” என்ன லட்டு செய்ய முடுஞ்சுதா …” ?

அறுசுவை அரசு நடராஜன் கூறுகிறார்…..

ஒவ்வொரு வருடமும் மே மாதம் நெருங்க நெருங்க எனக்குள் ஒரு விதமான பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்வது வழக்கம். எனக்கு மட்டுமல்ல… என் குடும்பத்தார் அத்தனை பேருக்கும்!

காஞ்சி முனிவர் மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் ‘ஜெயந்தி’ (பிறந்த தினம்) வருவது அந்த மாதத்தில்தான். அந்த நாளின் போது, நான், என் மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் முழுவதுமாக காஞ்சிபுரத்துக்குச் சென்று, ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து, லட்டுகள் செய்து, கூடையில் சுமந்து கொண்டுபோய் மடத்தில் ஒப்படைப்போம். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சி.

இந்த சாதாரண சமையல்காரன், ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீதே நம்பிக்கை இழந்து ‘இதோடு எல்லாம் போதும்’ என்று விபரீதமான முடிவு எடுக்க இருந்த சமயத்தில், நம்பிக்கை கொடுத்து, “நீ நன்றாகத்தான் இருப்பாய்’ என்று அபயக்கரம் நீட்டிய அந்த மாமுனிவருக்கு நான் செலுத்தி வரும் காணிக்கை இது.கொஞ்சம் முழுசாகச் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.

எனக்கு ஏழு வயதாயிருக்கும்போது சங்கர மடம் கும்பகோணத்தில் இயங்கி வந்தது. மஹா பெரியவாள் அங்குதான் இருந்தார். தினந்தோறும் மதியம் பன்னிரண்டு மணி தொடங்கி நாலுமணிவரையில் அன்னதானம் ஜேஜேவென்று அங்கே நடக்கும். இதற்காக மூட்டை மூட்டையாக அரிசி வந்து குவியும். மடத்தில் அப்போது பெரிய சமையல்காரர் — கபிஸ்தலம் வெங்கட்ராமய்யர். அவருக்கு உதவியாக என் அப்பா (விக்கிரபாண்டியம் நாராயணசாமி அய்யர்) உட்பட நாலைந்து பேர் இருந்தனர். என்னைப் போல் சின்னப் பையன்கள் நிறையப் பேர் எடுபிடிகளாக இருந்தோம்.

ஒவ்வொரு பந்திக்கும் சாப்பாடு முடிந்ததும் அந்த இலைகளை அள்ளி எடுத்து மூங்கில் கூடைகளில் நிரப்பி எடுபிடி பையன்களில் தோளில் வைப்பார்கள். படுவெயிட்டாக இருக்கும். இரண்டு கைகளால் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஓடும்போது, கூடைக்குள்ளிருந்து மிச்சம் மீதி சாம்பார், ரசம், பாயசமெல்லாம் காதோரமாகக் கொட்டி தோளெல்லாம் வழியும். அதைத் துடைப்பதற்கு முடியாமல் அப்படியே தலையை ஒடித்துக் கன்னத்தால் தேய்த்து விட்டுக் கொள்கிறபோது அது வாயில்பட்டு நாக்கில் ருசிக்கும். ‘எச்சில்’ என்று தோன்றாது. பெரியவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி, இறைவனால் கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மீதியாகத் தான் அது தோன்றும் என்பதால் துளிகூட அருவருப்பு இருக்காது எங்களுக்கு!

இப்படி இலைக்கூடையைக் கொண்டுபோய் கொட்டிய கையோடு, காவிரியில் குளித்துவிட்டு தயாராக வந்து நிற்க வேண்டும், அடுத்த பந்தியின் இலையை எடுப்பதற்கு!

சங்கர மடத்துக்கு இணையாக விசேஷ நாட்களில் தெய்வப்பெருமாள் நல்லூர் அன்னதான சிவன் என்பவரும் தனியாக அன்னதானம் செய்வார். இத்தனைக்கும் சாதாரண சமையல்காரர்தான். அதென்னவோ அவருக்குள் ஒரு வெறி. தானே கடை கடையாக ஏறி இறங்கி, வியாபாரிகளிடம் மன்றாடி அரிசி, பருப்பு என்று தானம் வாங்கி வந்து ஏழைகளுக்கு அன்னதானம் நடத்துவார்.

‘மடத்துக்குப் போட்டியாக அவர் அப்படிச் செய்கிறார்’ என்று ஒரு தரப்பினர் பேசிக்கொண்டாலும், மஹா பெரியவருக்கு இதில் சந்தோஷம்தான். தன்னை தரிசிப்பதற்கு அன்னதான சிவன் வரும்போது, சிரித்துக் கொண்டே, ‘என்ன சிவன், இன்னிக்கு எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டாய் ?’ என்று பெரியவர் கேட்பார்.

‘இன்னிக்கும் நிறையப் பேருக்குப் போட்டேன்!’ என்று சிவனும் பெருமையாகவும் மகிழ்ச்சியுடனும் சொல்வார். (இந்த அன்னதான சிவன் பேரிலேயே பெரிய கமிட்டி போட்டு, பல பெரிய மனிதர்கள் சேர்ந்து ‘டிரஸ்ட்’ டாகத் தொடர்ந்து அன்னதானப் பணியைச் செய்துகொண்டு இருந்தார்கள். அந்த ‘டிரஸ்ட்’ இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை).

இந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது. திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று. ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை. வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.

‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது. வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்!’ என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.

இடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய், மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம். இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.

காஞ்சிக்குப் போனேன். பெரியவரை தரிசனம் செய்தேன். என் மனசு கலக்கத்தைப் பட்டும்படாமல் அவரிடம் சொன்னேன்.

எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘சரி! இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம். இங்கேயே தூங்குங்கள். நாளை போய்க் கொள்ளலாம்!’ என்று என்னிடம் காஞ்சிப் பெரியவர் சொல்ல…. கட்டிக்கொள்ள மாற்றுத்துணிக்கூட எங்களிடம் இல்லையே என்ற வேதனைக் குமுறலுடன் அன்று காஞ்சி மடத்திலேயே தூங்கினோம். பகவான் பாதத்தில் படுத்திருக்கிறபோது மனம் துக்கங்களை மறந்திருப்பதால், தூக்கம் நன்றாக வந்தது.

காலையில் எழுந்து குளித்துப் பெரியவரைத் தரிசனம் செய்யப் போய் நின்றோம். புது வேட்டியும், புதுப் புடவையும் எடுத்து வரச் சொல்லி, அதை எங்களிடம் கொடுத்து உடுத்திக்கொண்டு வரச் சொன்னார்.

உடுத்திக்கொண்டு போய் நமஸ்கரித்ததும், எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார். ‘போ! எல்லாம் சரியாயிடும்! ‘ என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார். என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது. ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம். தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது. வெற்றி நிச்சயம் கிடைக்கும்’ என்ற உறுதி பிறந்தது.

அன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது. கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு, மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர். அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது.

அதன் பின் மாதா மாதம் முதல் தேதியன்று மடத்துக்குப் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன். ஒரு முதல் தேதியன்று அப்படிப்போய் நமஸ்கரித்தபோது, ‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’ என்றார் பெரியவர்.

வீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து பார்த்தும் சல்லிக்காசு இல்லை. என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன். காதில் தோடு தெரிந்தது. அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது) கொண்டு போனேன். பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……

‘என்ன…. லட்டு செய்ய முடிஞ்சுதா? ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே!’ என்றார் மெலிதான புன்னகையுடன்.

என்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே…. அதுவே போதும்’ என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்) அன்று லட்டு செய்து கொண்டு போவதை நானே வழக்கமாக்கிக் கொண்டேன். லட்டுகள் நூறு ஐந்நூறு ஆனது….ஐந்நூறு ஆயிரம் ஆனது… இன்று எங்கள் குடும்பம் முழுவதும் மே மாதத்தில் பெரியவர் ஜெயந்தி வந்தால், அந்தப் புனிதமான நாளில் லட்டு செய்ய காஞ்சிபுரம் கிளம்பிவிடும்.

Jaya Jaya Shankara, Hara Hara Shanka

Read more: http://periva.proboards.com/thread/3826/laddus-on-perivas-jayanthi#ixzz3YiqFECSan

Source………..www.periva.proboards.com

natarajan

” பக்தன் பகவானை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் …”

 


அன்பர்களோடு உரையாடி கொண்டிருந்தார்கள் பெரியவாள். சகஜமாக பேசி கொண்டிருந்த பெரியவா, ஒரு சந்தர்பத்தில், சட்டென்று பேச்சை நிறுத்தி கொண்டார்கள்; உடனே, எழுந்து நின்றார்கள்.. “நான் மட்டும் வெளியே போய்விட்டு வருகிறேன்,. யாரும் என்னுடன் வரவேண்டாம்” என்று சொல்லிவிட்டு, வாயிலை நோக்கி நடந்து வெளியே போய்விட்டார்கள்.

எல்லோருக்கும் திகைப்பு; உள்ளுக்குள் அச்சம். “பெரியவா தனியே போகிறார்களே?” என்று கவலை.

கொஞ்ச நேரம் கழித்து பெரியவா வந்ததும் தான், எல்லோரும் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். என்றாலும், “எங்கே போய்விடு வந்தார்கள்?” என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அடங்கவில்லை.

பெரியவாள் அவர்களை வெகு நேரம் தவிக்கவிடவில்லை.

“எங்கே போனேன்னு எல்லோரும் கவலைப்பட்டேள், இல்லையா… ஒரு கொலைகாரன் என்னை பார்க்க வந்து கொண்டிருந்தான். அவன் மடத்துக்குள்ளே வந்தால், அவனுடன் கூடவே மகாபாவமும் உள்ளே வந்து ஒட்டிக்கொள்ளும்.

“ஆனா, என்னிடம் நல்ல எண்ணத்தோட தான் வந்தான். நான் அவன் வருத்தத்தை போக்குவேன்னு நம்பிண்டு வந்தான். அப்படிப்பட்டவனுக்கு ஆறுதல் சொல்வது ஏன் கடமை.

“அவனை மடத்துக்குள்ளே விடவும் கூடாது. ஆறுதலும் சொல்லணும்! அதனால் நானே வெளியே போய் பேசிவிட்டு வந்தேன். அவனை தனியே அழைத்துக்கொண்டு போய், அவனுக்கும் சங்கடம் கொடுக்காமல், தனியே பேசி ஆறுதல் கூறிவிட்டு வந்தேன்…”

பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால், பகவான் பக்தனை நோக்கி பத்து அடிகள் எடுத்து வைப்பார்கள் என்பார்கள். ஆனால் பெரியவாளோ ஒரு பாவி, மனம் திருந்தி, தன்னை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாலும், தான் நூறு அடிகள் அடுத்து வைத்து, தன் கடாச்சத்தினாலேயே அவனை கழுவி விட்டு வருவார்கள் – அடியார்களை ஆட்கொள்வதற்கு.

பகவான் நடந்து வருவார் – என்பது வழக்காறு;
பெரியவாள் நடந்து சென்றார் – என்பது வரலாறு! 

Source…..www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/1945/periyava-walked-murderer#ixzz3YZxMZMDZ

படித்து வியந்தது ….”தெய்வத்தின் நிழல் ரா.கணபதி”….

1935 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் பிறந்து 2012ஆம் வருடம் பிப்ரவரியில் சிவராத்திரியன்று மஹா பெரியவருடன் சங்கமமான ரா.கணபதியைப் பார்த்தால் 35 புத்தகங்கள்

எழுதியவர் போல் தெரியாது. எலும்பும் தோலுமாய் இருப்பார். சிறு வயதில் பிடித்த காச நோயின் வடு இறுதிவரை இருந்தது. பேசிக்கொண்டே இருப்பார். திடீரென்று மெளனத்திற்குப் போய் விடுவார். அப்படி இருந்ததால் தான் அவர் எழுத்தும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். ஆரியாம்பாள் இறப்பின் போது சங்கரர் பட்ட துயரத்தை இவர் வர்ணித்ததை அறிஞர் அண்ணா ரொம்பப் பாராட்டினாராம். அவர் தாயாரும் அந்தச் சமயத்தில் மறைந்ததால் அவர் மன நிலையும் அப்படி இருந்ததாகச் சொன்னாராம்.

இடை இடையே கர்நாடக கீர்த்தனைகளையும் பஜனைப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

பெரியவர் கட்டளைப் படிதான் ஆதி சங்கரர் வரலாற்றையும் கணபதி எழுதினார். இவருடைய “ஜய ஜய சங்கர’ தொடர் கல்கியில் 1962ஆம் ஆண்டு வெளிவந்தது. 10 ஆண்டுகள் கல்கியில் பணிபுரிந்தார். mail நாளேட்டில் கொஞ்சம் காலம். 25 ஆண்டுகள் எந்தப் பத்திரிகையையும் சாராமல் எழுதினார். புட்டபர்த்தியில் தங்கலாம் என்று சென்ற போது ஸ்ரீ சாய் பாபா “”உன் வேலை இங்கே இல்லை. தெய்வத்தின் குரல் எழுது. அதுவே உன் பிறவிப் பணி” என்றாராம்.

பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், சத்ய சாய்பாபா பற்றி, ஸ்ரீ ராம கிருஷ்ணர் – ஸ்வாமி விவேகானந்தர், ஸ்ரீ சாரதா தேவி பற்றி, மீரா பாய், பகவான் ரமணர் பற்றி என்று பல மஹான்களைப் பற்றி அவர் எழுதியிருந்தாலும் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர் உபன்யாசங்களையும், சம்பாஷணைகளையும் தொகுத்து அவர் ஏழு புத்தகங்களாக வானதி பதிப்பகம் மூலம் கொண்டு வந்த “தெய்வத்தின் குரல்’ தான் அவர் எழுத்துக்களுக்கு மகுடம் போல் திகழ்கிறது. “தெய்வத்தின் குரல்’தொகுப்பிற்காக ரா.க. ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. காரணம் பெரியவர் ஒரு விஷயத்தை ஓர் இடத்தில் ஆரம்பிப்பார். வேறு இடத்தில் முடிப்பார். ஒவ்வொரு விஷயத்தையும் அலசும்போது முன்னர் விட்டுப் போன விளக்கங்களை வேறு இடத்தில் சொல்வார். கணபதி அனைத்தையும் செவிமடுத்துக் கேட்டு சந்தேகம் இருந்தால் வேறு புத்தகங்களையோ நபர்களையோ பார்த்துத் தெரிந்து கொண்டு அப்படியும் குழப்பம் இருந்தால் பெரியவரிடமே கேட்டு குறிப்பு எடுத்துக் கொள்வார். அதுவும் பெரியவரின் சம்பாஷணைப் பாணியிலேயே இவரும் குறிப்பு எடுத்து எழுதினார். அந்த நூல் “ஸ்ர்ண்ஸ்ரீங் ர்ச் ஞ்ர்க்’ என்று ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் (ஹிந்தியில் மூன்று தொகுப்புகள் வந்துள்ளன) மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் போன்றவர்கள் அந்த நூலை “ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி உபநிடதம்’ என்று புகழ்ந்திருக்கிறார்கள்.

மஹா பெரியவர் மிகச் சில சமயங்களில் ஆன்மீகம் தவிர இதர விஷயங்களைப் பேசியதும் உண்டு. அந்த நேரங்களில் ஹாஸ்ய நொடிகளும் உண்டு. அதிலும் பலப் பல விஷயங்கள் வெளி வரும் என்பார் கணபதி. அவரே பெரியவரை சமயம் வாய்த்தபோது ஒருமுறை “”ஏன் உங்களை பெரியவான்னு கூப்பிடறா” என்று கேட்டாராம். அவர் நமுட்டுச் சிரிப்புடன் “”பெரிய வாய். ஓயாம பேசறேன் இல்லயா, அதனாலோ என்னவோ” என்றாராம். “”இல்லை. மஹா வாக்கியங்களை உபதேசம் பண்ற வாய்”என்றார் இவர்.

“”சரி அப்ப ஏன் பெரியவாள்னு சொல்றா” என்று பீடாதிபதி கேட்டதற்கு “”எங்க காம க்ரோதத்தை நீங்க வாளால் அறுத்து எரியறதாலே” என்று சட்டென்று கணபதி சொன்னாராம். தான் சார்ந்துள்ள “காமகோடி’ என்கிற பீடத்திற்கான பெயர்ப் பொருத்தத்தைப் பெரியவர் ஒருமுறை சொன்னாராம். “”காமகோடின்னா தர்மார்த்த காமகோடின்னுஅர்த்தம். காமத்தின் கோடியிலே என்ன இருக்கும்? மோஷம்”என்றாராம்.

ரா.கணபதியின் “மைத்ரீம் பஜத’ புத்தகத்திலிருந்து மஹா பெரியவர் சம்பந்தமான ஒரு சம்பவம்: சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் ஸ்ரீ மஹா பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். ஒரு சின்ன பெண் ஸ்ரீ ராம ஜயம் எழுதிய நோட்டு கொடுத்து வெள்ளிக் காசு பெரியவரிடம் கேட்டது. அப்போது ஒரு லட்சம் நாமம் எழுதினால் தங்கக் காசும் 12,500 எழுதினால் வெள்ளிக் காசும் பெரியவர் தந்த சமயம். வெள்ளிக் காசு கேட்டவுடன் மலர்ந்த முகத்துடன் நோட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுத்து அனுப்பினார். சற்று நேரத்திலேயே கண்ணைக் கசக்கிக் கொண்டு அவள் திரும்ப இவரிடம் வந்து நின்றாள். “”காசு எங்கேயோ தொலைந்து போய்விட்டது” என்று அழுதாள்.

“”நீ எவ்வளவு எழுதினாய்” என்று பெரியவர் கேட்டார்.

“”8,500 நாமம் எழுதினேன்”.

“”பின்னே ஏன் 12,500 எழுதினது போல் வெள்ளிக் காசு கேட்டாய்?”

“”பொய் சொன்னேன்”.

“”அது தப்பு இல்லயா, அப்படிச் செய்யலாமா?”

என்று அவளைக் கேட்டவர் அங்கிருந்த பக்தர்களைக் கேட்டார்.

“”இந்தச் சிறுமி பாவம் அறியாமல் 12,500 ராம நாமாக்களுக்குப் பதில் 8,500 நாமா எழுதியுள்ளது.  இன்னொரு 4,000 நாமா குறைகிறது. நீங்க எழுதி சரி செய்ய முடியுமா”?

அங்கேயே கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் தாளும் எழுது கோலும் வழங்கப்பட்டன. 4000 பூர்த்தியானதும் அந்தச் சிறுமியிடம் அவர் சொன்னார்:

“”நீ 8500 தான் எழுதினதா நிஜத்தைச் சொன்னதால இவங்களை வெச்சு மீதியை எழுதிட்டேன். கணக்கு சரியாப் போயிடுத்து. வெள்ளிக் காசு தரலாம்னாலும் நீ உண்மையைச் சொன்னதுக்கு உனக்கு தங்கக் காசே தரேன்” என்று தங்கம் எடுத்துக் கொடுத்தார்.

என்ன அற்புதமான பேரம் பாருங்கள். சிறுமி செய்த தவறுக்குப் பரிகாரமாக 4000 நாமம் எழுதும் புண்ணியம் பக்தர்களுக்கு. தவறை ஒப்புக் கொண்டதால் சிறுமிக்கு வெள்ளிக்குப் பதில் தங்கக் காசு கருணா சாகரம் என்று இதனால் தான் அவருக்குப் பெயரோ?

“கருணைக் கடலில் சில அலைகள்’ என்ற அவர் புத்தகத்திலிருந்து இன்னொரு சம்பவம்: ஓர் இளைஞன் “”தான் படித்து இரண்டரை வருஷம் ஆகியும் வேலை கிடைக்கலை,

ஏழ்மையான குடும்பம், சகோதரி வேறு கல்யாணத்திற்கு நிற்கிறாள், எல்லோரும் அவனை  “தண்டச் சோறு’ என்று திட்டுகிறார்கள்” என்று சொல்லி அவரிடம் அழுதான்.

அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு தன் முக்கிய பணிகளை அவர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளராக இருந்த ஓர் அதிகாரி தரிசனத்திற்கு வந்தார். அவரிடம்

மஹா பெரியவர் தன் துறவுக் கோலைச்சுட்டிக் காட்டி “”இந்த தண்டத்துக்கு ஒரு வேலை போட்டுத் தருவீங்களா” என்று கேட்க அவர் அதிர்கிறார். “”ரெண்டரை வருஷம் ஆச்சாம். வேலை கிடைக்கலையாம். படிச்ச பையன். ஏழ்மையான குடும்பம். ஒரு வேலை கிடைக்குமா? எல்லாரும் அவனை தண்டம்னு திட்டறாங்களாம்”.

“”உத்தரவு பெரியவா”.

அந்த இளைஞனைக் கூப்பிட்டு அந்த சந்தோஷ செய்தியைச் சொல்லியபடி தன் துறவுக் கோலை சுவரில் சார்த்துகிறார். “”உம். ஒரு தண்டத்துக்கு வேலை கிடைச்சாச்சு.

இன்னொரு தண்டம் பார்த்துக் கொடுத்திருக்கு. தண்டம் தான் எங்களுக்கு ரக்ûக்ஷ. ப்ரஹ்மசாரிகளுக்கும் தண்டம் ரக்ûக்ஷ. ராஜ தண்டத்துக்கு அடங்கித் தான் நீதி, நியாயம்.

இந்த லோகத்திலே எதுவும் தண்டமில்லை” என்று திருவாய் மலர்ந்தருளினார் பெரியவர்.

ரா.கணபதியின் ஏழாவது “தெய்வத்தின் குரல்’ தொகுப்பை மஹா பெரியவர் பார்க்கவில்லை. அது வெளி வந்த ஆண்டு 2000. அதற்குப் பிறகு இரண்டு தொகுப்புகளுக்கு கணபதியிடம் விஷயம் இருந்ததாம். “ஆனால் என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. என்னாலே இனி எழுத முடியாது” என்று நிறுத்திக் கொண்டுவிட்டார். “”அது என்னவோ வந்து ஆட்டம் காட்டிட்டுப் போயிட்டா பெரியவா” என்று மஹாசுவாமிகளின் வாழ்க்கையைப் பற்றி முத்தாய்ப்பாய் சொல்கிறார் ரா.க.

ஆட்டம் போட்டது பெரியவர் மட்டுமா? ரா.கணபதியும் தான்.

source…..ஸ்ரீதர் சாமா in http://www.dinamani.com

Natarajan

” அடுத்த தடவை கெடைச்சுடும் …” !!!


ஒவ்வொரு ப்ரதோஷத்துக்கும் எங்கிருந்தாலும் பெரியவாளை தர்சனம் பண்ணி விடுவார் ப்ரதோஷம் மாமா. என்றைக்காவது அவர் வர சற்று தாமதமானாலோ, அல்லது
வரமுடியாமல் நிர்பந்தம் ஏற்பட்டாலோ, “ஏண்டா…ப்ரதோஷம் வந்துட்டானா?” என்று பெரியவாளே அன்போடு விஜாரிக்கும் அளவு பெரியவாளிடம் அவருக்கு அன்பு.

கடம் வித்வான் சுபாஷ் சந்தரன் மாமாவின் அத்யந்த பக்தர். ஒருநாள் வயலின் ரெட்டையர்கள் கணேஷ்,குமரேஷை மாமாவின் க்ருஹத்துக்கு அழைத்துக் கொண்டு வந்து கச்சேரி செய்ய வைத்தார் சுபாஷ் சந்தரன். மாமாவின் வீட்டில் எங்கு திரும்பினாலும் பெரியவா, பெரியவா, பெரியவாதான்!

கச்சேரி பண்ணிவிட்டு கிளம்பும்போது கணேஷ்,குமரேஷ் மாமாவிடம், “பெரியவா உருவம் பொறிச்ச காசு கெடைக்குமா மாமா?” என்று கேட்டனர். அப்போது அவரிடம்
கைவசம் காசு எதுவும் இல்லை. மாமாவுக்கு “இல்லை” என்று சொல்லிப் பழக்கமேயில்லை. எனவே “அடுத்த தடவை நீங்க ரெண்டு பேரும் வரச்சே கெடைக்கும்” என்று சொல்லிவிட்டார்.

இருந்தாலும் அவர்கள் கேட்டதை குடுக்க முடியவில்லையே என்ற உள்ளூர ரொம்ப வருந்தினார். கொஞ்சநாளில் அதை மறந்தே போய்விட்டார்.

ஒரு மாசம் கழித்து கணேஷ், குமரேஷ் இருவரும் பெரியவா முன் கச்சேரி செய்யும் பாக்யம் பெற்றார்கள். சுபாஷ் சந்திரன்தான் இதையும் ஏற்பாடு பண்ணியிருந்தார். கச்சேரி செய்தவர்களுக்கு சால்வை போர்த்தி கௌரவிப்பது மடத்தின் வழக்கம். எனவே அவர்களுக்கும் அழகான சால்வை மடத்து அதிகாரியால் போர்த்தப் பட்டது.

கூடவே இருவருக்கும் ஒரு சின்ன டப்பாவும் வழங்கப்பட்டது. திறந்து பார்த்தால்…….

பெரியவா திருவுருவம் பதித்த அழகான வெள்ளிக் காசுகள்!

“அடுத்த தடவை கெடைக்கும்” என்ற பக்தனின் வாக்கை பகவான் சத்யமாக்கினான்!

பக்தன் மேல் பகவானுக்கு எத்தனை ப்ரேமை! மாமாவிடம் இதை சொன்னபோது அவரால் பெரியவாளின் அன்பை எண்ணி எண்ணி நெகிழத்தான் முடிந்தது.

Read more: http://periva.proboards.com/thread/4892/#ixzz3YBvxjcfq

Source…..www.periva.proboards.com

Natarajan

” பெருமாள் கவுண்டர் சௌக்யமா இருக்காரா …” ?

18698_10153209347029244_3030028360467212073_n.jpg

“வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே’ என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா பெரியவரின் ஞாபகசக்திக்கு அளவே இல்லை.

1928… மேட்டூர் அருகேயுள்ள நெருஞ்சிப்பேட்டை கிராமத்தில் மகாபெரியவர் முகாமிட்டு இருந்தார். பக்தர்கள் அவர் முன்னால் அமர்ந்திருந்தனர். அப்போது எங்கிருந்தோ “கோவிந்த கோவிந்த…’ என்ற கோஷம் காற்றில் மிதந்து வந்தது. “”இந்த சப்தம் எங்கிருந்து வருகிறது?” எனக்கேட்டார் பெரியவர்.

“”பக்கத்தில் பாலமலைன்னு ஒரு இடம்… அதன் உச்சியில் சித்தேஸ்வரர் கோயில் இருக்கு! அங்கு ஏறும் பக்தர்கள் தான் இப்படி கோஷமிடுவார்கள்,” என்றார் ஒருவர்.

“”சிவன் கோயிலில் கோவிந்த கோஷமா.. ஆச்சரியமா இருக்கே! நானும் அந்தக் கோயிலுக்கு போகணும்!” என்றார் பெரியவர்.

“”அந்த மலையில் ஏற வேண்டுமானால் 12 மைல் (18 கி.மீ.,) நடக்கணும். வழித்துணைக்கு ஆள் வேணும்,” என்ற ஒரு பக்தர், அங்கு வழிகாட்டியாக இருந்த பெருமாள் கவுண்டர் என்பவரை அழைத்து வந்தார்.

கவுண்டருக்கு அப்போது 25 வயதிருக்கும்.கவுண்டர் வழிகாட்ட பெரியவர் ஆர்வமாக மலையேறி சித்தேஸ்வரரை தரிசித்தார்.

“”நீங்க வேணுமானா பாருங்க! இந்த சித்தேஸ்வரருக்கு ஒருத்தர் தன் சொந்தச் செலவில் கோயில் கட்டுவார். இது நடக்கும்,” என்று தன்னுடன் வந்த பக்தர்களிடம் சொன்னார் பெரியவர்.

ஆனால், ஆண்டுகள் வேகமாக ஓடி விட்டது. 62 ஆண்டுகள் சென்ற பின் 1990ல் சேட் ஒருவர் சித்தேஸ்வரரைத் தரிசிக்க வந்தார். அவரே கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்து வைத்தார்.

மேட்டூர் அணைக்கு வந்த பெரியவர், “”அடியிலே பொக்கிஷம்’ என்று சொன்னார்.

அங்கிருந்தவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. அதற்கான விளக்கமும் யாரும் கேட்கவில்லை. 70 வருடங்கள் கழித்து, அணையில் சில பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. உள்ளிருந்து அனுமன், ராமன், சீதா சிலைகள் கிடைத்தன. அப்போது தான் பெரியவர் சொன்னதன் அர்த்தம் ஊர் மக்களுக்கு புரிந்தது. சிலைகளை ஒரு மினிலாரியில் ஏற்றி காஞ்சிபுரத்துக்கு கொண்டு வந்தனர்.

அவற்றை பார்வையிட்ட பெரியவரிடம், “”இந்தச் சிலைகளைக் கொண்டு நாங்கள் கோயில் கட்ட தங்கள் ஆசிர்வாதம் வேண்டும்,” என்றனர். “விரைவில் நடக்கும்’ என ஆசிர்வதித்த பெரியவர், “”அது சரி…உங்க ஊருக்கு நான் 1928ல் வந்த போது, எனக்கு வழிகாட்டினாரே பெருமாள் கவுண்டர்…அவர் சவுகரியமா இருக்காரா!” என்று கேட்டார்.

வந்தவர்கள் சிலிர்த்துப் போனார்கள். நேற்று பார்த்த ஒருவரையே மறந்து விடும் இந்தக் காலத்தில், 70 வருடம் கழிந்தும் தன்னோடு வந்த வழிகாட்டியை பற்றி விசாரித்தது அவர்களுக்கு ஆச்சரியமளித்தது.

“”அவருக்கு 95 வயசாச்சு! இன்னும் நல்லாஇருக்கார்,” என்று அவர்கள் சொல்லவே, ஒரு தாம்பாளத்தில் புதுவஸ்திரங்கள் வைத்து, இதை அவரிடம் கொடுத்துடுங்கோ! நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்கோ” என்றார் பெரியவர்.

மகாபெரியவரின் கருணைக்கும், ஞாபகசக்திக்கும் ஈடு இணையே இல்லை…

Source……..www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/9055/#ixzz3Y32c4shA

“அந்தக் கொழந்தைக்கு எப்படி இருந்திருக்கும்…?”

20683_671948076266709_3512172854606087227_n.jpg
அவர் ஆஸ்தானம் கொண்டிருந்த தேனம்பாக்கம்

சிவாஸ்தானத்தில் அன்று இளங்காலை ஒரே

பரபரப்பு,பதைபதைப்பு என்றே சொல்லலாம்.

உடனிருந்தோர் உறக்கம் கலைந்து பார்க்கும்

போது பெரியவாளைக்காணோம்.

சிவாஸ்தான ஆலயச் சூழலில் முழுதும்

தேடிப் பார்த்தும் காண முடியவில்லை.

பரபரப்பும் பதைபதைப்பும் ஏற்படாதிருக்குமா?

அடியார்கள் சுற்றுப் புறம், அதைக் கடந்தும்

சல்லடை போட்டுத் தேடிக் கொண்டே போனார்கள்.

முடிவாக, அங்கு ஓடிய சிற்றாற்றின் கரையில்……

என்ன கொடூரம்!

முட்புதர்கள் மண்டிக் கிடக்கும் ஓரிடத்தில்

ஸ்ரீசரணர் சுருண்டு கிடக்கிறார்.

“அவராக வந்து இங்கு முள்ளுப்படுக்கை உவந்தாரா,

அல்லது..?- எண்ணாததெல்லாம் எண்ணி அடியர் கணம்

அருகு நெருங்க, அவர் பளிச்சென எழுந்தமிர்கிறார்.

அந்த மட்டும் வயிற்றில் பால் வார்த்து விட்டார்.

ஆயினும் திருமேனியில் அப்பினாற்போல முள் அங்கி

பூண்டுள்ள கோலம் அடியார்களின் நெஞ்சில்

கூர்ப்பாகத் தைக்கிறது.

வயது முதிர்ந்த ஒரு பக்தர், “ஐயோ, பெரியவா!

இதென்ன சோதனை?” என்று வாய்விட்டு அலறுகிறார்.

பெரியவாள் சொல்கிறார்.

“இந்த நாள்ல ஜனஸமூஹத்தை வசீகரிச்சுப்

பிடிச்சுண்டிருக்கிறதா, கை நெறய ஸம்பாதிக்கிறதுக்குத்

தினுஸு தினுஸாப் படிப்புகள் இருக்கு. அப்படி

இருக்கிறப்ப, என் வார்த்தையை மதிச்சு,(நெகிழ்ந்த குரலில்)

என்னை நம்.பிண்டு சில தாயார்-தோப்பனார்மார் தங்கள்

குழந்தைகளை வருமானம், ‘ஆனர்’,’ஃபாஷன்’ எதையும்

கவனிக்காம, (வேத) பாடசாலைகளுக்கு அனுப்பிண்டிருக்கா.

அந்தக் கொழந்தைகளும் ஊர் ஒலகத்துல ஒடனொத்த

கொழந்தைகள் தினம் ஒரு ட்ரெஸ், வேளைக்கு ஒரு

ஹோட்டல்னு இருந்துண்டிருக்கிறப்ப, ஒரு மூணறை மொழ

சோமனைச் சுத்திண்டு, போடற உண்டைக் கட்டியைத்

தின்னுக்கிண்டு, வெளில தலை காட்டினாலே,

‘சிண்டுடோய்!னு பரிஹாஸத்தை வாங்கிக் கட்டிக்கிண்டு, தொண்டை தண்ணிவத்த ஸந்தை சொல்லிண்டிருக்குகள்.”

ஏதோ ஓரிடத்தில் ஸ்ரீ மடத்தின் ஆதரவில் நடைபெறும்

பாடசாலையைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடர்கிறார்.

“அங்கே கொழந்தைகள் என்னமோ விஷமம்

பண்ணிடுத்துகள்-ங்கிறதுக்காகச் சமையக்கார அம்மா

புதுத் தொடைப்பத்தால் அடிச்சுட்டாளாம். வேதம் படிக்கிற

அந்தக் கொழந்தைகளுக்கு எப்படி இருந்திருக்கும்னு

கொஞ்சம் தெரிஞ்சுக்கிறதுக்குத்தான்

Read more: http://periva.proboards.com/

Source…..www.periva.proboards.com

Natarajan

” ஹனுமான் பலமும் பாகவதர் பாரமும் …” !!!

ஜூன் 12 காஞ்சிப்பெரியவர் ஜெயந்தி

காஞ்சிப்பெரியவர் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். அவரது அவதார நாளை ஒட்டி, அவர் நிகழ்த்திய நகைச்சுவை சம்பவம் ஒன்றை அறிவோமா!
கும்பகோணம் சிவாலயம் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார். கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, மற்ற சிவத்தலங்களுக்குச் சென்று விட்டு மாலையில் மடத்திற்கு திரும்பினார். அந்த சமயத்தில் மடத்தில் பாகவதர் ஒருவர் ராமாயண உபன்யாசம் செய்து வந்தார்.

வாட்டசாட்டமான தோற்றமும், சிவப்பு நிறமும் கொண்ட பாகவதர், தனது அந்தஸ்தை பறை சாற்றிக் கொள்ளும் விதத்தில் வைரக்கடுக்கண், பத்து விரலிலும் தங்க மோதிரம், கழுத்தில் தொடங்கி வயிறு வரை அடுக்கடுக்காய் தங்கச் சங்கிலிகள், நான்கு விரல் கட்டை ஜரிகையுடன் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம், இடுப்பில் பச்சைத் துண்டு, சிரித்தால் தெரியும் தங்கப்பல், வெற்றிலை போட்டுச் சிவந்த வாய் என படாடோபமாக இருந்தார். போதாக்குறைக்கு தான் பேசும் போது கை தட்ட பத்து “ஜால்ராக்களையும்’
அழைத்து வந்திருந்தார்.

பெரியவரும் உபன்யாசம் கேட்க வருகிறார் என்பதை அறிந்த பக்தர்கள் திரளாக கூடினர். பெரியவர் அமர்ந்திருக்க, பாகவதர் உபன்யாசத்தை தொடங்கினார். அன்றைய தினம் அனுமன் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு வந்த விதத்தை விவரித்தார். ஜால்ராக்கள் தேவையில்லாத இடத்தில் கூட கை தட்டினர். அந்தளவு அவர் ஒரு புகழ் விரும்பி.
பேச்சின் இடையே அவ்வப்போது, “ம்ஹும்…ம்ஹும்…’ என்று பெருமூச்சுவிட்டபடி, முக்கி முனங்கினார் பாகவதர். பேச்சைக் கேட்டவர்களுக்கு இது மிகவும் சங்கடமாக இருந்தது. உபன்யாசம் முடியவும், பெரியவரை அருளுரை வழங்கும்படி விழாக்குழுவினர் கேட்டுக் கொள்ள, “பெரியவர் என்ன சொல்லப் போகிறார் என கேட்க பக்தர்கள் காத்திருந்தனர். ஏன்… பாகவதரும் கூடத் தான்!

பெரியவர் ஆசியுரை வழங்கும் போது, பாகவதரின் உபன்யாசம் பற்றியும் பேசினார்.

“”பாகவதர் ஆஞ்சநேயரின் பலம் பற்றி நமக்கெல்லாம் எடுத்துச் சொன்னார். சந்தோஷம் தான்…. ஒண்டி ஆளா சஞ்சீவி பர்வதத்தை தூக்கின போது கூட அவர் இப்படி முக்கி முனங்கினாரோ தெரியல…. ஆனா, பாகவதர் வரிக்கு வரி முக்கி முனங்கியது தான் ஏன்னே புரியலை! ஒருவேளை அவர் போட்டிருக்கிற வைர, தங்க நகைகளின் பாரத்தை சுமக்க முடியாமல் தான் இப்படி முக்கி முனங்கினாரோ என்னவோ….” என்று நகைச்சுவையுடன் சொல்ல பாகவதர் தலை குனிந்து கொண்டார்.

இதைக் கண்ட பெரியவர், “”மரக்கிளை உச்சில தேனெடுக்கிறப்போ, எடுப்பவரை தேனீக்கள் கொட்டுவதுண்டு. ஆனா, தேன் கிடைக்கிற ஆசையில அதை தாங்கிப்போம். அது மாதிரி, பாகவதரின் உபன்யாசத்தைக் கேட்கிறப்போ, இந்த சின்ன குறைபாட்டையும் நாமும் பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை,” என்று அவரது சொற்பொழிவு நன்றாக இருந்தது பற்றியும் சொல்லி முடித்தார்.

Read more: http://periva.proboards.com/thread/7480/#ixzz3XqoTQ97p

Source……www.periva.proboards.com

Natarajan

” இந்த தூணுக்கு அடிப்பாகம் எது ….நுனி எது …” ?

1234201_315112848661397_4724600860700186658_n.jpg

பத்ராசலத்தில் ஸ்ரீராமர் கோயில் திருப்பணி

நடந்து முடிந்தது. கோயில் திருப்பணியில்

கை தேர்ந்த கணபதி ஸ்தபதி அந்த பொறுப்பை

ஏற்றிருந்தார்.

பத்ராசலத்துக்கு யாத்திரையாக வந்திருந்த

மகாபெரியவர்களிடம் “தாங்கள் அவசியம் வந்து

பார்வையிட வேண்டும்.தங்கள் கடாக்ஷம் வேண்டும்”

என அழைத்தார் ஸ்தபதி.பெரியவர்கள் கோதாவரியில்

ஸ்நானத்துக்குச் செல்லும் வழியில் அங்கே

நுழைந்தார்கள்.

கல்தூண் ஒன்றில் சிற்பம் செதுக்கும் வேலை

நடந்து வந்தது.

“இந்தத் தூணுக்கு அடிப்பாகம் எது,நுனிப்பாகம் எது”

என்று கேட்டார்கள் பெரியவர்கள். ஸ்தபதிக்கு ஒரே

திகைப்பு! ‘இதைப் பார்த்தாலே தெரிகிறதே! இப்படி

ஏதோ குழந்தைத்தனமாகக் கேள்வி கேட்கிறார்களே!’

என்று எண்ணியபடி அந்தப் பாகங்களைச் சுட்டிக்

காண்பித்தார்.

“இந்த அடிப்பாகத்தை நுனியாகவும்,நுனியை

அடிப்பாகமாகவும் மாற்றலாமா?”என்று கேட்டார்கள்.

ஸ்தபதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

“செதுக்குவதற்கு முன்னால் ஒவ்வொரு தூணுக்கும்

இதுதான் அடிப்பாகம்,இதுதான் நுனி என்று எப்படித்

தீர்மானம் செய்வாய்” என்று கேட்டார்கள் சுவாமிகள்.

ஸ்தபதி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார்.

“சுத்தி எடுத்துவா, இதைக் கீழேயிருந்து மேல் வரை

கத்தியால் தட்டு.ஏதாவது தெரிகிறதா பார்”என்றார்கள்.

தட்டியபிறகு ஸ்தபதிக்கு ஏதோ ஒரு சந்தேகம்.

ஆனால் சொல்லத் தெரியவில்லை.

“மீண்டும் ஒருமுறை தட்டு.அதிலிருந்து வரும்

சத்தத்தைக் கவனி” என்றார்கள்.

“கீழே சத்தம் ‘கணீர்’ என்று வருகிறது. மேலே செல்லச்

செல்ல சத்தம் குறைகிறது” என்றார்,ஸ்தபதி.

“மரத்திலே வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள்.

அது சிகப்பாகக் கெட்டியாக இருக்கும். சுலபமாகப்

பிளக்க முடியாது.அதிலிருந்துதான் மரப்பாச்சி-

மரப்பொம்மை செய்வார்கள்.நீ அதைப்பற்றி

கேட்டிருப்பாய். அதுபோலதான் கல்லிலும்

வைரம் பாய்ந்த பாகம் கெட்டியாய் இருக்கும்.

அதிலிருந்து வெண்கலம் போல ‘கணீர்’ என்று

சத்தம் வரும். அதுவும் கெட்டியாக (அடர்த்தி

நிறைந்ததாக) இருக்கும். அந்தப் பகுதியைத்தான்

அடிப்பாகமாகக் கொள்வார்கள்.

“சத்தம் அதிகம் வரும் பாகம் அடி; குறைவாக

உள்ளது நுனி. நீ சரியாகத்தான் வைத்திருக்கிறாய்.

உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சொல்லத்தான்

தெரியவில்லை” என்றார்கள் பெரியவர்கள்.

ஸ்தபதி உடனே சாஷ்டாங்கமாகப் பெரியவர்களின்

காலில் விழுந்து நமஸ்கரித்து, “தங்கள் அருளால்தான்

எல்லாம் நன்றாக அமைய வேண்டும்” என்று

பிரர்த்தித்தார். அப்படியே அமைய ஆசீர்வதித்தார்கள்

பெரியவர்கள்.

எல்லாக் கலைஞர்களுமே இப்படித்தான் முதலில்

சாமான்யமாக மதித்து,கடைசியில்,’இவர்களிடம்

நாம் கற்கவேண்டியது நிறைய இருக்கு’ என்ற

முடிவுக்கு வருவார்கள்.

தெய்வத்துக்கு தெரியாத கலை ஏதும் உண்டா?

Read more: http://periva.proboards.com/thread/8986/#ixzz3WbYK3Z4e

source……. http://www.periva.proboards.com

Natarajan

” ரொம்ப ருசியா இருக்கு …” !!!

தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
156.jpg
ஒரு வயதான பால்காரம்மா.

கஞ்சிபுர நகர்வாசி. அவருக்கு எல்லாமே

காஞ்சி மகான்தான். ஒரு தடவை பால்

வியாபாரத்திற்காக அவள் ஒரு புது பசுவை

வாங்கினாள். அதிகமாகப் பால்தரும் பசு அது.

வாங்கின தினம். மாட்டிற்குச் செய்யவேண்டிய

பூஜைகளை எல்லாம் ஒழுங்காகச் செய்த பின்னர்

முதன் முதலாக அந்த மூதாட்டி பாலைக் கறந்தாள்

பால் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது.

புதிய பாத்திரத்தில் பாலை நன்றாகக் காய்ச்சி,

இன்னொரு புதிய பாத்திரத்தில் ஊற்றி எடுத்துக்

கொண்டு நேராக மடத்திற்கு வந்தாள்.மகானுக்குக்

கொடுக்க வரிசையில் நின்ற அவளைக் கவனித்த

சிப்பந்திகள் அவளை எச்சரித்தார்கள்.
“மகான் இதையெல்லாம் சாப்பிட மாட்டார்”

என்று அவளிடம் சொன்னார்கள்.

அதையெல்லாம் அவள் காதில் போட்டுக் கொள்ளவே

இல்லை. தான் வணங்கும் தெய்வத்திற்கு பாலை

எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்பது

அவளது பிடிவாதம். மகானின் அருகில் இருந்த

சங்கர மடத்து ஊழியர்களும் பேசாமலேயே சைகையில்

அவளை விரட்டினார்கள். அப்போதும் அசையவில்லை.

மகான் முன் வந்து பாலை வைத்தாள்.

மகான் அவளை நிமிர்ந்து பார்த்தார். அவள் முகத்தில்

தெரிந்த பக்தி உயர்வு அவருக்குப் புரிந்தது.

“வேண்டாம்” என்று கை பிசைத்த ஊழியர்களையும்

ஒரு தடவை பார்த்தார்.

பிறகு செம்பை எடுத்துப் பாலை பருகுகிறார்.

பிறகு “ரொம்ப ருசியா இருக்கு” என்றார்.

பால்காரியின் கோரிக்கை நிறைவேற, அவள்

சாஷ்டாங்கமாக விழுந்து பகவானை வணங்குகிறாள்.

Source::::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8974/#ixzz3WIGchcGR

” பையனுக்கு புத்தி சொல்லலாம் …இப்போ உனக்குதான் சொல்லணும் …” !!!

பெரியவா எல்லாம் அறிந்தவர் என்பதற்கு இன்னொரு நிகழ்ச்சி.

மூலம்——-மஹாபெரியவாள் தரிசன அனுபவங்கள்—–ஆறாம் தொகுதி

சொன்னவர்——ஸ்ரீமடம் பாலு மாமா.

தொகுத்தவர்—–டி.எஸ்.கோதண்டராம சர்மா.

பதிப்பகம்——வானதி பதிப்பகம்.

நவநீதசோரன்.

சந்தானராமன், பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு தன்னுடைய பூர்வீகம், பெயர் போன்ற விவரங்களைச் சொன்னார்.

“நீ நவநீதசோரநன்தானே?”

சந்தானராமனுக்கு ஒரே திகைப்பு!.

“ஆமாம்”

“இப்போ எங்கே இருக்கே? என்ன பண்றே? பத்னி, குழந்தைகள்…?”

“டில்லியிலே இருக்கேன். பெரிய உத்யோகம், மனைவி, குழந்தைகள் சௌக்கியம்…”

பெரியவாள் அணுக்கத் தொண்டர்களைப் பார்த்தார்கள்.

“இவன் கதை தெரியுமோ?”

‘தெரியாது’ என்று எல்லோரும் தலையாட்டினார்கள்.

பெரியவா கதை சொன்னார்கள்.

“சந்தானராமன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பையன். பெற்றோர்கள் படு சிக்கனம். குழம்பு, ரஸம், மோர்—–அவ்வளவுதான் தினமும்.

பத்து வயதுப் பையன், மற்றப் பையஙன்கள் போண்டா, வடை, பஜ்ஜி, தோசை, இட்லி என்றெல்லாம் சாப்பிடுவதைப் பார்க்கும்போது, ஏங்கிப்போவான்.

நாக்குச் சபலத்தைத் தீர்த்துக்கொள்ளணுமே?…

வழி கண்டுபிடித்தான்.

அப்பாவின் சட்டைப்பையில் கைவிட்டான். நிறைய காசுகள் இருந்தன. ஒரு அணா( இன்றைய 12 பைசா) மட்டும் எடுத்துக்கொண்டான். ஒரு வடை—ராமு ஐயர் காப்பி கிளப்பில்!

மறுநாள் ஓர் அணா——–பஜ்ஜி!

அடுத்த நாள் ஓர் அணா—போண்டா.

இவன் அப்பாவுக்கு சந்தேகம் தட்ட ஆரம்பித்தது. ‘பையில் காசு குறைகிறமாதிரி இருக்கே…’

ஒருநாள் கையும் களவுமாக அகப்பட்டுக்கொண்டான், சந்தானராமன்.

வழக்கம்போல் பெரியவா தரிசனத்துக்கு வந்தார்கள் அந்தக் குடும்பத்தினர்.

தகப்பனார், பெரியவாளிடம் முறையிட்டார்.

“…பையன் திருட ஆரம்பிச்சுட்டான். இப்பவே இப்படி இருந்தால், பிற்பாடு திருட்டுப் பழக்கம் வந்துடுமோன்னு கவலையாயிருக்கு…பெரியவா புத்தி சொல்லணும்….”

பெரியவாள் உதடு பிரியாமல் சிரித்தார்கள்.

“பகவான் கிருஷ்ணன் கூட சின்ன வயசில், வெண்ணெய், தயிர், பால் திருடியதாகச் சொல்வார்கள். அதனால் அவனுக்கு, நவநீதசோரன்னே பேர் வந்துடுத்து. உன் பிள்ளை சின்னப்பையன். நாக்கு கிடந்து அலையறது. சகஜம்தானே…. வாய்க்கு ருசியாக பட்சணங்கள் பண்ணிக் கொடுக்கச் சொல்லு. வசதியில்லாத குடும்பமா இருந்தா—–‘அப்பாவைத் தொந்திரவு செய்யாதே; திருடாதே’நன்னு பையனுக்கு புத்தி சொல்லலாம். இப்போ உனக்குத்தான் சொல்லணும். Pocket expense—க்கு அப்பப்போ ஓரணா—-ரெண்டணா கொடு. இனிமேல் திருடமாட்டான். பெரிய உத்யோகம் பார்ப்பான்….
என்று சொல்லி கதையை முடித்தார்கள் பெரியவா.
பெரியவ குரலை ஏற்றி இறக்கி, கைகளை ஆட்டி அசைத்துக் கதை சொன்னதை எல்லோரும் சுவைத்தார்கள்.

‘நவநீதசோரன்’ கண்களில் யமுனை பெருகிக்கொண்டிருந்தது!

Read more: http://periva.proboards.com/thread/2781/mahaperiavas-sarvagnathvam#ixzz3Vob004rL

source:::: http://www.periva.proboards.com

Natarajan