Dinner to Muslim Youths …By Mahaperiavar in 1921!!!

What you will be reading below is assorted selections from a book (“ MAHAPERIYAVAL VIRUNDHU”) written by the great author Sri Ra. Ganapathi  :These cover various incidents showing the universality and greatness of Maha Periyavaa.

Even during the 1920s ParamAchArya hosted a dinner for the Muslims, whose sense of unity and patriotism ran high in those days.  Two hundred Muslim youths from an Islamic Youth Forum performed an exemplary service in the Mahamaham festival of 1921 in Kumbakonam. ParamAchArya, who was camping at Patteesvarm nearby, heard about it and sent some maTham officials to bring the Muslim youths to him. The youths were very happy that Shankaracharya had called them to his presence. They stood before him showing utmost reverence.

ParamAchArya praised their seva and heard the details about their Forum. He inquired their personal details such as native place, education, occupation and family of all the two hundred youths individually, and made everyone of them immensely happy. He also presented a silver cup as a memento from Kanchi maTham for their seva.

Like the cherry on the ice cream, ParamAchArya ended the interview with a tasty, three-course dinner to the youths.

*** *** ***

In the year 1924, Kaveri and Kollidam were overflowing with floods that threatened to merge them into a single river. Tiruvaiyaru and its surroundings were the worst affected by the floods. At that time, for nearly fifteen days, cartloads of cooked food were sent from Kanchi maTham for the thousands of poor people in the area. The food was served by the Congress workers under the supervision of Lawyer Sarangapani Iyengar, leader of the Tiruvaiyaru Congress Committee. 

The daily culinary needs of SrimaTham were reduced to the minimum, in order to use the stored provisions for feeding the poor. They worshipped the great sage who fed them as God.   The press praised this social service as the largest till then by a Sanatana Religious Institution.

*** *** ***

During the last days of the year 1931, the persecution of the Congress workers by the British government was at its peak. People and organizations were warned of stern action against any support for the Congress members. 
ParamAchArya was camping at Arani in the North Arcot district. A group of Congress members wanted to meet him. The maTham officials informed the sage that his meeting the Congress workers might create problems for SrimaTham.   ParamAchArya heard their apprehensions with concern and then said calmly, “Ask all the members of the group to come here. Also arrange for feeding them from SrimaTham.”

The stunned maTham officials carried out the orders of the sage with consternation, but there was no problem from the government.  When the Manager brought the happy news of no reaction from the British government, ParamAchArya said, “If I were to close the doors on people who want to meet me, I would not be fit to carry the title Jagatguru and sit on the throne of this Peetam.”

*** *** ***

ParamAchArya used to quote the Tamil saying ‘Feed everyone, without any distinction’ (yArkkum idumin, avar ivar ennnanmin) and explain that no distinction of any kind must be entertained in offering food. He would be delighted to explain the Keralite tradition of feeding even the thieves at night! This custom existed in the place called Cherukkunnam, Kerala, in the Annapurani temple. After feeding the bhaktas in the temple, food packets were prepared and kept tied to the trees in the night, for the use of any prowling thieves. 

ParamAchArya also took delight in explaining the reference in the Sagam Literature of how the Chera king Udhiyan Cheraladhan earned the name Perum Sotru Cheraladhan (the king who was the chief host) by feeding the opposite camps of the Pandavas and the Kauravas during the Mahabharata war.

Kannappan the hunter fed Shiva Mahadev. Guhan the hunter fed Sri Rama. Here, the hunters named the Senjus of the Srisailam forest area were fed by the Paramacharaya!

During the 1934s, when the road transport facilities were very scanty, ParamAchArya was traveling with his entourage in the desolate forests of Srisailam. Somewhere on the way, they came across the Senju hunters. Mistaking them for their foes, the hunters raised their bow and arrows initially, but when they saw the sage with hisdivya tejas, they realized their mistake and became friendly.

The people who came to oppose their passage became their security guards, carrying their luggage and watching over their camps at night time. Only after safely seeing off ParamAchArya and his entourage at their next destination, the hunters assembled before them to take leave.

ParamAchArya ordered the manager to give them some cash, but they refused to touch the money. The leader of the group said something to the manager, who nodded his head in disapproval and spread out his hands. 

Paramachara snapped his fingers and called the manager to attention: “What is it that he asks for and you refuse?”

“They want to show their dancing skills before PeriyavA”.

“So you told them that I can’t see their dance because it was your opinion as manager that it was beneath the dignity of SrimaTham.”

There was not any trace of anger in ParamAchArya’s words. The manager was silent.

And the ParamAchArya, who would not witness the performance of even the great and popular dance artistes, gave them permission to dance before him, with a condition: that while any of their males could dance, only those females who hadn’t attained puberty could join the males in dance.

ParamAchArya asked them, “you might have different types of dances to suit different occasions: one for Swami (God), one for victory, one for sports and so on. What type of dance are you going to perform now?”

They gave a telling reply: “We are going to perform the dance reserved only for the closest of our relatives.”

ParamAchArya witnessed their dance, blessed them, and hosted a nice dinner for them.

*** *** ***

ParamAchArya was travelling in the Kodavasal – Koradacherry route. On the way in Tirukklambur, the slum people met him and submitted their humble offerings.

ParamAchArya heard their welfare and woes. Unhurriedly, he discussed the details with the manager as to what SrimaTham could do to mitigate their woes, either in their own capacity or with the charity of affordable devotees.

The managers and the other officials started worrying about the ensuing delay for their next camp and the following pujas. The god of the poor, however, seated himself among them, and ordered dhotis and saris for every nandan – nandini from the local textile shop. If that shop didn’t have the required goods, ParamAchArya ordered them bought at Kodavasal. He also ordered prepartion of thick sambar rice under the shades of the trees.

The manager was worried that the two or three hours time spent in these activities would delay reaching their next camp and that it would be very tedious for PeriyavA to undertake the long puja thereafter.

When he started to express his feeings, ParamAchArya said simply, “this is also a puja.”

*** *** ***

Two years after his Varanasi trip, when ParamAchArya was returning, he had to camp for three days in the Kyonjersamastanam of the hilly areas. His heart overflew with campassion at the pitiable conditions of the tribals in the area. He told the manager, “for all the three days we stay here, we should arrange to feed them.”

The manager hesitated with a request, “Those people are over a hundred and fifty families. We don’t have the facilities to cook food here.”

“Then give them as uluppai“, replied the sage.

Giving as uluppai is giving supplies of food articles, vegetables and fruits. For three days the tribals enjoyed the bounty of SrimaTham.

In the same way, ParamAchArya ordered serving three days supplies to the suffering employees of a circus company in Ilayattankudi, that was closed down.

*** *** ***

It seems that there was only one occasion in the history of SrimaTham, when rice and other food supplies were carried on the back of the SrimaTham elephant! ParamAchArya, the udAra murti created history with such an incident, to fill the udarams of the poor harijan people.

It was November 1940. The village was heavily flooded when ParamAchArya reached Tiruchettankudi from Tirumarukal. News reached his ears that over five hundred harijans in the area were suffering, as a hailstorm lashed on.

ParamAchArya hastened the officials to rush them food supplies, but was informed that it was not possible for bullock carts to pass through the rain inundated roads.

“Then you send the supplies on the back of the elephant. This place is known as Ganapateesvaram,” said ParamAchArya, poining out the harmony. “So Pillaiyar will be happy that an elephant partakes the jana seva.”

*** *** ***

The dog, according to shastras is of a low birth. The Guardian of Shastra also extended his bounty to the dogs.

In the year 1927, a dog came to SrimaTham camp on its own and started keeping vigil. After his biksha was over, ParamAchArya ordered that the dog be fed. Strangely, after tasting the food from the maTham, the dog stopped accepting food from anyone else. 

The dog used to trot under the palanquin known as mena which carried ParamAchArya. Sometimes it would run between the massive, moving legs of the elephant! When the palanquin was parked, it would step aside to a distance and watch the sage descend and walk, wagging its tail.

At one time, the officials thought that the dog had become mad and ordered a servant to leave it in a village, about forty kilometers away from their camp. No sooner had the servant returned, than the dog also had got back to the camp! From that time, until its death, the dog kept vigil and also kept a vow not to take food until it had a darshan of ParamAchArya.

As he resumed his divine duties after a short rest following his biksha, ParamAchArya would first inquire if the dog was fed.

*** *** ***

There was an incident when ParamAchArya served food for an entire army of dogs.

He was observing chAturmAsyam at Vasanta Krishnapuram near Tirukkovalur in the year 1947. The peak of Tiruvannamalai hill, about twenty kilometers away, was visible from that place. ParamAchArya used to perform a puja for the mountain that was Lord Siva’s form at where he stayed, with a darshan of the peak.

During one such puja, when he was meditating, a dog came and put its mouth to the water in the kamandaluh. The people around were very much upset by this happening, and a devotee who was a retired government official, stoned the dog, which ran howling, and stopped at a safe distance. 

ParamAchArya’s eyes opened at the anxious hubbub. He looked at the people aroud him and ordered: “Collect all the available dishes from the houses of the agrahAram. Also bring bucketfuls of water.”

The volunteers group that included retired official went around and brought the food and water. As aramAchArya gestured, the dog that was standing at a distance came near and stopped hesitatingly. As he gestured a second time, soemthing very strange happened.

An army of dogs came from nowhere and calmly arranged themselves in a row, without showing any signs of hurry for the food that was before them. ParamAchArya offered food and water to the dogs through the retired official who had stoned the dog earlier.

“Life without God is like an unsharpened pencil 
– it has no point.”

source::::input from a friend of mine

natarajan

 

“OM ” Is Not Just A Mantra…But Also A Medicine…

Aum is medicine, not just mantra.

AumPramila Krishnan | Deccan Chronicle | Chennai::  Abdul Khader chants ‘Aum’ 30 times during his walk at Gill Nagar park every morning and swears it has significantly helped in healing his acute arthritic pain.

“I used to pray seated in a chair because of acute knee pain from arthritis acquired from long hours of doing business standing. Thanks to the yoga asanas, breathing exercises and the chanting of ‘Aum’, I am now able to kneel on the mat for my namaz five times a day,” said the 50-year-old grocer of MMDA colony in the city, talking excitedly about the wholesome healing experienced at the government yoga and naturopathy college hospital near Anna arch.

“When the doctors explained that chanting ‘Aum’ is not religious but provides therapeutic gain, I readily agreed to follow that. I am happy I did it,” Khader told Deccan Chronicle.

Dr Kanimozhi, assistant professor of yoga, says she had prescribed ‘Aum’ chanting for even cancer patients, along with other naturopathy medicines. “The chant controls the secretion of stress hormones and acts as a pain reliever. It is scientific as the chant creates a neuro and psycholinguist effect while a positive aura forms around your body when you do it.”

There are several patients at the hospital — including Muslims and Christians — who have benefited from chanting ‘Aum’, prescribed along with yoga asanas and nature healers, and gained relief from ailments such as pain, insomnia, stress, stuttering and other speech difficulties.

The case of 55-year-old Edwin, a senior army officer tormented by ankylosing spondylitis for over a year, is another example. He has healed from chanting ‘Aum’ and practising asanas and breathing exercises.

“Edwin’s case sheet reveals that after two months of practice, he could flex his joints and his sleep cycle got normal,” said Dr P. Prabhu, expressing happiness that more and more patients are turning to ‘Aum’ and other natural healers.

Courtesy: DC.
 source:::::input from a friend of mine ….
natarajan

Posted in Hindu HeritageHindu Scriptures and Hindu ResearchHindu way of Life | Tagged:  |

தீபாவளி பயணம் ….”அண்ணாச்சி நம்ம ஊரா ” ?!!!

பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர். இதுதான் நம் மக்களின் தலைவிதி’னு சிவாஜி பேசி நான் கேட்டப்ப, எனக்கு ரொம்ப சின்ன வயசு. அப்போ, ‘இதுல என்ன இருக்கு’னு தான் தோணுச்சு. ஆனா எங்க ஊரை விட்டுட்டு, சென்னைல வந்து வேலை பாக்குறப்போ தான், அது எவ்வளவு கஷ்டமான விஷயம்னு புரியுது.

மானேஜர் கால்ல கைல விழுந்து, ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்து ஐஸ் வெச்சு, ஊரைப்பத்தி பதிவெல்லாம் போட்டு, அதை அப்படியே அகஸ்மாத்தா அவருக்கு அனுப்பி, படிக்க வைச்சு, தீபாவளிக்கு ‘லீவ்’ வாங்குறத பத்தி மட்டுமே தனியா ஒரு மெகா சீரியல் எடுக்கலாம்.இப்படி லீவ் எல்லாம் வாங்கிட்டு, எத்தனை ‘பேன்’ வைச்சாலும் காத்தே வராத, மூலையில இருக்குற கோயம்பேடு ‘முன்பதிவு’ மையத்துல, எப்படியோ டிக்கெட் ‘புக்’ பண்ணிட்டேன்.தீபாவளிக்கு முந்தின நாள், அரக்கப் பரக்க தி.நகர்ல சுத்தி, சொந்தக்காரன் பங்காளிக்கெல்லாம் துணி எடுத்து; அடையார் ஆனந்தபவன்ல சண்டை போட்டு ஒரு கிலோ காரம், ஒரு கிலோ இனிப்பு வாங்கிட்டு; எட்டு மணி பஸ்சுக்கு ஏழரை மணிக்கே பெருங்களத்தூர்ல வந்து நின்னாச்சு.நம்ம ஆட்களுக்குன்னு இது அமையுதா, இல்லை……
”அண்ணாச்சி! நம்ம ஊரா?”
“நீங்க எந்த ஊரு?”
“மேலச்செவலு. நீங்க?”
“நமக்கு பாளையங்கோட்டை.”
“சரி அண்ணாச்சி, ஊருக்கு இனிப்பு ஒண்ணும் வாங்கல கேட்டியளா. ஒரு நிமிசம் நம்ம பொட்டிய பாத்துக்கிட்டீங்கன்னா, ஓடிப்போயிட்டு ஓடியாந்துருவேன்”
சொந்த ஊர்ல இருக்கும்போது ஒருத்தன ஒருத்தன் கண்கொண்டு பாக்கோமோ இல்லையோ, இந்த மாதிரி சமயத்துல பாசம் பொங்கிரும் நமக்கும்.
”அதுக்கென்னா… போயிட்டு வாங்க”னு, அனுப்பி வைச்சேன். போனவன் ரொம்ப நேரமா வரவேயில்ல. அவன் பொட்டியெல்லாம் பாத்தா, சென்னைய காலி பண்ணிட்டு போற மாதிரி இருந்தது.
ஒருவேளை பஸ் வந்துட்டா என்ன பண்ணுற துங்கற யோசனைல இருக்கும்போதே, ஓடியாறென்னு சொன்னவன், கால்ல எட்டு போட்டுக்கிட்டு வுந்தான்.
“இனிப்பு எங்கவே?”
“அந்த கடைக்கு முன்னால நம்ம கடை இருந்ததுல்லா”னு கேவலமா சிரிச்சான்.
பயங்கர குடி. என்ன கருமத்த குடிச்சுத் தொலைச்சானோ தெரியலை, ஆனா அது, என் கொடல தான் பொரட்டி எடுத்துச்சு.
“இந்தாரும் உம்ம பொட்டி. இனிமே எங்கேயும் போவாதேயும். என்னால பாக்க முடியாது”
“அண்ணாச்சி சாப்பிடுவியளா?” கைப் பெருவிரலை வாய்க்கு காமிச்சு கேட்டான்.
“இல்லை அண்ணாச்சி”
“ஐயோ உங்களுக்கும் சேத்துல்லா வாங்கிட்டேன். தீவாளிக்கு கூட இருக்குறவங்களுக்கு இது கூட செய்யலைனா எப்படி?”
“அய்யோ. எனக்கு பழக்கமில்லை. உங்க அன்புக்கு…நன்றி.” இவங்கிட்ட இருந்து எப்படி தப்பிக்க?
மணி எட்டாச்சு, எட்டரையாச்சு. வண்டி வந்தபாடில்ல.
‘சரி, தீவாளி நேரம், சென்னைக்குள்ள கூட்டமா இருக்கும் அதான் லேட்டாகுது’னு நின்னுகிட்டிருந்த எனக்கு, ரொம்ப கோவமாயிருச்சு.
மணி 10! ஆனா பஸ் வர்றதுக்கு எந்த அறியையும் காணோம், குறியையும் காணோம்.
ஒன்பது மணி பஸ்சுக்கு போறவங்க, பத்து மணி பஸ்சுக்கு வந்தவுங்கனு நிக்க எடமில்லை. நிக்க எடமில்லாதவன் எல்லாம் ‘டாஸ்மாக்’ல போய் உட்காந்துட்டானுவ.
நானாவது ‘நான் – ஏசி’ பஸ். ‘ஏசி’ பஸ்ல போறவன் எல்லாம் செத்தான். காலைல மப்புலதான் போய் எறங்கணும்.
அரசு பஸ் தான் லேட்டுனு பாத்தா, ஆம்னி பஸ்சுக்கும் இதே நிலைமைதான்.சில ஆம்னி பஸ்ல எல்லாம் டிக்கெட் குடுக்கும்போது, டிரைவர் ‘போன் நம்பரோ’, கண்டக்டர் ‘நம்பரோ’ சேத்தே குடுக்கறாவ. அது மட்டுமில்லாம நம்ம ‘பாயிண்டுக்கு’ வண்டி வாறதுக்கு முன்னால ஒரு ‘மெசேஜ்’ கூட வரும்.ஆனா, அரசு பஸ் எங்க நிக்குதுன்னு யாருக்குமே தெரியாது. நம்ம மேலச்செவல்காரரு, எனக்குனு வாங்கினதையும் குடிச்சிட்டு, பயங்கர கொசுக்கடிலயும் சிரிச்சுட்டே நின்னாப்புல.மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, நாஞ்சில் நாடுன்னு நம்ம பக்க தமிழெல்லாம் எதிரொலிக்கிறப்பத் தான், “எல்லா தீவாளி வண்டியும் பை-பாஸ்லயே நிறுத்திட்டானாம்யா. கோயம்பேட்டுல இருக்குறவனுக்கே வண்டி வல்லயாம்”னு, ஒருத்தன் சொன்னான்.
நாசமா போச்சு. பெருங்களத்தூர் பஸ் ஸ்டாப் கட்டணக் கழிப்பிடத்துல தான் தீவாளிக் குளியலைப் போடணும்னு தலையில எழுதி இருந்தா என்ன பண்ண முடியும்?
அடப்போங்க… குளியல் என்ன, கூடி நின்ன கூட்டத்தால, ஒண்ணுக்குக் கூட இருக்க முடியாத நெலம! ‘டாஸ்மாக்குல’ பத்து மணிக்கு முன்னாடி போய், ரெண்டு பீர் குடிச்சவன் எல்லாம் என்ன பண்ணனும்னு தெரியாம தவிச்சுட்டானுவ. கண்ணுல மரண பீதி.கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் கூட இல்ல. பொம்பளையாள் இருக்குற எடத்துல முக்கால்வாசி பயலுவ குடிச்சிருந்தானுவோ, எதுனா எக்குத் தப்பு நடந்தா பாக்கக் கூட யாருமில்ல. ஒரு வேளை தப்பைத் தட்டிக் கேக்க நம்ம இங்க இருக்கோம்னு அவிங்களுக்கு தெரிஞ்சிருக்கோ என்னமோ!
ஒருவழியா, 12 மணி வாக்குல பஸ் வந்து, நின்னப்போ மேலச்சேவல் நல்ல தூக்கம். ‘சரி ஊர்க்காரனாச்சே’னு ஏத்தி விட்டா, ‘கண்டக்டர்’கிட்ட அப்பத்தான் டிக்கெட் வாங்க துட்டை நீட்டுறான்! கண்டக்டரு, என்னல்லாம் வைய்ய முடியுமோ வைஞ்சிட்டு, டிரைவருக்கு பின்னாடி இருந்த ஒரு எடத்துல உட்கார வெச்சுட்டார்.

‘நல்ல வேளை, இவன் எனக்குப் பக்கத்துல இருக்குற சீட்டுக்கு வரலை’னு சந்தோஷமா போய் பார்த்தா, எனக்குப் பக்கத்துல அவனையும்விட மொரட்டுக் குடிகாரன் ஒருத்தன்! தலையெழுத்து.’12 மணிக்கு வந்தாலும், நாலு மணிக்குள்ள ஊரு போய்ச் சேர்ந்துருவேன்’ங்கற வெறியில நம்ம டிரைவர் ஓட்டினாரு பாருங்க…பஸ்ல குடிச்சிருந்த அத்தனை பேரும், ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சாப்பிட்டது வரைக்கும் வாந்தி எடுத்துட்டாங்க.அதுலயும் நம்ம முன்சீட்காரர், டிரைவர் முதுகுலயே வாந்தி எடுத்து, அதனால வண்டி ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு கெளம்பிச்சு.இதெல்லாம் தாண்டி, காலைல 11 மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ, சொந்தக்காரன், பங்காளினு எல்லா பயலும் படத்துக்கு போயிட்டானுவோ. ச்ேச… இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து, என்னத்தக் கண்டோம்?காலைல எண்ணெய் தேச்சுக் குளிக்க, பட்டாசு வெடிக்க எல்லாம் பாக்கியமே இல்லாம, பட்டணத்து வாழ்க்கைக்கு திரும்புறதுக்கு, தீவாளி முடிஞ்ச அடுத்த நாளே பஸ்சுக்கு வந்து நின்னேன்.
“பாஸ்! சென்னைல எங்க?”
“அம்பத்தூர்.”
“ஒரு அஞ்சு நிமிசம் நம்ம பைய பாத்துகிடுதியளா? இந்தா வந்திருதேன்…”
“நான் ஊருக்கே போகலைடா!!”

source::: Dinamalar…Tamil Daily

natarajan

படித்ததில் பிடித்தது !!!…. ” கொளுத்திப் போடு ” !!!….

டார்கெட்….அரைப் பக்க  கதை !!!

அந்த பிரமாண்ட மண்டபத்தில் ஜாதி மத பேதமில்லாமல் அனைத்து மதத்தினரும் கூடியிருந்தனர். அங்கு நடக்க விருப்பது அனைத்து மதத்தினர் பங்கு பெறும் மழை வேண்டி பிரார்த்தனை. வெவ்வேறு மதத்தினருக்கு வெவ்வேறு இடம் ஒதுக்கப்பட்டடிருந்தது. அங்கு அவரவர் முறைப்படி பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அந்த விசேஷ ஏற்பாட்டின் ஐடியாவுக்கு சொந்தக்காரர் தொழிலதிபர் ஜே.கே.விற்கு பாராட்டு மழை.
பிரமாதம் சார், வித்தியாசமான யோசனை. எல்லா மதத்தினரையும் ஒன்று சேர்த்து புரட்சி பண்ணிட்டீங்க. மத நல்லிணக்கத்திற்கு வித்திட்டிருக்கீங்க. எல்லாவற்றிற்கும் சிரித்து மழுப்பி நகர்ந்த ஜே.கே. ஒரு பிரபல தொழில் வித்தகர். அவர் புதிதாய் துவங்கி இருக்கும் குடை, ரெயின்கோர்ட், ஜெர்கின் போன்றவற்றை தயாரித்து தமிழ்நாட்டில் மார்கெட்டிங் செய்யும் தொழில் இலக்கை எட்ட முடியாமல் தத்தளிப்பதால் தான் இந்த ஏற்பாடு. அந்த விஷயம் பாவம் அவரை விழுந்து விழுந்து பாராட்டும் நபர்களுக்கு தெரியாதே.
-அரியாஸ்.

source::::Kumudam Tamil Weekly

 

கொளுத்திப்  போடு !!!….ஒரு பக்க கதை !!!!
சுஷ்மா, ஜீன்ஸ் – உடல் ஒட்டின பனியனுடன், உலர்த்த நேரமில்லாத ஈர முடியுமாய் கிளம்ப, “சுஷ்! ஒரு வாய் சாப்பிட்டு போடி…!’
“நேரமாச்சும்மா வரேன்!’ என்ற செருப்பில் நுழைந்தாள். அதற்குள் அம்மா பின்னாடியே ஓடிவந்து லாப்டாப் பையில் டிபன் பாக்ஸை செருகி, “போன உடனே மறக்காம சாப்பிட்டிரு’
“சரிம்மா, பை!’ என்று ஓடி தனக்காக காத்திருந்த டி.வி. சேனல் வண்டியில ஏறி…. செல் ஒலிக்க “இதோ கிளம்பிட்டேன் சார்!’
“அக்கா.. போலாமா?’ என்று டிரைவர் பின்னால் திரும்பிப் பார்த்த பகுதி அவளுக்கு கூசிற்று. என்ன செய்ய முடியும்!
அழகில்லை – நிறமில்லை – களையில்லை – முடியில்லை – வேண்டிய ளவுக்கு வேண்டியது வேண்டியபடி இல்லை என்று வருத்தப்படுபவர்கள் இருக்கிறார்கள் எல்லாம் இருந்தாலோ – இப்படி!
விஷûவல் கம்யூனிகேஷன் முடிந்து உடனே இந்த பிரபல சேனலில் சேர்ந்து சுஷ்மா எதிர்பாராமல் திடீர் பிரபலம்! பிரபலத்திற்கேற்ப கவர்ச்சியாக வேண்டிய கட்டாயம்!
அரசியல் – சினிமா – மீடியா – தொழிலதிபர்கள் என பெரும்புள்ளியுடன் பழகும் வாய்ப்பு. கை நிறைய சம்பளம்!
புதுப்புது யோசனைகள், யுக்திகள்! சேனலின் ரேட்டிங்கை கூட்ட வேண்டிய எப்போதும் ஓட்டம்! ஓய்விற்கும், தூங்கவும் பசி போக்கவும் நேரமில்லை. வசதியில்லாதவர்கள் காசில்லாமல் பட்டினி. காசிருப்பவர்களுக்கு சாப்பிட நேரமில்லை அல்லது டயட்!
இவர்கள் பம்பரமாய் சுழன்றால்தான் ஜனங்களுக்கு பரபரப்பு தர முடியும். இருப்பதை மறக்கணும். இல்லாததை பெரிசு பண்ணணும். போட்டி சேனல்களுக்கு முன்பு – முந்தணும்! அவன் ஏதாவது செய்து நல்ல பெயர் வாங்கினால் உல்டா பண்ணி காலி பண்ணணும்!
சுஷ்மா உள்ளே நுழைந்தபோது, ரிசப்ஷனிஸ்ட் “டைரக்டர் விக்னேஷ் பார்க்கச் சொன்னார்!’ என்று அன்பாய் விரட்டினாள்.
விக்னேஷ், “யெஸ், சார். நோ சார்! இந்த வாரம் செஞ்சிரலாம் சார்!’ என்று செல்லில் அடிபணிந்தபடி அவளை அமரச் சொன்னான். பாவம், இளம் வயதிலேயே வழுக்கை! அவளும் கேட்கட்டும் என்று ஸ்பீக்கரை அமர்த்தி அமர்ந்தான்.
எதிர்முனையில் சேர்மன். சேனலின் ஓனர். அப்போது எந்த நாட்டிலிருந்து என்று தெரியவில்லை எங்கிருந்தாலும் விரட்டி கழுத்தைப் பிடிப்பார்.
அள்ளி அள்ளி சம்பளத்தைக் கொடுத்துவிட்டு அனுபவிக்க நேரம் தராத குரூரம்; சேனலில் ஆரம்பித்த அவரது வாழ்வு இன்று உலகம் முழுக்க பல்தொழில்களில் பறக்கிறது! சிறக்கிறது. ஆக்கவும் அதைவிட அதிகமாய் அழிக்கவும் அவர் தெம்பு பெற்றவர்! குடும்பம் அமெரிக்க கிரீன் கார்டில்!
“விக்னேஷ்! நேத்து ஆரம்பிச்ச சேனல்காரன் புகுந்துவிளையாடறான். நீங்கள்லாம் என்ன பண்றீங்க? உலகத் தமிழர்களை உசுப்பற மாதிரி ஏதாவது…’
“யோசிக்கணும் சார்..’
“செய்றீங்க – அதுவும் அதிரடியாய் – நிலநடுக்கமாய்.. இன்னும் ரெண்டு நாளில்! அவனவன் தீபாவளி பட்டாசு வெடிப்பான். நாம அதுக்கு நாலு நாள் முன்னாடியே வெச்சிரணும்! அது சரவெடியா இருக்கணும்!’
“டன் சார்!’
“என்ன செய்யப்போறீங்கன்னு இன்னும் நாலு மணி நேரத்துல எனக்கு தெரிஞ்சாகணும்! கீப் கான்ஃபிடன்ஸியல்!’
“ஓகே சார்.’
“நம்மாளுங்களுக்கு முடிலேன்னா – சொல்லு! ஏஜென்ஸிகாரனை அனுப்பறேன் – காதும் காதும் – கண்ணும் கண்ணும் வச்சமாதிரி அவன் செய்வான்! சுஷ்மா எதிரேதானே இருக்கா… சுஷ்..’
அவள் வியர்த்து “ஹாய் சார்!’ என்று படபடக்க, “உன் பனியன் சூப்பர்! அதை வேலையிலும் காட்டு. பை!’
விக்னேஷ் குறுந்தாடியை வருடி; தலையை சிலிர்த்து, “சுஷ்… என் பண்ணலாம் சொல்லு! ஏதாச்சும் யோசிச்சியா…?’
“இல்லே சார்… பசிக்குது. அம்மா டிபன் கொடுத்தாங்க. ஷேர் பண்ணுங்க முதல்ல!’
இரண்டு இட்லி உள்ளே போய் மெஷினில் காபி பிடித்து ரூசித்ததும் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.
“சார்… ஏதாவது சாமியாரை களவாடுவோமா…?’
“யார் இருக்கா. பாக்கி…?’
“இல்லாட்டி என்ன போலி சாமியாரை உருவாக்குவோம். பொண்ணுங்களை அனுப்பி படம் பிடிச்சு.. அவங்களுக்கு பணம் கொடுத்து இலவச பப்ளிசிட்டி!’
“அதெல்லாம் தான் ஜனங்களுக்கு பழகிப்போச்சே! இதிலே பரபரப்புக்கு என்ன இருக்கு? புதுசா யோசி…!’
“பேசாம சினிமா – ஹீரோ – ஹீரோயினிடம் விலை பேசி… செட் அப் படம் எடுத்து… ரெண்டு நாளைக்கு மாத்தி மாத்தி அவங்களைப் பத்தி காரசார அறிக்கை விட வச்சா ஜனங்க ரசிப்பாங்க. பேசுவாங்க. அப்புறம் வேறு நியூஸ் வந்ததும் இதை மறந்துடப் போறாங்க!’
விக்னேஷ் பொறுமையிழந்து சேனங்களை இங்குமங்கும் திருப்பிக் கொண்டிருந்தான். திருவிழா! பஜாரில் வெடிகுண்டு! கப்பல் எரிந்து நாசம்! விமானம் கடத்தல்..! சிரியாவில் ஆயிரம் பேர் சுட்டுக்கொலை! எகிப்தில் போராட்டக்காரர்கள் மேல் திராவக வீச்சு! ஈராக்கில் கார் வெடி குண்டு! ஜப்பானில் நிலநடுக்கம்! அமெரிக்க எரிமலை! வெற்றிகரமாய் ராக்கெட் ஏவப்பட்டது!
உள்ளூர் சேனலை திருப்பினால் ரஜினி! விஜய்! அஜித்! அமீர்கான்! ஏழுலட்சம் கோடி ஊழல்! எங்களுக்கும் தனி மாநிலம் வேணும்! அஸ்ஸாமில் வெள்ளம்! தீபாவளி ரிலீஸ் படங்கள்!
காலை ஆறு முதல் மறுநாள் காலை ஆறுரை தீபாவளியை முன்னிட்டு சினிமா…! சினிமா நிகழ்ச்சிகளை வழங்குவோம்! ஒவ்வொரு சேனலிலும் ஆஸ்தான பட்டிமன்றங்கள்! சினிமா நட்சத்திரங்களின் அலப்பரைகள்!
என்ன செய்யலாம்?
ஃபோன் வந்தது.
எதிர்பார்த்தது போலவே சேர்மன்! பயபக்தியோடும் நடுக்கத்தோடும் எடுக்க, “விக்னேஷ்! இடைத்தரகன் ஒருத்தன் மாட்டினான். இன்னும் ஒரு மணி நேரத்துல உன்னை வந்து பார்ப்பான். அவன் கேட்கிற பணத்தை செட்டில் பண்ணி.. நாளை மாலையிலிருந்தே ஃப்ளாஷ் நியூஸ் ஓட விட்டிரு!’
“என்னன்னு சார்..?’
“அதான்ப்பா.. நம்மகிட்டே வாலாட்டினானே… மானநஷ்டவழக்குப் போட்டு ஜெயிச்சானே அந்த மந்திரியோட மகனாம் – வெளிநாட்டுல கொட்டமாம்! அவன் கையில ஆதாரம் இருக்காம். நாளை மாலை காசட் வரும். அது உண்மையான்னு மட்டும் செக் பண்ணிகிட்டு செட்டில் பண்ணிரு!’
“ஓகே சார், எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.’
அந்த வெளிநாட்டுக்காரனுடன் மீட்டிங்! கேசட் பரிமாற்றம்! கேசட்டை பரிசோதிக்க அனுப்பி – அது ஒரிஜினல் என உறுதியானதும் –
“அமர்க்களம்! ஒரு பிரபலத்தின் வாரிசு வெளிநாட்டில் அட்டகாசம்! உல்லாசம்… இன்று இரவு பத்து மணிக்கு…’ என பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அவர்களது அனைத்த சேனல்களிலும் ரசிகர்களை உசுப்பேற்றி.. ஒளிபரப்பாயிற்று..
– பரபரப்புக்காக, பணத்திற்காக பேராசைக்காக, பழிவாங்குவதற்காக, பாடம் புகட்டுவதற்காக, பேரத்திற்காக, பிளாக்மெயிலுக்காக, ஓட்டுக்காக, ஓட்டுவதற்காக, வெட்டுவதற்காக, மிரட்டி -உருட்டி பொய்யை மெய்யாகக் காட்டி காட்டி சம்பந்தப்பட்டவர்களை காலி பண்ணி – சின்னச் சின்ன சாதி மத சண்டைகளை கலவரமாக உருவாக்கி, பிசினஸ், அரசியல் சாம்ராஜ்யங்களைத் தகர்த்து, பலரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டிருந்த அந்த சேனலில் –
அப்போது மிக பிரம்மாண்டமாக வெளியான அந்த உல்லாசக் காட்சியில் குறிப்பிட்ட மந்திரியின் மகனுடன் சேர்ந்து கொட்டமடித்திருந்தது – வெளிநாட்டில் படித்துவந்த அந்த சேனல் சேர்மனின் மகள் என்பது படம் பிடித்தவர்களுக்கோ ஒளிபரப்பினவர்களுக்கோ அப்போது தெரியாது!

 என்.சி. மோகன்தாஸ் 

source:::::Kumudam Tamil Weekly

நடராஜன்

 

கந்த சஷ்டி தோன்றிய கதை !!!

Temple images

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)

அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன்  சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில்  சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.  சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

source:::::dinamalar..tamil daily

natarajan

படித்து ரசித்தது ….வாரியார் சுவாமிகளின் அருளுரைகள் !!!

திருமுருக கிருபானந்த வாரியாரின் “குமுதம் வினா விடை” தொகுப்பில் இருந்து ரசித்தவை)

தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?

சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்..மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா. சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும்.

கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். “நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு” என்கின்றார் இராமலிங்க வள்ளலார்.

Photo: (திருமுருக கிருபானந்த வாரியாரின் "குமுதம் வினா விடை" தொகுப்பில் இருந்து ரசித்தவை)தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்..மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா. சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும். கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். "நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு" என்கின்றார் இராமலிங்க வள்ளலார்.
‘கொன்றார் பாவம் தின்றாரோடு’ என்று கசாப்பு கடைக்காரர் சொல்லுகின்றார். ‘தின்றார் பாவம் கொன்றாரோடு’ என்று புலால் உண்பவர் கூறுகின்றார். இதில் எது சரி? இதன் மூலம் இரு சாரார்களுமே பாவத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா?

‘கொன்றால் பாவம் தின்றால் தீரும்’ என்ற பழமொழிக்கு மற்றவர்கள் சொல்கின்ற பொருள் பிழையானது. கொல்லுகின்றவன், விலை கொடுத்து வாங்கித் தின்பவனுக்காகவே செய்கின்றான். ஆகவே அப்பாவம் முழுதும் அவனையே சேராது.

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்
– திருவள்ளுவர் (அதிகாரம்: புலால் மறுத்தல்).

ஆகவே, உயிர்களைக் கொன்ற பாவம், தின்பதனால் போகும் என்பது ஒரு சிறிதும் பொருந்தாது. ஒரு சிலர், ‘நான் கொல்வதில்லை, கடையில் இருந்து வாங்கித் தின்கின்றேன்” என்பார்கள்’ இதுவும் பிழையான கருத்தாகும். வாங்குவார் பொருட்டே விற்பவன் கொல்கின்றான். திருவள்ளுவர் ‘கொல்லாமை’ என்று ஒரு அதிகாரமும் ‘புலால் மறுத்தல்’ என்று ஒரு அதிகாரமும் தனித்தனியே கூறியிருக்கின்றார்.

கொல்லாமல் கொன்றதை தின்னாமல் சூத்திரம் கோள்களவு
கல்லாமல் கைதவரோடு இனங்காமல் கனவிலும் பொய்
சொல்லாமல் …………………தோகையர் மாயையிலே
செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே
— பட்டினத்தார்.

இவ்வாறு எத்தனை பிரகாரங்களாகப் பார்த்தாலும் ஊன் உண்பது பெரிய பாவமாகும்.

கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் அன்றே!!!
–இராமலிங்க வள்ளலாளர்

இனி, கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதற்கு சரியான உரை கீழ்வருமாறு.

புலால் உண்டவர்களை இறந்த பின் இருள் உலகத்தில் (நரகத்தில்) நிறுத்தி அவர்கள் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் வைத்து ஊட்டுவார்கள். அதை உண்டால் தான் அவர்கள் கொன்ற பாவம் போகும். இந்தக் கருத்தை அருணகிரிநாதர், ‘புவனத்தொரு’ என்று தொடங்குகின்ற திருசிராப்பள்ளி திருப்புகழில், ‘இறைச்சி அறுத்து அயில்வித்து’ என்று குறிப்பிட்டு இருக்கின்றார். எனவே, கொன்ற பாவமும் தின்ற பாவமும் தன் உடம்பைத் தானே தின்றால் தான் போகும்.

(திருமுருக கிருபானந்த வாரியாரின் “அது போல” தொகுப்பில் இருந்து)
மாடி மேல் ஏறுவதற்கு ஒரு கருவி ஏணி. மாடி மீது ஏறுவதற்கு என அமைந்த ஏணி மீதே பல மணி நேரம் நின்று கொண்டு இருக்க ஒருவன் விரும்புவானா ?. விரும்ப மாட்டான்.

—அது போல—

பிறவாமயைப் பெற நமக்கு அளிக்கப்பட்ட ஏணி போன்ற இவ்வுடம்பிலேயே (பிறந்தும் இறந்தும்) நின்று கொண்டிருப்பது அறிவுடமை ஆகாது. மதி நலமுடையோர் விரைவாக ஏணி மீது ஏறி மாடிக்கு செல்வது போல், இந்த உடம்பைக் கொண்டு பிறவாமயைப் பெற முயல்வார்கள்

இது கதையல்ல நிஜம்.கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?

கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”

அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.

வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை… உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?” என்றார்.

source:::: Thirumuruga Kripanandavariar  Swamigal page in facebook
NATARAJAN
Today 7 th Nov.. is His 20th ARADHANA DAY…

“வேர் என நீ இருந்தாய் …வீழ்ந்து விடாது இருந்தேன் நான் ” …

நடக்க முடியாத கணவனை சக்கரம் பொருத்திய பலகையில் அமரவைத்து இழுத்துச் செல்லும் பழனியம்மாள். (கோப்புப்படம்)

நடக்க முடியாத கணவனை சக்கரம் பொருத்திய பலகையில் அமரவைத்து இழுத்துச் செல்லும் பழனியம்மாள். (கோப்புப்படம்)

நான்கு மணி நேரத்தில் காதல், நான்கு நாட்கள் டேட்டிங், நாற்பது நாட்களுக்குள் திருமணம், 4 மாதங்களுக்குள் விவாகரத்து என ‘நவீன’ காதல், பல பரிமாணங்கள் அடைந்திருப்பதை பல சம்பவங்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றன. ஆனால், காதல் திருமணம் செய்த கணவன் போலியோவால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாத நிலையில், 40 ஆண்டுகளாக சக்கரம் பொருத்திய பலகையில் அமர வைத்து, ஊர்சுற்றி பிச்சையெடுத்து அவரைக் காப்பாற்றிய ஈரோட்டைச் சேர்ந்த அதிசயப் பிறவி பழனியம்மாள் தற்போது பரிதவித்துப் போய் இருக்கிறார்.

இதுநாள்வரை தனக்கு துணையாக இருந்த ஆசைக்கணவனின் திடீர் மறைவுதான் பரிதவிப்புக்குக் காரணம். ஒரு பெண்ணின் வைராக்கியம் என்னவெல்லாம் சாதிக்கும் என்பதற்கு மவுசி என்று அழைக்கப்படும் பழனியம்மாளின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

கண்டதும் காதல்…

ஈரோட்டை அடுத்த எல்லப்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் போலியோவால் பாதிக்கப்பட்டு, சிறு வயது முதல் நடக்க முடியாத நிலையில் இருந்தார். இவர் மீது, அதே பகுதியைச் சேர்ந்த பழனியம்மாளுக்கு இரக்கத்தினால் உருவானது காதல். ஆனால், இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, எதிர்ப்பை மீறி காதல் மணம் புரிந்தனர் இந்த தம்பதி. கால்கள் ஊனமுற்றதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத கணவன், அவரைத் தனியே விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இந்த காரணங்களால், கணவன் அமரும் வகையில், சக்கரம் பொருத்திய பலகையை தயார் செய்து, அதில் அவரை அமர வைத்து, பிச்சைப்பாத்திரம் ஏந்தினார் பழனியம்மாள்.

தத்தெடுப்பு

தங்களுக்கு குழந்தை யில்லை என்ற குறை யைப் போக்க, இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து, அவர்களை யும் வளர்த்து ஆளாக்கியது பழனியம்மா ளின் மனோதிடம். குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பது வரை, குறையேது மில்லாமல் நடத்தி வைத்தனர் இந்த பாசக்கார தம்பதி.

தாங்கள் வளர்த்த குழந்தைகள், குடும்பத்தோடு வெவ்வேறு பகுதிகளில் குடியேறினாலும், அவர்களோடு ஒண்டிப்பிழைக்க இவர்களின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. இதனால், சக்கர வண்டியில் கணவனை இழுத்தபடியே, பழனியம்மாளின் பயணம் தொடர்ந்து வந்தது. இந்த பாசத் தம்பதியைப் பார்க்கும் ஒவ்வொருவரும் வியப்பும், ஏக்கமும் அடைவது வாடிக்கை. யார் கண்பட்டதோ, கடந்த வாரம் ஆறுமுகம் உடல்நலக்குறைவால் இறந்து போனார். அவர் பாசமாக வளர்த்த குழந்தைகள், தகவல் கேட்டு பதறியடித்தபடி வந்து, தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகளை நடத்தினர்.

‘ஆலம் விழுதுகள் போல், உறவு கள் ஆயிரம் இருந்துமென்ன… வேரென நீ இருந்தாய்… நான் வீழ்ந்து விடாதிருந்தேன்’ என்ற பாடல் வரிகளைப் போல், இதுநாள்வரைத் தனக்கு சுகமான சுமையாய் இருந்த கணவன், தன்னை விட்டுப்பிரிந்த சோகத்தில் தவித்துப் போய் இருக்கிறார் பழனியம்மாள்.

முதியோர் உதவித் தொகை வேண்டி…

இருந்தும், யாரின் துணையுமின்றி தன் சொந்தக்காலில் நின்றிட வேண்டுமென்பதற்காக, முதியோர் உதவித்தொகை வேண்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்திருக்கிறார் அவர். பாசம், பதிபக்தி, வைராக்கியம், மனோதிடம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மனிதநேயம் என என்னென்ன நல்ல குணங்கள் இருக்க வேண்டுமோ, அவையனைத்தையும் தன் வாழ்நாளில் கடைபிடித்த பழனியம்மாளுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல. அனைவரின் கடமையும்கூட.

source:::::  Story by Govindarajan in The Hindu….Tamil
natarajan

” ஒரு ரூபாய்க்கு சுடச்சுட ஒரு தோசை ” !!!

மொறுமொறுவென தயாராகிறது ஒரு ரூபாய் தோசை

மொறுமொறுவென தயாராகிறது ஒரு ரூபாய் தோசை

எங்காவது ஒரு ரூபாய்க்கு தோசை கிடைக்குமா? அதுவும் இந்தக் காலத்தில்… தமிழரசுவின் மினி ஓட்டலில் கடலைச் சட்னி, சாம்பார் சகிதம் சுடச்சுட ஒரு ரூபாய்க்கு தோசை தருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு பக்கத்தில் இருக்கிறது திருவம்பட்டு. பச்சைக் கம்பளத்தை விரித்துப் போட்டதுபோல் சுற்றிலும் வயல்கள்.. அதன் மத்தியில் அமைந்திருக்கும் எழிலான இந்த கிராமத்தில்தான் தமிழரசுவின் ஒரு ரூபாய் தோசைக்கடை உள்ளது. கிராமத்து மணம் கமழும் சிறிய கடை என்றாலும் காலையில் வியாபாரம் களைகட்டி விடுகிறது.

“அந்தக் காலத்துல எல்லாம் தீபாவளி, வருஷப் பொறப்புன்னாதான் எங்க வீடுகள்ல இட்லி, தோசையைப் பாக்க முடியும். மத்த நாள்ல பழைய கஞ்சியோ கூழோதான். நம்ம புள்ளைங்க தினமும் இட்லி, தோசை சாப்பிடணும்கிறதுக்காக இந்த கடையை ஆரம்பிச்சேன். ஆனா, இப்ப இந்த ஊரு சனமே வந்து சாப்பிட்டுப் போகுது’’ அகவை அறுபதைக் கடந்த தமிழரசு தனது மலிவு விலை தோசைக்கடைக்கு அறிமுகம் கொடுத்தார்.

கடையின் ஒரு பகுதியில் பெரிய தோசைக் கல்லில் ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து தோசைகளை வரிசைகட்டி வார்த்துக் கொண்டிருந்தார் தமிழரசுவின் மருமகள் ஷீலா. இன்னொரு பக்கம் ஷீலாவின் கணவர் ஜீவா, மந்தார இலையில் பார்சல் கட்டிக் கொண்டிருந்தார்.

கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு தமிழரசுவிடம் பேச்சுக் கொடுத்தோம்…

நான் சின்னப் புள்ளையா இருந்தப்ப கருக்கல்லேயே கழனிக்கு போயிடுவேன். காலையில பத்து மணிக்கு அம்மா கூழ் கொண்டாருவாங்க. அதைக் குடிச்சிட்டு வேலை செய்வோம். மத்தியானத்துக்கு பழைய சோறும் வெங்காயமும். ராவிக்கு (இரவு)தான் சுடுசோறு. இட்லி, தோசை எல்லாம் தீபாவளிக்கு தீபாவளிதான்.

கல்யாணம் முடிஞ்சதும் ஓட்டல் கடை ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சேன். வீட்டுக்காரியும் தலையாட்டினா. 1984ல ரோட்டோரமா குடிசை போட்டு கடை ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல 10 பைசாவுக்கு தோசை குடுத்தோம். அப்புறம் 25 பைசா, 50 பைசா, 75 பைசான்னு ஏத்திக்கிட்டே வந்து 2000ல ஒரு ரூபாயாக்குனோம். அதுக்குப் பின்னாடி 13 வருஷமா விலை ஏத்தல. ஊர்க்காரங்க சப்போர்ட் இருந்தா நீங்ககூட ஒரு ரூபாய்க்கு தோசை குடுக்கலாம். மொத்தத்துல, இது நமக்கு நாமே திட்டம் மாதிரித்தான்… பெருமிதமாய் சொன்னார் தமிழரசு.

“ஒரு ரூபாய்க்கு தோசை குடுத்தா கட்டுப்படி ஆகுமா?’’ என்ற கேள்விக்கு பதில் சொன்னார் ஷீலா. “கிராமத்துல வெளையுற உளுந்து, நெல்லு எல்லாமே கம்மியான ரேட்டுக்கு எங்களுக்கு குடுக்குறாங்க. அதனால எங்களுக்கு கையக் கடிக்காது. சனங்ககிட்டயிருந்து அரிசி, உளுந்து சல்லிசா வாங்கி, அவங்களுக்கே கம்மி விலைக்கு தோசை குடுக்குறோம். வீட்டாளுங்களும் சாப்பிட்டது போக தினத்துக்கு முந்நூறு, நானூறு ரூபாய் கையில நிக்கும். பணம், காசுக்கு அதிகமா ஆசைப்படாம, மக்கள் நினைச்சா எல்லா ஊர்லயும் இதுபோல தோசைக்கடை போடலாம்’’ என்றார் ஷீலா.

வெங்காய விலை எகிறிக் கிடப்பதால் காரச்சட்னியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தி ருக்கிறார்கள். கடலைச் சட்னியும், சாம்பாரும் ஏழெட்டு தோசைகளை உள்ளே தள்ள வைக்கிறது. டிப்ஸ் கொடுக்கும் காசில் காலை டிபனை முடித்துவிடலாம் திருப்தியுடன்.

Topics:

தமிழகம்|விழுப்புரம்| source::::The Hindu…Tamil

natarajan

மாற்றத்தின் வித்தகர் ….திருச்சி சிவகுமார் !!!

பிரதமர் மன்மோகன் சிங் அபூர்வமாக, “இந்தியாவின் தேசிய அவமானம் இது” என்று ஒப்புக்கொண்ட பிரச்சினை ஒன்று உண்டு ஏழ்மை, இந்தியக் குழந்தைகளைச் சூறையாடுவது. வளர்ச்சிபற்றி வாய் கிழியப் பேசும் இந்நாட்டில்தான் ஒவ்வொரு நாளும் 3,000 குழந்தைகள் பசிக்கொடுமையால் உயிரிழக்கின்றன; 42% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் எடை குறைந்தவையாக இருக்கின்றன. இந்தியாவில் ஏழ்மை ஒழிப்புக்கான முயற்சிகளும் வறுமை ஒழிப்புக்கான போராட்டங்களும் அவ்வளவு எளிதானதல்ல.

பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி வீதிகளில், குழந்தைகளுக்காக உதவி கேட்டு நின்ற அந்த எளிய மனிதரை முதன்முதலில் பார்த்தபோது ஆச்சரியம். அவர் ஒரு விரிவுரையாளர். குமுழூர் அரசு ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றுபவர். ஒரு மளிகைக் கடைக்காரரிடம் அவர் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கேட்ட உதவி ஒன்றும் அவ்வளவு பெரிய உதவி அல்ல. 25 குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு அளிக்க அந்த மளிகைக் கடைக்காரர் ஏதாவது பொருட்கள் தர வேண்டும். அவ்வளவுதான். மளிகைக் கடைக்காரர் மறுத்துவிட்டார். அசராமல் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அடுத்த கடையை நோக்கிச் சென்றார் விரிவுரையாளர். அங்கும் உதவி கிடைக்கவில்லை. இன்முகத்துடன் இன்னொரு நன்றி. அடுத்த கடையை நோக்கிப் பயணம். இன்னொரு நாள் அவரை, ஒரு காய்கறிக் கடையில் பார்த்தேன். சலுகை விலையில் அதே சமயம், காய்கறிக் கடைக்காரருக்கு நஷ்டம் ஏற்படாத விலையில் காய்கறி கேட்டுக்கொண்டிருந்தார். மற்றொரு நாள் உள்ளூர் பிரமுகர் ஒருவர் வீட்டில் பார்த்தேன். மறுநாள் அந்தப் பிரமுகரின் பிறந்த நாள். எவ்வளவோ செலவுகளுக்கு மத்தியில், “ஏன் 30 குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு தரக் கூடாது?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

நாட்டிலேயே குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம்தான் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். காலை உணவுத் திட்டத்துக்கும் முன்னோடியாகிறது தமிழகம், விரிவுரையாளர் எஸ். சிவக்குமாரால். திருச்சியின் 25 அரசு சார் பள்ளிகளைச் சேர்ந்த பல நூறு ஏழைக் குழந்தைகளின் பசியைத் தீர்க்கிறது சிவக்குமார் அறிமுகப்படுத்திய ‘சமுதாயக் காலை உணவுத் திட்டம்’.

“நான் படிச்சது அரசுப் பள்ளிக்கூடங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும்தான். எங்க வீட்டில் பெரிய கஷ்டங்கள் எதையும் நான் சந்திக்கலை. அதே சமயம், கூடப் படிச்சவங்களோட கஷ்டத்தைப் பார்த்திருக்கேன். பலரோட படிப்பு அரசாங்கம் கொடுக்குற மதிய உணவுலதான் ஒட்டிக்கிட்டு இருந்ததுங்கிறதை நேரடியா உணர்ந்திருக்கேன். ஆனா, இன்னமும் எவ்வளவு குழந்தைகளைப் பசி கொன்னுக்கிட்டு இருக்குங்கிறதை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்து, ஒவ்வொரு பள்ளிக்கூடமா ஆசிரியர்களைச் சந்திக்கப் போனப்பதான் உணர்ந்தேன்.

அரசுப் பள்ளிக்கூடங்கள்ல காலை வேளைல பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போறப்பவெல்லாம் குழந்தைங்க மந்தமா நிக்குறதை அடிக்கடி பார்த்திருக்கேன். அதே மாதிரி காலை நேர வகுப்புகள்லயும் சில பிள்ளைங்க ரொம்ப சோர்வா உட்கார்ந்திருப்பாங்க. ஒருநாள் அப்படிப்பட்ட குழந்தைங்ககூடப் பேச ஆரம்பிச்சப்பதான் ஒரு விஷயம் தெரிஞ்சுது. காலையில வெறும் டீயும் பன்னும்தான் அவங்களோட உணவுங்கிறது. ‘சில பிள்ளைங்க மயக்கம் போட்டுக்கூட விழுந்துடுவாங்க; நாங்கதான் டீயோ வடையோ வாங்கிக் கொடுப்போம்’னு ஆசிரியர்கள் சொன்னாங்க. அன்னைக்கு முழுக்க நான் சாப்பிடலை. சாப்பாட்டுல கையை வைக்கும்போதெல்லாம் அந்தக் குழந்தைங்களோட முகம் வந்து மனசை வதைச்சுடுச்சு.

எப்போதுமே என்னோட பகல் பொழுது என்னோட தொழிலுக்கானதுன்னா, சாயங்காலப் பொழுது பொதுப் பணிக்குன்னு வகுத்துக்கிட்டு வாழறவன் நான். அதுக்கு முன்னாடி எவ்வளவோ விஷயங்கள்ல நான் ஆர்வம் காட்டியிருக்கேன். படிக்காத குழந்தைகளுக்கான ‘வீதிப் பள்ளிகள்’, ‘வீடு தேடிக் கல்வி’ங்கிற மாதிரியான முயற்சிகள் அதெல்லாம். இதுக்குப் பின்னாடி, பசியைத் துடைக்குறதுதான் முதல் கடமைன்னு இறங்கினேன்.

முதன்முதலா சேவா சங்கம் பள்ளிக்கூடத்துல, அங்குள்ள தலைமை ஆசிரியை விசாலாட்சி உதவியோட இணைஞ்சு இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். இன்னைக்குத் திருச்சியில மட்டும் 25 பள்ளிகள்ல காலை உணவு கொடுக்குறோம். இன்னும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, ஏராளமான ஊர்கள்ல பலரும் இந்தத் திட்டத்தை முன்னெடுக்குறாங்க” என்று சொல்லும் சிவக்குமாரின் திட்டம் எளிமையானது.

“ஒவ்வொரு பள்ளியின் ஆசிரியர்களும் தங்களால் இயன்ற ஒரு தொகையைப் பள்ளிக் குழந்தைகளுக்காக அளிக்க வேண்டும். கூடவே, அந்தப் பகுதியில் உள்ள கொடையாளிகளை அடையாளம் கண்டு, உதவி கேட்க வாரத்தில் ஒரு நாள் மாலைப் பொழுதை ஒதுக்க வேண்டும். இவ்வளவுதான். எல்லாப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்துவிடலாம்” என்கிறார் சிவக்குமார்.

“உள்ளூர்ப் பிரச்சினைகளுக்கு உள்ளூர் வளங்களை வைத்தே தீர்வு காண்றதுதான் இதோட முக்கியத்துவம். அந்தந்தப் பகுதியில உள்ள வசதியானவங்களைத் தேடிப் பிடிப்போம். அவங்களோட பிறந்த நாள், அம்மா அப்பா நினைவு நாள் மாதிரியான முக்கியமான நாட்கள்ல குழந்தைகளுக்கு உணவு கொடுக்கச் சொல்லிக் கேட்போம். தவிர, அரிசி கொடுக்குறவங்க அரிசி கொடுக்கலாம்; மளிகைச் சாமான்கள் கொடுக்குறவங்க மளிகைச் சாமான்கள் கொடுக்கலாம். விறகுன்னு சொல்லி ரெண்டு மரத்துண்டுகளைக் கொடுத்தால்கூட வாங்கிப்போம். மளிகைக் கடைக்காரர்கள், காய்கறிக் கடைக்காரர்கள்கிட்ட சலுகை விலையில பொருட்களைக் கேட்டு வாங்குவோம். நன்கொடையாளர்களை நேரடியா கடைக்காரர்கள்கிட்டே பணத்தைக் கொடுக்கச் சொல்லிடுவோம். மதிய உணவு சமைக்கிற ஆயாக்களே கொஞ்சம் முன்னாடி வந்து சமைச்சுத் தந்துடுவாங்க.”

இந்தத் திட்டத்தின் முக்கியமான இன்னோர் அம்சம்: முறைகேடுகளுக்கு வழி இல்லாமல் நடத்தப்படுவது.

“உதவியை ஒரு ரூபாய்கூடப் பணமா வாங்குறது இல்லை. ஒண்ணு, உணவை நேரடியா சமைச்சு நீங்களே வந்து தரலாம்; இல்லைன்னா, பொருளா தரலாம். பொருட்கள் எல்லாமே பள்ளிக்கூடங்கள்ல எல்லோர் பார்வையிலேயும் இருக்குறதாலேயும் எல்லோரோட பங்களிப்பாலும் இது நடக்குறதாலேயும் வரவுசெலவுல முறைகேட்டுக்கு வழி இல்லை” என்கிறார்.

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுங்களா? உலகத்துல இருக்குற எடை குறைவான குழந்தைங்கள்ல சரிபாதிக் குழந்தைங்க நம்ம இந்தியக் குழந்தைங்க. பல ஆப்பிரிக்க நாடுகளைவிட மோசமான சூழல்லதான், பசி பட்டினியில இன்னைக்கும் நாம இருக்கோம். 100 ரூபாய் இருந்தா போதும்; 20 பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு கட்டுச்சாதமும் துவையலும் கொடுத்துடலாம். 50 ரூபாய்தான் இருக்குன்னாகூட கூழ் காய்ச்சிக் கொடுத்துடலாம். பசிக்குற நேரத்துல எதுவுமே அவங்களுக்கு தேவாமிர்தம்தான். நாங்க உணவு கொடுக்க ஆரம்பிச்ச பிறகு, பல பள்ளிக்கூடங்கள்ல குழந்தைங்களோட வருகைப் பதிவு கூடியிருக்கு. நேரத்துக்குப் பள்ளிக்கூடம் வர்றாங்க. படிப்புல காட்டுற ஆர்வம் அதிகரிச்சு இருக்கு. முன்னைவிடக் குழந்தைங்க தெளிவா இருக்காங்க” என்று சொல்லும் சிவக்குமார், காந்தியிடம் சுட்டிக்காட்டுவது அவருடைய எளிமையை.

“தன்னைக் கடையனிலும் கடையனாகத்தான் எப்போதும் நெனைச்சுக்கிட்டு இருந்தார் காந்தி. அந்த நெனைப்பு இருந்தா போதும். யாரிடமும் இணைஞ்சுக்கலாம். நான் என்னை அப்படித்தான் நெனைக்குறேன். நீங்க உதவின்னு சொல்றதைத்தான் நான் இணைஞ்சுக்குறதுன்னு சொல்றேன்; ஏன்னா, சமூகத்துல எல்லா நல்ல காரியங்களுமே நாலு பேர் கூடுறதாலதான் சாத்தியமாகும்” இணையக் கூப்பிடுகிறார் சிவக்குமார்.

சமஸ் – தொடர்புக்கு: writersamas@gmail.com

natarajan

Every Stone Has a Story To Tell Here …..

The carving show Hanuman in front, since he was the only monkey that spoke in favour of Vibheeshana. Photo: Aravind Venkatraman

The carving show Hanuman in front, since he was the only monkey that spoke in favour of Vibheeshana. Photo: Aravind Venkatraman

The horse structure is composed of several women and the entire image is just about 50 cm. Photo: Aravind Venkatraman

The horse structure is composed of several women and the entire image is just about 50 cm. Photo: Aravind Venkatraman

The elephant structure is composed of several women and the entire image is just about 50 cm. Photo: Aravind Venkatraman

The elephant structure is composed of several women and the entire image is just about 50 cm. Photo: Aravind Venkatraman

 

Story By Pradeep Chakravarthy  in The Hindu ….

The Nambi Rayar Perumal temple, in Tirukkurungudi, offers a visual treat.

A place that can delight passionate supporters of art and sculptures is tucked away deep in southern Tamil Nadu not very far off from Kerala, 47 km from Palayankottai (Sri Vallabha Chaturvedimangalam in the old days). This massive 18-acre temple for Nambi Rayar Perumal, in Tirukurungudi, has held its secrets well. Even the senior scholars, relentless in their fieldwork and reach have forgotten to write a monograph. The Chitra gopuram and the main gopuram have more than 3,500 sq.ft of wooden and stone sculptures yet to be catalogued. The inscriptions are yet to be comprehensively recorded. The Chitra gopuram has outstanding stone and wooden sculptures.

To the right of the threshold one can see a series of sculptures such as a scene of traders from Arabia, with their ship, camels and other wares. The Pandya kingdom rested heavily on trade. It was therefore close to both its neighbours Kerala and Sri Lanka. Horses, spices, precious gems and metals were the key products. The area around the Tamirabarani and its tributaries formed the heart of the Pandya Kingdom. Although the capital was Madurai, food for the kingdom came from here – technically the Tamirabarani is not a perennial river but the Western Ghats ensured ample rain and therefore ample harvests. So, the most massive and prosperous temples of the kingdom were on the river banks rather than in far away Madurai.

Unique designs

The Chitra gopuram has several unique sculptures. Most are of scenes from the epics, the Bhagavatam being the most popular depiction. Others are from local legends and surprisingly for a Vishnu temple, many are of Saivite themes. The village has had a long history of accord between these two sub-sects of Hinduism. The sculptures reveal an extraordinarily imaginative sculptor who used space and lines to signify scale and movement. Much like the Chola frescoes in the Brihadeeswara temple, some sculptures tell a story and give definite clues to how the frame frozen in time will end, others are tantalisingly left to the viewers’ imagination.

In the various levels of the Chitra gopuram there are more than 3,000 sq ft of carved wood. Amongst them is this unique small bass relief of two men hunting a boar with a spear. Who will win? The answer is a mystery. In one image, just a foot across, the sculptor has left a riddle that can stimulate the viewers’ curiosity and interpret the image at multiple levels.

The pillars in the mandapam in front of the chitra gopuram have large images of Arjuna and others, a very common Nayaka theme. Behind these are pillars with nagabandhas – where the pillar is composed of square and octagonal blocks.

The four corners at the junction have stylised cobra heads. In one of them, the cobra is substituted with a hunched up monkey. The sculptor has conformed to the process but has not let it limit his creativity! Indeed, monkeys peer at you in this temple from all places – perhaps a reminder that our mind should not wander like a monkey’s but be focused on the divine when in the temple.

Bhima unable to lift the tail of Hanuman is a well-known story in the Mahabharata. Images, however, are rare if not non-existent. The chitra gopuram has one where the sculptor has deliberately worked on the sizes to underscore Hanuman’s frailness and Bhima’s strength. What’s more, are clouds behind Bhima, reminding us that despite him taking his tallest form to reach the skies, he was still unable to lift the tail of Hanuman.’

Famous themes

Composing forms out of other forms is a favourite theme for expert sculptors. Such sculptures are rare since it involved both imagination and flawless execution. This temple has several of them, and what is remarkable in these are the sizes, both the horse and elephant are composed of several ladies and the entire image is just one and a half feet! This is even more remarkable when we are reminded that the stone used is granite – one of the hardest stones!

Vibheeshana seeking refuge before Rama leaves for Lanka is a masterful part of the epic when Valmiki teaches us the various forms of persuasion.

Vibheeshana says, “Few volunteer to give honest and frank feedback and very few listen to it,” – relevant to our times!

The sculptor has significantly shown Hanuman in front, since he was the only monkey who spoke in favour of Vibheeshana.

The sculptor has also used a monkey to our left to frame the image and worked the stone to create waves in the front.

The temple has several other rare images, those of Garuda holding the tortoise and elephant in the hand and a tree with the sages meditating upside down, a man playing marbles and Sanishwara.

It’s a shame that the Nambi temple at Tirukurungudi is a shrine that Tamil Nadu has forgotten – by both scholars and amateurs interested in sculptural art.

On the Shukla Paksha Ekadasi of Karthigai (November 24) the temple witnesses a dance drama done nowhere else, that may be a good excuse for a trip that will please children and adults alike, provided they spend a little time looking at the temple walls.

Keywords: The Nambi Rayar Perumal templeTirukkurungudistone templeChitra Gopurammythology sculptures

source:::::THE HINDU …History &Culture setion… Dec 13 2012.

natarajan