OCT. 2 … Perfect Day to Start ” Clean India ” Mission…A Fitting Tribute To Mahatma

Mahatma Gandhi, the father of the nation, was not an outspoken leader in his school days. In his The Story of My Experiments with Truth, Gandhi says that he would often run home from school as he could not “bear to talk to anybody.”

 

Gandhi’s marathon walk from his ashram to the sea at Dandi (241 miles) at the age of 60 during the Salt march in 1930 is well documented. It is believed that he enjoyed long walks in high school. In London, Gandhi as a law student used to walk as many as eight to ten miles a day, which saved him ample money.

 

During a radio broadcast for the United States from England, Gandhi’s first words heard were, “Do I have to speak into this thing?”

 

Gandhi was named as the Man of the Year in 1930 by Time Magazine

 

. Gandhi used to regularly correspond with Russian novelist Leo Tolstoy, whose ideals of nonviolent resistance had a profound impact on the Indian leader.

 

It is believed that Gandhi’s income as a lawyer in South Africa touched fifteen thousand dollars a year.

 

In his experiment to live modestly, Gandhi used to experiment on his diets. He started to live on fruits and goat’s milk.

 

Despite his dislike for photographs, Gandhi was the hugely photographed in those days.

 

The United Nations announced October 2 as the day of international day of ‘Ahimsa’

 

Despite studying law in England, Gandhi found it difficult to get a job in India which propelled him to travel to South Africa, where an Indian firm gave him a year-long contract to do legal work

 

Generations to come, it may well be, will scarce believe that such a man as this

one ever in flesh and blood walked upon this Earth – Albert Einstein

SOURCE:::: Yahooindia.com

Natarajan

பொற்காலத்தின் பொம்மைகள்….

பால பருவத்தில் நவராத்திரி என்றாலே விசேஷம்தான். ஒன்பது நாள் விடுமுறைக் கொண்டாட்டமாயிற்றே! நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று விதவிதமாகக் கொலு அமைக்க வேலை பார்ப்பேன். மணல், மண் கலந்து பரப்பிக் கடுகு தூவி தண்ணீர் தெளித்தால் புல் புல்லாகச் செடிகள் துளிர் விடும். அந்தத் தோட்டத்தில் பினாகா பற்பசையுடன் இலவச இணைப்பாகக் கிடைக்கும் குரங்கு, புலி, கரடி, மான் பொம்மைகள் மற்றும் ரப்பர் பாம்பு, பூரான், தேள், பல்லி எல்லாம் சேர்ந்து வரிசையாக நடப்பட்ட தீக்குச்சி வேலிக்குள் அட்டகாசமான ‘ஆஃப்ரிக்கன் சஃபாரி’யாகச் சுதந்திரமாக உலா வரும். இந்த இயற்கைத் தோட்டத்திலேயே இன்னொரு தீக்குச்சி வேலி அடைப்புக்குள் மரச் சறுக்கு மரம், சீசாப் பலகை, ஊஞ்சல் ஆகியவை நிறைந்த விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவார்கள்.

பளபள கோயில்

சரிவாக மண்மேடு அமைத்து உச்சியில் அருகருகே இரு குன்றுகளை உருவாக்கி அதன் ஒரு பக்கம் ஓடைக்கான குழிவுப் பாதை. உயரத்தில் திரைமறைவில் தகர வாளியிலிருந்து ரப்பர் குழாய் வழியாக ஓடையில் சலசலவென்று நீர். அதற்கு அருகிலேயே மலைப் பாதை. மனித பொம்மைகள் மேலேறும். உச்சிக் குன்றுகளுக்கு இடையில் காவிப் பட்டையும் வெள்ளைப் பட்டையும் அடிக்கப்பட்ட மதிலுடன் கூடிய பளபள கோயில்.

அடுத்த நாள் மாப்பிள்ளை காரைத் தூக்கிவிட்டு அங்கே பல்லக்கை வைத்து விட்டால் சுவாமி திருவீதி உலா. அதற்கும் அடுத்த நாள் பல்லக்குக்குப் பதிலாக வடம் பிடித்து இழுக்கும் மனிதர்களுடன் தேரை வைத்தால் தேர்த் திருவிழா. கலைடாஸ்கோப் காட்சிபோல் இந்த பொம்மைக் குழு தினம் தினம் உருமாறும்.

செட்டியார் பொம்மையும் செந்தேளும்

சின்ன வயதில் வறுமை. அதனால் வீட்டில் கொலு இல்லை. ஒவ்வொரு நவராத்திரியின் போதும் ஊரிலிருந்து பெரியம்மா பெண், சித்தி பெண் என்று யாராவது ஒரு டிக்கெட் ஆஜராகும். மாலையானவுடன் அந்த ‘அக்கா’வைச் சீவிச் சிங்காரித்து ‘போய் வெத்தலை பாக்கு வாங்கிட்டு வா…’ என்று அனுப்புவார்கள். துணைக்கு, சாணளவு ஆண்களான நான், சித்தி பையன் ராஜூ, அத்தை பையன் சத்யா.

தெருவில் காலை வைக்கும்முன் எங்கள் கைகளில் ஆளுக்கொரு மஞ்சப்பை தொங்க விடப்படும். புதுத்தெரு, நடுத்தெரு, கடலங்குடி தெரு என்று ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு வீடாகச் சென்று, அப்போது பிரபலமான ‘புன்னகை மன்னன் பூ விழிக் கண்ணன் ருக்மணிக்காக’ கொலுப் பாட்டைத் தேய் தேய் என்று தேய்த்துக் காகிதச் சுண்டல் பொட்டலங்களை மஞ்சப்பைகளில் சேகரித்து வருவோம்.

ஒரு நவராத்திரியின்போது மூன்று வயதுப் பெண் குழந்தை ஒன்றை அவ்வாறு மணையில் உட்கார வைத்து இந்தச் சடங்குகளையெல்லாம் செய்தார்கள். அதற்குச் சடங்குகளில் எல்லாம் பிரியம் இல்லை. கொலுவில் வைத்திருந்த செட்டியார் பொம்மை மீதே கண்ணாக இருந்தது. “மாமி இந்தப் பொம்மையை நானே வச்சிக்கவா?” என்று கேட்டுக்கொண்டே பொம்மையைக் கையில் எடுத்துவிட்டது. அந்த செட்டியார் பொம்மையின் அடிப்பாகத்தில் ஒற்றை ரூபாய் நாணயம் அளவுக்கு ஓட்டை. குழந்தை பொம்மையைக் கையில் எடுத்தவுடன் ஓட்டையிலிருந்து ஒரு ஜீவராசி தலை நீட்டியது. தொப்பென்று கீழே குதித்தது.

கொடுக்கை உயரத் தூக்கியபடி விரல் நீளத்துக்கு ஒரு செந்தேள். முன்னே பின்னே அந்தக் குழந்தை தேளைப் பார்த்ததில்லையாதலால், அதற்கு அந்தத் தேள் ஒரு காட்சிப் பொருளாகத் தோன்றியது. என்னவோ விளையாட்டுப் பொம்மை என்று தனது சின்ன உள்ளங்கையை அதன் மேல் வைக்கப் போக, சுற்றி நின்று பார்த்துப் பதைத்துக்கொண்டிருந்தவர்களெல்லாம் ‘ஐயோ’ என்று அலற, தேளோ பரபரவென்று அங்கே இருந்த சரஸ்வதி பொம்மையைச் சுற்றிவிட்டு வாசலைத் தாண்டி தெருவில் இறங்கி ஓடி மறைந்தது.

“மஹா பெரியவா சொன்னார்ங்கறதுக்காக நாங்க இந்த மாதிரி செய்ய ஆரம்பிச்சோம். இப்பவும் அவர்தான் கொழந்தையையும் தேளையும் காப்பாத்தியிருக்கார்…” என்று அந்த வீட்டு மாமி குரல் தழுதழுக்கக் கூறிவிட்டுக் குழந்தையை வாரி அணைத்துக்கொண்ட காட்சியை மறக்க முடியுமா?

துக்கத்தை மாற்றிய கொலு

ஒவ்வொரு கொலுவுக்கும் அய்யம்பேட்டையில் ஒரு ஜமீன்தார் வீட்டின் கிரிக்கெட் மைதானம் போன்ற முன் கூடத்தில் படிகள் அமைத்து முழுக்க பொம்மைகளாக அடுக்கி வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். கொலுவை வேடிக்கை பார்க்க வீட்டின் உள்ளே நுழைவதற்கு எங்களுக்குத் தைரியம் பத்தாது. அதனால் திண்ணையில் இருக்கும் ஜன்னல் வழியாகப் பத்துப் பதினைந்து பேர் முட்டி, மோதிக்கொண்டு வேடிக்கை பார்ப்போம். அங்கே நின்று வேடிக்கை பார்க்கும் ஐந்து, பத்து நிமிடங்களும் சொர்க்கம்!

அப்படி எதிர்பார்த்துதான் அந்த வருஷமும் திண்ணை ஏறினோம். ஜன்னல் வழியே தெரிந்த கூடம் வெறிச்சோடி இருந்தது. ஏமாற்றமென்றால் ஏமாற்றம் ஜமீன்தார் வெளியே வந்தார்.

“வளர்ந்த பையனைப் பறிகொடுத்துட்டு பரிதவிக்கிற வீட்ல கொலுவாவது இன்னொண்ணாவது. போங்கடா.. போங்க’’ என்று எங்களைப் பார்த்து தொண்டை அடைக்கக் கூறினார். எங்களில் ஒரு பையன் தைரியமாக அவர் முன்னால் சென்றான். “உங்க பையன் சாமிகிட்டத்தானே போயிருக்கான்? சாமி பொம்மைக்குப் பக்கத்திலேயே உங்க பையனோட பொம்மையையும் வெச்சுக் கொலு வைக்கலாம் இல்ல..?” என்று துடுக்குத்தனமாகக் கேட்டான். ஜமீன்தார் அவனை ஆழமாகப் பார்த்தார். சில விநாடிகள் தர்மசங்கடமான மவுனம். பின் அவரே மவுனத்தை உடைத்து, “அப்படியாடா… அப்ப நீங்க எல்லாம் நாளைக்கு வாங்க. தவறாம வரணும், என்ன?” என்றார்.

மறுநாள் ஜமீன்தார் வாசலிலேயே நின்றிருந்தார். எங்களைக் கைப்பிடித்து உள்ளே கூட்டிச் சென்றார். கூடத்தில் அமர்க்களமாகக் கொலு பொம்மைகள். கலர் கலராக சீரியல் பல்புகள் மின்னி மின்னி ஒளிர்ந்தன. அமர்க்களமான கொலு. படிகளின் நட்ட நடுவே, சாமி பொம்மைகளுக்கு இடையில் எங்கள் வயதொத்த ஒரு சிறுவனின் புகைப்படம் வைக்கப்பட்டு அதற்கு பொட்டு, மாலை அலங்காரம். எங்கள் எல்லோருக்கும் அன்றிரவு வயிறாரச் சாப்பாடு. அப்போது குஷியாக இருந்தது. இப்போது நெகிழ்வாக இருக்கிறது. மறக்க முடியுமா?

-சுபா, எழுத்தாளர், தொடர்புக்கு: dsuresh.subha@gmail.com

” அன்று வெள்ளை மாளிகை வாசலில் ….இன்று வெள்ளை மாளிகை விருந்தினர்” …!!!

வெள்ளை மாளிகை வாசலில் படம் எடுக்க நின்ற மோடிக்கு 20

ஆண்டுகளுக்குப் பிறகு சிவப்பு கம்பள வரவேற்பு !!!

கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளைமாளிகை முன்பு (இடமிருந்து) தற்போதைய பாஜக தெலங்கானா மாநில தலைவர் ஜி.கிஷண் ரெட்டி, நரேந்திர மோடி, தற்போதைய தமிழக காங். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன். படம்: பிடிஐ

கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளைமாளிகை முன்பு (இடமிருந்து) தற்போதைய பாஜக தெலங்கானா மாநில தலைவர் ஜி.கிஷண் ரெட்டி, நரேந்திர மோடி, தற்போதைய தமிழக காங். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன். படம்: பிடிஐ

சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் மாளிகை யின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட நரேந்திர மோடி, இப்போது சிவப்பு கம்பள வரவேற்புடன் வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

அமெரிக்க அரசு சார்பில் ‘அமெரிக்கன் கவுன்சில் பார் யூத் பொலிடிக்கல் லீடர்ஸ் (ஏ.சி.ஒய்.பி.எல்)’ எனும் பெயரில் ஓர் அமைப்பு நடத்தப்படுகிறது. இதன் சார்பில் அமெரிக்காவை புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் முக்கிய அரசியல் கட்சிகளை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்துக்கு இந்தியாவில் இருந்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. இதை ஏற்று இரு கட்சிகளும் மாநில கட்சித் தலைவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

கடந்த 1994-ல் நடந்த கூட்டத்துக்கு பாஜக சார்பில் குஜராத் மாநில பாஜக அமைப்புச் செயலாளராக இருந்த மோடி, ஆந்திர மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்த ஜி.கிஷண் ரெட்டி, கர்நாடகா மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்த அனந்தகுமார் ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றனர்.

அந்த சமயத்தில் மூவரும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வாசல் முன்பு நின்று எடுத்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தி இந்துவிடம் மோடியுடன் படத்தில் இருக்கும் ஜி.கிஷண் ரெட்டி கூறியதாவது:

‘அந்தப் படம் எடுக்கும்போது எங்களுடன் இருந்த மோடி நம் நாட்டின் பிரதமராவார் எனவும் அதே மாளிகையின் சிறப்பு விருந்தினராக செல்வார் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை. எனினும் அப்போதே அந்த நாட்டை நம் நாட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பதில் மோடி அதிக ஆர்வம் காட்டினார். அங்கிருந்த லிபர்டி சிலை உட்பட பல விஷயங்களை பார்த்து அது நம் நாட்டில் செய்யப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க அதிகாரிகளிடம் அந்நாட்டு அரசின் நிர்வாகங்கள் பற்றி பல்வேறு கேள்விகளை மோடி எழுப்பினார்.

அரசு கூட்டங்களைவிட அங்கிருந்த குஜராத் மக்கள் நடத்திய கூட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வேண்டி இருந்தது. எங்களையும் அழைத்து சென்று அந்த கூட்டங்களில் மோடி பேசியதை நினைத்தால் இப்போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

தற்போது தெலங்கானா மாநில பாஜகவின் தலைவராக இருக்கும் கிஷண் ரெட்டி, அந்த மாநில அம்பர்பேட் தொகுதி சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார்.

சிறியவகை பழைய கேமராவில் எடுத்த இருபது படங்கள் அவரிடம் இருந்துள்ளன. இப்போது மோடி அமெரிக்காவுக்கு செல்வதை ஒட்டி அதை எடுத்து பார்த்தபோது படங்கள் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதில் இரண்டை மட்டும் பத்திரமாக எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார் ரெட்டி.

” Travel Back in Time …” !!!…Incredible use of Technology …

http://interactive.guim.co.uk/embed/2014/apr/image-opacity-slider-master/index.html?ww2-dday

PL CLICK THE ABOVE LINK …KINDLY FOLLOW THE STEPS GIVEN BELOW….

Now this is an incredible use of technology—like traveling back in time!

Left click and hold on each photo, and then drag your mouse gently from

left to right on the original photograph and will be become a photo of the
exact same location and view today – drag it back to the left and you are back in 1944!
Scroll down for more of the same.  Just fascinating!   
Source::::  Input from a friend of mine
Natarajan

” நெகிழவைத்த கனடா கொலு… கலசமே கொலுவாக …”

ஓவியம்: வெங்கி

ஓவியம்: வெங்கி

நவராத்திரி வந்துவிட்டாலே கனடாவில் இருக்கும் என் தங்கையின் கொலு அனுபவம்தான் என் நினைவுக்கு வரும். அவள் திருமணமாகி வெளிநாடு போகவேண்டும் என்றதும் உறவினர்களையும் நண்பர்களையும் பிரிந்து செல்ல எவ்வளவு வருத்தப்பட்டாளோ அதே அளவு கொலுவை மிஸ் செய்வதற்கும் வருந்தினாள்.

அவளின் கவலையை உணர்ந்து வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல ஏற்றாற்போல எடை குறைவான பொம்மைகளை வாங்கித் தந்தோம். அவற்றுடன் வெளிநாட்டுப் பொம்மைகளையும் கலந்து புதுவிதமாகக் கொலு வைக்கலாம் என்ற ஆலோசனையைக் கேட்டு அவள் ஓரளவு நிம்மதியடைந்தாள். அரைமனதோடு சாஸ்திரத்துக்கு இரண்டு பொம்மைகளை எடுத்துச் சென்றாள்.

அவள் அங்கே போன உடனேயே நவராத்திரி வந்துவிட்டது. ஒரு சிறிய பலகையில் எடுத்துப்போன இரண்டு பொம்மைகள், கலசம் அவற்றுடன் அங்கே வாங்கிய பொம்மைகளை சேர்த்து கொலு வைத்து விட்டாள். சிறிய கொலு என்பதால் எப்படி எல்லோரையும் அழைப்பது என்று அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

கோயிலில் கொலு வைத்திருக்கிறார்கள் என்றதும் அங்கே போனாள். அங்கே இவளுக்கு அறிமுகமே இல்லாத பெண்மணி தன் வீட்டு கொலுவுக்கு வரும்படி அழைத்திருக்கிறாள். இவளை மட்டுமல்லாமல் கோயிலில் நிறையப் பேரை அழைத்திருக்கிறாள். கிட்டத்தட்ட 20 தம்பதிகள் காரில் அவள் வீட்டுக்குப் போனார்கள். எல்லோருக்கும் ஜூஸ், வடை, கேசரி கொடுத்து உபசரித்திருக்கிறாள். ஏதோ இந்தியர்களுக்கான கெட் டுகெதர் போல எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டு சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

கடைசியில் அனைவருக்கும் மிகவும் பிரியத்துடன் தாம்பூலம்,ரோஜாப்பூக்கள் கொடுத்திருக்கிறாள் அந்தப் பெண். அப்போதுதான் பேச்சு சுவாரஸ்யத்தில் கொலு பார்க்க மறந்துவிட்டோமே என்று ஞாபகம் வந்து, “கொலு எங்கே?”என்று கேட்டிருக்கிறார்கள். “ஓ , நீங்கள் பார்க்கவில்லையா? இதுதான் கொலு” என்று பிளாஸ்டிக் மாவிலையும் தேங்காயும் வைத்து சந்தனம் குங்குமம் வைத்த ஒரு கலசத்தைக் காட்டினாளாம் அந்தப் பெண். என் தங்கைக்கோ வியப்பு, அதிர்ச்சி, சிரிப்பு எல்லாம் கலந்த உணர்வு. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறாள்.

பின்னால் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அந்தத் தோழியின் உயர்ந்த குணம் புரிந்தது. அவள் கலசத்தையே கொலுவாக, அம்பாள் வடிவமாக, பக்திபூர் வமாகப் பார்த்திருக்கிறாள். எல்லோரையும் அம்பாள் வடிவமாகவே நினைத்து, தெரியாதவர்களைக்கூட அன்போடு தாம்பூலத்துக்கு அழைத்திருக்கிறாள். சிரமப்பட்டுத் தனி ஆளாக உணவு தயாரித்து எல்லோருக்கும் சிநேக உணர்வுடன் கொடுத்திருக்கிறாள். பலருக்கிடையே நட்பு ஏற்பட உதவும் பாலமாக இருந்திருக்கிறாள். அவள் வீட்டு கொலுவுக்குத் தனி மகிமை இருப்பது புரிந்தது. அன்றிலிருந்து கொலுவின் அளவு பற்றி என் தங்கை கவலைப்படுவதே இல்லை. தன்னால் முடிந்த அளவு எல்லோரையும் அழைத்து தாம்பூலம் கொடுக்கிறாள்.

– ரம்யா சங்கரநாராயணன், பெங்களூர்.

Source::::The Hindu …Tamil

ஆட்சியாளர்கள் …. காமராஜர் மட்டும் ஒரு விதிவிலக்கு …

ஆட்சியாளர்கள் எப்போதுமே அப்படித்தான்!

அ.கா. பெருமாள்  in The Hindu …Tamil

காமராஜர் போன்ற வெகு சில ஆட்சியாளர்களை மட்டுமே மக்கள் எளிதில் சந்திக்க முடிந்தது.

தெக்கன் திருவிதாங்கூர் என்னும் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த புதிது. காமராஜர்தான் அப்போது தமிழக முதலமைச்சர். புதிய மாவட்டத்தின் மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகள் கேட்டார். காமராஜரை யார் வேண்டுமானாலும் நேரடியாகச் சந்திக்கலாம் என்ற செய்திகூட நாளிதழில் வந்தது. திருவிதாங்கூர் அரசருக்குக் கீழே பணியாற்றிய அதிகாரிகளுக்கு இது புதிய அனுபவம்.

காமராஜர் கரடுமுரடான சாலைகளில் செல்லத் தோதான வருவாய்த் துறை ஜீப்பில் வந்தார். முக்கிய சாலையில் ஜீப்பை நிறுத்திவிட்டு நடந்துவந்த சமயம்தான் எங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடத்தைப் பார்த்தார். 19-ம் நூற்றாண்டுக் கட்டிடம். ஆசிரியர்கள் முன்னே நிற்க, மாணவர்கள் கூடி நின்றோம். திட்டமிடப்படாத வரவேற்பு. யாரும் தடுக்கவில்லை. போலீஸ் கெடுபிடி இல்லை.

எங்களைப் பார்த்ததும் முதலமைச்சர் நின்றார். அவருடன் மிகக் குறைவான போலீஸார்; இரண்டோ மூன்றோ அதிகாரிகள்; அமைச்சர் கக்கனும் மாவட்ட ஆட்சியர் அம்பா சங்கரும் இருந்தனர். யாரும் யாரையும் விலக்கவில்லை. போலீஸ் அதிகாரிகூட அவருக்குப் பாதுகாப்பாக முன்னே வரவில்லை. மூத்த ஆசிரியர் கதர் நூல் மாலையைக் காமராஜர் கழுத்தில் போட்டார். அவர் அதற்கு வாகாகத் தலையைத் தாழ்த்திக்கொடுத்தார். ஆஜானு பாகுவான உருவம்; முழங்கால் வரை எட்டும் தொளதொள சட்டை; சாதாரண செருப்பு; பாதங்கள் தெரியும்படி கட்டப்பட்ட வேட்டி.

நல்லாப் படிக்கணும்

காமராஜர் எங்கள் அருகில் வந்தார். சுற்றிலும் பார்த்தார். நாங்கள் இரண்டு கைகளைக் கூப்பியபடி நின்றோம். கூட்டத்தில் கிழிந்த சட்டையுடன் கூடிய மாணவர்கள் நாலைந்து பேர் இருந்தனர். காமராஜர் ஒருவன் தலையைத் தடவிவிட்டார். “என்ன படிக்கிறே” என்றார். அவன் “மூணாப்பு” என்றான்.

எங்களைப் பார்த்துப் பொதுவாகச் சொன்னார்: “நல்லாப் படிக்கணும்; அப்பா, அம்மா சொன்னா கேக்கணும்; நல்ல பேரு வாங்கணும்; உழைச்சு முன்னுக்கு வரணும்.” ஒரு ஆசிரியர், காமராஜர் முன்னே தயங்கித் தயங்கி வந்து நின்றார். “என்ன விஷயம்?” என்று காமராஜர் கேட்டார். “இப்போ 30 குழந்தைகளுக்கு உச்ச நேரம் (நண்பகல்) கஞ்சி ஊத்துறோம். அது பத்தல்ல. 50 பேருக்குக் கஞ்சி ஊத்த திருமனசு தயவு பண்ணணும்” என்றார். பழக்கதோஷம்; ஆசிரியர் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியிலும் இருந்தவர்; திவான் பேஷ்காரிடம் விண்ணப்பம் செய்யும் பாணியில் பேசினார். காம ராஜருக்கு அவரது பேச்சு முழுவதும் புரியவில்லை. என்றாலும் ஆசிரியருடன் பேசினார்; பக்கத்தில் நின்ற அதிகாரிகளுடன் பேசினார்.

இந்த நிகழ்ச்சி நடந்து 30 ஆண்டுகள் கழிந்து வகுப்பில் என் மாணவர்களிடம் அதைப் பற்றிச் சொன்னேன். மாணவர்கள் நம்பவில்லை; மாணவிகள் நமட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள். ஒரு மாணவி “கேட்க நல்லா இருக்கு சார். உண்மையா நடந்ததா?” என்று கேட்டாள். இதுபோன்ற செய்திகள் இன்றைய தலைமுறையினருக்குக் கற்பனைதான்!

ராமாயண காலம்

எல்லாக் காலத்திலும் ஆட்சியாளர்கள் எப்படி இருந்தார்கள். குடிமக்கள் நெருங்கும்படியான சூழ்நிலையில் இருந்தார்களா? இதற்கெல்லாம் சரியான பதிவுகள் இல்லை. ராமாயண ராமனைக் குடிமக்கள் காண அதிகாரிகள் தடையாய் இருந் தார்கள் என்று ஒரு நாட்டார் கதை உண்டு. இந்தக் கதை, பார்வதிக்குப் பரமசிவன் சொல்வது மாதிரி அமைந்தது.

பரமசிவன் சொன்ன கதை

“ராமன், ராவணாதிகளை ஒழித்துவிட்டான்; பட்டாபிஷேகம் நடந்துவிட்டது. இப்போது எப்படி இருக்கிறான்?” என்று பரமசிவனிடம் கேட்டார் பார்வதி. பரமசிவன் கண்களை மூடிக்கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துப் பேசினார். “ராமன் ராமனாக இருக்கிறான். அதிகாரிகள்தான் அவனிடம் குடிமக்களை நெருங்கவிடாமல் தடுக்கிறார்கள். லட்சுமணன் இதைக் கண்டும் காணாமல் இருக்கிறான்” என்று சொல்லிவிட்டு, அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியையும் கூறினார்.

அவரைப் போய்ப் பாரு!

ஒரு சம்சாரி தனது விளைச்சல் நிலத்தில் மேய்ந்த மாட்டை விரட்டினார். அது அந்த வழியாக வந்த வயதான பெண்ணின் மேல் போய் மோத, அவளுக்குக் காயம் ஏற்பட்டது. இதற்காக அரசனிடம் முறையிடப் போனாள். “ராமனை நேரில் சந்திக்க முடியாது, லட்சுமணனிடம் சொல்லு” என்றான் ஒரு காவலன். அவள் லட்சுமணனைக் கண்டு நியாயம் கேட்டாள். லட்சுமணன் “பரந்த சாம்ராஜ்யத்தை ஆட்சிசெய்பவன் இதைக் கவனிக்க முடியுமா? உன் ஊர்த் தலைவனிடம் போய்ச் சொல்” என்றான்.

வசிட்டர் சொன்ன கதை

இந்த நிகழ்ச்சியை வசிட்டர் அறிந்தார். லட்சுமணனை அழைத்தார். அவனது மூதாதையரான ரூபகன் என்ற அரசனின் கதையைச் சொன்னார். ரூபகன் நீதி தவறாமல் ஆட்சி செய்தான். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது: நண்பர்கள் புடைசூழ எப்போதும் சூது விளையாடுவான். அதனால், குடிமக்களைச் சந்திப்பதைத் தவிர்த்தான். ஒருமுறை ரூபகன் தன் தந்தையின் திதியை நடத்தினான். அன்று அரண்மனைத் தொழுவத்திலிருந்து நல்ல கொழுத்த பசு ஒன்றைப் பிராமணர் ஒருவருக்குத் தானம் செய்தான்.

அந்தப் பசு அரசரின் தொழுவத்தில் பிறந்து வளர்ந்தது. அதற்கு வேறு இடம் பிடிக்கவில்லை. பிராமணர் வீட்டில் கயிற்றை அறுத்துக்கொண்டு அரண்மனைத் தொழுவத்துக்குச் வந்துவிட்டது. இதை அறியாத வேலைக்காரர்களும் பசுவைத் தொழுவத்தில் கட்டி வைத்தார்கள். யாரோ தன் பசுவைத் திருடிவிட்டார்கள் என்று நினைத்து, பிராமணர் அரசனிடம் முறையிடப் போனார்; முடிய வில்லை. அரசனின் தம்பியைச் சந்தித்துத் தன் பசு திருடுபோனதைச் சொன்னார். அவன், காவலரை அனுப்பிப் பசுவைத் தேடச் சொல்கிறேன் என்றான்.

சில நாட்கள் கழித்து ரூபகனின் அம்மாவின் திதி. ஏற்கெனவே தானம் கொடுக்கப்பட்டுத் திரும்பி வந்த பசு என்று தெரியாமல், அரண்மனைப் பசுவை அரசன் இன்னொரு பிராமணருக்குத் தானம் கொடுத்தான். பிராமணர் அதை வீட்டுக்குக் கொண்டுசெல்லும்போது ஏற்கெனவே பசுவை இழந்த பிராமணர் தற்செயலாக அங்கே வந்தார். பசு தன்னுடையது என்று கண்டுகொண்டார். புதிய பிராமணரைப் பிடித்து, “திருடனே! வா அரசனிடம்” என்றார். அவரோ “அரசனின் அம்மாவின் திதியில் இந்தப் பசு எனக்குத் தானமாகக் கிடைத்தது. என்னையா திருடன் எனப் பழித்தாய்! உன்னைச் சும்மா விட மாட்டேன்” என்றார்.

காத்திருந்து காத்திருந்து…

சண்டை பெரிதான பிறகு, அரசனை நாடிச் சென்றனர். அரசனைச் சந்திக்க வேண்டும் என்று காவலனிடம் சொன்னார்கள். காவலன் அவர்களைக் காத்திருக்கச் சொன்னான். அவர்கள் காத்திருந்தனர். வேறு சிலரும் அரசனைச் சந்திக்கக் காத்திருந்தனர். அரசன் வரவில்லை. அடுத்த நாளும் சென்றார்கள்; காத்திருந்தனர். இப்படியே பல நாட்கள். பிராமணர்கள் இருவரும் அலுத்துப்போனார்கள். அவர்கள் தங்களுக்குள் சமாதானம் ஆனார்கள். இரண்டாவதாக தானம் பெற்ற பிராமணரே பசுவை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தனர்.

பிராமணர்களின் கோபம் அரசன் பக்கம் திரும்பியது. அரண்மனையைப் பார்த்துப் பிராமணர் இருவரும் “ரூபகனே – குடிமக்களை அலைக்கழிக்கும் நீ அரசனே அல்ல; நீ ஓணானாகச் சிம்மாசனத்தில் அமர்வாய். இது எங்கள் சாபம்” என்றனர். அரசன் உடனே ஓணானாகிவிட்டான். இதை அறியாத காவலர்கள் சிம்மாசனத்திலிருந்து ஓணானை விரட்டிவிட்டார்கள்.

இப்படியாகக் கதைக்குள் கதை என்று சொல்லப்பட்ட இந்தக் கதைகள் சொல்லும் உண்மை இதுதான்: ஆட்சியாளர்கள் எப்போதும் ஒரே மாதிரிதான். இதில், காமராஜர் போன்றவர்கள் அரிதான விதிவிலக்கே!

– அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்,  


‘சடங்கில் கரைந்த கலைகள்’, ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

” ஸ்வாமிதான் உன்னைக் காப்பாத்தி இருக்கார் …” !!!

Post Options
“ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்….
உண்மைதான். ஆனால் “எந்த ஸ்வாமி”?.

Featured Image -- 11217

கார்வேட் நகரில் ஸ்ரீமடம் முகாம்.சென்னையிலிருந்து காரில் வந்த ஒரு குடும்பத்தினர் சாயங்காலமாகத் திரும்புவதற்கு முடிவு செய்திருந்தார்கள்.
எல்லாம் ரெடி. பெரியவாளிடம் உத்தரவு பெற்றுக் கொண்டால்,அடுத்த நிமிஷமே புறப்பட்டு விடலாம். பெரியவா ஒரு வில்வ மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள்.

சபேசன் குடும்பத்தினர் வந்தனம் செய்து பிரசாதத்துக்காக நின்றார்கள்.

அவர்களுக்குப் பிரசாதம் கொடுக்கப்பட்டது.

சபேசன் காரை நோக்கித் திரும்பினார்.

விரல்களால் ஒரு சொடுக்கல்.

சபேசன் திரும்பி வந்தார். ஆவலுடன்.

சற்று தூரத்தில் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது.

பெரியவாள் அதைக் காட்டி,

“இதில் கொஞ்சம் சாக்கில் கட்டி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போ” என்றார்கள்.

எல்லோருக்குமே திகைப்பு. கருங்கல் ஜல்லியை கார்வேட்

நகரிலிருந்து சென்னைக்கு எடுத்துக் கொண்டு போவானேன்?

அந்த ஜல்லியில் அப்படி என்ன சிறப்பு?.

பெரியவாளிடம் விளக்கம் கேட்க முடியாது. எனவே

உத்திரவுப்படி ஒரு சாக்கில் கொஞ்சம் ஜல்லியை மூட்டையாகக் கட்டி கார் டிக்கியில் வைத்துக்கொண்டு புறப்பட்டார் சபேசன்.

மலைப் பாறைகள் நிறைந்த புத்தூர் வழி.

இரவு.நாலைந்து நபர்கள் நடுச்சாலையில் நின்று காரை மறித்தார்கள்.கொள்ளைக்காரர்கள் என்பதில் சந்தேகமில்லை.

எல்லோரையும் காரிலிருந்து இறங்கிச் சொல்லி, உட்புறம் அலசிப் பார்த்தார்கள். ஒரு பெட்டி – பையைக் கூடக் காணோம்.

ஆத்திரத்துடன் டிக்கியை நெம்பித் திறந்து பார்த்தார்கள்.

மூட்டை!

“டேய், இங்கே இருக்குடா!…” கூவினான் ஒருவன்.

மூட்டையை எடுக்க முயன்றான் வேறொருவன்.முடியவில்லை. கனமாக இருந்தது. எல்லோருமாகச் சேர்ந்து மூட்டையைக் கீழே தள்ளிவிட்டு, “போ….போ…” என்று சபேசனை விரட்டினார்கள்.

சபேசன் படு வேகமாகக் காரை செலுத்திக் கொண்டு சென்று, ஒரு கிராமம் வந்ததும் காரை நிறுத்தி மூச்சு விட்டார்.

“பயந்தே போயிட்டேன்!..நகை எல்லாத்தையும் கழட்டுன்னு சொல்லுவாங்களோன்னு நடுங்கிப் போயிட்டேன்!” என்றாள் அவர் மனைவி.

“எல்லோரையும் கட்டிப் போடாமல் விட்டானே!” என்றான் பையன்.

“காரை நொறுக்காமல் விட்டானே!” என்றாள் மகள்.

சபேசன் கார்வேட் நகர் இருந்த திசை நோக்கிக் கும்பிட்டார்.

கனமான சாக்குப் பையில் நிறையப் பணம் இருக்கிறது என்று தப்புக் கணக்குப் போட்ட கொள்ளையர்கள்,

வேறு சாமானியப் பொருள் எதையும் விரும்பாமல் விட்டு விட்டார்கள் என்று அனுமானிக்க முடிந்தது.

இரண்டு நாள் சென்று அவர் மட்டும் தரிசனத்துக்கு வந்து, நடந்த நிகழ்ச்சியைப் பெரியவாளிடம் பரவசத்துடன் விண்ணப்பித்துக் கொண்டார்.

“ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்” என்றார்கள் பெரியவா.

உண்மைதான்.

ஆனால், “எந்த ஸ்வாமி?” என்று சபேசனுக்கு நன்றாக புரிந்திருந்தது. இனிமேல் ஜல்லியைப் பார்க்கிற போது, ‘ஒரு சல்லிக் காசு பெறாது’ என்று நினைக்க மாட்டார்!

Source:::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8006#ixzz3E0NCEVew

மகாத்மாவும் மதுரையும்! … செப்., 22- அரைமுடி ஆடைக்கு மகாத்மா மாறிய நாள்…

தமிழகத்தின் கலாசார தலைநகர் மதுரை என்றால் மிகையாகாது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரங்கள் இன்று அழிந்து விட்டாலும், அழியாத புகழ் கொண்டதாக மதுரை விளங்குகிறது. கீழ்திசை நாடுகளின் ‘ஏதென்ஸ் நகரம்’ என மதுரைக்கு பெயர் உண்டு.

இந்திய விடுதலை போராட்ட வரலாற்றுடனும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கையுடனும் பிரிக்க முடியாத தொடர்பை மதுரை கொண்டுள்ளது. 1915 ஜன., 9ல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது முதல் 1948 ஜன., 30 கோட்சேயால் சுடப்பட்டு, ரத்தம் சிந்தி இறந்தது வரை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக காந்திஜி பல முறை பயணித்திருக்கிறார். குஜராத்திற்கும், வங்காளத்திற்கும் கன்னியாகுமரிக்கும் ஏன் காஷ்மீரையும் தாண்டி ஆப்கன் எல்லையிலுள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களுக்கும் பல முறை அவர் பயணித்தது உண்டு. ஆனால் அவர் விரும்பி வந்து தங்கி வரலாறு படைத்து சென்ற நகரங்களுக்குள் மதுரை முக்கியமானது. முப்பது ஆண்டுகளில் ஐந்து முறை காந்திஜி மதுரை மண்ணில் காலடி வைத்துள்ளார்.


ஐம்பதாவது வயதில் முதல் முறையாக 1919ல் காந்திஜி மதுரைக்கு வந்தார். மார்ச் 26, 27, 28 தேதிகளில் வைகை வடகரையில் ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் அவர் தங்கினார். இக்கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது வேறு வடிவில் உள்ளது. ரவுலட் அடக்குமுறையை சட்டத்தை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி சத்தியாகிரகம் நடத்த முனைந்தார். ஜார்ஜ்ஜோசப் தலைமையில் தியாகி சங்கிலியாபிள்ளை உட்பட ஐந்து பேர் சத்தியாகிரகத்தில் இணைந்து போராடினர்.மகாத்மாவாக உயர்த்திய மண்1921 செப்., 20, 21, 22 தேதிகளில் காந்திஜி 2வது முறையாக வந்தது மதுரையை உலக வரைபடத்தில் சுட்டிக் காட்ட வைத்தது. மூன்று நாட்கள், மதுரை மேலமாசிவீதியில் ‘251 ஆ’ என்ற ராம்ஜி கல்யாண்ஜி இல்லத்தில் தங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தின் உச்சமாக கதர் மற்றும் சுதேசி இயக்கத்தை வலுப்படுத்திட, அன்னிய துணிகளை துாக்கி எறிந்து அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். ஏழைகளுடன் தம்மை முழுமையாக ஐக்கியப்படுத்தி கொள்ளும் வகையில் செப்., 22ல் மேலமாசி வீதியில் தன் குஜராத்தி ஆடைகளை களைந்து, அரைமுழ ஆடையினை உடுத்த துவங்கி ‘மகாத்மா’வாக மதுரை மண்ணில் உயர்ந்தார். குண்டடிபட்டு இறக்கும் வரை அவர் மேலாடை அணியவில்லை. இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்ற போதும், ஆறாம் ஜார்ஜ் மன்னரை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்த போதும், சர்வாதிகாரி முசோலினியை ரோம் நகர அரண்மனையில் சந்தித்த போதும் கூட காந்திஜி அரைமுழ ஆடையுடன் தான் சென்றார்.

 

சுதேசி இயக்கம், தீவிர கதர்துணி பிரசாரத்திற்காக 1927 செப்.,28, 29, 30ல் மதுரை வந்தார் காந்திஜி. இம்முறை அவர் சென்ற இடமெல்லாம் லட்சக்கணக்கில் மக்கள் கூடினர்.நான்காவது முறையாக 1934 ஜன., 25 முதல் 27 வரை மதுரை வந்த காந்திஜி என்.எம்.ஆர்.சுப்புராமன் இல்லத்தில் தங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாததை கண்டித்து ‘ஆலய பிரவேச இயக்கத்தை’ துவக்கி வைத்தார். வைத்தியநாதய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன் போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து, 1939 ஆக., 8ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் அனைத்து ஜாதியினருக்காக கோயில் திறந்து விடப்பட்டது. அதற்கு வித்திடுவதாக காந்திஜியின் 4வது வருகை அமைந்தது

ஐந்தாவது முறையாக காந்திஜி 1946 பிப்., 2, 3ல் மதுரை வந்து சிவகங்கை ராஜா அரண்மனையில் (தற்போது மீனாட்சி அரசு கல்லுாரி வரலாற்று துறை கட்டடம்) தங்கினார். தாழ்த்தப்பட்டோருக்காக திறந்து விடப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலை தரிசிப்பது அவரது பிரதான நோக்கமாக அமைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை வந்தது அவரது கடைசி பயணம்.மதுரைக்கு காந்திஜியின் ஒவ்வொரு வருகையும் முத்திரை பதிப்பதாக அமைந்தது என்னவோ உண்மை. அத்தனை முறையும் ரயிலில் தான் வந்தார். ஏதோ வந்தேன், சென்றேன் என்றில்லாமல், மக்களை ஆர்த்தெழச் செய்வதாக அவரது வருகை இருந்தது.

SOURCE::::Dinamalar.com

Natarajan

” பிள்ளையாரின் பிள்ளை…” !!!

மஹா பெரியவாளின் கமல பாதங்களில் நான் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டேன். எனக்கு எல்லாமே அவர் தான்’ என்று சொல்லும் கடம் வித்வான் விநாயக ராம் இல்ல பூஜை அறையில் திரும்பும் இடமெல்லாம் மஹாபெரியவா படங்கள்தான்.

பூஜை அறையின் அலமாரியில் ஒரு பிள்ளை யாரைக்காட்டி, பிள்ளையார்தான் எனக்கு தாயும், தந்தையும். நானும், என் சகோதரியுமாக இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தோம். எனக்கு ராமசேஷன் என்றும் என் சகோதரிக்கு சீதா லட்சுமி என்றும் பெயர் வைத்தார்கள். எங்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி உடம்புக்கு வரும்; அதாவது, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் வரும். பெற்றோர்களுக்கு ஒரே கவலை. ஒரு குழந்தையை வேறு யாருக்காவது ஸ்வீகாரம் கொடுக்கும் படி ஆலோசனை சொன்னார் ஒரு ஜோசியர். என் பெற்றோர்கள் வேறு யாருக்காவது ஸ்வீகாரம் கொடுப்பதை விட, இறைவனுக்கே ஸ்வீகாரம் கொடுக்க முடிவு செய்தார்கள். அதன் பேரில் சாஸ்திரப்படி, பிள்ளையார் கோயிலில் வித்து, பிள்ளையாருக்கே என்னை ஸ்வீகாரம் கொடுத்தார்கள். அப்போது எனக்கு வைக்கப்பட்ட பெயர் தான் வினாயக ராமன். ஆக, எனக்கு தாயும், தகப்பனாரும் பிள்ளையார்தான். நான் பிள்ளையாரின் பிள்ளை.

பதினாலு, பதினஞ்சு வயசில் இருந்தே பெரிய வித்வான்களுடைய கச்சேரிகளுக்கு கடம் வாசிப்பேன். அப்படி ஒரு தடவை திருச்சியில் தியாகராஜ பாகவதர் கச்சேரி. அப்போது எனக்கு உடம்பு சரியில்லை. அப்பாவுக்கு திருச்சிவரை என்னை தனியாக அனுப்பத் தயக்கம். ‘பையனை என் கூடவே காரில் அழைத்துக் கொண்டுபோய், கச்சேரியை முடித்துவிட்டு, பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்’ என்று பாகவதர் சொன்னதன் பேரில், என்னை அனுப்பி வைத்தார். இரவு காரில் புறப்பட்டோம். அதிகாலை ஐந்து மணி இருக்கும். காரின் பின் சக்கரத்தில் ஏதோ வித்தியாசமான சப்தம் வருவதை கவனித்து, காரை நிறுத்தச் சொன்னார் பாகவதர். இறங்கிப் பார்த்தால், பின் பக்க சக்கரங்களில் ஒன்றின் எல்லா நட்களும் லூசாகிக் கழன்று விழுந்துவிட்டன. இன்னும் கொஞ்ச தூரம் சென்றிருந்தாலும், ஒரு சக்கரம் கழன்று, கார் விபத்துக்குள்ளாகி இருக்கும். அப்போதுதான் கவனித்தோம், காரை நிறுத்திய இடத்துக்கு பக்கத்தில் சிறிய பிள்ளையார் கோயில். எங்கள் உயிரைக் காத்த பிள்ளையாரை நன்றியோடு வணங்கிவிட்டு, அடுத்து வந்த ஒரு பஸ்ஸில் ஏறி திருச்சி சென்றடைந்தோம்.”

பூஜை அறையின் நடுவில் ஓர் ஊஞ்சல். அதிலும் பெரிதாக இரண்டு மஹா பெரியவா படங்கள். அதனை ஒட்டினாற் போல ஒரு பூஜா மண்டபம். அதில் ஒரு கடம். அதன் முன்பாக வெண்கலத்தில் செய்த ஒரு கடம். பக்கத்தில் சின்னஞ் சிறு மஹா பெரியவா உருவம். இதன் பெருமையைச் சொல்லட்டுமா? மானா மதுரையில்தான் நல்ல முறையில் கடம் செய்வார்கள். அப்படி மானாமதுரையில் புது கடம் ஒன்றை வாங்கிய சில தினங்களில் காஞ்சீபுரம் சென்றபோது, அந்த கடத்தையும் எடுத்துக் கொண்டு போயிருந்தேன். என்னை ஆசிர்வதித்த பெரியவா, அந்த கடத்தை வாங்கி இரண்டு தட்டு தட்டினார். எனக்கு ரொம்ப சந்தோஷம். மஹா பெரியவா தொட்டு ஆசிர்வதித்த அந்த கடத்தை கச்சேரிக்கு வாசிக்கக் கூடாது என முடிவு செய்தேன். என் பூஜை அறையில் அதற்கென ஒரு மண்டபம் செய்து, அதிலே வைத்து, பூஜித்து வருகிறேன்.

ஒருமுறை, அமெரிக்காவுக்குக் கச்சேரிக்குச் சென்றபோது, ஒரு தடவை என்னுடைய கடம் உடைந்து போய்விட, நான் மனம் நொந்துபோனேன். ஆனால் மஹா பெரியவாளின் ஆத்மார்த்தமான பக்தரும், என் சகோதரருமான பிரதோஷம் வெங்கட்ராம ஐயர் சொன்னபடி, அங்கேயே பெரியவாளை ஆத்மார்த்தமாக பிரார்த்தித்துக் கொண்டு, அவரது படத்தை வைத்து வலம் வந்து வணங்கினேன். என்னோடு சேர்ந்து அமெரிக்காவில் கச்சேரி செய்வதற்காக லண்டனிலிருந்து அமெரிக்கா வந்த தபலா கலைஞர் ஜாகிர் உசேன், அப்படியே லண்டன் பாரதிய வித்யாபவனில் விசாரித்து, லண்டன் ரசிகர் ஒருவரிடமிருந்து ஒரு கடத்தை வாங்கி எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். எனக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. முந்தைய முறை லண்டனில் கச்சேரி செய்த போது, நான் அந்த ரசிகருக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததுதான் அந்த கடம்.”

படங்கள்: கௌதம் ராம்

நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

” ஆண்டவன் நாமம் எது ? “….

1956-ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் ஸ்ரீதராக கார்ட்டூன்களிலும் மெரினா’ வாக நாடங்களில் பரிமளித்தவர் என்றாலும் பரணீதரனாக அவர் ஆற்றிய ஆன்மிகத் தொண்டுகள் அநேகம். தன் உருக்கமான எழுத்தால் பல உள்ளங்களைக் கவர்ந்தவர்.
பரணீதரன் கூறுகிறார்……
1965-ம் ஆண்டு. ஸ்ரீ மயிலை கற்பகாம்பாள் கல்யாண மண்டபம்.   விடியற்காலை நாலரை மணி.   பெரியவா வெளியே புறப்படுகிறார்.  இரவு மண்டபத்திலேயே தங்கிவிட்டிருந்த நான்,  ரெடி பண்ணிக் கொண்டு கூடவே நடக்கிறேன்.   திரும்பிப் பார்க்கிறார்.   அருகில் செல்கிறேன்.  நடந்துகொண்டே பேசுகிறார் பெரியவா.
https://i0.wp.com/www.vaisnava.cz/fotky/tirupati/Tirupati10-v.jpg

‘நீ திருப்பதியைப் பத்தி எழுதறயா ?’

‘பெரியவா சொல்றபடி செய்யறேன்.’

‘திருப்பதி  இருக்கு பார்….  இது உலகத்திலேயே மகாசக்தி வாய்ந்த,  மிக உயர்ந்த க்ஷேத்திரம்.  மகேஸ்வரன்,  விஷ்ணு,  பிரும்மா,  வராஹர்,  குமரன் இவாளோட சக்திகளும்,  சப்த மாதாக்களின் சக்திகளும் ஒண்ணா ஒரே இடத்திலே சேர்ந்திருக்கிற இடம் அது.   மலை மேல் இருக்கிற பெருமாள் ரொம்ப ரொம்ப சக்தி உள்ளவர்.  நான் முன்னே காசி யாத்திரை பண்ணினப்ப ஸ்ரீ வேங்கடாசலபதியைத் தரிசனம் பண்ணினேன்.  கர்ப்பக்கிரஹத்துக்கு உள்ளே போய் பார்க்க அனுமதிச்சா.  சுவாமி விக்ரஹத்துக்குப் பின்னாலே போய்க்கூட நன்னா பார்த்தேன்…..’  என்று பெரியவா பழைய நிகழ்ச்சியைக் கூறிக் கொண்டிருந்தபோது தீவிர பக்தர் ஒருவர் வீதியிலேயே நமஸ்காரம் செய்து,   தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளும்படிப் பிரார்த்தித்துக் கொண்டார்.   கவனம் திசை திரும்பியது.   திருப்பதியைப் பற்றி ஓர் அரிய பொக்கிஷம் கிடைக்கப் போகிறது என்ற எனது பேராசை நிராசையாயிற்று.

Thirupathi

அதன்பின்னர் இரண்டு மூன்று முறை பெரியவாளிடமிருந்து திருப்பதியைப் பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள முயன்றேன். இயலவில்லை. இருமுறை பெரியவாளுடன் திருமலைக்கு நடந்து செல்லும் நல்வாய்ப்பும்  நற்பேறும் எனக்குக் கிட்டியது.   முதன்முறை சென்ற போது,  திருப்பதி ‘டாபிக்’கைத் தொடங்கினேன்.   எப்பொழுது எழுதத் தொடங்கலாம் என்று அறிய விரும்பினேன்.   நேரடியான பதில் கிடைக்கவில்லை.

https://i0.wp.com/www.saharaglobal.in/Domestic-tour/images/Tirupati.jpg

‘நான் முதன் முதல்லே மலைக்குப் போனப்ப,  சுவாமி விமான கோபுரத்திலே,  மார்க்கண்டேயர் சிவலிங்கதைக் கட்டிண்டிருக்கிற மாதிரியும்,  சிவபெருமான் எமனை விரட்டற மாதிரியும் ஒரு சிற்பத்தைப் பார்த்த ஞாபகம் இருக்கு.   ஆனா,  அதுக்கப்புறம் விமானத்துக்குப் போட்டிருக்கிற தங்கத் தகட்டுல அந்தச் சிற்பத்தைக் காணோம்.  நீ ஒண்ணு பண்றயா…   வி. எஸ். தியாகராஜ முதலியார் தலைமையிலேதான் அப்ப ஒரு கமிட்டி திருப்பணி பண்ணி விமானத்துக்குத் தங்கத் தகடு போட்டா…  திருப்பணி ஆரம்பிக்கறதுக்கு முன்னால விமானத்தை ஒரு போட்டோ எடுத்திருப்பா.   அது அவர் கிட்ட இருக்கும்.    அவர் கிட்ட போய் அந்த போட்டோவைப் பார்த்து,  அதுல நான் சொனன சிற்பம் இருக்கான்னு எங்கிட்ட வந்து சொல்லு’   என்று உத்தரவாயிற்று.

திருமலையிலிருந்து திரும்பியதும்,  வி. எஸ். தியாகராஜ முதலியாரைப் போய்ப் பார்த்து,  பெரியவா கூறிய விவரங்களைச் சொன்னேன்.   அந்த போட்டோ தம்மிடம் இல்லை என்றும்  அப்போது ஜி. கே. வேல்தான் புகைப்படங்கள் எடுத்ததாகவும் வி.எஸ்.டி. கூறினார்.   ஜி.கே. வேல் அவர்களிடம் சென்று வினவினேன்.   தேடிப் பார்த்துவிட்டு,  ‘அந்த நெகடிவ்‘   கிடைக்கவில்லை என்று அவர் கூறி விட்டார்.   ஏமாற்றத்துடன் திரும்பிய நான்,  பின்னர் பெரியவாளிடம் அந்த விவரங்களைத் தெரிவித்தேன்.

1969 -ம் ஆண்டில்  பெரியவாளுடன் இரண்டாம் முறையாக மலை ஏறிச் சென்றேன்.   இம்முறை ஓரிரு வார்த்தைகள் பேசியதைத் தவிர,  பெரியவா மவுனமாகவே நடந்து வந்ததால்,  நான் திருப்பதி விஷயத்தைப் பற்றி விண்ணப்பித்துக் கொள்ள முடியவில்லை.

மறுநாள் கோயிலுக்குச் சென்று,  தரிசனம் முடித்துத் திரும்பும் போது பெரியவா மீண்டும் ‘விமான மார்க்கண்டேயர்‘  சிற்பத்தைப் பற்றி நினைவு கூர்ந்து,  ‘இங்கேயே இருக்கற வயசான பட்டாசாரியார்களைக் கேட்டுப்பாரு.  அவாளுக்குத் தெரிந்திருக்கும்’  என்று கூறவே,   நான் பல வீடுகளில் ஏறி இறங்கி பலரிடம் விசாரித்துப் பார்த்தேன்.   ஓரிருவர்  ‘அப்படியில்லையே‘  என்று மறுத்தனர்.   சிலர் ‘பார்த்ததில்லை‘  என்றார்கள்.   சிலரோ ‘ஞாபகமில்லை‘  என்று கூறி விட்டார்கள்.  நான் சேகரித்த விவரங்களை பெரியவாளிடம் கூறினேன்.   அதன் பிறகு திருப்பதி பற்றிபெரியவா என்னிடம் எதும் பேசவில்லை.   நானும் அதைப் பற்றி எதும் கேட்காமலே இருந்துவிட்டேன்.

ஆனால்,  இரண்டாம் முறை திருப்பதி சென்ற போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள்  நாள்கள் ஆக ஆக…  மாதங்கள் செல்ல செல்ல,  வருஷங்கள் உருள உருள  என்னைப் பெருந் தாக்கத்துக்கு உள்ளாக்கி,  என் சொந்த வாழ்விலும்,  குடும்ப சூழ்நிலையிலும் ஏற்பட்ட மாறுதல்களை மனத் திண்மையோடு எதிர் கொள்ளவும்,  பின்னர் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அரிய விளக்கங்கள் பெறுவதற்கும் துணை நின்றன.    இன்றும் கூட  அவை எனக்கு ஞான தீபமாக ஒளி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

ஆண்டவன் நாமம் எது என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஏன் என்றால்இஷ்டதெய்வம் என்று ஒன்று, குலதெய்வம் என்று ஒன்று, இதுபோக ஒவ்வொருவரும் ‘ரொம்ப சக்தி வாய்ந்த சுவாமி’ என்று அவரவர் உணர்வு நிலைக்கேற்ப சுட்டிக் காட்டும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் நம்மிடையே இருக்கிறதே! இதில் எதை தியானிப்பது என்று கேட்கலாம். இம்மட்டில் அவரவர் மனமும் எந்த தெய்வத்திடம் போய் நிற்கிறதோ அதுதான் அவர்கள் தியானிக்க ஏற்ற நாமமாகும். ஆனாலும், அனைவருக்கும் ஏற்ற ஒரு நாமமும் உள்ளது.

கோவிந்த நாமம்தான் அது! ‘கோவிந்தா… கோவிந்தா… கோவிந்தா…