Emami….Amazing Success Story….From Rs 20k to Rs 8000 Crores !!!

With the acquisition of Himani, Emami entered the mainstream personal care category in the late seventies, notes RS Agarwal.

The late 1960s were not the best of times to kick off one’s own business venture. Certainly not for two young boys, who did not hail from a business family and who were already engaged in cushy jobs in a large and respectable corporate group (Birla Group).

But then, if you love being the boss rather than being bossed around, if you have a desire to be in control, things will always be different.

And that’s exactly what happened with me and my childhood BEST FRIEND Radheshyam Goenka. So it was by choice that we left our jobs and stepped into business.

The entrepreneurial journey has never been smooth and certainly not in the initial days. We had the toughest ride in the initial years.

The greatest challenge was to get the right product line and control our losses. In 1974, we finally set up Kemco Chemicals, an ayurvedic medicine and cosmetics manufacturing unit with an initial capital of Rs 20,000.

Well, that was the beginning. The mid-70s were marked by the story of ‘the great Indian middle class’ with its growing propensity to consume and increasing purchasing power.

That was the time we rolled out Emami vanishing cream and Emami talcum powder.

We did not taste success initially.

But our failures gave us the most vital insight – if you are to capture the consumer’s mind space, there is no alternative but to stand out in the MARKET

And mind you, this particular MARKET was dominated by multinationals with deep pockets. I must also add here that the idea of standing out in the MARKET is easier said than done.

The task was even tougher because we were constrained by limited resources, a truly lean workforce.

We had to put on several hats simultaneously – strategists,MARKETERS door-to-door salesmen, payment collectors and what not. We realised (and rightly so) that the only way to survive and grow would be through innovation and introduction of new products.

For the first time in the history of Indian FMCG industry, we introduced products with imported French perfume and innovative packaging in plastic containers with imported Japanese labels that had golden motifs and printing. The strategy paid off and shortly both the products became immensely popular and by 1978, Emami vanishing cream became the market leader with 22 per cent market share and Emami talcum powder became the No.2 brand in its category in India.

We realised we were on the right track. People say the art of entrepreneurship lies in the capability of finding opportunities that others would not find, finding solutions that others can’t create and finding a silver lining and making some good out of chaos. And the same year (in 1978), we sensed a great opportunity in the century old, ailing Himani Ltd.

Himani, which had a strong brand equity in eastern India and a well laid out factory in Kolkata, was up for sale and we took a somewhat revolutionary step by acquiring that company, notwithstanding the fact that inorganic growth was not the order of the day for FMCG companies in those days.  The FINANCIAL risk was also significant.

 

But eventually the move proved to be a turning point for us. Subsequent to our acquisition of Himani, we saw enormous potential in the antiseptic cream MARKET, which was then monopolised by Boroline.

We were aggressive and came up with our first flagship brand Boroplus antiseptic cream from the stable of Himani in 1984.

Three years down the road, BoroPlus, the only antiseptic cream with ayurvedic ingredients, became the MARKET leader. The next decade (the 90s) was extremely eventful for Emami and we started off with the launch of our next flagship brand, another innovative product Navratna cool oil, again from the Himani stable.

It was also an industry first. The MARKET dominated by traditional hair oils, actually had a latent demand for a therapeutic oil that could also act as stress buster.

We came up with a second plant at Pondicherry to ramp up capacity. Navratna, the Rs 500 crore-plus brand today, is the MARKET leader in cool oil category in the country.

We were on a roll and in 1995, Kemco Chemicals, our first partnership firm was converted into a public limited company as Emami Ltd. In 1998, Emami Ltd was merged with Himani Ltd and its name was changed to Emami Ltd as per fresh certificate of incorporation dated September 1, 1998.

Our business strategy, over the years, has thrived on continuous ideation, innovation, spotting of the right opportunity and on-time execution.

When fairness creams were meant for women only and our peers and others never thought that men might also desire to look ‘fair’, we realised that a whopping 30 per cent of female fairness cream users were in fact men who were actually closet users.

Call it a MARKETING history or something else, in 2005, we launched Fair and Handsome, the first fairness cream for men.

Then came the acquisition of another century-old ayurvedic major, Zandu Pharmaceuticals, which has been yet another landmark and turning point in Emami’s history.

Before we finally bought over a controlling stake of 68.9 per cent in Zandu for Rs 713 crore in 2008, almost all key players in the Indian FMCG business had tried their luck and failed.

The Zandu takeover brought to our fold some of the popular and prominent brands like Zandu Balm, Zandu Chyawanprash, Zandu Kesri Jeevan, Zandu Pancharishta, Sudarshan and Nityam Churna.

The Zandu business grew rapidly, and we became debt-free within two years of the deal.

We also pioneered the concept of celebrity brand endorsement and in-film advertising to create a noise and make our products known in the market. MARKETING gurus will always recall matinee idol of yesteryears – Rajesh Khanna’s reel role as the managing director of Emami in the 1983 film Agar Tum Na Hote.

Over the years, our products have been endorsed by celebrated and acclaimed entertainment and sports personalities like Madhuri Dixit, Sri Devi, Sonakshi Sinha, Kareena Kapoor, Sachin Tendulkar, Sourav Ganguly, Mary Kom and so on. We are possibly the only brand in the country to have both Amitabh Bachchan and Shah Rukh Khan as endorsers for the same brand, Navratna.

Today, we are a homegrown multi-national with presence in 63 countries. With a group turnover of Rs 8,000 crore (Rs 80 billion) and a MARKET cap of Rs 18,000 crore (Rs 180 billion) and supported by a strong workforce of 20,000, we now stand tall, not only among Indian business conglomerates, but both Radheshyam Goenka and myself feature amongst the top Forbes 50 billionaires of India.

But what is more satisfying, as the second generation promoter directors from our two families gear up to take this Group to the next level, is the fact over the last 40 years we did not have A SINGLE  day of labour unrest.

The show, or shall I say, the battle to excel goes on.

(RS Agarwal co-founder & Joint chairman, Emami Group)

RS Agarwal

Source:   AND  Rediff.com
Natarajan

Many of us Do not Know these Facts about Mahatma Gandhi….

We all know Mahatma Gandhi as the man who led our country to freedom. But we know little about some smaller and more astonishing facts about his life. The following are 16 facts about Mahatma Gandhi that are mostly unknown:

1. Mahatma Gandhi was nominated for the Nobel Peace prize 5 times

Image source

The committee regrets not giving him the Nobel Peace prize to this day as the award is never given posthumously. (Source)

 

2. M. K. Gandhi was responsible for the Civil Rights movement in 4 continents and 12 countries

Image source

 

3. The funeral procession of Mahatma Gandhi was 8 kilometers long

Image source

(Source)

 

4. Great Britain, the country against whom he fought for independence, released a stamp honouring him, 21 years after his death

Image source

 

5. Mahatma Gandhi walked/traveled almost 18 kilometers a day throughout his lifetime which is enough to walk around the world twice over

Image source

 

6. Gandhiji served in the army during the Boer war – he crusaded against violence since the time he realized the horrors of war

Image source

(Source)

 

7. Mahatma Gandhi corresponded with a lot of people – Tolstoy, Einstein and Hitler were among the many

Image source

 

8. Gandhiji was not present during Nehru’s tryst of destiny speech to celebrate independence

Image source

He was in Kolkata fasting for religious harmony.

 

9. Most relics of Gandhiji including the clothes he wore when he was shot are still preserved in Gandhi Museum, Madurai

Image source

 

10. He never held an official position in any political body during the final years of his life

Image source

 

11. He was thinking of dissolving the Congress a day before he died

Image source

 

12. Steve Jobs was a fan of Mahatma Gandhi – his round glasses are not only similar but also a tribute

Image source

(Source)

 

13. Gandhiji had a set of false teeth, which he carried in a fold of his loin cloth

Image source

 

14. Mahatma Gandhi spoke English with an Irish accent, for one of his first teachers was an Irishman

Image source

 

15. There are 53 major roads (excluding the smaller ones) in India, and 48 roads outside India that are named after him

Image source

 

16. Gandhiji helped establish 3 football clubs in Durban, Pretoria and Johannesburg all of which were given the same name: Passive Resisters Soccer Club

Image source

Mahatma Gandhi promoted football in his non-violent campaign against racial discrimination. (Source)

Live as if you were to die tomorrow.” Throughout his life Mahatma Gandhi did things that were inspirational, things that nobody thought he could do and made sure that he lived up to this line said by him.

Source::::storypick.com

Natarajan

நாளில் மட்டுமா ஒற்றுமை? …. Oct 2 …

வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள். மகாத்மா காந்தி உயரிய வாழ்ந்துகாட்டியாகத் திகழ்ந்தவர். உலகமே அவரை ‘மகாத்மா’ என்று கொண்டாடிய போது சுயசரிதை எழுதித் தன் தவறுகளை மக்கள் முன் வைத்த மகான் அவர். உலகின் தலைசிறந்த தலைவர்களுள் முதன்மையானவராய் நம் தேசப்பிதா திகழ்வதன் காரணம், வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்தவர் அவர் என்பதே. காந்தி வழியில் வாழ்ந்து காந்தியத்தின் உன்னதத்தை உணர்த்தி ‘தென்நாட்டு காந்தி’ என்று
மக்களால் போற்றப்படும் கர்மவீரர் காமராஜர், மகாத்மா போற்றிய புனிதாத்மா.
அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி பிறந்தநாள், அதேநாள் தான் காமராஜர் மறைந்த நாள். நாளில் மட்டுமா ஒற்றுமை? கொள்கையில், தனிமனித வாழ்க்கையில், நேர்மையில் என்று எல்லாவற்றிலும்
ஒற்றுமையோ ஒற்றுமை!
சிறுவயது ஒற்றுமை
காந்தி ராட்டையைச் சாட்டையாக்கி ஆங்கிலேயரை நாட்டைவிட்டு ஓடச்செய்து விடுதலை வேள்விக்குத் தன்னையே தந்தார். அவர் சிறுவயது வாழ்க்கை, சோகங்கள் நிறைந்தது. பதின்மூன்று வயதில் கஸ்தூரிபாயை மணக்கக் காலம் அவரை நிர்பந்திக்கிறது. பதினாறு வயதில் தந்தையை இழந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை உயர்ந்த லட்சியமுள்ள இளைஞனாய் மாற்றியவர் அன்னையார் புத்திலிபாய்தான். பதினெட்டுவயதில் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்திற்கு சென்றபோது தாயாருக்கு தந்த சத்தியத்தின்படி வாழ்நாள் முழுக்கத் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடித்தார்.காமராஜரும் ஆறுவயதில், தந்தைகுமாரசாமி நாடாரை இழக்கிறார். தாயார் சிவகாமி அம்மையாரின் அன்பில் வளர்ந்தார். குழந்தைப் பருவத்தில் காந்தியும், காமராஜரும் தந்தையின் அன்பின்றித் தாயின் அன்பில் வாழக்காலம் பணித்தது.காந்தி பொதுவாழ்க்கையும், அவரது தனி வாழ்க்கையும் ஒளிவுமறைவற்ற உன்னதமான வாழ்க்கையாகத் திகழ்ந்தது. உள்ளத்தில் தூய்மையோடும், செயலில் நேர்மையோடும், பேச்சில் சத்தியத்தோடும், ‘என் வாழ்வுதான் இந்தச்சமூகத்திற்கு நான் விட்டுச்செல்கிற செய்தி’ என்று வாழ்ந்தவர். காமராஜர் அப்பழுக்கற்ற தலைவராக பொதுவாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாக திகழ்ந்தார்.
கூச்சம் கூடிய தலைவர்கள் “ராஜீயத்துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள் நாகரிக உலகத்திற்கு
இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் மகாத்மா பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டத்தினால் நான் எந்தச்சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக நினைவு இல்லை” என்று சத்திய சோதனை நூலுக்கு எழுதிய முன்னுரையில் காந்தி கூச்சத்தோடு எழுதியுள்ளார்.
காமராஜர் முதலமைச்சரான பின்னும் தாய் சிவகாமிஅம்மையாருக்குச் செலவுக்கு ரூ.120 தான் அனுப்பினார். ‘வருகிறவர்களுக்குக் குளிர்பானம் வாங்கித்தரவேண்டும், ரூ.150 தந்தால் நலம்’ என்று தாய்
வேண்டியபோதும் மறுத்தவர் காமராஜர். மகாத்மாவைப்போல், மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்தபோது கூச்சத்தோடு மறுத்து
“என் கடமையச் செய்றதுல பாராட்டு ஏன்னேன்” என்று சொன்னவர் காமராஜர்.
போராட்டமே வாழ்வு உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு சாவு மணியடிக்க காந்தி நடத்திய ௨௪௦ மைல் தண்டி யாத்திரை அவரது மனஉறுதிக்கு சான்று. விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனையாய் அமைந்த மாபெரும் போராட்டத்தை அவர் அகிம்சா வழியில் நடத்திய திறத்தை உலகே வியந்து போற்றியது. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் அவரது தன்னிகரற்ற ஆளுமைக்கு மற்றுமொரு சான்று.காந்தியின் மீதும் அவர் சத்தியாகிரகத்தின் மீதும் அளவு கடந்த பாசம் கொண்ட காமராஜர்,1927ல் நீல்சிலை அகற்றும் போராட்டம் நடத்த மகாத்மாவிடம் அனுமதி வேண்டினார். ஆனால்அரசாங்கமே அச்சிலையை எடுத்துவிட்டதால், அப்போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படவில்லை. 1930 ல் காந்தி அறிவித்த உப்புச்சத்தியாகிரகத்தில் ராஜாஜியோடு வேதாரண்யத்தில்
பங்கேற்று சிறைசென்றார். அறம் பேணிய தலைவர்கள் தனிவாழ்விலும் பொதுவாழ்விலும்
அறத்தைக்கடைபிடிக்க வேண்டும் என்று போதித்த காந்தி, தென்னாப்ரிக்கா சென்று திரும்பியபின் எளிய கதர்வேட்டிக்கு மாறினார். வாரம் ஒருநாள் பேசா விரதம் மேற்கொண்டார். ஆங்கிலேயரின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அண்ணலின் அகிம்சை முன் செயலற்று ஒடுங்கின. ”பிரம்மச்சரியத்தை பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம்” என்று நம்பிய காந்தி இல்லறத்திலும் அதை கடைபிடித்தார். இல்லறத் துறவியாய் வாழ்ந்தார்.காமராஜரும் அப்படித்தான். தாயார் திருமண ஏற்பாடுகள் செய்தபோதும், பொதுவாழ்க்கைக்குப் பிரம்மச்சரியமே ஏற்றது என்று மறுத்து இறுதிவரைத் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்தார். உணவிலும் ஒற்றுமை நாம் உண்ணும் உணவிற்கும் நம் எண்ணத்திற்கும் தொடர்பு உண்டு என காந்தி நம்பினார். ”ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ அது போலவேஆகிறான்” என்று அடிக்கடிச் சொன்னதுண்டு. மிகையான உணவு நோயைக் கொண்டுசேர்க்கும் என்று எண்ணி, வாரத்தில் ஒருநாள் உண்ணா நோன்பினைக் கடைபிடித்துப் புலன்களை அடக்கும் ஆற்றலைப் பெற்றார்.காமராஜர் உணவின் மீது பெரும்பற்றுக் கொண்டவரில்லை. எளிமையான உணவு முறையையே என்றும் அவர் கடைபிடித்தார். சிறு வயது முதலே வறுமையில் வாழ்ந்ததால் சைவஉணவுப்பிரியர், மாதம் முழுக்கக் கத்தரிக்காய் சாம்பார் என்றாலும் முகம்சுளிக்காமல் சாப்பிடமுடிந்தது. பதவி வேண்டாம் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பதவியை நாடாமல் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்டவர் காந்தி. லால்பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்குப்பின் பிரதமராகும் வாய்ப்பு வந்தும்கூட அதை இந்திராகாந்திக்குத் தருவதற்குக் காரணமாய் இருந்தார் காமராஜர் என்பதில் இருவருக்கும் என்ன ஒற்றுமை! இருவரும் என்றும் பதவியைச் சுகமாய் நினைத்தவர்களில்லை.இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்றார் காந்தி. 1957 முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி தரும் பொருட்டுக்கிராமங்கள் தோறும் பள்ளிகள் அமைத்து மதியஉணவு தந்து கல்விக்கண் திறந்த ஒப்பற்ற காந்தியத் தலைவனாகக் காமராஜர் திகழ்ந்தார்.காந்தியின் வாழ்க்கை அகிம்சையை மையமிட்ட மகத்தான வாழ்க்கை என்றால், காமராஜரின் வாழ்க்கை காந்திய வழியில் மக்களை ஆண்ட மகத்தான வாழ்க்கை. மனிதராய் பிறந்து புனிதராய் தன்னைச் செதுக்கிக்கொண்ட மகான் காமராஜர், மகாத்மா பிறந்தநாளைக் கொண்டாடிய நிறைவில் தென்னாட்டுக் காந்தியாகவே தேசப்பிதாவின் ஆத்மாவோடு கலந்து போனார்.-

SOURCE::::முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி.mahabarathi1974@gmail.com 99521 40275

IN  Dinamalar.com

Natarajan

” இவர் பெரிய ‘பில்டர்’…உனக்கு தெரியுமா …? ”

“ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு

தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

Featured Image -- 11217

(வலையில் படித்தது)

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற

மனமே பொன் செய்யும் மருந்து.

கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம்.

தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,

மாரியம்மன் கோயில்,சிவன் கோயில்

எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத்

திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட

அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.

அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை

கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம்

தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில்

நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர்

முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்)

மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில்

கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள்.

ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும்

தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.

கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!

தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப்

பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.

‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது.

அது சிவரகசியம்!

அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர்.

அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!

அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.

உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து

பையன்களை உடன் வைத்துக்கொண்டு

சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.

பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக

நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச்

செய்யவில்லை பெரியவாள்.

அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத்

தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு

கொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்த

ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில்

வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர்.பெரியவாள்,

அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச்

சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச்

சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய

பண்டிதரா? யாகம் செய்தவரா..?

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.

“இவரைப் பார்த்திருக்கிறாயோ?”

“இல்லை”

“இவர் அட்ரஸ் தெரியுமோ?”

“தெரியாது”

“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?”

(என்ன குறும்பு!)

“சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்!

இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்கு

வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!”

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.

ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப்

பார்த்ததில்லையே…

“இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய

பழங்கள் கொடு…”

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர்

என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.

அது எந்தவகை ஸித்தி?

ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு

தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8060/#ixzz3Eu6M6EaW

பொற்காலத்தின் பொம்மைகள்….

பால பருவத்தில் நவராத்திரி என்றாலே விசேஷம்தான். ஒன்பது நாள் விடுமுறைக் கொண்டாட்டமாயிற்றே! நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று விதவிதமாகக் கொலு அமைக்க வேலை பார்ப்பேன். மணல், மண் கலந்து பரப்பிக் கடுகு தூவி தண்ணீர் தெளித்தால் புல் புல்லாகச் செடிகள் துளிர் விடும். அந்தத் தோட்டத்தில் பினாகா பற்பசையுடன் இலவச இணைப்பாகக் கிடைக்கும் குரங்கு, புலி, கரடி, மான் பொம்மைகள் மற்றும் ரப்பர் பாம்பு, பூரான், தேள், பல்லி எல்லாம் சேர்ந்து வரிசையாக நடப்பட்ட தீக்குச்சி வேலிக்குள் அட்டகாசமான ‘ஆஃப்ரிக்கன் சஃபாரி’யாகச் சுதந்திரமாக உலா வரும். இந்த இயற்கைத் தோட்டத்திலேயே இன்னொரு தீக்குச்சி வேலி அடைப்புக்குள் மரச் சறுக்கு மரம், சீசாப் பலகை, ஊஞ்சல் ஆகியவை நிறைந்த விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவார்கள்.

பளபள கோயில்

சரிவாக மண்மேடு அமைத்து உச்சியில் அருகருகே இரு குன்றுகளை உருவாக்கி அதன் ஒரு பக்கம் ஓடைக்கான குழிவுப் பாதை. உயரத்தில் திரைமறைவில் தகர வாளியிலிருந்து ரப்பர் குழாய் வழியாக ஓடையில் சலசலவென்று நீர். அதற்கு அருகிலேயே மலைப் பாதை. மனித பொம்மைகள் மேலேறும். உச்சிக் குன்றுகளுக்கு இடையில் காவிப் பட்டையும் வெள்ளைப் பட்டையும் அடிக்கப்பட்ட மதிலுடன் கூடிய பளபள கோயில்.

அடுத்த நாள் மாப்பிள்ளை காரைத் தூக்கிவிட்டு அங்கே பல்லக்கை வைத்து விட்டால் சுவாமி திருவீதி உலா. அதற்கும் அடுத்த நாள் பல்லக்குக்குப் பதிலாக வடம் பிடித்து இழுக்கும் மனிதர்களுடன் தேரை வைத்தால் தேர்த் திருவிழா. கலைடாஸ்கோப் காட்சிபோல் இந்த பொம்மைக் குழு தினம் தினம் உருமாறும்.

செட்டியார் பொம்மையும் செந்தேளும்

சின்ன வயதில் வறுமை. அதனால் வீட்டில் கொலு இல்லை. ஒவ்வொரு நவராத்திரியின் போதும் ஊரிலிருந்து பெரியம்மா பெண், சித்தி பெண் என்று யாராவது ஒரு டிக்கெட் ஆஜராகும். மாலையானவுடன் அந்த ‘அக்கா’வைச் சீவிச் சிங்காரித்து ‘போய் வெத்தலை பாக்கு வாங்கிட்டு வா…’ என்று அனுப்புவார்கள். துணைக்கு, சாணளவு ஆண்களான நான், சித்தி பையன் ராஜூ, அத்தை பையன் சத்யா.

தெருவில் காலை வைக்கும்முன் எங்கள் கைகளில் ஆளுக்கொரு மஞ்சப்பை தொங்க விடப்படும். புதுத்தெரு, நடுத்தெரு, கடலங்குடி தெரு என்று ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு வீடாகச் சென்று, அப்போது பிரபலமான ‘புன்னகை மன்னன் பூ விழிக் கண்ணன் ருக்மணிக்காக’ கொலுப் பாட்டைத் தேய் தேய் என்று தேய்த்துக் காகிதச் சுண்டல் பொட்டலங்களை மஞ்சப்பைகளில் சேகரித்து வருவோம்.

ஒரு நவராத்திரியின்போது மூன்று வயதுப் பெண் குழந்தை ஒன்றை அவ்வாறு மணையில் உட்கார வைத்து இந்தச் சடங்குகளையெல்லாம் செய்தார்கள். அதற்குச் சடங்குகளில் எல்லாம் பிரியம் இல்லை. கொலுவில் வைத்திருந்த செட்டியார் பொம்மை மீதே கண்ணாக இருந்தது. “மாமி இந்தப் பொம்மையை நானே வச்சிக்கவா?” என்று கேட்டுக்கொண்டே பொம்மையைக் கையில் எடுத்துவிட்டது. அந்த செட்டியார் பொம்மையின் அடிப்பாகத்தில் ஒற்றை ரூபாய் நாணயம் அளவுக்கு ஓட்டை. குழந்தை பொம்மையைக் கையில் எடுத்தவுடன் ஓட்டையிலிருந்து ஒரு ஜீவராசி தலை நீட்டியது. தொப்பென்று கீழே குதித்தது.

கொடுக்கை உயரத் தூக்கியபடி விரல் நீளத்துக்கு ஒரு செந்தேள். முன்னே பின்னே அந்தக் குழந்தை தேளைப் பார்த்ததில்லையாதலால், அதற்கு அந்தத் தேள் ஒரு காட்சிப் பொருளாகத் தோன்றியது. என்னவோ விளையாட்டுப் பொம்மை என்று தனது சின்ன உள்ளங்கையை அதன் மேல் வைக்கப் போக, சுற்றி நின்று பார்த்துப் பதைத்துக்கொண்டிருந்தவர்களெல்லாம் ‘ஐயோ’ என்று அலற, தேளோ பரபரவென்று அங்கே இருந்த சரஸ்வதி பொம்மையைச் சுற்றிவிட்டு வாசலைத் தாண்டி தெருவில் இறங்கி ஓடி மறைந்தது.

“மஹா பெரியவா சொன்னார்ங்கறதுக்காக நாங்க இந்த மாதிரி செய்ய ஆரம்பிச்சோம். இப்பவும் அவர்தான் கொழந்தையையும் தேளையும் காப்பாத்தியிருக்கார்…” என்று அந்த வீட்டு மாமி குரல் தழுதழுக்கக் கூறிவிட்டுக் குழந்தையை வாரி அணைத்துக்கொண்ட காட்சியை மறக்க முடியுமா?

துக்கத்தை மாற்றிய கொலு

ஒவ்வொரு கொலுவுக்கும் அய்யம்பேட்டையில் ஒரு ஜமீன்தார் வீட்டின் கிரிக்கெட் மைதானம் போன்ற முன் கூடத்தில் படிகள் அமைத்து முழுக்க பொம்மைகளாக அடுக்கி வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். கொலுவை வேடிக்கை பார்க்க வீட்டின் உள்ளே நுழைவதற்கு எங்களுக்குத் தைரியம் பத்தாது. அதனால் திண்ணையில் இருக்கும் ஜன்னல் வழியாகப் பத்துப் பதினைந்து பேர் முட்டி, மோதிக்கொண்டு வேடிக்கை பார்ப்போம். அங்கே நின்று வேடிக்கை பார்க்கும் ஐந்து, பத்து நிமிடங்களும் சொர்க்கம்!

அப்படி எதிர்பார்த்துதான் அந்த வருஷமும் திண்ணை ஏறினோம். ஜன்னல் வழியே தெரிந்த கூடம் வெறிச்சோடி இருந்தது. ஏமாற்றமென்றால் ஏமாற்றம் ஜமீன்தார் வெளியே வந்தார்.

“வளர்ந்த பையனைப் பறிகொடுத்துட்டு பரிதவிக்கிற வீட்ல கொலுவாவது இன்னொண்ணாவது. போங்கடா.. போங்க’’ என்று எங்களைப் பார்த்து தொண்டை அடைக்கக் கூறினார். எங்களில் ஒரு பையன் தைரியமாக அவர் முன்னால் சென்றான். “உங்க பையன் சாமிகிட்டத்தானே போயிருக்கான்? சாமி பொம்மைக்குப் பக்கத்திலேயே உங்க பையனோட பொம்மையையும் வெச்சுக் கொலு வைக்கலாம் இல்ல..?” என்று துடுக்குத்தனமாகக் கேட்டான். ஜமீன்தார் அவனை ஆழமாகப் பார்த்தார். சில விநாடிகள் தர்மசங்கடமான மவுனம். பின் அவரே மவுனத்தை உடைத்து, “அப்படியாடா… அப்ப நீங்க எல்லாம் நாளைக்கு வாங்க. தவறாம வரணும், என்ன?” என்றார்.

மறுநாள் ஜமீன்தார் வாசலிலேயே நின்றிருந்தார். எங்களைக் கைப்பிடித்து உள்ளே கூட்டிச் சென்றார். கூடத்தில் அமர்க்களமாகக் கொலு பொம்மைகள். கலர் கலராக சீரியல் பல்புகள் மின்னி மின்னி ஒளிர்ந்தன. அமர்க்களமான கொலு. படிகளின் நட்ட நடுவே, சாமி பொம்மைகளுக்கு இடையில் எங்கள் வயதொத்த ஒரு சிறுவனின் புகைப்படம் வைக்கப்பட்டு அதற்கு பொட்டு, மாலை அலங்காரம். எங்கள் எல்லோருக்கும் அன்றிரவு வயிறாரச் சாப்பாடு. அப்போது குஷியாக இருந்தது. இப்போது நெகிழ்வாக இருக்கிறது. மறக்க முடியுமா?

-சுபா, எழுத்தாளர், தொடர்புக்கு: dsuresh.subha@gmail.com

” அன்று வெள்ளை மாளிகை வாசலில் ….இன்று வெள்ளை மாளிகை விருந்தினர்” …!!!

வெள்ளை மாளிகை வாசலில் படம் எடுக்க நின்ற மோடிக்கு 20

ஆண்டுகளுக்குப் பிறகு சிவப்பு கம்பள வரவேற்பு !!!

கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளைமாளிகை முன்பு (இடமிருந்து) தற்போதைய பாஜக தெலங்கானா மாநில தலைவர் ஜி.கிஷண் ரெட்டி, நரேந்திர மோடி, தற்போதைய தமிழக காங். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன். படம்: பிடிஐ

கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளைமாளிகை முன்பு (இடமிருந்து) தற்போதைய பாஜக தெலங்கானா மாநில தலைவர் ஜி.கிஷண் ரெட்டி, நரேந்திர மோடி, தற்போதைய தமிழக காங். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன். படம்: பிடிஐ

சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் மாளிகை யின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட நரேந்திர மோடி, இப்போது சிவப்பு கம்பள வரவேற்புடன் வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

அமெரிக்க அரசு சார்பில் ‘அமெரிக்கன் கவுன்சில் பார் யூத் பொலிடிக்கல் லீடர்ஸ் (ஏ.சி.ஒய்.பி.எல்)’ எனும் பெயரில் ஓர் அமைப்பு நடத்தப்படுகிறது. இதன் சார்பில் அமெரிக்காவை புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் முக்கிய அரசியல் கட்சிகளை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்துக்கு இந்தியாவில் இருந்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. இதை ஏற்று இரு கட்சிகளும் மாநில கட்சித் தலைவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

கடந்த 1994-ல் நடந்த கூட்டத்துக்கு பாஜக சார்பில் குஜராத் மாநில பாஜக அமைப்புச் செயலாளராக இருந்த மோடி, ஆந்திர மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்த ஜி.கிஷண் ரெட்டி, கர்நாடகா மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்த அனந்தகுமார் ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றனர்.

அந்த சமயத்தில் மூவரும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வாசல் முன்பு நின்று எடுத்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தி இந்துவிடம் மோடியுடன் படத்தில் இருக்கும் ஜி.கிஷண் ரெட்டி கூறியதாவது:

‘அந்தப் படம் எடுக்கும்போது எங்களுடன் இருந்த மோடி நம் நாட்டின் பிரதமராவார் எனவும் அதே மாளிகையின் சிறப்பு விருந்தினராக செல்வார் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை. எனினும் அப்போதே அந்த நாட்டை நம் நாட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பதில் மோடி அதிக ஆர்வம் காட்டினார். அங்கிருந்த லிபர்டி சிலை உட்பட பல விஷயங்களை பார்த்து அது நம் நாட்டில் செய்யப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க அதிகாரிகளிடம் அந்நாட்டு அரசின் நிர்வாகங்கள் பற்றி பல்வேறு கேள்விகளை மோடி எழுப்பினார்.

அரசு கூட்டங்களைவிட அங்கிருந்த குஜராத் மக்கள் நடத்திய கூட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வேண்டி இருந்தது. எங்களையும் அழைத்து சென்று அந்த கூட்டங்களில் மோடி பேசியதை நினைத்தால் இப்போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

தற்போது தெலங்கானா மாநில பாஜகவின் தலைவராக இருக்கும் கிஷண் ரெட்டி, அந்த மாநில அம்பர்பேட் தொகுதி சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார்.

சிறியவகை பழைய கேமராவில் எடுத்த இருபது படங்கள் அவரிடம் இருந்துள்ளன. இப்போது மோடி அமெரிக்காவுக்கு செல்வதை ஒட்டி அதை எடுத்து பார்த்தபோது படங்கள் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதில் இரண்டை மட்டும் பத்திரமாக எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார் ரெட்டி.

” Travel Back in Time …” !!!…Incredible use of Technology …

http://interactive.guim.co.uk/embed/2014/apr/image-opacity-slider-master/index.html?ww2-dday

PL CLICK THE ABOVE LINK …KINDLY FOLLOW THE STEPS GIVEN BELOW….

Now this is an incredible use of technology—like traveling back in time!

Left click and hold on each photo, and then drag your mouse gently from

left to right on the original photograph and will be become a photo of the
exact same location and view today – drag it back to the left and you are back in 1944!
Scroll down for more of the same.  Just fascinating!   
Source::::  Input from a friend of mine
Natarajan

” நெகிழவைத்த கனடா கொலு… கலசமே கொலுவாக …”

ஓவியம்: வெங்கி

ஓவியம்: வெங்கி

நவராத்திரி வந்துவிட்டாலே கனடாவில் இருக்கும் என் தங்கையின் கொலு அனுபவம்தான் என் நினைவுக்கு வரும். அவள் திருமணமாகி வெளிநாடு போகவேண்டும் என்றதும் உறவினர்களையும் நண்பர்களையும் பிரிந்து செல்ல எவ்வளவு வருத்தப்பட்டாளோ அதே அளவு கொலுவை மிஸ் செய்வதற்கும் வருந்தினாள்.

அவளின் கவலையை உணர்ந்து வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல ஏற்றாற்போல எடை குறைவான பொம்மைகளை வாங்கித் தந்தோம். அவற்றுடன் வெளிநாட்டுப் பொம்மைகளையும் கலந்து புதுவிதமாகக் கொலு வைக்கலாம் என்ற ஆலோசனையைக் கேட்டு அவள் ஓரளவு நிம்மதியடைந்தாள். அரைமனதோடு சாஸ்திரத்துக்கு இரண்டு பொம்மைகளை எடுத்துச் சென்றாள்.

அவள் அங்கே போன உடனேயே நவராத்திரி வந்துவிட்டது. ஒரு சிறிய பலகையில் எடுத்துப்போன இரண்டு பொம்மைகள், கலசம் அவற்றுடன் அங்கே வாங்கிய பொம்மைகளை சேர்த்து கொலு வைத்து விட்டாள். சிறிய கொலு என்பதால் எப்படி எல்லோரையும் அழைப்பது என்று அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

கோயிலில் கொலு வைத்திருக்கிறார்கள் என்றதும் அங்கே போனாள். அங்கே இவளுக்கு அறிமுகமே இல்லாத பெண்மணி தன் வீட்டு கொலுவுக்கு வரும்படி அழைத்திருக்கிறாள். இவளை மட்டுமல்லாமல் கோயிலில் நிறையப் பேரை அழைத்திருக்கிறாள். கிட்டத்தட்ட 20 தம்பதிகள் காரில் அவள் வீட்டுக்குப் போனார்கள். எல்லோருக்கும் ஜூஸ், வடை, கேசரி கொடுத்து உபசரித்திருக்கிறாள். ஏதோ இந்தியர்களுக்கான கெட் டுகெதர் போல எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டு சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

கடைசியில் அனைவருக்கும் மிகவும் பிரியத்துடன் தாம்பூலம்,ரோஜாப்பூக்கள் கொடுத்திருக்கிறாள் அந்தப் பெண். அப்போதுதான் பேச்சு சுவாரஸ்யத்தில் கொலு பார்க்க மறந்துவிட்டோமே என்று ஞாபகம் வந்து, “கொலு எங்கே?”என்று கேட்டிருக்கிறார்கள். “ஓ , நீங்கள் பார்க்கவில்லையா? இதுதான் கொலு” என்று பிளாஸ்டிக் மாவிலையும் தேங்காயும் வைத்து சந்தனம் குங்குமம் வைத்த ஒரு கலசத்தைக் காட்டினாளாம் அந்தப் பெண். என் தங்கைக்கோ வியப்பு, அதிர்ச்சி, சிரிப்பு எல்லாம் கலந்த உணர்வு. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறாள்.

பின்னால் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அந்தத் தோழியின் உயர்ந்த குணம் புரிந்தது. அவள் கலசத்தையே கொலுவாக, அம்பாள் வடிவமாக, பக்திபூர் வமாகப் பார்த்திருக்கிறாள். எல்லோரையும் அம்பாள் வடிவமாகவே நினைத்து, தெரியாதவர்களைக்கூட அன்போடு தாம்பூலத்துக்கு அழைத்திருக்கிறாள். சிரமப்பட்டுத் தனி ஆளாக உணவு தயாரித்து எல்லோருக்கும் சிநேக உணர்வுடன் கொடுத்திருக்கிறாள். பலருக்கிடையே நட்பு ஏற்பட உதவும் பாலமாக இருந்திருக்கிறாள். அவள் வீட்டு கொலுவுக்குத் தனி மகிமை இருப்பது புரிந்தது. அன்றிலிருந்து கொலுவின் அளவு பற்றி என் தங்கை கவலைப்படுவதே இல்லை. தன்னால் முடிந்த அளவு எல்லோரையும் அழைத்து தாம்பூலம் கொடுக்கிறாள்.

– ரம்யா சங்கரநாராயணன், பெங்களூர்.

Source::::The Hindu …Tamil

ஆட்சியாளர்கள் …. காமராஜர் மட்டும் ஒரு விதிவிலக்கு …

ஆட்சியாளர்கள் எப்போதுமே அப்படித்தான்!

அ.கா. பெருமாள்  in The Hindu …Tamil

காமராஜர் போன்ற வெகு சில ஆட்சியாளர்களை மட்டுமே மக்கள் எளிதில் சந்திக்க முடிந்தது.

தெக்கன் திருவிதாங்கூர் என்னும் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த புதிது. காமராஜர்தான் அப்போது தமிழக முதலமைச்சர். புதிய மாவட்டத்தின் மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகள் கேட்டார். காமராஜரை யார் வேண்டுமானாலும் நேரடியாகச் சந்திக்கலாம் என்ற செய்திகூட நாளிதழில் வந்தது. திருவிதாங்கூர் அரசருக்குக் கீழே பணியாற்றிய அதிகாரிகளுக்கு இது புதிய அனுபவம்.

காமராஜர் கரடுமுரடான சாலைகளில் செல்லத் தோதான வருவாய்த் துறை ஜீப்பில் வந்தார். முக்கிய சாலையில் ஜீப்பை நிறுத்திவிட்டு நடந்துவந்த சமயம்தான் எங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடத்தைப் பார்த்தார். 19-ம் நூற்றாண்டுக் கட்டிடம். ஆசிரியர்கள் முன்னே நிற்க, மாணவர்கள் கூடி நின்றோம். திட்டமிடப்படாத வரவேற்பு. யாரும் தடுக்கவில்லை. போலீஸ் கெடுபிடி இல்லை.

எங்களைப் பார்த்ததும் முதலமைச்சர் நின்றார். அவருடன் மிகக் குறைவான போலீஸார்; இரண்டோ மூன்றோ அதிகாரிகள்; அமைச்சர் கக்கனும் மாவட்ட ஆட்சியர் அம்பா சங்கரும் இருந்தனர். யாரும் யாரையும் விலக்கவில்லை. போலீஸ் அதிகாரிகூட அவருக்குப் பாதுகாப்பாக முன்னே வரவில்லை. மூத்த ஆசிரியர் கதர் நூல் மாலையைக் காமராஜர் கழுத்தில் போட்டார். அவர் அதற்கு வாகாகத் தலையைத் தாழ்த்திக்கொடுத்தார். ஆஜானு பாகுவான உருவம்; முழங்கால் வரை எட்டும் தொளதொள சட்டை; சாதாரண செருப்பு; பாதங்கள் தெரியும்படி கட்டப்பட்ட வேட்டி.

நல்லாப் படிக்கணும்

காமராஜர் எங்கள் அருகில் வந்தார். சுற்றிலும் பார்த்தார். நாங்கள் இரண்டு கைகளைக் கூப்பியபடி நின்றோம். கூட்டத்தில் கிழிந்த சட்டையுடன் கூடிய மாணவர்கள் நாலைந்து பேர் இருந்தனர். காமராஜர் ஒருவன் தலையைத் தடவிவிட்டார். “என்ன படிக்கிறே” என்றார். அவன் “மூணாப்பு” என்றான்.

எங்களைப் பார்த்துப் பொதுவாகச் சொன்னார்: “நல்லாப் படிக்கணும்; அப்பா, அம்மா சொன்னா கேக்கணும்; நல்ல பேரு வாங்கணும்; உழைச்சு முன்னுக்கு வரணும்.” ஒரு ஆசிரியர், காமராஜர் முன்னே தயங்கித் தயங்கி வந்து நின்றார். “என்ன விஷயம்?” என்று காமராஜர் கேட்டார். “இப்போ 30 குழந்தைகளுக்கு உச்ச நேரம் (நண்பகல்) கஞ்சி ஊத்துறோம். அது பத்தல்ல. 50 பேருக்குக் கஞ்சி ஊத்த திருமனசு தயவு பண்ணணும்” என்றார். பழக்கதோஷம்; ஆசிரியர் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியிலும் இருந்தவர்; திவான் பேஷ்காரிடம் விண்ணப்பம் செய்யும் பாணியில் பேசினார். காம ராஜருக்கு அவரது பேச்சு முழுவதும் புரியவில்லை. என்றாலும் ஆசிரியருடன் பேசினார்; பக்கத்தில் நின்ற அதிகாரிகளுடன் பேசினார்.

இந்த நிகழ்ச்சி நடந்து 30 ஆண்டுகள் கழிந்து வகுப்பில் என் மாணவர்களிடம் அதைப் பற்றிச் சொன்னேன். மாணவர்கள் நம்பவில்லை; மாணவிகள் நமட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள். ஒரு மாணவி “கேட்க நல்லா இருக்கு சார். உண்மையா நடந்ததா?” என்று கேட்டாள். இதுபோன்ற செய்திகள் இன்றைய தலைமுறையினருக்குக் கற்பனைதான்!

ராமாயண காலம்

எல்லாக் காலத்திலும் ஆட்சியாளர்கள் எப்படி இருந்தார்கள். குடிமக்கள் நெருங்கும்படியான சூழ்நிலையில் இருந்தார்களா? இதற்கெல்லாம் சரியான பதிவுகள் இல்லை. ராமாயண ராமனைக் குடிமக்கள் காண அதிகாரிகள் தடையாய் இருந் தார்கள் என்று ஒரு நாட்டார் கதை உண்டு. இந்தக் கதை, பார்வதிக்குப் பரமசிவன் சொல்வது மாதிரி அமைந்தது.

பரமசிவன் சொன்ன கதை

“ராமன், ராவணாதிகளை ஒழித்துவிட்டான்; பட்டாபிஷேகம் நடந்துவிட்டது. இப்போது எப்படி இருக்கிறான்?” என்று பரமசிவனிடம் கேட்டார் பார்வதி. பரமசிவன் கண்களை மூடிக்கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துப் பேசினார். “ராமன் ராமனாக இருக்கிறான். அதிகாரிகள்தான் அவனிடம் குடிமக்களை நெருங்கவிடாமல் தடுக்கிறார்கள். லட்சுமணன் இதைக் கண்டும் காணாமல் இருக்கிறான்” என்று சொல்லிவிட்டு, அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியையும் கூறினார்.

அவரைப் போய்ப் பாரு!

ஒரு சம்சாரி தனது விளைச்சல் நிலத்தில் மேய்ந்த மாட்டை விரட்டினார். அது அந்த வழியாக வந்த வயதான பெண்ணின் மேல் போய் மோத, அவளுக்குக் காயம் ஏற்பட்டது. இதற்காக அரசனிடம் முறையிடப் போனாள். “ராமனை நேரில் சந்திக்க முடியாது, லட்சுமணனிடம் சொல்லு” என்றான் ஒரு காவலன். அவள் லட்சுமணனைக் கண்டு நியாயம் கேட்டாள். லட்சுமணன் “பரந்த சாம்ராஜ்யத்தை ஆட்சிசெய்பவன் இதைக் கவனிக்க முடியுமா? உன் ஊர்த் தலைவனிடம் போய்ச் சொல்” என்றான்.

வசிட்டர் சொன்ன கதை

இந்த நிகழ்ச்சியை வசிட்டர் அறிந்தார். லட்சுமணனை அழைத்தார். அவனது மூதாதையரான ரூபகன் என்ற அரசனின் கதையைச் சொன்னார். ரூபகன் நீதி தவறாமல் ஆட்சி செய்தான். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது: நண்பர்கள் புடைசூழ எப்போதும் சூது விளையாடுவான். அதனால், குடிமக்களைச் சந்திப்பதைத் தவிர்த்தான். ஒருமுறை ரூபகன் தன் தந்தையின் திதியை நடத்தினான். அன்று அரண்மனைத் தொழுவத்திலிருந்து நல்ல கொழுத்த பசு ஒன்றைப் பிராமணர் ஒருவருக்குத் தானம் செய்தான்.

அந்தப் பசு அரசரின் தொழுவத்தில் பிறந்து வளர்ந்தது. அதற்கு வேறு இடம் பிடிக்கவில்லை. பிராமணர் வீட்டில் கயிற்றை அறுத்துக்கொண்டு அரண்மனைத் தொழுவத்துக்குச் வந்துவிட்டது. இதை அறியாத வேலைக்காரர்களும் பசுவைத் தொழுவத்தில் கட்டி வைத்தார்கள். யாரோ தன் பசுவைத் திருடிவிட்டார்கள் என்று நினைத்து, பிராமணர் அரசனிடம் முறையிடப் போனார்; முடிய வில்லை. அரசனின் தம்பியைச் சந்தித்துத் தன் பசு திருடுபோனதைச் சொன்னார். அவன், காவலரை அனுப்பிப் பசுவைத் தேடச் சொல்கிறேன் என்றான்.

சில நாட்கள் கழித்து ரூபகனின் அம்மாவின் திதி. ஏற்கெனவே தானம் கொடுக்கப்பட்டுத் திரும்பி வந்த பசு என்று தெரியாமல், அரண்மனைப் பசுவை அரசன் இன்னொரு பிராமணருக்குத் தானம் கொடுத்தான். பிராமணர் அதை வீட்டுக்குக் கொண்டுசெல்லும்போது ஏற்கெனவே பசுவை இழந்த பிராமணர் தற்செயலாக அங்கே வந்தார். பசு தன்னுடையது என்று கண்டுகொண்டார். புதிய பிராமணரைப் பிடித்து, “திருடனே! வா அரசனிடம்” என்றார். அவரோ “அரசனின் அம்மாவின் திதியில் இந்தப் பசு எனக்குத் தானமாகக் கிடைத்தது. என்னையா திருடன் எனப் பழித்தாய்! உன்னைச் சும்மா விட மாட்டேன்” என்றார்.

காத்திருந்து காத்திருந்து…

சண்டை பெரிதான பிறகு, அரசனை நாடிச் சென்றனர். அரசனைச் சந்திக்க வேண்டும் என்று காவலனிடம் சொன்னார்கள். காவலன் அவர்களைக் காத்திருக்கச் சொன்னான். அவர்கள் காத்திருந்தனர். வேறு சிலரும் அரசனைச் சந்திக்கக் காத்திருந்தனர். அரசன் வரவில்லை. அடுத்த நாளும் சென்றார்கள்; காத்திருந்தனர். இப்படியே பல நாட்கள். பிராமணர்கள் இருவரும் அலுத்துப்போனார்கள். அவர்கள் தங்களுக்குள் சமாதானம் ஆனார்கள். இரண்டாவதாக தானம் பெற்ற பிராமணரே பசுவை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தனர்.

பிராமணர்களின் கோபம் அரசன் பக்கம் திரும்பியது. அரண்மனையைப் பார்த்துப் பிராமணர் இருவரும் “ரூபகனே – குடிமக்களை அலைக்கழிக்கும் நீ அரசனே அல்ல; நீ ஓணானாகச் சிம்மாசனத்தில் அமர்வாய். இது எங்கள் சாபம்” என்றனர். அரசன் உடனே ஓணானாகிவிட்டான். இதை அறியாத காவலர்கள் சிம்மாசனத்திலிருந்து ஓணானை விரட்டிவிட்டார்கள்.

இப்படியாகக் கதைக்குள் கதை என்று சொல்லப்பட்ட இந்தக் கதைகள் சொல்லும் உண்மை இதுதான்: ஆட்சியாளர்கள் எப்போதும் ஒரே மாதிரிதான். இதில், காமராஜர் போன்றவர்கள் அரிதான விதிவிலக்கே!

– அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்,  


‘சடங்கில் கரைந்த கலைகள்’, ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

” ஸ்வாமிதான் உன்னைக் காப்பாத்தி இருக்கார் …” !!!

Post Options
“ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்….
உண்மைதான். ஆனால் “எந்த ஸ்வாமி”?.

Featured Image -- 11217

கார்வேட் நகரில் ஸ்ரீமடம் முகாம்.சென்னையிலிருந்து காரில் வந்த ஒரு குடும்பத்தினர் சாயங்காலமாகத் திரும்புவதற்கு முடிவு செய்திருந்தார்கள்.
எல்லாம் ரெடி. பெரியவாளிடம் உத்தரவு பெற்றுக் கொண்டால்,அடுத்த நிமிஷமே புறப்பட்டு விடலாம். பெரியவா ஒரு வில்வ மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள்.

சபேசன் குடும்பத்தினர் வந்தனம் செய்து பிரசாதத்துக்காக நின்றார்கள்.

அவர்களுக்குப் பிரசாதம் கொடுக்கப்பட்டது.

சபேசன் காரை நோக்கித் திரும்பினார்.

விரல்களால் ஒரு சொடுக்கல்.

சபேசன் திரும்பி வந்தார். ஆவலுடன்.

சற்று தூரத்தில் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது.

பெரியவாள் அதைக் காட்டி,

“இதில் கொஞ்சம் சாக்கில் கட்டி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போ” என்றார்கள்.

எல்லோருக்குமே திகைப்பு. கருங்கல் ஜல்லியை கார்வேட்

நகரிலிருந்து சென்னைக்கு எடுத்துக் கொண்டு போவானேன்?

அந்த ஜல்லியில் அப்படி என்ன சிறப்பு?.

பெரியவாளிடம் விளக்கம் கேட்க முடியாது. எனவே

உத்திரவுப்படி ஒரு சாக்கில் கொஞ்சம் ஜல்லியை மூட்டையாகக் கட்டி கார் டிக்கியில் வைத்துக்கொண்டு புறப்பட்டார் சபேசன்.

மலைப் பாறைகள் நிறைந்த புத்தூர் வழி.

இரவு.நாலைந்து நபர்கள் நடுச்சாலையில் நின்று காரை மறித்தார்கள்.கொள்ளைக்காரர்கள் என்பதில் சந்தேகமில்லை.

எல்லோரையும் காரிலிருந்து இறங்கிச் சொல்லி, உட்புறம் அலசிப் பார்த்தார்கள். ஒரு பெட்டி – பையைக் கூடக் காணோம்.

ஆத்திரத்துடன் டிக்கியை நெம்பித் திறந்து பார்த்தார்கள்.

மூட்டை!

“டேய், இங்கே இருக்குடா!…” கூவினான் ஒருவன்.

மூட்டையை எடுக்க முயன்றான் வேறொருவன்.முடியவில்லை. கனமாக இருந்தது. எல்லோருமாகச் சேர்ந்து மூட்டையைக் கீழே தள்ளிவிட்டு, “போ….போ…” என்று சபேசனை விரட்டினார்கள்.

சபேசன் படு வேகமாகக் காரை செலுத்திக் கொண்டு சென்று, ஒரு கிராமம் வந்ததும் காரை நிறுத்தி மூச்சு விட்டார்.

“பயந்தே போயிட்டேன்!..நகை எல்லாத்தையும் கழட்டுன்னு சொல்லுவாங்களோன்னு நடுங்கிப் போயிட்டேன்!” என்றாள் அவர் மனைவி.

“எல்லோரையும் கட்டிப் போடாமல் விட்டானே!” என்றான் பையன்.

“காரை நொறுக்காமல் விட்டானே!” என்றாள் மகள்.

சபேசன் கார்வேட் நகர் இருந்த திசை நோக்கிக் கும்பிட்டார்.

கனமான சாக்குப் பையில் நிறையப் பணம் இருக்கிறது என்று தப்புக் கணக்குப் போட்ட கொள்ளையர்கள்,

வேறு சாமானியப் பொருள் எதையும் விரும்பாமல் விட்டு விட்டார்கள் என்று அனுமானிக்க முடிந்தது.

இரண்டு நாள் சென்று அவர் மட்டும் தரிசனத்துக்கு வந்து, நடந்த நிகழ்ச்சியைப் பெரியவாளிடம் பரவசத்துடன் விண்ணப்பித்துக் கொண்டார்.

“ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்” என்றார்கள் பெரியவா.

உண்மைதான்.

ஆனால், “எந்த ஸ்வாமி?” என்று சபேசனுக்கு நன்றாக புரிந்திருந்தது. இனிமேல் ஜல்லியைப் பார்க்கிற போது, ‘ஒரு சல்லிக் காசு பெறாது’ என்று நினைக்க மாட்டார்!

Source:::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8006#ixzz3E0NCEVew