Image of the Day…” Brazil at Night ” !!!

 

View from space: Brazil’s World Cup cities at night

Here’s a satellite view of the 12 Brazilian cities hosting World Cup games.

View larger. | Image credit: NASA

Hey World Cup addicts … Where are all those cities we’re hearing about?

This satellite view of Brazil at night shows the 12 cities hosting World Cup games this summer: Brasília, Belo Horizonte, Manaus, Fortaleza, Cuiabá, Porto Alegre, Curitiba, Natal, Recife, Salvador, Rio de Janeiro, and São Paulo.

Brazil is big, by the way. It’s the largest country in South America and the fifth largest in the world by area (8.5 million square kilometers). Brazil stretches more than 4,000 kilometers (2500 miles) from north to south and from east to west.

Via NASA Earth Observatory

Source:::: earth sky news site

Natarajan

Message For the Day…” Happiness is Beyond Comfort and Sorrow… “

Understand the Nature of the Divine Soul (Atma), which gives sustenance to all the senses. The five senses originate from Ether, which emerges from the Atma. Hence, if you understand the Atma, it is highly likely that your senses will be under your control. Then you will always be happy. Know that happiness is beyond comfort and sorrow. Comfort and sorrow are just the manifestations of the human mind. The state which is beyond this pleasure and grief is truly happiness. You can realize this state when you listen to the voice within you. God is present within you and He truly speaks to you from within. To experience that inner voice, you must silence your mind. You must control the activity of the external senses. When the inner and outer organs are completely controlled, you will clearly hear the Lord, speaking to you, from within.

Sathya Sai Baba

” Hello God …I Thank you …”

GOD’S “PHONE NUMBER”

 

e0a8f-day_before_samadhi_002

Hello God, I called tonight
To talk a little while
I need a friend who’ll listen
To my anxiety and trial.

dove

You see, I can’t quite make it
Through a day just on my own…
I need your love to guide me
So I’ll never feel alone.

rose

I want to ask you please to keep
My family safe and sound.
Come and fill their lives with confidence
For whatever fate they’re bound.

Give me faith, dear God, to face
Each hour throughout the day,
And not to worry over things
I can’t change in any way.

rose butterfly

I thank you God for being home
And listening to my call,
For giving me such good advice
When I stumble and fall.

rose

Your number, God, is the only one
That answers every time.
I never get a busy signal,
Never had to pay a dime.

hearts

So thank you, God, for listening
To my troubles and my sorrow.
Good night, God, I love You, too,
And I’ll call again tomorrow!

dove
P.S. Please bless all my friends and family too.

Natarajan

 

“காணாமல் போன கடிதங்கள்…” !!!

 

தமக்கு வந்த கடிதங்களை

இன்றும் பெட்டியில்

பாதுகாத்து வைத்திருக்கிறார் அப்பா..

ஒரு காலை நீட்டியும் மற்றதை மடித்துக் கொண்டும்

தரையில் அமர்ந்து

வாழ்க்கைப் போராட்டங்களை முணுமுணுத்தபடி

கல் எந்திரத்தில் மாவு அரைக்கையில்

ஓரங்களை வழித்துப் போட

அஞ்சலட்டைகளைப் பயன்படுத்திக் கொள்வாள் பாட்டி

மரண சேதியைக் கொண்டுவந்தவை

வாசித்த மாத்திரத்தில் கிழிபட்டுப்போக

எஞ்சிய கடுதாசிகள்

குத்தியிருக்கும் கம்பியை

எரவாணத்தில் செருகி வைத்திருந்த தாத்தா

ஒருபோதும் அவற்றை

மீண்டும் எடுத்துப் பிரித்ததில்லை

கடிதம் எழுதுதலைப்

பள்ளிக்கூடத் தேர்வோடு

கழற்றி வீசும் காலத்தில்

மின்னஞ்சல்களில் நிரம்புவதையும்

அலைபேசியில் நெரிபட்டு

உறுத்தும் குறுஞ்செய்திகளையும்

படிக்கவோ

பதில் போடவோ

அசை போடவோ

சேமித்து வைக்கவோ – ஏன்

அழித்துப் போடவோ கூட

நேரமற்றுத் திரிகின்றன

நட்பும் உறவும் தொலைத்துத்

தேடிக் கொண்டிருக்கும் தலைமுறைகள்.

Source:::: எஸ் வி வேணுகோபாலன்  in The Hindu…Tamil

Natarajan

” These Ducklings Never Giveup…” !!!

Little Ducklings Encounter the Stairs…

These little ducklings are trying to follow their mother, who very easily climbed these stairs. But for her puny offsprings, these stairs are huge, and hard to climb. However, they never give up rejoining their mother, and that is what makes the end of this video so great.

 

 

Source::::You Tube and  ba-ba mail site

Natarajan

“நீங்கள் ஆணையிட்டால் ….” ” நடக்கட்டும் …நடக்கட்டும் …” !!!

 

1956 – ஜனவரி

இரண்டு இளைஞர்கள் – ஆங்கிலக் கல்வியுடன் நாட்டியக் கலையையும், கர்நாடக இசையையும் கசடறக் கற்றவர்கள். ஒருவர் பரத நாட்டியத்திலும், மற்றவர் கர்நாடக இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். பல்கலைக்கழக மேற்படிப்பு படித்து முடித்ததும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை, சென்னையிலிருக்கும் தங்கள் நாட்டியக் கலா நிலையத்தில் தங்கி இருந்தனர். அங்கு பாடங்கள் நடத்துவதில் உதவியாக இருந்துகொண்டு, எதிர்காலத்தைக் குறித்த கவலையுடன், நாட்களை நடனமும் கர்நாடக இசையும் பயில்வதிலும், கற்றுக் கொடுப்பதிலும் கழித்துக் கொண்டிருந்தனர்.

இவ்விருவரில் ஒரு இளைஞர் வேதவித்தகரின் மகன். சிறுவயதிலிருந்தே மஹாபெரியவர் மீது மரியாதையும் பக்தியும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஒரு நாள் காலை, “புறப்படு; நாம் இருவரும் காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவரைத் தரிசித்து வருவோம். அவருக்குப் பாடலில் உள்ள அளவுக்கு ஆடலில் அவ்வளவு விருப்பம் உண்டா என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும், நீ நடனமாடுவதற்கேற்ற வேஷ்டியும் மேலாடையும் எடுத்து வா…. அவர் அருளிருந்தால், அவர் முன் நீ ஆடும் பாக்யம் உனக்குக் கிடைக்கும். நீ ஆடுவதற்கு நான் பாடும் பாக்யமும் எனக்குக் கிடைக்கும்” என்றார்.

இருவரும் பேருந்தில் காஞ்சியை அடைந்தனர். மஹாபெரியவர் அப்போது ஓரிக்கையில் இருப்பதாகத் தெரிந்து, ஓரிக்கை அடைந்தனர். அங்கு மஹாபெரியவர் ஒரு சிறு சிவன் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தார். அந்தச் சிறிய இடத்தில் அவரைக் காண, அருள் பெற பக்தர்கள் கூடியிருந்தனர்.

நம் இளைஞர்கள் இருவரும் மஹாபெரியவரை நெருங்கி, வணங்கி எழுந்தனர். மஹாபெரியவர் அன்று மெளனம் கடைப்பிடிக்கிறார் என்று அறிந்தனர். வெகு சில சைகைகள் மூலமாக மிக முக்யமானவைகளை மட்டும் மற்றவருக்குத் தெரிவிக்கும் விதமான மெளனத்தில் இருந்தார்.

கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்ற நம் இளைஞர், மஹா பெரியவரிடம் நெருங்கி, “என் நண்பன் பரதநாட்டியம் கற்றிருக்கிறார். தங்கள் முன்னிலையில் ஆட வேண்டுமென்று விருப்பம்… நீங்கள் ஆணையிட்டால்….” என்று சொல்லி முடிக்கு முன்னாக, பெரியவர், “நடக்கட்டும்” என்பதற்கான சைகையைச் செய்ய, நம் இளைஞருக்கு ஒரே மகிழ்ச்சி. தன் நண்பனிடம் வந்து, “சீக்கிரம் நடனமாடுவதற்கேற்ப உடைமாற்றி வா… பெரியவர் ஆக்ஞை தந்துள்ளார்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற இரண்டாவது இளைஞர், அப்பொழுது தயாராகவே இருந்தார்.

ஒருவர் பாட, மற்றவர், “நடனம் ஆடினார்” என்ற பாடலுக்கு ஆடத் தொடங்கினார்.

அந்தச் சிறிய இடத்தில், பெரியவர் உட்கார்ந்திருந்த இடம் போக, மற்ற பக்தர்கள் அமர்ந்திருந்த இடமும் போக, மீதமுள்ள மிகச் சிறிய இடத்தில், நடராஜரின் மேல் அமைந்திருந்த அந்தப் பாடலுக்கு, “குதித்த மெட்டு” என்றழைக்கப்படும் ஜதியுடன் ஆடல் ஆரம்பித்தது. இந்த ஜதியுடன் காலைத் தூக்கி நடராஜர் அபிநயம் பிடிக்கவும், அவரது, கால்விரல்கள் மஹாபெரியவருக்கு மிக அருகில் வரவேண்டியதாயிற்று.

அருகிலிருந்த மற்ற பக்தர்கள், “நிறுத்து, நிறுத்து, அபசாரம், அபசாரம்” என்று கூவ, மஹா பெரியவரோ, தன் திருக்கைகளில் ஒன்றால், மற்ற பக்தர்களை நோக்கி “நிறுத்துங்கள்” என்பதாகவும், நம் இளைஞரைப் பார்த்து, “ஆடுவதைத் தொடரலாம்” என்பதாகவும் ஒரே நேரத்தில் அபிநயம் செய்தார்.

இளைஞர் ஆட, மற்றவர் பாட, அற்புதமான நடனம் பெரியவர் முன் அரங்கேறியது.

இருவரும் மஹாபெரியவரிடம் ஆசிபெற்று சென்னை வந்து சேர்ந்தனர்.

நடனமாடிய இளைஞர், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் மற்றும் பரோடா எம்.எஸ்.பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்து, 1992 ஆம் வருடம் பணி நிறைவு Head of the Faculty of Performing Arts of M.S. University, Baroda பெற்றார்.

அவருக்கு 1993 வருடம் சங்கீத நாடக அகாடமி விருதும், 2008 ஆம் வருடம் காளிதாஸ் ஸம்மான் எனப்படும் விருதும், 2011 ஆம் வருடம் பத்ம பூஷன் விருதும் கிடைத்தன..

கடந்த 60 ஆண்டுகளாகப் பல உலக மேடைகளிலும் தான் ஆடியதும், விருதுகள் பெற்றதும், தனது 80ஆவது வயதிலும், பரதநாட்யம் ஆடுவதும், அந்த ஒரு மதியம் மஹாபெரியவர் “தொடர்ந்து ஆடு” என்று உத்தரவு அளித்ததின் விளைவே என்று மிக அடக்கத்துடன் கூறும் அந்த இளைஞர் பத்மபூஷன் ஸி.வி.சந்த்ரசேகர் அவர்களே.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/

Natarajan

” மாட்டு வண்டி போகாத ஊருக்கும் உன் பாட்டு வண்டி போகுமே அய்யா … “

ஜூன்  24   இன்று  கவியரசு கண்ணதாசன்  பிறந்த நாள் …  அவரைப்  பற்றிய  நினைவலைகள்  சில ….இன்றைய “தினமலர்”  நாள் இதழில்

படித்தேன் … அது  உங்கள் பார்வைக்கும்  இப்பொழுது …

 நடராஜன்

‘நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை…
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை…’
தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத ‘கிளாசிக்’ பாடல்களின் ‘கிங் மேக்கர்’.

‘கவியரசர்’ என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனுக்கு இறைவன் அளித்த வாழ்நாள் 54 ஆண்டுகள் மட்டுமே.’மாட்டு வண்டி போகாத ஊரிலும் உன் பாட்டு வண்டி போகுதடா…’ என பாராட்டும் அளவிற்கு சினிமா பாடல்களை தன் எழுத்து ஏணியில் ஏற்றி ஊர் முழுதும் உலா வந்த அந்த காவிய
புத்தகம் பிறந்த தினம் இன்று. வருடங்கள் கடந்தாலும் நினைவிலும், செவியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசரின் நினைவுகளை அவருடன் நெருக்கமானவர்கள் இதோ பகிர்ந்து கொள்கிறார்கள்….

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

விசாலாட்சி, கண்ணதாசன் மகள் : அப்பாவிற்கு தெய்வ பக்தி அதிகம். அவர் சந்தித்த அனுபவங்களை தான் பாடலாய் தந்தார். பிசியான பாடலாசியராக இருந்தாலும் குடும்பத்தார் மீது அலாதி பிரியம் கொண்டவர். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை வைத்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். என் அம்மாவுக்காக ‘தாைழயாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா…’ போன்ற பாடல்களை எழுதினார். ‘பூ முடிப்பாள் இந்த பூங்குழலி… புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி…’ பாடலை என் அக்காக்கள் திருமணத்திலும், என் திருமணத்திலும் பாடச் சொல்லி அருகில் நின்று அவரும் பாடுவார்.பாசமலர் பாடலில் வரும் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம்தென்றலே..’ என்ற வரிகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். மறைந்தாலும் கண்ணதாசனின் மகள் என்ற பெருமையை என் தந்தை அளித்திருக்கிறார். பொன்னம்மாள் கண்ணதாசன் அறக்கட்டளை மூலம் அவர் நினைவாக உதவிகள் செய்து வருகிறோம்.

இரண்டு மனம் வேண்டும்

சொ.சொ.மீ.சுந்தரம், கண்ணதாசனின் கவியரங்க நண்பர்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். 1976ல் மதுரையில் நடந்த கவியரங்கத்தில் என் பேச்சை கேட்டு பாராட்டிய கண்ணதாசன், சொ.சொ.மீ., சுந்தரம் என்பது ‘சொல்லுக்கு சொல் மீறும் சுந்தரம்’ என பாராட்டினார். கவியரங்கங்களில் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்தார். கண்ணன் மீது அவருக்கு கொள்ளை பிரியம். எங்கு வந்தாலும் நன்கு உறங்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். புதுச்சேரி கம்பன் கழகம் நடத்திய கவியரங்கத்திற்கு சென்ற போது 9.30க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு 9.15 வரை அவர் வரவில்லை. அதன் செயலாளர் அருணகிரி, தமிழாசிரியர் ஒருவரை அழைத்து கண்ணதாசனை அழைத்து வரும் வரை இறைவணக்கம் பாடுமாறு கூறிச் சென்றார். ஒரு விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனை கண்டுபிடித்து எழுப்பிய போது ‘துாங்கிவிட்டேன் அருணகிரி… வாருங்கள் செல்லலாம்’ என முகத்தை துடைத்துவிட்டு ஒரு ‘கப்’ காபியோடு மேடையேறியவர் தன் பேச்சில் அத்தனை பேரையும் கட்டிப்போட்டார். அந்த கூட்டத்தில் தனக்கு பிடித்த இரு பாடல்களை அவர் பாடினார். ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்… நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று…’ என்று பாடி முடிக்க அங்குள்ள அனைவர் கண்ணிலும் கண்ணீர்.’பார்த்தேன் நினைத்தேன் பக்கம் வர துடித்தேன்… உனைத் தேன் என நான் நினைத்தேன்…’ என தொடங்கி ‘முடித்தேன் ஒரு துளி விடாமல் குடித்தேன்…’ என மற்றொரு பாடலை பாடி அவர்களின் சோகத்தை போக்கினார். மது அருந்தும் போது தான் கண்ணதாசன் பாடல் எழுதுவார் என பலரும் நினைக்கின்றனர். அது தவறு. மது இருக்கும் போது அவரிடம் பாடல் வராது, பாடல் வரும் போது அவரிடம் மது இருக்காது. ‘மருதமலை மாமணியே முருகைய்யா… தேவரின் குலம் காக்கும் வேலய்யா…’ என்ற பாடலை எழுதியதற்காக சின்னப்பதேவர் ‘பிளாங் செக்’ ஒன்றை கண்ணதாசனுக்கு வழங்கினார். வறுமையில் இருந்தாலும் தன் உதவியாளர் கண்ணப்பனை அழைத்த கண்ணதாசன், ‘இந்த காசோலையை கண்ணாடி போட்டு மாட்டு; இது தான் என் பெருமைக்கு எடுத்துக்காட்டு’ என்று கூறினார்.’நான் இந்திய ஜனாதிபதி போல் சம்பாதிக்கிறேன்… அதே நேரத்தில் இந்தியா போல் கடன் வாங்குகிறேன்…’ எனக்கூறுவார்.திரைப்பட பாடல்களை மட்டும் வைத்து கண்ணதாசனை மதிப்பிடக்கூடாது. அவை அல்லாது கவியரங்கம், இசை, பேச்சு என கண்ணதாசனின் திறமைகளை அருகில் இருந்த பார்த்தவர்களின் நானும் ஒருவன்.

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்


கவிஞர் முத்துலிங்கம்:
 மதுரை மாணிக்கத் தமிழை, கோடம்பாக்கத்திற்கு கூட்டி வந்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. இலக்கியப் புலவர்கள் இலக்கியத்தில் இயம்பாமல் விட்ட நுணுக்கமான கருத்துக்களை, சினிமாவில் தீட்டியவர். இலக்கிய சாற்றை பிழிந்து, திரைப்பாடலில் தந்தவர்.பாவமன்னிப்பில், ‘சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்…,’ துவங்கும் பாடலில், ‘காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்,’ என்ற சரணம், எனது நம்பிக்கையை உயர்த்திய வரிகள்.’மயக்கமா, தயக்கமா? மனதிலே குழப்பமா?…, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு,’- கண்ணதாசனின் பாடல் வரிகள் கவிஞர் வாலிக்கு நம்பிக்கையூட்டி, திரைப்பாடல்கள் எழுதவைத்தவை.கண்ணதாசன் கவிதை மட்டுமின்றி, உரைநடையில் புதிய நடையாக சிறு வாக்கியங்களாக சீர்திருத்தி எழுதியது அகவற்பா போல் இருக்கும். ‘வனவாசம்’ சிறந்த முன்னுதாரணம். அதற்கு ஈடான உரைநடை இலக்கியம், இலக்கிய உலகில் இல்லை.எம்.ஜி.ஆருக்கு ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘தங்கத்தில் முகமெடுத்து…,’பாடல் எழுதினேன். ‘நன்றாக இருந்தது’ என கண்ணதாசன் பாராட்டினார்.முதன்முதலாக நான், கண்ணதாசன், கங்கை அமரன் இணைந்து ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திற்கு பாடல் எழுதினோம். ‘மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ…,’ பாடலை நானும், ‘கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ…,’ பாடலை கண்ணதாசன், ‘பூவரசம் பூ பூத்தாச்சு…’பாடலை கங்கை அமரனும் எழுதினோம்.கண்ணதாசனிடம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் அதிபர் டி.ஆர்.ராமண்ணா, ‘நீங்கள்
இயற்றிய மாஞ்சோலை கிளிதானோ’ பாடல் நன்றாக உள்ளது. இதுபோல், எனது படத்திற்கு ஒரு பாடல் எழுத வேண்டும்,’ என்றாராம். கண்ணதாசன்,’அதை நான் இயற்றவில்லை. முத்துலிங்கம் எழுதியது. அவருக்கு, சந்த நடையில் நன்றாக எழுதவரும். அவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்,’ என்றாராம். எத்தனை கவிஞர்களுக்கு இப்படி பெருந்தன்மை இருக்கும்.அனைத்திலும் கண்ணதாசன் வெற்றி பெற்றாலும், அவர் தோற்ற இடம் அரசியல். நெப்போலியனுக்கு ‘வாட்டர்லுா’ போல, கண்ணதாசனுக்கு அரசியல்தான் ‘வாட்டர்லுா’. ஒரு கவிஞன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் கண்ணதாசன். ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம். இருந்தாலும், ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை,’ என்ற அவரது பாடல் வரிகள் அவருக்குப் பொருந்தும்.

Source::::Dinamalar… Tamil Daily  June 24

Natarajan

 

Message For the Day…” Peace and Love are Intimately Related…”

If you are established in peace, you will find that Love arises from it. Peace and love are intimately related. Many pretend as if they love all. Their actions represent how dramatic one can get in the field of love. This is not true love. True love finds fulfilment only when it is with peace. Once you develop true love, Non-violence will naturally manifest from within and you will not hurt or harm anyone. Love is present everywhere, in every being in this world. Love is beyond a specific name, form or action. Love is God, Live in Love. This is taught to you by Educare. The process of education inculcates desire, hatred, jealousy, lust, greed and avarice, which are worldly traits or behavioural tendencies. Educare on the other hand, consists of adherence to Truth, Non-Violence, Love, Peace and Righteousness – qualities that are present within you.

 

Sathya Sai Baba