” மின்னல் என மின்னி விண்ணில் கலந்த நட்சத்திரம் …மாண்டலின் சீனிவாஸ்…”

” நேயர்  விருப்பம்”   நிகழ்ச்சி இந்த மண்ணில்  நடக்கும் போதே ,  ‘இறை விருப்பம்’  உன் இசை கேட்க  உன்னை விண்ணுக்கு அழைத்து

விட்டதோ ?  ….”

இந்த மண்ணிலும்  விண்ணிலும்  என்றும் உன் இசை ஒலிக்கும் …

நடராஜன்

மாண்டலின் ஸ்ரீநிவாஸுக்கு ஓர் அஞ்சலி.

 

 

  

 

நன்றி-தீபம்; பால ஹனுமான்.

மாண்டலின் ஸ்ரீனிவாஸின் வீட்டினுள்ளே நுழைந்தவுடன், நம் கண்களில் தென்படுவது கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் பிரம்மாண்டமான சத்ய சாயியின் புகைப்படம். இடது பக்க சுவரில் காஞ்சி பரமாச்சாரியாரின் பெரிய புகைப்படம். அப்படியே மாடிக்குச் சென்றால் ஹால் முழுக்க தெய்வத்திரு உருவங்கள்; தவிர, அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், பல்வேறு விருதுகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இப்படி நிறைய.

விசாலமான பூஜை அறையில், சுவரில் நடுநாயகமாக பாபா புகைப்படம். அதன் அருகில் தேக்கு மரத்தில் செய்த நாற்காலி. அதில் குஷன். பட்டையான ஜரிகை கொண்ட வேஷ்டி, அங்கவஸ்திரம் சாத்தப்பட்டிருக்கிறது. பாபா இந்த நாற்காலியில் அமர்ந்து எனக்கு எப்போதும் ஆசி வழங்கிக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்” என்ற ஸ்ரீனிவாஸ் தொடர்ந்து பேசினார். தன் கையை முன்னே நீட்டி, “இந்த நவரத்ன மோதிரம், பாபா கொடுத்த பரிசு. புட்ட பர்த்தியில் பாபா முன்னிலையில் ஒரு முறை கச்சேரி செய்யும் பாக்கியம் கிடைத்தது. கச்சேரி முடிந்ததும், என்னை ஆசிர்வதித்த பாபா, இந்த மோதிரத்தை வரவழைத்து, எனக்குக் கொடுத்தார். அது மட்டுமில்லை; என்னுடன் சேர்ந்து அன்றைக்கு கச்சேரி செய்த என் தம்பி ராஜேஷை பார்த்து புன்னகை புரிந்து, ‘உனக்கும் ஒண்ணு வேணுமா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்து, எனக்கு அளித்த மோதிரத்தைத் தொட்டுவிட்டு, தன் கையை விரித்தார். அவர் கையில் இன்னொரு நவரத்ன மோதிரம். அந்த அதிசயத்தை என்னால் ஆயுசுக்கும் மறக்க முடியாது.

பரமாச்சாரியாரும், பாபாவும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. அப்போது எனக்கு பதினாறு, பதினேழு வயசு இருக்கும். காஞ்சிபுரம் போயிருந்தோம். நான் எப்போது மடத்துக்குப் போனாலும், கையோடு மாண்டலினை எடுத்துக்கொண்டு போய், பரமாச்சாரியார் முன்னால் அமர்ந்து கொஞ்சநேரம் வாசிப்பது வழக்கம். அன்றைக்கும் வாசித்தேன். என் பக்கத்தில் என்னுடைய தம்பி உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அப்போது பத்து வயசு இருக்கும், அவனும் மாண்டலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, கொஞ்ச நாள் ஆகி இருந்தது. நான் வாசித்து முடித்ததும், என் பக்கத்தில் இருந்த ராஜேஷைக் காட்டி ‘இது யார்?’ என்று கேட்டார். ‘தம்பி’ என்றேன். ‘அவனுக்கு வாசிக்கத் தெரியுமா?’ என்றதும். ‘இப்பதான் கத்துக்கறான்’ என்றேன். ‘அவன்கிட்டே மாண்டலினைக் கொடு; வாசிக்கட்டும்’ என்றார். அவன் வாசிக்க, அவனையும் ஆசிர்வதித்தார்.

பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஓவியத்தைப் பார்த்தீர்களே? அது ரொம்ப அபூர்வமான ஒன்று. பிரபாகர் என்பவர் ஒருமுறை திருமண பத்திரிகை கொடுக்க வந்தபோது, இங்கே இருந்த ஏராளமான பரமாச்சாரியார் படங்களைப் பார்த்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் பரமாச்சாரியாரின் தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை ஒரு வியாழக்கிழமையன்று காலையில் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து, சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் மேல் எனக்கு ரொம்ப பக்தி உண்டு. நாம எப்போ நினைக்கிறோமோ அப்போ எல்லாம் திருப்பதிக்கு போயிட முடியாது; அவர் நம்மை கூப்பிட்டாத்தான் போக முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை. பல வருடங்களாக திருப்பதியில் பிரம்மோத்சவம் நடக்கிறபோது, என்னை அங்கே கச்சேரி செய்யக் கூப்பிடுவார்கள். கச்சேரி முடிந்தவுடன், என்னையும், என் சக கலைஞர்களையும் நேரே சன்னதிக்கு அழைத்துக் கொண்டுபோய், தரிசனம் செய்துவைப்பார்கள். அப்படி ஒருமுறை கச்சேரி முடிந்து, தரிசனத்துக்குப் புறப்பட்டபோது, ‘நமக்குதான் ஸ்பெஷல் தரிசனமாச்சே! பத்து நிமிஷத்தில் தரிசனம் பண்ணிடலாம்’ என்று சொன்னார் சக கலைஞர். ஆனால், கோயிலை அடைந்தபோது பிரம்மோற்சவ மக்கள் கூட்டத்தில் நாங்கள் சிக்கிக்கொள்ள, நான்கு மணி நேரம் காத்திருந்து, தரிசனம் செய்யும்படியானது. அது பெருமாள் வைத்த குட்டு என்று புரிந்தது.

பெருமாளுக்கு திருப்பதி என்றால், வினாயகருக்கு பிள்ளையார்பட்டி. பிள்ளையார்பட்டி கோயில் நிர்வாகத்தினர் என்னை கோயிலின் ஆஸ்தான வித்வானாக்கி கௌரவித்திருக்கிறார்கள். ஆண்டு தோறும் வினாயகர் சதுர்த்தியன்று அங்கே கச்சேரி செய்வது பழக்கம். வருடந்தோறும், ஒரு மூன்று நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று, அவற்றின் கலையழகை ரசிப்பதோடு, சுவாமி தரிசனமும் செய்வது மன அமைதியையும், ஆத்ம திருப்தியையும் அளிக்கிறது.

*

–தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ் and Balhanuman blog

Read more: http://periva.proboards.com/thread/8012#ixzz3DuevMY2p

Natarajan

Joke of the Day…” I will get in trouble …” !!!

Harry had a bit of a drinking problem.

Every night, after dinner, he took off for the local watering hole, spent the entire evening there and arrived home, well inebriated, around midnight each night. He always had trouble getting his key into the keyhole and getting the door opened. His wife, waiting up for him, would go to the door and let him in. Then she would proceed to yell and scream at him for his constant nights out and his returned drunken state. But Harry continued his nightly routine. One day, the wife, distraught by it all, talked to a friend about her husband’s behavior.The friend listened to her and then asked, “Why don’t you treat him a little differently when he comes home? Instead of berating him, why don’t you give him some loving words and welcome him home with a kiss? He then might change his ways.” The wife thought it was worth trying. That night, Harry took off again after dinner. Around midnight, he arrived home in his usual condition. His wife heard Harry at the door and let him in. This time, instead of berating him as she had always done, she took his arm and led him into the living room. She sat him down in an easy chair, put his feet up on the ottoman and took his shoes off. Then she went behind him and started to cuddle him a little. After a while, she said to him, “It’s pretty late. I think we had better go upstairs to bed now, don’t you?” At that, Harry replied in his inebriated state, “I guess we might as well. I’ll get in trouble if I go home anyway!”   

 

Source::::Joke a day.com

Natarajan

” Mind Blowing Crazy Circle Illusion …”

 

“Mind blowing.”

That’s how some are describing a “crazy circle illusion” posted online Monday which has quickly amassed more than 1 million views on YouTube.

The video asks viewers to first watch as the balls appear to rotate in a circle and then “focus on one ball at a time and notice that it follows a straight line.”

“This is just another example of looking deeper into something so simple and discovering a hidden pattern,” the producers of the video said.

Individuals commenting on the YouTube page left rave reviews, with some calling the illusion “fascinating” and “amazing.”

 

SOURCE::::YOU TUBE

Natarajan

Message For the Day… ” Name of the God will Grant Everything You Need …”

Once the saints Namadeva and Gyanadeva were travelling in a forest. They felt thirsty and searched for water and came across an old dried up well. Gyanadeva, who followed the path of wisdom, transformed himself into a bird and flew down, drank the water and returned. Namadeva saw this and didn’t agree with the approach. He thought that one must elevate oneself from this human birth to Divine and not the other way. So he sat at that spot and chanted the name of the Lord. Every time he did it with intensity, the level of water began to rise higher and higher and finally the well started overflowing. He comfortably drank the water and was blissful. He demonstrated clearly wisdom is useful but is not greater than Divinity. He clearly taught the precious lesson that the Name of the Lord will grant everything that one needs in life and ultimately the Divine Himself.

Sathya Sai Baba

Dancing Traffic Signal in Lisbon !!!

Source: smart)

Nobody likes to wait at traffic lights. Stopping at lights can be dangerous for impatient pedestrians willing to risk their lives just to cross the street a few seconds earlier.

The folks at Smart created The Dancing Traffic Light, a concept providing a fun and safe way to keep people from venturing too early into the street. They started by placing a dance room on a square in Lisbon, Portugal and invited random pedestrians to go into the box and dance. Their movements were then displayed on a few traffic lights in real time. This resulted in 81% more people stopping and waiting at those red lights.

What an awesome idea! Let’s hope no one ever does the moonwalk and on accident makes people at the light think that is the animation to walk out into traffic.

Source::::You Tube and Viral nova trending

Natarajan

Message For the day…” Think of God in Your Every Action…It will Reflect in the Work You Do…”

Sathya Sai Baba

Sakhubai, an ardent devotee of Lord Panduranga, went to saint Namadeva and submitted, “Master, I make so many cow dung cakes, but people are stealing them. I need to earn a livelihood by selling these, but very little is left for me to sell. What do I do?” Namadeva smilingly asked her, “How do you know that those stolen are your cow dung cakes?” Sakhubai promptly answered, “Master, I make them thinking and reciting Lord Panduranga’s name all the time; my feelings are reflected in them and they give amazing results!” She then asked Namadeva to break and listen to one cake. Everyone around Namadeva were greatly astonished to hear the inanimate cowdung cake reverberating with Panduranga’s name with the correct pitch, tune and rhythm. Mother Sakhubai said, “Not only in these cakes, but if we think of the Lord while performing every action, it will reflect and resound in the work we do!”

” பிள்ளையாரின் பிள்ளை…” !!!

மஹா பெரியவாளின் கமல பாதங்களில் நான் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டேன். எனக்கு எல்லாமே அவர் தான்’ என்று சொல்லும் கடம் வித்வான் விநாயக ராம் இல்ல பூஜை அறையில் திரும்பும் இடமெல்லாம் மஹாபெரியவா படங்கள்தான்.

பூஜை அறையின் அலமாரியில் ஒரு பிள்ளை யாரைக்காட்டி, பிள்ளையார்தான் எனக்கு தாயும், தந்தையும். நானும், என் சகோதரியுமாக இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தோம். எனக்கு ராமசேஷன் என்றும் என் சகோதரிக்கு சீதா லட்சுமி என்றும் பெயர் வைத்தார்கள். எங்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி உடம்புக்கு வரும்; அதாவது, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் வரும். பெற்றோர்களுக்கு ஒரே கவலை. ஒரு குழந்தையை வேறு யாருக்காவது ஸ்வீகாரம் கொடுக்கும் படி ஆலோசனை சொன்னார் ஒரு ஜோசியர். என் பெற்றோர்கள் வேறு யாருக்காவது ஸ்வீகாரம் கொடுப்பதை விட, இறைவனுக்கே ஸ்வீகாரம் கொடுக்க முடிவு செய்தார்கள். அதன் பேரில் சாஸ்திரப்படி, பிள்ளையார் கோயிலில் வித்து, பிள்ளையாருக்கே என்னை ஸ்வீகாரம் கொடுத்தார்கள். அப்போது எனக்கு வைக்கப்பட்ட பெயர் தான் வினாயக ராமன். ஆக, எனக்கு தாயும், தகப்பனாரும் பிள்ளையார்தான். நான் பிள்ளையாரின் பிள்ளை.

பதினாலு, பதினஞ்சு வயசில் இருந்தே பெரிய வித்வான்களுடைய கச்சேரிகளுக்கு கடம் வாசிப்பேன். அப்படி ஒரு தடவை திருச்சியில் தியாகராஜ பாகவதர் கச்சேரி. அப்போது எனக்கு உடம்பு சரியில்லை. அப்பாவுக்கு திருச்சிவரை என்னை தனியாக அனுப்பத் தயக்கம். ‘பையனை என் கூடவே காரில் அழைத்துக் கொண்டுபோய், கச்சேரியை முடித்துவிட்டு, பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்’ என்று பாகவதர் சொன்னதன் பேரில், என்னை அனுப்பி வைத்தார். இரவு காரில் புறப்பட்டோம். அதிகாலை ஐந்து மணி இருக்கும். காரின் பின் சக்கரத்தில் ஏதோ வித்தியாசமான சப்தம் வருவதை கவனித்து, காரை நிறுத்தச் சொன்னார் பாகவதர். இறங்கிப் பார்த்தால், பின் பக்க சக்கரங்களில் ஒன்றின் எல்லா நட்களும் லூசாகிக் கழன்று விழுந்துவிட்டன. இன்னும் கொஞ்ச தூரம் சென்றிருந்தாலும், ஒரு சக்கரம் கழன்று, கார் விபத்துக்குள்ளாகி இருக்கும். அப்போதுதான் கவனித்தோம், காரை நிறுத்திய இடத்துக்கு பக்கத்தில் சிறிய பிள்ளையார் கோயில். எங்கள் உயிரைக் காத்த பிள்ளையாரை நன்றியோடு வணங்கிவிட்டு, அடுத்து வந்த ஒரு பஸ்ஸில் ஏறி திருச்சி சென்றடைந்தோம்.”

பூஜை அறையின் நடுவில் ஓர் ஊஞ்சல். அதிலும் பெரிதாக இரண்டு மஹா பெரியவா படங்கள். அதனை ஒட்டினாற் போல ஒரு பூஜா மண்டபம். அதில் ஒரு கடம். அதன் முன்பாக வெண்கலத்தில் செய்த ஒரு கடம். பக்கத்தில் சின்னஞ் சிறு மஹா பெரியவா உருவம். இதன் பெருமையைச் சொல்லட்டுமா? மானா மதுரையில்தான் நல்ல முறையில் கடம் செய்வார்கள். அப்படி மானாமதுரையில் புது கடம் ஒன்றை வாங்கிய சில தினங்களில் காஞ்சீபுரம் சென்றபோது, அந்த கடத்தையும் எடுத்துக் கொண்டு போயிருந்தேன். என்னை ஆசிர்வதித்த பெரியவா, அந்த கடத்தை வாங்கி இரண்டு தட்டு தட்டினார். எனக்கு ரொம்ப சந்தோஷம். மஹா பெரியவா தொட்டு ஆசிர்வதித்த அந்த கடத்தை கச்சேரிக்கு வாசிக்கக் கூடாது என முடிவு செய்தேன். என் பூஜை அறையில் அதற்கென ஒரு மண்டபம் செய்து, அதிலே வைத்து, பூஜித்து வருகிறேன்.

ஒருமுறை, அமெரிக்காவுக்குக் கச்சேரிக்குச் சென்றபோது, ஒரு தடவை என்னுடைய கடம் உடைந்து போய்விட, நான் மனம் நொந்துபோனேன். ஆனால் மஹா பெரியவாளின் ஆத்மார்த்தமான பக்தரும், என் சகோதரருமான பிரதோஷம் வெங்கட்ராம ஐயர் சொன்னபடி, அங்கேயே பெரியவாளை ஆத்மார்த்தமாக பிரார்த்தித்துக் கொண்டு, அவரது படத்தை வைத்து வலம் வந்து வணங்கினேன். என்னோடு சேர்ந்து அமெரிக்காவில் கச்சேரி செய்வதற்காக லண்டனிலிருந்து அமெரிக்கா வந்த தபலா கலைஞர் ஜாகிர் உசேன், அப்படியே லண்டன் பாரதிய வித்யாபவனில் விசாரித்து, லண்டன் ரசிகர் ஒருவரிடமிருந்து ஒரு கடத்தை வாங்கி எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். எனக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. முந்தைய முறை லண்டனில் கச்சேரி செய்த போது, நான் அந்த ரசிகருக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததுதான் அந்த கடம்.”

படங்கள்: கௌதம் ராம்

நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

Message For the Day…” Lesson to Learn from Ramayana…”

Ravana was a great scholar. He mastered 64 distinct fields of knowledge, including the language of animals, birds and insects. He possessed all knowledge, wealth and prosperity that equaled heaven. He used his penance as a means to acquire mastery over the physical world, reposing his faith on the phenomenal world and not on the Creator. He chose not to enquire about the Creator of the phenomenal world. The Universe is the Creator’s property. Rama was the Creator Himself and Sita was Rama’s Power (Shakti). Ravana, giving in to lust, desire and greed, developed hatred and enmity towards Rama and abducted Mother Sita. What was the result? Not only he, but his entire kingdom was destroyed. Despite such high knowledge and prowess, he failed to recognize the Divine within and ruined himself due to a moral lapse. Thus Ramayana clearly teaches the lesson that spiritual wisdom alone saves, and is essential.

Sathya Sai Baba

 

செப்டம்பர் 16: எம்.எஸ். பிறந்த நாள்: ….

  • எம். எஸ். சுப்புலட்சுமி
    எம். எஸ். சுப்புலட்சுமி
  • 1992-ம் ஆண்டு மியூசிக் அகாடமி நிகழ்ச்சி ஒன்றில் அன்புக் கணவர் சதாசிவத்துடன் எம்.எஸ்.
    1992-ம் ஆண்டு மியூசிக் அகாடமி நிகழ்ச்சி ஒன்றில் அன்புக் கணவர் சதாசிவத்துடன் எம்.எஸ்.
  • 'நான் வெறும் பிரதமர் தான், ஆனால் நீங்கள் அரசி, பாடல்களின் அரசி' என்றார் ஜவாஹர்லால் நேரு. 1953-ம் ஆண்டு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி ஒன்றில், வெள்ளிக் கேடயம் வழங்கி அவ்வாறு கூறிய அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுடன் எம்.எஸ்.
    ‘நான் வெறும் பிரதமர் தான், ஆனால் நீங்கள் அரசி, பாடல்களின் அரசி’ என்றார் ஜவாஹர்லால் நேரு. 1953-ம் ஆண்டு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி ஒன்றில், வெள்ளிக் கேடயம் வழங்கி அவ்வாறு கூறிய அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுடன் எம்.எஸ்.
  • குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது பத்மவிபூஷண் விருது வழங்க, அதனைப் பெறுகிறார் எம்.எஸ்.
    குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது பத்மவிபூஷண் விருது வழங்க, அதனைப் பெறுகிறார் எம்.எஸ்.

கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கட்டிக் காக்கும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பிறந்த நாளும் இன்றுதான். எம்.எஸ். சுப்புலட்சுமியின் முதல் கச்சேரியும், முடிவுக் கச்சேரியும் நடந்தது சங்கீத வித்வத் சபை என்ற மியூசிக் அகாடமியில்தான். இந்த மியூசிக் அகாடமியின் தற்போதைய தலைவராக இருப்பவர் ‘தி இந்து’ குழுமத்தின் இணைத் தலைவர் என்.முரளி என்பது கூடுதல் தகவல். பிரபல கர்னாடக சங்கீத பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எஸ். அம்மா என்று அன்புடன் கர்னாடக சங்கீத வித்வான்களால் மட்டுமல்ல, இசை ரசிகர்களாலும் அழைக்கப்படுபவர்.

இவரது காலத்தில் பிரபல கர்னாடக இசைக் கலைஞர்கள் பலர் இருந்தாலும், இவரது புகழ் ஐக்கிய நாடுகள் சபை வரை பரவியதற்கு அவரது உழைப்புதான் காரணம் என்று அவரது கணவர் சதாசிவம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். உணவுக்காவது, விரதம் இருந்தால் விடுமுறை விடுவது இவரது வழக்கம். ஆனால், பாடல் பயிற்சியை அனுதினமும் செய்வதால் அதற்கு மட்டும் விடுமுறையே கிடையாது. எம்.எஸ். பாட நேரடியாகக் கேட்டவர்கள் பாக்கியவான்கள்.

ஆத்மநாதன்

(சதாசிவம் – எம்.எஸ். சுப்புலட்சுமி தம்பதியரின் ஐம்பது ஆண்டு கால உதவியாளர்)

எம்.எஸ் அம்மாவின் இனிய இசையை விட அவர் மிக இனிமையானவர் என்பது அவரது புகழ் வெளிச்சத்தில் மறைந்துதான் போய்விட்டது. எப்பொழுதுமே எளிமையானவர். பலரிடம் கீர்த்தனைகளைக் கற்றிருந்தாலும் ஒவ்வொரு கீர்த்தனையும் உயர்தரமாக இருந்ததற்கு, அவரின் சாதகமே காரணம். இதற்கான அவரின் உழைப்பு அசாத்தியமானது. அதற்கு உதாரணமாக ‘காலைத் தூக்கி நின்றாடும், குறை ஒன்றும் இல்லை, காற்றினிலே வரும் கீதம்’ ஆகிய பாடல்களைக் கூறலாம். அவர் கச்சேரிகளில் தனது ஆத்ம திருப்திக்காக மட்டுமே பாடினார். ஆனால், இதனைக் கேட்ட அனைத்து ரசிகர்களுக்கும் அந்த இசை ஆத்ம திருப்தியை அளித்து அவர்களின் நிலை உயரக் காரணமானது என்பதுதான் நிதர்சனம்.

இளைய தலைமுறை இசைஞர்களுக்கு அவர் இசை தெய்வம்; ரசிகர்களுக்கோ அவர் மேடையில் தோன்றிய தெய்வத் திருவுரு என்று சொன்னால் மிகையில்லை. அவரை அறிந்த நாளில் இருந்தே அவர்நல்ல ஆரோக்கியத்தில் இருந்தார் என்றுசொல்ல முடியாது. ஆனால், உடல்நிலை சரியில்லை என்ற காரணத்துக்காக ஒரு கச்சேரியைக் கூட அவர் வாழ்நாளில் ரத்து செய்தது இல்லை என்பது ஆச்சரியகரமானது. தன்னை விட இளைய இசைஞர்களின் இசையை மதிப்பதில் அவருக்கு இணை யாருமில்லை.

கெளரி ராம்நாரயணன்

(மூத்த பத்திரிகையாளர் (ஓய்வு) – தி இந்து)

பிரபல வாக்கேயக்காரர்கள் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பாடல்கள் இயற்றி இருக்க, அதனையே பலரும் பல முறை மேடைகளில் பாட அவை பிரபலமாகிக் கொண்டே வந்தது. தமிழ் இசைக்காக எம்.எஸ். செய்த சேவை தமிழ் இசை என்ற இயக்கமாகவே மாறிவிட்டது.

சுத்தானந்த பாரதியின் பாடல்கள் இவரது கணவர் சதாசிவத்துக்கு மிகவும் பிடித்திருந்த தால், கச்சேரியின் முதல் பாடலாக இருக்க ஹிந்தோள ராகத்தில் அமைந்த ‘அருள் புரிவாய் கருணைக் கடலே’ உகந்தது என்று கூறி இந்த தமிழ் பாடலை எடுத்துக் கொடுத்தார். ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல் தேனினும் இனிய அவரது குரலில், வெளிவந்து, மிகவும் பிரபலமடைந்தது. வாக்கேயக்காரரான பாபநாசம் சிவன் நேரடியாகவே தனது பாடல்களை எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு கற்றுக்கொடுத்தாராம். இதனைக் குறிப்பிட்டு கூறிய எம்.எஸ், இது பெரும் கொடுப்பினை என்று ஒரு பேட்டியில் சொல்லி வியந்திருக்கிறார்.

கல்கியின் மகள் ஆனந்தியும், சதாசிவம் மகள் ராதாவும் இணைந்து அரங்கேற்றிய பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு, எம்.எஸ்.தான் வாய்ப்பாட்டு. அந்நாளில் `யாரோ இவர் யாரோ’ மற்றும் `ஏன் பள்ளி கொண்டீர் ஐயா’ ஆகிய பாடல்கள் அவரது குரலின் இனிமையையும், கம்பீரத்தையும் பெற்று வலம்வந்தன. தமிழ் பாடல்கள் தன் தகுதியைப் பெறத் தொடங்கின. யதிகுல காம்போதியில், மத்யம சுருதியில் அவர் பாடிய `காலைத் தூக்கி’ என்றுதொடங்கும் பாடல் இன்றும் பிரபலம்தான். உச்ச ஸ்தாயியில் அவர் பாடிய `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்ற சுப்பிரமணிய பாரதியின் பாடலில் அவரது முழு சக்தியும் குடிகொண்டிருந்தது.

கல்கி சதாசிவம், சுப்பிரமணிய பாரதியின் பாடல்களுக்கு ரசிகர். ஒரு முறை கார்ப்ப ரேஷன் ரேடியோவுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி பதிவு நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போது, பிரிட்டிஷ் அரசு, பாரதியாரின் பாடல்களுக்குத் தடைவிதித்திருந்தது. அதனால் அப்பாடலைப் பாட ரேடியோ அனுமதிக்க வில்லை. அதனால் சதாசிவம், பாதியிலேயே அக்கச்சேரியை நிறுத்தி, எம்.எஸ். சுப்புலட்சுமியை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி சொல்வதில் எம்.எஸ். சுப்புலட்சுமி ஆச்சரியகரமான ஆர்வம் கொண்டிருந்தார். இவர் பல மொழிகளில் பாடியிருந்தாலும், தமிழ் மொழிப் பாடல்களைப் பிரபலப்படுத்தியது சரித்திரமாகிவிட்டது.

சபரி கிரிஷ்

(பாடகர், திருப்பதி இசைக் கல்லூரி விரிவுரையாளர்)

கீர்த்தனைகள்தான் எம்.எஸ். பாடுவார் என்றே எண்ணியிருந்த காலம். அப்போது வானொலியில் மீரா பஜன் ஒன்றை ஒலிபரப்பினார்கள். அவர் இசையில் பன்முகத் திறமை கொண்டவர் என்பதை அறிய வியப்பாய் இருந்தது. அது 1988-ம் ஆண்டு, எனக்கு 10 வயது. அப்போது புரசைவாக்கம் முத்தையா செட்டியார் பள்ளியில், ஆதிசங்கரர் இயற்றியவற்றை மட்டுமே கொண்ட கச்சேரி நிகழ்ந்தது. கச்சேரி முடிந்து அவர் எழுந்து நடந்து வந்ததைப் பார்த்தபோது, தேனினும் இனிய குரலில் பாடிய தேவதை நடந்து வந்ததுபோல் பிரம்மிப்பாக இருந்தது.

சென்னை சுந்தரத்தில் சாய் பாபா முன்னிலையில் பஜன் பாட, நாங்கள் கூடி இருந்தோம். அப்போது எம்.எஸ். அம்மா, சதாசிவம் மாமாவுடன் வந்திருந்தார். நாங்கள் பாடிய பஜனைப் பாடல்களை, வாங்கிப் பாடினார் எம்.எஸ். உலகளாவிய புகழ் கொண்ட கர்னாடக இசைப் பாடகி இவ்வளவு எளிமையாகக்கூட இருப்பாரா என்று ஆச்சரியமாக இருந்தது.

திருப்பதியில் எம்.எஸ். கச்சேரி அன்றைய தினம் மாலையில் இருந்தது. அதற்கு முன்னர் பெருமாள் தரிசனம் செய்ய முடிவுசெய்தனர் அத்தம்பதியர். அப்போது கூட்ட வரிசையை நிறுத்தி, வி.ஐ.பி தரிசனத்துக்கு வழிவிடும் வரை சன்னதிக்கு எதிரே கருடாழ்வார் சன்னதிக்கு அருகே காத்திருக்க வேண்டிவந்தது. ஒரு கோணிப்பையை விரித்திருந்தார்கள் நிர்வாகத்தினர், அதில் முகமலர்ச்சியோடு அமர்ந்து காத்திருந்தார்கள் அத்தம்பதியினர். அவரது பகட்டில்லாத எளிய பக்திக்கு இதுவும் ஒரு சான்று. அன்றைய தினம் காந்தி ஜெயந்தி. கச்சேரியில் ‘ஹரி தும ஹரோ’ பாடல் இடம் பெற்றதைவிட ஆச்சரியம், மேடையேற பல படிகள் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் 89 வயது சதாசிவம் மாமாவும், 74 வயது எம்.எஸ். அம்மாவும் கைகோத்துக்கொண்டு, கிடுகிடு என்று படிகளில் ஓடி ஏறினார்கள். சங்கீதம் அவர்களுக்குத் தந்த சக்தி இது.

திருநீர்மலையில், மலை மீதுதான் தன்னை விட 15 வயது மூத்த சதாசிவத்தை எம்.எஸ். மணந்துகொண்டார். பின்னர், சதாசிவத்துக்கு 90-வது பிறந்தநாள் அன்று திருப்பதியில் நிர்வாகத்தினர் கொடுத்த மாலையினை இருவரும் மாற்றிக்கொண்டார்கள். அப்போது எம்.எஸ். முகத்தில் பளீரிட்ட வெட்கத்துக்கு அளவே இல்லை. திருப்பதி தயிர் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் சர்க்கரை கலந்து சாப்பிடுவார். பீமாஸ் ஹோட்டலில் தங்கியிருந்த எம்.எஸ். அங்கு ஆந்திரா ஸ்பெஷல் பெசரெட் தோசையும், இஞ்சி வெல்லச் சட்னியும் கேட்டு வாங்கி விரும்பிச் சாப்பிடுவார்.

எம்.எஸ். சித்தூர் புளி போட்ட ரசத்தை விரும்பிச் சாப்பிடுவார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் இறுதி நாட்களில் அவரை ஒரு குழந்தையைப் போல் கவனித்துக் கொண்டவர் ஆத்மாதான். அவரது கச்சேரிகளில் அவரும் பாடலும் வேறு வேறு என்று இல்லாமல் ஒன்றி இருந்ததுதான் அபூர்வமான மாயாஜாலத்தை உருவாக்கியது என்று சொல்ல வேண்டும்.

துக்கடாக்கள்

* தனது 88 ஆண்டு கால வாழ்வில் 80 ஆண்டுகள் இசை சாதனையைச் செய்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி என்றால் மிகையாகாது.

* எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு சங்கீத கலாநிதி, பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்பட்டதில், அவ்விருதுகள் பெருமையடைந்தன என்றே சொல்லலாம். மீரா பஜன் என்றாலே எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவுகள்தான் ரசிகர்களின் நெஞ்சில் நின்றாடும். மீரா வேறு, எம்.எஸ். சுப்புலட்சுமி வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவரது குரல், மீராவின் பக்தி பாவத்துடன் இணைந்திருக்கும்.

* ஒரு கோயில் விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பறை அறிவித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. கச்சேரியும் நல்ல களைகட்டிவிட்டது.

இக்கச்சேரியைக் கேட்க அரியலூரில் இருந்து ஒரு தம்பதியினர் 30 மைல், தூரம் நடந்தே வந்துள்ளனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் கச்சேரி முடிந்துவிட்டது. அவர்கள் நடந்து வந்ததால் தூசியும் தும்பும் அப்பிய ஆடையுடன் பதறி அடித்துக்கொண்டு கச்சேரி நடக்கும் இடத்துக்குள் நுழைந்தனர். கச்சேரி முடிந்துவிட்டது என்பதைத் தாங்க முடியாத ஏமாற்றத்துடன் எம்.எஸ். சுப்புலட்சுமியிடம் முறையிட்டனர். அவர்களுக்காக இரவு 12 மணியைக் கடந்த பின்னும் ஒரு பாடலைப் பாடித் திருப்தி அளித்தார் எம்.எஸ். ரசிகர்களின்உணர்வுகளை இசையைப் போலவே மதிப்பவர் எம்.எஸ். என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் உதாரணம்!