” துடிப்பான தனுஷ்கோடியைத் தெரியுமா? ” …Part 2

பாம்பன் பால மறுகட்டமைப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.

பாம்பன் பால மறுகட்டமைப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.

 

பொறியாளர் ஸ்ரீதரன் (வலது).

பொறியாளர் ஸ்ரீதரன் (வலது).

 

பி.ராமச்சந்திரன்

பி.ராமச்சந்திரன்

 

உயிரோட்டமான தனுஷ்கோடி அழிந்த அத்தியாயத்தை வாசித்த ஏராளமான வாசகர்கள் கேட்ட கேள்வி: “இப்படி ஒரு பேரழிவைப் பற்றி நமக்கு ஏன் முழுமையாகத் தெரியவில்லை? இந்தச் செய்திகளெல்லாம் ஏன் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லை?”

நம்முடைய பெரும்பாலான வரலாறுகள் களத்தில் அல்ல; தலைநகரங்களில் சௌகரியமான இடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன என்பது ஒரு காரணம். அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பதிவுகளைத் தொகுப்பவர்கள், மக்களிடம் உள்ள பதிவுகளைச் சீந்துவதே இல்லை என்பது ஒரு காரணம். பதிவுசெய்யப்படாத எவ்வளவு பெரிய உண்மையும் வரலாறு ஆவதில்லை என்பது முக்கியமான காரணம்.

ஓர் உதாரணம்

தனுஷ்கோடியை மூழ்கடித்த புயலின்போது, பாம்பன் பாலமும் உருக்குலைந்தது. ரயில்வே நிர்வாகம் 6 மாதக் கெடு தந்து, பாலத்தைச் சீரமைக்க ஒரு அணியை இறக்கியது. வெறும் 46 நாட்களில் இந்தப் பணிகளை முடித்தார் பொறியாளர் ஸ்ரீதரன். இது வரலாறு. ஸ்ரீதரனின் பணி கொண்டாடப்பட வேண்டியது என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், அந்தப் பணி அவ்வளவு சீக்கிரம் முடிவதற்கு முக்கியப் பங்காற்றியவர்கள் சுற்றுவட்டார மீனவ மக்கள். தங்கள் சொந்த வீட்டு வேலையாகப் பாலத்தின் கட்டுமான வேலையில் பங்கேற்றவர்கள் அவர்கள். இன்றைக்கு அவர்களுடைய பங்களிப்பு, மறக்கப்பட்ட கதை. காரணம் என்ன?

நாட்டுப்புறப் பாடல்களில் வரலாறு

தனுஷ்கோடி மீனவ மக்களிடம் ஒரு மரபுண்டு. கரை வலை இழுக்கும்போது பாட்டுப் பாடுவது. அவர்கள் வாழ்வைச் சீரழித்த புயலுக்கு இந்தப் பாடல்களில் முக்கிய இடம் உண்டு. அந்தப் பாடல்கள் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் வாயிலாக நாட்டுப்புறங்களில் ஊர்ஊராகப் பரவியிருக்கிறது. அதன் தாக்கத்தில் வெளியூர்க்காரர்களும் புயல்பாட்டு பாடி யிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று செ. போத்தி ரெட்டியின் ‘தனுக்கோடி நாட்டுப்புறப் புயற்பாடல்கள்’ புத்தகத்தில் காணக்கிடைத்தது. கடலோரத்தில் ஊர்ஊராக அலைந்து, மக்களிடம் பேசி நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்திருக்கிறார் போத்தி ரெட்டி.

இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் வேம்பார் பாக்கியம் எனும் பனைத் தொழிலாளி. புயல் அடித்த தேதியில் தொடங்கி, பார்வையிட வந்த எம்ஜிஆர் முதலானவர்களைத் தொட்டு, பாட்டெழுதியவர் பெயர் வரை சொல்லும் இந்தப் பாடல், நம்முடைய நாட்டுப்புறப் பாடல்கள் எந்த அளவுக்குப் புறக்கணிக்க முடியாத மக்கள் ஆவணம் என்பதற்கு ஒரு சான்று.

தனுஸ்கோடி நாட்டுப்புறப் புயல் பாடல்

தனுஸ்கோடி பாம்பன் முதல்

தயங்காத இராமேஸ்வரம்

அநியாயப் புயலடித்து

அழிந்த கொடுமை பாடுகிறேன்

அமைதியாகக் கேளும்

இந்தக் கதையை எந்த நாளும்

*

கண்டோர் நடுநடுங்க

காற்றுமழை புயலடிக்க

மண்டலத்தில் இக்கதையை

மனத்தெளிவாகப் பாடுகிறேன்

மக்களைப் போல நினைத்து

சபை மன்னிக்கணும் பிழைபொறுத்து (தனுஸ்கோடி)

*

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து

அறுபத்து நாலாம் ஆண்டில்

வாய்மையுள்ள டிசம்பர் மாதம்

வளருந்தேதி இருபத்திரெண்டில்

அடித்ததே புயற்காற்று

பாம்பன் தனுஸ்கோடியைப் பாத்து (தனுஸ்கோடி)

*

ஐயாயிரம் ஜனத்துக்குமேல்

ஆணும் பெண்ணும் அவதிப்பட்டார்

பேய்மழையும் காற்றினாலே

பேதலித்து உயிரைவிட்டார்

ஐயோ துயரமாச்சே

சில ஊரழிந்து போச்சே (தனுஸ்கோடி)

*

மாலை எட்டு மணிக்கு மேலே

மதிப்படங்கா சாமத்திலே

வேலை சோலிதான் முடித்து

வீற்றிருக்கும் வேளையிலே

வருகுதையா ரயிலு

வண்டியைப் புரட்டுதையா

வடகடலும் தென்கடலும்

மண் மோதித் தான் கிளம்பி

தொடர்பாகச் சந்தித்துமே

சூறாவளிப் போல் கொதித்து

வண்டியைத் தூக்கி அடிக்க

மக்கள் மருவி மருவித்துடிக்க (தனுஸ்கோடி)

*

ஐந்நூறு ஜனத்துக்கு மேல்

ஆணும் பெண்ணும் ரயிலில் வர

கால்கள்தான் முறிந்து

கடலோடு போகுதய்யா

ஐயோ பரிதாபம்

இது யாருபோட்ட சாபம் (தனுஸ்கோடி)

*

தனுஸ்கோடி ஊர்களெல்லாம்

தலைக்கு மேலே தண்ணீர் வர

துணியுடைகள் இல்லாமலே

தொங்குதய்யா வீட்டின் மேலே

மதில் இடிந்து சாய

மக்கள் தண்ணீரில் குதித்துப்பாய (தனுஸ்கோடி)

*

ஐயையோ மனைவி மக்கள்

அநியாயமாய்ப் போகுதென்று

மெய்சோர்ந்து மன்னவனும்

மெதுவாக இழுக்கும்போது

குடும்பத்தோட புரட்டி வெள்ளம்

கொண்டு போகுதே சுருட்டி (தனுஸ்கோடி)

*

வள்ளங்களும் விலாஞ்சிகளும்

வளைக்கச் சென்ற தோணிகளும்

வெள்ளத்திலே அடியும்பட்டு

பள்ளத்திலே இழுக்குது பார்

ஐயோ மக்கள் அலற

அடிபட்டுக் குடலும் சிதற (தனுஸ்கோடி)

*

வெள்ளரிப்பழம் போல

வெடித்துப்பிணம் மிதக்குதைய்யா

அள்ளிக்கொண்டு புதைப்பதற்கு

ஆளுதவி கிடையாமல்

அலையடித்து ஒதுக்க

நாய்நரி கடித்து இழுக்க (தனுஸ்கோடி)

*

இராமேஸ்வரம் ஊர்களிலே

தெருக்களெல்லாம் தண்ணீர் ஓட

பூமான்கள் கோவிலெல்லாம்

புரட்டித்தூக்கி அடிக்குது பார்

ஐயோ மக்கள் வாட

அடுத்த திட்டில் ஏறி ஓட (தனுஸ்கோடி)

*

சித்தம் புகழ் நடிகரவர்

ஜெமினி கணேசன் சாவித்திரி

அத்த ராத்திரி வேளையிலே

அமைந்தாரே கோவிலுக்குள்

ஆயாசப்பட்டார்

நடிகர் அழுதும் கண்ணீர் விட்டார் (தனுஸ்கோடி)

*

உடுப்பதற்கோ உடையுமில்லை

உண்பதற்கோ உணவுமில்லை

படுப்பதற்கோ பாயுமில்லை

பறக்குதுபார் வெள்ளத்திலே

பார்க்க பார்க்க துக்கம்

பார்த்துப் போனாலுமே ஏக்கம் (தனுஸ்கோடி)

*

கக்கன்ஜி நெடுஞ்செழியன்

காமாராஜர் அண்ணாதுரை

முக்கியமாய் எம்ஜியார்

பாம்பன் செய்தி கேட்டார்

பாங்காகவே புறப்பட்டார் (தனுஸ்கோடி)

*

ஏரோப்பிளேன் மீதேறி

எல்லோருக்குமாய் சோறுகட்டி

வாறார்கள் தனுஸ்கோடி

வந்துபார்த்தார் இராமேஸ்வரம்

சோர்ந்து கண்ணீர் விட்டார்

சோற்றுமூட்டை தூக்கிப்போட்டார் (தனுஸ்கோடி)

சோறு சோறு சோறு என்று

சுழலுதய்யா மக்களெல்லாம்

ஆரு சோறு போட்டாலும்

அரை வயிறு நிறையுதில்லே

நைந்தோடுது சோறு

மண்ணில் புரட்டித் தின்பதைப்பாரு (தனுஸ்கோடி)

*

சண்டாளப் புயலடித்து

தனஉயிரும் வீடும் போச்சே

கண்டு கவர்மெண்டாரும்

கனகோடி நிதி கொடுத்தார்

காமராஜரைத் தேடு

வேம்பார் பாக்கியம் கவிபாடு!

(மக்களின் பாடல் அவர்கள் வார்த்தையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.)

*

“புயல் தெரியலீயே… ரயிலை அனுப்பிட்டேனே!”

தனுஷ்கோடி புயல் மனரீதியாக அடித்துப் போட்டவர்களில் பி. ராமச் சந்திரன் முக்கியமானவர். புயலில் அடித்துச் செல்லப் பட்ட பயணிகள் ரயிலை அனுப்பிவைத்தவர். அப்போதைய, ராமேசுவரம் ரயில் நிலையத்தின் நிலைய அதிகாரி. அங்குள்ள மீனவ மக்களோடு மிக நெருக்கமான உறவைப் பராமரித்த ராமச்சந்திரனை ராமேசுவரத்தைவிட்டு மாற்றக் கூடாது என்று மனு மீது மனு போட்டு 9 ஆண்டுகள் அந்த ஊரிலேயே தக்கவைத்திருக்கின்றனர் உள்ளூர் மக்கள். ராமச்சந்திரனுக்கு இப்போது 93 வயதாகிறது. தனுஷ்கோடி புயலைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும், ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதவர் கண்ணீரின் இடையே பேசினார்.

புயல் நாளை நினைவிருக்கிறதா? அதை எப்படி மறக்க முடியும்?

இப்படிப் புயலடிக்கும்னு இந்தப் பாவிக்கு யாரும் சொல்லலீயே… புயல் தெரியலீயே… ரயிலை அனுப்பிட்டேனே… (அழுகிறார்)

ஆனால், பாம்பனுக்குத்தானே நீங்கள் ரயிலை அனுப்பினீர்கள்?

ஆமா, பாம்பனுக்கு நான் அனுப்பிச்சேன். அங்கேயிருந்து தனுஷ்கோடிக்கு பாம்பன் ஸ்டேஷன் மாஸ்டர் அனுப்பிச்சார். யாருக்குமே புயல் இப்படிச் சுருட்டும்னு தெரியலையே… (அழுகிறார்)

அப்போது சம்பவ இடத்துக்குப் போனீர்களா?

அதிகாரிகளோட படகுல போனேன். எங்கே பார்த்தாலும் மனுச ஒடம்பு மிதக்குது. ஐயோ, கொடுமை, கொடுமை… (மீண்டும் அழுகிறார்)

சரி, நாம் அதை விட்டுவிடலாம்… பாம்பன் பால மறுகட்டமைப்பில் மீனவ மக்கள் பங்களிப்பைச் சொல்ல முடியுமா?

(கண்களைத் துடைத்துக்கொண்டு…) அவா ஒத்தாசை இல்லேன்னா நடக்குற கதையா அது! உள்ளூர் மீனவா மட்டும் இல்லை; வெளியூர் மீனவாவும் வந்தா. மாப்ளாஸ் வந்தா. எல்லாருமா ஓடி ஓடி ஒழைச்சுதான் பாலத்தைத் திரும்ப தூக்கி நிறுத்தினா.

கடலோர மக்களிடையே நீண்ட நாட்கள் வேலை செய்திருக்கிறீர்கள். அவர்களுடனான உங்கள் உறவைச் சொல்லுங்களேன்…

ரொம்ப நல்ல மனுஷா. நான் தஞ்சாவூர் ஜில்லாக்காரன். ஊரை மறந்துட்டு அவாளோடேயே இருந்துடலாமானு நெனைச்சுருக்கேன். அவ்ளோ நல்ல மனுஷா.

அவாளுக்கு நான் ஸ்டேசன் மாஸ்டர் மட்டும் இல்லை. மனு எழுதிக் கொடுக்குறவன், கடுதாசி படிச்சுக் காட்டறவன், பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துல சேர்க்க யோஜனை சொல்லுறவன்… கூடையோடு மீனைத் தூக்கிட்டு வந்துட்டு, ‘சாமி… உங்களுக்குக் கொடுக்க எங்களுக்கு இங்கே மீனைத் தவிர என்ன இருக்கு? மீன் சாப்பிடாதவராப் போயீட்டீங்களே’ன்னு வருத்தத்தோடு போவா. அவாள விட்டு வந்துட்டேனேயொழிய இன்னும் எம் மனசுல அவா அப்படியே இருக்கா!

– சமஸ்

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

Source:::: The Hindu… Tamil
Natarajan

” Wedding in Washington…”

 

A golden wedding anniversary had passed silently by and nobody noticed. I allude to that of Rukmini and Rajagopalan, which took place, as I see from the invitation card, on April 29, 1963.

A golden wedding anniversary had passed silently by and nobody noticed. I allude to that of Rukmini and Rajagopalan, which took place, as I see from the invitation card, on April 29, 1963. I am assuming that the couple had a happy married life and were still around to celebrate the 50 anniversary of tying the knot.

What is all this you ask. And what is so unusual about a Tambrahm wedding that happened 51 years ago? Well, in the first place, it took place in Washington, a rather unusual location for those times. And secondly, considering that it took place in an era when media was in its infancy and the Internet was something that the army used, thousands of Tamils followed the build up to the actual event with bated breath all across the world.

Those belonging to that era would have caught my drift. Those who came in later will need explanatory notes and here they are – it was in 1963 that the well-known Tamil writer, humourist and editor of the magazine Dinamani Kadir, Sa Viswanathan (Saavi) embarked on his entirely fictitious account of a Tambrahm wedding in Washington, courtesy the wealthy Mrs. Rockefeller.

The plot in brief is like this – the well-to-do Hopes family based out of New York is extremely close to the Murthy family, whose head works for the UNESCO. From Vasantha, the Murthy daughter, Loretta, the Hopes child, hears about the wonders of India. When Vasantha gets married in Thanjavur, the Hopes come down and participate in a full-length wedding.

Back in the US, the Hopes brief Mrs Rockefeller about the wondrous Tambrahm wedding and she is keen to see one; not by herself but in the company of all her family and friends. She therefore, using the good offices of Murthy, selects a South Indian couple who are to be married in Madras, to come over the US. They are of course accompanied by their respective clans, an assortment of cooks, priests, musicians (Ariyakkudi, Lalgudi and Palghat Mani Iyer) and nagaswaram artistes, countless other service providers and above all, a battalion of Mamis who are brought in to make appalams.

What follows is a grand wedding at R Street, Washington DC. Wielding a facile pen, Saavi created a hilarious account of how a Brahmin wedding is organised, contrasting it with the wonderment of the Americans. As you read it, you also get the feeling that Saavi was laughing at us. The story when serialised, was accompanied by the sketches of veteran Gopulu, making for a big hit. Alliance Publishers later released it as a book, which is still in print.

Washingtonil Tirumanam became a successful play, staged by every sabha in the city. Making his theatrical debut in it was Poornam Viswanathan. The highlight was the audience participating in the traditional procession accompanying the bridegroom, conducted every evening around the venue.

51 years later, Washingtonil Tirumanam remains evergreen – a testimony to Saavi, and our weddings that keep getting bigger.

He has Done it again …. Kudos to Auto Annadurai !!!

 

‘Auto Anna’ Annadurai has upped the ante this football season. By streaming the FIFA World Cup live in his auto, he has managed to douse many Chennaiites’ angst against auto-drivers! Photos: Vikas Vasu

Annadurai, a share auto driver on the Thiruvanmiyur-Sholinganallur route, live streams the FIFA World Cup for his customers.
With the FIFA fever catching up with him as well, the innovative auto driver from Thanjavur district says, “I support Argentina and I love Messi!”
Apart from the FIFA live streaming, Annadurai also live streamed the Lok Sabha Election results and all IPL matches (he has subscribed to Sony Six).
The posters on his auto are too catchy to miss. His ‘Amazing Auto’ offers live streaming of the FIFA World Cup and also asks customers to ‘like’ him in his facebook page.
Pl also see the following link ….
Source::::The Hindu
Natarajan

” Hits…Likes…and Sambar …” !!!

Chithra Viswanathan is 75 and lives alone in Mylapore but this overtly confident use of technology, which you’d normally associate with youngsters, has helped her showcase her passion, cooking, on a global platform. Photo: Ram Keshav
Chithra Viswanathan is 75 and lives alone in Mylapore but this overtly confident use of technology, which you’d normally associate with youngsters, has helped her showcase her passion, cooking, on a global platform. Photo: Ram Keshav

Seventy-five-year-old Mylapore homemaker, Chitra Viswananthan tells Srinivasa Ramanujam how cooking meets technology through her mobile app

These days, when 75-year-old Chithra Viswanathan goes to Marina Beach for a walk, people stop her. They pause and look at her like they’ve seen her somewhere. And then, they recognise her as the ‘Internet maami’, a sobriquet she’s quite at ease with now.

A few of these co-walkers — regulars at the beach — are friends now. But that’s just a handful. When she logs on to Facebook, she has more than 1,200 friends. “I do not usually accept anyone as a friend unless we have many mutual friends,” she says, adjusting her glasses and skilfully sifting through the numerous windows on her iPad.

She’s 75 and lives alone in Mylapore but this overtly confident use of technology, which you’d normally associate with youngsters, has helped her showcase her passion, cooking, on a global platform.

If Meenakshi Ammal brought out the revolutionary Samaithu Par, a cookbook in Tamil, more than half a century ago, Chithra uses technology to help people all over the world. Her mobile phone application, called AskChitVish Premium, which was launched a few years ago, already has 2,300 recipes and 200 more waiting to be uploaded.

She always had a passion for dishing out new stuff from the kitchen for her grandchildren. But it was about a decade ago when, the Internet boom had just started and she was getting familiar with the computer, that she noticed a query on a website for the recipe of ‘poosanika kootu’. “It was unanswered for three days,” she recalls, “I just took it upon myself to answer it and give her the right recipe.”

There was no looking back after that — she started writing a cookery column for Indusladies.com that had a huge traction among Indians settled abroad. She cooked, she blogged, she wrote and she shared her experience online.

‘Chitvish’ soon became a hit. So much so that she had ‘fans’ across the world. One of them — a 45-year-old woman from Atlanta — actually came down to Chennai just to meet her. “She had been following my recipes,” says Chithra, “When she came to India, she made it a point to come to Chennai especially to see me. I was a little hesitant and clearly told her that I was no fancy chef but just a housewife. It was special to have someone come all the way just for me.”

Her everyday routine begins quite early, just like any other homemaker, but there’s a key difference. When she enters the kitchen, she’s armed with an iPad and her Samsung Galaxy — to take notes and pictures of what she does. “If I see something different on TV, I immediately try it out,” she says, “I never post any recipe online without trying it.”

Baking is very close to her heart as well. “I’m very passionate and experiment more with breads than cakes,” she says. It’s not a new-found passion but one that she started indulging in quite a while ago. “It was in 1967,” she says, “I saw an ad for a baking course in the Polytechnic Institute, Taramani, and immediately went for it with a few friends. It was perhaps the first course for baking in the city. The instructors taught us well and we were fascinated by the concept.”

Another concept that’s caught her attention of late is fusion cooking. She’s tried out Au gratin dosa and Punjabi pesto pizza, besides others“It helps people try out new things,” she says, “The most exciting part is to add your own touch to a tried and tested recipe. For instance, in dishes that need eggs and ingredients that aren’t available here, I look for an alternative.”

Chithra doesn’t eat out, but doesn’t mind heading out once a while to check out what’s new and in. “Why do we like eating out?” she asks, “Not just for the taste but also the way the food is presented. I believe that we eat with our eyes — it’s important to dress up what you’ve made.”

When a friend or neighbour makes a sarcastic comment about cooking, it upsets her. “It (cooking) is very creative,” says Chitra, who credits her late husband, Viswanathan for encouraging her a lot, “That’s not all… there’s a science behind it. Cooking is about how much you add and in what quantities. A little more or a little less makes all the difference.”

A few years down the line, she hopes to come up with more innovative recipes. But not all of them are saved on her computer and iPad. “They keep crashing…can’t trust them too much,” she says nonchalantly, “I prefer storing them all on Cloud.” For this 75-year-old, the sky’s the limit.

Keywords: Chitra Viswananthaninternet maamiAskChitVish Premium,

Source::::Srinivasa Ramanujam in The Hindu

Natarajan

” பழமொழி …அர்த்தமுள்ள பொன் மொழிகள் !!!

c1446-corridorof1000pillarsinramanathaswamytempleinrameswaram-tamilnadu1928

பழமொழிகளில் நாட்டுப்புற மருத்துவம்

மக்களால் பயன்படுத்தப்படும் பழமொழிகளால் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும், மற்றும் மருந்துப் பொருட்களும் கூறப்படுவதுடன், ஆதனால் தீரும் நோய் பற்றியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

“இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு”

எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள் ஆகும். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும், அதிகமான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.

“ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்”

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய 4448 நோய்களுக்கும் அடிப்படை வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். இந்நீர் மூலிகைகளின் மீது பட்டு வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும், பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் சோற்று நீரை அருந்துகின்றனர்.

“வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்”

வேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை, வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை, ஆகியன விலகும் என்கிறது பழமொழி.

“மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்”

மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

“ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் ரோகி”

ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியிலிருந்து அமிர்தம் என்று சித்தர்களால் கூறப்படும் முறையும், மேலும் நரை திரை நோய்கள் அணுகாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாகும்.

அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்

சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது. என்பதனை இப்பழமொழி குறிக்கிறது. கழுதைப்பால், செவ்வாப்பு நோயைக் குணப்படுத்த வல்லது, கழுதைப்பாலில் இருந்து தோற்றம் பெற்றது இப்பழமொழி.

ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

இதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே இதன் பொருளாகும். நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் தான் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

“அரசனை நம்பிப் புருஷனை கைவிட்டாளம்”

அரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று யாரோ, கூறக்கேட்ட ஒருத்தி கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தாளாம். அரசமரம், வேம்பும் இணைந்த மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப் பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

ஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம் என்பது கருவேல மரத்தின் குச்சிகளையும், நால் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும். ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின் மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க, பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.

“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”

மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கு மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.

“ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ”

ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து எடுத்து இடித்து வைத்துக் கொண்டு தேனீர், டீப்பொடி இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, உடல் நாற்றம், சர்க்கரை நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்த பழமொழியாகும்.

Source:::: Input from a Friend of mine

Natarajan

“என் பெயர் நிகரன் …”

‘என் பெயர் நிகரன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். தமிழ் வழியில் கல்வி பயில்கிறேன்’ – இப்படி ஒரு சிறுவன் என்னிடம் அறிமுகப்படுத்தியபோது என் காதுகளில் தேன் பாய்வதை உணர்ந்தேன்.

வீட்டிற்கு வரும் விருந்தினர், உறவினரிடம் ‘பாப்பா அங்கிளுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லு’, ‘சே ஹலோ டூ ஆன்ட்டி’ என்றெல்லாம் வித்தை காட்டுவது போல் குழந்தைகளின் ஆங்கிலப் புலமையை பறைசாற்றிக் பெருமைகொள்ளும் இந்த காலகட்டத்தில், எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தை அழகாக தமிழ் பேச வேண்டும் என விரும்புகின்றனர், ஊக்குவிக்கின்றனர்?

இதை அறிந்துகொள்ள எத்தனித்தபோதுதான் நிகரனின் அறிமுகம் கிடைத்தது. அழகாக தமிழ் பேசும் நிகரனைப் பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ள அவனது நண்பர்களும் தமிழ் உச்சரிப்பைக் கற்றுக் கொள்கின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. நிகரன் வீட்டில் அனைவருமே அநாவசியமாக ஆங்கிலக் கலப்பு இல்லாமல் இனிமையாக தமிழ் பேசுகின்றனர்.

நிகரனின் தாய் காந்திமதியுடன் பேச்சு விரிவடைந்தது. பொதுவாக குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் மத்தியில் சற்று வேறுபட்டு நிற்கிறார்கள் நிகரனின் பெற்றோர். குறிப்பாக நிகரனின் தாய் காந்திமதி.

“ஆங்கிலத்தில் பேசுவது சமூக அந்தஸ்தாக கருதப்படுகிறது. ஆங்கிலப் புலமை உள்ள நபர் மிகப் பெரிய அறிவாளி என்ற தோற்றமும் நிலவுகிறது. சமுதாயத்தோடு ஒன்றரக்கலந்துவிட்ட இந்த கருத்தோடு இயைந்து வாழ சமூகமும் பழகிவிட்டது.

ஆங்கிலம் தெரியாமல் போய்விட்டால் எதிர்காலத்தில் குழந்தை தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாகவே ஆங்கில வழிக்கல்வி, வீட்டிலும் ஆங்கிலம் பற்றாகுறைக்கு ஸ்போகன் இங்கிலிஷ் வகுப்பு என குழந்தைகள் ஆங்கிலம் பயில்வதில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது.

என் குழந்தையை தமிழ் வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியில் சேர்க்கப்போகிறேன் என்றபோது குடும்பத்திற்குள்ளேயே அவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றை மீறியும் நானும் என் கணவரும் எங்கள் விருப்பம் போல் குழந்தையை தமிழ் வழிப் பள்ளியில் சேர்த்தோம்” என்றார்.

தமிழ்வழிக் கல்விக்கான அவசியத்தை விவரித்தபோது, “தாய்மொழி வழி கற்றலே உண்மையான கற்றல். அவ்வாறு கற்பதன் மூலமே துரிதமான புரிதல் ஏற்படுகிறது. சுயசிந்தனை, கற்பனைத் திறன் கூடுதலாக வளர்கிறது. ஆங்கில மொழிக்கற்றலில் எவ்வளவு உருப்போட்டாலும் புரிதல் என்பது முழுமையானதாக இருக்காது. மனித மூளையானது, தாய்மொழியிலேயே சிந்திக்கும். அப்படி இருக்கும்போது ஆங்கில மொழியில் கல்வி கற்கும்போது, ஒவ்வொரு முறையும் தமிழில் மொழிபெயர்த்து அதன்பின்னரே புரிதல் ஏற்படுகிறது. இதனால் சிந்தனைத் திறனுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.

தாய்மொழிக் கல்வியால், சிறு வயதிலேயே புத்தகங்கள், செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கமும் உருவாகிறது. தன் மரபு சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த நூல்களை அதிகம் வாசிக்கும் போது பக்கவாட்டுச் சிந்தனை உதயமாகிறது. ஆனால், ஆங்கிலத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். நிகரனும், ஆங்கிலத்தையும் ஒரு புதிய மொழி என்றளவில் ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறான்” என தன் கருத்துகளை முன்வைத்தார்.

நிகரன் ஒரு முன்மாதிரி என்பதில் ஐயமில்லை. நிகரனும் தமிழும் அந்த வீட்டில் அழகாக விளையாடிக் கொண்டிருக்க, இன்னொருவரையும் சந்திக்க நேர்ந்தது. இல்லத்தரசி சவிதா, தன் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். குழந்தை வாயில் வார்த்தைகள் அரும்பும் போதே மம்மி, டாடி, அங்கிள், ஆன்ட்டி என சிறு சிறு வார்த்தைகளை வலுக்கட்டாயமாக திணிக்காமல் பிள்ளைத் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார் சவிதா.

“குழந்தையின் மூன்று வயது வரை முழு நேரமும் அதனுடன் செலவிட்டு அரவணைத்துச் செல்வது அவசியம். அதனாலேயே என் ஊடகப் பணியை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு ஆற்றல் அறிவனுடன் வீட்டில் இருக்கிறேன். என் நேரமும், பொழுதும் செம்மையாக செலவாகிறது. ஆற்றலுடன் நாங்கள் எப்போதும் தமிழில் தான் பேசுகிறோம்.

ஆங்கிலம் பயில்வதோ, பேசுவதோ தவறில்லை. ஆங்கிலமும் அத்தியாவசியம் தான். ஆனால் அது எங்கு தேவையோ, எவ்வளவு தேவையோ அவ்வளவே பயன்படுத்தினால் போதுமானது. வீட்டில் குழந்தைகளுடன் தமிழில் உரையாடுவதே உறவுகளுக்கு இடையே இனக்கத்தை வலுப்படுத்தும். குழந்தையின் உணர்வுகள் அப்படியே பிரதிபலிக்கப்படும். குழந்தை அழுத்தமாக, அழகாக, தமிழ் பேசும் போது கேட்டுப் பாருங்கள் அப்போது தமிழுக்கும் அமுதென்று பேர் என பாவேந்தர் சொன்னது புரியும்.

ஆற்றல், வளர்ந்து வரும்போது அவனை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்கவே திட்டமிட்டுள்ளோம். கண்களால் நேரடியாக ஒரு பொருளைக் காண்பதற்கும், கண்ணாடி வழியாக காண்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதோ அதைத் தான் தமிழ்வழிக் கற்றலுக்கும் ஆங்கிலவழிக் கற்றலுக்கும் உள்ள வேறுபாடாக உணர்கிறேன்.

தமிழ் வழியில் கற்கும் போது எளிதில் புரிதல் ஏற்படும். மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. எத்தனை காலம் ஆனாலும் படித்தது பசும்மரத்து ஆணி போல் பதிந்திருக்கும். கசடற கற்று அதன்படி நிற்க தாய்மொழியே சிறந்தது” என்றார் சவிதா.

நிகரன், ஆற்றல் நம் கண் முன் இரு சாட்சிகள். இவர்கள் போன்று இன்னும் பல இங்கும், அயல்நாடுகளிலும் இருக்கின்றனர்.

பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொதுஇடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது ஏன் தமிழ்ப்பேச ஊக்குவிப்பதில்லை என பேராசிரியர் ராஜராஜனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தபோது, “அது ஆங்கிலம் நம் சமூகத்தில் பெற்றிருக்கும் மதிப்பின் விளைவு” என்றார்.

‘ஆங்கிலத்தின் மதிப்பை’ விவரித்த அவர், “காலனி ஆதிக்கத்தில் இருந்த நம் நாட்டில் அந்த ஆதிக்கம் முற்று பெற்றாலும் கூட அது விட்டுச்சென்ற மொழியின் ஆதிக்கம் இன்னும் சற்று கூட அகலவில்லை. உயர்கல்வியில் ஆங்கிலத்திற்கு இருக்கும் முக்கியத்துவம், அதற்குள்ள பொருளாதார மதிப்பு, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என பல்வேறு கூறுகள் ஆங்கிலத்திற்கு தனி மதிப்பளித்துள்ளன. ஒரு மொழி ஆர்வலராக, ஆய்வாளராக ஆங்கில் மொழிக்கென நம் சமூகத்தில் ஒரு தனி மதிப்பு இருப்பதை உணர்கிறேன்.

பன்மொழிப்பேசக் கூடிய, பலவகை கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்துள்ள நம் இந்திய திருநாட்டில், ஆங்கிலம் வெறும் பயன்பாட்டு மொழியில் இருந்து ஒரு தேவையாகிவிட்டது.

இதன் காரணமாகவே தொடர்பு மொழி என்ற ஒரு நிலை வரும்போது ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆங்கிலம் பெற்றிருக்கும் மதிப்பு மாயை அல்ல, அது உண்மையானதே.

அதுவே பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே ஆங்கிலத்தில் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்கின்றனர். ஆங்கிலத்தின் பயன்பாடும், மதிப்பும் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தமிழ் மொழி வளர்ச்சி நடக்காமல் இல்லை. தமிழ் மொழி வளர்ச்சி அந்த அளவுக்கு வெளிப்படையாக தெரியவில்லை. அந்த வெற்றிடத்தை இப்போது ஊடகங்கள் நிரப்பி வருகின்றன. தமிழ் வளர்ச்சி குறித்த செய்திகளை அவ்வப்போது உலகிற்கு வெளிச்சம் காட்டி வருகின்றன.

இவை ஒருபுறம் இருக்க, ஆங்கிலம் பெற்றிருக்கும் மதிப்பை மீறி தமிழ் மொழியானது பேச்சில் இருந்து கற்றல் வரை எங்கும் வேரூன்றி நிலைநிறுத்தப்பட்ட உருமொழியாகும். ஆனால் இவை ஒரு நாள் இரவில் ஏற்பட்டுவிடாது, அதற்கு காலங்கள் சில ஆகும்.

அத்தகைய சமூக மாற்றத்திற்கு மக்களின் மொழிப்பற்றும் அதிகரிக்க வேண்டும். தாய்மொழி வழி கற்றல் குறித்த விழிப்புணர்வும் பரவலாக ஏற்பட வேண்டும். ஜப்பான், ஜெர்மனி, கொரியா போன்ற நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியால் ஏற்பட்டுள்ள நன்மை அப்போதுதான் உணரப்படும். தாய்மொழிக் கல்வியே சமூக வளர்ச்சிக்கும், தனிமனித வளர்ச்சிக்கும் வித்திடும்.

இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டும் தமிழ்வழிக் கல்வி பயிலும் குழந்தைகள் இருக்கும் நிலை மாற அண்மையில் ஐ.ஏ.எஸ். தேர்வில் முழுக்க முழுக்க தமிழில் படித்து வெற்றி பெற்ற ஜெயசீலன் போன்றோர் தூண்டுகோலாக இருப்பர். ஒன்று, நூறாகும், நூறு ஆயிரமாகும். எல்லாம் மாறும் எதிர்காலத்தில்” என்றார் ராஜராஜன்.

பாரதி ஆனந்த், தொடர்புக்கு ap.bharathi@yahoo.com

Keywords: தமிழ் வழிக் கல்வி, தாய்மொழி, தமிழ் மொழி
Topics: சமூகம்| பதிவுகள்| பார்வைகள்|

Source:::: The Hindu….Tamil

Natarajan

” மாட்டு வண்டி போகாத ஊருக்கும் உன் பாட்டு வண்டி போகுமே அய்யா … “

ஜூன்  24   இன்று  கவியரசு கண்ணதாசன்  பிறந்த நாள் …  அவரைப்  பற்றிய  நினைவலைகள்  சில ….இன்றைய “தினமலர்”  நாள் இதழில்

படித்தேன் … அது  உங்கள் பார்வைக்கும்  இப்பொழுது …

 நடராஜன்

‘நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை…
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை…’
தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத ‘கிளாசிக்’ பாடல்களின் ‘கிங் மேக்கர்’.

‘கவியரசர்’ என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனுக்கு இறைவன் அளித்த வாழ்நாள் 54 ஆண்டுகள் மட்டுமே.’மாட்டு வண்டி போகாத ஊரிலும் உன் பாட்டு வண்டி போகுதடா…’ என பாராட்டும் அளவிற்கு சினிமா பாடல்களை தன் எழுத்து ஏணியில் ஏற்றி ஊர் முழுதும் உலா வந்த அந்த காவிய
புத்தகம் பிறந்த தினம் இன்று. வருடங்கள் கடந்தாலும் நினைவிலும், செவியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசரின் நினைவுகளை அவருடன் நெருக்கமானவர்கள் இதோ பகிர்ந்து கொள்கிறார்கள்….

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

விசாலாட்சி, கண்ணதாசன் மகள் : அப்பாவிற்கு தெய்வ பக்தி அதிகம். அவர் சந்தித்த அனுபவங்களை தான் பாடலாய் தந்தார். பிசியான பாடலாசியராக இருந்தாலும் குடும்பத்தார் மீது அலாதி பிரியம் கொண்டவர். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை வைத்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். என் அம்மாவுக்காக ‘தாைழயாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா…’ போன்ற பாடல்களை எழுதினார். ‘பூ முடிப்பாள் இந்த பூங்குழலி… புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி…’ பாடலை என் அக்காக்கள் திருமணத்திலும், என் திருமணத்திலும் பாடச் சொல்லி அருகில் நின்று அவரும் பாடுவார்.பாசமலர் பாடலில் வரும் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம்தென்றலே..’ என்ற வரிகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். மறைந்தாலும் கண்ணதாசனின் மகள் என்ற பெருமையை என் தந்தை அளித்திருக்கிறார். பொன்னம்மாள் கண்ணதாசன் அறக்கட்டளை மூலம் அவர் நினைவாக உதவிகள் செய்து வருகிறோம்.

இரண்டு மனம் வேண்டும்

சொ.சொ.மீ.சுந்தரம், கண்ணதாசனின் கவியரங்க நண்பர்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். 1976ல் மதுரையில் நடந்த கவியரங்கத்தில் என் பேச்சை கேட்டு பாராட்டிய கண்ணதாசன், சொ.சொ.மீ., சுந்தரம் என்பது ‘சொல்லுக்கு சொல் மீறும் சுந்தரம்’ என பாராட்டினார். கவியரங்கங்களில் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்தார். கண்ணன் மீது அவருக்கு கொள்ளை பிரியம். எங்கு வந்தாலும் நன்கு உறங்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். புதுச்சேரி கம்பன் கழகம் நடத்திய கவியரங்கத்திற்கு சென்ற போது 9.30க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு 9.15 வரை அவர் வரவில்லை. அதன் செயலாளர் அருணகிரி, தமிழாசிரியர் ஒருவரை அழைத்து கண்ணதாசனை அழைத்து வரும் வரை இறைவணக்கம் பாடுமாறு கூறிச் சென்றார். ஒரு விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனை கண்டுபிடித்து எழுப்பிய போது ‘துாங்கிவிட்டேன் அருணகிரி… வாருங்கள் செல்லலாம்’ என முகத்தை துடைத்துவிட்டு ஒரு ‘கப்’ காபியோடு மேடையேறியவர் தன் பேச்சில் அத்தனை பேரையும் கட்டிப்போட்டார். அந்த கூட்டத்தில் தனக்கு பிடித்த இரு பாடல்களை அவர் பாடினார். ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்… நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று…’ என்று பாடி முடிக்க அங்குள்ள அனைவர் கண்ணிலும் கண்ணீர்.’பார்த்தேன் நினைத்தேன் பக்கம் வர துடித்தேன்… உனைத் தேன் என நான் நினைத்தேன்…’ என தொடங்கி ‘முடித்தேன் ஒரு துளி விடாமல் குடித்தேன்…’ என மற்றொரு பாடலை பாடி அவர்களின் சோகத்தை போக்கினார். மது அருந்தும் போது தான் கண்ணதாசன் பாடல் எழுதுவார் என பலரும் நினைக்கின்றனர். அது தவறு. மது இருக்கும் போது அவரிடம் பாடல் வராது, பாடல் வரும் போது அவரிடம் மது இருக்காது. ‘மருதமலை மாமணியே முருகைய்யா… தேவரின் குலம் காக்கும் வேலய்யா…’ என்ற பாடலை எழுதியதற்காக சின்னப்பதேவர் ‘பிளாங் செக்’ ஒன்றை கண்ணதாசனுக்கு வழங்கினார். வறுமையில் இருந்தாலும் தன் உதவியாளர் கண்ணப்பனை அழைத்த கண்ணதாசன், ‘இந்த காசோலையை கண்ணாடி போட்டு மாட்டு; இது தான் என் பெருமைக்கு எடுத்துக்காட்டு’ என்று கூறினார்.’நான் இந்திய ஜனாதிபதி போல் சம்பாதிக்கிறேன்… அதே நேரத்தில் இந்தியா போல் கடன் வாங்குகிறேன்…’ எனக்கூறுவார்.திரைப்பட பாடல்களை மட்டும் வைத்து கண்ணதாசனை மதிப்பிடக்கூடாது. அவை அல்லாது கவியரங்கம், இசை, பேச்சு என கண்ணதாசனின் திறமைகளை அருகில் இருந்த பார்த்தவர்களின் நானும் ஒருவன்.

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்


கவிஞர் முத்துலிங்கம்:
 மதுரை மாணிக்கத் தமிழை, கோடம்பாக்கத்திற்கு கூட்டி வந்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. இலக்கியப் புலவர்கள் இலக்கியத்தில் இயம்பாமல் விட்ட நுணுக்கமான கருத்துக்களை, சினிமாவில் தீட்டியவர். இலக்கிய சாற்றை பிழிந்து, திரைப்பாடலில் தந்தவர்.பாவமன்னிப்பில், ‘சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்…,’ துவங்கும் பாடலில், ‘காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்,’ என்ற சரணம், எனது நம்பிக்கையை உயர்த்திய வரிகள்.’மயக்கமா, தயக்கமா? மனதிலே குழப்பமா?…, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு,’- கண்ணதாசனின் பாடல் வரிகள் கவிஞர் வாலிக்கு நம்பிக்கையூட்டி, திரைப்பாடல்கள் எழுதவைத்தவை.கண்ணதாசன் கவிதை மட்டுமின்றி, உரைநடையில் புதிய நடையாக சிறு வாக்கியங்களாக சீர்திருத்தி எழுதியது அகவற்பா போல் இருக்கும். ‘வனவாசம்’ சிறந்த முன்னுதாரணம். அதற்கு ஈடான உரைநடை இலக்கியம், இலக்கிய உலகில் இல்லை.எம்.ஜி.ஆருக்கு ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘தங்கத்தில் முகமெடுத்து…,’பாடல் எழுதினேன். ‘நன்றாக இருந்தது’ என கண்ணதாசன் பாராட்டினார்.முதன்முதலாக நான், கண்ணதாசன், கங்கை அமரன் இணைந்து ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திற்கு பாடல் எழுதினோம். ‘மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ…,’ பாடலை நானும், ‘கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ…,’ பாடலை கண்ணதாசன், ‘பூவரசம் பூ பூத்தாச்சு…’பாடலை கங்கை அமரனும் எழுதினோம்.கண்ணதாசனிடம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் அதிபர் டி.ஆர்.ராமண்ணா, ‘நீங்கள்
இயற்றிய மாஞ்சோலை கிளிதானோ’ பாடல் நன்றாக உள்ளது. இதுபோல், எனது படத்திற்கு ஒரு பாடல் எழுத வேண்டும்,’ என்றாராம். கண்ணதாசன்,’அதை நான் இயற்றவில்லை. முத்துலிங்கம் எழுதியது. அவருக்கு, சந்த நடையில் நன்றாக எழுதவரும். அவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்,’ என்றாராம். எத்தனை கவிஞர்களுக்கு இப்படி பெருந்தன்மை இருக்கும்.அனைத்திலும் கண்ணதாசன் வெற்றி பெற்றாலும், அவர் தோற்ற இடம் அரசியல். நெப்போலியனுக்கு ‘வாட்டர்லுா’ போல, கண்ணதாசனுக்கு அரசியல்தான் ‘வாட்டர்லுா’. ஒரு கவிஞன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் கண்ணதாசன். ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம். இருந்தாலும், ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை,’ என்ற அவரது பாடல் வரிகள் அவருக்குப் பொருந்தும்.

Source::::Dinamalar… Tamil Daily  June 24

Natarajan

 

படித்து ரசித்தது …” முதல் ட்விட்டெர் …ஆத்திசூடி …” !!!

முதல் பாஸ்வேர்டு – அண்டாக் காகசம்
முதல் ஐ டோனர் – கண்ணப்பர்

முதல் தந்தி மொழி – கண்டேன் சீதையை
முதல் நேரலை – குருக்ஷேத்ர போர்

முதல் டிவிட்டர் – ஆத்திச்சூடி
முதல் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டவர் – சூர்ப்பனகை

முதல் ஸ்டெம்செல் டோனர் – பள்ளி கொண்ட பெருமாள் (தொப்புள் கொடியில் பிரம்மா)
முதல் டிரான்ஸ்லேட்டர் – கம்பர்

முதல் ஸ்டெனோ – பிள்ளையார்
முதல் ஸ்போர்ட்ஸ்மென் – சிவன், கிருஷ்ணன்

முதல் தன்னம்பிக்கை தெரபி பெற்றவர்கள் – அபிமன்யூ, பிரகலாதன்.
முதல் டெஸ்ட் ட்யூப் பேபீஸ் – கௌரவர்கள்

முதல் ஷார்ட் டைம் மெமரிலூஸர் – துஷ்யந்தன்
முதல் ப்ளூ கிராஸ் மெம்பர்ஸ் – சிபிச் சக்கரவர்த்தி, மனுநீதிச்சோழன், பேகன்

முதல் ஃபால்லோயர் – லட்சுமணன்
முதல் சியர் கேர்ள்ஸ் – ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா

Source:::UMA MOHANDASS , Dindigal in MANGAIYAR MALAR…TAMIL MONTHLY

Natarajan

மனதை தொட்ட வரிகள் …” புதிர் கன்னி நான் … “

புதிர்கன்னி!

மீட்டப்படாத வீணையாக மீளாத்துயரில் நான்
விவாக வயலில் நடவு செய்யப்படாத பயிராக நான்
முற்றியும், அறுவடைக்கு ஆளில்லாமல் நான்
முழுமை பெறாத வாசல் கோலமாய் நான்
யாரும் கேட்காத இசைத்தட்டாய் நான்
கண்ணன் ராசி இல்லாத கன்னியாக நான்
பொருளாதார சுமையை சுமக்கும் கழுதையாக நான்
யாரும் வாசிக்காத கவிதையாக நான்
திருமணச் சந்தையிலே விலைபோகாமல் நான்
ஆம்… நான் முதிர்கன்னி… வாழ்க்கை பயணத்தில் புதிர்கன்னி!

— பி.ராஜ்குமார், நெய்வேலி. in DINA MALAR… SUNDAY VARAMALAR…

Natarajan