” இயற்கையிடம் மன்னிப்புக் கேட்போம்… இனியாவது ஆராதிப்போம் இயற்கையை …”

ஏ.டி.எம் கார்டு இருக்கிறது. பணம் எடுக்க முடியவில்லை.
கையில் பணம் இருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை.
மொபைல் போன் இருக்கிறது. சொந்த பந்தங்களின் சுகம் அறிய முடியவில்லை.
வண்டி இருக்கிறது. ஓட்டுவதற்கு எரிபொருள் இல்லை.
ஒரு கரப்பான்பூச்சி வீட்டுக்குள் நுழைந்து விட்டாலே, ஊரைக் கூட்டும் பெண்மணிகள், அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்த மழை வெள்ளத்தில் சகல விதமான ஜந்துக்களையும் பார்த்து விட்டார்கள்.
பாலுக்கும், காய்கறிக்கும், பிரட்டுக்கும் ஜனங்கள் தேடித் தேடி அலைந்த காட்சி நெஞ்சைப் பதற வைக்கும் ஒன்று. இறைவா, இனி இந்த அவலம் எந்தக் காலத்திலும் – எந்த ஊரிலும் – எவருக்கும் நடக்க வேண்டாம் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
பிஞ்சு வெண்டைக்காயைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்த பெண்மணிகள், கடைகளில் கிடைக்கிற காய்கறியை ‘அடுத்தவர்கள் எடுத்துப் போய் விடுவார்களோ?’ என்கிற அவசரத்தில் அள்ளி அள்ளிப் போட்டுக் காசைக் கொடுத்த காட்சி, பரிதாபம்!
– இதுதான் சமீப நாட்களில் சென்னையின் நிலை.
சுமார் 100 வருடங்களுக்கு முன் இது போன்ற மழை சென்னையில் பெய்ததாம். நம் தாத்தாவுக்குத் தாத்தா பார்த்ததை, நாம் இப்போது பார்த்திருக்கிறோம். கொடுமையான சோகம்!
சுனாமி பார்த்து விட்டோம்.
புயலைப் பார்த்து விட்டோம்.
ஆச்சு. வெள்ளத்தின் விஸ்வரூபத்தையும் பார்த்து விட்டோம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற பல பகுதிகளில் பெய்த மழை உலகத்தையே உலுக்கிப் போட்டு விட்டது.
நாம் பிறருக்குத் தீங்கு செய்தால், அதன் எதிர்விளைவு நம்மைத் தாக்கும். ஆனால், எப்போது என்று தெரியாது.
அதேபோல் இயற்கைக்கு நாம் தீங்கு செய்தால், அது வரிந்து கட்டிக் கொண்டு நம்மைத் தாக்கும் என்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறோம்.
ஆனால், திருந்தினபாடில்லை.
இயற்கைக்கு எதிரான நம் நடவடிக்கைகளை நிறுத்தினபாடில்லை.
பஞ்சபூதங்கள் ஆராதனை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இருந்து வருகிறது.
ஆனால், இன்று?
பணம் பணம் பணம் என்று வாழ்வாதாரங்களான பஞ்சபூதங்களைப் பாழ்படுத்தி வருகிறோம்.
நீர்நிலைகளை சேதப்படுத்தி விட்டோம்.
வாயு மண்டலத்தை மாசுபடுத்தி விட்டோம்.
நிலத்தைக் கீறிக் கீறி வீடுகள் கட்டிக் கொண்டிருக்கிறோம்.
நீரை ஆராதித்தித்தோம். நிலத்தை வணங்கினோம். எல்லாமும் எல்லாமே தந்தன.
இன்று நிலத்தில் நீர் இருக்கின்ற இடத்தைத் தேட வேண்டி இருக்கிறது.
கிடைக்கிற நீர், எந்த அளவுக்கு சுத்தம் என்பதையும் ஆராய வேண்டி இருக்கிறது.
ஒன்றும் மோசம் போய் விடவில்லை. செய்த தவறுகளுக்குக் குழந்தைகள் மன்னிப்பு கேட்டுத் தாயின் கால்களைப் பிடித்துக் கட்டிக் கொள்வதில்லையா?
அதுபோல் Periyava_Kalki_cover_1981_anushtanam
கங்கையில் நீருக்கு வழிபாடு உண்டு.
நம்மூரில் இருக்கிறதா? புனிதமான ஆற்று நீரில்தான் எல்லா அசிங்கமும் (கங்கையிலும் இன்று அசிங்கம் நடக்கிறது).
விவசாய நிலங்களை அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு வீடாக்கிக் கொண்டிருக்கிறோம்.
‘இருக்க இடம் தேவை’ என்று நீர் நிலைகளை அழித்துக் கொண்டிருக்கிறோம்.
போகட்டும். போனதெல்லாம் ஒரு கெட்ட கனவாக இருக்கட்டும்.
இயற்கையை ஆராதிப்போம்.
அது நமக்கு எல்லாமும் தரும்.
வெறும் பணத்தை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்பதை சமீப நாட்களில் பார்த்தாயிற்று.
பக்தி வேண்டும். நேர்மை வேண்டும். செய்கிற செயல்களில் நியாயம் வேண்டும்.
இறைவா, நான் வணங்கும் காஞ்சி மகா தெய்வமே…
வணங்குகிறோம் – இனியாவது.
வாழ விடுங்கள்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
எல்லாமும் மாறும் என்ற நம்பிக்கையுடன்,
பி. சுவாமிநாதன்….a friend of mine
Natarajan

” you know what, “People who have to perform, will perform. They won’t let any excuse interfere in their duty…”

I have seen people perform badly in their jobs and later blamed it on their personal life and issues. Things like,

“I wasn’t in the right state of mind.”
“I was pissed off.”
“I had a bad mood.”

…and many other such excuses are commonly heard.

Yet, you know what, people who have to perform, will perform. They won’t let any excuse interfere in their duty.

The apt example of it is the cricketer R. Ashwin who is currently playing in the India v South Africa series.

Image source

With #ChennaiRains have disrupted complete life in Tamil Nadu, people are distressed and life is yet to return to normal. Amidst the chaos, many people are missing and no contact can be established with them.

Among them were R. Ashwin’s parents who were missing and out of contact for the past 24 hours.

R. Ashwin’s wife expressed in her tweet how worried they were about them and called for help. Any child would be stressed fearing for his/her parents. However, R. Ashwin not just kept his personal life aside but also showed any exemplary performance by scoring a half century.

He went ahead to prove that a strong man can face any obstacle in life to reach where he must.

 

Further tweets from Ashwin’s wife informed that his parents had been found and they were both safe and sound.

Image source

Thank God for that and a deep bow down to R. Ashwin who showed us what professionalism means.

Cover Image Source

Source….Shubhi Dixit ….www.storypick.com

Natarajan

Watch How the IAF Airlifted a Pregnant Woman & Her Child from a Flooded Chennai Area…

Rescue operations to take people stranded in different parts of the city to safer zones, are going strong in Chennai. Over a hundred people have been rescued by teams of Army, Indian Air Force (IAF), and National Disaster Response Force (NDRF).

Due to the floods caused by heavy rains in the city, some areas have been completely submerged, with water rising up to the second storey of many buildings.

IAF_F

Photo Credits: Twitter, Twitter

Those who have been transferred to safe places by IAF include 50 students who were stranded at SRM University, and a pregnant woman who was airlifted on December 3 from one of the worst affected areas in the city.

“We sent about 120 rescued people to Delhi carried by a C-130J (Super Hercules) this morning and another 20 have been sent to Arakonnam, from where they will fly out in different aircraft,” a senior IAF official informed The Hindu.

Air Force officials are working on evacuating those who are stranded and they are also delivering food supplied to those who are unable to move out of their homes and do not have access to food. A senior IAF official said they expect to rescue about 1,200 people in next few days.

This video shows pregnant woman being airlifted along with her child.

Source…..Tanaya Singh …www.the betterindia.com

Natarajan

Chennai’s Story Needs to be heard…

No one imagined that this could happen to Chennai. We were just a happy little town content with our Kollywood and Coffee, but humanity has won over once again, says Pavithra Selvam.

The rains have finally stopped. Relief work is ongoing and Chennai is collectively pooling in its resources to keep its head above the water. Today Chennai-ites are wading through sewage water and broken roads to reach out to strangers in the hope that someone else would do the same to their loved ones. In a matter of few weeks we’ve literally seen our city crumble and drown in front of our eyes. Tamil Sangam literature is rife with references of floods washing away the mythical lands of ‘Kumari Kaandam’ — it somehow feels like history is repeating itself.

I write this not as a victim, but as a witness to a catastrophe of unprecedented magnitude. I write this to tell our story. I write this so that our voices can be heard. I write this from a position of privilege that I feel guilty for possessing — but I write anyway because I can and I must. We need all the help that we can get and to get that we need our story to be heard.

I live near the Mylapore Kapaleeshwarar temple, the oldest part of Chennai. It is among the very few areas in Chennai to not have water-logging. I have electricity, internet and patchy phone connectivity. My dad hasn’t come home from office in two days. My husband, his parents and his mentally ill grandmother have been stranded in their second floor flat for the last four days. They have neither electricity nor telephone connectivity. They are strictly rationing their food supplies to last at least a few more days.

They are not alone. They are trapped with along with hundreds of other people inside their buildings and streets.

Both my husband’s family and my father aren’t seeking to be rescued. The water levels are four feet deep. Ground and first floor residents have moved to their neighbours’ homes in the second floor. They share their food and space and offer support to each other. They don’t seek to be rescued because the situation isn’t as bad as it is in other places. This is the story of millions of others who are stranded but aren’t seeking to be rescued.

The rescue operations that you hear of in the news are only emergencies. These rescue squads rescue people from places where water is neck-deep and belongings and homes have already been fully submerged. Rescuing people like my dad or husband would be a drain on Chennai’s resources right now. They are safe in their second floor spaces.

On Tuesday night, civilian rescuers started independent rescue operations by crowd-sourcing catamarans, life rafts, motorboats and SUVs. We knew people would die if we waited for the government or army to respond — even if they really wanted to respond, there was not much they could actually do — the city was very quickly sinking. Chennai had to take things into its own hands. The hashtags #chennairainshelp backed by Twitter India’s support started to trend. Since most people didn’t have electricity or internet, it was all word-of-mouth — there was no time to verify information.

Actor Siddharth and RJ Balaji went out on the streets with a group of volunteers rescuing people as they heard about it. Rescue operations continued all night. People started opening up their homes and offering shelter. Random strangers on Twitter recharged mobile phones of strangers just by hearsay. A crowdsourced resource sheet was born —www.chennairains.org. It is still being updated by volunteers who’ve hardly slept in 48 hours. Digital volunteers who had electricity and internet tweeted and posted information for people who were on their way home or stranded. Yesterday Sam Paul, Chennai’s Toni & Guy guy, and Shihan Hussain, Chennai’s favourite karate master, along with hundreds of other volunteers were out on the submerged streets until late in the night conducting search-and-rescue missions, putting their own lives at risk.

Many people were rescued, but so many more weren’t.

Was Tamil Nadu ready for this? Absolutely not.

Did help arrive quick enough? No it didn’t.

While the politics of this incident is an important issue that needs addressing, this is the wrong time to do it. The lack of coverage and appalling apathy from the so-called national news channels is disgraceful. Yesterday Rajdeep Sardesai made a video (external link) about the lack of coverage of the Chennai floods by the national news channels. ‘It takes a 180 people dead in Tamil Nadu for us to wake up,’ he said. I made a casual post on Facebook expressing my displeasure at an NDTV headline that alluded to the Chennai floods as a man-made disaster. The post (external link) went viral and received almost 500 likes and 225 shares in a matter of hours. Chennaiites and south-Indians in general are angry with the poor quality of coverage attributed to our region, especially during a national disaster.

There is a lot of talk about poor town planning, marshland encroachment and land reclamation. Let’s not make this politics — this is not the time to play this game. We need solutions right now and quick. We have a situation of dire crises unfolding in Chennai. We have hundreds of thousands of climate refugees taking shelter in schools, malls, theatres, marriage halls and religious establishments. There are tens of thousands more who need to be rescued. These people need food, clothes, sanitation facilities and medicines. There is flooding all over the city — the water isn’t just rain water, it is rain water mixed with sewage. We are at the brink of a disease breakout.

No one imagined that this could happen to Chennai. We were just a happy little town content with our Kollywood and Coffee.

But humanity has won over once again. Caste, creed, religion and social background have become immaterial. Who said we are an intolerant society? Look at Chennai, the collective good is the only thing that matters here on our streets.

Aid is pouring in from our neighbouring states. Strangers from Bangalore are making dangerous road trips with much needed supplies to be on the ground. This is who we are — we stand united in all our diversity — we are Indians. Our governments may fail us but we lift each other up and help each other as our brethren. Yes, we are a disaster zone. But we are going to get back on our feet and wade through the deluge.

Chennai will emerge stronger and wiser, no doubt. But the more important thing for the people reading this is to take charge and tell your governments to clean up their game — because it could be your city next.

Image: People wait for relief material and food packets at the roof of a building in flood-hit Chennai on Thursday. Photograph: PTI Photo.

Pavithra Selvam is a communications specialist born and raised in Chennai. Though she often lives in foreign lands, Chennai is her true love.

Source…..Pavithra Selvam in http://www.rediff.com

Natarajan

 

 

” போதும் மழையே.. பொறுத்தருள்வாய்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் நீஞ்சல் மடுவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதியில் முற்றிலும் மூழ்கிப்போன குடியிருப்புகள். | படங்கள்: காஞ்சி கோ.கார்த்திக்

செங்கல்பட்டு நீஞ்சல் மடுவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மகாலட்சுமி நகர் பகுதியில் முதல்மாடியை நெருங்கி வரும் வெள்ளநீர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூர்-தேவாதூர் கிராமத்தில் விவசாய நிலங்களை மூழ்கடித்த வெள்ளம்.

கொளவாய் ஏரியின் வெள்ளப் பெருக்கால் செங்கல்பட்டு ஜேசிகே நகர் குடியிருப்புப் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

 

மதுராந்தகம் அடுத்த அருங்குனம் கிராமத்தில் தண்ணீரில் முழ்கியுள்ள நாற்றங்கால்.

பேசின் பாலம் அருகே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மெதுவாக இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில். | படம்: ச.கார்த்திகேயன்

சென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் சைதாபேட்டை பாலத்தின் தடுப்பைத் தாண்டி குடியிருப்புகளை மூழ்கடித்து பாய்கிறது அடையாறு வெள்ளம்

மோசமான பாதிப்பை சந்தித்துள்ள கோட்டூர்புரத்தின் பிரதான சாலையை ஆக்கிரமித்து காட்டாற்று வெள்ளம் போல செல்லும் மழைநீர்

அசோக் பில்லரின் நான்கு திசைகளிலும் நீர் சூழ்ந்ததால் அசோக்நகர், கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

தி.நகர் தெற்கு போக் சாலையில் வெள்ளத்தில் சிக்கியவர் தெர்மாகூல் மீது டிஷ் ஆண்டானா பலகையை வைத்து அதன்மீது அமர்ந்தபடி பாதுகாப்பாக வெள்ளத்தை கடந்து வருகிறார் | படங்கள்: க. ஸ்ரீபரத்

சென்னை அருகே சிங்கபெருமாள் கோயில் விஞ்சூர் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் நீந்தி செல்லும் பேருந்து | படம்: காஞ்சி கோ.கார்த்திக்

ஆவடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழை நீர். இதனால் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கூவம் ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்

அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அண்ணாசாலையின் முக்கிய பகுதிகள் இருளில் மூழ்கின. மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த நீரை வெளியேற்ற முடியாமல் தவிக்கும் மின்துறை ஊழியர்கள்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் எழும்பூரையும் இணைக்கும் கெங்குசாமி நாயுடு சுரங்கப்பாதையில் நீச்சல் குளம்போல நீர் தேங்கியிருக்கிறது.

சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் ரெட்டேரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியை ஒட்டிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் அதிகளவில் திறக்கப்பட்டதால் அடையாற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் கட்டிடத்தின் மேற்கூரையில் ஏறி உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்.

அனகாபுத்தூர் தரைப்பாலம் மூழ்கியுள்ள நிலையில் அருகிலுள்ள குடியிருப்புகளின் மேற்கூரையில் தஞ்சமடைந்த மக்கள்.

அடையாற்றின் மத்தியில் உள்ள மரத்தில் சிலர் சிக்கியிருப்பதாக பொதுமக்கள் கூறியதால், தேடும் பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்புக் குழுவினர்.

அனகாபுத்தூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை அனுப்பி உதவும் தன்னார்வ இளைஞர்கள்.

மதுரவாயல்-தாம்பரம் பை-பாஸ் சாலையில் தண்ணீரில் மிதக்கும் வாகனங்கள். அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. | படங்கள்: ம.பிரபு

Source….’தி இந்து’ புகைப்பட நிருபர்கள்… http://www.tamil.thehindu.com

Natarajan

வானவில் பெண்கள்: சி.பி.ஐ.க்குப் பயிற்சியளிக்கும் மதுரைப் பெண்…

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.

இரவு சமையலுக்குத் தோசைக்குத் தொட்டுக்கொள்ள என்ன சமைப்பது என்று யோசிக்கும் இல்லத்தரசிகளில் ஒருவராக இருந்தவர்தான் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதேவி. ஆனால் இல்லத்தரசி என்ற அடையாளத்தைத் தாண்டி தனக்கெனத் தனி அடையாளம் வேண்டும் என்று அவர் நினைத்ததன் விளைவு, ஸ்ரீதேவி அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

எதிர்காலத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவுடன்தான் பொதுவாக எல்லாப் பெண்களுமே படிப்பார்கள். ஆனால், படிப்பு முடிந்ததும் பெரும்பாலான பெண்களுக்குக் குடும்பச் சூழலால் அந்தக் கனவு கைகூடாமல் போய்விடுகிறது. எம்.பி.ஏ. படித்து முடித்ததும் ஸ்ரீதேவிக்குத் திருமணம் ஆனது. கணவர், காவல்துறை ஆய்வாளர். குடும்பம், குழந்தைகள் என்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே 13 ஆண்டுகள் ஓடிவிட்டன.

தேடல் தொடங்கியது

எந்தவொரு சிக்கலும் இல்லாத மிக இனிமையான வாழ்க்கை ஸ்ரீதேவிக்கு. இருந்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார். வீட்டை விட்டு வேலைக்காக வெளியே செல்லத் தயக்கம். அதனால் வீட்டில் இருந்தபடியே ஏதாவது சிறுதொழில் செய்யலாம் என முடிவெடுத்தார். பட்டு மற்றும் தோல் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். படிப்படியாக டென்மார்க், ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்யும் அளவுக்குத் தொழில் முனைவோராக உயர்ந்தார். தங்களுக்கும் தொழில்முனைவோர் பயிற்சியளிக்க வேண்டும் என்று பல பெண்கள் ஸ்ரீதேவியைத் தேடி வந்தனர்.

“எதையுமே முறைப்படி கத்துக்கிட்டாதான் அடுத்தவங் களுக்குப் பயிற்சியளிக்க முடியும். அதனால அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரீனோ பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றேன். சிறுதொழில் முன்னேற்றம் பற்றி மற்றவர்களுக்குப் பயிற்சியளிப்பது எப்படின்னு அங்கே கத்துக்கிட்டேன். இந்தப் பயிற்சியில என்னுடன் முப்பது பேர் பயிற்சி எடுத்துக்கிட்டாங்க. அதுல நான் முதலாவதாகத் தேர்ச்சி பெற்று அந்தப் பல்கலைக்கழகத்தின் பாராட்டுச் சான்றும் விருதும் பெற்றேன்” என்று சொல்லும் ஸ்ரீதேவி, அதன் பிறகு பெண்களுக்குத் தொழில்முனைவோர் பயிற்சியளிக்கத் தொடங்கினார். ஸ்ரீதேவி அளித்த பயிற்சியால் மதுரையைச் சேர்ந்த பல பெண்கள் சுய தொழில் தொடங்கி, வெற்றிகரமாகச் சாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

மென்திறன் பயிற்சி

தொழில் முனைவோர் பயிற்சியில் மட்டுமல்லாமல் மென் திறன் பயிற்சியளிப்பதிலும் இவர் தேர்ந்தவர். அந்தத் திறமை, இவருக்கு கவுரவப் பேராசிரியர் என்ற தகுதியையும் பெற்றுத் தந்திருக்கிறது. டெல்லியில் இருக்கும் சி.பி.ஐ. பயிற்சி அகாடமியில் புதிதாகப் பணியில் சேரும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு மென்திறன் பயிற்சியளித்துவருகிறார் இவர்.

“அலுவலகத்தில், அதிகாரிகளிடம் பேசும் விதம், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது, குழு மனப்பான்மை, தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களை எப்படி உற்சாகப்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கியதுதான் இந்த மென் திறன் பயிற்சி. டெல்லியில் உள்ள சிபிஐ அகாடமியில் கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பயிற்சியை அளித்துவருகிறேன். பொதுவா ஓய்வு பெற்ற நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள்தான் சி.பி.ஐ.-யில் இந்தப் பயிற்சியை அளிப்பார்கள். அவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இங்கே இடமில்லை. ஆனால் இப்படியொரு வாய்ப்பு முதல் முறையாக எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்று பூரிப்புடன் சொல்கிறார் ஸ்ரீதேவி.

புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோயிலிருந்து பெண்களைக் காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து, ‘சேவ் விமன்’ (Save Women) என்ற இவரது திட்டத்துக்கு வெளி நாட்டில் நிதியுதவி கிடைத்தது.

“அமெரிக்காவில் இருந்து மதுரை வந்ததும் 10 கிராமங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பெண்களைச் சந்தித்தேன். அவர்களிடம் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் குறித்துப் பேசினேன். அவர்களில் பலருக்குப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பதைக் கண்டுபிடித்தேன். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அந்த அறிகுறியைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தனர். அப்படியே தெரியவந்தாலும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற அவர்களுக்கு ஒருவிதத் தயக்கம். தன்னைக் காப்பாற்றிக்கொள்வதைவிட தங்களுக்கு வந்திருக்கும் நோய் அடுத்தவர்களுக்குத் தெரியக் கூடாது என்றே பலரும் நினைத்தனர்” என்று மக்களிடம் பரவிக் கிடக்கும் அறியாமையை குறித்து கவலைப்படுகிறார்.

“புற்றுநோய்க்கு ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை பெற்றால் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளலாம். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்கிறார் ஸ்ரீதேவி.

ஒரு புறம் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு, மறுபுறம் மென் திறன் பயிற்சிகள் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற ஸ்ரீதேவி, எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு சாட்சி.

Source…….ஒய்.ஆண்டனி செல்வராஜ்….www.tamil.thehindu.com

Natarajan

” Ravichandran Ashwin Rewrites Records….” !!!

Ravichandran Ashwin Rewrites Records in Nagpur Test Against South Africa

Ravichandran Ashwin picked up his 15th five-wicket haul and his fourth ten-wicket haul in just his 31st Test to help India clinch a series win over South Africa after 11 years.

Ravichandran Ashwin is currently the leading wicket-taker in 2015 with 55 wickets in just eight Tests so far.

Ravichandran Ashwin created several records during India’s magnificent victory in Nagpur against South Africa. His magnificent haul of 12/98 helped India achieve their first series win against South Africa after 11 years and it also ended the Proteas’ nine-year unbeaten series run overseas. Here is a look at other statistical achievements by Ashwin in the Nagpur Test. (Ravichandran Ashwin is the World’s Best Spinner: Sunil Gavaskar)

– Ashwin became the seventh Indian bowler to take more than 50 Test wickets in the calendar year. Harbhajan Singh and Anil Kumble have taken 50 wickets in a year three times. (No Excuses Please, India Say After South Africa Thrashing)

– Ashwin went past 50 wickets in only his eighth Test this year. This is the fastest ever by an Indian spinner in Tests, breaking the mark of nine Tests set by Vinoo Mankad in 1952. (Ashwin is Becoming World’s Envy)

– Ashwin became the first Indian bowler after seven years to take 50 wickets in the year. Harbhajan was the last Indian bowler to go past this landmark in 2008.

– He is also the fourth Indian bowler after Subhash Gupte, Harbhajan and Kumble to take six five-wicket hauls in a single year. Gupte achieved this feat in 1955 while Harbhajan and Kumble did it in 2001 and 2004 respectively.

– Ashwin is the 22nd bowler overall to take six five-wicket hauls in the calendar year. Overall, the bowlers who have the most five-wicket hauls in a year are Malcolm Marshall and Muttiah Muralitharan with nine hauls.

– The Tamil Nadu offspinner does wonders as an opener. He is only the third bowler in Test history to take eight five-wicket hauls while opening the bowling. The other two bowlers are England’s Colin Blythe and Australia’s Hugh Trumble.

-With Inputs from HR Gopala Krishna-

Source…..www.ndtv.com

Natarajan

வட்டமலை பாக்கியலட்சுமி பாட்டி…

.. தொன்னுாறு வயது ஏழை பாட்டி ஒருவர் எந்தவித எதர்பார்ப்பும் இல்லாமல் கடந்த பல வருடங்களாக வளர்த்த நுாற்றுக்கணக்கான மரங்களால் இன்று அரசும் மக்களும் பயன் அடைந்துவருகின்றனர்.

ஈரோட்டில் இருந்து 46 கிலோமீட்டர் பயணம் செய்தால் காங்கேயம் வரும்,காங்கேயத்தில் இருந்து பழனி போகும் பாதையில் எட்டாவது கிலோமீட்டரில் இருக்கிறது வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில்.
இங்கு சென்றால் அவசியம் தரிசிக்கவேண்டியவர்கள் இரண்டு பேர் ஒன்று முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அருள்புரியும் முருகன் இரண்டாவது பாக்கியலட்சுமி என்ற 90 வயது பாட்டி.

ஏழு வயதில் திக்கு தெரியாமல் எப்படியோ இங்கு வந்து சேர்ந்த இவருக்கு உலகமே இந்த வட்டமலைதான். கோவிலை கூட்டி சுத்தம் செய்து பக்தர்கள் மற்றும் ஆலய ஊழியர்கள் தரும் பணத்தில் சாப்பிட்டு வருகிறார்.கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இதுதான் நடக்கிறது,யாரிடமும் போய் கேட்கமாட்டார் , தாமாகவே கொண்டுவந்து கொடுத்தால் மறுக்கமாட்டார்.
இந்த நிலையில்தான் ஐம்பது அறுபது வருடத்திற்கு முன் கோவில் பக்கத்தில் உள்ள ஒடையில் இருந்து தண்ணீர் எடுத்துவரும் போது கூடவே ஒரு செடியும் குடத்துடன் வர அதை அந்த கரையிலேயே நட்டுவிட்டுவந்தார்.

சில நாட்கள் கழித்து ஒடைப்பக்கம் வந்த போது,’ ஏ..பாக்யா என்னைப்பாரேன்’ என்பது போல அந்த செடி செழித்து வளர்ந்து அழைத்தது.அதுவரை சொந்த பந்தம் என்று எதுவும் இல்லாதிருந்த பாக்கியாவிற்கு அந்த செடி ஏதோ தான் பெற்ற பிள்ளை போல தெரிய அதன் பக்கத்தில் போய் உட்கார்ந்து தடவிக்கொடுத்தார்,சிறிது நேரம் கண்ணீர் விட்டார் பின்னர் தொடர்ந்து தண்ணீர் விட்டார்.
அந்த செடியின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியும் பாக்கியாவிற்கு மகிழ்ச்சி தர அதைப்போலவே இன்னும் பல செடிகளை விதைகளை கொண்டுவந்து அந்த பகுதியெங்கும் வளர்த்தார்.

எப்படி வளர்க்கணும் எந்த மரத்திற்கு எவ்வளவு குழி வெட்டணும் எப்படி உரம் போடணும் என்று எதுவுமே தெரியாது அவ்வளவு ஏன் நட்டுவைத்த செடிகூட என்ன செடி என்று தெரியாது, கிடைச்ச இடத்தில் செடியை நடணும் விடாம தண்ணீர் ஊற்றணும் இது மட்டுமே பாக்கியாவிற்கு தெரிந்திருந்து, பாக்கியாவின் அன்பும் அந்த செடிகளுக்கு புரிந்திருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு செடியும் வேப்பமரம்,
இலுப்பைமரம்,புளியமரமாக நன்கு வளர்ந்தது.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல நுாற்றுக்கும் அதிகமான மரங்கள் வனப்புடன் வளர்ந்துள்ளது. வட்டமலை பகுதியை பசுஞ்சோலையாக்கி வைத்துள்ள இந்த மரங்களின் நிழலில்தான் இப்போது கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் இளைப்பாறி களைப்பு நீங்க பெறுகிறார்கள்.
புளியமரத்தில் இருந்து விழும் புளியங்காயை பாக்கிலட்சுமி பொறுக்கியெடுப்பதன் மூலம் சொற்ப வருமானம் கிடைத்து வந்தது பின்னர் அரசாங்கம் அந்த மரத்திற்கு எல்லாம் எண் போட்டு அரசுக்கு சொந்தமாக்கிவிட்டதால் இப்போது புளியமரத்து பலன் மட்டுமல்ல எந்த மரத்தின் பலனும் பாக்கியலட்சுமிக்கு கிடையாது.
ஆனால் அதைப்பற்றி இவருக்கு சிறிதும் கவலை இல்லை எம் பிள்ளை(மரம்) எனக்கு வருமானம் தந்திட்டு இருந்தான், இப்ப அரசாங்கத்திற்கே வருமானம் தர்ரான் சந்தோஷம்தான் என்கிறார் சிரிப்பு குறையாமல்.
பிள்ளை என்றதும் நினைவு வருகிறது குடும்பம் சொந்த பந்தம் என்று கேட்டபோது எல்லாமே இதுங்கதான் என்று கைகாட்டுகிறார், அவர் கைகாட்டிய திசையில் அவர் வளர்த்த மரங்கள் இவர் சொல்வதை ஆமோதிப்பது போல இலை கிளை அசைக்கின்றன.

தற்போது கோவில் நிர்வாகம் சாமான்கள் போட்டுவைக்கும் அறையில் சாமான்களோடு சாமான்களாக வாழ்ந்துவரும் இவர் மரங்களின் மீது கொண்ட பாசம் காரணமாக அவைகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய நேசம் காரணம் வட்டமலையைத்தாண்டி எங்கும் போனதில்லை இனி போகப்போவதும் இல்லை.
பொதுப்பார்வையில் இவர் ஒரு அப்பாவி பாட்டியாக தென்படலாம் ஆனால் உண்மையில் மரங்கள் வளர்ப்பு என்பதற்கான நாட்டின் உயர்ந்த விருதை எல்லாம் கொடுத்து இனியும் கையேந்தவிடாமல் கவுரமாக வாழ வழிசெய்யவேண்டும், அது அவருக்கு கவுரவத்தை சேர்க்கும் என்பதற்காக அல்ல நமக்கு புண்ணியத்தை தரும் என்பதால்.

போயிட்டு வர்ரேன் தாயி என்று மரங்களை பெற்ற அந்த மாதரசி மகராசியின் கால்களில் விழுந்து ஆசிபெற்று வரும்போது திரும்பி பார்க்கிறேன், வட்டமலையைவிட வட்டமலையின் மீதுள்ள முத்துக்குமாரசாமி கோபுரத்தைவிட உயரமாக பாக்கியலட்சுமி பாட்டி விசுவரூபமெடுத்து நிற்கிறார்.
(நன்றி:தணிகைச்செல்வி,காங்கேயம் நல்லதம்பி)

Source…..எல்.முருகராஜ்….in http://www.dinamalar.com

“இறைவன் சிவபிரானை தீபமங்கள ஜோதியாக வழிபடும் பெருவிழா…கார்த்திகைதீபத் திருவிழா “

கார்த்திகை தீபத்திருநாளாவது தமிழ் மாதமான கார்த்திகைமாத பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில், தமிழர்கள் தமது கோவில்களிலும் வீடுகளிலும் நூற்றுக்கணக்கான தீபங்களை அடுக்கடுக்காக ஏற்றி, இறைவன் சிவபிரானை தீபமங்கள ஜோதியாக வழிபடும் பெருவிழாவாகும்.

கார்த்திகைத் தீபத்தன்று திருவண்ணாமலைதனில் ஏற்றப்படும் தீபமானது சைவ இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான விழாவாகும். எல்லாம்வல்ல பரம்பொருளான அண்ணல் சிவபிரான், அன்று ஜோதி வடிவில் காட்சியளிக்கிறான். அயனாலும் திருமாலாலும் அடிமுடி காணவொண்ணாத அவ்விறைவனைப் போற்றும்வண்ணம் பக்தர்கள் மலைமீது மங்களஜோதியை ஏற்றி வழிபடுகின்றனர்.

தொல்காப்பியர்

கார்த்திகைதீபத் திருவிழா மிகப்பழமையான திருவிழாவாகும். கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தில் ஏற்றப்படும் தீபத்திருவிளக்கைப்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. சங்கம் மருவிய கால இலக்கியமான கார்நாற்பதில் காணும்

நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட

     தலைநாள்  விளக்கின் தகையுடையவாகி

     புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி

     தூதொடு வந்த மழை

எனும் இந்தப் பாடல் கார்த்திகைத் திருநாளில் ஏற்றப்படும் தீபத்தினைக் குறிக்கின்றது.

‘கார்கால விழாக்களில் ஒன்றான கார்த்திகைதீபத் திருநாளில் மக்கள் ஏற்றி வைத்துள்ள முந்தைய நாளின் விளக்குகளைப்போன்று தோன்றி, மலர்கள் அழகாகப் பூத்துள்ளன. தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதனாக மழை வந்துள்ளது,’ என்பது பொருள்.

இதேபோன்று களவழிநாற்பதிலும் போர்க்களக் காட்சிகளை வர்ணிக்கும்போது, ‘போரிடும் வீரர்களின் உடலிலிருந்து பெருகும் குருதியானது கார்த்திகைத் திருவிழாவில் கூட்டம்கூட்டமாக ஏற்றப்பட்ட விளக்குகளைப்போலக் காட்சியளிக்கின்றது,’ என்கிறார் புலவர்.

கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்குப் போன்றனவே.’

(சாறு- திருவிழா; கழி- கூட்டம்)

இத்தகையதொரு பழமையான திருவிழாவைக் கொண்டாடும் போதில், இதைப்பற்றி  மிகவும் நயம்பட தமிழ்ச்சுவை நிரம்ப எழுதப்பட்டதொரு நூலினை நாம் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும். சோணாசலம், சோணகிரி எனும் பழம்பெருநகரமாகிய திருவண்ணாமலையில் உறையும் இறைவனின் புகழாக சோணாசல முதலியார் (பாரதியார்) எனும் பெரும்புலமை வாய்ந்த பக்தர்கார்த்திகைத் தீபவெண்பாஎனும் நூறுபாடல்கள்கொண்ட நூலினை இயற்றியுள்ளார். இப்பாடல்கள் அனைத்திலும் ஈசனின் திருவிளையாடல் பற்றிய தொன்மங்களையும், அவன் மகிமைகளையும்பற்றிக் கூறி, அவனையே திருக்கார்த்திகைத் தீபம் என இனிதாக வர்ணனைசெய்துள்ளார்.

‘திருவண்ணாமலை அன்பர் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை’ எனப்படும். அருணாசலத்தின் பெருமை பக்தர்களையும் புலவர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது எனலாம்.  இதனால்தானோ என்னவோ இம்மலையில் தங்கியிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றினர்.  இதனாலேயே குரு நமச்சிவாய சுவாமிகள்,

நண்பாக் குகையில் நமச்சிவா யன்கருத்தில்

வெண்பாப் பயிராய் விளையுமலை,’

எனக்கூறினார்.

karthikaideepam1

திருவண்ணாமலையில் வெண்பாவே பயிராக விளைகிறது என்றார். இம்மலையில் தங்கி வாழ்ந்தவர்களுள் ஒருவரே சோணாசல பாரதியார்.

கார்த்திகைதீப ஒளியைக் கற்பனை நயம்படக் கூறுவது மிகவும் ரசிக்கத்தக்கதாகும். பொருளும், நயமும், கருத்தாழமும் செறிந்த பாடல்கள் இவை. கார்த்திகைதீபக் காட்சியை பல்வேறு விதங்களில் பகிர்கின்றது கார்த்திகைத்தீபவெண்பா. உதாரணமாக ஒரு வெண்பா,

கற்றலுடன் கேட்டுணர்ந்து காதலுடன் சிந்தித்தோர்க்(கு)

உற்றதுணையாய் உறுதீபம்சொற்றகதிக்(கு)

ஏணிநிகர் சோணகிரி ஏர்முடிமேல் அஞ்சலெனும்

பணிநிகர் கார்த்திகைத் தீபம். (43)

என்கின்றது.

கற்று, கேட்டு, இறைவன் பெருமைகளை உணர்ந்து அன்புடன் வழிபடுவோருக்கு, அவனே அத்தீபம்போல உறுதுணையாய் நிற்கின்றான். சோணகிரியின் அழகிய உச்சியில் அஞ்சேல் என அபயமளித்தபடி கார்த்திகைத் தீபமாக விளங்குகிறான் ஈசன். அண்ணாமலையே ஈசன் – அவனே கார்த்திகைத் திருத்தீபம்.  எத்தனை உண்மை பொதிந்த சொற்கள்!

சோணாசல பாரதியார் காலம் 1858- 1925 ஆகும்.

முதற்பாடல் அயனும் திருமாலும் இறைவனது அடிமுடியைத் தேடிய நிகழ்வை அழகுறச் சித்தரித்து, நூலின் முதற்பாடலாக அமைந்துள்ளது.

கங்கையணிதீபம் கற்பூர தீபமலை

மங்கையொருபங்கில் வளர்தீபம்பங்கயன்மால்

விண்பாரு நேடும்வண மேவியவண்ணாமலையிற்

பண்பாருங் கார்த்திகைத்தீ பம். (1)

கங்கையணிந்தவனும் மலைமங்கையின் பங்கில் வளர்வதுமான தீபம்; ஈண்டு தீபம் எனும் சொல் இறைவன் எனும் சொல்லாக ஆளப்பட்டுள்ளது. நூல் முழுமையுமே இவ்வண்ணமே சொல்லாட்சியைக் காண்கிறோம்.

அரியும், அயனும் அய்யன் அடிமுடி தேடல்

இன்னொருபாடலில் மதுரை வீதியில் இறைவன் வளையல் வியாபாரியாகச் சென்ற கதை கூறப்படுகின்றது.

பந்துமுலைப் பாவையர்க்காம் பாங்காரும்கூடலிலே

வந்து வளையல் விற்ற மாதீபம்கொது

மலர் மலியும் சோணமலைத் தீபம் போற்றிப்

பலர் மலியும் கார்த்திகைத் தீபம். (4)

கற்பிற்சிறந்த மனையாளொடு வாழ்ந்த நீலகண்டரிடம், கொடுத்துவைத்த திருவோட்டைக் கவர்ந்து ,அவரை ஆட்கொண்ட கதை வேறொரு பாடலில் கூறப்படுகிறது. இங்கு அண்ணாமலையின் இயற்கைவளமும் அழகுற விளக்கப்படுகின்றது: ஆடுகின்ற மயில்களின் ஆட்டத்திற்கொப்ப வண்டினம் இசை பாடும்;  அத்தகு அருணைமலையின்மீது ஒளிரும் கார்த்திகைதீபம் என்று ஈசனை ஏத்துகிறார்.

நீடுகற்பி னாளுடன்வாழ் நீலகண்டர் தம்மிடம்வந்

தோடுகவர்ந்த தாண்ட வொருதீபமாடுமயிற்

கொக்கவிசைவண்டினம்பாடோங் கருணைவெற்பின்மிசைப்

பகீகமிகுங் கார்த்திகைத்தீ பம். (7)

இறைவனை உண்டென்று கூறும் நல்மனத்தோருக்கு உள்ளதாகவும், இல்லை எனும் கள்ளமனத்தோர்க்கு இல்லையென்பதாகவும் ஆகிவிளங்கும் தீபவடிவானவன். சடைமுடிகொண்டு அருணாசலத்தில் திகழும் கார்த்திகைத்தீபம்.

சிவன் மதுரையில் வளையல் விற்ற திருவிளையாடல்

உள்ளதென்னு நல்லோர்கட் குள்ளதா வில்லதெனுங்

கள்ளமனத் தோர்க்கின்பதாக் காண்தீபம்வெள்ளமதி

மேவுசடைத் தீபம் வியன்கொளரு ணாசலத்திற்

பாவுபுகழ்க் கார்த்திகைத்தீ பம். (13)

இப்பாடல்களில் இடையிடையே தொன்மங்கள் (அயனும் மாலும் அடிமுடி தேடியது, நீலகண்ட நாயனாருக்கு அருளியது, வளையல் விற்றது) பின் இறைவனின் கருணை, அவன் அடியார்களுக்கருளும் முறைமை இவற்றினையும் கூறி, நமது இருவினைகளும் ஒழிய அவனை ஏத்துவதால் விளையும் இன்பம், ஆனந்தம் ஆகிய இவற்றை, அருணையின் இயற்கைவளத்தினோடும் கலந்து விரவி, அழகான கதம்ப மலர்மாலையாக இவ்வெண்பா நூல் அழகுற விளங்குவது மிகுந்த வியப்பினை உண்டுபண்ணுகின்றது.

‘அவனைப் போற்றுவோர்க்கருளும் புண்ணிய தீபம்;  நாம்செய்த வினைகளுக்கு மாற்றுமருந்தான மணித்தீபம்;  வேதங்கள் போற்றுவதும் எண்ணுதற்கரியதுமான சோணமலையில் உயர்ந்து ஓங்கிவளர்ந்து காணும் தீபம்;  புகழ்வதற்கும் சொற்களற்ற அரியதான கார்த்திகைத் தீபம்,’ என்கிறார்.

போற்றுமடி யார்க்கருளும் புண்ணியதீ பம்வினையை

மாற்றுமருந் தாகு மணித்தீபஞ்சாற்றுமறை

யுன்னரிய சோணமலை யோங்கிவள ருந்தீபம்

பன்னரிய கார்த்திகைத்தீ பம்.  (15)

திருநீலகண்ட நாயனாருக்கு மீண்டும் இளமையளித்தல்

இடையே ஒரு திருவிளையாடல் கதை:

பாணபத்திரர்

மதுரையின் ஆஸ்தான பாடகனான பாணபத்திரனுக்குச் சத்துருவாக வந்த ஏமநாதன் எனும் வடக்கத்திப் பாடகனை, அவன் நாணமுற்று ஓடுமாறு தான் பாடியருளிய தீபம்;  அயனும் அரியும் காணாத அண்ணாமலையில் மாந்தர் செய்தவத்தின் பயனாய் விளங்கும் கார்த்திகைதீபம்.

பாணனுக்கோர் சத்துருவாம்பாடகனைக் கூடலிலே

நாணமுற்றோ டப்பாடு நற்றீபம்பேணி

அயனுமரி யும்காணா அண்ணாமலையிற்

பயனுருவாங் கார்த்திகைத்தீ பம். (23)

நமது அறியாமைதனைப் போக்கியருளும் தீபம்; போக்கியது மட்டுமின்றி, ஆனந்தமயமாகிய மெய்ஞானத்தினை நமக்குக் காட்டியபடி மிளிர்கின்ற தீபம்: சோணகிரி சித்தர்கள் நிறைந்த மலை. அச்சித்தர் பெருமக்கள் மகிழும் வண்ணம்  ஒளிரும் சோணகிரித் தீபம்; பணிந்து வணங்கும் பக்தர்கள் மகிழும் கார்த்திகைத் தீபம்,” என்கிறார்.

அஞ்ஞானம் போக்கி யருடீபமானந்த

மெய்ஞ்ஞானங் காட்டி மிளிர்தீபம்எஞ்ஞான்றுஞ்

சித்தர்மகிழ் சோணக்கிரித்தீபம் பணிந்தேத்தும்

பத்தர்மகிழ் கார்த்திகைத்தீ பம். (27)

‘அடியார்களின் பிறவிப்பிணியைத்தீர்க்கும் தீபம்; செய்த கொடிய கர்மவினைகளைப் போக்கியருளும் தீபம்; மன்மதனை அங்கமிலாத அனங்கனாக்கிய ஈசனெனும் தீபம்; அண்ணாமலைத் தீபம்; குறையொன்றுமில்லாத திருக்கார்த்திகைத்தீபம்.’

சென்மப் பிணிதீர்க்குந் தீபமடி யார்செய்கொடுங்

கன்மவினை போக்குங் கனதீபமன்பதனை

அங்கமிலா தாக்கியரு ளண்ணா மலைத்தீபம்

பங்கமிலாக் கார்த்திகைத்தீ பம். (31)

இரு குழந்தைக் கடவுள்களைத் தந்தருளிய தீபம்; கந்தன் ஒருவன்; இன்னொருவன் காரானை மாமுகத்து தந்தம்கொண்ட வேழமுகத்து கணபதி.  எம்மை என்றென்றும் கண்களால் நோக்கி அருள்புரியும் சோணமலைத் தீபம்;  தொழும் அன்பர்களுக்கு நல்வாழ்வுதரும் கார்த்திகைத் தீபம்.

கந்தனையு ஞானமதக் காரானை மாமுகத்தோர்

தந்தனையுஞ் சேயாத் தருதீபமெந்தமைக்க

ணோக்கியருள் சோணமலை நோன்றீப மன்பருக்குப்

பாக்கிமாங் கார்த்திகைத்தீ பம். (39)

இசைப்பண்ணுடன் தேவாரம் பாடியருளிய மூவரான சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு இமவான்மகளான பார்வதியுடன் தோன்றித் தரிசனம்தரும் தீபம்.  விண்ணளாவப் பொருந்த ஆகாயத்திற்கும் பூமிக்குமாக நிற்கும் அண்ணாமலையைப்போல் ஓங்கிவிளங்கும் கருணைகொண்ட கார்த்திகைத் தீபம்.

பண்ணுடனே தேவாரம் பாடுமு வர்க்கிமவான்

பெண்ணுடனே தோன்றும் பெருந்தீபம்விண்ணுடனே

சேரமலை வான்புவிக்காச் செல்வதுபோ லோங்கருணைப்

பாரமலைக் கார்த்திகைத்தீ பம். (43)

அகந்தைகொண்ட தாருகாவனத்து முனிவர்கள் தன்மீது ஏவிய வேங்கைதன்னைக் கூரான தனது நகத்தினாலுரித்துத் தோலினை அணிந்துகொண்ட தெய்வம். ஓங்கி உயர்ந்த மேருமலை, மேலும் எட்டுத்திக்குகளிலும் உயர்ந்த மற்றமலைகளினும் உயர்ந்து, அருணையில் பாங்குடன் ஒளிரும் கார்த்திகைத் தீபம்.

தாருவன மாதவர்க டாம்விடுத்த வேங்கைதனை

கூருகிரினா லுரித்துக் கொள்தீபமேருமுக

லோங்குமலை யெட்டினுமிக் கோங்குமருணாசலத்திற்

பாங்குமலி கார்த்திகைத் தீபம். (52)

இடையிடையே  திருவிளையாடல் புராணத்தினின்றும் கதைகளை இணைத்துப் பாடியுள்ளார் சோணாசல பாரதியார்.

நன்மைகளைச் செய்துவந்தவளான பொன்னனையாள் எனும் பெண் குடியிருந்த திருப்பூவணம் எனும் ஊரில் ரசவாத வித்தையைச் செய்த தீபம்;  வழிப்போக்கர்கள் எவ்வாறு தம் வண்டிமாடுகளை இச்சோணகிரியில் இளைப்பாற்றிக்கொண்டனர் எனப் பாங்குற விவரிக்கிறார்.  சோணமலையில் அழகிய சுனைகள் – அவற்றில் வண்டிமாடுகளையும் கன்றுகளையும் நீரருந்தி இளைப்பாறச்செய்து போகும்படி அருளும் கார்த்திகைத்தீபம்.

நன்றுபுரி பொன்னனையா னண்*ணுதிருப் பூவணத்திற்

சென்றுரச வாதமது செய்தீபங்கன்றுகளுக்

கம்பிடிகை யாலருத்தி யாடுசுனைச் சோணமலைப்

பம்பிவளர் கார்த்திகைத் தீபம். (53)

ஞானசம்பந்தப் பெருமானுக்கு முத்துச் சிவிகையும் சின்னமும் அளித்த தீபம்.

செந்நெல் விளையும் கழனிகள் சூழ்ந்த அருணாசலமலைமீது ஒளிரும் பழநிமலைக் கார்த்திகைத்தீபம். இங்கு பழனிமலை முருகன் அண்ணலின் மைந்தனானதால் அவனையும் குறிப்பிட்டாரோ?

பன்னருஞ்சம் பந்தருக்குப் பத்தருநற் பல்லக்குஞ்

சின்னமுமுத் தாலளித்த சீர்த்தீபஞ்செந்நெற்

கழனிபுடை சூழருணைக் காமர்மலை மீது

பழநிமலைக் கார்த்திகைத்தீ பம். (63)

கல்லால மரத்தடியில் சின்முத்திரைகாட்டி, நான்கு முனிவர்களுக்கும் மௌனத்தால் பொருளுணர்த்தும் தீபம்.  கொல்லாவிரதத்தினைக் கைக்கொண்டு தென்னருணாசலத்தில் உறையும் தொண்டர்கள் உள்ளத்தில் ஆனந்த நடனமிடும்  கார்த்திகைத்தீபம்.

கல்லா லடியிற் கரங்காட்டி நல்வருங்குஞ்

சொல்லா லுணர்த்துஞ் சுபதீபங்கொல்லா

விரதமொடு தென்னருணை மேவினருள் ளத்திற்

பரதமிடுங் கார்த்திகைத்தீ பம். (85)

அடுத்த பாடல் அத்தனின் அழகு வர்ணனையுடன் அவனாகவே நிற்கும் அருணாசலமலையையும் ஏற்றுகின்றது. பாம்புகளை ஆபரணங்களாக அணிந்த தீபம்;  பத்திநெறிகொண்டு வாழ்வோர்கள்  ஏத்தி வழிபடும் தீபம்; தனித்துவிளங்கும் தீபம். அல்லிமலர்கள் பொலியும் நீர்நிலைகளைக் கொண்டுள்ள அருணையில் வாழ்கின்ற கற்பகத்தருவாகிய கார்த்திகைத்தீபம்

பாம்பணியுந் தீபம் பத்திநெ றிசேரடியார்

தாம்பணியுந் தீபந் தனித்தீபமாம்பல்

விகசிக்கும் வாவி மிளிரருணை வாழ்கற்

பகமொக்குங் கார்த்திகைத்தீ பம். (91)

தனது பாதமெனும் தாமரைகளை நாளும் தொழும் அடியவர்க்கு ஆதாரமாக விளங்கி அருளுகின்றதீபம்.  மலர்கள் நிறைந்து விளங்கும் தேன்மிகுந்த சோலைகள் கொண்ட அருணைமலையின் கண்ணும் என் உள்ளத்திலும் வாழும் கார்த்திகைத்தீபம்.

பாதார விந்தம் பரவுந் தொழும்பருக்கோ

ராதார மாகி யருடீபம்போதாருங்

கொங்கிலங்குஞ் சோலை குலவருணை வெற்பினுமென்

பங்கினும்வாழ் கார்த்திகைத்தீ பம். (94)

நல்ல சிந்தனைகளைத் தரும் தீபம்;  நன்மக்களையும் (புத்திர சம்பத்து) மேலும் சித்திகளையும் தரும் தீபம்; சிவதீபம்; அன்னை சக்தியாம் உண்ணாமுலைக்கு உயிராகி, சோணமலையில் ஓங்கி வளரும் ஞானப்பயிராக நிற்கும் கார்த்திகைத்தீபம்.

புத்திதருந் தீபநல்ல புத்திரசம் பத்துமுதல்

சித்திதருந் தீபஞ்சிவதீபஞ்சத்திக்

குயிராகுஞ் சோணமலை யோங்கிவளர் ஞானப்

பயிராகுங் கார்த்திகைத்தீ பம். (100)

இந்தக் கடைசி வெண்பாவில்தான் சிவதீபம் எனும் சொல்லைக் காண்கிறோம். மற்றபடி சிவபிரானே அத்தீபம்; தெய்வம் எனக்கொண்டே இந்நூல் முழுமையும் பாடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வெண்பாவிலும் தீபம் எனும் சொல் இரண்டு, மூன்று, நான்கு அல்லது ஐந்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளுறைப் பொருள் தீபங்களுக்கு இடப்படும் திரிகளின் முகங்களோ என எண்ண இடமுள்ளது.  தெரிந்த புலவர் பெருமக்கள் யாரேனும் விளக்கியருளலாம்.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

விளக்கின் முன்னே வேதனை மாறும்

விளக்கினை விளக்கும் விளக்குடையார்கள்

விளக்கிடின் விளங்கும் விளக்கவர் தாமே. (திருமந்திரம்)

தீபத்தின்முன் அதன் ஒளியில் நமது கவலைகள் மாறும்; பாவங்கள் அழியும். மனம் ஈசனிடம் ஒருமைப்படும். இத்தகைய விளக்கத்தினை அருளிய பெரியார்கள் நமக்கு வழிகாட்டும் விளக்கினைப் போன்றவர்களே!

தென்னாடுடைய சிவனே போற்றி;  என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.

திருச்சிற்றம்பலம்.

Source………

    http://www.tamilhindu.com/
Natarajan

 

 

” இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்…”

மீன் விற்கும் ஒரு பெண்ணு, பூ விற்கும் ஒரு பெண்ணும், நல்ல தோழிகள். ஒருநாள் இரவு, பூ விற்கும் பெண்ணின் வீட்டில், மீன் விற்கும் பெண் தங்க நேர்ந்தது. ‘இரவு நன்கு தூங்கினாயா?’ எனப் பூ விற்கும் பெண், மறுநாள் காலையில் கேட்க, ‘அதை ஏன் கேக்குற போ… நேத்துப் பூரா எனக்குத் தூக்கமே வரலை…’ என, சொன்னாள் மீனம்மா.
‘அப்படியா… ஏண்டி?’
‘உன் வீட்டில இருந்த பூவோட வாசம், என்னை என்னென்னமோ செய்துடுச்சு. நெடி தாங்கலை; அதனால, தூக்கம் வரலை…’ என்றாளாம் மீனம்மா.
மனிதர்கள் பலரும், இப்படித் தான் இருக்கின்றனர். வழக்கத்திற்கு மாறான எது ஒன்றை பற்றியும், மலைத்துப் பேசுகின்றனர்; மறுக்கின்றனர். செயலில் இறங்கும் முன்பே, குரலிலேயே களைப்பு காட்டுகின்றனர்.
‘என் கூட வேலை பார்க்கிறவரோட மகன் கல்யாணம்; வா… போயிட்டு வரலாம்…’ என கணவர் அழைக்கிற போது, பெரும்பாலான மனைவியர் சொல்கிற பதில்… ‘எனக்கு அங்கே யாரையுமே தெரியாது; நான் தனியா உட்கார்ந்திருக்கணும். உங்களுக்கு, உங்களோட வேலை செய்யுறவங்களைக் கண்டா, தலை கால் புரியாது. என்னை, ‘அம்போ’ன்னு விட்டுடுவீங்க. நான் வரலை; நீங்க போயிட்டு வந்தாப் போதும்; ஆளை விடுங்க…’
இந்த வசனங்களில், சில மாறுதல் இருக்கலாமே தவிர, பதில் என்னமோ மறுப்பு தான்; பதில் என்னவோ அலுப்பு தான்.
முதன் முதலில் பள்ளியில் சேர்த்த போது, நாம் அழ அழக் கொண்டு போய், இரக்கமில்லாமல் பள்ளியில் விட்டனர். அங்கு யாரைத் தெரிந்தது… பின், பெற்றோரை விடவும், தோழர்கள், தோழிகள் நமக்குப் பெரிதாகி விடவில்லையா?

வங்கி, தபால் நிலையம்…
‘நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!’ ‘
எங்கே போனாலும், சிவப்புக் கம்பள வரவேற்பும், ராஜமரியாதையும் எதிர்பார்க்கிற குணம், என்ன குணம்!
பள்ளி மற்றும் கல்லூரிக்கு அப்பாற்பட்டு இருக்கிற வெளி உலகமும், ஒரு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் தான்; அது, எத்தனையோ பாடங்களை பயிற்றுவிக்கிறது. அறிமுகமாகிற நபர்கள், நூற்றுக்கணக்கான டியூஷன் வகுப்புகளை, காசு வாங்கிக் கொள்ளாமல், நமக்கு நடத்துகின்றனர்.
வாழ்வின் உண்மையான சுவையை, நன்கு உணர வேண்டுமானால், முதலில், மனச்சிறகுகளை விரிக்க வேண்டும்.
‘எந்தக் கஷ்டத்தையும் சந்திக்கக் கூடாது; ஒரு கஷ்டமும் கூடாது. மேனா மினுக்கிகளாகவே வாழ்ந்து விட்டுப் போய் விடுகிறேன்…’ என்று எதிர்பார்க்கும் வாழ்க்கை, தேங்கிப் போன குட்டைக்குச் சமம்.
அருவியாய் மாறி, ஆறாய் ஓடி, கடலாய் பரந்து, வாழ்வின் மறுபக்கங்கள் இன்னின்ன என்பதை, உணரத் தலைப்பட முன்வர வேண்டும்.
‘என் மகளை, கண்ணுக்குள்ளே வச்சு வளர்த்துட்டேன்; நீங்களும் இவளை மகளைப் போலப் பார்த்துக்கணும்…’ என்று, கன்னிகாதானத்தன்று, கைத்தலம் பற்றக் கொடுக்கிற தாய் – தந்தையை, நல்ல பெற்றோராக நான் கருதவில்லை.
‘எல்லாத்தையும் நல்லாவே கத்துக் கொடுத்திருக்கோம்; நாங்க விட்டதை நீங்க சொல்லிக் கொடுங்க…’ என்றல்லவா ஒப்படைக்க வேண்டும்?
தாய் வீட்டில் சங்கிலியிட்டு வளர்த்தால் தான், புகுந்த வீடு, பூமாலைத் தோரணமாகப்படும்.

ஒரு சொல் கூடத் தாங்காத பெண்ணாக ஒருத்தியை வளர்த்தால், அது ஒரு மாத, ஒரு ஆண்டு கதையாக ஆகிவிடும்.
இடைஞ்சல்களே இல்லாத தொழில், திட்டாத அதிகாரி, தண்டிக்காத முதலாளி, கொடுத்தாலொழிய வாடகை கேட்காத வீட்டுக்காரர், தவறைச் சுட்டிக் காட்டாத நண்பன் என்றெல்லாம் எதிர்பார்த்து, அப்படி அமையாத போது, இவர்கள் நொந்து கொள்கின்றனர்.
எந்த ஒரு மனிதனது வாழ்க்கையும், மலர் பாதையால் அமைக்கப்பட முடியாது. இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்!
ஆற்றுப் படுகைகளில் கிடக்கும் அழகான கூழாங்கற்களை ரசிக்கிறோம். ஆனால், அது மோசமான உருவத்தோடு தான், தன் பயணத்தை, மலையிலிருந்து துவங்கியது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!
‘எனக்கு எந்தக் கஷ்டமும் தராதே… எல்லாம் நல்லபடி நடக்கணும்!’ எனக் கடவுளிடம் வேண்டும் பக்தன், தவறு செய்கிறான்.
‘எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனத்திடத்தை, பலத்தை எனக்குத் தா…’ என வேண்டுபவனே நடைமுறையாளன்.
நூலாம் படையை, சங்கிலியாக எண்ணுவதைக் கைவிட வேண்டும். சங்கிலியை, நூலாம்படையாக ஆக்குவது நம் சாதுரிய அணுகுமுறையில் இருக்கிறது

Credit  ….Input from my friend …. Source ….Lena Tamilvanan in http://www.dinamalar.com

Natarajan