Justice V.R.KRISHNA IYER …We Salute Him On His 100th Birth Day Today…

கேரள மாநிலம் பாலக்காடு வைத்தியநாதபுரத்தில் இரண்டு ரூபாய் சம்பளம் பெற்ற ஆசிரியர் ராமய்யரின் எளிய குடும்பத்தில் பிறந்து, நாட்டின் ராஜதந்திரியாக, சட்ட அமைச்சராக, ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி இன்றும் எளிய மனிதராக, மக்களுடன் மக்களாக வாழும் ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் நூறாவது பிறந்த நாள் இன்று (நவ.,15).

இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்கும் நீதியின் பலன் கிடைக்க வேண்டும் என தள்ளாத வயதிலும், தளராமல் பணிபுரிபவர் கிருஷ்ணய்யர். நூறாவது வயதிலும் புத்தகங்களுக்கு முன்னுரை எழுதுவது, பொது நிகழ்வுகளில் பங்கெடுப்பது, ஊடகத்தின் மூலம் சமூகத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிப்பது என ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து, அயராமல் அரும்பணியாற்றும் கிருஷ்ணய்யரின் வரலாறு, இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு.

 

காந்திஜியிடம் கற்றது:

 

 

அண்ணாமலை பல்கலையில் 1933 பிப்.,16ல் இளங்கலை மாணவராக கிருஷ்ணய்யர் படித்த போது, காந்திஜி வந்திருந்தார். அவரது தேசப்பற்றை தூண்டும் எழுச்சியுரை கிருஷ்ணய்யரை ஈர்த்தது. காந்திஜியின் எளிய தோற்றம், உடை மற்றும் செயல்பாடுகள் கிருஷ்ணய்யரின் எளிமை வாழ்க்கைக்கு காரணமாயின. ஒன்றுபட்ட சென்னை மாநில சட்டசபை உறுப்பினர், கேரள மாநில சட்ட அமைச்சர், ஐகோர்ட் மற்றும் சுப்ரீம்கோர்ட் நீதிபதி, சட்ட கமிஷன் உறுப்பினர் என அவர் ஏற்ற அத்தனை பணிகளிலும் சாதனைகளை செய்து, அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார்.

 

அனாதை குழந்தைகளுக்காக ஓய்வூதியம்:

 

 

சென்னை சட்டசபை, கேரள சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியில் ஈடுபட்ட கிருஷ்ணய்யரின் ஓய்வு சம்பளம் மாதம் தோறும் அவருடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஓய்வூதியத்தில் ஒரு பைசாவை கூட கிருஷ்ணய்யர் சொந்த தேவைகளுக்கு செலவிடுவது இல்லை. அதில் வரவு ரூ.ஒரு லட்சமாக உயர்ந்ததும், அனாதை குழந்தைகளின் கல்விக்காகவும், வளர்ச்சிக்காகவும் தொண்டு அமைப்புகளுக்கு அனுப்பி விடும் தர்ம சிந்தனையாளராக திகழ்கிறார்.

 

இன்றும் உதவிடும் தீர்ப்புகள்:

 

 

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இவர் வழங்கிய தீர்ப்புகள், வறியவர், எளியவர், பெண்கள், சிறார்கள், சிறைப்பட்டோர் என சமூகத்தின் கடைக்கோடி மக்களின் உரிமைகளை கோர்ட் மூலம் வென்றெடுக்க இன்றும் உதவுகின்றன. கேரள ஐகோர்ட் நீதிபதியிலிருந்து டில்லி சட்டகமிஷன் உறுப்பினராக பணிபுரிய சென்ற போது, எர்ணாகுளத்திலுள்ள சொந்த வீட்டை வருமான வரி தீர்ப்பாயத்திற்கு வாடகைக்கு விட்டார். 1980ல் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து ஓய்வு பெற்று திரும்பிய போது, அவரது வீட்டை காலி செய்ய மறுத்த வரி தீர்ப்பாயம், ‘கிருஷ்ணய்யர் ஒண்டிக்கட்டை தானே. மனைவியும் இறந்து விட்டார். மகன்களும் வெளி நாட்டில் வசிக்கின்றனர். இவருக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு’ என்றது. சொந்த வீட்டின் வாடகைதாரர்களை காலி செய்ய கிருஷ்ணய்யர் உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ஐந்தாண்டுகள் போராடி வெற்றி பெற்றார். வாடகைதாரர்களை காலி செய்ய, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குறுக்கு வழியில் செல்லாமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது அவரது நேர்மைக்கும், சட்ட நடவடிக்கைகள் மீது அவருக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டு.

 

நீதித்துறையின் பொற்காலம்:

 

 

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக 1972 முதல் 1979 வரை கிருஷ்ணய்யர் பணிபுரிந்த காலம், நீதித்துறை பொற்காலம். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், கோர்ட் கதவுகளை தட்டலாம் என்ற நம்பிக்கை விதை, மக்கள் மனதில் கிருஷ்ணய்யரின் தீர்ப்புகளால் விதைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மட்டுமே கோர்ட்டில் குறைகளை களைய வழக்கு தாக்கல் செய்ய முடியும். விதி விலக்காக பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஒரு குடிமகனும் வழக்கு தொடுப்பது பொது நல வழக்காடுதல் என்பர். பொது நல வழக்காடுதலை இந்திய நீதித்துறையில் பரவலாக அறிய செய்தவர் கிருஷ்ணய்யர். கோர்ட்டிற்கு வரும் கடிதங்கள், தந்திகளில் பிரச்னைகளின் முக்கியத்துவம் கருதி ரிட் மனுக்களாக ஏற்று உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். இவரது முற்போக்கான தீர்ப்புகளின் தொடர்ச்சியாக தான் இன்று தினமலர் உட்பட நாளிதழ் செய்திகள் கோர்ட்களில் தன்னிச்சையாக பொது நல வழக்குகளாக ஏற்கப்பட்டு, அரசுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

 

மக்களை நோக்கி கோர்ட்:

 

 

‘கோர்ட்களை நோக்கி மக்கள் செல்வதை விட, மக்களை நோக்கி கோர்ட் செல்ல வேண்டும்’ என வலியுறுத்துபவர். வழக்கு செலவுத் தொகை இல்லாத வறியவர்களுக்கு உதவ, மாவட்டங்கள் தோறும் இலவச சட்ட உதவி மையங்கள் உருவாக வித்திட்டு நீதித்துறையின் துருவ நட்சத்திரமாக திகழ்பவர் கிருஷ்ணய்யர். ‘கடவுள் கொடுத்த உயிரை மனிதன் பறிக்க அதிகாரமில்லை’ என மரணதண்டனைக்கு எதிராக ‘அரிஜன்’ இதழில் காந்திஜி கூறிய கருத்துக்களால் கவரப்பட்ட கிருஷ்ணய்யர், மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விட சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர். பாதிக்கப்பட்டோரின் உரிமைகள், பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகள், சிறைவாசிகளின் உரிமைகள் குறித்து, இவர் வழங்கிய தீர்ப்புகளால் ‘மனித உரிமை சட்டவியலின் பிதாமகன்’ என அறியப்படுகிறார்.

 

மகன் வழக்காட தடை:

 

 

மகன் பரமேஷ்வர் சட்டப்படிப்பு முடித்து இளம் வக்கீலாக தொழிலை துவங்கிய போது, கிருஷ்ணய்யர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தார். தான் உயர் பதவியில் இருக்கும் போது, மகன் கோர்ட்டில் வழக்காடி உத்தரவுகளை பெற்றால் தவறாக பேசப்படும் எனக்கருதிய கிருஷ்ணய்யர், ‘பதவி காலம் முடியும் வரை மகன் பரமேஷ்வர் எந்த கோர்ட்டிலும் வழக்காட வேண்டாம்’ என தடை போட்டு, நீதித்துறை வாழ்வில் உயர் அறநெறிகளை கடைபிடித்தவர். மேற்கத்திய மோகத்தை அறவே வெறுத்தவர். சென்னை கிரிக்கெட் கிளப் வளாகத்தில் நடந்த விருந்தில் சிறப்பு அழைப்பாளராக வேட்டி சட்டை அணிந்து சென்ற கிருஷ்ணய்யர், வாயிற்காவலர்களால் தடுக்கப்பட்டார். கோட், சூட் அணிந்து வந்தால் தான் உள்ளே நுழைய முடியும் என்ற விதிகளை ஏற்க மறுத்து, அங்கிருந்த வருகை பதிவேட்டில் கண்டனத்தை பதிவு செய்த பிறகு, நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறினார். மனிதாபிமானமே சட்டத்தின் அடிப்படை என தீர்ப்புகளை வழங்கியவர். பல்வேறு நன்னெறி கோட்பாடுகளுடனும், உயர்ந்த அறத்துடனும் நம் முன்னே நடமாடும் சாட்சியாக, வாழும் வரலாற்று நாயகராக கிருஷ்ணய்யர் திகழ்கிறார்.

– ஆர்.காந்தி,
ஐகோர்ட் வக்கீல்,
98421 55509,
gandhiadvocate@ymail.com  in http://www.dinamalar.com

Natarajan

This 8 Year old Woos Cyber Experts…Meet Reuben Paul !!!

US-based Reuben Paul speaking at the Ground Zero Summit in New Delhi. Photo: V Sudershan
The Hindu   ….US-based Reuben Paul speaking at the Ground Zero Summit in New Delhi. Photo: V Sudershan

He may not be old enough to open a Facebook account, but has a tip or two about how Internet users can protect their content from hackers. This and much more found mention in eight-year-old Reuben Paul’s keynote address on the second day of a summit on cyber security held here.

On Children’s Day, Reuben’s presentation also focussed on online threats faced by millions of children using the Internet across the world. He discussed various aspects like cyber bullying, exposure to undesirable content and falling prey to hacking.

The large audience, which listened to him with rapt attention, was not only exclusively adult but comprised renowned cyber experts and even policy-makers.

Most of them said that Reuben not only impressed them with his repository of knowledge but also his skills and style.

The audience were treated to a display of Reuben’s secondary skills – his deftness of Kung Fu, something he has been learning for a while.

Hailed as a prodigy, Reuben even serves as the CEO of a company that develops Apps which help children learn mathematics, science and, of course, cyber security.

It all began at the age of five, said father Mano Paul – an expert on cyber security himself who travels across the globe delivering lectures on the subject.

Mr. Paul, who hails from Tamil Nadu and was living in Orissa before migrating to the United States nearly a decade ago, said Reuben was drawn to computers instinctively and his sheer inquisitiveness had won him worldwide reputation.

His mother Sangeetha said his aptitude to learn doesn’t stop at computers and Kung Fu.

“He goes for swimming, gymnastics, piano and hockey lessons. He also plans to join cooking and basketball classes from next year,” she said.

So does it affect his grades? “He is an A-lister,” she said, adding that a balance between studies and other activities was maintained by going for one activity per day.

SOURCE:::: SHUBHOMOY SIKDAR in http://www.thehindu.com

Natarajan

“எங்கே அந்த ஸ்லோகம் படிச்சவர் …” ?

‘கலவையில் பிறந்த பேரொளி’ என்ற புத்தகத்தில் இருந்து சில நினைவுகள்.

Author: கவிஞர் நெமிலி எழில்மணி.

பெரியவாள் போர்த்திய துப்பட்டா.

கருணை பொழியும் காமாட்சி வாழும் காஞ்சி
காமகோடி பீடம் விளங்கும் எழிலான காஞ்சி.
க்ஷேமத்தினை அளிக்க வல்ல ஏகம்பனின் காஞ்சி
சம்பத்தை அளிக்கின்ற வரதனின் காஞ்சி.

அந்தக் காஞ்சீபுரத்தில் இரவுப் பூக்களை மெல்ல உதிர்த்து விட்டு சூரியன் தன் விடியல் வெளிச்சத்தோடு பிரவேசித்தான்.

வழக்கம்போல் காமாட்சித் தாய் மடியில் சீராட்சி புரிந்து வரும் காமகோடிப் பெரியவாளின் கண்கொள்ளா தரிசனம் காண திரளான கூட்டம். ஏக்கத்தைத் தேக்கியுள்ள ஏழை மக்களின் கவலை முகங்கள் காஞ்சிப் பெரியவாளின் கருணை முகத்தைக் கண்டவுடன் ஏக்கத்தை மறந்தன. கவலைகள் பறந்தன. பரமாச்சார்யாள் வழங்கும் ஆசியிலே மெய்ம்மறந்து நீங்காத சுகம் பெற்றன. அருள்மழை பொழிந்து கொண்டிருக்கும் அந்த ஆண்டவன் அருகினிலே நான்கைந்து மூக்குக் கண்ணாடிகள்.

அன்று மின்னொளி இல்லாமையால் அன்பர் ஒருவர் ‘டார்ச்’ விளக்கொளியைக் காட்டத் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பரமாச்சார்யாள்.

அதில் ஒன்றில் நான்கைந்து பக்கங்கள் அடங்கிய சம்ஸ்கிருத ஸ்லோகங்கள். யாரோ ஒரு அன்பர் தமது இல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கான பத்திரிகையை உடன் வைத்து அதனுடன் காணிக்கையாக அந்த ஸ்லோகங்களை எழுதி அனுப்பியிருந்தார்.

மெல்லப் படித்துக் கொண்டிருந்த கருணை மேகம் தம் முகத்தை மேல் நோக்கியவாறு பார்த்து விழிகளாலே ஒரு வினாவை எழுப்பியது.

ஆம்! “இந்த ஸ்லோகங்களைப் படிக்கிறவா இங்கே யாராவது இருக்காளா ?” என்ற வினாதான் அது.

அனைவரும் அமைதியாயிருந்தனர். பெரியவர் விடவில்லை.

தமது திருவாய் மலர்ந்து வாய்மொழியாகவே, “இங்கே சம்ஸ்க்ருதம் தெரிஞ்சவா யாராவது இருக்காளா? இந்த ஸ்லோகத்தைப் படிக்கணும் !” என்று கேட்டார்.

அப்போது அங்கே ஓரமாக நின்று கொண்டிருந்த ஓர் ஏழைப் பிராம்மணர் பெரியவாள் அருகே வந்து, “நான் படிக்கலாமா?” என பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

உடனே காஞ்சி மாமுனிவர் அந்தக் கடிதங்களைக் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள்.

மெல்ல அவற்றை எடுத்து பிரித்து வைத்துக்கொண்டு கம்பீரமாகப் படிக்கலானார் அந்தப் பிராம்மணர்.

அந்த ஸ்லோகங்களைக் கேட்கக் கேட்க பெரியவாள் முகத்திலே பூரிப்பு மலர்ந்தது. கேட்கக் கேட்க பிரம்மானந்தமாக அதனைப் பெரியவாள் அனுபவித்தார்,

அந்த ஸ்லோகங்களை எழுதிய அன்பருக்கு புடவை வேஷ்டிகளை அனுப்ப உத்தரவிட்டார். திருமணத்திற்கு, நான்கு வேதங்களும் அறிந்த வேத விற்பன்னர்களை அனுப்பிவைக்கவும் ஆணைகள் பிறப்பித்தார்.

அந்த ஸ்லோகங்களைப் படித்து முடிக்கவும் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு சிதம்பரம் அவர்களின் P.A. அவர்கள் வரவும் சரியாயிருந்தது. ஸ்லோகங்களைப் படித்த அந்த அன்பர் மெல்ல நகர்ந்து ஓரமாக வந்துவிட்டார்.

உடனே அமைச்சரின் P.A. அவர்கள் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.

பெரியவாள் புன்சிரிப்புடன் ஆசி செய்துவிட்டு, “சிதம்பரம் எந்த டிபார்ட்மெண்ட் பார்க்கறார் ?” என்று கேட்டார்.

P.A. அவர்கள் பதில் கூறுவதற்குள், “முன்னாலே வெங்கடசுப்பையா பாத்துண்டிருந்தாரே அந்த டிபார்ட்மெண்ட்தானே ?” என்றாரே பார்க்கலாம் ! சுமார் அரை மணி நேரம் மிகவும் அன்புடன் சம்பாஷித்த பெரியவாள் துப்பட்டா ஒன்றைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். அடுத்த நிமிடம் அழகான சால்வை வந்து சேர்ந்தது.

“பெரியவா கூட மினிஸ்டர் P.A. வந்தவுடன் துப்பட்டா கொண்டுவரச் சொல்லிவிட்டாரே ?” என்று ஒரு கணம் நினைத்தேன்.

மறுகணம் பளீரென்று எனக்கு ஒரு சாட்டை அடி விழுந்தது.

ஆம்! அந்த துப்பட்டாவை எடுத்துக் கொண்டே, “எங்கே அந்த ஸ்லோகம் படிச்சவர்?” என்று ஸ்வாமிகள் கேட்டாரே பார்க்கலாம்!

தூரத்திலிருந்த அன்பர் பெரியவாள் அருகே ஓடி வந்தார்.

“இந்த துப்பட்டாவை அவருக்குப் போர்த்து!” என்று எடுத்துத் தந்ததும் அந்த அன்பர் துடித்துப் போய்விட்டார்.

“பெரியவா தரிசனத்துக்குத்தான் நான் வந்தேன். இப்படிப் பெரியவா பண்ணுவான்னு நன் நினைக்கல்லே! எனக்குப் போய்…… “ என்று அந்த அன்பர் பேசமுடியாமல் திணறினார்.

“உனக்கா போர்த்தறேன்? உன்னோட வித்வத்துக்குத்தானே போத்தறேன்! தைரியமா நான் படிக்கறேன்னு சொல்லி படிச்சுக் காண்பிச்சயே ! அதுக்குத்தான் இந்த மரியாதை !” என்றார் பெரியவர்.

ஒரு கணத்தில் பெரியவாளைப் பற்றித் தப்பாக நினைத்த நான் மனம் வருந்தி கன்னங்களில் போட்டுக் கொண்டேன். எல்லோரையும் போல் அவரையும் நினைக்க இந்தக் குட்டிச்சுவரான மனத்திற்கு எப்படித்தான் முடிந்ததோ? “மன்னிக்கணும் ! மன்னிக்கணும்!” என்று பரமாச்சார்யாளின் பாதங்களில் மானசீகமாக விழுந்து அரற்றிக் கொண்டிருந்தேன்.

அரைமணி நேரத்துக்கும் மேலாக வேறு திசையில் பேச்சு திரும்பிவிட்ட போதிலும் அந்த ஸ்லோகம் படித்த அன்பரை அல்லவா அந்த தெய்வத்தின் நெஞ்சம் எண்ணிக்கொண்டிருந்தது !

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மனம் ‘சரஸ்வதி’ கடாட்சம் பெற்ற அந்த அன்பருக்கு மயங்கி அவரது வித்தைக்கு சால்வை போர்த்தியுள்ளது.

சரஸ்வதியே சரஸ்வதிக்கு சால்வை போர்த்திய அந்த அற்புத நிகழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளேது?

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம்

காணக்காணப் புண்ணியம்.

SOURCE:::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8288/#ixzz3J7iAU7K5

Picture of the Day… Hon.PM with Children @ Brisbane on Children”s Day…

Interacting with students at the venue, the Prime Minister said he is fortunate to be meeting them on the 125th birth anniversary of India`s first Prime Minister, Shri Jawaharlal Nehru.

6 (8)-684

Natarajan

” Philae probe drills into comet, turns toward light…”

The spacecraft that landed on a comet performed two tricky maneuvers Friday, by drilling into the rocky surface and rotating itself to catch more sunlight.

Both operations carried considerable risks, because they could have toppled the probe or pushed it out into the void. But without them the Philae lander that scored a historic first by touching down on a comet Wednesday risked skipping a key scientific experiment and running out of battery.

Scientists at the European Space Agency said the maneuvers appeared to have worked.

“My rotation was successful (35 degrees). Looks like a whole new comet from this angle,” read a message posted on the lander’s official Twitter account.

Earlier, the scientists tweeted: “First comet drilling is a fact!”

Since landing on comet 67P/Churyumov-Gerasimenko some 311 million miles (500 million kilometers) away, the lander has performed a series of tests and sent reams of data, including photos, back to Earth.

But with just two or three days of power in its primary battery, the lander has to rely on solar panels to generate electricity after that.

The space agency said late Friday that the batteries eventually depleted and without enough sunlight to recharge them, Philae fell into ‘idle mode,’ and all instruments and most of the systems on board shut down.

However, “Prior to falling silent, the lander was able to transmit all science data gathered during the First Science Sequence,” said Stephan Ulamec, lander manager.

Scientists were concerned to find Thursday that not only had Philae unexpectedly bounced twice before coming to rest untethered to the surface, but photos indicated it was next to a cliff that largely blocked sunlight from reaching two of its three solar panels.

With time running out, scientists decided to risk moving the lander and performing one of the most important experiments it was sent into space for.

Material beneath the surface of the comet has remained almost unchanged for 4.5 billion years, making the mining samples a cosmic time capsule that scientists are eager to study.

Mission controllers said Philae was able to bore 25 centimeters (10 inches) into the comet to start collecting the samples, but it’s unclear whether it has enough power to deliver any information on them.

It also wasn’t immediately clear whether the rotation had succeeded in putting the lander’s solar panels out of the shadow. Scientists are likely to know for sure early Saturday.

Meanwhile, the Rosetta — Philae’s mother ship, which is streaking through space in tandem with the comet — will use its 11 instruments to analyze the comet over the coming months.

Scientists hope the $1.6 billion (1.3 billion-euro) project that was launched a decade ago will help them answer questions about the origins of the universe and life on Earth.

Communication with the lander is slow, with signals taking more than 28 minutes to travel between Earth and Rosetta.

“Let’s stop looking at things that we could have done if everything had worked properly,” said flight director Andrea Accomazzo. “Let us look at things that we have done, what we have achieved and what we have on the ground. This is unique and will be unique forever.”

___

Online: http://www.esa.int/rosetta

SOURCE::::__GEIR MOULSON | Associated Press IN https://in.news.yahoo.com_

Natarajan

Associated Press writers David Rising and Frank Jordans in Berlin and Dave Bryan in New York contributed to this report.

Message For the Day…” Understand The Logical Basis of Advaita..”

A flower has many petals. These petals appear distinct from each other. But all petals have emerged from the same single stem. The stem is the seat of the Atma, from which the petals have emanated. But we view the flower as a single object. The flower is one, but the petals are many. Same analogy is applicable to the endless number of waves arising on the ocean. The waves are many and distinct. But they are of the same stuff as the ocean. From the waves arises the foam, which has the same properties as the waves and the ocean though different in form and name. All the three are based on the ocean. This is the logical basis forAdvaita (philosophy of non-dualism). The Atma is the basis for everything. Ignoring this truth people pursue the myriad ephemeral objects of the phenomenal world, but ultimately all come to a realisation of the Atmic Principle.  

Sathya Sai Baba

” Catherine Destivelle Climbing Solo in Mali…” Incredible and Amazing !!!

 

This pre-YouTube video is of Catherine Destivelle soloing in Mali. Filmed in 1987, High Magazine commented,

“the film Seo of her soloing on a sandstone cliff in the Mali desert is one that has been seen worldwide and the one clear image that has stuck in the minds of the general public in Britain”.

This was undoubtedly true at the time, and most climbers of a certain generation will have seen this film before, however now that video is ubiquitous across the internet, it is easy to forget such classics as this.

The film examines the local people, the Dogons of Sanga, for whom climbing is part of their everyday life. Catherine is fascinated by these people, and they admire her daring solo climbs.

SOURCE:::: Jack Geldard – Editor – UKC in http://www.ukclimbing.com

Natarajan

“அப்ப எங்களுக்கும் குரு நீங்கதானே …” !!!

1939 ஜூனில் காசி யாத்திரையின் முடிவாக ஸ்ரீசரணாள் வடபுலத்திலிருந்து திரும்பி தென்கோடியான ராமேஸ்வரம் சென்றுகொண்டிருக்கறார். ஏறக்குறைய இறுதிக்கட்டம். திருப்புனவாயிலைக் கடந்து தேவிபட்டணம் போகும் வழி..

சுக்ரவார பூஜை பொருத்தமாக தேவிபட்டணத்தில் ஏற்பாடாகியிருந்தத. அதற்குத்தான் விரைகிறார்..

ஆயின் தேவி அங்கே காளிரூபம் கொண்டிருப்பதாக அல்லவோ தோன்றுகிறது?

அங்கு ஊராட்சி முக்யஸ்தர் ஒரு முஸ்லீம் மரைக்காயர்.. வெளிப்படவே ஐக்கிய இந்தியக் கொள்கையிலும், ஹிந்து மதத்தாரிடமும் முஸ்லீம் லீக் பகமை பாராட்டி வந்த அந்நாளில் அவர் அங்கு ஒரு பெரிய கட்சிக்கூட்டத்திறகு ஏற்பாடு செய்திருந்தார். அதன் தொண்டர்கள் ஹிந்து சமுதாயத்தின் விஷயமாக குண்டர்களே ஆகித் தெருக்களில் ஆயுதமும் கையுமாக அன்று செய்த தர்பாரில் ஊரே கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. ஹிந்துக்கள் நடுநடுங்கிக்கொண்டருந்தனர்.

செல்லும் வழியில் ஸ்ரீசரணாளுக்குச் செய்தி வந்தது. பயணத்தைத் தொடராமல், இருந்த இடத்திலேயே அப்போதைக்கு ‘நிப்பாட்டி’ விடலாம்; தேவிபட்டணத்தில் கூட்டம் முடிந்து, ஊர் அமைதிக்குத் திரும்பியபின்னர் மீண்டும் பயணம் மேற்கொள்ளலாம்; வேறு வழியில்லை என்று அனைவரும் கருதினர்.

அந்த அனைவர் கருத்தும் எந்த ஒருவரின் அங்கீகாரத்தில்தான காரியமாகுமோ, அவர் ஏதும் சொல்லாமலே மோன சாந்த விக்ரஹமாக, ஆயினும் உத்ஸவ விக்ரஹமாக மேலே சென்று கொண்டேயிருந்தார்.

அதே வழியில் அந்த மரைக்காயரே எதிர்ப்படும்படி நேர்ந்தது! கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் சுற்றுப்பிரதேசங்கலும் செய்து விட்டு அவர் திரும்புகையில் ஸ்ரீசரணாரின் பரிவாரம் வருவதைக் கண்டார்!

பரிவாரத்திடை வந்த பரமரையும் கண்டார்.

எப்படிக் கண்டார்? மைத்ரீ தேவதையாகவேதான் கண்டிருக்கவேண்டும

பெரியவாளிடம் நெருங்கி வந்து பெரிதாகக் கும்பிட்டு நின்றார். அவர் நெஞ்சமெல்லாம் பக்தி பூரிக்க உருகியிருந்தது வெளிப்பார்வைக்கே தெரிந்தது.

முதல் தரிசன மாத்திரத்தில் முழு மனமாற்றம்! மாறு நினைத்த மனம் அன்பிலே கொண்ட அதிசய மாற்றம்!

தற்செயலாகக் கிடைத்த தரிசனம் தாம் எதிர்பார்க்காத அமைதியையும், இன்பத்தையும் ஊட்டியதை அவருக்குத் தெரிந்த மொழிநடையில் உணர்ச்சியுடன் பெரியவாளிடம் தெரிவித்தார்.

“நம்ம ஊர்ல சாமி வந்து பூசை பண்றது பாக்கியங்க! எங்களைச் சேர்ந்தவங்களுக்கு சொல்றேங்க! என்ன பணியானாலும் செஞ்சு குடுப்பாங்க. சாமி நல்லா நம்ம ஊர்ல இருந்து, எங்களுக்கெல்லாம் அருளு பண்ணிட்டுப் போகணுங்க” என்று வேண்டிக் கொண்டார்.

“உங்க மனஸுப்படியே ஆகட்டும்!” என்று ஸ்ரீசரணர் நெகிழ்ந்து கூறி ஆசி வழங்கினார்.

ஒருபுறம் லீக் கூட்டம் அமைதியாகவே நடக்க, மறுபுறம் தேவியின்—காளி ரூபத்தில் அல்ல; ஸௌம்ய லலிதா ரூபத்திலேயே உள்ள தேவியின்——பூஜையும் கோலாஹலமாக நடந்தேறியது.

அன்னையன்பின் வடிவான அவதார அன்னைக்குச் செய்யும் பூஜை மணிக்கணக்கில் நீள்வதுண்டுதானே? அப்படித்தான் அன்றும் நடந்தது.

கூட்டம் முடிந்த பின்னும், பூஜை நடப்பதறிந்த மரைக்காயர் தம் முஸ்லீம் பரிவாரத்துடன் முகாமுக்கு வந்து, அவர்களோடு வெளியே காத்திருந்து, தாங்கள் கொண்டு வந்திருந்த ஏராளமான பழக்கூடைகள், பூக்கூடைகள், கட்டுக்கட்டாக ஊதுபத்தி, புட்டி புட்டியாக அத்தர், பன்னீர் முதலானவற்றை உள்ளே அனுப்பி வைத்தார்.

பூஜை முடிந்ததும் நேரே பெரியவாள் அவர்களுக்குத் தரிசனம் வழங்கத்தான் வந்தார். எப்போதுமே அன்னையன்புக்கு மூர்த்தமான அவரது திருவுருவம் இதுபோன்ற அன்னை வழிபாட்டிற்குப் பின்னோ முன்னிலும் அன்பு மெருகேறி ஜ்வலிப்பது வழக்கம். இன்றோ அந்த வழக்கத்திற்கும் அதிகமான அன்பொளி வீச வந்து நின்று, திருநயனத்தால் அதனை அவர்களுக்கு அள்ளித் தெளித்தார்.

அப்போதும், அன்னிய மதத்தினர், அன்று சில மணிகள் முன்பு கூட, என்ன அநியாயம் செய்வரோ என்று அஞ்ச வைத்தவர்கள், கனிந்த மனத்தோடு, கனியும் மலரும், மணமிகு மற்ற கையுறைகளும் கொண்டுவந்து கொட்டிப் பணிந்தவாறிருந்தனர

‘அன்னியோன்னியம்’ என்று ஒரு அழகான சொல். அன்னியம் என்பது அன்னியமாகிவிடும் ஆரன்பைக் காட்டும் சொல். அதற்கு அற்புதச் சான்றாயிருந்தது அந்த நிகழ்ச்சி.

“இத்தனை அன்பா நீங்க செய்யறதை நான் ஸந்தோஷமா ஏத்துக்கத்தான் வேணும். ஆனாலும் இவ்வளவு தாங்குமா’ன்னு இருக்கு!” என்று உள்ளத்திலிருந்து கூறினார் ஸ்ரீசரணர்.

“ஏங்க தாங்காம?” என்றார் மரைக்காயர், பரம பவ்யமாக. “ சாமியை செகத்து குரு—வுன்னு சொன்னாங்க. அப்ப எங்களுக்கும் குருதானுங்களே! நாங்க என்னதான் செய்யக் கூடாது?” என்றார் அந்த முஸ்லீம் அன்பர் !!
SOURCE:::::www.periva.proboards.com

Natarajan


Read more: http://periva.proboards.com/thread/3928/grace-love-muslim-brethern#ixzz3J3GBZZGy

Message For the Day…” One”s Speech Should Be Soft and Sweet …”

You have immense potency within you. Like the light that illumines, your vision must be pure, sacred and pleasing. Do not taint or pollute the blessing of sight by looking at undesirable objects, or by looking with bad thoughts. A magnetic energy circulates in you. Although this energy is present throughout the body, its presence is conspicuous in the hand. Hence the hands should be employed for good purposes. They should never be used for harming others. The ears listen to gossip, slander and evil talk. The result is that the power of hearing gets polluted. Also the power of speech. This power finds expression in sound waves and it has to be used with great care. The words one utters should be examined to see that they do not excite, irritate or anger others. Bad words come back to the speaker with double strength. Hence one’s speech should be soft and sweet.

Sathya Sai Baba