In Homage to Uthradom Thirunal Marthanda Varma …

 

Uthradom Tirunal Marthanda Varma

Uthradom Tirunal Marthanda Varma

Kerala lost one of the last links with its royal past with the passing away of Uthradom Tirunal Marthanda Varma, head of the royal family of erstwhile Travancore, in the early hours of Monday.  16 Dec.2013.  . Mr. Varma, a witness to the transformation from imperial rule to a democratic polity, was a common presence in the social and cultural scene of the city.

He had stood guard over the age-old traditions, rites and rituals of Sree Padmanabhaswamy Temple ever since 1991, when he was anointed the trustee and “dasa” of the temple following the death of his elder brother and last sovereign of Travancore, Sree Chithira Tirunal Balarama Varma. Mr. Varma, born as the younger son of Maharani Sethuparvathi Bayi and Ravi Varma Koyi Thampuran on March 22, 1922, was educated in the Kowdiar Palace by a group of 14 tutors in various subjects. He later graduated from the then Travancore University with Economics, Politics and History as specialisations in 1943. He was the recipient of the Moncombu Aandi Iyer Gold Medal for the best student in Sanskrit.

 

 

source :::::Mahesh Krishnamurthy  in Sage of Kanchi Blog and Youtube and The Hindu

natarajan

” Are You Smarter than ” Seniors ” !!!

 

This is a test for us ‘older kids’!

The answers are printed below, (after the questions) but don’t cheat! answer them first…..

01. After the Lone Ranger saved the day and rode off into the sunset, the grateful citizens would ask, Who was that masked man? Invariably, someone would answer, I don’t know, but he left this behind. What did he leave behind?________________.

02. When the Beatles first came to the U.S. .In early 1964, we all watched them on The _______________ Show.

03. Get your kicks, __________________.’

04. ‘The story you are about to see is true. The names have been changed to ___________________.’

05. ‘In the jungle, the mighty jungle, ________________.’

06. After the Twist, The Mashed Potato, and the Watusi, we ‘danced’ under a stick that was lowered as low as we could go in a dancecalled the ‘_____________.’

07. Nestle’s makes the very best… _________ ______.’

08. Satchmo was America ‘s ‘Ambassador of Goodwill.’ Our parents shared this great jazz trumpet player with us. His name was _________________.

09. What takes a licking and keeps on ticking? _______________.

10. Red Skeleton’s hobo character was named __________________ and Red always ended his television show by saying, ‘Good

Night, and ‘________ ________.. ‘

11. Some Americans who protested the Vietnam War did so by burning their______________.

12. The cute little car with the engine in the back and the trunk in the front was called the VW. What other names did it go by? ____________ &_______________.

13. In 1971, singer Don MacLean sang a song about, ‘the day the music died.’ This was a tribute to ___________________.

14. We can remember the first satellite placed into orbit. The Russians did it. It was called ___________________.

15. One of the big fads of the late 50’s and 60’s was a large plastic ring that we twirled around our waist. It was called the __ ______________.

Answers:
01. The Lone Ranger left behind a silver bullet.
02. The Ed Sullivan Show
03. On Route 66
04. To protect the innocent.
05. The Lion Sleeps Tonight
06. The limbo
07. Chocolate
08. Louis Armstrong
09. The Timex watch
10. Freddy, The Freeloader and ‘Good Night and God Bless.’
11. Draft cards (Bras were also burned. Not flags, as some have guessed)
12. Beetle or Bug
13. Buddy Holly
14. Sputnik
15. Hoola-hoop

Send this to your ‘older’ friends, (Better known as Seniors.) It will drive them crazy! And also keep them busy and let them forget their aches and pains for a few minutes !!!

source::::baba mail site

natarajan

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் “….மகாகவியின் கவிநயம் !!!

earth

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே   தமிழ்மொழி  போல்
இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப்  பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்திடுதல்  நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை  செய்தல் வேண்டும்

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போ
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போ
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒரு சொற் கேளிர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்

source::::blog.dinamani.com

natarajan

 

” என் ஆசி உங்களுக்கு என்றும் உண்டு ” !!!

வடநாட்டைச் சேர்ந்த பெரிய தொழிலதிபர். பிரபலமானவர். அவர் தன் குடும்பத்தாருடன் ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தார். முன்பு ஸ்வாமிகள் வடநாட்டு யாத்திரை சென்றபோது ஸ்வாமிகளின் குழுவினருக்கு மிகவும் உதவியாக இருந்தவர். புன்னகையுடன் அந்தத் தொழிலதிபரைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஆசாரிய ஸ்வாமிகள்.

என்ன சொல்லப் போகிறார் என்பதை முன்கூட்டியே ஸ்வாமிகள் புரிந்திருப்பார் போலும்.

“இப்ப பெரிய தொகையை தர்ம காரியங்களுக்கு உதவப் போகிறேன். இனி வருடா வருடம் எங்கள் கம்பெனிகளின் வருமானத்தில் கொஞ்சம் பணத்தை தர்ம காரியங்களுக்கு உதவ முடிவுசெய்து இருக்கிறோம். அந்தப் பணத்தைத் தங்கள் இஷ்டப்படி தர்ம காரியங்களுக்குக் கொடுத்து விடுங்கள் ஸ்வாமி!” என்று பெரிய தொகையை செக்கில் எழுதிக் கொடுத்தார் தொழிலதிபர். அவரது மகனும் மனைவியும் “ஆமாம் ஸ்வாமி, நாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதி தர்மத்துக்குக் கொடுக்கணும்னு முடிவு செஞ்சு இருக்கோம். இதுக்கு ஸ்வாமிகளின் அநுக்கிரஹம் வேணும்” என்றார்கள்.

செக்கைப் பார்த்தார் ஸ்வாமிகள். மிகப் பெரிய தொகை குறிப்பிடப்பட்டு இருந்தது செக்கில். பிரமித்தார். சிலிர்த்தார். மகிழ்ந்தார். அந்தத் தொழிலதிபரின் மனம் ஜாதியைக் கடந்து மாநிலத்தைக் கடந்து விரிந்து இருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் குடும்பத்தின் மீது அருள் பார்வை செலுத்தினார். மௌனமாக ஸ்வாமிகளைத் தரிசித்தவண்ணம் இருந்தது அந்தக் குடும்பம்.

“உங்க தயாள குணத்தைக் கண்டு ரொம்ப சந்தோஷம். உங்க கம்பெனிகள் நன்னா இருக்கும். வருடாவருடம் லாபத்தில் ஒரு சிறு பகுதியை தர்ம காரியத்துக்குக் கொடுக்கப் போறேள். உங்க கம்பெனிகளின் லாபத்தில் சிறுபகுதி என்பது பெரிய தொகையாக இருக்கும். நான் சந்நியாசி. என் பொறுப்பில் இவ்வளவு பணம் இருக்க வேண்டாம். நீங்களே உங்கள் முன்னோர் பெயரில் ஒரு தர்மஸ்தாபனம் அமைத்து இந்தப் பணத்தையும் வருடா வருடம் லாபத்தில் சிறு பகுதியையும் அந்த தர்ம ஸ்தாபனத்தில் செலுத்துங்கள். அந்த தர்மஸ்தாபனம் மனிதநேயத்துடன் மக்களுக்கு உதவட்டும். நீங்களே ஒரு குழு அமைத்து அந்த தர்ம ஸ்தாபனத்தை நடத்துங்கள். என் ஆசி உங்களுக்கு என்றும் உண்டு” என்று சொல்லிக்கொண்டே அந்த செக்கைத் திரும்பக் கொடுத்தார் ஸ்வாமிகள்.

ஸ்வாமிகளின் செயலைக் கண்டு சிலிர்த்தார் தொழிலதிபர். முற்றும் துறந்த முனிவர் என்றால் இவர்தான் என்று எண்ணிய தொழிலதிபர் “ஸ்வாமி! தாங்கள் சொல்வது போல் தர்மஸ்தாபனம் அமைத்துச் செயல்படுகிறேன். முதல் காரியமாக தாங்கள் சொல்லும் திருப்பணியைச் செய்கிறேன். உத்தரவு வேணும் ஸ்வாமி!” என்று கேட்டார் தொழிலதிபர்.

சற்று நேரம் யோசனை செய்தார். சிதிலம் அடைந்த புராதனமான ஒரு கோயிலைச் சீரமைத்துக் கும்பாபிஷேகம் செய்யச் சொன்னார். அதைச் செய்ய ஒப்புக் கொண்டார் தொழிலதிபர்.

source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5979/kanchi-mahaswamigal-sri-rangavasan/#ixzz2nbX0plTP

இதுவும் ஒரு மேலாண்மைப் பாடமே!!!

தும்பா  ராக்கெட் ஏவுதளத்தில் விஞ்ஞானிகள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை ஓயாது உழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தத் திட்டத்தில் சுமார் 70 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.

kalam-friends-black

தங்கள் வேலைப்பளுவின் காரணத்தாலும், பாஸின் (திட்டத் தலைவரின்) நெருக்குதலாலும் கிட்டத்தட்ட எல்லா விஞ்ஞானிகளுமே மனத்தளவில் வெறுத்துப் போயிருந் தார்கள்.  ஆனாலும் “பாஸின்’ மீது கொண்டிருந்த விசுவாசம் நம்பிக்கையால் யாரும் வேலையை விட்டு வெளியே செல்லவில்லை.

ஒருநாள் காலை ஒரு விஞ்ஞானி, பாஸிடம் வந்து, “”சார்! நம் டவுனில் நடக்கும் கண்காட்சிக்கு மாலை 6 மணிக்கு என் குழந்தைகளை அழைத்துப் போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதனால் இன்று 5.30 க்கு நான் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவும்” என்றார்.
அவரும் “”சரி! நீங்கள் சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம்” என்று கூறிவிட்டார்.

அந்த விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட்டார். ஒரு சிறிய இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணியில் மூழ்கினார். தன்னை மறந்து வேலையில் இருந்து, தனது அன்றைய பணி நிறைவடையும் சூழ்நிலையில், கடிகாரத்தைப் பார்த்தால்  மணி 8.30. திடீரென, குழந்தைகளுக்கு அவர் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது. தனது பாஸைப் பார்க்கப் போனால், அவர் இல்லை!

பாஸிடம் அனுமதி வாங்கியிருந்தும் இப்படியாகிவிட்டதே என்று வருத்தம் கொண்டு, குழந்தைகளையும் இப்படி ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியோடு வீட்டினுள் நுழைந்தார்.  அவர் மனைவி மட்டும் ஒரு பத்திரிகையைப் படித்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தார். நிசப்தமான அந்த வேளையில் இவர் வாயைத் திறந்து எதுகேட்டாலும் அது பூமராங்காக திருப்பித் தாக்குவது போல் இவருக்குத் தோன்றியது.

இவரைப் பார்த்துவிட்ட மனைவி கேட்டாள்… “”என்ன காப்பி போடட்டுமா? அல்லது இரவு உணவே சாப்பிட்டு விடுகிறீர்களா? பசி எப்படியிருக்கிறது?”

இவர் சொன்னார்… “”காபி போட்டாயானால் எனக்குக் காப்பி கொடு. சரி; குழந்தைகள் எங்கே?”

“”உங்களுக்குத் தெரியாதா?” ஆச்சரியமாகக் கேட்டார் அவர் மனைவி. “”உங்கள் மேலாளர் 5.15 க்கு வீட்டுக்கு வந்தார். கண்காட்சிக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றாரே!” என்று வியப்புடன் பதிலளித்தார்.

அப்போதுதான் இவர் தன் பாஸிடம் கேட்டது நினைவுக்கு வந்தது. இவர் பாஸின் மனதை அறிந்தவராதலால் நடந்ததை ஒருவாறு யூகித்துக் கொண்டார்.

5 மணி வரை இவர் தன் வேலையில் மிக உன்னிப்பாக இருப்பதைக் கண்ட பாஸ், “இவர் இப்போதைக்கு சீட்டை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை’ என்று முடிவு செய்து, இவர் வேலையையும் தொந்தரவு செய்யாமல், அதே நேரம் இவர் apj_kalamகுழந்தைகளுக்குக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றி குழ்தைகளும் ஏமாற்றமடையாமல் இருக்க, தானே குழந்தைகளைக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அவர் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்ததில்லை! ஆனால் ஒரேயொரு முறை இப்படிச் செய்ததால், தன்னுடைய அன்பையும் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தினார்.

எனவேதான் தும்பாவில் உள்ள அந்த விஞ்ஞானிகள்  பல்வேறு மன உளைச்சல்களுக்கும் இடையில் அந்த பாஸின் தலைமையில் தொடர்ந்து வேலை செய்தனர்.

அந்த “பாஸ்’  நமது முன்னாள் ஜனாதிபதி அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்!

source:::::Dinamalar …Tamil Daily

natarajan

Laughter the Best Medicine …” I Say Sam Ting ” !!!

Walking through San Francisco ‘s Chinatown, a tourist from the Midwest was enjoying the artistry of all the Chinese restaurants, shops, signs and banners.

When he turned a corner and saw a building with the sign
‘Moishe Plotnik’s Laundry.’
‘Moishe Plotnik?’ he wondered. ‘How does that belong inChinatown?’
He walked into the shop and saw a fairly standard looking dry cleaner, although he could see that the proprietors were clearly aware of the uniqueness of the store name as there were baseball hats, T-shirts and coffee mugs emblazoned with the logo’Moishe Plotnik’s Chinese Laundry.’ The tourist selected a coffee cup as a conversation piece to take back to his office. Behind the counter was a smiling old Chinese gentleman who thanked him for his purchase.
The tourist asked, ‘Can you explain how this place got a name like ‘Moishe Plotnik’s Laundry?”
The old man answered, ‘Ah..Evleebody ask me dat. It name of owner.’
Looking around, the tourist asked, ‘Is he here now?’
‘It me, Me him!’ replied the old man.
‘Really? You’re Chinese.
How did you ever get a Jewish name like Moishe Plotnik?’
It simple’ said the old man. ‘Many, many year ago I come to this country. I, standing in line at ‘ Document Center of Immiglation.’
Man in front of me was man from Poland ..’
‘Lady at counter look at him and say to him, ‘What you name?’
He(Polish man)say to her, ‘Moishe Plotnik.’
Then she look at me and say, ‘What your name?’
I say,’Sam Ting.’

 

source:::::input from a friend of mine

natarajan

மகாகவி பாரதியாரின் சகோதரருடன் ஒரு சந்திப்பு !!!

1984ம் ஆண்டு.
“பாரதியார் பிறந்தநாள் வரப் போவுதே.. என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டார்கள் திருநெல்வேலி வானொலி நிலைய நண்பர்கள்.
நான் யோசித்தேன்.
“இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்யலாமே…’ என்று யோசனை கூறினார் ஒரு நண்பர்.
“வித்தியாசமா…ன்னா…?’
“பாரதியாரை நேரில் பார்த்தவர்கள், அவரோடு பழகியவர்கள், இப்படிப் பட்டவர்களை நேரிலே சந்தித்துப் பேசி… அதையெல்லாம் தொகுத்துக் கொடுக்கலாமே…!’
“நல்ல யோசனைதான். இருந்தாலும் பாரதியாரோடு பழகியவர்கள் இந்தக் காலத்திலே இன்னும் யார் இருக்கப் போகிறார்கள்?’
“என்ன சார் அப்படிச் சொல்லிபுட்டீங்க.. பாரதியாரின் தம்பி இருக்காரே… அவரைப் போய்ப் பார்க்கலாமே…!’ என்றார் டி.கே.ஆர். (நண்பர் தெ.கு.இராமச்சந்திரன் அப்போது எங்களோடு வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொணிடருந்தார். அவரை எல்லோரும் செல்லமாக டி.கே.ஆர். என்றுதான் அழைப்பது வழக்கம்)
“பாரதியாரின் தம்பியா?’ என்றேன் ஆச்சரியத்தோடு.
“ஆமாம். சி. விஸ்வநாத ஐயர்!’ என்றார் டிகேஆர்.
“எங்கே இருக்கார்?’
“மானாமதுரையிலே இருக்கார். அந்த ஊர் பள்ளிக் கூடத்துலே தலைமை ஆசிரியரா ரொம்ப காலம் இருந்தார். இப்ப ரிட்டையர் ஆகி அந்த ஊரிலேயே தான் இருக்கார்.’
“இப்ப அவருக்கு வயது என்ன இருக்கும்?’
“அது… வந்து 88 க்கும் மேலே இருக்கும் இருந்தாலும் இந்த வயசுலேயும் நல்லா சுறுசுறுப்பாக இருக்கார்.’
இவ்வளவு விவரங்களும் தெரிந்து கொண்ட பிறகு சும்மா இருக்க முடியுமா?
அலுவலகத்தில் முறையான சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு ஒலிப்பதிவுக் கருவிகளோடு நானும் நண்பர்களும் புறப்பட்டோம்.
மானாமதுரையில் எதிரே வந்த ஒருவரை நிறுத்தி வழிகேட்டோம்.
“அதோ.. அந்தப் பாலத்தை தாண்டி அடுத்த பக்கம் போங்க… வாசலிலே கம்பி போட்டிருக்கும். அந்த வீடுதான்.’
வீட்டுக்கு முன்னால் எங்கள் கார் போய் நின்றது.
வாசல்புறம் நின்றிருந்த ஒருவரிடம் நாங்க வந்திருக்கின்ற விவரத்தைச் சொன்னோம்.
உடனே அவர் எங்களை அழைத்துக் கொண்டு மரப்படிகளின் வழியாக மாடிக்குச் சென்றார்.
அங்கே அந்தப் பெரியவரை – மகாகவி பாரதியின் சகோதரரைச் சந்தித்தோம்.
அன்போடு எங்களை வரவேற்று அமரச் செய்தார். உபசரித்தார். உயரே சுவரில் பழங்காலத்துப் படங்கள் நிறைய மாட்டப்பட்டிருந்தன. அந்தக் காலத்துப் பாரதியின் படங்களை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.
கொஞ்ச நேரத்தில் பேட்டி தொடங்கியது.
வெளியுலகத்துக்குத் தெரியாத நிறைய விவரங்களை அவர் சொன்னார்.
“எங்க அப்பா சின்னசாமி ஐயர்… அவருக்கு இரண்டு மனைவிகள்…’
முதல் மனைவி லட்சுமி அம்மா… அந்த லட்சுமி அம்மாளின் மகன்தான் பாரதி.
பாரதிக்கும் அஞ்சு வயசு ஆவதற்குள்ளே தாயார் இறந்துவிட்டார்.
அதுக்கப்புறம் இரண்டரை வருஷம் கழிச்சி சின்னசாமி ஐயர் வள்ளியம்மாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். வள்ளியம்மாளின் பிள்ளை தான் நான். அதாவது எனக்கும் பாரதிக்கும் அப்பா ஒருவர் தான் அம்மாதான் வேறு.
“உங்களுக்கு வேறு சகோதரர்கள் சகோதரிகள்…’
“எனக்கு மூத்த சகோதரி ஒருத்தர் உண்டு. லட்சுமின்னு பேரு.. எட்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க இறந்து போயிட்டாங்க’
“பாரதி கூட நீங்க இருந்த நாள்கள்… இப்ப உங்களாலே ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?’
“பாரதி சென்னையிலே இருந்தார் இல்லையா…?’
“திருவல்லிக்கேணியிலே தானே…’
“அதுக்கும் முன்னாடி மயிலாப்பூரிலே இருந்தார். சித்திரைக்குளம் கீழவீதியும் தெற்குவீதியும் சேர்ற இடம். அங்கே இருந்து தெற்கே போற ஒரு சின்ன தெரு. அங்கே ஒரு பெரிய வீட்டுலே நாங்க குடியிருந்தோம்.
அப்ப நான் மயிலாப்பூர் பி.எஸ்.ஹைஸ்கூல்லே இரண்டாவது பாரம் (ஏழாம் வகுப்பு) படிச்சிக்கிட்டிருந்தேன். அதுக்குப்புறம்தான் திருவல்லிக்கேணியில் பெரிய தெருவுக்குப் போனோம். (வீரராகவ முதலி தெரு)
அதுக்கப்புறம் நல்லதம்பி முதலி தெருவிலேயும் இருந்தோம். அந்தச் சமயம் நான் திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூல்லே படிச்சேன்.
1918க்கு அப்புறம் அவர் கடையத்துலேயும் எட்டயபுரத்திலேயும் மாறி மாறி இருந்தார். அப்பல்லாம் நானும் அவர் கூடவே இருந்தேன்.’
“பாரதியார் உங்களைப் பத்தி பேசினது எழுதினது ஏதாவது ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?’
சிறு பிள்ளைகளைப் போல ஆர்வத்தோடு அவரை விசாரித்தோம்.
“ஞானரதம்-ங்கற நூல்லே மண்ணுலகம்-ன்னு ஒரு பகுதி. அதுல எழுதியிருக்கிறதெல்லாம். நாங்க நல்லதம்பி முதலி தெரு வீட்டுலே தங்கியருந்தப்போ கிடைச்ச அனுபவங்கள். அதிலே அவர் என்னைப் பத்தி எழுதியிருக்கிறதைப் பாருங்க!’ என்று சொல்லி ஒரு வாரப் பத்திரிகையை எடுத்து எங்களிடம் கொடுத்தார். அதில் அந்தப் பகுதியை எடுத்துப் போட்டிருந்தார்கள். அதில் பாரதியார் எழுதியிருக்கிற வாசகங்கள் இவை:
“22ம் தேதி தம்பிக்குப் பாடசாலைச் சம்பளம் கொடுக்க வேண்டிய நாள். நான் காரியாலயத்திலிருந்து பணம் கொண்டு வந்து வைக்க மறந்து விட்டேன். நான் சுதேசிய விஷயத்தில் பாடுபடுவதில் பொருட்டாக என்னை எப்பொழுதும் கவனித்து வரும்படியாக ராஜாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் என் தம்பியிடம் செய்த சம்பாஷணையில் “உம்முடைய அண்ணனது சிநேகிதரான இன்னவரை ராஜாங்கத்தார் பிடிக்கப் போகிறார்கள்’ என்ற மங்கள சமாசாரம் சொல்லிவிட்டுப் போனதாகத் தம்பி சொன்னார்.’
“பாரதியார் பாடல்கள் இயற்றுவது மட்டுமல்லாமல் அவற்றைப் பாடவும் செய்வாராமே?’
“1920ல் நாங்க திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் இருந்தப்ப வ.வே.சு. ஐயர் ஒரு நாள் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் பாரதி “அண்ணா, இன்று ஒரு பாட்டு இயற்றியிருக்கிறேன் கேட்கிறீர்களா?”ன்னார்.
“ம்… சொல்லுங்க!’ன்னார் வ.வே.சு. ஐயர்.
உடனே பாரதி பாட ஆரம்பித்தார்.
காயிலே புளிப்பதென்ன?
கண்ணபெருமானே – நீ
கனியிலே இனிப்பதென்ன
கண்ணபெருமானே
அந்தச் சமயம் அவர் அதைக் கம்பீரமா பாடறப்போ நானும்கூட இருந்துகேட்டேன். மறக்க முடியாத அனுபவம்
“பாரதி நூற்றாண்டு விழா ரஷ்யாவுலே கொண்டாடப் போறாங்களாமே கேள்விப்பட்டீங்களா?’
“ஆமாம்… அதுலே வந்து கலந்துக்கணும்னு அந்த அரசாங்கமே என்னை அழைச்சிருக்கு.’
“போக போறீங்களா?’
“மனசுல ஆசை இருக்கு.. உடம்புல பலம் இல்லை’ என்று சொல்லி லேசாக சிரிக்கிறார்.
“அப்படின்னா…?’
“நான் வர்றதுக்கு என் உடம்பு இடம் கொடுக்காதுன்னு அவங்ககிட்டே சொல்லிட்டேன்’
நீண்ட நேரம் நிறைய விஷயங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட்டோம். தள்ளாத வயதிலும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
அதற்கு அடுத்த வருடமே நான் சென்னை வானொலி நிலையத்துக்கு மாற்றலாகி வந்துவிட்டேன்.
இங்கு வந்த பிறகு ஒருநாள் நண்பர் ஒருவரிடம் நான் பாரதியின் தம்பியை பேட்டி கண்ட விஷயத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தேன்.
“சந்தர்ப்பம் கிடைச்சா, இன்னொரு முறை மானாமதுரைக்கு போய் அந்தப் பெரியவரைப் பார்த்துட்டு வரலாம்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்!’ என்றேன்.
அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “உனக்கு விஷயம் தெரியாதா?’ என்றார்.
“என்ன?’ என்றேன்.
“அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் காலமாகி விட்டதாக உறவினர்கள் சிலர் மூலமாகக் கேள்விப்பட்டேன்’
நான் ஒரு நிமிடம் மௌனமாகி… பிறகு யோசித்தேன்.
“எத்தனை பெரியவர்கள் இந்த உலகத்தில் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் வாழ்ந்துவிட்டுப் போய் விடுகிறார்கள்.’

– தென்கச்சி கோ. சுவாமிநாதன்  in “KALAIMAGAL ”  TAMIL MONTHLY 

Natarajan

பாரதி: வெடித்து அணைந்த விண்மீன்…

சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம். தனது குறுகிய வாழ்நாளுக்குள் எவ்வளவு செய்திருக்கிறார் பாரதி. கவிதைகள் மட்டும்தான் அவரது சாதனை என்று இன்றைய தலைமுறையினர் பலர் நினைக்கக்கூடும். கிட்டத்தட்ட, கவிதைகளுக்கு நிகரான சாதனையை பாரதி உரைநடையிலும் செய்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், அவருடைய இதழியல் பணி மகத்தான வீச்சுடையதாகவும் இருந்திருக்கிறது. சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா போன்றவை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பாரதி பணியாற்றியிருக்கிறார். வேறு சில பத்திரிகைகளில் பங்களிப்பும் செய்திருக்கிறார். தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘இந்தியா’ இதழில், தென்னிந்தியப் பத்திரிகைகளிலேயே முதன்முறையாகக் கருத்துச்சித்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிக்கு உண்டு. சமூகத்துடன் ஊடாடுவதற்கு இதழியலையும் பாரதி மிகவும் திறமையாகக் கையாண்டார். அரசாங்கத்தின் தடை, பொருளாதாரக் காரணங்கள் போன்றவற்றால் ஒவ்வொரு பத்திரிகையும் முடக்கப்பட்டாலும் உடனடியாக வேறொரு பத்திரிகையில் எப்படியும் கால்பதித்து விடுவார். அந்த அளவுக்கு அவரது இதழியல் தாகம் தணியாததாக இருந்திருக்கிறது. அதனால்தான், பத்திரிகை தொடங்குவது குறித்துத் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘சொத்தை விற்றேனும்’ பணம் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்.

கவிதைகள், உரைநடை, இதழியல் எழுத்துக்கள் என்று பாரதியை எழுத்து சார்ந்த மனிதராக மட்டுமே பார்த்துவிட முடியாது. தான் வாழ்ந்த காலத்தில் மகத்தான புரட்சியாளராக பாரதி இருந்திருக்கிறார். இந்து மதத்தில் ஈடுபாடுடையவராக இருந்தாலும், சாதிப் பிரிவினைகளையும் தீண்டாமைக் கொடுமையையும் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புணர்வைத் தனது வாழ்க்கை முறையிலும் செயல்படுத்திக் காட்டினார். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பாகுபாடு பார்க்காமல் பழகுதல், அவர்கள் வீட்டில் உணவருந்துதல் போன்ற பழக்கங்களைத் தான் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், பிறரையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். இந்தச் செய்கைகளெல்லாம் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதேபோல், மத வேற்றுமையும் பாராதவர் பாரதி. அவருக்கு இஸ்லாமிய, கிறித்தவ நண்பர்கள் உண்டு. 1920-ல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று பொட்டல் புதூரில் அங்குள்ள இஸ்லாமிய மக்களிடையே இஸ்லாம் மார்க்கத்தின் பெருமையைப் பற்றி பாரதி பேசியதோடல்லாமல், தான் எழுதிய ‘அல்லா… அல்லா… அல்லா!’ என்ற பாடலையும் பாடிக்காட்டியிருக்கிறார்.

எப்பாடுபட்டாவது இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்று தவிப்புடன் போராடியவர்களில் பாரதிக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. இந்தத் தவிப்பின் பிரதிபலிப்புதான் மிதவாதம், தீவிரப்போக்கு ஆகிய இரு வழிகளில் தீவிரப்போக்கை பாரதி தேர்ந்தெடுத்தது. விடுதலைபெற்ற இந்தியாவை, தீண்டாமை போன்ற பிரச்சினைகள் ஒழிந்த இந்தியாவை வாழ்த்திப் பாடும் முதல் பாடகனாக, தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய பெருங்கனவு. நாடு விடுதலை பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டாலும்கூட, ஏதோ ஒரு முன்னெச்சரிக்கை உணர்வால் மேற்குறிப்பிட்ட லட்சிய பாரதத்தை வரவேற்று முன்கூட்டியே பாடல்களைப் பாடிவிட்டுப் போயிருக்கிறார்.

பாரதியை நம் நாடு உரிய வகையில் கெளரவித்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் உண்மை. தேசப்பற்றையும் சுதேசி உணர்வையும் வடிவமைத்ததில் தேசத்தின் எந்தத் தலைவருக்கும் நிகராகப் பங்குவகித்த பாரதி, இறுதியில் தமிழகத்துக்கு மட்டுமே உரியவராகப் பார்க்கப்பட்டவரானார். தமிழகத்தால் மட்டுமே தற்போது கொண்டாடப்படுகிறார். தாகூரின் புகழை இந்திய அளவில் பரப்பவும் நிலைநாட்டவும் இந்திய அரசும் மேற்கு வங்க அரசும் எவ்வளவோ திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. இதற்கெல்லாம் தாகூர் தகுதி வாய்ந்தவர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், தாகூருக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய பாரதி போன்றவர்களும் கெளரவப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

சமீபத்தில் பாரதியின் படம் பொறித்த நாணயம் வெளியிடப்பட வேண்டும் என்று எழுந்த சிறிய கோரிக்கையை, ‘பொருத்தமான காலம் இதுவல்ல’ என்று கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஒரு நாணயத்துக்கே பாரதிக்கு இந்தப் பாடு! இந்தப் போக்கு இந்திய அரசுக்கு அழகல்ல. தேசத் தலைவர்கள், தேச உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமைகள் போன்றோர் விஷயங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து கவனம் கொடுக்கப்பட்டு மற்றவர்கள் நிராகரிக்கப்படுவது முறையல்ல.

‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்றார் பாரதி. அப்படி உயிர்த்துடிப்பு கொண்ட ஒரு சொல்லாகத் தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவர். அந்தச் சொல்லின் பெயர் ‘உத்வேகம்’, 100 ஆண்டுகள் கடந்தும் ஒளிவீசிக்கொண்டிருக்கும் உத்வேகம் அது.

source::::The Hindu…Tamil… Editorial Tribute to  Subramania Bharathi  on his Birthday today…11 dec.

 

“Big Ben” …Well Known Name …Not Known Facts !!!

 

big-benIf you’ve ever been to London, or even seen a picture of London, you’ve probably seen the giant clock tower at the corner of the Palace of Westminster. This tower is one of London’s major icons, ranking right up there with red double-decker buses, the London Eye, and Platform 9 ¾.

Contrary to popular belief, the clock tower itself is not named “Big Ben”.  Rather, it is named “Elizabeth Tower”, after Queen Elizabeth II; named such during her Diamond Jubilee (the 2012 60th anniversary of her accession to the throne).  Before that, it was just called “Clock Tower”. So why is it so often called “Big Ben”?  That is due to the great bell inside the tower that chimes the hour out and goes by that name.  Over time this has morphed into many calling the clock tower itself that even today, despite the recent, very public, name change.

So how did “Big Ben”- the great bell- get its name? People seemed to be in the habit of nicknaming giant bells and Big Ben was one of the biggest in the world and the largest in the British Isles at the time of its casting, so certainly name-worthy. The origin of Big Ben’s name is probably rooted in Sir Benjamin Hall. Hall was reportedly a large man (6 ft. 4 in. or 1.93 m, with a girth to match) and was the first Commissioner of Works, affectionately known as “Big Ben.”

On the side of the great bell there was also supposedly the inscription “Sir Benjamin Hall MP Chief Commissioner of Works” in his honor, so the workers and others took to calling the bell “Big Ben”.

If you’re wondering why that text is not inscribed there anymore (if it ever truly was), it’s because the current Big Ben is not the original. The original bell actually cracked before the clock itself was even installed in the tower (more on this later).  As to why the name supposedly was inscribed on the first and not the second bell, the reason often given is that Sir Hall was no longer the Chief Commissioner when the second bell was cast.  In addition, different founders were used to cast the second bell, so they may not have felt inclined to put the inscription on.

As there is little documented evidence on the origin of the name “Big Ben”, we can’t say for 100% certainty that it was named after Sir Benjamin Hall.  Another possibility that has been proposed is that it was named after Benjamin Caunt, a very popular heavyweight boxing champion in the 1850s, who was also nicknamed “Big Ben”.

Yet another popular theory is that it was named in 1857 during a sitting of the House of Commons. At some point someone, tired of the long meeting over the naming of the great bell, just shouted “Why not call it Big Ben?” as a joke while Sir Benjamin Hall was talking.  However, if such a thing actually happened, there should be Parliament records of this, but there is not. Thus, it’s thought the original Hall inscription story is more likely; though in both that story and the Parliament story, it was named after Sir Hall who was integrally connected with the building of the tower, clock, and bells.

As to why the clock tower was built in the first place, in 1834, a fire destroyed the Palace of Westminster—then the seat of the British government—leaving only a few parts of the palace standing. The next year, with reconstruction well on its way, Parliament opted to include a clock tower in the redesign. It wasn’t the first clock tower that the parliament buildings had seen. The first one was built between 1288 and 1290 and contained a bell known as “Great Edward” or “Great Tom.” A second tower, containing the first public chiming clock in England, replaced the first in 1367. In 1707, that tower was demolished because it had fallen into disrepair. Instead of replacing the tower with another, a sundial was put up in its place.

After the fire, Sir Charles Barry’s design for the new Houses of Parliament was chosen out of 97 designs submitted for consideration- his design didn’t originally include a clock tower. He added one in 1836 and later drew up a detailed design with the help of Augustus Pugin. Pugin was never recognized by Barry for supplying the design for the clock, despite Pugin saying, “I never worked so hard in my life as for Mr. Barry for tomorrow I render all the designs for finishing his bell tower & it is beautiful…”

The tower was Pugin’s last design. In 1852, before work on the tower was completed, Pugin suffered a breakdown. He was unable to speak coherently or recognize his family, and died several months later despite attempted therapy. He was only forty years old and never knew how famous his last design would become.

Construction on the tower began September 28, 1843. It was built from the inside out so that scaffolding couldn’t be seen by passers-by.

Besides Pugin’s work, Sir Charles Barry also sought additional help when it came to the actual clock mechanism itself. He chose Benjamin Lewis Vuillamy, who was the Queen’s clockmaker, to work on a design, though other clockmakers were also brought in to give their advice and opinions. In 1846, a competition was held to see who would build the clock, but some amazingly tough standards- for the age- were set by the Astronomer Royal, Sir George Airy. Airy stated that the clock needed to strike the hour within one second’s accuracy, and the performance of the clock was to be telegraphed to the Greenwich Observatory twice daily.  This harsh criteria caused seven years of delay.

When Edward John Dent was finally appointed to build the clock in 1852, he found that the tower was too small for the initial clock design. This caused further delays and alterations had to be made to the tune of £100 (adjusted for inflation by average earnings, that’s about £69,000 today). To top it all off, after finally getting construction underway, Dent died the next year and his stepson had to take over. The clock was finally finished in 1854, costing a total of £2500 to make.

The clock’s delay didn’t end up mattering very much, as the clock tower itself had suffered delays as well. The clock wasn’t actually installed until 1859. During the two-year wait, modifications were made to meet the Astronomer Royal’s standards. For instance, Edmund Beckett Denison invented a “Double Three-Legged Gravity Escapement” for the clock which made sure that the pendulum wasn’t affected by wind or other external factors putting pressure on the clock’s hands. Also known as the Grimthorpe Escapement, this revolutionary invention is still used on many clocks throughout the world today.

When the clock was finally installed in April 1859, it didn’t work. The original cast iron hands were too heavy to keep time and had to be replaced by lighter copper hands. At last, on May 31, 1859, the clock began successfully keeping time. But the tower wasn’t yet completed—it also needed a bell.

Like the rest of the features of the tower, the great bell also suffered delays. The first great bell was cast in 1856 and hung in the New Palace Yard where it was tested every day. On October 17, 1857, as mentioned previously, a crack over a metre long appeared on the bell. Fingers were pointed, but no one fessed up. Because the original bell casters—the Warners—asked for too much to replace the bell, the Whitechapel Foundry got the job for the replacement. The second bell weighed 2.5 tonnes less than the first (13.5 tons instead of 16), but it was still so large that it took thirty hours to winch it up to the belfry in the tower.

At last, on July 11, 1859, Big Ben rang out for the first time. Unfortunately, in September of that year, a crack appeared in the bell again. This time supposedly because the hammer used to strike it was approximately two times the maximum weight the original bell founder specified for the bell.  This crack caused the great bell to remain silent for a few years. However, in 1863, Airy came up with a solution: turn the bell so that the hammer struck a different spot, make the hammer lighter, and cut a small square in the bell so that the crack wouldn’t spread. His solution worked, and to this day, the same cracked “Big Ben” sits in the belfry, ringing away on the hour.

source:::::today i foundout.com

natarajan

” Sri Hari …Sri Hari… Sri Hari ” ….

 

Source: In the Presence of the Divine
Narratives of Experiences with Maha Periyaval Volume 1
Translated by: Sujatha Vijayaraghavan

Every day when Sri Maha Periyaval got up in the early hours of the morning he would chant, “ Sri Hari, Sri Hari !”

A college student noticed this. Periyaval had sacred ash on his forehead, rudraksa around his neck, which were signs of Saivism. But here he was chanting the name of Sri Hari. What is this?

The boy questioned Maha Periyaval himself. A vaidik who was nearby scolded the boy. “You must not question Periyaval in this manner.”

Maha Periyaval spoke with a laugh. “ Don’t scold the boy. Let him voice his doubt. I will answer him.”

The boy repeated his question. Sri Maha Periyaval gave the boy an explanation. “ Creation, preservation and destruction are the three-fold tasks. Visnu is the preserver. From the moment we wake up, till we go to bed we perform a number of tasks. We must pray to Hari, Visnu, to be with us so that all work done during the day is successful and well-done. Bhagavan Krishna is called an ‘ Idayya’, which means the one who does the job in between creation and destruction. In the evening it is our tradition to offer prayers to Paramesvara.”

The boy was very satisfied.

 
Shared by சந்திரமௌளி

பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மகா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது, ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மகா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.

ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிட்சை அளித்து வழிபடுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார், அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக் கொண்டனர்.

மறு நாள் காலை. ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார். என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.

அவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், ”சாஸ்திரிகளே… நீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து முத்திராதிகாரிதானே? ஒரு நாளைக்கி உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ? வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்!” என்றார்.

உடனே என் தந்தையார், ”நானும் அத கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக் கிழமையே வெச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும்?” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.
காரியஸ்தர் சிரித்தபடியே, ”சொல்றேன்… மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர்ற செலவு. எல்லாம் முடிஞ்சு, ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சே… உங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை)… அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவா செலவு புடிக்கும்! உங்க ஊர்ல வசூல் ஆயிடுமோல்லியோ?” என்று கேட்டார்.

சற்றும் தயங்காமல், ”பேஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், ”அது சரி… மத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் கேட்டார்.
”ஐநூறுலேர்ந்து ஆயிரம் வரை பண்றா” என்றார் காரியஸ்தர். தகப்பனார் யோசனையில் ஆழ்ந்தார். சற்று நேரத்தில் ஆச்சார்யாளை தரிசித்த நாங்கள், அவரை நமஸ்கரித்து எழுந்தோம். என் தந்தையார் பிக்ஷா வந்தன விஷயத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.

”பேஷா நடக்கட்டுமே” என்று அனுக்கிரகித்த ஸ்வாமிகள், ”ஏகதேசம் (தனியாக) பண்றாப்ல நம்மூர்ல நிறைய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காளோ?” என்று வினவினார்.

உடனே என் தகப்பனார் குரலை தாழ்த்தி, ”மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரகிக்கணும்” என வேண்டினார். புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.

ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் 30 வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. 400 ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும்
ஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக, மொத்த வசூல் 500 ரூபாய்! பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.

இனி, பெரியவாளின் பாத சமர்ப்பணைக் குத்தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்’ என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை. அன்றிரவு அவர், சரியாகவே தூங்கவில்லை.
வெள்ளிக்கிழமை! ஆச்சார்யாளைத் தரிசிக்கச் சென்றோம். சத்திரத்து வாயிலில்- கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். கூட்டம் அலை மோதியது. நாங்கள், சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக… ஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கை கூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. ‘பாத சமர்ப்பணை ஐநூறுக்கு என்ன பண்ணப் போகிறோம்?!’ என்கிற கவலை அவருக்கு.
திடீரென்று ஒரு கருணைக் குரல்: ”சந்தானம்! கிட்ட வாயேன்… ஏன், அங்கேயே நின்னுண்டிருக்கே?” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.
”என்ன சந்தானம்… நேத்திக்கு நீ கண்ணுல படவே இல்லியே! ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியோ?” என்று வினவினார் ஸ்வாமிகள்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. ஞாயித்துக் கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷா வந்தனம் பண்றமோல்லியோ… அது விஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், ”அது சரி சந்தானம்… லௌகிகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ?!” என சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத் தயங்கினார் என் தகப்பனார்.

அவர் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்… ஸ்வாமிகள் எதையோ புரிந்து கொண்டவர் போல, ”ஒண்ணும் கவலைப்படாதே! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கறபடியே நடக்கும்!” என வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார்.

திடீரென, ”ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நெறய ஜலம் போறதோ… தெரியுமோ ஒனக்கு?” என்று கேட்டார். ‘காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார்?’ என்று அனைவரும் குழம்பினர்.

”போயிண்டிருக்கு பெரியவா” என்றார் தகப்பனார். பெரியவா விடவில்லை: ”அது சரி! நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே?” ”ஒரு வாரம் முன்னாடி பெரியவா!”- என் தகப்பனார் பதில் சொன்னார். ”அதிருக்கட்டும்… இப்ப ஜலம் போயிண்டிருக்கோ… தெரியுமோ?” – இது பெரியவா. உடனே அருகிலிருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, ”இன்னிக்குக் காத்தால நான் காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறது பெரியவா” என்றார்.

ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை. ”சுமாரா போறதுன்னா… புரியலியே! அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியானு எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, ”சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளக்கி விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதானு பாத்துண்டு வந்து சொல்லு!” என்று கூறிவிட்டு, ‘விசுக்’கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்!

‘தான் காவிரியில் ஸ்நானம் பண்ணிவிட்டு வருவதற் காகத்தான், இவ்வளவு விவரங்களையும் பெரியவா கேட்கிறார் போலும்’ என்று எண்ணியபடியே ஊர் திரும்பினோம்.
சனிக்கிழமை! பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும் தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: ”நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்லதான் ஜலம் போறது! பெரியவாகிட்ட போய் சொல்லணும்.”
தொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார் என் தந்தையார். திடீரென கரையிலிருந்து, ”சாஸ்திரிகளே! கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ… புண்ணியமுண்டு!” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர், ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!

சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தட்சணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.

அவர் சொல்ல ஆரம்பித்தார்: ”எனக்கும் பூர்வீகம் மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர்தான். அப்பா வழி தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருத்துவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்கே ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட் டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திரமௌலீஸ்வர ஸ்வாமிதான் எங்க குலதெய்வம். ‘நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா’னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்குக் கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி!” என்றவர், ”ஆமா சாஸ்திரிகளே! ரயிலை விட்டு எறங்கி வர்றச்சே பார்த்தேன். நிறையப் பேர் மடிசாரும் பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளே… இங்கே என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

ஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம் விவரித் தார். அவருக்கு பரம சந்தோஷம்.

”கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்மூர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்ப்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக் கோங்கோ” என்ற படி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் 500 ரூபாய்!

”நான் போயிட்டு வரேன் சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், ”ஒங்க நாமதேயம் (பெயர்)?” என்று கேட்டார்.
அவர் சொன்ன பதில்: ”சந்திரமௌலீ!”
இருவரும் பிரமித்து நின்றோம்.

பின்னர், நேராக சத்திரத்துக்குச் சென்றோம். அங்கே பெரியவா இல்லை. கோவிந்தபுரம் போதேந்திராள் மடத்துக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.

என் தகப்பனார் மடத்துக் காரியஸ்தரிடம் சென்று, ”பெரியவா, காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதானு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், ”பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளே” என முத்தாய்ப்பு வைத்தார். எங்களின் பிரமிப்பு அதிகரித்தது!

ஞாயிற்றுக்கிழமை. பிக்ஷாவந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்கையாக அந்த 500 ரூபாயை வைத்து சமர்ப்பித்தார்.

பழத் தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, ”என்ன சந்தானம்! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ” என்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்

source::::periva.proboards.com

natarajan
Read more: http://www.periva.proboards.com/thread/230/incident-aduthurai#ixzz2mx4OtOCy

Read more: http://www.periva.proboards.com/thread/879/hari-morning?ixzz2mTdLEecc=undefined#ixzz2mx3C8yEk