படித்து ரசிக்க … சிந்திக்க …” கிட்டிப்புள் கிரிக்கெட் ஆன உண்மை …” !!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்த பின் தான், இதை எழுத வேண்டும் என நினைத்தேன். உலகக் கோப்பை போட்டியின் போது, இப்படி ஒரு கட்டுரையை எழுதினால், பலரது கோபத்திற்கு ஆளாகியிருப்பேன். இத்தனைக்கும், நானும் கிரிக்கெட் ரசிகன் தான். 1971ல் பிடித்த இக்காய்ச்சல், இன்னும் என்னை விட்டபாடில்லை.
இந்தியா ஆடினால், நான் எச்சூழ்நிலையில் இருந்தாலும், ஆட்டத்தின் மீது ஒரு கவனம் இருக்கும். வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தாலோ, உடன் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களிடம், ‘ஸ்கோர்’ கேட்பேன். இவ்வளவு ஏன்… ஆடுவதிலும் ஆர்வம் உண்டு. இவ்வயதிலும், பந்து வீச வாய்ப்பு கிடைத்தால், ‘ஸ்டம்பை’ பதம் பார்ப்பேன்.
இப்படிப்பட்ட கிரிக்கெட் ரசிகராக, ஆட்டக்காரராக இருந்தும், எதற்கு இப்படி ஒரு எதிர்மறை தலைப்பு, ஏன் கிரிக்கெட்டிற்கு எதிராக ஒரு எழுத்துப் போர் என்று கேட்கிறீர்களா? அதற்கு முன், கிரிக்கெட் ஆட்டத்தின் வரலாற்றுப் பின்னணியை, சிறிது விளக்கி விடுகிறேன்.
இங்கிலாந்து கண்டுபிடித்ததாக மார்தட்டிக் கொள்ளும் இந்த ஆட்டம், நம் நாட்டின் கிட்டிப்புள்ளிலிருந்து தோன்றியது என்றால் நம்புவீர்களா?
கிட்டிப்புள் குழிக்குள் விழுந்தால் அல்லது குழியிலிருந்து ஆட்டக் கழியினால் அளந்து, ஒரு ஆட்டக் கழியின் தூரத்திற்குள், கிட்டி புள் விழுந்திருந்தால், ஆள், ‘அவுட்’ என்று பொருள். வீசுவது, வீசியதை அடிப்பது, அதுபோய் விழும் தூரத்தை கணக்கிட்டு, ஆடுபவருக்கு எண்கள் தருவது, ‘கேட்ச்’ பிடித்தால், ‘அவுட்’ ஆவது என்று எல்லாமே, கிரிக்கெட் ஆட்டத்தின் தன்மைகளை அப்படியே கொண்டிருக்கும்.
வெள்ளையன் ஆள வந்தான்… பார்த்தான் நம் ஆட்டத்தை… அடிக்கிற கட்டையை, ‘பேட்’ ஆக்கினான்; வீசுகிற புள்ளைப் பந்தாக்கி, அளவையின் அடிப்படையில், ‘பவுண்டரி’ உருவாக்கினான்; கிட்டிப்புள் குழியை, ‘ஸ்டம்ப்’ ஆக்கினான்; அப்படியே காப்பியடித்து, கிட்டிப்புள் என்பது, வாயில் நுழையாததால், கிரிக்கெட் என்றான்.
கிரிக்கெட் என்ற சொல்லின் உண்மையான அகராதி விளக்கம் என்ன தெரியுமா? ‘கத்தியபடி இருக்கிற பூச்சி’ என்று பொருள்.

பூச்சிக்கும், கிரிக்கெட் ஆட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? எனவே, இது, காரணப் பெயரே அல்ல; தமிழிலிருந்து திருடப் பெற்ற ஒரு பெயர். உதக மண்டலம், வெள்ளையனின் வாயில் நுழையாததால், ஊட்டி என்றானே… அக்கதை தான் இதுவும்!
அதே போன்று, இங்கிலாந்தில் வெயில் நாட்கள் குறைவு; வெயிலோ, இவர்களுக்கு மிகப் பிடித்த ஒன்று. எனவே, வெயிலில் கிடக்கப் பிரியப்பட்டு ஐந்து நாட்கள் வரை ஆடும் ஆட்டமாக மாற்றிக் கொண்டனர். இங்கிலாந்து நாட்டில், கிரிக்கெட் அரங்குகளில் கூரையெல்லாம் பிற்காலத்தில் வந்தது தான்.
இது, இங்கிலாந்திற்கு பொருந்தும் ஆட்டம் தான். ஆனால் நமக்கு!
இந்திய அணி, ஆண்டிற்கு, 80 முதல், 100 நாட்களாவது கிரிக்கெட்டில் ஈடுபடுகிறது. இவ்வளவு நாட்களும், இந்திய மனித பலம், கும்பகர்ணனைப் போல, உறங்கப் பார்க்கிறது. எத்தனையோ கோடி இந்தியர்கள், தங்கள் கடமைகளை மறந்து, வேலையை புறக்கணித்து, ‘டிவி’ முன் அமர்ந்து, நேரத்தை ஏகமாய் தொலைக்கின்றனர். பெண்களின் நேரத்தை சீரியல்கள் விழுங்க, ஆண்களின் நேரத்தை, கிரிக்கெட் தொடர்களான, ‘சீரிஸ்’கள் கபளீகரம் செய்கின்றன.
இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு, மதிப்பெண்கள் குறைந்து போக, பெற்றோர், சில மதிப்பெண்களுக்காக, பல லட்சங்களை கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் கூடப் பரவாயில்லை; ஒரு பேட்ஸ்மேன் செஞ்சுரி அடிக்கவில்லை என்று பல மாணவர்கள் கலங்குகின்றனர்; சோர்ந்து போகின்றனர். இதனால், இவர்கள் போட வேண்டிய செஞ்சுரியில் (மதிப்பெண்) பாதிப்பு ஏற்படுகிறது.
கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள், இந்தியாவின் தோல்வியில் சோர்ந்து போய், மனநலம் பாதிக்கப்பட்டு, உற்சாகமிழந்து, சோகமாகின்றனர். இதயம் பாதிக்கப்பட்டு இறந்து போன வரலாறுகளும் உண்டு. இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 60 சதவீதம் மட்டுமே! அப்படியானால், 40 சதவீத கவலையை இவர்கள் சுமக்கத் தான் வேண்டுமா? இதைப்பற்றி கவலைப்பட வேண்டியவர் தோனி தானே!
கிரிக்கெட் நம் பணிகளையும், மனநிலையையும் பாதிப்பதை, ஒரு எல்லைக்கோடு போட்டு நிறுத்துவோம். நிறுத்தினால் தான், வாழ்க்கையில் நாம் சிக்சர் மழை பொழிய முடியும்!

லேனா தமிழ்வாணன்  in http://www.dinamalar.com

Natarajan

படித்ததில் பிடித்தது …” நதிகள் சுத்தமாகும் நாள் நமக்கு நல்ல நாள் …” !!!

ஏப்., 14 தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு அன்று, ஆறுகளில் நீராடினால் பாவம் நீங்கும் என்பர் முன்னோர். புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவம் நீங்கும் என்றாலும், சிலர், இந்நதிகளில் நீராடி, ஊருக்கு திரும்பியதும், மீண்டும் பாவச் செயல்களை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். இவர்களுக்காகவே சொல்லப்பட்ட புராணக்கதை இது:
கங்கையில் நீராட, மகான் ஒருவர் வந்தார். கெட்டவர்கள் மட்டுமே நீராடி, பாவங்களைக் கரைத்து விட்டு போகும் நிலையில், நல்லவர் ஒருவர் தன்னில் நீராட வருகிறாரே என, கங்கா மாதா பெரும் மகிழ்ச்சி அடைந்தாள்.
அவர் தன்னில் கால் வைக்கப் போகிறார் என, அவள் எதிர்பார்த்திருந்த வேளையில், கங்கையை அடைந்த முனிவரின் முகம், அஷ்ட கோணலாக மாறியது. காரணம், சிறிது தொலைவில், கங்கையில் சாக்கடை கலந்து கொண்டிருந்தது. இதனால், குளிக்காமல் கிளம்பினார் முனிவர்.
இதைக் கண்ட கங்கை, ஒரு சாதாரணப் பெண்ணாக வடிவெடுத்து, ‘மகானே… ஏன் கங்கையில் குளிக்காமல் செல்கிறீர்?’ என்று கேட்டாள்.
முனிவர் சாக்கடையை கை காட்ட, ‘ஐயனே… மக்களின் பாவக் கரைசலை விட, இந்த கழிவுநீர் பெரிய விஷயமே அல்ல. கங்கை பாவங்களை மட்டுமல்ல, இந்த சாக்கடையையும் தன்னுள் வைப்பதில்லை; அதைக் கடலில் தள்ளி விடுகிறாள்…’ என்றாள்.
உடனே, கடலரசனிடம் சென்று, இது குறித்து விசாரித்தார் முனிவர். அவனோ, ‘பாவங்களை நான் வைத்துக் கொள்ள மாட்டேன்; அது, சூரியனால் மேலே எடுத்துச் செல்லப்பட்டு விடும்…’ என்றான்.
முனிவர், சூரியனிடம் கேட்டபோது, ‘அதை, மேகங்களிடம் அனுப்பி விடுகிறேனே… அவற்றைக் கேளுங்கள்…’ என, தப்பித்துக் கொண்டார்.
முனிவரும் விடாப்பிடியாக மேக மண்டலத்திடம் விசாரித்தபோது, ‘மகானே… மக்களின் பாவங்கள் மீண்டும் அவர்களையே அடையும் வகையில், மழையாகப் பொழிந்து விடுவேன். பாவத்தை செய்த மக்கள், அதையே மீண்டும் அனுபவிக்கின்றனர்…’ என்றது!
இக்கதை உணர்த்தும் உண்மையை புரிந்து கொண்டால், ஆறுகளை அசுத்தப்படுத்த மாட்டோம்.
தமிழ் புத்தாண்டாகட்டும், இதர விழாக்கள் ஆகட்டும், புனித தீர்த்தங்களில் நீராடச் செல்லும் போது, மனதில் நல்ல எண்ணங்கள் நிறைந்திருக்க வேண்டும். ‘இந்த தீர்த்தத்தில் மூழ்கும் நான், இனி, பாவச் செயல்களை செய்ய மாட்டேன்…’ என, உறுதியெடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் செய்த பாவங்கள், நம்மையே திரும்ப வந்தடையும்.
இன்று, நாட்டில் உள்ள அனைத்து புனித தீர்த்தங்களும் பாழாக்கப்பட்டு வருகின்றன. கங்கையை சுத்தம் செய்ய, பல கோடி ரூபாய் தேவைப்படுகிறது. காவிரி, தாமிரபரணி, குற்றாலம் போன்ற புனித நதிகளும், கேளிக்கை பொருட்களாக மாறி விட்டன. நீர்நிலைகளை சுற்றுலா கண்ணோட்டத்தில் பார்க்கின்றனரே தவிர, எதிர்காலத்தில் குடிநீருக்கும், விளைச்சலுக்கும் பயன்படும் இடமாயிற்றே என்ற எண்ணம் இல்லாமல் போய் விட்டது.
புதிய ஆண்டிலாவது, நீர்நிலைகளைக் காக்க உறுதியெடுப்போம். இதை, ஒரு இயக்கமாக மாற்றி விட்டால், எல்லாரும் வளமாக வாழலாம்.

தி.செல்லப்பா in  www.dinamalar.com 

Natarajan

Message For the Day…” How to Lead a Divine Life …” ?

There is no special membership that entitles you to a Divine Life. Every struggle to realise the unity behind all the multiplicity is a step on the path of Divine Life. You have to churn the milk if you wish to separate and identify the butter that is immanent in it. So too, you must carry on certain processes of thought and action in order to get to the hard core of faith that this world is false; it is a funny mixture of real and unreal (Sathyam and Asathyam). To lead a Divine Life, you cannot permit the presence of the slightest dross in character or delusion in intellect. People dedicated to it must exemplify this by precept and practice. Wipe out the root causes of anxiety, fear and ignorance. Then your true personality will shine forth. Anxiety is removed by faith in the Lord; the faith that tells you that whatever happens is for the best and that the Lord’s Will be done.

Sathya Sai Baba

பசி நீக்கிய ஹஜ் பணம்….

செருப்பு தைக்கும் தொழிலாளியான அப்துல் கறீம் பாக்தாத் நகரில் வாழ்ந்துவந்தார். ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்பது அவரின் நெடு நாளைய விருப்பம். அதற்காக ஒவ்வொரு நாளும் தன்னுடைய உழைப்பிலிருந்து ஒரு சிறு தொகையை உண்டியலில் சேமித்துவந்தார். பல வருடங்களுக்குப் பிறகு ஹஜ் செல்வதற்கான தொகை சேமிப்பின் வழியாகத் திரண்டுவிட்டது. அந்த வருடம் ஹஜ் பயணக் குழுவினருடன் தாமும் சேர்ந்து புறப்பட அப்துல் கறீம் ஆயத்தமாகிவிட்டார்.

பயணம் புறப்படுவதற்கு ஒரு சில நாட்களே எஞ்சியிருந்த நிலையில் அவர் உற்சாகமாக இருந்தார். பயணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது, அவரது குட்டி மகன் அழுதுகொண்டே வந்தான். அழுகைக்கான காரணத்தைக் கேட்டார் அப்துல் கறீம். அதைக் கேட்டதும் அவருக்கு கோபம் வந்தது.

பாக்தாதில் அப்துல் கறீமின் இளமைக்கால நண்பர் வீட்டில் அவரது குடும்பத்தினர் கோழி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அப்துல் கரீமின் மகன் அங்கே போய் தனக்கும் அந்த உணவு வேண்டும் என்று கேட்டிருக்கிறான். அப்துல் கறீமின் நண்பரோ கோழியைக் கொடுக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார். அவமானம் தாங்காமல் சிறுவனும் தன் தந்தையிடம் அழுதுகொண்டே நடந்ததைச் சொல்ல அப்துல் கறீமிற்கு தன்மானம் பொங்கியது.

பரபரவெனத் தன் மகனின் கையைப் பிடித்துக்கொண்டு நேராக நண்பரின் வீட்டிற்கு மனக்கொந்தளிப்புடன் சென்றார். நண்பரைப் பார்த்து சூடாக இரண்டு சொல் கேட்டார் அப்துல் கறீம். அந்த நண்பரோ தன் கண்களில் கண்ணீர் பொங்க உண்மை நடப்பை விளக்கினார்.

“ நண்பா ! நானும் குடும்பத்தினரும் பல நாட்கள் பட்டினியாக இருந்தோம். உண்பதற்கு எதுவும் இல்லை. மனைவியும் குழந்தைகளும் பசி தாங்கவியலாமல் அரை மயக்கமாகி விட்டனர். யாரிடமும் கையேந்தவும் மனது இடம் கொடுக்கவில்லை. இச்சூழ்நிலையில்

மனம் நொந்து நான் கடை வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது கோழிக்கடையிலிருந்து இறந்த கோழி ஒன்றை வெளியே எறிந்தனர். யாரும் கவனிக்காத நிலையில் நான் அதை அப்படியே வீட்டிற்கு கொண்டு வந்து விட்டேன். அதை சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் உன் மகன் வந்து உணவைக் கேட்டான். உயிரைத் தக்க வைத்துக்கொள்ள வேறு வழியில்லாத நிலையில் தானாகச் செத்த கோழியை உண்பது எனக்குக்கூடும்.

ஆனால் அதை எப்படி உன் மகனுக்கு நான் கொடுக்க முடியும் ? அதனால்தான் அவன் தப்பித்தவறிக்கூட அதை உண்டுவிடக் கூடாது என்பதற்காகவே உன் மகனிடம் நான் கடுமையாக நடந்துகொண்டேன்” என்றார். உற்ற நண்பனின் பசியைக்கூட அறிய முடியாத உணர்வற்றவனாக ஆகிவிட்டோம் என்று கதறிய அப்துல் கறீம் ஹஜ் பயணத்திற்காகத்

தான் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் தனது நண்பனிடம் கொடுத்துவிட்டார். அந்தப் பண உதவி நண்பரின் குடும்பத்தினரின் பசியையும் வறுமையையும் நிரந்தரமாகத் துடைத்தெறிந்து விட்டது. நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நகரின் தலைமை முல்லாவை எட்டின. அவர் அந்த வார வெள்ளிக்கிழமை தொழுகை உரையில் மக்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்.

“என் அருமை சகோதரர்களே!! சுவனத்திற்கு நுழைவதற்கு ஒரே வழிதான் உண்டு என யார் சொன்னது ? ஹஜ் பயணம் நமது பாவங்கள் அனைத்தையும் அழிக்கக்கூடியதுதான். நம்மோடு வாழும் சக மனிதனை பசியினால் அழிய விட்டு வேடிக்கை பார்ப்பதை அல்லா விரும்ப மாட்டார். அப்துல் கறீம் தனது ஹஜ் பயண வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனால் அவர் செய்த கொடையின் பயனாக அவருக்கு எண்ணற்ற ஹஜ் வழிபாட்டின் நன்மைகளைக் கொடுப்பதற்கு இறைவனால் முடியும்தானே? அறத்தின் வழியில் நம்மைச் செயல்படத் தூண்டுவதுதான் வழிபாடுகளின் இறுதி இலக்காகும்.” எனக் கூறினார்.

Source …….www.tamil.thehindu.com
Natarajan

Message For the day…” All Troubles Arise From ” I ” and ” Mine ” …”

Becoming a prey to peacelessness, you seek Divine through various means. What is the cause of your sorrow? Is it due to unfulfilled desire or the failure of your efforts? Are you miserable because you have not got various possessions, or failed to win a lottery? Lamenting over trifles, you are forgetting your divinity. These are not real troubles at all. The real cause of sorrow is attachment to the body, identifying oneself with the body. All sorrow arises from the feelings of ‘I’ and ‘Mine’. It is very essential to reduce deha-abhimaanam (attachment to the body). Desires are a source of pleasure, but they are also the cause of your grief. You must bring your mind under control. Even thousands of men cannot hold back a fast-moving train. But the train comes to a complete stop the moment brake is applied. The vagaries of your mind are just like that. When you control your mind, all sorrows will cease.   

Sathya Sai Baba

 

Message For the Day…” Desire and Greed are Your Perpetual Enemies…”

A person filled with greed, fear and anger cannot achieve anything in this world. Excessive desires degrade man. You cannot give up desires entirely. But there should be a limit to them. When they exceed the limits you will go astray. Desires are dreadfully dangerous. Today’s enemy may become tomorrow’s friend and vice versa. But desire and greed are your perpetual enemies. They will haunt ceaselessly. The Gita clearly declares desire as the Nithya-shathru (eternal enemy) of man. Hence keep desire under control. Embodiments of Divine love! Always remember, the person without egoistic pride will be liked by everyone (Maanam hithvaa priyo bhavathi). The secret to be free from grief is to be without hatred (Krodham hithvaa na sochathi). One who has given up desire is free from worries (Kaamam hithvaa aarthona bhavathi). If you overcome greed you will become happy(Lobham hithvaa sukhee bhavathi). 

Sathya Sai Baba

Message For the day…” God Tests His Devotees only to Lift them up to a Higher Level…”

People want to get all they desire and get disillusioned or disappointed when their desires don’t materialise. You cannot always have pleasure. Pleasure is an interval between two periods of pain. They are like sunshine and shadow. Accept both with equanimity. Sandalwood gives more and more fragrance when it is subjected to more and more grinding. Sugarcane yields tasty juice when it is nicely crushed. Gold gets purer and refined when it is burnt and melted in fire. So also a true devotee will never falter in their love for God even when faced with troubles and obstacles in their life. God tests His devotees only to lift them up to a higher level in the spiritual ladder. True devotees lead sacred lives which gets sanctified when they face obstacles and problems with full faith in the Divine.

Sathya Sai Baba

Dancing Traffic Light !!!

 

This is a Brilliant Idea! Can’t Wait to See It…

We all hate waiting. That is why many pedestrians don’t have the patience to wait at the traffic light, preferring to cross whenever they deem fit. To increase pedestrian safety, an idea was born: What if we make the red pedestrian traffic light so entertaining, people would be happy waiting? Here is what happened with that idea…

We believe that smart ideas can turn the city into a better place. Like a dancing traffic light that makes people wait and watch rather than walk through the red light. FOR more safety. #WhatAreYouFOR

source….. YOU TUBE and http://www.ba-bamail.com

Natarajan

Message For the Day…” Regard anything That Happens as a Gift from God …”

The devotee’s feelings determine their concept of God. When a devotee prays, “Oh Lord! I am suffering intensely. Can’t you see the troubles I am going through?” The Lord appears to him only as a pair of eyes. Today, most people meditate and during meditation, they appear like yogis. After the meditation is over, they return to their daily activities, immersing themselves in mundane pleasures. This is not the way of life the Lord preached. Lord Krishna declared: Sathatham Yoginah (Be yogis at all times). Think of the Divine at all times, in all situations, in whatever you see, do, say or experience. To pray to God when you are comfortable and to blame God when you are in trouble reflects a selfish and narrow outlook. What is bound to happen cannot be prevented. Regard anything that happens as a gift from God. It is only when you develop such faith and love for God that true spirituality can grow.

Sathya Sai Baba

” இதுவும் ஒரு புரியாத புதிரா ? …பதில் சொல்லு மனிதா …”

 

இந்த மண்ணில் எத்தனை  நாடு….  எத்தனை மனிதர் கூட்டம்
ஒவ்வொரு நாட்டுக்கும்  ஒரு எல்லைக்  கோடு வேறு !!!
மொழி எத்தனை …மனித  இனம் , மதம்  எத்தனை எத்தனை !!!
அத்தனையும் தாங்குகிறாள்   ஒரு தாய் … இந்த  பூமித் தாய் …
இந்த மண்ணை  விட்டு  விண்ணுலகம் செல்லும்  மனிதர் கூட்டம்
அத்தனை பேருக்கும் இருக்குமா  இடம்  விண்ணுலகில் ? …
இனம்  மொழி மதம்  பார்த்து இட ஒதுக்கீடும் கிடைக்குமா  அங்கே ?
புரியாத புதிர் இது… விடை  தெரியாத  கேள்வியும்  இது …பின்
இருக்கும் இடத்தில்  இன்று  ஏன்  இந்த ஆட்டம் …
ஒருவர் மேல் ஒருவர்  காட்டம் ? …இதுவும்
ஒரு புரியாத  புதிரா ? …பதில்  சொல்லு  மனிதா
ஒரு நிமிடம் யோசித்து …!!!
நடராஜன்
7ஏப்ரல் 2015