Message for the Day… ” We Need Extreme Patience and Enormous Capacity to Forget and Forgive …”

Sathya Sai Baba

For acquiring selfless love, the quality of kshama or forbearance is a vital necessity. (kshama is a word rich in meaning. Besides forbearance, it also implies extreme patience and an enormous capacity to forget as also forgive). Every individual must cultivate this noble quality. Kshama is not achieved by reading books or learnt from an instructor. Nor can it be received as a gift from someone else. This prime virtue of kshama can be acquired solely by self-effort, by facing squarely diverse problems and difficulties of various sorts, by going through anxieties and suffering as well as sorrow. In the absence ofkshama, man becomes susceptible to all kinds of evil tendencies. Hatred and jealousy easily take root in a person lacking this virtue. Divinity is merely the combined manifestation of prema (love) andkshama.

” என்னால் பேச முடியுமா …எழுதுவது வேறு ..பேசுவது வேறு….”

எத்தனையோ விஷயங்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையில் – பத்திரிகைகளில் பணி புரியும்போதும், சொற்பொழிவு துறைக்கு வந்த பிறகும் மிகவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் நடந்திருக்கின்றன… நடந்து வருகின்றன… எல்லாம் நம்மையும் தாண்டிய ஒரு சக்தியின் அருள்தான்!

தெய்வமாகட்டும்; மகான் ஆகட்டும். நமக்கு ஒரு அனுக்ரஹம் இருந்தால்தான், சில நல்லதுகளைப் பண்ண விடும். இல்லாவிட்டால், நாம்பாட்டுக்கு ஏதோ ஒரு வேலையைப் பண்ணிக் கொண்டிருப்போம் – எதைப் பற்றியும் சிந்திக்காமல்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உத்தியோகம்.

கணக்கு எழுதிக் கொண்டிருப்போம். கம்ப்யூட்டர் தட்டிக் கொண்டிருப்போம். ஆட்களை மேய்த்துக் கொண்டிருப்போம். இல்லை நம்மை யாராவது மேய்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், பகவானுக்கே சேவை செய்வது எப்பேர்ப்பட்ட ஒரு உத்தியோகம்.

பகவான் பேரையே சொல்லிக் கொண்டு வாழ்வது, பிழைப்பு நடத்துவது எப்பேர்ப்பட்ட உத்தமமான பணி..

விகடனிலும், திரிசக்தியிலும் சில காலம் இது எனக்கு வாய்த்தது. அதைத் தொடர்ந்து சொற்பொழிவு துறையில்…

திடீரென்று பழைய சம்பவம் ஒன்று என் மனதில் ஏதோ ஒரு ஃப்ளாஷ் பேக் போல் தோன்றும். என் வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை மீண்டும் அசை போட்டால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். அப்படி நிறைய இருக்கு.

‘எப்படியும் இந்த விஷயத்தை இன்று இரவு பதிவு செய்து விட வேண்டும்’ என்று வெளியில் எங்கோ ஒரு ஷூட்டிங்கிலோ, சபாவிலோ இருக்கும்போது தீர்மானம் செய்வேன். வீட்டுக்கு வந்ததும், ஒரு ஆகாரத்தை உள்ளே தள்ளி விட்டு, முகநூல் மற்றும் ஜிமெயிலை கொஞ்ச நேரம் மேய்ந்து விட்டு, ஒரு சில தொடர்களுக்கும், உபன்யாசத்துக்கும் தகவல்களை சேகரித்து வைத்து விட்டுப் படுக்கப் போய் விடுவேன்.

இதை சோம்பேறித்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். 24 மணி நேரத்தில் என்னால் பலதுகளை பண்ண முடியவில்லை.

இருந்தாலும், அவ்வப்போது சில வேளைகளில் பதிவிடுகிறேன்.

அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இன்று மதியம் பெங்களூர் நண்பரும் மகா பெரியவா பக்தருமான திரு கார்த்தி நாகரத்தினம் அவர்கள் எனக்கு நினைவுபடுத்தினார்.

நான் கிட்டத்தட்ட மறந்து விட்டேன். அவர் சொன்ன பிறகுதான் எனக்கு அப்படியே நினைவுக்கு வந்தது.

எப்படி நினைவுபடுத்தினார் தெரியுமா?

மகா பெரியவா சொன்ன பொன்னான ஒரு செய்தியை எனக்கு இன்பாக்ஸில் மெஸேஜ் பண்ணி விட்டு, ‘அண்ணா… நினைவிருக்கா… 2012 அக்டோபர்ல பெங்களூர் வந்தேள்… அப்ப, இந்த உபன்யாசத் துறைக்கு எப்படி வந்தேள்னு சொன்னேளே… இப்ப நான் உங்களுக்கு அனுச்சிருக்கற இந்த பெரியவா வாக்கியத்தையும் படிச்சுப் பாருங்கோ… பெரியவா கருணை புரியும்’ என்றார்.

இத்தகைய ஜனங்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுக்கு விலை இல்லை. ஆத்மார்த்தம் மட்டுமே தெரிகிறது.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

கார்த்தி எனக்கு அனுப்பிய மகா பெரியவா திருவாக்கை இங்கே அப்படியே போட்டிருக்கிறேன். இதைப் படித்து விட்டு, அதன் பின் தொடருங்கள்…

…………………………

“அநுஷ்டானமில்லாதபோது இந்திரியம் ஓடுகிறபடி ஓடவேண்டுமென்று தோன்றுகிறது. ‘ஜனங்கள் இப்படிப்பட்ட சரக்குதான் கேட்கிறார்கள்’ என்று அவர்கள் தலையில் பழியைப் போட்டுவிட்டு, கன்னா பின்னாப் பாட்டுப் பாடுகிறார்கள், புலன் வெறியைத் தூண்டிவிடுகிற ரீதியிலேயே எழுதுகிறார்கள், ஸினிமா எடுக்கிறார்கள், சித்திரம் போடுகிறார்கள். ஜனங்களும் அவர்கள் தலையில் பழியைத் திருப்பிப் போட்டு அவர்கள் இப்படிப்பட்ட சரக்குகளைத்தான் தருவதால் தாங்கள் அதையே எடுத்துக் கொள்ளும்படி இருக்கிறது என்கிறார்கள்.

இதிலே ஜனங்களைவிடக் கலைஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாக இந்தக் கலைகளை அப்யஸித்துக் கொண்டிருக்கிறவர்களுக்குத்தான் அதிகம் பொறுப்பிருக்கிறது. இப்போது கண்டதை எழுதியும், பாடியும், நடித்தும், படம் பிடித்தும் கீர்த்தி, தனம் எல்லாம் ஸம்பாதித்து விடலாம். ஆனால், ‘இத்தனை ஜனங்களைக் கெடுத்ததற்கான தோஷத்தையும் கண்ணுக்குத் தெரியாமல் ஸம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு இதற்காக நாம் ஒருத்தனுக்குப் பதில் சொல்லியாக

வேண்டும்’என்ற நினைப்பு அவர்களுக்கு இருக்க வேண்டும்.

மளிகை ஸாமானில் கலப்படம் பண்ணினால் குற்றம்;குடி தண்ணீரைக் கெடுத்தால் குற்றம் என்றால் நேரே மநுஷ்யனின் ஆத்மாவையே கெடுப்பது இவற்றைவிடக் குற்றம்தானே? கலப்படத்துக்காக தண்டிக்கிறவன் நம் மாதிரி ஒருத்தன்தான். அவனிடமிருந்து தப்பியும் விடலாம். அல்லது லஞ்சம் கொடுத்து ஸரிப்படுத்திடலாம். ஆனால் தன் ஆத்மாவையும் கெடுத்துக் கொண்டு, மற்றவர்களையும் கெடுத்ததற்காக ஒருத்தனைச் சிக்ஷிக்கிறானே, அவனிடமிருந்து தப்பவே முடியாது! அவனை நாம் வசியம் பண்ணிக் கொள்ளவும் முடியாது! இந்த நினைப்பு இருந்து விட்டால் கலைகளில் ஈடுபட்டவர்கள் தப்பு வழிக்குப் போக மாட்டார்கள்.

தெய்வ நினைப்பு, பய பக்தி அநுஷ்டானம் இவை போனதில்தான் அடக்கம் போய்விட்டது; இந்திரியங்களின் வேகம் குறைவதால் ஏற்படுகிற பக்வம் வராமலே போகிறது. இதோடுகூடக் ‘கலைஞர்கள்’ என்று தாங்களாகவே தங்களுக்குக் கௌரவம் கொடுத்துக் கொண்டு பொதுஜனங்களும் அதில் மயங்கி இவர்களைக் கொண்டாடி முகஸ்துதி பண்ணுவதில் அஹம்பாவம் ஜாஸ்தியாகிவிடுகிறது.

பழைய காலத்தில் போல, வித்வான்களைக் கூட்டி ‘அரங்கேற்றம்’ என்று செய்து, அவர்கள் ஒப்புக் கொண்டால்தான் ஒரு புஸ்தகத்தையோ, நாடகத்தையோ பிரசாரம் பண்ணலாம் என்றுமில்லாமல், ‘கருத்து ஸ்வதந்திரம், எழுத்து ஸ்வதந்திரம், பேச்சு ஸ்வதந்திரம்’ என்று வேறு ஏற்பட்டிருப்பதால், எதை வேண்டுமானாலும் ஆடிப் பாடி ஊரை வளைக்கலாமென்று நடந்து வருகிறது.

சின்ன வயதிலிருந்தே மதக் கல்வி, மதாநுஷ்டானங்கள் இருந்தால் தான் ஸாத்விகம் ஏற்படும். அப்போதுதான் எத்தனை ஆட்டம், பாட்டம் இருந்தாலும் அதுகளும் முடிவில் உயர்ந்த ஸாத்விக லக்ஷ்யத்தில் சேர்ப்பதாக இருக்கும். முற்காலங்களில் இப்படித்தானிருந்தது. அநுஷ்டான ஸம்பந்தம் துண்டித்துப் போனபின்தான் ராஜஸ, தாமஸப் போக்குகளையே தூண்டிவிடுவதாக இந்தக் காந்தர்வ கலைகள் ஆகியிருக்கின்றன.”

……………..

கார்த்தி அனுப்பிய செய்தியைப் படித்து விட்டீர்களா?

2012 அக்டோபரில் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக நண்பர்கள் கார்த்தி மற்றும் ஸ்ரீதர் சுவாமிநாதன் என்னை பெங்களூருக்கு அழைத்தார்கள். அப்போதுதான் இந்தத் துறையில் நான் நுழைந்திருந்தேன்.

அப்போது நண்பர்கள் கார்த்தி மற்றும் ஸ்ரீதரிடம், ‘நான் இந்த உபன்யாசத் துறைக்கு வராவிட்டால், தமிழ் தொலைக்காட்சி சீரியல்களுக்கு வசனம் எழுதப் போயிருப்பேன்’ என்று சொன்னேன்.

ஆம்! 2012 ஏப்ரல் வாக்கில் பணியில் இருந்து வெளியே வந்தபோது அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன்.

எழுத்தைத் தவிர, எதுவும் தெரியாது! மீண்டும் பத்திரிகைக்குத்தான் போக வேண்டும் என்று முயற்சித்தேன். ஆனால், சரிவரவில்லை.

அப்போதுதான் என் பத்திரிகைத் துறை நண்பர் ஒருவர், ‘பத்திரிகைகள்ல வேலை செஞ்சது போதும் சுவாமீ… டிவி சீரியல்களுக்கு வசனம் எழுத வாங்க… மாசம் நல்லாவே சம்பாதிக்கலாம்’ என்று புள்ளிவிவரத்துடன் பேசினார்.

அவர் சொன்ன தொகையும், விவரித்த விதமும் என்னைக் கவர்ந்தது.

ஒரே ஒரு தர்மசங்கடம் – கடந்த பத்து வருடங்களாக பல கோயில்களுக்கும் மகான்களின் அதிஷ்டானங்களுக்கும் போய் தரிசித்து ஏராளமான ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன்.

திடீரென சீரியல்களுக்கு வசனம் எழுதப் போனால்… என்னை பலவாறு மாற்றிக் கொள்ள வேண்டுமே என்று தயங்கினேன்.

ஆனாலும், ஜீவனம்தான் அவ்வப்போது கண்களை மறைத்தது.

அப்போது மகா பெரியவாளிடம் ஒரே ஒரு கோரிக்கை வைத்தேன். ‘பெரியவா… இத்தனை வருடமா ஆன்மிகத்துல இருந்துட்டேன். நிறைய எழுதிட்டேன். இனி தொடரப் போகிற எனது பணி ஆன்மிகத்துக்கா, டிவி. சீரியல்களுக்கா? நீங்களே முடிவு பண்ணுங்கோ’ என்று வேண்டினேன்.

பெரியவா கண் திறந்தார்.

அடுத்து ஒரு சில நாட்களிலேயே மகா பெரியவாளின் பரிபூரண அருளோடு என் வாழ்க்கைப் பாதை மாறியது.

எழுத்தில் இருந்து பேச்சுக்குப் பாதை திரும்பியது.

என்னால் பேச முடியுமா?

எழுதுவது வேறு. பேசுவது வேறு.

எழுத்து என்றால், திரும்பத் திரும்ப எடிட் செய்து ஒரு கட்டுரையை வெளியிடலாம். ஆனால், பேச்சு அப்படி இல்லை. பேசினால் அது ‘லைவ்’.

பெரியவாதான் இதை சாதித்துக் கொடுத்தார்.

கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த தெய்வம் சத்தியமாக இருந்து என்னைக் காப்பாற்றிய விதம் என் நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும்.

பேசவே தெரியாத ஒருவனை பேசவும் வைக்கிறார்.

கார்த்தி இன்று மதியம் இதைத்தான் சொன்னார்: ‘அண்ணா… சொற்பொழிவுத் துறைக்கு வந்து நேற்றோடு மூன்று வருடம் பூர்த்தி ஆகிறது. இந்த பெரியவா போஸ்ட்டிங்கைப் பார்த்ததும், மூன்று வருடங்களுக்கு முன் பெங்களூரில் நீங்கள் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. எல்லாம் பெரியவா கருணை’

மகா பெரியவா சத்தியம்!

என்னைத் தடம் புரள விடவில்லை.

தன் பணிக்கே பயன்படுத்திக் கொண்டார்.

இன்று எத்தனையோ சேனல்கள், மேடைகள், வெளிநாடுகள் என்றெல்லாம் சென்றாலும், எல்லா புகழும் மகா பெரியவாளுக்கே!

வெகு சாதாரண மக்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுதான் எனக்குப் பெரும் பலம் – ‘சாமீ… எங்களுக்குப் புரியும்படியா எளிமையா சொல்றீங்க… நாங்களும் இப்ப காஞ்சிபுரம் போக ஆரம்பிச்சிருக்கோம்.’

இத்தகைய ஜனங்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுக்கு விலை இல்லை. ஆத்மார்த்தம் மட்டுமே தெரிகிறது.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

Source ….A Mail from my Friend Shri. Swaminathan  to me this Morning…

Natarajan

Message for the Day…”People Tend to Forget their Inherent Divinity…”

The Supreme Lord can assume countless forms including that of the entire cosmos. Hence scriptures declare, “The entire cosmos is God’s dwelling. All are forms of the Divine.” Seeing a Divine Incarnation people doubt whether God has such miraculous powers while He has the same body as themselves. People who find it difficult to perceive their oneness with the Self (Atma), fail to recognise the Avatar. Such people reviled Lord Krishna as a philanderer and a thief. Such accusations, born of delusion, will never undermine His greatness. Lord Krishna’s leelas were intended to reveal His Divinity. People make the same mistake about themselves; forgetting their inherent Divinity, they identify themselves with their bodies. Lord Krishna’s Avatar is to teach mankind to transcend their body consciousness.

Sathya Sai Baba

ஆனைமுகனும் அருகம்புல்லும்!….

புண்ணியம் செய்வாருக்கு பூவுண்டு; நீருண்டு. அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும் என்பார் திருமூலர். இறைவனுக்கு நாம் மலர்களையும், அருகம்புல், வில்வம், துளசி, வன்னி மற்றும் மந்தார இலைகளை சாற்றுகிறோம். இவ்வாறு இறைவனுக்கு சாற்றப்படும் இலைகளில், அருகம்புல்லின் மகிமையை கூறும் கதை இது:
கணபதி வழிபாட்டை முடித்து எழுந்தார் கவுன்டின்ய முனிவர். அவர் மனைவியான ஆசிரியை (இது பதவியல்ல; அப்பெண்மணியின் பெயர்.) கணவரின் திருவடிகளில் விழுந்து வணங்கியவள், ‘சுவாமி… நறுமணமும், அழகும் மிகுந்த மலர்கள் பல இருக்க, தாங்கள் அருகம்புல்லை கொண்டு, ஆனைமுகனை அர்ச்சிக்கிறீர்களே… இதற்கு காரணம் என்ன?’ என்று கேட்டாள்.


அதற்கு கவுன்டின்யர், ‘பெண்ணே… கர்ப்பக்கிருகத்தில் கனல் மூண்டு எழும்; அதனால், அங்கிருக்கும் ஆனைமுகனுக்கு அதிக குளிர்ச்சி வேண்டும். குளிர்ச்சியை தருவது அருகம்புல்; அருக வேர் தைலத்தால் தீராத வெம்மையும் தீரும். புராணங்களில் கூறப்பட்டுள்ள இந்த அடிப்படை உண்மையை உணராவிட்டால், அவை வெறுங்கதைகளாக தான் தோன்றும்…’ என்றவர், அக்கதையை கூறத் துவங்கினார்…
‘யமனுடைய மகன் அனலன்; பெயருக்கு ஏற்றபடி இவன் அடுத்தவர் உடம்பில் அவருக்கு தெரியாமல் புகுந்து, அவர்களை உருக்கி, சத்தை உண்பது தான் இவன் வேலை. மண்ணுலகில் இருப்பவர்களையெல்லாம் இவ்வாறு உருக்குலைத்த அனலன், அதன்பின், தேவலோகத்தில் புகுந்தான். அவனின் குணம் அறிந்த தேவர்கள் பயந்து, ‘ஆனைமுக வள்ளலே… அனலனிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்…’ என வேண்டினர்.
‘விக்னம் நீக்கும் விநாயகர் அங்கே தோன்றி, துதிக்கையால் அனலனை சுருட்டி விழுங்கினார். ஆனால், அடுத்த வினாடி அனைவரின் வயிரும் எரிந்தது; தாங்க முடியாமல் தடுமாறினர். விநாயகரின் திருமேனி குளிர்ந்தால் தான், அனைவரின் துயரமும் தீரும் என உணர்ந்த தேவர்கள், சந்திரனின் குளிர்ந்த ஒளிக்கற்றைகள் மற்றும் குளிர்ச்சி மிகுந்த அரவங்களை விநாயகரின் திருமேனியில் சாற்றினர்; பலனேதும் இல்லை. ‘அப்போது, முனிவர்கள் ஒவ்வொருவரும், 21 அருகம்புல்லை விநாயகரின் திருமேனியில் சாற்றினர். விநாயகரின் வயிறு குளிர்ந்த அதே வினாடியில், அனைவரின் வயிறும் குளிர்ந்தது. அன்று முதல், ஆனைமுகனுக்கு அருகம்புல் சாற்றும் நியதி உண்டானது….’ என்றார்.
உடலில் சூடு அதிகமாகும் போது, எதிர்விளைவுகள் உண்டாகி, உடல்நிலை பாதிக்கும். அப்போது பக்கவிளைவுகள் இல்லாதவாறு உடல் கொதிப்பை ஆற்றுவதோடு, ஆரோக்கியத்தையும் அளிப்பது அருகம்புல். அதனாலே, நம் முன்னோர் அருகம்புல் சாறு அருந்தச் சொன்னார்கள்.
ஆகவே, ஞானநூல்களின் அடிப்படை உண்மையை உணர்வோம்; ஐங்கரன் அருளால் அல்லல்கள் நீங்கும்!

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!
ஓட வல்லார் தமரோடு நடாவுவன்
பாட வல்லார் ஒலி பார்மிசை வாழ்குவன்
தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரானொடும்
கூட வல்லார் அடி கூடுவன் யானே!
விளக்கம்: தல யாத்திரை செல்பவர்களோடு செல்வேன்; சிவபெருமானின் புகழை பாடுவோரின் பாடல் ஒலியை கேட்டு, இன்புறுவேன். உள்ளத்தில் இறைவனை தேடி, இறையருளை அடைய வல்லவர்களுடன் சேர்வேன்.
கருத்து: புனித  தலங்களுக்கு செல்வதும், இறைவனின் புகழைப் பாடுவதும், இறையடியார்களுடன் இணைந்து இருப்பதும், இறை அருளை அடையும் வழி.

Source….www.dinamalar.com

Natarajan

 

Lalbaugcha Raja’s magnificent statue unveiled ahead of Ganesh Chaturthi….

 

Picture credits: Yogen Shah

With Ganesh Chaturthi around the corner, the iconic statue of Lalbaugcha Raja was unveiled in the city of Mumbai. This year, the statue has an added touch of grandeur that symbolizes the joy and vigor of the festival.

 

The statue sits in a palace like set up, made of different coloured glasses that add to the surreal beauty of the magnificent work done by the craftsmen.

Source…..www.ibnlive.com

Natarajan

Message for the Day…” Love for Love’s sake is eternal…Love is God…”

Sathya Sai Baba

You have to seek love only through love. The Gopikas prayed: “Oh Krishna, play Your sweet flute and sow the seeds of love in the desert of loveless hearts. Let the rain of love fall on earth and make the rivers of love flow.” The rivers of love must flow continuously. It is enough, if you can understand this one principle of love. This love is everything. Treat this love as the be-all and end-all of your life. Do not direct your love towards material objects. If you continue to love for love’s sake, then such a love will be eternal. It is not the body that is to be loved, but the principle of love. All the names and forms are evanescent and impermanent. Love directed towards temporary objects or beings is physical, whereas love for love’s sake is eternal. Love is God. You must attain Divinity with such love.

” ஷேமமா இரு…உன் கடமையை செய் …”

ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. குடும்ப தலைவர், ஒரு ஜோசியரிடம் தன் ஜாதகத்தை கொடுத்து விவரம் கேட்டார். ‘எக்கச்சக்கமா கிரக தோஷம், நவக்ரக ஹோமம், பெரிய அளவிலே செய்வது தான் பரிஹாரம்’.

பெரியவாளுடைய அனுமதியை பெற வந்தார் பக்தர். ‘ஜோசியர் சொன்ன படி நவக்ரக ஹோமம் செய்தால், நல்லது ஏற்படா விட்டாலும், நிச்சயம் கெடுதல் ஏற்படாது’ என்று சிந்தனைக்குரிய ஒரு பதிலை கூறி விட்டார்கள் பெரியவாள்.

பக்தருக்கு குழப்பம். ஹோமம் செய்வதா? வேண்டாமா? பெரியவாளை மறுபடி கேட்கலாம் என்றால், பெரியவா அங்கே இருந்தால் தானே? பதில் சொன்ன உடனேயே, சடக்கென்று புறப்பட்டு அந்த இடத்தை விட்டு போய்விட்டார்கள்.

பக்தர், பெரியவாளின் கைங்கர்யபரர்களிடம் ‘பெரியவா சரியான முடிவு சொல்லலையே?’என்று புலம்பி நச்சரித்தார்.அவருடைய தொல்லை தாங்காமல், ஒரு சிஷ்யர் பெரியவாளிடம் போய் பக்தரின் ஆதங்கத்தை சொன்னார்.

பெரியவா சொன்ன பதில்….

1. எல்லோருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் உண்டு. இவன் வீட்டில் தாத்தா, பாட்டி, இருக்கிறார்கள். அவர்களை சரிவர கவனித்து போஷிக்க வேண்டும். அது முக்கியமான தர்மம்.

2. வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களுக்கு கூடுமானவரையில் தர்மம் செய்யணும்.

3. தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

4. ஏழைகளையும், சமையற்காரர்களையும், தொழிலாளிகளையும் நிந்தனை செய்யகூடாது, பிரியமாக நடத்த வேண்டும். –

இதில் இருந்து, அக்குடும்ப தலைவர் இந்த நற்செயல்களை செய்யவில்லை என்பதை ஊகித்து அறிய முடிகிறது. அந்த சீடர், பக்தரிடம் போய், ‘உங்கள் கடைமைகளை எல்லாம் தவறாமல் செய்து வந்தாலே போதும். குடும்ப கஷ்டம் எல்லாம் போய்விடும். ஹோமம் செய்ய வேண்டிய தேவையே இருக்காது’ என்று பக்குவமாக சொன்னார்.

பக்தருக்கு நெஞ்சில் முள் குத்திற்று. பெரியவாளிடம் மறுபடியும் வந்தார். தன் துஷ்டத்தனங்களை ஒப்பு கொண்டார். ‘பரம்பரையா வந்தது. பெரியவா அனுகிரகத்தாலே, நல்ல வழிக்கு திரும்பணும். சரணாகதி பண்றேன்’.

பெரியவாள் மனம் உருகி போய்விட்டது.

‘க்ஷேமமா இரு’.

அது சரி, அந்த குடும்பத்தின் பரம்பரை இழிகுணங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?

ஸ்வாமியே சரணம்

Source….www.periva.proboards.com

Natarajan

 

 

Message For the Day…” Nature is the embodiment of Electromagnetic Energy…”

Sathya Sai Baba

There is electromagnetic energy in every body. Nature is the embodiment of the same energy. This energy may assume different forms, but its essential character is one and the same. A lighted bulb, a fan that is revolving, and many other things working through electrical power depend on the same kind of current. The energy may manifest itself in the form of light, heat, or magnetic energy, but it proclaims the power of the Divine, which is the source of all energy. This electromagnetic energy in man expresses itself in the form of radiation. It is also called reflection of the ‘Inner being’. The power of sight, hearing, speech, digestion, and movement of the limbs is derived from this energy. Water also contains this energy. In fact, the entire cosmos is permeated by this divine energy. On the basis of this, Vedanta declares, “Sarvam khalu idam Brahma (verily, every being is Divine).”

Message for the Day….” Transform Work into Worship ….”

Sathya Sai Baba

You should realise that for every action there is a consequence. The results of each action depend on the nature of the action, just as the nature of the tree depends on the seed which is sowed. The consequences of one’s actions are inescapable and it is for this reason that the Emperor Manu laid down that all should observe Dharma. The consequences of actions may appear sooner or later but they are bound to occur. When you constantly think of God and perform all actions with Divine feelings, you will experience the full blossoming of the human qualities. Consider every action as dedicated to God. You cannot avoid actions. You must transform work into worship. You have to perform work in this spirit. You cannot substitute prayer for work. You have to combine both work and worship.

 

Message for the Day…” In a Good Friendship,the Heart Must Understand Heart…”

Sathya Sai Baba

In this transient world, wading through joy and grief, people have a sore need of someone of their kind with whom they can communicate their feelings, share their discoveries and depressions, their moments of bliss and sorrow;someone to be by their side while trekking the hard road to truth and peace. However, friendship and friends today are far from the ideal. Friends who can confer real counsel, comfort and consolation are rarely found. If friendship must last then heart must understand heart, heart must be drawn to heart. Friendship must bind two hearts and affect both of them beneficially, whatever be the circumstance – loss or gain, pain or pleasure, good fortune or bad. The bond must survive all the blows of fate and be unaffected by time, place and situation. The trust and honour of each is in the safekeeping of the other.