The Stockholm Telephone Tower….

 

By the late 19th century, the miracle device called the telephone had been invented but the simple concept of undergrounding telephone cables had eluded engineers. Clumps of telephone wires strung from monstrous towers hung above the heads of pedestrians in all major cities with a sizable number of subscribers.

Telephone service was expensive at that time, and only the wealthy could afford it. In Sweden, the first public telephone exchange was opened in the capital city Stockholm, in 1880, by the Bell Telephone Company. It originally had only 121 subscribers. The telephone company charged subscribers between 160 and 280 Swedish Krona, depending on the subscriber’s location and distance to the exchange. This was equivalent to paying a subscription fee of 9,000 to 16,000 Krona (USD 1,100 to USD 1,966) in today’s value, which was a very high rate.

The Bell Telephone Company with their high rates soon got a competitor in Stockholm General Telephone Company (SAT), which was founded in 1883 by the engineer and businessman Henrik Tore Cedergren. His mission was to put a telephone in every household. Cedergren’s charged very low fees for a connection and monthly subscription, and the number of subscribers increased rapidly. By 1886, Stockholm had more telephones than any of the major cities in the world, with 4,832 subscribers, including about 1,600 at Bell Telephone Company. In 1887, SAT became the world’s largest telephone company, large enough to buy out Bell Company’s business in Stockholm in 1888.

In this early days of telephony, there were no substations and every subscriber was physically connected to the central exchange with an overhead wire. The Stockholm telephone exchange had thousands of wires converging in from every direction. A massive tower held these wires together.

This iconic Phone Tower, or Telefontornet, was opened in 1887, and had over 5,500 telephone lines whose collective length came to around 5,000 kilometers. As you can see from these pictures, it was quite a mess, and the network was extremely vulnerable to the elements. The locals thought the tower looked hideous and even complained that it darkened out the sun.

With the public and the press lambasting the tower at every opportunity, the telephone company decided that the tower needed a makeover. A decoration competition was announced, and in 1890 the tower got the four corner turrets. At all major events in Stockholm, the city’s flags were hoisted there.

However, by the turn of the 19th century, the tower was already on its path to obsolescence. The telephone company realized that laying cables underground was a far more elegant solution than stringing them from towers. By 1913, the entire network had gone underground and the Telefontornet lost its function. The remaining shell stood as a landmark for the several decades. At one point, the telephone company hung advertisement banners from the tower. In 1952, the tower caught fire which weakened the structure, and was demolished the following year on safety grounds.

Source….Kaushik in http://www.amusingplanet.com

Natarajan

” நவராத்திரி கொலு வைக்கணுமாம் ……”

 

நவராத்திரி கொலு

(Thanks to the Original Uploader. சம்பவத்தின் கடைசிப் பகுதியை படித்து அழாதவர்கள் இருக்க முடியாது)

காவேரிக் கரையில் உள்ள மண், மக்கள், ஆடு மாடு அத்தனையுமே செழிப்புதான் !

கும்பகோணம், திருச்சி அதைச் சுற்றிய க்ராமங்கள்…..பசுமையை வாரித் தெளித்திருக்கும்.

இந்த மாதிரி ஒரு அழகான, ப சுமையான க்ராமம்தான் களத்தூர் !

அந்த ஊரில் உள்ள துர்க்கா பரமேஶ்வரியின் கோவில் மிகவும் அழகானது. சிறிய கோவில் என்றாலும், பூஜைக்கு குறைவில்லாமல் இருந்தது.

அந்தக் கோவிலின் தர்மகர்த்தா அம்பாளின் கைங்கர்யமே வாழ்வாகக் கொண்டவர். மிக மிக நல்ல மனுஷ்யன். நவராத்ரி வந்துவிட்டால், கோவிலா, வீடா என்று போட்டி போட்டுக் கொண்டு அம்பாளுக்கு ஒன்பது நாளும் அலங்காரம், நைவேத்யம், என்று ஏகமாக செலவழித்து அப்படிக் கொண்டாடுவார்.

அண்டா அண்டாவாக சுண்டலும், இனிப்பும் ஒரு பக்கம் தயாராகி, நைவேத்யமாகி, ப்ரஸாதமாகி அக்கம்பக்கம் இருக்கும் க்ராமங்களில் இருந்தெல்லாம் பசியோடு வருபவர்களுடைய குக்ஷியில் போய்ச் சேரும்.

தர்மகர்த்தாவுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். ஐந்து பிள்ளைகள்; மூணு பெண்கள். ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகவில்லை. கடைக்குட்டியான ரமணி ரொம்பச் சின்னப் பையன். நாம் எல்லாருமே பிறக்கும் போதே, பிடரியில் மஹிஷவாஹனனை உட்கார வைத்துக் கொண்டுதானே பிறக்கிறோம்?
அந்த ஜன்மத்தில் வந்த பந்தபாஶங்களை அறுத்து, இருப்போர், போனவர் எல்லாரையும் நிலைகுலையச் செய்து, அடுத்த பிறவியில் தள்ளும், பாஶக் கயிற்றை, எந்த க்ஷணத்தில் நம் கழுத்தில் இறுக்குவான் என்பதே தெரியாதே !

மஹிஷாஸுர மர்த்தினியான லலிதாம்பிகையின் அம்புஜ ஶரணங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், அவளுடைய இடது கரத்தில் உள்ள பாஶமானது, மஹிஷவாஹனனின் பாஶக் கயிற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றி, பிறவா பெருநிலையை அனாயாஸமாக அளித்துவிடுமே !

தர்மகர்த்தா இப்படித்தான் ‘பட்’டென்று ஒரு க்ஷணத்தில் காலமாகிவிட்டார் ! கட்டாயம் துர்க்கையின் மலரடியில் புஷ்பமாகப் போய்ச் சேர்ந்திருப்பார். பாவம். குடும்பமே நிலைகுலைந்தது ! ஆனால், அவர் மனைவி, எட்டு குழந்தைகளை தன் பொறுப்பில், அந்த அம்பாளே விட்டிருப்பதாக நினைத்தாள்.

தர்மகர்த்தா உயிரோடு இருக்கும்போது, “ஒங்காத்துப் பொண்ணுதான் எங்காத்து நாட்டுப்பொண்” என்று பேசியவர்கள், அவர் போனதும், வசனமும் அவரோடு போச்சு ! என்பதாக காணாமல் போனார்கள்.
கொஞ்சமும் மனஸை தளரவிடாமல், வீட்டிலிருந்த அண்டான், குண்டான் கொஞ்ச நஞ்சமிருந்த தங்கம், வெள்ளி, பித்தளை ஸாமான்களை விற்றுக் காஸாக்கி, தன்னுடைய ஶக்திக்கு ஏற்றவாறு மூன்று பெண்களுக்கும் எளியமுறையில் கல்யாணம் செய்து வைத்தாள். பையன்கள் நாலு பேரையும் காலேஜ் வரை படிக்க வைத்தாள்.

பையன்களில் மூத்தவன் காலேஜ் முடித்ததும், “அம்மா! இனிமே நீயும், தம்பிகளும் என்னோட பொறுப்பு !…” என்று சொல்லுவதாக
கனவெல்லாம் கண்டாள். அது கனவில்தான் முடிந்தது !

படிப்பை முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு, அந்த குச்சு வீட்டில், அம்மாவின் ஏழ்மைக் கைகள், அன்போடு போட்ட மோர் ஸாதத்தை, அதிலுள்ள அன்பின் ருசி அறியாமல், வேண்டா வெறுப்பாக ஸாப்பிட்டுக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்ததோ இல்லையோ, ‘நீயாச்சு! உன் பிள்ளைகளாச்சு !’ என்று ‘டாடா’ காட்டிவிட்டு எங்கோ சென்றுவிட்டான் ! தன் வாழ்க்கையை தான் பார்த்துக் கொண்டான்.

அண்ணாவுக்கு ஏற்ற தம்பிகளாக, தர்மத்தை கடைப்பிடித்தது ஸ்ரீராமனின் தம்பிகள்தான் !
இப்போது, கலியில், அண்ணாவைப் போல் ‘அதர்மத்தை’ கடைப்பிடித்து, அவன் போன மாதிரியே, அம்மாவையும், கடைசி தம்பி ரமணியையும் அதோகதியாக்கிவிட்டு, மற்ற மூன்று பிள்ளைகளும் நடையைக் கட்டினர்!

ரமணி அப்போது ஒன்பதாம் க்ளாஸ் படித்துக் கொண்டிருந்தான். இப்படிப்பட்ட புத்ர ரத்னங்களை படிக்க வைக்க, அம்மாக்காரி வாங்கிய கடனோ கழுத்தை நெரித்தது ! வீட்டில் அவளும், ரமணியும் மட்டுந்தானே! மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு, ஸொல்ப பணத்தில் கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு, மீதியை கடனுக்கு செலுத்தி வந்தாள்.

சிறுவன் ரமணி, பேருக்கேற்றபடி ரமணீயமான குணம். படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூர் மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்து, தன் ஸம்பாத்யத்தையும் அம்மாவின் கடனை அடைக்க குடுத்தான் ! இவர்கள் குடுக்கும் பணம், கடலில் கரைத்த பெருங்காயம் போல், கடன் அடையக்கூடியதாக இல்லை!

கடன்காரர்கள் வாயில் வந்ததைப் பேசும்போது, தன்னுடைய அம்மாவின் நல்லகுணத்துக்கு இப்படியெல்லாம் நடக்கிறதே ! என்று தாங்காமல், அம்மாவின் மடியில் தலையை வைத்துக் கொண்டு அழுதான், குழந்தை ரமணி.
அம்பாளுக்கு எவ்வளவு ஆசை ஆசையாய் செய்திருப்பார் தர்மகர்த்தா !

கைவிடுவாளா அம்பிகை? கஷ்டத்தைக் குடுத்து, மிச்சம் மீதி இருக்கும் கர்மாவை [அதுவே கடைசி பிறவி என்பதால்] கழிக்கவிட்டு, தன்னுடைய அதிரடிக் காருண்யத்தை ஒரேயடியாக சொரிந்து விடுவாளே!

ரமணியின் அம்மாவுக்கு அன்று இரவு ஒரு ஸொப்பனம்…..அதில், கரும்புவில்லுக்கு பதில் கருணை தண்டமேந்திய நம்முடைய பெரியவா அவளிடம்,

” ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு அப்றம் நீ……நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே.
அதோட, என்னையும் மறந்துட்டே! ரமணிய ஒடனே எங்கிட்ட அனுப்பு…” என்றதும், அப்படியே மனஸ் படபடக்க எழுந்து உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள்.

“ரமணி….கண்ணு…..பெரியவா வந்தாடா ஸொப்பனத்ல ! நவராத்ரி கொலு வெக்கணுமாம்….. ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றாடா!..”

“அம்மா…பெரியவா இப்போ எங்கியோ வடக்குல இருக்கார்ம்மா..அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே?….”

இருவருமே இது வெறும் கனவுதான்! என்று துளிகூட ஒதுக்கவில்லை. இருண்ட குகையில் இருப்பவர்களுக்கு, எங்கோ குட்டியாக வெளிச்சம் தெரிந்தால் போறுமே ! விடுவிடுவென்று வெளிச்சத்தை நோக்கி நடையைக் கட்ட வேண்டியதுதானே?

“பெரியவாதானே கூப்டிருக்கா? கவலைப்படாத! அவரே வழி காட்டுவார்…”

விடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஶர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும், அனுஸரணையோடும் இருப்பார்கள்.

“அம்மா….நானும், எங்காத்துக்காரியும் நாளான்னிக்கி நார்த் இண்டியா யாத்ரை கெளம்பறோம். திரும்பி வரதுக்கு எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம். ஒன்னோட ரெண்டு மாஸ வாடகையை ஒங்கிட்ட அட்வான்ஸாவே குடுத்துடறேன்……இல்லேன்னா நீ ரொம்ப ஸ்ரமப்படுவே. இந்தாத்துக்கு வந்தப்றம்
எங்களுக்கு மனஸ்ல ஒரு நிம்மதி கெடச்சிருக்கு. அதுனால, கடைசி வரைக்கும், ஒனக்கு வாடகை குடுத்துண்டு, இங்கியேதான் இருக்கப் போறோம் ! செரியா?….” சிரித்துக் கொண்டே பணத்தைக் குடுத்தார்.

கரகரவென கண்ணீர் வழிந்தோட,
“மாமா…..பெரியவா தன்னோட லீலையை ஆரம்பிச்சுட்டார்! இன்னிக்கி காலேலதான் பெரியவா கனவுல வந்து நவராத்ரி கொலு வெக்கச் சொல்லிட்டு, ரமணியை ஒடனே அவர்கிட்ட அனுப்பச் சொன்னா…..பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். பாருங்கோ! ஒங்க மூலமா, அதுக்கும் வழி பண்ணிட்டார் !… எனக்கு, பெரியவா எங்க தங்கியிருக்கான்னு கொஞ்சம் விஜாரிச்சு சொல்றேளா?….”

ஶர்மா மாடியை நோக்கி..”வேம்பு! சித்த கீழ எறங்கி வாப்பா…..” என்றதும் “இதோ வரேன் சித்தப்பா!…” என்றபடி ஒருவர் அங்கே ஆஜரானார்.

“அம்மா….இவன் என்னோட அண்ணா பிள்ளை! ரொம்ப வர்ஷமா, பெரியவாகிட்டயே இருக்கான். மடத்லேயே தங்கிண்டு பெரியவாளுக்கு ஸுஸ்ரூஷை பண்ணிண்டு இருக்கான். என்னிக்காவுது இப்டீ…..ஊர் பக்கம் வருவான். நேத்திக்கித்தான் வந்தான். இன்னிக்கி ஸாயங்காலம் அஞ்சுமணி ட்ரெயின்ல
கெளம்பி, பெரியவா இருக்கற எடத்துக்குப் போறான். நீ வேணா…ரமணியை இவனோட அனுப்பி வை! பத்ரமா அழைச்சிண்டு போய் பெரியவாளை தர்ஶனம் பண்ணிவெச்சுட்டு, பத்ரமா திருப்பி அனுப்பி வெக்கச் சொல்றேன்”
அம்மாவும் பிள்ளையும் அழுதே விட்டனர் !
இது பெரியவா போட்ட அடுத்த “ஆனந்த குண்டு” !

“அனுப்பி வை! “என்றதோடு நிற்காமல், அதற்கான பணத்தை ஏற்பாடு பண்ணி, பந்தோபஸ்து பண்ணி, அழைத்துப் போக தகுந்த துணையையும் முன்னாடியே அனுப்பி வைத்து…..”அதான் பெரியவா…!” என்றார் வேம்பு சிரித்துக் கொண்டே!

பூனா பக்கத்தில் ஒரு சின்ன ஊரில் இருந்த பெரியவாளுடைய முகாமுக்கு வேம்புவோடு போனான் ரமணி. நல்ல கூட்டம் !

ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, அந்த ‘க்யூ’வில் ரமணியை நிற்க வைத்துவிட்டு “இங்க பாரு ரமணி ! இப்டியே கூட்டத்தோட போய்ண்டே இரு…ஒன்னோட டர்ன் வரும். பெரியவாகிட்ட, ஒன்னோட மனஸ்ல இருக்கற எல்லாத்தையும் கொட்டிடு! பயப்படாதே…எனக்கு உள்ள வேலையிருக்கு…..பெரியவாளை
தர்ஶனம் பண்ணினதும், இங்கியே இரு. நா….வந்து ஒன்னை அழைச்சிண்டு போறேன். பயப்படாதே, என்ன?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

சின்னப்பையனான ரமணிக்கோ அங்கிருந்த கூட்டத்தை கண்டதும், “இந்த ‘க்யூ’ எப்போ நகந்து, எப்போ நா…பெரியவாளைப் பாக்கறது!” என்ற மலைப்போடு, ஏதாவது இண்டு இடுக்கு வழியாக பெரியவாளைப் பார்க்க முடியுமா என்று முயற்சி பண்ணினான். ம்ஹூம்! இவன் குனிந்து, நிமிர்ந்து, குதித்ததுதான் மிச்சம்!

“செரி ….வேம்பு மாமா இங்கியே இருக்கச் சொல்லியிருக்கா. கட்டாயம் பெரியவாளை பாப்பேன்” என்று தனக்குத்தானே முடிவு செய்துகொண்டு
“ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர” என்று கண்களை மூடியபடி சொல்லிக் கொண்டிருந்தான்.

யாரோ அவனை லேஸாக தட்டியதும், கண்களைத் திறந்தான்…..

“நீதானே ரமணி? வா….எங்கூட ! பெரியவா ஒன்னைக் கூப்பட்றா !…..”

முழித்தான்!”

இந்த அலைமோதற கூட்டத்ல, பெரியவா என்னை மட்டும் கூப்ட்டாரா?.. ”

ரமணிக்கு இது “மூணாவது ஆனந்த குண்டு”

“என்னடா? வேம்பு மாதிரி நானும் பெரியவாகிட்ட கைங்கர்யம் பண்றேன். பெரியவா சொல்லாம, நானா வந்து கூப்டுவேனா? வா…..” என்று சொல்லி, அவனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கூட்டத்தை விலக்கிக்கொண்டு, அவனை பெரியவா முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்,
ஒரு பாரிஷதர்.

ஒரு க்ஷணம்! குழந்தை த்ருவனுக்கு முன்னால் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணு ஶங்குசக்ரதாரியாக நின்றபோது அவன் என்ன ஒரு ஸ்திதியில் இருந்தானோ, கிட்டத்தட்ட ரமணியும் பெரியவாளை அவ்வளவு அருகில் தர்ஶனம் பண்ணியதும், அப்படியொரு அநிர்வசநீயமான நிலைக்குத் தள்ளப்பட்டான்.

பெரிய கூட்டத்தில் அம்மாவின் கையைவிட்டு விட்டு, தொலைந்து போன குழந்தை, கதறி அழுது, மறுபடியும் தன் அம்மாவைப் பார்த்ததும், முதலில் சிரிக்காது, ஸந்தோஷப்படாது. மேலும் பலமாக அழும் ! அம்மா,அதைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு, கட்டிக்கொண்டு, தட்டிக் கொடுத்து ஸமாதானம் பண்ணினாலும், அதன் அழுகை ஓய நேரமெடுக்கும்.

இப்போது ரமணி த்ருவனாகவும், கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை போலவும், இரண்டும் கலந்த மனநிலையில், பெரியவாளைப் பார்த்ததும்,
“பெரியவா!……ஓ!….என்னோட பெரியவா!” என்று வாய்விட்டு அலறிக்கொண்டு, ஸாஷ்டாங்கமாக அவர் முன் விழுந்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்…..

“ரமணி!….அழாதேப்பா…எந்திரு. ஒனக்கு என்னடா கொறை? என்னடா வேணும்?…”

தாயின் குரலைக் கேட்டதும் அழுகை ஜாஸ்தியாகி, திக்கித் திக்கி எல்லாவற்றையும் சொன்னான்.

“பெரியவா……எங்கப்பா தர்மகர்த்தா…. அம்பாள்கிட்ட ரொம்ப பக்தியா இருப்பார். திடீர்னு செத்துப் போய்ட்டார்…..என்னோட நாலு அண்ணாக்களையும் அம்மா கஷ்டப்பட்டு படிக்க வெச்சாலும், எங்களை விட்டுட்டு அவாவா பிச்சிண்டு போய்ட்டா பெரியவா….. மூணு அக்காக்களும் கல்யாணம் ஆய்ட்டாலும், சீர், செனத்தி, ப்ரஸவம்ன்னு பிச்சு எடுக்கறா பெரியவா…..

……பாவம் அம்மா! எங்க போவா பணத்துக்கு? பத்தாததுக்கு பழைய கடனே 80,000 இருக்கு! எங்காத்தை வித்து கடனை அடைக்கலாம்-னா, கஷ்டத்ல விக்கறோம்-ன்னு தெரிஞ்சுண்டு, அடிமாட்டு வெலையா 10,000த்துக்கு பேசறா! நா…..படிப்பை நிறுத்திட்டு மளிகைக் கடேல வேலை பாக்கறேன்….. அம்மாவை என்னால ஸந்தோஷமா வெச்சுக்க முடியலியேன்னு இருக்கு பெரியவா……”

அத்தனை வர்ஷங்கள் குழந்தையிலிருந்தே பட்ட கஷ்டத்தை, கொட்டித் தீர்த்து கதறிவிட்டான் !
பொங்கும் பரிவோடு அவனைப் பார்த்த பெரியவா…..

“அழாதே……கண்ணைத் தொடச்சுக்கோ! நா…..சொல்றதக் கேளு…..

நாலாவது “ஆனந்த குண்டு”……

“….இப்போ ஒங்காத்ல கொலு வெக்கறதில்ல ;
நவராத்ரி பூஜையும்பண்றதில்ல…அப்டித்தானே?”

“அம்மாவுக்கு கனவுல வந்து சொன்னதை ‘ஸத்யம்’-னு நிரூபிச்சுட்டாரே!” அதிர்ந்து போனான் ரமணி.

“ஆமா…….பெரியவா. அப்பா போனதுக்கப்றம் அம்மா எல்லாத்தையும் நிறுத்திட்டா! வஸதியும் இல்ல…..”

“கொழந்தே!….ஒங்கப்பா பண்ணின மாதிரி தடபுடலா ஊரைக்கூட்டி, அண்டா அண்டாவா சுண்டலும், ஸொஜ்ஜியும் பண்ணி விநியோகம் பண்ண வேணாம். அழகா, சின்னதா கொலு வெச்சு, மனஸார ஒம்போது நாளும் அம்பாளுக்கு பூஜை பண்ணினாலே போறும்! சுண்டல் பண்ணனும்னு கூட அவஸ்யமில்ல….”
என்று சொல்லிக்கொண்டே தன் முன்னால் மூங்கில் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பாக்கெட் கல்கண்டையும், பேரீச்சம் பழத்தையும் தொட்டுவிட்டு, பாரிஷதரை
விட்டு ரமணியிடம் குடுக்கச் சொன்னார்.

“ரமணி…..இது ரெண்டையும் அம்மாகிட்ட குடுத்து, நவராத்ரிக்கு அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணச் சொல்லு. நாளன்னிக்கி நவராத்ரி ஆரம்பிக்கறதே! நீ…இன்னிக்கி ஸாயங்காலம் பொறப்டாத்தான், நாளக்கி ஸாயங்காலம் ஊர் போய்ச் சேருவே! மறுநா…காலம்பர கொலு வெக்கறதுக்கு தோதா இருக்கும்…”
என்று சொல்லிவிட்டு, பாரிஷதரிடம் ஏதோ சொன்னார்.

அவரும் ரமணியிடம்,
“ரமணி….பெரியவாளை நமஸ்காரம் பண்ணிக்கோ! இந்தா இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்தை எடுத்துக்கோ!…” என்றதும், சின்னப் பையன்தானே! அதே ஜோரில் பெரியவாளிடம், “என்ன பெரியவா இது! ஒங்கள பாக்கணும்ன்னு எவ்ளோவ் ஆசையோட வந்தேன்? நீங்க என்னடான்னா….இன்னிக்கே கெளம்பிப் போயி, ஆத்துல கொலு வெக்கச் சொல்றேளே ! இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரவழைச்சேள்?…” அழுகையும், ஏமாற்றமும் கலந்து லேஸாக ஒரு பாந்தவ்யமான கோபத்தின் ரேக்குகளை அதன் மேல் பரப்பி, கண்கலங்க கேட்டான்.

அவனைப் பார்த்து லேஸாக புன்னகைத்துவிட்டு, பாரிஷதரிடம் அவனை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார். ப்ரஸாதங்களை எடுத்துக் கொண்டு, அழுகையோடேயே வேம்பு ஐயரிடம் சென்றான். நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டதும் வேம்பு, ரமணியிடம்
“கொழந்தே ரமணி! பெரியவாகிட்ட இப்டியா கேக்கறது? ‘இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரச் சொன்னேள்?’-ன்னு கேட்டியாமே !
அந்த “இதுக்குத்தானா” குள்ள எத்தனை ரஹஸ்யங்கள், அர்த்தங்கள் ஒளிஞ்சிண்டு இருக்குன்னு ஒனக்கு மட்டுமில்லடா, யாருக்குமே தெரியாது. பெரியவா சொன்னதோட அர்த்தங்களை போகப் போக நீயே புரிஞ்சுப்ப…..செரி செரி ….ஸீக்ரம் ஸாப்ட்டுட்டு கெளம்பு….பாரு! பெரியவா ஒனக்கு ரெண்டு ஜோடி புது வேஷ்டி ஆஸிர்வாதம் பண்ணிக் குடுத்திருக்கா! ”

பெரியவாளுடைய அன்பை, வேம்பு ஐயர் சொல்லச் சொல்ல, இப்பேர்ப்பட்ட பெரியவாளுடன் இருக்க முடியாமல், ஊருக்குப் போகணுமே! என்று அழுது கொண்டே ஸாப்பிட்டுவிட்டு கிளம்பியவனிடம்
“பெரியவா குடுத்த கல்கண்டு பேரீச்சம்பழம், வேஷ்டி எல்லாம் இந்தப் பையில வெச்சிருக்கேன். இந்தா….இதைக் கை செலவுக்கு வெச்சுக்கோ! [ஒரு கவரில் சில நூறு ரூபாய் நோட்டுக்களை போட்டுக் குடுத்தார்] ரயில்ல ஒன்னை ஏத்திவிட நானே வரேன். ரொம்ப பாக்யஸாலிடா நீ! பெரியவாளோட முழூ ஆஸீர்வாதத்தையும் அப்டியே அள்ளிண்டுட்டே! இனிமே ஒனக்கு ஒரு கொறையும் வராது. ஒன்னோட ரயில்ல வர்றவர் என்னோட ஸொந்தக்காரர்தான் … பெரியவா ஒனக்கு எப்டி பந்தோபஸ்து பண்ணி அனுப்பறார் பாரு! ஒன்னை ஒங்காத்துல அவர் கொண்டு விட்டுடுவார். பெரியவா சொன்னபடி, ஒடன்னே அம்மாவை கொலு வெக்கச் சொல்லிடு….”

பத்ரமாக ஊர் வந்து சேர்ந்தான். போன ஜோரில் திரும்ப வந்த குழந்தையைக் கண்டதும் அம்மாவுக்கு ஒரே பதைபதைப்பு !

“என்னடா ஆச்சு? பெரியவாளைப் பாத்தியா? என்ன சொன்னார்?…..” இப்படியாக ஒரே கேள்வி மயம்!

” அம்மா…அம்மா! பயங்கரக் கூட்டம்! அத்தனை கூட்டத்லயும் என்னை அழைச்சிண்டு வரச் சொல்லி, நன்னா கிட்டக்க தர்ஶனம் பண்ணினேன். நம்மளோட கஷ்டம் எல்லாத்தையும் அவர்கிட்ட கொட்டித் தீத்துட்டேன்! பெரியவாளோடேயே இருந்துட மாட்டேனான்னு இருந்துது…ஆனா, ஆஸ்சர்யம் பாரேன்! ஒனக்கு வந்த கனவு நெஜந்தாம்மா ! பெரியவாளே “நீ ஒடனே ஊருக்கு
போயி, அம்மாகிட்ட நா சொன்னேன்னு, கொலு வெக்கச் சொல்லு ! ஒங்கப்பா இருந்தப்போ பண்ணின மாதிரி, பெருஸ்ஸா ஊரைக் கூட்டி தடபுடல் பண்ணாம, ஆத்துமட்டோட சின்னதா, அழகா பொம்மைகளை வெச்சு, சுண்டல் கூட வேணாம்…இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்த தெனோமும் கொஞ்சமா அம்பாளுக்கு
நைவேத்யம் பண்ணினாப் போறுன்னுட்டார்’-ம்மா!”

“பெரியவா சொல்லிட்டான்னா வேற என்ன வேணும்? ஒடனே பரண் மேல வெச்சிருக்கே! அந்த கொலுபொம்மைப் பொட்டியை கீழ எறக்கு….அப்டியே அந்த சின்ன கொலுப்படியையும் எறக்கு… வேற என்னடா சொன்னா? நம்ம கஷ்டத்துக்கு எதாவுது விடிவு பொறக்குன்னாரா ?…

“பெரியவாளை பாத்ததுமே ரொம்ப அழுதுட்டேம்மா! எனக்குத் தாங்கல….இத்தனை வர்ஷமா நீயும், நானும் மட்டுந்தான் வாய்விட்டு பேசிண்டோம்…நமக்கு சொல்லி அழறதுக்குக் கூட யாருமே காது குடுக்கலியேம்மா! அவர் வேற எதுவுமே சொல்லாட்டாலும், எல்லாத்தையும் கேட்டுண்டு, என்னை அழாதேப்பா-னார்ம்மா!
கொலு வெச்சுட்டு ஒம்போது நாளும் அம்பாளுக்கு ஶ்ரத்தையா பூஜை பண்ணச் சொல்லுன்னு மட்டும் சொன்னார்……”

ஸீதையை லங்கையில் தர்ஶனம் பண்ணியதை திரும்பத்திரும்ப சொல்லியும், கேட்டும், ‘போறாது, போறாது’ என்பது போல் ஆனந்தமாய் பேசிப் பேசி அனுபவித்த ஆஞ்சநேயரும், அவருடன் சென்ற வானரக்கூட்டமும் போல், அம்மாவும், பிள்ளையும் பெரியவாளைப் பற்றி பேசித் தீர்த்தபாடில்லை!

பரணில் இருந்து பொம்மைகள் இறக்கப்பட்டு, பெரியவா சொன்ன மாதிரி, நவராத்ரி ஆரம்பித்ததும், வீட்டில் மாக்கோலம் போட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, விளக்கை ஏற்றி வைத்து, அம்பிகையை ஶ்ரத்தையாக பூஜித்தாள். கல்கண்டு, பேரீச்சம்பழம் நைவேத்யம். என்னவோ, அத்தனை வர்ஷங்கள் இல்லாத நிம்மதியும், லக்ஷ்மிகரமும் அவர்கள் வீட்டிலும், மனஸிலும் புகுந்தது.

“ரமணி, பெரியவா சொன்னதைப் பண்ண ஆரம்பிச்சதுமே நமக்குள்ள ஒரு அமைதி வந்துடுத்து பாத்தியா….!”

அம்மாவுக்கு கிடைத்த நிம்மதி ரமணிக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

காரணம்?

“நேத்திக்கி பரண்ல ஏறி கொலுப் பொட்டியை எடுக்கறச்சே…..வேறே எதையோ பாத்தேனே……”
இதே சிந்தனைதான் நிம்மதிக்கு குறுக்கே வந்தது. கிடுகிடுவென்று ஏணியைப் போட்டு, பரணில் ஏறினான்.

அதோ…..மூலையில் ஒரு நசுங்கிப் போன தகரப் பொட்டி!”

அம்மா! இங்க இன்னொரு பொட்டி இருக்கும்மா! அதையும் எறக்கறேன்….எதாவுது பொம்மை இருந்தா அதையும் கொலுல சேத்துக்கலாம்”
அம்மா அதை வாங்கி கீழே வைத்து திறந்தால்……
அதில் பொம்மை இல்லை! ஆனால்…..இதென்ன?

ஏதோ பட்டுத் துணியில் சுத்தியிருந்தது!
பயமும் பக்தியும் ஒருசேர, அந்தப் பட்டுத் துணியை மெல்ல பிரித்தால், உள்ளே நாலைந்து ஓலைச்சுவடிக் கட்டுகள்! மஹா அரதப்பழஸு என்பதைப் பார்த்தாலே புரிந்தது.

“என்னடா ரமணி இது! அப்பா, இத இவ்ளோ பத்ரமா பட்டுத் துணில சுத்தி வெச்சிருக்கான்னா….இது ரொம்ப முக்யமான விஷயமா இருக்குமோ?”

“அம்மா! நா……இன்னிக்கி ஸாயங்கால டிரெயின்ல போயி, பெரியவாகிட்ட இந்த சுவடிகளை பட்டுத் துணியோட குடுத்துட்டு வந்துடறேன்…”

“உங்கள் பாரம் எனதே! ” என்று பெரியவா ஸதா சொல்லிக் கொண்டிருப்பதை, நம்மைப் போலில்லாமல், ரமணியும் அவன் அம்மாவும் கேட்கத் தொடங்கியதால்
, “ஓடு! பெரியவாளிடம்!..” என்று சுவடிகளோடு மறுநாளே பெரியவா முன் ஆஜராகிவிட்டான்!

முதல்முறை வந்தபோது இருந்த அழுகையும், குழப்பமும், பயமும், ஸந்தேஹமும் இந்தத் தடவை ரமணியிடம் இல்லை! அவனுடைய வாழ்வில் ரெண்டு நாளைக்கு முன்பிருந்த அதே பணமுடைதான் இப்போதும் இருந்தது. பின், எப்படி இந்த அமைதி? தெளிவு?

” நம் ஹ்ருதய குகைக்குள் ஸதா மஹாநடனம் புரிந்து வரும் நம்முடைய மஹா மஹா பெரியவாளை அப்படியே மனஸில் கட்டிக் கொண்டுவிட்டான், மார்கண்டேயன் பரமேஶ்வரனை கட்டிக் கொண்டது போல்!”

“என் அப்பன், என் அம்மை இருக்கையில் எனக்கென்ன குறை? பயம்?……ஆனந்தமோ ஆனந்தம் மட்டுமே!”

இது பெரியவா அவனுக்குத் தராமல் தந்த ஸர்வகால ஸஹவாஸ வாக்குறுதியால் வந்த த்ருட விஶ்வாஸம்! வேறு எதுவுமே இல்லை!

பெரியவா எல்லாருக்குமே இப்படியொரு பாக்யத்தை அருளிக் கொண்டிருக்கிறார். ரமணி பிடித்துக் கொண்டான்! நாம்…?

ரமணி பெரியவா இருந்த இடத்துக்குப் போனபோது, தனியான ஒரு இடத்தில் பெரியவா அமர்ந்திருந்தார்.சில பாரிஷதர்களைத் தவிர, ஜாஸ்தி கூட்டமே இல்லை!

பெரியவா முன்னால் ஸுமார் 60 வயஸு மதிக்கத்தக்க ஒரு பெரியவர் பவ்யமாக கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். பெரியவாளிடம்
ஏதோ ஸீரியஸ்ஸான விஷயத்தை ப்ரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்.
“ஸரஸ்வதி மஹால்…அங்கெல்லாம் விஜாரிச்சியோ?..”

“எல்லா எடமும் சல்லடை போட்டு சலிச்சாச்சு பெரியவா! இந்தியால இருக்கற famous ஜோஸ்யக்காரா, உபன்யாஸக்காரா, ஏன்?ஆர்க்கியாலஜிகாராளைக் கூட
விடலை பெரியவா! எங்கியாவுது, யார் மூலமாவுது, எதாவுது, தெரியாதான்னு அலைஞ்சாச்சு பெரியவா…..அதை யாரு, எங்க ஒளிச்சு வெச்சிருக்காளா, இல்லே, அதோட அருமை தெரியாம எரிச்சோ, தூக்கியோ போட்டுட்டாளோன்னு ரொம்ப பதட்டமா இருக்கு…. எங்கியாவுது அது இருக்கற சின்ன clue கெடச்சாக்கூட போறும்! எப்டியாவுது அவா கைல கால்ல விழுந்தாவுது கெஞ்சிக் கூத்தாடி வாங்கிண்டு வந்துடுவேன்…..எத்தன லக்ஷங்கள் ஆனாலும் பரவாயில்ல பெரியவா!
ஆனா, அதோட மதிப்புத் தெரியாம, எங்கியோ ஒரு மூலேல அது மக்கிப் போய்டக்கூடாது…. இதான் என்னோட ப்ரார்த்தனை!….”
கண்களில் வழிந்த கண்ணீரை அவர் துடைத்துக் கொண்டிருக்கும்போதுதான், ரமணி உள்ளே எட்டிப் பார்த்தான்.

பெரியவா அவனைத் திரும்பிப் பார்த்து,
“வாடா! கொழந்தே! வா….வா” என்றதும், ஸரியாகச் சொல்ல வேண்டுமென்றால், தகரடப்பாவும், கையுமாக குதித்துக் கொண்டு ரெண்டே எட்டில் பெரியவா முன்னால் நின்றான்.

தகரடப்பாவை ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.

“பெரியவா! நீங்க சொன்னமாரியே அம்மா ஆத்துல கொலு வெச்சுட்டா! ஆனா, மேல பரண்ல கொலுப் பொட்டியோட, இந்த தகரடப்பாவும் இருந்துது பெரியவா! பிரிச்சா… “என்று பேசிக்கொண்டே அவன் தகரடப்பாவை திறந்ததும், “ம்ம்….நல்லதாச்சு போ! அந்த டப்பால இருக்கறதை அப்டியே பட்டுத்துணியோட அந்த மாமாகிட்ட குடுத்துடு! ”

இது ஐந்தாம் ஆனந்த குண்டு!

” இதுக்குள்ள ஏதோ ஓலைச்சுவடி இருக்கு பெரியவா…… நீங்க படிக்க வேணாமா?…” என்று கேட்டுக்கொண்டே, பட்டுத்துணியோடு அந்த ஓலைச்சுவடியை அந்த பெரியவரிடம் குடுத்தான். பணிவோடு வாங்கிக் கொண்டார்.”

“நீ…இத்தன வர்ஷமா இந்தியா முழுக்க தேடி அலஞ்சுண்டு இருந்தியே! இதான்…..அது! ”
என்னது! அவரோ வாய்விட்டு அழுதேவிட்டார்!

“ஓ ….பெரியவா! என் தெய்வமே! க்ருபா ஸாகரா! பெரியவாகிட்ட இதப்பத்தி பேசி பத்து நிமிஷம் கூட ஆகல……அதுக்குள்ள இப்டியொரு கருணா வர்ஷமா? இது கெடைக்கும்னு கனவுல கூட நா…..நெனைக்கல பெரியவா…!” இந்தக் கொழந்தைக்கு நா….வயஸ்ல பெரியவங்கறதால நமஸ்காரம் பண்ண முடியாத நெலேல இருக்கேன்……” என்று சொல்லிக்கொண்டே, தன் bag ஐ திறந்து உள்ளேயிருந்ததை அப்படியே எடுத்து பெரியவா முன் இருந்த மூங்கில் தட்டில் வைத்தார், கனகதாரா மாதிரி
கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்!

“பெரியவா…..மஹாப்ரபோ! இன்னதுதான் வெலை-ன்னு நிர்ணயிக்க முடியாத இந்த அபூர்வமான பொக்கிஷத்துக்கு, என்னால முடிஞ்ச சின்ன ஸமர்ப்பணம்….. அனுக்ரஹம் பண்ணி ஸ்வீகரிச்சுக்க சொல்லணும்…”

அழகாக சிரித்துக் கொண்டே….” ஏது? ஒனக்கு ஊருக்கு போய்ச்சேர நடராஜா ஸர்வீஸ்தானா? காலணா வெச்சுக்காம, எல்லாத்தையும் குடுத்துட்டியே!…” என்று சொல்லிவிட்டு, ரமணியிடம், “இதோ பாருடா! நீ குடுத்த ஓலைச்சுவடிக்காக, இந்த மாமா ஒனக்கு ரெண்டுலக்ஷ ரூவா குடுத்திருக்கார்!…. இப்போ நீதான் இவருக்கு ஊருக்குத் திரும்பிப்
போறதுக்கு, டிக்கெட் காஸு குடுக்கணும்! இந்தக் கட்டுலேர்ந்து ஒரு அம்பது ரூவா எடுத்து அந்த மாமாகிட்ட குடுத்துட்டு, அவரை நமஸ்காரம் பண்ணிக்கோ!…”

“ஹா……!! பெரியவா…! நா…ரெண்டுலக்ஷ ரூவா கொண்டுவந்திருக்கேன்னு எப்டி கரெக்டா சொல்லிட்டேள் பெரியவா?…”

கூடவே ரமணியும் கபடில்லாமல் “அதான! எப்டி பெரியவா? எண்ணிப்பாக்காம சொன்னேள்?…”
பெரியவாளிடமிருந்து வெறும் புன்னகைதான் இதற்கு பதிலாக வந்தது!

“செரி செரி ஊருக்கு கெளம்பற வழியைப் பாரு! ஒங்கூட இந்த பணத்தை எடுத்துண்டு வேம்பு மாமாவும் ஊருக்கு வருவார். எல்லாத்தையும் அவர் பாத்துப்பார். ரெண்டு பேரும் ஸாப்ட்டுட்டு கெளம்புங்கோ!…”

அனுக்ரஹம் பண்ண மட்டுமே தெரிந்த கரங்களை உயர்த்தி ஆஸிர்வாதம் பண்ணி, ப்ரஸாதம் குடுத்தார்.

ஊருக்கு வந்த மறுநாளே, வேம்பு ஐயரிடம் பெரியவா குடுத்திருந்த instruction படி, 80,000 ரூபாய் கடன், “ப்பூ!…” என்று ஊதித் தள்ளப்பட்டது !
நவராத்ரி ஆரம்பித்த நாலாம் நாளே, துர்க்கையாக அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, மஹாலக்ஷ்மியாக செல்வத்தையும் அருளிவிட்டாள் அம்பிகையான “ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர” ஸரஸ்வதி !

ஶர்மா தம்பதி நல்லபடி யாத்ரை முடித்துக் கொண்டு வந்ததும், ரமணியின் க்ருஹமும் “ஶங்கரா” என்ற நாமத்தைத் தாங்கியபடி புனர்ஜன்மாவை பெற்றது!

வாஸலிலேயே ஒரு பக்கத்தில் நல்ல தரமான மளிகைப் பொருட்களை, ஞாயமான விலையில் விற்க ஆரம்பித்தான் ரமணி!

அவ்வீட்டில், எந்தக் கார்யமுமே, பெரியவா அனுக்ரஹம் என்ற பிள்ளையார் சுழியோடுதான் ஆரம்பிக்கும்! நல்ல வருமானம்! நல்ல பேர்! பின்னாளில், பெரியவா சொன்னபடியே, ஶர்மாவின் பெண்ணை ரமணி கல்யாணம் பண்ணிக்கொண்டான்.

கஷ்டமில்லாத, கடனில்லாத வாழ்க்கை, அடிக்கடி பெரியவா தர்ஶனம்!

வேறு என்ன வேண்டும்? பெரியவா சொன்னபடி, தங்கள் வாழ்க்கையின் தேவைகளை எளிமையாக ஆக்கிக்கொண்டு, எதையும் அபரிமிதமாக சேர்த்து வைத்துக்
கொள்ளாமல், பல பேருக்கு அன்னதானம் செய்யும் அளவு, ரமணியின் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், ஸமுத்ரமாகவும்
இருந்தார்.

Source….Ramjee .N in FB input ….Forum for World’s Brahmin Unity & Welfare

Natarajan

வாரம் ஒரு கவிதை… ” பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் “

 

பிஞ்சு மனங்களும்  செல்ல மழையும் 
…………………………………………………………………
 
என் பிஞ்சு கைகளை ஆட்டி  கொஞ்சும்
மழலையில் நான் சொல்லிவிடுவேன் என்ன
வேண்டும் எனக்கு என்று !
எந்த மொழி பேசினாலும்  என் மழலை
மொழி புரியனுமே    என் அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் !
என் மழலை கேட்டு அம்மா  அப்பா கொட்டும்
செல்ல மழையில்  நனையனும் நான் எப்போதும் !
என் மழலை வயதில் உங்க செல்ல மழை
மட்டுமே  வேண்டும் எனக்கு அம்மா …. அது ஒரு
இனிய தூறல் மழை ! பாசத்தின் சாரல் மழை !
இடி  மழை  எனக்கு வேண்டவே வேண்டாமே
இந்த பிஞ்சு வயதில் …தாங்க முடியுமா நான்
ஒரு இடி முழக்கத்தை இந்த வயதில் ?
புரிஞ்சுக்கணும் ஒரு பிஞ்சின் மனதை நீங்க
செல்ல மழை  பெய்ய வேண்டிய நேரத்தில்
தப்பாமல் பெய்ய வேண்டும் செல்ல மழை !
உங்க மனசு நான் புரிஞ்சு நடக்கும் காலம்
மலரும் நேரம்…. சொல்லாமல்
கொள்ளாமல்  ஓய்ந்து விடும் செல்ல மழை !
My Kavithai in http://www.dinamani.com  on 17th Sep 2017
Natarajan

12 of the Late Jerry Lewis’ Funniest Sketches….

 

Many people will have a heavy heart having heard the sad news that comedy legend, Jerry Lewis, has passed away at the age of 91. Although he fell in and out of favor with his adoring public throughout his career, there’s no denying that he was both immensely talented and incredibly generous – he ran a Labor Day telethon each year from 1966 to 2010 in order to raise money for the Muscular Dystrophy Association, raising some $2.5 billion in the process. Enjoy 12 of the most famous sketches and songs from his career below:

Source….www.ba-bamail.com

natarajan

வாரம் ஒரு கவிதை ….” இன்றைய தாலாட்டு “

 

இன்றைய தாலாட்டு
———————————–
தொட்டில் கட்டி  தாய் பாடும் தாலாட்டு
கேட்டது ஒரு தலைமுறை !
தொட்டில் என்றால் என்ன என்று
கேட்குது இன்றைய தலை முறை !
தொலைகாட்சி பாட்டுக்கு தலை
ஆட்டும் இந்த தலைமுறைக்கு அன்னையின்
தாலாட்டு ஒரு புதிர் விளையாட்டு !
வேலை வேலை என்று ஆலாய்
பறக்கும் பெண்ணுக்கு  தாலாட்டு
பாட எங்கே நேரம் ?
மடிக்கணினி இசைக்கும் இசையே ஒரு
குழந்தை கேட்கும் இன்றைய தாலாட்டு !
அம்மா அப்பாவின் கைபேசி
மணிஓசைதான்  தாள வாத்திய கச்சேரி
மடியில் தவழும் குழந்தைக்கு !
இன்றைய குழந்தை  கேட்கும்
ஒரே தாலாட்டு  அதன் அம்மா அப்பா
பாடும் ஒரே பாட்டு …”எடுக்க வேண்டும்
எல்லா அடையாள அட்டையும் நம்ம  குழந்தைக்கு “
Natarajan
in http://www.dinamani.com dated 17th July 2017

THE TIMELY DEATH OF KODAK FOUNDER GEORGE EASTMAN…

 

It was March 14, 1932 when George Eastman, famed inventor, philanthropist, and founder of Eastman Kodak, invited a few loyal friends over to witness the rewriting of his will. He had made the decision to give a good portion of his money and prized possessions, including his enormous mansion, to the city he called home for his whole life- Rochester. To this end, he bequeathed his house and a $2 million endowment (about $34 million today) to the University of Rochester. Eastman also donated a large sum of money to dental dispensaries across the city, attempting to ensure that no child in Rochester would go without proper dental work. Finally, he left $200,000 (about $3.4 million today) to his beloved niece, Ellen.

Cheerfully signing the will, he assured his friends this was just a matter of ensuring his wishes. Later, it was thought that he also wanted his friends to see him mentally alert so the credibility of the will wouldn’t be questioned. After all the t’s were crossed and i’s were dotted, he asked if everyone could excuse themselves for a moment. When they did, George took out paper and pen and wrote a note, which read,

To my friends,
My work is done.
Why wait?
GE

Then, he took a pistol out from his nightstand and shot himself in the heart, ending his life at the age of 74.

So who was this captain of industry and why did he, quite cheerfully, suddenly choose to take his own life?

George Eastman, and his company, turned photography from a complicated, expensive, unwieldy, and potentially dangerous hobby (due the chemicals needed to develop the film) into one that, quite literally, a child could do. He was not only a genius inventor, but a brilliant marketer.

His story begins as it ended, in Rochester. The Eastmans always put a priority on education. In fact, George Eastman Senior founded Eastman’s Commercial College in 1854, the same year George Junior was born. The family was middle-class and living pretty comfortably, but this was short-lived. In 1862, when George was only eight, his father passed away from a “brain disorder.” His mother, Maria, was a now a widow with three small children, one of them (George’s youngest sister Katy) suffered from polio and other illnesses. Life was hard for the Eastman family after George Senior’s death and self-reliance became a necessary trait.

At age of 14, George dropped out of high school to support his family. He worked at a local insurance company and as a clerk at Rochester Savings Bank. Then, in 1870, tragedy struck again when his sister, Katy, passed away from complications related to polio. She was buried next to her father.

George, even at an early age, was meticulous, detailed, and controlling of every aspect of his own business. Starting when he got his first job at 14, he began keeping ledgers to detail his finances. Due to his careful planning and earning enough working at the bank, Eastman was able to afford certain luxuries. It was in one of these ledgers, under January 27, 1869 to be exact, that “photography” was first mentioned. As the months passed, besides helping to support his mother, George spent more and more money on “photos” or “photograph materials.”

In 1878, Eastman learned an important lesson – photography (at least at the time) was hard. The legend goes that he wanted to treat his mother to a vacation in Santa Domingo in the Dominican Republic (other sources say he was looking to buy land in the newly independent nation). Either way, to document his trip, he bought a photographic outfit. Cameras then are not what we think of cameras are today. An outfit included the camera (constructed from several parts that must be put together before taking pictures), a stand, a light, and wet glass plates (with chemicals) in order to preserve the picture. As Eastman later put it,

In those days, one did not ‘take’ a camera; one accompanied the outfit in which the camera was only a part. I bought an outfit and learned that it took not only a strong, but also a dauntless man to be an outdoor photographer.

Eastman, so fed up with everything he had to bring, not only didn’t take a camera, he didn’t take the trip at all. At this point, Eastman thought to himself that there had to be a better way.

For the next several years, while still working at the bank, Eastman developed a new kind of dry plate, one made out of gelatin (the same ingredient used in Jello, which would be invented twenty years later in a small town thirty miles from Rochester), not glass. Glass was heavy, fragile, and expensive. Gelatin was an improvement on all of these things. By 1880, he had patented a dry-plate coating machine made out of gelatin, making the process of preserving film negatives simpler, cheaper, and less dangerous.

While developing this process, he came across another innovation that would allow photography and, eventually, cameras to become something that wasn’t just for the professional. As described by Eastman,

I also made experiments by using paper as a temporary support and coating the Cellulose immediately upon the paper, and afterwards coating with the emulsion. I had no difficulty stripping the Cellulose from the paper, the cellulose adhered to the emulsion and separated from the paper.

He patented this film on March 4, 1884. That same year, Eastman and his associate William Walker developed a roll holder to hold the film. The invention of this revolutionary film wasn’t enough, though. What he really wanted to do was, “to popularize photography to an extent as yet scarcely dreamed of.”

In 1888, the name “Kodak” was thought up while playing with an anagram set with his mother. Eastman loved the word because it was simple, easy to pronounce and it started with a “K.” Said Eastman, “It became a question of trying out a great number of combinations of letters that made words starting and ending with ‘K.”

Kodak was officially incorporated as a company in 1890 and quickly rocketed to the top of the industry. Also that same year, Eastman introduced the first Kodak camera, equipped with his film. It cost $25 (about $640 today), but the most important thing was that the customer didn’t do the developing of film themselves- Kodak did. The customer would send the camera back (film and all) to the company for developing and processing. Their motto aptly illustrated this: “You press the button, we do the rest.”

He had now made it easy for anyone to take and have pictures developed. The next step was to change the camera from a luxury item or expensive hobby to something just about anyone could afford.

In 1900, the revolutionary Brownie camera, versions of which were so popular through the mid-20th century, was born. It cost only one dollar ($28 today) and was even marketed to children. For the next hundred years, George Eastman and Kodak would be synonymous with cameras and film.

For his entire 40+ years of heading up his own company, George Eastman was used to being in control. So, when he was diagnosed with a spinal condition in the late 1920s, forcing him to be confined to a wheelchair, it depressed him greatly. His mother, who lived with him until her death in 1907, was also in a wheelchair for the last years of her life. His baby sister was in a wheelchair until she died. He saw them suffer and Eastman did not want to go through the same long drawn out process. He also didn’t like that he felt this gave off an image of weakness. Eastman was used to being a man respected the world over, not an “invalid.” He mused greatly about death and illness, writing a friend,

God keep me from being like them (referring to family and friends who he had seen succumb to illness). Doesn’t it seem strange that the clearest minds I have ever known should be taken this way? That is the sad thing about illness.

So, by March 1932, he had enough. George Eastman wanted to go by his own hand, rather than the hand of illness and fate. So he tidied up all the loose ends of his life and, once complete, ended it immediately on his own terms.

Source…www.today i foundout.com

Natarajan

வாரம் ஒரு கவிதை …” நிலா விடும் தூது “

 

நிலா  விடும்  தூது
——————
நிலா சோறு சாப்பிட்ட நீ கால் பதித்தாய் என் மண்ணில்
ஒரு நாள் … நிலவு எனக்கு அன்று ஒரே பெருமை !
 பூமித்தாயின் பிள்ளைகள் வருவார்கள் என் வீட்டுக்கு !
 ஆட்டமும் பாட்டமும் இருக்கும் என் வீட்டிலும் ! நான் அவருக்கு
ஊட்ட வேண்டும் சோறு பூமி காட்டி என் நிலவு வீட்டில்!
இந்த நிலவின் கனவு அது !இலவு காத்த கிளி போல ஆனதே
இந்த நிலவின் கனவு !நானும்  தூது விட்டுப் பார்க்கிறேன்
என்னைத் தாண்டி செல்லும்  விண்கலத்தில் எல்லாம்!
வழி மேல் விழி வைத்து தேடுகிறேன் உன்னை
மனிதா  என் மேலே வட்டமிடும் விண்கலத்தில் ! இரக்கமே
இல்லையா உனக்கு ? என் மண்ணில்  இறங்க மறுப்பது ஏன் ?
உயர உயர பறப்பதுதான் உன்  இலக்கா ? புதுப்புது
மண்ணை விண்ணிலும் தொட்டு முத்தமிட்டு உன் வீட்டுக்கே
திரும்பி செல்வது மட்டும்  உன் அறிவியல் விளையாட்டா ?
உன் மண்ணில் நீ விளையாட இடம் இல்லாமல் இந்த
விண்ணில் நீ விளையாட நானும் இந்த விண்மண்டலமும்
ஒரு விளையாட்டு திடல் மட்டுமா  உனக்கு ?
புதுப்புது அறிவியல் செய்தி உன் வசம் கொண்டு  சேர்க்கும்
உன் விண்கலம்  இந்த நிலா விடும் தூதை மட்டும் உன்னிடம்
கொண்டு சேர்க்காத காரணம் என்ன சொல்லு மனிதா?
நிலா நான்  காத்திருக்கிறேன் உன் கால் என் மண்ணை
மீண்டும் முத்தமிட்டு  என் மண்ணில் நீ ஓடி ஆடும்
அந்த நல்ல நாளுக்காக !
Natarajan  in http://www.dinamani.com dated 27th Feb 2017
Natarajan

படித்து நெகிழ்ந்தது …” பாசத்தின் வாசனை “

 

நவம்பர் 8, 2016

இரவு. டி.வி. சீரியலில், ஏதோ காரணத்துக்காக கதையில் வரும் 15 கேரக்டர்களும், ஒரே சமயத்தில் ‘க்ளோஸ் அப்’பில் அதிர்ச்சியடைந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஃப்ளாஷ் நியூஸில் ஓடிய ‘ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற செய்தியைப் பார்த்து இல்லத்தரசிகள், சீரியல் கேரக்டர்களை விட நூறு மடங்கு அதிர்ந்துபோனார்கள். ஏனெனில் அவர்களிடம் கொஞ்சம் பணம் இருந்தது. அது அவர்களின் கணவர்களால் வரி செலுத்தப்பட்ட பணம்தான். ஆனால் கணவர்களுக்குத் தெரியாத கறுப்புப் பணம்!

நான் இந்தச் செய்தியைப் பார்த்தபோது, ஒரு நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்படும் திட்டம் என்ற முறையில் எனக்கு சந்தோஷம்தான். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சின்னக் கவலை. என் கையில் சில்லறையாக நூற்றைம்பது ரூபாய்தான் இருந்தது. ஆனால், என் மனைவி மட்டும் இது குறித்து எந்தக் கவலையும் படாமலிருப்பதைப் பார்த்து உஷாரானேன்.

நிச்சயமாக இவள் கையில் ஏதோ பணம் இருக்கிறது. “உன்கிட்ட ஏதும் பணம் இருக்கா?” என்றேன் பணிவாக. “ம்… ஆயிரம் ரூபாய் இருக்கு…” என்ற என் மனைவி, பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு தண்ணீர் ஜக்கின் மூடியைத் திறந்து காண்பித்தாள். உள்ளே நூறு ரூபாய் நோட்டுகளில், நீண்ட நாட்கள் கழித்து வெளிச்சத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் மகாத்மா காந்தி என்னைப் பார்த்துச் சிரித்தார்.

இதுபோல் அன்றிரவு நாடு முழுவதும், லட்சக் கணக்கான அஞ்சறைப் பெட்டிகள், உண்டியல்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உளுத்தம்பருப்பு டின்கள் திறக்கப்பட்டன. தங்களுக்குத் தெரியாமல் மனைவிகள் பணம் சேர்த்து வைத்ததற்காகக் கோபப்படுவதா, இல்லை, இக்கட்டான தருணத்தில் சில்லறை நோட்டுகள் தந்து கைகொடுப்பதற்காகச் சந்தோஷப்படுவதா என்று புரியாமல் கணவர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள். ஒரு பெண்மணி பல்லாண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த தன் உண்டியலை உடைத்து எண்ணி, அதில் இருபதாயிரம் ரூபாய் இருப்பதைப் பார்த்து அவரே பதறிவிட்டார்.

பணிக்குச் செல்லாத இல்லத்தரசிகள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பெரும்பாலும் அவை ஒவ்வொரு நோட்டாக, தனித்தனியாக நான்காக மடித்து வைக்கப்பட்டிருக்கும். அவை நெடுநாட்களாக மடிக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதால், அதனைப் பிரித்தாலும், நோட்டின் மடிப்புகள் தெளிவாகத் தெரியும்.

மேலும் இல்லத்தரசிகளின் பணத்துக்கு ஒரு தனி வாசனையும் உண்டு. அஞ்சறைப் பெட்டியில் வைத்திருந்த பணத்தில் மசாலா வாசனை. கோதுமை மாவு டப்பாவில் வைத்திருந்த பணத்தில் கோதுமை மாவு வாசனை. சர்ஃப் டப்பாவில் இருந்த பணத்தில் சோப்புப் பவுடர் வாசனை. இந்த வாசனை நோட்டுகளை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

நான் சென்னைக்கு வேலைக்கு வந்த புதிதில், எனது மாமா வீட்டில் தங்கியிருந்தேன். ஏறத்தாழ எட்டு வருட காலம் படுத்த படுக்கையாக இருந்த என் பாட்டியை என் மாமாவும், அத்தையும் நன்கு பராமரித்துவந்தார்கள். ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பாட்டி, “டேய்… கதவைச் சாத்திட்டு வா…” என்று கூற, நான் கதவைச் சாத்திவிட்டு வந்தேன். அவர் தனது கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையின் தலைமாட்டைத் தூக்கினார், அங்கு நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த, ஏராளமான பத்து ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்தார். பின்னர் தலையணைக்குக் கீழ், மருந்து டப்பாவிலிருந்து என்று வரிசையாக அவர் பத்து ரூபாய் நோட்டுகளாக எடுக்க, நான் அதிர்ந்துபோனேன். என்னிடம் ரகசியம் பேசுவது போல், “எவ்வளவு இருக்குன்னு எண்ணு” என்றார். நான் எண்ணிவிட்டு, “ரெண்டாயிரத்து நானூறு ரூபாய்…” என்றபடி பணத்தை முகர்ந்து பார்த்தேன். அதில் ஜெலுஸில், தைலம், மாத்திரைகள் என்று எல்லாம் கலந்த மருந்து வாசனை அடித்தது.

என் மாமா பல ஆண்டுகளாக இளநீர் வாங்குவதற்காக, லிம்கா வாங்குவதற்காக என் பாட்டிக்குக் கொடுக்கும் காசிலிருந்து சேர்த்த பணம் அது. நான், “உங்களால நடக்கவே முடியாது. இந்த வயசுல பணத்தைச் சேர்த்து என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டபோது, அதற்கு அவரிடம் பதில் இல்லை. வெளியே கத்திக்கொண்டிருந்த காகத்தை ஜன்னல் வழியாக நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், “தெரியல… இப்படியே சேர்த்துப் பழக்கமாயிடுச்சு…” என்று பணத்தை வாங்கி மீண்டும் மெத்தைக்குக் கீழ் வைத்துக்கொண்டார். இனி அந்தப் பணத்தை அவர் செலவழிக்க வழியே இல்லை என்ற நிலையிலும், அவர் சேமித்துக்கொண்டே இருந்தார். அவர் இறந்த பிறகு, அவருடைய பீரோவிலும், பெட்டியிலும் ஆங்காங்கே செருகி வைத்திருந்த பணத்தை எண்ணியபோது எட்டாயிரம் ரூபாய் இருந்தது. எல்லாம் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த தனித் தனி நோட்டுகள்.

பல ஆண்டுகள் கழித்து, அதே போன்ற நோட்டுகளை மீண்டும் பார்த்தேன். கடந்த ஆண்டு என் அம்மா சென்னை வந்து விட்டு ஊருக்குத் திரும்பினார். எக்மோரில் ரயில் ஏற்றிவிடுவதற்காகச் சென்றிருந்தேன். ரயில் கிளம்பும் நேரத்தில் பேச்சுவாக்கில், “நாளைக்கு என் பிறந்த நாள்” என்றேன். “ஆமாம்டா… நான் மறந்தே போயிட்டேன்” என்று ஒரு வினாடி யோசித்துவிட்டு, தனது பர்ஸை எடுத்தார். கார்டு விசில் ஊதும் சத்தம் கேட்டது. “அம்மா… நான் கிளம்புறேன்…” என்று கூற, “இருடா” என்ற அம்மா பர்ஸில் துளாவி நான்கு, நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி வெளியே எடுத்தார், “இதுல எதாச்சும் ட்ரெஸ் வாங்கிக்கோ…” என்று பணத்தை நீட்டினார். “என்கிட்ட பணம் இருக்கும்மா” என்றபோது ரயில் நகர ஆரம்பித்தது. “உன்கிட்ட இல்லன்னா கொடுக்குறேன்? வாங்கிக்க” என்று என் கையில் பணத்தைத் திணித்தார்.

ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் மகனின் பிறந்த நாளுக்கு, எந்த வேலையிலும் இல்லாத, ஒரு அறுபத்தைந்து வயதுத் தாய் கொடுத்த காசு அது. எனது கல்லூரிக் காலத்தில், அம்மா என் மீது கோபமாக இருக்கும்போதெல்லாம், “தாயே… இந்தப் பாவிய மன்னிச்சுடு” என்று அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட, அவர் சிரித்துவிடுவார். அதன் பிறகு நெடுநாள் கழித்து அன்று ஓடும் ரயிலில், நான்கு பேர் வேடிக்கை பார்க்க, மெல்லக் குனிந்து என் அம்மாவின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு வேகமாக ரயிலிலிருந்து இறங்கினேன். ரயில் என்னைக் கடந்து சென்றதும், அந்த நோட்டுகளைப் பல வினாடிகள் பார்த்தேன். நீண்ட காலமாக மடித்து வைக்கப்பட்டு, மொடமொடப்பாக இருந்த நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணினேன். ஆயிரம் ரூபாய் இருந்தது. முகர்ந்து பார்த்தேன். அதில் அந்துருண்டை வாசனை வந்தது. அம்மா அதை பீரோவில் வைத்திருந்திருப்பார்.

அதன் பிறகு எத்தனையோ மாதங்கள் ஓடிவிட்டன. இருந்தாலும் எழும்பூர் ரயில் நிலையத்தில், அந்துருண்டை வாசனை அடிக்கும் அந்தப் பழைய நூறு ரூபாய் நோட்டுகளுடன், நான்காம் நம்பர் பிளாட்ஃபார்மில் நின்ற அந்த இரவை இன்னும் என்னால் மறக்கவே முடியவில்லை. இன்று உங்கள் கையில் கிடைக்கும் ஒரு மடிப்புக் கலையாத நோட்டில், ஏலக்காய் வாசனையோ, மஞ்சள் தூள் வாசனையோ, தைல வாசனையோ அடித்தால், அது ஒரு தாய்க் காசின் வாசனை. அது உங்கள் தாயின் காசாகக்கூட இருக்கலாம்!

(

ஜி.ஆர். சுரேந்தர்நாத்

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com

http://www.tamil.thehindu.com

Natarajan

படித்து ரசித்தது ….நீங்களும் படித்து ரசிக்க …!

 

மீனாட்சி அம்மாள்: சமையல் குறிப்புகளின் முன்னோடிக் கலைஞர்!

samayal_3062043f

இது என்ன அநியாயம்? சமையல் கலையைப் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்ள வேண்டுமா? சமையல், பெண்களின் இயல்பான குணங்களில் ஒன்று என்றுதானே நினைத்திருந்தோம். சமையல் தெரியாத பெண்களும் இருக்கிறார்களா என்று அதிர்ந்துபோனார்கள் அன்றைய மக்கள். 70 ஆண்டுகளுக்கு முன்பு சொப்பு வைத்து விளையாடும் பருவத்திலேயே சிறுமிகள், சமையலைக் கற்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிச் சமையலைக் கற்றவரில் ஒருவர்தான் மீனாட்சி அம்மாள்.

19 வயதில் திருமணம். 22 வயதில் கணவரை இழந்தார். தனியாளாகக் கைக்குழந்தை, மச்சினர், மாமியார் என்று குடும்பத்தைப் பராமரித்துவந்தவர், சமையலிலும் பிரமாதப் படுத்தினார். மீனாட்சி அம்மாளின் கைப்பக்குவத்துக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் இருந்தது. இந்தியாவின் வெவ்வேறு பாகங்களில் பரவியிருந்த அவரது உறவினர்கள், மீனாட்சி அம்மாளிடம் சமையல் குறிப்புகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் சளைக்காமல் எழுதிக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

இவரது உறவினர் கே.வி.கிருஷ்ண சாமி ஐயர், இப்படி ஒவ்வொருவருக்கும் சமையல் குறிப்பு எழுதிக் கொடுப்பதற்குப் பதில், ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் எல்லோருக்கும் பயன்படுமே என்று ஆலோசனை வழங்கினார். மீனாட்சி அம்மாளும் புத்தகம் எழுதினார். சமையல் புத்தகம் என்றதும் பலரும் இதை யார் வாங்கப்போகிறார்கள் என்று கிண்டல் செய்தார்கள். பதிப்பகங்கள் எதுவும் புத்தகம் வெளியிட முன்வரவில்லை. தானே புத்தகத்தைக் கொண்டுவர முடிவு செய்தார் மீனாட்சி அம்மாள். தன் நகைகளை விற்றார். தானே புத்தகத்தைப் பதிப்பித்தார்.

1951-ம் ஆண்டு தமிழின் முன்னோடி சமையல் புத்தகம், ‘சமைத்துப் பார்’ வெளிவந்தது. புத்தகத்துக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று மீனாட்சி அம்மாளே எதிர்பார்க்கவில்லை. புத்தகம் குறித்துப் பலரும் சிலாகித்துப் பேச ஆரம்பித்தனர். விற்பனை பெருகியது. திருமணமாகி வெளிநாடு செல்லும் பெண்கள், விசாவை மறந்தாலும் மீனாட்சி அம்மாள் புத்தகத்தை மறக்கவில்லை. ஐந்தே ஆண்டுகளில் தன் புத்தக வருமானத்தை வைத்து, மயிலாப்பூரில் ஒரு வீட்டை வாங்கினார் மீனாட்சி அம்மாள்.

மிளகாய்த் தூள், சாம்பார்ப் பொடி என்று சொன்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்குவத்தில் வைத்திருப்பார்கள். அவற்றால் மீனாட்சி அம்மாளின் சுவையைக் கொடுக்க முடியாது. அதனால் பொடி வகைகள் எல்லாவற்றையும் சேர்த்து அடுத்த புத்தகத்தைக் கொண்டுவந்தார். அதற்கும் அமோக வரவேற்பு! விழாக்கள், திருமணம் போன்றவற்றுக்கு எப்படித் தயாராவது, பண்டிகைக் கால உணவுகள் போன்ற பல விஷயங்களை வைத்து, அவர் மறைவுக்குப் பின்பு மூன்றாவது புத்தகம் வெளிவந்தது.

அதற்குப் பிறகு சமையல் புத்தகங்களைப் பலரும் எழுத ஆரம்பித்தனர். விதவிதமான சமையல் புத்தகங்கள் வெளிவந்தன. சைவச் சமையல், அசைவச் சமையல், வட்டாரச் சமையல், கிராமத்துச் சமையல், மாநிலச் சமையல், அயல்நாட்டுச் சமையல், மைக்ரோவேவ் சமையல், சிறுதானியச் சமையல் என்றெல்லாம் தினுசு தினுசாக உணவு வகைகள் உருவாகிக்கொண்டும், புத்தகங்கள் வெளிவந்துகொண்டும் இருக்கின்றன.

இன்றளவும் ‘சமையல் புத்தகமா?’ என்று இளக்காரமாகப் பார்க்கப்பட்டாலும் விற்பனையில் முதலிடம் சமையல் புத்தகங்களுக்குத்தான். சமையல் குறிப்புகளை இணைப்புப் புத்தகங்களாக வழங்கும்போது பத்திரிகைகளின் விற்பனை கணிசமாக அதிகரிப்பதால் சமையலுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துவருகிறார்கள். தொலைக்காட்சி, யூ டியூப், ஃபேஸ்புக் என்று சமையல் கலை அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்துவருகிறது. அதே போல மீனாட்சி அம்மாளின் புத்தகங்களும் மாற்றத்தை ஏற்று, நவீனமாகிக்கொண்டே வருகின்றன.

மீனாட்சி அம்மாள் காலத்தில் கூட்டுக் குடித்தனமாக இருந்தனர். ஒரு வீட்டில் ஏராளமானவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்ப அளவுகளை அவர் கொடுத்திருக்கிறார். கொட்டைப் பாக்கு அளவு புளி, குழிக் கரண்டி எண்ணெய், ஓர் ஆழாக்கு அரிசி போன்ற பதங்கள் எல்லாம் இப்போது வழக்கில் இல்லை. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கான அளவுகள், தற்காலத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்தி, புத்தகங்களை நவீனப்படுத்தி, கொண்டுவந்திருக்கிறார் அவரது பேத்தி ப்ரியா ராம்குமார்.

“சமைத்துப் பார் ஆங்கிலத்தில் வெளிவந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ், ஆங்கிலம் தவிர, மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் புத்தகங்கள் கொண்டுவந்தோம். நாங்கள் விளம்பரம் எதுவும் செய்வதில்லை. வாங்கிப் பயன்படுத்தியவர்களின் வாய்மொழி மூலமாகவே 65 ஆண்டுகளாக விற்பனையில் முன்னிலையில் இருக்கின்றன. இதுவரை 45 பதிப்புகளைக் கண்டுவிட்டன. அடுத்து மின்புத்தகங்களாகக் கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறோம்” என்கிறார் ப்ரியா ராம்குமார்.

“சித்திரம், சிற்பம், சங்கீதம் போல சமையலும் உயரிய கலை. பல வண்ணங்களைக் குழைத்து, அற்புதமான சித்திரத்தைத் தீட்டுவது போல பல பொருட்களைச் சேர்த்து, பக்குவப்படுத்தி, ஒப்பற்ற உணவுப் பண்டத்தை உருவாக்குகிறார்கள் சமையல் கலை வல்லுனர்கள்” என்று சொன்ன மீனாட்சி அம்மாள், சமையல் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பதிப்பாளராwகவும் வெற்றி பெற்று, பிறருக்கும் வழிகாட்டியிருக்கிறார்.

மனிதர்களுக்குப் பசியும் ருசிக்கான தேடுதலும் இருக்கும் வரை சமையல் கலைக்கான தேவையும் இருந்துகொண்டே இருக்கும். காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டுவரும் மீனாட்சி அம்மாளின் புத்தகங்கள், இன்னும் பல தலைமுறை களுக்குச் சமையல் கலையைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்!

Source….S.Sujatha…in http://www.tamil.thehindu.com

Natarajan