Message For the Day…” Do Appreciate the Value of Air You Breathe…”

Co-operation among individuals grouped as a society guarantees security and stability. It is called, Shri Rama Raksha (protection), the mark of Divine Grace. The surest sign of awareness of one’s Divine Nature is the recognition of the bond of kinship with other beings. This bond has now snapped, and as a result, life has been rendered meaningless. The evil spirits of greed and pride, of envy and hatred, are executing their demonic dance in the hearts of man. People are not able to appreciate the value of the air they breathe, of the Sun’s rays that illumine the world, the drops of rain that sustain life, and the subtle power that underlies every object in Nature. They have become low-minded people, dedicating their lives to meaningless pursuits. What needs to be done today is to foster people who are determined to stand and even suffer to realise the holy goals of peace and prosperity for the entire world.

Sathya Sai Baba

“என் பெயர் நிகரன் …”

‘என் பெயர் நிகரன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். தமிழ் வழியில் கல்வி பயில்கிறேன்’ – இப்படி ஒரு சிறுவன் என்னிடம் அறிமுகப்படுத்தியபோது என் காதுகளில் தேன் பாய்வதை உணர்ந்தேன்.

வீட்டிற்கு வரும் விருந்தினர், உறவினரிடம் ‘பாப்பா அங்கிளுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லு’, ‘சே ஹலோ டூ ஆன்ட்டி’ என்றெல்லாம் வித்தை காட்டுவது போல் குழந்தைகளின் ஆங்கிலப் புலமையை பறைசாற்றிக் பெருமைகொள்ளும் இந்த காலகட்டத்தில், எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தை அழகாக தமிழ் பேச வேண்டும் என விரும்புகின்றனர், ஊக்குவிக்கின்றனர்?

இதை அறிந்துகொள்ள எத்தனித்தபோதுதான் நிகரனின் அறிமுகம் கிடைத்தது. அழகாக தமிழ் பேசும் நிகரனைப் பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ள அவனது நண்பர்களும் தமிழ் உச்சரிப்பைக் கற்றுக் கொள்கின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. நிகரன் வீட்டில் அனைவருமே அநாவசியமாக ஆங்கிலக் கலப்பு இல்லாமல் இனிமையாக தமிழ் பேசுகின்றனர்.

நிகரனின் தாய் காந்திமதியுடன் பேச்சு விரிவடைந்தது. பொதுவாக குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் மத்தியில் சற்று வேறுபட்டு நிற்கிறார்கள் நிகரனின் பெற்றோர். குறிப்பாக நிகரனின் தாய் காந்திமதி.

“ஆங்கிலத்தில் பேசுவது சமூக அந்தஸ்தாக கருதப்படுகிறது. ஆங்கிலப் புலமை உள்ள நபர் மிகப் பெரிய அறிவாளி என்ற தோற்றமும் நிலவுகிறது. சமுதாயத்தோடு ஒன்றரக்கலந்துவிட்ட இந்த கருத்தோடு இயைந்து வாழ சமூகமும் பழகிவிட்டது.

ஆங்கிலம் தெரியாமல் போய்விட்டால் எதிர்காலத்தில் குழந்தை தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாகவே ஆங்கில வழிக்கல்வி, வீட்டிலும் ஆங்கிலம் பற்றாகுறைக்கு ஸ்போகன் இங்கிலிஷ் வகுப்பு என குழந்தைகள் ஆங்கிலம் பயில்வதில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது.

என் குழந்தையை தமிழ் வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியில் சேர்க்கப்போகிறேன் என்றபோது குடும்பத்திற்குள்ளேயே அவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றை மீறியும் நானும் என் கணவரும் எங்கள் விருப்பம் போல் குழந்தையை தமிழ் வழிப் பள்ளியில் சேர்த்தோம்” என்றார்.

தமிழ்வழிக் கல்விக்கான அவசியத்தை விவரித்தபோது, “தாய்மொழி வழி கற்றலே உண்மையான கற்றல். அவ்வாறு கற்பதன் மூலமே துரிதமான புரிதல் ஏற்படுகிறது. சுயசிந்தனை, கற்பனைத் திறன் கூடுதலாக வளர்கிறது. ஆங்கில மொழிக்கற்றலில் எவ்வளவு உருப்போட்டாலும் புரிதல் என்பது முழுமையானதாக இருக்காது. மனித மூளையானது, தாய்மொழியிலேயே சிந்திக்கும். அப்படி இருக்கும்போது ஆங்கில மொழியில் கல்வி கற்கும்போது, ஒவ்வொரு முறையும் தமிழில் மொழிபெயர்த்து அதன்பின்னரே புரிதல் ஏற்படுகிறது. இதனால் சிந்தனைத் திறனுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.

தாய்மொழிக் கல்வியால், சிறு வயதிலேயே புத்தகங்கள், செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கமும் உருவாகிறது. தன் மரபு சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த நூல்களை அதிகம் வாசிக்கும் போது பக்கவாட்டுச் சிந்தனை உதயமாகிறது. ஆனால், ஆங்கிலத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். நிகரனும், ஆங்கிலத்தையும் ஒரு புதிய மொழி என்றளவில் ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறான்” என தன் கருத்துகளை முன்வைத்தார்.

நிகரன் ஒரு முன்மாதிரி என்பதில் ஐயமில்லை. நிகரனும் தமிழும் அந்த வீட்டில் அழகாக விளையாடிக் கொண்டிருக்க, இன்னொருவரையும் சந்திக்க நேர்ந்தது. இல்லத்தரசி சவிதா, தன் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். குழந்தை வாயில் வார்த்தைகள் அரும்பும் போதே மம்மி, டாடி, அங்கிள், ஆன்ட்டி என சிறு சிறு வார்த்தைகளை வலுக்கட்டாயமாக திணிக்காமல் பிள்ளைத் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார் சவிதா.

“குழந்தையின் மூன்று வயது வரை முழு நேரமும் அதனுடன் செலவிட்டு அரவணைத்துச் செல்வது அவசியம். அதனாலேயே என் ஊடகப் பணியை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு ஆற்றல் அறிவனுடன் வீட்டில் இருக்கிறேன். என் நேரமும், பொழுதும் செம்மையாக செலவாகிறது. ஆற்றலுடன் நாங்கள் எப்போதும் தமிழில் தான் பேசுகிறோம்.

ஆங்கிலம் பயில்வதோ, பேசுவதோ தவறில்லை. ஆங்கிலமும் அத்தியாவசியம் தான். ஆனால் அது எங்கு தேவையோ, எவ்வளவு தேவையோ அவ்வளவே பயன்படுத்தினால் போதுமானது. வீட்டில் குழந்தைகளுடன் தமிழில் உரையாடுவதே உறவுகளுக்கு இடையே இனக்கத்தை வலுப்படுத்தும். குழந்தையின் உணர்வுகள் அப்படியே பிரதிபலிக்கப்படும். குழந்தை அழுத்தமாக, அழகாக, தமிழ் பேசும் போது கேட்டுப் பாருங்கள் அப்போது தமிழுக்கும் அமுதென்று பேர் என பாவேந்தர் சொன்னது புரியும்.

ஆற்றல், வளர்ந்து வரும்போது அவனை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்கவே திட்டமிட்டுள்ளோம். கண்களால் நேரடியாக ஒரு பொருளைக் காண்பதற்கும், கண்ணாடி வழியாக காண்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதோ அதைத் தான் தமிழ்வழிக் கற்றலுக்கும் ஆங்கிலவழிக் கற்றலுக்கும் உள்ள வேறுபாடாக உணர்கிறேன்.

தமிழ் வழியில் கற்கும் போது எளிதில் புரிதல் ஏற்படும். மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. எத்தனை காலம் ஆனாலும் படித்தது பசும்மரத்து ஆணி போல் பதிந்திருக்கும். கசடற கற்று அதன்படி நிற்க தாய்மொழியே சிறந்தது” என்றார் சவிதா.

நிகரன், ஆற்றல் நம் கண் முன் இரு சாட்சிகள். இவர்கள் போன்று இன்னும் பல இங்கும், அயல்நாடுகளிலும் இருக்கின்றனர்.

பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொதுஇடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது ஏன் தமிழ்ப்பேச ஊக்குவிப்பதில்லை என பேராசிரியர் ராஜராஜனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தபோது, “அது ஆங்கிலம் நம் சமூகத்தில் பெற்றிருக்கும் மதிப்பின் விளைவு” என்றார்.

‘ஆங்கிலத்தின் மதிப்பை’ விவரித்த அவர், “காலனி ஆதிக்கத்தில் இருந்த நம் நாட்டில் அந்த ஆதிக்கம் முற்று பெற்றாலும் கூட அது விட்டுச்சென்ற மொழியின் ஆதிக்கம் இன்னும் சற்று கூட அகலவில்லை. உயர்கல்வியில் ஆங்கிலத்திற்கு இருக்கும் முக்கியத்துவம், அதற்குள்ள பொருளாதார மதிப்பு, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என பல்வேறு கூறுகள் ஆங்கிலத்திற்கு தனி மதிப்பளித்துள்ளன. ஒரு மொழி ஆர்வலராக, ஆய்வாளராக ஆங்கில் மொழிக்கென நம் சமூகத்தில் ஒரு தனி மதிப்பு இருப்பதை உணர்கிறேன்.

பன்மொழிப்பேசக் கூடிய, பலவகை கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்துள்ள நம் இந்திய திருநாட்டில், ஆங்கிலம் வெறும் பயன்பாட்டு மொழியில் இருந்து ஒரு தேவையாகிவிட்டது.

இதன் காரணமாகவே தொடர்பு மொழி என்ற ஒரு நிலை வரும்போது ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆங்கிலம் பெற்றிருக்கும் மதிப்பு மாயை அல்ல, அது உண்மையானதே.

அதுவே பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே ஆங்கிலத்தில் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்கின்றனர். ஆங்கிலத்தின் பயன்பாடும், மதிப்பும் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தமிழ் மொழி வளர்ச்சி நடக்காமல் இல்லை. தமிழ் மொழி வளர்ச்சி அந்த அளவுக்கு வெளிப்படையாக தெரியவில்லை. அந்த வெற்றிடத்தை இப்போது ஊடகங்கள் நிரப்பி வருகின்றன. தமிழ் வளர்ச்சி குறித்த செய்திகளை அவ்வப்போது உலகிற்கு வெளிச்சம் காட்டி வருகின்றன.

இவை ஒருபுறம் இருக்க, ஆங்கிலம் பெற்றிருக்கும் மதிப்பை மீறி தமிழ் மொழியானது பேச்சில் இருந்து கற்றல் வரை எங்கும் வேரூன்றி நிலைநிறுத்தப்பட்ட உருமொழியாகும். ஆனால் இவை ஒரு நாள் இரவில் ஏற்பட்டுவிடாது, அதற்கு காலங்கள் சில ஆகும்.

அத்தகைய சமூக மாற்றத்திற்கு மக்களின் மொழிப்பற்றும் அதிகரிக்க வேண்டும். தாய்மொழி வழி கற்றல் குறித்த விழிப்புணர்வும் பரவலாக ஏற்பட வேண்டும். ஜப்பான், ஜெர்மனி, கொரியா போன்ற நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியால் ஏற்பட்டுள்ள நன்மை அப்போதுதான் உணரப்படும். தாய்மொழிக் கல்வியே சமூக வளர்ச்சிக்கும், தனிமனித வளர்ச்சிக்கும் வித்திடும்.

இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டும் தமிழ்வழிக் கல்வி பயிலும் குழந்தைகள் இருக்கும் நிலை மாற அண்மையில் ஐ.ஏ.எஸ். தேர்வில் முழுக்க முழுக்க தமிழில் படித்து வெற்றி பெற்ற ஜெயசீலன் போன்றோர் தூண்டுகோலாக இருப்பர். ஒன்று, நூறாகும், நூறு ஆயிரமாகும். எல்லாம் மாறும் எதிர்காலத்தில்” என்றார் ராஜராஜன்.

பாரதி ஆனந்த், தொடர்புக்கு ap.bharathi@yahoo.com

Keywords: தமிழ் வழிக் கல்வி, தாய்மொழி, தமிழ் மொழி
Topics: சமூகம்| பதிவுகள்| பார்வைகள்|

Source:::: The Hindu….Tamil

Natarajan

” Hug of the Century … ” !!!

 

 

>  The woman in the video found this injured lion in the forest, about to
> die.  She nursed the lion back to health, and when the lion was better, she
> made arrangements with a zoo to take the lion and give it a new and happy
> home.
>
> This video was taken when the woman, after five years, went to visit the
> lion to see how he was doing. Watch the lion’s reaction when he sees her.
> AMAZING!!!
Source ::::You Tube & input from a friend of mine
Natarajan

Image of the Day…

Lofoten

The sky reflected in the water, in northern Norway.

View larger. | Photo credit T.Richardsen

Lofoten is an archipelago and a traditional district inside the Arctic Circle in northern Norway.

This beautiful shot is by T.Richardsen. He wrote:

It´s official, I love Lofoten.

Nikon D800, 15mm, F16, iso 80 – hdr
Captured at Ternvannet, Lofoten, Nordland, Northern Norway.

Source::::Earth sky news site

Natarajan

Joke of The Day…” My Chauffeur will Answer Your Question …” !!!

When Albert Einstein was making the rounds of the speaker’s circuit, he usually found himself eagerly longing to get back to his laboratory work. One night as they were driving to yet another rubber-chicken dinner, Einstein mentioned to his chauffeur (a man who somewhat resembled Einstein in looks & manner) that he was tired of speechmaking.

“I have an idea, boss,” his chauffeur said. “I’ve heard you give this speech so many times. I’ll bet I could give it for you.” Einstein laughed loudly and said, “Why not? Let’s do it!” When they arrive at the dinner, Einstein donned the chauffeur’s cap and jacket and sat in the back of the room. The chauffeur gave a beautiful rendition of Einstein’s speech and even answered a few questions expertly.

Then a supremely pompous professor asked an extremely esoteric question about anti-matter formation, digressing here and there to let everyone in the audience know that he was nobody’s fool. Without missing a beat, the chauffeur fixed the professor with a steely stare and said, “Sir, the answer to that question is so simple that I will let my chauffeur, who is sitting in the back, answer it for me.”

 

SOURCE:::joke a day.com

Natarajan

” படித்ததில் பிடித்தது …மௌனம் கேட்கவும் …”

ஒரு சீன அரசன் தன் மகனுக்குப் பட்டம் சூட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தார். அரசன் தன் மகனுக்கு அரசனாகும் தகுதி இருக்கிறதா என அறிந்துகொள்வதற்காக ஒரு ஜென் குருவிடம் அனுப்பிவைத்தார்.

குரு இளவரசனிடம், “ நீ காட்டுக்குச் சென்று ஆறு மாதங்கள் கழித்து வா” என்றார்.

இளவரசன் காட்டில் பல இன்னல்களை அனுபவித்து ஆறு மாதங்கள் கழித்து வந்தார்.

குரு, “நீ காட்டில் என்னென்ன ஓசைகளைக் கேட்டாய் ?”

இளவரசன், “குருவே, நான் காட்டில் சிங்கங்களின் கர்ஜனை, புலியின் உறுமல், நரியின் ஊளையிடும் சத்தங்களைக் கேட்டேன்” என்றான்.

குரு, “நீ மீண்டும் காட்டுக்குச் சென்று ஆறு மாதங்கள் கழித்து வா”

சலிப்படைந்த இளவரசன் இம்முறைத் தன் காதுகளைக் கொண்டுக் கூர்மையாகக் கேட்கத் தொடங்கினான். ஆறு மாதங்களுக்குப் பின் குருவின் முன் வந்து நின்றான்.

குரு அவனிடம் முன்புக் கேட்டக் கேள்வியையே கேட்டார்.

இளவரசன், “குருவே இம்முறை பறவைகளின் ஒலிகளைக் கேட்டேன், பூச்சிகளின் சத்தங்களைக் கேட்டேன்”

குரு மீண்டும் அவனைக் காட்டுக்கு அனுப்பினார். ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் இளவரசன் குருவின் முன் வந்து வணங்கி நின்றான். அவன் முகத்தில் அமைதியும் ஒளியும் குடிகொண்டிருந்தன. இளவரசனின் நிலையைக் கண்ட குரு அரசனை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்.

இம்முறை குரு அவனிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இளவரசனே பேசத் தொடங்கினான், “குருவே, காட்டில் மொட்டுக்கள் அவிழும் ஓசையைக் கேட்டேன், பிற உயிர்கள் தங்கள் மனங்களில் பேசுவதையும் தெளிவாகக் கேட்டேன், அவற்றின் மௌனத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எண்ணங்களின் அதிர்வுகளையும் கேட்டேன்” என்றார்.

அங்கு வந்த அரசன், இளவரசன் பேசுவதையெல்லாம் ஆச்சரியத்தோடுக் கேட்டுக்கொண்டு இருந்தார்.

குரு அரசனைப் பார்த்து, “அரசனே இப்போது இளவரசன் நாட்டையாளும் முழுத் தகுதியைப் பெற்றுவிட்டார். வெறும் வெற்று ஆரவாரங்களில் உண்மை இல்லை என்பதையும், உண்மையானது மௌனத்துக்குள் ஒளிந்திருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டுவிட்டார்.” என்றார்.

மகிழ்ச்சியடைந்த அரசனும் இளவரசனும் குருவை வணங்கி விடைபெற்றனர்.

“ஆன்மீக ஆளுமை …திருமலையில் ஒலிக்கும் சிம்ம குரல் …”

ஆலயங்களில் நடக்கும் திருவிழாக்களில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்கிறார்கள். ஆனால் கலந்து கொள்பவர்களைப்போலப் பல மடங்கு பக்தர்கள் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாத வருத்தத்தில் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு சேர்ப்பது நேரடி வர்ணனையும் நேரலையும்தான். குரலின் மூலம் செய்யப்படும் இந்த ஆன்மிகச் சேவையைக் கடந்த 40 ஆண்டுகளாகச் செய்துவருகிறார் பாதூர் புராணம் ஸ்ரீ உ.வே. ரங்கராஜாசாரியார்.

லட்சோப லட்சம் பக்தர்களைச் சென்றடையும் சிம்மக் குரலுக்குச் சொந்தக்காரராக இருக்கும் இவர், திருமலையில் ஸ்ரீநிவாச பெருமாள் கல்யாண உற்சவத்தை நேரடி வர்ணனை செய்துவருகிறார். புராண, இதிகாசக் கதைகள், திருமலை பெருமாள் குறித்த தகவல்கள், கலைகள் குறித்த அறிவு, விழாவுக்கு வந்திருக்கும் பிரபலம் குறித்த அறிமுகம், கல்யாண நிகழ்ச்சிகளை வரிசை பிசகாமல் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறுதல் என்று பன்முகத் திறன் இருந்தால் மட்டுமே இத்துறையில் பரிமளிக்க முடியும். இதில் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறார் இந்தப் பெரியவர்.

திருமலை பிரம்மோற்சவத்தை முதன் முதலில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தொடங்கியபோது குறிப்பிட்ட நிறுவனங்கள் இவரையே அணுகின.

இவர், தொலைபேசி உபன்யாசமும் செய்கிறார். ஒவ்வொரு நாளும் காலை ஐந்தரை மணிக்கு அமெரிக்காவின் டெக்சாசில் இருந்து இவரது இல்லத்துக்குத் தொலைபேசி அழைப்பு வரும். காலை நான்கு மணிக்கே எழுந்து தயாராக இருக்கும் பாதூர் மாமா, தொலைபேசி மணி ஒலித்தவுடன், ஒலி வாங்கியை எடுத்து உபன்யாசத்தை ஆரம்பித்துவிடுவாராம். இதைத் துல்லியமாக ஒரு மணி நேரத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் சில ஆன்மிகச் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.

இந்நிகழ்ச்சி டெக்சாசில் மட்டுமல்லாமல் வாஷிங்டன், கலிஃபோர்னியா உள்ளிட்ட பல அமெரிக்க மாகாணங்களில் ஒளிபரப்பாகிறது. ஆன்மிகப் பணியில் இடைவிடாது ஈடுபட்டுள்ள இவருக்கு அண்மையில் திருப்பதி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் மஹாமஹோபாத்யாய என்ற உயரிய விருதினை வழங்கி கெளரவித்துள்ளது.

திருப்பதியில் குடியிருக்கும் இவரது சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாதூர். இவரது முன்னோர்கள் ராமாயண உபன்யாசங்கள் செய்துவந்ததால் `புராணம்` என்ற சிறப்புப் பட்டப் பெயர் தங்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கிறார்.

பண்டிதர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த இவருக்கு வீட்டிலேயே குருமார்கள் அமைந்துவிட்டார்கள் என்று தன் குருவாக அமைந்த தந்தையைப் பற்றி நினைவுகூர்கிறார் ரங்கராஜாசாரியார். சென்னை பல்கலைக்கழகத்தில் வியாகரண சிரோண்மணி என்ற பட்டப் படிப்பை முடித்து திருச்சி அருகேயுள்ள திருப்பராய்துறை சுவாமி சித்பவானந்தாவின் ராமகிருஷ்ண தபோவனத்தில் சமஸ்கிருத பண்டிதராகச் வேலைக்குச் சேர்ந்தார் பாதூர். அந்தச் சமயத்தில் சித்பவானந்தர் திருவாசகத்தையும், பத்து உபநிஷத்துக்களையும் ஒப்பாய்வு செய்து எழுதப்பட்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் பதிப்பித்தார். அதைப் பிழைதிருத்தும் பணி இவருக்குக் கிடைத்தது.

இந்தப் பணியின் மூலம் அந்தச் சிறிய வயதிலேயே இவ்விஷயங்களில் ஆழமான அறிவு கிடைத்தது என்பதையும் மறக்காமல் பதிவுசெய்கிறார். இவர் திருவாசகத்தை முழுவதும் படித்துப் புரிந்துகொண்டது அப்போதுதான்.

“திருமலைப் பெருமாள் உற்சவத்தின்போது முன்னால் கோஷ்டியாக திவ்யப் பிரபந்தம் சொல்லிக்கொண்டு போவார்கள். சுவாமிக்குப் பின்னால் வேதம் சொல்லிக்கொண்டு போவார்கள். அப்போது இரண்டுமே எனக்குத் தெரியாது. திவ்யப் பிரபந்தம் கற்றுக்கொள்ளத் தொடங்கி 1974-லிலேயே முடித்துவிட்டேன். அது முதல் இன்று வரை சுமார் நாற்பது ஆண்டுகளாக அனைத்து உற்சவங்களுக்கும் திவ்யப் பிரபந்தம் சொல்லும் கோஷ்டியில் இருக்கிறேன்” பிரபந்தத்தின் மீது பற்று வந்த பிறகு உரைகளையும் படித்திருக்கிறார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் தொடங்கியபொழுது தமிழ் வர்ணனைக்குப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். அது முதல் பெருமாளின் நித்ய கல்யாண உற்சவத்திற்கும், திருமலை மற்றும் திருச்சானூர் பிரம்மோற்சவத்திற்கும் தமிழில் நேரடி வர்ணனை சொல்லிக்கொண்டிருக்கிறார் பாதூரார்.

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை உபன்யாசம் செய்வதுண்டு. நாற்பது ஆண்டுகளாக இது தொடர்கிறது. “காலையில் ஒரு கோவில் என்றால் மாலை நான்கு மணிக்கு மற்றொரு கோவில், மீண்டும் மாலை ஆறு மணிக்கு வேறு ஒரு கோவில் என்ற வகையில் மார்கழி மாதத்தில் ஒரு நாளுக்கு மூன்று முறை கூட திருப்பாவை உபன்யாசம் செய்வதுண்டு” என்கிறார் பாதூரார்.

ராமானுஜர் போல இவரும் திருமலையே பெருமாள் என்று எண்ணுவதால் திருமலையில் செருப்பே அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Message For the Day…” Repeat the Name of God and Gain Control Over your Mind… “

What manifests externally is called ‘Manas’ (Mind). That which is internal is ‘Nama’ (The Name of the Lord). Repeating the Name of the Lord, you can gain control over your mind and attain the state where there is no Mind (Amanaska). As long as you are under the influence of your mind, you will tread the worldly path and get lost. You can clearly hear the voice of the Lord, only when you attain the ‘No Mind’ State. To attain that state, you must listen to the inner voice, the voice of the Lord within you. To hear Him, you must practice Devotion and Surrender. The easiest way to understand and experience God is to Love Him. You can easily grow in love for God, by worshipping Him in a specific form. A true devotee does all duties with total surrender only to please God, and dedicates every action to please Him.

Sathya Sai Baba

Image of the Day…Double Rainbow !!!

Can you ever see the whole circle of a rainbow?

It is indeed possible to see the whole circle of a rainbow – but conditions have to be just right.

When sunlight and raindrops combine to make a rainbow, they can make a whole circle of light in the sky. But it’s a very rare sight. Sky conditions have to be just right for this, and even if they are, the bottom part of a full-circle rainbow is usually blocked by your horizon. And so we see rainbows not as circles but as arcs in our sky.

Gallery: Rainbows around the world

Double rainbow in Alaska. The shadow of the photographer’s head on the bottom marks the centre of the rainbow circle. Image Credit: Wikimedia Commons

 

 

When you see a rainbow, notice the height of the sun. It helps determine how much of an arc you’ll see. The lower the sun, the higher the top of the rainbow. But if you could get up high enough, you’d see that some rainbows continue below the horizon seen from closer to sea-level. Mountain climbers sometimes see more of a full-circle rainbow, though even a high mountain isn’t high enough to show you the whole circle.

Pilots do sometimes report seeing genuine full-circle rainbows. They’d be tough to see out the small windows we passengers look through, but pilots have a much better view from up front.

By the way, we searched for images of full-circle rainbows. But most of the ones we found weren’t really rainbows. They were either halos around the sun – or airplane glories. If you know of a photo of a bonafide full-circle rainbow, please comment below and provide a link! Many thanks.

What’s NOT a rainbow? Hear from a master of sky optics

Bottom line: Can you ever see a full-circle rainbow in the sky? Yes, but they’re most often seen by pilots, who have a good view of the sky from the wide front windows of a plane.

What makes a halo around the sun or moon?

Source::: earth sky news site

Natarajan

Joke of the Day…” Would You Like your Car to Crash Twice a day … ” !!!

At a recent computer expo (COMDEX), Bill Gates reportedly compared the computer industry with the auto industry and stated “If GM had kept up with technology like the computer industry has, we would all be driving twenty-five dollar cars that got 1000 mi/gal.”

Recently General Motors addressed this comment by releasing the statement: “Yes, but would you want your car to crash twice a day?”

Not only that, but….

Every time they repainted the lines on the road you would have to buy a new car.

Occasionally your car would die on the freeway for no reason, and you would just accept this, restart and drive on.

Occasionally, executing a maneuver would cause your car to stop and fail and you would have to re-install the engine. For some strange reason, you would accept this too.

You could only have one person in the car at a time, unless you bought “Car95” or “CarNT”. But, then you would have to buy more seats.

Macintosh would make a car that was powered by the sun, was reliable, five times as fast, twice as easy to drive, but would only run on five percent of the roads.

The Macintosh car owners would get expensive Microsoft upgrades to their cars, which would make their cars run much slower.

The oil, gas and alternator warning lights would be replaced by a single “general car default” warning light.

New seats would force everyone to have the same size butt.

The airbag system would say “are you sure?” before going off.

If you were involved in a crash, you would have no idea what happened.

Source::::joke a day.com

Natarajan