” Hug of the Century … ” !!!

 

 

>  The woman in the video found this injured lion in the forest, about to
> die.  She nursed the lion back to health, and when the lion was better, she
> made arrangements with a zoo to take the lion and give it a new and happy
> home.
>
> This video was taken when the woman, after five years, went to visit the
> lion to see how he was doing. Watch the lion’s reaction when he sees her.
> AMAZING!!!
Source ::::You Tube & input from a friend of mine
Natarajan

Image of the Day…

Lofoten

The sky reflected in the water, in northern Norway.

View larger. | Photo credit T.Richardsen

Lofoten is an archipelago and a traditional district inside the Arctic Circle in northern Norway.

This beautiful shot is by T.Richardsen. He wrote:

It´s official, I love Lofoten.

Nikon D800, 15mm, F16, iso 80 – hdr
Captured at Ternvannet, Lofoten, Nordland, Northern Norway.

Source::::Earth sky news site

Natarajan

” படித்ததில் பிடித்தது …மௌனம் கேட்கவும் …”

ஒரு சீன அரசன் தன் மகனுக்குப் பட்டம் சூட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தார். அரசன் தன் மகனுக்கு அரசனாகும் தகுதி இருக்கிறதா என அறிந்துகொள்வதற்காக ஒரு ஜென் குருவிடம் அனுப்பிவைத்தார்.

குரு இளவரசனிடம், “ நீ காட்டுக்குச் சென்று ஆறு மாதங்கள் கழித்து வா” என்றார்.

இளவரசன் காட்டில் பல இன்னல்களை அனுபவித்து ஆறு மாதங்கள் கழித்து வந்தார்.

குரு, “நீ காட்டில் என்னென்ன ஓசைகளைக் கேட்டாய் ?”

இளவரசன், “குருவே, நான் காட்டில் சிங்கங்களின் கர்ஜனை, புலியின் உறுமல், நரியின் ஊளையிடும் சத்தங்களைக் கேட்டேன்” என்றான்.

குரு, “நீ மீண்டும் காட்டுக்குச் சென்று ஆறு மாதங்கள் கழித்து வா”

சலிப்படைந்த இளவரசன் இம்முறைத் தன் காதுகளைக் கொண்டுக் கூர்மையாகக் கேட்கத் தொடங்கினான். ஆறு மாதங்களுக்குப் பின் குருவின் முன் வந்து நின்றான்.

குரு அவனிடம் முன்புக் கேட்டக் கேள்வியையே கேட்டார்.

இளவரசன், “குருவே இம்முறை பறவைகளின் ஒலிகளைக் கேட்டேன், பூச்சிகளின் சத்தங்களைக் கேட்டேன்”

குரு மீண்டும் அவனைக் காட்டுக்கு அனுப்பினார். ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் இளவரசன் குருவின் முன் வந்து வணங்கி நின்றான். அவன் முகத்தில் அமைதியும் ஒளியும் குடிகொண்டிருந்தன. இளவரசனின் நிலையைக் கண்ட குரு அரசனை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்.

இம்முறை குரு அவனிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இளவரசனே பேசத் தொடங்கினான், “குருவே, காட்டில் மொட்டுக்கள் அவிழும் ஓசையைக் கேட்டேன், பிற உயிர்கள் தங்கள் மனங்களில் பேசுவதையும் தெளிவாகக் கேட்டேன், அவற்றின் மௌனத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எண்ணங்களின் அதிர்வுகளையும் கேட்டேன்” என்றார்.

அங்கு வந்த அரசன், இளவரசன் பேசுவதையெல்லாம் ஆச்சரியத்தோடுக் கேட்டுக்கொண்டு இருந்தார்.

குரு அரசனைப் பார்த்து, “அரசனே இப்போது இளவரசன் நாட்டையாளும் முழுத் தகுதியைப் பெற்றுவிட்டார். வெறும் வெற்று ஆரவாரங்களில் உண்மை இல்லை என்பதையும், உண்மையானது மௌனத்துக்குள் ஒளிந்திருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டுவிட்டார்.” என்றார்.

மகிழ்ச்சியடைந்த அரசனும் இளவரசனும் குருவை வணங்கி விடைபெற்றனர்.

“ஆன்மீக ஆளுமை …திருமலையில் ஒலிக்கும் சிம்ம குரல் …”

ஆலயங்களில் நடக்கும் திருவிழாக்களில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்கிறார்கள். ஆனால் கலந்து கொள்பவர்களைப்போலப் பல மடங்கு பக்தர்கள் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாத வருத்தத்தில் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு சேர்ப்பது நேரடி வர்ணனையும் நேரலையும்தான். குரலின் மூலம் செய்யப்படும் இந்த ஆன்மிகச் சேவையைக் கடந்த 40 ஆண்டுகளாகச் செய்துவருகிறார் பாதூர் புராணம் ஸ்ரீ உ.வே. ரங்கராஜாசாரியார்.

லட்சோப லட்சம் பக்தர்களைச் சென்றடையும் சிம்மக் குரலுக்குச் சொந்தக்காரராக இருக்கும் இவர், திருமலையில் ஸ்ரீநிவாச பெருமாள் கல்யாண உற்சவத்தை நேரடி வர்ணனை செய்துவருகிறார். புராண, இதிகாசக் கதைகள், திருமலை பெருமாள் குறித்த தகவல்கள், கலைகள் குறித்த அறிவு, விழாவுக்கு வந்திருக்கும் பிரபலம் குறித்த அறிமுகம், கல்யாண நிகழ்ச்சிகளை வரிசை பிசகாமல் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறுதல் என்று பன்முகத் திறன் இருந்தால் மட்டுமே இத்துறையில் பரிமளிக்க முடியும். இதில் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறார் இந்தப் பெரியவர்.

திருமலை பிரம்மோற்சவத்தை முதன் முதலில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தொடங்கியபோது குறிப்பிட்ட நிறுவனங்கள் இவரையே அணுகின.

இவர், தொலைபேசி உபன்யாசமும் செய்கிறார். ஒவ்வொரு நாளும் காலை ஐந்தரை மணிக்கு அமெரிக்காவின் டெக்சாசில் இருந்து இவரது இல்லத்துக்குத் தொலைபேசி அழைப்பு வரும். காலை நான்கு மணிக்கே எழுந்து தயாராக இருக்கும் பாதூர் மாமா, தொலைபேசி மணி ஒலித்தவுடன், ஒலி வாங்கியை எடுத்து உபன்யாசத்தை ஆரம்பித்துவிடுவாராம். இதைத் துல்லியமாக ஒரு மணி நேரத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் சில ஆன்மிகச் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.

இந்நிகழ்ச்சி டெக்சாசில் மட்டுமல்லாமல் வாஷிங்டன், கலிஃபோர்னியா உள்ளிட்ட பல அமெரிக்க மாகாணங்களில் ஒளிபரப்பாகிறது. ஆன்மிகப் பணியில் இடைவிடாது ஈடுபட்டுள்ள இவருக்கு அண்மையில் திருப்பதி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் மஹாமஹோபாத்யாய என்ற உயரிய விருதினை வழங்கி கெளரவித்துள்ளது.

திருப்பதியில் குடியிருக்கும் இவரது சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாதூர். இவரது முன்னோர்கள் ராமாயண உபன்யாசங்கள் செய்துவந்ததால் `புராணம்` என்ற சிறப்புப் பட்டப் பெயர் தங்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கிறார்.

பண்டிதர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த இவருக்கு வீட்டிலேயே குருமார்கள் அமைந்துவிட்டார்கள் என்று தன் குருவாக அமைந்த தந்தையைப் பற்றி நினைவுகூர்கிறார் ரங்கராஜாசாரியார். சென்னை பல்கலைக்கழகத்தில் வியாகரண சிரோண்மணி என்ற பட்டப் படிப்பை முடித்து திருச்சி அருகேயுள்ள திருப்பராய்துறை சுவாமி சித்பவானந்தாவின் ராமகிருஷ்ண தபோவனத்தில் சமஸ்கிருத பண்டிதராகச் வேலைக்குச் சேர்ந்தார் பாதூர். அந்தச் சமயத்தில் சித்பவானந்தர் திருவாசகத்தையும், பத்து உபநிஷத்துக்களையும் ஒப்பாய்வு செய்து எழுதப்பட்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் பதிப்பித்தார். அதைப் பிழைதிருத்தும் பணி இவருக்குக் கிடைத்தது.

இந்தப் பணியின் மூலம் அந்தச் சிறிய வயதிலேயே இவ்விஷயங்களில் ஆழமான அறிவு கிடைத்தது என்பதையும் மறக்காமல் பதிவுசெய்கிறார். இவர் திருவாசகத்தை முழுவதும் படித்துப் புரிந்துகொண்டது அப்போதுதான்.

“திருமலைப் பெருமாள் உற்சவத்தின்போது முன்னால் கோஷ்டியாக திவ்யப் பிரபந்தம் சொல்லிக்கொண்டு போவார்கள். சுவாமிக்குப் பின்னால் வேதம் சொல்லிக்கொண்டு போவார்கள். அப்போது இரண்டுமே எனக்குத் தெரியாது. திவ்யப் பிரபந்தம் கற்றுக்கொள்ளத் தொடங்கி 1974-லிலேயே முடித்துவிட்டேன். அது முதல் இன்று வரை சுமார் நாற்பது ஆண்டுகளாக அனைத்து உற்சவங்களுக்கும் திவ்யப் பிரபந்தம் சொல்லும் கோஷ்டியில் இருக்கிறேன்” பிரபந்தத்தின் மீது பற்று வந்த பிறகு உரைகளையும் படித்திருக்கிறார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் தொடங்கியபொழுது தமிழ் வர்ணனைக்குப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். அது முதல் பெருமாளின் நித்ய கல்யாண உற்சவத்திற்கும், திருமலை மற்றும் திருச்சானூர் பிரம்மோற்சவத்திற்கும் தமிழில் நேரடி வர்ணனை சொல்லிக்கொண்டிருக்கிறார் பாதூரார்.

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை உபன்யாசம் செய்வதுண்டு. நாற்பது ஆண்டுகளாக இது தொடர்கிறது. “காலையில் ஒரு கோவில் என்றால் மாலை நான்கு மணிக்கு மற்றொரு கோவில், மீண்டும் மாலை ஆறு மணிக்கு வேறு ஒரு கோவில் என்ற வகையில் மார்கழி மாதத்தில் ஒரு நாளுக்கு மூன்று முறை கூட திருப்பாவை உபன்யாசம் செய்வதுண்டு” என்கிறார் பாதூரார்.

ராமானுஜர் போல இவரும் திருமலையே பெருமாள் என்று எண்ணுவதால் திருமலையில் செருப்பே அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Message For the Day…” Repeat the Name of God and Gain Control Over your Mind… “

What manifests externally is called ‘Manas’ (Mind). That which is internal is ‘Nama’ (The Name of the Lord). Repeating the Name of the Lord, you can gain control over your mind and attain the state where there is no Mind (Amanaska). As long as you are under the influence of your mind, you will tread the worldly path and get lost. You can clearly hear the voice of the Lord, only when you attain the ‘No Mind’ State. To attain that state, you must listen to the inner voice, the voice of the Lord within you. To hear Him, you must practice Devotion and Surrender. The easiest way to understand and experience God is to Love Him. You can easily grow in love for God, by worshipping Him in a specific form. A true devotee does all duties with total surrender only to please God, and dedicates every action to please Him.

Sathya Sai Baba

Image of the Day…Double Rainbow !!!

Can you ever see the whole circle of a rainbow?

It is indeed possible to see the whole circle of a rainbow – but conditions have to be just right.

When sunlight and raindrops combine to make a rainbow, they can make a whole circle of light in the sky. But it’s a very rare sight. Sky conditions have to be just right for this, and even if they are, the bottom part of a full-circle rainbow is usually blocked by your horizon. And so we see rainbows not as circles but as arcs in our sky.

Gallery: Rainbows around the world

Double rainbow in Alaska. The shadow of the photographer’s head on the bottom marks the centre of the rainbow circle. Image Credit: Wikimedia Commons

 

 

When you see a rainbow, notice the height of the sun. It helps determine how much of an arc you’ll see. The lower the sun, the higher the top of the rainbow. But if you could get up high enough, you’d see that some rainbows continue below the horizon seen from closer to sea-level. Mountain climbers sometimes see more of a full-circle rainbow, though even a high mountain isn’t high enough to show you the whole circle.

Pilots do sometimes report seeing genuine full-circle rainbows. They’d be tough to see out the small windows we passengers look through, but pilots have a much better view from up front.

By the way, we searched for images of full-circle rainbows. But most of the ones we found weren’t really rainbows. They were either halos around the sun – or airplane glories. If you know of a photo of a bonafide full-circle rainbow, please comment below and provide a link! Many thanks.

What’s NOT a rainbow? Hear from a master of sky optics

Bottom line: Can you ever see a full-circle rainbow in the sky? Yes, but they’re most often seen by pilots, who have a good view of the sky from the wide front windows of a plane.

What makes a halo around the sun or moon?

Source::: earth sky news site

Natarajan

Joke of the Day…” Would You Like your Car to Crash Twice a day … ” !!!

At a recent computer expo (COMDEX), Bill Gates reportedly compared the computer industry with the auto industry and stated “If GM had kept up with technology like the computer industry has, we would all be driving twenty-five dollar cars that got 1000 mi/gal.”

Recently General Motors addressed this comment by releasing the statement: “Yes, but would you want your car to crash twice a day?”

Not only that, but….

Every time they repainted the lines on the road you would have to buy a new car.

Occasionally your car would die on the freeway for no reason, and you would just accept this, restart and drive on.

Occasionally, executing a maneuver would cause your car to stop and fail and you would have to re-install the engine. For some strange reason, you would accept this too.

You could only have one person in the car at a time, unless you bought “Car95” or “CarNT”. But, then you would have to buy more seats.

Macintosh would make a car that was powered by the sun, was reliable, five times as fast, twice as easy to drive, but would only run on five percent of the roads.

The Macintosh car owners would get expensive Microsoft upgrades to their cars, which would make their cars run much slower.

The oil, gas and alternator warning lights would be replaced by a single “general car default” warning light.

New seats would force everyone to have the same size butt.

The airbag system would say “are you sure?” before going off.

If you were involved in a crash, you would have no idea what happened.

Source::::joke a day.com

Natarajan

Meet Mr.P.V.Saar…77 Years Old Gentleman @ Connaught Place .New Delhi…

 

 

 

“The difference between the impossible and possible lies in a man’s determination”
~Tommy Lasorda

 

This is the inspiring story of a 77 year old man who travels 7 days a week covering 170 kms daily to make a living and support his family. You might already have come across his photographs floating around Facebook, but Varun made an attempt to connect to him directly & share the story of his life.

 

Source:::: You Tube and Story Pick

Natarajan

“அலுமினய பறவையோடு மோதும் நிஜ பறவைகள் …”

 

“பறவையைக் கண்டான், விமானம் ப டைத்தான்” என்று ஒரு பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டி ருந்தார். ஆனால் பறவையும், விமானமும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகிவிட்டது காலத்தின் கொடுமை.

‘பறவை மோதி விமானம் கீழே விழுந்து பயணிகள் இறந்தனர்’ என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால்,வருடந்தோறும் பறவைகளால் விமான விபத்துகள் ஏற்படுகின்றன.

சென்ற ஆண்டு இப்படி 50 முறை விமானங்களில் பறவைகள் சிக்கிக்கொண்டதாக இந்திய விமான நிலையங்களின் நிர்வாகம் (AAI) குறிப்பிட்டிருக்கிறது. புறாவி லிருந்து காக்கைகள்வரை (சில சமயம் மயில்கள்கூட) இப்படி சிக்கியிருந்தாலும், பெரும்பாலான பிரச்சினைகள் பருந்துகளிடம் இருந்துதானாம்.

முதல் விபத்து

முதலில் பதிவான இப்படிப்பட்ட ஒரு விபத்து 1912- ல் கலிஃபோர்னியாவில் நடந்தது. கடல் காகம் (சீகல்) பறவை ஒன்று மோதி விமானம் பாதிப்படைய, விமான ஓட்டிகள் மரணமடைந்தனர். பறவையால் விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழந்தது அதுவே முதல்முறை.

பெரும்பாலும் விமானம் தரைத் தளத்துக்கு அருகில் பறக்கும்போதுதான் (புறப்படும் நேரத்திலும், வந்துசேரும் நேரத்திலும்) பறவைகள் அவற்றின்மீது மோதுகின்றன. அமெரிக்காவில் மட்டுமே சென்ற ஆண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ‘பறவைகளால் விமான விபத்துகள்’ நிகழ்ந்துள்ளன.

சமீபகாலமாகப் பறவைகளுக்கும் அலுமினியப் பறவைகளுக்கும் நடக்கும் இந்த விபத்துகள் அதிகமாகி வருவதற்குப் பல காரணங்கள். விமானங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது முக்கியக் காரணம்.

தொழில்நுட்பக் காரணம்

தவிரப் பழைய விமானங்களில் பிஸ்டன் இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றை இயக்கும்போது (விமானத்தின் முன், பின் புறங்களில்) அதிக சப்தம் உருவாகும். இதனால் தங்களை அணுகும் ஆபத்தை உணர்ந்து பறவைகள் விலகிச் செல்ல வாய்ப்பு இருந்தது. தவிர, விமானத்தின் மீது பறவை மோதினாலும் விமானத்தின் பிஸ்டன் இன்ஜின் அருகே பொருத்தப்பட்டுள்ள புரொபெல்லர்கள் சுற்றிக்கொண்டே இருப்பதால், பறவையின் ஒரு பகுதியை அவை வெட்டிவிடும். அல்லது பறவையை அந்த இடத்திலிருந்து தள்ளிவிடும். இதனால் விமானத்துக்குப் பாதிப்பு இல்லாமல் இருந்தது.

ஆனால், ஜெட் இன்ஜின்கள் அறிமுக மான பிறகு காட்சிகள் மாறின. இவற்றின் வேகம் அதிகம். எழுப்பும் ஒலியோ மிகக் குறைவு. தவிர ஜெட் இன்ஜின்கள் காற்றை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. எனவே, இவை காற்றோடு பறவையையும் உள்ளே உறிஞ்சி கொள்கின்றன. இதனால் இன்ஜின் திடீரெனச் செயலிழந்துவிடும் ஆபத்து உருவாகிறது.

சில சமயம் இன்ஜினில் உள்ள விசிறியின் இறக்கை மீது பறவை வேகமாக மோதும்போது, அந்த இறக்கை நகர்ந்து அருகிலுள்ள மற்றொரு இறக்கையின் விசையுடன் மோதலாம். இந்தக் காரணங்களால் மொத்த விமானமும் நிலைகுலைந்து விழுந்து பயணிகள் இறந்த சம்பவங்களும் உண்டு.

பறவை நடமாட்டம்

பொதுவாகவே விமான நிலையங்களில் பறவைகள் நடமாட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால், விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதி பெரும்பாலும் புறநகர் பகுதியாக இருக்கும். கடுமையான இடநெருக்கடி கொண்ட நகரங்களைவிட, புறநகர் பகுதிகளில் வசிப்பதையே பறவைகளும் விரும்புகின்றன. தவிர விமான நிலையங்களுக்கு அருகே குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகள் இருப்பது சாதாரணமாக உள்ளது. மேலும் விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் சில பகுதிகள் குப்பை கொட்டப்படும் இடங்களாகவும் இருப்பதுண்டு. அதிலுள்ள கழிவுகள், இறைச்சித் துண்டுகள், அப்பகுதிகளுக்கு வந்து சேரும் பூச்சிகளை உண்பதற்காகவும் பறவைகள் அங்கேயே வட்டமடிக்கின்றன.

விமானத் தளங்களில் பறவை நடமாட்டம் அதிகமாக இருப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அங்கிருந்து சுற்றுப்புறம் முழுவதும் பரந்து விரிந்து பளிச்சென்று தெரிகிறது. எனவே, இரைகொல்லிப் பறவை தாக்க வந்தால் இரைப் பறவையால் உடனடியாகத் தப்பித்துவிட முடியும். இந்த வசதியாலும் விமானத் தளங்களைப் பறவைகள் அதிகம் நாடுகின்றன.

விரட்டும் நடவடிக்கைகள்

ஆனால், இந்தப் பறவைகளை அகற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பலவும் இயற்கைக்கு முரணானவை. விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மரம், செடிகளை அப்புறப்படுத்துகிறார்கள். இதன் மூலம் பறவைகளுக்குத் தேவையான உணவு குறைகிறது. அவை கூடு கட்டுவதற்கான இடங்களும் அழிக்கப்படுகின்றன. அப்பகுதிகளில் பூச்சி மருந்துகளை ஏராளமாக அடிக்கிறார்கள். இதன் மூலமாகவும் பறவைகளின் உணவு (பூச்சிகள்) அழிக்கப்படுகிறது.

பறவைகளுடைய எதிரிகளின் குரல்களைப் பதிவு செய்து அவ்வப்போது ஒலிக்கவிடுவதன் மூலம் பறவைகளை மிரண்டு ஓடச் செய்கிறார்கள். வெடி வெடித்தும் இதைச் சாதிக்கிறார்கள்!

ஆர்வலர்கள் கருத்து

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த நடவடிக்கைகளை ஏற்பதில்லை. அவர்கள் அளிக்கும் ஆலோசனைகள் இவைதான். விமான நிலையப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம். விமானத் தளங்களைத் தொடர்ந்து பைனாகுலர்கள் மூலம் பார்த்துப் பறவைகள் தென்பட்டால் விரட்டலாம்.

பறவைகள் தங்கள் தினசரி இரைதேடலைக் குறிப்பிட்ட நேரத்தில்தான் வைத்துக் கொள்ளும். அந்த நேரங்களில் விமானம் புறப்படவோ, வந்து சேரவோ இல்லாதபடி அவற்றின் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம்.

‘அற்பப் பறவைகளுக்காக விமான நேரத்தை மாற்றி அமைப்பதா?’ என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படியானால் வழக்கம்போல இயற்கை சமநிலையைப் பாழ்படுத்திவிட்டு, அதற்கான பலனை அனுபவிக்க நாம் தயாராக வேண்டியதுதான்.

– ஜி.எஸ்.எஸ்., எழுத்தாளர், தொடர்புக்கு: aruncharanya@gmail.com

” பலர் மனதில் இடம் பிடித்த படம் …”

நாம் பார்க்கும் எல்லா புகைப்படங்களும் நம் மனதில் நிற்பதில்லை. புகைப்படத்தில் இருப்பவர்களைவிட, அந்தப் புகைப்படம் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கமே அதனை மற்றவற்றில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.

‘தி இந்து’ நாளிதழின் ஃபேஸ்புக் பக்கத்தில் நம் புகைப்படக் கலைஞர்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை பகிர்வது உண்டு. அப்படி பகிரப்படும் புகைப்படங்கள் மக்கள் மனதை எந்த அளவுக்கு கவர்ந்திருக்கிறது என்பதை உடனுக்குடன் வரும் பின்னூட்டங்கள், விருப்பங்கள் (லைக்) மூலமாகவும் அது எத்தனை முறை பகிரப்பட்டுள்ளது என்பதிலும் தெரிந்துகொள்ளலாம்.

சமீபத்தில், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக கோவையில் நடந்த கண்டனப் போராட்டத்தில், நமது புகைப்படக்காரர் ஜெ.மனோகரன் எடுத்த ஒரு புகைப்படம், ‘தி இந்து’ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதாக அமைந்தது.

விலைவாசி உயர்ந்த நேரத்தில் குறைந்த விலையில் தரமான உணவை ‘அம்மா உணவகம்’ மூலம் வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதேபோல குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்க ‘அம்மா பள்ளிக்கூடம்’ தொடங்குவாரா என ஒரு சிறுவன் கேட்பதுபோல இருந்தது அந்த படம்.

பதிவேற்றிய 3 மணி நேரத்தில், 7600 நேயர்கள் அதைப் பகிர்ந்தனர். 19,000 நேயர்கள் லைக் செய்தனர். தற்போது வரை மொத்தமாக 38,726 பேர் லைக் செய்துள்ளனர். 27,418 நேயர்கள் பகிர்ந்துள்ளனர். 1,324 பின்னூட்டங்களை அந்தப் புகைப்படம் கண்டுள்ளது. லைக், பின்னூட்டங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன.