” What is Mine …” ? A Man asks God …!!!

A man died…
When he realized it, he saw God coming closer with a suitcase in His hand

.
Dialogue between God and Dead Man…
God: Alright son, it’s time to go.
Man: So soon? I had a lot of plans…
God: I am sorry but, it’s time to go.
Man: What do you have in that suitcase?
God: Your belongings.
Man: My belongings? You mean my things… clothes… money…
God: Those things were never yours, they belong to the Earth.
Man: Is it my memories?
God: No. They belong to Time.
Man: Is it my talent?
God: No. They belong to Circumstance.
Man: Is it my friends and family?
God: No son. They belong to the Path you travelled.
Man: Is it my wife and children?
God: No. They belong to your Heart.
Man: Then it must be my body.
God: No No… It belongs to Dust.
Man: Then surely it must be my Soul!
God: You are sadly mistaken son. Your Soul belongs to me.
Man with tears in his eyes and full of fear took the suitcase from the God’s hand and opened it…
EMPTY!!
With heartbroken and tears down his cheek he asks God…
Man: I never owned anything?
God: That’s right. You never owned anything.
Man: Then? What was mine?
God: Your MOMENTS. Every moment you lived was yours.

source:::: debu7370blogspot.com

Natarajan

Message For the Day…” Desire is the ‘Nityashatru’ of Man…”

No one filled with greed, fear and anger can achieve anything in this world. Excessive desires degrade a person. One cannot give up desires entirely. But there should be a limit to them. When they exceed the limits one goes astray. Desires are dreadfully dangerous. Today’s enemy may become tomorrow’s friend and vice versa. But desires are perpetual enemies. They haunt man ceaselessly. The Gita declares desire as the Nityashatru (eternal enemy) of man. Hence desire has to be kept under control. ‘Kamam hitva arthona bhavathi’ (One who has given up desire is free from worries). ‘Lobham hitva sukhee bhavathi’ (Overcoming greed one becomes happy). When you rid the mind of impurities, humanness turns divine.

 

Sathya Sai Baba

வாழ்த்த்துவோம் வாங்க சஞ்சய் குமாரை !!!

சிறுகச் சிறுக சேமித்து ஏழைகளின் சிகிச்சைக்கு பணம் அனுப்பும் மாணவன்:

பெற்றோருடன் சஞ்சய்குமார்

பெற்றோருடன் சஞ்சய்குமார்

எத்தனையோ நல்ல உள்ளங்கள் ஏழைகளின் உயிர் காக்கும் மருத்துவ சேவைக்காக ஓடோடி வந்து உதவுகின்றனர். சஞ்சய்குமாரின் சேவை சற்றே வித்தியாசமானது.

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். வட்டார போக்குவரத்து அலுவல கம் தொடர்பான ஆலோசகராக இருக்கிறார். இவரது மகன் சஞ்சய்குமார். பிளஸ் 1 வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் இவன் இதுவரை 210 ஏழைகளின் உயிர்காக்க உதவி செய்திருக்கிறான். எப்படி? விவரிக்கிறார் வேணுகோபால்..

11 ஆண்டாக தீபாவளி கொண்டாடுவது இல்லை

சஞ்சய்க்கு அப்போ அஞ்சு வயசு இருக்கும். பேப்பர் படிச்சுட்டு இருந்தேன். அதுல, ஒரு சின்னப் பொண்ணுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டு போட்டோவுடன் விளம்பரம் வெளியாகி இருந்துச்சு. அதை பார்த்த சஞ்சய், ‘பேப்பர்ல எதுக்குப்பா இந்த அக்கா படத்தைப் போட்டிருக்காங்க?’ன்னு கேட்டான். ‘இந்த அக்காவோட இதயத்துல கோளாறுப்பா. அறுவை சிகிச்சைக்கு உதவி கேக்குறாங்க’ன்னு சொன்னேன். ‘நாம ஏதாச்சும் உதவி பண்ணலாமே’ன்னான். ‘அதுக் கேத்த வருமானம் நமக்கு இல்லியே’ என்றேன். அவங்க அம்மாகிட்டப் போயி ஏதோ பேசிட்டு அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தான்.

‘ஏம்பா.. எனக்கு தீபாவளிக்குப் பட்டாசு, புதுத் துணி எடுக்க எவ்வளவு செலவு பண்ணுவே?’ன்னான். ‘2 ஆயிரம் ஆகும்’னு சொன்னேன். ‘அப்படின்னா.. இந்த வருஷம் எனக்கு பட்டாசும் வேண்டாம், புதுத் துணியும் வேண்டாம். அதுக்கு செலவு செய்யுற பணத்தை இந்த அக்காவுக்கு அனுப்பி வைச்சிருப்பா’ன்னு சொல்லிட்டு பதிலுக்குக்கூட காத்திருக்காம வெளிய ஓடிட்டான். அவன் சொன்ன மாதிரியே அந்தப் பொண்ணோட அறுவை சிகிச்சைக்கு 2 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைச்சோம்.

அந்த வருஷத்துலருந்து சஞ்சய் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறதில்லை. புதுத் துணி போடுறது இல்லை. அதுக்கு செலவாகும் பணத்தை கணக்குப் பண்ணி கேட்டு வாங்கி வச்சுக்குவான். அவங்க சித்தி பட்டாசு வாங்கித் தர்றேன்னு சொல்லுவாங்க. அவங்கட்டயும் ரூபாயைக் கேட்டு வாங்கிருவான். சஞ்சய் இந்த முடிவு எடுத்துட்டதால நாங்களும் பதினோரு வருஷமா தீபாவளியை ஏறக்கட்டி வைச்சிட்டோம்.

8 விருதுகள் பெற்ற சஞ்சய்

பிறந்த நாளுக்கு புது டிரெஸ் போடுறதோ, கேக் வெட்டிக் கொண்டாடுறதோ இவனுக்குப் பிடிக்காது. அதுக்குப் பதிலா, இவன் படிக்கிற வேலம்மாள் பள்ளியில ஒவ்வொரு வருஷமும் இவனோட வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகள் நடுவான். இவனது சேவையைப் பாராட்டி இதுவரை 8 விருதுகள் கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு கூறினார் வேணுகோபால்.

அப்பாவின் தோளைப் பிடித்துத் தொங்கியபடி அருகில் நின்று கொண்டிருந்த சஞ்சய்குமார் நம்மிடம் சொன்னான்..

210 பேருக்கு உதவி

யாருக்காச்சும் உயிர்காக்கும் சிகிச்சைக்கு உதவணும்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்னா அப்போதைக்கு என் சேமிப்புல எவ்வளவு பணம் இருக்கோ அதை எடுத்து அனுப்பி வைச்சிருவேன். ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை என இதுவரை 210 பேருக்கு ஏதோ என்னால் முடிஞ்ச சிறு உதவியைச் செஞ்சிருக்கிறேன்.

டீச்சர் தரும் டியூஷன் ஃபீஸ்

இப்பகூட 2 ஆயிரம் ரூபாய் சேமிச்சு வைச்சிருக்கேன். நாலாம் வகுப்புலருந்து மஞ்சுளா டீச்சர்கிட்ட டியூஷன் படிக்கிறேன். நான் இந்த மாதிரி உதவி செய்றேன்னு தெரிஞ்சு, ‘எனக்கு டீயூஷன் ஃபீஸ் வேண்டாம் சஞ்சய்.. அந்த பணத்தையும் உன் பணத்தோட சேர்த்து, கஷ்டப் படுறவங்க சிகிச்சைக்கு அனுப்பி வைச்சிரு’ன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு நல்ல மனசு.

மருத்துவ உதவிக்காக நான் அனுப்பிய பணம் கிடைச்சதும், அவங்க எல்லாரும் மறக்காம எனக்கு நன்றி தெரிவிச்சு கடிதம் போடுவாங்க. அதையெல்லாம் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். ‘எங்களைப் போன்ற ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த தம்பி நல்லா படிச்சு டாக்டரா வரணும். அதுக்காக தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்’ என்றுகூட சிலர் எழுதி இருக் கிறார்கள்.

ஆனால், ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டராகி ஏழைகளுக்குச் சேவை செய்யணும்கிறதுதான் என் விருப்பம், கனவு, ஆசை, லட்சியம் எல்லாம்!

உறுதிபடச் சொன்னான் சஞ்சய்குமார். வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்.

Message For the Day…” Your Heart is an Ocean Of Milk…”

When the Asuras and Devas (Demons and Gods) churned the Ocean of Milk (Ksheera Sagara), first came poison. They did not give up the churning till they got the Amrit (nectar of immortality). Regard your heart as the Ocean of Milk and the intellect as the Mandhara mountain. Using your yearnings as the churning ropes, carry on the churning by reciting the Lord’s name. Do not mind if the first thing to come out is poison. Go on churning till you get the nectar of divine bliss. When you study the Bhagavad Gita, you will note that it begins with Arjuna Vishaadha Yoga, the (the despondency of Arjuna). But ultimately, Arjuna experiences the Vishvaruupa, the Cosmic Form of the Lord.

 

Sathya Sai Baba

” வர வேண்டும் ஒரு அஞ்சல் அட்டை எனக்கு நாளைக்கு … அப்பா “…

நினைவலைகள் …

இன்று 31 மே…என் தந்தை மறைந்த நாள் …7 வருடம் முன்பு. அதிகம் பேச மாட்டார் …ஆனால் முகத்தில் தெரியும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று. மனதில் பட்டதை பட் என்று சொல்லும் பழக்கம் … கடமை தவறா அரசு அதிகாரி. நேர்மை வழி வளர்ந்து அந்த வழியில் தன் பிள்ளைகளையும் நடக்க செய்தவர் …

புது வருட வாழ்த்து, திருமண வாழ்த்து முதல் இரங்கல் செய்தி வரை , எல்லோருக்கும் ஒரு அஞ்சல் அட்டை செல்லும் அவரிடம் இருந்து !!!

அஞ்சல் அட்டை அவரின் தனி அடையாளம் ஆனதால் , அவருக்கு தேவைப்படவில்லை ஒரு மின்அஞ்சல் முகவரி அடையாளம் !!!

நாளை 1 ஜூன் என் பேரனின் முதல் பிறந்த நாள் … நான் ஒரு கவிதை வடிவில் என் அப்பாவைக் கேட்கிறேன் …அவ்ர்

நல் வாழ்த்துக்களை என் பேரனுக்கு. இது வெறும் கவிதை அல்ல … என் நினைவலைகளில் இருந்து பிறந்த உணர்ச்சி

வரிகள்….

நடராஜன்

மே 31 2014

ஆயிரம் பிறை கண்டாய் … வந்த வேலை முடிந்து விட்டது என நீ நினைத்தாயோ ?

சொந்தமும் பந்தமும் மறந்து நீ மறைந்து விட்டாய் பிறை ஆயிரம் கண்ட மறு வருடம் !

பறந்து விட்டது வருடம் 7 இன்றுடன் நீ விண்ணில் பறந்து …

மறக்க முடியுமா அப்பா உன்னை ? என் அப்பா உன்னை ஒரு நல்ல

தாத்தாவாகவும் பார்த்த உன் பிள்ளை நான்! என்னை தாத்தாவாக பார்க்க நீ இல்லையே இன்று இங்கு ..

இயற்க்கையின் விதி அது … அது போகட்டும் … எனக்கு இந்த மண்ணில்

முகவரி தந்த தந்தை உன்னிடம் இருக்கிறதே என் முகவரி …இது வரை உங்க

ஒரு வரி அஞ்சல் அட்டையும் வரவில்லையே எனக்கு … ஏன் அப்பா ?

அஞ்சல் அட்டைதானே உங்க அடையாளம் …

வர வேண்டும் ஒரு அஞ்சல் அட்டை எனக்கு நாளைக்கு அப்பா…நீங்க

தர வேண்டும் நீங்க உங்க நல் வாழ்த்துக்க்கள் ஒரு ஆயிரம் …என் பேரனுக்கு அதுவே சிறந்த

பரிசாகும் , அவன் முதல் பிறந்த நாள் அன்று { 1 ஜூன் 2014 }

உங்கள் அன்பு பிள்ளை

நடராஜன்

Message For the Day…” Which is the Right Path … ” ?

One’s selfish needs have to be sacrificed. There must be constant efforts to do good to others. Your desire should be to establish the welfare of the world. With all these feelings at heart, you must meditate on the Lord. This is the right path. If great men and those in authority are thus engaged in the service of humanity and in promoting the welfare of the world, the thieves of passion, hatred, pride, jealousy, envy and conceit will not invade the minds of common people; the values such as Right Conduct, Mercy, Truth, Love, Knowledge and Wisdom will be safe from harm. The six internal foes called the Arishadvargas can be uprooted only by the teachings of great souls, love for God, knowledge of the Lord and the company of the holy and the great.

 

Sai

“இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். …”

மஹாபெரியவாளிடம் இருந்து சந்தனத்தால் உருவாக்கப்பட்ட காமாட்சி, ஒரு தேங்காய், அவரது பாதுகை ஆகியவற்றைப் பெற்று இருக்கிறார் ஒரு பரம பக்தர். அவர் பெயர் சீனிவாசன்.

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அருகே உள்ளது உத்தமதானபுரம். அங்கே வசித்தவர் கார்வார் வெங்கட்ராமன். 1901-ஆம் வருடத்திலிருந்து அவர் காஞ்சி மடத்தின் ஊழியராகப் பணி புரிந்தவர். அவர் மடத்தில் சேர்ந்த பல வருடங்கள் கழித்து தான், மஹா பெரியவா பீடாதிபதி பட்டமேற்றார். அவருக்கு முன்பு பீடாதிபதிகளாக இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள், ஆசார நியமங்களை எந்த விதத்தில் செய்வார்கள் என்றெல்லாம் வெங்கட்ராமனிடம் மஹா பெரியவா விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம். காரணம், பெரியவாளுக்கு முன்பு இருந்த பீடாதிபதிகள் காலத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பதே.

அந்த கார்வார் வெங்கட்ராமனின் பிள்ளை தான் சீனிவாசன். இவருக்கு படிப்பு அதிகமில்லை. நாற்பத்தியாறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இவரது வாழ்க்கையின் திசையையே மாற்றி விட்டது எனலாம்.

மஹா பெரியவா சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் தங்கியிருந்த நேரம். உத்தமதானபுரத்தில் இருந்த சீனுவிற்கு,, ஒரு நாள் தூக்கத்தில் திடீரென விழிப்பு ஏற்பட்டது. ஒரு தெய்வீக அருள் நிலையில் காமாட்சியம்மன் மீது ஆயிரம் அகவல்களை இயற்றினார்.

இப்போது அந்த தினத்தை நினைத்தாலும் தன் உடல் சிலிர்க்கிறது என்கிறார். அந்த பிரமிப்பு நீங்காமல், இதைக் குறித்து அவர் தந்தைக்கும் கடிதம் எழுத, அதை மஹாபெரியவாவிடம் காட்டி இருக்கிறார். இதைத் தொடர்ந்து சென்னைக்கு உடனே வரும்படி மடத்து மானேஜர் சீனுவிற்குக் கடிதம் எழுதியனுப்பினார். சீனிவாசன் மஹானின் கட்டளையாக ஏற்று, சென்னைக்குச் சென்றபோது கி.வா.ஜகந்நாதன், சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உட்பட பல மேதைகள் பரமாச்சாரியாரின் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.

தரிசனத்திற்கு சீனிவாசன் முறைவந்த போது ‘படி’ என்று மட்டும் சுருக்கமாகச் சொன்னர் மஹான். காமாட்சி ஸ்துதியை அவரும் படித்தார். கேட்டார். அடுத்த நாள் சீனுவை தன் அறைக்கு வருமாறு சொன்னார். அங்கே போன சீனிவாசன், “நான் எந்த ஞானமும் இல்லாதவன். என்னை காமாட்சியம்மன் ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்றார்.

மஹான் முகத்தில் புன்னகையைத் தேக்கியவாறு ஒரு மூங்கில் கட்டிலில் இருந்த சந்தனமேருவையும் (சிறுமலை போல் இடித்து வைக்கப்பட்ட சந்தனம்) ஸ்ரீபாதுகைகளையும் ஒரு தேங்காயையும் கட்டிக் கொண்டு வந்து “இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். உனது பூஜை உலக நன்மையையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். எழுதுவதற்காகவே பிறந்தவன் நீ” என்றார்.
சீனிவாசன் உடல் சிலிர்க்க, படபடப்பு அதிகமாகியது.

ஊர் திரும்பிய சீனிவாசன் அவர் கொடுத்த தெய்வத் திருஉருவங்களுக்கு தினசரி பூஜை செய்ய ஆரம்பித்தார். காமாட்சி அருளால் தெய்வங்கள் மீது பாமாலை, அந்தாதி, சதகம் ஸ்லோகம் என்று எழுதிக் குவித்தார்.

”பாரா ஒவ்வொன்றையும் எழுதி முடித்தவுடன் பரமாச்சாரியாரிடம் கொண்டு போய் காட்ட, அவர் படிக்கச் சொல்லிக் கேட்க, அவற்றை மஹான் ரசிப்பதே அழகு” என்கிறார் சீனு.

22.02.61 அன்று மஹான், சீனிவாசனின் வீட்டிற்கே எழுந்தருளி தாம் அளித்த சந்தன காமாட்சி அருகில் அமர்ந்து பூஜை செய்தார். கிடைத்தற்கரிய பெரும் பாக்யம் அல்லவா இது?

1987-வருடத்திலிருந்து சென்னை வண்டலூரில் சீனுவாசன் குடும்பத்துடன் தங்கி தெய்வங்களை பூஜித்து வருகிறார். பரமாச்சாரியார் கூறியதன் பேரில் உத்தமதானபுரத்தில் இருந்த அவர் வீட்டிற்கு இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி விஜயம் செய்திருக்கிறார். பூஜை அறையில் அமர்ந்து சில பாடல்களையும் பாடினாராம் இசையரசி.

இன்னொரு அதிசய நிகழ்ச்சி.

ஒருமுறை காஞ்சியருகே இருக்கும் சர்வதீர்த்தக்கரை என்ற இடத்தில் பரமாச்சாரியார் ஒற்றை ஆடையை உடலில் அணிந்து ஒட்டிய தேகத்துடன், சீனிவாசன் வாயிலிருந்து வெளிப்பட்ட நாமாக்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சீனுவின் கண்ணெதிரே ஒரு அதிசய நிகழ்ச்சி. மஹானின் உடல் முழுவதும் புஷ்பத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலையில் மலர்க்கிரீடம், அவர் வீற்றிருந்த திண்டு கூட மலர்களாகவே காட்சியளித்தது. உத்தமதானபுரத்தில் காமாட்சியம்மனைத் குறித்து சீனு விவரித்த ஒரு கோலத்தில் பரமாச்சாரியார் காட்சி தந்தார். ‘என்ன பரவசமான காட்சி’ என்று சீனு பரவசமடைகிறார்.

சீனிவாசன் நடத்தும் பூஜைகளில் இனவேறுபாடு இன்றி எல்லோரும் கலந்து கொண்டு அருள்பெற வேண்டுமென உத்தரவாகியதாம். குறி சொல்வது, சோதிடம் போன்ற எதிலும் ஈடுபடாமல் உலக நன்மைக்காக மட்டும் பூஜை செய்கிறார் பக்தர் சீனிவாசன். இந்தக் கலியுகத்திலும் கடவுளின் அருள் குறைவின்றிக் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாகக் காட்சியளிக்கின்றன அவர் வீட்டில் இருக்கும் தேங்காய் (இதில் இன்னமும் இளநீர் இருக்கிறது) சந்தன காமாட்சி, ஸ்ரீபாதுகைகள் ஆகியவை.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::: http://www.periva.proboards.com

Natarajan

Message For the Day…” Be a Ship and Not a Sheep ‘…

One should realise the infinite powers latent in oneself. It is these powers which have enabled mankind to invent the most wonderful kinds of machinery. Humans are, therefore, more valuable than the most precious things in the world. It is human beings who imparts value to things by the changes they make in them, as in the case of diamonds or a work of art. In the spiritual field, humans are enjoined at the very outset to know oneself. One should not be a slave of the senses. Nor should one follow others like sheep. ‘Be a ship and not sheep.’ A ship serves to carry others and cross the Ocean. The one who pursues the spiritual path not only benefits himself but promotes the well-being of others. Consider the body as a vessel, wisdom as a rope ‘and use the vessel to draw the nectar of Divinity from the well of spirituality. Not otherwise can immortality be attained.

 

Sathya Sai Baba

” It is Just a Slip…. Not a Fall …” A Lesson To All of us …

 

 

 

 

We’re often told that it’s not about how we fall in life, it’s whether we get back up and keep fighting. Because everyone will stumble from time to time, and it’s those who preserve through the trials and tribulations that have the success so many of us crave. But as we all know, it can be truly hard to rise up again after falling so hard; and it may even seem impossible. I guess that’s why life is so hard. It separates those who truly want something, from those that don’t.

That’s why this young girl by all accounts should have just given up. After all, when competing against the best athletes in the country, there’s no margin for error, especially the kind she makes. But what happened instead serves as an example to us all.

 

Well if that isn’t a shot in the arm to go out and reach for the impossible, I don’t know what is.

Please share with a friend who may have stumbled in the past, and needs your support to get back on the winning path.

 

source:::: You Tube & viral nova trending site

Natarajan