Message for the day….” What is the true Devotion …” ?

Devotion has to be continuous and uninterrupted like the flow of oil from one vessel to another. Without love (prema),nothing in this world can be acquired. Only when there is love, does attachment (anuraga) in its turn create the desire to protect and guard. In the path of self-effort based devotion, also called as ‘young-one-of-the-monkey’ path, the child has to rely on its own strength to protect itself — wherever the mother might jump about, the child has to attach itself fast to the mother’s belly and not release its hold, even if pulled apart! So too, the devotee has to stand the tests at the hands of the Lord and hold on to the Lord’s name at all times and under all conditions, tirelessly, without the slightest trace of dislike or disgust, bearing the ridicule and the criticism of the world and conquering the feelings of shame and defeat. This type of devotion was practiced by little child Prahlada.

Sathya Sai Baba

Message for the Day….” God will protect you if you worship him in complete and pure uncontaminated devotion [bhakti] “

The Lord will protect in all ways and at all times those who worship Him in complete and pure uncontaminated devotion(bhakti), just as a mother protects her infants, a cow saves her calf from danger, and the eyelids guard the eyes effortlessly and automatically. When the infant grows up into an adult, the mother won’t pay so much attention to its safety. So too, the Lord doesn’t pay much attention to the wise one (jnani). The devotee who worships any form (saguna bhakta), like an infant of the Lord, has no strength except the strength of the Lord. For the realized soul (jnani), their own strength is enough. Therefore, until one can rely on one’s own strength, one must be an infant in the Lord’s hands, just like a devotee of the Lord’s form. No one can become a devotee of the Formless Supreme (nirguna bhakta) without having been a devotee of the form.

Sathya Sai Baba

Message for the Day……..” Develop Self -confidence and Firm faith in God……”

The Sankranthi festival should be regarded as the day on which one turns one’s vision towards God. Your life may be compared to a stalk of sugarcane. Like the cane, which is hard and has many knots, life is full of difficulties. These difficulties must be overcome to enjoy the bliss of the Divine, just as sugarcane must be crushed and its juice converted into jaggery to enjoy its permanent sweetness. Enduring bliss is got only by overcoming trials and tribulations. Gold cannot be made into an attractive jewel without melting it in a crucible and converting it into a beautiful shape. When I address devotees as Bangaaru (golden one), I consider you very precious! Only by going through the vicissitudes of life with forbearance you become most valuable. Never allow yourselves to be overwhelmed by difficulties. Develop self-confidence and firm faith in God. With unshakeable faith, dedicate yourselves to serve your fellowmen and lead exemplary lives

Sathya Sai Baba

பொங்கல் பிள்ளையார்…….

பொங்கல் என்றாலே உழவுக்கு வந்தனை செய்யும் விதமாக ஆதவனை வணங்குவது, தித்திக்கும் கரும்பைச் சுவைத்து மகிழ்வது இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு சிறப்பான சம்பிரதாயம் ஒன்று இருந்து வருகிறது. அதுதான் பொங்கல் அன்று பிறக்கும் தனிச் சிறப்பு மிக்க பிள்ளையார்.

தைப் பொங்கலிடத் தயாராகும் போது முதலில் வீட்டு வாசலில் கிழக்கு நோக்கி விளக்கு வைத்து, அதன் முன்பு ஒரு பெரிய வாழையிலையை விரித்து, அதில் அனைத்து வகையான காய்கறிகள், கிழங்கு வகைகளை வைத்து, ஒரு டம்பளரில் பொங்கலிடப் போகும் அரிசியையும் வைத்து வணங்குவார்கள். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், விளக்குடன் சேர்த்து மற்ற கடவுளரைக் காட்டிலும், முதன்மைக் கடவுளான பிள்ளையாரையும் அங்கு வைத்திருப்பார்கள். அதுவும் அந்த பிள்ளையார், ஒவ்வொரு இல்லத்தினரும் அவர்கள் கைகளினால், உருவாக்கிய சிறப்புப் பிள்ளையார்கள்.

இதன் முக்கியத்துவம் என்னவென்றால் உலகின் முழுமுதற் கடவுளான கணபதிக்கும் சேர்த்து வந்தனை செய்வதாக அர்த்தம். சூரிய பகவான் முன்பு பொங்கலிட்டு, முதலில் பிள்ளையாருக்கும் சேர்த்து படைக்கப்படுகிறது என்பது பொருள்.

பொதுவாக மூன்று வகைப் பிள்ளையார்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஒன்று, சாணத்தால் ஆன பிள்ளையார். இரண்டாவது, மஞ்சளால் ஆன பிள்ளையார். மூன்றாவது, சந்தனத்தால் ஆன பிள்ளையார். இந்த மூன்று திவ்யத்துவம் பொருந்திய பொருட்களைப் பயன்படுத்தியே, பிள்ளையார் உருவாக்கப்படுகிறார்.

சாணப் பிள்ளையார்

சாணம் ஒரு கிருமி நாசினி என்பது அனைவரும் அறிந்ததே. தூய்மைப்படுத்துவதே இதன் சிறப்பு. பொங்கல் அன்று, அனைவரும் மனதில் அசுத்த எண்ணங்களைத் துறந்து, தூய உள்ளத்தோடு ஒன்று சேர்த்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக சாணத்தால் ஆன பிள்ளையார் செய்து வைக்கப்படுகிறது.

மஞ்சள் பிள்ளையார்

மஞ்சள் இல்லாத ஒரு மங்கள நிகழ்வு என்பதே கிடையாது. பல்வேறு மருத்துவ குணங்கள் முதல் பலவிதமான மங்காத புகழ்களைத் தன்னுள்ளே கொண்டது மஞ்சள். இந்த மங்கள நாளில், அனைவரும் சகல ஆரோக்கியத்தையும் பெற்று, புகழோடு வாழ்வதற்காகவே, மஞ்சளால் ஆன பிள்ளையார் செய்து வணங்கப்படுகிறது.

சந்தனப் பிள்ளையார்

எந்த நிலையிலும் மாறாத தன்மையுடன், நல்ல மணம் பரப்பும் குணமுடையது சந்தனம். அதுபோல, மனிதன் எந்தச் சூழ்நிலை வந்தாலும் தன்னிலை மாறாது, நன்னெறிகளை செய்து வாழ வேண்டும் என்பதற்காகவே சந்தனத்தால் ஆன பிள்ளையார் செய்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு மூன்று வகைப் பிள்ளையார்களை உருவாக்கி, அதற்குக் குங்குமப் பொட்டு வைத்து, பிள்ளையாருக்கே உரித்தான அருகம்புல்லை அணிவித்து வணங்க வேண்டும், இதன் மூலம் சகல செல்வங்களும் வந்துசேரும் என்பதே ஐதீகம். இயற்கையை போற்றும் இந்த நன்னாளில், சிறப்புமிக்க இந்த இயற்கைப் பொருட்களைக் கொண்டு கடவுளைப் படைத்து வணங்கி, அனைத்து வளங்களையும் பெற வேண்டும் என்பதற்காக, நம் முன்னோர்கள் வைத்த இந்த சம்பிரதாயத்தை நாமும் போற்றிப் பின்பற்றுவோம்.

source…..கா. ராஜசேகர் in http://www.tamil.thehindu.com

Natarajan

தெய்வத்தின் குரல் – முருகன்: பதவி பெறவே பிறவி….

ஜனனத்தை எடுத்துக் கொண்டால், ‘குமார ஸம்பவம்’ என்பதாக முருகன் ஜனனம் எடுத்ததற்கு அலாதிப் பெருமை இருக்கிறது.

வால்மீகி ராமாயணத்தில் ராம லக்ஷ்மணர்களுக்கு விசுவாமித்ரர் அந்தக் கதையைச் சொல்லி முடிக்கும்போது ‘குமார ஸம்பவம்’ என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார். ஆதி கவியின் அந்த வாக்கை எடுத்துக் கொண்டுதான் மகாகவி காளிதாசரும் ‘குமார ஸம்பவம்’ என்றே தலைப்புக் கொடுத்து மகாகாவ்யம் எழுதினார்.

அந்தச் சம்பவத்திலே அதாவது ஜனனத்திலே அப்படி என்ன விசேஷம்?

மற்றவர்கள் பிறந்து, வளர்ந்து, கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்ற அப்புறம் பதவிக்கு வருவார்கள். ஆனால் மகா பெரிய பதவி, தேவர்களுடைய சேனைகளுக்கெல்லாம் அதிபதியாக இருக்கும் பதவி, இந்தக் குமாரர் சம்பவிக்க வேண்டுமென்று இவருக்காகவே காத்துக்கொண்டிருந்தது.

ஜன்மிக்கிறபோதே தேவர்களின் சேனாதிபதி. அசுரர்களிடம் அடி உதை பட்டுச் சொல்ல முடியாத கஷ்டத்திலிருந்த தேவர்கள் இவர் சம்பவித்ததால்தான் தங்களுக்கு விடிவு, விமோசனம் என்று காத்துக்கொண்டு, எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நிலையில் ஏற்பட்டது அவருடைய ‘ஸம்பவம்’, அதாவது தோற்றம்.

சிவனுக்கு சமானமான ஒருத்தர்தான் தங்களை வதைக்க முடியும் என்று சூரபத்மாசுரன், தாரகாசுரன் ஆகியவர்கள் அந்த சிவனிடமே வரம் வாங்கி வைத்துக்கொண்டுவிட்டார்கள். சிவனுக்கு சமானம் வேறே யார்? அவரேதான் அவருக்கு சமம். வரம் கொடுத்த அவரே வரம் வாங்கிக்கொண்டவர்களை வதம் பண்ணுவது நியாயமாகாது. அதனால்தான் இப்படி சாமர்த்தியமாக வரம் கேட்டு வாங்கிக்கொண்டு, அப்புறம் சத்ரு பயம் என்பதே இல்லாமல் அந்த அசுரர்கள் தேவர்களை இம்சித்துவந்தார்கள்.

ஆலோசித்துப் பார்த்த பிறகு இதற்கு தேவர்கள் வழி கண்டு பிடித்தார்கள். ‘ஆத்மாவை புத்ர நாமாஸி’ என்ற ச்ருதி வாக்கியப்படி ஒருத்தனுக்கு சமதையாக இருப்பது அவனுடைய புத்ரன். இவன் வீர்யத்திலே அவன் உண்டாவதால் இரண்டு பேரும் ஒன்று என்கிறது சாஸ்திரம்.

ஆகையால் தங்களையெல்லாம் அசுரர்களிடமிருந்து ரட்சிப்பதற்காக தங்களுடைய நாயகனாக, சேனா நாயகனாகப் பரமேச்வரன் ஒரு புத்ரனை உண்டு பண்ணித் தந்துவிட்டால் வழி பிறந்துவிடும், விமோசனம் கிடைத்துவிடும் என்று தேவர்கள் முடிவு பண்ணி, அதற்காகத் தபசிருந்தார்கள். சுவாமியும் தக்ஷிணாமூர்த்தியாகத் தபசிருந்த சமயம் அது. அவருக்குப் பணிவிடை செய்ய வந்த அம்பாள் பார்வதியும் தபசிருந்தாள். இப்படி ஒரே தபோமயமான புண்ய background -ல் குமார ஸம்பவம் ஏற்பட்டது. அதுதான் அதன் பெருமை.

குழந்தையாகப் பிறந்தோமே என்பதற்காக ஆறு நாள், ஆறே நாள்தான், குமாரசுவாமி பால லீலைகள் பண்ணினார். அவருக்கு எல்லாம் ஆறு. முகம் ஆறு. அவர் மந்திரத்தில் அக்ஷரம் ஆறு. அவர் பிறந்தது ஆறாம் திதியான ஷஷ்டி. அவருக்குப் பால் கொடுத்தது கிருத்திகா தேவிகள் என்று ஆறு பேர். வேடிக்கையாகச் சொல்வதுண்டு, அவர் உத்பவித்த கங்கையும் ‘ஆறு’ என்று. ‘குமாரர்’ என்றே குழந்தை பேர் வைத்துக்கொண்டிருந்தாலும் அவர் குழந்தை விளையாட்டு ஆறே நாள்தான் செய்தார். ஆறு நாளிலேயே அபரிமித லீலைகள் பண்ணினார். அப்புறம், உடனேயே, தேவ சேனாதிபத்யம் தாங்கி, சூராதி அசுரர்களை சம்காரம் பண்ணி தேவர்களையும், சர்வ லோகத்தையுமே ரக்ஷித்துவிட்டார்.

மனு, கினு போட்டு ‘அப்பாயின்ட்மென்ட்’ என்றில்லாமல் சகல தேவ சமூகத்திற்கும் ரக்ஷகனாக, ‘கமான்டர்-இன்-சீஃப்’ஆகப் பெரிய்ய்ய்ய அப்பாயின்ட்மென்ட்டோடேயே அவர் பிறந்ததுதான் குமார சம்பவத்தின் விசேஷம்.

“சரி, ஸ்வாமிகளே, இதிலே விக்நேச்வரருக்கு என்ன ‘பார்ட்?” என்றால், சிவனுக்கு சமானமானவர் சிவசுதானே என்றால், விக்நேச்வரர் சிவசுதர்தானே?அப்படியிருக்க, குமாரஸ்வாமி உண்டாகணுமென்று தேவர்கள் தபஸ் பண்ணினார்கள் என்றால் அப்போது விக்நேச்வரர் தோன்றியிருக்கவில்லையா? சுப்ரமண்யருக்கு அப்புறந்தான் அவர் தோன்றினாரா என்றால், இல்லை. இதை ‘அன்டர்லைன்’பண்ணிக் காட்டத்தான் ‘ஸ்கந்த பூர்வஜர்’ என்று அவருக்குப் பேர் சொல்லி இருக்கிறது.

‘சரி, அவர் அப்போதே இருந்தாரென்றால், அவரிருக்கும்போது இன்னொரு சிவசுதருக்காக தேவர்கள் தபஸ் செய்வானேன்? சுதராயிருந்தும் அவர் அப்பாவுக்கு சமானமாயில்லாதவர் என்று அர்த்தமா?’

அப்படியில்லை. அவர் அப்பாவுக்கு சமதை யானவர்தான். த்ரிபுர சம்ஹாரத்தின்போது அப்பாவும் தம்மைப் பூஜை பண்ணின பிறகுதான் காரியசித்தி பெற முடியும் என்று காட்டியிருக்கிறாரே.

பின்னே ஏன் இன்னொரு சிவசுதர் சம்பவிக்க வேண்டுமென்று தேவர்கள் நினைத்தார்கள்? சூரபத்மா கேட்டிருந்த வரத்தின் ஒரு நிபந்தனைதான் காரணம். தாங்கள் வரம் கேட்கிற காலத்தில் இருக்கிற எவருமே தங்களை வதம் பண்ண முடியாதபடிதான் அசுரர்கள் சாமர்த்தியமாக நிபந்தனை போடுவார்கள். அப்படித்தான் இவனும் பண்ணினான். தன்னைக் கொல்லக் கூடிய சிவஸத்ருசன் சிவனுக்கொப்பானவன், அம்பாள் சம்பந்தமில்லாமலே பிறந்தவனாயிருக்கணும் என்று அவன் கண்டிஷன் போட்டிருந்தான். சர்வ சக்தரான பிள்ளையார் தன்னை வதம் பண்ண முடியாதபடி debar பண்ணிவிட வேண்டுமென்றே இப்படி சாமர்த்தியமாகக் கேட்டிருந்தான்.

அம்பாள் சம்பந்தமில்லாமல் தன்னுடைய நேத்ரங்களிலிருந்து வெளியேவிட்ட அக்னிப் பொறிகளிலிருந்தே குமாரஸ்வாமியை உண்டு பண்ணினார். சுப்ரமண்யம் என்ற திவ்யமூர்த்தி கிடைத்தது.

பிள்ளையாருக்குக் குமார ஸம்பவத்தில் நேராகப் பங்கு இல்லாவிட்டாலும், இவர் அசுர சம்ஹாரம் செய்யவில்லை என்பதால்தான் அது ஏற்படவே செய்தது என்பதால் ‘நெகடிவ்’ சம்பந்தமிருக்கிறது. வலுவான நெகடிவ் சம்பந்தம்.

Source……..www.tamil.thehindu.com
natarajan

Message for the Day….” As Vivekananda said, you should have nerves of steel and muscles of iron. You must brim in hope and joy as your unshakable resolution, not display despair and dejection.”

The greatest disease is the absence of peace. When the mind is peaceful, your body will be healthy. So everyone who craves for good health must pay attention to their emotions, feelings, and motives that animates them. Just as you wash clothes, you must wash your mind free from dirt every day. To cleanse your mind you should mix in good company and avoid dirt elements like falsehood, injustice, indiscipline, cruelty, hate, etc. Truth, righteousness, peace, love – these form the clean elements. If you inhale the pure air of clean elements, your mind will be free from evil bacilli and you will be mentally sturdy and physically strong. As Vivekananda said, you should have nerves of steel and muscles of iron. You must brim in hope and joy as your unshakable resolution, not display despair and dejection.

Sathya Sai Baba

தை பிறந்தால் வழி பிறக்கும்….!!!

பொங்கல் திருநாளை, மகர சங்கராந்தியன்று கொண்டாடுகின்றனர். காரணம், அன்று தான், மகர ராசியில் நுழைகிறான் சூரியன். சங்கராந்தியை, சங்+கராந்தி என, பிரித்து பொருள் காண வேண்டும். ‘சங்’ என்றால், நல்ல முறை; ‘கிராந்தி’ என்றால், மாறுதல்! கிராந்தி என்ற சொல்லே, கராந்தி என மருவியுள்ளது. ‘சங்கராந்தி’ என்ற சொல்லுக்கு, நல்ல முறையிலான மாற்றம் என்று பொருள்.
பொதுவாக, தை மாதம் முதல் தேதியில், மகர சங்கராந்தி வரும். இந்நாளில், வடதிசை பயணத்தை துவக்குகிறது சூரியன். வடக்கு திசையை, ‘குபேர திசை’ என்பர். இதனால் தான், தை முதல், ஆனி வரையுள்ள ஆறு மாதங்களை சுப மாதங்களாக கருதி, திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் செய்கிறோம்.
ஒருசமயம், குந்திபோஜன் என்ற மன்னனின் அரண்மனைக்கு வந்தார் துர்வாச முனிவர். அவர், அங்கு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். அவருக்கு பணிவிடை செய்ய, தன் மகள் குந்தியை அனுப்பி வைத்தான் குந்திபோஜன்.
முனிவருக்கு முறையாக பணிவிடைகளை செய்து, அவரது ஆசியைப் பெற்றாள் குந்தி. முக்காலமும் உணர்ந்த முனிவரான துர்வாசர், வருங்காலத்தில் குந்தியின் கணவன் பாண்டுவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதை, தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். அதனால், மகப்பேறு அளிக்கும், ‘புத்திர லாபம்’ எனும் மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
அந்த மந்திரத்தின் தன்மையை சோதித்துப் பார்க்க விரும்பிய குந்தி, சூரிய பகவானை மனதில் எண்ணி, மந்திரத்தை ஜெபித்தாள். அடுத்த நிமிடம் அவள் முன் தோன்றிய சூரிய பகவான், தன் அம்சமாக ஆண் குழந்தையை, அவளுக்கு அளித்தார். அப்பிள்ளையே கொடை வள்ளல் என்று போற்றப்பட்ட கர்ணன்!
குழந்தை இல்லாத தம்பதியர், இப்பொங்கல் நாளிலிருந்து அடுத்த பொங்கல் வரை தொடர்ந்து சூரியோதய வேளையில் சூரிய வழிபாடு செய்தால், குழந்தை பிறக்க வாய்ப்புண்டு; இதற்காக விரத நியமங்கள் எதுவும் தேவையில்லை.
சூரியனுக்குரிய வாகனம் குதிரை; அதற்கு, ‘சப்தா’ என்று பெயர். ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன. மாதம் ஒருமுறை ராசி விட்டு ராசி மாறி சஞ்சாரம் செய்வது சூரியனின் தொழில். இதனாலேயே இவர், குதிரையை வாகனமாகக் கொண்டுள்ளார்.
சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நாளே, தமிழ் மாத பிறப்பாக உள்ளது.
உலகிலுள்ள உயிர்களுக்கு உணவளிக்கும் கடமை சூரியனிடமே உள்ளது. இதனால் தான், உழவர்கள் அறுவடை முடிந்ததும் கிடைக்கும் முதல் நெல்லை, குத்திய பச்சரிசியால் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து நன்றி தெரிவிக்கின்றனர்.
இந்த தை மாதத்தில், சூரிய பகவான் நம் அனைவருக்கும் நல்வழி காட்டட்டும்!

Source……..

தி.செல்லப்பா  in http://www.dinamalar.com

Natarajan

 

Message for the Day….” Understand What is Culture …”

Many do not invest time to understand the sacredness and value of their culture. ‘Culture’ means that which sanctifies the world, which enhances the greatness and glory of a country, and which helps to raise the individual and society to a higher level of existence. The observance of morality in daily life, divinisation of all actions and thoughts related to life, and adherence to ideals – all these together constitute culture. Culture contributes to the refinement of life. The process of refinement or transformation is essential for improving the utility of any object. For instance, paddy has to be milled and the husk has to be removed before the rice is fit for cooking. This is the process known as Samskriti or transformation. This means getting rid of the unwanted elements and securing the desirable elements. With regards to people, Samskriti (culture) means getting rid of bad qualities and cultivating virtues. A cultured person is one who has good thoughts and good conduct.

Sathya Sai Baba

ஜனவரி 8 1994….பெரியவா மஹா சமாதி அடைந்த நாள் …

1994 ஜனவரி 8 ஆம் தேதி ஐயன் மஹா சமாதி அடைந்த பின், வெளி வந்த ஆனந்த விகடனில், அப்போது தொடராக வந்து கொண்டிருந்த ‘அன்பே அருளே’ கட்டுரையின் 8 ஆவது அத்தியாயம். ஸ்ரீ பரணீதரன் மாமா அவர்கள் கைவண்ணம்…

சாக்கியர் கூத்தை பற்றி தொடர்வதற்குள் ஒரு பிரளய கால ஊழிக்கூத்தே நடந்து முடிந்து விட்டது.

நூற்றாண்டு பிறந்த தின வைபவமாக கடந்த மே மாதம் கனகாபிஷேக காட்சியருளி, கோடிக்கணக்கான பக்தர்களின் நெஞ்சங்களை குளிர்வித்த பெரியவா, ஒரே நொடியில் தமது சரீர உடையை உதறிவிட்டு நம் கண்ணிலிருந்து மறைந்து விட்டார்.

1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி – சனிக்கிழமை பிற்பகல் 2.58 மணிக்கு துவாதசியன்று பெரியவா மகா சமாதி அடைந்து விட்ட செய்தி ஊரெங்கும், நகரங்கள் என்றும், கிராமங்கள் தோறும், நாடு முழுவதும், உலகம் பூராவும், எட்டி விடுகிறது. கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்கள் பதறி துடித்தன. கண்ணீர் பொங்கி பொங்கி பெருகியது. பாசத்தை வளர்த்து கொண்டு விட்ட பக்தர்கள் குமுறி குமுறி அழுதார்கள்.

‘பெரியவா என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டாளே…’

‘திடீர்ன்னு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரே…’

‘இனிமே பெரியவாளை தரிசனம் பண்ண முடியாதே..அந்த கருணை வடிவத்தை காண முடியாதே…அன்பு சிரிப்பை பார்க்க முடியாதே… அமுத பேச்சை கேட்க முடியாதே…’

அப்பா அம்மா போனப்ப ஆறுதலுக்கு, பெரியவா கிட்டே ஓடி வந்தேன். இப்ப பெரியவாளே போயிட்டாளே யாருகிட்டே போவேன்?

‘பெரியவாளுக்கு முன்னாலே நான் போயிடணும் ன்னு பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தேன். என்னாலே யாருக்கு என்ன பிரயோஜனம்?

பெரியவா இருந்தா உலகத்துக்கே க்ஷேமமாச்சே…’

‘நான் கொடுத்து வெச்சவன் சார், பெரியவா மௌனவிரதம் ஏற்பதற்கு முன்னே ஒரு நாள் தரிசனத்துக்கு போயி இருந்தேன். நிறைய பேசினார் அமோகமா அனுக்கிரகம் பண்ணினா…இப்படியே பேசாம ரொம்ப நாள் உக்காந்திருப்பார் ன்னு நெனைச்சனே… மோசம் போயிட்டேனே…’

‘பெரியவாளை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாதே..நாற்பது வருஷமா பெரியவா கூட இருந்து தொண்டு பண்ணினேன்…எவ்வளவு பேசி இருக்கா…ஒரு தரம் என்னை கோவிச்சிண்டுட்டா…ஏண்டா, உன்னை ரொம்ப கோவிச்சிண்டுட்டேனா? வருத்தமா இருந்ததா ன்னு அடுத்த நிமிஷமே குழந்தை மாதிரி விசாரிச்சாளே…எப்பு கோவிச்சிக்க இப்ப பெரியவா இல்லியே…’

‘பெரிய எசமான் உள்ளே படுத்துண்டு இருக்காங்க ன்னு ஒரு தைரியம் இருந்துதுங்க. எட்டி பார்த்தா அவங்க இருக்க மாட்டாங்களே…’

‘தெய்வம் என்னை தனியா விட்டுட்டு போயிடுச்சுங்க…உலகமே இருளோன்னு இருக்குதே..’

இப்படி பல்வேறு தரப்பட்ட பக்தர்கள் கதறி கதறி தீர்த்துவிட்டனர். தன் தாய், தந்தை, குழந்தை, நெருங்கிய உறவினர் இவர்களை இழந்து விட்டவர்கள் போல் என்னிடம் தேம்பி தேம்பி அழுதனர். என் சொந்த துயரத்தை உள்ளடக்கி பொங்கிய கண்ணீரை தேக்கி நிறுத்தி, அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றிக்கொண்டு இருந்தேன்.

என்னால் தேற்ற முடியாமல் போனது அந்த ஆறு வயது சிறுமியைத்தான்.

‘எனக்கு மூணு வயசு இருக்கறப்போ பெரியவா கல்கண்டு கொடுத்தா. அதுக்கப்பறம் பெரியவாளை நான் பார்க்கவே இல்லை. அழைச்சிண்டு போ ன்னு அப்பா கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அழைச்சிண்டு போகலே. இப்போ சாமி கிட்டே போயிட்டாரே.நான் இனிமே பெரியவாளை எப்படி பார்க்கிறது?’ என்று அந்த சிறுமி கண்கலங்கிய போது, எப்படி தேற்றுவது என்று கலங்கி போனேன் நான்.

ஜனவரி முதல் தேதியன்று பத்து நிமிடங்கள் மட்டுமே பெரியவா தரிசனம் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு பொது தரிசனமே இல்லை. உடல்நிலை சரியில்லை. வைத்தியர்கள் அருகிலேயே இருந்து தேவையான சிகிச்சைகள் அளித்து கொண்டு இருந்தார்கள்.

8-ஆம் தேதி சனிக்கிழமை அன்று உடல் நிலை தேறியது. ஈச்சங்குடியில் வாங்கியுள்ள பெரியவாளின் பூர்வாச்ரம தாயாரின் இல்லத்தில் வைப்பதற்காக தயாரான அப்பா அம்மா படங்கள் அவரிடம் காட்டப்பட்டது. அதை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தார்.

பாலுவிடம், ‘நீ கலவை பார்த்திருக்கியோ அங்கே போயிருக்கியோ?’ என்று கேட்டிருக்கிறார்.

எதற்கு திடீர் என்று கலவையை நினைத்துக்கொண்டாரோ?

யாரோ ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். ‘சௌக்கியமா இருக்கேளா?’ என்று உரத்த குரலில் கேட்டிருக்கிறார்.

‘பெரியவாளோட பழைய குரல் மாதிரி இருந்தது. எங்களுக்கெல்லாம் ஆச்சிரியமாக போய்விட்டது…’ என்றார் திருக்காளாவூர் ராமமூர்த்தி.

‘பிரும்ம ஸ்ரீ சாஸ்த்ரிகள்’ என்று பெரியவா பெயரிட்ட வேதபுரியை பார்த்து ‘கையில் என்ன?’ என்று கேட்டாராம். ‘பெரியவாளோட மரக்குவளை…அலம்ப எடுத்துண்டு போறேன்…’ என்று பதில் கூறி விட்டு போயிருக்கிறார்.

பெரியவா சாதாரணமாக இருப்பதை அறிந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிக்ஷையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். பிறகு படுக்க வைத்து இருக்கிறார்கள். அரை நொடியில்…அனாயாசமாக அப்போது மணி 2.58…

அல்லும் பகலும் ஒவ்வொரு கணமும் கண்ணிமை போல் பாதுகாத்து வந்த திவ்ய சரீரத்தை பார்த்து கதறி தீர்த்து விட்டார்கள் அந்த புண்ணியசாலிகள். மஹா சுவாமிகளுக்கு கைங்கர்யம் செய்தவர்கள் அத்தனை பெரும் பாக்கியசாலிகள். யார் பெயராவது விட்டு போய் விடுமோ என்பதால் அவர்களது பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.

அன்று மதியம் இரண்டரை மணி அளவில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பால சுவாமிகளுடன் தாம்பரம் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று வர, பெரியவாளிடம் உத்தரவு பெற்று சென்றதை கண் கலங்கியவாறு கூறினார். சென்னைக்கு செய்தி சென்று, தாம்பரத்தை அடைவதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டு, இரு சுவாமிகளும் மாலை ஐந்து மணியளவில் ஸ்ரீ மடத்துக்கு வந்திருக்கிறார்கள்.

துறவியேனும் நாற்பது ஆண்டு கால தொடர்பின் பின்னணியும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நினைவில் அலைமோத ஸ்ரீ ஜெயேந்திரர் நெஞ்சம் குமுறி கண்ணீர் வடித்ததில் வியப்பென்ன? ஒப்புயர்வற்ற குருவின் உபதேசம் பெற்றதற்கும், பிரம்ம ஞானியிடம் பாடம் பயின்றதற்கும், மகானிடம் அறிவுரை கேட்டதற்கும் முற்பிறவியின் நற்பேறு அன்றோ காரணம் என்ற நன்றி கண்ணீர் அல்லவா அது!

அத்தருணம் உள்ளத்தில் எழுந்த சிந்தனைகள் எல்லாம் கூற முடியாமல் துயரமே உருவாக சோகமே வடிவாக அமர்ந்திருந்தாலும் – மறுநாள் நடக்க வேண்டிய சடங்குகளில் தீவிர கவனம் செலுத்தி, பக்தர்களிடம் ஆணைகள் பிறப்பித்துக்கொண்டு இருந்தார்.

பால சுவாமிகள் அங்கும் இங்கும் எங்கும் காணப்பட்டார். ஒரு கணம் தரிசித்து ஆறுதல் பெற காத்திருக்கும் பக்தர்களை சந்தித்தவாறே, தேவையான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தார்.

என்னை கண்டதும் தனியே அழைத்து சென்று, ‘ஏமாந்து போயிட்டோம்…இன்னிக்கு நன்னா தான் இருந்தா. பேசினா, சிரிச்சா, பிக்ஷை பண்ணினா…தைரியமா இருந்தது. தாம்பரம் போயிட்டு வந்துடலாம் ன்னு புறப்பட்டோம்…எதிர்பார்க்காம சேதி வந்தது.’என்று நடந்தவற்றை கூற தொடங்கினார். நடந்து சென்றவாறே ஒருவருக்கு கையசைப்பு, ஒருவரை அருகில் வரசொல்வது, இன்னொருவரை பார்த்து, ‘ஒ, வந்திருக்கேளா?’ என்று கேட்பது. ‘உங்களுக்கு எப்போ தெரியும்?’ என்று பரிவுடன் விசாரிப்பது…’பிருந்தாவன வேலை வேகமா நடந்து கொண்டு இருக்கிறதா?’என்று பார்வையிடுவது… பம்பரமாக சுற்றி சுழன்று கொண்டிருந்தார் பால பெரியவர்.

பக்தர்கள் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது. வேகமாக நகர்ந்த க்யு இரண்டு கிலோ மீட்டர் வரை நீண்டது. வெகு விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவலர்கள் பணி போற்றத்தக்கதாய் இருந்தது.

மேடையில் பெரியவாளின் திருமேனி ஒளிர்ந்து கொண்டு இருந்தது. நான்கு ஆண்டுகளாக நாம் கண்ட தரிசனம். ஒரே ஒரு வித்தியாசம்…எவ்வித அசைவும் இல்லை…மூலவராகிவிட்ட நிலையில், தெய்வீக சாந்நித்யம் நிலவியது. சுற்றிலும் மடத்து சிப்பந்திகள். அவ்வப்போது, இரு சிஷ்ய சுவாமிகளும் வந்து உடனிருந்தார்கள்.

எதிரில் நகர்ந்த க்யூ வில் கும்பிட்டவர்கள், குமுறி அழுதவர்கள், கன்னத்தில் போட்டு கொண்டவர்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள், இஸ்லாமிய பெருமக்கள், கிறிஸ்துவ சகோதர-சகோதரிகள், வெளிநாட்டினர், பல சமயத்தினர், பல மொழியினர் பொது வாழ்வில் பலதுறை சேர்ந்தவர்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், தள்ளாடும் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர்…

ஒரு புறம் ஒலிப்பெருக்கியில் ‘ஜெய ஜெய சங்கர…ஹர ஹர சங்கர…’கோஷம், நாம சங்கீர்த்தனம், பக்தி பாடல்கள், தேவாரம், திருப்புகழ், சகஸ்ர நாம பாராயணம், வேத முழக்கம்…. மேடை நிரம்ப மணம் பரப்பும் மலர் கொத்துக்கள், வாசனை திரவியங்களின் புகை மண்டலம்…தேவலோக சூழ்நிலை…

பன்னிரண்டு மணிக்கு மேல் மகாபிஷேகம் தொடங்கியது. பிரதம சீடர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள், குருவின் திருமேனிக்கு முறைப்படி அபிஷேக, அர்ச்சனைகள் செய்வித்து, தூப தீப கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டது, ஆலயம் ஒன்றில் சிவபூஜை நடைபெற்றது போன்ற உணர்வை தோற்றுவித்தது.

இறுதியாக நான்கு மணியளவில் பிருந்தாவன பிரவேச ஊர்வலம் புறப்பட்டு அருகிலிருந்த மாளிகைக்குள் சென்றது.

வெளியே இருந்தவர்களுக்கு புனித திருமேனியின் கடைசி புண்ணிய தரிசனம் அதுவே

Read more: http://periva.proboards.com/thread/10890/06-01-2016/#ixzz3wZpAMVSV

Source…….www.periva.proboards.com

Natarajan

 

 

 

Message for the Day…”Among Sacrifices [yajnas], I am the Repetition of Name(nama-yajnas)”…Lord Krishna in Gita…

Lord Krishna declared in the Gita, “Among sacrifices(yajnas), I am the repetition of the name (nama-yajna).” For curing grief and earning joy, temples where the name of God can be remembered are very essential. Remembering the name (smarana) grants bliss; there is nothing more fruitful, charming or blissful than this activity! Sage Vyasa wondered, “Having the great yet simple name, on the ever available tongue, and the temple where His enchanting image is installed so that people can sing His glory in an exalted voice… why should people hasten toward the gates of hell?” So too, Saint Tulsidas, who lived constantly in the temple and sang of the joy he tasted, lamented, “Alas! When people give up the name and the temple, and seek peace and joy in other places, I am reminded of the foolishness of those who forsake the rich and tasty fare on their plates and beg with outstretched hands for the remains from other’s plates!”

Sathya Sai Baba