Message For the Day…” What is the Genuine Moment of Awakening…” ?

Life is eternally stalked by death. Yet people don’t tolerate the very mention of the word ‘death’. It is deemed inauspicious to hear that word. Anything maybe uncertain, death is certain. It is impossible to change that law. However insufferable it is, every living thing received a ticket to death at birth and every moment is proceeding nearer and nearer to it. The samsara (life) train you are journeying on is taking you to that destination, whether you sit quiet or lie down or read or meditate or sing in the journey. Recognise this truth and turn your mind over to good mental tendencies (samskaras). Everyone must examine themselves rigorously, spot defects, and endeavour to correct them. When people uncover and realise their own defects, it is like being reborn. People then start anew, from a new childhood. This is the genuine moment of awakening.

Sathya Sai Baba

Message For the Day…”Use Your Hands and Feet to Perform Good Deeds…”

When the rains pour on the mountain peaks and water hurries down the side, no river emerges. However, when the water flows in a single direction, first a brook, then a stream, a torrent, and finally a flooded river is formed, and the rains reach the sea. Water that runs in one direction reaches the sea; water that flows in four directions soaks in and is lost. Mental tendencies (samskaras) are like this. Of what use are they if they are all over the place? The holy stream of noble inborn desires must flow full and steady along the fields of holy thoughts and finally at the moment of death abide in the great ocean of bliss. Worthy indeed is the one who reaches such a goal! Hence from now on, use your hands and feet to perform good deeds selflessly and fix your mind on Him. Chant His name from within and practice your duty (swadharma) with utmost sincerity.   

Sathya Sai Baba

கிருஷ்ணாவின் பயணம்: பாடம் கற்றுத் தரும் ஆந்திர மக்கள்…

அழகுற காட்சியளிக்கும் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான படித்துறை. படங்கள்:க.ஸ்ரீபரத்

அழகுற காட்சியளிக்கும் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான படித்துறை. படங்கள்:க.ஸ்ரீபரத்

ஊத்துக்கோட்டை டூ ஸ்ரீசைலம்

– எஸ்.சசிதரன்

தமிழக எல்லைப் பகுதியான ஜீரோபாயின்டிலிருந்து கடந்த 27-ம் தேதி பயணத்தைத் தொடங்கினோம். காலை 7.30 மணி அளவில் அங்கு அடைந்தபோது, தமிழகத்துக்கு தெலுங்கு கங்கை கால்வாயில் தண்ணீர் கொஞ்சமாக வந்துகொண்டிருந்தது. அங்கிருந்து, கால்வாயைத் தொடர்ந்தபடி காளஹஸ்தி அருகே சென்றபோது, சில இடங்களில் தண்ணீர் ஆந்திரப் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

இதுகுறித்து தெலுங்கு கங்கை திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அணையில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும்போது நீரோட்டம் குறைவதால், சிறிதளவு நீர் தாழ்வான பகுதிகளில் பின்னோக்கி ஓடுவது இயல்பே’ என்று விளக்கமளித்தனர், பின்னர், பயணத்தைத் தொடர்வதற்கான வழியைப் பற்றி தெளிவாக விளக்கினர்.

அடுத்து, சிற்றூர்கள் வழியாக நெல்லூர் மாவட்டம், வெங்கடகிரியை அடைந்தோம். அங்கு விவசாயிகளைச் சந்தித்துப் பேசினோம். தொடர்ந்து, ராப்பூர் வழியாக, சென்னையில் இருந்து 152 கிமீ தொலைவில் உள்ள சென்னைக்கு தண்ணீர் திறக்கப்படும் கண்டலேறு பிரதான நீர்போக்கிக்கு சென்றோம். கண்டலேறு அணையில் பழைய மதகுகளை மாற்றிவிட்டு, மின்விசை மதகுகளை அமைக்கும் பணி நடந்துவந்தது.

கண்டலேறுவில் இருந்து திறக்கப் படும் நீர், சில கிமீ தொலைவில் உள்ள இயற்கையாக அமைந்த சிறிய நீர்த்தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து தான், சாய்கங்கா கால்வாய் தொடங்கு கிறது. கண்டலேறு நீர்த்தேக்கத்தில் குறைந்தபட்ச தண்ணீர் திறந்துவிடும் அளவைக் காட்டிலும் இருப்பு குறைவாக இருந்ததால், சென்னைக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கரையையொட்டி அமைந்த சிறிய சாலையில் ஆதிருபள்ளி கிராமத்தைக் கடந்தோம். அங்குதான், கண்டலேறு நீர்த்தேக்கப் பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அரசு வீடுகளைக் கட்டித் தந்துள்ளது.

இரவில் நெல்லூரில் தங்கினோம். காலையில், மலைப்பாங்கான பகுதி களைக் கடந்து கண்டலேறுவிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள கலுவாய் என்ற நகருக்கு அருகில் பிரம்மாண்டமாக, இரு மலைகளுக்கு நடுவில் அழகாக அமைந்துள்ள சோமசீலா அணையை அடைந்தோம். ஸ்ரீசைலத்திலிருந்து வரும் கிருஷ்ணா நீர், மசீலாவை அடைந்து, அதன்பிறகு கண்டலேறுவுக்குச் செல்கிறது.

சிறிய ஊர்கள் வழியாக, கடப்பா மாவட்டத்துக்குள் நுழைந்தோம். கடப்பாவுக்கு சற்று தொலைவில் உள்ள பத்வேலில் தேநீர் அருந்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சற்று பெரிய ஊரான தெலுங்கு கங்கை கால்வாய் அருகில் அமைந்துள்ள புரொதொட்டூரில் தங்கினோம்.

மறுநாள் காலையில் அஹோபிலம் நோக்கிப் பயணம். அடர்ந்த வனப்பகுதியில் அஹோபிலம் வழியாகக் கடக்கும் கால்வாய்ப் பகுதியைப் பார்ப்பதற்கு சற்று மிரட்சியாக இருந்தது. அங்கிருந்து நந்தியால் வழியாக வெளுகோடு நீர்போக்கியைப் பார்த்துவிட்டு, ஸ்ரீசைலம் வனப் பகுதியினூடே பயணம் தொடங்கியது. மிக ரம்மியமான காட்சிகள். இருந்தாலும் ஆங்காங்கே புலி படங்களைப் பார்த்தபோது லேசாக கிலி ஏற்பட்டது. வழியில், ஒய்.சேர்லபள்ளி என்ற மலைகிராமத்தில், தேநீர் அருந்த நிறுத்தியபோது, அரசு பள்ளிக்கூடத்தை பார்க்கமுடிந்தது. தேநீர்க்கடைக்காரர் கூறுகையில், பள்ளிகள் இருந்தாலும் அங்கு வசிக்கும் மக்கள் தேன் எடுப்பது போன்ற வேலைகளிலே ஆர்வம் காட்டுவதாக வருத்தப்பட்டார். புலியால் இதுவரை பிரச்சினை எதுவும் இல்லை என்றார்.

பின்னர், அங்கிருந்து, கீழ் ஸ்ரீசைலம் எனப்படும் தோர்னாலா நகருக்கு வந்தோம். அங்கிருந்து ஐதராபாத், ஒங்கோல் நகரங்களுக்குச் சாலை பிரிகிறது. இங்குதான் மலைவாழ் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். அங்கிருந்து, ஸ்ரீசைலம் சென்று சேர இரவாகிவிட்டது.

மறுநாள் காலை, ஸ்ரீசைலம் அணையின் பின்பகுதிக்குச் சென்றோம். பல நூறு படிகளைக் கடந்து கீழே சென்றால் கிருஷ்ணா கரையை அடையலாம். சுற்றுலாத் துறை படகில் அணைக்கு அருகில் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அணையின் ஒரு பகுதி தெலங்கானாவுக்குச் சொந்தம். அங்கிருந்து அணையின் முகப்பைப் பார்வையிட 15 கிமீ சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. அணையின் முகப்பைப் பார்த்துவிட்டு, பயண நினைவுகளை அசைபோட்டபடியே ஒங்கோல் நோக்கிப் புறப்பட்டோம். அங்கிருந்து, காலையில் நெல்லூருக்குப் புறப்பட்டு மாலையில் புழல் நீர்த்தேக்கத்தை அடைந்தபோது, அந்த ஏரி ஏற்கெனவே வரப்பெற்றிருந் கிருஷ்ணா நீரால் நிரம்பி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 5 நாட்களில் நாங்கள் மேற்கொண்ட 1400 கிமீ பயணம் இனிதாய் அமைந்தது.

பாடம் கற்றுத் தரும் ஆந்திர மக்கள்

– டி.செல்வகுமார்

சென்னையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை பயணம் செய்தபோது அடர்ந்த காடுகள், குக்கிராமங்கள், கிராமங்கள், சிறிய நகரங்கள், நகர்ப்புறம் வழியாக கிருஷ்ணா கால்வாயை மட்டுமல்லாமல், அதை யொட்டி வாழும் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வாழ்க்கை முறைகளையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கண்ணுற்ற பல விஷயங்கள் ஆச்சரியப்பட வைத்தன.

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை சென்றடைந்தபோது, தமிழக எல்லைப் பகுதியில் கண்டலேறு பூண்டி கால்வாய் (கிருஷ்ணா கால்வாய்) சில இடங்கள் சிதைந்தும், குப்பை மண்டியும் கிடந்தன.

ஆனால், அங்கிருந்து ஆந்திர மாநிலத்துக்குள் நுழைந்ததும் சற்று வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் ஒரு இடத்தில்கூட பிளாஸ்டிக் குப்பை இல்லை. மக்கள் துணிகள், பாய்களை துவைக்கவும் இல்லை.

நெல்லூர் மாவட்டம் ராப்பூர் அருகில் வீட்டுக்கு அருகே கிருஷ்ணா கால்வாயில் ஓடினாலும், அங்கு துணிகளைத் துவைக்காமல், சற்றுத் தொலைவில் உள்ள கை பம்பில் நீர் பிடித்து பெண்கள் துணி துவைத்ததனர்.

கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் பகுதியிலும், வறண்டு கிடக்கும் இடங்களிலும் கால்வாய் கட்டமைப்பு உடைந்தோ, சிதைந்தோ இல்லை. தண்ணீர் ஓடும் இடத்தில் தெளிந்த நீரோடைபோல பளிச்சென காட்சியளிக்கிறது கால்வாய். ஆந்திர அரசும், அம்மாநில மக்களும் கண் இமைபோல கிருஷ்ணா கால்வாயைப் பேணிப் பாதுகாப்பது வியப்பாக இருந்தது.

ராப்பூர் அருகே கிருஷ்ணா கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்த நீர்த்தேக்கமும் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது. அந்தளவுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி பராமரிக்கப்படவில்லை. பொதுப்பணித் துறையின் முறையான கண்காணிப்பும் இல்லை.

ஆந்திரத்தில் கிருஷ்ணா கால்வாயின் பக்கவாட்டில் மட்டுமல்லாமல், அடிப்பகுதியிலும் கான்கிரீட் போட்டிருப்பதால் தண்ணீர் துளியும் உறிஞ்சப்படாமல் வேகமாக ஓடி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கால்வாயின் பக்கவாட்டில் மட்டும் கான்கிரீட் போட்டிருக்கிறார்கள்.

கால்வாயை சுத்தமாகப் பராமரிப்பது குறித்து கிராம மக்கள் சிலரிடம் கேட்டபோது, “கர்னூல், கடப்பா மாவட்டங்கள் மிகவும் வறண்ட பகுதிகள். தெலுங்கு கங்கை திட்டம் நிறைவேற்றப்பட்டு கிருஷ்ணா நதி நீர் வந்த பிறகே எங்கள் பகுதியில் விவசாயம் நடக்கிறது. தண்ணீரை ஒருபோதும் வீணாக்கவோ, அசுத்தம் செய்யவோ மாட்டோம்” என்றனர்.

மழைநீரை உயிர் நீராகக் கருதி, அதைச் சுமந்து வரும் கிருஷ்ணா கால்வாயை பேணிப் பாதுகாத்து வரும் ஆந்திர மக்களை மெச்சலாம்.

பெத்த ஓட்டல்.. மஞ்ச்சி ஓட்டல்..

– சி.கணேஷ்

கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு வரும் பாதை வழியாக பயணம் புறப்பட்ட எங்களுக்கு இருந்த ஒரே பயம், ஆந்திர உணவுதான், மிளகாய் காரம். நினைத்துப் பார்க்கும்போதே உடலே எரிந்தது. எனினும், மனதை தேற்றிக் கொண்டு புறப்பட்டோம்.

காலையில் ஆந்திர எல்லை ஊத்துக்கோட்டைக்கு சென்று ஜீரோ பாயின்ட் பகுதியை பார்த்துவிட்டு பெரியபாளையத்தில் காலை உணவை முடித்தோம்.

மதிய உணவுக்காக நெல்லூர் மாவட்டம் ராப்பூர் சென்று, பலரிடம் விசாரித்துத் தேடி அங்கு பிரபலமாக பேசப்படும் ‘பிரண்ட்ஸ் மெஸ்’சை அடைந்தோம். அங்கிருந்து, பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் உணவகம் தேடுவதற்காக நாங்கள் பயன்படுத்திய வாசகம்தான் ‘பெத்த ஓட்டல்..மஞ்ச்சி ஓட்டல்..’

கண்டலேறு அருகில் பாதுகாப்பான தங்குமிடம் இல்லாததால், சற்று தொலைவில் உள்ள நெல்லூ ருக்குச் சென்று ‘மஞ்ச்சி’ ஓட்டலில் தங்கி, முரளி கிருஷ்ணா ஓட்டலில் இரவு உணவை முடித்தோம்.

மறுநாள், சோமசீலா நீர்த்தேக்கத்தை பார்த்துவிட்டு புறப்படும்போது பழங்கள்தான் மதிய உணவாகின. அதன்பிறகு, கடப்பா மாநிலம் புரதொட்டூர் சென்றோம். திலகா உணவகத்தில் இரவு உணவை முடித்தோம். மறுநாள் முழுவதும் ஸ்ரீசைலத்தில் சென்றது. சென்ற இடங்களில் எல்லாம் ‘பெத்த ஓட்டல்..மஞ்ச்சி..’ ஓட்டல் வாசகத்தை சொல்ல நாங்கள் மறக்கவில்லை.

பாசத்தையும் பக்தி உணர்வையும்..

ஸ்ரீசைலத்தில் இருந்து ஆந்திர மக்களின் சகோதர பாசத்தை சென்னைக்கு சுமந்து வரும் கிருஷ்ணா நதி நீர், பல ஆன்மிகத் தலங்களைக் கடந்து பூண்டியை அடைகிறது.

ஸ்ரீசைலம்:

இங்கிருந்துதான் தமிழத்துக்கான கிருஷ்ணா நீர், கால்வாயில் திறந்துவிடப்படுகிறது. இது ஆன்மிகத் தலம் மட்டுமின்றி, சுற்றுலாத்தலமும்கூட. இங்கு ஸ்ரீமல்லிகார்ஜூனர் கோயில் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணா நதி நீர் சேரும் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கப் பகுதியில் கங்கை மாதா வந்து சென்றதாக ஐதீகம் இருப்பதால், இப்பகுதி பாதாள கங்கை என அழைக்கப்படுகிறது.தவிர, அக்கம்மா தேவி குகையும் ஆன்மிகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

நந்தியால்:

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம், நந்தியால் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் நந்தியால் மகாநந்தீசுவரர் கோயில் உள்ளது. நாட்டில் உள்ள முக்கியமான 9 நந்தி கோயில்களில் பிரதானமான மகாநந்தி இங்கு உள்ளது.

அஹோபிலம்:

நந்தியாலுக்கு முன்பாக 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது அஹோபிலம். நரசிம்மர் வீற்றிருக்கும் இக்கோயில், கீழ் அஹோபிலத்தில் உள்ளது. இதுபோன்ற பல குடைவரை கோயில்கள் மேல் அஹோபிலம் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.

காளஹஸ்தி:

கிருஷ்ணா கால்வாய், சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி அருகில் கடந்து செல் கிறது. இறுதியாக கல்வாய் வந்து முடியும் இடம் பூண்டி நீர்த்தேக்கம். பூண்டி நீர்த்தேக்கம் 1943-ம் ஆண்டு கட்டப்படுவதற்கு முன் இப்பகுதியில் திருவலம்புதூர் என்ற பகுதி இருந்தது. இங்கு ஊன்றீசுவரர் என்ற சிவன் கோயில் இருந்தது. நீர்த்தேக்கம் கட்டுவதற்காக கோயில் அப்புறப்படுத் தப்பட்டு தற்போது பூண்டி நகர்ப் பகுதியில் அமைந் துள்ளது. நாயன்மார்களில் முக்கியமானவரான சுந்தரரால் பாடப்பெற்ற தலம் இது.

வனச் சரணாலயங்கள்..

கிருஷ்ணா கால்வாய், வரும் வழிநெடுகில் பல இடங்களில் அடர்ந்த காடுகளைக் கடக்கிறது. கிருஷ் ணாநீர் கடந்து வரும் ஸ்ரீசைலத்தில் நாகார்ஜூன சாகர் ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. கிருஷ்ணா நதி நீர், தென் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நல்லமலை வனப் பகுதியில் 130 கிமீ ஊடுருவி வருவது குறிப்பிடத்தக்கது. தவிர, ஸ்ரீசைலம் வன விலங்கு சரணாலயமும் இப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும், நந்தியால் அருகே வெளுகோடு காப்புக்காடு பகுதியும் அமைந்துள்ளது. இதில் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நினைவாக, ஒய்எஸ்ஆர் ரெட்டி ஸ்மிருதி வனம் என்ற பல்லுயிர் பூங்கா அமைந்துள்ளது. இங்கு வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆத்மகூர்- வெளுகோடு சாலையில் இந்த வனப்பகுதி அமைந்துள்ளது.

வியக்க வைத்த ஆந்திர சாலைகள்

– வி.சாரதா

ஆந்திரத்தில் கிருஷ்ணா கால்வாய் வழியாக பயணம் செய்தபோது, சாலைகளின் தரத்தைப் பார்த்து வியப்பு மேலிட்டது.

குக்கிராமங்களைக் கடந்து சென்ற சாலைகள் அனைத்தும் தரமானவையாக இருந்தன. சில சிற்றூர்களில் 12 அடி அகலமே சாலைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், குண்டு குழிகளற்று, மேடு பள்ளங்கள் இல்லாமல் பராமரிக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் சாலைப் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருவதையும் பார்த்தோம்.

வறட்சி, நீர்த் தட்டுப்பாடு காரணமாக குடிநீர் வசதி இல்லாத இல்லாத கிராமங்களையும் தார்சாலை கொண்டு நகரப் பகுதிகளுடன் இணைத்திருந்தனர். பேருந்துகள் அனைத்தும் தரமானவையாக, குறிப்பாக இருபுறங்களிலும் கதவுகளுடன் இருந்ததைக் காண முடிந்தது.

எல்லா கிராமங்களிலும் டிராக்டர் போக்குவரத்து அதிகமாக இருந்தது. விவசாய உற்பத்திப் பொருட்களை நகரங்களுக்கு எடுத்துச் செல்ல அணுகு சாலைகளும், டிராக்டர்களும் விவசாயிகளுக்குப் பேருதவியாக உள்ளன. தெலுங்கு கங்கை கால்வாய்களை ஒட்டி சில இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் கால்வாய் நீரோட்டத்தை பார்வையிட்டபடி பயணித்தோம்.

ஆந்திர மக்களின் அன்பு..

தெலுங்கு கங்கை திட்டத்தின் கரையில் அமைந்த விவசாய கிராமங்களின் ஊடாக பயணம் மேற்கொள்ளவேண்டுமெனில், தமிழகத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வழக்கமாகத் தேர்ந்தெடுக்கும் பொதுவான வழித்தடங்களில் செல்ல முடியாது. நாங்கள் சென்ற வாகனம் பல இடங்களில் வனப் பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த நல்லமலா காடுகள் அவற்றில் குறிப்பிடத்தக்கது.

அங்கு புலிகள் நிறைந்த காப்புக்காடுகளையும் கடக்க வேண்டியிருந்தது. குக்கிராமங்களினூடேயும், நகரங்களினூடேயும் வழித்தடத்தை விசாரித்தபடியே பயணத்தைத் தொடர்ந்தோம். தமிழகத்திலிருந்து வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் என்பதை அறிந்தபோது, மக்கள் மிகுந்த கனிவுடனும் இன்முகத்துடனும் எங்களை வரவேற்றனர். அறியாத வழித்தடங்களை விசாரித்தபோது மகிழ்ச்சியுடன், தயக்கமின்றி உதவினர். தமிழகத்தின் பல கிராமங்களில் நிலவும் நட்புணர்வு, ஆந்திர கிராமங்களிலும் நி லவியது.

தெலுங்கு கங்கை கால்வாய் என்று கேட்டால் “மதராஸ் கால்வாய்தானே?” என்று மகிழ்ச்சியுடன் எதிர்க் கேள்வி கேட்டார்கள். சென்னை மாநகரத்துக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய் அதுதான் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது. பெரிய நகருக்கு தண்ணீர் தருகிறோம் என்ற

பெருமிதமும் அவர்கள் கண்களில் தெரிந்தது. யாரிடமும் வெறுப்பு இல்லை.

தமிழில் பேசி உதவுவதற்கும் பலர் முயன்றார்கள். பருவமழை பொய்த்துப் போயிருந்ததால் கிராமங்கள் வறண்டிருந்தன. ஆயினும், அவர்களது அன்பில் வறட்சி யில்லை.

Source…..’தி இந்து’ குழுவினர் in http://www.tamil.thehindu.com
Natarajan

Power of One Rupee…

Students get the accumulated amount at the end of the year. Photo: Special Arrangement

Students get the accumulated amount at the end of the year. Photo: Special Arrangement

Lions Club of Central Chennai has been giving Re. 1 to every student at Brinda Primary School to reduce the dropout rate and absenteeism, reports K. Sarumathi.

What is the value of a rupee? A lot, if you ask Hari Narayanan, project coordinator of the Lions Club of Central Chennai.

When he read an article on how the Municipal Corporation of Thane checked the dropout rate in municipal schools in the region by distributing Re. 1 to every student every day, Narayanan was immediately attracted to the idea. He thought of replicating the method in Chennai Schools.

“The Thane Municipality was my inspiration and when I put forth the idea to other members of Lions Club of Central Chennai, they were more than happy to start the project,” he says. However, getting the go-ahead from the Corporation, they knew, would be almost impossible. Therefore, they selected a primary school run by the Gopalapuram Educational Society for poor children. At the Brinda Primary School, this initiative has been going on for seven years now.

“Most of these children are sons and daughters of maids, daily wage earners and others engaged in menial jobs. Through this small incentive, it has been ensured that these children attend school regularly,” says Malarvalli, the school principal, who is is going to retire this year, after 32 years in service. To start with, the programme was aimed at only girl students. “Though these children were given free uniforms and book and nourishing meals, they were hardly interested in coming to school. Also girls were held back for taking care of chores at home on most days. When we announced the project, parents ensured they sent their daughters to school every day. We have a fall in the dropout rate as well as absenteeism,” says Narayanan.

Though intake of students has been quite low in this school in Class 1, the management is happy that it is able to carry on with minimum dropouts.

“We want the school to survive for those who can’t afford English education and we want students to continue finishing their primary schooling here. That is the idea behind the initiative,” he says.

Regular attendance has also meant improvement in studies for these children. “Under the ABL method, they are assessed every day. Since they take fewer days off they are able to score better and learn more. Our teachers are totally dedicated as well. They have gone from door to door asking parents to send their wards to this school and benefit from the initiative,” says Malarvalli.

Seeing the popularity of the initiative, parents of boys also approached the Lions Club asking them to give their sons a similar incentive. “For four years now, even boys in the school are getting the amount for attendance,” says Narayanan.

Depending on the number of days they come to school, the accumulated amount is presented to the students at the end of the year in a grand function where parents are also invited. The club has also invested in some infrastructural development of the school such as laying new pavements, creating toilets and installing an RO plant for safe drinking water.

Source….K.Sarumathi in http://www.the hindu.com

Natarajan

Message For the Day…” Understand the ‘Brahman’ Phenomenon…”

It is an arduous process for people to become aware of the ‘One’ that is their core. The gross body is the product of the food consumed. But within, there is a subtler force, an inner vibration named vital air (prana). The mind(manas) within is subtler still, and deeper and subtler than the mind is the intellect (vijnana). Beyond the intellect, people have in them the subtlest sheath of spiritual bliss (ananda). When one delves into this region of spiritual bliss, the reality, the Brahman or the One can be experienced. That awareness is indeed the most desirable. In the Taittiriya Upanishad, while teaching his son Bhrigu the Brahman phenomenon, Varuna says, “Son!Brahman cannot be seen through the eyes. Know that Brahman is that which enables the eyes to see and the ears to hear. He can be known only through extreme yearning in a cleansed mind and concentrated thought. No other means can help.”

Sathya Sai Baba

Message For the Day…” What is Ultimate…” ?

In Taittiriya Upanishad, Varuna directed his son Bhrigu to enter upon spiritual exercises that would ultimately reveal the Truth. Brighu, with full faith in his father’s words, immersed himself in concentrated spiritual practices. When he returned and declared what he had come to know, that food was Brahman, his father told him that his answer was not right. So Brighu continued the spiritual practices and came back with deeper answers, that Prana or vital air is Brahman, then the Mind, and later that the Intellect (Vijnana) is. But each time he was sent back by his father to search deeper. After undergoing a fifth course of spiritual practices, he became aware that spiritual bliss (ananda) was Brahman. Brighu stayed in the bliss of that awareness and never needed to consult his father again. The father then, himself sought Bhrigu, and congratulated him and said, “Son! You have merged in that vision.” Every being must march on to the goal, from food to bliss.

Sathya Sai Baba

அரசுப் பள்ளி > ஐ.ஐ.எம். > விப்ரோ – ஒரு நிகழ்கால சாதனைக் கதை…

அரசுப் பள்ளிகள் குறித்து இப்போது பேசினாலே ‘அதெல்லாம் அந்தக் காலக் கதை. சுகமான நினைவுகள். இப்போதெல்லாம் அரசுப் பள்ளிகள் எப்படி இருக்கின்றன என்பது நமக்குத் தெரியாதா?’ என்பது போன்ற விமர்சனங்களே அதிகம் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் நிகழ்கால உதாரணம்தான் எர்நெஸ்டோ திலீபனின் சாதனைக் கதை.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பள்ளியுடன் போராடி, ‘இனியும் தனியார் பள்ளியில் விட்டால் மகனின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்’ என்று அரசுப் பள்ளியில் தங்கள் மகன் எர்நெஸ்டோ திலீபனை சேர்த்தார்கள் அவரது பெற்றோர் காளிதாசனும் கலைச்செல்வியும். கலைச்செல்வி, அரசுப் பள்ளி ஆசிரியை என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.

அந்த அரசுப் பள்ளிதான் திலீபனுக்கு புதிய உலகைத் திறந்து காட்டியது. அந்த அரசுப் பள்ளிதான் இந்திய மாணவர்களின் கனவான ஐ.ஐ.எம்முக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்துச்சென்றது. படிப்பை முடிக்கும் முன்பே ஆறு இலக்க ஊதியத்தில் வேலை கிடைக்கக் காரணமாக அமைந்தது.

இப்போது சென்னையில் விப்ரோ நிறுவனத்தின் வணிக ஆய்வியல் நிபுணராக இருக்கிறார் திலீபன். “கோவையில் பிரபலமான தனியார் பள்ளியில் என்னை சேர்த்தனர். 10-ம் வகுப்பு வரை படித்தேன். ஏனோ தெரியவில்லை பள்ளி செல்லவே அப்போது எனக்குப் பிடிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு வரைக்கும் மக்குப் பிள்ளை நான் – ஆம், பள்ளியில் அப்படித்தான் என்னை அழைத்தார்கள். ரேங்க் பட்டியலில் கடைசியில் இருப்பேன். ஆறாவதுக்கு மேல்தான் ஓரளவு படித்தேன். தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் வறுத்தெடுப்பார்கள், அடிப்பார்கள் என்பதற்காகப் படித்தேன்.

பள்ளியே சிறையானது. காலையில் எட்டரை மணிக்குப் பள்ளிக்குச் சென்றால் சிறப்பு வகுப்புகள் எல்லாம் முடித்துவிட்டு மாலை 7 மணிக்குதான் வீடு திரும்ப முடியும். அரட்டை கிடையாது, விளையாட்டு கிடையாது, முழுக்க முழுக்கப் புத்தகம், நோட்ஸ் இவையே உலகமானது.

‘சொன்னதைச் செய்’

புத்தகத்தைத் தாண்டி எதுவுமே தெரியவில்லை. தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது? பறவை எப்படிப் பறக்கிறது? என்பது போன்ற சிறு பொது அறிவு விஷயங்கள்கூடத் தெரியாது. பள்ளியில் கேள்வி கேட்க முடியாது. ‘சொன்னதைச் செய்’ என்பார்கள். அங்குள்ள ஆசிரியர்களையும் குறை சொல்ல முடியாது என்பதை பின்னாட்களில் உணர்ந்தேன். மதிப்பெண் எடுப்பது தொடர்பாக அவர்களும் நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தில் இருந்தார்கள்.

மொத்தத்தில் பள்ளிப் பிராயத்துக்கே உரிய சுட்டித்தனம் சுத்தமாக இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் பேச்சே குறைந்தது. யாருடனும் சகஜமாக பேச மாட்டேன். பயங்கரக் கூச்சம், தயக்கம், இனம் புரியாத பயம்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பத்தாம் வகுப்புப் பாடம் எடுத்தார்கள். இயந்திரத்தை விட மோசமாக மாறியது வாழ்க்கைச் சூழல். பள்ளிக்கூடம் செல்வதை நினைத்தாலே காய்ச்சல் அடிப்பதுபோல இருந்தது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் என்னை 90.5% மதிப்பெண் எடுக்க வைத்துவிட்டார்கள். பள்ளியில் மூன்றாவது இடம். புகைப் படம் எடுத்தார்கள். செய்தித்தாளில் போட்டார்கள். ஆனால், துளியும் மகிழ்ச்சி இல்லை அப்போது. அந்தப் பள்ளியை விட்டு சென்றால் போதும் என்றாகிவிட்டது. அங்கு செல்லவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தேன்.

தேசிய வங்கியொன்று நடத்தும் பிரபலமான பள்ளியில் இடம் கிடைத்தது. அட்மிஷன் போட்டாயிற்று. அங்கும் கடுமையான கட்டுப்பாடுகள் என்றார்கள். கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல ஆகிவிட்டது. படிப்பே வேண்டாம் என்றேன். என் மனவோட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவர் என் அம்மா. “நீ வாடா, நான் வேலை பார்க்கும் அரசுப் பள்ளியில் உன்னைச் சேர்க்கிறேன்’ என்றார்.

‘அய்யே அரசுப் பள்ளியா? தனியார் பள்ளியே இந்த லட்சணம் என்றால் அரசுப் பள்ளி எப்படி இருக்கும்?’ என்றேன். நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர் என எல்லோரும் ‘உங்களுக்குப் பைத்தியமா? சாதாரணமாக இடமே கிடைக்காது என்று கருதப்படும் தனியார் பள்ளியிலே இடம் கிடைத்திருக்கிறது, போயும் போயும் அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டுமா’ என்று அம்மாவைத் திட்டினார்கள்.

அம்மா என்னிடம் கேட்டார், ‘என் மீது நம்பிக்கை இருந்தால் வா. அரசுப் பள்ளி என்றால் என்னவென்று காட்டுகிறேன், அரசு ஆசிரியர்கள் என்றால் யார் என்று காட்டுகிறேன். அரசுப் பள்ளி என்றால் அவமானம் இல்லை என்று காட்டுகிறேன்…’ என்றார். அம்மா அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதை முதல்முறையாகப் பார்த்தேன். அம்மாவுக்காகச் சென்றேன்.

சுற்றுலா வந்ததுபோல் இருந்தது!

கோவை அசோகபுரம் அரசுப் பள்ளி. முதல் நாள்… பையன்கள் கிழிந்த, அழுக்கு சட்டையோடு வருவார்கள், பள்ளிக்கூடம் குப்பையாக இருக்கும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். எல்லாமே நினைத்ததற்கு மாறாக இருந்தது. பெரிய மைதானம். சுற்றிலும் மரங்கள். குறிப்பாக, யாரோடும் பேசலாம், அரட்டை அடிக்கலாம் என்ற சூழல்.

முதல்முறையாக ஐந்தாறு மாணவர்களுடன் அமர்ந்து சாப்பாட்டைப் பகிர்ந்துகொண்டு சாப்பிட்டேன். ஏதோ சுற்றுலாவுக்கு வந்ததுபோல இருந்தது. ஒரு பீரியடில் மணி அடிக்க… ‘எல்லோரும் மைதானத்துக்கு ஓடுங்க’ என்றார்கள். வாழ்க்கையில் முதல்முறையாக மைதானத்தில் ஓடினேன். ‘யாருக்கு என்ன விளையாட்டு பிடிக்கும்?’ என்று கேட்டார்கள். பேட்மின்ட்டன் கற்றேன். அங்கு விளையாடிதான் மாவட்ட அளவில் பரிசுகள் வாங்கினேன்.

சகஜமாகப் பேசவே தயங்கிய நான் பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்குவேன் என்றெல்லாம் ஒருபோதும் நினைத்ததே இல்லை. வினாடி-வினா போட்டி, ராமானுஜம் கணிதப் போட்டி, அறிவியல் கண்காட்சி, தமிழ், ஆங்கிலம் கிளப் போட்டிகள் என அனைத்திலும் பரிசுகள். அந்த ஓர் ஆண்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான ஆண்டு. பாடங்களைக்கூட மாணவர்களை வைத்தே எடுத்தார்கள். அதாவது, கணிதத்தில் முதல் ஸ்டெப் ஆசிரியர் போடுவார்.

இரண்டாவது ஸ்டெப்பை ஒரு மாணவர் சொல்ல ஆசிரியர் போடுவார். மூன்றாவது ஸ்டெப்பை இன்னொரு மாணவர் சொல்லுவார். விளையாட்டாக எல்லாம் கற்றோம். பாடங்களைப் புரிந்துகொண்டு படித்தோம். பன்னிரெண்டாம் வகுப்பில் கொஞ்சம் அக்கறை எடுத்துப் படிக்கச் சொன்னார்கள். அப்போதும்கூட சிறப்பு வகுப்புகள் இல்லை. ஆசிரியர்களிடம் எப்போது வேண்டுமானாலும் தயங்காமல் சந்தேகம் கேட்கலாம். நண்பர்களைப் போல பழகினார்கள். பொதுத்தேர்வில் 90% மதிப்பெண் எடுத்தேன்.

அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதினேன். திருச்சி என்.ஐ.டி-யில் இடம் கிடைத்தது. மாநில அளவிலான நுழைவுத் தேர்வில் கிண்டி – அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அந்த நான்கு ஆண்டுகளும் வேறு ஓர் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தின. அடுத்து, கேட் (CAT) தேர்வு எழுதினேன். தேசிய அளவில் கடும் போட்டி அது. மேகாலய மாநிலம், ஷில்லாங் ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ. படிக்க இடம் கிடைத்தது.

எனது வகுப்பில் ஐ.ஐ.எம்முக்குத் தேர்வான ஒரே மாணவன் நான். அங்கு தேசிய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதச் சொல்லி போட்டிகள் வைத்தார்கள். நான்கு போட்டிகளில் தேசிய அளவில் தங்கம் வென்றேன். படிக்கும்போதே விப்ரோ நிறுவனத்தினரின் முதல் நேர்காணலிலேயே வேலை கிடைத்தது. படிப்பை முடித்த கையுடன் கடந்தாண்டு ஜூன் மாதம் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். இப்போது மற்றுமொரு உலகத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் காரணம் கோவை அசோகபுரம் அரசுப் பள்ளியும் அதன் அத்தனை ஆசிரியர்களும்தான்!” என்று முடித்தார் திலீபன்.

அசோகபுரம் அரசுப் பள்ளியைப் பொறுத்தவரை திலீபன் ஒரு தொடக்கப் புள்ளி! திலீபனைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் வேதியியல் ஆசிரியர் குழந்தைவேல் மகன் நவீன் அங்கு வந்து சேர்ந்தார். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.

திலீபன் இந்தப் பள்ளியில் சேர்ந்த அதே ஆண்டில், தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு முடித்த ஏழு மாணவர்கள் அசோகபுரம் அரசுப் பள்ளியில் வந்து சேர்ந்தனர். இப்போதும் இது தொடர்கிறது. பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் இவர்களின் ஒருங்கிணைந்த நம்பிக்கைதான் அரசுப் பள்ளிகளையும் மேலே மேலே கொண்டுசெல்லும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன!

– டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

Source….www/tamil.thehindu.com

Natarajan

காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா…

சட்டத்தை மீறக் கூடாது என்ற உணர்வு ஹாங்காங் கல்விமுறையின் அடிப்படை போதனைகளுள் ஒன்று!

கடந்த வாரம் ஹாங்காங்கில் ஓர் இந்திய அங்காடிக்குப் போயிருந்தேன். பொருட்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் ஓர் இளம்பெண். கைபேசியில் தனது மூன்று வயது மகனின் குறும்புகளைப் பற்றிப் பெருமையாக அலுத்துக்கொண்டிருந்தார்- ஆங்கிலத்தில். கடைக்காரர் அந்தப் பெண் வாங்கியிருந்த காய்கறிகள், மளிகைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், தின்பண்டங்கள் முதலானவற்றைத் தனித்தனி பிளாஸ்டிக் பைகளில் போட்டார். பின் அவற்றை இரண்டு பெரிய பிளாஸ்டிக் பைகளில் அடுக்கிக் கொடுத்தார்.

ஹாங்காங்கில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதற்கொண்டு அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகள் கொடுக்கப்படக் கூடாது; வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் மட்டும், பையொன்றுக்குக் குறைந்தபட்சம் 50 சதம் (ரூ. 4) கட்டணமாக வசூலித்துக்கொண்டு வழங்கலாம். என் முறை வந்தபோது கடைக்காரரிடம் கேட்டேன்: “அந்தப் பெண்ணிடம் பைகளுக்குக் கட்டணம் வாங்கினீர்களா?”. அவர் தலையைச் சரித்து என்னைப் பார்த்துக் கமுக்கமாகச் சிரித்தார். ஹாங்காங்கின் ஒரு லட்சம் அங்காடிகளில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு சட்டம், ஓர் இந்திய அங்காடியில் வணிகராலும் பயனராலும் எவ்வித உறுத்தலுமின்றி மீறப்படுகிறது.

கிராமங்களில் சிலர் கேட்பார்கள்- ‘படித்தவன் மாதிரியா நடந்துகொள்கிறான்?’. படிப்பு பண்பைத் தர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. நான் சந்தித்த கடைக்காரரும் இளம் பெண்ணும் படித்தவர்கள்தான். ஆனால், சட்டத்தை மதிப்பதும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் இருப்பதும் படித்தவர்கள் பின்பற்ற வேண்டிய பண்புகளாக அவர்களுக்குத் தெரியவில்லை.

இலகு ரயில்

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, நான் ஹாங்காங் வந்த புதிதில், இருபதாண்டுகளுக்கு முன்னால், புறநகர் ஒன்றில் உள்ள கட்டிடப் பணித்தலத்துக்கு உடன் பணியாற்றும் இளைஞன் என்னை அழைத்துச் சென்றான். மெட்ரோ ரயிலிலிருந்து இலகு ரயிலில் மாறிச் செல்ல வேண்டும். இலகு ரயில் புறநகர்களில் மட்டும் ஓடும், இரண்டு பெட்டிகள் மட்டுமே இருக்கும். தண்டவாளங்களும் நடைமேடையும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் நிலையங்களைப் போல பொது வெளியோ கட்டணக் கதவுகளோ இராது. பயணச்சீட்டு வாங்க சிறிய இயந்திரம் இருக்கும்.

சீட்டு இல்லாமலும் ரயிலில் ஏற முடியும், இறங்கவும் முடியும். நான் பணித்தலத்துக்குப் போகும்போதும் திரும்ப வரும்போதும் கவனித்துக்கொண்டே இருந்தேன். சீட்டு இல்லாமல் யாரும் பயணிக்கவில்லை. உடன் வந்த இளைஞனிடம் “இது உங்களுக்கு எப்படிச் சாத்தியமானது?” என்று கேட்டேன். “நாங்கள் இதைப் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்துவிடுவோம்” என்று பதிலளித்தான். அதாவது சட்டங்களை மதிக்க வேண்டும் என்று ஹாங்காங் பள்ளிகளில் சொல்லித்தருகிறார்கள்.

கல்வியும் சமூகமும்

நமது இந்நாளையக் கல்வித் திட்டத்தில் இப்படியான போதனைகளுக்கு இடமில்லை. கல்வி வணிகமயமாகி விட்டது. இந்தத் திட்டத்தில் படிக்கிறவர்கள் பண்பாளர்களாக வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் என்பது கல்வியாளர்கள் சிலர் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை. ஆனால், கூடவே இன்னொரு கேள்வியும் எழுகிறது. கல்வி வியாபாரமாவதற்கு முன்னால் படித்தவர்கள் எல்லாம் பண்பாளர்களாக இருந்தார்களா?

1916-ல் நடந்த காசி காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய காந்தியடிகள் மக்கள் பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில்லை என்று வருத்தப்படுகிறார். மாணவர்கள் ரயில் பெட்டிகளிலேறி அனைத்து இருக்கைகளையும் ஆக்கிரமித்துக்கொள்வது குறித்துக் கவலைப்படுகிறார். மாணவர்களைப் பற்றிக் கைப்புடனும் வசைப்பாங்குடனும் சொல்கிறார்: ‘அவர்கள் ஆங்கிலம் படித்திருக்கிறார்கள்’. தொடர்ந்து முயற்சித்தால் சுதந்திரத்துக்கு முன்னால் நமது பண்பு நலன்களை மேம்படுத்திக்கொண்டுவிடலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

‘மதுவையும் தீண்டாமையையும் ஒழிக்க வேண்டும், கதர் அணிய வேண்டும், புறத்தில் தூய்மையும் அகத்தில் நேர்மையும் வேண்டும்’ போன்ற போதனைகள் அவருக்கு அரசியல் விடுதலையைவிட முக்கியமானவையாக இருந்தன. காந்தியடிகள் சட்டத்தை மீறினார். அது எதிர்ப்பைக் காட்டுகிற அவரது போராட்ட வடிவம். சத்யாக்கிரகிகளிடம் அவர் வலியுறுத்திச் சொன்னார்: ‘பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்காதீர்கள்; போலீஸ் கைதுசெய்ய வந்தால் உடனே கீழடங்குங்கள்’. ஒரு நல்ல சிவில் சமூகம் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.

காந்தி தேசத்தின் இன்றைய நிலை என்ன? தாம்பரத்தில் அதிகாலை நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நான் கண்ட காட்சி எடுத்துக்காட்டாக அமையலாம். தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்த பேருந்திலிருந்து அந்தக் குடும்பம் இறங்கியது. சாலையைக் குறுக்காகக் கடந்து மையத்தை அடைந்தது. அங்கே சாலையைப் பிரிக்கும் கட்டைச் சுவரின் மீது நான்கடி உயரத்துக்கு இரும்புக் கிராதி கட்டப்பட்டிருந்தது. நடுத்தர வயதிலிருந்த தந்தை முதலில் கிராதியிலேறி மறுபக்கம் குதித்தார். அடுத்து ஏழெட்டு வயதிலிருந்த மகன் உற்சாகமாகத் தாண்டிக் குதித்தான்.

தொடர்ந்து பதின்பருவத்திலிருந்த மகள் பயணப் பொதிகளை எடுத்துக்கொடுக்க மறுபக்கத்திலிருந்த தந்தையும் மகனும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். அடுத்தடுத்துத் தாயும் மகளும் மறுபுறம் தாவினார்கள். பிறகு மொத்தக் குடும்பமும் சாலையின் அடுத்த பாதியை குறுக்காகக் கடந்து சென்றது. ஏன் இத்தனை பிரயாசை? பேருந்து நிறுத்திய இடத்திலிருந்து சிறிது தொலைவில் பாதசாரிகள் கடப்பதற்கான வெள்ளைக்கோட்டுப் பாதை இருந்தது. அவ்வளவு தூரம் நடப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. இந்தக் குடும்பத்தில் வளர்கிற சிறுவனுக்குச் சட்டத்தைக் குறித்து என்னவிதமான மதிப்பீடுகள் உருவாகும்?

ஹாங்காங் பள்ளிகளில் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சொல்லித்தருகிறார்கள். அதே வேளையில் மொத்த சமூகமும் சட்டத்தின் மாட்சிமையை (ரூல் ஆப் லா) பேணுவதைக் கடமையாகக் கொண்டிருக்கிறது. பிள்ளைகள் பள்ளியிலிருந்தும் கற்கிறார்கள், சமூகத்திட மிருந்தும் கற்கிறார்கள்.

காந்தி ஏமாந்தார்

இந்த இடத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். அதிகாலை நேரம். நல்ல கூட்டம். மற்ற நகரங்களில் அலுவலகங்கள் திறக்கிற நேரத்திற்குள் போய்ச்சேர்கிற அவசரத்தில் கார்பரேட் கனவான்கள் வரிசைகளில் நின்றிருந்தார்கள். ஒரு இளைஞன் வரிசையை முறித்துச் சோதனை வாயிலை நோக்கி முன்னேறினான். நான் தடுத்தேன். தன்னிடத்தில் மடிக்கணினி இருக்கிறது, அதைத் தனியாகச் சோதிப்பார்கள், அதனால் முன்னால் செல்ல வேண்டும் என்றான். அந்நேரம் வரிசையில் நின்றவர்களில் பாதிப் பேர்களின் தோள்பட்டைகளில் மடிக்கணினிப் பைகள் தொங்குவதைச் சுட்டிக்காட்டினேன்.

தன்னுடைய விமானம் புறப்படுவதற்கு அதிக அவகாசமில்லை என்றான். வரிசையில் நிற்கும் பலருக்கும் அப்படியே என்றேன். இதற்கு மேல் என்னுடன் வாதிடுவது தன்னுடைய நேரத்தை வீணாக்குகிற செயல் என்று அவன் கருதியிருக்க வேண்டும். அவனது அடுத்த செய்கை நான் முற்றிலும் எதிர்பாராதது. ஏர்-இந்தியா விளம்பரத்தில் வரும் மகாராஜாவைப் போல் சிரம் தாழ்த்தி ‘ ஐயா, செல்லுங்கள்’ என்பதுபோல் கையை முன்னோக்கிக் காட்டினான். என்னை அவமானப்படுத்துவது அவன் நோக்கமாக இருக்கலாம். இந்த இளைஞனுக்கு இவ்வளவு சூழ்ச்சியைக் கற்றுத்தந்தது எது? அவன் கற்ற கல்வியா? அவன் வாழும் சமூகமா?

அந்த இளைஞனின் கண்களைப் பார்த்தேன். அதில் களிப்பு இருந்தது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு அதே களிப்பை ஹாங்காங் இந்திய அங்காடி வணிகரின் கண்களிலும் பார்த்தேன். அது ஆங்கிலக் கல்வி தந்த களிப்பு, சட்டத்தை மீறுவதால் உண்டாகிற களிப்பு, நூறாண்டுகளாகக் காந்தியை ஏமாற்றிவருகிற களிப்பு.

மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Source….www.tamil.thehindu.com

Natarajan

Message For the Day…: Avoid Evil deeds , Harmful and Hateful Thoughts…”

The inborn desires (samskaras) in life result in some tendencies that are stronger than the rest and stand out. The feeling that dominates the moment of death works with great force in your next lives. Therefore direct the entire current of life toward acquisition of the mental tendency (samskara) that will make your end a sweet Divine consummation. This truth must guide you for the journey of this life too, for inborn desires are the wherewithal for this journey as well as the next. Therefore from now, always keep death, which is inevitable, before the eye of memory. With this approach engage yourself in this life with good wishes for all, with strict adherence to truth, seeking always the company of the good, and with the mind always fixed on the Lord. Avoid evil deeds, hateful and harmful thoughts, and attachment to the world. If you live thus, your last moment will be pure, sweet, and blessed.

Sathya Sai Baba

நம் கல்வி… நம் உரிமை!- அரசுப் பள்ளிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தும்!

அரசுப் பள்ளியால் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்விக்கு நாகேந்திரனை (வயது 24) விடச் சிறந்த உதாரணத்தைக் காட்டுவது கடினம். அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை மேலும் மேலும் துலக்கமாக்கிக் காட்டுவதுதான் நாகேந்திரனின், அதாவது டாக்டர் நாகேந்திரனின் கதை.

மதுரையில் மர வியாபாரம் செய்துகொண்டிருந்தவர் கண்ணன். எதிர்பாராத விதமாகத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் சுமைகளைச் சமாளிக்க முடியாமல் காரைக்குடிக்கு இடம்பெயர்ந்தார். அப்போது அவரது மகன் நாகேந்திரன் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அடுத்த வேளை சாப்பாடுகூட நிச்சயமற்ற சூழலில் இருந்த இந்தக் குடும்பத்துக்கு உறவுகள் கைகொடுத்துப் பட்டினி இல்லாமல் பார்த்துக்கொண்டன. காரைக்குடியில் உள்ள பிரபல மளிகைக் கடை ஒன்றில் மளிகைச் சிட்டை எழுதும் வேலை கண்ணனுக்கு. அவரது மனைவி லதாவுக்கு அந்தக் கடையிலேயே கணக்கு எழுதும் வேலை. இருவரது மாதச் சம்பளத்தைக் கூட்டினாலும் மூவாயிரம்கூட இருக்காது. ஆனாலும், சராசரி பெற்றோரைப் போல இவர்களும் தங்கள் மகன் நாகேந்திரனை ஆங்கில வழியில் படிக்க வைக்க பிரயாசைப்பட்டு, தனியார் பள்ளியில் சேர்த்தார்கள். பொருளாதாரச் சூழல், ஐந்தாம் வகுப்புக்கு மேல் நாகேந்திரனை அங்கே அனுமதிக்கவில்லை. ஆறாம் வகுப்புக்கு, அரசு உதவி பெறும் எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

பருத்திப் பால் விற்றபின் பள்ளிக்கூடம்

பிறகு நடந்தவற்றை நாகேந்திரனின் அம்மா லதா விவரிக்கிறார். “அந்த வயசுலயே குடும்பச் சூழலை நாகேந்திரன் நல்லா புரிஞ்சுக்கிட்டான். பாதி நாள் பள்ளிக் கூடத்துல சத்துணவு சாப்பிடப் பழகிக்கிட்டான். எங்க அண்ணன் எங்களுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காங்க. இவனையும் பொம்பளப் பிள்ளையையும் (நாகேந்திரனின் தங்கை) படிக்க வைக்கக் கூடுதலா கொஞ்சம் பணம் தேவைப்பட்டுச்சு. அதுக்காக பால் பாக்கெட் வாங்கி வீடு வீடா போட்டோம். தினமும் காலையில பருத்திப் பால் காய்ச்சி கேன்ல ஊத்திக் குடுப்பேன். அதை நாகேந்திரன்தான் ரெண்டு மூணு தெருவுக்குப் போயி வித்துட்டு வந்து பள்ளிக்கூடத்துக்குப் போவான். அதேமாதிரி, சாயந்திரம் வந்ததும் பக்கோடா போட்டுக் கொடுப்பேன். அதையும் வித்துட்டு வந்துதான் படிக்க உக்காருவான்.”

“இவன் நல்லா படிக்கிறான்னதும் பள்ளிக்கூட ஆசிரியர்கள்லாம் அவனை நல்லாவே

ஊக்கப்படுத்துனாங்க. எங்களால முடியாதப்ப இவனுக்கு அப்பப்ப பண உதவியும் செஞ்சுருக்காங்க. பத்தாம் வகுப்புல 461 மார்க் எடுத்தான். பன்னிரண்டாம் வகுப்புல 1,151 மார்க் எடுத்துப் பள்ளியின் முதல் மாணவனா தேர்வானான். அப்பெல்லாம் இவன டாக்டருக்குப் படிக்க வைக்கணும்கிற எண்ணம் எங்களுக்கு இல்ல. புள்ள நாலு வருசம் இன்ஜினீயரிங் படிச்சுட்டு ஏதாச்சும் ஒரு வேலையில உக்காந்தான்னா, அவன் தலையில குடும்ப பாரத்த எறக்கி வெசுட்டு நாம அக்கடான்னு இருக்கலாம்னுதான் நினைச்சிருந்தோம். ஆனா, நல்ல மார்க் எடுத்ததால மெடிக்கல் காலேஜ்ல சேர்க்க வேண்டியதாப் போச்சு’’ என்று பெருமிதம் பொங்கச் சொன்னார் லதா.

தொடரும் வெற்றிப் பயணம்

2009-ல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நாகேந்திரனுக்கு இடம் கிடைத்தது. ஆனாலும், அரசு நிர்ணயித்த சொற்பமான கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத கஷ்டத்தில் இருந்தார் கண்ணன். விஷயத்தைக் கேள்விப்பட்ட நாகேந்திரனின் ஆசிரியர்கள், தங்களுக்குள் நிதி திரட்டி மொத்தமாய்ப் பதினைந்தாயிரம் ரூபாயை நாகேந்திரனிடம் கொடுத்தார்கள். அதேசமயம், நாகேந்திரனின் நிலைமையை அறிந்த தேனி ரேணுகா மில்ஸ் நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது. மருத்துவக் கல்வியை முடிக்கும் வரை அவருக்கான விடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை ரேணுகா மில்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இத்தனை பேரின் உதவிக்கரங்களைப் பற்றிக்கொண்டு மருத்துவக் கல்லூரிக்குள் கால் பதித்த நாகேந்திரன், முதல் ஆண்டிலேயே ஒரு பாடத்தில் தங்கப் பதக்கம் வாங்கினார். 80% மதிப்பெண்ணுடன் இந்த ஆண்டு தனது மருத்துவக் கல்வியை முடித்திருக்கும் நாகேந்திரன், இறுதி ஆண்டிலும் இரண்டு தங்கப் பதக்கங்களைத் தட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

குடும்ப நிலையைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்!

தற்போது பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நாகேந்திரன், “எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் பெற்றோரும் கோயில் கட்டிக் கும்பிடப்பட வேண்டியவர்கள்.

அதிலும், குறிப்பாக சுந்தர்ராமன் சாரையும் ஹென்றி பாஸ்கர் சாரையும் சொல்லியே ஆக வேண்டும். எனது ஆசான்களைப் போலவே ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் நல்ல ஆசான்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். லட்சங்களைக் கொட்டிக் கொடுத்துப் படித்தால்தான் லட்சியத்தை அடைய முடியும் என்பது போலியான மாயை. எனது குடும்பத்தின் கஷ்ட நிலைமை எனக்குக் கண்கூடாகத் தெரிந்தது. அதுதான், எப்பாடு பட்டாலும் முன்னுக்கு வர வேண்டும் என்கிற உந்துதலை எனக்குள்ளே வளர்த்தது. எனவே, குடும்பத்தின் நிலைமையைப் பிள்ளைகளுக்குப் புரியவைத்தால் தானாகப் படித்து முன்னுக்கு வந்துவிடுவார்கள்’’ என்று சொன்னவர், “விரைவில் மருத்துவப் பணியைத் தொடங்கப்போகும் நான் என் வாழ்நாளில் எந்த ஆசிரியர் வந்தாலும் கட்டணமின்றி வைத்தியம் பார்ப்பது என்ற தீர்மானத்தை எனக்குள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்’’ என்றும் சொன்னார்.

கைதூக்கி விட நாங்கள் தயார்

நாகேந்திரனின் அப்பா கண்ணனிடம், “உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்டதுதான் தாமதம். பொலபொலவெனக் கண்ணீரைக் கொட்டினார். “எங்களுக்குக் கடவுள் கொடுத்த வரம்தான் அவன்’’ என்று சொன்னவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நாகேந்திரன்குறித்துப் பேசும்போது, “பத்தாம் வகுப்பிலேயே ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர முடியலைன்னு அழுதவன், பன்னிரண்டாம் வகுப்பில் அதைச் சாதிச்சுட்டான். இந்த வெறி எல்லா பிள்ளைகளுக்கும் இருக்கணும். அப்பதான் முன்னுக்கு வர முடியும். நாகேந்திரனால் எங்கள் பள்ளிக்குப் பெருமை. இவனைப் போலவே இன்னும் நான்கைந்து பசங்களுக்கு மேல்படிப்புக்கு நாங்க உதவி செஞ்சிருக்கோம். ஆர்வமுள்ள பசங்க எத்தனை பேர் வந்தாலும் கைதூக்கி விட நாங்க தயாரா இருக்கோம்’’ என்று சொன்னார்கள்.

அண்ணன் காட்டிய வழியில் நாகேந்திரனின் தங்கை சொர்ணமுகியும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்று, இப்போது மதுரை தியாகராஜா கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறார்.

தனியார் பள்ளிகளில் ஒருபோதும் நிகழாது இந்த அதிசயம். ஏனெனில், பணம்தான் அவற்றைப் பின்னின்று இயக்கும் சக்தி. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை சமூக நீதிதான் அவற்றைச் செலுத்தும் சக்தி. அரசாலும் மக்களாலும் கைவிடப்பட்டுக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகள்தான் கடந்த காலத்தில் எண்ணற்ற நாகேந்திரன்களை உருவாக்கியிருக்கின்றன. நாகேந்திரன்கள் இனி உருவாவதும் அரசுப் பள்ளிகளின் கையில்தான் இருக்கிறது.

– குள. சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in

Natarajan