பொங்கல் பிள்ளையார்…….

பொங்கல் என்றாலே உழவுக்கு வந்தனை செய்யும் விதமாக ஆதவனை வணங்குவது, தித்திக்கும் கரும்பைச் சுவைத்து மகிழ்வது இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு சிறப்பான சம்பிரதாயம் ஒன்று இருந்து வருகிறது. அதுதான் பொங்கல் அன்று பிறக்கும் தனிச் சிறப்பு மிக்க பிள்ளையார்.

தைப் பொங்கலிடத் தயாராகும் போது முதலில் வீட்டு வாசலில் கிழக்கு நோக்கி விளக்கு வைத்து, அதன் முன்பு ஒரு பெரிய வாழையிலையை விரித்து, அதில் அனைத்து வகையான காய்கறிகள், கிழங்கு வகைகளை வைத்து, ஒரு டம்பளரில் பொங்கலிடப் போகும் அரிசியையும் வைத்து வணங்குவார்கள். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், விளக்குடன் சேர்த்து மற்ற கடவுளரைக் காட்டிலும், முதன்மைக் கடவுளான பிள்ளையாரையும் அங்கு வைத்திருப்பார்கள். அதுவும் அந்த பிள்ளையார், ஒவ்வொரு இல்லத்தினரும் அவர்கள் கைகளினால், உருவாக்கிய சிறப்புப் பிள்ளையார்கள்.

இதன் முக்கியத்துவம் என்னவென்றால் உலகின் முழுமுதற் கடவுளான கணபதிக்கும் சேர்த்து வந்தனை செய்வதாக அர்த்தம். சூரிய பகவான் முன்பு பொங்கலிட்டு, முதலில் பிள்ளையாருக்கும் சேர்த்து படைக்கப்படுகிறது என்பது பொருள்.

பொதுவாக மூன்று வகைப் பிள்ளையார்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஒன்று, சாணத்தால் ஆன பிள்ளையார். இரண்டாவது, மஞ்சளால் ஆன பிள்ளையார். மூன்றாவது, சந்தனத்தால் ஆன பிள்ளையார். இந்த மூன்று திவ்யத்துவம் பொருந்திய பொருட்களைப் பயன்படுத்தியே, பிள்ளையார் உருவாக்கப்படுகிறார்.

சாணப் பிள்ளையார்

சாணம் ஒரு கிருமி நாசினி என்பது அனைவரும் அறிந்ததே. தூய்மைப்படுத்துவதே இதன் சிறப்பு. பொங்கல் அன்று, அனைவரும் மனதில் அசுத்த எண்ணங்களைத் துறந்து, தூய உள்ளத்தோடு ஒன்று சேர்த்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக சாணத்தால் ஆன பிள்ளையார் செய்து வைக்கப்படுகிறது.

மஞ்சள் பிள்ளையார்

மஞ்சள் இல்லாத ஒரு மங்கள நிகழ்வு என்பதே கிடையாது. பல்வேறு மருத்துவ குணங்கள் முதல் பலவிதமான மங்காத புகழ்களைத் தன்னுள்ளே கொண்டது மஞ்சள். இந்த மங்கள நாளில், அனைவரும் சகல ஆரோக்கியத்தையும் பெற்று, புகழோடு வாழ்வதற்காகவே, மஞ்சளால் ஆன பிள்ளையார் செய்து வணங்கப்படுகிறது.

சந்தனப் பிள்ளையார்

எந்த நிலையிலும் மாறாத தன்மையுடன், நல்ல மணம் பரப்பும் குணமுடையது சந்தனம். அதுபோல, மனிதன் எந்தச் சூழ்நிலை வந்தாலும் தன்னிலை மாறாது, நன்னெறிகளை செய்து வாழ வேண்டும் என்பதற்காகவே சந்தனத்தால் ஆன பிள்ளையார் செய்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு மூன்று வகைப் பிள்ளையார்களை உருவாக்கி, அதற்குக் குங்குமப் பொட்டு வைத்து, பிள்ளையாருக்கே உரித்தான அருகம்புல்லை அணிவித்து வணங்க வேண்டும், இதன் மூலம் சகல செல்வங்களும் வந்துசேரும் என்பதே ஐதீகம். இயற்கையை போற்றும் இந்த நன்னாளில், சிறப்புமிக்க இந்த இயற்கைப் பொருட்களைக் கொண்டு கடவுளைப் படைத்து வணங்கி, அனைத்து வளங்களையும் பெற வேண்டும் என்பதற்காக, நம் முன்னோர்கள் வைத்த இந்த சம்பிரதாயத்தை நாமும் போற்றிப் பின்பற்றுவோம்.

source…..கா. ராஜசேகர் in http://www.tamil.thehindu.com

Natarajan

” ” அச்சு இற்று முறிந்த இடம் … அச்சரப்பாக்கம்…” !!!

“இளையாத்தங்குடிப் பிள்ளையாருக்குத் தாமே

தள்ளாத வயதில் துள்ளும் பாலகனைப் போல்

முட்டிக்கால் தோப்புக்கரணம் போடுகிறார்பெரியவா”

(கைலாஸ சங்கரனின் மறு அவதாரமோ!)

734324_514749501889171_935875765_n.jpg

ராமேச்வரத்தில் அப்போது நிர்மாணமாகி வந்த

ஸ்ரீ சங்கரமடத்துக்குச் சென்னையிலிருந்து சிலர்

விக்கிரகங்களுடன் சென்ற லாரி வழியே ‘ஆக்ஸில்’

உடைந்து நின்று விட்டது. இளையாத்தங்குடியிலிருந்த

பெரியவாளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

“எந்த இடத்தில் நின்று விட்டது” என்று வினவுகிறார்.

“அச்சரப்பாக்கத்தில்” என்று பதில் வருகிறது.

பெரியவாள் முகத்தில் புன்னகை விரிகிறது.

இடுக்கண் வருங்கால் நகைக்கிறார்.

இளையாத்தங்குடிப் பிள்ளையாருக்குத் தாமே

தள்ளாத வயதில் துள்ளும் பாலகனைப் போல்

முட்டிக்கால் தோப்புக்கரணம் போடுகிறார்.

ராமேச்ர விஷயம் விக்கினமின்றி நடைபெறவே

விக்னேஸ்வர வழிபாடு என்பது வெளிப்படை.

மூர்த்தி வழிபாட்டுக்கு மேம்பட்ட முற்றிய அருள்

நிலையில் இருந்து இவரே இடையூற்றைத்

தீர்த்துவிடலாம்.ஆயினும் விக்கினம் தீர்க்கவே

ஏற்பட்ட தெய்வத்தை, மானுடருக்கு முன்னுதாரணமாகத்

தாமே வழிபட்டுக் காட்டுகிறார்.அதைச் சொல்லாமல்

சொல்லுகிறார்.

“பரமசிவன் பிள்ளையாரை வேண்டிக் கொள்ளாமலே

திரிபுர தகனத்துக்குப் புறப்பட்டார். ‘எந்தக் காரியம்

ஆரம்பித்தாலும் பிள்ளையாரை முதலில் பூஜிக்க வேண்டும்

என்று லோகத்துக்கு ஏற்பட்ட சம்பிரதாயத்தை ஈஸ்வரனே

செய்து காட்டினால்தானே, மற்ற ஜனங்களும் அப்படிச்

செய்வார்கள்? அதனால், ஈஸ்வரன் இப்படிப் பண்ணாத போது

அவர் புறப்பட்ட ரதத்தின் அச்சு முறிந்து போயிற்று.அப்புறம்

அவர் விக்னேஸ்வரரைப் பிரார்த்தனை செய்து கொண்ட பிறகு

தான் அது புறப்பட்டது.

அச்சு இற்று முறிந்த போன இடம்தான் ‘அச்சரப்பாக்கம்’ என்று

இப்போது சொல்லும் அச்சிறுப்பாக்கமான ஊர்.அங்கேயேதான்

நம் லாரியும் அச்சு முறிந்து நின்றிருக்கிறது.!”

எப்பேர்ப்பட்ட பொருத்தம்! பொருந்தாமல் இடையூறு

ஏற்பட்டதிலேயே ஒரு பொருத்தம் கண்டுவிட்டார்.

“கைலாஸ சங்கரன் ரதத்தில் போனபோது எங்கே அச்சு

முறிந்ததோ, அதே ஊரில் காலடி சங்கரர் லாரியில்

போகிறபோது ஆக்ஸில் உடைந்திருப்பதால் இவர்

அவனுடைய அவதாரமே என்றும் நிரூபணம் ஆகிறது!”

என்று பின்னரும் ஒரு பொருத்தம் காட்டிவிட்டார்

Read more: http://periva.proboards.com/thread/8611/#ixzz3RUElITvx

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan

” மின்னல் என மின்னி விண்ணில் கலந்த நட்சத்திரம் …மாண்டலின் சீனிவாஸ்…”

” நேயர்  விருப்பம்”   நிகழ்ச்சி இந்த மண்ணில்  நடக்கும் போதே ,  ‘இறை விருப்பம்’  உன் இசை கேட்க  உன்னை விண்ணுக்கு அழைத்து

விட்டதோ ?  ….”

இந்த மண்ணிலும்  விண்ணிலும்  என்றும் உன் இசை ஒலிக்கும் …

நடராஜன்

மாண்டலின் ஸ்ரீநிவாஸுக்கு ஓர் அஞ்சலி.

 

 

  

 

நன்றி-தீபம்; பால ஹனுமான்.

மாண்டலின் ஸ்ரீனிவாஸின் வீட்டினுள்ளே நுழைந்தவுடன், நம் கண்களில் தென்படுவது கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் பிரம்மாண்டமான சத்ய சாயியின் புகைப்படம். இடது பக்க சுவரில் காஞ்சி பரமாச்சாரியாரின் பெரிய புகைப்படம். அப்படியே மாடிக்குச் சென்றால் ஹால் முழுக்க தெய்வத்திரு உருவங்கள்; தவிர, அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், பல்வேறு விருதுகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இப்படி நிறைய.

விசாலமான பூஜை அறையில், சுவரில் நடுநாயகமாக பாபா புகைப்படம். அதன் அருகில் தேக்கு மரத்தில் செய்த நாற்காலி. அதில் குஷன். பட்டையான ஜரிகை கொண்ட வேஷ்டி, அங்கவஸ்திரம் சாத்தப்பட்டிருக்கிறது. பாபா இந்த நாற்காலியில் அமர்ந்து எனக்கு எப்போதும் ஆசி வழங்கிக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்” என்ற ஸ்ரீனிவாஸ் தொடர்ந்து பேசினார். தன் கையை முன்னே நீட்டி, “இந்த நவரத்ன மோதிரம், பாபா கொடுத்த பரிசு. புட்ட பர்த்தியில் பாபா முன்னிலையில் ஒரு முறை கச்சேரி செய்யும் பாக்கியம் கிடைத்தது. கச்சேரி முடிந்ததும், என்னை ஆசிர்வதித்த பாபா, இந்த மோதிரத்தை வரவழைத்து, எனக்குக் கொடுத்தார். அது மட்டுமில்லை; என்னுடன் சேர்ந்து அன்றைக்கு கச்சேரி செய்த என் தம்பி ராஜேஷை பார்த்து புன்னகை புரிந்து, ‘உனக்கும் ஒண்ணு வேணுமா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்து, எனக்கு அளித்த மோதிரத்தைத் தொட்டுவிட்டு, தன் கையை விரித்தார். அவர் கையில் இன்னொரு நவரத்ன மோதிரம். அந்த அதிசயத்தை என்னால் ஆயுசுக்கும் மறக்க முடியாது.

பரமாச்சாரியாரும், பாபாவும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. அப்போது எனக்கு பதினாறு, பதினேழு வயசு இருக்கும். காஞ்சிபுரம் போயிருந்தோம். நான் எப்போது மடத்துக்குப் போனாலும், கையோடு மாண்டலினை எடுத்துக்கொண்டு போய், பரமாச்சாரியார் முன்னால் அமர்ந்து கொஞ்சநேரம் வாசிப்பது வழக்கம். அன்றைக்கும் வாசித்தேன். என் பக்கத்தில் என்னுடைய தம்பி உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அப்போது பத்து வயசு இருக்கும், அவனும் மாண்டலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, கொஞ்ச நாள் ஆகி இருந்தது. நான் வாசித்து முடித்ததும், என் பக்கத்தில் இருந்த ராஜேஷைக் காட்டி ‘இது யார்?’ என்று கேட்டார். ‘தம்பி’ என்றேன். ‘அவனுக்கு வாசிக்கத் தெரியுமா?’ என்றதும். ‘இப்பதான் கத்துக்கறான்’ என்றேன். ‘அவன்கிட்டே மாண்டலினைக் கொடு; வாசிக்கட்டும்’ என்றார். அவன் வாசிக்க, அவனையும் ஆசிர்வதித்தார்.

பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஓவியத்தைப் பார்த்தீர்களே? அது ரொம்ப அபூர்வமான ஒன்று. பிரபாகர் என்பவர் ஒருமுறை திருமண பத்திரிகை கொடுக்க வந்தபோது, இங்கே இருந்த ஏராளமான பரமாச்சாரியார் படங்களைப் பார்த்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் பரமாச்சாரியாரின் தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை ஒரு வியாழக்கிழமையன்று காலையில் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து, சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் மேல் எனக்கு ரொம்ப பக்தி உண்டு. நாம எப்போ நினைக்கிறோமோ அப்போ எல்லாம் திருப்பதிக்கு போயிட முடியாது; அவர் நம்மை கூப்பிட்டாத்தான் போக முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை. பல வருடங்களாக திருப்பதியில் பிரம்மோத்சவம் நடக்கிறபோது, என்னை அங்கே கச்சேரி செய்யக் கூப்பிடுவார்கள். கச்சேரி முடிந்தவுடன், என்னையும், என் சக கலைஞர்களையும் நேரே சன்னதிக்கு அழைத்துக் கொண்டுபோய், தரிசனம் செய்துவைப்பார்கள். அப்படி ஒருமுறை கச்சேரி முடிந்து, தரிசனத்துக்குப் புறப்பட்டபோது, ‘நமக்குதான் ஸ்பெஷல் தரிசனமாச்சே! பத்து நிமிஷத்தில் தரிசனம் பண்ணிடலாம்’ என்று சொன்னார் சக கலைஞர். ஆனால், கோயிலை அடைந்தபோது பிரம்மோற்சவ மக்கள் கூட்டத்தில் நாங்கள் சிக்கிக்கொள்ள, நான்கு மணி நேரம் காத்திருந்து, தரிசனம் செய்யும்படியானது. அது பெருமாள் வைத்த குட்டு என்று புரிந்தது.

பெருமாளுக்கு திருப்பதி என்றால், வினாயகருக்கு பிள்ளையார்பட்டி. பிள்ளையார்பட்டி கோயில் நிர்வாகத்தினர் என்னை கோயிலின் ஆஸ்தான வித்வானாக்கி கௌரவித்திருக்கிறார்கள். ஆண்டு தோறும் வினாயகர் சதுர்த்தியன்று அங்கே கச்சேரி செய்வது பழக்கம். வருடந்தோறும், ஒரு மூன்று நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று, அவற்றின் கலையழகை ரசிப்பதோடு, சுவாமி தரிசனமும் செய்வது மன அமைதியையும், ஆத்ம திருப்தியையும் அளிக்கிறது.

*

–தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ் and Balhanuman blog

Read more: http://periva.proboards.com/thread/8012#ixzz3DuevMY2p

Natarajan

அமெரிக்காவில் அனாதையாக இருக்கும் விநாயகர்…

‘உங்களுக்கு மிகவும் பிடித்த கடவுள் யார்?’ என, ஒரு போட்டி நடத்தினால், கண்டிப்பாக பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் விநாயகர் தான் வெற்றி பெறுவார்.முட்டு சந்து முதல் அரச மரத்தடி வரை, ஆரம்ப பள்ளி முதல் ஐ.ஐ.டி., வரை, சண்முகன் வள்ளியை மணக்க உதவியது முதல் நவீன காதல் கதைகள் வரை, எந்த வேலை என்றாலும், அனைவரும் முதலில் வணங்கி, விண்ணப்பம் செய்வது, பிள்ளையாரிடம் தான்.இன்று ஒவ்வொரு வீட்டிலும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, வணங்கப்படும் இவர், ஓரிடத்தில் மட்டும் அனாதையாக நிற்கிறார்.
-எங்கே தெரியுமா?அமெரிக்காவில்…
ஓகியோ மாகாணத்தில் உள்ள டாலிடோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில்.தமிழகத்தின் அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த, ஸ்ரீபுரந்தான் ஊரில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது.
அந்த கோவிலில் இருந்து, 2005ம் ஆண்டு, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கும்பலால் திருடப்பட்ட அந்த விநாயகர் சிலை, 1.5 கோடி ரூபாய்க்கு வேறொருவருக்கு விற்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக, புதுச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனம், 1994 நவம்பர் மாதத்தில், பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்த செப்புத் திருமேனிகளை, புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வைத்திருந்தது.
அயல்நாடுகளில் அருங்காட்சியகங்களில் உள்ள தமிழர் கலைச்செல்வங்கள் பற்றிய தகவல்கள், வரலாறுகளை திரட்டி வரும் இணைய ஆர்வலர்களான நாங்கள், உடனே, புதுச்சேரி, பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டிற்கு சென்று, இதுதொடர்பான புகைப்படங்களை முறையாகப் பெற்றுக் கொண்டோம்.பொதுவாக, அந்த கலை பொருட்கள், எந்த ஆண்டு வாங்கப்பட்டன என்ற விவரம் மட்டுமே, சம்பந்தப்பட்ட அருங்காட்சியகங்களில் இருந்து கிடைக்கும்.
ஸ்ரீபுரந்தான் விநாயகர் கதையிலும் அதுதான் நடந்தது.எனினும் பல தேடல்களுக்கு பின், டாலிடோ அருங்காட்சியகத்தில் உள்ள விநாயகர் சிலை, பார்ப்பதற்கு திருடு போன சிலை போலவே இருப்பது தெரிந்தது.அமெரிக்காவில் வசிக்கும், முகநூல் நண்பர் ஒருவரிடம், ”ஒருமுறை அங்கே நேரில் சென்று படம் எடுத்து தர இயலுமா?” என்று கேட்டேன். அவரும் மெனக்கெட்டு அங்கு சென்று, நல்ல படங்களை எடுத்து அனுப்பினார்.
இரண்டு படங்களையும் ஒப்பிட்டபோது, ஒரு முக்கிய துப்பு கிடைத்தது. பிள்ளையாரின் தும்பிக்கையில், ஒரு சிறிய மரு, இருப்பது, இரண்டு படங்கள் மூலம் உறுதியானது. இந்த சான்று, சிலை திருட்டை உறுதிசெய்தது. கடந்த ஆண்டு, ஜூலை 17ம் தேதி, ‘சிலை திருட்டு பொருளாக இருக்கலாம்; மேலும் விவரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறோம்’ என, அஞ்சல் அனுப்பினோம்.
அஞ்சலில், சென்னை காவல் துறையின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இணையதளத்தில், 2009ம் ஆண்டில் வெளியிடப்பட்ட படங்கள், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின் படங்கள், சிலைகளின் ஒப்பீடு என்று அனைத்து ஆதாரங்களையும் இணைத்து இருந்தோம். அதன் நகலை, காவல்துறைக்கும் அனுப்பி வைத்தோம். ‘இனிமேல், விநாயகர், வீடு திரும்பி விடுவார்’ என, நம்பிக்கையுடன் இருந்தோம்.
ஆனால், அதன்பின்,அருங்காட்சியகத்திடம் இருந்த எந்த பதிலும் இல்லை.காவல்துறையும் ஒன்றும் செய்ய வில்லை. தொடர்ந்து ஏழு மாதங்கள் அவர்களை விடாமல் ‘தொந்தரவு’ செய்தவுடன்,- அருங்காட்சியகம், அதன் இணையதளத்தில், இந்த ஆண்டு பிப்., மாதத்தில், இரு கடிதங்களை வெளியிட்டது.
நாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தவுடனே, அருங்காட்சியகம், இதுகுறித்து இந்திய துாதரகத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை.அதனால், அருங்காட்சியகம் தான் அனுப்பிய கடித பிரதி, இந்திய துாதருக்கு அனுப்பிய கடித பிரதி இரண்டையும், பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிட்டு விட்டது.
அதாவது, ‘நாங்கள் முயற்சி செய்தோம். உங்கள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லை’ என்பதுதான் அதற்கு அர்த்தம்.இந்த சிலை கடத்தில் வழக்கில், போதுமான ஆவணங்கள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஆனாலும், இந்திய அரசு இதில், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே நினைக்கிறோம்.
இது மட்டும் ஒரு சம்பவம் இல்லை. இதுபோன்று, இந்திய கலைப்பொருட்கள், இந்திய மண்ணில் இருந்து திருடப்பட்டு, உலகெங்கிலும், பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் விடப்படுகின்றன.
சிலை கடத்தல் சம்பவங்களும், கடத்தப்பட்டவற்றை மீட்காமல் இருப்பதும், நமது கலைக்கும், ஆன்மிக உணர்வுகளுக்கும், நாமும் நமது அரசும் அளிக்கும் அலட்சிய பார்வையை, புறக்கணிப்பைத் தான், சர்வதேச அளவில், எடுத்துக்காட்டுகிறது.
எங்களை போன்ற ஒரு சில ஆர்வலர்களின் பணியை, அயல்நாட்டவர் எள்ளிநகையாடுகின்றனர். நாங்கள் அதற்காக வருத்தப்படவில்லை.கலைப்பொருட்கள் அவை சிலையாகவோ, மர சிற்பமாகவோ, ஓவியமாகவே, வேலைப்பாடு மிக்க பொருளாகவோ இருக்கலாம் நம் குலதனம்.
டாலிடோ அருங்காட்சியகத்தில் உள்ள, ஸ்ரீபுரந்தான் விநாயகர், அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்குள், நாடு திரும்ப வேண்டும் என்றால், தமிழக மக்கள் ஒருங்கிணைந்து, இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.இனியவாது அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களை, பாதுகாக்க முன்வர வேண்டும். அதைப் பார்த்து அரசு, தானாகவே தனது பணியை செய்ய முன்வரும்.இதற்கிடையில்…எங்கள் பணியும் தொடரும்!
– எஸ்.விஜய்குமார் -(கட்டுரையாளர், தொல்லியல் ஆர்வலர்; சிங்கப்பூரில், தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.)

Source::::dinamalar.com

Natarajan

A Potter’s Prayer to Pillaiyar….

From Clay to Idol: Giving finishing touches. Photo: S. James
From Clay to Idol: Giving finishing touches. Photo: S. James

Clay-idol makers and the tradition of the eco-friendly pacha-mann pillayar are on the wane

Kasturi amma’s Ganeshas are simple, earthy, eco-friendly and hand-made with love and bhakti. A month before Ganesh Chaturthi, 80-year-old Kasturi observesviratham and starts collecting mud and sand for making the Ganesha idols. “The clay is a mixture of half-a-dozen ingredients such as elephant poop, sieved river sand, karambai mann and sometimes hay. It takes a fortnight to get ready,” says Kasturi. Once the clay gets mixed into a homogenous paste, she sits day and night making the murtis. With her deft hands, Kasturi moulds, rolls and shapes the clay into two-feet-tall little Ganeshas. They all look plump, cute and perfect. “It’s difficult to get the trunk,” says Kasturi while swirling her fingers over a lump of clay to make the trunk. She quietly murmurs a prayer and closes her eyes in VENERATION and the trunk comes out just right. For over 40 years after the death of her potter husband, Kasturi and her son eldest son Srinivasan have kept tradition alive. Tucked inside a narrow lane off the Arapalayam road is their small house stacked with mud pots.

“Earlier we used to sell hundreds of idols. There were over 300 potter families in Arapalayam. The demand used to be so high that most times, we fell short of hands to cater to orders,” recalls Srinivasan. “This year, we have got orders for just 10 idols.” Once, it was the tradition to worship a pacha-mann pillayar which was later immersed into ponds or lakes. As the water bodies have dried up, the takers for the eco-friendly pure-clay idols have come down in the past few years. Potters also feel that the invasion of plaster-of-paris has taken away the charm of clay idols.

Idols made of clay are of two kinds – one in which the idol is baked and the other which is left to dry in the sun. While the baked idols are painted and used as a showcase item, the kaccha murtis are traditionally kept in pujas. In certain techniques, potters also mix hay dust instead of elephant dung and the idols made like that are called Sandu pillayar. “Only if the customer wants, we paint it with watercolours. Else, our idols are mostly in the colour of the earth,” says Kasturi. “The authorities call for eco-friendly idols every year, but sadly people only buy those big chemical-paint ones.”

The making of a two-feet-tall pacha-mann pillayar can take a week. It’s hand-built from the bottom without any mould. Kasturi finishes making the feet and legs first and leaves it for drying for a day or two. Then, she starts making the tummy and the body of the idol and proceeds step-wise. “Idol making is sacred. It involves a number of rituals and strict adherence to purity,” explains Mahalingam, another potter. “Only on the early morning before Chaturthi, the eyes of the idol are made.”

Most of Kasturi’s orders come from the kids in the area, who fondly call her paati. Groups of kids get together, pool in their pocket MONEY to buy a small idol. “They usually ask for discounts and I give idols to them even at half the price,” says Kasturi, who sells the two-feet idols for Rs.200 and bigger ones for Rs.300 or Rs.400. Srinivasan has also made a six-feet idol for this year, which he has priced at Rs.5,000.

Clay-idol makers also rue the lack of mud and sand. Earlier, they used to collect sand from the Vaigai and the karambai mann was easily available in the kanmois surrounding Arapalayam. Half of those kanmois have vanished under encroachments and the others don’t have any mud left in their beds. “Now we buy clay from Thurvariman and Kochadai. The costs have gone up. It’s not a lucrative business. Yet I do it to keep up the tradition. I consider myself gifted to be able to make such beautiful murtis of the Lord,” says Kasturi. “I only pray to Ganesha that we get more rains and our natural resources remain plentiful.”

Keywords: Clay-idol makersGanesha idolsGanesh Chaturthieco-friendly idols,

Source:::The Hindu

Natarajan

Message For the Day…” Ganapathy means Lord of Intellect and of Wisdom “

What does the term Ganapathi signify? Ga means intellect (Buddhi). Na means Wisdom (Vijnaana). Ganapathi means the Lord of the intellect and of wisdom. He is also the Lord of all Ganas (spiritual entities). Ganas also symbolise the senses. Ganapathi is thus the Lord of the senses. Hence on this Ganapathi festival, you must purify your mind and OFFER it to Him. It is only when one is pure that intelligence blossoms. It is only with the blossoming of intelligence that Siddhi (the spiritual goal) is attained. Vinayaka presides over Buddhi and Siddhi (the intellect and spiritual realisation). Siddhi signifies the realisation of Wisdom. That is why the scriptures say that Siddhi and Buddhi are the consorts of Vinayaka, and Kshema (well being) and Ananda (bliss) are His two sons.

Sathya Sai Baba

“வினை தீர்ப்பான் விநாயகப் பெருமான் …”

உயிர் நண்பனைப் போல வினைகளைக் களைபவன் விநாயகன் என்பதால்தான், இல்லம், சாலை, நடைபாதை என்று எங்கெங்கு காணினும் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

மனதில் எக்கணம் வேண்டுதல் தோன்றுகிறதோ அக்கணம் பார்வையைச் சுழற்றித் தேடினால் சுற்றுப்புறத்தில் படமாகவோ, சிலையாகவோ கண்ணில் பட்டுவிடுவார் விநாயகர்.

விநாயகர் எப்படித் தோன்றினார்?

பார்வதி தேவி சுனையொன்றில் தனிமையில் நீராட விரும்பினார். அப்போது அச்சுனைப் பகுதியில் யாரும் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக தனக்குக் காவலாக ஒருவரை நியமிக்க எண்ணினார்.

தனது உடலில் பூசிய மஞ்சளைத் திரட்டி, ஓர் உருவத்தை உண்டாக்கினார். ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்துடன் தேவ உருவம் பெற்றிருந்த அந்தக் குழந்தை, அன்னையின் சக்தியைப் பெற்று மிகுந்த பலவானாக இருந்தது.

பார்வதியைக் காண சிவன் வந்தபோது, குழந்தை வழி விட மறுத்தது. இதர தேவர்கள் போரிடவே தொடங்கிவிட்டனர். ஆனாலும் சிவ பார்வதி அம்சமான அக்குழந்தையை அவர்களால் வெல்ல முடியவில்லை. புதிய பலத்துடன் இருக்கும் இக்குழந்தை அசுரனோ என்று எண்ணிய சிவனும், அதன் தலையைத் துண்டித்தார்.

இதனைக் கண்ட பார்வதி கதற, வடக்கே தலை வைத்துப் படுத்திருந்த யானையின் தலையைக் கொண்டுவந்து பொருத்தினார் சிவன். அக்குழந்தை பலவானாக இருந்ததால், தன் கணங்களுக்குத் தலைமை ஏற்கச் செய்தார். கணங்களின் அதிபதியே கணபதி.

சக்கரத்தைப் பறித்த விநாயகர்

கைலாயத்தில் இக்குழந்தையைக் காண வந்தார் பார்வதி தேவியின் சகோதரர் மகாவிஷ்ணு. அப்போது கைலாயத்தின் வெளி வாயிலின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்குத் தானும் விளையாட்டுக் காட்ட எண்ணித் தனது சக்கரத்தை அக்குழந்தையிடம் கொண்டு காட்டினார் தாய் மாமனான விஷ்ணு.

விநாயகரோ குழந்தைகளுக்கே உரிய வேகத்துடன் அதைப் பறித்துக் கொண்டுவிட்டார். குழந்தை கையில், சக்கரம் காயத்தை ஏற்படுத்திவிடப் போகிறதே என்று விளையாட்டுக் காட்டி அதைத் திரும்பப் பெற முயன்றாராம் விஷ்ணு. அதற்காகத் தனது தலையின் நெற்றிப் பகுதியில் கைகளால் குட்டிக் கொண்டாராம்.

கல கலவென்று சிரித்த குழந்தை சக்கரத்தை வாயில் போட்டுக்கொண்டுவிட்டது. பதறிய தாய் மாமன் மேலும் குழந்தையைச் சிரிக்க வைத்து, சக்கரத்தை உமிழச் செய்யும் முயற்சியாக, இரு காதுகளையும் இரு கைகளால் பிடித்துக்கொண்டு, உட்கார்ந்து எழுந்தாராம்.

இதனைக் கண்டு குழந்தை சிரிக்க, வாயில் இருந்த சக்கரம் துள்ளிக் கீழே விழுந்தது. அச்சக்கரத்தைக் கைப்பற்றிக் கொண்ட விஷ்ணுவும் யானை முகம் கொண்ட குழந்தையின் கன்னத்தை வலி நீக்கும் விதமாகத் தடவிக் கொடுத்தார். தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து வேண்டு வனவெல்லாம் அருளுவார் என்பதைச் சொல்லும் கதை இது.

விநாயகரின் திருநாமங்கள்

பல பெயர்களைக் கொண்ட விநாயகருக்கு, அந்த ஒவ்வொரு பெயருக்கும் கதைகள் உண்டு. இப்பெயர்களை உச்சரித்தலே மகா மந்திரமாகச் செயல்படும்.

உச்சிட்ட கணபதி, உத்தண்ட கணபதி, ஊர்த்துவ கணபதி, ஏகதந்த கணபதி, ஏகாட்சர கணபதி, ஏரம்ப கணபதி, சக்தி கணபதி, சங்கடஹர கணபதி, சிங்க கணபதி, சித்தி கணபதி, சிருஷ்டி கணபதி, தருண கணபதி, திரயாக்ஷர கணபதி, துண்டி கணபதி, துர்க்கா கணபதி, துவிமுக கணபதி, துவிஜ கணபதி, நிருத்த கணபதி, பக்தி கணபதி, பால கணபதி, மஹா கணபதி, மும்முக கணபதி, யோக கணபதி, ரணமோசன கணபதி, லட்சுமி கணபதி, வர கணபதி, விக்ன கணபதி, விஜய கணபதி, வீர கணபதி, ஹரித்திரா கணபதி, க்ஷிப்ர கணபதி, க்ஷிப்ரபிரசாத கணபதி.

Keywords: விநாயக சதுர்த்தி, விநாயகர் எப்படித் தோன்றினார், கதை, ஆன்மிகம், விநாயகரின் திருநாமங்கள்,

Source::::The Hindu….Tamil

Natarajan