” Why Fear When HE is there …” ?

 

A man had been on a long flight. The first warning of the approaching problems came when the sign on the airplane flashed on: “Fasten your seat belts.” Then, after a while, a calm voice said, “We shall not be serving the beverages at this time as we are expecting a little turbulence. Please be sure your seat belt is fastened.”
 
As he looked around the aircraft, it became obvious that many of the passengers were becoming apprehensive. Later, the voice of the announcer said, “We are so sorry that we are unable to serve the meal at this time. The turbulence is still ahead of us.”
 
And then the storm broke. The ominous cracks of thunder could be heard even above the roar of the engines. Lightening lit up the darkening skies and within moments that great plane was like a cork tossed around on a celestial ocean. One moment the airplane was lifted on terrific currents of air; the next, it dropped as if it were about to crash. The man confessed that he shared the discomfort and fear of those around him.
 
As he looked around the plane, he could see that nearly all the passengers were upset and alarmed. Some were praying. The future seemed ominous and many were wondering if they would make it through the storm. And then, he suddenly saw a girl to whom the storm meant nothing. She had tucked her feet beneath her as she sat on her seat and was reading a book. Everything within her small world was calm and orderly.
 
Sometimes she closed her eyes, then she would read again; then she would straighten her legs, but worry and fear were not in her world. When the plane was being buffeted by the terrible storm, when it lurched this way and that, as it rose and fell with frightening severity, when all the adults were scared half to death, that marvelous child was completely composed and unafraid.
 
The man could hardly believe his eyes. It was not surprising therefore, that when the plane finally reached its destination and all the passengers were hurrying to disembark, he lingered to speak to the girl whom he had watched for such a long time. Having commented about the storm and behavior of the plane, he asked why she had not been afraid. The sweet child replied:
 
“Sir, my Dad is the pilot and he is taking me home.”
 
Dear friends, this is a story, I received through internet. The implicit faith of this little child, set me thinking…. If each one of can have an implicit faith in our Supreme Father, we will have no reason to be afraid of any thing in life…
What do you think? 
Source…Author  unknown… input from a friend of mine
Natarajan

வாரம் ஒரு கவிதை…” பணத்தின் மறு பக்கம் “

 

பணத்தின்  மறுபக்கம் …
…………………….
செல்லாத பணம் இது ..வேண்டாம் இது எனக்கு இனிமேல்!
தன்  மதிப்பு இழந்த பணம் வெற்று  காகிதமானதே ஒரே நாளில் !
நன் மதிப்புடன்  வாழ்ந்த மனிதர் பலர் விதியால் தன் பொருள்
இழந்து அவர் வாழ்வின் மறுபக்கம் காணும்  சோகம்
பார்த்து  மனம் கலங்கியதுண்டு  நான் ! ஒரே ஒரு
வரியால்  தன் மதிப்பை இழக்கும்  வரை பணத்துக்கும்
தெரியாது அதன் மறுபக்கம் என்ன என்று …!
பணத்தின் மறுபக்கம் என்ன என்று  பார்க்கும் மனிதனுக்கு புரிய வேண்டும்
அவன் வாழ்வின்  மதிப்பு  அவன் சேர்க்கும் பணத்தால் அல்ல என்று !
Natarajan
7th Dec 2016

வாரம் ஒரு கவிதை… ” புதையல் ” !

 

புதையல்
……….
கையில் இருக்கும் பொருளின் மதிப்பு தெரியாது நமக்கு
அது மண்ணுக்குள் புதையும் வரை … உறவுகளும்
இதில் அடங்கும் !  அன்பும் ஆதரவும்  தேடும்
முதியோரை உனக்கு கிடைத்த  புதையலாக
நினைத்து அரவணைத்தால் வேறு  எந்த ஒரு புதையலையும்
தேடி என்றும் அலைய வேண்டாம் தம்பி நீ !
காலம் மாறும்!  காட்சியும் மாறும்!  நீயும் ஒரு
புதையலாக தெரிய வேண்டும் ஒரு நாள் உன் பிள்ளைக்கு!..இந்த
புதையல் மட்டும் மண்ணில்  புதையாமல் வளர வேண்டும்
ஒரு மரமாக உன் வீட்டில் என்றும் ! புதையல் மரம்
துளிர்த்து தளிர்த்து வளர விதைத்திடு ஒரு விதை  நீ இன்று !
Natarajan
http://www.dinamani.com  dated 28th Nov 2016

படித்து ரசித்தது …” குட்டி பறவைக்கு வந்த தைரியம்!”

 

கடற்கரையோர மணல் பரப்பில் தவ்வித் தவ்வி ஓடிக்கொண்டிருக்கின்றன சில அலை உள்ளான் பறவைகள் (Sanderlings). மணலுக்குள் தன் அலகைச் செருகி இரை கிடைக்குமா என்று கிளறிப் பார்க்கின்றன. அலை பக்கத்தில் வந்தால் கரைக்கு ஓடுகின்றன; உள்வாங்கினால் போன வேகத்தில் திரும்பவும் வந்து மணலைக் கிளறுகின்றன. பெரிய அலை வந்தால் விருட்டெனப் பறந்து கரைக்கே வந்துவிடுகின்றன. இதெல்லாம் செய்யத் தெரியாத ஒரு குஞ்சு ‘அலை உள்ளான்’ கடலைக் கண்டாலே நடுநடுங்கித் தன் அம்மாவிடம் பதுங்கிக்கொள்கிறது.

தன்னுடைய அம்மா, இரையை எடுத்துவந்து ஊட்டிவிடும் என நினைத்து வாயைத் திறந்து பசியோடு காத்திருக்கிறது அந்தக் குஞ்சு. ஆனால், அம்மா ஊட்டிவிடுவதாக இல்லை. இரையைக் குஞ்சே தேட வேண்டும் என்று அம்மா நினைக்கிறது. இப்படி அம்மா-குஞ்சு பறவையிடயே நடக்கும் செல்ல சேட்டைகள்தான் ‘பைப்பர்’ என்ற அனிமேஷன் குறும்படம்.

குழந்தைகள் பயத்தை விட்டு ஒவ்வொரு செயலையும் கற்றுக்கொள்வது எப்படி என்பதைச் சுவாரசியமாகக் குஞ்சுப் பறவை மூலமாக இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். ஒரு காட்சியில், குட்டி நண்டைப் பின்தொடர்ந்து செல்கிறது குஞ்சு. அப்படிப் போகும்போது அலை பாய்ந்து வருகிறது. அலையைப் பார்த்ததும், மணலுக்குள் தன்னைப் புதைத்துக்கொள்கிறது குட்டி நண்டு. இதைப் பார்த்துத் தன் உடலையும் மணலில் புதைத்துக்கொள்கிறது குஞ்சுப் பறவை. ஆனால், பயத்தில் தன்னுடைய கண்களை இறுகப் பொத்திக்கொள்கிறது.

அப்போது அந்தப் பறவையின் அலகைத் தன்னுடைய கொடுக்கால் தட்டுகிறது நண்டு. கண்களைத் திறக்கும் பறவைக்கு நீருக்குள் இருக்கும் அழகு அற்புதக் காட்சியாகத் தெரிகிறது. அந்த நொடிப் பொழுதில் அதனிடமிருந்து பயம் விட்டு விலகிப்போகிறது. உடனே ஓடியாடி குதிக்கிறது. பெரிய அலை வந்தால்கூட தைரியமாகப் போய் இரையை எடுத்து வருகிறது குஞ்சு பறவை.

ஒரு விஷயம் தெரியாதவரைதான் பயம். அது என்னவென்று தெரிந்துகொண்டுவிட்டால் அச்சம் எல்லாம் போயே போச்சு என்பதை அழகாகப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

சுமார் 6 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தை உங்களுக்குப் பார்க்க ஆசையா?

வழக்கமான அனிமேஷன் படங்களைப் போல அல்லாமல் பறவைகள் பறவைகளாகவே நடந்துகொள்வதுதான் ‘பைப்பர்’ குறும்படத்தின் தனிச் சிறப்பு! சாண்டர்லிங்க்ஸ் என்றழைக்கப்படும் ‘அலை உள்ளான்’களின் இயல்பை ஆராய இப்படத்தின் குழுவினர் வாரக் கணக்கில் கலிபோர்னியாவின் கடற்கரைகளில் அப்பறவைகளைப் பின்தொடர்ந்தார்கள். அவற்றின் இயல்பை அருகிலேயே இருந்து கவனித்து அதற்குப் பிறகுதான் அனிமேஷன் செய்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் ஆலம் பரிலரோ மூன்றாண்டுகள் இப்படத்துக்காக செலவழித்திருக்கிறார்.

ம.சுசித்ரா in http://www.tamil.thehindu.com

Natarajan

வாரம் ஒரு கவிதை…” செல்லாக் காசு ” !!!

 

செல்லாக் காசு
………….
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம் ஒரே ஒரு சொல்லால் செல்லாக் காசானதே !
பார்த்து நடந்து கொள்  தம்பி …புரிந்து கொள்ளவேண்டும்  நீ …
செல்வாக்கு ஒருவனுக்கு அவன் சேர்த்து வைக்கும் பணத்தால் அல்ல என்று !
 சுத்தமான  சொல்வாக்கு தரும் உனக்கு ஒரு தனி செல்வாக்கு !
கறை  படியா கரமும் நெறிபிறழா வாழ்வு முறையும் சேர்த்து வைக்கும்
உனக்கு எங்கும் என்றும்  செல்லுபடியாகும் ஒரு செல்வாக்கை !
காசு பணம் செல்லாது நாளை முதல் என்று சொல்ல முடியும் ! ஆனால் மாசற்ற
செல்வாக்கு செல்லாது இனிமேல் என்று சொல்ல முடியுமா யாரும் ?
யோசிக்க வேண்டும் நீ…  தம்பி !
Natarajan
http://www.dinamani.com  dated 21st Nov 2016

படித்து நெகிழ்ந்தது …” பாசத்தின் வாசனை “

 

நவம்பர் 8, 2016

இரவு. டி.வி. சீரியலில், ஏதோ காரணத்துக்காக கதையில் வரும் 15 கேரக்டர்களும், ஒரே சமயத்தில் ‘க்ளோஸ் அப்’பில் அதிர்ச்சியடைந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஃப்ளாஷ் நியூஸில் ஓடிய ‘ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற செய்தியைப் பார்த்து இல்லத்தரசிகள், சீரியல் கேரக்டர்களை விட நூறு மடங்கு அதிர்ந்துபோனார்கள். ஏனெனில் அவர்களிடம் கொஞ்சம் பணம் இருந்தது. அது அவர்களின் கணவர்களால் வரி செலுத்தப்பட்ட பணம்தான். ஆனால் கணவர்களுக்குத் தெரியாத கறுப்புப் பணம்!

நான் இந்தச் செய்தியைப் பார்த்தபோது, ஒரு நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்படும் திட்டம் என்ற முறையில் எனக்கு சந்தோஷம்தான். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சின்னக் கவலை. என் கையில் சில்லறையாக நூற்றைம்பது ரூபாய்தான் இருந்தது. ஆனால், என் மனைவி மட்டும் இது குறித்து எந்தக் கவலையும் படாமலிருப்பதைப் பார்த்து உஷாரானேன்.

நிச்சயமாக இவள் கையில் ஏதோ பணம் இருக்கிறது. “உன்கிட்ட ஏதும் பணம் இருக்கா?” என்றேன் பணிவாக. “ம்… ஆயிரம் ரூபாய் இருக்கு…” என்ற என் மனைவி, பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு தண்ணீர் ஜக்கின் மூடியைத் திறந்து காண்பித்தாள். உள்ளே நூறு ரூபாய் நோட்டுகளில், நீண்ட நாட்கள் கழித்து வெளிச்சத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் மகாத்மா காந்தி என்னைப் பார்த்துச் சிரித்தார்.

இதுபோல் அன்றிரவு நாடு முழுவதும், லட்சக் கணக்கான அஞ்சறைப் பெட்டிகள், உண்டியல்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உளுத்தம்பருப்பு டின்கள் திறக்கப்பட்டன. தங்களுக்குத் தெரியாமல் மனைவிகள் பணம் சேர்த்து வைத்ததற்காகக் கோபப்படுவதா, இல்லை, இக்கட்டான தருணத்தில் சில்லறை நோட்டுகள் தந்து கைகொடுப்பதற்காகச் சந்தோஷப்படுவதா என்று புரியாமல் கணவர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள். ஒரு பெண்மணி பல்லாண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த தன் உண்டியலை உடைத்து எண்ணி, அதில் இருபதாயிரம் ரூபாய் இருப்பதைப் பார்த்து அவரே பதறிவிட்டார்.

பணிக்குச் செல்லாத இல்லத்தரசிகள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பெரும்பாலும் அவை ஒவ்வொரு நோட்டாக, தனித்தனியாக நான்காக மடித்து வைக்கப்பட்டிருக்கும். அவை நெடுநாட்களாக மடிக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதால், அதனைப் பிரித்தாலும், நோட்டின் மடிப்புகள் தெளிவாகத் தெரியும்.

மேலும் இல்லத்தரசிகளின் பணத்துக்கு ஒரு தனி வாசனையும் உண்டு. அஞ்சறைப் பெட்டியில் வைத்திருந்த பணத்தில் மசாலா வாசனை. கோதுமை மாவு டப்பாவில் வைத்திருந்த பணத்தில் கோதுமை மாவு வாசனை. சர்ஃப் டப்பாவில் இருந்த பணத்தில் சோப்புப் பவுடர் வாசனை. இந்த வாசனை நோட்டுகளை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

நான் சென்னைக்கு வேலைக்கு வந்த புதிதில், எனது மாமா வீட்டில் தங்கியிருந்தேன். ஏறத்தாழ எட்டு வருட காலம் படுத்த படுக்கையாக இருந்த என் பாட்டியை என் மாமாவும், அத்தையும் நன்கு பராமரித்துவந்தார்கள். ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பாட்டி, “டேய்… கதவைச் சாத்திட்டு வா…” என்று கூற, நான் கதவைச் சாத்திவிட்டு வந்தேன். அவர் தனது கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையின் தலைமாட்டைத் தூக்கினார், அங்கு நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த, ஏராளமான பத்து ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்தார். பின்னர் தலையணைக்குக் கீழ், மருந்து டப்பாவிலிருந்து என்று வரிசையாக அவர் பத்து ரூபாய் நோட்டுகளாக எடுக்க, நான் அதிர்ந்துபோனேன். என்னிடம் ரகசியம் பேசுவது போல், “எவ்வளவு இருக்குன்னு எண்ணு” என்றார். நான் எண்ணிவிட்டு, “ரெண்டாயிரத்து நானூறு ரூபாய்…” என்றபடி பணத்தை முகர்ந்து பார்த்தேன். அதில் ஜெலுஸில், தைலம், மாத்திரைகள் என்று எல்லாம் கலந்த மருந்து வாசனை அடித்தது.

என் மாமா பல ஆண்டுகளாக இளநீர் வாங்குவதற்காக, லிம்கா வாங்குவதற்காக என் பாட்டிக்குக் கொடுக்கும் காசிலிருந்து சேர்த்த பணம் அது. நான், “உங்களால நடக்கவே முடியாது. இந்த வயசுல பணத்தைச் சேர்த்து என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டபோது, அதற்கு அவரிடம் பதில் இல்லை. வெளியே கத்திக்கொண்டிருந்த காகத்தை ஜன்னல் வழியாக நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், “தெரியல… இப்படியே சேர்த்துப் பழக்கமாயிடுச்சு…” என்று பணத்தை வாங்கி மீண்டும் மெத்தைக்குக் கீழ் வைத்துக்கொண்டார். இனி அந்தப் பணத்தை அவர் செலவழிக்க வழியே இல்லை என்ற நிலையிலும், அவர் சேமித்துக்கொண்டே இருந்தார். அவர் இறந்த பிறகு, அவருடைய பீரோவிலும், பெட்டியிலும் ஆங்காங்கே செருகி வைத்திருந்த பணத்தை எண்ணியபோது எட்டாயிரம் ரூபாய் இருந்தது. எல்லாம் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த தனித் தனி நோட்டுகள்.

பல ஆண்டுகள் கழித்து, அதே போன்ற நோட்டுகளை மீண்டும் பார்த்தேன். கடந்த ஆண்டு என் அம்மா சென்னை வந்து விட்டு ஊருக்குத் திரும்பினார். எக்மோரில் ரயில் ஏற்றிவிடுவதற்காகச் சென்றிருந்தேன். ரயில் கிளம்பும் நேரத்தில் பேச்சுவாக்கில், “நாளைக்கு என் பிறந்த நாள்” என்றேன். “ஆமாம்டா… நான் மறந்தே போயிட்டேன்” என்று ஒரு வினாடி யோசித்துவிட்டு, தனது பர்ஸை எடுத்தார். கார்டு விசில் ஊதும் சத்தம் கேட்டது. “அம்மா… நான் கிளம்புறேன்…” என்று கூற, “இருடா” என்ற அம்மா பர்ஸில் துளாவி நான்கு, நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி வெளியே எடுத்தார், “இதுல எதாச்சும் ட்ரெஸ் வாங்கிக்கோ…” என்று பணத்தை நீட்டினார். “என்கிட்ட பணம் இருக்கும்மா” என்றபோது ரயில் நகர ஆரம்பித்தது. “உன்கிட்ட இல்லன்னா கொடுக்குறேன்? வாங்கிக்க” என்று என் கையில் பணத்தைத் திணித்தார்.

ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் மகனின் பிறந்த நாளுக்கு, எந்த வேலையிலும் இல்லாத, ஒரு அறுபத்தைந்து வயதுத் தாய் கொடுத்த காசு அது. எனது கல்லூரிக் காலத்தில், அம்மா என் மீது கோபமாக இருக்கும்போதெல்லாம், “தாயே… இந்தப் பாவிய மன்னிச்சுடு” என்று அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட, அவர் சிரித்துவிடுவார். அதன் பிறகு நெடுநாள் கழித்து அன்று ஓடும் ரயிலில், நான்கு பேர் வேடிக்கை பார்க்க, மெல்லக் குனிந்து என் அம்மாவின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு வேகமாக ரயிலிலிருந்து இறங்கினேன். ரயில் என்னைக் கடந்து சென்றதும், அந்த நோட்டுகளைப் பல வினாடிகள் பார்த்தேன். நீண்ட காலமாக மடித்து வைக்கப்பட்டு, மொடமொடப்பாக இருந்த நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணினேன். ஆயிரம் ரூபாய் இருந்தது. முகர்ந்து பார்த்தேன். அதில் அந்துருண்டை வாசனை வந்தது. அம்மா அதை பீரோவில் வைத்திருந்திருப்பார்.

அதன் பிறகு எத்தனையோ மாதங்கள் ஓடிவிட்டன. இருந்தாலும் எழும்பூர் ரயில் நிலையத்தில், அந்துருண்டை வாசனை அடிக்கும் அந்தப் பழைய நூறு ரூபாய் நோட்டுகளுடன், நான்காம் நம்பர் பிளாட்ஃபார்மில் நின்ற அந்த இரவை இன்னும் என்னால் மறக்கவே முடியவில்லை. இன்று உங்கள் கையில் கிடைக்கும் ஒரு மடிப்புக் கலையாத நோட்டில், ஏலக்காய் வாசனையோ, மஞ்சள் தூள் வாசனையோ, தைல வாசனையோ அடித்தால், அது ஒரு தாய்க் காசின் வாசனை. அது உங்கள் தாயின் காசாகக்கூட இருக்கலாம்!

(

ஜி.ஆர். சுரேந்தர்நாத்

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com

http://www.tamil.thehindu.com

Natarajan

வாரம் ஒரு கவிதை …”வழி தவறிய பயணங்கள் ” !!!

 

 “வழி தவறிய பயணங்கள்”
………………………………………………………..
வழி தவறிய பயணம் நெறி தவறி தொடர்ந்தால்  அது
செல்லாத காசுக்கு சமம் !..சொல்லாமல் சொல்லும் அது உன் வாழ்க்கை
ஒரு செல்லாத காசு என்று …! பகிர்ந்து உண்ணும் பண்பும்  நலிந்தோரிடம்
அன்பு காட்டும் மனமும் இல்லாத ஒருவன் வாழ்க்கை பயணம்
கரை சேர்க்காது அவனை ஒரு நாளும் ! நெறிமுறை எதுவும்
இல்லாத வாழ்வும் கறை படிந்த கரங்கள் சேர்க்கும் பணமும்
தரை தட்ட வைக்கும் அவன்  வாழ்க்கை பயணக் கப்பலை !
வாழ்க்கை பயணத்தில் கரை சேர வழி பல உண்டு …ஒரு
வழி தவறினாலும்  நெறி பிறழாமல் ஒருவன்  தொடரும்
பயணம் சேர்க்கும்  செல்வாக்கு அவன் வாழ்வுக்கு !
Natarajan
http://www.dinamani.com  dated 14th Nov 2016

வாரம் ஒரு கவிதை …” பட்டதாரி ” !!!

 

பட்டதாரி …
………..
பட்டங்கள் பலப் பல …வாங்கிய பட்டம் தேனாய் இனிக்கும் பட்டதாரிக்கு  வேலை
ஒன்று  கட்டாயம் கிடைத்தால் ! வேலை  இல்லாவிட்டால் “வேலையில்லா “
என்னும் ஒரு புதிய பட்டம் மட்டும் கிடைக்கும்  அந்த பட்டதாரிக்கு !
சட்டம் ஒன்றும் இல்லையே பட்டம் வாங்கினால் வேலை உண்டு என்று !
சட்டம்  படித்த  பட்டதாரிக்கே  வேலை இல்லையே இன்று !
“வேலையில்லா பட்டதாரி” என்னும் ஒரு  வட்டத்தில் சுழலாமல்
திட்டம் போட்டு தன்  கையே தனக்கு உதவி என ஒரு தொழில்
செய்ய நீ முனையும் நேரம்  “வேலையில்லா ” பட்டதாரி உன்
வாழ்வில் ஒரு நல்ல நேரமாக மாறும் !
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்  கவலை உனக்கு
இல்லை இனி என ஒத்துக்கொள் என்னும் ஆன்றோர்
வாக்கு  இன்றும்  பொய்யா வாக்குதான் ! மறவாதே இதை நீ
தம்பி ! உனக்கு ஒரு வேலை நீ தேடுவதை விடுத்து “செயலி “
எத்தனை  எத்தனை  “செயல் ” படுத்த முடியும் உன்னால்   என்று
சற்றே மாற்றி யோசி தம்பி ! மாறலாம் நீ  ஒரு தொழில் முனைவோனாக !
உன் கணினியும்  கைபேசியுமே  உனக்கு மூலதனம் ! உன் தொழில்
நுட்ப அறிவும்  , “செயலி ” உருவாக்கும்  திறனும் மாற்றும்
உன்னை,  நீ  பலருக்கு வேலை கொடுக்கும் தொழில் பட்டதாரியாக !
வேலை இல்லா  பட்டதாரி இல்லை இங்கு இனிமேல் என்னும் ஒரு
நாளை மலர செய்வதே இனி உன் வேலை ! மாற்றி யோசிக்கும்
யாருக்கும் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் உண்டு கட்டாயம் !
Natarajan
8th nov 2016

வாரம் ஒரு கவிதை… ” பட்டாசு சத்தம் ” !

 

பட்டாசு  சத்தம்
……………
பட்டாசு சத்தத்தில் பறக்க   மறந்தன பறவைகள் …கண்
திறக்காமல் பயந்து  அழுதன    சிறு குழந்தைகள் !
மறக்காமல்  இனிப்பு சுவைத்து வாழ்த்துக்கள் சொன்னது
“பெரிய” மனிதர்கள் நாம் மட்டுமே !  !   ஆனால் …வெடித்த
பட்டாசு சத்தத்தில் நாமும் மறந்தது நமக்கு பட்டாசு கொடுக்கும்
அந்த சிவகாசி சிறாரின்  அவல நிலையை !…வான வேடிக்கை
வெளிச்சத்திலும் நாம் நினைத்துப் பார்க்க   மறந்தது ஒரு சிவகாசி தொழிலாளியின்
இருண்ட   வாழ்க்கையை …!  அது மட்டுமா ?
நீரின்றி வாடும் தன்  நிலம் பார்த்து சத்தம்  போட்டு
அழும் அந்த  உழவனின்  மனக்குமுறலை  மறைத்ததும்
இந்த பட்டாசு சத்தம்தான் !
சுத்தமான காற்று  சத்தமில்லாமல்  தொலைந்து
மறைந்து போனதும் இந்த பட்டாசு  சத்தம் போட்டு
விட்ட கரும் புகையினால்தானே !
தீப ஒளி மட்டும்  ஏற்றி  புத்தாடையுடன் பலகாரமும்  நலிந்தோர்
வீட்டுக் குழந்தைகளுடன்   பகிர்ந்து மகிழும் பண்பை நம் பிள்ளைக்கு
நாம் போதிக்க வேண்டும் ஒரு பால பாடமாக ! இந்த பாடம்
ஒரு நல்ல வித்தாகும் பட்டாசு சத்தமும் புகையும் இல்லா தீபாவளி
திருநாள் ஒருநாள் பூத்து மலர !
Natarajan
http://www.dinamani.com  …on 1st Nov 2016