யுடியூப் பக்க இணைப்புhttps://www.youtube.com/user/chitra137

Source….க.சே. ரமணி பிரபா தேவி – தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in      www.tamil.thehindu.com

Natarajan

Miracles Happening Inside our Body Every Single day….

 

Sometimes you may feel like your body is beginning to creak and fail you on the outside, but do you ever stop to consider the incredible work that is taking place inside of it? There is so much going on and everything fits together so well, that it’s almost impossible to comprehend it. This presentation will remind you that there are miracles going on inside your body every single day.

Heart

Info source: sentientdevelopments.com

Info Source: wonderopolis.com/Image Source: fleetfeetcolumbus
 

Cancer

Info source: cracked.com/Image source dream designs, freedigitalphotos.net 

Brain

Info Source: sentientdevelopments.com
 

Stomach

Info Source: cracked.com/Image source dream designs, freedigitalphotos.net
 

Eyes

Info Source: listverse.com

Energy

Info source: physlink.com

Red Blood Cells

Skin

Hair

Words

Liver

Saliva

Testicles

Kidneys

Hair

 

Digestion

Regeneration

Final Slide

Source….www.ba-bamail.com

Natarajan

 

 

” மகாபெரியவா கொடுத்த வாழைப் பழம் பிரசாதம் ….குழந்தைக்கு …”

இரண்டரை வயது வரை நடக்காமலேயே இருந்த ஒரு குழந்தை, மகா பெரியவா ஆசி பெற்று நடக்க ஆரம்பித்த கதை இது.

பிறந்த குழந்தை வாய் திறந்து மழலை மொழி பேசாதா என்பதே தாய் உட்பட அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், குழந்தை பிறந்ததும் தத்தித் தவழ்ந்து நடக்காமலே இருந்தால் எப்படி இருக்கும்? அது எத்தனை பெரிய துயரம்! அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தானே அந்த வலி தெரியும்?!

இரண்டரை வயது வரை நடக்காமலேயே – உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே தரையில் தத்தித் தத்தி நகர்ந்துகொண்டிருந்தது அந்தக் குழந்தை. பெயர் சுப்பிரமணியன். நடக்கவேண்டிய வயது வந்த பிறகும் குழந்தை நடக்காமலே இருந்தால் எந்தத் தாய்தான் பரிதவித்துப் போகமாட்டாள்? சுப்பிரமணியனின் நிலையைப் பார்த்த புவனேஸ்வரியும் அப்படித்தான் பரிதவித்துப் போனார்.

அரசுப் பணியில் இருந்த கிருஷ்ணமூர்த்தியும் அவருடைய மனைவியான ராஜமும் பேரனின் இந்த நிலை குறித்து ரொம்பவே கவலைப்பட்டனர். தங்கள் மகள் வயிற்றுப் பேரனான சுப்பிரமணியனுக்கு நேர்ந்த இந்த அவலம் தாத்தா மற்றும் பாட்டியைத் தடுமாற வைத்தது. ‘பேரன் சரியாக வேண்டுமே’ என்பதுதான் அவர்களின் கவலையாக இருந்தது.

‘‘பூர்வ ஜன்ம கர்மாவா இருக்கும். அதனாலதான் அவன் இப்படிப் பொறந்திருக்கான். நிறைய கோயில்களுக்கு அவனைக் கூட்டிட்டுப் போய் பிரார்த்தனை பண்ணு. பரிகாரம் செய்’’ என்று கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார் நண்பர் ஒருவர். அதன்படி பல கோயில்களுக்கும் போய் தெய்வத்தின் சந்நிதிகளில் பிரார்த்தனையையும் வைத்தார்.

மருத்துவத் துறையில் சுப்பிரமணியனை ‘க்யூர்’ செய்ய இப்படி ஒரு டாக்டர் இங்கே இருக்கிறார் என்று எவராவது தகவல் சொன்னால் போதும்… அடுத்த நாளே அப்பாயின்ட்மென்ட் வாங்கி அந்த டாக்டரிடத்தில் இருப்பார் கிருஷ்ணமூர்த்தி. சுப்பிரமணியன் எழுந்து நடக்க வேண்டும் என்பதற்காக சின்ஸியரான இந்தத் தாத்தா பார்க்காத மருத்துவர் இல்லை; செய்யாத சிகிச்சை இல்லை.

மருத்துவர்களாலேயே ‘இதுதான் பிரச்னை’ என்று ஆணித்தரமாக எதையும் எடுத்துச் சொல்ல முடியவில்லை. ஒரு டாக்டர்… அவருக்கு அடுத்து இன்னொரு டாக்டர்… என்று நாட்கள் நகர்ந்தனவே தவிர, நல்ல சிகிச்சை இல்லை; சுப்பிரமணியனின் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் இல்லை. சிகிச்சையின் பொருட்டு பொருட்செலவும் அதிகமானது.
‘‘அவன் நடக்க மாட்டேங்கிறான்னு அப்படியே விட்டுடாதே… நீ பாட்டுக்கு அவனை நிக்க வெச்சு நடக்கறதுக்கு உண்டான முயற்சிகள்ல தொடர்ந்து ஈடுபட்டுண்டே இரு. ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் உன் பேரன் இதே நிலையிலயே இருந்துட்டான்னா – அதாவது நடக்காமவே இருந்துட்டான்னா பிற்காலத்துல உம் பாடு இன்னும் சிரமமாகிப் போய்விடும்’’ என்று கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒருவர் எச்சரிக்கை என்ற பெயரில் பயமுறுத்தியது வேறு, அவரது குடும்பத்தினரை ஏகத்துக்கும் களேபரப்படுத்திவிட்டது. எனவே, அலுவலக நேரம் தவிர, தான் வீட்டில் இருக்கும் நேரங்களில் பேரன் சுப்பிரமணியனைத் தூக்கி நிற்க வைப்பார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால், குழந்தையின் இளம் கால்கள் தரையில் நிற்காமல் வளைந்து, மடிந்து தடுமாறும். சட்டென்று பேலன்ஸ் சரிந்து கீழே விழும் பேரனைக் கைத்தாங்கலாக அரவணைத்துக்கொள்வார் கிருஷ்ணமூர்த்தி.

ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தியின் அலுவலக நண்பர் ஒருவர், ‘‘ஏம்ப்பா கிட்டு… ஒரு நாள் காஞ்சிபுரம் போய் மகா பெரியவாளைப் பாரு. குழந்தைக்கு அவரோட ஆசி கிடைச்சா எல்லாம் சரியா போயிடும். கூட்டிண்டு போய்ப் பாரேன்’’ என்று அனுசரணையாகச் சொன்னார்.

மனைவி ராஜத்திடம் இந்த விஷயத்தைச் சொல்ல… ‘‘கண்டிப்பா போயிட்டு வருவோம். கண்கண்ட அந்த தெய்வத்தோட பார்வை இவன் மேல விழுந்தா, ஒருவேளை எல்லாம் சரியாயிடும்னு தோண்றது’’ என்று மனைவி ராஜமும் தன் பங்குக்குச் சொல்ல… ஒரு நாள் வாடகை காரை அமர்த்திக் கொண்டு காஞ்சிபுரம் கிளம்பினார்கள்.

அது ஒரு கோடை விடுமுறைக் காலம். பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு விட்டதால், குடும்பத்தோடு பலரும் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தனர். தங்கள் ஊரில் இருந்து கிட்டத்தட்ட ஒரு பிக்னிக் போல் புறப்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள திருத்தலங்களை எல்லாம் தரிசித்துவிட்டு, அப்படியே ஸ்ரீமடத்துக்கும் பெரியவா தரிசனத்துக்காக வந்திருந்தார்கள்.

காஞ்சி மடமே மனிதத் தலைகளால் நிரம்பியதுபோல் காணப்பட்டது. கூட்டத்தினரிடையே ஒருவாறு ஊர்ந்து, நீந்தி மகா பெரியவா அமர்ந்து அருட்காட்சி தந்துகொண்டிருக்கும் சந்நிதானத்தை அடைந்தனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர். பேரன் சுப்பிரமணியனைத் தன் இடுப்பில் தூக்கி வைத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. ஏகத்துக்கும் காணப்பட்ட கூட்டம் வேறு சுப்பிரமணியனை ஹிம்சை செய்தது போலும். விடாமல் அழுதுகொண்டே இருந்தான். தாய் புவனேஸ்வரியும் பாட்டி ராஜமும், பெரியவா சந்நிதானத்தைக் காட்டி, ‘‘அங்கே பார், உம்மாச்சித் தாத்தா. அழக்கூடாது. அவரைக் கும்புட்டுக்கோ’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.

அன்று மகா பெரியவா மௌனத்தில் இருந்தார். எவரிடத்திலும் எதுவும் பேசவில்லை. முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டும் தன் அந்தரங்கக் காரியதரிசிகளிடம் சைகையின் மூலம் சில விஷயங்களைக் கேட்டறிந்தார். மற்றபடி தன் முன் வந்து செல்லும் பக்தர்களின் குறிப்பறிந்து பிரசாதத்தையும் திருக்கரங்களால் ஆசியையும் வழங்கிக்கொண்டிருந்தது அந்தப் பரப்பிரம்மம்.

கூட்டம் வேறு அதிகமாக இருந்ததால், பெரியவா தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்களை விரைவாக அங்கிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள் சீடர்கள்.

மகனை மேல்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முன் ஆசி பெற வந்தவர்கள், கல்லூரி அட்மிஷன் கிடைக்க வேண்டுமே என்கிற பிரார்த்தனையுடன் வந்த பக்தர்கள், திருமணத்துக்கு அழைப்பிதழை அவரது சந்நிதானத்தில் வைத்து அனுக்ரஹம் வேண்டி வந்தவர்கள் என்று திரளான கூட்டம் கொஞ்சமும் கலையாமல் அப்படியே இருப்பதுபோல்தான் பட்டது கிருஷ்ணமூர்த்திக்கு. தரிசனம் முடிந்து பத்துப் பேர் வெளியேறினால், இருபது பேர் வந்து புதிதாகச் சேர்ந்து கொள்கிறார்கள்.

அப்போதுதான் கிருஷ்ணமூர்த்தியின் மனதுக்குப் பட்டது – கூட்டமே இல்லாமல் இருக்கும் ஒரு தினத்தில் வந்து மகா பெரியவாளிடம் இவனைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லி, ஆசியை வேண்டிப் பெற்றிருக்கலாமே என்று! ஆனால், பெரியவாளின் அனுக்ரஹம் எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்?

‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ நாம கோஷத்தை மனதுக்குள் முணுமுணுத்தபடியே ‘கருணை தெய்வத்தின் திருப்பார்வை பேரன் மேல் விழுந்து, அவன் நல்லபடியாக நடக்கவேண்டும்’ என்று பிரார்த்தித்துக்கொண்டே வரிசையில் நடந்து கொண்டிருந்தார் ராஜம். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்ற புவனேஸ்வரியும் தன் தாயைப் பின்தொடர்ந்து நடந்தார்.

பெரியவாளின் அருகே வந்து நின்றபோது, பரவசப்பட்டுத்தான் போனார் கிருஷ்ணமூர்த்தி. சுப்பிரமணியனைக் கீழே இறக்கித் தரையில் அமர வைத்தார். பிறகு, நமஸ்கரிப்பது போன்ற பாவனையில் அவனையும் குப்புறப் படுக்க வைத்து, தானும் கீழே விழுந்து நமஸ்கரித்தார். இவரைத் தொடர்ந்து ராஜமும் புவனேஸ்வரியும் பெரியவாளை நமஸ்கரித்தனர்.

சுப்பிரமணியன் மீது தீர்க்கமாகத் தன் பார்வையைச் செலுத்தினார் மகா பெரியவா. பிறகு, ‘அவனைத் தூக்கி வெச்சுக்கச் சொல்லு’ என்பதாக ஒரு சிஷ்யனுக்குப் பெரியவா சைகை காண்பிக்க… அவன் கிருஷ்ணமூர்த்தியிடம், ‘‘மாமா… குழந்தையைத் தூக்கி இடுப்புல வெச்சுக்குங்கோ’’ என்றான். அதன்படி பேரனைத் தூக்கித் தன் இடுப்பில் வைத்துக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் அனைவருக்கும் கல்கண்டு மற்றும் குங்குமப் பிரசாதம் கொடுத்தார் மகா பெரியவா. ஏதோ சொல்லவேண்டும் என்று சுப்பிரமணியனின் நிலையை விவரிப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி வாயைத் திறக்கவும், பெரியவாளே அவரைக் கையமர்த்தி விட்டார்.

ராஜமும் புவனேஸ்வரியும் கண்களில் நீர் பெருக அந்த மகானின் சந்நிதியில் தங்களின் பிரார்த்தனைகளை வைத்தனர். ‘குழந்தை நடக்கவேண்டும்… குழந்தை நடக்கவேண்டும்’ என்பது மட்டுமே அப்போதைய அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

‘‘தரிசனம் செஞ்சவா எல்லாம் நகருங்கோ… நகருங்கோ’’ என்று பெரியவாளுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த சில சிஷ்யர்கள் குரல் கொடுக்கவும்… மெள்ள நகரலாம் என்று தீர்மானித்துக்கொண்டு ஓரடி எடுத்து வைத்தார் கிருஷ்ணமூர்த்தி. ‘அவாளை சித்த இருக்கச் சொல்லு’ என்பதாகத் தன் சீடன் ஒருவனுக்குப் பெரியவா சைகையால் உத்தரவு பிறப்பிக்க… சட்டென்று நகர்ந்த அவன் கிருஷ்ணமூர்த்தியின் கையைப் பிடித்து, காத்திருக்குமாறு பெரியவா சொன்னதாகச் சொன்னான்.

பெரியவாளுக்கு முன்னால் நெகிழ்ச்சியுடன் காத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அதற்கு மேல் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. குரல் உடைய… ‘‘திருவையாறு பூர்வீகம். எம் பேரன் இவன். பொறந்து ரெண்டரை வருஷம் ஆச்சு… இன்னும் தரையில் கால் பாவிச்சு நடக்கலை. எத்தனையோ வைத்தியர்கிட்ட போயிட்டேன். காசு செலவானதும் கவலை அதிகமானதும்தான் மிச்சம். பெரியவா கருணை பண்ணணும்…’’ என்றார். கண்களில் இருந்து வழியும் நீரை மேல்துண்டால் துடைத்தார்.

ஒரு புன்னகை பூத்த அந்தப் பரப்பிரம்மம், தன் முன்னால் சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருந்த பழத் தட்டை இன்னும் தன் அருகே கொண்டு வருமாறு சீடனிடம் சைகையால் சொன்னார். அவனும் அப்படியே செய்தான். அந்தத் தட்டிலிருந்து ஒரு ரஸ்தாலி வாழைப்பழத்தைத் தன் கையால் எடுத்தார். உரித்துச் சாப்பிடும் பாவனையில் அதன் மேல்தோலை உரித்தார். பாதி வாழைப்பழம் உரிக்கப்பட்ட நிலையில் அது காட்சி அளித்தது. இதை கிருஷ்ணமூர்த்தியின் இடுப்பில் இருந்த சுப்பிரமணியனுக்கு நேராக நீட்டினார் பெரியவா. அதற்கு ஏற்றாற்போல் கிருஷ்ணமூர்த்தியும் கொஞ்சம் நெருங்கி வந்தார். இருந்தாலும், மகா பெரியவா நீட்டிய அந்தப் பழத்தைத் தான் வாங்கி, சுப்பிரமணியனுக்குக் கொடுத்துவிடலாமே என்கிற எண்ணத்துடன் ஒரு சீடன் சட்டென முன்வந்து பெரியவாளிடம் கையை நீட்டினான்.

அப்போது பெரியவாளின் முகத்தைப் பார்க்கணுமே…! ‘தள்ளிப் போ’ என்பதாக அந்தச் சீடனுக்கு உத்தரவுபோல் வலது ஆட்காட்டி விரலை மட்டும் இடமும் வலமும் வேகமாக அசைத்துக் காண்பித்தவர், சுப்பிரமணியனைத் தன் அருகே வந்து அந்த வாழைப்பழத்தை வாங்கிக்கொள்ளுமாறு முக பாவனையால் அழைத்தார். அதற்கேற்றாற்போல் கிருஷ்ணமூர்த்தியும் தன் இடுப்பில் இருந்த சுப்பிரமணியனை இன்னும் கொஞ்சம் அருகே கொண்டுபோனார். தன் கையில் உரித்த நிலையில் இருந்த வாழைப்பழத்தைப் பெரியவா நீட்ட… தன் கையை நீட்டி அதை வாங்கிக்கொண்டான் சுப்பிரமணியன்.

அங்கே கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் ருசிகரமான இந்தக் காட்சியைப் பார்த்து மெய்சிலிர்த்தனர். வயதான ஒரு மாமி, ‘‘எத்தனையோ குழந்தைகளுக்குப் பெரியவா கல்கண்டு கொடுத்துப் பார்த்திருக்கேன். பழங்களைத் தந்தும் பார்த்திருக்கேன். ஆனா, ஒரு வாழைப்பழத்தை – அதன் தோலை உரிச்சு – பெரியவாளே அந்தக் குழந்தையோட கையில கொடுத்தார்னா… இது அந்தக் குழந்தைக்குப் பெரிய அனுக்ரஹம்’’ என்று பக்கத்தில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்.

சுப்பிரமணியன் தன் கையிலிருந்து வாங்கிய வாழைப்பழத்தை முழுதுமாக அவன் சாப்பிடும் வரை வேறு எந்த பக்தரையும் பார்க்கவில்லை பெரியவா. அவன் சாப்பிட்டு முடித்து, அவர்களை அங்கிருந்து அனுப்பிய பின்னர்தான் மற்ற பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க ஆரம்பித்தார் மகா பெரியவா.

ஊருக்கு வந்த கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் பெரிதும் சந்தோஷப்பட்டனர். ‘‘ஏதோ நம் பிரார்த்தனை அந்த மகான் காதுலயே விழுந்துடுத்து போலிருக்கு. நம்மை எல்லாம் நன்னா ஆசிர்வாதம் பண்ணிட்டார். அதுவும், நம்ம சுப்பிரமணிக்குத் தன் கைப்பட வாழைப்பழம் கொடுத்ததை இப்ப நினைச்சுப் பார்த்தாலும் சிலிர்ப்பா இருக்கு’’ என்றார் ராஜம் தன் கணவரிடம்.

‘‘பெரியவா ஆசிர்வாதத்துல அவன் நடக்க ஆரம்பிச்சாலே போதும். வேற எதுவும் வேண்டாம்’’ என்ற கிருஷ்ணமூர்த்தி, அந்த வேளையில் காஞ்சி மகானை நினைத்து, இருந்த இடத்தில் இருந்தே வணங்கினார்.

காஞ்சிபுரத்தில் இருந்து வீட்டுக்கு வந்து சுமார் மூன்று நாட்கள் ஆகி இருக்கும். பணி புரியும் அரசு அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் ஏதோ ஒரு பேச்சுவாக்கில் தான் காஞ்சி சென்று வந்ததைப் பற்றிச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. கூடவே, பெரியவாளின் ஆசி குறித்தும் அங்கு தன் பேரனுக்கு வாழைப்பழம் தந்த அனுபவத்தையும் சொன்னார். அப்போது சென்னையில் ஓரிடத்தில் ஒரு பள்ளியைப் பற்றிச் சொல்லி, ‘‘அங்கு உன் பேரனைக் கூட்டிக்கொண்டு போய்ப் பார். எதற்கும் ஒரு வேளை வரவேண்டும். உனக்கு இப்பதான் பெரியவா உத்தரவு கொடுத்திருக்கா போலிருக்கு’’ என்றார்.

அதை அடுத்து, உயர் அதிகாரி சொன்ன அந்தப் பள்ளிக்குப் பேரனைக் கூட்டிப் போனார் கிருஷ்ணமூர்த்தி. சரியாக நான்கே மாதங்களில் சுப்பிரமணியனுக்கு நடக்கக்கூடிய பயிற்சியை அன்போடு சொல்லித் தந்தார்கள். ‘‘பெரியவாளின் பார்வை பட்ட சில மாதங்களிலேயே அவனிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பயம் குறைந்தது. தைரியமாக நடக்க ஆரம்பித்தான். இப்ப அவனுக்கு வயசு இருபத்திநாலு. அவன் நடக்கிற நடைக்கு வேற யாருமே ஈடு கொடுக்க முடியாது. அப்படி ஒரு வேகம். அவன் வேகமா நடக்கறதைப் பார்த்தா எனக்கு பெரியவா ஞாபகம்தான் வருது. அந்த தெய்வம்தானே இவனை இப்படி நடக்க வெச்சிருக்கு!’’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் கிருஷ்ணமூர்த்தி தம்பதியர்

Source….www.periva.proboards.com

Natarajan

 

 

 

Message for the Day…” Speak the Truth and Walk on the Path of Righteousness…”

Sathya Sai Baba

The Gurus (preceptors) of the past taught only from experience; they loved their pupils and sought to correct their faults and failings, that is how their students lead happy and useful lives. When the pupils finally left the Guru’s home, he exhorted them to follow two guidelines (Sutras) which were as essential for life as the two eyes(netras) – Speak the truth; Walk on the path of righteousness(Satyam vada, Dharmam chara). The Guru had the faith that the pupil (shishya) would take the advice to heart, for he himself was the living proof of their value and validity. The Guru always takes great care to remove from the heart of the pupil the weeds of evil habits and tendencies, and implant therein the seeds of love. He insists on spiritual discipline (sadhana) for purifying the pupils’ minds and to render them strong enough to overcome temptations of all kinds. Virtue and character alone marks a truly educated person.

10 Beautiful Quotes By Mother Teresa That Prove She Is A Global Symbol Of Love….

Clad in a white, blue-bordered sari, a woman who needs very less introduction, Mother Teresa, an Albanian-born Indian citizen, became a symbol of love, care and compassion for the entire world. One of the greatest humanitarians of the 20th century, she served the unwanted, unloved and uncared poorest of the poor. For her unwavering commitment, incredible organizational and managerial skills, she was honoured with Nobel Peace Prize in 1979.

I believe Mother Teresa was one of the most quoted people of all time. Apart from her kindness and the desire to make the world a better place, what she was as a person inspires me the most.

So to honour the greatest humanitarian, the world has ever seen, on her 105th birth anniversary, …..August  26….I have come up with 10 of her messages.

1. Do good. Love people. Be happy.

psd-1

2. This is the most heard and most preached line in the world

psd-5

3. We are same-to-same-but-different

psd-2

4. Start smiling more often

psd-4

5. Her quote on peace

psd-7

6. Love, a warm hug or at least a beautiful smile?

 

psd-3

7. The poverty of loneliness

psd-8

8. You can learn from every person you meet in life

psd-9

9. Love begins with forgiveness

psd-10

 

10.  You can influence 10 people. Those 10 can influence 100 more. And so on…

psd-6

Undoubtedly, she is one of the greatest personalities of our time.

I am sure you will agree that she must have thought long and hard before she said them.

Source….Shuvro Ghoshal….www.storypick.com

Natarajan

அன்பு காட்டிய அன்னை….. அவர் பிறந்த நாள் இன்று… 26 August…

அன்னை தெரசா என்று சொன்னவுடன் அவர், ஏழை எளியவர்களுக்கும், தொழுநோயாளிகளுக்கும் சேவை செய்ததுதான் உடனே ஞாபகத்துக்கு வரும் இல்லையா? தொழுநோயாளிகளைப் பார்க்கவே மக்கள் அஞ்சிய ஒரு காலத்தில், அன்னை தெரசா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன் கையால் சேவை செய்தவர். அது மட்டுல்ல, தன் வாழ்க்கையை முழுமையாகப் பொதுமக்கள் சேவைக்காக அர்பணித்துக்கொண்டவர் அன்னை தெரசா.

அன்னை தெரசா பிறந்த ஊர் எது தெரியுமா? மாசிடோனியாவில் உள்ள ஸ்கோப்ஜெ. 105 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் (26-08-1910) அன்னை தெரசா பிறந்தார். கொஞ்ச நாட்களில் தெரசாவோட குடும்பம் அல்பேனியா நாட்டுக்குக் குடிபோய்விட்டார்கள். இவரோட அம்மா, அப்பா இவருக்கு வைத்த பெயர் ஆக்னஸ் கோன்ஞா போஜாஜியூ. ஆக்னஸ் என்றால் அல்பேனிய மொழியில் ரோஜாவின் அரும்பு என்று அர்த்தமாம். அன்னை தெரசாவுக்கு 8 வயது இருக்கும்போதே அவரோட அப்பா இறந்துவிட்டார்.

தெரசாவோட அம்மா இவரை நல்லபடியாகப் படிக்க வைத்தார். பாடப் புத்தகத்தைப் படிப்பதைவிட கிறிஸ்தவ மதப் போதனைகளைச் சின்ன வயதிலேயே நிறைய படிக்க ஆரம்பித்தார் ஆக்னஸ். கிறிஸ்தவ மிஷினரி செய்யும் பணிகளையும் விரும்பிப் படிக்க ஆரம்பித்தார். தெரசாவுக்கு 12 வயதாகும்போதே அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அது என்ன முடிவு தெரியுமா? மதம் சார்ந்த பணிகளுக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் அது.

அவருக்கு 18 வயது ஆனபோது அயர்லாந்தில் இருக்கும் லோரேட்டோ அருட் சகோதரிகளின் கிறிஸ்தவ மிஷினரியில் சேர்ந்தார். இதன்பிறகு அவருடைய அம்மா, சகோதரியை அவர் பார்க்கவேயில்லை. அந்தளவுக்குச் சமயப் பணியில் மூழ்கிவிட்டார். அயர்லாந்தில் இருக்கும்போது ஆங்கில மொழியைக் கற்றுக்கொண்டார்.

அதுவும் எதற்காகத் தெரியுமா? இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காகத்தான். ஆக்னஸ் முதன் முதலாக டார்ஜிலிங் நகருக்குதான் வந்தார். அப்போ அவருக்கு 19 வயதுதான். இதன்பிறகு அவர் கல்கத்தா சென்று ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வியையும், வறுமையாலும், நோயாலும் வாடிய மக்களுக்குச் செய்த சேவைகளும் கணக்கிலடங்காதவை.

ஆக்னஸ் கோன்ஞா போஜாஜியூ என்ற அவரது பெயர் அன்னை தெரசா என்று எப்படி மாறியது? அவர் துறவு வாழ்க்கையை லோரேட்டோ கன்னியர் சபையில் மேற்கொண்டார். அந்தச் சபையின் பாதுகாவலராக இருந்த பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த தெரசாவின் நினைவாகத் தன் பெயரை ‘தெரசா’ என்று மாற்றிக்கொண்டார். பிற்காலத்தில் தான் செய்த சேவைகள் மூலமாக அன்னை தெரசா என அழைக்கப்பட்டார்.

Source…..www.tamil.thehindu.com

Natarajan

Message for the Day….” Prosperity without the will to share would only breed fear and anxiety…”

Sathya Sai Baba

The Universe is the best university; Nature is your best teacher. With an observant mind you can learn many lessons from rivers and hills, from birds and beasts, from stars and flowers and from trees. The trees offer cool shade to all who seek it; they do not deny it to anyone on the basis of caste, creed or colour. They offer their fruits to all, irrespective of their social or economic status. Prosperity is to be welcomed but that alone is not enough. Prosperity without the will to share it will only breed fear and anxiety. Human nature is an amalgam of animal, human and divine characteristics. Love, compassion, humility, charity – these are all divine. One has to cultivate these in order to be at peace with oneself and others. These spiritual qualities are your real life-savers; they elevate you from being human to the status of the Divine.

Message For the Day…. ” How and When Genuine Freedom is Achieved …” ?

Sathya Sai Baba

Some of you may think, “How can Dharma, which sets limits on thoughts and words, and regulates and controls, make a person free?” Freedom is the name that you give to a certain type of bondage. Genuine freedom is obtained only when delusion is absent, when there is no identification with the body and senses, and no servitude to the objective world. People who have escaped from this servitude and achieved freedom in the genuine sense are very few in number. Bondage lies in every act done with the consciousness of the body as the Self, for one is then the plaything of the senses. Only those who have escaped this fate are free; this ‘freedom’ is the ideal stage to whichDharma leads. With this stage constantly in mind, if you are engaged in the activity of living, then you will become a liberated person (mukta-purusha) in this very life.

Ahmedabad no Rickshawalo – Personifying “Love All, Serve All”….Meet Uday Bhai…

On a hot Amdavadi afternoon, when the roads were as deserted as they could be, the Sabarmati Ashram was buzzing with visitors. There were school kids, a group of old ladies and some foreigners taking a stroll around the ashram, mainly in the museum – “Gandhi Smarak Sangrahalay”. While I was roaming around, my phone rang – “Hello” – “Hello, I am standing opposite to the Ashram” – “Will be there in 5 minutes”. Just as I reached the ashram exit, I had a look at the opposite end of the road. An atypical Amdavadi auto-driver, with a Gandhi Topi, waved his hand – I wondered how he recognized me, meeting for the first time. –

Ahmedabad No Richshawalo - Udaybhai

Ahmedabad No Richshawalo – Udaybhai

Udaybhai, as everyone calls him, came to me and took me and my mother (who was accompanying me, which made me a little nervous as she was witnessing my work for the first time) for a ride till Safaai Vidyalaya (a very low profile unexplored place right next to the Sabarmati Ashram). While we sat in the unique auto, Udaybhai took out two badges having a smiley and pinned one of them to my t-shirt. It was only a moment of time before he started describing his rickshaw. The energy, excitement and brightness in his eyes were very evident as he ran me through the unique features of his rickshaw.

It had facilities that are not even found in cabs. While there were newspapers, magazines and other literature to read, it also had two containers on the left and right hand side of the back saying “love” and “truth” holding snacks and water bottles for the passengers. There was also a dust bin so that the riders do not spill thrash on to the streets. However, the most unique part of the auto is that the meter always reads ZERO.

Udaybhai started “Ahmedabad no Rickshawalo” on 21st October 2010, the auspicious day of Dushhera, with the concept of gift-economy in mind. The idea behind gift-economy is that someone before you has paid for your travel; now you have to pay-it-forward for the subsequent passengers. Udaybhai, after every trip, provides the passenger with a self-written greeting card-cum-envelope in which the passenger will place the amount of his/her choice. The concept is pretty much similar to the Seva Café at CG Road. Inspired by the work of Manav Sadhna – an NGO based in the Gandhi Ashram, Ahmedabad, dedicated to the upliftment of the underprivileged, especially children, through love – and proximity to Padmashri Ishwarbhai Patel, the seed for the initiative was sown in the brain of Udaybhai.

The card in an envelope that asks the customer to “Pay From Ur Heart” –

Born and brought up in Ahmedabad, with a family of 10 – parents, 3 kids, wife, brother, sister and her son, Udaybhai comes from a very middle class family with a load of responsibilities. It takes a lot of guts to jump into something like this for a person with this kind of a family background. But his conviction on his beliefs, determination to add love to his work and some pleasant experiences when customers hear about his idea, drives him to continue with the concept.

Quoting one of the pleasant and memorable experiences, Udaybhai said: “Once, while I was coming back after dropping one of the passengers, I saw a blind man trying to cross the road. But he wasn’t able to do so due to heavy traffic. So I went to him and asked to hop onto the auto. He denied initially but agreed later. After taking him to the other side of the street, I asked him where he wants to go. He said, “No thanks, I would reach by my own”. He was probably hesitant to say since he thought that I would charge him. He would have never thought that he will meet somebody like this. After insisting a couple of times, he told that he wanted to reach Hirpur to his blind mens’ hostel. Once he sat, he told his entire life story to me and I shared mine to him. While talking about all this, we reached his hostel. His hostel’s warden came out running and worried since it was unusual for the hostel students to come down in a private auto till the hostel gates. However, he was pleasantly surprised once he came to know about the concept and invited me inside for a cup of tea.”

These are the kind of experiences that keep the spirits alive for such noble causes in spite of all the financial hiccups. Of course, there are bitter experiences as well but nothing compared to the pleasant ones. In future, Udaybhai intends to expand this drive and have many more such rickshaws. As what he believes, at the end of the day, it is the absolute peace of mind and not money that will bring him a good night sleep.

Besides running his auto, Udaybhai provides his services to Seva Café – a volunteer run restaurant where someone before you pays for your meal, your bill is zero, and you pay forward for those after you. He is also an active member of other activities of Manav Sadhna.

To know more about the work of Manav Sadhna and the concept of “Radical Generosity” visit http://www.manavsadhna.org and MovedByLove. –

source….Jay Mehta….www.thebetterindia.com

Natarajan

Message for the Day…” I Love Each one of You and Protect You always…”

Sathya Sai Baba

I have come to reform you; I won’t leave you until I do that. Even if you get away before I do that, don’t think you can escape Me; I will hold on to you. I am not worried if you leave Me, for I am not anxious that there should be a huge gathering! Who gave hand-written invitation to everyone present here? People come, on their own, in thousands – you attach yourselves to Me! I am unattached. I am attached only to the task. But be assured of one thing. Whether you come to Me or not, you are all in Me. I have the love of a thousand mothers. I love each one of you and protect you always. Whenever I appear to be angry, remember, it is only love in another form. I do not have even an iota of anger in Me. I express My disappointment when you do not shape up as I expect.